BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின் படியே ஏறின கட்டிலில் இருந்து இறங்காமல் செத்த ராஜா யார்?

Answer:

அகசியா

Question:

உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய் கிடைக்க வேண்டும் என்றது யார்?

Answer:

எலிசா

Question:

எலியா சூழல் காற்றிலே_________ஏறி போனான்.

Answer:

பரலோகத்திற்கு

Question:

எலியா தண்ணீரை அடித்தவுடன் பிரிந்த நதி எது?

Answer:

யோர்தான்

Question:

விதவையின் வீட்டில் இருந்தது என்ன?

Answer:

ஒரு குடம் எண்ணெய்