Logo
உங்கள் கவிதைகளை பகிர ஆப்பை பதிவிறக்குங்கள்!
Logo

காதல் கவிதைகள்

ஏன் அந்த பேருந்து இன்னும் வரவில்லை,, மணி ஆகி விட்டதே வேறு வழியில் சென்று விட்டதோ,, என்று பல கேள்விகள் என்னுள்ளே ... எல்லாம் அந்த சில நிமிடத்திற்காகத் தான்.. ஜன்னல் ஓரம் சீட்டில் அமர்ந்து.. #அவள் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்கு தான் இந்த பதற்றமும் பரபரப்பும் ...

#
Karuppasamy

எதை எதையோ கடந்து போகிறேன் உன் அன்பில் மட்டுமே கரைந்து போகிறேன்...

#
Karuppasamy

தேவையற்ற இடங்களில் யாரிடமும் தேவையில்லாததை பேசாதீர்கள் அப்றம் நீஙகள் தேவையில்லாமல் ஆகிவிடுவீர்கள்

#
Karuppasamy

எடுப்பாக இருப்பதை எடுத்து "காட்டுவது" பலவீனருக்கு படுகுழிதான்...

#
Karuppasamy

உனக்கு பிடித்த படி துடிக்க உத்தரவு இட்டிருக்கிறேன் என் இதயத்திற்கு ..!!!

#
Karuppasamy

என் மனத் தோட்டத்தில் பூத்த ஆங்கில மலர் ஜாஸ்மின்

#
Karuppasamy

சண்டையிடாத நாட்களும் இல்லை...!! காதலிக்காத நொடிகளும் இல்லை..! ??

#
Karuppasamy

தேடினாலும் .. #அவளை போல் ஒருத்தி கிடைக்க போவதுமில்லை.. #அவள் தேடாவிட்டாலும் என்னை போல் ஒருவன் #அவளை காதலிக்க போவதுமில்லை #என்னவள்..{§}

#
Karuppasamy

மின்னலை கண்டும் மிரளாத கண்கள் உன் கண்களை கண்டதும் மிரண்டது.. வெடியோசையில் மறுத்து போன செவியோ உன் சிரிப்பொலியில் நெகிழ்ந்தது.. இதழாடும் நடனம் கண்டு புதுக்கவிதையும் பிறந்தது செந்தேன் குரலிசை கேட்டு குழலிசையும் மறந்தது.. இடியோசையிலும் உறங்கிய விழிகள் உன் விழியசைவில் விழித்தது..

#
அன்புடன் ரவி

பலமுறை விக்கல் எடுத்தும் தண்ணீர் தேடவில்லை நினைப்பது நீயாக இருந்தால் நீளட்டும் சில நிமிடங்கள்

#
S.Thenmozhi.

kadavul nesam, kadavul valum valkai,kovum anbe ki mela ilei, kadavul kathal pole oru nermei mane pasam, kathal oru penn mela irunthalom, kathal oruvakkane kadavull oru puungavanam, kadavul ulei irukarerar.....avare....pen ann kathal appa stane till,oru kathalan kathali parkarerar,krishna polevei,oru manava vasageh punitha ambla playboy, parkam parvai parvithramane banthe rasekirar,kudumbam vanthe inthe iru kathal nal....ovurera pasam kudumbethil....oru thuli ann penn kathale kurikum.....manavasagan kathilleel(bed) punitahmage irunthal matehme,kudumbam anbe nesathil valum,yenna ange kadavul vohdumbil kathal seyum venthil vetham adugum,,sagum valum thol uyir seethai yelumbu pasathela jeevekerar, paavithra mane kathal elumbe morthe,sahum tannmei vovoru.....kudumbe kathalan kathali valum atha aruverr pane.....vodumbe thodum eduthil......sahum.......tanmei irunthal marthemei......kathal valum yennam..... thodere venthi yelupum valurum....anthe oru nodi valum......jenma punrava.....thothil adum kolanthei pole avalode kathali parke morthe....adum attham sex ilei.....kathal pungavanum....venthi nilave thodurum.....kaadeeka sella pannulum......yerpi saveh valum athe oru thuli banthe kathale mudive pannum,saaveh.....verikum kathal irunthal matemeh.vovoru kathali kathalan ki kathal ventha mahrre.....nillave mudrulame ventha mulemeya oru nella akirum..kaadekameh.... ALXDR CHANDRASEKARAN signature:.....thothil adum kolanthei pole avalode kathali parke morthe....adum attham sex ilei.....kathal pungavanum....venthi nilave thodurum.... kadavul i love you more than my wife

#
Alexander

உன் விழிச்சாலையில் இரு கரங்கள் கோர்த்து நடக்க ஆசைதான் இப்போது மட்டும் அல்ல எப்போதும்...

#
Basha Syed

ஒற்றைப் புள்ளி கோலம் எவ்வளவு அழகு தெரியுமா #அவள் நெற்றி பொட்டாய் >> •

#
Karuppasamy

விரும்பிய போது விரும்பினேன் என்பதை விட பிரிந்த பிறகும் விரும்பி கொண்டிருக்கிறேன் என்பதே உண்மை ... உன் மீது நான் வைத்த #காதல் என்றுமே குறையாது விலகித் தான் இருக்கிறேன் தவிர உன்னை நினைக்காமல் இல்லை #என்னவளே

#
Karuppasamy

நான் விரும்பியதை தொலைக்கவில்லை, தொலைத்ததை தான் விரும்பி கொண்டிருக்கிறேன்

#
Karuppasamy

மறு ஜென்மம் ஒன்று இருந்தால் அவளை எனக்கே தந்து விடு இறைவா காலம் முழுவதும் என் காதலால் அவளை கட்டி போட்டு பார்த்துக் கொள்வேன்

#
Karuppasamy

உன் கூந்தலுக்குள் குடியேறிய மலர்களுக்கு ஆயுட்காலம் அதிகம்.

#
Karuppasamy

நீங்கள் நீங்களாய் இருப்பதே அழகாக இருப்பது.. மனம் கவர்ந்தவரை களவு கொள்வதே மகிழ்ச்சியாக இருப்பது.. புரிந்து கொள்வதும் ஏற்றுக் கொள்வதுமே அன்பாய் இருப்பது..

#
அன்புடன் ரவி

உன் நினைவுகளை நெஞ்சில் இருந்து அழிக்க வேண்டும் என்று நினைத்த பொழுது எங்கிருந்தோ பறந்து வந்த உன்னுடன் இருந்த போது இருந்த பேருந்து பயணம்...!

#
Karuppasamy

தொல்லை தரவும் தோணவில்லை தொலைந்து போகவும் முடியவில்லை நீங்காமல் நினைக்க வைக்கும் உன் நினைவு

#
Karuppasamy

அவள் சேலையில் பவனி வந்தாள் மென்மேலும் அழகானது அந்த சேலை...!

#
Karuppasamy

பனி முட்டம்️ வந்ததால்️ பல தோட்டம் நீங்கியே இசை மாறி போகுமோ தென்றலே...!!!

#
L. jatbu

உண்மையானே காதல்.. தேடப்படும் போது கிடைக்காது..! அப்படி கிடைத்தாலும்.. அந்த காதலின் மதிப்பு தெரியாது..! RK

#
Kalpana Subramaniam

உன் தோள்களில் நான் முதலில் சாயும் போது.. கண்கள் நனைந்துபோனது..! கடைசி வரைக்கும் நீ நிலைக்கப் போவதில்லையே.. என்றெனை பயமுறுத்தியது நெஞ்சு...!! RK

#
Kalpana Subramaniam

எவ்வளவு பாரங்கள் இருந்தாலும்.. எல்லாம் தீர்ந்து இலகுவாகிறது மனம்.. உன் சிரிப்பிர்ற்கு முன்னால் மட்டும்...!! RK

#
Kalpana Subramaniam

என்னை சிரிக்க வைக்கும் வழியும் நீ அறிவாய்.. அழவைக்கும் வழியையும்.. நீ மட்டுமே அறிவாய்...!! RK

#
Kalpana Subramaniam

நீயும்" வேண்டும் என்று ஆரம்பித்தது நம் உறவு.. "நீ" வேண்டும் என்று அது தொடர்ந்தது.. இன்று.. "நீ மட்டும் " வேண்டும் என்று முடிவிற்கே வந்துவிட்டது...!! RK

#
Kalpana Subramaniam

ஒவ்வொரு முறை உன்னைப் பார்க்கும் போதும்.. உன் அழகு எனக்கே தெரியாமல்.. என் பெருமூச்சை பரிசாகப் பெற்றுக்கொள்கிறது...!! RK

#
Kalpana Subramaniam

சொன்னதையே நான் மறுபடி மறுபடி சொன்னாலும்.. சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கிறாய்..! சொல்பவன் நானாக இருப்பதானால் மட்டும்...!! RK

#
Kalpana Subramaniam

உன்னைப்பார்க்கும் ஒவ்வொரு நொடியிலும்.. என் இதயத்துடிப்பில் ஒன்று.. எங்கோ காணாமல் போய்விடுகிறது...!! RK

#
Kalpana Subramaniam

நாளை என்ன நடக்குமோ யாமறியேன்,. ஆனால்.. நடந்து கொண்டிருக்கிற நிமிடங்கள் யாவும்.. மறக்க முடியாதவை.. நீ என்னோடு இருப்பதால் மட்டும்...!! RK

#
Kalpana Subramaniam

உன் அன்பினால் நான் காயப்பட்டாலும் கூட.. திரும்ப திரும்ப நான் எதிர்பார்க்கும்.. ஆறுதல் அளிக்கும் மருந்து நீ மட்டும் தான்..!! RK

#
Kalpana Subramaniam

தினந்தோறும் உதிக்கும் சூரியன் கூட தோற்றுப்போகும்,. உந்தன் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பின் முன்னால்...!! RK

#
Kalpana Subramaniam

_எத்தனைதான் சண்டையிட்டாலும்_ _உன் சமாதானத்தின்_ _கிறுக்குத்தனத்தில்_ _உடைந்துவிடுகிறது_ _அத்தனை கோபமும்_ RK

#
Kalpana Subramaniam

_மற்றவர்களிடம் காட்டும்_ _அன்பையும் கோபத்தையும்_ _உன்னிடம் காட்டுவதற்கு_ _என் இதயம் தவிக்கிறது_ RK

#
Kalpana Subramaniam

_தொலைந்து போக ஆசைதான்_ _உன் கண்கள் என்னை தேடும் என்றால்_ _மீண்டும் பிறக்க ஆசைதான்_ _நீ என் கரம் பிடிபாய் என்றால்_ RK

#
Kalpana Subramaniam

_என் கண்களை விட்டு_ _நீ தூரமாக இருக்கலாம்_ _ஆனால்_ _உன் இதயத்தை விட்டு_ _என்னால் தூரமாக இருக்க முடியாது_ RK

#
Kalpana Subramaniam

_மனதில் நீங்காத_ _இடம் பிடித்த_ _அவளின் காதல் உறவுகளும்_ _நீங்காத உணர்வுகளும்_ _எனக்கு தொடர்கதையாகி விட்டது_ RK

#
Kalpana Subramaniam

_விழிகள் இல்லாமல் கூட_ _வாழ்க்கை அமைகிறது சிலருக்கு_ _ஆனால்_ _வழிகள் இல்லாமல்_ _வாழ்க்கை அமையாது யாருக்கும்_ RK

#
Kalpana Subramaniam

உன்னோடு #அன்பு வந்து சில நாட்கள் தான் ஆனால் இந்த பிரிவு மட்டும் எப்படி வெகுகாலமாக போல இருக்கிறது

#
Karuppasamy

#காவியம்# காலை எழுந்ததும் கலைந்த கூந்தலோடு செல்லச் சினுங்கலில் காவியமாய் தெரிகின்றாள்.... மு.திரு️

#
Thirumalai samy

#நெடுந்தூர பயணம்# நெடுந்தூர பயணத்தில் ஒரு குவளை தேனீருக்காய் சற்று நிற்பதை போன்று சட்டென்று வந்து விடுகிறது உன் நினைவு... சிறிது நேரத்தில் காற்று குமிழியை போன்று தூரத்தில் சென்று சட்டென்று மறைந்து விடுகிறது... எனினும் பயணித்து கொண்டிருக்கிறேன் அடுத்த நிறுத்தத்தில் ஒரு குவளை தேனீர் பருக எண்ணிக் கொண்டு.... மு.திரு️️️️ ️️

#
Thirumalai samy

#வழிப்போக்கன்# பயணிக்கும் வழியெங்கிழும் உன் நினைவுகளை விதைத்து செல்கிறேன்.... கண்ணீரின் ஈரம் பட்டதும் உன் நினைவுகள் பாதையெங்கும் பூத்துக் கிடக்கிறது... சில நினைவுகள் அரிதான குறிஞ்சி மலர்களாக.... சில நினைவுகள் ஊமத்தம் பூக்களாக... சில நினைவுகள் வண்ணத்துப்பூச்சிகள் வந்தமரும் தும்பை பூக்களாக... இன்னும் சில நினைவுகள் மலராமலேயே கிடக்கிறது... எனினும் உன் நினைவுகளாலேயே பயணிக்கிறேன் வழிப்போக்கனாய் இறுதி பயணத்தை நோக்கி இடுகாடு வரை... என் ஆன்மா இந்த பிரபஞ்சத்தை விட்டு எங்கோ தூரம் பயணத்தை தொடங்கி விட்டது... இறுதியாய் என் பிரேதத்திற்கு உன் நினைவு பூமாலை ஒன்றையேனும் சூட்டி விடு.... இப்படிக்கு #வழிப்போக்கன்# மு.திரு️️️

#
Thirumalai samy

சுற்றும் பூமியில் போகும் இடமெல்லாம் ராட்டினமாய் சுழல்கிறது உன் நினைவு.. வானத்து மின் விளக்காய் மிளருகிறது உன் விழிகள் சிறகடிக்கும் பட்டாம் பூச்சியாய் துடிக்கிறது என் இதயம்..

#
அன்புடன் ரவி

காதலில் கவிதைகள் பல உண்டு.. அந்த கவிதைகள் மேல் எனக்கு கொஞ்சம் காதலும் உண்டு.. அந்த காதலை மிஞ்சும்.. என் மேல் காதல் கொண்ட.. ஓர் அழகிய கவிதையும் எனக்குண்டு.. உன் உருவில்...!! RK

#
Kalpana Subramaniam

_நினைவுகளோடு வாழ்வதற்கு_ _பலபேர் இருந்தாலும்_ _நிஜத்தில் வாழ்வதற்கு_ _நீ மட்டும் போதும்...!! RRLK

#
Kalpana Subramaniam

_எண்ணத்தில் நீ இருக்க_ _வண்ணத்தில் மழை பெய்ய கண்டேன்_ _துளிகள் எங்கும் உன் சாயல்_ _எண்ணம் எங்கும் நம் காதல்...!! RK

#
Kalpana Subramaniam

_நான் தேடும் முகவரி_ _உன் இதயம் மட்டுமே_ _ஆனால்_ _நீ தரும் முகவரியோ_ _வலிகள் மட்டுமே...!! RK

#
Kalpana Subramaniam

_தோற்றங்கள்_ _மாறினாலும்_ _தோற்று விடாமல்_ _இறுதிவரை_ _தொடர்வதே_ _உண்மையான அன்பு...!! RK

#
Kalpana Subramaniam

உன்னோடு வாழ விருப்பமில்லை..           நான்.. ஆனால்.. உனக்காக மட்டும்.. வாழ விரும்புகிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

வெண்ணிலவும் என்னவளும் என்னவளின் நிழலை கண்டு .... வெண்ணிலவும் வெட்கம் கொண்டு.... தன் நினைவை தான் இழந்து... தன் நிழலை அவள் தோள் மீது சாய்த்துக் கொள்கிறது.... சிறிது நேரம் இழைப்பாரி  ...

#
ஆனந்தன்

அவள் அன்பு போதும் அவள் காதல் போதும் கண்ணீராக இருந்தாலும் சரி கவலையாக இருந்தாலும் சரி அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன் இறுதி வரை உனக்காகவே வாழ்வேன். SK

#
SK

உன்னை விட உன் நினைவுகளே எனக்கு பிடிக்கும் ஏனென்றால் நானே நினைத்தாலும் அவை எப்போதும் என்னை விட்டு விலகுவது இல்லை தூங்கும் முன் என் கடைசி எண்ணமும் நீ தான் எழுந்தவுடன் என் முதல் தேடலும் நீ தான். SK

#
SK

நினைவுகள் இருக்கும் வரை சந்தோசத்திற்கும் நிம்மதிக்கும் இடமே இல்லை ️

#
L. jatbu

சிரித்துகொண்டிருப்பது என் இதழ்கள் மட்டும் தானடி.. உன்னையே நினைத்து அழுதுகொண்டிருக்கும்.. என் இதயத்தின் வலி.. தெரியாமலே போகட்டும் உனக்கு...!! RK

#
Kalpana Subramaniam

மாயம் செய்யவில்லை.. மயங்கிவிட்டேன்.. நீ பார்த்த.. ஒரே ஒரு பார்வையில்...!! RK

#
Kalpana Subramaniam

நான் சிரிக்கும் போதெல்லாம்.. உன் இதயம் திறக்கவில்லை..!" நீ சிரிக்கும் போதெல்லாம்.. என் இதயம் என்னிடம் இல்லை...!! RK

#
Kalpana Subramaniam

உன்னை காணாமல் ஏதேதோ.. சொல்ல துடிக்குது மனம்..!" உன்னை கண்டால்.. எதையும் சொல்ல தவிக்குது தினம்..!" உன்னிடம் சொல்லாமல் இருப்பதுவும்.. ஒருவித சுகம் தான்...!! RK

#
Kalpana Subramaniam

ஒவ்வொரு நாளும் கண் விழித்ததும்,. முதல் நினைவும் நீ தான்..!" கண் மூடும் முன்.. கடைசி நினைவும் நீ தான்..!! RK

#
Kalpana Subramaniam

இதழ் என்னும் மலர் கொண்டு.. கடிதங்கள் வரைந்தாய்..!" பதில் நானும் தரும் முன்பே.. கனவாகி கலைந்தாய்...!! RK

#
Kalpana Subramaniam

என்னை நேசிக்க.. என் அருகில்.. நீ இருந்தால்,. நான் யோசிக்க.. எதுவும் இல்லை.. இந்த உலகில்...!! RK

#
Kalpana Subramaniam

உன்னை கண்டால் கனவு வரும்..!" காணாவிட்டால் நினைவு வரும்..!" நீ இருந்தால் துணிவு வரும்..!" இல்லாவிட்டால் சரிவு வரும்..!" நீ சிரித்தால் விடியல் வரும்..!" சிரிக்காவிட்டால் என் முடியல் வரும்..!! RK

#
Kalpana Subramaniam

சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பை விட சோகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பே உண்மையானது.. என் அன்பை புதுபித்து கொள்வதை விட என் சோகங்களை பகிர்ந்து கொள்ளவே உன்னை தேடினேன்.. என் மனதை நிறைத்து கொள்ளவே உன் அன்பை தேடுகிறேன்..

#
அன்புடன் ரவி

சிலுவை ======== நீ ஆணிகளோடு என்னை சிலுவையில் ஏற்றினாய்.. உன் நினைவுகளோடு நான் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தேன்..! ம.முத்துக்குமார் வே.காளியாபுரம்

#
ம.முத்துக்குமார்

கனவில் இல்லாமல் நினைவிலும் நில்லாமல் தொடரும் உன் நினைவு.. தூக்கத்திலும் தூங்காமல் தொடர்கிறது..

#
அன்புடன் ரவி

எட்டா தூரத்தில் இருக்கும் வானத்து நிலவே உன்னனை காண முடிந்த என்னால்.. எட்டும் தூரத்திலிருக்கும் என் இதயத்தின் நிலவை காண முடியவில்லை.. உனக்கு அருகில் கண் சிமிட்டும் நட்சத்திர சீமாட்டிகளை காண முடிந்த என்னால்.. என்னருகிலேயே இருக்கும் சிரிக்கும் சீமாட்டியை காண முடியவில்லை..

#
அன்புடன் ரவி

அன்பை பகிர்ந்து கொள்ள ஆயிரம் வழிகள் இருந்தாலும் அதை புரிந்து கொள்ள ஒரே வழி அன்பை பகிர்ந்தவருக்கு பிடித்தவனாக இருப்பது..

#
அன்புடன் ரவி

துடிக்க மறந்தது மனம் உன் அழகை கண்டு ஒரு கணம்... அகன்ற என் கண்களும் சிறை பிடிக்கும் உன் அழகை தினம்..

#
அன்புடன் ரவி

கண்டேனடி உன்னை என் கண்ணால்.. காணமல் போனதடி மனம் தன்னால்.. தேடினேனடி என் மனதையும் உன்னால்.. கிடைத்ததுமே சொன்னேனடி உன் முன்னால்.. நான் இருப்பேனடி எப்போதுமே உன் பின்னால்..

#
அன்புடன் ரவி

ஊரே தேடுகிறது என்னை திருடனென்று.. உன் மனதை திருடிவிட்டு மனதிற்குள்ளேயே மறைந்திருக்கும் என்னை ஊரே தேடுகிறது திருடனென்று.. ஒரு பெண்ணின் மனதில் மறைந்தால் காணவே முடியாது என்பதறிந்தும்.. ஊரே தேடுகிறது என்னை திருடனென்று..

#
அன்புடன் ரவி

தொடரும் உன் நினைவு தொடர் கொண்டு எனை துரத்தும்.. பூ மலரும் உன் முகத்தில் அனு தினமும் தேன் சுரக்கும்.. சுற்றி வரும் வண்டுகள் சினம் கொண்டு துளைத்தெடுக்கும்.. பதறாமல் என் மனம் துணிவோடு நிலைத்திருக்கும்.. சலிக்காமல் என் இதழ் தேன் துளியை துடைத்தெடுக்கும்..

#
அன்புடன் ரவி

கோவிலுக்கு அவள் வந்து சென்றவுடன்,அருவா பிடித்த ஐயனாரும் அடம் பிடிக்கிறார்,.. பேனா வேண்டுமென்று... அவளை வர்ணிக்க!

#
Karuppasamy

என்னைப் பொறுத்த வரை எனக்கு பொருத்தமான ஆறுதல் நீ தான் ... நீ மட்டும் தான் #என்னவளே

#
Karuppasamy

தேடிய அழகு உன்னிடம்.. தேடாத அழகு கண்ணிடம்.. மாறாத மாற்றம் என்னிடம்.. மாறியது தோற்றம் உன்னிடம்.. புது மொழி கண்டேன் விழியிடம்.. புரியா மொழியில் பேசியது என்னிடம்..

#
அன்புடன் ரவி

காந்தமாய் கவர்வேனடி.. என்னை சேரும் வரை தொடர்வேனடி.. பிரியமாய் சேர்ந்து இருந்தால்.. பிரிவென்றும் இல்லையடி.. மடி உறங்கும் சுகம் போல வேறொன்றும் இல்லையடி.. நீயின்றி என்னருகில் சொர்க்கமும் நரகமடி..

#
அன்புடன் ரவி

மின்னும் வைரமோ உன் கண்கள்.. வெள்ளி பனிமலைதான் உன் கண்ணம்.. சலங்கையின் ஒலியே உன் சிரிப்பு.. முத்து மணி சரம் தான் உன் பற்கள்.. தித்திக்கும் செந்தேன் தான் உன் உதடு.. உன் கன்னத்தின் குழிதான் என்னை இழுத்த புதைக்குழி ..

#
அன்புடன் ரவி

அழகே உனக்கு நிகர் இல்லை.. காட்டும் அன்பிலும் குறையில்லை.. காற்றே உந்தன் துணையின்றி புல்லாங்குழலில் இசையில்லை.. பனி விழும் இரவிற்கு நீயின்றி இசையின் துணை மட்டும் போதவில்லை.. உன் விழியின் கூர்மை ஈட்டியில் இல்லை.. உன் நினைவில்லை என்றொரு நாளுமில்லை.. உனை காணாத நாளேதும் நினைவில் இல்லை.. உன்னை தேடும் விழிகள் ஓய்வதில்லை.. ஆட்டுவிக்க நீயிருந்தால் ஆடும் ஆட்டமும் தோற்பதில்லை..

#
அன்புடன் ரவி

மனதின் ஓரம் பெரும் தவிப்பு எனக்கு... பெண்ணே! உன் கொலுசின் முத்துக்கள் கூட என்னை பார்த்து ஏளனம் செய்கின்றன... நான் சினுங்க வேண்டிய இடங்களில் அவை சினுங்கி தொலைக்கின்றனவே

#
Karuppasamy

அழகே வானத்து நிலவே ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் மேகமாய் அனைத்த என்னை வேகமாய் விலகாமல் அன்னம் போல் நீயும் நீந்திதான் செல்கிறாய்.. ஆனால் உன்னையே சுற்றும் விழிகள் மட்டும் ஏனோ மின்னலாய் விரைந்து செல்கிறது..

#
அன்புடன் ரவி

மறுபிறவி கொள்வெனோ... அவள் காற்கொலுசாய் உய்வெனோ... தன்னோசை மறந்து... ஒலிபெனோ அவள் பெயரோசை... நடைபாதை முழுக்க...

#
கவி மொழியன்

கரையோரம் நீயும் உன் மடிசாய நானும் கதைபேச நீயும் இமைக்காத நானும்... இதைப்பார்த்து ஏனோ??? அலைகள் அலைகிறதே இங்கும் ஆங்குமாய் காட்சி படம் பிடிக்க... கானும் வானம் அது நிலவை அழைக்கிறதே ஒளியும் அடிக்க... காதல் மலர்கிறதே கடல் மணலில் ஓர் மின்மினி என் கவிதை படிக்க... --- க மொ

#
கவி மொழியன்

காணும் போதெல்லாம் பேசாமல் தவிக்கிறேன்.. காணாத போதெல்லாம் பேசிட துடிக்கிறேன்.. அருகில் நீ இருந்தால் அனைத்து மகிழ்கிறேன்.. தொலைவில் நீ இருப்பதால் நினைத்து மகிழ்கிறேன்..

#
அன்புடன் ரவி

விதியால் என்று சொல்வதை தவிர, வேறு என்ன சொல்லி, எழுதிட முடியும் இந்த காகிதத்தில்..!" இப்பொழுது உனக்கும் எனக்கும் இருக்கும் தூரத்தை...!! RK

#
Kalpana Subramaniam

எனக்கென ஓர் உலகம் படைத்து அதில் உன் நினைவினை புகுத்தி என் தனிமை இரவுகளில் என் கண்ணீர் துளிகள் இசை மீட்ட தூரத்தில் குயில்கள் பாட்டு பாட சட்டென்று விழிமுன் வந்து போகும் உன் முகம் தான் என் தீராத தனிமையின் மருந்து SKD

#
SK

பயணிக்கும் நேரம் சிறிது என்றாலும் நெடு நாள் மகிழ்ச்சி தந்து கொண்டே தான் இருக்கிறது அந்த அழகான உரையாடல்

#
Karuppasamy

வெட்டென மறக்க முடிந்தால் சட்டென அடுத்த காதல் போகலாம்

#
Karuppasamy

நீ இருக்க நான் இறக்கலாம் நான் இருக்க நீ இறக்கலாம் காலம் என்ன செய்யும் வாழுற வரை ....

#
Karuppasamy

பச்சை வண்ண பச்சை கிளியே.. மின்னலாய் மறைந்து போனதெங்கே?.. அரை இருட்டு அறையில் கண் முன் அமர்ந்தவுடன் கண் மறைந்து போனதெங்கே?.. பின் தொடரும் என்னை திசை மாற செய்து விட்டு மாயமாகி போனதெங்கே?.. உன் இதழ் சுவைத்த இளநீராய் தித்திக்கும் இன்பத்தை தந்து விட்டுப் போ..

#
அன்புடன் ரவி

பெண்ணே உன் அழகை கண்டு.. சிற்பமோ நீயென்ற ஐயம் கொண்டு.. தேடியது என் விழிகள் இரண்டு.. வானவில்லாய் வளைந்து நின்ற உன் நிழலை கண்டு.. ஆஹா...! நிழலுக்கே இந்த அழகென்றால் நிஜத்திற்கு என்ன அழகோ என்று மதிமயங்கியது இன்று..

#
அன்புடன் ரவி

எந்தவொரு உறவை விட்டு பிரிவதற்கு முன்பு ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் அவர்களிடம் நாம் எந்தளவிற்கு #அன்பு வைத்தோம் என்றும் ..!!

#
Karuppasamy

முத்துக்கள் உதிருமென தெரிந்தும்., உன்னிடம் மாட்டிக்கொள்கிறேன்..!" உனது காலில், இசை எழுப்பும் கொலுசாக...!! RK

#
Kalpana Subramaniam

பிடிக்காத கவிதை போல, என்னை கசக்கி எறிந்து மறக்கிறாய்..!" குப்பை தொட்டி கூட, எனக்கு சொர்க்கம்தான்..!" உன் விரல் பட்டு விழுந்ததால்...!! RK

#
Kalpana Subramaniam

என் தோல்வி கசக்கவில்லை, தோற்றது காதலில் என்பதால்..!" முகம் மறக்க விரும்பவில்லை, பிரிவது உன்னை என்பதால்..!" காலம் மருந்திட்டு ஆற்றிடும் காயங்களை..!" என்னை மூழ்கடித்த, உன் பார்வையின் மாயங்களை...!! RK

#
Kalpana Subramaniam

உறங்க நினைக்கிறேன் முடிவதில்லை..!" உறக்கம் விழிகளை தொடுவதில்லை..!" அழைக்க நினைக்கிறேன், மொழிகளில்லை..!" அணைக்கத் துடிக்கிறேன், நீ அருகில் இல்லை...!! RK

#
Kalpana Subramaniam

தவறு என்று தெறிந்தும், தவிர்க்க முடியாமல் தவிக்கும், இதயத்தின் ஆசை தான், காதல்...!! RK

#
Kalpana Subramaniam

முகவரி கொடுத்த, உன் கொலுசை, கொஞ்சம் திருப்பி கொடு.. என் இதய ஒலிக்கு, உயிர் ஊட்டட்டும்...!! RK

#
Kalpana Subramaniam

மற்றவர்களுக்கு நீ, மௌனமாக இருப்பது தான் தெரியும்..!" ஆனால், விழிகளால் பேசிக் கொண்டிருப்பது, எனக்கு மட்டும் தான் தெரியும்...!! RK

#
Kalpana Subramaniam

நீ அருகில் இருக்கும் போது, அடி பட்ட காயதின் வலி தெரிவதில்லை..!" நீ அருகில் இல்லாத‌ போது, இதய துடிப்பு கூட‌ வலிக்கிறது...!! RK

#
Kalpana Subramaniam

காதலில் தோற்பவர்கள், பிணமாகிறார்கள்..!" அல்லது, பிணமாக வாழ்கிறார்கள்..!" நினைவுகள் மட்டும் உயிரோடு...!! RK

#
Kalpana Subramaniam

காதல் ஒரு கண்ணாடி..!" ஆனால், அது தோன்றுவதை எல்லாம், காட்டுவது இல்லை...!! RK

#
Kalpana Subramaniam

நீண்ட தூரம் பயணித்த பின்பும், திரும்பி நடக்கிறேன், முடியவில்லை..!" நெஞ்சினில் உன் நினைவுகள், சுமையாய் கனக்கிறது..!" எனை பிரிந்து விட்டாயே.. என்ற ஏக்கம், எனை வாட்டும் போதெல்லாம்.., உன் நினைவுகள், எனை அணைத்துக் கொள்கின்றது...!! RK

#
Kalpana Subramaniam

கண்ணீர் தந்தது கடவுள் என்றால், காலம் தான் பதில் சொல்லும்..!" கண்ணீர் தந்தது காதல் என்றால், பதில் உன்னிடமே உண்டு...!! RK

#
Kalpana Subramaniam

மறக்காமல் நினைக்கிறேன் உன்னை..!" நினைக்கவே மறக்கிறேன் என்னை...!! RK

#
Kalpana Subramaniam

எனது உயிர் பிரிந்து சென்ற பிறகும், காற்றாக கலந்து, மேகத்தில் உறைந்து, கண்ணீர் என்னும் பெயரில், மழையாக விழுவேன்..!" உனது இதயத்தில் இடம் பிடிக்க, குடைபிடித்து செல்லாதே...!! RK

#
Kalpana Subramaniam

அடையாளம் தெரியாத எனது அன்பும், ஆறுதல் பெறுகின்றன, உன்னிடம் மட்டும்..!" காதல் அடிமைகளாக...!! RK

#
Kalpana Subramaniam

தனிமை இனிக்கிறது, உன் நினைவுகளால்..!" வெறுமை மறைகிறது, உன் கனவுகளால்...!! RK

#
Kalpana Subramaniam

ரசிபதற்க்கு கண்கள் போதும்..!" நேசிபதற்க்கு காதல் போதும்..!" ஆனால்., நான் வாழ்வதற்கு நீ மட்டும் போதும்...!! RK

#
Kalpana Subramaniam

அளவுக்கு அதிகமாக நேசித்து, அவளுக்காக காத்திருந்து, அவளிடம் கேட்டேன்..!" அன்பே வா பேசலாம் என்று..!" அவளோ.., நான் பிஸி என்று சொல்லி விட்டாள்...!! RK

#
Kalpana Subramaniam

ஏங்கி ஏங்கி அழுவதை விட, அந்த சொல்லின் வலி, மரணத்தின் சமம்...!! RK

#
Kalpana Subramaniam

ஆசையில்.. அவளுக்கு.. ஓர் கடிதம்..!" அதில்.. அனைத்து.. வரிகளும்.. கண்ணீர்...!! RK

#
Kalpana Subramaniam

என் அத்தனை ஆசைகளும் கரைந்து, கானல் நீராய் போகிறது..!" அவள் இல்லாமல் போனதால்...!! RK

#
Kalpana Subramaniam

வெறுத்த ஒருவரையே, மறக்க முடியாத போது.., விரும்பிய ஒருவரை, எப்படி மறப்பது...!! RK

#
Kalpana Subramaniam

விழியின் வழி புகுந்தாய் பின், இதயம் தனில் உறைந்தாய்..!" செயல்கள் தனில் கலந்தாய், என் உயிரிலும் நீ நிறைந்தாய்..!" மூச்சில் உன்னை உணர்ந்தேன், உன் பேச்சில், என் பெயர் மறந்தேன்..!" கவிதை புனைய வைத்தாய், உன்னை கனவிலும் தேட வைத்தாய்..!" காதல் கற்று கொடுத்தாய், மனம் முழுதும் பித்து கொடுத்தாய்...!! RK

#
Kalpana Subramaniam

கிடைக்கும் போதெல்லாம், நிலைக்குமா? என்ற பயத்தை, தந்து விடுகிறது ஆறுதலான அன்பு...!! RK

#
Kalpana Subramaniam

மாறாத அழகில் மாற்றம் கண்டேன்.. தினமும் மெருகேறும் அழகைக் கண்டேன்.. தேடும் விழிகளில் தவிப்பை கண்டேன்.. அழகு முகத்தில் அன்பை கண்டேன்.. ரோஜா இதழில் சிரிப்பை கண்டேன்.. சிரிக்கும் இதழில் நளினம் கண்டேன்.. என் மனமும் அதனுடன் சுழல்வதை கண்டேன்..

#
அன்புடன் ரவி

என்னை உரசிச் செல்லும் தென்றலே.. பட்டதும் மறைந்திடும் மழைத்துளியே.. தூக்கிலிட்டாலும் துவளாத பூக்களே.. மௌனமாய் வந்து மெளனகீதம் பாடியவளே.. பிரம்மனுக்கும் பிரம்மை பிடிக்கும் புன்னகையே.. பூ பூவாய் பூத்துக் குலுங்கும் அழகியே .. உன்னை கடந்து செல்லும் அனைத்துமே உன்னைக் காதலிக்கும் என்னைப் போல..

#
அன்புடன் ரவி

திக்கு தெரியாத வாழ்க்கையில் திசை காட்டியவள்.. தித்திக்கும் புது வாழ்வை தொடங்கி வைத்தவள்.. மாறிடும் மனதில் மாறாதவள்.. தடையிட்ட நேரத்திலும் தடையில்லாதவள்.. நகராத நேரத்திலும் நகர் வலம் வந்தவள்.. இரவோடு பகலும் போதாமல் செய்தவள்.. திகட்டாத அன்பில் திகைக்க செய்தவள்.. சிரிக்கும் அழகில் சிறப்பானவள்.. கன்னத்தில் குழியுடன் அழகானவள்.. விழியில் மொழி பேசும் புதுமையானவள்.. என் மனதை களவாடி சிறையிட்டவள்.. கை பிடித்து இதழ் பதிக்க இனிமையானவள்.. மனதோடு மணமுடிக்க தகுதியானவள்..

#
அன்புடன் ரவி

துளிர்ந்த காதலை துளிர்த்தவர் மனதில் வளர்த்திட வேண்டும்.. வளர்ந்த காதலை பிடித்தவள் மனதில் பதித்திட வேண்டும்.. துளிர்ந்த காதல் காலம் கடந்தும் செழித்திட வேண்டும்.. செலுத்தும் காதல் திகட்டாமல் தொடர்ந்திட வேண்டும்..

#
அன்புடன் ரவி

நீ பார்த்த பார்வையில் மின்சாரம் பாய்ந்தது... கடைக்கண் பார்வையில் புதுக்கவிதை பிறந்தது.. கண் விழி புருவங்களில் மனம் தடுக்கி விழுந்தது.. உன் சிரிப்பொலியின் சத்தம் கேட்டு என் சிந்தனையும் நின்றது... உன் முகம் கண்ட விழிகள் இரண்டும் ஆரத்தழுவி கொண்டது.. தினம் வந்த உன் நினைவால் இரவில் தூக்கம் தொலைந்தது.. தூக்கமில்லா இரவுகள் உன் நினைவில் தொடர்ந்தது... தொடரும் உன் நினைவோ தொடர்கதையானது..

#
அன்புடன் ரவி

மறந்து விட நினைப்பதேனோ மறக்க முடியாமல் போகுது.. நினைவில் வைக்க நினைத்ததேனோ மறந்து மறந்து போகுது.. கண்களில் காண்பதெல்லாம் மாயமாகி போகுது.. நெஞ்சமெல்லாம் உன் நினைவு மீண்டும் மீண்டும் தோணுது.. ஏங்காதே நீ என்று நிலவைப் பார்த்து சொல்லுது..

#
அன்புடன் ரவி

போகும் இடமெல்லாம் உன் நினைவு காத்திருக்கும்.. மலரும் உன் நினைவிலும் அளவின்றி தேன் சுரக்கும்.. சுற்றி வரும் வண்டாக என் விழியும் காத்திருக்கும்.. சலிக்காமல் என் மனமும் தேன் துளியை துடைத்தெடுக்கும்.. மலரும் நினைவுகளில் என் மனமும் ஆழ்ந்திருக்கும்.. உன் நினைவை தேடியே வேறிடமும் சென்றிருக்கும்..

#
அன்புடன் ரவி

மனமே மனமே பதறாதே.. மெல்ல மெல்லத்தான் புரியும் கலங்காதே.. துளிரும் காலம் வரை மனதில் புதைத்து வைக்க தயங்காதே.. செழிக்கும் காலம் வந்தால் காதலாய் துளிர் விட மறவாதே..

#
அன்புடன் ரவி

தினம் மலரும் ரோஜாவே முள்ளோடு இருந்தாலும் மனம் மயங்க வைத்தாய்.. இதழ் விரித்து நீ சிரித்து காண்பவரை வசியம் செய்தாய்.. காற்றோடு இதழ் அசைத்து மெய்மறந்து ரசிக்க வைத்தாய்.. காதலிக்கும் பெண்ணுக்கெல்லாம் உன் பெயரை சூட்ட வைத்தாய்.. விரும்பியவர் கை எல்லாம் முள்ளோடு உனை வைத்தாய்.. விரும்பியவளுக்கு அதை தந்து காதலையும் சொல்ல வைத்தாய்..

#
அன்புடன் ரவி

பிடிக்கவில்லை யாரையும் உன்னை பிடித்ததிலிருந்து.. காணவில்லை யாரையும் உன்னை கண்டதிலிருந்து.. வானத்து நிலவும் அருகில் இல்லை ஆனால் காணாமல் இல்லை.. நீ இருக்கும் இடமோ தூரமில்லை ஆனால் காண்பதேயில்லை..

#
அன்புடன் ரவி

அழகு என்ற ஆரம்ப காதலில் அன்பில் வருவது அனுபவ காதல்.. பிடித்தவருடன் மனமொன்றி வருவது உண்மைக் காதல்... மனம் தளராத ஒருவருடன் வியந்து வருவது முதிர்ந்த காதல்... பார்த்து பழகியதில் மிக சிலர் மீது வருவதே இந்த அதிசய காதல்..

#
அன்புடன் ரவி

உன்னை பார்த்து ரசித்த அதே கண்கள் உன்னை பார்க்காத போது தவிக்கிறது.. என் விழிகள் போகும் இடமெல்லாம் உன் பிம்பமே பின்னி நிற்கிறது.. முட்டி நிற்கும் கரு விழியோ துள்ளி திரிகிறது.. மனதில் தோன்றும் உன் நினைவோ பொங்கி வழிகிறது..

#
அன்புடன் ரவி

என்னையும் என் உணர்வுகளை நன்கு உணர்ந்தவள் நீ.. அழகாக உணர்த்தி விட்டாய் என்னை தொடர்பு கொள்ளாமல் தொடர்ந்து கொள் என்ற எதிர்பே இல்லாத தவிர்பை..

#
அன்புடன் ரவி

நினைவில் உன் முகம் நீங்காமல் நீள்கிறது.. தொடரும் உன் நினைவோ தொடர் வண்டியாய் துரத்துகிறது.. துரத்தும் உன் நினைவுடனே தொடருகிறேன் நானும் தொடர் வண்டியாய் தொடர்ந்து..

#
அன்புடன் ரவி

செந்தேனின் சுவையுடன் கதைத்து கொள்ள ஆசை.. பதட்டமின்றி உன்னோடு பழகி கொள்ள ஆசை.. உன்னிடம் காதலை காட்டிக் கொள்ள ஆசை.. நிலவிற்குள் பாய் விரித்து உறங்கி கொள்ள ஆசை.. நிலவிற்கு கடனாக ஒளியைத் தர ஆசை.. சூரியனை குளிர் பெட்டியில் அடைத்து விட ஆசை.. கட்டணமின்றி பூமியை சுற்றிவர ஆசை.. தித்திக்கும் தமிழ் மீது அளவில்லா ஆசை.. இசையோடு தமிழ் பாட உள்ளத்திலே ஆசை.. துடி துடிக்கும் இதயத்தின் இசைக் கேட்க ஆசை.. கற்பனைக்கு சிறகாக படபடக்க ஆசை.. ​சிற்பி வடிந்த சிலையிலும் குறைத் தேட ஆசை.. தூரிகையின் துணையின்றி முகம் தீட்ட ஆசை.. விழியோடு புது மொழியில் பேசி கொள்ள ஆசை.. சொக்க வைக்கும் விழிக்கெல்லாம் மை பூச ஆசை.. உளியின்றி விழி கொண்டு உனை வடிக்க ஆசை.. கலகலக்கும் வளையோசையில் கலந்து விட ஆசை.. பூவிற்குள் தேனூறும் ஊற்றை காண ஆசை.. படபடக்கும் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க ஆசை.. மணமணக்கும் பூவிதழ் மேல் அமர்ந்து கொள்ள ஆசை.. தலை சாய்த்து உன் மடி மேலும் உறங்கி கொள்ள ஆசை..

#
அன்புடன் ரவி

இமைக்குள் நீ இருக்க உன்னை கலங்காம பார்க்கதான் கரையாம நான் இருக்கேன்!!

#
Karuppasamy

புன்னகை பூத்து விடுகிறது உன் மலர் முகம் காணும் போது #என்னவளே

#
Karuppasamy

ஒவ்வொரு வரிகளும் அவளுக்கானவை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும் ... இருந்தாலும் ஒரு வரி கூட பேச மாட்டாள் !!

#
Karuppasamy

எந்த ஓவியத்திலும் என்னை படைத்து விடாதே உன்னில் மட்டுமே அடைபட்டு கிடக்கும் காவியம் நான்....

#
Karuppasamy

உன்னுடன் இனி பேசவே கூடாது என்ற வைராக்கியமெல்லாம் உன் குரல் கேட்டதும் உடைந்து போகிறது..!

#
Karuppasamy

நேசித்தேன் நேசிக்கிறேன் நேசிப்பேன் அவ்வளவு தான் எனக்கு தெரிந்த #காதல்

#
Karuppasamy

உன் மொத்த அன்பும் எனக்கு வேண்டும் என்பதில் கொஞ்சம் பேராசைக்காரன் தான் நான் #என்னவளே

#
Karuppasamy

வயதில் வந்தது ஒரு மாற்றம்.. மாறியது அழகாய் என் தோற்றம்.. முகத்தில் அழகு பதிவேற்றம்.. கண்டதும் மனதில் பல மாற்றம்.. ரசிக்கும் விழியில் தடுமாற்றம்.. மனதில் ஏதோ புது மாற்றம்..

#
அன்புடன் ரவி

கட்டுண்டு கிடந்தேன் காலை வரை உன் நினையோடு.. காற்றுக்கும் இடமில்லை என் சுவாசம் உன் நெஞ்சோடு.. எப்போதும் மனதிற்குள் உன் நினைவை சுமந்ததோடு.. தூக்கத்தையும் மறந்திருந்தேன் பகிராமல் உன்னோடு.. பாதியில் மறைந்து விட்டாய் கேட்காமல் என்னோடு.. காலை வரை கண் முழித்தேன் உன் கடைசி பதிவை கண்டதோடு..

#
அன்புடன் ரவி

உருகிய மனதில் உனை நினைக்க.. அன்பும் அதனுடன் கலந்திருக்க.. கண்டிட விழிகள் தவித்திருக்க.. தூண்டும் உன் முகம் நினைவிருக்க.. ரோஜா இதழால் எனை அழைக்க.. தவித்து நின்றேன் கண்கள் விரைக்க..

#
அன்புடன் ரவி

பிடித்திருக்கும் ஒருவருக்கு பிடித்தமாய் இரு.. இருக்கும் பொருள் மட்டுமே போதுமென்று இரு.. கிடைக்கும் நொடியெல்லாம் மகிழ்வாயிரு .. குருதி குறைந்து, உடல் மெலிந்து, வயது முதிர்ந்து போனாலும் காதல் குறையாமல் இரு..

#
அன்புடன் ரவி

காதல் தோல்வி #*காட்டில் இருப்பது பருத்தி என் நெஞ்சில் இருப்பது நீ ஒருத்தி,,, #*வீட்டில் இருப்பது கிளாக் நான் உன்னை பண்ண போறேன் பிளாக்

#
Karuppasamy

~நான் எதுவும் பார்த்து இல்லை~ ~நான் பார்த்து ரசிப்பதற்காகவே காட்டுகிறாள்~... ~அவள் மூக்கின் மேல் இருக்கும் ~மூக்குத்தியை... ஆனாலும் ~அழகாய் தான் காட்சி தருகிறது~...

#
Karuppasamy

எத்தனை முறை பார்த்தாலும் சலித்துப் போவதே இல்லை.. நீ வெட்கப்பட்டு சிரிக்கும் அந்த புகைப்படம்..! ️ இனிய இரவு..

#
Karuppasamy

வெள்ளம்... நான் கரை சேர முடியாத, காட்டாற்று வெள்ளம்... அவள் என்மேல் கொண்ட, பேரன்பின் பெருவெள்ளம்... ~money Tan ~money is always alert Mattu..

#
Karuppasamy

நிலவே வானத்து படகே வெண்ணிறத்தில் பொன்னிறம் காட்டி சொக்க வைத்து சென்றதேனோ?.. நிறம் மாறி உலா வந்து உருமாறி போனதேனோ?.. விழியசைத்து, எனையழைத்து வசிகரித்து போனதேனோ?.. மத்தாப்பு புன்னகையில் நான் கிறங்கும் நேரத்தில் மனம் மயங்கும் மல்லிகையை நீ சூடிக்கொண்டதேனோ? பஞ்சு மெத்தை போல நீயும் பச்சையில் பட்டுடுத்தி எனை மயங்க செய்ததேனோ? உனதழகில் நான் மயங்கி என்னை மறந்து போனதேனோ?

#
அன்புடன் ரவி

உன்னழகில் கிறங்கிய விழியோ சொக்கி போனது .. கொக்கி போடும் வார்தைகளோ உக்கி போட்டது.. வர்ணனையும் வராமல் திக்கி நின்றது.. சொக்கி போன விழிகளால் மனம் விக்கி போனது..

#
அன்புடன் ரவி

யோசிக்கும் முன்பே உன்னை நேசித்து விட்டேன் ... இன்று யோசித்து கொண்டிருக்கிறேன்.. ஏன் நேசித்தேன் என்றல்ல ,,இன்னும்,, ,,இன்னும் ,, ~ உன்னை எப்படி ~நேசிப்பது என்று

#
Karuppasamy

நீ ரசிக்கும் அளவிற்கு நான் அழகானவளாய் இல்லாமல் இருக்கலாம்.. *#..ஆனால் உன்னை ரசிக்கும் அளவிற்கு நான் அன்பானவன்

#
Karuppasamy

கனவிலும் உன் வருகைக்காகவே காத்து நிற்பவன் நான்.. கண்களால் கைது செய்வாய் என்பதறிந்தே உன் இதயத்தை திருடியவன் நான்.. உன் மனச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறி போனவன் நான்..

#
அன்புடன் ரவி

அவகிட்ட என்ன பிடிக்கும்னு யாராவது என்கிட்ட கேட்ட அடக்கமா சொல்ற பதில் அவளையே எனக்கு பிடிக்கும்

#
Sakthivel Sakthivel

சில பிடித்த விஷயங்களை தூரமாக நின்று ரசிக்கிறேன் எங்கே நான் அருகில் சென்றால் தொலைந்து விடுமோ என்ற பயத்தில்

#
Sakthivel Sakthivel

தொந்தரவு செய்யாமல் இருப்பதுதான் என் அன்பின் இறுதி வெளிப்பாடு

#
Sakthivel Sakthivel

காற்று வீசு தொடங்கி கொண்டு தான் இருக்கின்றன.. இன்று வரை நான் உன் மூச்சு காற்றாய்..

#
Karuppasamy

இன்று வரை இல்லை என்றும் நான் உயிரோட தான்,, இருக்கின்றேன்.. உன்னிடம் உள்ள இதய துடிப்பில் அதை நீ மறந்து விடாதே..?

#
Karuppasamy

பெண்ணே நீ அழகென்று ஒரு போதும் நினைக்காதே.. உனதழகை உன் விழியால் நீ ரசிக்க முடியாது.. உனை ரசிக்கும் ஆணின்றி உனதழகும் தெரியாது.. ரசிக்காமல் உனதழகை மெருகேற்ற முடியாது.. தினதோறும் வர்ணிக்க ரசிப்பின்றி நடக்காது.. ஆணும், பெண்ணும் ரசிக்காமல் அன்பை காட்ட முடியாது.. தொடரும் வாழ்க்கையில் ரசிப்பின்றி வண்ணம் மேலும் கூடாது..

#
அன்புடன் ரவி

TN.24.KDS உன்னால் எவ்வளவு ஏமாற்றம் நிகழ்ந்தாலும் என்னை நான் மாற்றி கொள்ளப் போவதில்லை என் அன்பு உண்மையானது இன்றும் என்றும் என்றென்றும் மாறாது

#
Sakthivel Sakthivel

என் கவிதையை இரசித்த இரசிகனை (என்னவனை) எண்ண எண்ண என் கவிதைக்குச் சிறகு முளைத்து அவன் கைகளில் துடிதுடித்தது...

#
Ilakkiya sri

அதிகாலை புள்ளினங்கள் சந்தம் இசைக்க கனிகள் வாசம் சிந்த அணில்கள் கூத்தாடி கனிகளைப் புசிக்க ஆதவனோ இலைகளினூடே நுழைந்து என் மேனியில் தவழ நானோ என்னவனின் வருகையை எதிர்பார்த்துக் காத்து நிற்க .என் செவிகளிலே என்னவனின் மூச்சுக்காற்றின் வெப்பம் உரச தஞ்சம் ஆனேனடா உன் இதயத்தில்...

#
Ilakkiya sri

ஒப்பனைகள் இன்றி என்னவன் மனம் எழிலுடனும் நேசத்துடனும் மிளிரும்...

#
Ilakkiya sri

என்னவனின் வருகைக்காக தென்றலும் சற்று வலுவாக மாறி மண்ணில் விழ்த்தியதோ இம்மலர்களை இவனின் பாதங்களுக்கு மலர் மெத்தையாக்கி...

#
Ilakkiya sri

குளிர்காலம் வந்துவிட்டது தீ மூட்டி குளிர்காய சேகரித்து வருகிறேன் அவளின் நினைவுகள் என்னும் நெருப்பை...

#
Karuppasamy

_காதல் வரும் போது_ _கவிதை வரும்_ _காதல் விலகும் போது_ _கண்ணீர் வரும்_ RK

#
Kalpana Subramaniam

_உன்னைக் கண்டவுடன்_ _புரிந்தேன்_ _நீ என்னவள் என்று_ _ஆனால் நீ_ _என்னைக் கண்டவுடன்_ _திரும்பிக் கொண்டாய்_ _எவனோ என்று_ RK

#
Kalpana Subramaniam

<கொஞ்சம் தள்ளி வைத்தால் கூட> <நிறைய நெருங்கி வருகிறது> <உன் மீதான காதல்> <நீ என்னை காதலித்தை விட> <நீ என்னை காயப்படுத்தியது தான்> <அதிகம் என்று தெரிந்தும்> RK

#
Kalpana Subramaniam

<காதல் ஒன்றுதான்> <புரிந்து கொண்டாலும் அழகு> <பிரிந்து சென்றாலும் அழகு> <வலிகள் தான் வேறுபடும்> <காதல் வேறுபடாது> RK

#
Kalpana Subramaniam

_அழகை கூட ரசிக்க தெரியாத மனம் எனக்கு_ _ஆனால்_ _அழுகையை கூட ரசிக்க கற்றுக் கொண்டேன்_ _அவளை காதலித்த பின்பு_ RK

#
Kalpana Subramaniam

_பல நாள் என்னிடம் கேட்ட கேள்விக்கு_ _இவள் தான் என்று_ _அவள் கை பிடித்து_ _காதலுக்கு_ _அறிமுகம் செய்துவிட வேண்டும்_ _என்று தேடுகிறேன்_ _எனக்கானவளை_ RK

#
Kalpana Subramaniam

_உன்_ _இதயத்தின் இசைக்கு_ _என் இதழ்கள்_ _புன்னகைக்கும்_ _என்றும்_ _அருகில் நீ இரு_ RK

#
Kalpana Subramaniam

_யாருக்கும் தெரியாமல்_ _நீ அவளை நேசி_ _ஒரு நிமிடமாவது_ _அவளுக்கும் தெரியாமல் உன்னை நேசிப்பாள்_ RK

#
Kalpana Subramaniam

_என் இதயத்தை கேட்டுப்பார்_ _உன் நினைவுகளை தாங்காமல்_ _துடிக்கும் துடிப்பை_ _என் ஒவ்வொரு_ _இதய நரம்பையும் அறுத்துவிட்டு_ _காதல் வீணையில்_ _ஓசை இல்லை என்கிறாயே_ RK

#
Kalpana Subramaniam

_நீ என்னை_ _காணாதது போல்_ _செல்லும் நேரமெல்லாம்_ _நான் என்னுள்_ _காணாமல்_ _போய்விடுகிறேன்_ RK

#
Kalpana Subramaniam

_இறைவா_ _அவள் வரும்போது_ _ஒரே ஒருமுறை என்னை_ _காற்றாக மாற்றி விடு_ _அப்போதென்றாலும்_ _ஒருமுறை அவளை_ _தொட்டு பார்கிறேன்_ RK

#
Kalpana Subramaniam

_உனக்காக காத்திருப்பதே_ _காதல் சுகமாக இருப்பதால்_ _நீ காதலிக்கா விட்டாலும்_ _நான் காத்திருப்பேன்_ RK

#
Kalpana Subramaniam

_ஏன் இந்த வாழ்க்கை என_ _ஏங்கிய போது_ _நீ வந்தாய்_ _ஏழை நான்_ _உன்னால்_ _ஏழு உலகமும் பெற்றேன்_ RK

#
Kalpana Subramaniam

_எரிமலையென_ _தினம் தினம்_ _வெடிக்கிறது மனது_ _அதை தலையில்_ _கொட்டி கொட்டி_ _மூடி வைக்கிறது_ _உன் நினைவு_ RK

#
Kalpana Subramaniam

அன்பே...!!! என்னை முதன் முதலில் நேசித்தவளும் நீதான்..!" என்னில் முதன்முதலில் நான் சுமந்தவளும் நீதான்..!" பாதை இல்லாத கானகத்தில், திசை தெரியாத பறவை நான்..!" துடிக்கும் என் இதயம் ஊமையாகிவிட்டது..!" நீ என்னை அந்த பிரிந்த நிமிடம்..!" வலிகளோடு சொல்கிறேன்..!" முயற்சி செய்தும் முடியவில்லையடி உன்னை வெறுக்க..!" உன்னை நேசித்திருந்தால் நான் மறந்திருக்கலாம்..!" உன்னை நான் சுவாசிக்கிறேனடி..!" எப்படி மறக்க முடியும் உன்னை..!" என்னோடு நீ வாழவேண்டாம், என் இதயத்தில் நீ வாழ்ந்துவிடு..!" நான் வாழும்வரை என் வாழ்விற்கு அதுபோதுமடி..!" உதிர்ந்துவிட்ட என் வாழ்வில்..!" உன் நினைவுகள்தான் எனக்கு சிறு வெளிச்சமடி..!" வைத்துகொள்கிறேன் உன் நினைவுகளை என்னோடு மட்டும்...!! RK

#
Kalpana Subramaniam

_உன் வழிவரும்வரை_ _என் விழிப்பார்வைக்கு_ _காத்திருந்த நீ_ _இன்று விழிமேல்_ _வழிவைத்து காத்திருந்தும்_ _வேலையின் பெயர் சொல்லி_ _என்னை_ _காக்கவைப்பதேன் காதலா_ RK

#
Kalpana Subramaniam

_நான் பல_ _எதிர்ப்பார்ப்புகளுடன்_ _ஏக்கமாக காத்திருக்கிறேன்_ _உன் அன்புக்காக_ _ஆனால்_ _நீ தருவதோ_ _வலிகள் மட்டுமே_ RK

#
Kalpana Subramaniam

நிலவினை சிறைபிடிக்கும் மேகங்கள் போலவே.., அவ்வப்போது என்னையும் சிறைபிடிகிறது.., என் இதயத்தின் வலிகள்..!" அன்புக்கு ஏங்கி அழும் இதயத்தின் உணர்வுகளை.., எனக்குள்ளே புதைத்துக்கொல்கிறேன்..!" மண்ணில் என் மனமும்,உடலும், புதைந்தாலும்.., என் கனவுகள்,ஆசைகள் யாரும் அறியாத பொக்கிசமே..!" என் வலிகள் என்னோடு..!" என் ஆசைகள் மண்ணோடு..!" என் கண்ணீர் துளிகள் கண்ணோடு..!" எத்தனை முறை முயன்றும்.., சில வலிகளையும், ஏமாற்றங்களையும் மறக்க முடியவில்லை..!" மனதில் மறைந்து கிடக்கும்.., ஏமாற்றங்களையும், ஆழமான காயங்களை யாரும் உணரப் போவதில்லை..!" மனம் விட்டு பேச.., உறவு ஒன்றை தேடுது உள்ளம்..!" எத்தனை உறவுகள் இருந்தாலும்.., மனம் என்னமோ அனாதையாக தான் கிடக்கிறது...!! RK

#
Kalpana Subramaniam

என் உள்ளத்தில் நீ இருக்கும் இடத்தினை சொல்ல அழகிய கவிதைகளாய் மாறுகிறது என் எழுத்துக்கள் எல்லாம் என் அன்பே

#
Sathya Rakshan

அழகாய் பிறக்கிறது உன்னை நினைத்தால் வார்த்தைகள் எல்லாம் அவைகளையே அழகாய் கோர்த்து மாலை போல சூட்டுக்கிறேன் என்றும் என் கவிதைகளாய் உனக்கு என் அன்பே

#
Sathya Rakshan

kavithaikavithai

#
Mani Manikandan

உன்னிடம் பேச மட்டும் எப்போதும், ஆயிரம் கதைகள் இருக்கிறது..!" உன்னிடம் வீச மட்டும், என்னுடைய வாசம் தவம் கிடக்கிறது..!" உன்னுடைய நேசம் மட்டும், என்னிதய வாசலுக்குள் உறங்கி கொண்டிருக்கிறது..!" உன்னுடைய பாசம் மட்டும், எனக்குள் ஏக்கங்களையும், ஏமாற்றங்களையும், பிரசவிக்கிறது..!" உன்னுடைய உருவம் மட்டும், எங்கேயும் போகாமல் ஒட்டிக் கொள்கிறது..!" உன்னுடைய நினைப்பு மட்டும், என் இதயத்தை நீங்காமல் நிரப்பி இருக்கிறது..!" உன்னுடைய நிகழ் காலத்தோடு தான், என்னுடைய நிகழ்காலம், கெட்டியாக ஒட்டிக் கொள்கிறது..!" உன்னுடைய எதிர்காலத்தோடு தான், என்னுடைய காலடி தடங்கள், இணைந்திட நினைக்கிறது..!" என்னையும், உன்னையும், என்றாவது ஒருநாள், காலம் இழுத்து சுருட்டி, ஒருபுள்ளியில் சேர்த்துவிடும்..!" அந்த நாளுக்காக காத்திருக்கிறது, இந்த அன்பு மனசு...!! RK

#
Kalpana Subramaniam

சுயநலமே நிறைந்திருக்கும் இவ்வுலகில் சுயநலமாகக் கேட்கிறேன் உன் அழகான அன்பை மட்டும்

#
pra deepa

கருமேகங்கள் சூழ்ந்த பாம்பன் பாலத்தைப் போல..!! என் இதயத்தை சூழ்ந்து விட்டாய் பெண்ணே...

#
Karuppasamy

கண்முன் கலைந்த வானம் நீ..... காலத்தால் அழிந்த கவிதை நீ..... கண்முன்னே அழகாய் தொன்றிய கனவு நீ..... பிறகு கண்முன்னே அழிந்த என் காதல் நீ...... இப்படிக்கு ‌ 3ஆவது மனிதன்

#
மூன்றாவது மனிதன்

ஓர் நொடி கண் சிமிட்டியதால் உயிர் பிரிந்தது விபத்தில் ஓர் நொடி கண் சிமிட்டியாதால் புதிய வாழ்க்கை வந்தது என்னவளின் இதயத்தில்

#
Mohamed Bilal

உன்னை விட உன் நினைவுகளே எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் நானே நினைத்தாலும் அவை என்னைவிட்டு எப்பொழுதும் விலகுவது இல்லை என் காதலியே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன் அருகில் நான் இல்லை என்றாலும் என் நினைவுகள் எப்போதும் உன்னை சுற்றியே காற்றை போல எப்போதும் ஓயாமல் உன்னுடன் வரும் என் அன்பே ️

#
Sathya Rakshan

கனவிலே உன்னுடன் வாழ நினைக்கிறேன் யாருடைய பயமும் இல்லாமல்!!!

#
Mohamed Bilal

அதிகம் சிவந்து தான் போனது கையிலிட்ட மருதாணி அல்ல வெட்கத்தில் சிவந்த உன் கன்னங்கள்!

#
Karuppasamy

தனிமையே‌ அழகு என்று நினைத்திருந்த என் மனதில் தனிமையை விட அழகான உலகம் உள்ளது என்பதை அறியச் செய்தவன் நீ. காதல் மீதும் காதல் செய்பவர்கள் மீதும் நம்பிக்கை இல்லை. ஆனால் இரு விழி பார்வையையும் உன் அழகான புன்சிரிப்பினையும் கண்டு காதல் உண்மைதான் என்பதை உணர்கின்றேன். என் நிலைக்கண்ணாடி என் முகத்தைக் காட்ட என் மனக்கண்ணாடியில் உன் முகத்தை காண்கின்றேன்.

#
pra deepa

அன்பே..!! உயிரோடு கலந்த உன்னை மறக்க, என் மனதிற்க்கு தெரியவில்லை..!" குழப்பங்கள் என் மனதில் இருந்தாலும், உனக்கு எந்த வலியையும் தரவில்லை..!" என் உள்ளத்தில் சோகம் நிறைந்தும், உன் சந்தோஷத்தை கலைக்கவுமில்லை..!" இதை அத்தனையும், நீ உணர்ந்திருப்பாய்.!" உன் சம்மதம் ஒன்றுக்காக, நான் படும் வேதனைகளை யாரிடம் சொல்ல..!" தனிமையில் வாடிய என் மீது, அளவற்ற பாசத்தை காட்டி, ஏன் விலகி செல்லுகிறாய்..? நிரந்தரமில்லாத உறவுகளுக்காய், உண்மையான நம் காதலை, ஏன் புறக்கணிக்கிறாய்..!" என் உயிரே..!! நான் மறு ஜென்மமும் உன்னோடு வாழ்வதா? இல்லை, மறுகணமே மரணிப்பதா? உன் பதிளில் தானடி, என் வாழ்க்கையே உள்ளதடி என் கண்மணியே...!! *நினைவின் வலிகளாய்* *என்றும் உங்கள்* RK

#
Kalpana Subramaniam

எந்த ஜென்மத்தில் செய்த தவமோ... இந்த ஜென்மத்தில் கிடைத்தாய் நீயும் வரமாய் ️

#
Karuppasamy

நான் இப்பொழுதெல்லாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை உன் பெயராய் தான் இருக்கிறது.. என்னை மறந்து உன்னையே நினைக்க வைத்த நீ காதல் மந்திரக்காரி தான்..

#
Karuppasamy

உன் அழகை கண்டதில் நான் என்னை தொலைத்தேன்..!" நிலத்தில் விழுந்த சாரல் துளி போல, உன்னை என்னில் பத்திரபடுத்திவிட்டேன் ..!" எல்லோரையும் நனைத்துவிட்டு செல்லும் மழை, உன்னை மட்டும் ரசித்து விட்டு செல்கிறது..!" வானில் கோடி நட்சத்திரங்களை விட, மழையில் நனைந்த உன் முகம் எவ்வளவோ அழகுடி..!" மழைத்துளியும் உன் மேல் பட்டால், உள்ளம் உருகி உறைந்தே போகுதடி..!" பனித்துளி உன் கண்ணில் பட்டால், பரவசத்தில் பறந்தே போகுதடி..!" மழைக்காக காத்திருக்கும் விதைகள் போல, உன் முகம் காண தவிக்கிறேன்..!" தாமரை இலையில் மழைத்துளியை காணும் போதெல்லாம், உன் ஒப்பனையற்ற முகம் தான், மனதில் வந்து போகிறது..!" மழையில் நனையும் போதும், உன் நினைவுகளில் உருகும் போதும், பைத்தியமாகி விடுகிறேன்..!" உன் மனதில் சிறு புன்னகை, என் கவிதை கண்டு..!" அது தினமும் பொழிய வேண்டும், எந்தன் கவிதை மழையில்..!" *இதய சாராளாய்* *என்றும் உங்கள்* RK

#
Kalpana Subramaniam

நான் தினமும் பார்க்கும் கண்ணாடி.. என்னை பார்த்து கேட்டது..!" என்னை பார்க்கும் நீ.. என்னுள் இருக்கும் உன்னை.. எப்பொழுது பார்க்க போகிறாய் என்று..!" பாவம்.. அதற்கு எப்படி தெரியும்..? என்னுள்.. நீ தான் இருக்கிறாய் என்று..!! RK

#
Kalpana Subramaniam

உனக்கு நான் அனுப்பும் SMS.. வெறும் வார்த்தைகள் இல்லை..!" S - சிலநேரமாவது உன்.. M - மனதில் என்னைப்பற்றி.. S - சிந்தித்து பார்.. என்று.. என் மனம் கேட்கும்.. வேண்டுகோள்.. உன்னிடம் அன்பே...!! RK

#
Kalpana Subramaniam

அன்பே.. உன்னை பிரியும்வரை.. நான் உணரவில்லை..!" பிரிவு இவ்வளவு... கொடுமையானது என்று..!" ஆனால்... பிரிந்த மறுநிமிடமே உணர்ந்தேன்..!" பிரிவு என்பது.. மரணத்தின்.. ஒத்திகை என்பதை...!! RK

#
Kalpana Subramaniam

காயங்கள் செய்து போகும், காதலே வேண்டாம் என்று, முடிவோடு முயற்சித்த போதும்..!" என் நெஞ்சுக்குள் ஊடுருவி, என்ன தான் செய்தாயோ?? எத்தனை முறை பார்த்தாலும், அத்தனை முறையும் காதல் கொள்கிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

உலகிலேயே மிகவும் வன்முறையான தாவரம், உன் நினைவுகள்தான்..!" ஆம்.. அது வேர்விட்டிருப்பதென்னவோ என் இதயத்தில்தான்..!" ஆனால்.. அது அனுதினம் என் விழிநீரை, உரிஞ்சல்லவா உயிர் வாழ்கிறது...!! RK

#
Kalpana Subramaniam

கண்ணாடி நெஞ்சமென தெரிர்ந்தும், கல்வீசிப் போகிறாய் நீ..!" கல் வீசினாலும் கலங்க மாட்டேன்..!! உடையாத நெஞ்சில், ஒரு முகமாய் உன்னை பார்த்திருந்தேன்..!" இனி உடைந்த ஒவ்வோர் துண்டிலும், உன்முகம் பார்ப்பேன்...!! RK

#
Kalpana Subramaniam

தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே..!" உன் நினைவுகள் எப்போதும், எனை தலைகோதியும், தழுவிக்கொண்டும் இருப்பதால்...!! RK

#
Kalpana Subramaniam

என் கண்ணிற்குள், கதை சொல்லிக் கொண்டே இருக்கும் உன் புன்னகை..!" புண்பட்ட மனதிற்கு, நீ தரும் மருந்து.., அதற்காக காலமெல்லாம், என் மனது காயங்களோடு தான் இருக்க வேண்டுமா...?? RK

#
Kalpana Subramaniam

உன் வெட்கத்தை கையமர்த்தி, அமர வைப்பதற்குள், முடிந்துவிடுகிறது நம் சந்திப்பு...!! RK

#
Kalpana Subramaniam

அசைந்தாடும் காற்றாக, நீ நின்றாய் நான் தோற்றுபோக..!! சத்தம் இல்லாத என் காதல் மொழிகள், சத்தம் கொண்டு பாட தூண்டும் உன் விழிகள்..!" கொள்ளை கொண்டாய் மௌனமாக, தொல்லை தந்தாய் சுகமாக..!" போதுமடி செல்லமே, இனி தாங்காது என் உள்ளமே..!" இடம் பொருள் அறியாமல் காதல் செய்வோம், இதழ் கூட அறியாமல் முத்தம் பதிப்போம்..!" கொஞ்சமாக கோபம் கொள்வோம், கொண்ட காதலிலே கவலை மறப்போம்..!" செல்லமாக சண்டையிட்டு குழந்தையாக பிறப்போம், இமைதட்டி சொல்லிவிடு காதல் மீதுள்ள உன் ஆவலை..!" தினம் கொட்டி தீர்க்கிறேன், உன் மீதுள்ள என் காதலை...!! RK

#
Kalpana Subramaniam

அன்பென்ற சொல்லுக்கு, அர்த்தம் தந்தாய்..!" என் அகம் நிறைய ஆசைகள், வளரவும் செய்தாய்..!" மணம் கொண்ட மலரே, உன் மனம் தந்து சென்றாய்..!" நீ சினம் கொண்ட போதும், உன் புன்னகையில் தோற்கிறேன்..!" உன் சிரிப்பிலே, சோகம் மறக்ந்தேன்..!" உந்தன் அழுகையிலே, நான் உலகம் வெறுத்தேன்..!" மன கஷ்டம் பல உண்டு, கவலை இல்லை..!" உன் பிரிவாலே ஒரு கவலை, ஒவ்வொரு நொடியும் கஷ்டம் பெண்ணே...!! RK

#
Kalpana Subramaniam

ஆயிரமாயிரம் கற்பனையிலே, ஒரே ஒரு கவிதை பிறக்குதடி..!" ஆயிரமும் நீயென ஆனபின்னே, ஆகாயமும் மூழ்குது என் கற்பனையிலே..!" நிழலாக உன்னோடு நான் வாழ்ந்த நாட்கள், நிஜமாகட்டும் தினம் எந்தன் கற்பனையிலே..!" யுகம் யாவும் நான் தேடிய சொந்தமாக, தினம் வாழ்வேன் நீ கொண்ட புன்னகையிலே...!! RK

#
Kalpana Subramaniam

என் இதய மேடையில், நாடகம் நடத்த வந்தவர்கள் பலர்..!" ஆனால்.., என் இதயம், உன்னில் தானே காதல் கொண்டது...!! RK

#
Kalpana Subramaniam

வழி மீது விழி வைத்து காத்திருக்கிறேன், நீ வரும் பாதையிலே..!" உன்னை காண ஏக்கத்தில், காத்திருக்கிறேன்..!" நாழிகை போவது, மனதுக்கு தெரியாதடி..!" மணித்துளிகள் ஒவ்வொன்றிலும், மனதில் உந்தன் நினைவுகள் நிழலாடுகிறதடி...!! RK

#
Kalpana Subramaniam

என் மூடிய விழியில், உன் முகம் கண்டேன்..!" விழித்தால் உன் முகம், மறையும் என்ற அச்சத்தில், கண் மூடி என் கனவுகளை தொடர்கிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

முத்து முத்தாக சிரிப்போ, உந்தன் இதழில்..!" கொத்து கொத்தாக மலர்களோ, உன் தேசத்தில்..!" பத்து பத்தாக என்னை கூருபோடும் பார்வையோ, உந்தன் விழியில்...!! RK

#
Kalpana Subramaniam

தீண்டி சென்றதன் மாயமென்னவோ, கன்னம் கிள்ளி செய்தி சொல்லவோ..!" தொட்டு விட நினைத்து, மயங்கினேன் நீயோ? மண்ணை தூவி கலங்கச் செய்தாய்..!" கிளையை கிள்ளி மலரை உதிர்த்து, சாரலாய் தீண்டினாய்..!" தென்றலாய் இன்பமும், புயலாக ரணமாகி நின்றாயே..!" இசையாலே இணைந்து, மங்கள ஒலியானாயே..!" உன் வடிவம் பல கண்டு, மனம் அதை ஏற்கிறது ஏக்கத்தாலே..!" நீ காற்றுயின்றி உயிருண்டோ.. உயிரின்றி அழகுண்டோ.. என் மூச்சே...!! RK

#
Kalpana Subramaniam

கண்ணிற்கும் இதயத்திற்கும் உன்னால் சன்டை..!" இதயம் கண்களிடம் கூறியது, குறைவாக பார்..!" ஏனென்றால்... நீ பார்ப்பதால் நான், மிகவும் கஷ்டப்படுகிறேன்..!" கண்கள் பதிலளித்தன:.!" நீ குறைவாக உணருங்கள், ஏனென்றால்.. நீங்கள் உணர்வதால், நான் மிகவும் அழுகிறேன் என்று...!! RK

#
Kalpana Subramaniam

நீயே நானாகிறேன், நானும் மெல்ல உணர்கிறேன், முழுதும் உனதாகிறேன்..!" பொழுதுகள் களவாடியே, துயில் மறக்கிறேன்..!" உன் மூச்சினை சுவாசிக்க ஏனோ சிறகடித்தேன், சிறு வண்டாகினேன் என் பூவே நீயே நானாகிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

விரல்கள் சுவாசிக்க விரும்புகின்றன மீண்டும் என் கைகளைப் பிடித்துக்கொள்..!!!!

#
Karuppasamy

இந்த நாட்டை யார் ஆண்டால் என்ன இந்த ஆண்டாளை ஆளும் அடியேன் நீயல்லவோ ....

#
Karuppasamy

நீ செல்லும் வழியெல்லாம் மரமாக முளைத்திருப்பேன்.... !!! என் நிழல்கள் உன்மீது படர்வதற்கு அல்ல.... !! உன் பாதசுவடுகளாவது என் நிழல்களுடன் படிந்திருக்கட்டும் என்பதால்......மரத்தின் நிழலானாலும்,மனத்தின் நினைவானாலும் உன்னுடனே ...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னைத் தவிர என் நிழல் கூட உன்னை காதலிக்க கூடாது! இந்த உலகில் நீ இருக்கும் வரை உன்னை தான் நான் காதலிப்பேன் என்னை தவிர வேறு யாராலும் உன்னை என் போல பார்க்கவோ காதலிக்கவோ முடியாது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் உன்னை தொடர்ந்து வருவதினால் நீ என்னை வெறும் நிழல் என்று எண்ணி விடாதே...! நான் உன் நிழலான நிஜம் என்பதை நீ மறந்து விடாதே காதலி நான் உன் கிருஷ்ணன்...! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கண்களில் மலர்ந்து கவிதையாக வாழ்ந்து கனவாய் மறைந்தார் என் அன்பே

#
Sathya Rakshan

நிழலுக்கும் என்மேல் கோபம் நான் உன்னுடன் பேசாதால் உன்னை விட்டு என்னுடன் வர மறுக்கிறது என் அன்பே ️

#
Sathya Rakshan

தலையில் வைக்காத பூ குங்குமப் பூ எங்கே போனதோ என் மேல் விழுந்த செண்பக பூ

#
Karuppasamy

காதலும் கவிதையும் என் வாழ்வில் மலரா நினைவில் மலர்ந்திருக்கும் ஏனேனில் இவை இரண்டும் என் கற்பனையில் பூத்தவை

#
மூன்றாவது மனிதன்

அழகிய நிலவின், பிம்பமாய் பிறந்தவள் அவள்..!" கருப்பு முத்துக்கள் பதித்த கண்களால், என்னை மூழ்கடித்தவள் அவள்..!" தரிசாய் கிடந்த என் இதயத்திற்கு, இன்னுயிர் தந்தவள் அவள்..!" சிறு புன்னகையில், என் உயிரினை பறித்தவள் அவள்..!" காதலும் இல்லை, காதலியும் இல்லை, பிரிவும் இல்லை, கூடலும் இல்லை, இருந்தும், என் கவிதைகள் மட்டும், அவளை தேடித் செல்கின்றன..!" ஏன் அவளை மட்டும் பாடுகின்றன..? என் எழுத்துக்கள், அவளை கண்டிருக்கக் கூடுமோ..? அவள் கண்களில், காதலனாய் கலந்திட, உள்ளத்தில் உறவாய் உறைந்திட, தோழ்களில் தோழனாய் சாய்ந்திட, மடியில் பிள்ளையாய் தவழ்ந்திட, ஆசை கொண்டேன் நான்..!" ஏழேழு ஜென்மங்களிலும், எனக்கு வரமாய் வந்தவள், நீயே... நீ மட்டும் தானடி என் அன்பே...!! RK

#
Kalpana Subramaniam

வானில் பறக்க வேண்டும் என்பது என் கனவல்ல என் கனவு உனக்குள் பறக்க வேண்டும் என்பதே...!!!!

#
Karuppasamy

காதலனாய் காத்திருப்பேன்.. உன் கையைப் பிடிக்க..!" பூக்களாய்ப் பூத்திருப்பேன்.. உன் கூந்தலில் மணக்க..!" சிற்பியாய் காத்திருப்பேன்.. உன்னைச் சிலையாக வடிக்க..!" மாப்பிள்ளையாய் காத்திருப்பேன்.. நம் திருமணத்தை முடிக்க...!! RK

#
Kalpana Subramaniam

என்.. சுவாசத்தை மறக்கடிதவள்.. என்னை.. சுவாசிக்க மறந்துவிட்டாள்...!! RK

#
Kalpana Subramaniam

எல்லோரும் பெண்களை தான் பூக்கள் என்கிறார்கள்..!" ஆனால்.., வாடுவது என்னவோ ஆண்கள் தான்...!! RK

#
Kalpana Subramaniam

சில நினைவுகள் எப்போதாவது வரும், புன்னகையைப் போல..!" உன் நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும்.. மூச்சு காற்றுப் போல...!! RK

#
Kalpana Subramaniam

இரவு கண்ட கனவு.. மறைந்து போகலாம்..!" ஆனால்.., இதயம் தொட்ட உன் நினைவு.. என்றும் மறைவதில்லை.. என் இதயத்தில்...!! RK

#
Kalpana Subramaniam

நெஞ்சில் சோகங்கள் இருந்தாலும்.. கண்ணில் கனவுகள் இருந்தாலும்.. வாழ்வில் வருத்தங்கள் இருந்தாலும்.. என்றுமே.. என் நினைவில்.. நீ இருப்பாய்...!! RK

#
Kalpana Subramaniam

கண்ணுக்குள் நீ இருப்பதனால்.. அழுவதற்கு கூட மனமில்லை..!" நீ கரைந்து விடுவாய்.. என்பதால் அல்ல..!" கண்ணுடன் சேர்த்து.. உன்னையும் கசக்கி.. விடுவேனோ என்று...!! RK

#
Kalpana Subramaniam

நிமிடங்கள் போனால் என்ன.. நொடிகள் உள்ளது.. உன்னை நினைத்து வாழ..!! நொடிகள் போனால் என்ன.. என் இதயத்துடிப்பு உள்ளது.. உன் நினைவில் வாழ..!! RK

#
Kalpana Subramaniam

உண்மையான.. அன்புடன் பழகிப்பார்.. உன்னுடைய நிழலும்.. உன்னுடன்.. பேச ஆசைப்படும்..!! RK

#
Kalpana Subramaniam

ஏன் இத்தனை தூரத்தில் மிகப்பிடித்தவர்களை வைத்துவிடுகிறது இந்த பாழாய்ப்போன காதல்

#
Merlin Sophiya

காதலுக்கு மரியாதை... நேராக செல்வேன், பாதை அல்ல.. முன் ராதையாய் நனைந்து சென்றாய். நாராக முளைத்தேன்; என்னைக் கிள்ளி எறிந்தாய், பூவாய் மாற வேண்டினாய். சீராக நுழைய நினைத்தாய்; என்மனதினுள் பின் கோதையாய் வளர்ந்தாய் என்அன்பு மலரே... மலிவாக விற்றாய்; உன்மனதை எனக்குள் நன் கொடையாய் தந்தாய் என் அன்பென உன்னை. - கவிஞர் சு. எழிலன்

#
Suresh Pandian

உன் உதடுகள் என்னை வாசிக்கும் என்றால் என் கன்னங்கள் கவிதைகளாய் மாறும்.சாந்தமுடன்..SYED

#
Basha Syed

என் கண்ணில் விழுந்தது நீ யாரும் கேட்டால் பூ விழுந்தது என்கிறேன் __________________________ சுயம்பு

#
Moon Videos

சந்திப்பு எனும் பயணத்தில் தொடங்கி காதல் எனும் இடைவெளியில் பிரிவு எனும் வலியில் முடிகிறது இந்த வாழ்க்கை

#
Kavi M

தொடர்ந்தாலும் முடிந்தாலும் என்றும் என் பயணம் உன்னோடு தான்

#
Karuppasamy

இதயம் கூட ஒரு வகையில் பூமி தான், எப்போதும் உன்னையும் உன் நினைவுகளையும் சுற்றிக் கொண்டே இருப்பதால்

#
Karuppasamy

இடைவிடாத உன் நினைவுகளுடன் காற்றை போல சுவாசிக்கும் உன் காதலையும் எப்படி மறப்பேன் நீ சென்ற பிறகும் உன் நினைவுகளை சுமந்து கொண்டு என் அன்பே ️

#
Sathya Rakshan

மொழி இல்லா மௌனம் போல நீ இல்லா என் வாழ்க்கையும் என்றுமே அமைதியே என் அன்பே ️

#
Sathya Rakshan

எதை இழந்தாலும் உனை இழக்காது வரம் கேட்பேன் இறைவனிடம் விலைமதிப்பற்றது நீயும் உன் அன்பும் #என்னவளே

#
Karuppasamy

உன் வருகைக்காக காத்திருந்தேன் உன் இதய வாசல்லில்..

#
Karuppasamy

பூக்களை போலத்தான் காதலும் யார் அனுமதி இன்றியும் எந்த காரணமும் இன்றியும் மலர்ந்து விடுகின்றன..

#
Karuppasamy

அருகில் இருந்தால் அணைத்து மகிழ்வேன் தொலைவில் இருப்பதால் நினைத்து மகிழ்ந்தேன் (பிரிவின் வலி )

#
Silambu Silambu

ஏழு ஜென்மம் உன்னோடு வாழும் வரம் வேண்டாம் ... ஒரு நிமிடம் உன் தோள் சாய்ந்து இருக்கும் வரம் வேண்டும்

#
Karuppasamy

காதல் என்பது நீ காதலித்தி பார் அதின் வலி புரியும். அம்ம பிள்ளை மிது வைப்பது காதல் பாசத்தின் வலி. பிள்ளை அம்மா மிது வைப்பது சொத்தின் காதல் பசியின் வலி. கணவன் மணவி மிது வைப்பது நம்பிக்கையின் காதல் பசியின் வலி. மணவி கணவன் மிது வைப்பது புரிந்து கொல்ல காதல் வலி(கணவனை பற்றி)

#
பாலமுருகன் க

கூட்டத்தில் ஒருத்தி அல்ல, கூட்டத்திலும் அவள் ஒரு தீ! அதில் நானும் பற்றி எரிகிறேன்! அவளோ என்னை பார்வையால் பற்றவைத்து, சிறு குழந்தையைப்போல் சிரிக்கிறாள்!!!

#
Karuppasamy

என் மௌனத்தின் சுமையை குறைக்க, உன்னிடம் இரவில் கொஞ்சம் பேசிக் கொள்கிறேன்...!

#
Karuppasamy

உரிமையாய் உன்னிடம் ஒட்டிக் கொள்வேன்.. உனக்காகவே நான் என்பதில் ஒளிந்திருப்பேன் .. இளம் வயதினர் மனதில் தினம் வருவேன்.. வயதை தாண்டியும் பின் தொடர்வேன்.. நிழலாய் மனதில் பதிந்திடுவேன்.. கிடைப்பது கிடைத்தால் பகிர்ந்திடுவேன் .. இப்படிக்கு காதல்..

#
அன்புடன் ரவி

சிறகுகள் இல்லை.. உன்னை தேடி வர.. ஆனால்.., இதயம் இருக்கிறது.. என்றும் உன்னை.. உன் நினைவுகளை நினைத்திட...!! RK

#
Kalpana Subramaniam

தினம் தினம்.. புரியவைக்க நினைத்தேன்.. என் காதலை..!" ஒரு நாள்.. புரிய வைத்து விட்டாய்..!" நான் உன் மனதில்.. இல்லை என்று..!! RK

#
Kalpana Subramaniam

இதற்காகத்தான் உன்னை நேசிக்கிறேன் என்பதற்கெல்லாம் அப்பாற்ப்பட்ட காதல் நீ அம்மு.. Good night

#
Karuppasamy

என்னைப் புரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும் என் அன்பின் ஆழம் என்னவென்று... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

சித்திரத்தை சிறை பிடித்து.. மனச்சிறையில் அடைத்து வைத்தேன்.. குறுஞ்சிரிப்பில் எனை மறந்து பூட்டி வைக்க மறந்து விட்டேன்.. சொக்க வைக்கும் விழிக் கொண்டு சொக்கி போன என் மனதை உன் பாதாள இதயத்தில் மீளாமல் அடைத்து விட்டாய்.. பூவுக்குள் தேனாக உருமாற்றம் செய்து விட்டு.. தேன் குடிக்கும் வண்டாக மாறயேனோ மறுத்து விட்டாய்..

#
அன்புடன் ரவி

நான் ராதையாக பிறந்த போது உம்மை என்னால் அடைய முடியாததால் தான் நான் மீண்டும் மீராவாக பிறவி எடுத்தேன் மீண்டும் எம்மை தவிக்க விடுகிறாயே என் கிருஷ்ணா... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மறப்பதென்றால் மரித்து விட்டு போ மனமே! அனலூட்டாமல் புதைக்க சொல்கிறேன், துளிர் விடும் தாவரமாகி பூத்தப்பூவாகினும் அவன் கைகளில் சேர...

#
Panneer Selvi

தித்திக்கும் அன்பென்றும் திகட்டாது.. உனைக் காணாமல் இமையென்றும் மூடாது.. விழி பேசும் மொழியேதும் புரியாது.. உன் சிரிப்பின்றி நிலவின்று ஒளிராது.. நித்திரையும் உன் நினைவின்றி தொடராது.. நொடியொன்றும் நீயின்றி தொடங்காது.. கைகோர்த்த பிடியென்றும் தளராது.. உன் துணையின்றி என் பயணம் முடியாது..

#
அன்புடன் ரவி

ஒவ்வொரு பூக்களை கட்டும் போதும் உன் மனதை எப்படி கட்டிப்போடலாம் என யோசித்துக் கட்டிப்போட்டாலும் நீ அடங்க மறுக்கின்றாயடா இப்பூக்கள் மட்டும் என் கட்டுக்குள் அடங்கி விடுகின்றது...

#
Ilakkiya sri

மருதாணி உன் கைகளில் முத்தமிட்டு சிவந்து எழில் கொஞ்சியதை காட்டிலும் வெட்கத்தில் சிவந்த உன் கன்னங்கள் அதை விட அழகு...

#
Ilakkiya sri

(காதல்) பணத்தின் மிது. (காதல்) சொத்தின் மிது. (காதல்) பிறறுடைய பொருலின் மிது. (உண்மையான காதல்) பொது நலன் காதலா இருக்குணம் அப்படி இருந்து பருங்காளேன் உங்களை வெல்ல யாவரும் இல்லை. VVILVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILV

#
பாலமுருகன் க

ஆதவன் அவளின் பொன் மேனியாக கார் மேகம் அவளின் கூந்தலாக விழிகள் நட்சத்திரங்களாக இதழ்கள் நளிரில் துடிதுடிக்க என்னவன் வருகை செவிகளில் தேனாய் பாய அணிகலன்களின் சிஞ்சிதங்கள் நீரோடையின் சலசலப்பை மிஞ்ச அவன் என்னோடு நீரோடையில் கைகோர்க்க நீரோடை பஞ்சணை தந்து நின்றதோ...

#
Ilakkiya sri

உன்னைப்புரிந்து கொண்ட பின் தான் விரும்பிய நேரம் உணவருந்த அமுத பாத்திரமான உன் கைகள் இருக்கையிலே பறந்து சென்று மீண்டும் துயில் கொள்ள நீ கட்டிய பூட்டப்படாத கூட்டினைத்தேடி வராதா இக்குருவிகள்...

#
Ilakkiya sri

பார்த்தவுடன் ரசித்து விட்டுப் போக நீ ஒன்னும் ஓவியமல்ல என் உயிர் #என்னவளே ..

#
Karuppasamy

உன்னை நினைக்க வேண்டாம் என்று.. என் மனம் சொல்கிறது.! ஆனால்.., அந்த மனதுதான்.. எப்போதும் உன்னை பற்றி.. நினைத்து கொண்டு இருக்கிறது...!! RK

#
Kalpana Subramaniam

காணாமல் இருந்த என்னை இமை மூடாமல் செய்து விட்டு கண் காணாமல் போனதெங்கே..? தேடாமல் இருந்த என்னை ஓயாமல் தேட விட்டு மாயமாகி போனதெங்கே..? நினைக்காமல் இருந்த உன்னை மறக்காமல் செய்து விட்டு நீ மறைந்து போனதெங்கே..? கிடைக்காத அன்பையும் திகட்டாமல் கொடுத்து விட்டு திரும்பிடாமல் போனதெங்கே..?

#
அன்புடன் ரவி

வானில் கோடி நட்சத்திரங்கள் இருந்தாலும் வானத்தை அலங்கரிப்பது நிலவு தான்... உலகில் கோடி பெண்கள் இருந்தாலும் என் வாழ்க்கையை அலங்கரிப்பது நீ தான் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பார்த்து பார்த்து பேசிய காலம் தூரத்தில் இருந்து நேசித்தோம் சந்திக்கும் தருணத்தில் நான் நானாக இல்லை இறுக்கி அணைக்கும் போது நீ என்னை உணருவாய் உன்னை மறந்து

#
Karuppasamy

என் இதயத்தை திருடியவள் நீ ஆனால் காதல் என்னும் தண்டனையை பெற்றது நான்..

#
Karuppasamy

உன்னை மறக்கதான் பெண்ணே, நினைக்கிறேன்..!! நம் நினைவுகள், ஒவ்வொன்றாய்‌ அழிக்கிறேன்..!" ஒன்றா இரண்டா அழிப்பதற்கு, விரல் கோடி வேண்டும் எண்ணி முடிப்பதற்கு..!" உன்னை மறந்து வாழ, ஒரு மந்திரம் எனக்கு தெரியல..!! சுகமான நினைவுகளை சுமப்பதில், எனக்கு பாரமில்லை..!" உன்னோடு வாழ்ந்தது ஒரு சுகமெனில், உன் நினைவுகளோடு வாழ்வதும் சுகமே..!! பதித்த முத்தச் சுவடுகள் அழிந்தாலும், என்றும் அழியாத உன் நினைவுகள்...!! RK

#
Kalpana Subramaniam

உன் நினைவாலே கரைவேனோ உயிரே..!" கரைந்தாலும், காண்பேன் பல சுகமே..!" தொலைவேனோ உன்னை தேடி மனமே..!" தொலைந்தாலும், இன்பம் என்றும் உன் நினைவே..!" நிலவே நீ தேய்ந்ததாலே, வான் சின்ன இடமின்றி, இருளாகுதே ஏன்..? எந்தன் ஜென்மம் முழுவதும் கணவுலகில், உன்னை சேர்ந்ததாய் கற்பனையில் மகிழ்வேனோ..!" அழகு திருமேனி தழுவுவதை காதல் என்றால், நான் மறுப்பேன்..!" அழகு பாழ் பட்ட அந்த கணம், உந்தன் அன்பை ரசித்திடும் எந்தன் மனம்...!! RK

#
Kalpana Subramaniam

உன் இரு விழிகளில் வீழ்கிறேன், தினம் கனவுலகில் வாழ்கிறேன்..!" நெருங்காத பொழுதெல்லாம் தவிக்கிறேன், உன்னோடு விடியாத பொழுதை வெறுக்கிறேன்..!" நீ இல்லா வாழ்க்கையை நினைக்கிறேன், நரகத்தின் பிம்பத்தை உணர்கிறேன்..!" உன் உதட்டில சிறு புன்னகை பார்க்கிறேன், போடி‌ பெண்ணே!! தினம் உன்னிடம் தோற்கிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

ஆயிரமாயிரம் கற்பனையிலே, ஒரே ஒரு கவிதை பிறக்குதடா..!" ஆயிரமும் நீயென ஆனபின்னே, ஆகாயமும் மூழ்குது என் கற்பனையிலே..!" நிழலாக உன்னோடு நான் வாழ்ந்த நாட்கள், நிஜமாகட்டும் தினம் எந்தன் கற்பனையிலே..!! யுகம் யாவும் நான் தேடிய சொந்தமாக, தினம் வாழ்வேன் நீ கொண்ட புன்னகையில்...!! RK

#
Kalpana Subramaniam

அன்பென்ற சொல்லுக்கு, அர்த்தம் தந்தாய்..!" என் அகம் நிறைய ஆசைகள், வளரவும் செய்தாய்..!" மணம் கொண்ட மலரே, உன் மனம் தந்து சென்றாய்..!" நீ சினம் கொண்ட போதும், உன் புன்னகையில் தோற்கிறேன்..!" உன் சிரிப்பிலே, சோகம் மறக்ந்தேன்..!! உந்தன் அழுகையிலே, நான் உலகம் வெறுத்தேன்..!" மன கஷ்டம் பல உண்டு.. கவலை இல்லை..!" உன் பிரிவாலே ஒரு கவலை, ஒவ்வொரு நொடியும் கஷ்டம் பெண்ணே...!! RK

#
Kalpana Subramaniam

அது கண்ணீர் காணா கண்களோ..?? நீ காட்சிக்கு வந்த பொம்மையோ..?? பௌர்ணமி நிலவோ? பளிச்சிடும் சூரியனோ? பிறைமத பெண் என்பதை, உன் நெற்றி சொல்கிறது..!" பிறர் மனம் பைத்தியமாக்கினாய் என்பதை, உன் அழகு சொல்கிறது..!" உன் வருகை அறிந்து புல்வெளி எல்லாம், நீ கால்மிதிக்க தவமிருக்கும்..!" நிலவும் தேய்கிறது உன்னை பார்த்த வெட்கத்தில்....!! RK

#
Kalpana Subramaniam

தத்திப் பேசும் உதட்டில் தான், தவறி நானும் விழுந்துவிட்டேன்..!" கை தட்டி அதட்டிக் கூப்பிடும் இமைகளில் தான், என் இதயம் நான் மயங்கிவிட்டேன்..!" வண்ணம் காட்டும் நடைகளில் தான், உன் நினைவுகளில் சிக்கிவிட்டேன்..!" உன் பறந்த உடல் திகைக்கும் இதயத்தில் தான், என் உயிரை நான் விட்டுவிட்டேன்...!! RK

#
Kalpana Subramaniam

காதல் மலரே... நீ சொல்ல வந்த காதல், சொல்ல முடியாது போயினும்..!" உன் கண்களை பார்த்து, அறிந்து கொண்டேன்..!" உன் உள்ளதத்திலும், காதலின் வாசம் வீசுகிறது என்பதை...!! RK

#
Kalpana Subramaniam

மலர்கள் சிரிக்கும் போது, நம் உள்ளங்கள் மெய் சிலிர்க்கும்..!" என்னவள் சிரிக்கும் போது, பூ உள்ளங்களே மெய் மறக்கும்...!! RK

#
Kalpana Subramaniam

மலர் நீ ஓய்வு அறிய போராளி ஒரு அறிவு உயிர்க்கு உணவு அளித்து ஓராயிரம் உயிர்க்கும் வாழ்வு அளிக்கும் வள்ளல் மௌனமாய் கலகம் இல்லாமல் புரட்சி புரியும் புதியவளே ஒவ்வொரு நாளும் மலர்ந்தும் மடிந்தும் யுத்தம் செய்யும் வித்தகியே மென்மையா பனித்துளிக்கு இடம் அளித்து மெல்லிடையாளின் காதலுக்கு உயிர் கொடுத்து கருவறைக்கு மெருகு கூட்டி கல்லரைக்கும் அழகு கூட்டும் அதிசியமே வாழ்க உண் பணி ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

தேடலுக்கு முடிவு இல்லை தான்.. என் தேடலின்.. முதலும் முடிவும் மட்டுமல்ல.. முழுவதுமாகவும்.. நீயாக மட்டுமே இருக்கிறாய்...!! RK

#
Kalpana Subramaniam

ஆணாக பிறந்து இருக்கலாம் என் ஏங்கும் பெண்ணே. கட்டுக்கடங்காத கண்ணீரை அடக்கி சிரித்துப்பார். அந்த ஆசை அடியோடு போய்விடும் ஆணின். மறுமுகத்தை அறிய அவன் அம்மாவினால் மட்டுமே முடியும். காதலியால் கூட அறிய முடியாது என்பதே நிதர்சனம். RK

#
Kalpana Subramaniam

நெஞ்சை பூ போல் கொய்தவளே என்னை ஏதோ செய்தவளே...️️

#
Karuppasamy

மழை செதுக்கியது உன்னை உளி அடியெல்லாம் என் இதயத்தில் ....

#
Karuppasamy

அவள்... என்னவளே மலர்கள் மீது படவேண்டிய பாதம்.... கடற்கரை மணலில் பட்டதால் தான் என்னவோ........ கரிக்கும் கடல் அலை உனை தொட்டதால்தான் என்னவோ.... கடல் நீர் குடிநீர் ஆனது..... உன் நினைவில் அன்பு காலை வணக்கம்

#
Ramasamy Ramasamy

தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக் கொள்ள வாழ்க்கை இல்லை...!

#
Karuppasamy

நிலவு இல்லாத நாட்கள் உண்டு ஆனால் உன் நினைவு இல்லாத நாட்கள் இல்லை என் காதலி...!!! இரவில் தெரியும் நிலவை விட என் மனதில் தெரியும் உன் முகமே என்றென்றும் அழகு காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இரு வரி கவிதையை விட உன் இரு விழி ஆயிரம் கவிதை சொல்லுதடி அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நாள் முழுவதும் உனக்காக காத்திருக்கிறேன் ஒரு நொடி பொழுது என்னிடம் பேசு எனக்காக பெண்ணே நான் உயிர் வாழ அது போதும் உன் வார்த்தைக்காக காத்திருக்கிறது இன்றும் கூட போய் விட்டது என் நாட்கள் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் மனதில் எத்தனை கவலைகள் இருந்தாலும் அவை அனைத்தும் காணாமல் போகின்றது... உன் இருவிழி பார்வையில் நான் தினம் தினம் தொலைந்து போகிறேன் ராதா.. #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இதயம் இல்லா இணைய இயந்திரத்தில் நான் கண்டெடுத்த நல் இதயம் கொண்டவள் நீ... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன் பிரிவு என்னை ஏங்க வைக்கவில்லை ஆம் உண்மை தான் எட்ட முடியாத தூரத்தில் நீ இருந்தாலும் உன் நினைவுகள் என் பக்கத்தில் என்னை ஆட்கொள்ள உன் பிரிவும் எனக்கு சுகமே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

அதிக கோவம் தான் ஆயினும் நீ என் பெயரை உச்சரித்த நொடியில் என் கோவத்தின் சாயல் சற்று மறைந்து போனது என் சிறு புன்னகையில்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னை இழந்துவிட்டேன் உன்னில் என் கற்பனை என்னும் கடலில் தொலைத்து விட்டேன் என்னை தேடி பார்த்த நிமிடம் அதில் உன் முகமே தொடர்ந்தது எனக்குள்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் இறந்த பின்னும் அவள் நினைவுகளை என்னிடம் இருந்து பிரித்து விடாதீர்கள் அவளின் நினைவுகளோடு என்னை சிதையிலிடுங்கள் .. நான் எரியும் போதும் அவள் நினைவுகள் என்னை தொட்டுகொன்டே இருக்கட்டும்....!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ராதை அவளுடன் நான் சேர்ந்து அமர்ந்த ஊஞ்சலும் என்றும் அவள் நினைவுகளுக்கு சொந்தம்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எந்த ஒரு காதலில் தாய்மை உணரப்படுகிறதோ... அந்த காதல் அப்போதே பூனிதமாகிறது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை பற்றிய நினைவுகளை கடந்து போக முடியாமல் பிணமாய் நடந்துபோகிறேன் ..! வலிகளை வரிகளாக்கி கொண்டும் ..!! வரிகளை வழிகளாக்கி கொண்டும் ..!! #Radhaiyin_Kannan

#
கவிகண்ணா

உனக்கென நினைவுகள் விழித்திடும் போதேல்லாம் நான் ஏமாறுகிறேன்......... நீ நிஜமும் அல்ல நிழலும் அல்ல என்பதால்.. கடை விழி கசியும் கண்ணீர் ஈரம் தான்........ உனக்கான என் நேசத்தை கண்களில் வைத்து உறங்கவைப்பதை விட இதயத்தில் வைத்து இயங்கவைப்ததே என் விருப்பம்....... உன் கண்களிலே என் உலகத்தை காண்கிறேன் நான்.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

முன்ஜென்மக் காதல் ஒன்று, முன்னிரவு தோன்றிவிட, நீ செய்த காயத்திலே, என் நெஞ்சம் கனக்குதடி..!" காயங்களின் வலி போக்க, மாயங்கள் ஏதும் இல்லை..! நீயில்லா என் வாழ்க்கை, சாயங்கள் போனதடி..!" இதயத்தின் மையம் தேடி, வந்திறங்கிய வாளோன்றால்..! என் அகிலத்தின் அத்தனையும், மொத்தமாய் உடைந்ததடி..!! உடைந்துப் போன மனதைக் கூட, ஒட்ட வைக்க வழிகள் உண்டு..! நீ கடந்துப் போன பிறகு, அது தூள் தூளாய் ஆனதடி..!" தூசிப் பட்ட விழிகள் என்று, என் கண்ணீரை மறைத்துவிட்டேன்..! பாசி படர்ந்த என் மனதின் ஓரம், உன் நினைவுகள் வழுக்குதடி..!" உன்னைப் போல் காதலிக்க, இவ்வுலகில் யாரும் இல்லை..! வேறுலகம் சென்று விட்டால், அவ்வுலகம் துரத்துதடி..!" நீ சொன்ன வார்த்தைகள் எல்லாம், காற்றோடு கரைந்ததடி..! என் கனவின் முதல் காட்சிக் கூட, உன்னில் இருந்தே தொடங்குதடி...!! RK

#
Kalpana Subramaniam

இது காதல் சொல்லும் கவிதை அல்ல..!" கவிதை சொல்லும் காதலும் அல்ல..!" என்னோடு நடமாடும் உனக்காக..!" என் இதயம் பேசும்.. வார்த்தைகள்...!! RK

#
Kalpana Subramaniam

என் உதட்டின் கடைசிப் புன்னகை, என் கண்களின் மிக நீண்ட கண்ணீர், இரண்டுமே நீ கொடுத்தவை..!" என்னை விட்டு விலகுவதாக நினைத்து, ஓடிக் கொண்டேயிருக்கிறாய்..!" வானமாய் என் அன்பை, விரித்து வைத்திருக்கிறேன்..!" எங்கே சென்று விடுவாய், என்னைத் தவிர்த்துவிட்டு...!! RK

#
Kalpana Subramaniam

உன்னை விட்டுப் பிரியச் சொன்னால், உன் பெரு மூச்சைப் போல் பிரிவேன்..!" மீண்டும் உன்னுள் சேரச் சொன்னால், நீ பெறும் மூச்சைப் போல் வருவேன்...!! RK

#
Kalpana Subramaniam

உன்னோடு வாழும்.. சிறு நொடிகளை கூட.. ரசிக்க வேண்டும் என்று.. ஆசைப்பட்ட எனக்கு.. இறுதியாய் மிஞ்சியது.. ஏமாற்றமும்.. காதலின்.. ஏக்கமும் தான்...!! RK

#
Kalpana Subramaniam

கோடி யுகம் காத்திருக்கும், என் கண்களுக்கு.., நொடி பொழுது தரிசனம், உன் முகம்...!! RK

#
Kalpana Subramaniam

என்னவளே..!! ஏன்..? இந்த வாழ்க்கை என ஏங்கிய போது, நீ வந்தாய்..!" எந்தன் எதிர்காலம், நீ என தெரியாமல், என்னுள் உன்னை, இழந்துவிட்டேன்...!! RK

#
Kalpana Subramaniam

உன்னோடு வாழும்.. சிறு நொடிகளை கூட.. ரசிக்க வேண்டும் என்று.. ஆசைப்பட்ட எனக்கு.. இறுதியாய் மிஞ்சியது.. ஏமாற்றமும்.. காதலின்.. ஏக்கமும் தான்...!! RK

#
Kalpana Subramaniam

மயில் தன் தோகையை விரித்து ஆடியது, மழை வருமோ என்று எதிர்பார்த்தேன், ஆனால் மழை வரவில்லை, ஆனால் அவ்வழியாக நீதான் வந்தாய்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

சந்திக்காத வேலையிலும் சிந்திக்க வைத்தவள் நீ...... சிந்தித்த வேலையில் என் சிதையில் நின்றவள் நீ..... என் சிந்தையில் நின்ற உன்னை என் இதய கூட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்றும் பத்திரமாய்.... காதலுடன்.... கண்ணா... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னுடைய ஒட்டுமொத்த சந்தோஷமும் நீதான்... உன்னை தவிர வேறு என் வாழ்வில் வேறு யாருக்கும் இடமில்லை... நீ மட்டுமே என் சொந்தம்... உனக்காக மட்டுமே என் காதல்...! எனக்கு நீ உனக்கு நான்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை காண துடிக்கும் என் கண்களும்... உன்னை நினைத்து துடிக்கும் என் இதயமும் எப்போதும் உனக்காகத்தான் காதலி #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ என்னை எப்படி நினைத்தாலும், எப்படி பேசினாலும், எப்படி நடத்தினாலும், உன்னை விட்டு நான் விலகவே மாட்டேன்! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உண்மையான காதல் எப்பவுமே ஜெயிக்கும் பொய்யான அன்பை தோற்கடித்து!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

"உன் உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு அணுவிலும்... நான் உன்னுடன் கலந்து மகிழ்வோடு வாழவே வேண்டுகிறேன்..... " #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை எவ்வளவு பிடிக்கும்னு நீ கேட்டா எனக்கு சத்தியமா சொல்ல தெரியாது ஆனால் உன்னை நேசித்த அளவுக்கு நான் யாரையும் நேசித்ததில்லை... யாரையும் இனி நேசிக்கவும் முடியாது...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

அருகில் வந்து தொந்தரவு செய்ய விரும்பவில்லை அதற்காக விட்டுச் செல்லவும் மனமில்லை தூரத்தில் நின்று உன்னை காணவே தினம் தினம் ஓடி வருகின்றேன் தொலைக்க முடியாத உன் நினைவுகளோடு நான் தொலைந்து போகிறேன்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பாலைவனமாக இருந்தாலும் நான் பயனம் செய்வேன் பாதை காட்ட நீ இருக்க வேண்டும்... மன வலியிலும் நான் உறங்குவேன்...கனவில் வருவது நீயாக இருக்க வேண்டும்... கடும் பனியிலும் இருப்பேன்... போர்வையாக நீ இருக்க வேண்டும்... நான் சாயும் மடி நீயாக இருக்க வேண்டும்... என் இறப்பின் மடி நீயாக இருக்க வேண்டும் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நிலையில்லாத உறவு என தெரிந்தும்.. வேதனையான பிரிவு தான் முடிவு என புரிந்தும் அந்த நேசம் எனக்கு பிடித்திருக்கிறது அந்த அளவுக்கு மனசு ஏங்கி தவிக்கிறது என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பாசம் வையுங்கள் தவறில்லை ஆனால் பைத்தியம் ஆகி விடாதீர்கள்... ஏனென்றால் இங்கு முடிவே இல்லாத வாழ்வும் இல்லை. பிரிவே இல்லாத காதலும் இல்லை... எல்லாம் சில காலம் தான்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் உயிர் என் உடலை விட்டு பிரியும் போது கூட உன் நினைவோடுதான் பிரியும்...ஏனெனில் என் உயிரிலும் என் உணர்விலும் என் கனவிலும் கலந்து விட்டாய் என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ எனதருகினில் நீ இதை விட ஒரு கவிதையே கிடையாதே!... நீ எனதருகினில் நீ இதை விட ஒரு புனிதமும் இருக்காதே!... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எந்த வேலை செய்தாலும் ஒரு நிமிடம் அதை நிருத்தி விட்டு உன்னை பற்றி சிந்திக்கிறேன் அந்த அளவுக்கு அடி மனதில் இடம் பிடித்து விட்டாய் நீ என் உயிர் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கண் வழியே நுழைந்து சின்னதொரு நெஞ்சாங்கூட்டுக்குள் சிக்கிக் கொண்ட பறவையடி நீ!.. பூட்டை திறக்காமல் சிறை வைத்து காப்பேன் என் கண் வழியே!.. #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

அன்பே நீ மௌன விரதம் இருந்தால் முதலில் உன் கண்களை மூடிக்கொள் ஏனென்றால்...? உன் உதடுகளை விட உன் கண்கள் தான் அதிகம் பேசுகிறது அன்பே...! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கவிதை சொல்ல காதல் தேவையில்லை... உன் கண் பார்வை ஒன்றே போதும்... நான் கவிஞன் இல்லை நான் உன் காதலன்... எனக்கு கவிதை தெரியாது... உன் கண்களை பார்த்தால் ஆயிரம் கவிதை எழுத வேண்டும் என்று என் கைகள் துடிக்கிறது என் கண்ணழகி... என் அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

முகத்தில் ஒரு சிரிப்பு சிரிப்பில் ஒரு பாசம் பாசத்தில் ஒரு நேசம் நேசத்தில் ஒரு இதயம் அந்த இதயத்தில் என்றுமே நீ என் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மலரினில் மணம் கண்டேன் மௌனமும் மொழியாய் கண்டேன் மழையில் மகிழ்வதை கண்டேன் உன் புன்னகையில் மட்டுமே என் ஜீவனைக் கண்டேன் என் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ செல்லும் வழியெல்லாம் மரமாக முளைத்திருப்பேன்.... !!! என் நிழல்கள் உன்மீது படர்வதற்கு அல்ல.... !! உன் பாதசுவடுகளாவது என் நிழல்களுடன் படிந்திருக்கட்டும் என்பதால்......மரத்தின் நிழலானாலும்,மனத்தின் நினைவானாலும் உன்னுடனே ...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் இரு விழிகளும் இரவின் மயக்கத்தில் உறங்கினாலும்.... என் இதயம் மட்டும் என்னவள் உன் பெயரை மட்டும் சொல்லி கொண்டே துடிக்கும் காதலுடன் கண்ணா.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னைத் தவிர என் நிழல் கூட உன்னை காதலிக்க கூடாது! இந்த உலகில் நீ இருக்கும் வரை உன்னை தான் நான் காதலிப்பேன் என்னை தவிர வேறு யாராலும் உன்னை என் போல பார்க்கவோ காதலிக்கவோ முடியாது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கண்ணா அனைத்தையும் படைத்தவன் நீ என்கிறாய்... ஆனால் உன்னை மட்டும் எங்கும் காணவில்லையே மாயாவி!!! ராதே நீ ஏன் வெளியே தேடினாய்... ராதைக்குள் தானே இந்த மாயாவி இருக்கின்றான்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னைத் தவிர என் நிழல் கூட உன்னை காதலிக்க கூடாது! இந்த உலகில் நீ இருக்கும் வரை உன்னை தான் நான் காதலிப்பேன் என்னை தவிர வேறு யாராலும் உன்னை என் போல பார்க்கவோ காதலிக்கவோ முடியாது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னை கண்டதும் மண் பார்த்து தலை குனிந்து வெட்கம் கொள்ளும் என்னவளை போலவே என்னை கண்டதும் மேகத்தில் தன் முகம் மறைத்து வெட்கம் கொள்கிறாள் வானத்து நிலா ..!! வெட்கம் கொள்வதில் என்னவளும் அந்த நிலவும் எனக்கு ஒன்று தான் ..! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

வானத்தில் எட்டாத உயரத்தில் தான் நீயும் இருக்கிறாய் என்றாலும் என் எண்ணத்தில் எட்டிவிடும் தூரத்திலேயே நீயும் வந்து விடுகிறாய் ..!! உயரம் என்பதும் தொலைவு என்பதும் உலகிற்கு தானே தவிர உணர்விற்கும் உள்ளத்திற்கும் இல்லை ...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீயே நீயே இரவின் பூவனம் ..!! காதல் கொள்ளும் அழகு ஓவியம் ..!! நெஞ்சில் நிற்கும் அசத்தல் காவியம் ..!! உள்ளம் கண்ட வானின் பெண்ணினம் ..!! வெட்கம் கொண்ட உன் பார்வையில் சினம்...!! மேகத்தில் ஏன் மறைகிறாய் தினம் ..!! உன்னை காண தவிக்குதே மனம் ..!! கண்டும் காணாமல் போவது உன் குணம்... உன்னை தேடி வருவது என் மனம்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இந்த ஜென்மம் மட்டும் அல்ல இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த கண்ணன் என் ராதா உன்னை மட்டும் தான் காதலிப்பேன் அது என் முதலும் நீ முடிவும் நீ தான் என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

அவளும் நிலவும் உன்னை நான் கண்ணே முழுமதியோடு ஒப்பிடவா மதிபோல் நீயும் உந்தன் விழிப்பார்வையால் என்னுள்ளத்தில் தன்னொளி பெருக்கி என்னை ஆட்கொள்கின்றாய் அந்த நிலவைக் காட்டிலும் நீ அழகு நங்கை ஏனெனில் களங்கம் ஏதுமில்லையே உன்முகத்தில்... ️ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் தேடல் உன் வழி தேடி அல்ல.. உன் விழி பார்வையில் விழும் வரை அன்பே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மனம் ஒருவரை தான் தேடும் அதீத அன்பு கொண்ட காதலை மட்டும் என் மனசெல்லாம் நேரஞ்சவள் நீ மட்டுமே ️அறியா வயதில் விதைத்த காதல் இது ஆயிசுக்கும் அறுவடை பண்ண முடியாது ️ #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் திரும்பி பார்க்கும் திசையெல்லாம் உன் நினைவுகள் நான் காற்றின் சுவாசத்தையும் அதிகமாய் சுவாசிக்கிறேன் எங்கோ நீ விடும் மூச்சு காற்று என்னுள் வந்து சேர... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் உயிரே உன் மடியில் தலை சாய்ந்திருக்கும் இந்த ஒரு நொடி போதும் இக்கணம் என் உயிர் பிரிந்தாலும் சந்தோசம் தான் நாளை என்ற கனவு கலைந்தே போகட்டும் இன்று மட்டும் என்னுடன் இருக்கட்டும் காதலி.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மல்லிகையே தன் வாசத்தை உன்னிடம் தான் கடன் வாங்கியது ரோஜவே உன் அழகை மறு பிறதி எடுத்தது என் அழகியே .உன் அழகை வர்னிக்க இன்னும் எத்தனை கவிதைகள் தேவைபடுமோ பேரழகியே....!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இந்த உலகில் ஒவ்வொருவரும் யாரோ ஒருவருக்கு அடிமையாக இருக்கிறார்கள்...!!! நானும் அடிமை தான் என்னவனின் அன்பிற்கு...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இனம் புரியாத காதலும் உன் மீது தான்...!!! இதயம் புரியும் காதலும் உன் மீது தான் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ஆறுதலாய் ஒரு வார்த்தை மௌனமாய் ஒரு முத்தம் அன்பாய் ஒரு அரவணைப்பு இது போதும் வாழ்க்கைல எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிப்பேன் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

யார் என்னை ஒதுக்கினாலும் நீ மட்டுமே என்னை மார்போடு அனைக்கின்றாய் நான் தஞ்சம் அடைய இடம் இருக்கும் இடத்தில் தானே நான் சாய்ந்து கொள்ள முடியும் என் கண்ணா #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

விண்ணில் தவழும் வெள்ளி ஓடமே..!! உன்னை காணவே மனம் எங்குமே..!! வானில் உன்னை கண்ட கணமே...!! எந்தன் உள்ளம் கொள்ளை போகுமே...!! விண்மீன் போடும் ஆட்டமே...!! எந்தன் மனமும் மகிழ்ந்து போகுமே...!! மண்ணில் கடலும் தாளம் போடும்...!! மகிழ்ந்து உன்னை பார்த்து பாடுமே...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ உலக அழகி என்று பொய் சொல்ல மாட்டேன் ஆனால் என் உலகத்துக்கு நீ தான் அழகி இது தான் உண்மை... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எண்ணங்கள் அலைமோதும் போது வண்ணங்கள் நிறம் மாறியது ஏனோ அன்பே? #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பூவோடு சேர்ந்திருக்கும் வானத்தைப் போல் உன் நினைவோடு சேர்ந்திருக்கிறது என் சுவாசம்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் ஓவியத்துக்கு வண்ணங்கள் தேவையில்லை... உன் விழிகள் மட்டுமே போதும்...விதம் விதமாக வண்ணங்கள் பூசி விட்டு செல்கிறது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எனக்காகவே பிறந்தவள் நீீ... உன்னை நேசிப்பதற்காகவே பிறந்தவன் நான்... என் எதிர்பார்ப்பு நீீ மட்டுமல்ல உன் காதலும் தான் என் உயிர் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

வானம் முழுவதும் நீயானால் அதில் அதை சூழும் முழு மேகமாக நானிருப்பேன்...காதலின்‌ மொழி நீயானால் உன்னை அலங்கரிக்கும் எழுத்துக்கள் நானாவேன் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் அருகில் இருந்த போது ரசிக்காத உன்னை நீ விலகி செல்லும் போது உன் நிழலையும் ரசிக்கிறேன்.. இன்னலை இலகுவாக்கும் உன் சிரிப்பையும், மின்னலை குருடாக்கும் உன் கண்களையும் காணமல் தவிக்கிறேன்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எப்போது ஒருவர் மீது நீ அதிகமாக கோபம் கொள்கிறாயோ ! அப்பொழுதே புரிந்துக் கொள் நீ அவர்கள் மீது உயிராக இருக்கிறாய் என்று..! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ இல்லாத இரவும் தொலைந்து தான் போகிறது ...!! மேக கூட்டம் உன்னை தேடி களைத்து தான் போகிறது ...!! உன்னை காணாத கண்ணும் கலங்கி தானே போகிறது ...!! உன்னை எண்ணி எண்ணியே இதயம் துடித்து தான் போகிறது ...!! நீ வருவாயென மனம் காத்து தான் இருக்கிறது ...!! கண்ணாமூச்சி ஆட்டம் போதும் நெஞ்சம் கனத்து தான் போகிறது ..! வந்துவிடு நிலவே என் வெள்ளி நிலவே.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மேகங்களை போல் நீ... அதில் விழும் நிழல் நான்...மழை போன்று நீ என்னை சந்தோஷத்தில் நனைக்க வேண்டும்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நிற்கதி என்பது யாதும் அற்று போவதல்ல யாவும் இருந்தும் நம்மால் உரிமைகொள்ள இயலாது போவதே ... #ராதையின்_கண்ணன்

#
கவிகண்ணா

தேடி அலையும் காற்றிடம் கேட்டுப் பார்..! தேடலின் அறியாமை தெரியும்...! ஓடி அலையும் ஓடையை கேட்டுப் பார்..! ஓடையின் ஓசை புரியும்...! கலங்கி நிற்கும் கண்களைப் பார்..! காதலின் உணர்வு தெரியும்...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை தவிர வேறு எதுவும் பிடிப்பதில்லை..! ஏனெனில் உந்தன் அன்பு எப்போதும் சலிப்பதில்லை...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ பார்த்த நிலவு அழகா இல்லை நான் பார்த்த நிலவு அழகா... நீ வானத்தை பார்க்கிறாய் நான் உன் முகத்தை பார்க்கிறேன் என் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீயே நீயே இரவின் பூவனம் ..!! காதல் கொள்ளும் அழகு ஓவியம் ..!! நெஞ்சில் நிற்கும் அசத்தல் காவியம் ..!! உள்ளம் கண்ட வானின் பெண்ணினம் ..!! வெட்கம் கொண்ட உன் பார்வையில் சினம்...!! மேகத்தில் ஏன் மறைகிறாய் தினம் ..!! உன்னை காண தவிக்குதே மனம் ..!! கண்டும் காணாமல் போவது உன் குணம்... உன்னை தேடி வருவது என் மனம்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

வானத்தில் எட்டாத உயரத்தில் தான் நீயும் இருக்கிறாய் என்றாலும் என் எண்ணத்தில் எட்டிவிடும் தூரத்திலேயே நீயும் வந்து விடுகிறாய் ..!! உயரம் என்பதும் தொலைவு என்பதும் உலகிற்கு தானே தவிர உணர்விற்கும் உள்ளத்திற்கும் இல்லை ...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இனம் புரியாத காதலும் உன் மீது தான்...!!! இதயம் புரியும் காதலும் உன் மீது தான் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் இரு விழிகளும் இரவின் மயக்கத்தில் உறங்கினாலும்.... என் இதயம் மட்டும் என்னவள் உன் பெயரை மட்டும் சொல்லி கொண்டே துடிக்கும் காதலுடன் கண்ணா.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் வாழ்க்கையில் உள்ள காதலும் நீ தான்...!!! என் காதலில் உள்ள வாழ்க்கையும் நான்...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

காத்திருப்பது கண்கள் மட்டும் அல்ல... என் இதயமும் தான்...!! கண்கள் உன் முகத்தை தேடி... இதயம் உன் அன்பை தேடி...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

தினமும் என் நித்திரையில் நித்திரை கொள்ளாமல் வருபவள் நீ.. உன்னை கவர்ந்திட நினைத்தால் உன் இதயத்தை திருடினேன் நான்.. கைது செய்வாய என்னை.. கைது செய்து என்னை உன் இதயத்தில் பத்திரமாக பூட்டி வை உயிரே.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மேகங்கள் காதல் கொண்ட நிலா வானத்தின் மீது காதல் கொண்டதால் தானோ என்னவோ அவை மழைகளாக உருகுகின்றன... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் என்ற அடையாளம் எதுவாயினும்...என் காதலுக்கு என்ற அடையாளம் என்றும் நீ மட்டுமே ராதா... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன் வானில் மையல் கொண்ட மேக கூட்டங்கள், கொஞ்சி..கொஞ்சி மழையாய் பொழிந்திட! தூது செல்ல வாசல் வந்த வானவில், உன் விழி கண்டு.. தன் வழி மறந்து அழகிய கோலமாக உருமாறி உன் பாதம் பட.. தவமிருக்கின்றது!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

வண்ண வண்ணமாய் மீன்கள் இருந்தாலும்... வண்ணமே இல்லாத தண்ணீர் தானே உலகம்...அதுபோலவே நீயும் நானும்... நான் நீராக... நீ மீனாக... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உனது மௌனப் புன்னகையை கண்டவுடன் ஓடிவந்து முத்தமிட தோனுகிறது. வானளாவிய உந்தன் அன்பின் காதலை அளக்க இயலவில்லை என்றாலும் உந்தன் ஆழமான காதலின் வெளிச்சத்தை கண்களை கொண்டு என்னால் சற்றே உணர முடிகிறது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ஆணின் மனம் கல் என்று பலர் சொல்வதுண்டு உண்மை தான் ஒரு முறை ஒருத்தி பெயரை அந்த கல்லில் எழுதி விட்டால் அந்த பெயரை அழிக்க முடியாது காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் காதலுக்கு உயிர் கொடுத்த தேவதையே நான் உன்னை தொட்ட தென்றல் காற்றல்ல நான் சுவாசிக்கும் மூச்சுக் காற்று இருந்தாலும் இறந்தாலும் உன்னை மட்டுமே சேர்வேன்...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இதய அறைகள் நான்கு எனினும் இதயம் முழுவதும் நிறைந்திருப்பது உன் நினைவுகளே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

வானம் முழுவதும் நீயானால் அதில் அதை சூழும் முழு மேகமாக நானிருப்பேன்...காதலின்‌ மொழி நீயானால் உன்னை அலங்கரிக்கும் எழுத்துக்கள் நானாவேன் காதலி #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் ஓவியத்துக்கு வண்ணங்கள் தேவையில்லை... உன் விழிகள் மட்டுமே போதும்...விதம் விதமாக வண்ணங்கள் பூசி விட்டு செல்கிறது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கண் சிமிட்டும் அந்த நொடிகளில், மின்மினிகள் தொற்று போக, உன் பார்வையால் எனை மயக்கி, விழிகளைக் கொண்டு என்னை கொள்ளையடித்தாயடி ராதா.. #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மலரினில் மணம் கண்டேன் மௌனமும் மொழியாய் கண்டேன் மழையில் மகிழ்வதை கண்டேன் உன் புன்னகையில் மட்டுமே என் ஜீவனைக் கண்டேன் என் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கவிதை சொல்ல காதல் தேவையில்லை... உன் கண் பார்வை ஒன்றே போதும்... நான் கவிஞன் இல்லை நான் உன் காதலன்... எனக்கு கவிதை தெரியாது... உன் கண்களை பார்த்தால் ஆயிரம் கவிதை எழுத வேண்டும் என்று என் கைகள் துடிக்கிறது என் கண்ணழகி... என் அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ எனதருகினில் நீ இதை விட ஒரு கவிதையே கிடையாதே!... நீ எனதருகினில் நீ இதை விட ஒரு புனிதமும் இருக்காதே!... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

அன்பே நீ மௌன விரதம் இருந்தால் முதலில் உன் கண்களை மூடிக்கொள் ஏனென்றால்...? உன் உதடுகளை விட உன் கண்கள் தான் அதிகம் பேசுகிறது அன்பே...! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கவிழ்த்த பானைக்குள் அடைப்பட்ட காற்றாய்...காற்று மண்டலமாய் பல கண்கள் நுழைந்தாலும்... வேறேதும் உள்ளே புக முடியாமல் நீ மட்டும் எனக்குள்ளே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

விண்ணில் தவழும் வெள்ளி ஓடமே..!! உன்னை காணவே மனம் எங்குமே..!! வானில் உன்னை கண்ட கணமே...!! எந்தன் உள்ளம் கொள்ளை போகுமே...!! விண்மீன் போடும் ஆட்டமே...!! எந்தன் மனமும் மகிழ்ந்து போகுமே...!! மண்ணில் கடலும் தாளம் போடும்...!! மகிழ்ந்து உன்னை பார்த்து பாடுமே...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கவிதைக்கு பொய் அழகு என்று பொய் சொல்கிறார்கள்...கவிதை பேசும் உன் கண்களுக்கு பொய்யே பிடிக்காதே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

தொலைத்தால் கிடைக்கும் பொருள் அல்ல...எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷம் உன் அன்பு... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னோடு சேர்ந்தே இந்த உலகை ரசித்திட ஆசை... உன் பூ கரம் பிடித்தே இந்த உலகை சுற்றிட ஆசை... உன் இன் முகம் பார்த்தே அந்த நிலவை ரசித்திட ஆசை... உன் மடி சாய்ந்தே என்னை மறந்திட ஆசை... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் இதயம் இன்னும் துடிப்பதன் காரணம்... நொடிக்குநொடி அது உன்னையே நினைப்பதால்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இமைக்கும் என் கண்கள் உன்னை பார்க்காமல் இருக்கலாம்... துடிக்கும் என் இதயம் உன்னை நினைக்காமல் இல்லை.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் படித்த நூலகம் அவள் விழிகள்! அவள் விழியோடு பேசிய வார்த்தைகளில் ஓராயிரம் அர்த்தங்கள்! நான் இன்னும் மீளவில்லை அவள் விழியில் இருந்து தான்! என் காதலுடன்... நான்.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ஏன் என்னை தொடர்கிறாய் என்று நிழலிடம் கேட்டேன்.. என்னை தவிர யாரும் உன்னை தொடர போவதில்லை என்பதால் என்றது... உன்னை நிழல் போல் தொடரும் நிஜம் நான்... நிஜம் இல்லாமல் நிழல் உருவாகாது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கரும் கூந்தல் பின்னிய இருளென பச்சை குடை பிடித்த வனத்திற்க்குள் மஞ்சள் வெயில் ஒற்றனாய் ஊடுருவிய காட்டிற்க்குள்ளே சிவப்பென சிவந்த ராதையே! கையில் வெள்ளை மலரை ஏந்தி கொண்டு கவிபாடும் நீலக்கண்ணனை காண காத்திருக்கிறாயோ? ... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மேகங்களை போல் நீ... அதில் விழும் நிழல் நான்...மழை போன்று நீ என்னை சந்தோஷத்தில் நனைக்க வேண்டும்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நிற்கதி என்பது யாதும் அற்று போவதல்ல யாவும் இருந்தும் நம்மால் உரிமைகொள்ள இயலாது போவதே ... ‍️‍️‍️‍️#ராதையின்_கண்ணன்

#
கவிகண்ணா

இமைகளின் ஓரத்திலே ஈரம் ஒட்டியிருக்க என் இதயத்தின் அறைகளில் எடை போட முடியாத உன் பிரிவின் பாரங்கள்...........!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னை வெறுக்க உன்னிடம் பல காரணங்கள் இருக்கலாம்... ஆனால், உன்னை நேசிக்க எனக்கு ஒரே ஒரு காரணமே போதுமானது... உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நிலையில்லாத உறவு என தெரிந்தும்.. வேதனையான பிரிவு தான் முடிவு என புரிந்தும் அந்த நேசம் எனக்கு பிடித்திருக்கிறது அந்த அளவுக்கு மனசு ஏங்கி தவிக்கிறது என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இதயத்தில் நீ இருந்தால் என்றோ மறந்திருப்பேன்... இதயமாகவே நீ இருப்பதால்... இன்றும் நினைத்து வாழ்கிறேன்... என்றும் உன் நினைவுகளுடன்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நிலையில்லாத உறவு என தெரிந்தும் வேதனையான பிரிவு என முடிவு என புரிந்தும் அந்த நேசம் எனக்கு பிடித்திருக்கிறது அந்த அளவுக்கு மனசு ஏங்கி தவிக்கிறது என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னோடு சேர முடியாது என தெரிந்தும் கூட மனது உன்னை நேச்ப்பதை தவிர்க்க முடியவில்லை காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை விட உன் நினாவுகளே எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் நானே நினைத்தாலும் அவை என்னைவிட்டு எப்பொழுதும் விலகுவது இல்லை என் காதலியே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் கடந்து சென்றாலும் என் உணர்வுகளை தொடர்ந்து செல்லும் ஒரே உறவு நீ தான் என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் காதல் என்றுமே உனக்காக மட்டுமே உயிர் வாழும் அருகில் இருந்தாலும் சரி தொலைவில் இருந்தாலும் சரி உனக்காக நான் எனக்காக நீ என் உயிரே ராதா... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உயிரே என் இதயத்தில் பதிந்து விட்டாய் ஆயிரம் ஜென்மம் ஆனாலும் உன் கை கோர்த்து உன் மடி சாய்ந்து வாழ்ந்திட வரம் தர வேண்டும் எனக்கு காதலி #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் உன் இதயமாக பிறக்க வேண்டும்...நான் துடித்தாலும் உன்னை வாழ வைப்பேன் என் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கண் முன்னே தோன்றினால் பெண் ஒருத்தி அவள் விண்ணில் இருந்து வந்தவலோ மண்ணிலிருந்து பிறந்தவலோ... அது எனக்கு தெரியாது ஆனால் அவள் எனக்கானவள் என்று மட்டும் எனக்கு தெரியும்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

புதிதாய் வேறு ஒருவரின் அன்பில் மின்னுவதை விட பழைய இரும்பாய் உன் அன்பிலே துரு பிடித்து மக்கி போவதில் பெரும் சுகம் எனக்கு... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் வாழ்க்கையில் உள்ள காதலும் நீ தான்...!!! என் காதலில் உள்ள வாழ்க்கையும் நான்...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இனம் புரியாத காதலும் உன் மீது தான்...!!! இதயம் புரியும் காதலும் உன் மீது தான் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை தவிர வேறு எதுவும் பிடிப்பதில்லை..! ஏனெனில் உந்தன் அன்பு எப்போதும் சலிப்பதில்லை...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ என்னுள் வரும்முன் உன்னை தேடினேன் நீ என்னுள் வந்தபின் என்னை தேடினேன்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இந்த உலகத்தில் ஏழு அதிசயம் இருக்குதுன்னு நான் கேள்வி பட்டிருக்கேன்...ஆனால் அந்த ஏழு அதிசயத்திர்க்கும் எட்டாத அதிசயம் நீ மட்டும் தான் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ஆண்களை விட பெண்களை குள்ளமாக கடவுள் படைக்க காரணம்... ஆணின் மார்பில் பெண் சாயும் போது ஆணின் இதயம் துடிப்பதை அவள் காதால் உணர வேண்டும் என்பதற்காக... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இந்த ஜென்மம் மட்டுமல்ல இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த கண்ணன் என் ராதா உன்னை மட்டும் தான் காதலிப்பேன் அது என் முதலும் முடிவும் நீதான் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் உயிரே உன் மடியில் தலை சாய்ந்திருக்கும் இந்த ஒரு நொடி போதும் இக்கணம் என் உயிர் பிரிந்தாலும் சந்தோஷம் தான் நாளை என்ற கனவு கலைந்தே போகட்டும் இன்று மட்டும் என்னுடன் இருக்கட்டும் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இன்று உன் நினைவுகள் என்னை அதிகம் பாதிக்கிறது கண்ணீரைத் தருகிறது... ஒரு முறை உன் முன் நான் அழுத போது இப்படி நீ அழுதால் நான் வரவே மாட்டேன் என்று சொன்னாய்... இப்போதெல்லாம் அழாத நேரங்கள் மட்டுமே குறைவு.. உன்னை பார்க்கணும் போல இருக்குதடி.. வந்திட மாட்டாயா நான் அழ வா அன்பே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உயிரே என் இதயத்தில் நீ பதிந்து விட்டாய் ஆயிரம் ஜென்மம் ஆனாலும் உன் கை கோர்த்து உன் மடி சாய்ந்து வாழ்ந்திட வரம் தர வேண்டும் காதலி ... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீயும் நானும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் என் அன்புக்கு சொந்தமானவள் நீ மட்டும் தான் என் அன்பே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

சிற்பிக்குள் முத்து எடுத்து நான் செதுக்கி வைத்த அழகு நீ தான் என் புன்னகையில் ஒளிந்து இருக்கும் அழகி நீ தான் என்னை உன் பார்வையில் கொள்ளும் அழகு நீ தான் இந்த கவிதை உனக்கென சேமிக்கிறேன் கவிதை என்பது என் மூச்சு காதல் என்பது எனது காவியம்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இதயம் முழுவதும் நிரம்பி இருக்கும் குருதியில் உரைந்து போனது உந்தன் முகம் மட்டுமே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நிலா பார்க்கிறாள் நிலா..நான் பார்க்கும் அதே நிலா... தேய்பிறை பார்க்காத நிலா என் தேவதை... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை விட உன் நினைவுகளே எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் நானே நினைத்தாலும் அவை என்னைவிட்டு எப்பொழுதும் விலகுவது இல்லை என் காதலியே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் உன்னை தொடர்ந்து வருவதினால் நீ என்னை வெறும் நிழல் என்று எண்ணி விடாதே...! நான் உன் நிழலான நிஜம் என்பதை நீ மறந்து விடாதே காதலி நான் உன் கிருஷ்ணன்...! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் தொலைவில் இருந்தாலும் பாசமாக இருப்பேனே தவிர... உனக்கு என்றைக்கும் பாரமாக இருக்க மாட்டேன்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உண்மையான உறவு என்பது நிலைக் கண்ணாடியும் நிழலும் போல..கண்ணாடி பொய் சொல்லாது..நிழல் நம்மை விட்டு விலகாது. #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

சுவாசமெனக் கலந்திருக்கிறாய் உனைத் தொலைப்பதென்பது என் உயிர் பிரிவதற்க்கு இணை... இதயம் அறிந்திடும் முன்னே கண்களால் என் உயிரை களவாடிய உன் காதலில் இதமாய் கரைகிறேன்... உனக்கே ஆன சில தருணங்கள் என் நாட்களிடம் இருக்கிறது. அவை, நீ இன்றி அப்படியே நகர்கிறது.. #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நினைவென்னும் நீரோடையில் பயனிக்கிறேன் என் நிஜமான அவளுடனே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பேதை ராதை அவளுடன் நான் அமர்ந்த ஊஞ்சலும் என்றும் அவள் நினைவுகளுக்கு சொந்தம்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கண் முன்னே தோன்றினால் பெண் ஒருத்தி அவள் விண்ணில் இருந்து வந்தவலோ மண்ணிலிருந்து பிறந்தவலோ... அது எனக்கு தெரியாது ஆனால் அவள் எனக்கானவள் என்று மட்டும் எனக்கு தெரியும்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கண் சிமிட்டும் அந்த நொடிகளில், விண்மீன்கள் தொற்று போக, உன் பார்வையால் எனை மயக்கி, விழிகளைக் கொண்டு என்னை கொள்ளையடித்தாயடி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

காற்றோடு நான் கலக்கிறேன் உன் சுவாசக்காற்று என்னை தீண்டுவதற்கு நான் உன்னை நேசிப்பதனால் மட்டுமல்ல உன்னையே மூச்சுக்காற்றாக சுவாசிப்பதனால்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பூவோடு சேர்ந்திருக்கும் வாசத்தை போல் உன் நினைவோடு சேர்ந்திருக்கிறது என் சுவாசம்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னை மறந்து விடு வென்று உன்னை திட்டி விட்டு மறைக்காமல் இறைவனிடம் மனு கொடுக்கிறேன் ராதே... நீ என்னை மறந்து விட கூடாது என்று... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் இரு விழிகளும் இரவின் மயக்கத்தில் உறங்கினாலும்.... என் இதயம் மட்டும் என்னவள் உன் பெயரை மட்டும் சொல்லி கொண்டே துடிக்கும் காதலுடன் கண்ணா.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை கண்ட நாள் முதல்... உன் பேச்சில், உன் செயலில், உன் உயிரில், உன் மனதில், உன் உறவில், உன் மூச்சில், உன் கனவில், உன் நினைவில், உன் அன்பில், யார் வேண்டுமானாலும் இருக்கலாம்... ஆனால் யாரும் இல்லாதபோது உனக்காக நான் இருப்பேன் காதலி #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை மட்டும் அல்ல உன் நினைவை சுமப்பதும் வரமே எனக்கு... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ஒளியிழந்த விழிகளுக்கும் கனவை தந்தாய் கலைந்துவிடாதே இருண்டுவிடும் என்னுலகம்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

அன்பெனும் குழலை வாசித்து பார்க்க ஆசை அவள் விழிகளில்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பல சொந்தங்கள் உனக்கிருந்தாலும் உன் இதயத்தின் சொந்தம் நானாக மட்டுமே இருக்க வேண்டும்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பேச வந்த வார்த்தையெல்லாம் ஓசையின்றி போனது உன் விழிமொழியில் மயங்கி…! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீர் இன்றி மீன் வாழ முடியாது நீ இன்றி நான் வாழ முடியாது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் தேடல் உன் வழி தேடி அல்ல.. உன் விழி பார்வையில் விழும் வரை அன்பே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மழை கண்ட இலைகள் போல்…..!! சிலிர்த்துக் கொள்கிறேன் அவளின் பார்வையில்….!! நான்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னோடு இரு என்பதை தவிர கூடுதலாக எந்த ஆசையும் இல்லை என்னிடம்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ஆயிரம் வலிகள் தந்தாலும் என்னை ஒரு நொடி கூட விட்டு பிரிந்து விடாதே…. அந்த வலிகளுக்கு ஆறுதல் உன் அன்பு மட்டுமே…!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் நினைவில் உன் நினைவும்… உன் நினைவில் என் நினைவும் இருக்கும் வரை… நம் காதல் என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்… நம் நினைவில் ராதே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பாலில் மிதக்கும் உன் கருவிழிகள், பல்லாங்குழி போல் உன் கன்னங்கள், பசுமையான உன் இதழ்கள், பார்க்க ஏங்கும் உன் முகம் அதிசமே அதிசயமே அழகின் அதிசயம் நீதானே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

சந்திக்காத வேலையிலும் சிந்திக்க வைத்தவள் நீ...... சிந்தித்த வேலையில் என் சிதையில் நின்றவள் நீ..... என் சிந்தையில் நின்ற உன்னை என் இதய கூட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்றும் பத்திரமாய்.... காதலுடன்.... கண்ணா... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன் சுவாசம் பட்டால் என் குழலும் தேன் இசை பாடுமே ராதா... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ஒரு பெண்ணின் அன்பை முழுமையாக உணர்ந்தவன் அவளை விட்டு விலகவும் மாட்டான் வேறொரு பெண்ணை நினைக்கவும் மாட்டான்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

காதல் எனப்படுவது யாதெனில்... எந்த ஒரு காதலில் தாய்மை உணரப்படுகிறதோ... அந்த காதல் அப்போதே பூனிதமாகிறது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கரும் கூந்தல் பின்னிய இருளென பச்சை குடை பிடித்த வனத்திற்க்குள் மஞ்சள் வெயில் ஒற்றனாய் ஊடுருவிய காட்டிற்க்குள்ளே சிவப்பென சிவந்த ராதையே! கையில் வெள்ளை மலரை ஏந்தி கொண்டு கவிபாடும் நீலக்கண்ணனை காண காத்திருக்கிறாயோ? ... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ தெளிவாகத் தான் உரையாடி கொண்டிருக்கிறாய் நான் தான் உளறிக் கொண்டிருக்கிறேன் மனதுக்குள் உன்னோடு காதலில்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

காயங்களும் மாயமாகும் என்னருகில் நீயிருந்தால்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

தவம் இருப்பவர்களுக்கெல்லாம் வரம் கிடைத்து விடுமா என்று தெரியவில்லை ஆனால், நீயோ எனக்கு தவமின்றி கிடைத்த வரம்! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னிடம் மட்டும் எனக்கு சுயநலம் அதிகம் உன் அன்புக்கு சொந்தக்காரன் நான் மட்டும் என்பதில்! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ எனக்கு சொந்தம் என்பதை விட நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற வார்த்தையிலேயே உயிர் வாழ்கிறேன்! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மிஞ்சும் அழகு நிறைய காதல்; கொஞ்சம் வார்தைகள் நிறைய மௌனம்; கொஞ்சம் கோபம் நிறைய பொறுமை; கொஞ்சம் அதிகம் குறும்பு நிறைய அடக்கம்; அழகு புன்னகை; - இவையெல்லாம் நீ! கொஞ்சம் நான் நிறைய நீ - இதுதான் நான்.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

சொல்ல வரும் காதலை ஏதோவொரு தயக்கம் தடுத்து விடுகிறது.. முடிந்தவரை மெல்ல மெல்ல தைரியத்தை சேமித்துக் கொண்டிருக்கிறேன்... பெயரளவுக்குச் சொல்லிவிட்டு நின்றுவிடுவதற்கல்ல உயிரளவுக்கு உன்னுள்ளத்துள் சென்றுவிடுவதற்கு #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எனக்கே தெரியவில்லை எந்தன் பொழுதுகள் இத்தனை இனிமை என்று நீ இல்லாத நொடி பொழுது கூட என்னுள் வீணாய் தோன்றியதே ஏனடி கண்ணே இந்த பிரிவில் இத்தனை வலிகள் உள்ளது இத்தனை வலிகளிலும் உனக்காய் காத்திருப்பதில் கூட சுகம்தான் என் இனியவளே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கண்ணைக்காணும் கண்ணே! என்னை காணும் முன்னே! உன்னை கண்டேன் பெண்னே! நீ காண்பது உன்னையென்றால் நான் காண்பது என் உயிரையென்பேனே....

#
கவிகண்ணா

சிரம் சுமக்கும் முன்பே சிறை புகுந்தேன் பெண்ணே சிறகடிக்க முயற்சித்ததால் சிறகை ஒடித்த மனங்களோ சிரிக்க சொல்லி யாசிக்கும் சித்ரவதைக்கு பயந்தே சினம்மில்லா குரலால் சிரிப்பேன் கண்ணீரோடு என் சிந்திய துயர் உணர்ந்ததால் என் சிறைக்கதவினை திரந்தயோ? சிங்காராப்பெண்ணே!! நீ சிந்தனையை மயக்கும் அழகில் இரையாகாது சிந்தனையே மயங்கிவிடும் அன்பிற்க்குள் முழுமனதாய் சிறையாகிக்கொள் உன்னால் சிறப்பும் சிறப்படையும் உன் சிறைவசத்தால்..... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எத்தனை நாள் நிலவு வானத்தில் தோன்றினாலும் அது பௌர்ணமி போல் வருமா...அது போல தான் நீ எனக்கு...தேய்பிறை இல்லாத நிலா... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பெண்ணே நியூட்டன் மட்டும் உன் விழிகளை முன்பே பார்த்து இருந்தால் அவருக்கு ஆப்பிள் தேவை பட்டிருக்காது ஏனென்றால்.... நியூட்டனின் புவி ஈர்ப்பு விசையை விட உன் விழி ஈர்ப்பு விசை என்னை அதிகம் ஈர்க்கிறது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ தெளிவாகத் தான் உரையாடி கொண்டிருக்கிறாய் நான் தான் உளறிக் கொண்டிருக்கிறேன் மனதுக்குள் உன்னோடு காதலில்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன் கண்களின் கதிர்வீச்சால் கைதியாகி நிற்க்கிறேன் கருணை கொண்டு என் கைகளை மட்டும் அவிழ்த்துவிடு ஒரு கவிதை மட்டும் எழுதிகொள்கிறேன்...!!! எனக்கு தெரியும் நீ விரும்புவது என்னை அல்ல என் கவிதைகளைத்தான் என்று ஆனால் உனக்கு தெரியுமா உன்னை விரும்புவது என் கவிதைகள் அல்ல நான் தான் என்று அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன் கண்களின் கதிர்வீச்சால் கைதியாகி நிற்க்கிறேன் கருணை கொண்டு என் கைகளை மட்டும் அவிழ்த்துவிடு ஒரு கவிதை மட்டும் எழுதிகொள்கிறேன்...!!! எனக்கு தெரியும் நீ விரும்புவது என்னை அல்ல என் கவிதைகளைத்தான் என்று ஆனால் உனக்கு தெரியுமா உன்னை விரும்புவது என் கவிதைகள் அல்ல நான் தான் என்று அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

வானத்தில் கோடி நட்சத்திரங்கள் இரவிற்கு அழகு நிலாதான்... உலகத்தில் கோடி பெண்கள் இருந்தாலும் எனக்கு அழகி நீ தான் அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னுடன் வாழத்தான் நீயும் உன் அனுமதியும் தேவை...நான் உன் நினைவுகளோடு வாழ்பவன்...அதற்கு நீயும் தேவையில்லை உன் அனுமதியும் எனக்கு தேவையில்லை ஏனென்றால் இதில் மட்டுமே என் காதல் 100% வாழ்கிறது என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் உன்னை நேசிக்கும் அளவு நீ என்னை காதலிக்க வேண்டாம் ஆனால் என் நேசம் எந்தளவு என்று புரிந்து கொண்டாலே அது போதும் என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் தேவதை கண்மூடி தூங்கும் அழகு நிலவின் ஒலியாக மாறி இரவு முழுவதும் நான் பார்த்துக் கொண்டு இருக்கனும் அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னையே அறியாமல் அடிமை ஆகிவிட்டேன் உன் அன்பில் உயிரே... !!! யாருக்கும் அடிமையாக மாட்டேன் என்று சொல்லித்திரிந்த நான்...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எந்தன் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் வார்த்தைகளாய் உன்னையே பிரதிபலிக்கின்றன ஆயினும் அவ்வப்பொழுது நின் வீட்டு நிலைக் கண்ணாடிக்கும் சிறிது முகம் காட்டிப்போ இல்லையேல் என் மீது தீராப் பொறாமை கொண்டுவிட போகின்றது அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ இப்படி இருந்தால் தான் உன்னை விரும்புவேன் என்பதல்ல காதல்!!.. நீ எப்படி இருந்தாலும் உன்னை மட்டுமே விரும்புவேன் என்பதே உண்மை காதல்...! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நாள் முழுவதும் உனக்காக காத்திருக்கிறேன் நொடி பொழுது எனக்காக செலவிடு பெண்ணே...நான் உயிர் வாழ அது போதும் உன் வார்த்தைக்காக செவி சாய்த்தே என் நாட்கள் போய்விட்டன இன்றும் கூட பெண்ணே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எங்கும் எதிலும் எனக்காக நீ வேண்டும் என்பதை விட எங்கும் எதிலும் என்னுடன் வேண்டும் என்பதே நான் கொண்டுள்ள மொத்த ஆசை காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

அதிகமான பெண்கள் நினைக்கிறார்கள் ஆண்களின் இதயம் கல் என்று ஆனால் அவர்களுக்கு தெரிவதில்லை கல்லில் செதுக்கிய சிற்பம் செதுக்கிய சிற்பம் என்றும் அழிவதில்லை அது போல தான் ஒரு பெண்ணை அது மனத்தில் என்றும் அழியாது என் அன்பே காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் கூட சண்டபோடு கோவப்படு அதை கூட தாங்கிப்பேன் ஆனா உனக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி யாரோ போல நீ நடந்துக்குறது தான் எனக்கு வலிக்குது காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னுடைய உயிரிலும் உணர்விலும் கலந்து இருக்கும் உன் நினைவுகளுக்கு மட்டுமே தெரியும் நீ தான் என்னுடைய உலகம் என்று காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உலகத்தில் எல்லா இடத்திலும் தேடிப்பார் என்னை விட உன்னை நேசிக்கும் ஒருத்தரை உன்னால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ இல்லாத வாழ்க்கை.. வேர் இல்லாத மரம் போல.. நீர் இல்லாத மீன் போல.. இரவு இல்லாத பகலும் போல.. உன் நினைவு இன்றி நான் இல்லை...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இடைவெளி உனக்கும் எனக்கும் தான் என் அன்புக்கு கிடையாது நீ என்னை வெறுத்தாலும் விலகினாலும் என் அன்பு உன் நிழல் போல உன்னை தொடரும் அன்பே...!!! பெண்ணே நீ என் காதலை ஏற்று கொள்ளாவிட்டாலும் கூட நீ நடந்து சென்ற இடத்தில் உன் பாதம் பதித்த தடத்தில் நான் பூக்களாய் மலர்வேன் அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

காத்திருக்கிறேன் உன்னை பார்ப்பதற்கோ உன்னிடம் பேசுவதற்கோ அல்ல என் பெயரில் உன் பெயரை சேர்ப்பதற்கே என்னவளே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னிடம் சண்டை போடும் என்னை விட்டுவிடாதே காதலி என்னை விட உன்னை வேறு யாரும் நேசிக்க முடியாது...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நிலவு இல்லாத நாட்கள் உண்டு ஆனால் உன் நினைவு இல்லாத நாட்கள் இல்லை என் காதலி...!!! இரவில் தெரியும் நிலவை விட என் மனதில் தெரியும் உன் முகமே என்றென்றும் அழகு காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இரு வரி கவிதையை விட உன் இரு விழி ஆயிரம் கவிதை சொல்லுதடி அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ஒரு பெண்ணின் இதயத்தை தொடு..! உடம்பை தொட நினைக்காதே..! மனதை திருடு..! கர்ப்பை திருட நினைக்காதே..! சிரிக்கவை அவள் கண்ணீரை வீணாக்காதே நண்பர்களே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன் நினைவுகளை என் வீட்டு ரோஜா செடியிடம் தினம் தினம் பேசிக்கொண்டு இருந்தேன் பூக்களுக்கும் உன் மேல் ஆசை பிறந்தது உன்னை காண தினம் பூக்க வேண்டும் என்று உனக்காக இந்த பூவும் நானும் காத்துக்கொண்டு இருக்கிறோம் என் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நினைவில் உன்னை நினைத்து கொண்டு இருந்தேன் கனவில் நீ தோன்ற கண்கள் உன்னை பார்த்து கொண்டு இருந்தேன் நீ முதல் முறை என்னிடம் பேசினாய்...நான் மயங்கி விழுந்தேன் நீ பேசும் வார்த்தை குயில் பேச்சு போல இருந்தது என் அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நாள் முழுவதும் உனக்காக காத்திருக்கிறேன் ஒரு நொடி பொழுது என்னிடம் பேசு எனக்காக பெண்ணே நான் உயிர் வாழ அது போதும் உன் வார்த்தைக்காக காத்திருக்கிறது இன்றும் கூட போய் விட்டது என் நாட்கள் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் மனதில் எத்தனை கவலைகள் இருந்தாலும் அவை அனைத்தும் காணாமல் போகின்றது... உன் இருவிழி பார்வையில் நான் தினம் தினம் தொலைந்து போகிறேன் ராதா.. #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இதயம் இல்லா இணைய இயந்திரத்தில் நான் கண்டெடுத்த நல் இதயம் கொண்டவள் நீ... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் உயிரே உன் மடியில் தலை சாய்ந்திருக்கும் இந்த ஒரு நொடி போதும் இக்கணம் என் உயிர் பிரிந்தாலும் சந்தோசம் தான் நாளை என்ற கனவு கலைந்தே போகட்டும் இன்று மட்டும் என்னுடன் இருக்கட்டும் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னுடன் நீ என்றும் இருக்கிறாய் இரவில் நிலவாக...பகலில் நிழலாக... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மணிரத்னம் கதை போல் #காதல் செய்ய ஆசை தான் ஆனால் காதலிக்க ஒரு கண்மணி இல்லையே ...?

#
Karuppasamy

ந‌ம‌க்குள் விள‌க்க‌முடியாத, ஒரு உற‌விருப்ப‌‌தும் நிஜ‌ம்..!" அதீத‌மாய் நான் உன்னை, நேசித்த‌தும் நிஜ‌ம்..! அதை நிஜ‌மென‌ நீ, ந‌ம்ப‌ ம‌றுத்த‌தும் நிஜ‌ம்..!" விருப்ப‌மில்லாம‌லே, நீயென்னை வீசியெறிந்த‌தும் நிஜ‌ம்..!! நீயும்.. நீ சார்ந்த‌வைக‌ள்தான், என் உலகம் என்ப‌தும் நிஜம்..! அவையின்றி, சுக‌வீன‌மாய் நான் இருப்ப‌தும் நிஜ‌ம்..! ந‌ம் உற‌வு முறிந்த‌ ஒரு க‌ருப்பு நாளில், க‌த‌றிய‌ழுத‌ என் க‌ண்க‌ளில், உன‌க்கான் ஈர‌ம் இன்னும், மிச்ச‌மிருப்ப‌தும் நிஜ‌ம்..!" நீ வில‌கிச்செல்லும் ஒவ்வொரு த‌ருண‌மும், நான் ம‌ர‌ண‌த்தை நெருங்கிக் கொண்டுருப்ப‌தும் நிஜ‌ம்..!" உயிர் பிரியும்வ‌ரை, நீ என் உட‌னிருப்பாய், என‌ நான் ந‌ம்பிய‌தும் நிஜ‌ம்..!" அது பொய்யென, என் உயிர் கிழித்த‌தும் நிஜ‌ம்..!" நீ என்னை ஏற்கும் திருநாள் காணும் வ‌ரை, கால‌ன் அவ‌ன் க‌ர‌ங்க‌ளில், சிறைப்ப‌ட‌ ம‌றுக்கிற‌த‌டி என் ம‌ன‌ம்...!! *நிழலின் நிஜங்களாய்* RK

#
Kalpana Subramaniam

நலமா என் காதலே..? உன் நினைவால்.. என் காதல் நலம்..! இந்த காதல்.. கனவைத் தந்த.. என் காதல்.. நீ நலமா..? RK

#
Kalpana Subramaniam

பார்வையின் மறுமுனையில்.. இன்னும்.. எழுதிப் பார்க்காத.. கவிதையாக இருக்கிறாள்.. அவள்...!! RK

#
Kalpana Subramaniam

தனித்திருக்கும் போதெல்லாம் உன் நினைவுகள் அலைமோதும்.. நிழலாய் உடனிருந்து உள்ளத்தை மிதுவாக்கும்.. தவித்திருக்கும் இதயத்தையும் மயிலிறகாய் வருடி போகும்.. தோள் தேடும் நேரமெல்லாம் உன் உள்ளங்கையே துணையாகும்..

#
அன்புடன் ரவி

காதல் என்னவளே நானும் காதல் கைதிதான் உன் பார்வை விலகும் வரை... என்னவளே நானும் தண்டனை கைதிதான் உன் மௌனம் விலகும் வரை... என்னவளே ஆயுள் கைதிதான் இதயம் கல்லறை செல்லும் வரை.. நன்றி ராமசாமி..

#
Ramasamy Ramasamy

பல நாள்.. என்னிடம் கேட்ட கேள்விக்கு.. இவள் தான் என்று.. அவள் கை பிடித்து காதலுக்கு.. அறிமுகம் செய்துவிட வேண்டும்.என்று.. தேடுகிறேன்.. எனக்கானவளை...!! RK

#
Kalpana Subramaniam

உன் முகம்.. பார்க்கா நாட்களும்.. உன் குரல்.. கேட்கா நொடிகளும்.. உன் அரவணைப்பில்லா.. அந்திப்பொழுதுகளும்.. நீ இல்லா.. என் தனிமையும்.. நரகமடி எனக்கு...!! RK

#
Kalpana Subramaniam

நீ அவளுக்காக எவ்வளவு இறங்கி வருவாய்யென தெரிந்து கொள்ளாமல் உன்னிடம் காதலை சொல்லமாட்டார்கள்..?

#
Karuppasamy

நீ காட்டிய முதல் வெட்கம்..! நீ தொட்ட முதல் சிலிர்ப்பு..! நீ ரசித்த முதல் கவிதை..! நீ கொடுத்த முதல் பரிசு..! நீ கொடுத்த முதல் முத்தம்..! அனைத்தையும் அள்ளிக் கொடுத்தாய்..! உயிரை மட்டும் உருவிச் சென்றாய்...!! RK

#
Kalpana Subramaniam

இரு ஜோடி விழிகளிலே, இதயம் துடிக்க வைத்து..! கால் கொலுசின் ஓசையிலே, காலமெல்லாம் கிறங்க வைத்து..! பிஞ்சு விரல் பிடித்து, ரெட்டை ஜடை மடித்து..! மடியில் தலை சாய்த்து, மரணம் தொட்டு விட்டு..! நெஞ்சு நெருப்பினிலே, நெருங்கி குளிர் காய்ந்து..! ஒரு வார்த்தை பேச மட்டும், ஒரு நொடியில் மறுத்து விட்டு..! நேசம் வைத்த நெஞ்சுக்கு, நெருப்பு வைத்து எரித்து விட்டு..! பாசம் மறந்து பறந்து விட்டாள், பாதி வாழ்க்கை முடியும் முன்பே...!! RK

#
Kalpana Subramaniam

என் இறந்த நாளில், கண்ணீர் வடிக்காதே..!" என்னை பிரிந்த நாளில் மட்டும், ஒரு மௌன அஞ்சலி செலுத்திவிட்டு போ..!! RK

#
Kalpana Subramaniam

நீயோ தொலைதூரத்தில்.. உன் நினைவுகளோ என் விழியோரத்தில்.. கண்ணீர்த் துளிகளாய்..!" என் நினைவை நீ சுமந்தால்.. உன் விழியில் நான் இருப்பேன்..!" கண்ணீர்த் துளிகளின்.. காய்ந்து போன காயங்களாய்...!! RK

#
Kalpana Subramaniam

போகிற போக்கில்.., ஒரு புன்னகை வீசுகிறாய்..! உயிர் பிழைக்க வேண்டி.., தலை கவிழ்ந்து கொள்கிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

உன் சிரிப்பில் கருகாமல், நெருப்பில் கருகியிருக்கலாம்..! காயம் தான் இருந்திருக்கும்..!" வலி, காலத்தால் இறந்திருக்கும்...!! RK

#
Kalpana Subramaniam

கண்கள் வாங்கிய வலிகளை, இதயம் சுமப்பதுதான் காதல்..! இதயம் சுமக்கும் வலிகளை, கண்கள் வெளியிடும் உணர்வுதான், கண்ணீர்...!! RK

#
Kalpana Subramaniam

உன் அன்பில், உயிர் வாழ்கிறேன்..! உன் வார்த்தையில், வண்ணமாகிறேன்..! உன் பார்வையில், என் பாதையை காண்கிறேன்..! உன் கோபத்தையும், குறைவில்லாமல் ரசிக்கிறேன்..! இன்று உன் பிரிவில், என் வலியை உணர்கிறேன்..! என்று உன் வருகை என, என் விழிகளை வழிகளில் வைத்து காத்திருக்கிறேன்..! காதலுடனும், கற்பனைகளுடனும்...!! RK

#
Kalpana Subramaniam

புன்னகையின்.. விலை என்னவோ.. புரியாத புதிர்தான்..! ஆனால், நீ புன்னகைக்கும்.. போதுதான் புரிகிறது.. புன்னகைக்கும்.. விலை உண்டு என்று...!! RK

#
Kalpana Subramaniam

என் அத்தனை காயங்களையும், ஒரு நொடியில் ஆற்றி விடும், உன் ஓரே ஒரு வார்த்தை, ஐ லவ் யூ டீ செல்லம்...!! RK

#
Kalpana Subramaniam

உன்னை துணையாக நினைத்தேன், என்னை தனிமையில் விட்டாய்..! உன்னை என் உயிராக நினைத்தேன், என் கண்கள் கண்ணீரில் வசீகரிக்கிறது..! உன் நினைவுகளை நினைத்தேன், என் இதயம் வலிக்கின்றது..! உன்னை மறக்க நினைத்தேன், உன் நினைவுகள் தடுக்கின்றன..! உன்னை வெறுக்க நினைத்தேன், என் இதயம் மறுக்கிறது..! உனக்காக சாக நினைத்தேன், நம் காதல் காப்பாற்றுகின்றது..! புரிகின்றதா உனக்கு..? என் உயிரே நீ தான் செல்லமே...!! RK

#
Kalpana Subramaniam

சுவாசிக்கும் போது தான், தென்றல் தெரியும்..! இரவு வரும் போது தான், நிலா தெரியும்..! பூ வாடும் போது தான், மணத்தின் அருமை தெரியும்..! வேலை தேடும் போது தான், படிப்பின் திறமை தெரியும்..! கடின உழைப்பின் போது தான், வாழ்வின் சுகம் தெரியும்..! ஆபத்து வரும் போது தான், நட்பின் ஆழம் தெரியும்..! உனக்காக உயிர் பிரியும் போது தான், என் உண்மை காதல் புரியும்...!! RK

#
Kalpana Subramaniam

என் வானத்தில்.. நிலவாய் நிற்பாய்.. என நினைத்து.. கொண்டிருக்கும்போதே.. நகர்ந்து சென்றாயடி மேகமாய்...!! RK

#
Kalpana Subramaniam

என்னவளே..! என் கண்ணிமையை வெட்டிவிட்டேன்..! உன் வருகையை கண் சிமிட்டாமல் பார்ப்பதற்கு..! அது தடையாய் இருப்பதால்...!! RK

#
Kalpana Subramaniam

உறங்கா வேளைகளில், நினைவுகளாக நீ..! உறங்கும் வேளைகளில், கனவாக நீ..! எழுதும் வேளையில், கவிதையாக நீ..! பேசும் வேளையில், குழந்தையாக நீ..! சிரிக்கும் வேளையில், பூக்களாக நீ..! இருக்க வேண்டும் கண்ணே...!! RK

#
Kalpana Subramaniam

உன் அழகிய காதல் காவியத்தில், நான் தலைப்பாக இருக்க கனா கொண்டேன், ஆனால் நீயோ என்னை அக்காவியத்தில், ஒரு சிறிய அங்கமாய் எழுதினாய். ~கார்த்திகா

#
கார்த்திகா மனோஹரன்

சட்டென்று தோன்றி மறையும் வானவில் போல அத்தனை அழகு நீயும் உனது எதிர்பாரா வருகையும்..!️

#
Karuppasamy

எனக்கானவளே..!! உன்னை முதல் முதலில் பார்த்தேன், அன்று முதல், என் நித்திரையை இழந்தேன்..! சில நேரம் வந்து செல்லும் உறகத்திலும், நீயே வருகிறாய் என்னை, சூடிக்கொள்ளும் பூமாலையாக..! நான் திரும்பும் திசை எங்கும் உன் முகம்..! நான் உன்னை தேடும் இடம் எல்லாம், உன் நினைவுகள்..! என் உயிரே..! வரவேண்டும் நீ மீண்டும், நித்திரையில் அல்ல, நிஜத்தில் என் வாழ்க்கை துணையாக...!! RK

#
Kalpana Subramaniam

விழிகளை மட்டும் விதைத்து விட்டு போனவளே..! விதையாய் வளர்ந்திருக்கும் உன் நினைவுகளின் வாசம், நித்தம் என்னை கொள்ளுதடி..! இரவு நேர கனவிலே, உன்னோடு உரையாட உறங்கினாலும், விழிகளுக்குள் உறக்கம் இல்லையடி..! என்னோடு நீ இல்லாத நாட்களும், என்னை ஏளனம் செய்யுதடி..! உன்னோடு என் வழிப்பயணம், என்னோடு தோள்சாய ஏங்குதடி...!! RK

#
Kalpana Subramaniam

உனக்காக உன்னோடு தொடங்கிய, என் வாழ்க்கை..! உன் கைகோர்த்து, உன்னோடு முடிய விரும்புகிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

சிற்பங்கள் கூட அழிந்து விடும் சிலையே..! உன் மீது நான் வைத்த காதல் மட்டும் அழியாது..! ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்...!! RK

#
Kalpana Subramaniam

நான் தேடாமல், என்னை தேடி வந்த, அழகிய உறவு நீ..! எனக்கு கிடைத்த, கடவுள் தந்த, வரமும் நீ..! உன்னை நீங்காத, நிலை போதும் இனி எனக்கு...!! RK

#
Kalpana Subramaniam

கடந்து விட காத்திருக்கும் நகரா என் இரவுகள்..! அதனூடே மௌனித்து கிடக்கும் கரையாய், என் நெஞ்சம்..! ஆக்ரோஷமாய் வருகிறாய், ஓங்கி அடிக்கும் அலையாய்..! இதயம் நழுவி, சொல்லாமல் பிரிந்து செல்கிறாய்..! சிதறிய நினைவு துளிகள், சித்தத்தில் கிளிஞ்சல்களாய் பரவி கிடக்க..! தனிமை சுகமாகிறது, நீளும் தூங்கா என் இரவுகளில்...!! RK

#
Kalpana Subramaniam

உலகத்தில் எல்லா இடத்திலும் தேடிப்பார்.. என்னை விட, உன்னை நேசிக்கும் ஒருத்தரை.. உன்னால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது...!! RK

#
Kalpana Subramaniam

நான் எதில் தொடங்கினேன் என, தெரியவில்லை..! ஆனால்.., நீயே என் முடிவு...!! RK

#
Kalpana Subramaniam

ஒரு நொடி பார்க்கும், உன் ஒற்றைக் கண் பார்வைக்காக, காலம் முழுவதும் காத்திருப்பேனடி..! உன் ஓரக்கண் பார்வையிட்ட நொடியில், என் மனதில் உள்ள பாவங்களும் பறந்தோடியது..! பார்த்தவுடன் பற்ற வைக்கும் உன் பார்வை, என் மனதில் காதல் தீயை, பற்ற வைத்து சென்றது..! மனதில் எரியும் என் ஒரு தலை காதல் தீயை அணைக்க, உன் மனதிலும் என்னை வைத்து, காதல் செய்யடி...!! RK

#
Kalpana Subramaniam

சண்டை என்றாலும் நீ தான்..! சமாதானம் என்றாலும் நீ தான்..! எது என்றாலும் நீ மட்டும் தான்..! என் அன்பு,ஆசை, கோபம், அனைத்திற்கும் சொந்தம்.., என்றும் நீ மட்டும் தான்...!! RK

#
Kalpana Subramaniam

நீ எனக்கு கிடைத்து விடுவாய், என்கிற நம்பிக்கையை விட.., நீ எனக்கு கிடைக்காமல் போய் விடுவாய், என்கிற பயத்தில் தான், உன்னை அதிகம் காதலிக்கிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

10 த்தில் உன்னை பற்றி கனா கண்டு, 20 வதில் உன்னை பார்த்து, 30 பதில் திருமணம் முடித்து, 40 பதில் நம்முடன் ஒருத்தி இருந்து, 50 பதில் ஒருத்தியை ஒருவனிடம் தந்து, 60 வதில் அறுவதாங்கல்யாணம் செய்து, 70 வதில் உலகை சுற்றி பார்த்து, 80 பதில் மீண்டும் காதல் செய்து, 90 களில் கைபிணைந்து நடந்து, 100 ரில் இறைவனடி சேர வேண்டுமையா!. ~கார்த்திகா

#
கார்த்திகா மனோஹரன்

அழகிய மதிய வேளை பூந்தோட்டத்தில் தொடங்க, எந்தன் கரத்தில் ஒரு அழகிய காதல் காவியமும் ஒரு சிவந்த ரோஜா மலரும் இருந்தது, என்னை சுற்றி செழிப்பான நருமுகைகள் பூத்துக் குலுங்க, ஆறுதல் தரும் தென்றல் என் தோலை வருட, என் மனதை அறிந்து கொண்ட ஒரு மழை துளி என் இதழில் சிம்மாசனமிட்டது, அந்த கணம் ஒரு கிசுகிசு சத்தம் என் செவியை எட்டியது, திரும்பி பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது, சுயம் பெற்ற நான் என் பணியில் மூழ்கி போகும் அக்கணம் வந்தான் அவன் இல்லை என்னவன், என்னவன் முகமூடி அணிந்து வந்தாலும் எனது விழிகளில் மாவீரன் போன்று தென்பட்டான், அவனை கூர்ந்து பார்த்த நான் அவனின் வில் போன்ற விழிகளை கண்டு விக்கித்துப் போனென், அவனின் நாமம் கேட்கும் தறுவாயில், கலைந்தது என் அழகிய காதல் கனா. ~கார்த்திகா

#
கார்த்திகா மனோஹரன்

சிலகாலம் மழையை ரசிப்பது போல் வெயிலை ரசிப்பதில்லை சிலகாலம் வெயிலை ரசிப்பது போல் மழையை ரசிப்பதில்லை மழையிலும் மாற்றமில்லை வெயிலிலும் மாற்றமில்லை ரசனையில் தான் ஏற்படுகின்றன பருவ கால மாற்றங்கள்!!!

#
Thiruppathi Thiru

எண்ணங்கள் பல கோடி.. அதில் உன் கலை வண்ணங்கள், சில கோடி..!" என் வார்த்தைகள் தடுமாறுதடி, உன் அழகான கன்னத்தாலடி..!" ஆயிரம் நிலவொளிபோலுள்ளதடி, என்னை மயக்கும் உன் கண்ணொளி..!" ரோசாப்பூவின் இதழடி, என்னை ஈர்க்கும் உன் உதட்டழகடி..!" காற்றில் கலக்கும் உன் பேச்சொலி, என்னைப் பாடவைக்கும் இசையடி..!" நீ சிணுங்கும் சிரிப்போ, சில்லறைச் சிதறலடி..!" கார்மேகக் கூட்டம் போலுள்ளதடி, உன் கருங்கூந்தலின் தோகையழகடி..!" நான் மாலை சூடப்போகும் உன் கழுத்தோ, நிறைகுடச் செம்பின் கலையழகடி..!" உன் நடையின் இடையழகோ, என்னை நிலைதடுமாற வைக்குதடி..!" மொத்தத்தில் உன் மேனியே மிகையழகடி..!" அதுதான் என்னை கவியெழுத வைக்குதடி...!! RK

#
Kalpana Subramaniam

️️கண்தானம்️️️️️️️️️️ செய்ய நினைத்தேன். முடியவில்லை️️️️ ️ இதயத்தை தானம் செய்ய நினைத்தேன் முடியவில்லை ஏனென்றால். கண்களால் தானே உன்னை திருடினேன் இதயத்தில் தானே பூட்டி வைத்திருந்தேன் அன்பே. நீ இருக்கும் வரை என்னால் எப்படி முடியும்

#
mani lakshmi

கருப்பு வானம் தானே ஈரமாக்கும் மண்ணை காதல் மட்டும் தானே சொர்க்கம் சேர்க்கும் நம்மை.. காதலித்து செத்தால் மரணம் கூட மதிப்பு மிக்கதாகும் ..

#
கவிஞர் வைமுதா

நிலவே..!! என் இதயம் துளிர்த்தது, உன் பணிவான பாசத்தால்..!" என் மனம் குளிர்ந்தது, உன் உதடு பூத்த புன்னகையால்..!" என் விழி மயங்கியது, நீ துணையாக வருவதினால்..!" என் உயிர் நனைந்தது, நீ கொடுத்த முத்தத்தால்..!" நான் மெய் மறந்தது, நீ அரவணைத்த அன்பால்..!" இவை அணைத்தும், என் உயிர் உள்ளவரை நிரந்தரமா...?? RK

#
Kalpana Subramaniam

திருமணத்திற்கு முன்.. சுமந்து விட்டேன்.. இதயக் கருவறையில்.. குழந்தையாக உன்னை..!! RK

#
Kalpana Subramaniam

நீ வந்து. என்னில் வாழ்ந்த.. நினைவுகள்.. மறந்து போனால்.., நான் வந்து.. இம்மண்ணில்.. வாழ்ந்த நிஜங்கள்.. அழிந்து போய்விடும்...!! RK

#
Kalpana Subramaniam

நம் காதலில்.. எனக்கு.. உன்னுடைய.. நிரந்தர பரிசு.. உன் நினைவுகள் மட்டுமே...!! RK

#
Kalpana Subramaniam

என் இதயத்தைக்.. காகிதம்போல் நினைத்து... அவள் காதலை எழுதினால்..! என் இதயத்தை.. முழுவதுமாய்.. படித்தவளும் அவளே..! என் இதயத்தை.. முழுவதுமாய்.. கிழித்து எரிந்தவளும்.. அவளே...!! RK

#
Kalpana Subramaniam

நீயில்லா விடியல்.., வானம் விடிந்ததே தவிர.., என் மனம்.., விடியவில்லை...!! RK

#
Kalpana Subramaniam

உன் கண்ணம் கிள்ளினால் நீ வளர்த்த இந்த ரோஜா நாணுகின்றதே உனக்கேதடி வெட்கம் என நகைத்தால் நான் என் செய்வேனடா உன்னிடம் என் நாணம் தோற்றுப்போய் ஆசை பொங்குகின்றதடா அன்பா...

#
Ilakkiya sri

அலைகளோடு பேசவா காற்றோடு பேசவா என்றால் மனம் உன்னோடு தான் பேசுகின்றது ஏன் தெரியுமா அன்பா அலைகளோடு பேசினால் மனம் உன்னிடம் வந்து வந்து மோதுகின்றது காற்றோடு பேசினால் மனம் அங்குமிங்கும் பறந்து செல்கின்றது உன்னோடு பேசினால் மனம் உன்னிடம் தஞ்சமாகின்றதடா...

#
Ilakkiya sri

நீயின்றி.. என் வாழ்க்கை.. முடியப்போவது இல்லை..! நீயின்றி.. வாழ்வு வந்தால்.. நான் இருக்கப்போவதில்லை...!! RK

#
Kalpana Subramaniam

கனவுகளின் பிறப்பிடம்.. காதல் என்றால்.. அக்காதல் பிறப்பிடம்.. எனக்கு.. உன் கண்களே...!! RK

#
Kalpana Subramaniam

காலத்திடம் தந்து விட்டேன்.. நாம் காதலை.. அது ஒரு நல்ல மருந்து.. நிச்சயம் தீர்த்து வைக்கும்.. நீ கொடுத்த வலிகளை...!! RK

#
Kalpana Subramaniam

கடினம் தான்.. ஆனாலும் சுகம்.. நீ வருவாய்.. என்ற நினைப்பே.. காத்திருப்பில்...!! RK

#
Kalpana Subramaniam

ஒரு சில நிமிடம் பேசிவிட்டு.. ஒவ்வொரு நிமிடமும்.. நினைக்க வைக்கிறாய்..! நினைத்துக் கொண்டிருக்கிறேன்.. நிமிடங்களாய் அல்ல.. நொடிகளாய்...!! RK

#
Kalpana Subramaniam

காதல் எவ்வளவு அழகானதே.. அதை விட மிகவும் ஆபத்தானது.. எந்த அளவு சந்தோஷத்தை தருகிறதோ.. அதை விட வலியையும் தரும்.. நிச்சயம் ஒருநாள்...!! RK

#
Kalpana Subramaniam

திரும்ப திரும்ப.. வருகிறது.. திரும்பிய.. இடங்களில்.. எல்லாம்.. உன் முகம்..! RK

#
Kalpana Subramaniam

திசையறியா பறவை போன்று நானும் திசை மாறி பறக்கின்றேன் நீ தந்த வலியால்...

#
Ilakkiya sri

தனிப்பட்ட அக்கறை கொண்டு பாதுகாப்பு பெட்டத்தில் வைக்கப்பட்ட தங்கம் புறத்தே எடுக்கும் எல்லா நேரங்களிலும் தன் வண்ணம் மாறாமல் மின்னுவது போல் தனிப்பட்ட அக்கறையுடன் வளர்க்கப்பட்ட நம் செல்வங்களும் அன்பினை அள்ளித்தந்து மகிழும்...

#
Ilakkiya sri

நிஜங்கள்..! கனவாக கலைகிறதே..! நினைவில்..! நான் வாழ்கிறேன்..! உன்னோடு...!! RK

#
Kalpana Subramaniam

தன் தனிமைக்காண துணையைத் தேடுவதல்ல, காதல்..!" தன் மனதின் வலிகளுக்கு மருந்தாய், ஒருவரின் அன்பை தேடுவது தான், காதல்...!! RK

#
Kalpana Subramaniam

நீண்ட தூரம் வந்த பிறகே எனக்கு தெரிகிறது..!" நான் விட்டு வந்தது உன்னை அல்ல, என்னை என்று...!! RK

#
Kalpana Subramaniam

கண் திறந்து பாரடி.. உன் விழித்திறக்க ஏங்குகிறது என் மனம்..!" இமையை மூடி உனக்குள் இருக்கும் என்னை..!" நீ மறைக்காதே...!! RK

#
Kalpana Subramaniam

என் வாழ்க்கையில்.. ஒவ்வொரு நாளையும்.. அழகாகவும்.. அர்த்தமுள்ளதாகவும்.. மாற்றித்தந்த என் உயிர்.. நீ மட்டும் தானே அன்பே...!! RK

#
Kalpana Subramaniam

வழி தெரியாமல் தவிக்கிறேன்.. வழித்துணையாய் வருவாயா..? அல்லது.., வாழ்க்கை துணையாக வருவாயா..? சொல்லடா என் அன்பே...!! RK

#
Kalpana Subramaniam

முன்ஜென்ம காதல் ஒன்று, முன்னிரவு தோன்றிவிட, நீ செய்த காயத்திலே, என் நெஞ்சம் கனக்குதடி..!" காயங்களின் வலி போக்க, மாயங்கள் ஏதும் இல்லை..! நீயில்லா என் வாழ்க்கை, சாயங்கள் போனதடி..!" இதயத்தின் மையம் தேடி, வந்திறங்கிய வாளோன்றால்..! என் அகிலத்தின் அத்தனையும், மொத்தமாய் உடைந்ததடி..!! உடைந்துப் போன மனதைக் கூட, ஒட்ட வைக்க வழிகள் உண்டு..! நீ கடந்துப் போன பிறகு, அது தூள் தூளாய் ஆனதடி..!" தூசிப் பட்ட விழிகள் என்று, என் கண்ணீரை மறைத்துவிட்டேன்..! பாசி படர்ந்த என் மனதின் ஓரம், உன் நினைவுகள் வழுக்குதடி..!" உன்னைப் போல் காதலிக்க, இவ்வுலகில் யாரும் இல்லை..! வேறுலகம் சென்று விட்டால், அவ்வுலகம் துரத்துதடி..!" நீ சொன்ன வார்த்தைகள் எல்லாம், காற்றோடு கரைந்ததடி..! என் கனவின் முதல் காட்சிக் கூட, உன்னில் இருந்தே தொடங்குதடி...!! *நினைவின் வலிகளாய்* RK

#
Kalpana Subramaniam

நான் உனக்கு சாபமாகவே, இருந்து விட்டு போகிறேன்..! ஆனால்.., என்றும்... நீ எனக்கு வரமே...!! RK

#
Kalpana Subramaniam

உன் வழிவரும்வரை, என் விழிப்பார்வைக்கு, காத்திருந்த நீ.,! இன்று விழிமேல் வழிவைத்து காத்திருந்தும், வேலையின் பெயர் சொல்லி, என்னை காக்கவைப்பதேன் காதலா...?? RK

#
Kalpana Subramaniam

உன் வார்த்தைகளால் காயப்பட்ட என் இதயத்தை, உன் நினைவுகளால் வதைக்காதே..! எனக்கு இருப்பது என்னவோ, ஒரு இதயம் தான்..! என்னை காயப்படுத்திவிட்டாய், நான் பொறுத்துக் கொள்வேன்..! என் உணர்வுகளை காயப்படுத்தாதே, அவற்றிற்கு பேசத்தெரியாது...!! RK

#
Kalpana Subramaniam

ஒரு நொடியில் கூட, உன்னை பிரிய மறுக்கின்றேன்..! ஒரு நாழிகை கூட, உன்னில் தனித்துவாழ விரும்பவில்லை..! என் கண் சிமிட்டும் நேரத்தையும் தவிர்க்கின்றேன், என் இமை உன்னை காண்பதற்காக...!! RK

#
Kalpana Subramaniam

மனதில் நீ..! உயிரில் நீ..! உதிரத்தில் நீ..! எல்லாமே உன்னோடு..! என் மரணத்தை தவிர..!! RK

#
Kalpana Subramaniam

இதயத்தை தொலைத்துவிட்டு தேடினேன், கிடைக்கவில்லை..! இதயமே என்னை தேட தொடங்கியது..! உன் காதல் வந்தபிறகு...!! RK

#
Kalpana Subramaniam

தேடும்பொழுது கிடைக்கவில்லை.. கிடைத்தபோது என் தேடல் இல்லை.. மறந்து வாழும் நிலை எனக்கு.. உன் நினைவுகள் மட்டும் மறக்கவில்லை...!! RK

#
Kalpana Subramaniam

விழிகளில் ஒரு வானவில்..! விழியசைவில் வியந்து போனேன்..! மொழிகளில் என்னை வியர்க்க வைத்தாய்...! உன் இதழ்களின் இன்னிசையில், என்னுள் எத்தனை எத்தனை இம்சையடி..! கன்னி உந்தன் கவர்ந்துவிட்ட காதல் தனில், இழந்துவிட்டேன் என்னை நானே...!! RK

#
Kalpana Subramaniam

தொலை தூரம் நீ இருந்தாலும்.. என் சந்தோசத்தை பகிர்ந்திடவும்.. கவலையில் தோள் சாய்ந்திடவும்.. தவறாமல் என்னுள்ளே வருகை தருகிறாய்...!! RK

#
Kalpana Subramaniam

நிஜத்தோடு அல்ல.. உன் நிழலோடு.. உன்னோடு அல்ல.. உன் நினைவுகளோடு தொடரும்.. என் காதல் பயணம்.. நீ வருவாய் என...!! RK

#
Kalpana Subramaniam

இன்னும் ஒரு முறை, என்னை திரும்பி பார்..!" நீ என்னை விட்டு தூரமாக செல்லும் முன்பு, அந்த காதலான பார்வை போதும்..!" நீ வரும் வரை, எப்பொழுதும் உன்னை என் நினைவுகளில் சுமக்க...!! RK

#
Kalpana Subramaniam

உறவுகள் யாவும் பகையானது..!" உன் நினைவுகள் எனக்கு, உறவானது...!! RK

#
Kalpana Subramaniam

உன் கண்களை, நேராகப் பார்த்து பேசும் சக்தி எனக்கு இருந்தால், உன்னுடைய அனைத்து குழப்பங்களுக்கும், என்றோ விடை தெரிந்திருக்கும்...!! RK

#
Kalpana Subramaniam

நாம் காயப்படுத்திய பின்னும்.., நாம் நேசிப்பவர்களின் அன்பு அழகாக தான் இருக்கும்...!! RK

#
Kalpana Subramaniam

உன்னை பற்றி எழுதி, அதை ரசிப்பதும், அழகாக தான் இருக்கிறது.. என் கனவு காதலில்...!! RK

#
Kalpana Subramaniam

இரவு பகல் என பூமிக்கு ஒர் நாளில்.... இரு முரை வருவது போல் நீ ..... என் வாழ்வில் ஒரு முறையாவது வர மாட்டாய என எங்கும் மணம்......

#
மூன்றாவது மனிதன்

சாரலுக்கும் உன் மேல் காதலிருக்கும் சொட்ட சொட்ட நனைத்திட காத்திருக்கும்.. மின்னலுக்கும் உன் மேல் மோகமிருக்கும் படம் பிடிக்க உன் பின்னே அலைந்திருக்கும்.. சிமிட்டும் நட்சத்திரமாய் உன் சிரிப்பிருக்கும் சிமிட்டாத நிலையில் என் விழியிருக்கும்.. மயக்க நிலையிலே என் மனமிருக்கும் அதில் தித்திக்கும் செந்தேனாய் உன் முகமிருக்கும்.. சேலையில் உனதுருவம் செழித்திருக்கும் விழி செதுக்கிய சிலையை கண்டிருக்கும்.. இழுத்திடும் காந்தமாய் உன் படைப்பிருக்கும்.. மனம் இயல்பாய் இணைந்திட காத்திருக்கும்..

#
அன்புடன் ரவி

என்னுள் இருக்கும் உன் நினைவுகள் வெறும் வார்த்தையால் வந்தது இல்லை உதிரத்தின்சாட்சியாய் வந்த நினைவுகள் ... SB

#
SK

எனக்காக நீ அல்ல.. உனக்காக நான் அல்ல.. நமக்காக.. என்று சொல்ல வைத்தது.. உன் கண்கள்...!! RK

#
Kalpana Subramaniam

கண்களை வாங்கிக்கொள்ள மறுக்கிறவள், காதலியாகிறாள்..!" கண்களை வாங்கிக்கொண்டு, உன்னைப்போல், கண்கள் தருகிறவள்தான், தோழியாகிறாள்...!! RK

#
Kalpana Subramaniam

பெயரில் பாதியும் உயிரில் பாதியும் நீயென்றான பின் நானென்பது இனி நீதான். SB

#
SK

ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய அழகிய கவிதை என்னவள்.. SB

#
SK

It's not just letters.. it's also my heartbeat...

#
Vellai Arcot

இதில் இருப்பது எழுத்துக்கள் மட்டும் அல்ல என் இதய துடிப்பும் தான்

#
K Giri (Haritha)

It's not wrong to like everything you see, it's wrong to desire everything...

#
Vellai Arcot

I don't write... I carve. Poem for you... in my heart...

#
Vellai Arcot

கதவு ஜன்னல்களை இறுக மூடிவிட்டுத்தான், கண்ணயர்ந்தேன்..! அதையும் தாண்டி உதைக்கின்றன, உண் ஞாபகங்கள்..! உறங்காமல் நான்..! உறங்கவிடாமல் நீ...!! RK

#
Kalpana Subramaniam

பூவே உனக்காக... தென்றலை வீசுவேன் உன் அன்பை உணர்ந்தாள் துள்ளாத மனமும் துள்ளும்... என் நெஞ்சை கசக்கிய என் பிரியமானவளே... காதலுக்கு மரியாதை... தந்த தென்றலே... பிரியமுடன் நான்

#
ரிஷிபாலா

உன் காதோடு வாழும் காதணி போல்..... உன்னோடு காலந்தோறும் வாழ நான் காத்திருப்பேன்...

#
மூன்றாவது மனிதன்

விழிகள் கண்டதும்..... உளிகள் வைத்து.... ஒலிகள்‌ எழுப்பி.. செதுக்கிய என் கவிதை சிற்பம் நீ...

#
மூன்றாவது மனிதன்

உரைந்த உதிரத்தில் உரையாத என் உரவாடல் நீ...

#
மூன்றாவது மனிதன்

நாம் ஒருவரை உண்மையாக நேசிக்கும் போது பிரிவு ஒன்று ஏற்படும் உண்மையான அன்பு எப்போதும் மனதில் மறைத்து வைத்து பேசத் தெரியாது. அவர்கள் பிரிந்தாலும் நினைவுகள் ரொம்ப அழகானது உன்மை காதல் எப்பவும் நினைவுகளை மட்டுமே சுமக்கும்.... DS

#
SK

கணவனான பின்னும்.. காதலனாய்.. மின்னுகிறாய்.. என் கனவிலும்...!! RK

#
Kalpana Subramaniam

பிடிக்காத கவிதை போல, என்னை கசக்கி எறிந்து மறக்கிறாய்..!" குப்பை தொட்டி கூட, எனக்கு சொர்க்கம்தான்.. உன் விரல் பட்டு விழுந்ததால்...!! RK

#
Kalpana Subramaniam

உன் இதயத்தில்.. என் உள்ளம் தோன்றும்..!" உன் கண்களில்.. என் உயிர் மலரும்..!" உன் சிரிப்பில்.. என் உள்ளம் மலரும்..!" உன் பெயரில்.. என் உயிர் வாழும்...!! RK

#
Kalpana Subramaniam

உன் பார்வையில்.. என் மீது.. காதல் அருந்தும்..!" உன் பெயரில்.. என் உயிர்.. பெருமையுடன் வாழும்...!! RK

#
Kalpana Subramaniam

உன் காதல் இருந்தால்.. என் உள்ளம்.. பொலிவுடன் வாழும்..!" உன் மனதில்.. நான் இருந்தால்.. உன் உள்ளம் மிகையிடும்...!! RK

#
Kalpana Subramaniam

உன் நினைவில்.. என் உயிர் வாழும்.. உன் கனவில்.. என் மனம் மெய்யும்...!! RK

#
Kalpana Subramaniam

கிடைப்பது நீயாக இருந்தால் இழப்பது எதுவாக இருந்தாலும் சம்மதம்.

#
Karuppasamy

அட்டை ஒட்டிக்கொண்டால் இரத்தத்தை உறிஞ்சுகிறது அத்தான் கட்டிக்கொண்டால் ஆசை பெருகுது .....

#
Karuppasamy

உன்னை காதலிக்கிறேன் என்பதை தவிர வேறு என்ன பெரிய அழகிய கவிதை இருந்துவிட போகிறது என்னிடத்தில் !

#
Karuppasamy

காதல் மனதில் வந்ததுமே .. ஊற்றாக விழியில் வழிந்திடுமே.. வழியும் ஊற்றை பகிர்ந்ததுமே செந்தேனாய் இனிக்க செய்திடுமே.. உன் மேல் காதல் கொண்டதுமே கையில் பூவுடன் நின்றிடுமே.. என்னவன்(ள்) என்பதை உணர்ந்ததுமே மண்டியிட உன்னையும் தேடிடுமே..

#
அன்புடன் ரவி

கண்மணியே ️️, இயற்கையை நீ ரசித்து கொண்டு இருக்கிறாய் என்று நீ நினைக்கிறாய் ஆனால் அந்த இயற்கை தான் உன்னை ரசித்து கொண்டு இருக்கிறது என்பதை நீ அறியவில்லை.........

#
Sriram Sivaramachandran

உன்னைக் கண்டவுடNன்.. புரிந்தேன்.. நீ என்னவள் என்று..! ஆனால் நீ, என்னைக் கண்டவுடன்.. திரும்பிக் கொண்டாய்.. எவனோ என்று..!! RK

#
Kalpana Subramaniam

வெள்ளை வண்ணத்தில் மின்னும் மின்னலே.. விழியுன்னை காணும் முன்னே விழி மூட செய்ததேனோ? மூடிய விழிகள் விழிக்கும் முன்னே இடம் பெயர்ந்து போனதேனோ?. ஒளிரும் நிலவாய் சிரிப்பை காட்டி பார்பவர் மனதை மயக்கியதேனோ..? எட்டு மடிப்பு சேலையின் அழகில் எனை வீழ்த்தி போனதேனோ..? சிற்பி செதுக்காத சிலைப் போல் என்னை மாற்றிவிட்டு சென்றதேனோ..???

#
அன்புடன் ரவி

காலம் கடந்து போனாலும் நேசம் கரைந்து போகாது மென்மேலும் நேசம் பொங்கி வழியும் கடலாகி...

#
Ilakkiya sri

கண்ணீர் துளிகளில் அன்பு எனும் முத்துக்கள் விழுவதால் பலர் தம் கொள்கைகளை துறந்து கண்ணீர் துடைக்கின்றனர்...

#
Ilakkiya sri

புத்தகம் படிக்க நினைக்கயில் உன் நினைவில் படிக்க மறுக்கிறது எந்தன் மனம் ஏனடா என்னை சித்ரவதை செய்கிறாய் அன்பா...

#
Ilakkiya sri

உன் கால் கொலுசின் ஓசை கேட்கவில்லை எனில் பூமியும் வலி தாங்காமல் நடுக்கம் கொள்ளுமடி...

#
Ilakkiya sri

உன்னைக் கண்ட பின் எனக்கு மையிட வேண்டும் உதட்டுக்கு சாயம் இட்டு சிகையை அலங்கரிக்க வேண்டும் என்று தோன்றுகின்றதே அன்பா இவ்வளவு எழில் கொண்ட உன்னைக்கண்டால் எனக்கே நாணம் வருகிறது அதற்கு தானே இத்தனை ஒப்பனையடா அன்பா...

#
Ilakkiya sri

மாராப்பு விலகியதில் மோகம் கொண்டு கொங்கையின் எழில் கண்டு மயங்கியவன் மீண்டு எழவில்லை என வதனம் காட்ட மறுத்தது புரியவில்லையா அன்பா...

#
Ilakkiya sri

அன்பா எங்கு சென்றாலும் விடாமல் துரத்துகின்றாய் நானோ விலகிச்சென்றாலும் நீ விடுவதாக இல்லை என் மனம் ஏனோ உன் வசமாகி தவிக்கின்றது இதோ இந்த நீரோடையில் கைகளை நனைத்து சிரிக்கின்றேன் உன்னை நினைத்து என்றைக்கு பைத்தியக்காரி பட்டம் அளிப்பார்களோ...

#
Ilakkiya sri

தத்தளிக்கும் இதயத்தில் காமம் குடி கொண்டதோ கண்களின் போதை கண்டு மயங்கியவன் எழுவது சிரமமோ உன்னிடம்...

#
Ilakkiya sri

நீ வருகையில் எல்லாம் என் காதணியின் அழகில் ஆசை கொண்டு சீண்டி விட்டுச்செல்வாயே இன்றோ நீ கடுக்கன் அணிந்து வந்து அழகை ரசிக்க வைத்தாயடா அழகனே...

#
Ilakkiya sri

கானகம் வந்தாயோ வேடுவன் மனையாளே தாங்கொணா தாகம் தணிக்க நதியிலே நீர் பருக வந்தாயோ மான் போன்று உதடுகளை குவித்தாயோ உன் வதனம் களையிழந்து தவிக்கின்றதே பார்த்தாயா எங்கள் மீது கொண்ட அன்பு என நாங்கள் அறிய மாட்டோமா எங்களைக்காக்க உன் மணவாளனிடம் சொல்லடி எங்களை வேட்டையாட வேண்டாம் என நாங்களும் கானகத்தில் கொஞ்சம் ஓய்வெடுப்போமே என்றன மான்கள்...

#
Ilakkiya sri

என் கார்கூந்தலில் ஆசை கொண்டு வருடி மயக்கம் கொள்கிறாயே அழகு நிலையத்தில் அழகு படுத்திய கூந்தலைக் கண்டு ரசிக்கின்றாயே என்று சொல்ல அவனோ நகைத்து கண் சிமிட்ட இருவரும் அன்பில் கரைந்தோம்..

#
Ilakkiya sri

அன்பா உன் கரங்களின் மென்மையை உணர்கையில் சினம் கொண்ட என் விழிகள் மலர்களின் இதழ்களை விட மென்மையாகி விடுகின்றன ...

#
Ilakkiya sri

அன்பா கைகளில் சுமந்து இருக்கும் கனிகளை சுவைக்காமல் என்னை ஓவியம் தீட்டி ரசிக்கின்றாயடா...

#
Ilakkiya sri

உன் பாதங்களில் தீட்டப்பட்ட வண்ணம் நீரில் கலைந்து விடக்கூடாதென உன் மென்மலர் பாதங்களை நனையாமல் தாங்கிக் கொள்கின்றதோ தாமரை இலைகள்...

#
Ilakkiya sri

அன்பா தினமும் மாலையில் என்னோடு நதியிலே கால் நனைத்து விளையாடி என் கூந்தலுக்கு மலர்கள் சூட்டி பொட்டில்லா என் வதனம் காண ஆசையுடன் நீ வருவது ஷாஜகான் மும்தாஜ் மஹால் நினைவாக கட்டிய தாஜ்மஹாலை விட மேலானது அன்பா..

#
Ilakkiya sri

நித்திரை கொள்ளாத நினைவுகள் மலர்களை நாடி வரும் வண்டுகள் ரீங்காரமிடுவது போல் வந்து வந்து மோதும்...

#
Ilakkiya sri

கவலையான சுழலில் உன் காதல் எனக்கு அருமருந்தாய் சஞ்சலம் நீக்கி விடும் அன்பா...

#
Ilakkiya sri

இம்மலர் மலர்ந்து வாசம் தந்தாலும் வாசம் நுகர துணை மலர் இன்றி தவிக்கின்றதோ...

#
Ilakkiya sri

தூண் அருகே நிற்க்கும் அவளுக்கு தானாகவே வந்து விடுகிறது மாளிகையின் அழகு

#
சரவணன்

கண்களில் தொடங்கி.. கல்லறையில் முடிகிறது.. உண்மை காதல்..! புன்னகையில் தொடங்கி.. நடை பிணமாக முடிகிறது.. ஒரு தலை காதல்...!! RK

#
Kalpana Subramaniam

என் மனம் உன்னை ....அளவிற்கு அதிகமாய் நேசித்ததினால்.....உன் மேல் தன் உயிரை விட உயர்வாய் நேசிக்கிறேன்

#
Kavitha Kesavan

காதல் என்ற மூன்று எழுத்தில் அடங்கியது ....மனிதனின் கொண்டாட்டம்..... காதல் இல்லையேல் ஏது ஆட்டம்...... காதல் பொய் என்றால் ..எடுப்பான் ஓட்டம்

#
Kavitha Kesavan

கண்ணீர் துளிகள், விஷேசமானது தான்.. புன்னகையை, யாருக்கும் அளிக்கலாம்.. கண்ணீர்த்துளிகளை, அன்பானவர்க்கு மட்டுமே, உதிர்க்க முடியும்.. உன் மணத்திற்காய் இன்று நானும்.. என் மரணத்திற்காய் நாளை நீயும்...!! RK

#
Kalpana Subramaniam

சித்திரம் வியந்திட.. சிலையென சிறையிட.. முடியாத வர்ணங்கள் வரைந்த.. உயிரோவியம் அவள்...!! RK

#
Kalpana Subramaniam

நீ தூங்க.. சிறந்த இடம்.. என் இதயம் என்றால்.. உனக்காக.. என் இதய துடிப்பையும்.. நிறுத்தி வைப்பேன்.. நீ விழிக்கும் வரை...!! RK

#
Kalpana Subramaniam

என் காதலுக்கு முழு அர்த்தம் நீ தான். என் பெயரில் உன் பெயர் இணைத்த அந்த கடவுள். நீ என் இதய துடிப்பாக வாழ்கிறாய். SB

#
SK

என்னை கண்டவுடன்.. எனக்காக உன் உயிரை.. தருவாயா என்று கேட்டு விடாதே..? தருவேன் நிச்சயம்..! நீ.. அடுத்த ஜென்மத்தில்.. என்னை காதலிப்பாய்.. என்று சத்தியம் செய்..! உயிரையே தருவேன்.. உன்னை காதலிக்காத.. உயிர் இருந்தென்ன லாபம்..? RK

#
Kalpana Subramaniam

காதல் சொல்ல வார்த்தைகள் வேண்டாம் காதல் சொல்ல வர்ணனை வேண்டாம். காதல் சொல்ல கடிதங்கள் வேண்டாம் உன் ஒற்றை பார்வை ஒன்றே போதுமடி. SB

#
SK

மண்ணில் நீரை தேடி.. பரவும் வேரை போல.. உனது இதயத்தை.. தேடி பரவுகின்றன.. கவிதை வழியாக.. எனது காதல்...!! RK

#
Kalpana Subramaniam

தாமரை இலை.. தண்ணீர் போலதான்.. என் காதலும்.. உன்னுள் நான்.. சேராவிட்டாலும்.. என்னுள் தான்.. நீ.. வாழ்ந்து வருகிறாய்...!! RK

#
Kalpana Subramaniam

நீ எனைப் பிரிந்து இருக்கும் நாட்களில் எல்லாம், வெகு சீக்கிரத்தில் தூங்கப் போய்விடுகிறேன்..! ஏனெனில்..., கனவினில் உன்னோடு சேர்ந்திருக்க, வேண்டும் என்பதற்காக..!! RK

#
Kalpana Subramaniam

நீ என் கண்ணுக்குள் இருப்பதால்.. என்னுள் இருந்து கண்ணீர் வருவதில்லை..! என் கண்களிலிருந்து கண்ணீர் வருகையில்.. நீ என்னுள் இருப்பதில்லை..!! RK

#
Kalpana Subramaniam

காத்திருக்கும் கண்களுக்கு வியர்த்துப் போனால், அது கண்ணீர்..! காத்திருக்கும் கண்கள் கவிதை பாடினால், அது காதல்..! இந்த இரண்டையும், ஒரு சேரக் கொடுத்தவளும் நீ..! கொடுத்துப் பிரிந்தவளும் நீ..!! RK

#
Kalpana Subramaniam

ஆயிரம் மெகா வாட்ஸ் மின்சாரத்தை கண்களில் வைத்துக் கொண்டு இரவில் விளக்கேற்ற தீக்குச்சி தேடுவாள் கள்ளி..!

#
Karuppasamy

மனம் உருகப் பேசியவனின்.. மனதைப் புரிந்து கொள்ள முடியாததால்.. மனமுடைந்துப் போனேன்.. மலரும் நினைவில்.. நிஜமில்லா நிழலைக் கண்டு...!! RK

#
Kalpana Subramaniam

ஒரு முதியவரை ஏற்றிச்செல்ல மறுக்கிற என் மிதிவண்டி., விழியில் கண்ட உண்னை ஏற்றிச்செல்ல என் மனம் ஏங்குதடி.! மேட்டுப்பட்டி அ.இராசா

#
Raja Raja angappan

எழுதவில்லை.. செதுக்குகிறேன்.. உனக்கான.. கவிதையை.. என் இதயத்தில்..!! RK

#
Kalpana Subramaniam

என் கண்களுக்கு.. நீ காட்டிய.. அழகை விட.. என் உள்ளத்துக்கு.. நீ காட்டிய.. அன்பே உயர்ந்தது...!! RK

#
Kalpana Subramaniam

நினைக்கும் போதெல்லாம், என் கவலையை போக்கவும், என்னை சிரிக்க வைக்கவும், எதிரில் வந்து நின்றவன் நீதான்...!! RK

#
Kalpana Subramaniam

ஆயிரம் பிரிவு வந்த போதிலும், முதலும், முடிவும், நீயாக வேண்டுமடி..!" நான் உனதாக வேண்டுமடி...!! RK

#
Kalpana Subramaniam

குளிர் காலத்தில்.. நான் வாடினால்.. உன் பார்வைதான்.. என் போர்வையோ...!! RK

#
Kalpana Subramaniam

உனக்காகவே.. என் வாழ்க்கை என்று.. நீ சொன்னபோது தான்.. என்னை எனக்கே.. பிடித்தது..!! RK

#
Kalpana Subramaniam

காதல்.. சிலருக்கு.. கண்ணீரீன் காவியம்‍.. பலருக்கு.. அழகிய ஓவியம்..!! RK

#
Kalpana Subramaniam

முடியாத பயணம்.. நான் தொடர வேண்டும்.. உன் கரம் பிடித்து..!! RK

#
Kalpana Subramaniam

என்னில் ஒரு கனவும்.. என்னில் ஒரு நினைவும்.. உனக்கு மட்டுமே சொந்தம்.. ஆயுள் முழுவதும்.. உன் இதயத்தில் சரணடைவேன்.. என்றென்றும்.. உன் அன்பு காதலாக...!! RK

#
Kalpana Subramaniam

தேவதைகள் எல்லாம் வானில்தான் நடக்க வேண்டும் என்றில்லை.. வீதியிலும் நடந்து போகலாம்!

#
Karuppasamy

விலையுயர்ந்த வாசனை திரவியம் கூட தோற்று போய்விடும் உன் பின்கழுத்து வாசனையில்

#
Karuppasamy

பறிக்கப்படாத பூக்கள் மண்ணில் மலர்ந்தோ அழகு வண்ணன் அவன் சோலையில் கன்னி இவள் கூந்தலில் சூட்டி விட ...

#
Ilakkiya sri

மாலை பொழுதில் சில்லென்ற மழைத்தூரலில் நனைந்த மயில் மையல் கொண்டு தோகை விரிக்க சிதறிய மழைத்துளிகள் பெண்மயிலின் மேல் விழ பரவசமடைந்து ஆண் மயிலின் அருகே வர இருமயில்களும் ஆனந்தக்கூத்தாடியது ...

#
Ilakkiya sri

கண்கள் திறந்த காலை என் கண்கள் மெல்ல விரிய என்னவன் கண்ணங்களை கிள்ளி என் இதழ்களை நனைக்க என் நாசிகள் மணம் நுகர என்னவன் தேநீரோடு என் கரம் பற்ற என்ன மணமடா இத்தேநீர் உன் அன்பு கலந்த இத்தேநீரின் மணம் எந்த தேயிலை தோட்டத்திலும் காண இயலாத நறுமணம் அன்பா...

#
Ilakkiya sri

புதினங்களை ஆவலுடன் படிக்கும் நான் என்று உன்னைக்கண்டேனோ என் புதினங்களின் சுவை அதிகரித்தது ஏன் தெரியுமா வரிகள் ஒவ்வொன்றிலும் நாயகனாய் நீ இருப்பதால் அன்பா ...

#
Ilakkiya sri

தனிமையை விரும்பும் போது இசை எனும் நதியினிலே மனம் நீந்தி கரை சேர இயலாமல் தவிக்கின்றது...

#
Ilakkiya sri

நித்திரை கொள்ளாத நினைவுகள் வண்டுகள் மலர்களை நாடி ரீங்காரமிடுவது போல் வந்து வந்து மோதும்...

#
Ilakkiya sri

அன்பா தினமும் மாலையில் என்னோடு நதியிலே கால் நனைத்து விளையாடி என் கூந்தலுக்கு மலர்கள் சூட்டி பொட்டில்லா என் வதனம் காண ஆசையுடன் நீ வருவது ஷாஜகான் மும்தாஜ் மஹால் நினைவாக கட்டிய தாஜ்மஹாலை விட மேலானது அன்பா...️

#
Ilakkiya sri

உன் பாதங்களில் தீட்டப்பட்ட வண்ணம் நீரில் கலைந்து விடக்கூடாதென உன் மென்மலர் பாதங்களை நனையாமல் தாங்கிக் கொள்கின்றதோ தாமரை இலைகள்...

#
Ilakkiya sri

என் காதலில் உனக்கு தெரிவது அன்பு..!" உன் காதலில் எனக்கு தெரிவது அரவணைப்பு..!" நம் இருவர் காதலிலும் நமக்கு தெரிவது உண்மையான நேசம்...!! RK

#
Kalpana Subramaniam

உன்னிடம் பேச நினைத்தேன், வார்த்தை மௌனமானது..!" உன்னிடம் பேசாமல் இருந்தேன், வாழ்வே மௌனமானது...!!

#
Nila kanmani????????❤‍????

என் கண்களுக்கு.. நீ காட்டிய அழகை விட.. என் உள்ளத்துக்கு.. நீ காட்டியே அன்பே.. உயர்ந்தது...!! RK

#
Kalpana Subramaniam

உன்னிடம் பேச நினைத்தேன், வார்த்தை மௌனமானது..!" உன்னிடம் பேசாமல் இருந்தேன், வாழ்வே மௌனமானது...!! RK

#
Kalpana Subramaniam

விடியற்பொழுதில் வெளிச்சம் பரவுவதை போல்.., உன் வருகை பொழுதெல்லாம்.., காதல் அன்பு பரவி, அழகாகிறது என் உலகம்...!! RK

#
Kalpana Subramaniam

உன் புன்னகை.. என் ஊகம்.. உன் கண்ணீரில்.. என் துக்கம்.. என் ஊன் உடல்.. அழிந்தாலும்.. உயிர்.. என்றென்றும்.. உன்.. பக்கம்.... RK

#
Kalpana Subramaniam

நான் சொல்வதை எல்லாம் செய்தாக வேண்டும் என்ற, கட்டளைகள் இல்லாத காதல், அழகானது...!! RK

#
Kalpana Subramaniam

நீ தூங்குகிறாய்..! எல்லா அழகுகளுடனும்..! உன் கண்களை மூடியிருக்கும் இமைகளில் கூட.., எனக்காக விழித்திருக்கிறது உன் அழகிய காதல்...!! RK

#
Kalpana Subramaniam

கண்ணை நம்பாதே என்று கவிஞன் தவறாக பாடினான் பெண்ணை நம்பாதே என்று பாடினால் அவளுக்கு பொருந்தும் Jnis@ kilai

#
J.Mohamed Nisthar

காலமெல்லாம் உன் காலடியில் என்று நினைத்தேன் .நிஜம் தான் காலமெல்லாம் உனது காலடியில் என உனர்ந்தேன் J.nisthar @ Kilai

#
J.Mohamed Nisthar

கவிதை எழுத கற்பனை தந்தாய்.. சுவாசிப்பதற்கு உன் நினைவு தந்தாய்.. சிறகு இல்லாமல் பறப்பதற்கு கனவு தந்தாய்.. உணர்வுகளை பரிமாற இதயம் தந்தாய்.. காதலிப்பதற்கு அன்பு தந்தாய்.. காதல் உயிர் வாழ புன்னகை தந்தாய்.. நான் கல்லறை செல்ல, பிரிவு என்னும் வலி தந்தாய்...!! RK

#
Kalpana Subramaniam

இவள் அழகில் ஊர்வசியையும் மிஞ்சுவாள் இவள் அழகைக் ஊர்வசியும் கெஞ்சுவாள் கடனாய்......

#
காளையத் தமிழன்

அள்ளி அள்ளி அனைத்து மகிழ்ந்தாலும்.., அனைத்தும் கொடுத்தாலும்.., இறுதியில் அன்னையை தேடும்.., சிறு குழந்தையை போல்.., உன்னையே தேடுகிறது என் மனது...!! RK

#
Kalpana Subramaniam

உன் புண்ணகை மொழியால் நானூம் உரைந்து போனேன் பனிப்பாறையாய் எப்போது வருவாய் சுடர் ஒழியாய் என் மீது அன்பை பொழிய....

#
காளையத் தமிழன்

அடியே நானூம் எழுதுகிறேன் எழுதுகிறேன் எனக்கு கை வழிதான் வந்தது உனக்கு என் காதல் வழி புரியவில்லையே நானே மாறுகிறேன் எழுது கோலாய்........

#
காளையத் தமிழன்

கவிதையில் எல்லாம் சொல்லிவிட முடியாத உன் காதலை, உன்னோடு இருக்கும் போது, உணர்கின்றேன்..!" இது உனக்கே உண்டான ஒன்று...!! RK

#
Kalpana Subramaniam

தேகம் விட்டு ரத்தம் போனாலும், என் நெஞ்ச்சை விட்டு, உன் பின்பம் போகாது...!! RK

#
Kalpana Subramaniam

அதோ கடலின் அலைகளிலே மூழ்கி மூழ்கி நீராடி என்னையே மறந்து இருக்கும் இவனுக்கு காகிதத்தில் கப்பல் செய்து அனுப்பினேன் கப்பலோ அவனைத்தொட நான் என நினைத்து திரும்பி பார்க்க அவன் அன்பில் கரைந்தேன்...

#
Ilakkiya sri

உன்னைப் பார்த்து பேசிடும் ஆசையில் உன்னைத்தேடுகையில் என் வளையலின் சத்தம் கேட்டு நீ ஓடி வந்து என் எதிரே நிற்க என்ன பேசுவது என்று தெரியாது ஏதேதோ பேசினேன் நேரங்கள் போனது தெரியவில்லை ஆனால் இருவருக்கும் பிடித்த விஷயங்கள் பட்ட மனக்காயங்கள் இவைகளை பரிமாறிக் கொள்கையில்ஏதோ மனம் இலேசாகி படபடவென சிறகடித்தது நீ என்னை விட்டுப்பிரிகையில் என் விழிகள் மட்டுமல்ல என் இதயமும் கலங்கி நின்றதடா...

#
Ilakkiya sri

காதலனின் விழிகளில் அவள் சிக்க அவனோ மயிலிறகில் வருட அவள் தேகம் சிலிர்க்க கண் மூடி தன் நிலை மறந்து காமமுற ரசித்து ரசித்து மகிழ்கின்றானே மாயன் இவன்...

#
Ilakkiya sri

துளித்துளியாய் சேகரித்து வைத்த அன்பை எத்தனை நாள் ஒளித்து வைப்பேனடா தாங்க முடியாமல் கொட்டி விட்டேன் நீயோ அன்பினைத்தொடுத்து மாலையாக்கி அணிவித்து என்னை மகிழ்வித்தாயடா உன் மீசையின் வாசத்தில் கரைகின்றேனடா...

#
Ilakkiya sri

இரவில் நல்ல உறக்கம் மலர்களின் வாசம் என்னை ஏதோ செய்ய உன் நினைவுகள் என்னை இம்சித்தது உறக்கம் கலைய நீ தினமும் வரும் கடற்கரை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தேன் கடற்கரை மணலெங்கும் உன் பாதச்சுவடுகள் அதனை அலைகளும் அழிக்காமல் விட்டுச்சென்றதடா அன்போடு நானோ என்னவனின் பாதச்சுவடுகள் மேல் என் பாதம் வைத்து நடக்க ஆரம்பித்தேன் மெல்ல மெல்ல என்னோடு கலந்தான் நினைவுகள் எவ்வளவு சுகமானது இப்படியே என் இரவுகள் கழிந்தன...

#
Ilakkiya sri

குளம் நிறைய பூக்களாய் உந்தன் புன்னகை அதை அள்ள என் கைகள் போதவில்லை என் முந்தானையில் அள்ளி விட்டேனடா அன்பா...

#
Ilakkiya sri

எனக்குள்ளும் ஒரு பித்தன் இருக்கிறான் என்பதை உணர்ந்தேன் என்னவள் உன்னை கண்ட பிறகு...!!

#
ம. ராஜகுமாரன் ராஜா

உன் நினைவு தோன்றாத இரவில் உன் கைகளில் வீணையாவேன் நீ மீட்டும் நேரம் ஸ்ருதி ஆக மாறி உன்னோடு இசையாகி கலப்பேனடா...

#
Ilakkiya sri

சில தேநீர் மிகுந்த சுவையுடனும் நாவிற்கு சுவை கூட்டும் நீயும் அப்படித்தானே அன்பா உன் அன்பு மாற்று குறையாதடா இந்த அன்பை கையில் எடுத்து இதயத்தோடு அள்ளி அணைக்கின்றேன்...

#
Ilakkiya sri

தூக்கம் வராத இரவுகளில் மகரந்தம் காற்றோடு கலந்து பறப்பது போல் நீ தென்றலோடு கலந்து எனைத்தழுவி என் நினைவுகளில் மலர்கின்றாய் அன்பா...

#
Ilakkiya sri

புள்ளிமான் இமையுடையவலே தேன் சொட்டும் பூவின் இதழுடையவலே உனக்கு எதற்கு ஆபரணம் அணிகலன்கள் உன் அழகில் தோற்றுப் போகவா....

#
காளையத் தமிழன்

சாலையில் நி நடந்தால் சாலையும் யுத்தம் செய்யும் உன் பாதங்களை முத்தமிட.....

#
காளையத் தமிழன்

கஷ்டம் என்பதை மறந்திருந்தேன்.. மனதில் நிலவை மறைத்திருந்தேன்.. இருளில்லை எனக்கென்று நினைத்திருந்தேன்.. நிழலோடு இனிமை கொண்டிருந்தேன்.. கண்டு பேசிட காத்திருந்தேன்.. காணாமல் காதல் கொண்டிருந்தேன்.. பதிவை காணாமல் பதைத்திருந்தேன்.. விடியும் காலைக்கு காத்திருந்தேன்.. வானத்தின் வண்ணத்தை பார்த்திருந்தேன்.. சிங்கார சிரிப்பில் மயங்கிருந்தேன்..

#
அன்புடன் ரவி

மூழ்கி இறந்து போக ஆசை தான் எனக்கும் உன் சிறிப்பினால் தோண்டப்பட்ட கண்ணக் குழி அகழியில்......

#
காளையத் தமிழன்

மாமேடையில் மஞ்சள் மழையில் நனைந்து ! மன மாளிகையில் மல்லிகை பூவாய் பூத்து! மான் விழியால் மையல் விழி பேசும் அழகிய கயல் விழி தான் இவளோ!

#
Freash Status

தனித்து வைத்து ரசிக்கிறாயாடி என்னை! அதை..... தனித்துவமாய் படம் பிடிக்கிறேனாடி உன்னை!

#
Freash Status

குயிலின் குரலோசை கேட்க தொலைபேசி துயிலின்றி விளியோசையோடு அழைக்கின்றதே!

#
Freash Status

உன் புல்லாங்குழல் ஓசையினால் என் இதயத்தை இசைக்காதே கண்ணா! உன் ஒயில் பர்வையில் என் மனதை வருடாதே ராதா!

#
Freash Status

சித்திரம் பேசுதடி இமைகள் உன் கண்ணழகை! பத்திரம் செய்யடி உன் இதலோர சிரிப்பழகை!

#
Freash Status

நாளிதழ் எனும் காகிதத்தில் நான் படித்த முதல் தலைப்பு செய்தி... பூவிதழ் சூடிய அவளின் அழகே...

#
Freash Status

சிற்பிகள் இல்லாமல் வடித்த அழகிய பெண்சிலை ஒன்று முகம் தெரியாதவாறு திரையிட்டு மறைக்கின்றது ஏனோ!

#
Freash Status

திங்கள் நிறைந்த பொன் வானமும் தோற்றுப் போகும்... அவள் கண்ணக் குழி அழகை கண்டு.....

#
காளையத் தமிழன்

அன்பா நீயோ கடலின் கரைகளில் அமர்ந்து தனிமையில் வெறுமையுடன் இருக்க இக்கடல் அலைகளோ உன் மீது நேசம் கொண்டு வந்து வந்து செல்கின்றதே இன்னுமா வெறுமை உனக்கு நேசம் கொள்ளடா கடலின் அலைகளையும் உன்னை மறைந்து மறைந்து இரசிக்கும் உன்னவளையும்...

#
Ilakkiya sri

நீ விரும்பியதை நீ உரைக்காமலே நான் தருவேன் உனக்கு மரத்துப்போன இதயத்திற்கு உயிர் கொடுத்தவன் நீ தானே ஏற்றுக்கொள்ள முடியாத துன்பமே வந்தாலும் மறக்காத இதயமடா அன்பா...

#
Ilakkiya sri

ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் சாரலில் நனைந்த பறவைகளைப் போல் உன் சாரலில் இம்மலரும் ஈரமானதடா.

#
Ilakkiya sri

உன்னோடு பேசாத நாட்களில் முயல் போல் துள்ளிக்குதித்த மனம் துள்ளலின்றி மௌனமாய் புல்வெளியில் உறக்கமின்றி தலை சாய்ந்து கொள்கின்றது.

#
Ilakkiya sri

அவள் பேசிய வார்த்தைகள் எல்லாம்...முத்துக்கள் பேசிய வார்த்தைகளாக என் நினைவுகளில் நிலைக்கின்றாள்.......

#
காளையத் தமிழன்

அவள் நடந்தால் போதும்... நானும் கண்டு ரசித்து விடுவேன் நாட்டியத்தை...

#
Karuppasamy

sirayai pandurutha en valivai un veli ennum kathuvugalal therathayai

#
preethi

சுதந்திர தேவதை சூழ்நிலை என்னும் சிறையால் அடைக்கப்பட்டாள்... கண் விழித்த உலகில் அல்ல.... கற்பனை கலந்த கனவில்.......

#
காளையத் தமிழன்

மன்னித்து விடு என்பது அன்பு.. அப்போதே அதனை மறந்து விட்டேன் என்பதே பேரன்பு..! ️ இனிய இரவு...!

#
Karuppasamy

பாசம் காட்ட பல பேர் இருந்தாலும்.. நான் களைப்பாகும் போதெல்லாம்.. என் மனம் இளைப்பாற இடம் தேடுவது உன்னிடம் தான்..

#
அன்புடன் ரவி

காந்தமாய் என்னை கவர்ந்தவள்.. விழியால் மனதை இணைத்தவள்.. ஓயாமல் ஓய்வின்றி துடிப்பவள்.. தூங்காமல் என் மனதை துரத்தியவள்.. ஓயாமல் என்னை ரசித்தவள்..

#
அன்புடன் ரவி

எங்கோ எப்போதோ  நான் உன்னை கண்டால்  அங்கே அப்போதே  என் ஒரு துளி கண்ணீர்  மண்ணை நினைத்துப் பார்க்கிறது  உன்னை நேசித்ததால்

#
Raju

நீ அருகில் இருந்தால்  உன்னை ரசித்திடுவேன்  உன் இதழுக்கு சம்மதம் என்றால்  அதையும் ருசித்திடுவேன்

#
Raju

எத்திசையிலும் காற்று வீசும் நீ இருக்கும் திசை மட்டும்தான்  என் மூச்சுக்காற்று வீசும்

#
Raju

என்றும் அரசி.....!! ஏழையாக இருந்தாலும்......!! ஏகாம்பரமாக இருந்தாலும்......!! என்றும் அரசி தான்......!! நீ என் இதயத்தில்.......!! ஸ்ரீஜா....️ சந்திரசேகர்

#
ஸ்ரீஜா சந்திரசேகர்

நீ மண்ணில் நடக்கையில் உன் காலடி மண்ணை என் கைகளிலே அள்ளி என் தங்கப்பெட்டியில் வைத்து நிதமும் திறந்து உன் அன்பையும் வாசத்தையும் நுகர்கின்றேன் நீ என்னை விட்டு நீங்கிய நேரங்களில் அன்பா...

#
Ilakkiya sri

நீயின்றி என் எழுத்துக்களுக்கு உயிர் ஏது இந்த எழுத்தை இரசிக்கும் இரசிகன் நீ தானே என் எழுதுகோல் உன்னை நினைத்தால் எழுத ஆரம்பித்து விடுகிறது...

#
Ilakkiya sri

புல்வெளி மீது விழுந்த மழைத்துளிகளை மண் தாங்கிக்கொள்ளும் என் கண்களின் கண்ணீர்த் துளிகளை என்னவன் தன் அன்பான கரங்களால் தாங்கி என் துயர் நீக்கி என் அகத்தினை மலரச்செய்வான் ...

#
Ilakkiya sri

தேநீர் குவளையில் தேநீர் பருகும் ஒரு ஒரு துளியிலும் உன் அன்பின் இனிப்பினை அள்ளிப்பருகுகின்றேன் எந்த இனிப்பையும் இது நாள் வரை நான் சுவைத்ததில்லை நீ அவ்வளவு இனிப்பா அன்பா ...

#
Ilakkiya sri

உன்னைக்காணாது தவித்த நொடிப்பொழுதில் நீயோ நான் விரும்பினேன் என்பதற்காக மீசையின்றி வந்து நின்ற அழகை மட்டுமல்ல நீ என் மீது வைத்த அன்பையும் எண்ணி என்னுள் இரசிக்கின்றேன் அன்பா...

#
Ilakkiya sri

எப்போது கேட்டாலும் இன்பமாய்! எங்கேயும் நான் ரசிக்கும் இன்னிசையாய்!! யார் அழைத்தாலும் திரும்ப வைக்கும் பிரம்பிப்பாய்!!! தூக்கத்திலும் என்னை எழுப்பும் பிரம்மையாய் "அவள் பெயர்"

#
Bharathi Bharathi

எமற்றாம் நிறந்த உலகத்தில் எதை அதிகம் நெசித்தம் அதை‌ நமக்கு இல்லை என்றால் பெரிய துன்பம்

#
Lakshmi m

எழுதப்பட்டிருக்கும் விதி உன்னையும் என்னையும் சேர்க்காது எனில் பிறகு ஏன் இருவரையும் சந்திக்க வைத்தது #என்னவளே

#
Karuppasamy

என் வானத்தி ஆயிரம் நட்சத்திரம் இருந்தாலும் நான் பார்த்த ரசிக்கும் ஒற்றை நிலவாக நீ இருப்பாய் !!!

#
Rasika P

கட்டுக்குள் இருந்த மனமோ ​கட்டவிழ்ந்து போனது.. கடிவாளம் இட்ட விழியோ இமை மூட மறந்தது.. அழகை கண்ட மனமோ செயல் இழந்து போனது.. செவ்விதழின் நிறம் கண்டு தூக்கம் மறந்து போனது.. புதுக்கவிதை எழுத மனமோ வார்த்தை தேடி அழைந்தது..

#
அன்புடன் ரவி

பார்வை நீயானால் நீ தீட்டும் ஓவியமாய் நான் இருப்பேன் என் கன்னக்குழியினில் உன்னை கையகம் செய்வேனடா...

#
Ilakkiya sri

உன் கரங்கள் என்னை எழுதயிலே என் பக்கங்கள் நிரம்பி என் தாகம் தனிக்கின்றன நீ எழுதாத போது என் பக்கங்கள் உன் விரல்களுக்கு ஏங்கித் தவிக்கின்றன...

#
Ilakkiya sri

சேலையின் ஆசை தன்னை வாங்க வந்த மக்களை விட தன்னை அணிந்து கொள்ளும் பெண்ணின் உடலைச்சுற்றிக் கொள்ளத்தான் அவள் வாசம் மிக்கவளாயிற்றே துணையை விட எப்பொழுதும் அவள் உடலைத்தழுவி நிற்பது தான் தானே என எண்ணி களிப்புற்றது...

#
Ilakkiya sri

சில மலர்கள் வாடாது வாசம் குன்றாது நம் இதயத்தின் ஓசையாய் மலர்ந்து நிற்கும் நம் இதயத்தின் கதவுகளைத் திறந்தால் அன்றலர்ந்த மலர் போல் புன்னகைப்பூத்து நிற்கும்...

#
Ilakkiya sri

யாருமில்லா இரவுகளில் உன்னோடு சில நிமிடங்கள் உன் மார்பிலே முகம் புதைத்து அன்பில் கரைந்த நேரங்கள் உன் கைகளிலே மழலையாகி தவழ்ந்த மணித்துளிகள் உன் மார்பிலே சாய்கையில் அவ்வப்போது கள்ளக்கண்களால் என்னை இரசித்த நேரங்களை மறக்க இயலாது உன்னுள்ளே கரைந்தேன் என்னவனே...

#
Ilakkiya sri

புதியதாக ஒன்று கிடைக்கப் போகிறதே என்று பழகிய ஒன்றை வெறுத்து விடாதே... வரப்போவது உனக்கு வலியை தந்தால் இழந்ததை உன்னால் மீண்டும் அடைவது கடினம்...!

#
Mani

கருங்கல்லாய் இருந்த என்னை சிலையாய் மாற்றியது உன் காதல் ஒலை ,

#
Karuppasamy

டக்கென பார்வையை வீசி சென்றாய் எரிவது நானால்லவா..... இப்படிக்கு இதயம்

#
Karuppasamy

நீ வடப்புறம் நான் இடப்புறம் இணையும் போது மணப்புறம் .....

#
Karuppasamy

பகிர வேண்டியது எல்லாம் பாதியிலேயே நின்றது விரும்பியவர் விருப்பம் காட்டாத போது

#
Karuppasamy

பேசிக்கொண்டே இரு கேட்டுக்கொண்டே இருக்கவே விரும்புகிறேன் உன் குறும்புத்தனமான பேச்சினை

#
Karuppasamy

அன்பே! உன் முகம் காண ஏங்கும் என் மனம் அருகில் நீ இல்லாத பொழுது என்னை அரவணைத்து அன்பாய் தந்த முத்தம் தான் என்னை வழி நடத்துகிறது காலம் கடந்தாலும் காதல் நடப்பதில்லை என்று!!

#
தமிழன் முருகன்

என் மேனியில் உன் விரல் கொண்டு எழுதாத போதெல்லாம் என் மேனி மட்டும் அல்ல உன் விரல்களும் வாடி விடும் என் மேனியில் உன் விரல் கொண்டு எழுதும் போது உன் விரல்களும் சூடேறுகின்றதா...

#
Ilakkiya sri

உன்னோடு பேசாதவை என்னோடு போகட்டும் கண்ணோடு காணாதவை விண்ணோடு சேரட்டும் உன்னோடு சேராத என் உடல் மண்ணோடு போகட்டும் உன் காதலின் நினைவோடு என் உயிர் உலகை பிரியட்டும்.... -By Kunaseelan Lathursan (Lathustudio)

#
Break My Heart

காதலின்றி பாவலன் இல்லை காதலின்றி கவிதைகள் உயிர் பெறுவதில்லை..

#
Ilakkiya sri

தன்னைத்தொட்டுப்பார்க்கச்சொல்லி மலரோ தன் இதழ்களை அசைத்து அசைத்து அழைத்தது கண்டு வண்ணத்துப்பூச்சியோ மலரின் மகரந்த வாயிற் தொடுகையில் அதன் இதயம் மட்டுமல்ல சிறகுகளும் படபடத்தன...

#
Ilakkiya sri

நிமிடங்கள் கரைய மறுத்து நிற்கிறது.. கேட்டு கொள்ள அருகே உன் குரலின்றி..

#
MURUGESAN KR

உதிர்ந்த சருகொன்று உணர்த்துவது ஒன்றே ஓன்று தான் வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என்று.

#
MURUGESAN KR

நீ எனக்கானவள் இல்லை என்று தெரிந்தும் உன்னை இதயம் மறக்க நினைக்கவில்லை. இதயம் துடிப்பது என்னமோ எனக்குள்தான், எதற்கு உனக்காக துடிக்கின்றது தெரியவில்லை நினைவுகள் தொடரும்..,

#
MURUGESAN KR

நீ என் மடிசாயும் நேரம்.. என் மனெங்குங்கும் வீசும் காதல் வாசம்.. உன் காதல் ஒன்றே போதும் என் காலம் முடிந்தாலும்..

#
MURUGESAN KR

என் வலிகளை புரிந்துகொள்ள வேண்டாம் எனக்கும் வலிக்கும் என புரிந்து கொண்டால் போதும்

#
MURUGESAN KR

கை நிறைய வளையல் அணிவதிலேயே நிறைவு பெறுகிறது பெண்மையின் பேரழகு!

#
MURUGESAN KR

சிலர் தங்க வளையல் அணிந்திருப்பார்கள். உன் வளையல் தங்கத்தை அணிந்திருக்கிறது.

#
MURUGESAN KR

அவள் கைபட்டதும் சிவந்தது மருதாணி...!

#
MURUGESAN KR

இலகுவாக இருக்கும் உந்தன் நினைவுகள்தான் எழுத நினைக்கையில் கனத்து போகின்றன தண்ணீர் நனைந்த இலவம்பஞ்சை போல்... ஒருவேளை கண்ணீரில் நனைவதின் விளைவோ??

#
MURUGESAN KR

வடிவத்தில் நீ ... தண்ணீர் போலவே... எங்கெங்கு நிறைத்திடினும் அதன் வடிவம் பெறுகின்ற வல்லமை; ஆம் நீ தண்ணீர் போலவே ஆனாய்.. என் வாழ்வில்; இன்றியமையா இந்த இ(ட)தயமதில்️

#
MURUGESAN KR

தீண்டும் விரல்களில் மீண்டும் மீண்டும் எதையோ எதிர்பார்க்கிறது பேதைமனம் காதல் கொண்டு...!

#
MURUGESAN KR

உன் அருகில் நெருங்கும் நேரம் தோறும் முகத்திரை போட்டு உன் செல்லக்கண்களை காட்டி என்னை வதைக்கின்றாயே இன்று மாட்டிக்கொண்டாயடி உன்னை விடுவேனா என முகத்திரையை சற்றே விலக்கினேன் வெண் மேகமும் தோற்று விடும் நிறமல்லவா இவள் இவளின் மூக்குத்தி பளபளவென மின்னி என்னை சீண்டச்சொல்கின்றதே அதையும் தாண்டி சாயம் பூசாத ரோஜா நிறத்தினை ஒத்த உன் இதழ்களின் அழகை அள்ளவா சுவையை ருசிக்கவா...

#
Ilakkiya sri

வடிவத்தில் நீ ... தண்ணீர் போலவே... எங்கெங்கு நிறைத்திடினும் அதன் வடிவம் பெறுகின்ற வல்லமை; ஆம் நீ தண்ணீர் போலவே ஆனாய்.. என் வாழ்வில்; இன்றியமையா இந்த இ(ட)தயமதில்️

#
MURUGESAN KR

கடல் நீர் வற்றும் வரை, காகித மலர்கள் வாடும் வரை, ஆகாயம் அழியும் வரை, என் ஆயுள் முடியும் வரை, உன்னை காதலிப்பேன்! இரவு வணக்கம்.

#
MURUGESAN KR

பகலை அழகாக்கும் சூரியன் போல.. என் மனதை அழகாக்குகிறது உன் நினைவு...

#
Karuppasamy

மல்லிகைக்குள் மறைந்து மயக்கும் வாசனையை மனதுக்குள் நுழைந்து மயக்குகிறாய் என்னவளே ..!! இனியவளே..

#
Karuppasamy

மல்லிகைக்குள் மறைந்து மயக்கும் வாசனையாய்.. மனதினுள் நுழைந்து மயக்குகிறாய் என்னை..! ️ #அவளும்️நானும்..

#
Karuppasamy

நம்மை யாரும் கண்டுகொள்ளவில்லை எனில் தொலைந்து போனதாய் அர்த்தமல்ல, யாருக்கும் தொல்லையாய் இல்லை என்று அர்த்தம்

#
Karuppasamy

மழை நனைத்த இரவில் உன்னை சந்திக்க இயலாமல் கைபேசியோடு முத்தங்கள்...

#
Ilakkiya sri

When we awake from sleep we jump into different consciousness and different reality. The new horizon of reality comes to our life and attention, we feel something new, we find out the new state of consciousness. At time of awakening from bed we come back to reality from the dream reality or dream world, we experience new consciousness reality which is knocking at our door of consciousness. Sleep Jump is journey from sleep reality to new consciousness reality and new reality dimension. Consciousness model of a day is different from consciousness model of another day due to sleep jump. New day starts with a new consciousness model and consciousness reality after having sleep jump during long sleep time. Sleep acts as connector or bridge between two consciousness reality or consciousness model. The change in neuron network connection and stored thought in our subconscious mind comes to play and blend with reality in such a way so that we perceive reality with our stored subconscious thought and new thought zone so change in our perception level also caused by sleep jump also called dream jump if we are dreaming in sleeping course. The reality inside of us which is developed by interaction with puter reality is changed by frequency during sleep jump so in post sleep stage connection between our changed new reality and outer reality is changed. The inner process happened during sleep jump is responsible for change of perception level about reality. The inner self is shaped by subconscious thought, dream reality and effect of dream portal, newly changed inner self with same physical self experience new reality outside with new level of perception. Two sides of a sleep or both terminal of sleep one is before starting sleep and another is at end of sleep are connected with two new reality and consciousness model so sleep terminals are responsible for feeding new input taken sleep reality and dream portal and subconscious mind to new reality on another side. Sleep Reality: Sleep Reality includes Dream reality, dream portal and all inner and psychological process during sleeping course and effect of our subconscious mind and thought at time of sleep.

#
Arka Samanta

உந்தன் மென் காதலில் என் மனக்காடுகள் சற்று நிலை குலைந்தே தான் போகிறது..!

#
MURUGESAN KR

nesitha oruvar kooda pesa mudiyavillai enil inaithalangalum imsai thn..️.

#
shana

kadhalil kayapaduvathum oru kavithai thn...

#
shana

ஸ்பரிசம் தீண்டிய என் பரிசு "என் கணவா ! என் கணவா ! கனவைத் தீண்டும் திருடா ! என் கணவா ! என் கணவா ! இரவை வருடும் பகலாய் என் நெஞ்சிலே என் நெஞ்சிலே ஓர் ஓரமாய் உன் முத்தம் அது நித்தம் மழை பொழியுதே மாலை பொழுதிலே என் கைவளையலில் சிலிர்க்குதே ரோமம் காண்கிறேன் கனிகிறேன் கைவளையல் கழன்று ஓடும் வெகுதூரம் வெகுதூரம்....... !"

#
S Sankari

காதலி என்னை ஆதரி "உன்னாலே நான் வாழ்கிறேன் என் ஜீவன் உன்னோடு வருமா வரமா என்று கேட்கிறேன் காதலே என்னைக் காதலி !! காதலி என்னை ஆதரி !! உன் அணைப்பிலே என் ஆயுள் கூடுமடி உன் அழைப்பிலே எனக்கு சுகங்கள் வேணுமடி உன் காதோரமாய் காதோரமாய் என் சுவாசக் காற்றை அள்ளி வீசவே உன் மௌனம் கலைந்து போக போக.... காதலே என்னைக் காதலி !! காதலி என்னை ஆதரி !!"

#
S Sankari

பூமியின் காதல் தேரோட்டம் "பூமி தேர் நேரில் வந்தது பூமாலையில் மோகம் சொன்னது என் விழி பார்த்துக் காதல் சொல்லுது காதல் பார்வை காத்தாய் பறக்குது காதலிக்கவே நான் காத்திருக்கிறேன் உன் மடியில் அமர்ந்து நட்சத்திரப்பூ பறிக்கவே !!"

#
S Sankari

காதலின் அடையாளம் "மலரோடு தான் நான் விளையாடுவேன் மலராகவே மணமாகவே வானம் காட்டும் பாதைகள் மலரின் முகத்தில் தெரியும் காற்று செல்லும் இடமெல்லாம் மலரின் வாசம் வீசும் காத்திருந்த ரோஜா அது காதலுக்கு ராஜா பூக்க காத்திருந்த நேரம் மலரின் மென்மை தெரியும் தேன் வெள்ளத்தில் நீ நீந்தி வருவாய் என என் கைகளைக் கோர்க்கவே !!"

#
S Sankari

நதிகளும் சில நேரங்களில் உறைந்து விடும் கால நேரங்களைப் பொறுத்து நீ வராத நாட்களில் என் இதயமும் உறைந்து போகிறது...

#
Ilakkiya sri

கடற்கரையில் கடல் அலைகள் ஆர்ப்பரிக்கும் கரும்பாறையில் அமர்ந்த பொழுது அலைகள் பாறையில் மோதி சாரல் என் உடல் நனைத்திட சில்லென தென்றலும் தழுவ நளிரில் உடல் நடுங்கையில் எனை தன் கைகளிலே அணைத்து கதகதப்பினை தந்த அந்த மாயனின் காதலில் மழலையானேன்....

#
Ilakkiya sri

பழச்சாறு பல சுவைகளில் அறிமுகமாகின்றன அவை ஒவ்வொன்றும் வேறு வேறு சுவை நல்கும் அன்பே நீயோ நிதமும் என்னைப்பல சுவையில் ஆழ்த்தி என்னை சிறைப்படுத்துகிறாயே... சுவைத்து களிப்புறாமல் என் செய்வேன்...

#
Ilakkiya sri

சில்லென்ற காற்றில் இனிய மாலைப்பொழுதில் பனிச்சாரலில் நனைந்த மலர்கள் நளிர் தாங்கா தலை கவிழ அதனைக்கண்ட பட்டாம்பூச்சி அம்மலரின் மேல் அமர்ந்து தன் சிறகினை விரித்து மலரின் நளிரை நீக்கியது....

#
Ilakkiya sri

இருள் நிறைந்த வாழ்வில் என் விழிகளுக்கு ஒளி தந்து என்னை நேசித்து என் மனச்சிறையினை திறந்து விட்டு இருள் நீக்கியவன் நீ தானே உன்னை மறக்க இயலுமா...

#
Ilakkiya sri

தென்றலாய் மாறி இருந்தால் நொடியில் உன் காதோர காதணியில் நுழைந்து உன் கன்னம் கிள்ளி இருப்பேனே...

#
Ilakkiya sri

சிணுங்கலாய் சிமிட்டும் கண்களும் சிறியதாய் சிறு புன்னகையும் சிதறாமல் இதழோரம் கடத்துவதன் பெயர்தான் காதல் கொண்ட நாணமோ...

#
Panneer Selvi

எவ்வளவு விலை கொடுத்து வாங்குவேன் விலை மதிப்பில்லா மதிப்பில்லா உந்தன் புன்னகையை....

#
Panneer Selvi

தனியாக நடை கற்று வருடங்கள் பலவாகினும்... இன்றும் உன்னுடனான பயணங்களில் உன் கரம் பற்றி நடை பயிலும் சிறு குழந்தையாகிறேன்.

#
MURUGESAN KR

Ture Words ... எல்லா எதிர்ப்பார்புகளையும் இழந்தேன் எனை கடந்த வருடங்களில் என்னுள் மரணித்து ...போனவளுக்காய்.. என்றும்..

#
Karuppasamy

உறக்கத்தை தொலைத்த ஊதியம் இல்லா காவல்காரன் நான். உறக்கத்தை பறித்த வெண்ணிலவு நீ.. பகலில் உன்னை தேடி அளையும் போலீஸ்காரன் நான். என் இதயத்தை திருடிய கள்ளி நீ.. உன் பின்னால் ஓயாமல் சுற்றும் கடிகாரம் நான். என்னுடன் சேர மறுக்கும் சிறய முள் நீ.. வழி தெரியா உன் முகவரிக்கு வழிதடத்தை கூறு வருகிறேன் என் காதலோடு.

#
Narmatha TM

என் நினைவில் என்றும் நீங்காதவள் .. காட்டிடும் அன்பிற்கு எட்டாதவள் .. கண்டிடும் கருவிழிக்கு காட்சியானவள்.. இமைக்காத விழி கொண்டு படம் பிடித்தவள்.. மனதுக்குள் பூங்கொடியாய் இடம் பிடித்தவள்.. சிறகடிக்கும் சிந்தனையை சிதறடித்தவள்.. வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிப்பவள்.. கண் கொள்ளா அழகியாய் மனம் தைத்தவள்.. கடிவாள மனதோடு வலம் வந்தவள்.. இடைநின்ற ரோஜாவை தோற்கடித்தவள்.. பூந்தோட்டமே தலை குனிய இதழ் விரித்தவள்.. தூங்காத மனதிற்கு சுகமானவள்.. பனி படர்ந்த மலருக்கு நிகரானவள்.. ஆட்டி வைக்கும் நினைவுக்கு போட்டி வைத்தவள்.. நலமா என விழைத்திட மறவாதவள்.. பதிலில்லா தினமெதையும் விரும்பாதவள்.. விருந்திட முடியாமல் மருந்தானவள்.. ஒவ்வொரு கணமதையும் நினைவில் வைத்தவள்.. நினைவிற்கு சுவாசம் தர கனவில் வந்தவள்.. நித்திரைக்கு தலை சாய்க்க இடம் தந்தவள்..

#
அன்புடன் ரவி

இழக்கும் வரை தெரியவே இல்லை? அவள் பொக்கிஷமென்று.

#
MURUGESAN KR

நீரின்றி அமையாது உலகு - அதெல்லாம் எனக்கு தெரியாது.. எனக்கு தெரிஞ்சதெல்லாம்... நீயின்றி அமையாது என் உலகு..

#
MURUGESAN KR

புலன் அனைத்தும் புழுதியானது பெண்ணே.. உன்னை நினைக்கும் பொழுதெல்லாம்.....

#
MURUGESAN KR

தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும் சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும் தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு நனைந்த பிறகு நாணம் எதற்கு.

#
MURUGESAN KR

உன்னை நான் சந்தித்தேன் என் நினைவில் நீங்கதா கவிதையா மற்றம் தந்த

#
Lakshmi m

ஒர் நொடியில் தொலைந்துவிட வேண்டும் உன்னுள்..... நீயின்றி வேறில்லை உலகம் எனக்குள்...

#
MURUGESAN KR

காதலிக்கும் போது உன் மனசாட்சியிடம் பல கேள்விகளை கேட்டுக்கொள்...... கடந்து வந்த காதலின் ஆழத்தை அந்தக் கேள்விகளி ன் விடைகளினாலே அளக்க முடியும் ️ ..........

#
கிறுக்கியின்கிறுக்கல

அவள் அவனை ரசிப்பதை, அவன் ரசிப்பது அழகு! அவள் கோபத்தின் போது அவன் குழைவது அழகு..! அவள் சிரிக்கும் போது அவன் ரசனை அழகு.! அவள் அழுவும் போது அவன் அணைப்பு அழகு..! அவள் பயத்தின் போது அவன் பக்குவம் அழகு..! அவள் தவறிழைக்கும் போது அவன் ரௌத்திரம் அழகு..! அவள் அமைதியின் போது அவன் புரிதல் அழகு..! அவளுக்கு அவனே அழகு. அவனுக்கு அவளே அழகு..! அவர்களின் அழகு பார்வையில் அணைத்துமே பேரழகு..... !️ _கிறுக்கியின் கிறுக்கல்_ .... . வினோ...

#
கிறுக்கியின்கிறுக்கல

மௌனமாய் இருப்பதால் மறந்து விட்டேன் என எண்ணாதே மரணமே வந்தாலும் மறக்க இயலாது நம் காதலை....

#
MURUGESAN KR

தினமும் காலையில் தேநீரை சுவைக்கும் முன் உன் இதழ்களை சுவைத்தால் தான் என் காலைப்பொழுது சுவைக்கிறது அன்பே...

#
Ilakkiya sri

கடல் அலைகளின் நுரைகளின் வண்ணம் மிஞ்சியது உன் பாதங்களின் வெண்மையடி...

#
Ilakkiya sri

தொலைத்த பின் மீண்டும் கிடைப்பதில்லை பொக்கிஷம்!

#
MURUGESAN KR

முத்தங்களோடு மட்டும் முடிந்து விடுவதில்லை இக் காதல்.. உன் முழு நேர பார்வைக்காக எப்போதும் காத்திருப்பது தான் என் காதல்..

#
MURUGESAN KR

தொலைத்த பின் மீண்டும் கிடைப்பதில்லை பொக்கிஷம்!

#
MURUGESAN KR

காற்றை நேசிக்கிறேன் ... நீ மூச்சாய் வருவாய் ... என்பதற்காக ....!!

#
MURUGESAN KR

நாட்டுப்புற பாட்டு என் உசுருக்குள் உசரமாய் நீ "என் உசுரே நீ மாமா ! உன்ன விட்டா எனக்கு யாரு மாமா ! ரோசாவ பறிக்குமுன்னே கருக விட்டதென்ன ! மல்லியப்பூ சூடிகிட்ட வாசமுந்தாந் தெரியலயே ! என் மாராப்பூ சேலைக்குள்ள உன் வாசமுந்தா சிக்கிக்கிச்சு ஆடு கோழி வளத்து வந்த மந்தைக்குள்ள பூட்டி வச்சிருக்க அட அத்தனையும் ஆக்கி வச்ச பக்குவமா சமைச்ச் வச்ச சாப்பிடத்தான் நீ வேணும் கல்யாண பந்தி போட வேணும் கறிசோறு எனக்கு எறங்கவில்ல கரும்பு சாறு இனிக்கவில்ல வாய்க்கு ருசி தெரியலயே வாய்க்கரிசி போட வருவியா மாமா ! வேட்டிய மடிச்சுக்கட்டி மல்லுக்கட்டி நின்னதென்ன இராப்பகலா காத்திருந்த பகல் கனவா போனதென்ன !"

#
S Sankari

உறங்கும் பொழுதும் உறங்கா நிஜம்தான் காதல் நினைவுகள்

#
MURUGESAN KR

காய்த்த மரம் கல்லடி படுமாம் நானோ கண்ணடி பட்டு காதல் கொண்டேனடி! ️

#
MURUGESAN KR

காதலித்து கொண்டேதான் இருப்பேன்.. காதல் தீரும் வரை அல்ல என் ஆயுள் முடியும் வரை..

#
MURUGESAN KR

தாமதமாகவே கிடைக்கிற நீதியைப்போல தாமதமான முத்தமும் அநீதிதான்

#
MURUGESAN KR

சில நிமிட மௌனங்களில் உயிர் பறித்து... ஒரு நொடி புன்னகையில் புதுப்பிக்கிறாய் உயிரை..... காதலாய்...... குட் காலை

#
MURUGESAN KR

நாளும் பொழுதும் வளர்ந்து தேயும் மதியே.. தனிமையின் நானிங்கு உலவ துணை தந்து என்னுடன் உலா வா

#
MURUGESAN KR

காதலியுங்கள் எவ்வளவு சண்டை போட்டாலும் விட்டு செல்ல விரும்பாத திமிர் பிடித்த இதயத்தை....!!!

#
MURUGESAN KR

என் பலமும் பலகீனமும் நீ மட்டுமே அறிவாய்.. அதுவும் நீ தான் என்பதையும் அறிவாய்...

#
MURUGESAN KR

காதலிக்கப் படாதவனின் இரகசிய டைரி முழுதும் நிரம்பி வழிகிறது காதல் கவிதைகள்!

#
MURUGESAN KR

மௌனமாயிருந்தே மனதை கொள்ளையடித்தாய்....

#
MURUGESAN KR

நீ இல்லாமல் கவிதையும் இசையும் சுவையே தராது...!

#
MURUGESAN KR

ஏற்ற இறக்கங்களில் தொலைந்து... இடையினில் தவழ்ந்து....... நெஞ்சத்தின் மேடு கண்டு மூச்சடைத்து போகையில்...... இதழினால் சுவாசம் தரும் வள்ளல் அவள் .... மதிய வணக்கம்

#
MURUGESAN KR

️எனை தூக்கமின்றி தவிக்க விட்டு நித்திரை காணும் அவள் தூக்கத்தை கலைக்க வழியின்றி நான் தவிக்கிறேன்.

#
MURUGESAN KR

நீ யின்றி இழப்பது ஏதுமில்லை இங்கு...; எல்லாமே தான்...

#
MURUGESAN KR

அவளை பிடித்து தமிழை படித்தேன்.. அவளுக்காக கவியெழுத... தமிழுக்கும் என்னை பிடிக்க கவிஞனாகிவிடுவேன் போல்..

#
MURUGESAN KR

நீரின்றி மீனுமா நீயின்றி இங்கே நானுமா... உயிரின்றி உடலா உனை நீங்கியொரு வாழ்வும் உலகிலா... உன் தோள் சாயும் ஓர் வரம் போதும் என் வாழ்வின் ஜென்மம் சாபல்யம் நீங்கியே போகும் கண்ணே...

#
MURUGESAN KR

விக்ஷம் தோய்த்த வார்த்தைகள் தான்.. எனினும் உன்னிதழ் தீண்டி வருவதால் வருத்தம் தீண்டுவதில்லை என் மனதை....

#
MURUGESAN KR

வசந்த காலம் எல்லாம் நீ வந்த காலம் மட்டுமே. என்னவளே...

#
MURUGESAN KR

தண்டனை இல்லாத சிறை உன் உள்ளம்.. அதில் விடுதலை விரும்பாத கைதி நான்!

#
MURUGESAN KR

உன் இடைவிடாத இந்த நெருக்கம் என் ஆயுள் முழுவதும் வேண்டும் அன்பெனும் கைதியாக...

#
MURUGESAN KR

மிகப்பெரிய ஆசை, உன்னோடு நீண்ட தூரம் ஒரு பயணம்.. மிகச்சிறிய ஆசை, உன் மடியில் ஒரு குட்டி தூக்கம்..

#
MURUGESAN KR

ஆரவாரமின்றி அமைதியாகவே கடந்துச்செல்கிறாய் என் விழிகள் தான் ஏனோ உன் வழியை தொடர்கிறது...

#
MURUGESAN KR

அலங்கரித்த போதும் ஒளியிழந்து போனேன் உன் பார்வை படாததால்…!

#
MURUGESAN KR

அழகு என்ற சொல் மருவி.. காலப்போக்கில் அவள் என்றானதே..!

#
MURUGESAN KR

தூக்கத்தில் வரும் கனவை விட.. என்னை தூங்க விடாமல் வரும் உன் நினைவுகளே அதிகம் .

#
MURUGESAN KR

கண்களைப் போல் இதயமும் வெளியே தெரிந்திருந்தால், பல ஏமாற்றங்கள் குறைந்திருக்கும்…!

#
MURUGESAN KR

இன்பமும் துன்பமும் ஆற்று வெள்ளம் போன்றது நிலையாக நிற்காது ஓடி விடும். என்னை தவிர்ப்பதும் நான் உனக்காக தவிப்பதுமே நம் காதலாகிவிட்டது ️.

#
MURUGESAN KR

ரசனையாக அவளை படைத்தான் பிரம்மன் அவளை ரசிக்கவே என்னை படைத்தான்...

#
MURUGESAN KR

வாழ்க்கையில் சில உறவுகள் நம்மை விட்டு சென்றாலும். நமக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் ஓர் உறவு, தனிமையே!

#
MURUGESAN KR

வேல் விழியோ கயல் விழியோ..... விழிகளை ஆயுதமாக்கி என்னை அடிமையாக்கிவிட்டாள் கண்ணசைவில்..!

#
MURUGESAN KR

எந்தன் வீட்டில் போதிமரம் இல்லை இருந்தும் புத்தனாகி போனேன் உன்னை காதலித்ததால்!

#
MURUGESAN KR

நீ சிந்தும் சின்ன பார்வையே போதுமடி இந்த ஆயுளை கடத்தி விடுவேன்!

#
MURUGESAN KR

ஒரு மடி வேண்டும் ஒரு விரல் வேண்டும் ஒரு தலைகோதல் வேண்டும் ஒரு நிம்மதி வேண்டும் ஒரு நீண்ட தூக்கம் வேண்டும் ஒரு பெருமூச்சு வேண்டும் ஒரு அணைத்தல் வேண்டும் ஒரு நெருக்கம் வேண்டும் 'நான் இருக்கிறேன்' என்ற வார்த்தை வேண்டும் வேறென்ன பெரிதாக கேட்டுவிடபோகிறேன் உன்னிடம் ....!!!

#
MURUGESAN KR

உன்னோடு சேர்ந்து வாழவில்லை என்பதற்காய் என் காதல் தோற்றுப் போய் விடவில்லை.... சேர்வது மட்டுமே காதலென்றால் காதல் எப்போதே சுவடின்றி அழிந்து போயிருக்கும்......

#
MURUGESAN KR

கவலைகளை பரிசாய் தந்து விட்டு சென்றாலும் உன்னை மட்டும் நான் வெறுத்ததாய் வரலாறே இல்லை!

#
MURUGESAN KR

"இடை"விடாது தொடர்ந்தேன் இடைவெளி இல்லாமல் தொடர்வேன் யார் இடைமறித்தாலும் தடை தாண்டி தொடர்ந்து ...

#
MURUGESAN KR

அன்பு என்பது எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி ஒருவரை ஒருவர் புரிதலுடன் எந்நிலையும் விட்டுக்கொடுக்காமல் மலரினுள் இருக்கும் மகரந்தம் போல இணைந்தே இருக்க வேண்டும்.

#
Ilakkiya sri

ஒரு அன்பான வார்த்தை ஆயிரம் மாத்திரைக்கு சமமாகும்...

#
MURUGESAN KR

இதயம் இரத்தத்தை சுத்திகரிக்க மறந்து அவனை சுற்றிக் கொண்டிருக்கிறது .

#
MURUGESAN KR

கடற்கரையில் ஓர் நாள்: உன்னுடல் தழுவும் அலையின் பேரானந்தம் என்ன என்பதை ஆராய, கடலோரத்தில் நாம் கட்டியணைத்திட, காதல் செய்திட, அலையும் பேரலையாகிடுமோ!

#
MURUGESAN KR

நான் கொண்ட கலவியின் அனுபவச்சான்றிதல், உன் நகக்கீரல்கள்!!! இதழ் சிந்தும் முத்தத்தால் வெகுமதி தந்தாய், உன் உதட்டுச்சாயம்!!!

#
MURUGESAN KR

கண்களைப் போல் இதயமும் வெளியே தெரிந்திருந்தால், பல ஏமாற்றங்கள் குறைந்திருக்கும்…!

#
MURUGESAN KR

பொக்கிஷமாய் இல்லாவிட்டாலும் யாருக்கும் பொழுது போக்காய் மாறிவிடாதீர்கள்....

#
MURUGESAN KR

சொக்கி போனதால் சொங்கி தான் போனேன் நிலை குலைந்தால் நிம்மதி போகுமென்று புரிந்து கொண்டேன் இராட்சசியின் நிழலில்!

#
MURUGESAN KR

பாவமாக இருந்தாலும் பரவாயில்லை உன் மீது மட்டும் ஆசை பட்டு கொள்கிறேன்.....

#
MURUGESAN KR

அவளை கடந்து செல்லும் போது... விபத்து பகுதியை விட மிகவும் அதிகமான ஆபத்தானது..

#
MURUGESAN KR

இறைவனிடம் நான் ஏதும் வேண்டுவதில்லை கேட்பதுமில்லை, இறைவனுக்கே தெரியும் எனக்கு என்ன தேவையென்ன்று... Good morning

#
MURUGESAN KR

சொல் நீ... செயல் நான்...

#
MURUGESAN KR

தொலைபேசி அலாரத்தை விட அதிகமாக அடிக்கிறது என் இதயம்... நீ தான் அழைப்பில் என்று தெரிந்தபின்...

#
MURUGESAN KR

உன் இம்சைகளும் ரசணையே... நீ யில்லா நேரங்களில்...

#
MURUGESAN KR

என் கிறுக்கலை கவிதை என்பவன் நீ... கவிதைக்குள் இருப்பவனும் நீ...

#
MURUGESAN KR

ஆறு அடி குழிக்குள் புதையும் முன் நூறு கோடி ஆசைகள் உன்னோடு வாழ..

#
MURUGESAN KR

உன்னை பிரியும் எண்ணம் துளியும் இல்லை உன்னோடு சேர்ந்து வாழவும் வழி தெரியவில்லை..

#
MURUGESAN KR

கைப்பேசி காதல் "கைவீசி நீ நடக்க என் கைப்பேசி என் கரம் பிடிக்க உன் காதல் என் காதில் சொல்ல கண் பார்த்து வராத காதல் கைப்பேசியில் வந்த நல்ல காதல் வாய்ப்பேசி இனி போக வேண்டாம்"

#
S Sankari

அனைவருக்கும் சொல்லாத காதலும் உண்டு சொல்லி சேராத காதலும் உண்டு ஓவருவரும் காதலின் சுகத்தையும் வேதனையும் அனுபவத்திலும் நினைவிலும் ஒரு ஓரமாக வைத்து கொண்டு வாழ்க்கையை கடத்தி கொண்டு இருக்கின்றன....

#
Jenisha

இனியொரு பிறவி இருந்தால் மீண்டும் உன்னுடன் கைகோர்த்து பயணிக்க ஆசை உன்னுடன் இரசித்து சீண்டலுடன் கதைத்திட ஆசை நேரங்கள் கழிவது தெரியாமல் உன் அழகை அள்ளிட ஆசை உன் மீசையின் வருடலில் கரைந்திட ஆசை கொட்டிக்கிடக்கும் செல்வம் நீ தானே இப்பிறவி போதாதே.

#
Ilakkiya sri

காதல் கொடை ஹைக்கூ கவிதை "காதலி எனக்குக் கொடையளி ! நான் உன்னைக் கேட்கிறேன் !"

#
S Sankari

காதலி ! நீயே என் காதலி ! "காதலி ! எனைக் காதலி ! காதலால் காதலைக் காதலன் கேட்கிறேன ! காதலாய் காதலால் காதலைக் காதலிக்கும் காதலும் காத்திருக்கிறது ! காதலி ! எனைக் காதலி ! நீயே என் காதலி !"

#
S Sankari

மனதை கவர்ந்தது பொன்னிற ஆடையில் ஆடவளின் அழகின்று.. ஒளிந்திருந்த அழகெல்லாம் மெருகேற்றி கொண்டு.. மேடை ஏறும் மணமகளாய் மாறியதேன் இன்று.. பூவிற்கு துணையாக கொடியொன்றை கண்டு.. உடன் பிறந்தவரோ இவறென்று குழம்புவார்கள் நன்று.. நாணம் மட்டுமே காணாமல் எங்கே போனதென்று.. வஞ்சியவளை பார்ப்பவரின் இமை மூடட்டும் நன்று.. ஆடாத விழி கொண்டு மூடாதே இமையன்று.. உன்னெழிலை விழி காண மனம் நாடுதே இன்று..

#
அன்புடன் ரவி

கண்டவுடன் என்னைக் கட்டிபோட்ட நின் கண் அசைவுக்கு கைதியாகினேன் நானும்

#
கவிதை காதலன்

மின்னலைக் கண்டும் மிரளாத கண்கள் உன் கண்களைக் கண்டதும் மிரண்டதடி

#
கவிதை காதலன்

...காதல்... நான் இறந்த பின் என் கல்லறைக்கு வந்து விடாதே மூச்சி வாங்கும்...

#
Yuvi kavi

எனக்காக நீயும்...உனக்காக... நானும் இருக்கையில்...வேறு என்ற வேண்டும் நம் வாழ்க்கையை அழகாக்க...

#
K.Sujith...????❤️

பழச்சாறு இல்லாமல் மயக்கம் அடைகிறேன் உந்தன் ஒற்றை பார்வையால்...

#
K.Sujith...????❤️

அண்டத்தை போல் விரிந்து பரந்து இருக்கிறது இந்த உயிர்களிடத்தில் தான் உனக்கு தான் எத்தனை பாசம்

#
Smkumaran kavithai

ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்கு முதல்*எதிரி.. இன்னொரு ''பெண் தான்..

#
Karuppasamy

பிரபஞ்சத்தில் விதவிதமாக காதல் இருக்கலாம் நம்முடைய தெய்வீக காதல் வழிபடும் வழக்கம்

#
Smkumaran kavithai

கண்களைப் பார்த்தேன் நட்சத்திரம் தெரிந்தது.. சிங்கார சிரிப்பில் சிகரம் தெரிந்தது.. சிரிப்பின் அழகில் வெட்கம் தெரிந்தது.. கன்னத்துக் குழிவுடன் இதழ்கள் தெரிந்தது.. கண்ணில் கண்டதும் அதிசயம் தெரிந்தது.. காண கண்களும் பத்தாதது புரிந்தது..

#
அன்புடன் ரவி

பொன் கதிரவன் தன் கரம் நீட்டி பொன் வண்ணத்தை அள்ளி நனைத்தானோ பொன்வண்டே தகதகவென ஜொலிக்கின்றாயே பொன் வண்டே மின்னும் உன் அழகில் மயங்கி கிடக்கின்றன எத்தனை மலர்கள் உன் வரவினை நல்கி தன் இதழ்களை விரித்து காத்துக்கிடக்கின்றன பொன் வண்டே இரவின் மடியில் நிலவின் ஒளியில் மின்னும் பொன் நிறத்தொடு படபடவென என் அருகே நீ வர நானோ என் அழகில் கர்வம் கொண்டு மயக்குற்று நின்றேனடா..

#
Ilakkiya sri

ஆறுகள் எங்கு சேரும் இடம் கடல் தானே என்னவள் எங்கோ இருந்து பிறப்பெடுத்து மலர்ந்தது இங்கு தானே.

#
Ilakkiya sri

உள்ளங்கையில் ஊடுருவும் ரேகை எல்லாம்... உன்னோடு நான் வாழ்வதற்கான பயணங்கள்...!!

#
Karuppasamy

பூக்கள் பூப்பதற்கு தவம் இருக்கும் வண்டுகள் போல என் மனமே என்னவள் அழைப்புகாக எங்கி நிற்கிறது மனம் ....

#
Pandees Waran

கல்லூரி நாட்களில் எத்தனை முறை என்னைக்காண வந்து வந்து என்னை மகிழ்வித்தாய் அந்நேரங்களில் உன் அன்புச்சிறையில் நான் மலராகி நின்றேன் வாசத்துடன் உன்னுள் கரைந்து.

#
Ilakkiya sri

நான் உன் கூட இருந்தாலும் இல்லன்னாலும், நீ சந்தோசமா இருந்தா எனக்கு அதுவே போதும்...

#
Ⓗⓐⓡⓘⓢⓗ

பூக்கள் எல்லா காலங்களிலும் மலர்வதில்லை ஒவ்வொரு பூக்களும் ஒவ்வொரு காலங்களில் மலர்கின்றது அக்காலம் அறிந்து வண்டுகளும் வாசம் செய்கின்றது என்னவள் இன்று தான் மலர்ந்தாள் இத்தனைக்கால காத்திருப்புக்குப்பின்

#
Ilakkiya sri

தேடிச் செல்லும் வழியில் தொலைந்து போன உன் பாதச்சுவடுகளை தேடி தொலைகிறேன் மீண்டும் உன்னைக்காண இயலாமல் மறக்க முடியா மனதுடன்.

#
Ilakkiya sri

மழையின் வாசத்துடன் தேநீரின் கதகதப்பில் உன்னுடன் கதைத்து கரைந்த பொன்னான மணித்துளிகளை மறக்க இயலாமல் மீண்டும் களிப்புறுகிறேன்...

#
Ilakkiya sri

தேடாமல் இருக்கிறேன் உன்னிடம் தொலைந்து விடாமல் இருக்க...

#
Ilakkiya sri

கலைக்க முடியாத நம்பிக்கை காதல் வேறுபாடுகள் இருந்து தூரபயணம் சென்றால் இனிப்பு கசப்பு வரும் சுவைத்தாக வேண்டும் இது காலத்தின் கட்டாயம் அப்போதும் நிமிர்ந்து நிற்கும் பொல்லாத காதல்...

#
வீரசேனா

அகத்தினிலே உருவாகி முகத்தினிலே மலர்ந்துவிடும். ஆசைகள் காற்றெனவே திசையெங்கும் விரைந்தோடும். இனிமையும் இளமையும் கனிந்துவந்து மனங்கவ்வும். ஈர்ப்புவிசை இயற்கையே பார்த்தவுடனேப் பற்றிவிடும். உயிரெனவே உறவாகும் பயிரெனவே வளர்ந்துவிடும். ஊடலுடன் கூடுவதே பாடமாகும் காதலிலே! எண்ணங்களில் சிறகடித்தே வண்ணங்களில் உளங்குளிரும். ஏகாந்த வேளைகளில் ஆகாயப் பந்தலிலே. ஐயமின்றி சொல்லிடலாம் வயதின்விதி நிகழ்த்துவதாம். ஒருத்தலில்லா வகுப்பறையில் வருத்தமில்லா கற்றலிது. ஓவியமும் காவியமும் கவிதைகளும் பிறப்பெடுக்கும். ஔடதமாம் காதலுமே உடனிருந்தே உயிர்தந்தால்! - ஓவியக் கவிஞன்

#
ஓவியக்கவிஞன்

இரவிற்கு உன் முகம் நிலவாகும்.. பார்வைக்கு உன் விழி விண்மீனாகும்.. அசைந்தாடும் உன் இமையோ இசைக்காடும் மயிலாகும்.. இதழ் விரிந்த உன் சிரிப்பே எனை மயக்க அம்பாகும்.. குயில் கொஞ்சம் உன் குரலில் செந்தமிழும் தித்திப்பாகும்.. பூப்போல உன்னைக் கண்டதுமே கண்கள் தேன் உறிஞ்சும் வண்டாகும்..

#
அன்புடன் ரவி

அனல் மிகுதியில் நெற்பயிரும் வாடி வண்ணம் இழக்கிறது நீ நடக்கையில் குளிரின் மிகுதியில் நெற்பயிரும் வண்ணம் பெற்று பசுமையானதே நான் என்னாவேனடி...

#
Ilakkiya sri

இன்னும் எத்தனை நாட்கள் காதல் எனும் தேனில் நனைத்து எனை மூழ்கடிப்பாய் என்று என்னை ஏந்திக்கொள்வாய் அன்பா...

#
Ilakkiya sri

எல்லாவற்றிலும் ஆண் பெண் பாசம் வரை உழைப்பு தேவைப்படுகிறது

#
Smkumaran kavithai

உனக்கான கவிதை மடல் 6 எனது சூர்யோதயம்... நதியிலிடப்பட்ட விளக்காக  நதியோடு சேர்ந்து  நீ பயணிக்கையில், விளக்கொளியில், நதியில் விழுந்த பிம்பத்தில், பிரதிபலிக்கும் வானத்தைப் போல, எனது மனம் பிரதிபலிப்பது உனது எண்ணங்கள் பயணப்படும்,  உன் மன வானைத் தானே! உயிர்களை வாழ்விப்பது  கடலைத் தாண்டி ஒளியினைத் தரும் சூரியனின் பங்கு, அது எனது மனதின்  உயிர்ப்பிற்குக் காரணமாகிய உன் மன வானில்  உதயமாகும் மேன்மை பொருந்திய  உனது எண்ணங்களும் தானே! பனி சிகரங்களில்  நதி ஊற்றுகள்  பிறப்பதைப் போல! உனது எண்ணங்களில் தான் எனது சூர்யோதயம்! மறந்தாயா என் உயிரே! உன் எண்ணங்களின்  ஒளியில் தானே எனது ஆழ்மனம்  உயிர்ப்புடன் இருக்கிறது! உன் உயிர் துடிப்பை  நான் உணர நீ விண்மீன் ஆகினாய், என் உயிர்த் துடிப்பினையும்  நீ உணர,  நானும் உனதருகே விண்மீனாகினேன், எல்லாம் எதற்காக அன்பே உனக்காக! நீ உயிர் துடிப்பது  என் மன அமைதியில் என்றால், என் ஆழ் மனதின் அமைதி, உன் உயிர்த் துடிப்பின் ஓசையில் அல்லவா! அதையும் நீ மறக்கலாகுமா!

#
மகுட தாரிணி

உனக்கான கவிதை மடல் 5 என் மன வானில் ஆழ்கடல்... நதியில் விடப்பட்ட விளக்காய்  நான் இருக்க! காற்றோடும், நதி நீரோடும்  போராடி சிறு தீபத்தின் ஒளியில், அது பிரதிபலிக்கப்படும் நதியில் தெரியும்  சிறு ஒளியில், உன் ஆழ்மனமதனை அறிய முற்பட்டு,  கடலை அடையும் நதியோடு சேர்ந்து, நானும் நினைவுகளோடு  பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்! தெளிந்த நீரோடையின் இரைச்சல் என நினைத்தேன் உன் மனதை! பல்லுயிர்களின் வாழ்வாதாரமான, ஆழ்கடலின் அமைதியென  விளங்கிக் கொண்டேன்! உன் மனதின் உயிர்ப்பில், நான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்! என் மன வானில், சிறகடிக்கும் பறவை இனங்கள் சொல்லும்! என் மனதின் ஆழம் தனை! பால்வழி பேரடையினுள் உள்ள கருந்துளையில் வீழப் பயணப்பட்டுக் கொண்டிருந்த என் நினைவலைகளை சுழலவைத்த  என் வாழ்விற்கு அர்த்தம் தந்தது, உன் ஆழ்மன அமைதியின் ஈர்ப்பு தான்! கடந்து போகும் மேகங்கள் சொல்லும்! தினந்தோறும் உதித் தெழும் சூரியன் சொல்லும்! இரவினில் சூரிய ஒளியினை பிரதிபலிக்கும் நிலவும் சொல்லும்! என் உயிர் துடிப்பைக் நட்சத்திரங்களாய் ஜொலிக்கும் விண்மீன்கள் காட்டும்! என் உயிர் துடிப்பின் ஒளி உன் ஆழ் மனதின் அமைதி என்று! எஞ்சிய அன்பின் அடையாளமாக, என் மன வானில், உன் அமைதியான ஆழ்கடலின்  காலடித் தடங்கள்! உன் விழி நீர்த்துளிகள், என் மனதில் ஆங்காங்கே விழும்  ஒற்றை மழைத் துளிகள்! ஆர்ப்பரிக்கும் உன் அன்பின்  காலச் சுவடுகள்!

#
மகுட தாரிணி

மலர்ச்சோலையில் அவளைக்கண்டேன் மெல்ல அவளின் கைகோர்த்து நடந்தேன் சற்றே மனம் மயங்க கைகளில் அழுத்தத்தை உணர்ந்தேன் மேலாடை நழுவ முகடுகளை கண்டேன் மனம் நழுவியது மயில் விழியை கண்டேன் அவள் விழிகளில் இந்த ஓவியம் எனக்கு சொந்தமாக ஆசை கொண்டேன் அவளும் எல்லைகளைக்கடக்க ஆரம்பித்தாள் என் அன்பில் அகப்பட்டு..

#
Ilakkiya sri

தாகமாய் நான் ! தாரமாய் நீ ! உன் விழிகளைக் காணவே தினமும் கண் விழிக்கிறேன். உன் முகத்தைப் பார்க்கவே என் முகத்தை மறக்கிறேன். உன் இதயத்தில் குடி புகவே என் இதயத்தைத் தொலைத்துவிட்டேன்.

#
S Sankari

மறக்காமல் இருக்க மனமில்லை இனிய ஓவியமாய் மறக்க முடியா நின்ற தருணங்கள் அழிக்க இயலா காவியமாய் நின்றது மறக்க முடியா நினைவுகள் ஸ்ருதி மாறாமல் மீட்டிய வீணை மறக்க முடியா இதயகீதம் இசைத்தது பார்வையில் நனைத்த இதழ்கள் ஈரம் மாறாமல் மறவா சுவையினை இன்னும் மீட்டிக்கொண்டு இருக்கிறது சந்தங்களுடன் மறக்காமல் இருக்க மனம் இல்லாத மலரா.

#
Ilakkiya sri

உனக்கான கவிதை மடல் 3 நரகத்திலிட்டதும் ஏனோ... உனக்கு தனிமை என்னும் கொடுமையை நான் விதித்தேன்! நீ எனக்கு என்றும்  மறவாத இனிய நினைவுகளை அன்புப் பரிசலித்து சென்றாய்! உன்னை மௌனம் என்னும்  வாள் கொண்டு சோதித்தேன்! நீ உண்மை என்னும்  கேடையம் கொண்டு எளிதாக என்னை வீழ்த்தி வென்றாய்! உன்னை கடமைகள் என்னும் கூண்டினில் சிறை வைத்தேன்! நீ பொறுமை என்னும் வேதம் உணர்த்தி என் சுதந்திரமே உனதாக போற்றிக் காத்தாய்! உன்னை கேள்வி கணைகளால் துளைத்து காயப் படுத்தினேன்! நீ கணைகளைப் பொருட்படுத்தாது என்னை திடப்படுத்தப் எப்போதும் என்னுடனிருந்து என் காயமாற்றினாய்! இவை யாவையும் எனக்காக செய்து என்னை வென்றெடுத்த என் அன்பு தேவதை  என்னைப் பிரியத் துணிந்து  என்னை நரகத்திலிட்டதும் ஏனோ!

#
மகுட தாரிணி

கண்ணில் நின்ற சிறகானது அது உன்னாலே உண்டானது காதலால் வந்த வரமாயிது என் நெஞ்சிலே இதயப்பூ பூக்குது ஒரு கோடி மலர்களை நான் கேட்டேன் தேனீக்களின் வசந்தத்தை உணர்ந்தேன் காதலால் இங்கு சுயம்வரம் நடந்தது அன்பே ! சொர்க்கத்தை அடைய காதல் கொள் அன்பே !  மலர்களே இங்கு தேனீக்களின் முகம் பார்த்து மாலை தொடுக்குது அதன் இதயத்தில் பூமாலை போட்டது அன்பே ! என் இதயம் நின்று போனது வரமாகவே ஓய்ந்து போகுது  என் காதலில் கடைக்கண் பார்வை வேண்டாம் அன்பே !  களவு போன என் இதயத்துக்கு உன் இதயத்தைத் திருப்பிக் கொடு அன்பே !  இதுவன்றி வேறெதுவும் தேவையில்லை என்று சொல்கிறேன் காதலால் காதலைக் காதலிக்கிறேன் காதலி !

#
S Sankari

உன்னுள் மாய நதி நீர் ஓடக் கண்டேன் ஓடம்  கண்டேன் ! உன்னுள் விண்ணைச் சுற்றி பார்க்கக் கண்டேன் பாரும் கண்டேன் ! உன்னுள் உலகைச் சுற்றும் சூறாவளியைக் கண்டேன் சுற்றமும் கண்டேன் ! உன்னுள் காலம் வெல்லும் கல்லணையைக் கண்டேன் ! கலங்கரை விளக்கத்தைக் கண்டேன் !

#
S Sankari

மலரே மலருக்குள் பொழுது விடியும் மலர்வாய் மலர்முகம் மலர்ந்து சொல்வாய் மயக்கம் எல்லாம் காலை வரைக்கும் தயக்கம் எல்லாம் இரவு வரைக்கும் மன்னன் கூட மாலை போட மனைவி கூட காதல் சேர மலருக்குப் பாடம் மல்லிகைக் கூடம் ! மனையாள் பாடம் மளிகைக் கூடம் !

#
S Sankari

உனக்கான கவிதை மடல் 2 மாயம் அறியேனடி... மலரின் இதழ்களை  சில்லென்ற காற்று  வருடிக் கொடுக்கும், நீ சற்றே  கலைந்த முடியை  சரி செய்யும் பாங்கினிலே! மெல்லிய கால்களை யுடைய  அன்னமும் வாடைக் காற்றை எதிர்கொள்ளும், இன்னல்கள் பல வரினும், நடுக்கத்திற்கும் அஞ்சாத,  கொள்கைகளுக்கு உட்பட்ட  அசைக்க முடியாத உன் நம்பிக்கையின் வடிவினிலே! தண்ணீரையும், பாலையும் பிரித்தறியும் அன்னப்பறவையும், இன்ப துன்பம் கலந்த வாழ்வில்  என்றும் நேர்மையைப் பின்பற்றும் உன் திடமான  மனதமதனின் சாயலினிலே! யாவும் உன்னை  பின்பற்றும் மாயம்  அறியேனடி இந்த அடியேன்! உரைப்பாயோ உலகமறிய  ஒரு முறையேனும்,  மூடப்பட்ட கதவுகளைக் கடந்து என் இருதயத்தின்  அறையினிலே எதிரொலித்திடவே!   

#
மகுட தாரிணி

நெகிழும் நிலையில் உன் மனம் இல்லை உன் மனதில் காயம் அதிகமோ வாழ்வில் புயல் வீசிய தருணங்கள் மறக்கமுடியாத வலியினை தந்ததோ மடிந்து போன மனதை வருடி உன்னை உருக்கி விட்ட இக்கள்ளியிடம் மனதை பறிகொடுத்தாயா உருகி மருகி காதல் புரிகின்றாயோ.

#
Ilakkiya sri

உனக்கான கவிதை மடல் 1... என்றும் உன்னையே சேரும் கவி... எழுத்துக்கள் ஏராளம்! சொற்களோ தாராளம்! நம் மொழியில், நான் கவி வடிக்க, அத்தனையும் போதவில்லையே! உன்னுடைய அன்பு, அது கிடைத்ததும், எழுத்துக்கள் நடனமாட, சொற்கள் முண்டி அடித்துக் கொண்டு, வருவதை காண்கின்றேன்! இதோ என் கவி உனக்காக, இது உனக்கான கவி! என்றும் உன்னையே சேரும் கவி!

#
மகுட தாரிணி

மனித மனம் காதலை விட காதலிக்க படுதலையே விரும்புகின்றன காதலைபெற ஏன் காதலிக்க பட வேண்டும் காதல் செய்யலாமே......

#
Shalini B

என் கவிதைக்கு விதை தந்த கவிதை நீ!! உன்னை விட அழகான கவிதை எழுத தோற்று போய் உனக்காக கவிதை எழுதி கொண்டிருக்கிறேன்!!!! நீ பூப்பறிக்க செல்லும் போதெல்லாம் பூக்களுக்குள் சண்டை உன்னை யார் அலங்கரிப்பதென்று!!!!! பிரம்மனும் தோற்கிறான் உன்னைவிட அழகான ஒன்றை படைக்க முயன்று....!!அழகுள்ளவையெல்லாம் அழகற்றுத்தான் போகிறது உன் முன்னால்.....

#
Bharathi Bharathi

உன்னை நினைக்கையில் மனம் சலசலவென ஓடும் நதி போல் இதயம் சற்றே துள்ளலுடன் சுவாசித்தது மகிழ்வுடன் உன்னை நினைக்கையில் இதயம் சலசலவென ஓடும் நதி போல் மனம் சற்றே துள்ளலுடன் சுவாசித்தது மகிழ்வுடன் நினைவின் வசந்தங்கள் அழியா காவியங்கள்.

#
Ilakkiya sri

அழகிய மலராக நீ மலர அழகிய நினைவாக நான் இருக்க இரகசிய சந்தங்கள் நீ வாசிக்க இரகசிய பந்தங்கள் நான் சுவாசிக்க புத்தக சாலையாக நீ இருக்க அதன் உட்கருத்தாய் நான் இருக்க சந்தன சாற்றில் நீ கரைய சந்தன வாசத்தில் நான் சுகிக்க மலர்களில் ஒளிந்து கொண்ட தேனாய் நீ இருக்க தேன் சுவைக்கும் வண்டாய் நான் ருசிக்க இருவரும் நினைவுகளில் பயணிப்போம் காதலுடன்

#
Ilakkiya sri

உண்மையா காதலிங்க இடையில சண்டை வரும் சந்தேகம் வரும் .... அதுக்காகெல்லாம் விட்டுட்டு போயிறாதிங்க.....

#
Karuppasamy

காயமும் இல்லை ரத்தமும் இல்லை.... ஆனாலும் வலிக்கிறது..... சிலரின் பிரிவால்...

#
Karuppasamy

உன்னுடனான எனது பயணம்... கத்தும் கடல் அலைகளின் நீர்த் திவலைகள் மட்டுமல்ல என்னுள் சீறிப் பாய்ந்தது  உன் பிரிவின் தவிப்புகளும் தான்! சுட்டெறிக்கும் வெயிலின் கானல் நீரில் விழுந்து உன் அன்பென்னும்  கரையேரியது என் வாழ்க்கை! வீழ்ச்சியும் வாழ்வில் ஏற்றம் காணும் பெண்ணே நீ என்னுடன் பயணிக்கையில்!

#
மகுட தாரிணி

தூரமும் தொற்றே போகும் நம் நினைவு அலைகளின் நெருக்கத்தால்

#
Shalini B

என்னடி செய்தாய் என் மனதை தாயை கண்ட குழந்தை போல உன்னை கண்டால் தாவி குதிக்கிறதே தாவும் என் மனதை ஒரு முறையாவது ஏந்திக்கொள் இல்லையென்றால் உன்னிடம்தான் வருவேனென என்னை ஆயுளுக்கும் நச்சரிக்கும்..... என் மன குழந்தையை ஒரு முறையாவது கொஞ்சிவிட்டு போ அதற்கு தானே அது படைக்கப்பட்டிருக்கிறது.... திருவிழாவில் ஊரே சாமி பாக்க இது மட்டும் உன்னை பார்த்து கொண்டிருக்கிறது... உனக்கென்ன ஒரு பார்வை பார்த்து சென்று விட்டாய் தாயை தொலைத்த குழந்தையென என் மனது தவிக்கிறது......

#
Bharathi Bharathi

நான் சுவாசிக்கும் காற்று கூட என்னை வஞ்சிக்கும் உன் சுவாசத்திலிருந்து வருவதால்

#
kavithaii virumpi...

ஞாபகங்கள் பல உண்டு உன் நினைவு மட்டும் அழியா வடு

#
kavithaii virumpi...

நெஞ்சோரத்தில்... சிலை வடித்தேன் உன் வடிவதனை என் நெஞ்சினிலே - ஏனென்று  கேளடி எந்தன் கண்மணியே! உன்னை மறக்காமலிருக்கத் தான் என நீ நினைத்தால் - பெண்ணே அது வெறும் மாயை!! இதயத்தைப் பறிக்காதே என்று உரைக்க என்னால் என்றுமே இயலாது − ஆதலால், இதயத்தினருகே உன்னை குடி பெயர்த்தேன்! அனுதினமும் என் இதயம் துடிப்பது உனது நினைவினில் தான் - என்பதை நீ அறிய நான் நினைவூட்டினேன்! நொடிப் பொழுதில் ஒருவரை அங்கீகரிக்க முடியும்  − என்பதை  எனக்கு உணர்த்தியவள் நீ தானே! நொடிப் பொழுது தோறும் உன் நினைவில் துடித்திருக்க − அதனை உனக்கு எடுத்துக் காட்டத் துணிந்தேன் நானே! எப்போதும் என் அருகாமையை பரிசளிக்க உன்னை குடி பெயர்த்தினேனடி − என் நெஞ்சோரத்தில்! அறிவாயோ என் சகியே!

#
மகுட தாரிணி

உன் அன்பெனும் எண்ணெய் வற்றாதவரை நானுமோர் சுடர்விட்டெரியும் விளக்கே

#
King Mass

உன்னை பிடித்துவிட்டதால் இனி உனக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது...

#
King Mass

நீ உடனில்லாத போது உன் நினைவுகளுடன் பயணிக்கின்றேன்

#
King Mass

கண்ணீர்... உன் விழிகளில் நான் இமையாகினேன்! உன் நம்பிக்கையைப் பெற! உன் நம்பிக்கையை காவல் வைத்து உன் இதயத்தினுள் குடியேறினேன்! மெல்ல! மெல்ல மெல்ல... கண்ணுக்கு இமை போல, மனதுக்கு ஒழுக்கம் போல, உன்னுடைய அருகாமையில் திளைத்திருந்தேன்! உன்னுடைய சிரிப்பை  உனது கண்களில் சிறை வைத்தேனே! விழிகளிலிருந்து வழியும் கண்ணீராகினேன்! உன்னை விட்டு விலகாமல் இருக்க அல்லும் பகலும் பாடு பட்டேனே! எல்லாம் எதற்காக? உன்னிலிருந்து கண்ணீராக வெளியேரவா? இல்லை, உன் கண்ணீரை நான் என் பரிசாக  எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்... உன்னுடைய சிரிப்பை  உனது கண்களில் சிறை வைத்துவிட்டேன்! என்றும் மலரும் உன் சிரிப்பு! அதை உன்னிடமே விட்டு விட்டேன்! என் நியாபகமாக!

#
மகுட தாரிணி

கண்களைப் போல் இதயமும் வெளியே தெரிந்தால் . நமக்காக சிலரின் இதயம் துடிக்கின்றதா நம்மை கண்டு நடிக்கின்றதா என்று தெரியும்..சாந்தமுடன்.syed

#
Basha Syed

என்னை விட்டு விலகி போனாய் நெருங்கி வந்தேன்.வெறுத்துப்போனாய் விரட்டி வந்தேன்.இனிமேலும் தெடர மாட்டேன் உன்னை மட்டும் அல்ல உன்.நிழலை கூட....சாந்தமும்.சையத்..

#
Basha Syed

காதலிக்கும் போதும் தெரியும்.... காத்திருக்கும் போதும் புரியும்.... ஆனால், கத்தரிக்கும் போது தெரியாது       என்ன சொல்ல வருகிறேன் என்று உனக்கு புரிகிறதா அன்பே !

#
S Sankari

மணம் வீசும் மல்லிகையே உன் வாசத்தில் ஏங்கி வந்த என்னவளின்  வாசம் கண்டு கைகளில் மலர்ந்தாயோ  இனி உன்னை விடுவிப்பாளா இருவரின் வாசத்தில் சிக்குண்டு என்னவளின் கரம் பற்ற முடியாமல் தவிப்பவனும் நான் தானே.

#
Ilakkiya sri

உன்னைக்காண நேர்ந்தால் நிதமும் உன்னுடன் கதைப்பேன் உன் கண்மணியில் சிந்து பாடுவேன் புன்னகை மலராய் இதழ்களில் கலகலவென மலர்வேன் மலர்த்தேன் போல தேனாய் இனிப்பேன் நேசத்துடன்.

#
Ilakkiya sri

சிறுசிறு சண்டைகள் காதலின் அம்சம் பார்வைகள் சந்தித்தால் ஊடலும் ம(ப)றந்துபோகும் ️ தோற்றுத்தான் போகின்றது என் பிடிவாதம் உன் அன்பின் முன் நீயருகிலிருந்தால் இருளிலும் நான் பௌர்ணமியே... கவிதை எழுத காதல் தேவையில்லை..... பெண்களின் அழகை ரசிக்க தெரிந்தாலே போதும்.......!!!! வருடாவருடம் பூ புதிதாகலாம் ஆனால் வாங்கும் ,கொடுக்கும் கை மாறக்கூடாது........ உன் அன்பெனும் எண்ணெய் வற்றாதவரை நான் ஓர் சுடர்விட்டெரியும் விளக்கே உன்னை பிடித்துவிட்டதால் இனி உனக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது... இதயமும் ஒரு ரகசிய சுரங்கம் சின்னச்சின்ன ஊடல்கள் உன்னை பிரிவதற்கல்ல நம் காதலை வளர்ப்பதற்கு நீ உடனில்லாத போது உன் நினைவுகளுடன் பயணிக்கின்றேன் விடுவிக்க முயன்றும் தோற்றுப் போகிறேன்....உன் பார்வை பிடியிலிருந்து உன் நினைவுகளோடு பேசிப்பேசி ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன் சோகங்கள் இதயத்தை துளைக்கும் போதெல்லாம் புல்லாங்குழலும் கண்ணீர் வடிக்கின்றது இவள் மறைய அவன் வர அவன்மறைய இவள் வரவென்று வானிலும் ஓர் கண்ணாமூச்சி நடுநடுங்கும் குளிரில் அணைத்துக்கொண்டே உளறாமல் பேசு என்றான் எனக்காக நீ விட்ட ஒரு சொட்டு கண்ணீர்.... உனக்காகவே வாழவேண்டுமென்று இதயத்தில்... உறைந்துவிட்டது நாணத்திற்கு விடுதலை கொடுத்தேன் வளையல்களும் தலைக் கவிழ்ந்தது கரைசேர துடுப்பிருந்தும் கரையேறும் எண்ணமில்லை நிலவொளியில்...உன் நினைவுகள் நிறைந்திருப்பதால் நீ மௌனமாகும் போதெல்லாம் என் கவிதைகளும் கண்ணீர் வடிக்கின்றது... விழிகளுக்குள் நீயிருக்கும் வரை என் கனவுகளும் தொடரும்... படிக்காமலேயே மனப்பாடமாகிப்போனது உன் நினைவுகள் சிறை வாழ்க்கையும் பிடிக்கும் அது உன் இதயமென்றால் கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரையிலாம்..... உன் விழிக்கவிதையின் அர்த்தம் புரிந்தபின்னே நான் சுவைக்கவே ஆரம்பித்தேன் ஒரு நொடி வந்து போனாலும் மனதை ரணமாக்கியே செல்கிறது சில நினைவுகள்... நினைவென்றாலே... அது நீயானாய்... கெஞ்சலும் கொஞ்சலும் காதலில் அழகு தொலைவேன் என்று தெரியும் ஆனால் உனக்குள் இப்படி மொத்தமாய் தொலைவேன் என்று நினைக்கவில்லை வார்த்தைகள் ஊமையாக உன்வசமானேன் காதல் மழையில் குடை நனைய.... குடைக்குள் காதலில் நாம் நனைகிறோம்..... நிலைக் கண்ணாடி என் முகத்தை காட்டினாலும் மனக் கண்ணாடியில் உன் முகத்தையே ரசிக்கின்றேன் கண்களுக்குள் என்னவன் கனவே கலையாதே தொலை(ந்த)த்தஒன்று உனக்காக காத்திருக்கலாம் தொலையாமல்... என்னவனின் அன்பில் எல்லையற்ற மகிழ்ச்சியில் நான்....... என் வானம் நீ தேய்ந்தாலும் மறைந்தாலும் மீண்டும் வலம்வரும் நிலவாய் நான்... காதல் தூறல் போட சட்டென வானவில்லாய் ஆனது மனம்... மனக்கடலில் நீ குதிக்க மூழ்கிப்போனேன் நான் சூடாக நீ தந்த ஒரு கப் காஃபி இதமாகவே இருந்தது உன் அன்பில் உள்ளத்தின் வண்ணமது தெரிவதில்லை உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை பூ போன்ற மனம் என்றாய் ரசித