சிலரிடம் விலகாமலும், நெருங்காமலும் இருக்கிற,
தண்டவாளத்தை போட்டு வையுங்கள்..!"
உங்கள் நட்பு,
விபத்தில்லாமல் போய் கொண்டிருக்கும்...!!
RK
Kalpana Subramaniam
ஆசை கரங்களை கொடுக்க வருவது தான்
காதல்..!"
ஆனால்..,
கஷ்டத்தில் யோசிக்காமல்
அருகில் நிழலாக,
துணை நிற்பது தான்
நட்பு...!!
RK
Kalpana Subramaniam
எனக்கு கிடைத்த முதல் தோழி எனக்கு எதிரியாக இருந்தாலும் சரி நான் உன்னை நண்பராக பார்ப்பேன்
Ananthi Ananth
என் அருகே இருக்கும் உண்மையான நட்பை இழந்துவிட்டு தொலைவில் இருக்கும் பொய்யான நட்பை தேடுகிறேன்
Ananthi Ananth
நண்பர்கள் இருக்கும் போது அவர்கள் அருமை தெரியாது அவர்கள் இல்லாத போது தான் அவர்கள் அருமை தெரியும்
Ananthi Ananth
நீ என்னை எதிரியாக பார்த்தாலும் நான் உன்னை நண்பராக பார்த்தேன் என் நண்பியே
Ananthi Ananth
ஒருவரின் அன்பை
நாம் உணரவில்லை
என்பதை
அவரின் பிரிவுக்கு
பின்னால் தான்
மனம் உணருகிறது..
மறக்க முடியாத
அந்த நாட்களையும்,
மறந்துவிட முடியாத நேரங்களையும்,
அவர் பிரிந்த பிறகே
பசுமையாக
மனதில் நிலவுகிறது..
கவிதையின் காதலன் ரவி
அடுத்தவர் மனதை
அறியாமல் அவருடன்
ஒன்றி போகாதே..
முகமா, முகமூடியா
என்று அறியாமல்
அகத்தை பகிர்ந்து
கொள்ளாதே..
இடமும், ஏவலும்
புரியாமல் பொருளை
இழந்து நிற்காதே..
கவிதையின் காதலன் ரவி
ஒரே கிராமத்தில் பிறந்தோம்
ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தோம்
ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தோம்
அலுவலக பணி நம்மை பிரித்தது
செல்போன் வீடியோ கால் நம்மை இணைக்கிறது
நம்மை யாராலும் பிரிக்க முடியாது நண்பனே
மரணத்தை தவிர
vasathi
எல்லோருக்கும் முன்னேற ஒரு
காலம் வரும்..
அது சிலருக்கு கஷ்டங்களோடு
கலந்து வரும்..
சிலருக்கு கஷ்டங்களை கடந்த பின்னர்
வரும்..
Karuppasamy
தேடும் முன்
தேடாமல் வரும் நினைவில்
ஓடி வந்து
ஒட்டிக்கொண்டதோர்
தோய்வு..
எழுதும் முன்
தேனாக வரும்
வார்த்தையிலும்
மாறி வருகிறது
தேன் சுவையில்லா இனிப்பு..
நினைக்காதே என்று
நினைவூட்டி என்னை
குரலடைக்க செய்கிறது..
இடைப்பிடித்த கையும்
எழுதிட அடம் பிடிக்கிறது
செய்வதறியாமல் மனமும் செயலிழக்கிறது..
கவிதையின் காதலன் ரவி
கொடுக்கும் அன்பும்
குறையாது
காட்டும் இடமும் மாறாது..
மனதை நிறைக்க
தயங்காது
நிறையாமல் அன்பும்
ஓயாது..
தரமும் குறைந்து
போகாது..
அன்புக்கு அழகெதுவும் கிடையாது..
அழகில் வரும் அன்பும்
நிறையாது..
நிறையாத மனம்
கரை சேராது..
கவிதையின் காதலன் ரவி
சுயநலமான நண்பனுடன்
நட்பாய் இருப்பதை விட
நண்பனே இல்லாமல்
இருப்பது எவ்வளவோ மேல்..️
Karuppasamy
#நீ ரசிக்கும் அளவிற்கு நான் அழகானவனாய் .இல்லாமல்
இருக்கலாம்..........
/#ஆனால்..
#உன்னை ரசிக்கும் அளவிற்கு நான் அன்பானவன்...!!
Karuppasamy
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்
ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம்
நல்ல நண்பர்கள்!
Janu Aruns
ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதில் கூட ஆனந்தம் உண்டு
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுவதால் கூட சுகம் உண்டு
Janu Aruns
ஒரே ஒரு நல்ல நண்பன்
உன் வாழ்க்கையில் இருந்தாலும்
நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்
Janu Aruns
எதையும் செய்ய கூடிய நட்பு கிடைத்தும்,
அதை உபயோகித்துக் கொள்ளாததில் இருக்கிறது
நட்பின் அழகு!
Janu Aruns
தோல்விகள் கூட இனிக்கும்
வெற்றி பெற்றது உன் நண்பனாய் இருந்தால்
Janu Aruns
நல்ல நண்பனை அடைய விரும்பினால்
நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்
Janu Aruns
எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் புன்னகை,
நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!
Janu Aruns
நண்பர்கள் தவறு செய்தால்
மன்னித்து விடாதே
மறந்து விடு
ஏனெனில் அவர்கள் உணர்வுகள்
உன் உறவுகள் அல்ல
Janu Aruns
நட்பு என்ற வார்த்தை
இந்த உலகில் உலவும் வரை
இங்கு யாரும் அனாதை இல்லை
Janu Aruns
அன்பு என்பது பிடித்தவர்கள்
ஆள்வதற்கு அல்ல
அவர் மனதில் நிரந்தரமாக
வாழ்வதற்கே..!
Karuppasamy
வர மாட்டாய்
என்று நினைத்து
கொண்டிருந்த போது
எதிர்பாரா மழையாய்
வந்து விட்டாய்
உன் வருகையின்
ஈரத்தில் முழுக்க
நனைந்து விட்டது
மனம்
Karuppasamy
என்ன நடந்து விடுமோ என்று
யோசித்து இருப்பதை விட ,
மோதி பாருங்கள்
எழுந்தால் வெற்றி
விழுந்தால் அனுபவம்...
Karuppasamy
தோன்றிய தோற்றம்
தினம் மாறும்..
ஊன்றிய அன்பு
விதையாகும்..
ஆழமாய் படர்ந்து கிளையோங்கும்..
மனதில் நினைவாய் பதிவாகும்..
என்றும் அழியா
நிழலாகும்..
கவிதையின் காதலன் ரவி
நீ என்னை காணாமல்
நான் உன்னை
ரசித்திருந்தேன்..
பூவே உன் புன்னகையின்
சோகத்தையும் அறிந்திருந்தேன்..
சிரிப்பே உன் பலமென்று
பூச்சூட அழைத்திருந்தேன்..
சிரித்தே சிறையிட்ட
உன்னை சிரிப்பழகி
என்றும் வர்ணித்தேன்..
கவிதையின் காதலன் ரவி
வெளியில் அதிகமாக சிரித்திடுவான்
தனிமையில் சோகம் கொண்டிடுவான்..
அதிக நேரம் தூங்கிடுவான்
சோகத்தின் அளவை நீட்டிடுவான்..
நேரம் குறைத்து பேசிடுவான் மனதில் ரகசியம் காத்திடுவான்..
கண்ணீரை அடக்கி ஆழ்ந்திடுவான்
மனதில் பலவீனம் ஆயிடுவான்..
கஷ்டமென்றால்
கலங்கிடுவான்
மென்மை மனம் கொண்டிடுவான்..
அதிகம் கோபம் கொண்டிடுவான்
அன்பிற்காக ஏங்கிடுவான்..
கவிதையின் காதலன் ரவி
காரணம் இல்லாமல்
கலைந்து போக
இது கனவும் இல்லை..
காரணம் சொல்லி
பிரிந்து போக
இது காதலும் இல்லை..
அறிமுகம் இல்லாத போது
தொடங்கிய நட்பு..
உறவுக்கு மேலே
உயிரான நட்பு.
உயிர் உள்ளவரை
தொடரும் நட்பு..
காலங்கள் கடந்தாலும்
பிரியாத நட்பு..
கவிதையின் காதலன் ரவி
உண்மையான பாசம்
கொண்டவர்களுக்கு
கடுமையான சொற்களை
தாங்கும் சக்தி கிடையாது ...
Karuppasamy
தொலை தூரத்திலும்
இருக்கிறேன்..
தொட்டு விடும் தூரத்திலும்
இருக்கிறேன்..
பேசியும் இருக்கிறேன்..
பேசாமலும் இருக்கிறேன்..
மாடியிலும் இருக்கிறேன்..
தெருக்கோடியிலும் இருக்கிறேன்..
பணத்துடனும் இருக்கிறேன்..
பைசா இல்லாமலும் இருக்கிறேன்..
வேறு, வேறு மதத்திலும்
இருக்கிறேன்..
ஆனால்
மனதால் ஒன்றுபட்டு
உருகிய உள்ளத்துடன்
எப்போதும் ஒன்றியே இருக்கிறேன்..
என் பெயர் தான் நட்பு..
மூவரில் ஒருவரை மட்டும் புறக்கணித்து விட்டு மற்ற இருவரும் சேர்ந்து கொண்டு நம் நட்புதான் இந்த உலகிலேயே சிறந்த நட்பு என்று சொல்லுவது மிக சிறந்த போலி நட்பாகும்
Sujitha Jin
தோளோடு தோள்
இணைந்த தோழிகள்..
இனிமையான
வாழ்க்கையை
திகட்ட திகட்ட
காதலிக்கும்
அன்பான உறவுகள்..
வாழ்க்கையின்
வழிப்போக்கில்
அன்பால் இணைந்தவர்கள்..
மௌன மொழியிலும்
அன்பை பகிர்ந்து கொண்டவர்கள்..
அன்பொன்றே
பேராயுதமென்று
உணர்ந்தவர்கள்..
காற்றுணரும் வரை
நெஞ்சுணரும் நட்பிற்கு அடிமையானவர்கள்..
கவிதையின் காதலன் ரவி
நட்பு என்று சொன்னா எதை சொல்லனும்! நண்பன் மாத்திரம் தான். வேறு எதுவும் ஈடகாது. (நட்ப்பின் மரு பெயர் நண்பன்)
நட்பின் மடியில் அமைதியாய் உறங்கும்..
ஆயிரம் கோடியில் நானும் ஒருத்தி..
முகம் காணாமல்..
முகவரி அறியாமல்..
இணைந்த போதும்..
அகத்தில் அழியா தடம் பதித்து..
நிலைத்துவிட்டோம்..
பலரின் பெயர் கூட தெரியாமல்..
நட்பெனும் ஓரே பெயரால் வாழ்கிறோம்..
தாய்மைக்கு நிகராக நிற்கும்..
நட்புக்கு எவ்வுலகிலும் இல்லை..
அகவைகள் ஐம்பதை கடந்தாலும்..
துள்ளும் மழலையாய்..
நமை மாற்றிடும் உறவிது..
அழும் போது ஆறுதல் சொல்ல..
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்..
அழவே விடாத நல் நட்பில்..
நாம் தொலைந்து போகின்றோம்...!!
RK
Kalpana Subramaniam
என் நட்பே!!
உன்னோடு நான்
கொண்ட நேசம் நட்பு
என்பதால் உன்னை என்
தோழியாகவே மனதில்
ஸ்தானம் கொடுத்தேன்
நீ என்னை என்ன
நினைக்கிறாய் என்று
தெரியவில்லை உன்
மௌனம் பேசாது என்னை
கடந்துபோகுவதினால்....
#ராதையின்கண்ணன்
கவிகண்ணா
காதலும் நட்பும்..
இரு கவிதைகள்..!
அன்பான நட்பை..
நேசிக்கிறேன்..!
நேசிக்கும் நட்பை..
காதலிக்கிறேன்..!
நட்பு உன் மீது..!
காதல் உன் நட்பின் மீது..!!
RK
Kalpana Subramaniam
விடியாத இரவும் இல்லை
பிரியாத உறவும் இல்லை
இரவுக்கும் பகலுக்கும் இடையே நட்புக்கு இடைவெளியே இல்லை
Rabinesh Mydreamawar
பார்த்ததும் பழகிக் கொண்டோம்.
பல நினைவுகளை
பகிர்ந்து கொண்டோம்.
பல வருடங்கள்
கடந்த பின்பும்.
நட்பை மட்டும் நினைவில் கொண்டோம்.
manilakshmi ️
mani lakshmi
Food which is consumed by us should be blessed with universe and divine energy. by our ancestors it is blessed, quality of food, food value all these will work for us if blessing of food is transferred to us. Each of our cell is blessed, our empty stomach gets blessed when it's filled with digestive food. Source of food, the effort made for making it, for serving and distributing it, the positive way it is made all are bringing blessing to food, the stored blessing in food accumulated and delivery of blessing to our cell and stomach. Food made for living, made for creating distance with hungry, made for poor people are blessed food as food is serving to universe, food is made for welfare of society and welfare of universe and for good purpose. Blessed food are those which does not create any negative energy in our body, which makes us complete relaxed, calm, peaceful mindset mainly the Sattik Food, Vegetable food, food with less oil, avoid Jung food and Street Food are blessed food not any other type of food such as Rajashik food and Tamashik Food. The food which is easily digestible is blessed food. The blessing in culture is transferred to that of cultural food, blessed family and food consumed by that family is blessed food. Any blessed moment, positive and beautiful moment when in that moment food is consumed with care and love become blessed food. Access to any food, being aligned with a food and it's value when increased our value, when our energy is aligned with energy of food is called blessed food. Being full of aware about what and why while eating any food with concentration, mindfulness and having gratitude for the food we have for today at this moment makes the food blessed.
Arka Samanta
வானத்தின் சொந்தம் விண்மீன்கள்..!
மலரின் சொந்தம் வண்டுகள்..!
காற்றின் சொந்தம் தென்றல்..!
நட்பின் சொந்தங்கள்..!
நல்ல நினைவுகள்...!!
RK
Kalpana Subramaniam
சோதனைகள் வந்தாலும்..
சாதனைகள் புரிந்தாலும்..
உன் தோள்சாய்ந்து..
நான் வெற்றி கூச்சலிட..
நட்பாய்..
நீ எனக்கு வேண்டும்...!!
RK
Kalpana Subramaniam
எதிர்பார்ப்பின்றி..
எதிர் பாராமல்..
எம்
வாழ்வில் வந்து..
எம் மனதில்..
என்றும் நிலைக்கும்..
நித்திய உறவே
நட்பு...!!
RK
Kalpana Subramaniam
Even if someone loves me a little bit
.I have more love for him than that
நட்புடன்
உறவாடினார்கள்
பல நண்பர்கள்..!"
சிலர்
உடைத்தே விட்டார்கள்
இதயத்தை..!"
உடைந்த இதயத்தை
நீ ஒட்டி வைத்தாய்,
இனிய நண்பனாக வந்து..!"
ஒட்டும் போது நான்
உணரவில்லை,
என்றாவது
நீயும் உடைப்பாயென்று...!!
RK
மெல்லிய காற்றிலும் நட்பு என்கிற இதயம் ஈரப்பதத்தோடு துடிப்பதால் அவதார் போல் பல உயிர்கள் தோற்றம் பெறுகின்றன......
காளையத் தமிழன்
#கொஞ்சம் கொஞ்சமாக
வெளியேற தோன்றுகிறது..
#நம் மீது துளியும்...
#விருப்பம் இல்லாத ...
#உறவுகளிடம் இருந்து ️
Karuppasamy
நட்பே நட்பே
யாசகம் கேட்கின்றேன்
உன் நேசத்தை
யாசகம் கேட்கின்றேன்
உன் வேடமில்லா உறவினை
யாசகம் கேட்கின்றேன்
உன் உதவும் கரங்களை
யாசகம் கேட்கின்றேன்
உன்னுடன் ஊஞ்சலாடிய தருணங்களை
யாசகம் கேட்கின்றேன்
மீண்டும் மீண்டும்
உன்னுடன் பயணிக்க...
Ilakkiya sri
பள்ளி காலத்தில்
தொடங்கும் நட்பு
பூமியில் நாம் சுழலும் வரை
குறிஞ்சி மலராய் பூக்கும்..
வளர்த்த இடம் பிரிந்து
புது இடம் மாறினாலும்
மாறாத அன்புடன் தொடரும்..
தேசம் விட்டு
தேசம் சென்றாலும்
நேசம் மட்டும்
வேசம் கொள்ளாமல்
பாசம் கொள்ளும்..
அன்பு என்ற
தூண்டிலில் பிடித்து
பாசம் என்ற
வலைக்குள் சிறை வைத்து..
உன் நினைவை நானும்
என் நினைவை நீயும்
பரிமாறி கொள்ளும் அதிசயமானது..
கவிதையின் காதலன் ரவி
மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ...️
Karuppasamy
புரிந்து கொண்டால்
கோவம் கூட அர்த்தம்
உள்ளதாய் தெரியும்
புரியவில்லை என்றால்
அன்பு கூட அர்த்தம்
அற்றதாய் தெரியும்..
Karuppasamy
நட்பு என்பது குழந்தை
போல இன்பத்திலும்
துன்பத்திலும் பிரியாமல்
புன்னகையோடு இருக்கும்
MURUGESAN KR
நண்பர்களைப் பற்றி
நல்லது பேசு
விரோதியைப் பற்றி
ஒன்றும் பேசாதே .
MURUGESAN KR
#இதயங்கள் அருகில்
இருக்கும் பொழுது
இருக்கும் இடங்கள்
ஒன்றும் தூரமில்லை..!
Karuppasamy
உன் இடையை ரசிக்க
முயல்கையில் தன்னையும் ரசிக்க சொல்லி இடையூறு செய்கிறது உன் இரு கவிதைகள் ..
Karuppasamy
எதிலும் அளவோடு
இருந்தால் அசிங்கப்பட
தேவையில்லை.
MURUGESAN KR
கண்ணுக்குள்ள காந்தம் வச்சி வார்த்தையில வெறுப்பு வச்சி வாய் வாஎன்று சொல்லி வச்சு வாடிடவே கிள்ளி வச்சி மனசுக்குள்ள என்ன வச்சி மறச்சு மறச்சு சொன்ன பேச்சு ஒதுங்கிடவே நீ நெனச்சு ஓயாமல் கண் விழிச்சு ஒரடியா ஈ ரடியா அடி மேல அடி அடிச்சு வானத்து மழை போல உன் பேச்சு கடல் மேலே கொட்டி தீர்த்த மழை போலே காணாமல் போச்சு எல்லாம் பொய் தானே எதுவும் சில காலம்
Palani Muthu
என் வாழ்வின் வசந்தம்...
நினைத்ததை அடைய முடியாதது தான்
வலியில் மிகவும் கொடியதென
நினைப்பில் வாடிக் கிடந்தேன் நானடி!
அடைய வேண்டிய இடத்தை
உணர முடியாதது தான்
வலியின் கொடுமையின் உச்சம் என்று
என்னை உணர வைத்தவள் நீயடி!
நினைத்ததை அடைவதால் கிடைக்கும்
பெரும் மகிழ்ச்சியில் மூழ்கித்
திளைத்துக் கிடந்தவன் நானடி!
மற்றவர் நினைத்ததை
அவர்கள் சாதிக்க உதவுவதிலுள்ள
பெரு மகிழ்ச்சியில் திளைத்தெழ
என்னை உறைய வைத்தவள் நீயடி!
என் வாழ்வின் விளங்க முடியாத ஆழ்ந்த பொருள் நீயடி!
என் மாற்றத்தின் மார்க்கம் மீட்டும் இசை, அதுவும் நீயடி!
என் வாழ்வின் வசந்தம் என்றும் நீயடி!
என் இனிய தோழியே!
மகுட தாரிணி
பிடித்தமான ஒருவருக்கு பிடித்தவராக
இருக்க காரணம்..
யாருக்கும்
விட்டு கொடுக்காததை
பிடித்தவருக்காக விட்டுக் கொடுப்பதே..
விட்டுக்கொடுப்பதால்
அன்பு ஆழமாகும்
வாழ்க்கை அழகாகும்..
கவிதையின் காதலன் ரவி
ஊருக்குத்தான் ஊரடங்கு நமக்கில்லை என்றுயிருந்தோம்..
மனதோடு நடைபழக
கைபேசி என்றிருந்தோம்..
இரு மனதில் முகம் பதியும்
சுகம் ஒன்றை கொண்டிருந்தோம்..
பூ படரும் கொடி போல
மனதோடு படர்ந்திருந்தோம்..
கலக்கமில்லா மனதோடு கட்டுண்டு கலந்திருந்தோம்..
உறங்காமல் விடியும் வரை
கதை கதையாய் கதைத்திருந்தோம்..
வாழ்க்கையின் நிறை குறையை மறைக்காமல் பகிர்ந்திருந்தோம்..
அன்பெனும் பிடியினுள் பிடித்துப் போய் அடைந்திருந்தோம்..
இனிமையான தனிமை என்று தென்றலாய் மாறியிருந்தோம்..
தினதோரும் தமிழ் எழுதி பிழை திருத்தம் செய்திருந்தோம்..
தனிமையில் இனிமை காண ஆராய்ச்சி செய்திருந்தோம்..
நிறைகுடமென தழும்பாமல்
மன நிறைவு கொண்டிருந்தோம்..
கவிதையின் காதலன் ரவி
தோற்று விட்ட
என் மனதில்
முற்றிடாமல் உன் நினைவு
சுற்றிட கண்டேன்..
செல்லும் இடமெல்லாம்
உன் சுவாச காற்று
சுற்றுவதை கண்டேன்..
சுற்றித்திரிந்த இடமெல்லாம்
உன் நினைவை தேடி சென்றேன்..
தேடி சென்ற இடமெல்லாம்
உன்னை தேடாமல் கண்டேன்..
கவிதையின் காதலன் ரவி
நிலவே
வானத்து படகே..
நீரின்றி எப்படி
மிதக்கிறாய்..
காற்றின்றி எப்படி
தவழ்கிறாய்..
ஒட்டாமல் எப்படி
ஒட்டி நிற்கிறாய்..
திரையின்றி எப்படி
மறைந்து போகிறாய்..
யாருக்கும் தெரியாமல்
எங்கே செல்கிறாய்..
என்பது புரியாமல்
கவலையில் நான்..
கவிதையின் காதலன் ரவி
அன்பில்லை உனக்கென்றால்
அன்புடன் நான் வருவேன்..
துணையில்லை உனக்கென்றால்
துணையாக நான் வருவேன்..
உதவியில்லை உனக்கென்றால் உதவிட நான் வருவேன்..
உறவில்லை உனக்கென்றால்
உறவாக நான் வருவேன்..
சுகமில்லை உனக்கென்றால்
நலம் தர நான் வருவேன்..
மனச்சுமை உனக்கென்றால்
சுமை தீர்க்க நான் வருவேன்..
தோள் தேவை உனக்கென்றால்
தோள் கொடுக்க நான் வருவேன்..
எனைப்பிடிக்கும் உனக்கென்றால்
உன்னோடு நான் வருவேன்..
மனதோடு சரி என்றால் தினதோறும் நான் வருவேன்..
கவிதையின் காதலன் ரவி
என்னைத் தேடும்
ஒருவரை
நான் தேடுகிறேன்..
நான் தேடும் ஒருவர்
என்னை தேடாததால்..
நான் தேடுவதையும் விடுவதில்லை..
நான் தேடுபவர்
என்னை தேடி வருவார்
என்பதால்..
கவிதையின் காதலன் ரவி
Ni mele uyarum pothu
ni yaar endru un
nanbarkhal arivargal.
aanal ni kile vilum
poyhuthan un
unmaiyana nanbarkhal
yaar enphatai ni arivai.
Krishnaveni Veni
தனிமை எனக்கு
மற்றொரு நண்பன்
அவனிடம்தான்
நான் பலமுறை
அறிவார்ந்த விசயங்களை
உரையாடி வருகிறேன்
Ram siva
பிரச்சினையில்லாத
மனிதன் இல்லை..
கடிந்து கொள்ளாத
கணவன் இல்லை..
அன்பை பொழியாத
பெற்றோர் இல்லை..
சண்டை இல்லாத
குடும்பம் இல்லை..
தொல்லை தராத
பிள்ளைகள் இல்லை..
புரிந்து கொண்ட
உறவினர் இல்லை..
புரிந்து கொள்ளாத
நண்பர் இல்லை..
கவிதையின் காதலன் ரவி
எதிர்பார்ப்பு இல்லாத
அன்பு இருந்தால்..
போலித்தனம் இல்லாத
உறவுகள் கிடைக்கும்
சுயநலம் இல்லாத
உறவுகள் இருந்தால்.
கைம்மாறு கருதாமல்
உதவிகள் கிடைக்கும்..
கவலை இல்லாத
புன்னகை இருந்தால்
கவலை போக்கும்
நட்புகள் கிடைக்கும்..
கவிதையின் காதலன் ரவி
அன்று..
நினைவு தெரிந்த
நாள் முதல் உதவியவர்
யாரும் இல்லை..
கை கொடுத்து
தூக்கி விட உறவென்று
யாரும் இல்லை..
பசியோடு நின்ற போது
உணவிட யாருமில்லை..
கவலையில் தோள் சாய என்னுடன் யாருமில்லை..
என் நலம் அறிந்து கொள்ள
எனக்கென்று
யாருமில்லை..
கனவிலும் உதவிட பெயருக்கென்று
யாருமில்லை..
உதவி குரல் கொடுத்திட
உரிமை என்று
யாருமில்லை..
தனியாகி போனதால்
தவிப்பவர்
யாருமில்லை..
என் உடல் நலம்
அறிந்தவுடன்
பலர் ஒன்றிணைந்து
உதவிடாமல்
இருந்திருந்தால்..
பகிர்ந்து கொள்ள
நானில்லை..
இன்று..
எனக்கு உதவிடாதவர்
யாருமில்லை..
கவிதையின் காதலன் ரவி
ஈரேழுலகும் போற்றிடும் – ஒரு
இனிதான உறவு நட்பு
உலகிற்கே அன்பை பொழியும் – ஓர்
உன்னதமான உறவு நட்பு
அன்பான நண்பனைப் போல
அழியாத சொந்தம் எதுவுமில்லை
வெறும் வார்த்தைகளால் கூறுவது நட்பல்ல
பல பேருக்கு அது உயிர்மூச்சு
அன்பான நண்பன் கிடைத்துவிட்டால்
அகிலத்தையே வென்றிடலாம்
அன்பாக எமை வழிநடத்தும்
அழகான பந்தம் நட்பு
எவ்வித துன்பம் வந்திட்ட போதும்
எமை அரவணைக்கும் உண்மையான நட்பு
வறுமை வந்திட்ட போதும்
எம் கை கோர்த்திடும் அன்போடு
பள்ளிக்கால நட்பைப் போல
பசுமையானது எதுவுமில்லை
பள்ளியில் தோள் சேரும் தோழமை
ஆயுள்வரை தொடர்ந்திட்டேல் பேரின்பம்
உலகமே திரண்டு எதிர்த்தாலும்
உன்னை விட்டு விலகாது என்றும்
நீ குற்றவாளியே ஆனாலும்
காப்பாற்றிட துடிக்கும் நட்பு
நல்ல நட்பே என்றும்
உலகத்தின் சிறந்த செல்வமாகும்
நல்லவனை நண்பனாக பெற்றுவிட்டால்
நானிலம் போற்றும் உன்னை
யாரிடமும் நம்மை விட்டுத் தராது
துன்பம் வரும்போது நம்மை கைவிடாது
நாம் கலங்கும் போது தோள் தரும்
ஈடு இணையில்லா உறவு நட்பு
நாம் தவறு செய்யும் போது
ஊக்கப்படுத்துவது உண்மையான நட்பன்று
வாழ்வில் தவறிடும் போது
சுட்டிக் காட்டுவதே நட்பு
அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்
ஆபத்திலும் நம்மை கைவிடாது
கூட நின்று காப்பவனே
உண்மையான நண்பன்
முகமது நட்பது நட்பன்று
நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு
என்றான் வள்ளுவன் – உயர் நட்பினை
பெருமைபடுத்தாதோர் யாருளர் இவ்வுலகில்
உண்மையான நட்பென்பது
சிரித்து பேசுவது அன்று
உளமார நெஞ்சத்தில் தோன்றுவதே
உண்மையான நட்பு
நம் நண்பனை வைத்து
நாம் யார் என்று கூறிவிடலாம்
நல்ல நண்பனே – நம்
நல்வாழ்வின் நற்சான்று
அன்னையின் அன்பும்
தந்தையின் கண்டிப்புக்களும்
ஒன்றாக அமைந்த ஒரு உறவு
அனைத்தும் பொருந்தியதே நட்பு
நட்பு எனும் மூன்றெழுத்து
இவ்வுலகத்தின் உயிர்மூச்சு
ஓர் உடலில் ஈருயிர் வாழ்வது
உண்மையான நட்பில் மட்டுமே
தனிமை நம்மை நெருங்கிடாது
துன்பம் நம்மை தொடர்ந்திடாது
மனதில் எங்கும் நிறைந்திடும்
மகத்தான உறவே நட்பு
நம் சந்தோசத்தின் மறு வடிவமாய்
நாம் மகிழும் போது மகிழ்ந்து
அழும் போது அரவணைத்து கொள்ளும்
ஒரு அக்கறையான சொந்தம் நட்பு
அளவோடு பழகுவது நட்பல்ல
அதிக உரிமையோடு பழகுவதே நட்பு
ஆபத்து நேரத்திலும் அருகிலிருந்து
அறிவுரை சொல்பவனே சிறந்த நண்பன்
தவறு செய்யும் போது தட்டிக் கேட்டு
தளர்ந்து சோரும் போது தட்டிக் கொடுத்து
ஆலோசகனாய் ஆசானாய்
அனைத்துமாய் இருப்பவனே நண்பன்
துரியோதனுக்கு ஒரு கர்ணன் போல
குசேலனுக்கு ஒரு கண்ணன் போல
உண்மையாய் ஒரு நண்பனை அடைந்து
உயர்ந்து விளங்குவோமாக.
John Sophi
உன் அமைதி அடுத்தவரை
கஷ்ட படுத்த வேண்டும்..
கஷ்டமின்றி அவர் கடந்தால்
கணித்து கொள்ள வேண்டும்..
தேவையில்லை நீ என்று
புரிந்து கொள்ள வேண்டும்..
உன் தேவை இருப்பவரை
தேடிக்கொள்ள வேண்டும்..
கோபமேதும் கொள்ளாமல்
அமைதி கொள்ள வேண்டும்..
நீ தேடும் ஒருவர் உன்னை
காண மறந்தாலும்..
உன்னை தேடும் ஒருவரை
நீ காண வேண்டும்..
கவிதையின் காதலன் ரவி
நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம்; ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்!
Yogeswari Yogeswari
நீ தேடும் பாசத்தில்
வெறுமையை கண்டேன்..
ஈர்ப்பின்றி கண்களில்
ஈரத்தை கண்டேன்..
அன்புக்கு ஏங்கும்
உள்ளத்தை கண்டேன்..
அன்பான வார்த்தையில்
மாற்றத்தை கண்டேன்..
இழந்தது உன்னையே
என்பதை கண்டேன்..
திரும்ப வா
இழந்த பாசத்தை
திருப்புகிறேன் என்றேன்..
கவிதையின் காதலன் ரவி
விட்டுட்டு போன
உறவுகள்
மீண்டும் தொட்டுக் கொள்ளும்
நிலை வரும் போது
யோசிக்காமல் முடிவெடுத்தேன்
மீண்டும் வேண்டாம் என்று..
வார்த்தையில் மட்டுமே
மாற்றம் இருக்கும்
மனதில் அதே
எண்ணம்தான்
நிலைத்திருக்கும் என்பதால்..
கவிதையின் காதலன் ரவி
அன்பாய் இருந்ததை
நேரில் பார்த்தேன்..
பாசமாக பேசுவதை
காதில் கேட்டேன்..
நேசம் காட்டுவதை
கண்ணால் பார்த்தேன்..
அக்கறை கூடுவதை ஆச்சரியமாய் பார்த்தேன்..
உண்மையா இதுவென்று அதிசயமாய் பார்த்தேன்..
சுயநலமே இல்லை என்பதை
நம்பாமல் பார்த்தேன்..
கவிதையின் காதலன் ரவி
சண்டையிட்டாலும் என்ன ஆயிற்று என வினவுவாள்,
அமைதியாக இருந்தாலும் என்ன ஆயிற்று என கேட்பாள்
அவள் இருளில் இருந்தாலும்
என்னை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாள்
யார் அவள்??? ️️
Kavi
உன் நண்பன் உன்னுடன்
இருந்தால் இந்த உலகம்
உன் காலின் கீழ் இருக்கும்
Nila run1969
எதுவும் இல்லாத போது
அவன் என்னுடன் இருக்கிறான் என்ற தைரியம்
நட்பில் மட்டுமே கிடைக்கும் ️️️️️️
Kavi
இவ்வானம் இடிந்தெந்தன் மெய் மீது வீழ்கயிலும்
'உன் மீது வீழாமல் பார்த்துக்கொல் சகோ...'
என்று தன் நெஞ்சே போகயிலும் உள் நெஞ்சின் சொல் கேட்டு பிற நெஞ்சிர்க்காக சொல்லும்
சொல்மிக்க மந்திரம்
இப்புவிமீதில்லயே....
RUPA
சொல்லப்போனால்,
சொல்வதற்கு வார்த்தையே கிடைக்கவில்லை.....
இந்த அறிமுகமில்லா பரிசை
பற்றி கூற.....
_Dheerov_ _dheerov_
நல்ல நண்பனின் நாகரீகம்
காதலிக்கும் போது உதவுவது நட்பல்ல
கஷ்டத்தில் இருக்கும்போது
உதவுவதுதான்
நல்ல நட்பு
Gayathri
மனிதனின் நடவடிக்கை
நாயை நாயாக மதித்தால்
நாய் நமது பீ யை தின்றுவிடும்
நாயை மனிதனாக மதித்து வீட்டில் கட்டி போட்டால் அது பீயை நாமதான் அள்ளிப் போட வேண்டும். அதைப்போல் சில மனிதர் குணங்கள் சரி இல்லை என்றால் நாயைப் போல் மதித்து அவரிடம் விலக வேண்டும். இல்லையென்றால் பீ நாத்தம் போல் உன் வாழ்க்கையும் நாறிவிடும்
Gayathri
பட்டமானது காற்று அடித்தால் மேலே போகும் காற்று இல்லாவிட்டால் கீழே விழும் நீ யும் அப்படி தான் நீ முன்னேறி மேலே போவதும் கீழே விழுவதும் நீ பழகும் நண்பர்களை பொருத்து தான் உள்ளது
Rajjuu
Mohammed Ramzan
....கூடு இல்லாத குறுவியாய் அலைகிறேன்.... நீ இல்லாத என் உலகத்தில்...
Siva Ranjani
மகிழ்ச்சியான தருணத்தில் நம்முடன் இருப்பதும் ️
துன்பத்தின் போது ஆருதளிப்பதும்
எச்சந்தர்ப்பத்திலும்
விட்டுக் கொடுக்காமல் நம்மை பிரிந்து செல்லாமல் இருப்பது தான் உண்மையான நட்பு
Rajjuu
Mohammed Ramzan
முகவரி அறியாமல்
உன் முகம் கண்டனே....
சிறு சிறு புன்னகையில்
அறிமுகம் ஆனேனே....
நாட்களும் நகர்ந்து செல்ல
நம் நட்பும் தொடர....
இடைவெளி இல்லா நேரம்
புதிதாய் பிறந்த
நட்பின் இலக்கணமாய் என்னில் நீ இருக்க...
காலமெல்லாம் நான் கைதியாய் உந்தன்
நட்பில் சிறைபட ஆசை தான்.......
எண்ணற்ற உறவுகள் இருப்பினும் நட்புதான்
அதே அன்போடு
கொரனாவிற்கு எனக்கு சோறு போட்டது
தாயுள்ளத்தோடு...
Ram siva
முகம் தெரியாத உறவாக அறிமுகமாகி......
இரத்த உறவினை மிஞ்சும் அளவிற்கு பாசமாகி....
இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுக்கும் எனது தோழமையே....
by,
A.jenisha.
Jenisha
மச்சி என்ன டா பண்ற...
இந்த வார்த்தை ஒன்றே எனக்கு அளிக்கும் என் நண்பன் எனது கவிதை தான்.... ????
Tamilselva selvan
பல நாட்களுக்கு ஒரு முறை பேசினாலும், நண்பனின் பட்டப்பெயர் தான் முதலில் ஞாபகத்தில் வருகிறது!
மல்லி
எப்படி ஒரு புத்தகம் உன் அறிவு
ஆற்றலை வளர்க்கின்றதோ..
அதுபோல ஒரு நண்பன்
உனக்கு கிடைத்தால் போதும்
பலகோடி புத்தகம் உன் கையில்
கிடைத்தற்கு சமம்
Alfie jo
இந்த உலகம் உங்களை விட்டுச் செல்லும் போது உங்களை தேடி வரும் அவனே உண்மையான நண்பன்.
Alfie jo
காற்று அடித்தால் கலைந்து போக- இது ஒன்றும் மேகம் அல்ல! காரணம் இல்லாமல் மறைந்து போக- இது ஒன்றும் கனவும் அல்ல! அருகில் சென்று பார்த்தால் காணாமல் போகும் கானல் நீர் அல்ல! நம் உயிர் கல்லறை செல்லும் வரை தொடரும் உண்மையான நட்பு!