Logo
உங்கள் கவிதைகளை பகிர ஆப்பை பதிவிறக்குங்கள்!
Logo

நட்பு கவிதைகள்

சிலரிடம் விலகாமலும், நெருங்காமலும் இருக்கிற, தண்டவாளத்தை போட்டு வையுங்கள்..!" உங்கள் நட்பு, விபத்தில்லாமல் போய் கொண்டிருக்கும்...!! RK

#
Kalpana Subramaniam

ஆசை கரங்களை கொடுக்க வருவது தான் காதல்..!" ஆனால்.., கஷ்டத்தில் யோசிக்காமல் அருகில் நிழலாக, துணை நிற்பது தான் நட்பு...!! RK

#
Kalpana Subramaniam

எனக்கு கிடைத்த முதல் தோழி எனக்கு எதிரியாக இருந்தாலும் சரி நான் உன்னை நண்பராக பார்ப்பேன்

#
Ananthi Ananth

என் அருகே இருக்கும் உண்மையான நட்பை இழந்துவிட்டு தொலைவில் இருக்கும் பொய்யான நட்பை தேடுகிறேன்

#
Ananthi Ananth

நண்பர்கள் இருக்கும் போது அவர்கள் அருமை தெரியாது அவர்கள் இல்லாத போது தான் அவர்கள் அருமை தெரியும்

#
Ananthi Ananth

நீ என்னை எதிரியாக பார்த்தாலும் நான் உன்னை நண்பராக பார்த்தேன் என் நண்பியே

#
Ananthi Ananth

ஒருவரின் அன்பை நாம் உணரவில்லை என்பதை அவரின் பிரிவுக்கு பின்னால் தான் மனம் உணருகிறது.. மறக்க முடியாத அந்த நாட்களையும், மறந்துவிட முடியாத நேரங்களையும், அவர் பிரிந்த பிறகே பசுமையாக மனதில் நிலவுகிறது..

#
கவிதையின் காதலன் ரவி

அடுத்தவர் மனதை அறியாமல் அவருடன் ஒன்றி போகாதே.. முகமா, முகமூடியா என்று அறியாமல் அகத்தை பகிர்ந்து கொள்ளாதே.. இடமும், ஏவலும் புரியாமல் பொருளை இழந்து நிற்காதே..

#
கவிதையின் காதலன் ரவி

ஒரே கிராமத்தில் பிறந்தோம் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தோம் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தோம் அலுவலக பணி நம்மை பிரித்தது செல்போன் வீடியோ கால் நம்மை இணைக்கிறது நம்மை யாராலும் பிரிக்க முடியாது நண்பனே மரணத்தை தவிர

#
vasathi

எல்லோருக்கும் முன்னேற ஒரு காலம் வரும்.. அது சிலருக்கு கஷ்டங்களோடு கலந்து வரும்.. சிலருக்கு கஷ்டங்களை கடந்த பின்னர் வரும்..

#
Karuppasamy

தேடும் முன் தேடாமல் வரும் நினைவில் ஓடி வந்து ஒட்டிக்கொண்டதோர் தோய்வு.. எழுதும் முன் தேனாக வரும் வார்த்தையிலும் மாறி வருகிறது தேன் சுவையில்லா இனிப்பு.. நினைக்காதே என்று நினைவூட்டி என்னை குரலடைக்க செய்கிறது.. இடைப்பிடித்த கையும் எழுதிட அடம் பிடிக்கிறது செய்வதறியாமல் மனமும் செயலிழக்கிறது..

#
கவிதையின் காதலன் ரவி

கொடுக்கும் அன்பும் குறையாது காட்டும் இடமும் மாறாது.. மனதை நிறைக்க தயங்காது நிறையாமல் அன்பும் ஓயாது.. தரமும் குறைந்து போகாது.. அன்புக்கு அழகெதுவும் கிடையாது.. அழகில் வரும் அன்பும் நிறையாது.. நிறையாத மனம் கரை சேராது..

#
கவிதையின் காதலன் ரவி

சுயநலமான நண்பனுடன் நட்பாய் இருப்பதை விட நண்பனே இல்லாமல் இருப்பது எவ்வளவோ மேல்..️‍

#
Karuppasamy

#நீ ரசிக்கும் அளவிற்கு நான் அழகானவனாய் .இல்லாமல் இருக்கலாம்.......... /#ஆனால்.. #உன்னை ரசிக்கும் அளவிற்கு நான் அன்பானவன்...!!

#
Karuppasamy

ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்!

#
Janu Aruns

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால் அழுவதில் கூட ஆனந்தம் உண்டு தூக்கி நிறுத்த தோழன் இருந்தால் விழுவதால் கூட சுகம் உண்டு

#
Janu Aruns

ஒரே ஒரு நல்ல நண்பன் உன் வாழ்க்கையில் இருந்தாலும் நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்

#
Janu Aruns

எதையும் செய்ய கூடிய நட்பு கிடைத்தும், அதை உபயோகித்துக் கொள்ளாததில் இருக்கிறது நட்பின் அழகு!

#
Janu Aruns

தோல்விகள் கூட இனிக்கும் வெற்றி பெற்றது உன் நண்பனாய் இருந்தால்

#
Janu Aruns

நல்ல நண்பனை அடைய விரும்பினால் நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்

#
Janu Aruns

எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் புன்னகை, நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!

#
Janu Aruns

நண்பர்கள் தவறு செய்தால் மன்னித்து விடாதே மறந்து விடு ஏனெனில் அவர்கள் உணர்வுகள் உன் உறவுகள் அல்ல

#
Janu Aruns

நட்பு என்ற வார்த்தை இந்த உலகில் உலவும் வரை இங்கு யாரும் அனாதை இல்லை

#
Janu Aruns

அன்பு என்பது பிடித்தவர்கள் ஆள்வதற்கு அல்ல அவர் மனதில் நிரந்தரமாக வாழ்வதற்கே..!

#
Karuppasamy

வர மாட்டாய் என்று நினைத்து கொண்டிருந்த போது எதிர்பாரா மழையாய் வந்து விட்டாய் உன் வருகையின் ஈரத்தில் முழுக்க நனைந்து விட்டது மனம்

#
Karuppasamy

என்ன நடந்து விடுமோ என்று யோசித்து இருப்பதை விட , மோதி பாருங்கள் எழுந்தால் வெற்றி விழுந்தால் அனுபவம்...

#
Karuppasamy

தோன்றிய தோற்றம் தினம் மாறும்.. ஊன்றிய அன்பு விதையாகும்.. ஆழமாய் படர்ந்து கிளையோங்கும்.. மனதில் நினைவாய் பதிவாகும்.. என்றும் அழியா நிழலாகும்..

#
கவிதையின் காதலன் ரவி

நீ என்னை காணாமல் நான் உன்னை ரசித்திருந்தேன்.. பூவே உன் புன்னகையின் சோகத்தையும் அறிந்திருந்தேன்.. சிரிப்பே உன் பலமென்று பூச்சூட அழைத்திருந்தேன்.. சிரித்தே சிறையிட்ட உன்னை சிரிப்பழகி என்றும் வர்ணித்தேன்..

#
கவிதையின் காதலன் ரவி

வெளியில் அதிகமாக சிரித்திடுவான் தனிமையில் சோகம் கொண்டிடுவான்.. அதிக நேரம் தூங்கிடுவான் சோகத்தின் அளவை நீட்டிடுவான்.. நேரம் குறைத்து பேசிடுவான் மனதில் ரகசியம் காத்திடுவான்.. கண்ணீரை அடக்கி ஆழ்ந்திடுவான் மனதில் பலவீனம் ஆயிடுவான்.. கஷ்டமென்றால் கலங்கிடுவான் மென்மை மனம் கொண்டிடுவான்.. அதிகம் கோபம் கொண்டிடுவான் அன்பிற்காக ஏங்கிடுவான்..

#
கவிதையின் காதலன் ரவி

காரணம் இல்லாமல் கலைந்து போக இது கனவும் இல்லை.. காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை.. அறிமுகம் இல்லாத போது தொடங்கிய நட்பு.. உறவுக்கு மேலே உயிரான நட்பு. உயிர் உள்ளவரை தொடரும் நட்பு.. காலங்கள் கடந்தாலும் பிரியாத நட்பு..

#
கவிதையின் காதலன் ரவி

உண்மையான பாசம் கொண்டவர்களுக்கு கடுமையான சொற்களை தாங்கும் சக்தி கிடையாது ...

#
Karuppasamy

தொலை தூரத்திலும் இருக்கிறேன்.. தொட்டு விடும் தூரத்திலும் இருக்கிறேன்.. பேசியும் இருக்கிறேன்.. பேசாமலும் இருக்கிறேன்.. மாடியிலும் இருக்கிறேன்.. தெருக்கோடியிலும் இருக்கிறேன்.. பணத்துடனும் இருக்கிறேன்.. பைசா இல்லாமலும் இருக்கிறேன்.. வேறு, வேறு மதத்திலும் இருக்கிறேன்.. ஆனால் மனதால் ஒன்றுபட்டு உருகிய உள்ளத்துடன் எப்போதும் ஒன்றியே இருக்கிறேன்.. என் பெயர் தான் நட்பு..

#
கவிதையின் காதலன் ரவி

_நேர்மையானவர்களுக்கு_ _அதிக நண்பர்கள்_ _இல்லாமல் போகலாம்_ _ஆனால்_ _உண்மையான_ _சில நண்பர்கள்_ _நிச்சயமாக இருப்பார்கள்_ RK

#
Kalpana Subramaniam

_அன்பையும் ஆறுதலையும்_ _உச்சரிக்கும் உதடுகள்_ _அணைத்துக்கொள்ள_ _தட்டிக்கொடுக்க தயாராக_ _இருக்கும் கரங்கள்_ _சாய்ந்துகொள்ள_ _கதறி அழ இடம்_ _கொடுக்கும் தோள்கள்_ _தலைசாய இளைப்பாற_ _பணிந்திருக்கும் மடிகள்_ _இவற்றுக்காக உலகில்_ _எதை வேண்டுமானாலும்_ _இழக்கலாம்_ _எதற்காகவும் இவற்றை_ _இழந்துவிடக் கூடாது_ RK

#
Kalpana Subramaniam

மூவரில் ஒருவரை மட்டும் புறக்கணித்து விட்டு மற்ற இருவரும் சேர்ந்து கொண்டு நம் நட்புதான் இந்த உலகிலேயே சிறந்த நட்பு என்று சொல்லுவது மிக சிறந்த போலி நட்பாகும்

#
Sujitha Jin

தோளோடு தோள் இணைந்த தோழிகள்.. இனிமையான வாழ்க்கையை திகட்ட திகட்ட காதலிக்கும் அன்பான உறவுகள்.. வாழ்க்கையின் வழிப்போக்கில் அன்பால் இணைந்தவர்கள்.. மௌன மொழியிலும் அன்பை பகிர்ந்து கொண்டவர்கள்.. அன்பொன்றே பேராயுதமென்று உணர்ந்தவர்கள்.. காற்றுணரும் வரை நெஞ்சுணரும் நட்பிற்கு அடிமையானவர்கள்..

#
கவிதையின் காதலன் ரவி

நட்பு என்று சொன்னா எதை சொல்லனும்! நண்பன் மாத்திரம் தான். வேறு எதுவும் ஈடகாது. (நட்ப்பின் மரு பெயர் நண்பன்)

#
பாலமுருகன் க

நட்பு.. நிலவை நேசி மறையும் வரை.. நினைவை நேசி நிஜங்கள் ஆகும் வரை.. இரவை நேசி விடியும் வரை.. இன்பத்தை நேசி ரசிப்பு உள்ளவரை.. மலரை நேசி உதிரும் வரை.. மனிதரை நேசி மனித நேயம் உள்ளவரை.. நாட்களை நேசி கடக்கும் வரை.. நட்பை நேசி உயிர் பிரியும் வரை.. வாழ்க வளமுடன் ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

அன்பையும் ஆறுதலையும், உச்சரிக்கும் உதடுகள்..!" அணைத்துக்கொள்ள, தட்டிக்கொடுக்க தயாராக, இருக்கும் கரங்கள்..!" சாய்ந்துகொள்ள, கதறி அழ இடம், கொடுக்கும் தோள்கள்..!" தலைசாய இளைப்பாற, பணிந்திருக்கும் மடிகள்..!" இவற்றுக்காக உலகில், எதை வேண்டுமானாலும் இழக்கலாம்..!! எதற்காகவும் இவற்றை, இழந்துவிடக் கூடாது...!! RK

#
Kalpana Subramaniam

நட்பின் மடியில் அமைதியாய் உறங்கும்.. ஆயிரம் கோடியில் நானும் ஒருத்தி.. முகம் காணாமல்.. முகவரி அறியாமல்.. இணைந்த போதும்.. அகத்தில் அழியா தடம் பதித்து.. நிலைத்துவிட்டோம்.. பலரின் பெயர் கூட தெரியாமல்.. நட்பெனும் ஓரே பெயரால் வாழ்கிறோம்.. தாய்மைக்கு நிகராக நிற்கும்.. நட்புக்கு எவ்வுலகிலும் இல்லை.. அகவைகள் ஐம்பதை கடந்தாலும்.. துள்ளும் மழலையாய்.. நமை மாற்றிடும் உறவிது.. அழும் போது ஆறுதல் சொல்ல.. ஆயிரம் உறவுகள் இருந்தாலும்.. அழவே விடாத நல் நட்பில்.. நாம் தொலைந்து போகின்றோம்...!! RK

#
Kalpana Subramaniam

என் நட்பே!! உன்னோடு நான் கொண்ட நேசம் நட்பு என்பதால் உன்னை என் தோழியாகவே மனதில் ஸ்தானம் கொடுத்தேன் நீ என்னை என்ன நினைக்கிறாய் என்று தெரியவில்லை உன் மௌனம் பேசாது என்னை கடந்துபோகுவதினால்.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

காதலும் நட்பும்.. இரு கவிதைகள்..! அன்பான நட்பை.. நேசிக்கிறேன்..! நேசிக்கும் நட்பை.. காதலிக்கிறேன்..! நட்பு உன் மீது..! காதல் உன் நட்பின் மீது..!! RK

#
Kalpana Subramaniam

விடியாத இரவும் இல்லை பிரியாத உறவும் இல்லை இரவுக்கும் பகலுக்கும் இடையே நட்புக்கு இடைவெளியே இல்லை

#
Rabinesh Mydreamawar

பார்த்ததும் பழகிக் கொண்டோம். பல நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். பல வருடங்கள் கடந்த பின்பும். நட்பை மட்டும் நினைவில் கொண்டோம். manilakshmi ️

#
mani lakshmi

Food which is consumed by us should be blessed with universe and divine energy. by our ancestors it is blessed, quality of food, food value all these will work for us if blessing of food is transferred to us. Each of our cell is blessed, our empty stomach gets blessed when it's filled with digestive food. Source of food, the effort made for making it, for serving and distributing it, the positive way it is made all are bringing blessing to food, the stored blessing in food accumulated and delivery of blessing to our cell and stomach. Food made for living, made for creating distance with hungry, made for poor people are blessed food as food is serving to universe, food is made for welfare of society and welfare of universe and for good purpose. Blessed food are those which does not create any negative energy in our body, which makes us complete relaxed, calm, peaceful mindset mainly the Sattik Food, Vegetable food, food with less oil, avoid Jung food and Street Food are blessed food not any other type of food such as Rajashik food and Tamashik Food. The food which is easily digestible is blessed food. The blessing in culture is transferred to that of cultural food, blessed family and food consumed by that family is blessed food. Any blessed moment, positive and beautiful moment when in that moment food is consumed with care and love become blessed food. Access to any food, being aligned with a food and it's value when increased our value, when our energy is aligned with energy of food is called blessed food. Being full of aware about what and why while eating any food with concentration, mindfulness and having gratitude for the food we have for today at this moment makes the food blessed.

#
Arka Samanta

வானத்தின் சொந்தம் விண்மீன்கள்..! மலரின் சொந்தம் வண்டுகள்..! காற்றின் சொந்தம் தென்றல்..! நட்பின் சொந்தங்கள்..! நல்ல நினைவுகள்...!! RK

#
Kalpana Subramaniam

சோதனைகள் வந்தாலும்.. சாதனைகள் புரிந்தாலும்.. உன் தோள்சாய்ந்து.. நான் வெற்றி கூச்சலிட.. நட்பாய்.. நீ எனக்கு வேண்டும்...!! RK

#
Kalpana Subramaniam

எதிர்பார்ப்பின்றி.. எதிர் பாராமல்.. எம் வாழ்வில் வந்து.. எம் மனதில்.. என்றும் நிலைக்கும்.. நித்திய உறவே நட்பு...!! RK

#
Kalpana Subramaniam

Even if someone loves me a little bit .I have more love for him than that

#
Vellai Arcot

கடவுள்.. சங்கடத்தை அனுபவிக்க.. காதலை அனுப்புகிறார்..!" சந்தோஷத்தை அனுபவிக்க.. நட்பை அனுப்புகிறார்...!! RK

#
Kalpana Subramaniam

நட்புடன் உறவாடினார்கள் பல நண்பர்கள்..!" சிலர் உடைத்தே விட்டார்கள் இதயத்தை..!" உடைந்த இதயத்தை நீ ஒட்டி வைத்தாய், இனிய நண்பனாக வந்து..!" ஒட்டும் போது நான் உணரவில்லை, என்றாவது நீயும் உடைப்பாயென்று...!! RK

#
Kalpana Subramaniam

மனிதனை அதிக.. சந்தோசமாக வைப்பது.. அமைதியும் நிம்மதியும்.. மட்டும் அல்ல.. அன்பான நட்பும்.. உயிரான உறவும் தான்..!! RK

#
Kalpana Subramaniam

மெல்லிய காற்றிலும் நட்பு என்கிற இதயம் ஈரப்பதத்தோடு துடிப்பதால் அவதார் போல் பல உயிர்கள் தோற்றம் பெறுகின்றன......

#
காளையத் தமிழன்

#கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற தோன்றுகிறது.. #நம் மீது துளியும்... #விருப்பம் இல்லாத ... #உறவுகளிடம் இருந்து ‍️

#
Karuppasamy

நட்பே நட்பே யாசகம் கேட்கின்றேன் உன் நேசத்தை யாசகம் கேட்கின்றேன் உன் வேடமில்லா உறவினை யாசகம் கேட்கின்றேன் உன் உதவும் கரங்களை யாசகம் கேட்கின்றேன் உன்னுடன் ஊஞ்சலாடிய தருணங்களை யாசகம் கேட்கின்றேன் மீண்டும் மீண்டும் உன்னுடன் பயணிக்க...

#
Ilakkiya sri

பள்ளி காலத்தில் தொடங்கும் நட்பு பூமியில் நாம் சுழலும் வரை குறிஞ்சி மலராய் பூக்கும்.. வளர்த்த இடம் பிரிந்து புது இடம் மாறினாலும் மாறாத அன்புடன் தொடரும்.. தேசம் விட்டு தேசம் சென்றாலும் நேசம் மட்டும் வேசம் கொள்ளாமல் பாசம் கொள்ளும்.. அன்பு என்ற தூண்டிலில் பிடித்து பாசம் என்ற வலைக்குள் சிறை வைத்து.. உன் நினைவை நானும் என் நினைவை நீயும் பரிமாறி கொள்ளும் அதிசயமானது..

#
கவிதையின் காதலன் ரவி

மறந்துப்போன மகிழ்ச்சியை மறுபடியும் மலர வைத்தாய் நீ...️

#
Karuppasamy

புரிந்து கொண்டால் கோவம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும் புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தெரியும்..

#
Karuppasamy

நட்பு என்பது குழந்தை போல இன்பத்திலும் துன்பத்திலும் பிரியாமல் புன்னகையோடு இருக்கும்

#
MURUGESAN KR

நண்பர்களைப் பற்றி நல்லது பேசு விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே .

#
MURUGESAN KR

#இதயங்கள் அருகில் இருக்கும் பொழுது இருக்கும் இடங்கள் ஒன்றும் தூரமில்லை..!

#
Karuppasamy

உன் இடையை ரசிக்க முயல்கையில் தன்னையும் ரசிக்க சொல்லி இடையூறு செய்கிறது உன் இரு கவிதைகள் ..

#
Karuppasamy

எதிலும் அளவோடு இருந்தால் அசிங்கப்பட தேவையில்லை.

#
MURUGESAN KR

கண்ணுக்குள்ள காந்தம் வச்சி வார்த்தையில வெறுப்பு வச்சி வாய் வாஎன்று சொல்லி வச்சு வாடிடவே கிள்ளி வச்சி மனசுக்குள்ள என்ன வச்சி மறச்சு மறச்சு சொன்ன பேச்சு ஒதுங்கிடவே நீ நெனச்சு ஓயாமல் கண் விழிச்சு ஒரடியா ஈ ரடியா அடி மேல அடி அடிச்சு வானத்து மழை போல உன் பேச்சு கடல் மேலே கொட்டி தீர்த்த மழை போலே காணாமல் போச்சு எல்லாம் பொய் தானே எதுவும் சில காலம்

#
Palani Muthu

என் வாழ்வின் வசந்தம்... நினைத்ததை அடைய முடியாதது தான் வலியில் மிகவும் கொடியதென நினைப்பில் வாடிக் கிடந்தேன் நானடி! அடைய வேண்டிய இடத்தை  உணர முடியாதது தான் வலியின் கொடுமையின் உச்சம் என்று என்னை உணர வைத்தவள் நீயடி! நினைத்ததை அடைவதால் கிடைக்கும் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்துக் கிடந்தவன் நானடி! மற்றவர் நினைத்ததை  அவர்கள் சாதிக்க உதவுவதிலுள்ள  பெரு மகிழ்ச்சியில் திளைத்தெழ என்னை உறைய வைத்தவள் நீயடி! என் வாழ்வின் விளங்க முடியாத ஆழ்ந்த பொருள் நீயடி! என் மாற்றத்தின் மார்க்கம் மீட்டும் இசை, அதுவும் நீயடி! என் வாழ்வின் வசந்தம் என்றும் நீயடி! என் இனிய தோழியே!

#
மகுட தாரிணி

பிடித்தமான ஒருவருக்கு பிடித்தவராக இருக்க காரணம்.. யாருக்கும் விட்டு கொடுக்காததை பிடித்தவருக்காக விட்டுக் கொடுப்பதே.. விட்டுக்கொடுப்பதால் அன்பு ஆழமாகும் வாழ்க்கை அழகாகும்..

#
கவிதையின் காதலன் ரவி

ஊருக்குத்தான் ஊரடங்கு நமக்கில்லை என்றுயிருந்தோம்.. மனதோடு நடைபழக கைபேசி என்றிருந்தோம்.. இரு மனதில் முகம் பதியும் சுகம் ஒன்றை கொண்டிருந்தோம்.. பூ படரும் கொடி போல மனதோடு படர்ந்திருந்தோம்.. கலக்கமில்லா மனதோடு கட்டுண்டு கலந்திருந்தோம்.. உறங்காமல் விடியும் வரை கதை கதையாய் கதைத்திருந்தோம்.. வாழ்க்கையின் நிறை குறையை மறைக்காமல் பகிர்ந்திருந்தோம்.. அன்பெனும் பிடியினுள் பிடித்துப் போய் அடைந்திருந்தோம்.. இனிமையான தனிமை என்று தென்றலாய் மாறியிருந்தோம்.. தினதோரும் தமிழ் எழுதி பிழை திருத்தம் செய்திருந்தோம்.. தனிமையில் இனிமை காண ஆராய்ச்சி செய்திருந்தோம்.. நிறைகுடமென தழும்பாமல் மன நிறைவு கொண்டிருந்தோம்..

#
கவிதையின் காதலன் ரவி

தோற்று விட்ட என் மனதில் முற்றிடாமல் உன் நினைவு சுற்றிட கண்டேன்.. செல்லும் இடமெல்லாம் உன் சுவாச காற்று சுற்றுவதை கண்டேன்.. சுற்றித்திரிந்த இடமெல்லாம் உன் நினைவை தேடி சென்றேன்.. தேடி சென்ற இடமெல்லாம் உன்னை தேடாமல் கண்டேன்..

#
கவிதையின் காதலன் ரவி

நிலவே வானத்து படகே.. நீரின்றி எப்படி மிதக்கிறாய்.. காற்றின்றி எப்படி தவழ்கிறாய்.. ஒட்டாமல் எப்படி ஒட்டி நிற்கிறாய்.. திரையின்றி எப்படி மறைந்து போகிறாய்.. யாருக்கும் தெரியாமல் எங்கே செல்கிறாய்.. என்பது புரியாமல் கவலையில் நான்..

#
கவிதையின் காதலன் ரவி

அன்பில்லை உனக்கென்றால் அன்புடன் நான் வருவேன்.. துணையில்லை உனக்கென்றால் துணையாக நான் வருவேன்.. உதவியில்லை உனக்கென்றால் உதவிட நான் வருவேன்.. உறவில்லை உனக்கென்றால் உறவாக நான் வருவேன்.. சுகமில்லை உனக்கென்றால் நலம் தர நான் வருவேன்.. மனச்சுமை உனக்கென்றால் சுமை தீர்க்க நான் வருவேன்.. தோள் தேவை உனக்கென்றால் தோள் கொடுக்க நான் வருவேன்.. எனைப்பிடிக்கும் உனக்கென்றால் உன்னோடு நான் வருவேன்.. மனதோடு சரி என்றால் தினதோறும் நான் வருவேன்..

#
கவிதையின் காதலன் ரவி

என்னைத் தேடும் ஒருவரை நான் தேடுகிறேன்.. நான் தேடும் ஒருவர் என்னை தேடாததால்.. நான் தேடுவதையும் விடுவதில்லை.. நான் தேடுபவர் என்னை தேடி வருவார் என்பதால்..

#
கவிதையின் காதலன் ரவி

Ni mele uyarum pothu ni yaar endru un nanbarkhal arivargal. aanal ni kile vilum poyhuthan un unmaiyana nanbarkhal yaar enphatai ni arivai.

#
Krishnaveni Veni

தனிமை எனக்கு மற்றொரு நண்பன் அவனிடம்தான் நான் பலமுறை அறிவார்ந்த விசயங்களை உரையாடி வருகிறேன்

#
Ram siva

பிரச்சினையில்லாத மனிதன் இல்லை.. கடிந்து கொள்ளாத கணவன் இல்லை.. அன்பை பொழியாத பெற்றோர் இல்லை.. சண்டை இல்லாத குடும்பம் இல்லை.. தொல்லை தராத பிள்ளைகள் இல்லை.. புரிந்து கொண்ட உறவினர் இல்லை.. புரிந்து கொள்ளாத நண்பர் இல்லை..

#
கவிதையின் காதலன் ரவி

எதிர்பார்ப்பு இல்லாத அன்பு இருந்தால்.. போலித்தனம் இல்லாத உறவுகள் கிடைக்கும் சுயநலம் இல்லாத உறவுகள் இருந்தால். கைம்மாறு கருதாமல் உதவிகள் கிடைக்கும்.. கவலை இல்லாத புன்னகை இருந்தால் கவலை போக்கும் நட்புகள் கிடைக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

அன்று.. நினைவு தெரிந்த நாள் முதல் உதவியவர் யாரும் இல்லை.. கை கொடுத்து தூக்கி விட உறவென்று யாரும் இல்லை.. பசியோடு நின்ற போது உணவிட யாருமில்லை.. கவலையில் தோள் சாய என்னுடன் யாருமில்லை.. என் நலம் அறிந்து கொள்ள எனக்கென்று யாருமில்லை.. கனவிலும் உதவிட பெயருக்கென்று யாருமில்லை.. உதவி குரல் கொடுத்திட உரிமை என்று யாருமில்லை.. தனியாகி போனதால் தவிப்பவர் யாருமில்லை.. என் உடல் நலம் அறிந்தவுடன் பலர் ஒன்றிணைந்து உதவிடாமல் இருந்திருந்தால்.. பகிர்ந்து கொள்ள நானில்லை.. இன்று.. எனக்கு உதவிடாதவர் யாருமில்லை..

#
கவிதையின் காதலன் ரவி

ஈரேழுலகும் போற்றிடும் – ஒரு இனிதான உறவு நட்பு உலகிற்கே அன்பை பொழியும் – ஓர் உன்னதமான உறவு நட்பு அன்பான நண்பனைப் போல அழியாத சொந்தம் எதுவுமில்லை வெறும் வார்த்தைகளால் கூறுவது நட்பல்ல பல பேருக்கு அது உயிர்மூச்சு அன்பான நண்பன் கிடைத்துவிட்டால் அகிலத்தையே வென்றிடலாம் அன்பாக எமை வழிநடத்தும் அழகான பந்தம் நட்பு எவ்வித துன்பம் வந்திட்ட போதும் எமை அரவணைக்கும் உண்மையான நட்பு வறுமை வந்திட்ட போதும் எம் கை கோர்த்திடும் அன்போடு பள்ளிக்கால நட்பைப் போல பசுமையானது எதுவுமில்லை பள்ளியில் தோள் சேரும் தோழமை ஆயுள்வரை தொடர்ந்திட்டேல் பேரின்பம் உலகமே திரண்டு எதிர்த்தாலும் உன்னை விட்டு விலகாது என்றும் நீ குற்றவாளியே ஆனாலும் காப்பாற்றிட துடிக்கும் நட்பு நல்ல நட்பே என்றும் உலகத்தின் சிறந்த செல்வமாகும் நல்லவனை நண்பனாக பெற்றுவிட்டால் நானிலம் போற்றும் உன்னை யாரிடமும் நம்மை விட்டுத் தராது துன்பம் வரும்போது நம்மை கைவிடாது நாம் கலங்கும் போது தோள் தரும் ஈடு இணையில்லா உறவு நட்பு நாம் தவறு செய்யும் போது ஊக்கப்படுத்துவது உண்மையான நட்பன்று வாழ்வில் தவறிடும் போது சுட்டிக் காட்டுவதே நட்பு அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம் ஆபத்திலும் நம்மை கைவிடாது கூட நின்று காப்பவனே உண்மையான நண்பன் முகமது நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு என்றான் வள்ளுவன் – உயர் நட்பினை பெருமைபடுத்தாதோர் யாருளர் இவ்வுலகில் உண்மையான நட்பென்பது சிரித்து பேசுவது அன்று உளமார நெஞ்சத்தில் தோன்றுவதே உண்மையான நட்பு நம் நண்பனை வைத்து நாம் யார் என்று கூறிவிடலாம் நல்ல நண்பனே – நம் நல்வாழ்வின் நற்சான்று அன்னையின் அன்பும் தந்தையின் கண்டிப்புக்களும் ஒன்றாக அமைந்த ஒரு உறவு அனைத்தும் பொருந்தியதே நட்பு நட்பு எனும் மூன்றெழுத்து இவ்வுலகத்தின் உயிர்மூச்சு ஓர் உடலில் ஈருயிர் வாழ்வது உண்மையான நட்பில் மட்டுமே தனிமை நம்மை நெருங்கிடாது துன்பம் நம்மை தொடர்ந்திடாது மனதில் எங்கும் நிறைந்திடும் மகத்தான உறவே நட்பு நம் சந்தோசத்தின் மறு வடிவமாய் நாம் மகிழும் போது மகிழ்ந்து அழும் போது அரவணைத்து கொள்ளும் ஒரு அக்கறையான சொந்தம் நட்பு அளவோடு பழகுவது நட்பல்ல அதிக உரிமையோடு பழகுவதே நட்பு ஆபத்து நேரத்திலும் அருகிலிருந்து அறிவுரை சொல்பவனே சிறந்த நண்பன் தவறு செய்யும் போது தட்டிக் கேட்டு தளர்ந்து சோரும் போது தட்டிக் கொடுத்து ஆலோசகனாய் ஆசானாய் அனைத்துமாய் இருப்பவனே நண்பன் துரியோதனுக்கு ஒரு கர்ணன் போல குசேலனுக்கு ஒரு கண்ணன் போல உண்மையாய் ஒரு நண்பனை அடைந்து உயர்ந்து விளங்குவோமாக.

#
John Sophi

உன் அமைதி அடுத்தவரை கஷ்ட படுத்த வேண்டும்.. கஷ்டமின்றி அவர் கடந்தால் கணித்து கொள்ள வேண்டும்.. தேவையில்லை நீ என்று புரிந்து கொள்ள வேண்டும்.. உன் தேவை இருப்பவரை தேடிக்கொள்ள வேண்டும்.. கோபமேதும் கொள்ளாமல் அமைதி கொள்ள வேண்டும்.. நீ தேடும் ஒருவர் உன்னை காண மறந்தாலும்.. உன்னை தேடும் ஒருவரை நீ காண வேண்டும்..

#
கவிதையின் காதலன் ரவி

நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம்; ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்!

#
Yogeswari Yogeswari

நீ தேடும் பாசத்தில் வெறுமையை கண்டேன்.. ஈர்ப்பின்றி கண்களில் ஈரத்தை கண்டேன்.. அன்புக்கு ஏங்கும் உள்ளத்தை கண்டேன்.. அன்பான வார்த்தையில் மாற்றத்தை கண்டேன்.. இழந்தது உன்னையே என்பதை கண்டேன்.. திரும்ப வா இழந்த பாசத்தை திருப்புகிறேன் என்றேன்..

#
கவிதையின் காதலன் ரவி

விட்டுட்டு போன உறவுகள் மீண்டும் தொட்டுக் கொள்ளும் நிலை வரும் போது யோசிக்காமல் முடிவெடுத்தேன் மீண்டும் வேண்டாம் என்று.. வார்த்தையில் மட்டுமே மாற்றம் இருக்கும் மனதில் அதே எண்ணம்தான் நிலைத்திருக்கும் என்பதால்..

#
கவிதையின் காதலன் ரவி

அன்பாய் இருந்ததை நேரில் பார்த்தேன்.. பாசமாக பேசுவதை காதில் கேட்டேன்.. நேசம் காட்டுவதை கண்ணால் பார்த்தேன்.. அக்கறை கூடுவதை ஆச்சரியமாய் பார்த்தேன்.. உண்மையா இதுவென்று அதிசயமாய் பார்த்தேன்.. சுயநலமே இல்லை என்பதை நம்பாமல் பார்த்தேன்..

#
கவிதையின் காதலன் ரவி

சண்டையிட்டாலும்‌ என்ன ஆயிற்று என‌ வினவுவாள், அமைதியாக இருந்தாலும் என்ன ஆயிற்று என‌ கேட்பாள் அவள் இருளில் இருந்தாலும் என்னை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாள் யார் அவள்??? ️️

#
Kavi

உன் நண்பன் உன்னுடன் இருந்தால் இந்த உலகம் உன் காலின் கீழ் இருக்கும்

#
Nila run1969

எதுவும் இல்லாத போது அவன் என்னுடன் இருக்கிறான் என்ற தைரியம் நட்பில் மட்டுமே கிடைக்கும் ️️️️️️

#
Kavi

இவ்வானம் இடிந்தெந்தன் மெய் மீது வீழ்கயிலும் 'உன் மீது வீழாமல் பார்த்துக்கொல் சகோ...' என்று தன் நெஞ்சே போகயிலும் உள் நெஞ்சின் சொல் கேட்டு பிற நெஞ்சிர்க்காக சொல்லும் சொல்மிக்க மந்திரம் இப்புவிமீதில்லயே....

#
RUPA

சொல்லப்போனால், சொல்வதற்கு வார்த்தையே கிடைக்கவில்லை..... இந்த அறிமுகமில்லா பரிசை பற்றி கூற.....

#
_Dheerov_ _dheerov_

நல்ல நண்பனின் நாகரீகம் காதலிக்கும் போது உதவுவது நட்பல்ல கஷ்டத்தில் இருக்கும்போது உதவுவதுதான் நல்ல நட்பு

#
Gayathri

மனிதனின் நடவடிக்கை நாயை நாயாக மதித்தால் நாய் நமது பீ யை தின்றுவிடும் நாயை மனிதனாக மதித்து வீட்டில் கட்டி போட்டால் அது பீயை நாமதான் அள்ளிப் போட வேண்டும். அதைப்போல் சில மனிதர் குணங்கள் சரி இல்லை என்றால் நாயைப் போல் மதித்து அவரிடம் விலக வேண்டும். இல்லையென்றால் பீ நாத்தம் போல் உன் வாழ்க்கையும் நாறிவிடும்

#
Gayathri

பட்டமானது காற்று அடித்தால் மேலே போகும் காற்று இல்லாவிட்டால் கீழே விழும் நீ யும் அப்படி தான் நீ முன்னேறி மேலே போவதும் கீழே விழுவதும் நீ பழகும் நண்பர்களை பொருத்து தான் உள்ளது Rajjuu

#
Mohammed Ramzan

....கூடு இல்லாத குறுவியாய் அலைகிறேன்.... நீ இல்லாத என் உலகத்தில்...

#
Siva Ranjani

மகிழ்ச்சியான தருணத்தில் நம்முடன் இருப்பதும் ‍️‍ துன்பத்தின் போது ஆருதளிப்பதும் எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்காமல் நம்மை பிரிந்து செல்லாமல் இருப்பது தான் உண்மையான நட்பு Rajjuu

#
Mohammed Ramzan

முகவரி அறியாமல் உன் முகம் கண்டனே.... சிறு சிறு புன்னகையில் அறிமுகம் ஆனேனே.... நாட்களும் நகர்ந்து செல்ல நம் நட்பும் தொடர.... இடைவெளி இல்லா நேரம் புதிதாய் பிறந்த நட்பின் இலக்கணமாய் என்னில் நீ இருக்க... காலமெல்லாம் நான் கைதியாய் உந்தன் நட்பில் சிறைபட ஆசை தான்.......

#
Vijay Mahendran

!!!Kathal alagana unarvuu! Nathpuuu alamana unarvuuu! Entrum aliyathuuu!!!!

#
Sangari Kumar

எண்ணற்ற உறவுகள் இருப்பினும் நட்புதான் அதே அன்போடு கொரனாவிற்கு எனக்கு சோறு போட்டது தாயுள்ளத்தோடு...

#
Ram siva

முகம் தெரியாத உறவாக அறிமுகமாகி...... இரத்த உறவினை மிஞ்சும் அளவிற்கு பாசமாகி.... இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுக்கும் எனது தோழமையே.... by, A.jenisha.

#
Jenisha

மச்சி என்ன டா பண்ற... இந்த வார்த்தை ஒன்றே எனக்கு அளிக்கும் என் நண்பன் எனது கவிதை தான்.... ????

#
Tamilselva selvan

பல நாட்களுக்கு ஒரு முறை பேசினாலும், நண்பனின் பட்டப்பெயர் தான் முதலில் ஞாபகத்தில் வருகிறது!

#
மல்லி

எப்படி ஒரு புத்தகம் உன் அறிவு ஆற்றலை வளர்க்கின்றதோ.. அதுபோல ஒரு நண்பன் உனக்கு கிடைத்தால் போதும் பலகோடி புத்தகம் உன் கையில் கிடைத்தற்கு சமம்

#
Alfie jo

இந்த உலகம் உங்களை விட்டுச் செல்லும் போது உங்களை தேடி வரும் அவனே உண்மையான நண்பன்.

#
Alfie jo

காற்று அடித்தால் கலைந்து போக- இது ஒன்றும் மேகம் அல்ல! காரணம் இல்லாமல் மறைந்து போக- இது ஒன்றும் கனவும் அல்ல! அருகில் சென்று பார்த்தால் காணாமல் போகும் கானல் நீர் அல்ல! நம் உயிர் கல்லறை செல்லும் வரை தொடரும் உண்மையான நட்பு!

#
Rolex
Logo

© Red Nucifera