தேசபக்தி
தாயே உனக்கா இந்த சோதனை..
இன்று நீயே ஒரு இன்னலில்
நின் திலகத்திற்கு ஒரு இழுக்கு...
இழுக்கு இழைத்த இழிமகனை
இளையவள் இசைவோடு
சம்ஹாரம் நிகழ்த்த உன் தலைமகனை
பனித்தாய் அவர் தம்
குலம் காக்க
கோடான கோடி புதல்வர் தன்னில்.
தலைமையேற்று முற்படுகிறான் உன் தலைமகன்
அவனுக்கு பின்னால் ஒரு தேசம்
உன் தேசம்
பாரத தேசம்..!!
பாஸ்கர்.
BASKAR BASKAR
நான் அவளது
கைரேகை போல..
அவளுடன் மட்டுமே
சேர்ந்து இருக்க முடியும்!
Karuppasamy
நான் போன பின்பு
என் இடத்தில் பிறந்து
நான் வளர்ந்த மடியிலே வளர்ந்து
என் மடியிலே கவிழ்ந்து அத்தை என்று அழைத்தால் என்னாகுவேன்???
கவிதா
மகிழ்ச்சியான முகம்
தான் எப்போதுமே
அழகான முகம் ️...!
Karuppasamy
கனமான வாழ்வை
சுமந்து...
சுமந்து...
சுமைதூக்கியாகவே,,
வாழ்கிறோம்..!!
Karuppasamy
எல்லோரும் சேர்ந்து வாழ்வது
கூட்டு குடும்பம் அல்ல
எல்லோரும் சேர்ந்து உழைத்து
பொருளீட்டி ஒன்றாக வாழ்வதே
கூட்டு குடும்பம்
vasathi
அன்று..
நினைவு தெரிந்த
நாளிலிருந்து
உதவியவர் யாருமில்லை..
பசியோடு நின்றனுக்கு
அன்னமிட யாருமில்லை..
கை கொடுத்து
உதவிட உறவெதுவும் உடனில்லை..
கவலையில் தோள் சாய என்னருகில் யாருமில்லை..
கனவிலும் பெயர் சொல்ல எனக்கென்று ஒருவரில்லை..
தனியாகி போனதால்
தவித்திடவும் யாருமில்லை..
இன்று..
என் பெயர் கேட்டதுமே
உடல் நலம் அறிந்ததுமே
எனக்காக பலர் இணையாமல்
இருந்திருந்தால்..
பகிர்ந்து கொள்ள
நானில்லை..
கவிதையின் காதலன் ரவி
மனம்
சோர்வடையும் போதெல்லாம்
வானத்தைப் பார்க்கின்றேன்
உயர உயரப் பறக்கின்றன
பறவைகள்.... !!
Karuppasamy
பெண் குழந்தைகள்
பெற்றவர்கள்
தன் தாயையே
பெற்றதற்கு சமம்..
பெண் குழந்தைகள்
தின வாழ்த்துக்கள்
Karuppasamy
உலகின் மிக
முக்கியமான விஷயம்
குடும்பம் மற்றும் அன்பு
மனைவி வச்ச சுடுதண்ணிகூட
நல்லா இருக்குனு
சொல்ற உன்னால
மனைவி வச்ச காபி சுடுதண்ணியாட்டம் இருக்குனு
சொல்ல முடியல
பாத்தியா..?
Karuppasamy
தேவையென்றால்
தேடி வரும் உறவு
தேவையின்றி தொடராது..
மனமின்றி தொடரும் சொந்தம் மனமொன்றி போகாது..
சந்தோசமே தனக்கின்றி
பிறர் சந்தோசம் புரியாது..
ஒன்றாய் கூடும் போதெல்லாம்
ஒதுக்கி நிற்க தெரிந்தாலே வருத்தம் உன்னை நெருங்காது..
கவிதையின் காதலன் ரவி
என் வலியை
தீர்மானிப்பது அடியல்ல
என்னை அடித்தது
யாரென்பதே..
என் மனமுடைந்தது
பேசிய வார்த்தையல்ல..
மனமுடையும் படி
யார் பேசினாரென்பதே..
அதிலிருந்து
என்னை விலக வைத்தது
வார்த்தையல்ல
என் மெளனமென்பதே..
கவிதையின் காதலன் ரவி
பேச்சில்
தெளிவு இருந்தால்
பிரச்சினைகள்
பேசாமல் இருக்கும்..
பேசுவதில் அளவிருந்தால்
சொந்தங்கள்
தொடர்ந்திருக்கும்..
தேவையின்றி
நீ இருந்தால் சொந்தங்கள் சூழ்ந்திருக்கும்..
தேவையில் நீ இருந்தால்
சொந்தங்கள்
பிரிந்திருக்கும்..
கஷ்டத்தில்
இருந்தாலும்
காணாமல் சென்றிருக்கும்..
கவிதையின் காதலன் ரவி
உறவுகள் என்னை நிராகரிப்பதால்
நான் வருத்தம்
கொள்வதில்லை..
பெரும்பாலும்
வாங்க முடியாத
விலை உயர்ந்ததையே நிராகரிப்பார்கள்
என்பதால்..
கவிதையின் காதலன் ரவி
தேவை என்றால்
தேடி வரும் சொந்தம்
தேவை முடிந்ததும்
தேவையில்லை என்கிறது..
வேலை இருந்தால்
வரவேற்கும் சொந்தம்
வேலை முடிந்ததும்
போய்விடு என்கிறது.
நேரம் பார்க்காமல்
பேசிய உறவுகள்..
நேரம் இருந்தாலும்
பேச மறுக்கிறது..
கவிதையின் காதலன் ரவி
நாம் செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல
மெதுவாக ஓடினாலும் வெற்றி தான்...
Karuppasamy
மகிழ்ச்சிகூட வேண்டாம்
மறதி வந்தால் போதும்
மகிழ்ச்சி அடைவேன்
சில நேரங்களில்..
ஆனால்..!
அனுதினமும்
மறந்து விடுகிறேன்
மகிழ்ச்சி கொள்ள
மறதி தான் வேண்டும்
என்பதை..
கவிதையின் காதலன் ரவி
நிபந்தனை இல்லாமல்
புன்னகை செய்திரு..
நோக்கம் இல்லாமல்
பேசி சிரித்துடு..
காணாத அன்பை
தேடி தந்திரு..
சந்திக்காத நேரத்தில்
சிந்திக்க வைத்திடு..
சிந்தித்ததை நேரில்
சொல்ல நினைத்திரு..
கஷ்டத்தை காணமல்
மறைய செய்திடு..
எதிர்பார்பு இல்லாத
அக்கறை கொண்டிரு..
உண்மையான பாசத்திற்கு தகுதியாகிடு..
கவிதையின் காதலன் ரவி
குடும்ப தலைவன் அப்பா
குலம் காக்கும் அன்னை
தோளில் சுமக்கும் பாட்டனும்
தோள் சாயும் பாட்டியும்
அன்பு கொடுக்கும் அக்கா
ஆதிக்கம் செலுத்தும் தங்கை
வம்பு செய்யும் தம்பி
வரம் கொடுக்கும் அண்ணன்
Sangeetha S.sangeetha
பிறப்பால் கிடைத்த உறவுகள் அதிஷ்டம் என்றால்
அன்பால் கிடைத்த உறவுகள் பொக்கிஷம்....
Karuppasamy
கள்ளமில்லா அன்பை
வெள்ளமாய் தரும்
ஜீவன்கள்..!"
கோபம் கூட
மறைந்து போகிறது
மழலையின் சிரிப்பில்..!"
குழந்தை
பூவாய் மலர்கையில்
வாசமாகிறது
வீடு..!"
எதிரியைக் கூட
எளிதில் வீழ்த்துகிறது
குழந்தையின் சிரிப்பு..!"
பிள்ளைகள்
தவழ்கையில் ஈரமாகிறது
பூமி..!"
கண்ணாடிகளாய்
குழந்தைகள்..
நம்மை பிரதிபலிக்கிறது..!"
ஒரு சொல் பேச்சிலே,
உள்ளம் மகிழ வைத்து,
கள்ளமில்லா சிரிப்பினில்,
நெஞ்சம் நெகிழ வைத்து..!"
ஆயிரம் கவலைகளில் இருந்தாலும்,
அதை எல்லாவற்றையும்
மறக்க வைத்து,
நம்மை மிக சுலபமாக
சிரிக்க வைப்பவர்கள்
நம் குழந்தைகள் மட்டுமே..!"
கடவுள் கொடுத்த வரமான..
நம் குழந்தைகளுக்கு..,
நல்லதை ஊட்டுவோம்..
நல்லதை பெறுவோம்...!!
*இறைவன் ஆசியுடன்*
*என்றும் உங்கள்*
RK
️
Kalpana Subramaniam
வயதில் வேறுபாடுகள் இல்லை என்றாலும்
என்
வாழ்வில் கிடைத்த உரவில்லா குழந்தை
நீ
பொலிவுடன் காணப்படும் ஒர்
எழில் போன்ற முகம்
இறைவனால் படைக்கப்பட்ட ஒரு
அரும்பு
இரத்த சொந்தம் இல்லை
இருந்தும்
நட்பால் சொந்தம் ஆனவள்
இவள்
என் வாழ்வில்
மகளாக வந்தவள்
அல்ல
மருமகளாக வந்தவள்
மூன்றாவது மனிதன்
என் வாழக்கையில்..
எனக்கான
முதல் உயிர்..,
எனக்கான,
முதல் வெளிச்சம்..,
எனக்கான,
முதல் அன்பு..,
எனக்கான
முதல் கல்வி..,
எனக்கான
முதல் அரவணைப்பு..,
எனக்கான,
முதல் தொழில்..!"
எனக்கான
முதல் நினைவு..!"
எனக்கான,
முதல் காதல்..!"
எனக்கான,
முதல் பொக்கிஷம்..!"
என் வாழ்க்கைக்கான,
சிறந்த பொக்கிஷம்..!"
என் வாழ்க்கைக்கான,
சிறந்த கதாநாயகனும்..,
சிறந்த கதாநாயகியும்..!"
என் தாய் தந்தை மட்டுமே...!!
RK
Kalpana Subramaniam
மனைவி கணவனை தெய்வமாக நினைப்பது ஏன் தெரியுமா..
பணக்கஷ்டம் வரும்போதெல்லாம் நினைப்பதால்
Karuppasamy
எவ்வளவு
சம்பாரிச்சாலும்
அது பணம்தான்...
எள்ளளவு
சிரிச்சாலும்
அது குணம்தான்..
Karuppasamy
பிடித்தவளுடன்
கிடைக்காததை
தேடுபவன் அல்ல நான்..
கிடைத்தவளுடன்
பிடித்ததை தேடுபவன்..
கவிதையின் காதலன் ரவி
குடும்பம் என்பது எரும்பை போன்று. குடும்பம் என்பது தேன் ஈக்கள் போன்று. குடும்பம் என்பது சிட்டுக்கரிவி போன்று. இருக்க வேண்டுமே! (தவிர )மான் குட்யை கண்டால் புலி பாயும். அதே போன்று! கரடி. சிங்கம். (சில மனிதர்கள்)
பாலமுருகன் க
தொட்டில்..
அன்னை
அன்பளிப்பு தந்த
முதல் பரிசு பெட்டகம்..
தலையணை இல்லாத
தங்க சப்பரம்...
மாடமாளிகை
ஈடாகாத
மணிமண்டபம்...
சுகமான
நித்திரை தரும்
தேவலோகம்....
வாடகை இல்லாத
வைரச் சுரங்கம்...
கடைவாயோரம்
கட்டை விரல் சுவைத்து
கனவு காணும்
மழலைகளுக்கு
மோகன
புன்னகை தரும்
அரும்புகளுக்கு
தாய் தந்த
தவக்குடில்...
நன்றி
ராமசாமி...
Ramasamy Ramasamy
ஏய் மனிதா...
இறைவனை பார்
கருனை எவ்வளவு.
இயற்கையை பார்
சுவாசம் எவ்வளவு
தாய்மையை பார்
அன்பு எவ்வளவு
தந்தையை பார்
நேசம் எவ்வளவு
நண்பனை பார்
புனிதம் எவ்வளவு
நல்ல குழந்தைபார்
மகிழ்ச்சி எவ்வளவு
உடலை பார்
அதிசயம் எவ்வளவு
உறவினர் பார்
நேசம் எவ்வளவு
இவை எல்லாம் விலை மதிப்புக்கு
எல்லை இல்லை...
எவனுக்கு உண்டோ..
கோடீஸ்வரர்
முயற்சி செய்க
வெற்றி சூடு
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
கறிவேப்பிலை
இனியவளே...
இல்லத்தை
மணம் தந்து
இல்லத்தரசிக்கு
சுவை தரும்
கொழுந்தியாளே...
குறு நகையே..
வயல்காட்டில்
ஓரமாய் முளைத்து
வாணலியில்
வதங்கி வாழும்
திருப்பதிகமே..
வாழ்க வளமுடன்
நன்றி
ராமசாமி...
Ramasamy Ramasamy
விட்டு விலக துடிக்கும் உறவை வெட்டி விடுங்கள்
விட்டு கொடுக்காத உறவை கட்டிப்பிடியுங்கள்
Karuppasamy
உனக்கான வாழ்க்கை
சேவல் கூவிதான்
விடிய வேண்டுமென்றில்லை
சேமிப்பிலும் விடியலாம் ....!
Karuppasamy
என் புருஷன் விவரந்
தெரியாதவரா இருக்கார் ..
என்ன செஞ்சாரு ?
வீட்டைக் கூட்டிப்
பெருக்குறதுக்கு
கால்குலேட்டர் வாங்கி வந்துருக்கார்
Karuppasamy
குழந்தை...
வாடையில் வந்த கோடை நீ...
வம்சம்
தழைக்க வந்த
வசந்த காலம் நீ..
உதிரும்
இலையுதிர்
காலம் அல்ல...
உள்ளத்தை
கொள்ளையடிக்கும்
குளிர்காலம் நீ..
இடைவிடாது
கொட்டும்
பனிக்காலம் இல்லை
இதயத்தை கவர்ந்த
கார்காலம் நீ..
பருவங்களை
பாதை போட்ட
பாரத ரத்னாவே..
பாமரன் கவர்ந்த
பாரதமே...
Ramasamy Ramasamy
பிரச்சனை என்று
யாரிடமும் போய்
நிற்காதே ..
ஆறுதல் சொல்பவர்கள்
சிலர்
ஆனந்தப் படுபவர்கள்
சிலர்
அவனுக்கு வேணும் டா
என்று முதுகுக்கு
பின்னால் பேசுபவர்கள்
பலர்
Karuppasamy
ஒரு ஆணிற்கு,
சமூகத்தில்..
அதிக சுதந்திரம்
இருப்பதுபோல்,
தோன்றலாம்..!
ஆனால்..,
அவன்
சாகும் வரை,
அவனுடைய கடமைகளுக்கு,
அவன் அடிமை...!!
RK
Kalpana Subramaniam
என் வீட்டில் வீற்றிருக்கும்
நிஜமான நிலவே..!
நீ தூங்கும் அழகினை
வர்ணிக்க,
வார்த்தை கிடைக்காமல்..
பார்த்து ரசித்து
கொண்டே
இருக்கிறேன்..
பறந்து போய்க்கொண்டே
இருக்கின்றது,
நிமிடங்கள்...!!
RK
Kalpana Subramaniam
கடவுள் கொடுத்த
மிகப்பெரிய பொக்கிஷம்..,
நமது தாய் தந்தை
மட்டுமே..!"
உண்மையான அன்பு,
நம் பெற்றோர்களிடம்
பார்க்கலாம்...!!
Rk
Kalpana Subramaniam
வெளிப்படுத்தும்
மகிழ்ச்சியை விட..
மறைத்து வைக்கும்
சோகமே அதிகம்..
உள்ளத்தை
விரும்புவதை விட
உள்ளதை
விரும்புவதே அதிகம்..
அனுசரித்து போவதை விட
ஆதரவின்றி போவதே அதிகம்..
கண்டு போவதை விட
காணாமல் போவது அதிகம்..
நடந்த உண்மையை விட
நடக்காத பொய்க்கே
மதிப்பதிகம்..
ஆக்கம் கொள்வதை விட
தாக்கம் கொள்வதே அதிகம்..
இணைந்து செல்வதை விட கடந்து செல்வதே அதிகம்..
இணைத்து கொள்வதை விட
அரவணைத்து கொள்வதே அதிகம்..
கவிதையின் காதலன் ரவி
ரத்தத்தினால்
பிணைக்கப்பட்ட..!!
உறவுகளை
பிரித்தெடுக்கும்...!!
ஒரே
வல்லமை........!!
கொண்ட
ஆயுதம்......!!
பணம்.......!!
ஸ்ரீஜா
சந்திரசேகர்
ஸ்ரீஜா சந்திரசேகர்
சகோதரர்
உடன்
பிறப்புக்களிடம்....!!
அந்தஸ்து
காட்ட கூடாது.....!!
ஸ்ரீஜா சந்திரசேகர்
ஸ்ரீஜா சந்திரசேகர்
வெப்பத்தில் பாதி
வெட்கத்தில் மீதியாக
நெகிழ்கிறது...
காரக்குழம்பில் அவள்
கிள்ளிப் போட்ட
பச்சை மிளகா
Karuppasamy
வாழ்க்கையில் :..
#அயர்ந்து
தூங்கினாலும்
கச்சிதமாய் எழுப்பி
விடுகிறது ஏதேனும்
ஒரு கவலை...¢
Karuppasamy
எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும்
எவ்வளவு கோபம் வந்தாலும் எதையும்
வெளிக்காட்டிக் கொள்ளாமல்
புன்னகையுடன் எதிர்கொள்வதற்கு
பெயர் தான்,
Personality Development ...
Karuppasamy
வாழ்க்கையில் ஒரு பிரச்சனை
தேய்பிறையில் தேய்ந்து கொண்டு
இருக்க ...
மறு பிரச்சனை வளர்பிறையில்
தொடர்ந்து வளர்ந்து கொண்டே
இருக்கும் ...
அமாவாசையும் இருக்காது
பௌர்ணமியும் இருக்காது !!
Karuppasamy
வேசம் போடும் உறவுகளுக்கு
நடுவில் உண்மையான பாசம்
தோற்றுத்தான் போகிறது ..
மானங்கெட்ட மனசுக்கு தான்
தெரியவில்லை ,
அது பாசம் அல்ல வேசம் என்று
Karuppasamy
தெரிந்தே காயப்படுத்துபவர்களிடம்
காயமும் அறிய வாய்ப்பில்லை..
மருந்தும் இருப்பதில்லை..!
Karuppasamy
நம்ம வாழ்க்கைய
நமக்கு பிடிச்ச மாறி
வாழ்றதும் ,
நமக்கு பிடிசவங்களுக்காக
வாழ்றதும் தான்
சந்தோஷமே
Karuppasamy
அதிகமான அன்பை விட...
அதிகமான புரிதல்
எந்த உறவையும் நீண்ட காலம்
வாழ வைக்கும்...
Karuppasamy
மதிக்காத
உறவுகளின் வீட்டில்...
மரமாய்
நிற்பதை விட...
#உந்தன் சொந்த வீட்டில்
வரவேற்கும் கால்மிதியாய்
இருப்பதே மேல்...
Karuppasamy
மகிழ்ச்சி கூட வேண்டாம்
நிம்மாதி ஒன்றே போதும் என்றாகிவிட்டது...
பலரின் வாழ்க்கை...?
Karuppasamy
விடை சொல்லும் வீடுகள்
"வாடகை வீட்டில் உடைந்த சுவடுகள்
பழகிய வீட்டில் பதிந்த இன்பங்கள்
ஒண்டிய வீட்டில் ஒன்றாத உறவுகள்
சொந்த வீட்டில் சோகப் பாடல்கள்
வசந்த மாளிகையில் வசன கர்த்தாக்கள்
பிளாட்பாரங்களில் பிச்சை பாத்திரத்தில் என்றும் சிரித்திருக்கும் சில்லறையின் ஓசையொலி"
S Sankari
விற்றவனுக்கு கைவிலங்கு
விலை கொடுத்து வாங்கியவனுக்கு விறகு
அவரவர் குடும்பங்களை விதியென வீதியில்
ஏசுகிறவனுக்கு விமர்சன ரீதியில்
எழுதுகிறவனுக்கு கவிதை ரீதியில் வாய்ப்பை பரிசளித்துச் சென்றிருக்கிறது கள்ளமதுவின் விகார முகம்....
MURUGESAN KR
ஒரு ஆண் தன் வாழ்நாளில் வெளிப்படுத்தாத உண்மை, தன் மனைவி தான் "தன்னுடைய பலம்" என்று...
MURUGESAN KR
உனக்கான கவிதை மடல் 4
பிரிவு
கடமையைக் கடந்து எதையும் நினைக்கக் கூடத்
துணியாது தவித்த எனக்கு, தனிமையின் பெயரில்
நம்பிக்கையென்ற அரிதான பரிசை அளிக்கத் துணிந்தாய்!
அறிவாள் இந்த ராதை உன் மனதை!
உண்மையை அறிய ஓர் நாளும்
வன்முறையை பிரயோகித்ததில்லை!
சொல்லாலும் செயலாலும், ஏன் நினைப்பினிலும் கூட
என் மனதை வதைக்கத்
துணிந்த தில்லை!
அறிவேன் கண்ணா உன் சகியாகிய நான்!
கடமைகள் என்னும் கூண்டினில் அடைத்தாலும் கூட
சுதந்திரத்தின் எல்லைகளில் சுதந்திரமாக
உலாவ வழிவகை
செய்து அன்பென்னும் ஆழ்கடலில்
என்னை மூழ்கடித்தாய்!
அறிவேன் மண்ணவனே
உன் மனம்,
நானே உனது ராணி!
எண்ணித் துணிக கருமமென்ற
வள்ளுவன் வாக்கிற்கினங்க
கேள்விக் கணைகளுக்கு மௌனத்தாலே
பதிலடிக் கொடுத்தென்றும்
எனக்குத் துணையாக நின்றவுன் பேரன்பிற்கு ஈடாகுமா!
அறிவேன் என் துணையே, என்றும் மறவேன் உனையே!
இவை யாவையும் எனக்காக
செய்து என்னை
வென்றெடுத்த என் கண்ணாளனே, நான் உன்னில்
தான் வாழ்கிறேன்,
பிரிவு அது பிரிவே இல்லை!
பிரிவெல்லாம் பிரிவே இல்லை!
நான் உன்னில் தான் வாழ்கிறேன்,
நீ என்னில் தான் குடியிருக்கிறாய்!
ஐயம் ஏனோ!
வாக்கிலும் செயலிலும் ஏன் நினைப்பினுலும்
நானே உனது சீதை!
நீயே எனது ராமன்!
நெருப்பிலிட்டாலும் மாறாது!
என்றும் உன் அன்புக்குறியவள் நான்!
என்றும் என் அன்புக்கு பாத்திரமானவன் நீ!
மறுபடி உனை வந்து சேரும் திருநாளே!
நம் வாழ்விற்கே அர்த்தம் கொடுக்கும் நன்நாள்!
போகும் இடம் தூரமில்லை!
மயங்காதே மனமே!
மகுட தாரிணி
மனித மனங்களே வெறுமையாய் இரு !
இவ்வுலகம் மிகவும் அழகானது.
ஒவ்வொரு நாளும் புதிதாக பிறக்கும் வரை
இரவு கண் உறங்கும் போது பழைய கசப்பான நினைவலைகளை மறந்து
பகல் கண் விழிக்கும் போது புதிதான
நினைவலைகளில் அசைபோட
இவ்வுலகம் மிகவும் அழகானது.
புதிதானது.
அரிதானது.
வாழ்வே சொர்க்கம் சொர்க்கமே வாழ்வு
வாழ்கின்ற வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளும் வரை
மனித மனங்களைப் தெரிந்து கொள்வதற்கும்
மனித குணங்களைத் புரிந்து கொள்வதற்கும்
மனித இனங்களைத் தேர்ந்து கொள்வதற்கும்
இவ்வுலகம் மிகவும் அழகானது.
மழலைக்குச - சிரிப்பு போதும்
இளவயதினருக்கு - இனிமையான பேச்சு
போதும்
தாய்க்கு - தகைமைப்பண்பு போதும்
தந்தைக்கு - தலைமைப்பண்பு போதும்
தமக்கைக்கு - தன்னம்பிக்கை ஊட்டத் தெரிந்தால் போதும்.
தம்பிக்கு - நம்மை நம்பி ஒரு ஆள் இருந்தால் போதும்.
நண்பன் - நல்லதைச் சொல்லி நலமாய் வாழ துணையாய் இருந்தால் போதும்.
மகன் - பெற்றதால் பிறரை மகிழ்வித்து தானும் மகிழ்ந்தால் போதும்.
மகள் - நாளைப் பெறப்போகும் பிறப்பால் இன்று தாயாக நினைத்தால் போதும். மனைவி - மனைக்கு வருபவள் என்று இல்லாமல் மனதிற்கு இணக்கமானவள் என்று நினைத்தால் போதும்.
கணவன்- கண்ணாய் இருந்து காப்பவனாக இருந்தால் போதும்.
S Sankari
தட்சணை
வீடு தேடி சென்று குருவிற்கு வரும் தட்சணை குருதட்சணை
வீடு தேடி மருமகளிடமிருந்து வரும் தட்சணை வரதட்சணை"
S Sankari
வாழ்க்கையின் தெருக்கூத்து
கண்ணை நலமாக வைத்துக் கொள்கிறான் அவன் ?
குணத்தை நலமாக வைத்துக் கொள்கிறான்
முகத்தை நலமாக வைத்துக் கொள்கிறான் அவன் ?
புன்சிரிப்பை உருவாக வைத்துக் கொள்கிறான்
உடலை நலமாக வைத்துக் கொள்கிறான் அவன் - அதில்
உலகை உருவாக வைத்துக் கொள்கிறான்
மனதை நலமாக வைத்துக் கொள்கிறான் அவன் - அதில்
உண்மை உருவாக வைத்துக் கொள்கிறான்
காரணம் காரியம் ஆயிரம் உண்டிங்கு
எது வந்தாலும் எதிலும் மனநிறைவு வேண்டுமிங்கு !
மனிதர்கள் குலம் காக்க ஒழுக்கமாய் வளர்த்தெடுக்க
வலி இன்றி வளம் சேர பழையதை விட்டொழிக்க !
உணவை ஆக்கியே ஆதாரம் செய்தோம்
இன்று உணவை வீணாக்கியே சேதாரம் செய்தோம் !
மாற்றான் என்று இங்கு நமக்கு இல்லை
மாற்றி வைப்போம் இனி தொல்லை இல்லை !
தேவைக்கு மட்டும் தேடி பெறுவோம்
தேக்கி வைத்ததை சேவைக்குக் கொடுப்போம் !
வாரணம் ஆயிரம் வந்தனம் சொல்லும்
வாசனை விலக என் வசனம் மலர்களாய் வீசும் !
மனதால் மெலிந்தால் உலகம் விரும்பும்
உடலால் மெலிந்தால் மனமே இறுகும் !
S Sankari
பிள்ளைச் செல்வம்
மயிலுக்குத் தோகை அழகு!
குயிலுக்கு குரல் அழகு!
மலைக்கு தீபம் பேரழகு!
பறவைகளின் சிறகுகள் அதிசய அழகு!
உனக்கு நான் அழகு!
எனக்கு நீ அழகு!
எல்லா அம்மா அப்பாவிற்கும் தம் பிள்ளைகள் பேரழகு!
நமக்கு வாய்த்த பிள்ளைகள் அழகிற்கே அழகு!
மகுட தாரிணி
யார் சொல்லியும் கேட்காத மனம் ....
நீ சொன்ன பின் குழந்தையானது....
Karuppasamy
தாத்தா பாட்டியின் தனிமை
எனக்கும் வந்து தொற்றிக்
கொள்ளுமோ?....
Ramkumar
ஏட்டிக்கு போட்டிட முயன்றதில்லை..
வென்றிடும் முயற்சியிலும் தோற்றதில்லை..
கோபம் கொண்டு யாரிடமும் பேசியதில்லை..
கடும் சொல் கொண்டு
ஏசியதில்லை..
அன்போடு அன்பு கொள்ள தோணாமல் இல்லை..
சிரிப்புடன் சேர்ந்து கொள்ள முயலாமல் இல்லை..
சிரிப்புடனே சந்தோசம்
காணாமல் இல்லை..
கவிதையின் காதலன் ரவி
நல்லதோருக்குடும்பம் என்பேன்
நன்றியுள்ளக்குடும்பம் என்பேன்
சொந்தமெல்லாம் சேர்ந்திடவே!
சொர்க்கம் கதவை தட்டுமே!
ஒன்றுசேர்ந்து வாழும் போது
மரணம் எட்டி நிற்குமே!
மனம் நிறைந்திருக்கையிலே
என்றும் இளமை சூழுமே!
அன்றெடுத்தப்புகைப்படமோ
கதைகள் பலச்சொல்லுமே!
PREETHI KARTHIK
நிராகரிப்பும் நிபந்தனையும்
நிலையில்லாதது..
நிகரானவரை
நிராகரித்த பின் தான்
அவருடைய
இல்லாமையை
உணர வைக்கும்..
நிபந்தனையிட்டவர்
விலகிய பின்தான்
அவருடைய
நிர்பந்தத்தை
உணர வைக்கும்..
தவறாகி விடுமோ
என்ற எண்ணம் தான்
நிராகரிக்க வைக்கும்
ஏமாந்து விடுவோம்
என்ற பயம் தான்
நிபந்தனை வைக்கும்..
நிராகரிக்க
நிலையில்லாத
நிபந்தனையே
பல வாய்புகளை தவறிட வைக்கும்..
கவிதையின் காதலன் ரவி
பெண்ணின் அழுகையில்
ஆணின் கோபம்
மறைந்து போகுது..
ஆணின் அன்பில்
பெண்ணின் கோபம்
கரைந்து போகுது..
சொல்வதும், கேட்பதும்
மனதில் வந்து போகுது..
கேட்டதும், கிடைத்ததும்
மனதில் நின்று போகுது..
கவிதையின் காதலன் ரவி
அதிகபட்ச தேவையை குறைத்துக்கொண்டால்..
குறைந்தபட்ச தேவையே
திருப்தியை தரும்..
திருப்தி தற்காலிகமான
மகிழ்ச்சியை தரும்..
மகிழ்ச்சி நிரந்தரமான
திருப்தியை தரும்..
கவிதையின் காதலன் ரவி
உறவுகள் என்னை
எவ்வளவு தூரத்தில் வைத்தார்களோ
அந்த தூரத்திலேயே
வாழ பழகிக் கொண்டதால் வாழ்க்கை இனித்தது..
தூரத்தில் வைத்த
உறவுகள் சில தேவைக்காக என்னை அருகில் வைத்துக் கொள்ள நினைத்ததால் வாழ்க்கை கசக்கிறது..
கவிதையின் காதலன் ரவி
பொருமை
சில விவாதத்திற்கு தற்காலிகமான
தீர்வை தரும்..
விவாதம்
யார் சரியாக சொல்கிறார் என்பதை கணிக்கும்..
கலந்துரையாடல்
எது சரியானது
என்பதை தீர்மானிக்கும்..
கவிதையின் காதலன் ரவி
சொந்தம் என்று நூறு வரும்
கஷ்டம் என்று வந்தால்தான்
நூறின் உண்மை
தெரிய வரும்..
கண்ணீர் பொய்யாய்
வழிந்து வரும்
சொன்னது எல்லாம்
நினைவில் வரும்..
நூறில் பாதி குறைந்து விடும்
மிஞ்சிய சொந்தம் வேசமிடும்..
கண்ணில் காணாமல்
மறைந்து விடும்
அழைத்துப் பேசவும்
மறந்து விடும்..
மனமும் இரும்பாய்
மறுத்து விடும்
கண்டும் காணாமல்
இருந்து விடும்..
நேரில் காண்பதை
தவிர்த்து விடும்
சொந்தம் என்பதையும்
மறந்து விடும்..
கவிதையின் காதலன் ரவி
மன வலி ஆயிரம்
உடன் இருக்கும்..
மனசுக்குள் அதில் பாதி மறைந்திருக்கும்..
பகிர்ந்திடவும் சொந்தமின்றி தனித்திருக்கும்..
கண்ணீரை மொழியாக்கி தவித்திருக்கும்..
வலி குறைய வழி தேடி அலைந்திருக்கும்..
பெற்றெடுத்த சொந்தமும் விலகிருக்கும்..
பணம் கேட்கும் சொந்தங்கள் மறைந்திருக்கும்..
கைபேசி கையில் தான் வைத்திருக்கும்..
நலமா என்று கேட்கவும் மறந்திருக்கும்..
உடன் பிறந்த சொந்தங்கள் சூழ்ந்திருக்கும்..
மேலேறி வாவென்று
கை கொடுக்கும்..
தனியில்லை நீ என்று சூளுரைக்கும்..
நாங்கள் இருக்கோம் உனக்கென்று குரல் கொடுக்கும்..
சாய்ந்து கொள் என்று
தோள் கொடுக்கும்..
கவிதையின் காதலன் ரவி
தினம் காணும் நிலவு
மறைந்தாலும் தோன்றிடும்
தேய்ந்தாலும் வளர்ந்திடும்..
மீண்டும் திரும்பிடும் முன்பு
கண்டதை போலவே..
ஆனால் சொந்தம்..!
வளர்ந்தால் விலகிடும்.. தேய்ந்தால் விலக்கிடும்..
மறைந்தால் மறந்திடும்..
மீண்டும் திரும்பாது முன்பு இருந்ததை போல..
கவிதையின் காதலன் ரவி
சொல்ல முடியாத வார்த்தைகளில் ,,,
எண்ணிலடங்காத அன்புகடலில்,,,,
விழும் போது தூற்றி விடும் உதடுகள் போல் அன்றி,
துயரிலும் துணை நிற்கும் உறவு
Kavi
kasi yazhini puvanisha
Kasiyazhini Yazhini
என் மகளே...
உன்னை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது...
என்னவன் என் மீது வைத்து இருந்த மொத்த காதலையும் நீ திருடி விட்ட காரணத்தால்...
Siva Ranjani
எப்பேர்பட்ட
நம்பிக்கையும்
சிதைந்து போகும்
சந்தேகம் எனும்
சிறு தீப்பொறியால்
Thirumal Raj
#கடல்தாண்டி
களங்கரை விளக்கமாக
குடும்பத்தின் நிலை
காட்சிதருமென்ற நம்பிக்கையிலே
வட்டிக்கு கடன் வாங்கி பயணிக்கின்றான்
கண்ணீர் சிந்திய மனதோடு
இனி..கட்டுக்கட்டாக
பணத்தை பார்க்க போகிறானென்று
கனவு மட்டும் கண்டுவிடாதீர்கள்
உறவுகளே
கட்டுச்சோறை சுமந்துகொண்டு
கட்டிட பணிக்கு பனியோடும்
சூரியனின் கோர பார்வையோடும்
செல்வதை நீங்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை
நெற்றி வேர்வை மட்டுமல்ல
உடலே வேர்வையாகத்தான்
சூழ்ந்திருக்கும் இவனுக்குள்ளே
உப்பளத்தில் படிந்திருக்கும்
உப்பைவிட இவனது
உடலில் படர்ந்திருக்கும்
உப்பே அதிகமென
உணரச்செய்யும்
பசியோடு உணவு பொட்டலத்தை
திறக்கையிலே
நொச நொசவென்று
இருக்கும் உணவை
கையில் எடுத்துக்கொண்டு
கண்ணீர் வடிப்பான்
மனதுக்குள்ளே
தாயே என்னை மன்னித்துவிடு
உனது கையால் உண்ட பழைய சோறும்
பஞ்சாமிர்தமாக காட்சி
தருகின்ற உணர்வை
#கடல்தாண்டி வந்து உணர்ந்தேனம்மா
அடே பைய்யா
பக்கடோ சப்பாத்தி காவ்
என்று வடமாநிலத்தான்
நட்பையும் இந்த
நொந்து போன சோறு
எனக்கு ஊட்டி வளர்த்தம்மா
எது ?எதுப்படியோ?
கடல்தாண்டி வந்துவிட்டேன்
கடனையும் வட்டியோடு அடைத்துவிட்டு
கருப்பசாமி துணையோடு
தங்கச்சியை கரை சேர்க்க
நாலு காசோட
நாளைக்கு மீண்டும்...
#கடல்தாண்டி வருவேன்
அன்னையே உனது மடி மீது
தலைவைத்து தாணுரங்க...
அதுவரை பொருத்துக்கொள் தங்கையே
அஞ்சாறு பவுன் வாங்கும் வரை
அயராது உழைத்துவிட்டு
அடுத்த முகூர்த்தத்தில்
அண்ணன் வந்து நிற்பேன்
உனது மணநாள் காண...
கடல்தாண்டி வந்தாலும்
இன்னும் கனக்கத்தான் செய்கிறது
அயல்நாட்டில் வாழ்கிற மனது.
கடையநல்லூர்
கா.ஆசைத்தம்பி.
Ram siva
மறந்திடா நாள் எதுவோ...
தாய்மையின் நினைவெதுவோ...
உயிரினில் உயிரொன்று உருவான நாள் அதுவோ...
நடைபழக முந்திக்கொண்டு கருவினில் கால் பதித்த நாள் அதுவோ....
பசியென்று கதறாமல் உதையொன்றில் உணர்த்திய நாட்கள்..
உயிரொன்று உடைந்து புதிதாக உயிர் தந்தே உலகில் நீ வந்த நாள்..
கோடி நிமிடங்கள் உறக்கம் தொலைத்த நாட்கள்....
கட்டியணைக்கையில் அசைவற்ற தலையணையான நாட்கள்...
பின்னோக்கியே காண்கின்றேன்
என்னை விட்டு தனியே படுக்கையில்
நீ எவ்வளவு வளர்ந்து விட்டாய் ...
Your Sakhi
மகளிர் தினம் - பாடல்
(பாடலாசிரியர் - ப. பாரதி)
===========================
இளம்பிடியே இளையாளே-எங்கள்
நாட்டின் ஒளி விளக்கே…..
உனை போற்றுவோம் என்றும் காத்துநிற்போம்-எங்கள்
விழிகளின் இமையாலே….. (2)
உயிர்கொடுத்து உயிர்த்தெழுந்தாய்
உறவை வளர்த்தெடுக்க…
பூவழகி எம் பேரழகி
வருவாய் குலம் செழிக்க…
இளம்பிடியே இளையாளே-எங்கள்
நாட்டின் ஒளி விளக்கே…..
உனை போற்றுவோம் என்றும் காத்துநிற்போம்-எங்கள்
விழிகளின் இமையாலே…..
உலகரங்கில் உம் விளையாட்டால்
நாடே மனமகிழ்ந்தோம்…
பாரதத்தின் உயர் பதவியிலும்
அமரவைத்து கண்குளிர்தோம்…
இளம்பிடியே இளையாளே-எங்கள்
நாட்டின் ஒளி விளக்கே…..
உனை போற்றுவோம் என்றும் காத்துநிற்போம்-எங்கள்
விழிகளின் இமையாலே…..
மனமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
வாழ்க பூவை அவள்…
குமரி முதல் இமயம் வரை
கேட்கும் எங்கள் குரல்…
இளம்பிடியே இளையாளே-எங்கள்
நாட்டின் ஒளி விளக்கே…..
உனை போற்றுவோம் என்றும் காத்துநிற்போம்-எங்கள்
விழிகளின் இமையாலே….. (2)
ப.பாரதி
உதிரத்தின்
உறவுகளிடம்
உயில் உறுதி செய்கிறது
உயிர் எப்போது ?
பிரியவேண்டுமென்று..
Ram siva
உறவுகளிடம்
உணவுக்காக
நின்றாலும் தவறில்லை ஆனால்
ஒருபோதும் அவர்களிடம்
உழைப்பிற்காக மட்டும்
நின்றுவிடாதே ?
உன்னை உதாணசினப்படுத்திவிடுவார்கள்
மறைமுகமாக முட்டாளென்று...
Ram siva
ஆயிரம் கனவுகளோடு
உறவுகள் எண்ணிக்கை
கூடுகிறது என்றே நினைத்து
வருகிறாள் புகுந்தவுடன்தான்
புரிந்து கொள்கிறாள்
உறவின் எண்ணிக்கை குறைகிறதென....
Your Sakhi
மகிழ்ச்சி வேண்டுமானால்
பணம் சார்ந்ததாக இருக்கலாம்
ஆனால் நிம்மதி என்றும்
மனம் சார்ந்ததுதான்