Logo
உங்கள் கவிதைகளை பகிர ஆப்பை பதிவிறக்குங்கள்!
Logo

அப்பா கவிதைகள்

என் அப்பாவின் கரங்களில் இருந்த வரைக்கும்.., ஒரு பொழுதும் நான் வாடியதுமில்லை.., அவர் என்னை வாட விட்டதுமில்லை...!! RK

#
Kalpana Subramaniam

அப்பா என்னும் ஆல மர நிழலில் இருந்த வரை வெயில் என்னும் கஷ்டம் என்னை சுட்டதே இல்லை

#
121PSA23 P. Gomathi

ஐயோ இறைவா! ஏன் இப்படி... சாந்தமாக இருந்தவரை ஏன் சவப்பெட்டிக்குள் அடைத்தாய் ஆனந்த யாழின் நரம்பை அறுத்து, ஆடக் கொடுத்த பாத்திரத்தை முடித்து வைத்தாயோ! 90ஐ கடந்தவருக்கு 100 ஐ கடக்க ஒரு பாலமாக இருந்திங்கு பணிவிடை செய்ய ஒரு வரமளிப்பாய் என்றள்ளவா நின்னை தினம் தினம் தொழுது நின்றேன். கவிகளை படைக்கும் கவிமகனுக்கு இன்று இரங்கலை எழுத வைத்து விட்டாயே... ஏன் இவ்வளவு ஒரு வேகம் தமிழில் கவி படைத்து நின் பதமலர்தனை நனைத்து தேன் சிந்தும் பூ மலர்ந்து நந்தவனம் கமழும் நின் பாதமலரில் சேர்த்துக் கொண்டாயோ... உன் பாதம் பணிகிறேன் இறைவா... ஆயிரம் ஆயிரம் மனிதர் உண்டு ஒரு சிலர் தான் நெஞ்சம்தனில் நிலைப்பதுண்டு. உயிர் கொடுத்த தந்தை நீவிர் ஊன் கொடுத்த தாயை அடைந்து உள்ளப்பூர்வ அருள் வழங்கி வாழையடி வாழையாக வாரிசு தன்னை நிலைபெறச் செய்து குலம் தன்னை கோபுரமாக்கி கோலோச்சி அருள்புரிவாய் என் குல இறைவா... MWC. பாஸ்கர்.

#
BASKAR BASKAR

என் அப்பாவை பற்றி கவிதை எழுத வார்த்தைகளை தேடினேன் தேடினேன் தேடிக் கொண்டே இருந்தேன்....... அவர் எங்களுக்காக தேடிய தேடல்களை போலவே......... -ரஹ்மான்

#
Mohammed Abdul Rahma

ஆழமான அன்பை ஒழித்து வைத்துவிட்டு அரிதாக வெளிக்காட்டுவார் குறிஞ்சி பூப்போல............ ‍.

#
நிவி

எனது ரோல் மாடல், எனது தந்தை தான்..!" அழகுக்கு அம்மா பொறுப்பு என்றால்.., அறிவுக்கு அப்பாதான் பொறுப்பு..!" மாதா, பிதா, குரு, தெய்வம், என்ற வரிசையில்..!" கடவுளை விட, என் அப்பாதான் உயர்ந்தவர்...!! RK

#
Kalpana Subramaniam

மனதில் என்ன கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா உடனே மனம் திறந்து பேசி விடுங்கள் தந்தையிடம் அவரை விட ஆலோசனை சொல்லவும் ஆறுதல் சொல்லவும் எவரும் இல்லை இந்த போலி உலகினில்

#
Mohamed Bilal

அம்மா இல்லை என்றால் வீடு இயங்காது ஆனால் அப்பா இல்லை என்றால் இந்த உலகமே இயங்காது

#
Sujitha Jin

என் அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு பாடம ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் அவரின் சிரித்த முகம்..!! *SK*

#
SK

தரை மீது என் பாதம்பட கூடாதென . தோள் மீது என்னை சுமந்து புது . உலகை எனக்கு காட்டி என்னை புத்தம் புதிதாய் ஆக்கியவர் அப்பா SK

#
SK

அப்பா என்று சொன்னால். அப்பாதான். அவருக்கு நிகர் எவறும் இல்லை. (ஒரு சின்ன எடுத்து காட்டு) எனக்கு உடம்பு சரி இல்லை. சொந்தம் எல்லாம். பிரண்ட் எல்லாம். வருவாங்க போவாங். எதுவும் செய்ய மாட்டாங்க. அந்த இடத்தில என் அப்பா அவரோட உழிரையே எனக்கு தருவாங்க. அதுதான் அப்பா. என்றும் உன் மகன்.

#
பாலமுருகன் க

அப்பா நி பேசா பொம்மை உன் மயுனத்தின் அரிகுறி என் வாழ்க்கை.

#
பாலமுருகன் க

அன்பைப் பொழிவதில் மழையாய்..!" அக்கறை காட்டுவதில் ஆசிரியராய்..!" அதிகாரம் செலுத்துவதில் அரசனாய்..!" பொருள் ஈட்டுவதில் புயலாய்..!" பொருமையாய் வாழ்வதில் நிலமாய்..!" வளைந்து கொடுப்பதில் வானவில்லாய்..!" குணமாய் இருப்பதில் குன்றாய்..!" பொறுப்பாய் இருப்பதில் தலைவனாய்..!" கண்டிப்புடன் நடப்பதில் எம்டனாய்..!" தன் மக்களை சிறப்புடன் வாழ கற்றுத்தந்து..!" தன் வாலிபத்திலும், வயோதிகத்திலும், வீரனாய் , வள்ளலாய் கனவுகளையெல்லாம் நிஐமாக்கும் தெய்வமாய்..!" இதயத்தின் துடிப்பாய் ஒவ்வொரு வீட்டின் சொத்தாய்..!" ஒளி தரும் சுடராய், பஞ்ச பூதங்களின் அவதாரமாய், ஆணிவேராய், அடைக்கலம் தரும் சொர்க்கம் என்றுமே என் அப்பாதான்...!! *என் வாழ்வின் சிறந்த கதாநாயகன் என் அப்பாதான்* RK

#
Kalpana Subramaniam

வளக்கையில் உன் கை பிடிதேன் அப்பா.. என் ஆசையை நிறைவேற்றும்.. உன் உழைப்பிற்கு முன்னாள்.. என் உழைப்பு என்னவாக இருந்தாலும்.. அது பயணற்றது.. உன் வேர்வையில் வாழ்ந்த நான்.. என்றும் என் வளர்ச்சியின் தூண்.. எனது அப்பா...!! RK

#
Kalpana Subramaniam

என் உயிராக.. இருந்தாலும் சரி.. என் முதலாக.. இருந்தாலும் சரி.. என் முடிவாக.. இருந்தாலும் சரி.. என்றென்றும்.. என் இதயத்தின்.. காதலாகவும்.. சூப்பர் ஹீரோவாகவும்.. என் உலகமே.. என் தந்தை தான்...!! RK

#
Kalpana Subramaniam

u எங்களை ஊடல் udal nof ஊடல் நோகா ஊடல் நோக உ udal noga uz udal noga uzau ஊடல் நோக உசைதி ஊடல் நோக உழைத்து ஊடல் நோக உழைத்து ஊடல் நோக உழைத்து ஆர் udal noga uzaithu Rq ஊடல் நோக உழைத்து ரத்தத்தை ஊடல் நோக உழைத்து ஊடல் நோக உழைத்து ஊடல் நோக உழைத்துள் ஊடல் நோக உழைத்து உடல் நோக உழைத்து, உடல் நோக உழைத்து, ஊடல் நோக உழைத்து, டி ஊடல் நோக உழைத்து, ராத் ஊடல் நோக உழைத்து, ரத்தத்தை உடல் நோக உழைத்து, ரத்தத்தை வி ஊடல் நோக உழைத்து, இரத்தத்தை வெர் உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வு உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையா உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக எஸ் உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சி ஊடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக பாவம் udal noga uzaithu, rathathai vervaiyaga sindho உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்தி உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்திப் பிள்ளைகள் உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்தி பிள்ளைகள் வா உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்திப் பிள்ளைகள் வாழ் உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்தி பிள்ளைகள் வாழ உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்திப் பிள்ளைகள் வாழ பி. உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்தி பிள்ளைகள் வாழ பா உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்திப் பிள்ளைகள் வாழ பாடு உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்திப் பிள்ளைகள் வாழ பாடு உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்திப் பிள்ளைகள் வாழ பாடு உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்தி பிள்ளைகள் வாழ பாடு உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்திப் பிள்ளைகள் வாழ பாடுபாடு உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்திப் பிள்ளைகள் வாழ பாடுபடும் உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்திப் பிள்ளைகள் வாழ பாடுபாடு உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்திப் பிள்ளைகள் வாழ பாடுபடுவது உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்திப் பிள்ளைகள் வாழ பாடுபாடுபாவே உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்திப் பிள்ளைகள் வாழ பாடுபடுபவர் உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்திப் பிள்ளைகள் வாழ பாடுபடுபவர் உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்திப் பிள்ளைகள் வாழ பாடுபடுவார் ஒரு உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்திப் பிள்ளைகள் வாழ பாடுபடுவார் அப்போ உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்திப் பிள்ளைகள் வாழ பாடுபடுபவர் ஆப். உடல் நோக உழைத்து, ரத்தத்தை வேர்வையாக சிந்திப் பிள்ளைகள் வாழ பாடுபடுவார் அப்பா

#
R.jenifer

உங்கள் மொத்த வாழ்வின்.. இளவரசி நான் தான்..! என் வாழ்வின்.. முதலில் இருந்து.. முடிவு வரை.., கடவுள்.. நீங்க தான்..! நிஜம் பிரிந்தாலும்.., உங்கள் நிழல்.., எப்பவும்.. என்னோடு மட்டும் தான்.. அப்பா...!! RK

#
Kalpana Subramaniam

ஒவ்வொரு.. ஆண்களின்.. மனதில்.. இளவரசியாக.. இருப்பது மகள்.. ஒவ்வொரு.. பெண்களின்.. மனதில்.. இறைவனாக.. இருப்பது அப்பா...!! RK

#
Kalpana Subramaniam

மழலை மொழி.. தாய்க்கு புரியும்..!" தகப்பன் மொழி.. மகளுக்கு மட்டும் தான் புரியும்..!" அது போல தான்.. என் தந்தையின் மொழி.. எனக்கு மட்டுமே புரியும்...!! RK

#
Kalpana Subramaniam

என் வாழ்க்கையின்.. மறுபெயர்.. என்னவென்று... கேட்டால்... தயங்காமல்.. சொல்லுவேன்... என்... தந்தை தான்... என்று... RK

#
Kalpana Subramaniam

என் அப்பா......!! ஏழை தான்........!! ஆனால் ஒரு போதும்.....!! என்னை ஏழையாக.......!! வளர்த்ததில்லை ஸ்ரீஜா சந்துரு

#
ஸ்ரீஜா சந்திரசேகர்

நாம் உயரத்தை அடைய தன்னை ஏணியாக்கி கொள்பவர் தந்தை ஒற்றை வரியில் அப்பா ஓராயிரம் சுமைகளை சுமப்பவர் இனிய தந்தை வில்லன்போல் நீ நடித்ததெல்லாம், கவசம்போல் என்னை காக்கவேயென்று நற்பெயரில் நனைந்தபோது உணர்ந்தேன் அப்பா! இந்நாளில் உனை வாழ்த்துகிறேன்! தந்தையே வயிற்றில் சுமக்கவில்லை என்பதைத் தவிர வேறு குறை எதுவும் இல்லை முடிந்தால் அந்த வலியும் தாங்கிக்கொள்வார் அப்பா அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் மகளுக்கு அப்பா அடிமையென்று நம் வாழ்க்கையை விருச்சமாக்க தன்னை வேராக்கி கொண்டவர் தந்தை பிள்ளைகளுக்காக பல தியாகம் செய்தாலும் அதை முகத்தில் காட்டாமல் சிறு புன்னகையுடன் இருப்பவர் தான் அப்பா தான் கீழே இருந்தாலும் நம்மை மேலே தூக்கும் ஒர் உறவு அப்பா அப்பா ஏழையாக இருந்தாலும் நம்மை எப்போதும் ஏழையாக வளரக்க நினைத்ததில்லை எந்த பெண்ணும் அவள் கணவனுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயம் அவள் தந்தைக்கு இளவரசியாகவே இருக்கிறாள் உலகிலேயே அதிக பாதுகாப்புமிக்க இடம் தந்தையின் கை நம்மல எந்த சூழ்நிலையிலும் யார்க்கிட்டயும் எதுக்காகவும் விட்டு குடுக்காத ஒரே உறவு அப்பா மட்டும் தான் எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை, ஆனால் எல்லா பிள்ளைகளுமே இளவரசர்களாகவும், இளவரசியாகவும் தான் வளர்க்கப்படுகிறார்கள் எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும் அப்பாவை போல் யார் இருக்க முடியும் அம்மாவின் வலியை ஐந்து வயதில் கூட உணரலாம் ஆனால் ஒரு தந்தையின் வலியை நீ ஒரு தந்தையானால் மட்டுமே உணர முடியும் என் மகன் உறவு அவன் மனைவி வரும் வரை என் மகளின் உறவு என் ஆயுள் உள்ள வரை இருக்கும்போது கற்றுக்கொடுத்ததை விட இறந்த பிறகு அதிகமாய் கற்றுக்கொடுக்கும் ஜீவன் அப்பா பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுள் வரை தாங்கிடும் ஓரே உயிர் அப்பா! என்னை மட்டும் அல்ல, என் கனவுகளையும் சுமந்து கொண்டு நடக்கிறார் என் அப்பா! உலகை நமக்கு அறிமுகம் செய்வது தாய் என்றால் உலகிற்கு நம்மை அறிமுகப்படுத்துவது தந்தை தான் ஆராரோ பாட்டுப்பாடி தாலாட்டத் தெரியாத தாயும் நீ தான் அப்பா பெண்களுக்கு பாதுகாப்பு என்றவுடன் நினைவுக்கு வரும் முதல் ஆண் தன் தகப்பன் தான் மறுபிறவி ஒன்று இருந்தால் மீண்டும் உனக்கே மகளாக பிறந்திட வேண்டும் அப்பா. அசல் முன் நிழல் நடப்பது போல், என்றும் என் முன் நீ நடப்பாயே முன்மாதிரியாக.. அப்பா! பெண்கள் வைக்கும் அன்பில் ஏமாற்றத்தை அளிக்காத ஒரே ஆண் தன் தந்தை மட்டுமே எந்த பெண்ணும் அவள் கணவணுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயம் அவள் தந்தைக்கு இளவரசியாகவே இருக்கிறாள்.

#
John Sophi

இயற்கையின் ஒரு அற்புத படைப்பு எனில் அது எனது அப்பாவின் இதயம் தான் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் சிறு வயதில் ஆசானாய், வாலிப வயதில் தோழனாய் வாழ்வில் அங்கம் வகிக்கும் அன்பிற்குரிய அப்பாவுக்கு வணக்கங்கள்

#
John Sophi

தனக்கு கிடைத்தது மிகச்சிறிதாயினும் போதும் என்று என்னியவர்.. தான் தன் மகளுக்கு அளித்தது எவ்வளவு பெரிதாயினும் சிறிதே என்று என்பவரே அப்பா!

#
இதயத்தின்_குரல்

அப்பாவுடன் நான் இல்லை அதிக நாளும் உடனில்லை.. அவர் காட்டிய பாதையிலும் என் பயணம் தொடரவில்லை.. அப்பாவின் அன்பை நான் அதிக நாள் கண்டதில்லை.. என் அன்பை கண்டிடவும் என்னருகில் அவர் இல்லை.. அவரோடு இருந்து விட முயலாமல் நான் இல்லை.. என்னுடன் அவர் இருக்க வாய்ப்புகளும் அமையவில்லை.. காலங்கள் கடந்திருக்க உடல் நலமும் குறைந்திருக்க.. கொட்டும் பனிமலையில் தொடர்பின்றி தனித்திருக்க.. உயிர் பிரியும் நேரத்திலும் அவருடன் நானில்லை.. முகம் காண போக கூட வழித்தடமும் தெரியவில்லை.. பகையாளியின் பக்கத்தில் பதுங்கு குழியில் நானிருக்க.. பகிர்ந்திடவும் யாருமில்லை பனி மழையும் ஓயவில்லை.. என் மனமும் ஆரவில்லை தேற்றிடவும் யாருமில்லை..

#
கவிதையின் காதலன் ரவி

தங்கியிருந்த தாயின் கருவறை புனிதமானது அதே போல நாம் விழும் போது தாங்கிக் கொண்ட அப்பாவின் தோள்களும் புனிதமானது. பலரது வாழ்வில் கடைசி வரை விளங்கிக்கொள்ள முடியாத புத்தகம் அப்பா..! தாங்கிப் பிடிக்க அம்மாவும் தூக்கி நிறுத்த அப்பாவும் இருக்கும் வரை யாரும் வீழ்ந்தது இல்லை. பிள்ளைகள் கேட்கும் பொருளை வாங்கிக் கொடுப்பதில் தான் அப்பாவின் சந்தோசம் நிறைந்திருக்கின்றது. குழந்தையாக இருந்த பொழுது உன்னை இறுக கட்டியணைத்த படி உன் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் வாழ்ந்த நாட்கள் மீண்டும் வராத என்று என் இதயம் ஏங்குகிறது அப்பா. தன் தலைக்கு மேலே உட்கார வைத்து நம்மை அழகு பார்க்கும் அப்பாவை நாம் ஒரு போதும் தலை குனிய வைத்து விடக் கூடாது. என்னை தூக்கி அணைக்க முடியாமல் நீ தவித்த தவிப்பை உன் கண்கள் எனக்கு காட்டிக் கொடுக்கிறது அப்பா. நான் ரசித்த அழகிய இசை என் அப்பாவின் இதயத்துடிப்பு. தன் மூச்சு உள்ள வரை எனக்காக நேசிப்பவர்… எனக்காக தான் சுவாசிப்பவர் என் அப்பா மட்டும்..! அப்பா நமக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நாம் உணர்வதற்கு வாழ்க்கையில் பல வருடங்களை கடக்க வேண்டி இருக்கின்றது. அப்பாவை தவிர நமக்கு நல்ல நடத்தையை வாழ்க்கையில் வேறு எந்த ஆசானாலும் கற்பிக்க முடியாது. அன்பை வார்த்தையில் வெளிப்படுத்தாமல் தன் உழைப்பு மூலம் உணர்த்தும் ஒரே உறவு அப்பா மட்டும் தான். தாய் நமக்காக கஷ்டப்படுவதை நம்மால் கண்டு பிடித்து விட முடியும். ஆனால் தந்தை நமக்காக கஷ்டப்பட்டதை மற்றவர்கள் சொல்லித் தான் பிற்காலத்தில் தெரிய வரும். உண்மையாக உழைத்து சொந்த காலில் நிற்கும் பொழுது தான் புரிகிறது. இத்தனை நாள் தன் தோளில் சுமப்பதற்கு எவ்வளவு வலிகளை கடந்திருப்பார் என்று “அப்பா”. அம்மாவின் அன்பு கடல் அலை போல வெளிபட்டுக் கொண்டே இருக்கும்.. ஆனால் அப்பாவின் அன்பு நடுக்க கடல் போன்றது வெளியே தெரியாது ஆனால் ஆழம் அதிகம். அப்பாவின் அன்பை விட சிறந்த அன்பு இந்த உலகில் எதுவும் கிடையாது. கடவுளுக்கும் அப்பாவிற்கும் சிறு வேறுபாடு தான் கண்ணுக்கு தெரியாதவர் கடவுள்.. கண்ணுக்கு தெரிந்தும் பலராலும் கடவுள் என புரிந்து கொள்ளப்படாதவர் “அப்பா”. செதுக்கப்பட்ட ஒவ்வொரு சிலையும் கடவுள் என்றால் எனக்கு அப்பாவும் கடவுள் தான். அடித்தாலும் அன்பால் அணைக்கும் கடவுள் அப்பா. சில நேரம் பல வலிகளை மறக்க அப்பாவின் வார்த்தைகள் மட்டும் போதுமாக இருக்கின்றது. நாம் தவறான பாதையில் சென்றால் ஓடி வந்து நம்மை தடுக்கும் முதலாவது உறவு அப்பாவாக தான் இருக்க முடியும்…! அப்பாவை அதிகமாக நேசிப்பவர்களுக்கு இந்த அப்பா கவிதை வரிகள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவியாக இருக்கும்.Miss you daddy always

#
John Sophi

காலம் முழுதும் அன்பை மறைத்து காவலனாய் நின்று பாதுகாத்த உங்கள் அன்பிற்கு என்றும் தீரா கடனாளி நான் ️

#
Kavi

காலம் முழுதும் அன்பை மறைத்து காவலனாய் என்று பாதுகாத்த உங்கள் அன்பிற்கு தீரா கடனாளி நான்

#
Kavi

வறுமையின் சுவடு தெரிவதில்லை அப்பாவின் உழைப்பால்

#
Ram Ram

குடும்பத்தையே தாங்கி பிடித்த தந்தைக்கு கடைசியில் தாங்கி பிடிக்க துணையாக வந்தது அவர் வளர்த்த மரக்கிளை கைத்தடியாக!

#
selva.s

கருவறையில் என்னை நீ சுமக்கவில்லை ஆனால் நீ கல்லறை போகும் வரை என்னை உன் இதயத்தில் எப்போதும் சுமந்தே இருப்பாய் .. சாந்தமுடன்.syed

#
Basha Syed

தேவதையாய், ராட்சசியாய், தாயாய், தங்கையாய், தமக்கையாய், தோழியாய் இருந்திடுவாள் பலவகையாய் அவள் அவளாய் ஆனந்தமாய் இருந்திடுவாள், தந்தைக்கு மகளெனும் போதிலே!

#
Tamil Kumaran

உருகும் பனிபோல் காலம் கரைந்தாலும் உம்மிடம் பெறப்பட்ட அன்பும், வழிநடத்தலும் என்னில் அழிய வடுவே எந்தையே! காதலர் தினம் கொண்டாடும் பலருக்கு இடையில் உன்னை நாளும் கொண்டாடும் இவள் உமது மகள்.

#
Tamil Kumaran

என் உணர்வுகளை வார்த்தைகளால் அல்ல என் கண்ணீரில் புரிந்து கொள்ளும் உறவு நீ மட்டும் தான்

#
Chitra mani

அஅப்அஅப்ப மமகளமமகள்

#
Chandran Chandru

உறவுகளுக்கிடையே..உணர்வுகள் ஊனம் என்பதை உணர்த்தியது நீதான்... உன்னால் தான் உணர்வுகள் ஏதுமற்றவளாய் நான்....... இன்று உன் உறவுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறேன்....... காலம் தாழ்த்தியதும் என் கடமை மறந்ததும் உண்மைதான்...... மதியிழந்த பேதையாய் வாழ்ந்துவிட்டேனா... மதியிருந்தும் பிழையாய் நினைத்து விட்டேனா உன்னை..... எதுவாக இருந்தாலும் மன்னித்துவிடு.... என்னை மறுத்துவிடாதே .......அப்பா

#
மகி

எனது எதிர்காலத்தை முன்கூட்டியே தீர்மானித்த விஞ்ஞானி

#
Ram siva

அளவில்லா அன்பை நெஞ்சினில் புதைத்து, இந்த உலகத்தில் வாழ கற்றுக்கொடுத்தவன், கள்ள கபடமன்ற கம்பீரமான குரல் நாயகன், உழைப்பால் தேய்ந்துதாலும் பிள்ளையின் குரலில் புத்துணர்ச்சிபெறும் அன்புள்ள அப்பன் இவன். Ragukrishna

#
RagupathiKrishnasamy

வளக்கையில் உன் கை பிடிதேன்... அப்பா என் ஆசையை நிறைவேற்றும் உன் உழைப்பிற்கு முன்னாள் என் உழைப்பு என்னவாக இருந்தாலும் அது பயணற்றது... உன் வேர்வையில் வாழ்ந்த நான்... என்றும் என் வழர்ச்சியின் தூண்... எனது அப்பா.. ????

#
Tamilselva selvan

பறந்து போனது 13 வருடங்கள்.... மாறிப்போனது எங்களின் கனவுகள்... சிதைந்து போன சின்னங்களாய் எங்கள் சிரிப்பு போனது... வலிகள் மாறினது எங்கள் வாழ்வும் மாறினது... தவறி விழும்போதெல்லாம் தாங்க வரும் கைகளை கண் தேடியது.... தேடிக் கடுத்த கண்கள் விழி நீரை வீசி எரிந்தது... வலியும் விழியுமாய் எழுந்து... திக்கு திசையின்றி, தட்டு தடுமாறி... காட்டாற்று வெள்ளத்தில் சீக்கிய சிறு குச்சியாய்... வலியை தாங்கும் யுகத்தையும்,நல் வாழ்வின் வழியையும்... தெரிந்துகொள்ள... தேடலில் தொலைகிறது நீ இல்லா எங்கள் வாழ்வு... அப்பா!!!

#
S.M.Mani Kandan

அன்பின் அடையாளமே... அழத் தெரியாத ஆருயிரே... புன்முறுவலிடம் பூங்காற்றே... கரம் பிடித்த கடவுளே... என் முதல்வனே.... வர்ணிக்க இயலா என் வாழ்வின் வர்ணனே... விழி நீர் மண்ணில் விழாமல் வலிகளை புதைக்கும் உழவனே... பூ மனதில் புதைந்த அழியாச் சின்னமே.. அன்றும்,இன்றும்,சுற்றும்,முற்றும் தேடுகிறேன்... நான் தொலைத்த பொக்கிஷத்தை... அப்பா!!!.....S.M. Manikandan

#
S.M.Mani Kandan

அன்பின் ஊற்று நீ... ஆனந்தத்தின் பேச்சு நீ.. இணையில்லா இன்பம் நீ.. ஈடில்லா தொண்டனும் நீ.. உச்ச தோழனும் நீ... ஊன்றுகோலும் நீ.. எல்லாம் எனக்கு நீ... ஏணிபடியும் நீ... ஐயம் அகற்றுபவனும் நீ... ஒளிக்கும் ஒளியும் நீ... ஓவியம் நீ... ஔஷதம் நீ... உயிரும் மெய்யுமாய் என் உயிரில் ஓடும் உன்னதமே ....அப்பா சமர்ப்பணம்......என் அன்பு அப்பாவிற்கு

#
S.M.Mani Kandan

மகனை கஷ்டங்களே தெரியாமல் வளர்ப்பவர் நல்ல அப்பா! மகனை கஷ்டங்களை சந்திக்கவிட்டு எதிர்கொள்ள துணை நிற்பவர், சிறந்த அப்பா!

#
Alfie jo

வாழ்க்கை என்பது மிக எளிது நமக்கு கற்று கொடுக்கும் ஆசிரியர் நம் தந்தையாக இருந்தால்.

#
Mani
Logo

© Red Nucifera