அழியாத பாசம்..,
எனக்காக அழுத விழிகள்..,
நான் சாய்ந்து கொண்ட தோள்..,
என்னை பசிக்காமல் பார்த்துக் கொண்ட,
ஒரே தேவதை..,
என் அம்மா...!!
RK
Kalpana Subramaniam
எந்த ஒரு மழலையும் தாயின் புது உலகிற்கான திறவுகோல் தான்.
அதுவரை கண் கொண்டும் காணாததும்,
அறிவிருந்தும் அறியாததும் என அத்தனையும் கண்டடையும்.
எப்புலனும் புதுப்பொலிவு பெறும் .
மழலைக்காய் கூர் தீட்டி நிற்கும்.
கவிதா
தனித்திருக்கிற நொடிகளில்,
பாடல்களின் நடுவில்,
பிறந்த மழலைகளில்,
பார்க்கும் பெண் மழலைகளில்,
இதற்கு மேல் என்ன வேண்டும் எனும் நிறைவில் மனதில் கீறலாய்
வந்து கொண்டே இருக்கிறாய்.
கவிதா
ஆயிரம் முறை வஞ்சியிருப்பேன்!
இருந்தும் அவள் அன்பில் சிறிதும் சிதைவில்லை.
அடித்தாலும் பின்தொடர்வது
குழந்தையின் மனம் மட்டுமல்ல
அன்னையின் மனமும் தான்!
கவிதா
இடுப்பில் ஒருவரையும், தலையில் ஒருவரையும் ஒரு நொடி கீழ் வைக்காது சுமந்தே வளர்த்தாள்.
இருவரையும் தலைக்கும், இடுப்பிற்குமாய் மாற்றினாலே தவிர தரைக்கு மாற்றவே இல்லை.
அணைத்து நிற்கிற கைகள் தளரவே இல்லை.
தாங்கி நிற்கிற கால்கள் தாளாது வலித்த போதும் இறக்கவே இல்லை.
இறங்கவும் விடவில்லை.
இனிமேல் நிற்கவே முடியாது என அது மன்றாடிய போதும் தளராது நின்றிருந்தாள்.
இறங்கவே வேண்டாம் என்றாள்.
மூட்டு தேய்ந்த போதும் சுமந்து கொண்டே நிற்கிறாள்.
பிடிவாதமாக இறங்காத வரை அவள் இறங்க விட போவதும் இல்லை. இறக்க போவதும் இல்லை என உணர்ந்த பின் இறங்கி விட்டேன்...
கவிதா
எதுமே அறியாத இந்த அப்பாவி மழலையை கண்ட பின் எப்படி இறுக பற்றாமல் இருப்பாள் .
இந்த பற்றுதலால் ஓடி ஓடி ஓய்ந்தும்,
உறவுகள் சலிப்படைந்தும், ஏதோ ஒரு மூலையில் அந்த அப்பாவியை மீண்டும் கண்டு விடுகிறாள்.
மீண்டும்
ஓயாது ஓடுகிறாள்.
வாழ்வின் இறுதி தருணங்களிலும் உயிர்மூச்சை இறுக பற்றி கொண்டுருக்கிறாள் இந்த அப்பாவிக்காய்!!!
கவிதா
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை ஆனால் கோவில் போல் கட்டண
தரிசனம் இல்லை
கோவில் போல் இடைமறிக்கும் அர்ச்சகர் இல்லை
கோவில் போல் திறக்கும் நேரம் காலம்
இல்லை
கோவில் போல் வேண்டுதல் இல்லை
எந்தநேரமும் தரிசனம் உண்டு
நம் அன்புகாக ஏங்கி நமக்காக வாழ்ம் நடமாடும் தெய்வம் தாய்
வாசந்தி
vasathi
#அம்மாவின் பாசத்தில்
வேசம் இருக்காது...
#நேசத்தில் பிழை
இருக்காது...
#பிள்ளைகளின் நலன்
மட்டுமே அவளின்
வேண்டுதலாய் இருக்கும்..
#பிள்ளைகளின்/ #( பசி அறிவாளே
தவிர தன் பசி,,
உணரமாட்டாள்...
#ஒரு குழந்தை பெற்ற பிறகு
அவளின் ஆசைகள்
அடங்கிவிடும்...!
{அம்மா}...!
விழிகளை மூடினால் கனாவாய் வந்தாய் நீ,
ஆனால் அவற்றை திறந்தால் கண்ணாமூச்சி விளையாட்டை ஆடுகிறாய் நீ,
மீண்டும் உன்னை காண இயலுமா.. தாயே?
கார்த்திகா மனோஹரன்
amma....yendru kumudam thalattu....migge....meiyemanthethe
amma nee agilam uruvakenethe yenikka...
perrupe valge vo sanitanele iruppen
amma kuppudam varthai.....nerrupu pol....irukkam vun kannam
yen valkai vun kundethele vanthethe....
arrupu irukatha.....arrupu pudicha amma marrugel mathile.....nee oru oli....
mgr amma
amma nee thee....
amma yendri kumpudem sol.....meliseyanne katre.....(katre vallipadum......sex)
annal vun thee valimeyanne theh....
amma amma yendri kumpuden kolentey ...amma utthaoem..thallatu...ethi..?..pechi....pechi alagane thalattu padaval....pesuvalle irukke amma manthiram
Alexander chandrasekaran
yen amma orru arrupe
valunthen ariyamme amma amma kumpten
arrupu thee le yericheputten.....yen kathale....vaithu....24age
signature:utthaoem..thallatu...ethi..?..pechi....pechi alagane thalattu padaval....pesuvalle irukke manthome amma manthiram
Alexander
Alexander chandrasekaran
signature:
manathil...manikuyil.....irunthe....porenthe varre varrekum.....pasathil....allai allai ya....yennai....tanni thothil....attey(rock) vallethal....
yen arrupu pudicha amma illei....avalukul orthi.....from far she saw me......
amma....passi
udtham kayie verai.....palle utham kan verikum...
amma amma endri kupudde vai(mouth)..amma mell....pasam pongum....
amma yendral....pon thotham....kavi ahnen pen nale.....anna amma yendri oru pen nalle annen....oru manithan....tha
amma....nee oru pon nilave....utha morthe,
amma...pasam till nee..pasamane.....thai....
pasam till nee uthi vidde,naa elaviyo...peruganall llo....vo kanle naa oru kannu kutti....
un pasam.....meagahtha....kiilekum,
un katre vasal le....naa valenthen..
vu pasathe kuditchan....
valenthe perrugene....naa ilei,un paseh velakku...
amma oru alage nitcham....uyir kudekum....oru thai,manathil...manikuyil.....irunthe....porenthe varre varrekum.....pasathil....allai allai ya....yennai....tanni thothil....attey(rock) vallethal....
amma yendri entha amma va kandale eniki kathal pudhutham....
amma i love you
Alexander chandrasekaran
signature:
manathil...manikuyil.....irunthe....porenthe varre varrekum.....pasathil....allai allai ya....yennai....tanni thothil....attey(rock) vallethal....
yen arrupu pudicha amma illei....avalukul orthi.....from far she saw me......
Alexander
சாலையில்
நீ உலா வந்தாலும்
சேலையில்
வரும் நிலா நீ..
காலையில் தினம்
ஒளிர்ந்தாலும்
மாலை வரை உடனிருக்கும்
ஆதவன் நீ..
சிரிக்கும் சீமாட்டியாய்
சிதறி வந்தாலும்
மின்னலாய் ஒளி வீசும்
நட்சத்திரம் நீ..
ஜன்னலோரம்
தென்றலாய் தினம்
வீசி சென்றாலும்
மனதோரம் தினம் வந்து
அமர்ந்து செல்பவள் நீ..
கவிதையின் காதலன் ரவி
கண்ணில் கண்டதும்
மனதில் நிற்றவள்..
கொஞ்சி பேசிடும்
கிளியானவள்..
விழிகளை விலகாமல்
நிற்க செய்தவள்..
எடுத்த முடிவில்
மாற்றம் காணதவள்..
தனித்து போராட
அஞ்சாதவள்..
கண்ணீர் சிந்தாமல்
அழ தெரிந்தவள்.
சோகத்தை சுகமாக
மாற்றிக் கொள்பவள்..
மனதில் சுமை ஏற்ற விரும்பாதவள்..
சிரிப்பில் ஆறுதலை
தேடிக் கொள்பவள்..
உணர்வுகளை உள்ளுக்குள்
வடிக்க தெரிந்தவள்..
ஆசையை மனதில் வைத்து பூட்டிக் கொள்பவள்..
சத்தம் இன்றி முத்தமிட்டு சிரித்துக் கொள்பவள்..
கோகத்தை அடக்கியாள
கற்றுக்கொண்டவள்..
இதுவும் கடந்து போகும்
என்பதை உணர்ந்து கொண்டவள்..
எதுவும் நிலையில்லை
என்பதை ஏற்றுக் கொண்டவள்.
பட்டு பூவின் மென்மையுடன்
போட்டி கொண்டவள்..
கவிதையின் காதலன் ரவி
நிலவில்லா நீண்ட
வானம் அழகாகுமா..
ஒளியின்றி
இருண்ட வானம்
பொலிவாகுமா..
விண்மீன்கள் மின்னாமல்
அழகு கூடுமா..
மேகமில்லா நீல வானம்
மோகம் கொள்ளுமா..
மழை பொழிந்து பூமியின்
தாகம் தனிக்குமா..
கடல் நீரில் வாழும் மீன்கள் தரையில் வாழுமா..
நீ இன்றி பூமியிலும்
உயிர்கள் தோன்றுமா..
உன் நினைவின்றி
மனமும்தான் நிலையாகுமா..
கவிதையின் காதலன் ரவி
பேசாமல் இருந்தாலும்
பாசம் குறையாமல்
இருக்கிறாய்..
தொலைவில் இருந்தாலும்
மனம் கோணாமல்
இருக்கிறாய்..
கோபமாய் இருந்தாலும்
குறை கூறாமல் இருக்கிறாய்..
நலமின்றி இருந்தாலும்
நலம் வாழ சொல்கிறாய்..
கவிதையின் காதலன் ரவி
புத்தம் புதியதாய் என் மடியினிலே பூத்த மலரே உன் மென்மலர் பாதம்
தீண்டுகையில் என் மனதினிலே ஆயிரம் விண்மீன்கள் ஒளிர்ந்ததடா...
Ilakkiya sri
அ-என்றால் நினைவுக்கு வருவது அம்மா..!"
அம்மா என்றதும் நினைவுக்கு வருவது, அன்பு..!!
அன்பென்றால் அவள் தான்..!"
என்னை கருவில் காத்தவளும் அவள் தான்..!"
நாளும் என்னை நினைவில் வைத்தவள்..!"
நெஞ்சம் முழுதும் நேசம் வைத்தவள்..!"
என் தவறை மறக்க தெரிந்தவள்..!"
என் வேதனையை சுமக்க தெரிந்தவள்..!"
என் நிந்தனையை ஏற்றுக் கொள்பவள்..!"
என்னை உச்சி நுகர பாராட்டுபவள்..!!
உறவைக் கற்றுத் தருபவள்..!"
உணர்வைப் புரிந்துக் கொள்பவள்..!"
உண்மை பேசக் கற்றுக் கொடுத்தவள்..!"
தன் பிள்ளைப் பேச்சைக் கேட்டு ஊமையானவள்..!"
உன் பெருமை சொல்ல வார்த்தை இல்லை..!"
உன் புகழ் சொல்லாத மேடை இல்லை..!"
இத்துணை சிறப்புடைய படைப்பிற்கும்..!"
என்னை இவ்வுலகிற்கு கொண்டு வந்த
என் அம்மாவுக்கு..,
மகளாகவும், தாயாகவும்..,
ஆயுள் முழுதும் உன்னை நான் சுமப்பேன் அம்மா...!!
*அன்பு மகளாய்*
*என்றும் உங்கள்*
RK
️
Kalpana Subramaniam
நான் இருக்கும்
இடமெல்லாம்
என் தமிழிருக்கும்..
மூச்சி விட மறக்கும் வரை
என்னுள் கலந்திருக்கும்.. உரையாடலில் தமிழே நிறைந்திருக்கும்..
பிறமொழியும் கற்றுக் கொள்ள மனமிருக்கும்..
என் நினைவிற்குள்
தமிழுக்கே முதல் இடமிருக்கும்.. தமிழன் என்ற கர்வத்தில் மனதிருக்கும்..
தலை வணங்கா மொழியாக நிலைத்திருக்கும்..
முதல் மொழி தமிழ் என்ற
பெயர் இருக்கும்..
தரணியெங்கும் காற்றாக படர்ந்திருக்கும்..
சுற்றும் பூமியை நிற்காமல்
சுற்ற வைக்கும்..
உலகை ஆளும் மொழியாக நிலைத்திருக்கும்..
கவிதையின் காதலன் ரவி
அம்மா என் உழிர். அம்மா என்பது நான். அம்மா என்பது என் தொழில். இந்த முன்றும் இல்லை என்றால்! நீ மரணா வாசலை தொட்டு இருப்பாய். என்றும் நலமுடன் உன் மகன்.
பாலமுருகன் க
அம்மா ஞாபகம்
சீரிய வகுடு எடுத்து
சிறப்பாக முதுகுதடவி
முத்தமிடும்
பாசம் எங்கே...
உயிர் கலந்து
உணவு பிணைந்து
நிலவை காட்டி
ஊட்டும்
அன்பு எங்கே...
அந்தி வேளையில்
அரவணைத்து மங்கிய விளக்கொளி
பாடல் பாடி
விடியும் வரை நீ தூங்கு விளையாட
பாப்பா வரும்
பாடல் எங்கே...
தீராத கண்ணீரில்..
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
அம்மா
தேடாத வரம் நீ
தேடாத செல்வம் நீ
தேடாத தேவதை நீ
தேடாத பெண்மை நீ
துணை இருக்க தொலைவில் நீ
மழலை இருக்க மறைந்த இடத்தில் நீ
நிஜங்கள் இருக்க நினைவெல்லாம் நீ
வரமே..
வளர்ச்சியை பார்க்காத நீ..
தேவதையே..
எல்லாம் இருக்க
இல்லாத இடத்தில் நீ
அறிவை புகட்டி
அன்பை தந்தவளே..
வானில் இருந்து வாழ்த்துவாய என
ஏங்கும் அன்பு மகன்..
வாழ்க பல்லாண்டு..
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
மற்றவரைப் போல எனக்கு உன்னைப் பற்றிகவிதை வர்ணிக்க தெரியவில்லை அம்மா....
நீ தான்
பசியில் அழுது கொண்டிருந்த என் னை விட்டு
எப்போதும் புன்னகையோடு இருக்கும் இறைவனடி சேர்ந்து விட்டாயே... நான் யார் மீது பழி சுமத்துவது........
Nithisha R
என் முகம் பார்த்து பசி அறிந்து,
தன் வயிற்று பசி மறந்து,
என் விழி உறங்க வைக்க,
தன் உறக்கம் தள்ளி வைத்து,
எனக்காய் வாழ்ந்த ஜீவன்,
எந்நாளும் என் உயிரில்,
என் அம்மா...!!
RK
Kalpana Subramaniam
அன்பெனும் பாலுடி அறிவேனும் அமுதுத்தி நம் வளர்த்தவள் அம்மா
R.jenifer
கருவில் இருந்து குழந்தை தவிக்கின்றதுவெளிவர இயலாமல்
தாய்க்கோ அறுவை சிகிச்சை குழந்தை சற்றும் கசங்காமல்
அழகிய முழு நிலவாய்
உலகக்கண்டு புன்னகைத்தது...
Ilakkiya sri
உயிர்களின் முதல் வார்த்தை..
மனிதனின் முதல் கண்டுபிடிப்பு..
நாம் உணரும் முதல் ஸ்பரிசம்..
பாசத்தை கற்றுத்தரும் ஆன்மா..
நேசத்தில் வளர்க்கும் தோழி..
எதிர்ப்பார்ப்பே இல்லாத உயிர்..
என்றும் நம் "அம்மா" மட்டுமே...!!
RK
Kalpana Subramaniam
ஓயாமல் பொழிந்த மழை
நிற்க ஆங்காங்கே நின்ற மழைத்துளிகளை குழந்தைகள் நாவால் சுவைத்தும் குவளைகளில் பிடித்தும் விளையாட அனைவரும்
கண்டுகளிக்கும் இவர்களின்
குறும்பை தாய் ரசிக்காமல்
சமையலறையில் முடங்கி இருக்கிறாள் குடும்ப விளக்காய்
காலத்திற்கு ஏற்ற தாய்மையுடன்
குழந்தைகளின் குறும்பை ரசியுங்கள் இப்பிறவி வாசத்துடன் கழியட்டுமே...
தாயே நீ போய்விடுவாய் என தெறிந்து இருந்தால் இன்னும் உன் அருகிலேயே அதிக நேரம் இருந்து இருப்பேன்.என்னை பிரிந்து விட்டாய் இப்போது தான் உங்கள் அன்பு தெரிகிறது
J.nisthar@ kilai
J.Mohamed Nisthar
ஏக்கமில்லாத மனதில்
அவள் பிம்பத்தை
பதிய வைத்து
ஏங்க செய்தவள்..
தூக்கமில்லாத விழியில்
அவள் அழகை காண வைத்து
தாக்கம் செய்தவள்..
கேட்காத செவிக்கு
சிரிப்பொலி கொடுத்து
மயங்க செய்தவள்..
காத்திடாத என்னை
அவள் வரவிற்காக
காத்திட செய்தவள்..
மறந்து போன நினைவுகளை
வண்ணத்தில் மெருகேற்றி
நேரில் தந்தவள்..
கவிதையின் காதலன் ரவி
கோவிலுக்கு செல்லாமல்
கைக்கூப்பி வணங்காமல்
உன் ஆசையை நிறைவேற்றும்
ஒரு தெய்வம் அம்மா…!
Shiny Mani
இதயத்தின்
துடிப்பை வைத்தே
குழந்தைகள்
கண்டுபிடித்து விடும்
தான் இருப்பது
அன்னையிடமா
அடுத்தவரிடமா என்பதை.....
Shiny Mani
எனக்கு நீ ஈஸியாலாம் வேணாம்..
பேசி பேசி கரெக்ட் பண்ணுவேன் நானா
Karuppasamy
ஒரு சிலருடன்
பேசும்போதுதான்
உதடுமட்டும் அல்ல
மனமும் சேர்ந்து
சிரிக்கும்...
Karuppasamy
என் செல்லமே இப்போது
தான் நடை பயில ஆரம்பித்தாய்
ஏன் மாடிப்படி ஏற ஆசை கொள்கிறாய் உன்னை ஏற
விட்டு உன் பிஞ்சு பாதங்கள் தடுமாறினால் தாங்கிக்கொள்ள வருவதே தெரியாமல் விலகி இருந்தே உன்னை இரசிக்கின்றேனே
என்னை அறிவாயா கண்ணம்மா...
Ilakkiya sri
இமை மூடி நான் படுத்தாலும்
எனை சுமந்த தாயின்
நிழல்தானே நிசமாய்
எனை அரவணைக்கிறது
பாசமாய் ....
அன்புடன்
செந்தமிழ் சிந்தை கவிஞன்.
கொடி.ஜெ.ஜெயபால்.எம்.ஏ.பி.எட்.
கொடி.ஜெ.ஜெயபால்.
ஆயிரம் பேர் உன்னை குறை கூறினாலும், "உனக்கு என்னடா குறை” என சொல்லும் அன்னையின் அன்பிற்கு நிகரான சக்தி ஏதுமில்லை! இன்பம் துன்பம் எது வந்த போதிலும் தன் அருகில் வைத்து அனைத்து கொள்கிறது தாய்மை.அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள். தொலைந்து போன பின் தேடாதே. அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம். அன்னையின் அன்பு...!வலி நிறைந்தது
என்பதற்காகயாரும்விட்டுவிடுவதில்லைதாய்மை!.ஒவ்வொரு நாளும் கவலை படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலை பட மாட்டாள்.
John Sophi
அம்மாவுக்கு மட்டுமே தெரியும்
நமக்குள் இருக்கும் திறமைகளை நம்மால் அறிந்து கொள்ள முடியாதென்பது அதைப்புரிய வைத்து நம்மை நாம் அறிந்து கொள்ள உதவுபவள் நம் தாய்க்கு நிகர் யாருமில்லை...
Ilakkiya sri
தாய்மையின் அடையாளம்...
அள்ளி அள்ளி கொடுத்தா செல்வம் கூட குறையும்!
ஆனால் அன்னையின் அன்பு மட்டுமே என்றும் குறையாதே!
கிள்ளி கிள்ளி எடுத்தா இலைகளும் கூட உதிரும்!
ஆனால் தாயின் அன்பிற்கு எப்போதும் வசந்த காலம் மட்டுமே!
அது என்றுமே மாறாத, காலத்தை கடந்து நிற்கும் அதிசயச் சின்னமே!
குட்டக் குட்டக் குனிஞ்சா வாழ்க்கை சோகமயம் தான்!
ஆனால் அன்னைக்கு மட்டும் அது எப்போதுமே ஆனந்தம் தான்!
பிள்ளைகளுக்காக தோற்பதும் கூட சந்தோஷம் என்ற எண்ணம்!
அதுவே தாய்மையின் அடையாளம்!
மகுட தாரிணி
அன்னையின் அன்பில்...
நொடிப் பொழுதினில்
சட்டென்று உறைந்து
கடிகார முள்ளும் கூட
மௌனம் காக்கும்
அம்மா, நீ பாடும்
தாலாட்டினைக் கேட்க!
அழகின் பல்வேறு
பரிமானங்களைக் உள்ளடக்கிய இயற்கையும் கூட
அனுதினமும் தவமிருக்கும்
அம்மம்மா, உன் பாசத்தின் எழிலை
உளமார உணர!
விண்ணகம் துறந்து
மண்ணகம் உதித்து
உன் அன்பினில்
நாள்தோறும் திளைப்பானோ
அன்பே வடிவான
இறைவனும் கூட,
அன்னையே, நீ அன்பினை பொழியும்
தோரணையைக் கண்டு!
மகுட தாரிணி
அம்மா என்ற சொல்லே ஒரு வேத மந்திரம்,
அம்மா என்றாலே ஒரு சுதந்திரம் ,
அம்மாவே ஒரு அடைக்கலம்
உயிர் தந்த அம்மாவே என் உலகம்
Palani Muthu
விதையிட்ட இடத்திலே விருட்சமாகவும்
விளக்கொளியில் மடியும்
விட்டில் பூச்சிகளாக
இருந்த பெண்ணே..
பிறக்கும் போதே
மலருக்கும் வன்மம் உண்டு
நிலவிலும் அனலுண்டு,
பூவிலும் புயலுண்டு
என்பதை காட்டிடு..
விடியலைத்தேடும் வின்மீனாகிடு..
இரவை பகலாக்கும்
நிலவாகிடு..
பெண் மிரண்டால்
வானும் மிரலும்
என்பதை காட்டிடு..
கவிதையின் காதலன் ரவி
vazhkkaiyil padum ella valigalaiyum
marakka seigiradhu
amma ....ennai eendradukka ni pattavali.
Nisha Shiva
என்னழை முதலில் ரசித்தவள்
தனக்கே பசித்தாலும்
நான் சாப்பிடும் அழகுக்கண்டு
தன் பசி மறந்தவள்
என் தவறுக்கண்டு தோழியாக
காதினைச்செல்லாமாக திருகிடுவாள்
அம்மா என்பவள் பொக்கிஷம்
இறைவன் நமக்கெனப்படைத்த
தேவதை
கருவறையில் சுமந்தவள் எதிர்பார்ப்பது
மனவறையில் ஓரிடமே!
PREETHI KARTHIK
காணாத நிலையிலும்
தேடாமல் நானில்லை..
கண தூரம் சென்றாலும்
மனம் தூரம் சென்றதில்லை
கண் காண நாளொன்றை
இன்று வரை கண்டதில்லை..
தேடும் விழியுடன்தான்
மொழி பேசா நாளில்லை..
காதலுடன் உன் முகத்தை
தேடாத நொடியில்லை..
காணாத நாளென்றால்
நிலவிலும் சுடரில்லை..
சுண்டி இழுக்கும் உன் விழியில்
மீன் பிடிக்கும் தூண்டில் இல்லை..
துடி துடிக்கும் இதயத்தில்
படப்படப்பை கண்டதில்லை..
புரையோடிய காதலையும்
வேரறுக்க முடிவதில்லை..
கண் முன்னே நீ இருந்தால் கண்ணுறக்கம் வருவதில்லை..
என்னருகில் நீ இருந்தால்
கண் கலங்க தேவையில்லை..
உன் மடியில் நான் உறங்க
தடையேதும் சொன்னதில்லை..
நான் கொஞ்சம் பசியார தங்கத்தட்டு தேவையில்லை..
பால் கொடுக்க நீ இருந்தால் தாலாட்டும் தேவையில்லை..
கவிதையின் காதலன் ரவி
எண்ணற்ற
தெய்வங்கள் இருந்து என்னபயன்
அம்மாயென்ற
அன்புத்தெய்வம் இல்லாதபோது
Ram siva
மகிழ்ச்சியான
புன்னகையின் பின்னால்
ஆயிரம் உணர்வுகளை
மறைத்து கொள்ளும்
வலியவள்..
சோர்வடையும் நேரத்திலும்
சிங்கார சிரிப்புகளை சிதறடிப்பவள்..
வண்ணமயமான
எண்ணத்திலும்
வற்றாத சிந்தனையை
பகிர்ந்தளிப்பவள்..
எட்டாத தூரத்திற்கும்
கிட்டாத சிரிப்பொலியை
எட்டிட செய்தவள்..
சிந்தனை இல்லாத
சிந்தையிலும்
தினம் அவளை சிந்திக்க செய்தவள்..
கவிதையின் காதலன் ரவி
கைகுள் உன்னை
அணைத்து கொண்டு
இதழில் இடம் தேடி
பதித்திட ஆசை..
இசையாய் உன் குரலை
கேட்டுக்கொண்டு
பஞ்சு கால்களை
கட்டிக்கொண்டு
பிஞ்சு விரல்களை
மீட்டிட ஆசை..
புரியா மொழியில்
கொஞ்சிக் கொண்டு
கட்டி தங்கமே,
தூங்குடி செல்லமே,
என்று கெஞ்சும் அன்னையின் கொஞ்சலை கண்டிட ஆசை..
நடுநிசி நேரத்திலும்
நீ பசிக்காமல் கண்ணுறங்க,
தான் உறங்காமல் விழித்திருக்கும் அன்னையின்
பாதம் பணிந்திட ஆசை..
கவிதையின் காதலன் ரவி
மறைந்தபின்
படையலிட்டு
வணங்குவதைவிட
உயிரோடு
இருக்கும்போதே
அன்பு செலுத்துங்கள்
Ram siva
அரவணைப்பு
அம்மாவுடன் பிறந்தது.. அப்பாவுக்கு சிறந்தது.. சகோதரிகளுக்கு இனிமையானது.. சகோதரர்களுக்கு தேவையானது..
குழந்தைக்கு பிடித்தமானது..
உறவுக்கு
உறுதியானது..
பிரிவுக்குப் பிணைப்பானது..
அன்பை வெளிப்படுத்த இறுக்கமானது..
நட்பை தொடர்ந்து கொள்ள ஆழமானது..
கவிதையின் காதலன் ரவி
சூரியன் குளிரும் வரை
நலமுடன் இருக்கிறேன்..
நிலவு ஒளிரும் வரை
சிரிக்கவும் செய்கிறேன்..
தனிமை என்னை
சூழ்ந்திடும் போது
உன் சிந்தனையில்
சிக்கி விடுகிறேன்..
சில நேரம் உன் சிந்தனையால்
தூக்கம் கொள்கிறேன்..
பல நேரம் தூக்கத்தை
தொலைந்து விடுகிறேன்..
உன் நினைவுடனே
காலத்தை கடந்து செல்கிறேன்..
கவிதையின் காதலன் ரவி
என்னை கருவறையில் பசியாற்றிய அன்னையே என் கல்லறை வரை பசியாற்ற நீ வேண்டும் எனக்கு.ஆயிரம் பேர் அருகிலுருந்தாலும் உன் போல யாரும் இல்லை அம்மா.
John Sophi
பூ போல்
மலர்ந்திருந் "தாய்"..
புது புன்னகை
பூத்திருந்"தாய்"..
நிலவை போல் ஒளிர்ந்திருந்"தாய்"..
புது மாலை
சூடி இருந்"தாய்"..
மனதோடு
துணை இருந்"தாய்"..
பார்வையிலே
உருக வைத்"தாய்"..
இதயத்தை
கிரங்கடித்"தாய்"..
மழலையை
பெற்றெடுத்"தாய்"..
பெயர் சூட்டி என்னை அழைத்"தாய்"..
தாய்மையில் எனை அணைத்"தாய்"..
மகிழ்ச்சியை தினம் கொடுத்"தாய்"..
பசிக்கு முன்
உணவளித்"தாய்"..
தூக்கமின்றி எனை வளர்த்"தாய்"..
அழும் முன்
வாரியணைத்"தாய்"..
தூக்கத்திலும் தட்டிக் கொடுத்"தாய்"..
ஆராரோ பாட்டுக்கும்
இசை அமைத்"தாய்"..
கவிதையின் காதலன் ரவி
பாசமுடன் பாலூட்டி
கண்ணீரயும் கலந்தூட்டி
வாழ்க்கை என்பது
வாழத்தான்என்னும் புதிரை
கற்றுக்கொடுத்தாவள்
_ என் அம்மா
Thava Mani
உயிரை கருவாக்கினாய் உதிரத்தை பாலாக்கினாய் உன்னை புண்ணாக்கினாய் என்னை ஆளாக்கினாயே என் அன்னையே அந்த விண்ணையே வில்லாக்கினாலும் அடைக்க முடியாது உனக்கு நான் பட்ட கடனையே.
Bharathi Bharathi
கோடி உறவு அருகில் இருந்தாலும்
அம்மாவை மிஞ்சின உறவேதும்
உலகில் இல்லை..!
Nila run1969
கோவிலுக்கு செல்லாமல்
கைக்கூப்பி வணங்காமல்
உன் ஆசையை நிறைவேற்றும்
ஒரு தெய்வம் அம்மா…!
Nila run1969
என் காதலின் பரிசாய்-என்
வாழ்வின் போக்கிசமாய் எனக்குள் உருவெடுத்தவள்.
பரிதவித்த மனதுடன் நான் இருக்க
ஊரார் காதுகளுக்கும்
பதிலலித்தவள்.
அன்பொன்றை மட்டும் அடமானமாய் வைத்து அருளாக உன்னைப் பெற்றேன்.
என் குதிரத்தின் சுழற்சியுடன் -என்
இதயத்துடிப்படன் களந்தாய் நீ.
கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும்
உன்னை ஆறுதலாய், அமைதியாய், எதிர்ப்பார்ப்பாய், சில போது ஏக்கமாய் என்னுள் உணர்கிறேன்.
எனக்குள் கருக்கொண்டு தாய்மை தாகத்தை விதையிட்ட பூஞ்சிட்டே என்னுள் முளைத்த மழலை மலர் நீ.
தினம் உன் அழகை ரசிக்க
உன் மணம் நுகர உன் வரவிற்காய்
காத்துக்கிடக்கின்றது இந்தத் தாய்மை.
rifka marzook
எத்தனை உறவுகள் வந்தாலும் நம் தாய் அன்புக்கு ஈடாகாது தாய்மை மதிக்காதவன் இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியாது
இவன் உங்கள்
டைகர் மணி
Manikadan Tiger mani
தன் தேவை அறியா தேவதை அவள்!!
பத்து மாதம் என்னை பத்திரமாக பாதுகாத்து வந்தாள்... ஆனால் அந்த பட்டாம்பூச்சிக்கு அது போகவில்லை!!!
நான் உயிர் பெற மறு பிறப்பு எடுத்த பரிசுத்தமான பிறப்பு அவள்....
ஒரு போதும் தன் தியாகத்தை சொல்லிக் காட்டாத செந்தமிழ் பெண் அவள்!!
என் சிரிப்பை பார்த்து பொறாமை கொள்ளாத பொக்கிஷம் அவள்!!
எனக்கு வேகத்தை தாங்க தோள் கொடுத்த தெய்வமகள் அவள்!!
அவள் தியாகங்களை எழுத எழுத்துக்கள் போதவில்லை.... அவள் பாசத்தை கூற வானின் நீளம் போதவில்லை!!
பெண்மையை பெருமைப் படுத்திய தாய்மையை!!! தாய்மைக்கு வரமாய் வந்த நான் கூறுகிறேன்..... உறக்க கூறுகிறேன்... இந்த துலாபாரத்திலும் தோற்காத உன் பாசம்.. ..இவ்உலகிற்கு ஈடாகாது,,,,
தாய்மை வாழ்க,,,,
hema Sweet
மீண்டும் கிடைக்காத சிம்மாசனம் தாயின் கருவறை,மீண்டும் கிடைக்காத அரியாசனம் தாயின் மடி,
அன்னையை போற்றும் ,ஆராதிப்போம்
என்றும் அன்புடன்
Rock Fort bala
Rock fort bala subramanian
மௌனம் மொழி பேசும் உன்னிடத்தில் ...
சிறு புன்னகை தோன்றும்
பல நேரத்தில்...
பலரும் அறியாத கவலை கொண்டாலும்
மறைக்க கற்றுக்கொண்டாய் மௌனமாக ...
இருந்தும் அம்மா...
பலரும் அறியாத சிறுபிள்ளை நீ..!!
Deva
மீண்டும் ஒரு முறை தாலாட்டு பாடினால் தாயே கல்லறையில் கூட நான் உறங்க செல்வேன் உனக்காக.
Basha Syed
காணிக்கை வாங்காத தெய்வம் என் வீட்டு சமையல் அறையில் அம்மா.சாந்தமுடன் syed...
Basha Syed
ஆயிரம் உறவுகள் உன்னை
சூழ்ந்து நின்றாலும் உனக்கு
ஒரு துன்பம் வரும் போது
வாழ் நாள் முழுவதும்
உன்னை தாங்கிப் பிடிக்கும்
ஒரு உறவு உன்
தாய் மட்டும் தான்
Tamil Kumaran
நான் தாயான பிறகுதான், நான் உன்மீது வைத்து இருக்கும் அன்பும், மரியாதையும் பற்றி உணர்ந்தேன்...
Siva Ranjani
#தாலாட்டு
ஆராரிரோ பாடிய
அன்னையான
அற்புதமே
தவணை முறையில்
தொட்டிலை ஆட்டிவிட்டு
தரணியில் தனிமையாக
தவிக்கவிட்டு சென்றது ஏன்?
ஆட்டங்கண்டு நிற்கிறது
நீ! கட்டிய தொட்டில் மட்டுமல்ல
நீ! ஈன்றெடுத்த
உனது பிள்ளையின் வாழ்வும்தான்
நான் செய்த பிழையென்ன
தாயே
தாலாட்டு கேட்கவேண்டிய
செவிகளை
ஒப்பாரி சத்தம் கேட்கவைத்தாயே
உதிரத்தால்
உணவு வழங்கி விட்டு
உதறி தள்ளி சென்றது ஏன்? தாயே
உலகமே நீயென்று
நினைத்ததற்கு
நீ! தந்த பரிசா தாயே
கடைசியாக நீ!கட்டிய
உனது சேலை
இறைவா
நாளை எனது மரணத்தருவாயிலும்
மறவாமல் இந்த சேலையோடு
என்னை புதைத்துவிடு
தாய் வாசனையோடே
எனது வாழ்வு முடியட்டும்.
கடையநல்லூர்
கா.ஆசைத்தம்பி.
Ram siva
ஒரு தாயின் அன்பை
முழுமையாக உணரும் தருணம்
ஒரு பெண்ணின் திருமண
வாழ்க்கையில் தான்
Chitra mani
நான் பார்த்த முதல் தெய்வம்
நான் பேசிய முதல் வார்த்தை
நான் பிறக்கும் முன்பே என்னை சுமந்த சொர்க்கம்
Hari Shvahari
பெற்றவள்
அறியா வயதிலே
அனாதையாக்கிவிட்டாள்
வளர்த்தவள்
பாதியிலே
வீதியில் விட்டுட்டு
சென்றுவிட்டாள்
வந்தவள்
தாயாக இருந்து
பார்த்துக்கொள்கிறாள்
Ram siva
என்னை
அனாதையாக்கிய பின்பும்
சபிக்க மனமில்லை
அவள்
என் தாயென்பதால்.
Ram siva
குச்சி பிடித்து
அம்மாவென்று
எழுதி படிக்குமுன்
விறகு குச்சி பிடித்து
அவளை எரிக்கச்செய்துவிட்டான்
இறக்கமற்ற அந்த
இறைவன்.
Ram siva
அம்மா என்பது சாதாரண
வார்த்தையல்ல
குழந்தைகளே அது
அகிலம் தாண்டிய அற்புதம்
அறிவால் நீ! உலகை ஆண்டாலும்
அவளுக்கு நீ! அடிமையே என்று உணர்த்தும் அன்பின் ஒளி வட்டம்
நீ! கடல்கடந்து வந்தாலும் உனது ஆரோக்கியத்தை ஆராய்வதில்
அகிலம் தாண்டிய விஞ்ஞானி
உனக்காக உண்ணா நோன்பு இருந்த உன்னத கடவுள் அவள்
தனது பசி மறந்து உனக்கு
ருசியாய் உணவளித்து மகிழ்ந்த
ஒப்பற்ற பிறவி அவள்
அப்படிப்பட்ட அவளுக்கு
நீ! நன்றி கடன் செலுத்தவேண்டாம்
உனது உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை அவளை முதியோர் இல்லத்தில் மட்டும் சேர்த்துவிடாதே ?
நீ! அதற்கு அவள் வயிற்றில் பிறக்காமலே இருந்திருக்கலாம்.
அவள் இல்லையென்றால்
இவ்வுலகில் உனக்கு அனாதை என்ற பெயர் என்பதை எப்போதுமே நினைவில்கொள்.
உனக்கு தாயின் அருமை தெரியவாய்ப்பில்லை
ஏனென்றால் ?
உனக்கு தாய் இருக்கிறது
எனக்கு தாய் இறந்திருக்கிறது.
அதன் வலி மரணத்தை விட கொடுமையானது
தயவுசெய்து தாயை இறுதிவரை நேசியுங்கள்
அந்த பொக்கிசத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்
அவ்வளவே.
கனத்த இதயத்துடன்
கடையநல்லூர்
கா.ஆசைத்தம்பி .
Ram siva
வணக்கம் இது பத்து மாச சுமைகள்
வாருங்கள் தாங்கலாம்.
பத்து மாதம் என்றாள் ஒரு சிறிய மாதம் . ஆனால் அதன் வலிகள் கூடுதல். அம்மா என்று அழைப்பது ஏன். நம்மளுக்கு அடிபட்டால் என்று அழைப்போம். காரணம் அம்மா நம்மளை சுமப்பது பத்து மாதம் அல்ல வாழ்க்கை முழுவதும் அவர் இதயத்தில் சுமப்பார் என்று அழைத்துப் பாருங்கள் ஓடோடி வந்து நிற்பார் அதுதான் பாசம் .
அம்மா அம்மா
Sasikala Kalai
தாயோடு சேர்த்து
அக்காவையும் பெற்றவர்கள்
பாக்கியசாலிகளே
ஆம்
அவர்களுக்குத்தான்
இரண்டு அம்மாக்கள் கிடைத்திருக்கும்...
Ram siva
அனைத்து உயிரினங்களும் அதிகம் நேசிக்கும் ஒரு பந்தம் என்றால் அது அம்மா தான். அம்மாவை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. நமக்கு இந்த உலகத்தை காட்டியவரே அம்மா தான். உலகில் தனக்கென எந்த ஒரு தேவைகளையும் எதிர்பார்க்காமல் நம்மீது அதிக பாசத்தை காட்டக்கூடிய ஒரே ஜீவன் அம்மா தான்.
Nishanth Priya
அனாதை பட்டம் வழங்கி
இந்த சமூகத்தில் என்னை திசையற்று திரிய வைத்தவள்.
Ram siva
நான் உன்னை தான் முதலில் காதலித்தேன் அம்மா...
பிறக்கும் போது நினைவில் இல்ல முகம்...
நான் இறந்தும் ஏந்தவேண்டும் உன் அன்பு கரம்...
நான் வீழும் வரை நீ என்னோடு இருக்க வேண்டும்....
உன் பிரிவும் என் மனம் தாங்காது...
என் பிரிவும் உன்னால் ஏற்றுக்கொள்ள இயலாது...
இருவரின் ஏக்கமும் ஒன்று தான் அம்மா.... ????
Tamilselva selvan
தாய்மை!
மண்ணிலே தோன்றிய
மனித உறவுகளில்
மாற்றம் வருவதுண்டு
மாற்றமே நீ.. தோற்று விட்டாய்
தாய்மை என்றுமே மாறாதது
இதை நீ மறந்து விட்டாயோ...
s. Alice dipolem music
KaviKuil - COMPETITION
பேசியும் புரியாத
உறவுகளுக்கு மத்தியில் பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு
" தாய் "
கேட்டும் கொடுக்காத
தெய்வங்களுக்கு மத்தியில
கேட்காமல் கொடுக்கும் உறவு
" தாய் "
fahath__m__zain
உனக்குள் துவங்கி
உன்னுள் உயிராய்
நீயே என் பிரம்மனாய்
நானே நின் பிம்பமாய்
உன் மூச்சின் பாதியில்
முழுமையானேன் உயிராக!
parameshwari jaganathan
படைத்தவன் தெய்வம்
ஆனால்
உயிர் கொடுத்தவள்
நீ தான்.....!
❤️தனிமை காதலி❤️
(கவி)
1g queen Kd papa
அன்பு எவ்வளவு அழகு என் உனது பாசத்தில் அறிந்தேன்.அந்த அன்பு கருவறையில் தொடங்கி கல்லறைகள் வரை தொடர வேண்டும்.கண் பார்க்கும் முன்பே உன் மனதில் இடம் பிடித்தவள்.மீண்டும் ஒரு முறை பிறக்க வேண்டும் உனக்காக உன் மகள் கா உன் மடியில் நான் தவழ்ந்து விளையாட வேண்டும் அம்மா.
PS. Saran
உனக்கு எவ்வளவு தான்
வயதானாலும் அம்மா
அப்பாவின் பார்வையில்
சிறு
குழந்தைதான்
Ram Ram
வயது வித்தியாசம் பார்ப்பதில்லை,
அம்மாவின் கொஞ்சலில் மட்டும்
இன்னும் குழந்தையாக..!
Alfie jo
கவிதையின்
முதல் மொழி
குழந்தையின்மழலை......ம் மா.......