Logo
உங்கள் கவிதைகளை பகிர ஆப்பை பதிவிறக்குங்கள்!
Logo

வாழ்த்துக்கள் கவிதைகள்

காலை வணக்கம் காளை யின் வணக்கம்

#
கவி ஆர்ட் அரசன்

சொல் இல்லாமல் வில் எய்து கல் இல்லாமல் காயம் செய்பவளே.. கண்களால் மின்னல் எய்து புன்னைகையால் குளிர செய்பவளே.. சொல்லில் பேசாமல் சலங்கையுடன் பேசும் நாட்டியமானவளே.. முடியுமென்பதில்லை உடும்பின் முயற்சி கொண்டவளே.. மனதோடு வலிமை கொண்டு தாய்யுடன் ஒன்றி கொண்டு.. புன்னகை சிறையில் அகப்பட்டவளே.. உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

#
கவிதையின் காதலன் ரவி

சிரிப்பு இல்லாத வாழ்க்கை ‌சிறகு இல்லாத பறவை போன்றது கண்களில் கவலைகள் ஆயிரம் இருந்தாலும் நம் இதயத்தை இனிமையாக வைத்திருப்போம் புன்னகை என்பது நாம் படிக்கும் புத்தகம் போன்றது அதில் எல்லா பக்கங்களும் சந்தோஷம் நிறைந்தவை.அதை தினமும் வாசியுங்கள்.இன்று புதிதாய் பிறப்போம் என்றும் புன்னகையோடு இருப்போம்.இனிய புதிய ஆண்டு வாழ்த்துக்கள் சாந்தமுடன்.SYED.

#
Basha Syed

ஆண்டுகள் மாறினாலும் மனிதன் ஆசைகள் மாறவில்லை தேதிகள் மாறினாலும் மனிதனின் தேவைகள் இன்னும் தீரவில்லை நாட்கள் கடந்த போதும் மனிதனின் நாடோடி வாழ்க்கை இன்னும் முடியவில்லை.விழிகளில் ஆயிரம் கேள்விகள் ஆனால் விடைகள் மட்டும் இன்னும் தெரியவில்லை . மனித வாழ்க்கை ஒரு விசித்திரம் அதில் கவலைகள் இல்லை நிரந்தரம்.பிறக்கும் இந்த புதிய ஆண்டு உடலுக்கு மருந்தாக பசிக்கு விருந்தாக.அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.என் புதிய ஆண்டு வாழ்த்துக்கள்.

#
Basha Syed

வாழ்க்கையில் மகிழ்ச்சி தொடர்ந்திட குடும்பத்தாரின் வாழ்த்துக்கள் முழங்கிட ஊரும், உறவும் போற்றிட உனது புகழ் ஓங்கட்டும்.. வானவன் வாழ்த்திட வாழ்க்கை வளமாகிட சீரும் செழிப்பும் சிறந்திட பிறந்தநாள் வாழ்த்துக்கள் தொடரட்டும்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

#
கவிதையின் காதலன் ரவி

நித்திரை மறந்திட முத்திரை பதித்த சித்திரமே.. புது மொட்டாய் பிறந்து பூவாய் மலர்ந்த பூஞ்சரமே.. கூவும் குயிலின் குரலொலியில் புது மொழி பேசட்டுமே.. அசைந்தாடும் விழியும் புள்ளி மானாய் துள்ளி விளையாடுட்டுமே.. இன்பங்கள் தொடர்ந்திட உள்ளமும் நிறைந்திட கேட்பது கிடைக்கட்டுமே.. இந்த உலகமும் உனதாகட்டுமே.. சுழலும் பூமியில் கேட்கும் இடமெல்லாம் உன் புகழ் பரவட்டுமே.. வானவன் வாழ்த்துடன் வாழ்த்தும் உள்ளங்களும் அன்பாய் உன் புகழ் பாடட்டுமே.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறட்டுமே..

#
கவிதையின் காதலன் ரவி

வானவில்லின் வண்ணத்தில் சேலைக்கட்டியவள்.. வண்ணத்து பூச்சியாய் இமையசைத்து புது மொழி பேசியவள்.. சிரிப்பழகியாய் தினம், தினம் சிறகடித்தவள்.. விண்ணை சுற்றும் நிலவைப்போல் மனதை சுற்றியவள்.. மின்னும் மின்னலுடன் போட்டியிட்டவள் சுற்றும் பூமியுடன் சுற்ற வந்தவள்.. இதழ் விரித்து இந்நாளில் மலரானவள்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

#
கவிதையின் காதலன் ரவி

உள்ளத்தை அன்பால் நிறைத்திடு.. இதழ்களை புன்னகையால் மலர்த்திடு.. வானத்தை தொட்டுவிட முயன்றிடு.. கனவுகள் மெய்ப்பட தொடர்ந்திடு.. வெற்றிகள் தொடர்ந்திட வாழ்ந்திடு.. அன்னையின் ஆசியுடன் வாழ்ந்திடு.. தித்திக்கும் புது நாளை தொடங்கிடு.. மாறி கொள்ளும் மனதுடன் இனைந்திடு.. நகரும் நேரத்துடன் நகர்ந்திடு.. திகட்டாத அன்புடன் கலந்திடு.. பிறந்த இந்நாளில் சிகரம் தொடு...

#
கவிதையின் காதலன் ரவி

வசந்தம் மீண்டும் தொடர்ந்திட கேட்டேன்.. சோலையாய் மீண்டும் மலர்ந்திட கேட்டேன் .. புதைந்த விதையை துளிர்ந்திட கேட்டேன் .. மலர்ந்த முகத்தில் புன்னகை கேட்டேன்.. இசையின் கதவு திறந்திட கேட்டேன்.. கூவும் குயிலை கூவிட கேட்டேன்.. சுற்றும் உலகில் ஓர் இடம் கேட்டேன்.. விரும்பியது யாவும் கிடைத்திட கேட்டேன்.. மகிழ்ச்சி மனதில் நிலவிட கேட்டேன்.. வளமாய் வாழ்த்திட உன் துணைக் கேட்டேன்.. மணநாள் வாழ்த்து முழங்கிட கேட்டேன்..

#
கவிதையின் காதலன் ரவி

இன்று பிறந்தது அழகிய நாள் இறைவன் அருளிய இன்னோரு நாள்.. கடந்து வந்ததை மறந்திடும் நாள்.. எதிர்காலம் எனதென்று போரிடும் நாள்.. நினைத்தது நிறைவேற நிறைவான நாள்.. இறைவனின் திட்டத்தின் அடுத்த நாள்.. உறவுகள் வாழ்த்தும் பிறந்தநாள்..

#
கவிதையின் காதலன் ரவி

அரும்பே உன் அன்புக் கரம் பற்றி நடக்கையில் குறும்பே உன் வாழ்க்கைத் தடத்தை பின் தொடர்கையில் முத்துச் சரமே சிதறும் உன் மழலை மாறாத சிரிப்பின் கோர்வையில் அன்பின் சுடரே உன் நீண்ட நெடிய அழுகையின் வெதும்பலில் வீழ்ந்துக் கிடக்கும் என்னை நீ அறியாயோ என் ஆழ் மனக் குமுறலில் என்றுமே நீ விடுபட்டதில்லை நரை விழுந்தாலும் என்றுமே மழலை மாறாத மாணிக்கம் தான் நீ எனக்கு! இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...

#
மகுட தாரிணி

புத்தம் புது வருடம் புத்தம் புது நாட்கள் புத்தம் புது நிமிடம்.புத்தம் புது வானமாய் இன்று புதிதாய் முளைத்த சூரியன் போல் என்றும் மாறா புன்னகையோடு கள்ளம் இல்லா உள்ளமாய் இயற்கை என்ற இல்லத்தில் இறைவனின் உள்ளத்தில் என்றும் அழியாத வானம் போல இணைந்து வாழ வாழ்த்துகிறேன்.சாந்தமுடன் . SYED

#
Basha Syed

மணி ஐயா புகழாஞ்சலி கொங்கு மண்டல தேரோட்டமே கோவை மாநகரின் நீரோட்டமே குருகுல வாசனே குருசேத்திர நேசனே காவி தரித்த தத்துவமே கலியுகத்தின் சித்தரே கலைக் கதிரின் நேசமே கல்லூரியின் சுவாசமே அலோபதியை ஆராய்ச்சி செய்த சித்த வைத்தியரே ஆயுள் தோறும் அத்வைதத்தின் போதகரே பூசா கோவை புரட்டி போட்ட புரட்சியே புதிய தலைமுறை கிளர்ச்சியே மூலிகையின் மருத்துவரே மூல மந்திரத்தின் முதல்வரே மனவியலை போதித்தவரே உளவியலை வாசித்த தலைவா உன் புகழ் பரவட்டும் திக்கெட்டும் உங்கள் ஆயுள் வளரட்டும.. ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

புத்தாண்டு வாழ்த்துக்கள்.. மார்கழி மாத பனித்துளியால் பூமித்தாய் புது குளியல் இட்டு புத்தாடை உடுத்தி புத்தாண்டை வரவேற்க குத்துக்காலிட்டு அமர்ந்தாள்... நள்ளிரவு நளினமாய் நாழிகை 12 என புத்துணர்ச்சி பொங்க புதுமண தம்பதியாய் புத்தாண்டு பிறந்தது பூமித்தாய் திக்கு முக்காடினாள்.. சிந்தனையை செப்பனிட்டால் டிசம்பர் மலர்களாய் காலம் கரைந்ததை கவலைப்படாமல் ஜனவரி பூக்களால் வாழ்க்கையை வார்த்தெடுக்க மனிதர்கள் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துக் கூறினால் தாய்... வாழ்க வளர்க ராமசாமி...

#
Ramasamy Ramasamy

பூ போன்ற புன்னகையும் பால் போன்ற மனசும் கொண்ட உங்களுக்கு இன்றைய நாள் தேன் போல சுவைக்கட்டும்... இனிய மாலை வணக்கம் #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

அன்பானவளே சிரிப்பில் ஏன் இந்த சிக்கனம்.. பிரியமானவளே(பிரியா) உன் முகத்தில் சிரிப்பின்றி நிலவிற்கே அழகில்லை.. சிரிப்பென்றும் திகட்டாது தோழியே சிக்கனமின்றி சிரித்திடு.. வானவில்லும் மண்டியிடும் உன் சிரிப்பழகை கண்டு.. சிரித்திடு பெண்ணே சிரித்திடு.. இப்பிறந்தநாளை செழிப்புடன் களித்திடு.. வரும் காலமெல்லாம் சிரித்திருந்து இன்பத்தில் திளைத்திடு.. சுற்றும் பூமி சுழலாத வரை உன்னை சுற்றி வாழ்த்துக்கள் சுழலட்டும் வானவனும் அருள் புரியட்டும்..

#
கவிதையின் காதலன் ரவி

பூவின் மென்மை உடனிருக்கும்.. புள்ளிமான் துடிப்பில் இமையிருக்கும்.. மயிலின் தோகையாய் விழியிருக்கும்.. விழிப் பேசும் கவிதையில் மொழியிருக்கும்.. கூவும் குயிலாய் குரல் இருக்கும்.. அதில் ...! சுரக்கும் ஊற்றாய் அன்பிருக்கும்.. கவலையை மறந்த இதழிருக்கும்.. அதில் ...! செதுக்கிய சிற்பமாய் சிரிப்பிருக்கும்.. புரியாத அர்த்தங்கள் நிறைந்திருக்கும்.. அறியாமல் காலம் கரைந்திருக்கும்.. வெற்றியும் தோல்வியும் கலந்திருக்கும்.. நிறை குடமாய் மனமும் நிறைந்திருக்கும்.. பிறந்த நொடியுடன் யுத்தமிருக்கும்.. ஒவ்வொரு நொடியிலும் பயிற்சியிருக்கும்.. மலர்ந்த நாள் முதல் கணக்கிருக்கும்.. புவியும் சூரியனை சுற்றியிருக்கும்.. மலர்ந்த நாளின்று வந்திருக்கும்.. வாசலில் வாழ்த்துக்கள் குவிந்தியிருக்கும்.. என் வாழ்த்தொன்றும் அதனுடன் இணைந்திருக்கும்.. பிறந்தநாள் வாழ்த்து சொல்ல காத்திருக்கும்.. அன்புடன் ரவி..

#
கவிதையின் காதலன் ரவி

குழந்தை பருவத்திலே குறும்பு உனைபோல் செய்தவர் யாரது விளம்பு? பார்த்தவர் நெஞ்சில் பூரிப்பு கேட்பவருக்கோ என்றென்றும் திகைப்பு! உந்தன் மேனியின் நிறமோ கருப்பு உள்ளமது என்றும் தித்திக்கும் கரும்பு! அன்னைக்கு நீ தந்ததென்ன பதபதைப்பு பெண்டிற்கு பரிசலித்ததுமென்ன புல்லரிப்பு! வெண்ணெய் திருடும் உந்தன் துடிப்பு உனக்கேன் வந்ததோ சிரிப்பு! உந்தன் கள்ளச் சிரிப்பு அது கொளுத்திப் போட்ட மத்தாப்பு! குழலோசையில் நீ தந்ததென்ன மிதப்பு நினைவோடு சுகந்தம் தந்தருளும் உந்தன் நினைப்பு! அதிலென்ன உனக்கொரு வியப்பு உண்மைக்கு என்றுமில்லை விடுப்பு! மக்களின் குறை களையும் துடுப்பு அதை நீ எடுக்க இல்லையொரு தடுப்பு! எங்கள் இல்லம் வர உனக்கில்லை மறுப்பு நாங்கள் பரிசளிப்போம் என்றென்றும் நன்மதிப்பு! இனிய கிருஷ்ண ஜெயந்தி தின வாழ்த்துக்கள்!

#
மகுட தாரிணி

இரத்தம் சிந்திய மண் ஆறாத வடு மரணத்தைக் கடந்த துயரம் இவை யாவையும் கடந்து சோர்வைக் கடந்த நம்பிக்கை நெஞ்சமெல்லாம் உத்வேகம் ஏக்கம் ததும்பிய கண்கள் இவை யாவைக்கும்  பலன் கிடைத்த நாள் இன்று! இனிய 78வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

#
மகுட தாரிணி

உன்னை பார்க்காமல் காலங்கள் பல கடந்திருக்கலாம்... ஆனால்... உன்னை நினைக்காமல் நொடி பொழுது கூட நான் கடந்ததில்லை ...

#
Karuppasamy

புன்னகை எனும் ‌வானத்தில்‌‌ புதிதாய் முளைத்த சூரியனே‌ தென்றல் வரும் நேரத்தில் தேனாக வந்த ‌புது மலரே காவியங்கள் உனைப் பாட‌காத்திருக்கும் அந்த காலண்டர் கூட ‌‌உன் நாளை காட்ட ‌இழைக்கக் கூடும் இனிய இந்த பூமிக்கு இறைவன் உன்னை வழங்கிய நாள்.சாந்தமுடன்.syed

#
Basha Syed

பனியில் நனைந்த ரோஜாக்கள் அழகாக பூத்திருக்கும் இந்த புத்தம் புதிய நாள் உதடுகள் எப்போதும் சிரித்தே இருக்க இதயம் எப்போதும் ‌குழந்தையாய்‌ இருக்க இந்த வானம் உள்ள வரை உன் வாழ்வில் சந்தோசம் நிலைத்திருக்க.பிறந்தநாள் வாழ்த்துக்கள்..சாந்தமுடன்.. syed

#
Basha Syed

பூமி உழைப்பதால் இரவும் பகலும் தருது சாமி உழைப்பதால் எல்லா நிகழ்வும் நடக்குது ஒரு மனிதனின் தேவைக்கு உழைக்க அது இன்னொரு மனிதனின் தேவைக்கு கிடைக்குது எல்லோரும் உழைப்பதால் இவ்வுலகமே ஜொலிக்குது நேர்மையாக உழைப்போம் பெருமையாக இருப்போம் மே தின வாழ்த்துக்கள் சொல்லும் பழனிமுத்து

#
Palani Muthu

உழைப்பு தேன்கூடு, தேனீக்களின் கனவு மட்டுமல்ல! அது தேனீக்களின் உழைப்பு! தேன், அது தேனீக்களின் ஊதியமட்டுமல்ல! அது தேனீக்களின் உழைப்புக்குக் கிடைத்த வரம்! பருக்கை அது எறும்புகளுக்கு கிடைக்கப்பெற்ற தீனி மட்டுமல்ல! அது எறும்புகளின்  உழைப்புக்குக்கான  மூலதனம்! உழைப்பிலும் ஓர் ஒற்றுமை அது எறும்புகளின் ஒழுங்கிற்குக் கிடைக்கும் பரிசு! ஒரு கனவு கண்டால், அதில் உன் உழைப்பை விதைத்தால், உன் கனவுக்குத் தீனி போட்டால், அதற்குக் கிடைப்பது ஊதியமட்டுமல்ல உன் வாழ்விற்கான வரம்! உழைப்பு, அது ஓர் தவம்! உழைப்பிலும் ஓர் ஒழுங்கு, ஒற்றுமைக்குக் கிடைக்கும் பரிசு உழைப்பு! உழைப்புக்குக் கிடைக்கும் பரிசு ஒற்றுமை! உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்...

#
மகுட தாரிணி

தீப ஒளித்திருநாள் சிரிக்க சிரிக்க சிரிப்பு வரும் மத்தாப்பு ! பொறி பறக்க பறக்க பறந்து வரும் கை பாத்து ! வானத்துல நட்சத்திரம் பூப்பூத்து ! கையில விழுந்ததென்ன நீ காட்டு ! கன்னக்குழி சிவக்க சிவக்க காரப்புட்டு ! கையிக்குழி சிவக்க சிவக்க பலகாரம் தொட்டு ! இடிச்சு புழிஞ்ச இடியாப்பம் ! கடிச்சு முடிக்க முறுக்கு நெய்யாட்டம் ! இத நாங்க சாப்பிடத்தான் கொஞ்சம் நாளாகும் ! நமக்கு தீப ஒளி திருநாளாம் ! எங்கும் கரவொலி மத்தளமாம் !

#
S Sankari

தரிசனம் உன்னை அனுதினமும் ஆராதித்தேன்! உந்தன் தரிசனம் வேண்டுமென்று! தேடித் திரிந்தேன் இந்த பூமியில்! நம்பிக்கையை மட்டும் எடுத்துக் கொண்டு! தவமதனை மேற்கொண்டு! அல்லும் பகலும், உன்னையே நினைத்து! உன்னை மட்டுமே நினைத்து! உன் திருநாமத்தையேத் துதித்து! எனது எண்ணம் ஓர் நாள் ஈடேரியது! யாவிலும் நீ தெரிந்தாய்! யாவையுமாகவும் நீயே இருந்தாய்! என்னுள் எண்ணங்களாக வியாபித்திருந்தாய்! எனது நாவினில் குடிபெயர்ந்தாய்! என் செயல்களிலன் ஆளுமையாக நீ உருவெடுத்தாய்! அன்றிலிருந்து இன்று வரை, என்னை வழி நடத்தும் ஒளியாக நீ இருந்தாய்! அணுவைப் பிளந்தேனும் நீயே தெரிந்தாய்! பிரபஞ்சத்தின் சின்னஞ்சிறிய துகளிலிருந்து, பேருவப் பொருட்கள் வரை  அனைத்திலும், உன் இணக்கத்தை உணர்த்தினாய்! இறைவா, உன் மகிமைக்கு ஈடு இணையேது!

#
மகுட தாரிணி

சிகப்பி நல்ல சிகப்பிதான் சிகப்பி நல்ல சிகப்பிதான் ! சிகப்பு தோலு சிகப்பிதான் ! செங்கா நெல்லு சிகப்பிதான் ! சிரிக்கும் சொல்லு சிகப்பிதான் ! செவத்தக்காரன் வந்தாரய்யா ! சிகப்பியத்தான் கவுப்பாரய்யா ! ஊரெல்லாம் ஒன்னு சேர்ந்து கல்யாண ஊர்கோலம் போக வைக்கும் ! சின்ன ஓலை குடிசைக்குள்ள சீதனங்கள் கொட்டிக் கிடக்குது ! சீதை கணக்கா சிகப்பி நிக்குறா ! தன்னோட குணத்த சொல்லி தலைகுனிஞ்சு பார்க்குறா ! சிங்கப்பல்லு சிங்காரி ! தங்க ரத இடையான ஒய்யாரி ! செவத்தனுக்கு இது ஏத்த ஜோடி தான் சேர்ந்து வாழ்த்துவோம் ஒன்னு கூடிதான் !

#
S Sankari

கோலாகல வைபோகம்... உன் சிகையை வாசமலர் கொண்டு நான் அலங்கரிக்க, உன் எழிலுக்கு வேறு பரிமாணம் கொடுக்க, மலர்கள் எல்லாம் வாசம் கொண்டு வந்ததுதோ! உன் அழகுக்கு மெருகேற்ற ஆடை ஆபரணங்கள் நான் கொடுக்க, மெருகிற்கே மெருகேற்ற மயில்கள் எல்லாம் தோகை கொண்டு வந்ததுவோ! அட்சதை தூவி வரவேற்க,  இங்கே யாவரும் கூடியிருக்க, மேகங்கள் எல்லாம் மழை கொண்டு உன்னை ஆசிர்வதிக்க! தெய்வங்களெல்லாம் ஆசிர்வதிக்கும் அதிசய வைபோகம்! இது ஆனந்தக் கோலாகலம்! பெண்ணே உன் திருமண வைபோகம்!

#
மகுட தாரிணி

வையகம் உள்ளவரை வைரமே நீ இரு ஒவ்வொரு செயலிலும் உறுதியாய் வென்றிடு செல்வங்கள் அனைத்தும் உன்னையே கூடிடும் உன் புகழ் உண்மையில் உன்னையே பாடிடும் தெய்வங்கள் அனைத்தும் உன்னையே வாழ்த்திட ஒவ்வொரு நாளும் ஓயாமல் வேண்டுவேன் சீராய் இருப்பாய் சிறப்பாய் இருப்பாய் வாழ்க பல நூறு ஆண்டு என் இனிய தங்கமே

#
Palani Muthu

சிற்பிகா குழலி சீரிய குணத்தழகி சிரித்தாலே முத்தழகி சிங்கார முகத்தை அழகி பார்த்தாரை பார்க்க வைக்கும் பட்டுப்போல் நீ இருக் க சேர்த்தாரை சேர்த்து விடும் சிங்காரி நீ தானே வார்த்தாரை வாழ்த்த வைக்கும் மனம் போல நீதானே ஓவியங்கள் பல கூடி உருவான பெண் தானே ஒன்று சொல்லிடுவேன் உலகையே தந்திடுவேன் உன் தாத்தா உனக்காக ஓயாமல் உழைத்திடுவேன் தத்தி தவழ்ந்து வரும் தாரகையும் நீ தானே புத்தி சொல்ல வந்த திரு தளிரும் நீதானே வெற்றி பெற்று வரும் சக்தி சக்தி மகள் நீதானே வேண்டி தவம் இருந்த வித்தகையும் நீதானே காணக் குரலில் காதலிக்க பேசுவியோ தேனின் சுவையிலே நாவினிக்க பேசுவியோ எங்கேயோ உணவைக்க என்னிடுவேன் ஏற்றிடுவேன் உன்னால் அது நடக்கும் உண்மைதான் பூங்கிளியே

#
Palani Muthu

பத்தாம் வகுப்பு படிக்கிறவர்களுக்கு மாணவர் மாணவர்களுக்கு ஆல் தி பெஸ்ட்

#
RAMADEEBA R

வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி...

#
Karuppasamy

மொய் வைக்கிறதுக்கு எதாவது லோன் கிடைக்குமா.... ஒரு நாள் ல எத்தனை........

#
Karuppasamy

நித்திரை மறந்திட முத்திரை பதித்த சித்திரமே.. மொட்டாய் பிறந்து பூவாய் மலர்ந்த பூஞ்சரமே.. கூவும் குயிலென உன்தன் குரலொலி புதுமொழி பேசட்டுமே.. இதழ் விரியும் புது அசைவில் இன்னிசை பிறக்கட்டுமே புது இசையாக மாறட்டுமே.. இன்பங்கள் தொடர்ந்திட என் மனம் நிறைந்திட வரும் காலம் ஆகட்டுமே என் அன்பும் தொடரட்டுமே..

#
கவிதையின் காதலன் ரவி

வசந்தம் மீண்டும் தொடங்கிட காண்போம்.. சோலை மீண்டும் துளிர்வதை காண்போம்.. மலர்ந்த இதயம் துடிப்பதை காண்போம்.. இசையின் கதவு திறப்பதை காண்போம்.. சுற்றும் உலகின் விட்டத்தை காண்போம்.. சூரியன் தூரத்தை அளவிட காண்போம்.. கங்கை நதியின் நீளத்தை காண்போம்.. வங்க கடலின் ஆழத்தை காண்போம்.. விரும்பியது யாவும் கிடைப்பதை காண்போம்.. மனதில் சந்தோசம் நிலவிட காண்போம்.. மொழியின் அழகை தமிழில் காண்போம்..

#
கவிதையின் காதலன் ரவி

வெற்றி வெறும் வார்த்தையல்ல உன்னை பொறுத்தவரை.... அதுவே உன் வாழ்க்கை அல்லவா.... சீறிப்பாய்ந்து சிகரம் அடைந்திடு........️!!!!!!!

#
Kavi

அழகு புன்னகை பூக்கட்டும்.. மௌன நேரம் விலகட்டும்.. பூ போல் முகம் மலரட்டும் தரணியில் குலம் தலையட்டும்.. பிறந்த இத்தருணம் தொடரட்டும்.. சிகரம் தொட்டிட தொடங்கட்டும்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தொடரட்டும்..

#
கவிதையின் காதலன் ரவி

நிலவில் காணாத ஒளியொன்று பூமியில் கண்ட நாள் இன்று.. இரவில் கண்ட நிலவொன்றை பகலிலும் கண்ட நாள் இன்று வானம் சேராத நிலவொன்று மண்ணில் உதித்த நாள் இன்று.. பூவினம் சேராத பூ ஒன்று பூமியில் பூத்த நாள் இன்று.. பூச்செண்டே உன் முகம் கண்டு.. வாழ்த்துக்கள் கூறும் நாள் இன்று..

#
கவிதையின் காதலன் ரவி

சிலையாடும் நடனம் கண்டு சிலைப் போல அமர்ந்திருந்தேன் .. பாட்டுக்குப் போட்டியாக பாதமிடும் நாட்டியத்தை கண் கூர்ந்து பார்த்திருந்தேன்.. கொஞ்சிடும் சலங்கைகளின் கொஞ்சலை கேட்டிருந்தேன்.. தாளத்தோடு உடல் அசையும் நளினத்தை கண்டிருந்தேன்.. தலாங்கு தக்க திக்கு என்று தாளத்திற்கு தலையாட்டும் காதனி குண்டலத்தின் நடனத்தையும் கண்டிருந்தேன்.. தட்டு கலி ஓசையுடன் தாளமிடும் உன் சலங்கையின் ஒலி கேட்டு அமர்ந்திருந்தேன்.. மிருதங்க நாதத்துடன் வாதமிடும் உன் பாத ஒலியை கண்டிருந்தேன்.. இடியிசையில் தொடங்கிய உன் நடனத்தை.. மழையிசை வாழ்த்தியதை கண்டு மகிழ்ந்திருந்தேன்..

#
கவிதையின் காதலன் ரவி

நித்திரை மறந்திட முத்திரை பதித்த சித்திரமே.. மொட்டாய் பிறந்து பூவாய் மலர்ந்த பூஞ்சரமே.. கூவும் குயிலென உன் குரலொலி ஒலிக்கட்டும் புதுமொழி பேசட்டும்.. இதழ் அசையும் இசை கேட்டு இன்னிசை பிறக்கட்டும் புது இசையாக மாறட்டும்.. இன்பங்கள் தொடர்ந்திட உள்ளம் நிறைந்திட கேட்பது கிடைக்கட்டும்.. இந்த உலகமும் உனதாகட்டும்.. இத்தரணியில் உன் புகழ் பரவட்டும்.. வாழ்த்தும் உள்ளங்களும் பெருகட்டும்.. அன்பும், வாழ்த்தும் ஓயாமல் உன் புகழ் பாடட்டும்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மென் மேலும் தொடரட்டும்..

#
கவிதையின் காதலன் ரவி

கார்மேக நிறத்திற்கு சொந்தமானவர்.. கனிவாக கதைத்திட பாசமானவர்.. தடுமாற்றம் இல்லாத அறிவானவர்.. மனதோடு ஒன்றிடும் உண்மையானவர்.. கண் சிமிட்டா அழகுக்கு உரிமையானவர்.. திகட்டாத சிரிப்பிற்கு சூத்திரமானவர்.. செந்தேன் பாசத்தில் செழிப்பானவர்.. இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கு சொந்தமானவர்..

#
கவிதையின் காதலன் ரவி

அழகிய பெண்ணின் ஜனனம் கண்டேன்.. விஷ்வா என்னும் பெயரில் கண்டேன்.. செந்தேன் நிறத்தில் ஜொலிக்க கண்டேன்.. புதியதாய் பூத்த புது முகம் கண்டேன்.. கபடம் இல்லா அன்பை கண்டேன்.. இமை மூடா விழியின் அழகை கண்டேன்.. செதுக்கிய புருவத்தில் நேர்த்தியை கண்டேன்.. வானவில்லை போல் வளைந்ததை கண்டேன்.. இணைந்து பார்க்கும் இருவிழி கண்டேன்.. இருமுனை கொண்ட ஈட்டியாய் கண்டேன்.. சிவந்து மிளிர்ந்த இதழ்களைக் கண்டேன் செதுக்கிய சிற்பியின் அழகை கண்டேன்.. அழகாய் மின்னும் உன் முகம் கண்டேன் ஆண்டவன் படைப்பின் அற்புதம் கண்டேன்.. தோழி பதிவிட்ட வாழ்த்தை கண்டேன்.. வாழ்த்திட நானும் இணைந்து கொண்டேன்.. வாழ்க வளமுடன் என்பதை கண்டேன்.. அதில் வானவனும் உம்மை வாழ்த்துவதை கண்டேன்.. அழகாய் மலர்ந்த உன் முகம் கண்டேன்.. வாழ்த்தும் என்னையும் ஏர்ப்பதை கண்டேன்.. காணாத உன்னை காணும் முன்னே வாழ்த்திட இதயம் துடித்ததை கண்டேன்.. தேடிடும் கடினம் சேர்ந்திடும் முன்னே ஏற்றிடும் துணிவை உன்னிடம் கண்டேன்.. வாழ்ந்திடு வையகம் உள்ளவரை என்று வாழ்த்திட உள்ளம் துடிப்பதை கண்டேன்..

#
கவிதையின் காதலன் ரவி

திருமண வாழ்த்து மடல் பூ என்ற ஒரு எழுத்து நார் என்ற இரு எழுத்துடன் சேர்ந்து பூமாலை என்ற மூன்று எழுத்தில் கழுத்து என்ற நான்கு எழுத்தில் தொடங்கி திருமணம் என்ற ஐந்து எழுத்தில் தொடங்கி முதல் இரவு என்ற ஆறு எழுத்தில் அறிமுகமாகி குடும்ப வாழ்வு என்ற ஏழு எழுத்தில் நுழைந்து பிள்ளைச்செல்வம் என்ற எட்டு எழுத்தைப்பெற்று தாய்சேய்தகப்பன் என்ற ஒன்பது எழுத்தில்குடும்பமாகஇணைந்து பல்லாண்டு காலம் வாழ என்ற பத்து எழுதோடு வாழ்த்துகிறோம்

#
Saravanan Saravanan

r nl lnkbigugu

#
Inparasa Rajeevan

களங்கம் இல்லா வெள்ளை நிலா என் வீட்டில் கடவுள் தந்த பிள்ளை நிலா சிறகே இல்லா பறவை நீ சிரித்தால் பறக்கும் கவலை வாசம் இல்லாத மலர்கள் உண்டு உன் மேல் பாசம் இல்லாத‌ மனிதர்கள் இல்லை பூக்களின் வாசமாக புன்னகையின் தேசமாக இந்த வையகம் உள்ள வரை வாழ என் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்.இதயம் கூட விட்டு விட்டு துடிக்கும் அந்த இடைவெளியில் கூட உன் நினைவுகள் மட்டுமே SYED

#
Basha Syed

பூக்களின் வாசமாக புன்னகையின் தேசமாக கண்ணில் இமையாக வானில் நிலவாக கைகளில் ரேகையாக வண்ண மயிலின் தோகையாக . உங்கள் வாழ்க்கை என்ற‌ வானத்தில் . என்றும் சந்தோசம் எனும் சிறகினை விரித்துப் பறக்க வேண்டும்.இனிய‌ திருமண நாள் SYED

#
Basha Syed

தோட்டத்தில் பூத்த மல்லீகை கூட ஒரு நாளில் மணம் இழத்து விடும் இந்த நாளில் பூத்த மல்லீகையே நீ மன நிறையோடு வாழ்க.

#
Poovarasan Poovarasan

மாணவர்கள் வாழ்வில் வசந்தம் வர தடை கல்லை படி கட்டாக மாற்றி, மாணவர்கள் முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சி காணூம் ஆசிரியர்கள் நமக்கு பெற்றோர்கள் தான்

#
Ram Ram

சுதந்திர காற்றை சுவாசிக்க பல உயிர்களின் மூச்சுக்காற்று நின்றது. உழைப்பாலும், உண்மையாலும் உயர்ந்து நாமும் காட்டுவோமே! அயல்நாடு, அசந்து பார்க்கும் அளவுக்கு நம் தேசத்தை உயர்த்திக் காட்டுவோமே!

#
anishya anu
Logo

© Red Nucifera