மூளை என்பது
பயன்படுத்த வேண்டியது...!!!
சுமந்து திரிவதற்கு அல்ல.....!!!
Karuppasamy
மார்கழி பனி பொழிவில்
இருக பிடித்த தேநீர்
கோப்பை அவள்...!
Karuppasamy
கண்டேன்
கண்ணகியை
கையில்
ஆலைப்பேசியுடன்..
எரித்ததும்
மதுரையை அல்ல
எதிராளியின் மனதை..
கவிதையின் காதலன் ரவி
பொருட்காட்சி...
கண்காட்சி
கண்
கொள்ளா காட்சி
கலை நயமிக்க
பொருட்காட்சி....
அறிவியல் அரங்கம்
ஆங்காங்கே
வேளாண்மை சுரங்கம்....
வாண்டுகளுக்கு விளையாட்டு அரங்கம்...
வளரும் தலைமுறைக்கு
பயிலரங்கம்...
பெரியோர்களுக்கு இசை சுரங்கம்..
பெண்மணிகளுக்கு உணவு அரங்கம்..
சந்தோசமாய் வாருங்கள்...
சங்கீதம் பருகுங்கள்..
இரவு வணக்கம்
ராமசாமி
Ramasamy Ramasamy
பார்க்கின்ற அனைத்தையும்
மனதிற்கு கொண்டு
செல்லவும் கூடாது,,
மனதில் நினைப்பது
அனைத்தையும்
பேசிவிடவும் கூடாது,
இரண்டும் பிரச்சனைதான்.....
Karuppasamy
கேள்விக்குப் பதில் எதுவென்று தெரியவில்லை என்றால் அது தேர்வு ...
கேள்வியே எதுவென்று தெரியவில்லை என்றால் அதுதான் வாழ்வு...!!!
Karuppasamy
நீங்கள் அழகு என்றால்
என்ன
நினைக்கின்றீர்களோ
தெரியாது ..
யாரைப் பற்றி
நினைத்தால் மனதிற்கு
இன்பமாக இருக்குமோ
அவர்கள் எல்லாம் அழகானவர்கள் தான்
Karuppasamy
அடிக்கடி பார்க்கிற எல்லாரையும்
நேசிக்க முடியாது
ஆனால் நேசிக்கின்ற ஒருவரை அடிக்கடி பார்க்க முடியாது...
Karuppasamy
காலக்கெடுப்பில் பகுப்பாய்வு...
ஒரே கணத்திலே
பூக்கள் மலர்வது கிடையாது!
பல கணங்களில்
சிறிது சிறிதாகத் தான் மலரும்!
இன்றையத் தொழில்நுட்பமான காலக்கடப்பில் ஒளிப்பதிவு செய்தால்
ஒரே கணத்திலே
பூக்கள் மலர்வதைப் பார்க்கலாம்!
ஒரே நொடிப் பொழுதில்
கனவை அடைந்துவிட முடியாது!
பல சிறு சிறு முயற்சிகளை
விதைத்தால் தான்
வெற்றியை அடைய முடியும்!
வெற்றியை காலக்கடப்பில்
பகுப்பாய்வு செய்தால்
இலக்கை அடைய மேற்கொண்ட
முயற்சிகள் அரும்புவதைக்
காண முடியும்!
ஆனால் அதைக் காண
வெற்றி மட்டுமே
அவசியம் இல்லை!
ஏனென்றால் வெற்றி மட்டும் அல்ல, தோல்விகளும் பட்டறிவைத் தரும்!
வெற்றியும் தோல்வியும்
சேர்ந்தது தான் வாழ்க்கை...
இதை அறியாவிட்டால்
தோல்வி மட்டுமல்ல
வெற்றியும் அர்த்தமற்றுத் தான் போகும்!
இரண்டையும் சமமாக பாவிக்கக்
கற்றுக் கொண்டால்
வாழ்வின் மர்மம் விளங்கும்!
வாழ்வு ஒளி பெரும்!
வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்!
மகுட தாரிணி
விந்தை கதைகள் விக்கிரமாதித்தன்
விண் தொட்டு கடல் தாண்டி
விதியென பெயரிட்டவையெல்லாம்
விஞ்ஞானம் அருகில் வைத்தது
விளையாட்டாய் தொழில்நுட்பத்தில்...
நிலா அருகில் வந்தது
நிலவுக் கதையில் அல்ல
நிலவு தொடும் தூரத்தில்
தொலைநோக்கியில்...
நிலவில் ஆயா சுட்ட வடை
நீர்க்காமல் மனதில் வைத்தது
நிலவை நோக்கும் போது
நில்லாமல் வந்து போனது
நிலவும் தொடும் தூரம் தான்.