Logo
உங்கள் கவிதைகளை பகிர ஆப்பை பதிவிறக்குங்கள்!
Logo

பொது கவிதைகள்

நன்றாக கவனித்துப் பார்..!" கொஞ்சி பேசுகிறவர்கள், துணைக்கு வர மாட்டார்கள்..!" கெஞ்சி பேசுபவர்களும், துணைக்கு வர மாட்டார்கள்..!" கோபமா பேசுபவர்கள் தான், எதற்கும் துணை நிற்பார்கள்...!! RK

#
Kalpana Subramaniam

வெளியே எறிந்த கோபம், மன்னிப்புக்கு வழி தேடும்..!" உள்ளடக்கிய கோபம், பழிக்குப் பழி தேடும்...!! RK

#
Kalpana Subramaniam

பேருந்தில் தவறி விழுந்த நாணயத்தை எடுக்க எத்தணித்த அவள் மீது ஆயிரம் கண்கள்... பார்வை நாணயத்தை பற்றி அல்ல...........

#
Santhakumar Yavisan

தமிழனுக்கு தமிழிற்கு மேல், ஒரு மொழி தேவையில்லை என்கிறேன் நான்.

#
கவிதா

அறியாமல் வந்த ஆசை தான் அதனால் தான் யாரும் அறிந்திடாமல் எழுதிடுகிறேன். எப்படியோ தொடங்கியாயிற்று. தொலைதூரம் சென்றிடுமா??? இல்லை தொலைந்திடுமா???? இந்த உலகம் என் வரிகளில் திக்கித்து,விக்கித்து நின்றிடுமா?

#
கவிதா

தலைப்பு..மாலை... நேற்றுநீமேடையில்இன்றுநிவீதியில்

#
Pandaya Rajam

நமக்கு உரிமை இல்லாத இடத்தில். நமக்கான உரிமை கேப்பது தவறு.....

#
Karuppasamy

பெண்,, ... வெட்கத்தில் பூமியை பார்த்தால் பூமிதேவியும் அவளை பார்த்து பொறாமை கொள்கிறாள்..!

#
Karuppasamy

*மாற்றம் ஒன்றே மாறாதது* நேர்மையற்ற பூமியில் நேர்மையாய் துரத்துகிறது காலம்.. தள்ளி விடாமலேயே துள்ளி ஓடுகிறது நேரம்.. போகாதே என்றாலும் போவேன் என்கிறது வயது.. குறையாதே என்றாலும் குறைந்து போகிறது இளமை.. தடுக்கவும், தவிர்கவும் தெரியாமல் ஆளுமை கொள்கிறது முதுமை.. *மாற்றம் ஒன்றே மாறாதது* என்பதில் உறுதியாகிறது வாழ்க்கை.. கவிப்ரியன்

#
BASKAR BASKAR

It is only when alone seems to be her strength and her weakness _Shanthi

#
Shanthi

உலகிலேயே சிறந்த வாசனை பொருள் உயிர் ... அது மட்டுமில்லையென்றால் உடல் நாற்றமெடுத்து விடும் !!

#
Karuppasamy

வெளிப்படுத்த முடியாத ஒவ்வொரு அன்பிற்கும் ஒரு பூ பூக்கும். உனக்கும் எனக்கும் இடையில் தான் இந்த உலகம் பூத்தது.. -படித்தது

#
Karuppasamy

ஆண்கள் தான் சாதிக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டும்...? பெண்கள் சாதிக்க ஒரு அழுகை போதும்..!

#
Karuppasamy

நீ உறங்கும் வரை தான்.. நீ நினைக்கும் வாழ்க்கை..! உன் இதயம்.. உறங்கி விட்டால்..! நீ நினைத்தாலும் இல்லை வாழ்க்கை..!! RK

#
Kalpana Subramaniam

Saree பிடிக்கிற அளவுக்கு Sorry பிடிப்பது இல்லை பெண்களுக்கு…!!!

#
Karuppasamy

பித்தன் மனம் திறந்து பேசினான் மனிதனோடு அல்ல..... மற்றவைகளோடு -ரஹ்மான்

#
Mohammed Abdul Rahma

வாய்ப்புகளை நழுவவிட்டபின், அழுகிறது மனம்.. அடுத்துவரும் வாய்ப்புகளை அறியாமலேயே...!! RK

#
Kalpana Subramaniam

உறுதி என்பது.. செயலில் இருந்தால்.. இறுதி என்பது.. நிச்சயம் வெற்றி தான்...!! RK

#
Kalpana Subramaniam

நமக்கு கிடைத்தது தான் பெஸ்ட்.!" நமக்கு கிடைக்காதது வேஸ்ட்..!" இந்த எண்ணம் இருந்தால்.. வாழ்க்கை எப்போதும் டேஸ்ட்....!! RK

#
Kalpana Subramaniam

பச்சோந்தி கூட, தோற்று விடும், போட்டி வைத்தால்..!" புயல்வேக குணவேடம் போடும், முகமூடி மனிதர்களிடம்...!! RK

#
Kalpana Subramaniam

நம் கண்கள் காண்கின்ற கனவெல்லாம், அதிகாலை தாண்டினால் நிற்காது..!" நம் உள்ளம் காண்கின்ற கனவெல்லாம், எந்த காலம் ஆயினும் தோற்காது...!! RK

#
Kalpana Subramaniam

சில்லரை நோட்டாய் சில எண்ணங்கள், சிலிர்க்க செய்தாலும்..!" உண்மை ஊமையாதான் இருக்கும்..!" உவமைக்கு உயிர் கிடையாது...!! RK

#
Kalpana Subramaniam

அழகும்,அமைதியும் ஆபத்தே..!" இரசனையும், இரகசியமும் ஈர்ப்பே..!" உள்ளமும்,உறவும் ஊமையே..!" எண்ணும்,எழுத்தும் ஏக்கமே..!" ஐயாவும்,ஐயமும் ஒன்றே..!" ஓதலும் ஓர் ஔவையே...!! RK

#
Kalpana Subramaniam

விடை இருக்கு, கேள்வி இல்லை..!" வலி இருக்கு, வாழ்க்கை இல்லை..!" நினைவு இருக்கு, நீ இல்லை..!" நிஜம் இருக்கு, நிம்மதி இல்லை..!" மதி இருக்கு, ஆனால், யோசிக்க மனமே இல்லை..!" கிடைத்ததையே, பிடித்து கொள்ளுங்கள்..!" பிடித்தது கிடைக்காத போது, நினைவுகளே உங்களை கொல்லும்...!! RK

#
Kalpana Subramaniam

நெருங்கிய நண்பன், விலகி சென்றாலும்..!" விலகியிருந்த எதிரி, நெருங்கி வந்தாலும்..!" ஆபத்து தான்...!! RK

#
Kalpana Subramaniam

வாசலில் கிடப்பவர்களுக்கே வரம் தராத இறைவன், வணங்கிச் செல்பவர்களுக்கா தந்துவிட போகிறான்..!!

#
Karuppasamy

pothai olippu vilippunarvu kavithai

#
Azad Banu

ஆயிரம் பேர்.. உன்னை.. வெறுத்தால் என்ன.. உண்மையான.. ஒருவர் வைக்கும்.. அன்பு போதும்...!! RK

#
Kalpana Subramaniam

வீட்டில் அடங்கி கிடந்த பெண்களை உலகம் முழுவதும் மக்கள் பார்க்கும் படி இந்த தொல்லை பிடித்த தொலை பேசியின் வாயிலாக

#
Mohamed Bilal

காலை என்பது, ஒரு பொழுது..!" அது பொதுவானது..!" தினம் ஒரு காலை..!" தினம் ஒரு மாலை..!" இருப்பினும், காலை புதுமையைத் தரக்கூடியது..!" புத்துணர்ச்சி கொடுக்கக் கூடியது..!" காலை எழுந்தவுடன் படிப்பு..!" ஏனெனில், மனதில் அமைதி நிலவும் பொழுது..!" நிம்மதி கொடுக்கும் பொழுது..!" மெல்ல மெல்ல மயக்கம் தெளியும் பொழுது..!" சூரியனின் முதற்பொழுது..!" நிலவு மறையும் பொழுது..!" வானத்தின் வண்ணப்பொழுது..!" பூமிக்கு ஒளி வரும் பொழுது..!" வெளிச்சம் வரும் பொழுது..!" இருள் மறையும் பொழுது..!" இன்பம் தரும் பொழுது..!" மொத்தத்தில் பூமியின் புதுப்பொழுது..!" இந்த புத்தம் புது காலை தான்...!! *காலை வணக்கத்துடன்* *என்றும் உங்கள்* RK ️

#
Kalpana Subramaniam

நாளைய காலம் நாடகக் காலம், வேதனைக் காலம், வேகக் காலம், குறைந்த பொய்யை, சத்தியம் என்னும் ஜோடனைக் காலம், சோதனைக் காலம்..!" உன்னையும், என்னையும் உரசிப் பார்த்து உதவாதென்று, ஒதுக்கும் காலம்..!" ஏணிப்படிகள் இறக்கவும் செய்யும், ஏனிப்படி என, ஏங்கவும் செய்யும்..!" எப்பதம் ஆயினும், எழுந்திட, பொலிந்திட, ஏக்கம் அடங்கிட, ஏளனம் மாறிட, இக்கணம் தொட்டு இயங்கத் தொடங்குவோம்..!" இக்கணம் சத்தியம் இக்களம் நித்தியம்...!! RK

#
Kalpana Subramaniam

கணவுகளின் இருக்கை வெகுதூரம் இருக்க, கடமைக்குள் மூழ்கியே வாழ்க்கையை கடக்கிறேன்..!" எண்ணங்கள் அலையாய் ஓட, இசைக்குள் சிரிப்பைத் தேடுகிறேன்..!" மன அழுத்தங்கள் முள்ளாக கிழிக்க, காயங்கள் ஆறக் காத்திருக்கிறேன்\..!" இருளான உள்ளம் ஆசையில்லா நான், தனிமையில் அழுகிறேன், விடியளின் ஒளிக்காக...!! RK

#
Kalpana Subramaniam

முதல் நாள் முகம் தெரியாது, பல நாள் உறவினர் போல..!" பல அனுபவங்களை அள்ளி தருகின்றது, என் கல்லூரி...!! RK

#
Kalpana Subramaniam

முகம் காட்ட தேவை இல்லை முகவரியும் தேவை இல்லை இணைந்திருப்போம்.... நண்பர்களாக

#
Karuppasamy

நிலா... இலக்கண தாய்ப்பால் குடித்த இளவலே.... இரவின் மடியில் தவழ்ந்த தென்றலே.. நித்தமும் நித்திரையை நினைவால் நியாயப்படுத்திய வள்ளலே.... வெண்ணிற ஆடை உடுத்தி விதவைக் கோலம் வியாபித்த வெள்ளந்தியே.... புரட்டாசி மாதம் புரண்டு போக ஐப்பசியில் சீர் கொண்டு வாரேன் இடைவிடாது கண்ணீர் சிந்தாதே பிரியமுடன் வையகம்... இரவு வணக்கம்.. ராமசாமி.

#
Ramasamy Ramasamy

கந்தசஷ்டி விழா... தமிழ் அன்னையின் மடியில் தவழ்ந்து தரணி போற்றும் முத்தமிழ் வித்தகா.. மயிலை வாகனமாக்கி சேவலை கொடியாக்கி.. ஓம்கார நாயகனே உனக்கு சஷ்டி விழா... சிக்கலில் வேல் வாங்கி சிங்கமுகனை கூராக்கி கவுந்த மலையை தூளாக்கி.. சம்காரம் நடத்திய சரவணே. . உனக்கு முடி சூட்டு விழா.. காப்புக் கட்டி விரதம் கொண்டு எண்ணம் ஈடேற நாளொரு வண்ணம் கை தொழுவும் கந்தனை... வாழ்க வளமுடன் ராமசாமி... .

#
Ramasamy Ramasamy

பாறையில் மலர்ந்த பூவாய் கல்வி எனும் அறிவு மனதிற்குள் பூக்கின்றது...

#
Ilakkiya sri

நிதர்சனம்... மட்டைப்பந்து மகிழ்கிறது... மருத்துவம் நெறிக்கிறது... சினிமா சிரிக்கிறது... நாட்கள் தத்தளிக்கிறது... நாற்காலிகள் புலம்புகின்றன... பேனாக்கள் அழுகிறது... பேப்பர் சிரிக்கிறது ..... கல்வி கடனாளியாகிறது காலம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.... அரசியல் ஆட்சி செய்கிறது... மக்கள் மனதை பார்த்து மேகங்களே தேம்பி தேம்பி அழுகிறது மழைத்துளியாய்.. நன்றி ராமசாமி...

#
Ramasamy Ramasamy

ஆடி அமாவாசை கலங்கரை விளக்கமாய் கதிரவன் கண் சிமிட்டி கையில் மங்கள நான் கொண்டு காத்திருக்க சுவாசத்தின் மொழியே.. மேகத்தை ஆடையாக்கி.. நட்சத்திரத்தை பொட்டு வைத்து நாள் பார்த்து சந்திரனை சம்சாரமாக்கிய அம்மாவாசையே வருக வருக... நீத்தார் கடன் செய்த திதியே.. நீருக்கு நீதி சொல்லி நெஞ்சமெல்லாம் நிறைந்த ஆடியே வருக வருக... மக்கள் மனங்களில் மணக்கச் செய்து மகிழ்ச்சி பரவ செய்த அமாவாசையே வருக வருக.. நீடூழி வாழ செல்வம் பெருக ஆனந்தம் தருக.. நன்றி ராமசாமி

#
Ramasamy Ramasamy

நிதர்சனம்... மட்டைப்பந்து மகிழ்கிறது... மருத்துவம் நெறிக்கிறது... சினிமா சிரிக்கிறது... நாட்கள் தத்தளிக்கிறது... நாற்காலிகள் புலம்புகின்றன... பேனாக்கள் அழுகிறது... பேப்பர் சிரிக்கிறது ..... கல்வி கடனாளியாகிறது காலம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.... அரசியல் ஆட்சி செய்கிறது... மக்கள் மனதை பார்த்து மேகங்களே தேம்பி தேம்பி அழுகிறது மழைத்துளியாய்.. நன்றி ராமசாமி...

#
Ramasamy Ramasamy

நாட்காட்டி ... வினாடிதோறும் வியப்பு விடை காணாத பிறப்பு கிரேக்கர் காலத்தில் உருவாகி வள்ளுவர் காலத்தில் வாழம் வழிகாட்டி .ஒவ்வொரு நாளும் .... காலையில் மலர்ந்து மாலையில் மடியும் நாட்காட்டி ... நட்ச்சத்திரத்தை நினைவு கூறி யோகத்தை கூறும் திசைகாட்டி ... இவ்வளவு தான் மனித வாழ்வு என்று கூறும் நாட்காட்டி ... சடங்குகளை கைபிடித்து சாதியை கடந்தவன்.. ஆண்டுகள் பல கடந்தும் அடையவில்லை மூப்பு.. யுகம் தோறும் யூகிக்க முடியாத வியப்பு.. என்னே உன் பிறப்பு... என்றும் தொடருட்டும் இந்த. சிறப்பு... வாழ்க வளமுடன் ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

ஆயுதபூஜை ஆதவன் ஆனந்தமாய் வெளிவர.... அழகிய தென்றலாய் காலை கண் மலர மக்கள் மகிழ்ச்சி பொங்க.. மனதில் உணர்ச்சி ததும்ப.. விஷேசம் எனும் விருந்தோம்பல் பார் வியக்க வர்ணம் தீட்டி பசு சாணம் மெழுகி கண் வியக்க கோலமிட்டு.. கஜமுகனை கையில் எடுத்து கற்பூரவள்ளி மேல் பாக்கு வைத்து தேன் வாழை கிள்ளி தலவழை எடுத்து தவறாத சுண்டல் இட்டு. கூடவே பலகாரம் வைத்து பழவகை படைத்து பள்ளி புத்தகம் பதமாய் இட்டு.. பயன்பட்ட ஆயுதம் தரித்து... தேங்காய் உடைத்து ஆசிர்வாதம் தர அம்பாளை ஆராதனை செய்து.. நவராத்திரியில் நல்வாழ்வு வாழ கொலு வைத்து குலம் வளர கும்பிடு போட்டு வணங்கிறோம்.. வரம் பல தர வேண்டி நிற்கும் உன் அடியேன்.. ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

திருப்பதியில் திருவிழா... திசை எங்கும் மக்கள் பெருவிழா.. அவதார புருஷனுக்கு ஆன்மீக விழா.. உதாரண நாயகனுக்கு புரட்டாசி விழா... கீதை நாயகனுக்கு சகஸ்ர விழா... சீதை வல்லவனுக்கு பிரம்மோற்சவ விழா அலங்கார பிரியர்க்கு ஆனந்த விழா... ஆண்டாள் மணாளனுக்கு சயன விழா... வாமனனை வதம் செய்த நரசிம்மனுக்கு சிறப்பு விழா... வேதம் காக்க வரும் கல்கிக்கு பேரின்பவிழா... போற்றுவோம்... வணங்குவோம்... ராமசாமி

#
Ramasamy Ramasamy

... நடுநிசி... நிசப்தமான நித்திரை நித்தமும் நிமித்தம் நிமிடமும் கலவரம்.. விடை தேடும் வினாக்கள்... ஆள் அற்றவேலை ஆங்காங்கே அலறல் சத்தம்.. அடிக்கடி வண்டுகள் ரீங்காரம் அடிவயிற்றில் அமில ஊற்று.. யாரோ ஞாபகம் ஆவி நடமாட்டம்.. கண்கள் மிரட்சி உதடுகள் உச்சரிப்பு முருகா முருகா.. கசங்கிய திருநீறு.. வைகறை விடியல் காத்திருப்பு.. அன்று அம்மா கூச்சல்.. கண் விழித்தேன்.. பயங்கர கனவு.. உணர்ந்தேன்.. பதவி . பணம் வந்தது படைத்தவனை மறந்து விட்டேன்... நடைபோட்டேன்... ஆலயம் நோக்கி.. வாழ்வோம்.வளர்க ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

......தமிழ்.... முதற்கடவளின் மூலமந்திரம் முருகனின் தாரக மந்திரம் முக்கனி சாறு எடுத்து மூன்று காலம் எனும் திகட்டாத தேன் கலந்து எக்காலத்திற்கும் வற்றாத நற்றமிழே வாழிய செந்தமிழே நக்கீரர் வழி வந்த இன்பத்தமிழே.... நான்வகை நாயன்மார் வழிவந்த தாய்தமிழே கவிஞர்களின் கருப்பொருளே காலத்தால் அழியாத மெய்ப்பொருளே கம்பரின் கவிப்பொருளே கவிபேரசுவின் கவிதை பொருளே தங்கத்தமிழே தமிழனின் தேசியமொழி தன்னிகரில்லா தொன்மை மொழி உன் மடியில் பிறந்தற்க்கு இதைவிட பெரும்பேறு எப்ப கிடைக்கும்... வாழ்க தமிழ் வளர்க தமிழகம் ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

கீரைகள் சத்தானவன் நித்தமும் சுவையானவன்... உடலை பேணிகாப்பவன் உள்ளத்தை குளிர்விப்பவன்... எளிமையானவன் ஏழ்மையானவனின் உறவுக்காரன்.. மனையாளை மயக்குபவன்...மருத்துவ குணம் நிறைந்தவன் ஆரோக்கியமானவன் ஆயுள் வளர்ப்பவன் சாதாரனமானவன் சாதனைக்கு சொந்தமானவன்... ஏராளமான வகைக்காரன்.. என்னற்றவர் வாழ்வில் ஒளியூட்டுபவன்... என்னே கருணை தொடருட்டும் பெறுமை ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

ஏய் மனிதா ஒரு நிமிடம்... புல்லினமே பனித்துளியை தன் நெஞ்சில் நிறுத்தி புழுக்களுக்கு வாழ்வு தரும்.. மலர்களே மதுவால் வண்டுவுக்கு வாழ்வதரும்.. வானமே மேகம் கொண்டு மழைத்துளியாய் வையகத்துக்கு வாழ்வு தரும்... காகித கூழ் புத்தகங்களாய் சரித்திரம் பேசும்.. கற்களே சிலைகளாய் சித்திரம் பேசும்... வலைதளங்களில் வாழ்வு தேடும் ஏய் மனிதா ஒரு நிமிடம்.. பிறப்பு இறப்பு நூறு முறை அல்ல பிறரை நேசி மனிதநேயம் மலரும் ராமசாமி....

#
Ramasamy Ramasamy

வாழை வாழம் போது வளப்படுத்துபவன் வாழ்ந்த பின்னும் வாழ்பவன்... சுபகாரியத்தின் சூத்திரதாரன்... சூட்சுமத்தின் தந்திரதாரன்.... சமையல் கலையின் சாதனையாளன்... சாஸ்திரத்தின் சரித்திரயாளன்.... நீரால் நிரம்பியவன் நீரிழிவின் மருத்துவன் கருவறைக்கு கதளி ஆனவன் கல்லறைக்கு பூம்பழம் ஆனவன் திகட்டாத சந்தம் தரும் தேன்வாழையே திரும்ப திரும்ப ருசிக்கும் பச்சைநாடனே யோசிக்காமல் நேசிக்கும் தாய்மையானவனே யாசிக்க யாசிக்க ருசிக்கும் ருத்ரனே என்னே உன் நேசம் என்றொன்றும் தொடருட்டும் பாசம் ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

பைத்தியக்காரன் வாழ்க்கை பயணத்தில் பாதையை தவறவிட்டவர்கள் பழைய. நினைவை இழந்துவிட்டவர்கள்... மருத்துவர்கள் நிராகரிக்கப்பட்ட நிராயுதபாணிகள்... மக்கள்மன்றத்தில் மனநோயாளிகள்... குருசேத்திரத்தில் பரிதாபத்துகுரியவர்கள் குற்றமில்லாத குற்றவாளிகள் ... சமுதாயத்தில் ஏளனத்துகுரியவர்கள்... சட்டத்திற்கு கேள்விக்குரியவர்கள் கந்தலான துணிகள் கனவுடன் கண்கள் மழியாத ரோமம் மனிதநேயத்துடன் சில மனிதர்கள் ... என்று மாறும் நிலைமை எப்போது தீரும் அவலம் ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

மல்லிகைப்பூ நறுமணம் வீசும் நங்கையே... நாள்தோறும் வளரும் மங்கையே மனம் வீசும் மலரே மனதை மயக்கும் மாதுவே.... வெளள்ளை நிற மெல்லிடையாளே வெள்ளந்தியாளீன் குழலுக்கு பேரழகே... வணிகர்களுக்கு வாழ்வூட்டி வாரச்சந்தையில் மணம் கூட்டி மணதை திருடும் நறுமுகையே காதலுக்கு தூதுஇட்டு காதலியை திசைதிருப்பும் கள்ளியே... கவிதைக்கு மெட்டுகட்டி புலவனுக்கு பாதைகாட்டி.. பனிதுளிக்கு இடம் அளித்து பல வண்ணங்களால் வண்ணத்துப்பூச்சியை போர்க்களைத்து சூலகத்தை தளிர்க்கவிடும் சூத்திரமே.... என்னே உன் புகழ் என்றென்றும் தொடர வாழ்த்தும் இவண் ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

பலா வித்தில் உருவாகுபவன் விதையில்லாமல் முளைப்பவன்... விருட்சமாய் வளர்பவன் விநாயகர் ஆசியுடையவன்... முள்ளோடு உள்ளவன் முக்கனியில் ஒன்றானவன்... திகட்டாத தித்திப்பானவன் திரும்ப திரும்ப இனிப்பானவன்.... எண்ணிக்கையில் அடங்காதவன் எண்ணியில்லா சுளையானவன் நகர்வீதியில் உலா நலிந்தோர் வாழ்வில் குறைந்த விலை பலா நாவில் தேனுரீயவனே நாளுக்குநாள் மெருகேறுபவனே... என்னே உன் புகழ் என்றும் பரவட்டும் தமிழ் ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

குளிர்பானம்.. கலவையின் கலப்படம் இராசயனத்தின் இருப்பிடம் ... தொண்டைக்கு இதமளித்து... குடலுக்கு புற்றுநோய் தரும் வெள்ளைகாரனே மக்களை குறுக்கு வழியில் கொள்ளையடிக்கும் குளிர்பானமே... குளிர்ச்சியை ஏற்படுத்தும் கோககோலாவே... கிளர்ச்சியை செய்யும் பெப்சியே...மறக்கமுடியாத. மெராண்டாவே தண்ணீர் திருடும் தனியார் நிறுவனமே தாமிரபரணியை அழித்த ஆங்கிலேயனே...பல வர்ணங்களில் வந்தாலும்..வார்த்தை வடித்தாலும் தமிழகத்தை ஆள. முடியாது தடமும் பதிக்க முடியாது ஆதங்கத்துடன்.... ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

அலமாரி... ஆயிரமாயிரம் ஆறறிவு மனிதர்க்கு அறிவு ஜுவி.. எழுத்தாளர்கள் எண்ணத்தை தேக்கி வைத்த நினைவாலயம்... இலக்கியத்தை இதயத்தில் வைத்து இளைஞர்களை கவரும் புத்தகாலயம்... உயிர் மூச்சு இல்லா என் வாழ்வு... உயிர்களுக்கு உரம் இடும் தீர்க்கதரிசி... நான் அலமாரி... நாள்தோறும் வைக்கவில்லை ஒப்பாரி... விடியல் தேடு.. விளக்கொளியில் அல்ல. நன்றி ராமசாமி....

#
Ramasamy Ramasamy

மனம் அழகு வைகறை அழகு வான்முகில் அழகு வானத்தில் சிதறும் வான்மழை அழகு வாசலில் வைத்த கோலம் அழகு பிரபஞ்சம் அழகு பிறப்பு அழகு தாய் பாசம் அழகு தந்தை அறிவு அழகு தங்கை கொடுத்த முத்தம் அழகு நண்பன் அழகு நான்முகன் அழகு காதலி அழகு கடவுள் அழகு காலம் கடந்த நினைவுகள் அழகு.. இறைவா இன்னொரு பிறவி உன்னுடன்.. ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

நீ நொழின்றி. வாழ விரும்பினால்! பிறரை நம்பாதே. உன் வாழ்க்கை உன் நம்பிக்கை. பிரறை நம்பி வாழாதே. உன்னை நீ நேசி அப்போது நீ உயர் அடைவாய்.

#
பாலமுருகன் க

முரண்பாடுகள்... தலைப்பு இல்லாமல் தவிக்கிறேன் ... தலையீடூ இல்லாததை மறுதலிக்கிறேன்... மாற்றம் இல்லாமல் தவிக்கிறேன் ... முன்னேற்றம் இல்லாததை மறுதலிக்கிறேன்... கிளர்ச்சி இல்லாமல் தவிக்கிறேன்... புரட்சி இல்லாததை மறுதலிக்கிறேன்.... சாம்ராஜ்யம் இல்லாமல் தவிக்கிறேன்... சமுதாயம் இல்லாததை மறுதலிக்கிறேன்... பணம் இல்லாமல் தவிக்கிறேன் ... குணம் இல்லாததை மறுதலிக்கிறேள்.... காதல் இல்லாமல் தவிக்கிறேன் ... கடவுள் இல்லாததை மறுதலிக்கிறேன்.... உள் உணர்வுடன்... ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

மனம் உண்மையைப் பற்றி, நிற்கும் விலங்கு..!" அதை சூழலுக்குப், பழக்குதல் எளிதல்ல...!! RK

#
Kalpana Subramaniam

தனியாகத்தானே வந்தோம்..!" பிறகு எதற்கு அவரை இழந்தோம்.. இவரை இழந்தோம்.. என்று வருத்தப்பட்டு.. நம் வாழ்க்கையின் பெறுமதியான.. நேரத்தை செலவிட வேண்டும்..!" போகும் போதும் தனியாகவே போக வேண்டும்..!" இருக்கும் வரை, எவரையும் எதிர்பாராமல்.. யாரையும் புண்படுத்தாமல்.. வாழ்ந்து விட்டுத்தான்.. போவோமே யார் தயவும் இன்றி...!! RK

#
Kalpana Subramaniam

காற்றாய் இருந்து விடு.. உன்னை யாரும் தடுக்க முடியாது..!" கடலாய் இருந்து விடு.. உன்னை யாரும் அளக்க முடியாது..!" மழையாய் இருந்து விடு.. உன்னை யாரும் மறுக்க முடியாது..!" மலையாய் இருந்து விடு..!" உன்னை யாரும் ️மறைக்க முடியாது..!" ஒளியாய் இருந்து விடு_ _உன்னை யாரும் பிடிக்க முடியாது_ _கடின உழைப்போடு..!" நீ என்றுமே இருந்து விடு..!" உன் வெற்றியை.. யாரும் தடுக்க முடியாது_.!! RK

#
Kalpana Subramaniam

மனம் ஒன்றுதான்.. எண்ணங்கள் பல.. அன்பு ஒன்றுதான்.. அன்பிற்குரிய விஷயங்கள் பல.. விஷயங்கள் மாறுகின்றபொழுது.. அன்பும் மாறுகின்றது.. ஆனால்.., அன்புக்காக மட்டும் அன்பிருந்தால்.. விஷயங்கள் மாறினாலும்.. அன்பு மாறாது...!! RK

#
Kalpana Subramaniam

அலுவலகத்தில் அவள் கால்களுக்கு பிடித்தது கொலுசோசை வீட்டில் இருக்கையில் அவள் காதுகளுக்கு பிடித்தது அவன் கால் ஓசை ......

#
Karuppasamy

️️️️ ஒழுக்கம் இல்லை என்றால், நீ குற்றவாளி..!" வேலையில் அக்கறை குறைவு என்றால், நீ சோம்பேறி..!" வாகனத்தில் கவனம் இல்லை என்றால், நீ பிணம்..!" வியாபாரத்தில் கவனம் இல்லை என்றால், நீ கடனாளி..!" உணவில் கவனம் இல்லை என்றால், நீ நோயாளி..!" RK ️️️️

#
Kalpana Subramaniam

️️️️ பகைவனுக்கு மன்னிப்பை பரிசளி..!" உன் குழந்தைக்கு, நல்ல நடத்தையை பரிசளி..!" உன் மனைவிக்கு, நல்ல தன்மையை பரிசளி..!" உன் தந்தைக்கு, மரியாதையை பரிசளி..!" உன் தாய்க்கு, பெருமையை பரிசளி..!" உன் நண்பனுக்கு, உன் உள்ளத்தை பரிசளி..!" உன் மனசாட்சிக்கு, நம்பிக்கையை பரிசளி..!" உன் உறவுகளுக்கு, உன் உணர்வை பரிசளி..!" உன் சகோதரனுக்கு, நேசத்தை பரிசளி..!" எல்லா மனிதரிடமும், தாராள குணத்தை பரிசளி...!! RK ️️️️

#
Kalpana Subramaniam

ஆயுதபூஜை ஆதவன் ஆனந்தமாய் வெளிவர.... அழகிய தென்றலாய் காலை கண் மலர மக்கள் மகிழ்ச்சி பொங்க.. மனதில் உணர்ச்சி ததும்ப.. விஷேசம் எனும் விருந்தோம்பல் பார் வியக்க வர்ணம் தீட்டி பசு சாணம் மெழுகி கண் வியக்க கோலமிட்டு.. கஜமுகனை கையில் எடுத்து கற்பூரவள்ளி மேல் பாக்கு வைத்து தேன் வாழை கிள்ளி தலவழை எடுத்து தவறாத சுண்டல் இட்டு. கூடவே பலகாரம் வைத்து பழவகை படைத்து பள்ளி புத்தகம் பதமாய் இட்டு.. பயன்பட்ட ஆயுதம் தரித்து... தேங்காய் உடைத்து ஆசிர்வாதம் தர அம்பாளை ஆராதனை செய்து.. நவராத்திரியில் நல்வாழ்வு வாழ கொலு வைத்து குலம் வளர கும்பிடு போட்டு வணங்கிறோம்.. வரம் பல தர வேண்டி நிற்கும் உன் அடியேன்.. ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

பேச்சுக்கள் நீங்கிய மௌனங்களும்.. பிரச்சனைகள் இல்லாத பிரியங்களும்.. பிரம்மாண்டம் நிறைந்த தனிமைகளும்.. பழக்கமாய் பக்கம்வர.. வலிக்காதொரு வலி மட்டும்.. விலகிநின்று வேடிக்கை காட்டுகிறது..!! RK

#
Kalpana Subramaniam

நூலகம் சாஸ்திரங்களை உருவாக்கிய வேதசாலை சாதனையாளர்களை உருவாக்கிய. பாடசாலை மக்களுக்கு வழிகாட்டிய மகான்களின் அறிவாலயம் பல ஆன்மாக்கள் வாழம் நினைவாலயம் மாணவர்களுக்கு வழிகாட்டிய சிந்தனைக்கூடம் மாமனிதர்களை உருவாக்கிய புத்தககூடம் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கிய விஞ்ஞானகூடம் ஆசிரியர்களுக்கு வழிகாட்டிய பள்ளிகூடம் உள்ளத்தை வழமைப்படுத்தி சிந்தனை செழமைபடுத்தும் கலைகளஞ்சியம் அறிவை பெருக்கி ஆன்மீகத்தை வளர்ப்போம் ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

அவள் நறுமுகையே நீ ஒரு நற்றினை.. நாள்தோறும் வளரும் நளவெண்பா.. தென்றலே அவள் ஒரு கலித்தொகை... தேனூரும் அவள் நினைவு திருவருட்பா மேகமே அவள் ஒரு வளையாபதி.. மென்மையான கன்னம் மேகலை.. சிரிப்பு சிந்தாமணி சீரிய வகுடு சிலப்பதிகாரம்... அசையும்குன்டலகேசி அவாதரும் நாலடியார் என்னுள் பத்துபாட்டு என்றும் ஓயாத பதினென்கீழ்கணக்கு நினைவுடன் அகநானூறு... தொடருட்டும் புறநானூறு... ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

என்னை போர்க்களத்தில் தள்ளிவிட்டு நீ சமாதானப்புறா போல தள்ளி நின்று கொல்கிறாய்...

#
Karuppasamy

பழகும் போது சொல்லும், பாதி பொய்களில், இதுவும் ஒன்று..! உன்னை தவிர, வேற எதுவுமே, முக்கியம் இல்லை என்று...!! RK

#
Kalpana Subramaniam

ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும்.. ஒரு எதிர்பார்ப்பு..! ஆனால்.. ஒவ்வொரு நாளின் முடிவிலும்.. ஒரு அனுபவம்..! அதுதான் வாழ்க்கை...!! RK

#
Kalpana Subramaniam

மனித பிறப்பித்து, மகத்தான பிறப்பித்து, அன்பால் வசப்படுத்தி ஆளவேண்டிய உலகம் இது..!" மனித உறவை தேடமறுத்து, தீங்கிணை தேடும் உலகம்..!" மனித உணர்வுக்கு இடமில்லை, நல மனிதர்க்கு மதிப்பில்லை..!" வசதி மட்டுமா வாழ்க்கை என்பது, வாழ்ந்து மடியும் பொய்யான உலகில், அசதிக்கு ஆறுதல் தரும், அன்பு சொந்தங்கள் தேவை இல்லையா..!" பணக்காரன் பெருமனிதன், கடன்காரன் தெருமனிதன், உறவுகள் இருந்தபோதிலும், பணமற்றவன் அநாதையே..!" பார்த்தும் பார்க்காமல் செல்வான், பகைவன்போல் ஒதுங்கி செல்வான், நேற்றுவரை நெருங்கி இருந்தவன், இன்று தூரம் போனான் சுயநலமாய்..!" வரவை தேடியே உறவும் நெருங்கும்..!" வரவிருந்தால் உறவு தொடரும்..!" வரவில் கொஞ்சம் விரிசல் விழுந்தால், உறவில் கூடவே விரிசல் வரும்..!" மனம் பார்க்காத உறவு அது..!" குணம் பார்க்காத உறவு அது..!" நிறம் பார்க்காத உறவும், வசதி தேடி உன்னுடன் உறவு கொள்ளும்..!" அன்பு பாசம் நேசம் எல்லாம், அடகுவைத்துவிட்டார் பணமிடத்தில்..!" உறவை தேடும் சொந்தம் உலகில் இல்லை..!" வரவை தேடும் சொந்தகளுக்கிடையில்...!! RK ️

#
Kalpana Subramaniam

மகனின் மாற்றத்தை, திருமணத்திற்கு பின் உணரலாம்..!" மகளின் மாற்றத்தை, வாலிப வயதில் உணரலாம்..!" கணவனின் மாற்றத்தை, மனைவி நோய்வாய் படுதலில் உணரலாம்..!" மனைவியின் மாற்றத்தை, கணவனின் வறுமையில் உணரலாம்..!" நண்பனின் மாற்றத்தை, கஷ்ட காலத்தில் உணரலாம்..!" சகோதரனின் மாற்றத்தை, சண்டையில் உணரலாம்..!" சகோதரியின் மாற்றத்தை, சொத்து பரிமாற்றத்தில் உணரலாம்..!" பிள்ளைகளின் மாற்றத்தை, நமது முதுமை காலத்தில் உணரலாம்..!" எப்படி எதையும் ஆராய்ந்தாலும், பல எண்ணங்கள் மனதில் சூழந்தாலும், ஒப்பிட மாறா ஒன்றில்லை என, உணர்ந்தால் வாரா ஒரு தொல்லை..!" தப்படி வைத்தே நடக்கின்றோம்..!" பிறர் தடுப்பின் போரே தொடுக்கின்றோம்..!" இப்படி இருக்கும் இவ்வுலகின், இனி எல்லாம் மாற்றம் மாற்றம் தான்..!! RK ️

#
Kalpana Subramaniam

உரிமை.. எடுத்துக்கொண்டு.. நம்மிடம்.. கோபம் கொள்ளும்.. உறவுகள்.. எளிதில் எல்லோருக்கும்.. அமைவது இல்லை...!! RK

#
Kalpana Subramaniam

நான் ஆசைப்படுகிறேன். நீ ஆச்சர்யப்படுகிறாய்.. !

#
Karuppasamy

காணவில்லை...? நான் இருக்கிறேன் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்றவர்கள்.....!!

#
Karuppasamy

உன் கார் குழல் அடங்க மறுக்கின்றதோ யாருக்கும் கட்டுப்படாத உன்னிடம்...

#
Ilakkiya sri

செயற்கை மலர் வண்ணம் கலையாது அன்று மலர்ந்த மலர் போல் பெண்களின் சிகையோடு உறவாடி எழிலுடன் நகைக்கும் ...

#
Ilakkiya sri

கேரள பெண் மகள் கலகலவென நகைக்கின்றாளே மலர்கள் கூட மெல்ல மெல்ல மொட்டுக்களை அவிழ்க்கும் இவள் பூஞ்சிரிப்பின் மொட்டுக்கள் நொடியில் அவிழ்ந்து விடும்...

#
Ilakkiya sri

நீ என்னைப்பெண் பார்க்க வருவாய் என்பதால் தான் இத்தனை ஒப்பனை இவை எல்லாம் கொஞ்ச நேரமே உண்மை எழில் காண விரும்பி கேட்கத்துணிவு இருந்தால் ஒப்பனை எதற்கடா...

#
Ilakkiya sri

மனதுக்கு திரை போட்டாலும் வயதுக்கு திரை போட இயலாது...

#
Ilakkiya sri

தனிமையை விரும்பும் போது மனம் இசை எனும் நதியினிலே நீந்தி கரை சேர இயலாமல் தவிக்கின்றது...

#
Ilakkiya sri

கடிதம் என்பது.. பிரியாமல்.. இருக்கும் உறவை.. மேலும் பிரியத்தோடு.. பிரியாமல்.. இருக்கவைக்கும்.. இயந்திரம் ஆகும்...!! RK

#
Kalpana Subramaniam

உங்களின் புன்னகை அகம் எனும் பெட்டிக்குள் அடைபடுவதை விட புறம் எனும் இதழ் கொண்டு புன்னகைத்தால் மழலையின் புன்னகைக்கு ஒப்பாகுமே...

#
Ilakkiya sri

அமைதியாய் இருக்கும் நபர்களை எப்போதும் துட்சமாக எண்ணாதே!_ _காற்று கூட அமைதியானது தான் ஆனால் அதன் உண்மை சுயரூபத்தை சூறைக்காற்றில் நன்கு அறிவாய்!

#
Freash Status

உன் புன்னகையை விலை பேசும் உரிமை எவருக்கும் இல்லை...

#
Karuppasamy

அடிமை பட்டு கிடந்தவனுக்கே தெரியும் சுதந்திரத்தின் மகிமை பெற்ற சுதந்திரத்தினைப் பேணிக் காப்போம் ஒரு தாய் குழந்தையையைப் பார்ப்பது போல குழந்தைகள் தாயைப் பார்ப்போம் தரணியில் திளைப்போம்

#
saranya k

பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும்! அது ஆணவப் பேச்சாகக் கூட இருக்கலாம்! என்றும் ஆய்ந்து அறிந்து பேசுவது நலம்! அது அகமார்ந்த ஆனந்த பூரிப்புக்கு வழிவகுக்கும்!

#
மகுட தாரிணி

நன்மை, தீமை... தீமையில் உழன்று வெற்றியில் திளைத்தாலும் கூட தீயதையும் தீயவர்களையும் துளியும் மாற்ற முடியாது! நன்மை செய்ய முயன்று தோற்றாலும் கூட நல்லதையும் நல்லவர்களையும் புரிந்து கொள்ளவாவது உதவும்!

#
மகுட தாரிணி

குழந்தை சிரிப்பும் குறும்பு மகிழ்ச்சியும் உன்னால் மட்டுமே தரமுடியும் ஆதலால் எப்போதும் என் பின்னால் நிழலாய் இரு ......

#
Karuppasamy

இந்தப் படத்தில்........!! விலங்குகள் பறவைகள்.......!! துன்புறுத்தப் படவில்லை......!! ஆனால்......!! மனிதர்கள் துன்புருத்தப் படுகின்றனர்........!! படம் : ஜெய்பீம் ஸ்ரீஜா சந்திரசேகர்

#
ஸ்ரீஜா சந்திரசேகர்

வெட்டுமரத்தின் தண்டில் வந்தமர்ந்து தன் கிளைகளை தேடும் பறவை பாேல் நீ சென்ற பின்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறேன் உன்னை எதிர்பார்த்தபடி படைப்பு ஸ்ரீஜா சந்திரசேகர்

#
ஸ்ரீஜா சந்திரசேகர்

தமிழ் சந்தம் கொஞ்சும் தமிழ் மலை வளம் உரைக்கும் தமிழ் சிலம்பின் ஓசை அள்ளும் தமிழ் கற்பின் கவி சொல்லும் தமிழ் தூரிகையின் தீண்டலில் உயிர் பெறும் தமிழ் மலர்களின் காதலில் திளைக்கும் தமிழ் உலகம் போற்றிடும் தேன் சிந்தும் தமிழாய் தவழ நாம் அனைவரும் இணைந்து தமிழை அள்ளிப்பருகி வளர்ப்போம்.

#
Ilakkiya sri

குழந்தையின் சிரிப்பு ஒன்றே போதும் மனதிலுள்ள காயங்களை குணப்படுத்த...!

#
Shiny Mani

பௌர்ணமி இரவில் கலவி கொள்ள நாணம் கொண்டு இருளைத் தேடிய மலர்களும் பறவைகளும்...

#
Ilakkiya sri

கனவுகளை புதைத்து நிஜங்களில் பயணி அன்பு எனும் விதை நடு ஆசை எனும் வேர் விருட்சமாகி மலர்கள் பூத்து வாசம் சிந்தும் நீ புதைத்த கனவுகள் நிஜமாகும்...

#
Ilakkiya sri

சொல்வதை செய்வது செயல் படுத்த முடியாத கலை நாம் செய்யும் செயல் முடிக்கும் திறம் நிதி இலக்கு இவை அனைத்தும் ஒன்றினைந்தது சொல்வதை செய்யும் இன்றைய கணினியின் வளர்ச்சி...

#
Ilakkiya sri

கண்ணாடி சுவற்றில் உறங்கி கிடந்து பலரை தட்டி எழுப்பி அழகை அள்ளி புன்னகை பூக்களை மலரச்செய்திடும்...

#
Ilakkiya sri

உதிராத ஓரிதழ் போல் உதிராத குறுநகையுடன் உதிராத வாசத்துடன் உதிராத எழிலுடன் உதிராத அமுதாய் உதிராத ஊற்றாய் உதிராது ஒளிர்கின்றாயே...

#
Ilakkiya sri

நிழல் முகங்களில் இன்சொல் பேசி நிஜங்களில் வன்சொலால் பிறர் மனதை நோதலும் உலக இயல்பு...

#
Ilakkiya sri

உன்னிடம் பேசாமல் தான் தவித்து கொண்டிருக்கிறேன் என்பதை சொல்வதற்கு கூட உன்னிடம் பேச முடியவில்லை ..

#
Karuppasamy

அதிகபட்சம் என்னால் என்ன செய்துவிட முடியும்.. மௌனமாய் இருப்பதை தவிர..

#
Karuppasamy

அளவில்லா ஆனந்தம் தருவதும் அளவில்லா சோகம் தருவதும் நம் மனதிற்கு பிடித்தவர்கள் மட்டும் தான்

#
Karuppasamy

சேருமிடம் பார்த்து சேர்.. கோயில் குளத்தில் விழும் மழை தீர்த்தம்.. குட்டையில் விழும் மழை அசுத்தம்.. அதுதான் வாழ்க்கை!

#
Karuppasamy

மண்ணுலக மங்கையர்களுக்கு மாதம் மாதம் வரும் மாதவிடாய் ஒரு சாபம்

#
Arif Mohammed

மழை சாரல் நதியில் வீழ்கையில் துள்ளும் மீன்களின் மகிழ்வும் சிறகுகள் வெட்டப்பட்ட பறவைக்கு சிறகுகள் முளைக்கையில் அதன் மனதில் தோன்றும் மகிழ்வும் நம்மிடம் காதலினை சொல்கையில் பல முறை முகம் காட்டும் கண்ணாடியில் நம் அழகினை கண்டு மகிழும் தருணங்களும் மாராப்பு அணிகையில் புதிதாக அணிந்த வளையலின் சத்தங்கள் உன் துணைக்கு சந்தங்களாக மகிழ்ச்சிக்கு எல்லை ஏதாடா...

#
Ilakkiya sri

கடவுள் எந்த ஒரு மனிதரையும்...காரணமின்றி நம் வாழ்வில் அனுமதிப்பதில்லை..." "பாடமாக சில பேர்" "பாலமாக சில பேர்...!

#
Karuppasamy

கள்வர்களுக்கு உறக்கம் ஏது ? "கனவுகள் வாடும் போது காயங்கள் மலரும் நான் தூக்கத்தைக் களவாடும் நேரம் அங்கே கள்வர்களின் நடமாட்டம் !!"

#
S Sankari

விவசாயம் சொல்லும் கதை "காடு கன்னி பூக்கலயே தோட்டந் தொரவு பாக்கலயே என் மனசெல்லாம் விக்கித் தவிச்சு நாளும் கோளும் பார்க்கச் சொல்லுதய்யா ! நாமளும் கைய நீட்டி வெரசாத்தான் நடக்க வேணுமய்யா கண்கள் ரெண்டிலும் காகங்கள் கரையுதம்மா காலங் கெட்டு க் கிடக்குதய்யா மர அச்சாணி வேணுமுன்னு அட்சதைப் போட கெடக்கலயே அரை அரிசி கூட இல்லயே முழு நெல்லும் உமியாச்சு விளைஞ்சதெல்லாம் களையாச்சு விவசாயம் இல்லேனா குலநாசம் ஆகுமுன்னு இது சொல்லிவச்ச பாடமுங்க சொல்லாம விளங்குமுங்க"!

#
S Sankari

கழுதைய பாத்தா யோகம் தான் . ஆனா அந்த கழுதையை பாக்குறதுக்கே யோகம் வேணும் ங்க...

#
MURUGESAN KR

இரவு பகல் பாராது தத்தம் வேலைகளை செய்து விட்டு இளைப்பாறும் நேரத்திலே கைபேசியை தொடுகையில் ஏனோ என் மனம் உற்சாகம் கொள்கிறது தொலைவில் இருந்தாலும் விருப்பமானவர்களிடம் நிதம் கதைத்து களிப்புறவும் பல நிகழ்வுகளைப்பகிர்ந்து கொள்ளவும் உன்னைத்தவிர யார் உளர்...

#
Ilakkiya sri

கைக் கொள் என் உலகமே 888 "போகும் இடம் தெரியாமலே கால்கள் ஓடுதே ! காற்றாக கடல் அலையாக நெஞ்சம் பதறுதே ! உறவுகளைத் தாண்டி உணர்வைத் தாண்டி உலகம் வருமா ? அன்பைத் தாண்டி அரணைத் தாண்டி உலகம் விரும்புமா ? கேட்கிறேன் கேட்கிறேன் கேளா மொழிகள் கேட்கிறேன் கேட்கிறேன் கேட்காமலேயே ஏன் இந்த பிறப்பு ? வறுமை உலர்ந்த இந்த உலகம் வளமை வளர்க்க என்று வரும் இந்த உலகம்? போகிறேன் போகிறேன் போக்கிடம் உண்டா ? போகிறேன் போகிறேன் போகும் இடம் வருமா ? ஆராரோ ஆரீரரோ என்று பாட வந்தேன் தூங்கு என் உலகமே ! ஆராரோ ஆரீரரோ என்று பாடி சொல்வேன் தூங்காத என் உலகமே ! பகல் இரவாய் நீயும் நானும் தனிமையில் இருப்போம் யாரும் அறியாமலே !!"

#
S Sankari

செ ங் கம ல நூ த லில் சிறு செந்தூர உள்ள தூ என்று ஆக து டி ப் பில் துஞ்சும் பேதை நெஞ்சு பிழிப்பது தின்னம்

#
Palani Muthu

நினைவுகள் சுகமானவை இசையை செவி மடுக்கையில் தென்றலின் அலையில் நினைவுகள் காற்றோடு கலந்துரையாடும் மலரோடு உரையாடும் நதிகளோடு உரவாடும் மான்களுடன் துள்ளி மகிழும் இந்நினைவுகளைத் தொட்டு விட முடியவில்லை என்றால் மறதி நோய் எட்டிப்பார்க்கும் உன்னை நீ அறிய மாட்டாய்...

#
Ilakkiya sri

மனம் என்னும் சாரலில் மறைத்து வைத்த இரகசியத்தை அள்ள முடியாது அவர்களாக உரைத்தால் தவிர.

#
Ilakkiya sri

பொங்கி எழும் கடலின் ஓசையை செவி மடுக்கையில் நம் மனம் அமைதி தரும் நிதமும் மலர்கள் மலர்வதை கண்டு இரசித்தும் வாசம் நுகரும் போதும் மனம் அமைதி தரும் நம் உணர்வுகளுக்கு உரமிட்டு நம் மேல் காதல் வயப்படும் போது மனம் அமைதி தரும் இம்மன அமைதி கிடைத்தால் உலகம் நம் வயப்படும்.

#
Ilakkiya sri

மழை நனைத்த காலையில் தோன்றும் மண் வாசம் தென்றலுக்கே பெருமை சேர்த்தது.

#
Ilakkiya sri

கதை முடிந்த பின்னும் கதையின் புனைவு இயற்கை வளங்களில் நம்மை ஒன்றச்செய்த விதம் புதிய பரிமாணங்கள் இவை அனைத்தும் இரசித்த பின்னும் மீண்டும் நினைவுகளில் அலைகளாய் ஆர்ப்பரிக்கும் அதன் அழகு.

#
Ilakkiya sri

நிலவின் அழகு காற்றின் ஓசை நட்சத்திரத்தின் நடனம் தலையணையுடன் உரையாடல் கண்ணீர் துடைக்க போர்வை என்னுடன் சண்டையிடும் கொசுக்கள் கடமை தவறா நாய்களின் சத்தம் நிலவின் அழகை ரசிக்க மறுக்கும் கண்கள் கண் திறந்தால் அம்மாவின் சத்தம் (alarm) என் இனிய தனிமையே..

#
t

நெற்கதிர் விளைந்த வெள்ளிமணி அதன்மேல், வெயிலில் மின்னும் பனி! ஒவ்வொரு விடியலும் காண ஏங்கும் கனவு! அந்த ஏக்கம் பிறக்காத உழவனும் இருந்ததும் உண்டோ!

#
மகுட தாரிணி

மௌனத்தில் மஞ்சத்தில் தோன்றும் புணர்ச்சியின் சிணுங்கல்கள் கூடலின் அழகு .

#
Ilakkiya sri

வேட்கை சோகம், அழுகை, இயலாமை, வெறுமை, நன்மை, தீமை, மகிழ்ச்சி இவை யாவும் புதைந்த மனிதமனம் குப்பைத் தொட்டியா? துரோகம், எள்ளல், வெறுப்பு - இவை யாவையும் கொண்ட மனம் பொக்கிஷமா? மனதின் அமைதியை அடையாளம் காணும் கலை, இசை, விளையாட்டு முதலியவை நம் மனதை பேணிக் காக்கும்.  அது வெறும் தொழிலல்ல மனித மனதின் வேட்கை!

#
மகுட தாரிணி

தினமும் சுத்தம் செய்ய வருபவன் இன்றொரு நாள் வரவில்லையே என மறுநாள் காலை வரை காதலுடன் காத்திருக்கிறது -குப்பைதொட்டி

#
பவி

உன் பெண்மையின் மென்மையுடன் நடந்த ஒப்பனை எழிலுற சிகையிலே நட்சத்திரங்கள் மின்ன காதனி மின்னி அசைய விழிகள் வண்ண மீன்களாக மூக்கணி மேலும் எழிலூட்ட ரோஜா இதழ்கள் புன்னகைக்க முத்துப்பற்கள் வரிசையொடு மின்ன கழுத்திலே நவரத்தினங்கள் ஜொலிக்க கொங்கைகள் மாதுளையாக கைகள் தாமரையாக இடையோ நாணலாக பாரிஜாதம் நாணுற்று மலர அன்னத்தின் நடையாக பாதுகை மலர்களாக புரவியிலே பவனி வர அவளோ மண்ணில் இறங்க நானோ அவளை ஏந்தினேன் இரவினை நல்கி இனிய மஞ்சத்தொடு..

#
Ilakkiya sri

உழைப்பாளர்களின் கனவு நனவாக வேண்டும் உழைப்பாளர் இல்லையெனில் இருக்காத இயக்கங்கள் உழைப்பாளரின் தேவையை அறிந்து செய் உழைப்பாளர்களுக்கு ஓய்வு கொடுத்து ஊக்குவி.

#
Ilakkiya sri

நம் இந்திய பாரதம் ! வந்தே மாதரம் நம் இந்திய பாரதம் ! அன்னை பாரதம் அணைக்கும் பாரதம் ! புகழினில் சிறப்பினில் ஓங்கிய நம் இந்திய நாடு ! நட்பினில் கருணையில் ஏங்கிய நம் இந்திய நாடு ! காலம் போற்றும் தனித்திரு நாடு ! உலகம் போற்றும் உன்னத நாடு ! குடிலைப் பெருக்கும் குலம் தரும் நாடு ! விடியலைச் சொல்லும் விழித்திரு நாடு ! பாண்டவர் வாழ்ந்திட்ட பழம்பெரும் நாடு ! விண்ணை அளக்கும் வித்தக நாடு !

#
S Sankari

அன்பாயிரு ! அன்னையாயிரு ! உணவை வீணடிக்காதே உணவுக்காக நீ வீணடிக்கப்படுவாய் உறவை உதாசீனம் செய்யாதே உறவுக்காக ஒதுக்கப்படுவாய் அன்பை அலட்சியம் செய்யாதே அன்புக்காக அலைக்கழிக்கப்படுவாய் நன்றியை மறக்காதே நன்மைக்காக நீ மறைக்கப்படுவாய்

#
S Sankari

ஸ்ரீஅருணாச்சலா தேவாதி தேவா ஸ்ரீஅருணாச்சலா ! தேவாரம் பாடி வந்தோம் ஸ்ரீஅருணாச்சலா ! கரம் குவித்து உன் புகழ் பாட வந்தோம் ஸ்ரீ அருணாச்சலா ! காத்திருந்து காத்திருந்து உன்னைச் சரணடைந்தோமே ! காலம் முழுதும் உனக்காக வணங்கி நின்றோமே ! திருமாலும் பிரம்மனும் உன் உருவைக் காண அருகில் வந்தவர்களாம் ! நீ அடி முடியாய் நீண்டிருந்தாய் ஸ்ரீஅருணாச்சலா ! ஜோதியாய் நின்ற உருவானவா ! உனக்காகவே நான் உருவானதா !

#
S Sankari

சின்ன சின்ன யானை சின்ன சின்ன யானை சிலுங்க வைக்கும் யானை கூட்டுக்குள்ள யானை கூடி பாடும் யானை சிங்கார குரலு யானை ஒய்யார நட யானை பாப்பாவுக்கு பிடிக்கும் யானை பம்பரமா சுழலும் யானை கட்டி பிடிக்கவும் முடியாது கட்டி போடவும் முடியாது கேரளா வீட்டு யானை கதகளி ஆடும் யானை கண்ணழகு யானை காலாட்டும் யானை கொள்ளையழகு யானை கொலுவிலிருக்கும் யானை

#
S Sankari

அழகிய பூனையே எங்கோ பிறந்து எங்கோ திரிந்து என்னிடம் வந்தாயோ நினைக்கும் நேரத்தில் உணவருந்தினாயோ பஞ்சனையில் துயின்றாயோ என் மடியில் தவழ்ந்தாயோ உனக்கொரு துணை கிடைத்ததா அவனுடன் கூடல் கொண்டாயோ அவன் மேல் எவ்வளவு அன்பு அவனுக்கு பிடித்த உணவை நீ உண்ணாமல் அவனுக்குத்தந்து பார்த்து இரசித்தாயே என் மீது அளவு கடந்த அன்படீ உனக்கு இருப்பினும் உன் தோழிகளை காண இயலாமல் நீ தவிப்பது எனக்குப்புரியாதா செல்லமே புரிந்தாலும் உன்னை விட மாட்டேன் நீயும் நானும் வேறானாலும் இருவரின் அன்பும் ஒன்றல்லவா செல்வமே.

#
Ilakkiya sri

அழகிற்கு குறைவில்லை அள்ளி எடுத்து அணைக்க சந்தனக்குழம்பை மேனியில் பூசி மெருகூட்டி வாசம் சேர்த்து நறுமணம் மிக்க சாம்பராணி தூபத்தை சிகையிலே காட்டி அழகுடன் வாசம் மிகுந்து சொல்லொனா மயக்கத்துடன் நானும் அவளும்.

#
Ilakkiya sri

இருளின் மடியில் தாரகைகள் மின்னுவது போல் இருளின் மடியில் இரவின் தாலாட்டில் இதய வாசல் திறந்திட மனதிலே காதல் பூக்கள் மலர கவி பாடி தாரகையாய் நீயும் மின்னுகிறாய் இனிய நெஞ்சத்தொடு.

#
Ilakkiya sri

மாம்பழமா மாம்பழம் சுவையான மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் தின்ன தின்ன மாம்பழம் தெவிட்டாத மாம்பழம் காரைக்கால் அம்மையார் மாம்பழம் தேரிழுக்கும் மாம்பழம் தேவைக்கு மாம்பழம் தேவதைக்கு மாம்பழம் தேனாட்டம் மாம்பழம் தேடி வந்த மாம்பழம்

#
S Sankari

இத்தமிழ் புத்தாண்டில் தமிழின் தமிழரின் சிறப்பை நினைவு கொள்வோமே. தமிழரின் மரபை அறிவோமே தமிழின் இனிமை அறிவோமே தமிழின் சுவையை அள்ளிப்பருகுவோமே தமிழரின் விருந்தோம்பலை ஆராதிப்போமே தமிழன் அன்பை கொடுத்துப்பெற்று களிப்புறுவதை உணர்வோமே தமிழினைக்கரம் பிடித்தால் நேசத்தை அள்ளி இரசிக்கலாமே தமிழ் நிலவு போல் தண்ணொளி வீசி பறக்கட்டுமே.

#
Ilakkiya sri

புலன்களின் தவம் செவிகளுக்கும் விழி உண்டு புலக்காட்சி என்ற தனை அழைப்பர் காணீரோ! சொற்களுக்கும் நுகரும் தன்மை உண்டு, நோக்கம் என்பார் அதனை,  செவி மடுப்பீரோ! விழிகளுக்கும் இதயம் உண்டு, கருத்துக்களுக்கும் உயிரோட்டம் உண்டு, உணரீரோ! உணர்வுகளுக்கும் அறிவு உண்டு, அவதானித்தலில் தான் பெருமளவு அறிவு பெருகும், அறிவீரோ!

#
மகுட தாரிணி

மௌனம் அளவோடு இருத்தல் வேண்டும் மௌனம் நம்மை யார் என அறிந்து கொள்ள முடியாமல் நம்மை காத்துக்கொள்ள உதவும். அதிகமான மௌனம் நம்மை யார் என அறியாமலே செய்து விடும். மௌனம் அதிகமானால் ஒன்றும் அறியாதவள் என்ற பட்டத்தை அளிப்பர்.

#
Ilakkiya sri

தமிழ் மொழி! நாவினிலே நாட்டியமாடும் மொழி.. நற்பண்பை கற்பித்த மொழி! ஆதிகால பழம்பெருமை வாய்ந்த மொழி.. ஆசான் கற்பித்த மொழி! இயற்கை இயன்ற இனிமையான மொழி.. ஈசன் இறைத்த மொழி! முப்பாட்டனார் பேசிய தேசிய மொழி.. முன்னோரின் மூத்த மொழி! காதில் இன்னிசைப் பாடிடும் மொழி.. கனாவிலும் காட்சித்தரும் மொழி! தாய்லாந்திலும் பேசப்படும் மொழி.. தாய்மொழி தமிழ்மொழி!

#
இதயத்தின்_குரல்

இன்னொரு பிறவி பூமியில் பிறந்தால் தமிழை நான் பேசிட வேண்டும்...  எத்தனை மொழிகள் கேட்கின்ற போதும் தமிழிலே பொருள் கொள்ள வேண்டும்... செவி வழி கேட்கும் மொழிகளில் எல்லாம் தமிழ் மணம் வீசும் எப்போதும்... மொழியினால் நாங்கள் பிரிவினை பேசி பிரிந்திடப்  போவதுமில்லை..  முத்தமிழ் யார்க்கும் முதல் மொழி எனவே அனைவரும் எந்தன் உறவே.. "என் தாய்க்கும் தாய் மொழி தமிழே..." என் தாய் இந்த வரியை படித்திடும் போதும் படித்ததின் அர்த்தம் சரியே..

#
உன்னோட நண்பன்

உன் கவிதை புத்தகத்தில் நீ தேடாத பக்கத்தில் நான் புதைந்து கிடக்கின்றேன். என்றேனும் தென்படுவேன் என்றே நான் உறங்குகிறேன்.

#
உன்னோட நண்பன்

முயற்சி உன்னால் முடியும் என்பது நம்பிக்கை

#
Bhavaani Prakash

மணல் விளையாட்டு ஆற்றங்கரை ஓரத்திலே அத்தை மகள் அருகினிலே மணச்சலித்து நிரூற்றி மட்பாண்டம் பலச்செய்து கூட்டாஞ்சோறுபல செய்து பரிமாறும் பொழுதினிலே மட்பாண்டம் உடைந்திடுமே! மனசெல்லாம் நிறைந்திடுமே! கடற்கரையின் நடுவினிலே மணல் வீடுக்கட்டி முடித்திடவே அலைவந்து நனைத்திடுமே வீடுத்தனைக்கரைத்திடுமே! அன்றிருந்த மணல் விளையாட்டு இன்றில்லை மழலைக்களின் பிஞ்சு விரல் மண்பிசைந்து விடையாடிடவே! மணலும் தவம் கிடக்குது மழலைகளே வாரீரே மணல்விளையாட்டு விளையாடி மனமெல்லாம் மகிழ்வோமோ

#
PREETHI KARTHIK

அ"ன்பில் எழுதிய கவிதை.. ஆ"சையில் எழுதிய கவிதை.. இ" சைக்கு எழுதுவேன் கவிதை.. ஈ "கைக்கு எழுதிய கவிதை.. உ"ரிமையில் எழுதிய கவிதை.. ஊ"க்கத்தில் எழுதினேன் கவிதை எ"துகையில் எழுதிய கவிதை.. ஏ"ற்கொண்டு எழுதிய கவிதை.. ஐ"ந்தெழுத்தில் எழுதிய கவிதை.. ஒ"ன்றி படித்த கவிதை.. ஓ"ய்வில் எழுதினேன் கவிதை.. ஒள"வை சொன்ன கவிதை.. ஃ"கனம் பதிவிடுகிறேன்.. நூறாவது கவிதை. பதிவிட்டேன் சில கவிதை.. பதியாமல் விட்டேன் பல கவிதை.. மறந்தது சில கவிதை.. மறக்காமல் பல கவிதை.. அய்யத்தில் சில கவிதை. சிறகடித்து பறக்கும் தாய்மொழி கவிதை.. தமிழின் பெருமையில் சில கவிதை.. படித்தேன் பிற மொழியில் பல கவிதை.. தமிழுக்கு நிகர் இல்லை ஒரு கவிதை..

#
கவிதையின் காதலன் ரவி

காலம் கடந்தால் என்ன நண்பா!!!!!! கரை உனது அருகில் இருக்கும் போது!!!!!!

#
Kavi

சிறு துளி பெருமழையானால்,,,,, சிறு புன்னகை பெரு மகிழ்ச்சியானால் ,,,,,, சிறு கவலை பெரும் வலியானால்,,,,,, சிறு முயற்சி பெரும் வரமாகும்........!!!!!!

#
Kavi

உன்னை இழந்துவிடாதே

#
Kavi

ஆள துடிக்கும் ஆண்மையும் அனுபவிக்க துடிக்கும் பெண்மையும் ஓர் உயிரினில் கலந்து இருக்க ஆண், பெண் எனும் பேதம் ஏது இது தெளிந்தால் ஒளிந்துவிடும் வேற்றுமையே அழகாய் ஒண்றினையும் மானிடமே

#
Soundhariyan Jagan

பல‌‌ நாட்களாக உறக்கமில்லை, என் கனவே உன்னை அடைந்திட!!!!!!!!!!!

#
Kavi

குற்றம் செய்வதற்கு முன் குற்றவாளி ஆக்கி விடும் உலகம் இது விழித்துக் கொள் !!!!!!))

#
Kavi

கனவு காணும் உன் மனம்,,,,,,, அந்த கனவை அடையவும் வைக்கும்!!!!!!! நம்பிக்கையோடு இரு......

#
Kavi

ஐன்னலில் ஓரத்தில் வீசும் தென்றலுக்கு இணை வேறுண்டோ????

#
Kavi

இமைக்கும் நொடியில் நீ இமைக்கா நொடியில் நான் இப்படிக்கு கண்கள்️

#
shanas selvi

ஒருவன் நம்மை மதிக்கவில்லையென்று நினைப்பதைவிட மதிக்கிற அளவிற்கு அவன் இன்னும் வளரவில்லையென கடந்துசெல்

#
Ram siva

உதடுகளில் இருந்து வருகிற வார்த்தைகளுக்கு ஒருபோதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை ஏனென்றால் ? நான் உள்ளத்தை மட்டும் உள்ளபடி நேசிப்பவன்

#
Ram siva

மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள் பிறரின் நல்வாழ்விற்கு அதுவொரு வாய்ப்பாககூட இருக்கலாம்

#
Ram siva

தேவையில்லாத கேள்விக்கு தெளிவான விடை "மௌனம்". எந்த சூழ்நிலைக்கும் சிறந்த பதில் "புன்னகை".

#
கவிதையின் காதலன் ரவி

எதிர்ப்பார்ப்பை நிறுத்தி கொள் மகிழ்ச்சி தேடுவதை கண்டு கொள்வாய்.. அதிகம் பேசுவதை தவிர்த்துக் கொள் கூடும் மதிப்பை உணர்ந்து கொள்வாய்..

#
கவிதையின் காதலன் ரவி

தன்னையே மறந்து விளையாடும் குழந்தைகளை தன்னிலை மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன்....

#
_Dheerov_ _dheerov_

இரவு உணவிருந்தும் உண்ண மனம் இருந்தும் பசியோடு விழித்திருக்கும் இரவு... உடல் அசதியிலும் உறக்கம் கண்ணில் சூழ்ந்திருந்தும் உறங்காதிருக்கும் இரவு... பல சஞ்சலங்கள் எனை சூழ்ந்திடினும் மனோ தைரியத்தில் உயிர் வாழ துடிக்கும் இரவு.... உறக்கம் என்ற ஒன்றை மட்டும் இமை கண்டிராத இரவு...

#
GOWRI S

எது வலி "உயிர் பிரியும் போது பிரியமானவர் நினைவு மனம் வலிக்க உயிர் நோக பிறர் பேசும் வார்த்தை உடல் கூச மனம் மரத்து போக பிறர் பேசும் வார்த்தை செவிகளை அடையாது சிலைப்போல இருப்பது"

#
GOWRI S

மனம் அமைதியை தேடிக்கொண்டே இருக்கிறது ஒவ்வொரு நொடியும் பேசுவதை நிறுத்தாமல் என்ன பயன்?

#
selva.s

புத்தகம் ======= தகவல் பல தன்னுள் கொண்ட நிலைப் பேழையின் நிரந்தரக் கைதி... விடுதலை கொடு விடியல் உண்டு புரட்டி எடு புத்துயிர் பெறு...

#
BBB TAMIL VARIGAL

குடிகாரன் போதை இருக்கும் வரை நான் யாரையும் மதிப்பதில்லை போதை தெளிந்த உடன் யாரும் என்னை மதிப்பதில்லை. குடிகாரன் பேச்சி போதை தெளிந்த உடன் போச்சி.

#
Gayathri

மனிதனின் ஆசை நீ கோபப்பட்டால் குச்சிகாரியுடன் படுத்துடு நீ பாவப்பட்டால் பத்தினியுடன் படுத்திடு ஆனால் அன்று நினைத்ததை அன்றே முடித்திடு மனிதனின் வாழ்க்கை ஒரு முறை தான் இதை நீ நினைத்திடு.

#
Gayathri

மழை பொழியா மேகமது பிழையில்லை மணம் வீசா மலரது குறையில்லை சிறகில்லா காற்றது அற்பமில்லை இயற்கை பொழிவிழந்து செயற்கை நகைப்பை உமிழும் விகாரம் பூண்ட மனத்தின் முன்னே..

#
மகி

பிழைகள் உணராத வரை எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை எதிலும்

#
Tamil Kumaran

இந்த உலகில் எதிரியிடம் தோற்றவர்களை விட நிழல் போல் கூட இருந்து நட்பு என்ற பெயரில் பலவீனம் படுத்திய துரோகியிடம் தோற்றவர்களே அதிகம் உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே

#
Tamil Kumaran

பொறுத்திருங்கள் நீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல (அல்லது தீய) செயலுக்கும் அதற்கான பிரதிபலன் கிடைத்தே தீரும்

#
Tamil Kumaran

கோபம் என்பது முட்டாள்தனத்தில் தொடங்கி வருத்தப்படுவதில் முடிகிறது கோபப்படும் போதெல்லாம் நம் எதிரி வெற்றி பெறுகிறார்கள் நாம் தோல்வி கொள்கிறோம்

#
Tamil Kumaran

முத்தமிழ் *********** சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கின்றேன் சிகரமிக்க தமிழே எங்களது சரீரத்தின் சுவாசமல்லவா நீ! தரணி முழுவதும் தனித்துவம் பெற்ற தங்கத்தமிழ் அல்லவா நீ! உன்னைப்புரிந்தோருக்கு முப்பால் நறுமணம் வீசுகிற பைந்தமிழ் பூந்தோட்டத்திற்கும் அழைத்துச்செல்லுகிற செம்மொழியல்லவா நீ! இகழ்ந்தோரை போர்க்களத்திலும் சந்திக்கச்செய்யும் வீரமிக்க மொழியல்லவா நீ! அடங்காமை ஆரிருள் உயித்துவிடுமென்று அகிலத்திற்கே எடுத்துரைத்த அற்புத மொழியல்லவா நீ! மூன்றெழுத்து பொக்கிசமல்லவா நீ! உனது புகழை பாடுவதற்கே அவதரித்து வந்தனர் பலர் அவர்கள் காட்டி சென்ற பாதையில் நடப்பவர்கள் சிலர் தமிழே உனக்கு ஒன்று தெரியுமா ? நீ! உன்னை நேசித்ததை விட நாங்கள் நேசிப்பதே அதிகமென்று தமிழ் மண்ணிலே தன்னுயிர் போகவேண்டும் தமிழ் பேசியே தன்னுடல் எரிந்து சாம்பலாகவேண்டுமென்று எண்ணுவோர் பலர் இப்படியாக எங்களுக்குள் நீயிருக்க... எப்படி ? அன்னிய மொழியை அனுமதிப்போம் தமிழ் நாட்டுக்குள்ளே சொல்...தமிழே...சொல்.. உணவோடு உணர்வையும் ஊட்டி வளர்த்த தமிழே உனக்காக நாங்கள் உயிரையும் துச்சமென கருதுவோம் எங்கள் தமிழே... (தமிழ் ஆசிரியரை வாழ்க்கை துணைவியாக பெற்று எனது வாழ்க்கையும் மணக்கிறது தமிழே...) கடையநல்லூர் கா.ஆசைத்தம்பி.

#
Ram siva

#கைப்பேசி கற்பனை உலகத்திற்குள் கட்டை விரல் கரம் பிடித்து அழைத்துச் சென்ற கைப்பேசியே ஐப்பசியில் வந்த வருவாயால்தான் ஐக்கியமானாய் எனக்குள்ளே அமைதி காக்கவும் என்ற வார்த்தை நூலகத்திலும் மருத்துவ மனைகளிலும் மட்டுமே வளம் வந்தன ஆனால் இன்று நீ! இருக்குமிடமெல்லாம் மயான அமைதியாகத்தான் உள்ளதென்பதை அறிவாயா? கைப்பேசியே ஓத்துக்கொள்கிறேன் தொலைவிலிருக்கும் உறவுகளிடம் மறுகனமே உறவாட செய்ய உதவிபுரிந்தாய் என்பதை ஆனால் இன்று உனக்குள் மட்டுமே உரையாடிக்கொண்டிருக்கும் மனங்களாக மாற்றிவிட்டாயே சிலரை வீட்டுக்குள் நான்கு பேர் இருந்தாலும் மௌனம் காக்கிறதே உன்னால் அகில விசயமும் உன்னில் உண்டு அதில் ஆபாசமும் கொஞ்சமுண்டு எங்கே? எங்கள் பிள்ளைகள் திசைமாறி போய் விடுவார்களோ என்ற அச்சமும் உண்டு என்பதை அறிவாயா? கைப்பேசியே நீ! காலத்தால் புறந்தள்ள முடியாத உறவுதான் ஆனால் எங்கள் உறவுக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டதே அவரவர் தனியாக உன்னை தடவி உறவாடுவதால் எது எப்படியோ? உன்னால் இந்த சமூகத்திற்கு நல்லது மட்டுமே நடந்தால் சரி கைப்பேசியே, கடையநல்லூர் கா.ஆசைத்தம்பி.

#
Ram siva

முண்டாசு கவிஞனே... எட்டயபுரத்து தமிழ் வேந்தே உனது எழுத்து போதித்த வீரத்தின் மிச்சத்தை உனது முறுக்கு மீசையும் போதித்தது உலகத்தாய்க்கு முதல் குழந்தையான தமிழை வீரக்குழந்தையாக வியக்க வைத்ததல்லவா உனது தமிழ் வீர எழுத்துப்பால் புதுமைப்பெண் கண்ட புலவனே... குயில்பாட்டு எழுதிய குணக்குன்றே... நீ! எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் தமிழுக்கு நீங்கா புத்துணர்ச்சி பெற்றது உனது நேர் விழிப்பார்வையால் தமிழ் நெஞ்சை நிமிர்த்தியது பாரதியே உனக்கான அடையாளமென்பது முறுக்கு மீசையோ முண்டாசு கட்டிய தலையோ நிலவு போன்ற நெற்றி பொட்டோ அல்ல தமிழன் என்றவுடன் தனிப்பட்ட வீர உணர்வு வருமே அங்கேதான் பாரதி நீ! வாழ்கிறாய் என்றும் தமிழுக்கு வீரனாக... கடையநல்லூர் கா.ஆசைத்தம்பி.

#
Ram siva

தாயே நீ! கடைசி வரை சேயை காப்பாயென்றால் கட்டியணைத்து முத்தமிடு இல்லையென்றால்? கண் விழிக்குமுன்னே குப்பை தொட்டிலில் சேர்த்துவிடு தவறாக ஈன்றெடுத்தாள் தண்டனை என்னவோ இந்த சமூகத்தில் சிசுவுக்குத்தானே.. கடையநல்லூர் கா.ஆசைத்தம்பி.

#
Ram siva

மெட்ரோ தூண்கள்.. வெறும் தலைவர்கள் முகமாய் சினிமா போஸ்டர்களாய் மட்டுமே சுமந்த தூண்கள் .. இன்று அழகு முகங்களை, அழகான நொடிகளை, படமாய் சுமக்கிறது... மிகுந்த அழகாய் நம் கண்களை கவர....

#
Sugan

ஆயிஷா பீவிக்கும் அப்துல் காதருக்கும் பிறந்தால் நீ! முஸ்லீம் ஆரோக்கிய மேரிக்கும் ஆரோக்கிய சாமிக்கும் பிறந்தால் நீ! கிறித்துவன் ஆனந்தவள்ளிக்கும் அருணாச்சலத்திற்கும் பிறந்தால் நீ! இந்து எல்லாம் இருக்கட்டும் நான்கேட்கிறேன் ? யாருக்கும் யாருக்கும் பிறந்தால் நீ! மனிதன் ?

#
Ram siva

எனது மனமென்ற சமுத்திரத்தில் அன்பென்ற முத்துக்கள்தான் அதிகமாக இருக்கிறது மூழ்கி எடுப்போர் முனைந்திடுக ...

#
Ram siva

காலமே இழந்த உன்னை மீட்கவும் இல்லை இருந்தபோது உன் அருமை தெரியவில்லை துரத்தினாலும் கிடைக்கவில்லை துக்கத்திலும் நீ நிற்பதில்லை வேகமாக சுழலும் நீ எனக்கு வேதமாய் தெரிகிறாய் ஒரு காலம் வந்தால் காதல் கிடைக்கும்போலும் எந்த கடவுள் வந்தாலும் காலம் நீ கிடைக்கமாட்டாய்.. எனதருமை காலமே.... @உறங்கும் புத்தன்

#
உறங்கும் புத்தன் ????

#கருத்துள்ளவனுக்கு #கண்ணீரால்_இரங்கற்பா சிந்தனைப்பறவை சிறகடித்து பறந்தது எங்கே ? சின்னக்கலைவாணரே சிந்தனைகளை தவிக்கவிட்டு சென்றது எங்கே ? புதல்வனை தொலைத்ததிலிருந்தே புன்னகையை தொலைத்தவன் நீ! என்பதை நன்குறிவேன் அதற்காக நீயுமா எங்களை தவிக்கட்டுச்செல்வாய் சிந்தனை சிற்பியே... நடிகனை மட்டுமே தொலைத்திருந்தால் எண்ணிக்கையில் ஒருவனாக உன்னை எண்ணியிருப்போம் தொலைத்தது பகுத்தறிவுவை அல்லவா பதறாமல் இருப்பது எப்படி ? நீ! நட்டு வைத்த மரங்களுக்கு உரமாக உன்னை உருவாக்கிக்கொண்டாயோ உத்தமரே... நல்லவனுக்கு ஏது காலம் என்ற சொல்லை உனது மரணமும் நிரூபித்துவிட்டது உடன்பிறப்பே... மாரடைப்பிற்கு மாரடைப்பு நிகழப்போவது எப்போது ? இனி...உன்னை நாங்கள் காணப்போவது எப்போது ? விவேக் அண்ணா அய்யா கலாம் நலனையும் கேட்டதாகச்சொல்லுங்கள் நீங்கள் சென்றமிடமெல்லாம் உங்கள் பெயர் சிறக்கட்டும் பல ஆத்மாக்களும் உங்கள் சிந்தனை சொற்களால் சிரித்து மகிழட்டும்... வழியனுப்ப மனமில்லாமல் விழி பிதுங்கி நிற்கிறேன் சமுதாய அக்கறையுள்ளவனை தொலைத்ததனால் உனது ஆத்மா சாந்தியடையட்டும் நல்லவரே... கனத்த இதயத்துடன் கடையநல்லூர் கா.ஆசைத்தம்பி.

#
Ram siva

உலக கவிதை தினமான இன்று கவிபடைக்க முயல்கின்றேன் கவி தினம் சொல்கிறது உலகலாவிய தினத்திற்காக ஆகாய காகிதவேண்டுமென்று ஆசைப்படுகிறாயா ஆசைத்தம்பி உங்கள் முப்பாட்டன் வள்ளுவர் உலகத்தையே இரண்டு வரிக்குள் அடக்கியவரல்லவா நீ! அவரது பேரானாச்சே சொல்லவா வேண்டும் ஒரு வரிக்குள்ளும் சொல்லுவாய் பல வரிகளாலும் நச்சென்று வெல்லுவாய் வாரும் உலக கவி தினமான எனக்கு உம்மால் முடிந்த மகிழ்ச்சியை தாரும் உச்சி வெயிலில் தொடங்குகின்றீர் கரும்புச்சாரு அருந்திவிட்டு இனிப்பான சொற்களால் காகிதத்தை கற்பனைகொண்டு நிரப்பிடுக... எனது கவிப்பசிக்கு மதிய உணவு வழங்கிடுக.. முன்னுரை வழங்கிய கவி தினத்திற்கு நன்றிகள் பல இதோ நான் சிறம் தாழ்த்தியவாரு எனது பேனாவும் சிறம் தாழ்த்தி வாழ்த்துச் சொல்ல முன்வருகிறது கவி "க" என்றால் ? கண்டதுமே "வி" என்றால் ? விண்ணை கண்டதும் விண்ணைத்தொட வைக்கும் விந்தையே உன்னால்தானே நான் என்னால் எப்படி ? உன்னை மிஞ்சுவது அன்னையை மிஞ்சுகிற அன்பு சக்தி இவ்வுலகில் உண்டுயெனில் உலக கவி தினமே உன்னையும் மிஞ்சுகிற கவி இருந்தாலும் படைக்க மறுக்கத்தான் செய்யும் என் மனது குருவை பாராட்டி ஒரு வரி மேலோங்கினாலும் தவறு தவறுதானே உலக கவி தினமான உன்னிடம் ஆசிவழங்க மட்டுமே அனுப்பியுள்ளேன் சில வரிகளை என்றும் என் மனச்சிறைக்குள் ஆயுள்கைதியாக நீ! பரோலில் வர முற்பட்டால்லும் கூட மறுகணமே மண்ணுக்குள் சென்றுவிடுவேன் நீயில்லா என் வாழ்வு அர்த்தமற்றதனால் ஆகவே தொடர்ந்து ஆசீர்வழங்கு மேலும் வளர்கிறேன் வாழ்த்துகிறேன் உன்னைப்போன்று அனைவரையும்... இப்படிக்கு உன்னால் மட்டுமே நான் கவிஞனாய் கடையநல்லூர் கா.ஆசைத்தம்பி.

#
Ram siva

குறைகள் கூறி குறைத்துக்கொள்ள கூறுபவர்களை காண்பது மிகவும் எளிது, குறைகளாக கூறப்படுவது உண்மையில் குறைகளா என்று கூறுபவர்களை காண்பதே மிகவும் அரிது. - அன்பும் நானும்

#
அன்பும் நானும்

சிவனை வணங்கிவிட்டு சிவனேயென்று அமர்ந்துவிட்டால் சோறு கிடைக்காது உழைத்தால்தான் சோறு...

#
Ram siva

சபலக்காரர்களுக்கு தனது சரீரத்தால் உணவளித்த தாய் விலை மாது

#
Ram siva

ஆதவன் அளித்த ஆறா காயங்களை ஆற்ற வந்ததோ இந்த உலாவும் நிலா! -Sasikumar S

#
KaviKuil - COMPETITION

ஒரு மழைக்கால பின்னிரவில் தனியே நடந்து செல்கிறேன்!

#
Kumar Krishnan

வாழ்க்கை என்பது ஓவ்வொருவருக்கும் ஒரு வழியை ஏற்படுத்திவிட்டு கடந்துபோகிறது ஆனால் நாம்தான் வழியை மறந்துவிட்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டு கடைசியில் நாம் உணரும் தருணத்தில் வாழ்க்கை நம்மை விட்டு தொலைதூரம் சென்று விடுகிறது.

#
kamal raj

வெற்றியை கொண்டாட மட்டுமே முடியும்! தோல்வியில் மட்டும் தான் பலவற்றை கற்றுக் கொள்ள முடியும்!

#
Alfie jo

வரலாறு உன் பெயரை சொல்ல வேண்டுமானால் நீ பல முறை என்னை தேடி வர வேண்டும் இப்படிக்கு முயற்சி.

#
kumaran

சில நாள் பேசாமல் இருந்து பார், பலபேர் காணாமல் போய்விடுவார்கள்!

#
Alfie jo

தோற்று விடுவோம் என்ற தோல்வி பயந்தான் உன்னை ஜெயிக்க விடாமல் தடுக்கிறது.....!

#
கிருஷ்ணன்

ஒவ்வொரு இரவும் ஒரு விடியலின் ஆரம்பமே ஒவ்வொரு தோல்வியும் ஒரு வெற்றியின் ஆயத்தமே......!

#
கிருஷ்ணன்

தலையில் தீபமேற்றி தன்னுடலை வருத்தி ஒளி தருகிறான் மெழுகுவர்த்தி....

#
John K

வீசிய வலை கடலை அடைவதற்குள் விதியின் வலையில் சிக்கினான் மீனவன்...

#
anishya anu

தேச பிதா காந்தி... லட்டுக்கு தேவை பூந்தி... அமைதிக்கு பெயர் தான் சாந்தி...!!!

#
Alfie jo

செல்ஃபி எடுக்க தேவை செல்லு, பட்டாணி தின்ன தேவை பல்லு, பாக்கு தல்ல தேவை கல்லு, முடிஞ்சா நீ ஒரு கவிதை சொல்லு...

#
மல்லி

பெண்களின் அழகு பொன் நகையில் இல்லை, புன்னகையில் தான் உள்ளது.

#
மல்லி

கோபம் என்பது முட்டாள்தனத்தில் தொடங்கி வருத்தப்படுவதில் முடிகிறது கோபப்படும் போதெல்லாம் நம் எதிரி வெற்றி பெறுகிறார்கள் நாம் தோல்வி கொள்கிறோம்

#
Rolex

மாற்றம் ஒன்றே மாறாதது ஆனால் மாற்றமும் மாறுகிறது ஏமாற்றமாக

#
கவிஞர்.ராசு

யாரிடமும் பேச வேண்டாம் என மனநிலை உருவாக காரணம் அதிகமாக பேசியதன் விளைவாக தான் இருக்கும்

#
anishya anu
Logo

© Red Nucifera