The prepared script which is made for meditation, providing guidance in meditation, what to do or not to do in meditation os called Meditation Script. The guidance script for meditation, the blessings, gratitude captured by script is reflected through Meditation. In meditation journey script acts as helping in navigation through journey just as like GPS. New young promising script is as like new style incorporating modern youth generation pattern. For preparation in meditation, for a meditator or a meditation coach it is like pre recorded handbook or paper copy, it's content and every word and sentence is helping meditator in every moment through providing all rules, protocols and guidelines need to be maintained while meditating. It may be a paper sheet or a digital copy or digital file containing all database related to meditation and it's related. In a spiritual day when planning for morning meditation after sleeping or evening meditation or night meditation before going or bed the script may be helpful to make the day more beautiful than ever. The guidance book for a student of meditation, beginner of meditation who is not so familiar with it, helping to learn more and making a better understand and having a good meditation experience in meanwhile journey. The progress of meditation in journey will be tracked and traced by script, the meditative state which a meditator possess while meditating should be controlled by and according to as written and mentioned in meditation script. The output of meditation journey and the input is being provided by meditation instructor as of according meditation script. The meditation script is applicable for any kind of meditation such as Zen, Sleep Reprogramming, Lama Fera, Osho etc. Flow of words in script drives meditation journey, in driving of journey script is the driver. Meditation Script is the bridge between physical or materialistic world and spiritual or divine world.
Arka Samanta
கோவிலுக்கு சென்றேன் வெளியில் ஒருவன் தத்தை வைத்து கை எந்தினன் ஆ உள்ளெ ஒருவன் தத்தை நீதினன் பணம் போட்டேன் நேட்ரியில் விபூதி அடித்தன் வெளிய உள்ளவனுக்கு பணம் குடுத்தேன் கை எதுத்து கும்பித்தன் குழம்பி கொன்றே வீடு திரும்பினேன்
-comrade
Pops Xpopsy
பனையூரிலிருந்து காலண்டர் வந்திருக்கு அண்ணே
அப்படி என்னடா ஸ்பெஷல் ?
எந்த தலைவருக்கு பொறந்த நாளு, யாருக்கெல்லாம் அஞ்சலி செலுத்தி மாலை போடணும் ன்னு எல்லா தகவலும் இருக்கு அண்ணே
Karuppasamy
நேரத்திற்கு
தகுந்ததை போல
வேசத்தை
மாற்றும் மனிதன்..
ஆளுக்கு
தகுந்தார் போல
பாசத்தை
காட்டுகிறான்..
கவிதையின் காதலன் ரவி
எத்தனை அரசியல் தலைவர்கள் வந்தாலும் மது ஒழிப்பு என்னும் கோரிக்கயை அவர்கள் முன் வைப்பதில்லை காரணம் மது இல்லை என்றால் அரசியல் இல்லை
Mohamed Bilal
குடியரசு தினம்
இந்தியாவுக்கு மறுமலர்ச்சி மலர்ந்த.
மகத்தான. நாள்...
இளைஞர்களின் கனவுகளுக்கு மருந்திட்ட பொன் நாள்
அடிமை விலங்கு தகர்த்து எறியப்பட்ட
எழுச்சி நாள்
ஆங்கிலேயனை துடைத்து எறியப்பட்ட
குடியரசு நாள்
வேற்றுமையில் ஒற்றுமைகக்கு கிடைத்த முதல் களம்
கூட்டாச்சியின் கொள்கைக்கு கிடைத்த
முதல் தளம்
தியாகிகளின் கண்ணிர் துளிகளுக்கு வெற்றி கண்ட எழச்சி நாள்
தன்னம்பிக்கை
தளராத நெஞ்சத்திற்கு
முதல் தளம் அமைத்த
திருநாள்...
மக்களை மக்கள் ஆள
அமைந்த முடியரசு
மகான்கள் ஆசிர்வதிக்கப்பட்ட
இந்திய குடியரசு ...
வாழ்க இளைஞர்கள்
வளர்க இந்தியா புகழ்
ஜெய்ஹிந்த்...
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
..பாரதியார்...
எட்டையாபுர கவிஞன்
எல்லையில்லா
புகழுக்கு தமிழன்
விடுதலைக்கு விளக்கத்தை போதித்தான்
விடியலுக்கு வரவேற்பு
வாசித்தான்
செல்வம் சேர்க்காதவன்
செல்லம்மாவை நெஞ்சில் வைத்தவன்
பாமரரை யோசிக்க வைத்தான் பல பா கள்
மெட்டு அவிழ்த்தான்
கவிஞர்கள் கண் வியக்கும் கலைஞன்
காலத்தால் அழியாத இளைஞன்...
மலருட்டும் தமிழ்
விடியட்டும் தமிழகம்...
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
....வள்ளுவர் ...
வியப்பாக உள்ளது
விண்ணையும் கடந்த
புகழை பார்த்து...
பிரமிப்பாக உள்ளது
இரண்டு அடி
இரண்டாயிரம் ஆண்டு கடந்து வாழ்வது...
ஆச்சிரியமாக உள்ளது
ஆசிரியர்கள் இல்லாமல் ஆயிரமாயிரம் ஆசிரியர்களுக்கு ஆசானாக. உள்ளது...
அதிசியமாக உள்ளது
எந்த விருதும் வாங்காமல் விருந்து
படைத்து உள்ளது...
மலைப்பாக உள்ளது
முப்பால் எடுத்து
தமிழ் கொண்டு கலந்து
தமிழனை தலைநிமிர செய்த வள்ளுவனே நின்னை வணங்குகிறேன்
தன் தாள் பணிந்து...
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
, பெரியார் ஈ வே ரா
பகுத்தறிவு பகலவன்
பாதை காட்டிய தலைவன்
வென்தாடி வேந்தன்
வெள்ளையனை விரட்டிய வேங்கையன்.
சமூகத்தை சீர்படுத்திய சிற்பி
சரித்திரத்தை மாற்றிய நாயகன்
விருது பெறாத வித்தகன்..
விடியலை ஏற்படுத்தி
மூடநம்பிக்கையை
வேறு அறுத்தவர்
விருட்சம் தந்து ஞானத்தை புகுத்திய
ஐயா உன் புகழ் என்றென்றும் தொடர
தமிழனின் வாழ்த்து
ராமசாமி ..
Ramasamy Ramasamy
காந்தி காற்றில் கரைந்தார் காலம் உள்ளவரை பேசும் ..... காமராஜர் காற்றில் கரைந்தார்..... கல்வி உள்ளவரை பேசும் .... கம்பர் காற்றில் கரைந்தார் கவிதை உள்ளவரை பேசும் .... கண்ணதாசன் காற்றில் கரைந்தார் கலை உள்ளவரை பேசும் கலைஞர் காற்றில் கரைந்தார் தமிழ் தமிழன் உள்ளவரை பேசும் என்றும் உங்கள் நினைவோடு ..
நன்றி
Ramasamy Ramasamy
ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம் போன்றது எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விடும்!
Karuppasamy
அறிவாளிகளுக்கு
அறிவுதான் அதிகம்.
முட்டாளுக்குதான்
அனுபவம் அதிகம்..?
Karuppasamy
வாக்கின் வலிமை
வெகுநேரம் வரிசையில்
நினறு வாக்களிக்கிறோம்.
கள ஆய்வுடன்,
மனசாட்சியை முன்னிறுத்தி வாக்களிக்கிறோமா?
கால் கடுக்க மணிக் கணக்கில்
நின்று வாக்களிக்கிறோம்.
கள நிலவரம் அறிந்து,
தெளிந்த சிந்தனையோடு வாக்களிக்கிறோமா?
மக்களின் வாக்கு அது
உண்மையின் உரைகல்.
சிந்தித்து வாக்களியுங்கள்.
மகுட தாரிணி
ஒட்டுக்காக வீதியோரப்பிரச்சாரம்
தேர்தல் முடிந்தவுடன்
நமெல்லாம் தெருவோரம்
எத்தனையோ திட்டம்பலவந்தாலும் மக்கள் பாடு திண்டாட்டம்
எந்த கட்சி வந்தாலும்
ஏனிந்த விலையேற்றம்
தெருவோர மக்களுக்கு
உதயசூரியன் தான் விடியல்தருமோ!
இரட்டையிலையும் நிழல்தருமோ!
அழகான தாமரையும்
மக்கள் பசியாற்றிடுமோ!
என்பிறப்பு! எனது உரிமை!
வாக்களிப்போம்!
நம் கடமை
PREETHI KARTHIK
தகுதியுள்ளவன்
சிகரம் தொட
முயற்சியில் இருக்கிறான்..
தகுதியில்லாதவன் பணம்
கொடுத்து சிகரம் தொட நினைக்கிறான்..
பணம் உள்ளவன் தகுதியானவனை
காலணி போல் நடத்தறான்..
தகுதியில்லா இடத்தையும்
தனதாக்கி கொள்கிறான்
ஊரை ஏய்த்து பிழைக்கிறான்..
மனமற்றவனும்,
குணமற்றவனும்
பணம் உள்ளவனை மதிக்கிறான்..
குணமுள்ளவனும்
மனமுள்ளவனும்
செய்வதறியாமல் தவிக்கிறான்..
ஊழலில் ஊறியவனை
தகுதியாளன் என்றவனே நடுவீதியில் நிற்கிறான்..
கவிதையின் காதலன் ரவி
பசியால் வாடுகிற
குழந்தைக்கு
உணவில்லா தேசத்தில்
பாலபிஷேகத்திற்கு மட்டும் பஞ்சமில்லை
Ram siva
இந்தியாவின் பொண்னை எல்லாம் இறைவனுக்கு ஆலயம் கட்டிவிட்டு, ஏழ்மை என்னும் குழியில் இந்நாட்டைத் தள்ளி, இன்றைய இளைஞர்களை மறைமுகமாக நாடு கடத்திவிட்டு, நாளைய இந்தியா இன்றைய இளைஞர்கள் கையில் என்று கூறி கொண்டிருக்கும், நேற்றைய சமுதாயம் இருக்கும் வரை இந்தியாவின் நிலை இப்படிதான்.
லாரன்ஸ் ராஜ்
Lawrence Raj
கலைஞர் ஆட்சியில் பெண்ணுக்கு நீதி
Vedi S
அன்னமே
அக்கறை நீந்திவிடு
அடுத்த நொடியே வரக்கூடும்
அறிவு இழந்த கூட்டமொன்று
செல்வ இலக்கை குறிவைத்து
செழிப்பான இயற்கையை
எட்டு வழி சாலையாக மாற்றிட
எத்திசையும் வரலாம்
நீரோடையை
தாரோடாக்க ______________
அன்னமே
கொஞ்சம் நில்
இந்த இயற்கை அழகை
இறுதியாக ரசித்துவிட்டு போ...
பசுமை புரட்சி என்பது
இவர்களுக்கு வார்த்தைகளால் மட்டுமே.
கடையநல்லூர்
கா.ஆசைத்தம்பி.
Ram siva
#தளபதியே...
நீ! கலைஞரல்ல ?
என்பதை நாங்கள்
நன்குறிவோம்
ஆனால்!
அந்த கலைஞரே
எனக்கும் மேலாக நீயென்று
நம்பியதை ஒருநொடியும் மறவாதே,?
ஓய்வுக்கே...
ஓய்வுகொடுக்கும் அந்த
ஓய்வறியாச்சூரியன்
உன்னை நம்பித்தான்
ஓய்வாலயம் சென்றுள்ளது
உன்னை மேலும் பரிசோதிக்க...
பச்சோந்திகளும்
பரம விரோதிகளும் உன்னை
பரிசோதிக்க
தகுதியற்றவர்கள் என்பதை
நீ! ஒருபோதும் மறவாதே
புலிக்கு பிறந்தது
பூனையாகாது என்பதை
உனது உழைப்பின் மூலம்
உளமாற உணர்ந்தவன்
உடன்பிறப்புக்களை
அரவணைத்து
தமிழ் இனத்தையும்
தமிழ் மொழியையும்
காத்திடு...
உனக்கு துணையாக
உடன்பிறப்பின் உள்ளத்திலிருந்து
உற்று கவனித்துக்கொண்டிருப்பேன்
தந்தையாக அல்ல
நேற்றைய தலைவனாக...
ஆயிரமுறை யோசி
முடிவு ஒருமுறை உறுதியாக எடு....
எவனுக்கும் அஞ்சாதே
எமனையும் எதிர்த்து நின்ற என்னையும் மறவாதே
உனக்கு துணையாக
உடன்பிறப்புக்கள்
இருக்கிறார்கள் என்ற
நம்பிக்கையோடு
பயணப்படு...
உனது வெற்றியை எவனும்
தடுத்த நிறுத்த முடியாது
ஏனென்றால் ?
நீ! கலைஞர்
மகன் மட்டுமல்ல
கலைஞரையும் மிஞ்சும் தலைவன்
என்பதை நான் உளமாற உணர்ந்தவன்
நாளைய வெற்றி உனதே
மீண்டும் சந்திப்போம்
நற்செய்தியோடு
ஓய்வாலயத்தில்
வணக்கம்
மு.கருணாநிதி
என்றும் முத்தமிழ் அறிஞர்
நினைவுகளோடு
உறவாடும்...உடப்பிறப்பு
கடையநல்லூர்
கா.ஆசைத்தம்பி.
Ram siva
இருகரம் கூப்பி வணங்குகிற
#எம்பெருமானே...
அடிமைகளை
மீட்டெடுத்த
#அற்புத_கரமே...
அன்னைத்தமிழ்
சொல்லெடுத்து
#வில்_தொடுத்த_வீரனே...
ஏழைகளுக்கு
நல்வழி காட்டிய
#துணிவுக்கரமே...
ஐந்து பூதங்களையும்
எழுத்துக்களால் கோர்த்து
#மாலையிட்ட_மன்னவனே...
உனது விரல் பட்ட பேனாவை
பெரும்பாக்கியம் அடைய செய்தவரே...
உனது பேனா தலைகுனியும்
போதெல்லாம்
தமிழன் தலை நிமிர்ந்தானென்றே
வரலாறு சொல்கிறது
முடியாதென்று சொன்ன
மூடர்களின் பேச்சை புறந்தள்ளிவிட்டு
நீதிமன்ற அரியணையை பாமரனுக்கு பரிசளித்த #பாசக்கரமே...
உனது ஆள்காட்டி விரல்கள் தானே
எங்களின் வாழ்வாதாராமென்று
பின் தொடர்ந்தோம்
பிறகெதற்கு சுருக்கிக்கொண்டாய்
உனது #பொன்னான_கரத்தை
உனது விரலுக்கு மோதிரமிட்ட
அண்ணனிடம் நன்றி சொல்ல
இறுதி பயணம் மேற்கொண்டாயோ
தமிழர்களின் #வழிகாட்டியே...
உன்னை நாங்கள் #தொலைத்திருந்தால்தானே
வருந்துவதற்கு
உடன்பிறப்புகளின்
உள்ளத்தில் #விதைத்துள்ளதால்
உன்னால் பெருமைகொள்கிறோம்
#எம்பெருமானே...
உனது பக்தன் வரிசையில்
ஒரு பித்தனாக
கடையநல்லூர்
கா.ஆசைத்தம்பி.
Ram siva
இந்திய மக்களே...
ஜனநாயக தூண்களே...
புதிய வருடத்தின் துவக்கமட்டுமல்ல ?
இந்த நாள்
புதிய இந்தியாவின் விடியலுக்கான
தருணம் இது என்பதை
மறவாதீர்கள் ?
இந்துவாக பேச முற்பட்டால்
அடியேன் ஆலயத்திற்கு சென்றிருப்பேன்
இந்தியனாக பேச ஆசைப்பட்டதால்
உங்கள் இதயம் தேடி அலைகிறேன்
மதநலிணக்கத்தை சுமந்தவாரு...
கிறிஸ்துவ உறவுகளே..
இயேசுவிடம் முறையிடுங்கள்
எவனும் எங்கள் ஒற்றுமையை
குலைத்து விடமுடியாதென்று ?
இஸ்லாமிய உறவுகளே..
இறைவனிடம் துவா கேளுங்கள்
இந்திய தேசம் எங்களின் உரிமையென்று ?
இந்துக்களே அம்மனிடம்
ஆசீர் பெறுங்கள்
அனைத்து மக்களும்
உயிரைவிட உன்னதமான உறவுயென்று ?
பாசிச வேசங்கள்
கலைந்து நாட்டில் தேசிய ஒற்றுமை
பாச உணர்வு தொடரட்டும்
இல்லையெனில் ?
முடிவுகெட்ட
ராகுல் இந்தியாவை ஆளட்டும்...
வாழ்க இந்தியா
வளர்க மத ஒற்றுமை
மனித நேயத்தோடு
என்றும் மக்கள் நலனில்
கடையநல்லூர்
கா.ஆசைத்தம்பி .
Ram siva
அஞ்சுகத்தாயின் புதல்வனே
எங்கள் ஆதவனே
அறிவு பெட்டகமே
அரசியலின் அற்புதமே
அமுத சொல்லுக்கு உரியவனே
அகிலம் போற்றும் தலைவனே
அரவனைத்து செல்லும் அன்னை குணமே
அன்பினால் விலங்கிட்ட விந்தையே
ஆனந்த கண்ணீர் வடிக்கச்செய்த எங்களை
அய்யய்யோ இறுதி கண்ணீர்
வடிக்கவைத்துவிட்டாயே
பராசக்தி படைத்த
பரம்பொருளே...
எதைக்கொண்டு நாங்கள் ஈடுசெய்வோம்
திருக்குவளை நாயகனே
திருவாரூர் தேரே
நீயில்லா அரசியல் களம்
பாலைவனமாக காட்சியளிக்கிறது
ஓய்வுக்கே ஓய்வு கொடுத்த நீ!
ஓய்வாலயத்திற்குள் ஒழிந்து கொண்டாயே
முதுமைக்கு விடைகொடுத்து சென்றாயா
இல்லை?
முத்துபிள்ளையை (தளபதி)நம்பி
முந்திக்கொண்டாயா?
முரணாக பேசுபவர்களுக்கு
சொல்லால் முற்றுப்புள்ளி வைத்த நீயா?
தனக்கே முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டாய்
தங்கத்தலைவா
தரணியே ஆறுதல் சொன்னாலும்
உனது இழப்பு சாதாரணமா
முத்தமிழ் அறிஞரே..
உனது நினைவுகளை சுமந்தவாறு
உடன் பிறப்புக்கள்
பயணிக்கிறோம்
தளபதியோடு கரம் கோர்த்து
ஆசீர்வதி அரியணை
தளபதியால் மேலும் அலங்கரிக்கட்டும்
என்றும் உனது நினைவுகளோடு
கடையநல்லூர்
கா.ஆசைத்தம்பி.
Ram siva
#கருப்பு_சிவப்பு
தனிமைக்கொடியென்று
எண்ணிவிடாதீர்கள் ?
இது தமிழகத்தின் #தன்மானக்கொடி...
பகுத்தறிவின் #பாதுகாப்புக்கொடி...
திராவிடத்தின் #காவல்கொடி...
ஏழைகளின் #நம்பிக்கைக்கொடி...
மத்தியரசையும் #மிரட்டும்கொடி...
அண்ணாவின் #அன்புக்கொடி...
கலைஞரின் #அறிவுக்கொடி...
தளபதியின் #பொறுப்புக்கொடி...
தொண்டர்களின் #மூச்சுக்கொடி...
உலக தமிழர்களின் #சுயமரியாதைக்கொடி
உலகில் எவனுக்குமுண்டோ
இந்த #திராணிக்கொடி
தி.மு.௧ என்பது
அரசியல் கட்சி மட்டுமல்ல
#பகுத்தறிவின்_பல்கலைக்கழகமும் கூட
என்பதை நினைவில் கொள்க
சங்கிகளா...
என்றும் கழக உணர்வுடன்
கடையநல்லூர்
கா.ஆசைத்தம்பி.
Ram siva
#ஆசீர்வதியுங்கள்
#எங்களை_ஆண்டவரே
சாதனைகளை
சாதாரணமாக நிகழ்த்திய
சாணக்கியரே...
ஆதார மற்றவர்கள்
ஆயிரம் பேசினாலும்
அடுத்த இலக்கை நோக்கி
அன்றே...பயணிக்கிற எங்களின்
அற்புதமே...
வினாக்களுக்கே ?
வினா ? தொடுக்கும்
விந்தையானவனே...
விடியலுக்குமுன்
எங்களுக்கு சூரியனாக
காட்சி தந்தவனே...
#பெரியார் துணைகொண்டும்
#அண்ணாவின் அன்புகொண்டும்
எங்களை ஆண்ட
மன்னவனே...
சொல்லாற்றலால் எங்களை
சொக்கச்செய்தவனே...
எழுத்தாற்றலால்
எங்களை
எழுச்சிபெறச் செய்தவனே...
தெற்கே
#இமயமாக
இருந்துவிட்டு
இமை மூடி சென்றது ஏன் ?
எங்கள் இறைவா...
சந்தனப் பேழைக்குள்
சங்கமித்த எங்கள்
சகாப்தமே...
நீ! இல்லாத
முதல் சட்ட சபையை
உனது மகன்
#மு_௧_ஸ்டாலின்
அலங்கறிக்க போகிறா(ன்)ர்
#முதன்முதலாக
#முதல்வராக_தலைமையேற்று...
அதனால்
#ஆசீர்கொடு... தொடர்ந்து...
#ஆட்சிகொடு...
எங்களுக்கு நிகரில்லா தலைவா
என்றும் உனது நினைவுகளை
சுகமாக சுமந்தவாரு...
உனது பித்தன்
கடையநல்லூர்
கா.ஆசைத்தம்பி.
Ram siva
இந்த ஆட்சிநிலை தொடர்ந்தால்...
என் தேசமும் ஒருநாள்
விற்கப்படும்.
Ram siva
நான் ஒரு கோமாளி
சர்க்கஸ் கூடாரதுக்குள் இல்லை!
ரம்மி சீட்டு கட்டில்......