Logo
உங்கள் கவிதைகளை பகிர ஆப்பை பதிவிறக்குங்கள்!
Logo

பாசம் கவிதைகள்

காயப்படுத்தி விட்டு, ஒரு மன்னிப்பு கேட்பதில் முடிந்து விடுகிறது, பலரது அன்பு..!" காயப்படுத்தினாலும், வெறுக்க முடியாமல் தவிக்கிறது, சிலரது அன்பு...!! RK

#
Kalpana Subramaniam

யாரை நினைத்து ஏங்குகின்றதோ இந்த கடல் அலை பாவம் ஏங்கி ஏங்கி இறைந்து கொண்டே இருக்கிறது! பாஸ்கர்.

#
BASKAR BASKAR

அதிக கோபப்படுபவர்களிடம் நெருங்கி பழகி பாருங்கள் நேர்மையும் உண்மையும் அவர்களிடம் நிறைந்தே இருக்கும்...

#
Karuppasamy

யாரென்றே அறியாத ஒருவர் அழும் போது...... காரணமேயில்லாமல் நம் கண்களும் கசியுமாயின் அது தான் மனிதம்

#
Karuppasamy

மனைவி மாதிரி ஒரு துனை இல்லை மனைவிக்கு இணை எவருமில்லை. மனைவியின் அருமை இருக்கும் போது தெரியாது இருக்கும்போது உணருங்கள் பாசமும் பரிவும் கணிவும் கண்ணியமும் காதலோடு கொடுங்கள் என்றல்லவா சொல்கிறார்கள் நான் அதில் சற்றும் குறை வைக்கவில்லையே என் உயிரே.... பின் ஏன் என்னை பிரிந்தாய் எதற்காக வதைக்கிறாய்.. வாட்டம் அது போகத்தான் வழி ஒன்று சொல்லாயோ!! தூக்கம் மறந்த இரவுகள் தவிக்கும் தனிமை கொடுமை ஏன் இந்த தன்டனை. அன்பே! ஆருயிரே! ஆறரை வருடம் அகதியாய் சுற்றும் எனக்கு அன்பு செலுத்த அவனியிலே உன்னைப் போல் ஒருத்தியை காணமுடியவில்லையே கண்ணே! தினம் தினம் நினைக்கிறேன் நினைவாகவே இருக்கிறேன் நெஞ்சக் கூட்டில் நிறைந்த உன் இடம் நிலையாகவே இருக்கட்டும். ஒன்று சேரும் திருநாள் தனில் உளமாற உட்கார்ந்து கொள் என் இதய இளவரசியே!!! பாஸ்கர்.

#
BASKAR BASKAR

நீ சிந்தும் வார்த்தையினால் சொந்தமெல்லாம் சிதறும்.. மறைத்து வைத்த பாசமெல்லாம் வேஷமென்று உணரும்.. செயலிழந்த சிந்தனையும் தன் நிலையை மறக்கும்.. சிதறி போன வார்த்தையினால் சொந்தமெல்லாம் விலகும்.. சிதறிய உறவுகளும் மனமுடைந்து போகும்.. வார்த்தையில் வந்த கசப்பு வெறுப்பாய் மாறி போகும்.. உடன் சேர்ந்த உறவெல்லாம் தடம் மாறி போகும்.. ஒன்று சேரும் உறவுகள் குறைவாகி போகும்.. உடன் சேரும் பொழுதெல்லாம் மௌனமாகி போகும்..

#
கவிதையின் காதலன் ரவி

சில நேரங்களில் நாம் அழும் போது நம் கண்ணீர் துடைக்க யாரும் இல்லை என்றாலும் அந்த கண்ணீர் துளிகள் கூட துரோகி தான்..சாந்தமுடன் . syed

#
Basha Syed

ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் உன் அன்பிற்கு ஈடாக இங்கு ஒருவரும் இல்லை ..?

#
Karuppasamy

#ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும்... #உன் அன்பிற்கு ஈடாக இங்கு ஒருவரும் இல்லை ...?

#
Karuppasamy

_மனைவியிடம் அதிகாரம் காட்டினால்_ _ஒரு அடிமை கிடைக்கலாம்_ _ஆனால்_ _அன்பு காட்டினால்_ _இன்னொரு அம்மா கிடைக்கும்_ RK

#
Kalpana Subramaniam

இந்த பிறவி மட்டுமல்ல... இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எனக்கு நீ ஒருவனே தெய்வம் " முருகா " .

#
Karuppasamy

பணம் பொய்யான பாசத்தை நிஜமாக காட்டும்.. நிஜமான முகத்தை பொய்யாக காட்டும்.. பாசத்தை உண்மையாக்க பல வேசங்களை கூட்டும்.. தினம் அதை வைத்தே தன் வாழ்க்கையை ஓட்டும்..

#
கவிதையின் காதலன் ரவி

சில இடங்களில் கண்டு கொள்ளப் படாத அன்புதான் பல இடங்களில் கொண்டாடப் படுகிறது...

#
Karuppasamy

பாசத்தை அதிகமாக விரும்பினால்‍.. காயத்தை அதிகமாக விரும்பும்.. நிலை வரும்..!!* RK

#
Kalpana Subramaniam

எனக்கு மரத்துப் போச்சு உனக்கு மறந்து போச்சு அதுதான் மனசு

#
Karuppasamy

~அம்மாவை~ ~ எரித்த பின்பும்~ ~அவள் புடவை~ ~ ஆவியாகிக்~ ~கொண்டடிருக்கிறது~ ~இட்லி தட்டுகளில்~...√√√ நா.முத்துக்குமார்...

#
Karuppasamy

வேஷம் இல்லாத அன்புக்கு தான், வலியும்,வேதனையும் சற்று, அதிகமாகவே கிடைக்கும்...!! RK

#
Kalpana Subramaniam

தன் வலி மறந்து, என் வலிக்கு நோகிறாள்..!" எத்தனை வயதானாலும், குழந்தை போல பார்க்கிறாள்..!" உலகமே வெறுத்தாலும், உயிர் கொண்டு ரசிக்கிறாள்..!" அன்பை தவிர, வேறேதும் தெரியவில்லை அவளுக்கு...!! RK

#
Kalpana Subramaniam

சிரிக்கும் சிரிப்பில் அழகிருக்கும்.. அந்த சிரிப்புக்குள் ஆயிரம் வலியிருக்கும்.. மிரட்டும் விழியில் ஒளியிருக்கும்.. அது மின்னும் மின்னலை தோற்கடிக்கும்.. பேசும் வார்த்தையில் கனிவிருக்கும்.. அதில் தாய்மையின் அன்பு நிறைந்திருக்கும்.. பகிரும் பாசத்தில் பரிவிருக்கும்.. அது பெற்றவர் மனதை நிறைத்திருக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

பவுர்ணமி போல் தொடர்கிறது நம் நட்பின் பயணம் இருளை தாண்டி மரு வெளிச்சம் நம் நட்பு இவன் டைகர் மணி

#
Manikadan Tiger mani

உண்மையாய் என்னுடன் பழகிப்பார்.. உலகில் உள்ள அத்தனை அன்பும் என்னுளிருக்கும்.. உன்னையே சுற்றி வரும் எனக்கு பழகுவதற்கு யாருமில்லாமல் இல்லை.. உன்னை இழப்பதற்கு மனமில்லாமல் தான்..

#
கவிதையின் காதலன் ரவி

மனித காலடிகளைத் தொட 'அலை'கிறது, கடல்

#
Karuppasamy

பாசத்தைக் காட்டி காட்டி பைத்தியம் ஆனது தான் மிச்சம்

#
Karuppasamy

_உண்மையான_ _அன்பு வைக்கும் மனது_ _மற்றொருவரால் ஏமாறுமே தவிர_ _ஒருபோதும்_ _மற்றவர்களை ஏமாற்றாது_ RK

#
Kalpana Subramaniam

துயரால் சோர்ந்தாலும், பணத்தால் வாடினாலும், அவள் அன்பு ஒன்றே, என்னை உயிர்ப்புடன் வைக்கிறது...!! RK

#
Kalpana Subramaniam

அரும்புகளே உங்களது அன்புக் கரங்கள் பற்றி நடக்கையில் குறும்புகளே உங்களது வாழ்க்கைத் தடத்தை பின்பற்றுகையில் முத்துச் சரமே சிதறும் உங்களின் மழலை மாறாத சிரிப்பின் கோர்வையில் அன்புக் கதிர்களே உங்களின் நீண்ட நெடிய அழுகையின் வெதும்பலில் வீழ்ந்துக் கிடக்கும் என்னை நீவீர் அறிவீரோ? என் ஆழ் மனக் குமுறலில் என்றுமே நீங்கள் இருவரும் விடுபட்டதில்லை! நரை விழுந்தாலும் என்றுமே மழலை மாறாத மாணிக்கங்கள் தான் நீங்கள் இருவரும் எனக்கு!

#
மகுட தாரிணி

மலர்ந்த மலரோ என்னை கேட்டது . எங்கே அவள்? மௌனத்தை பதிலளித்தேன். நீயாவது சூடகூடாதா? என்றது. நானோ புன்னகைத்தேன். ஏன் என்னை வதைக்கிறாய்? என்றது. அனைத்தும் என்னோடு போகட்டும் என்று எண்ணி பறித்து கை கொண்டேன். என் மகள் இருந்திருந்தால் வனத்துக்குள் அல்லவா உன்னை அமர்த்திருப்பேன் என்றேன். இல்லாதவளுக்கு என்ன? நினைத்த நொடி கண்ணீரை தந்து கொண்டு, இருப்பவர்களுக்காக பெருகட்டும் அனைத்தும் என்றது.

#
கவிதா

பற்கள் இல்லாமல் புன்னகைத்தாலும் அழகாய் இருப்பது குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் மட்டுமே

#
Karuppasamy

பாசம்! அப்பா பிள்ளை மிது. பாசம் பிள்ளை அப்பா மிது வைப்பது ஆசை. கானவன் மணவி மிது வைபது நம்பிக்கை. மணவி கனவன் மிது வைப்பது.பேரசை. நண்பன் மிது நண்பன் வைப்பது பாசா பினைப்பு.

#
பாலமுருகன் க

பெண்ணின் நேசம் அவளின் மென்மையும் அன்பில் கட்டிய நிர்வாகத்தின் திறமையிலும் அறியலாம்...

#
Ilakkiya sri

ஊதுபத்தி ஒயிலாட்டமாய் ஒளிர் விட்டு உயிரோட்டமாய் புகை விடும் ஊதுபத்தியே... எல்லோரையும் விரல் வைத்து வியக்க செய்து சாஸ்திரம் சடங்குகளுக்கு உதவி சாதனை புரிந்த சகாப்தமே உன் புகழ் பரவட்டும் திக்கெட்டும்.. ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

கண்ணோடு கண் நோக்கி பேசி கொண்டல்லவா இருந்திருப்பேன்!  மாரோடு அணைத்து சுகத்தில் சொக்கித்து நின்றிருந்திருப்பேன்! நோகாமல் வருடியிருப்பேன்!   இரவில் கூட அழுகைக்காய் காத்திருந்து, பிஞ்சு வயிறு நிறைத்திருப்பேன்! உடல் எங்கும் முத்தமிட்டிருப்பேன்! நீ முதல் பதியும் முகம் நானாயிருப்பேன்! உன் புன்னகையில், பூரிப்பில் முழ்கி, கொண்டாடி திளைத்திருப்பேன்!! குளிக்க வைத்து ,துணி போட்டு, பொட்டு வைத்து ரசித்து கிடந்திருப்பேன் நடை பழக்கி இருப்பேன், உணவு ஊட்டி மகிழ்ந்திருப்பேன், தொட்டில் ஆட்டிருப்பேன், அத்தனைக்கும் இடையில், கொஞ்சியே சலித்துருப்பேன்...... அன்பு மகளே, இதுபோல் பல நூறு துணுக்குகளை ஆசையாய் எண்ணிருந்தேன்!  ஒன்றையும்  மறக்காமல் தந்து விடு என இறைவனை வேண்டிருந்தேன்! மீண்டும் ஒரு பேறு கேட்டு ,தாயாய் கனவிருந்தேன்... ஆனால் இன்றோ, தொலைத்த புதையலுக்காய், மீண்டும் ஒருமுறை தாயாக வேண்டி தவமிருக்கிறேன்.

#
கவிதா

ஒருத்தரை ஏன் பிடிக்கலைன்னு யோசித்தால்.. .. நிறைய காரணங்கள் இருக்கும்.. ஆனா .... ஒருத்தரை ஏன் இவ்ளோ பிடிக்குதுன்னு யோசிச்சா மட்டும்... காரணமே கிடைப்பதில்லை... அந்த காரணமில்லாத ஒன்று தான் #அன்பு... இனிய மாலை வணக்கம் #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை சந்திக்கிற" ஐந்து" நிமிடங்களுக்காக "இருபத்து நான்கு" மணி நேரமும் ஒத்திகையாய் போகிறது ....

#
Karuppasamy

அன்பு,இரத்தம் அருவியாய் பாய்வதால்.., துடிக்க தெரியும்.. நடிக்க தெரியாது..!" துடிக்கும் இதயத்தின், சுவர்களுக்குள்ளே ஊசலாடுவது, உன் உயிர் தானே...!! RK

#
Kalpana Subramaniam

என்இரவுகளின் வலி, விழித்திருந்த கண்களுக்கு தெரியும்..! பகலின் வலி, அவள் எப்போது இரவில் கனவில வருவாள்..? ஏங்கிக்கொண்டிருக்கும், இதயத்துக்கு புரியும்...!! RK

#
Kalpana Subramaniam

பச்சை நிற ரோஜாக்கள், பார்ப்பதற்கு அரிது என்ற போதும், பறிப்பதற்கு ஆசைதான்..! அது போல், பாசமுள்ள உனது வருகை, வாரத்தில் ஒரு நாள் என்றாலும், வாழ்நாள் முழுவதும் உன்னுடன், வாழவே ஆசைப்படுகிறது, என் இதயம்...!! RK

#
Kalpana Subramaniam

அன்பை தேடும் தருணங்களில், அரை நிமிட ஏமாற்றங்கள் கூட, ஆயுள் தண்டனைகளாக மாறி விடுகின்றது..! ஆயுள் தண்டனையில், சிக்கித் தவிக்கும் நான்.., உன் அன்பான இதயத்தில் மட்டுமே, ஆயுள் கைதியாக இருக்க ஆசைப் படுகிறேன்..! என்னை சிறை வைப்பாயா..? உன் இதய அறையில்..? வார்த்தைகள் தேவை இல்லை..! உன் வாழ்க்கையை, வரமாக தந்தால் போதும்..! நான் வாழ அல்ல, நாம் வாழ...!! RK

#
Kalpana Subramaniam

ஆயிரம் உறவுகள்.. நம்பிக்கையான சொற்களை சொன்னாலும்.., மனது ஏற்றுக்கொள்ளும் உறவு சொன்னால் மட்டும்தான்.., அந்த சொல்லுக்கு உயிர் இருக்கும்...!! RK

#
Kalpana Subramaniam

தலை முழுக்க அறிவோ.. கை நிறைய பணமோ.. வாய் நிறைய பேச்சோ, தேவை இல்லை..! இதயம் முழுக்க அன்பும்.. அன்பை கேட்கும் காதுகளும்.. அரவணைக்கும் கைகளும் தான், தேவையில் சிறந்தவை...!! RK

#
Kalpana Subramaniam

என் எதிர்பார்ப்பெல்லாம்.. தலை சாய்ந்து படுக்கும் போது.. அரவணைக்கும் தோளாய்.. கோதுகின்ற விரலாய்.. உன் நேசம்.. எனக்காய் இருக்க வேண்டும்...!! RK

#
Kalpana Subramaniam

நம்பிக்கை வைத்தால், காத்திரு.. அன்பு இருந்தால், காதல் செய்.. வலி தாங்கும் இதயம் இருந்தால், வாழ்ந்து காட்டு...!! RK

#
Kalpana Subramaniam

தேவைகளால் வருவது அன்பு அல்ல.. தேவைப்படுவதால், வரவழைக்கப்படுவது பாசம் அல்ல.. நிஜமான அன்பும்,பாசமும்.. நீ தேடுவதில் கிடைப்பது இல்லை.. அப்படி கிடைத்தால், அது நிஜமாய் நிலைப்பது இல்லை...!! RK

#
Kalpana Subramaniam

அன்பை.. உண்மையாக.. நீ.. எதிர்பார்த்து நின்றால்.. உனக்காக அன்பும்.. காத்துக் கொண்டிருக்கும்...!! RK

#
Kalpana Subramaniam

நேற்று வரை எதையோ தேடினேன்... இன்று என்னையே தேடுகிறேன் உனக்காக...

#
Karuppasamy

ஒரு கருணை.. பார்வை ஈர்க்கும்.. ஆயிரம்.. அன்புள்ளங்களை.. சொந்தமாக்கி...!! RK

#
Kalpana Subramaniam

என் அன்னையின் கண்ணில், நான் கற்றது அன்பு..!" என் தந்தையின் கண்ணில், நான் கற்றது வீரம்..!" என் கண்ணில், எனது பெற்றோர் கண்டது, மரியாதை...!! RK

#
Kalpana Subramaniam

தூங்கு வாகை மரமும் இசை என கேட்டு நினைத்து தூங்கியது என் தாயின் கருவறையில் என் தங்கை போட்ட சத்தத்தில்.......

#
காளையத் தமிழன்

ஏங்கிய என் மனதிற்கு மட்டுமே தெரியும் உன் அரவணைப்பு எவ்வளவு முக்கியம் என்று.. அன்பு தோழிக்கு

#
Karuppasamy

யார் என்னிடம் வந்தாலும் உன் இடத்திற்கு யாராலும் வர முடியாது #என்னவளே

#
Karuppasamy

பிடித்தவளுக்காக தவிக்கும் மனதை சமாதானப்படுத்துவது ஆண்களுக்கு மிகவும் சிரமமானது

#
Karuppasamy

அம்மன் அருள் சிரித்து சிரித்து வலிக்குதடி எனது நெஞ்சு சிலை வடித்து வடித்துத் தீரலயே இன்றுமிந்த அதீத வேட்கை; பறித்துப் பறித்துக் குவிக்குதடி எனது கைகளும்; குவித்துக் குவித்துக் கிடக்கு தடி மலர் குவியலு மிங்கு! சூட்டி சூட்டி அழகு பார்க்குதடி ஆசை நெஞ்சம் அதைப் பார்க்கப் பார்க்க உனக்கென்னடி வஞ்சம் உனது வடிவழகினை காணக் காணத் துடிக்குதடியென் நெஞ்சம்; அனு தினமும் துள்ளித் துள்ளி குதிக்குதடி மகிழ்ச்சிக்கு இல்லை யெனக்கொரு பஞ்சம்! கண்முன்னே வந்து வந்து நிற்பதுவுன் கருணைமுகம்; பாமாலை சூட்டிடவும் மெல்ல மெல்ல மலருமுன் அகவடிவழகினை காணக் கண் கோடியும் வேண்டும் வேண்டும் எனக் கேட்பது பக்தனின் நெஞ்சம் - அள்ளி அள்ளிக் கொடுக்கும் வள்ளல் தானுனது ஏகோபித்த நெஞ்சம்!

#
மகுட தாரிணி

சத்தமாய் சொல்ல முடியவில்லை, மனதுக்குள்ளையே சுற்றி சுற்றி வட்டமடித்து கொண்டிருக்கிறத இருக்கின்ற வலி ஏராளம்....

#
Karuppasamy

தெரிஞ்சவங்க கிட்ட கொடுத்த பணமும்.. தெரியாதவங்க கிட்ட கொடுத்த அன்பும்.. கண்டிப்பா வாழ்க்கைல மறக்கவே முடியாத அளவுக்கு ஒரு பாடம் கற்று கொடுக்கும்..

#
Karuppasamy

தெருவோர என் கஜா செல்லக்குட்டிக்கு    "நீ என்னை பிரிந்த நேரத்தைப் பார்த்தவுடன் நான் என்னை விட்டு பிரியும் நேரம் வந்துவிட்டது என்றே நினைத்தேன். எவர் உயிருக்காக நீ உன் மரணத்தை தாரை வார்த்துக் கொடுத்தாய் என்று எனக்குத் தெரியவில்லை. நான் உனக்காகவும் மற்றவர்களுக்காகவும் உயிரைக் கொடுக்க காத்துக் கொண்டிருக்க நீ என்னை விட்டு ஏன் சென்றாய் என கேட்கிறேன்? நீ போக போகிறாய் என எனக்குத் தெரிந்திருந்தால் என்னை உனக்காக பரிசாக அந்த எமனிடம் எடுத்துக் கொள்ள சொல்லியிருப்பேன்.    நான் இதுவரையிலும் இனிமேலும் பெரிய மனக்குறையுடன் வாழப் போகிறேன். நான் எவரிடம் பாசம் வைத்தாலும் அவர்கள் எதுவும் வேண்டாம் என பிரிந்து சென்று விடுகிறார்கள். என் மேல் பாசம் வைப்பவர்கள் உயிர் பிரிந்து விடுகிறது"

#
S Sankari

ஓர் இரவு போதாது உன்னுடன் உறவாட எந்தன் நிலவே தோற்றதடி உன் அழகை கண்டு

#
Karuppasamy

அழகுக்கு விலையில்லை உன் அழகுக்கு இணையும் இல்லை அன்பில் துடிக்கும் இதயத்திற்கும், அரவணைத்து கொள்ளும் கைகளுக்கும் உள்ள அழகு விழிகளை ஈர்த்திடும் அழகிடம் இல்லை.. நிறைவேறாததை நினைவில் நிலைப்பவரிடம் நிலை நிறுத்தியதும் நிறைவேறியதைப் போல் நிறைவு கொள்வதே அழகு.. இந்த உணர்வுக்கும், அழகுக்கும் ஏது விலை?

#
கவிதையின் காதலன் ரவி

அன்பெனும் மழை சாரலிலே மலரெனும் பஞ்சணையில் கூடு கட்டி ஆசை எனும் குஞ்சு பொரித்து நிலவெனும் கிண்ணத்தில் சோறூட்டி வண்ணச்சோலையின் வண்ணங்களை குஞ்சுகளின் சிறகில் நனைத்து அதை இயற்கை எனும் வான் வெளியில் பறக்க விட்டு வாழும் கலைகளை கற்றுக்கொடுத்து குஞ்சுகளை மகிழ்வெனும் கடலில் ஆழ்த்திய தன் தாய்ப்பறவைக்கு அன்பெனும் முத்தத்தை நல்கியது சேய்ப்பறவை.!!

#
Ilakkiya sri

சில்லென குளிர் காற்று நம்மை தழுவ மழை பொழிவின் மிகுதியில் நாம் துயில் கொள்ள மரக்கிளைகளில் கட்டிய கூட்டில் உறக்கமின்றி தவித்த பறவை குஞ்சுகளின் சத்தம் கண் விழிக்கும் போதெல்லாம் நம் இதயத்தை கணக்கச்செய்கிறது.

#
Ilakkiya sri

கதைக்க மாட்டாயா... கடகடவென ஓடும் அணிலே;  பழங்களைக் கவ்விக் கொண்டு  ஓடுகிறாயே; உனது குட்டி அணில்களுக்காகவோ! சற்றே என்னிடம் கதைக்க மாட்டாயா! வெளிர் சாம்பல் நிறத்தில் உள்ள மூன்று கோடுகள், அதனை உன் முதுகினில் பதித்ததும் யாரென்று சொல்வாயோ? அவரின் பெருமையினை எடுத்துச் சொல்வாயா? அதை நீ தான் மறைக்கலாகுமா! அகிலத்தில் உள்ள அனைவரின் மனதை  வென்ற பொல்லாத ராமனின் பொன் கைகளால் தீட்டியது என்று உரக்க உரைக்க மாட்டாயா! தட்டிக் கொடுத்து வேலை வாங்குவாயோ? அந்த ராமனைப் போலவே! அடர்த்தியும், மென்மையுமான  உன் வாலைச் சுழற்றி உணர்த்த மாட்டாயா! பழங்களை கடித்துண்ணும் அணிலே; அது என்ன, புது பூரிப்பு! பாசத்தின் பூரிப்போ! உன் விழியின் ஓரம்! விஸ்வாசத்தின் சமிக்கையா!

#
மகுட தாரிணி

     குது குது கும்மாங்குத்து கலகலங்குது கலகலங்குது வளையல் சிரிப்பு ! குலுகுலுங்குது குலுகுலுங்குது மயிலின் ஆட்டம் ! சிலிசிலிர்க்குது சிலிசிலிர்க்குது பனிமூட்ட காத்து ! தகதகக்குது தகதகக்குது கோடை வெயிலு ! கிடுகிடுங்குது கிடுகிடுங்குது இடியோடு மழையாம் ! சலசலக்குது சலசலக்குது வெள்ளருவி ஓட்டம் ! கொக்கரிக்குது கொக்கரிக்குது சேவலின் கூவல் ! பதைபதைக்குது பதைபதைக்குது பாம்பின் சீற்றம் ! வெடவெடக்குது வெடவெடக்குது புலியின் உறுமல் ! மணமணக்குது மணமணக்குது மல்லிகையின் வாசம் ! சிடுசிடுங்குது சிடுசிடுங்குது தொட்டாச்சிணுங்கி ! தித்திக்குது தித்திக்குது இனிப்பு பலகாரம் ! கமகமக்குது கமகமக்குது அம்மாவின் அறுசுவை ருசியா !!     

#
S Sankari

எங்கள் குழந்தை சிரிக்குது "எங்கள் குழந்தை சிரிக்குது !  எங்கள் குழந்தை சிரிக்குது !  வயிறு குலுங்க குலுங்க எங்கள் குழந்தை சிரிக்குது !  அம்மாவின் குரல் கேக்குது !  அப்பாவின் கைவிரலைச் சப்புது !  தாத்தாவின் மீசையை முறுக்குது !  பாட்டியின் கன்னத்தைக் கிள்ளுது !  சித்தியின் சிரிப்பைப் பார்க்குது !  சித்தப்பாவின் பணத்தைக் கசக்குது !  அத்தையின் சேலையை இழுக்குது !  மாமாவின் மடியில் ஈரமாக்குது !"

#
S Sankari

அத்தனைக்கு பிறகும் மனம் அவளை(னை) தான் நினைக்கிறது.....

#
Karuppasamy

ஐந்து வயதில் அண்ணன் தம்பி அறியாத வயதில்தான் ஒருவருக்கொருவர் வாழ்ந்தோம் நம்பி விளையாடும் வயதில்தான் நீயா நானா பார்ப்பது பொறுப்பேற்ற பிறகுதான்

#
Palani Muthu

பல ரணங்களை கொடுக்க ஒரு கணம் போதும்.. சில ரணங்களை மறக்க பல கணங்கள் வேண்டும்.. மனம் சிலதை ரசிக்க சில கணமே போதும்.. உன்னை மட்டும் ரசிக்க ஒரு யுகம் வேண்டும்..

#
கவிதையின் காதலன் ரவி

இரவுக்கும் இதழுக்கும் இனி என்ன வேலை..... நிலவையும் அவளையும் அனைத்திடும் வேலை...

#
Karuppasamy

மனதில் எப்போதும் உன் நினைப்பு.. நினைவில் நீ சிரிக்கும் புன்சிரிப்பு.. வட்ட முகம் காண படபடப்பு.. எப்போது என்ற துடிதுடிப்பு.. உறக்கத்தில் நீ வந்தால் குரு குருப்பு.. வெளியில் கண்டேன் ஒரு மறுப்பு.. உள்ளத்தில் என் முகம் மறுபிறப்பு.. நாடினால் உன் முகத்தில் பர பரப்பு.. தேடினால் நீ தான் தித்திப்பு.. திகட்டாமல் தினம் கொல்லும் உன் சிரிப்பு.. தித்திக்கும் தேனாக உன் நினைப்பு.. மனதில் இனம் அறியா துடிதுடிப்பு.. உனக்காக வாங்கி வந்தேன் மல்லி பூ.. எப்போது கிடைக்கும் உன் சந்திப்பு...

#
கவிதையின் காதலன் ரவி

ssssaassssaaaassssaassssaaaaaassssaassssaaaassssaassssaaaaaahrsssaaaaaassssaassssaaaassssaassssaaaaaahrtosaaaaaassssaassssaaaassssaassssaaaaaahrtohvaaaaassssaassssaaaassssaassssaaaaaahrtohvhjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassssaaaaaahrtohjaaassssaassssaaaassssaassss

#
N kumar kumar

உறவுகள் நமக்கு முன்னாடி பேசும் வார்த்தைகள் அனைத்தும் பாசம் நம் முதுகு பின்னாலே பேசும் வார்த்தைகள் எல்லாம் வேஷம் ...

#
suvi

தேவை என்றால் தேடி வரும் சொந்தம்.. தேவை முடிந்த பின் தேடாது.. சொல்லில் முறிந்த சொந்தம் சொல்லால் மீண்டும் இணையாது.. அன்பில் தொடங்கும் உறவு பூமியில் இனிமேல் காணாது.. எதிர்கால சொந்தத்திலும் உண்மை பாசம் இருக்காது.. உண்மையான பாசத்திலும் சொந்தம் உன்னை தேடாது..

#
கவிதையின் காதலன் ரவி

கண்டதும் மனதில் நின்றவள்.. என் மனதையும் கொள்ளை கொண்டவள்.. குறுஞ்சிரிப்பை குத்தகைக்கு எடுத்தவள்.. கலகலப்போடு சுற்றி வருபவள்.. செந்தேனுக்கு சொந்தமானவள்.. புள்ளிமானைப் போல துள்ளி குதிப்பவள்.. அன்புக்கு அடிமையாவள்.. கடினத்திலும் கலங்காதவள்.. எளிமைக்கு இனிமையானவள்.. எதையும் எளிதாக எடுத்து கொள்பவள்.. மலரிலும் மென்மையானவள்.. வேண்டாதோரும் வேண்டும் என்பவள்..

#
கவிதையின் காதலன் ரவி

விருப்பமான உணவையும் விரும்பி கேட்பதில்லை நான்.. விருப்பமானவர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தால் விருப்பமானதும் விருப்பமில்லாமல் போகும் என்பதால்.. விருப்பமானவர்களிடம் அதிகம் நெருக்கம் கொள்வதில்லை நான்.. பூமியிலிருந்து விலகும் நேரத்தில் விருப்பமானவர்கள் மனதில் விருப்பமில்லாமல் போக வேண்டும் என்பதால்.. மறைக்க வேண்டும் என்று எதையும் நினைப்பதில்லை நான்.. நடக்கும் என்பதை தடுக்க முடியாது என்பதால்.. எனக்கு தெரியக்கூடாது என்று நினைப்பவர்களிடம் எனக்குத் தெரியும் என்பதை காட்டிக் கொள்வதில்லை நான்.. எனக்கு தெரியும் என்று தெரிந்தாலே பிடித்தவர்கள் எல்லாம் பிடிக்காமல் போய் விடும் என்பதால்..

#
கவிதையின் காதலன் ரவி

நெஞ்சத்தில் அன்பிருந்தால் எண்ணங்கள் நிறைந்திருக்கும்.. உறவுக்குள் உண்மையிருந்தால் வண்ணங்கள் மிகுந்திருக்கும்.. உறவுகள் உடன் இருந்தும் தனிமையை நீ உணர்ந்தால் அன்பில் உண்மை குறைந்திருக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

உண்மையான அன்பிடம் போலி உறவும்.. போலியான அன்பிடம் உண்மை உறவும்.. தோற்றுக்கொண்டே இருக்கிறது.. பொய்யான அன்பை ஏற்றுக்கொண்ட மனம்.. உண்மையான அன்பை ஏற்றுக்கொள்ள யோசிக்கிறது..

#
கவிதையின் காதலன் ரவி

உன்னை விட்டு ஒதுங்கி போக நினைத்த என்னால்.. என் மனதை விட்டு உன்னை ஒதுக்க முடியவில்லை.. நீ தயக்காமல் தந்த முத்தம் எல்லாம்.. தயக்கத்துடன் என் கண் முன் வந்து போவதால்..

#
கவிதையின் காதலன் ரவி

இசை இசைக்க பிறந்த மதுசூதனரே... இசையில் முக்குளித்து இதய துடிப்பில் கலந்தவரே.. உனது இசை கேட்க இசைந்திருந்தும் இசை மீட்டும் உமது விரல் மீட்டாமல் சென்றதேனோ?.. வலி கொண்ட நெஞ்சமெல்லாம் நிலை தடுமாறினாலும் உன் இசைக் கேட்டு நெஞ்சமது நிலையாகுமே.. விரல் அசைவில் தோன்றும் இயல் இசை கேட்டு சோகமான மனமும் இயல்பாகுமே.. கூவும் குயிலும் உன் விரல் இசையில் மயங்கிடுமே தன் குரல் இசையை கூட்டிடுமே.. தோகை விரித்தாடும் மயில் கூட உன் இசைக்கேற்ப குத்தாட்டம் போட்டுடுமே.. தித்திக்கும் செந்தேனும் உன் இசைக்காக தித்திப்பை கூட்டிடுமே..

#
கவிதையின் காதலன் ரவி

விரல் அசைத்து இசையிசைத்து மனம் மயங்க செய்தவரே.. உமது நினைவு வந்தால் நான் தேடுவது.. தாளம் தவறாத என் இதயத்தைத்தான் ஸ்ருதிவுடன் துடிக்கும் உங்கள் அழகான நினைவுகளைதான்.. நினைவு கூர்ந்திட நிலையாய் எதுவும் இல்லை என்னிடம்.. நீங்கா உமது நினைவுகளை தவிர..

#
கவிதையின் காதலன் ரவி

வேணாம் என்று ஒதுக்கிய பின்னரும், வேண்டும் என்று பின் தொடர வைப்பது தான் இந்த பாசம்...

#
Siva Ranjani

மகள்கள் தவறு செய்தால் வெளுத்து வாங்கும் அம்மா, அப்பாக்கள்... இதே பேரன் பேத்திகள் செய்யும் போது மட்டும் சற்றும் முகம் கூட சுளிக்காமல் இருப்பது ஏன்...?

#
Siva Ranjani

உன் பிஞ்சு, விரல் பிடித்து நானும் உன் அப்பாவும் கொஞ்சுகையில்; ஆனந்தத்தில் உன் உடல், சிலிர்க்கிறது நீயோ உன், பெற்றோராகிய எங்களின்; தொடுதலை நன்கு உணர்ந்து, இருக்கிறாய் உன் மூக்கோடு மூக்கு; ரோசி விளையாடுகையில், என் மூச்சு காற்றே புது உயிர், பெற்றது போல் உள்ளது; உன் கண்ணக்குழியின் சிரிப்பில், நானும் அப்பாவும் அப்படியே, விழுந்து கிடக்கிறோம்; எங்கள் இருவரின், மறு உருவம் எப்படி???இருக்குமோ அதை மொத்தமாக; உன் உருவில் பார்க்கிறோம், உன்னை உச்சி முகர்ந்து முத்தம், இடுகையில் தாய்மைக்கே உண்டான பெருமையை; நான் அடைந்து விட்டேன், என்பதில் பெருமை கொள்கிறேன்..... -valro vv

#
KaviKuil - COMPETITION

உனை தூக்கி கொஞ்சுபவர்கள் எல்லாம், நீ காத்தாக இருப்பதாகவே கூறுகின்றனர். எனக்கு மட்டும் ஒவ்வொரு நாளும் நினைவுகளுடன்(நெஞ்சில்) நீ கனத்துக் கொண்டே செல்கின்றாய்! -- சங்கர் ராஜா

#
KaviKuil - COMPETITION

ஒவ்வொரு முறையும் ஊர் சென்று பணி திரும்பும் போதும் ஈரமான கால்சட்டையையே நினைவாக தருகிறாள் மகள். நனைந்த கால்சட்டை காய்ந்துவிடுகின்றது. ஆனால் அவள் நினைவுகள் ஒருபோதும் காய்வதில்லை! -- சங்கரலிங்கம் ராஜா

#
KaviKuil - COMPETITION

உனை தூக்கி கொஞ்சுபவர்கள் எல்லாம், நீ காத்தாக இருப்பதாகவே கூறுகின்றனர். எனக்கு மட்டும் ஒவ்வொரு நாளும் நினைவுகளுடன்(நெஞ்சில்) நீ கனத்துக் கொண்டே செல்கின்றாய்! -- சங்கர் ராஜா #மகளதிகாரம்

#
SANKARALINGAM RAJA

 மகளதிகாரம் ஒவ்வொரு முறையும் ஊர் சென்று பணி திரும்பும் போதும் ஈரமான கால்சட்டையையே நினைவாக தருகிறாள் மகள். நனைந்த கால்சட்டை காய்ந்துவிடுகின்றது. ஆனால் அவள் நினைவுகள் ஒருபோதும் காய்வதில்லை! -- சங்கரலிங்கம் ராஜா

#
SANKARALINGAM RAJA

அன்பு என்பது அடுத்தவரிடமிருந்து அள்ளிக்கொல்வதில்லை, அடுத்தவருக்கு அள்ளிக்கொடுப்பது. - அன்பும் நானும்

#
அன்பும் நானும்

தன்னிடம் பேச கூடா நேரம் இல்லாத இதயத்திற்கு பேச நினைக்கும் ஒரு இதயம் சொல்கின்ற வார்த்தை i miss you so much ???? பாசம் என்ற சொல் தான் நான் விழுந்தேன் ☺️

#
PS. Saran

உதிரம் கொண்டு பத்து மாதம் வடித்த சிலை குழந்தை

#
Ram Ram

யாரையும் நம்பி வாழாதே! தன்னோட தேவைக்காக மட்டுமே உன்னோடுஉறவு வைத்துக் கொள்ளும் உலகம்! தேவைகள் முடிந்ததும் கண்டிப்பாக தூக்கி எறியப்படுவாய்!

#
Alfie jo

பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க...

#
anishya anu

உண்மையான பாசம் இருந்தால்.. வார்த்தைகள் தேவையில்லை நினைவுகள் கூட பேசும்..!

#
Alfie jo
Logo

© Red Nucifera