Logo
உங்கள் கவிதைகளை பகிர ஆப்பை பதிவிறக்குங்கள்!
Logo

காதல் கவிதைகள்

முடிந்து போன காதல் தான் ஆனால் முற்றுப்புள்ளி வைத்திடவில்லை ஏனோ மனம்!

#
Vaishu Vaishnavi

தேடல் தான் வாழ்க்கை...... எதை எவ்ளோ குடுத்தாலும், யாருக்கும் இங்க போதாது....

#
Karuppasamy

வேறொருவரை நினைப்பதற்கு கூட இடம் இல்லாத அளவிற்க்கு இதயம் முழுதும் நிறைந்து இருக்கிறாள் அவள்..

#
Karuppasamy

தெரியிழை தேடும் மங்கலநாள் பூவிதழ் பூங்கொடியாள் மங்கலநாள், மனக்கண் முன் மலர்கிறது. மணமாலை தன்னைச் சூட்ட வருவானோ மணவாளன் கனவில் தோன்றுகிறான்! கைத்தலம் பற்றிக் கனவு கண்டாள் தடிந்தெழிலி வான் தழுவி மழை பொழிய தான் கண்டாள் சேயிழையாள் சேர்ந்திடும் நாளைக் கண்டாள். கண்பாடு சிறிதும் இல்லை மோக வலையில் வீழ்ந்தாள் தாபமெனும் தீயை அணைக்க தூபம் ஏற்றாள் தோழி. இன்ப வலைக்குள் ஆட்படும் இளமங்கையின் இனிமை நாட்கள், வாழ்க்கை நதியின் ஓர் அருவியாக மங்கையரின் மறக்க முடியாத காலம். மணவிழா மண்டபத்தில் மரகத விளக்குகள் ஒளிர, அவள் கண்களில் பிரதிபலித்தது மணமகனின் மௌன வாக்குறுதி! கோ.தியாகு 04/10/25

#
Thiagarajan G

கொடுக்கும் பொருளை விட... கொடுப்பவரின் அன்பே பெரிது ️️

#
Karuppasamy

அந்த பைத்தியக்காரிக்கிட்ட போயி சொல்லுங்க சார்.. அவள ராணி மாதிரி பார்த்துக்க இங்க ஒருத்தன் இருக்கான்னு..

#
Karuppasamy

இங்கே இங்கேயே என் அருகிலேயே தான் இருந்திருக்கிறாய் கண்டுகொள்ள இத்தனை வருடங்கள் ஆகியுள்ளது !

#
Karuppasamy

மொத்த உலகமும் அழகாய் தோனுது சட்டென உன் நினைவுகள் தீண்ட...

#
Karuppasamy

இன்னொருத்தன் வந்துவிடுவானோ என்று பயந்தேன்..️‍ ஆனால் அவள் கதையில் நானே இன்னொருத்தன் தான் என்பதை மறந்து..!!

#
Karuppasamy

வாழ்வது ஒரு நொடி என்றாலும் அது உன்னோடு வாழ்ந்தால் போதும்..!!

#
Karuppasamy

kadhal meiyamanethe kadhal valum ullam meiyamanethe kadhal ullam pavithramanethe kadhal kannil arumbichi pungavanithil mudiyum (pungothai) mudiyum kaiyivilligal.....pavithra mane manathil puchkom puu ...rojapuu mathem ilem..... pala puu....puckom....yenithil mannenithil valum yennisai... kadhal pungavanum.... arupu sella nimidam yernthi vidum anna puckal....manethil oru isai....manne isai ore tha mandram....adikum....pala osai.... pala inikum pungothai....puckom ore rendu puu ilei..... anna pala ayirum puu..... naa nessichen....athe kuntholil kannam...cheek n eyes naa nessichen athlil....irukum...manne boethai...boethai ile buthillelil..>..head.... kannam.... alage marthum.. ...arupu....yerntha....edithil unom puckhathe... kadhal yerntha kannum....valli>pain marthum ile....kadhal chandiran sun n moon ode pole olli kadhal chandiran...... kadhal uddal uyire.....polekum polekum....uyire valethe.... muchil nafas....aruupu ille...ayull...varri... kaiyil varri.....ayyull varri....thudikum manne nelil valum pala nutrande jeiythi vidum` valle kadhal varri....nangke four kunjom aruppu irunthal kude.....kadhal naii velaku.....adinthe vidum..... nai numberu nangke.... valle pain oru kadhal bodhai valekum isai.....ore kadhal nucham.... valekum isai.....manethil valle thudikum manne nillai thudikum thudikum....yen misai moustache....un pennin....urovathekki>face urovathekki irukum mannem....alage arupu pudichithe kadhal valle vichicte....nan na na neeye.... purive vicha nan kadhalikiren unneniya...ore...kadhal vilayathe.....tuyamane kadhal kadhal vidaii>quiz urithi..... marthum manne nillai kulokum ALXDR CHANDRASEKARAN :thudikum thudikum....yen misai moustache....un pennin....urovathekki>face urovathekki irukum mannem....alage arupu pudichithe urovam oru kavithai

#
Alexander

உன் அழைப்புக்கு காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு அழகான தருணங்கள் தான் காலங்கள் காத்திருப்பதில்லை ஆனால் உன்னை நேசிக்கும் உண்மையான இதயம் உனக்காக நிச்சயம் காத்திருக்கும்

#
Karuppasamy

எத்தனை கொலை முயற்சி உன் ஒற்றைபார்வையில்..

#
Karuppasamy

புன்னகை பொய் பூசிக்கொள்ளும் போதேல்லாம்.. பொய்யும் புன்னகை பூசிக்கொள்ளும்.. காதல் மட்டுமே உண்மையை பேசிக்கொள்ளும்.. -ரவி..

#
கவிதையின் காதலன்

கண்களால் கட்டியென்னை இழுத்து கொள்கிறாய்.. என் நிழலுக்கும் அழகூட்டி அணைத்து கொள்கிறாய்.. வண்ணம் நிறைந்த தூரிகையால் வடிவம் கொள்கிறாய்.. குழைந்து முகிழும் வண்ண காதலை ஏற்றுக்கொள்கிறாய்.. பிரிந்த உறவை மீட்டெடுக்க போர் தொடுக்கிறாய்.. எனை அழைத்து கவிதை சொல்ல காத்திருக்கிறாய்.. நிகழ்ந்து முடிந்த நினைவுகளை நெஞ்சில் சுமக்கிறாய்.. சினம் கொண்டும் சிரிப்புடனே பவனி வருகிறாய்.. வடிவம் தந்த கவிதைக்குள் வாழ நினைக்கிறாய்.. ஆசையெல்லாம் மனதிற்குள் பூட்டி வைக்கிறாய்.. சிகரம் தொடுவேன் நானெற்று காத்து நிற்கிறாய்.. -ரவி..

#
கவிதையின் காதலன்

காதல் ராகம் மலரினும் மென்மை உணர்வுகள் மனதினில் நுழையும் நேரம் கண்வழி மொழிபெய்யும் புன்னகை கவரும் கன்னிகை காதலே! காலை குயில்கள் கீதம் பாடி காதில் இசைக்கும் இன்ப ராகம் சிறு சில்வண்டுகள் பறந்து வந்து இசைக்கும் காதல் சங்கீதம். வானம்பாடி ஜோடி கூடி கானம் பாடித் திரிந்திடுமே காகம் கூவித் துள்ளும் வேளையில் காதல் ஜோடி அழைத்திடுமே. புறாக்கள் ஜோடி ஆடி மகிழ்ந்து அன்பில் திளைத்து விளையாடும் தேனை ருசிக்கும் பூவண்டுகள் காதல் கீதம் பாடித் திரியும். உயிர்கள் உல்லாசம் துளிர்த்திடுமே இனவிருத்தி மலர்ந்திடுமே நீரில்லா பாலைவனத்திலும் பூஞ்சோலை ஓங்கி நிறைந்திடுமே. பசுமைத் தழைக்கும் பூமி தாயே பாடும் புது கவிதை ஓசை மனமெல்லாம் மலர்க்கச் செய்யுமே மாயக் காதல் மொழியாய் நீயே! கோ.தியாகு 25/09/25

#
Thiagarajan G

கொஞ்சும் எழில் கண்டு கண் சிமிட்ட மறக்கிறேன்.. வானத்து மின் விளக்காய் விழி மூட மறுக்கிறேன்.. நீலவான மேகமாய் மனம் கலைந்து போகிறேன்.. தித்திக்கும் நினைவோடு தினம் மகிழ்ந்து கொள்கிறேன்.. -ரவி..

#
கவிதையின் காதலன்

காந்தமே வேக்கப்படும் அளவில் அழகில் உன் கண் பார்வை இருக்கிறது

#
Arun Kumar

உன் கண் பார்க்கும் திசை எங்கும் காந்தம் இருகிறதோ இல்லை உன் கண் விழியில் தான் காந்தம் இருகிறது

#
Arun Kumar

un marbill.....un kaii mude.... nan konje,un kai....yen marban vill vicke.... nan yun marbil mude nan yun kathorum..pesa...kicu kicu pesa.... nan valevin....yun marbil yen marban.....tatiyithe....irpikul.....rendu.desam valthunthu... muchi desa avviye kundenthe.....uyir bimban.....uyir othamtil.....ratham irpikule renda vulagem senthethe mell pagcka side kall kall mell urase usera.....uyir nodi kulirle...nan....aval....pathathil....voranginen.... kadhal usure.... mell anathe....usure vosuranethe.....mella......urangitil......pathathil mudham...mo urankamo.....artham......parthithil kaiyil sarpikiren yen kathale.....yen kathal.....desam desam......alinchi tireyaa.....kadhal desam... apadiya villain irunthal...karkum kakka protect valiyil un sugatil marthum ilei valeliyum nan vallviven sanda pode hero ile......karkum kakka.gagak....poll kathudiven yennal.....san pode teriyatehnal.... .kadhal oru mane..... misai manne illei......kadhal oru mane ALXDR CHANDRASEKARAN signature kakkum kakka gagak.....pol....kathudiven

#
Alexander

ஆற்றங்கரை ஓரத்திலே அரும்பிய காதல் பூஞ்சோலையிலே பூத்ததே மாஞ்சோலைக் கிளிகளாய் ஜோடி ஆனதே! கோ.தியாகு 23/09/25

#
Thiagarajan G

கரும்பு கடிக்கும் போது உதட்டில் காயமாகி விட்டது என்றாய் எல்லோரையும் எறும்பு தானே கடிக்கும் உன்னைக் கரும்பே கடிக்கிறதா

#
Karuppasamy

காதல்! ********* * என் மனதில் கரைப் புரண்டு ஓடுகிறது காதல் வெள்ளம்! உன் சம்மதத்தால் தொட்டு அணைக்கட்டு வரலாறு சொல்லும் என் காதல் வெள்ளும்!

#
InbaKani M

உனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து கொள்.. என்னை நீ மறந்துகொள்.. இவ்வளவு தான் வாழ்க்கை..?

#
Karuppasamy

நேசித்தேன் என்பது தான் உனக்கு தெரியும் இன்னமும் நேசித்து கொண்டு தான் இருக்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் #என்னவளே

#
Karuppasamy

பிடித்து வைத்த நினைவோடு தனித்திருப்பேன்.. செந்தமிழில் சொல்லெடுத்து ரசித்திருப்பேன்.. வார்த்தைகளை தினம் தேடி பூத்திருப்பேன் புது சொல்லில் தினம் அழைக்க காத்திருப்பேன்.. அழகெல்லாம் செந்தமிழில் நகலெடுப்பேன்.. விழி மூடும் நேரத்திலும் மதி மகிழ்வேன்.. தித்திக்கும் தமிழ் அழகில் எனை இழப்பேன்.. தினம் உந்தன் நினைவுகளை விவரிப்பேன் விழி பேசும் மொழியையும் எடுத்துரைப்பேன்.. சுற்றும் பூமி சுழலும் வரை மகிழ்ந்திருப்பேன்.. சிறப்பாக என் தமிழை சிறப்பிப்பேன்.. -ரவி..

#
கவிதையின் காதலன்

நான் படித்த முதல் கவிதை #உன்_பெயர்..! நான் பார்த்த முதல் கவிதை #நீ..! நான் நேசித்த முதல் கவிதை #உன்_அன்பு..! நான் சுவாசித்த முதல் கவிதை #உன்_நினைவு..! நெஞ்சம் விட்டு நீங்கா ஒரே கவிதை #உன்_உறவு..!!!️

#
Karuppasamy

உன்னை நேசித்தேன் என்பது தான் உனக்குத் தெரியும்... இன்னும் நேசித்துக் கொண்டு தான் இருக்கிறேன்... என்பது எனக்கு மட்டுமே தெரியும்...

#
Karuppasamy

யார் வாழ்வில் வந்தாலும் போனாலும் அவளின் அவனாக.. வாழ்வதே எனக்கு தெரிந்த காதல்..

#
Karuppasamy

yun vigligal yen mela pade morthe... nan parenthin fly kathadi poll kathadi pol.....yelunthin.....varenthin......draw.... .nadethin walk un villiyil parenthin valthen kondedinen parake nilla.... vinkal meteor poll paranthu povum nan parakke nilla......apadiyum kathal seiven kadhal pucka.....pukkal.....maremakkge......pucka vinnapam......yenna apadi.....kadhal mulimiya......pudhu vidham......bummi le adevom oru marumage kadhi vidum unarchi villeyal yen thodhaltill yum kadhal valemei aduyum notkal......valeyin notkal martumei kadhal valemei adenthi jeyam jethidaa.....jaya.....jaya ...jeya unarchigele......unarchi thee parakem pacha panjabontam.....anugelam..... 5 pacha panjabontam vodivi help theevai....adimei.. kolvai..if the love is not true....like vijay.....jaya nayagen..paranthe selvai if uddal bummi thaii ke pogathe....um.......oh oh sanam

#
Alexander

yun vigligal yen mela pade morthe... nan parenthin fly kathadi poll kathadi pol.....yelunthin.....varenthin......draw.... .nadethin walk un villiyil parenthin valthen kondedinen parake nilla.... vinkal meteor poll paranthu povum nan parakke nilla......apadiyum kathal seiven kadhal pucka.....pukkal.....maremakkge......pucka vinnapam......yenna apadi.....kadhal mulimiya......pudhu vidham......bummi le adevom oru marumage kadhi vidum unarchi villeyal yen thodhaltill yum kadhal valemei aduyum notkal......valeyin notkal martumei kadhal valemei adenthi jeyam jethidaa.....jaya.....jaya ...jeya unarchigele......unarchi thee parakem pacha budhantal.....anugelam..... 5 pacha budhavanthal vodivi theevai....adimei.. kolvai..if the love is not true....like vijay.....jaya nayagen..paranthe selvai if uddal bummi thaii ke pogathe....um.......oh oh sanam

#
Alexander

ஓய்திடும் போதெல்லாம் ஓயாமல் தெம்பூட்டும்.. தினந்தோரும் உன் நினைவு போட்டி போட்டு எனைத் துரத்தும்.. சிறகடிக்கும் என் மனமும் குதுகுலத்தில் ஆழ்ந்திருக்கும்.. செவி உணரும் போதெல்லாம் குயில் பாட்டை கேட்டிருக்கும்.. விழி தேடும் போதெல்லாம் உன் முகமே நிறைந்திருக்கும்.. உன் அழகை காண்பதற்கே என் இதயம் துடித்திருக்கும்.. -ரவி..

#
கவிதையின் காதலன்

செந்தாமரை வண்ண சேலையிலே சிற்பமொன்று நிற்க கண்டேன்.. விண்மீனின் விழி கண்டு தேவதையோ நீ என்றேன்.. வடிவான வதனத்தில் பௌர்ணமியின் ஒளிக்கண்டேன் இதழில் தவழும் சிரிப்பினிலே செந்தேனும் சிதறக்கண்டேன்.. நின்றிருக்கும் உன் தோரணை கண்டு சிகரம் தொடுவாய் நீ என்றேன்.. -ரவி..

#
கவிதையின் காதலன்

வானம்பாடி சேர்ந்து பாடும் கானக் குயில் கூவி அழைக்கும் உள்ளத்தை எப்படிச் சொல்ல உள்ளதை உள்ள படியே உணர்வை எப்படி உணர்த்த கொள்ளும் மனம் வேண்டுமே! கோ.தியாகு 19/09/25

#
Thiagarajan G

காட்டின் காதல் மழை அழைக்கும் மழையின் காதல் முல்லை நோக்கும் முல்லையின் காதல் மருதம் தேடும் எல்லாம் ஒரு வழிக் காதலே!? கோ.தியாகு 18/09/25

#
Thiagarajan G

தினம் மலரும் மலர் கொடியில் இடமாறும் நிலவு தான் நீயெனக்கு.. அது வளர்ந்தாலும், விழுந்தாலும் , மீண்டும் தோன்றுவது போலவே உன் நினைவெனக்கு..

#
கவிதையின் காதலன்

கண்களுக்கு புலப்படும் கறுப்புச் சூரியன் அவள் கருவிழிகள்..

#
Karuppasamy

ஆயிரம் இரவுகள் காத்துக் களைத்து போனது என் இதழ்கள் உன் இதழ் முத்தம் இல்லாமல்..

#
Karuppasamy

அவளையே பின் தொடரும் என் உள்ளத்தை தவிர அத்தனையும் கவனிக்கிறாள்.

#
கவிதா

வானத்தில் வசந்தம் மழை மேகங்கள் கூடி, இழை மின்னல் பாய, கனத்த இடி முழங்க, காதலனைத் தழுவினேன்! வசந்தம் மலர்ந்திட, குளிர் காற்று வீச, அனலோன் தணிந்திட, மனம் மகிழ்ந்திடும் வானமே! பருவமங்கை போல் காதல் மழை பொழிகிறது; இணையும் மேகம் போல் இரு இதயம் துடிக்கிறது. மின்னல் புன்னகையாள், மெல்லிசை மொழியாள், அன்னநடை மங்கை இன்ப வசந்தம் அழைக்கிறாள். வானவில் பாலம் போல கனவுகள் இணைகிறது, நட்சத்திரத் தாலாட்டில் நம் காதல் துயில்கிறது. கோ.தியாகு 12/09/25

#
Thiagarajan G

alagiya thurral malai rain thuralil thura thura adakam mallai mountain yen pessa mathingelai yenna pesum malai katre...... visiyiem katre.....wisel...ode malai thuram....kankachi.....thura thuralil padum sing thalathe manikuyil padum ''thin na kah thin''....padum....mani...thurral alagiye katre yen pessu kuchama.... pesum visiriyel...''thin na ka thin''...alaiosai malai alakum.... megam.....anikum bummi anikum malai.....man soil validum ''thum baka thum'' valedum malai thuralil.....katre visiyiem allai lum..... adem mann......pottu pol.....odeirukum stick verra...akar. .nan kalaynam panne ...bummi.....odumbu....ann pen udaiyille petthi eduthen yen pillai...... kathu alagiya kathu hutan veree akar yelitum....yirpu.....ethe.....athe.... .kudikum thani.... .yelitum kavitai yelai daun mell yelitum varthai.....marram.....thukaiyil....alagiya kavi....pesum marrem ageh kudika kudika vera bummi ve anikum......yelaigel bummi.....ye ore kurai bumbung ki mudum.....ore kudai payung poll.....thantathum...pillai atho mann pottu marrem,ma,verra ilei man.....? vichichite athe marrem batang pokok adum valerem.....valeyil viliyil pukom iirpam..... marrem thanneve thai mann....ileki vichi....pottu editi vichi......te anna alegella pottu vicha vittam..... pottu bummi ka marrem me ka.... munom valadem thai (amma )valeteh thai manneki ALXDR CHANDRASEKARAN signature:nan kalaynam panne ...bummi.....odumbu....ann pen udaiyille petthi eduthen yen pillai...... kathu alagiya kathu hutan mann ann martumei......thai man.....sivan sivanthe puu

#
Alexander

கடற்கரை காற்று காதலின் ஊற்று ஆன்றோர் ஆலமரம் காதலின் தேசம் சன்னல் வழிப்பார்வை சொடுக்கி இழுக்கும் மின்னல் இடை மின்னும் என்மனம் கோ.தியாகு 11/09/25

#
Thiagarajan G

@..நிலவை பார்த்தபின் நிலவு கூட்டில் வசிக்க ஆசை உன்னை பார்த்த பின் உன் இதயத்தில் வசித்திட ஆசை..!

#
Karuppasamy

திங்களில் உன் முகம் ஜொலிக்கும்.. செவ்வாயில் செவ்விதழும் சினம் கொள்ளும்.. புதனில் புன்னகை பூப்பூக்கும்.. வியாழனில் விண்மீனின் ஒளியிருக்கும்.. வெள்ளியில் சேலையின் அழகிற்கும்.. சனியில் சங்கமிக்க மனமிருக்கும்.. ஞாயிறில் இவையாவும் மறந்திருக்கும்.. -ரவி..

#
கவிதையின் காதலன்

நிலவொளியில் உன் முகமும் வெள்ளியாய் ஜொலி, ஜொலிக்கும்.. உன் மென்மை பூக்களை விட மிதுவாக தானிருக்கும்.. குரலொலியும் செந்தேனை விட இனிப்பாக தித்திக்கும்.. உன் காதனி ஆட்டமும் கதக்களி போலிருக்கும்.. இதழாடும் நாட்டியமோ மனதை கட்டி போட்டிருக்கும்.. பட படக்கும் உன் விழியும் மின்னலை நினைவூட்டும்.. பூத்திருக்கும் புன் சிரிப்பும் உன் அழகை மெருகூட்டும்.. மயிலை போல் உன் நடையும் அன்னத்தை நினைவூட்டும்.. உன் அழகில் மதிமயங்கி வானவில்லும் நிலைமறக்கும்.. வர்ணிக்க வார்த்தையின்றி தமிழ் மொழியும் யோசிக்கும்.. -ரவி..

#
கவிதையின் காதலன்

துடிப்பதை விட உன்னை நினைப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது என் இதயத்திற்கு #என்னவளே

#
Karuppasamy

பேசிக்கொள்ள வேண்டாம் சிரித்துக்கொள்ள வேண்டாம் சற்று நேரம் உன் இருப்பை கொடு போதும்..!

#
Karuppasamy

வார்த்தைகள் இல்லாத கவிதை.. அவளின் வெட்கம்..!!

#
Karuppasamy

போதுமென்று தோன்றாத ஒரே போதை அவளோடு செலவிடும் நேரங்களே..

#
Karuppasamy

இனம் புரியாத இன்பம் இளமை வழியாக வரும் விழியயால் நளினம் புரியும் துளிர் விடும் அரும்பாகும் வளர்த்தால் வாசம் வீசும் அசைந்தால் அசையும் இசைத்தால் இசைக்கும் காலமும் சங்கீதமே கோ.தியாகு 09/09/25

#
Thiagarajan G

kadhal oru mugam......athelil alage marthumei bimban..... alagiya kartu....wind kadde....hutan.....nilla pongarete.....alage marteme mei arapu podak arupu munchode claim manathe parre monalisa parthu

#
Alexander

மொழியில் பேசிடு விழியில் பேசி வீழ்த்தாதே..

#
Karuppasamy

மாலை வேளை அந்தி நேரம் வந்ததாலே அமைதி மனதில் நிறைந்ததே! கூவும் குயில்கள் இன்னிசை பாட, மாலைச் சூரியன் பொன்னொளி பூசுதே! மலர்கள் வாசம் வீசுதே, மல்லிகை கொடியில் சிரிக்குதே, முல்லைப் பூங்கொத்து குலுங்குதே, மயிலின் தோகை விரிந்ததே! நேசம் மனதில் மலருதே, ஆசை உள்ளத்தில் பிறக்குதே, அன்பு கரம் அழைக்குதே, மாலை நேர மயக்கமிதே! இன்பக் கனவுகள் தோன்றுதே, வானம் வண்ணங்கள் பூசுதே, ஆசை வந்து சேரும்போதே அன்பு நிலை மலருதே! நட்சத் திரங்கள் மினுக்குதே, நிலவும் மேகம் ஒளிர்குதே, இரவின் வாசல் திறக்குதே, இன்பம் இதயம் நிறைக்குதே! கோ.தியாகு 04/09/25

#
Thiagarajan G

என் காதல்! ************** 1. ஐந்தாண்டு வளர்ந்த காதல் - என் காதல்! 2. ஐயம் நீங்க வளர்ந்த காதல் - என் காதல்! 3. ஐம்பூதங்கள் சாட்சியாய் வளர்ந்த காதல் -  என் காதல்! 4. ஐம்பொறிகளை அடக்கி வளர்ந்த காதல் -  என் காதல்!   5. ஐயிரண்டு கைகள் கோர்த்து நடந்த காதல் -  என் காதல்!  6. ஐந்தாண்டுத்   திட்டம் போல் வகுத்துக்  காதல் - என் காதல்! 7.  ஐந்து புள்ளி கோலம் போல் அழகாய் சேர்ந்த காதல்-  என் காதல்! 8. ஐவகை நிலம் போல் வகுத்த காதல் -  என் காதல்! 9. ஐராவதம் போல் வளு கொண்ட காதல் - என் காதல்! 10. ஐயிரண்டு மாதக் கருப்  போல் வளர்ந்த காதல் -  என் காதல்!

#
InbaKani M

********************** காதலர்கள் பேச்சு! ********************** ஏ பெண்ணே! எக்ஸ்ரே கதிர்களால் என் மனதை ஊடுருவிச் சென்றுவிட்டாய்! என் உயிர் காதலனே! அதில் நீயும் குறையல்ல உன் காந்த விழிகளைக் கொண்டு எனை ஈர்த்தாயே! என் ஆருயிர் அழகியே! உன்னைக் கண்ட நாள் முதல் உடல் வெப்பம் தாங்காமல் ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டையானேன்! என்னைக் கவர்ந்த பொய்காரா! நியூட்டனின் ஈர்ப்பு விசை போல் என்னை ஈர்த்து உன்னுள் அடக்கினாய்! எகத்தாள பேச்சுக்காரியே! மின்சாரமில்லா மின்னலே உன் மிடுக்கு நடையாள் என்னை மிரளவைத்தாயே! ஆணழகே! அணுவை விட சிறியது என் உயிர் அது உன்னைப் பிரிந்தால் சுக்குநூறாகப் போய் விடுமே! பேரழகே! இந்த பிரபஞ்சமே எதிர்த்தாலும் நம்முடைய ஈரிரண்டு கரங்கள் சேர்வது திண்ணம்! இங்கு இருவர் மூச்சு கலந்து ஒருவர் மூச்சாகி திக்குமுக்காயின... * கவிஞர்.முனைவர் மா.இன்பக்கனி

#
InbaKani M

* கண்கள் கண்டன! * உள்ளம் தவித்தன! * இதழ்கள் பேசின! * கரங்கள் தழுவின! * மனங்கள் மகிழ்ந்தன! * மங்களம் பொங்கின!

#
InbaKani M

* உருக்கும் வெயிலில் உன்னை நினைத்தவுடன் ஐஸ் போல் உருகியது என் மனம் காதலியே!

#
InbaKani M

பிடித்த பெண்ணிடம் என்ன பேசுவதென்று தெரியாதவர்கள் தான் வேறு வழியின்றி கவிஞர்கள் ஆகிவிடுகிறார்கள்..!

#
Karuppasamy

பூக்களும் உனதழகில் பிரமித்து போகும்.. மானினமே உன் விழியால் அழகிழந்து போகும்.. நந்தவனமும் உன் முன்னே கலையிழந்து போகும்.. சிற்பமும் உன் எதிரொளியில் உயிர்த்தெழுந்து போகும்.. மயிலிறகும் உன் இதழால் மென்மையிழந்து போகும்.. நங்கைகளின் மனமும் அவ்வியத்தால் செயலிழந்து போகும்.. -ரவி..

#
கவிதையின் காதலன்

சிரிப்பில் என்னை சிறை பிடித்து ஆழ்மனதில் இடம் பிடித்தவள்.. கண்களால் தேடி பிடித்து அன்புக்கு அடிமையாக்கியவள்.. துணிவுடன் கை பிடித்து முயற்சிக்க கற்று தந்தவள்.. தோழ்வியை விட்டு பிடித்து வெற்றியை எட்டி பிடித்தவள்.. கஷ்டத்தை கண்டு பிடித்து இஷ்டத்தை எளிதாக்கியவள் -ரவி..

#
கவிதையின் காதலன்

எங்கள் காதல்! * உலகப் பொதுமறைக் கண்ட காதல்! * உருகி உருகி அடைந்த காதல்! * உயிராய் போற்றும் காதல்! * உலகச் சரித்திரம் படைத்த காதல்! * எங்கள் காதல்!

#
InbaKani M

நாம நினைக்கிற மாதிரியே நடந்தா அதுக்கு வாழ்கைன்னு பெயரில்லை

#
Karuppasamy

பதில்பதில் நான்பதில் நான் இவள் இவள் இவள் அழகாக இவள் அழகாக இவள் அழகாக பல பல பல அடித்துக் கொண்டு அடித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கார்த்திக்கு கார்த்திக்கு கார்த்திக்கு இது இது இது வழியனுக்க வழியனுக்க வழியனுக்க பல பல பல என் என் என் என் சொல்லாமல் சொல்லாமல் போகின்ற சொல்லாமல் போகின்ற

#
Ganesh

kadhal mayikum kadhal arupu kurikum kadhal thendral pol ore alagiya mallai garland kadhal mallai garland.....kalyanethum marthum kurikathe kadhal ore innisai padal kadhal kanave ore puu mallai rain valadum rendum jivan pon sivappu sivakkum kannetil marthum ilei pon purushan pondati valum....kanavu corrgam heaven rendu jivan ulladum kannavu malai area kadhal pongavanam thodratil....kudumba valkai kadhal kuriche valnthal marthume puriyem vovore varthai soll sollaga....pon ponnaga.....thodratil.....touch alexander chandrasekaran :signature:kadhal kuriche valnthal marthume puriyem vovore varthai soll sollaga....pon ponnaga.....thodratil.....touch valum kalangel na unakku,nee enakku sapiti vitul,thidevenum kudi rendum

#
Alexander

உள்ளத்தில் சாளரம் உன் வீட்டின் சாளரத்தை உற்றுப் பார்க்கும் போது கதவுகள் திறந்தன என் இதயமும் திறந்ததே பட்டாம் பூச்சி போல் பறந்ததே! கோ.தியாகு 28/08/25

#
Thiagarajan G

மெழுகு பெண்ணே உன்னழகை கண்டு பனியும் உருகுவதை மறந்து போகும்.. ஆஹா..! இதுவல்லவோ அழகென்று நிலவும் மேகத்துடன் மறைந்து போகும்.. காணும் இடமெல்லாம் உனதழகு கண் முன்னே வந்து போகும்.. கவி பேசும் விழிக்கண்டு காதல் சொல்லவே மறந்து போகும்.. -ரவி..

#
கவிதையின் காதலன்

சொல் குழையும் போதெல்லாம் அதை காதல் என்றே மனம் சொல்லும்.. கண்கள் மின்னனும் போதெல்லாம் அதை காதல் என்றே நெஞ்சம் சொல்லும்.. இதழ் சதிராடும் போதெல்லாம் அதை காதல் என்றே விழி சொல்லும்.. -ரவி..

#
கவிதையின் காதலன்

எதிர் துருவங்கள் ஈர்க்குது இதுவே இயற்கையின் விதி அன்பு எனும் ஆறு பாயும் தோட்டம் காதல்

#
Thiagarajan G

நெஞ்சே நெஞ்சே எங்கே எங்கே மின்னும் எழில் வண்ணம் அங்கே கண்ணில் தோன்றும் பிம்பம் அங்கே கொஞ்சும் வார்த்தை சிந்தும் அங்கே காலம் கரைந்து விடும் அங்கே அன்பே அன்பே இன்பம் அங்கே

#
Thiagarajan G

தினமுந்தன் நினைவென்னை இயல்பாக்கும்.. விழி இணையும் போதெல்லாம் துடிப்பாக்கும்.. உன் இதழ் நடத்தும் நாட்டியம் எனையிழுக்கும்.. மனம் தேடும் போதெல்லாம் என் முன்னிருக்கும்.. தூண்டிலிடும் உன் சிரிப்பு எனை மயக்கும்.. தூக்கத்திலும் உன் முகமே நினைவிருக்கும்.. உன் இதழில் எப்போதும் சிரிப்பிருக்கும்.. மலர்ந்திடும் போதெல்லாம் படப்படக்கும்.. புலர்ந்திடும் பொழுதெல்லாம் உனை நினைக்கும்.. திகட்டாமல் தினம் உந்தன் நிகழ்விருக்கும்.. தித்திக்கும் தேனாக குரலிருக்கும்.. மனதிற்குள் இனமறியா அன்பிருக்கும்.. எப்போதும் உன் நினைவாக என் மனமிருக்கும்.. -ரவி...

#
கவிதையின் காதலன்

சிரித்திடும் உன் முகத்தை கண்டதுமே என் சிந்தனையும் சிதறுதடி.. உள்ளத்தில் அன்பு நிறைந்ததுமே விழியில் காதல் வழியுதடி.. காதலில் மனம் கனிந்ததுமே என் இதயம் உன்னை தொடருதடி.. -ரவி..

#
கவிதையின் காதலன்

முத்துக்கள் சிரிக்கும் முத்துக்கள் சிரிக்கும் மோகனப் புன்னகை, மோனோலிசா பரிமாணம்— மனதினுள் மலர்கின்ற வசந்தம். கடலலைகள் சிரிக்கும், சிரிப்பின் ஓசை பரவும்; விடலைப் பெண் நாணத்தில் முத்துக்களாய் மினுங்கும் முகம். இன்பத்தின் எல்லையில், துன்பத்தின் அடியிலும், இதயத் தளிர் அசைந்திடும்— முத்துக்கள் சிரிக்கும். மணவோலை, மனவோலை, இடைவேளை தொடர்காதல்; மேகலை கண்மயக்கம்— முத்துக்கள் சிரிக்கும். புதிய பத்தி சிரிப்பு ஒரு இசைதானே, சிந்தனைக்கு சுகம்தானே; சிரித்திடும் நொடிகளில் உலகமெல்லாம் புதுமை காணும். கோ. தியாகு 21/08/25

#
Thiagarajan G

விசா இல்லை விமானம் இல்லை வானத்தில் மிதக்கிறேன் ... நீ என் மீது வைத்திருக்கும் பாசத்தால்....

#
Karuppasamy

பிரம்மனும் பிரமித்தான் அவளை கண்டு.. தன் படைப்பில் இப்படியொரு அதிசயமா என்று..

#
Karuppasamy

கண்டதும் காதலை உள்ளத்தில் வைத்தால் காணாத காதலை கண்டிட செய்யும் மாறாத உறுதியை உறவில் வைத்தால் விலகாமல் உறவை நிலைத்திட செய்யும் மகிழ்ச்சியை உள்ளத்தில் நிறைத்து வைத்தால் உறவுகள் தொடர்வதை நிகழ்ந்திட செய்யும்.. -ரவி..

#
கவிதையின் காதலன்

காதல் பன்னக்கூடாதுங்கடா

#
no love I am single

நாம் ஒருவரை நேசிப்பதற்கு முன் அவர் வேர யாரையாவது நேசிக்கிறாரா என்பதை தெரிந்துக்கொள்

#
no love I am single

சிரிக்கும் பெண்ணே என் சிங்கார பெண்ணே.. சித்திரமோ நீயென்று சிந்தையெல்லாம் கிறங்குதடி.. சத்தமிடும் அருவியும் சத்தமிட மறக்குதடி.. தினம் கூவும் பூங்குயிலும் தன் குரலை மறக்குதடி.. மகிழ்ந்தாடும் மயிலும் தோகை விரிக்க மறக்குதடி.. வெடி வைக்கும் இடியும் தீ வைக்க மறக்குதடி.. ஒளியில்லா மின்னலும் விண்வெளியில் மின்னுதடி.. தேன் சிந்தும் உன் சிரிப்பே இன்னிசையாய் மாறுதடி.. சூரியனும் அதைக் கேட்டே சந்திரனாய் மாறுதடி.. தீராத கவலைகளும் உடன் மறந்து போகுதடி.. மரிக்கொழுந்து பெண்ணே என் மனம் மயக்கும் பெண்ணே.. தினம் உந்தன் நினைவழையில் என் மனமும் லயிக்குதடி.. உன்னழகை தினம் காண உள்ளமெல்லாம் துடிக்குதடி..

#
கவிதையின் காதலன்

கதிரவன் காண்கிறான் மரங்கள் சமைக்குது காதலன் காண்கிறான் காதல் சமைக்குது நிலவு காண்கிறாள் உறவு அழைக்கிறது கோ.தியாகு 15/08/25

#
Thiagarajan G

விதி விளையாடுகிறது சிலரின் வாழ்வில்.. அவன் விழிகள் விளையாடுதே எனது வாழ்வில்...

#
Karuppasamy

காதல் கவிதை எழுதி அனுப்பினேன் படித்தவள் தமிழ் ஆசிரியை போல முற்றுப்புள்ளி வைக்க சொல்லி விட்டாள்.

#
Vallarasu Ms

அடுக்கு மல்லி பூத்திருக்கு அடுக்கு மல்லி பூத்திருக்கு ஆசை மச்சான் பார்த்திருக்கு தொடுத்த பூவும் சிரித்திருக்கு தோணி வர காத்திருக்கு ஆசை வரும் முன்னே அலையும் சிரித்து வரும் ஓசை சத்தம் ஓங்கி வரும் மீசை கூட முறுக்கி வரும் அந்தி நேரம் நெருங்கி வரும் அடுக்கு மல்லி வாசம் வரும் ஆசை மச்சான் அன்பு தரும் அகிலம் மெல்லச் சுருங்கி நிற்கும் நிலவின் வெளிச்சம் நதி மேல் விழும் நெஞ்சின் கனவுகள் காற்றோடு பறக்கும் மல்லி மணத்தில் கைகள் இணையும் மௌனக் கண்கள் காதல் சொல்வும் இரவு வந்து பகல் மலரும் உறவு விட்டு வரவு வரும் மல்லி வாசம் மனம் கொள்ளும் அலைக்கும் காலை மீண்டும் வரும் மழைத் துளி கன்னம் தொடும் மருவும் காற்று காதல் கூடும் நினைவின் பக்கல் நீயே நின்றால் நிலா கூட பொறாமை கொள்ளும் அடுக்கு மல்லி வாசம் இணை இல்லா நேசம் வாழ்வெல்லாம் இன்பம் தாழ்வெல்லாம் விலகும் கோ‌.தியாகு 11/08/25

#
Thiagarajan G

பூவும் வெட்கம் கொள்கிறது. பெண்மை நான் வெட்கப்பட மாட்டேனோ.... உன் கைகளால் நீ என் தலையில் வைத்து விடும்போது...

#
Karuppasamy

காதல் இது தான் சரி என்று உங்கள் மனதில் ஒரு குரல் வரும் அதுவரையில் காத்திருங்கள்

#
Smkumaran kavithai

என் நினைவுகளுக்கு உயிர் உள்ளதடா...!! நீ என்னை நேசிக்கும் அந்த நொடிக்காக, என் எண்ணங்கள் மறுபிறவி எடுக்கின்றது...!! உன்னுடன் சேர்ந்து வாழ மட்டுமல்ல...!! உன்னுடன் பயணிக்கும் ஒவ்வொரு நொடியும் நானும் பயணிக்க தொடங்கி விட்டேன் உன் உயிராக.....!!

#
gold madhu

*பூங்காற்று வீசுதே* பூவையள் நெஞ்சத்தில் பூங்காற்று வீசுதே! தேவதை போல் தேரில் வந்தவளோ? கருவிழியில் காதலைச் சொன்னவளோ? காதலன் நெஞ்சம் உற்றும் இசைபோல் இமைப்பவளோ? வினா போல தேடிவரும் தோழனின் எண்ணங்கள் அவளது ஆவலை எழுப்புகின்றன நெஞ்சினில் கிளர்ந்த நெருக்கங்கள் வஞ்சியின் விழிகளில் வெளிப்பட்டதே! பஞ்சுபோல் நெஞ்சினைத் துளைக்கும் ஆசை, மன்மதக் கனவை மஞ்சம் கவர்ந்ததே! தஞ்சமாக பஞ்சவடி எடுத்தவள் – ஏழிசை போல மனதில் ஓசைதந்தாள்! "இதுவே எனது கனவு!" என்றவளின் அன்னநடை பின்னிய இடையில் கண்ணன் முகம் காண விழி கூடி இசையமுதம் போல இமையால் ஏந்தினாள் சொல்லாமலே சொல்வதுதான் காதல் விழியோரம் தெரியும் மொழியல்லவா? வார்த்தைகள் சுமைதான் சில நேரம் வயலும் மலர்ந்தாலும் மழையில்தான் வாசனை! கோ.தியாகு 07/08/25

#
Thiagarajan G

தமிழ் கவிதை

#
Santhan Ganesh

சேதி வரும் தென்றல் காற்றில் மோதி வரும் முந்தானை தொட்டு மோகம் வரும் தேகம் முழுதும் மோகினி வரும் நேரம் எப்போது? சப்தம் வரும் சலங்கை ஒலி நிசப்தம் வரும் தேடும் மனதில் அருகில் வரும் அன்புக் கரம் பேச வரும் பேதைக் கண்கள் அள்ளப் சொல்லும் ஆசைகள் தள்ளி நிற்கும் நாணம் கள்ளத் தனம் கண்ணில் தெரியும் சொல்லவும் வேண்டுமா வீணை கீதம் கோ.தியாகு 04/08/25

#
Thiagarajan G

Vortaiki saavoom pambu savoom pambu adele ilei.... ilepel thudipel savel seval koli sethhi sethi polekum pambu nan saaha paranberai......yerukum yeripil ilei.....thudiche valle...... thudi thudi getdi.... polekum all....my hip hop song.... yerukum......yen manam......polekum yen idhayam......yerunthe yerunthe polekum idhayam........ the light of the soul......outshines in the middle of the heart..... itheya yen ambla thanam ...... idli......beer......sambar ra kudikum yen thondai...... ambla....muyal.....mutalai poll ore muyal.... ode ode pidikum vovoru vodebiyum.... yennall kathal thol pathai le valum chiki kathal Alexander chandrasekaran:yennall kathal thol pathai le valum chiki kathal *Parakara Kaatu*

#
Alexander

ஓரப்பார்வைக்கு என்னிடம் ஒருகோடி முத்தம் உண்டு ஓடிப்போய்விடு..?

#
Karuppasamy

என்ன பெரிய கியூ ஆர் கோடு ஸ்கேனர்...! அவ கண்ணை பார்கிறதை விடவா...!!

#
Karuppasamy

இன்னமும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் உன் அழைப்பிற்கு ஏங்கும் நீ அழையா என் அலைபேசியை

#
Karuppasamy

விண்ணில் வலம் வரும் வெண்ணிலவே கலை நீயே மண்ணில் மலர்ந்திருக்கும் நிலவே எண்ணில் என் கண்ணில் நீயே தென்றல் தழுவும் தனிமை நேரம் தீண்டும் நினைவில் தேனே நீயே மௌனம் பேசும் முகம்தான் இன்று முழுதும் உயிராய் வந்தாய் நீயே நிலா விழியில் நிமிடம் தோன்றும் நிசி கனவில் நிழலாய் நீயே சத்தமில்லாத சுவாசம்தோறும் சந்ததியாய் நெஞ்சில் நீயே

#
Thiagarajan G

காதல் ஓர் அனுபவம் காதல் செய்யும் காதரும் காதல் புரியும் ஜேக்கப்பும் காதலில் கரையும் கனகாவும் சந்திக்கும் நேரம் அந்திதான் கண்ணால் கண்டதும் காதலா காணக் காண மொளனம் பேசுதா உடலின் தூண்டலா காதல் உள்ளத் தூண்டல் காதலா! பெற்றோருக்குப் பயந்த காதலா பிரியா விடை பெறும் காதலா அந்தஸ்தை நோக்கி அடிவைத்ததா அன்பை நோக்கி அடிவைத்ததா? கோ.தியாகு 28/07/25

#
Thiagarajan G

பிரிவு ஒரு பெரும் உச்சம். சொல்லா கவிகள் இல்லை. தொட்டு பார்த்தவள் தான். எழுத தோன்றவில்லை. இன்னொரு உச்சம் என்னை வீழாத படி தாங்கி பிடித்திருக்கிறது. வலிகளை என் வரிகளில் உணர்ந்து விட்டால் இந்த உச்சத்திற்கு என்ன அர்த்தம். நாற்பது திருடர்கள் மட்டுமல்ல.அலிபாபாவும் திருடர் தான். இது ஒன்று புதிதில்லை என கடந்து போகிறேன் அவ்வளவே.

#
கவிதா

உன் சுவாசத்தை அனுப்பு.. இன்னும் கொஞ்சம் காதலிக்க கற்றுக்கொள்கிறோம் நானும் தென்றலும்!

#
Karuppasamy

நெஞ்சக் கூட்டில் நிறைந்தவளே இருந்தவரை இயக்கியவளே இயக்கிய காலத்தில் நினைவலைகளை நினைத்தவளே! நினைவலைகளை சுமந்து கொண்டு நித்தம் நித்தம் சுபராகம் சுப்ரபாதம் பாடி சுதிசேர்த்து வரும் மறைந்தும் மறையா நிழல்.

#
BASKAR BASKAR

தவறு செய்யாமல் இருப்பதே இல்லை நான். சுண்டுவிரலை கதவில் இடித்து கொள்வது போல!

#
கவிதா

மலர்ந்திருக்கும் உன் புன்னகையால் மனம் மகிழ்ந்தேன்.. தொடர்ந்திருக்கும் உன் நினைவலையால் எனை மறந்தேன்.. பேசிடும் உன் விழியிடம் எனை இழந்தேன்.. நிலவாய் தவழும் உன் நினைவிடம் நிலையிழந்தேன்.. மயக்கிடும் உன் அழகிடம் மதியிழந்தேன்.. சொக்க வைத்த உன்னிடம் மனமிழந்தேன்.. கவிதை சொல்லி தினம் உன்னை பின் தொடர்ந்தேன்.. கனியட்டும் காலமென்று காத்திருந்தேன்.. மனதிற்கு பூட்டொன்றையும் போட்டிருந்தேன்.. -ரவி..

#
கவிதையின் காதலன்

விழி நோக்கவில்லை, விரல் கோர்க்கவில்லை, வீண் வர்ணனையில்லை, விருப்பம் மட்டுமே விலகாமல் விரிவாக்குகிறது நம் காதலை...

#
Panneer Selvi

தேனே இசைத்தேனே மலர்ந்தேனே நானுனைக் காண கலந்தேனை கண்ணோடு இசைத்தேனே நீயெனைக் கூட உல்லாசம் சந்தோஷம் நிலவு காணும் உலகம் கனவு தோன்றும் மாயம் நினைவே அதன் ஜாலம் நிறையும் எழில் கோலம் காதல் வானில் காணும் இளமை ஊஞ்சல் ஆடும் காலம் மறையும் நேரம் உறவே இன்பம் ஆகும் உயிர்கள் தோன்றும் உலகில் உணர்வும் உடன் பிறக்கும் உரிமை ஆகும் காதல் கனிந்து வரும் ஆவல் அன்பும் அன்பும் மோதும் ஆசை மொழிகள் பேசும் தேனும் பாலும் கூடும் இசையும் பண்ணும் உறையும் சந்தனம் போல வாசம் சந்திப்பு தரும் ராகம் காதல் ஓர் கவிதைதான் கருவில் எழும் சுவாசம் கோ. தியாகு 25/07/25

#
Thiagarajan G

இயற்கையின் காதல் இலவசக் காதல் இயற்கையின் காதல் இலக்கணமில்லாக் காதல் இருவர் காதல் இயைந்தால் இதயம் இலகுவாகும் இரண்டு முனைகளும் இரு எதிர்முனைகள் இழுக்கும் அணைக்கும் இயந்திரமாகாக் காதல் இறுகிப்பிணையும் இன்பம் இயல்பாய் இயங்கும் இன்பம் பொங்கும் இணைபிரியாக் காதல் இயங்கும் உலகம் கோ.தியாகு 24/07/25

#
Thiagarajan G

நீ என்னை விட்டு நீங்கிய பின்பும், உன் நினைவுகள் நெஞ்சில், நெருடிக் கொண்டே இருக்கின்றன..!" மனம் முழுதும் வியாபித்திருக்கும் அந்த நினைவுகள், என்னை காயப்படுத்திக் கொண்டே இருக்கும்..!" உடலை உயிர் உதறும் பொழுதிலும், உன் உறவை உள்ளம் உதறாது..!" வெளிப்படையாக நான் உன்னை வெறுத்தாலும், உள்மனதில் உன்னை மட்டுமே விரும்புகிறேன்..!" வார்த்தைகள் உன்னை வெறுப்பதாக வெளிவந்தாலும், உள்ளமோ உனக்காக மட்டுமே உருகுகிறது..!" உதடுகள் உண்மையை உரைக்காவிட்டாலும், உள்ளத்தில் உண்மை இன்னும் உயிருடன் தான் இருக்கிறது..!" உன்னுடன் நான் பேசுவதற்கு மறுத்தாலும், உள்ளம் உன்னோடு மட்டும் தான் பேசி கொண்டிருக்கிறது..!" இன்று மட்டுமல்ல, என்றுமே!! ஏன்??? என் உயிர் பிரிந்த பிறகும் கூட, விழித்திருக்கும் என் விழிகள், உன்னை காணுவதற்காக, ஒருவேளை அவை மூடபட்டாலும் கூட, என்னில் உள்ள உன் நினைவுகள் உனக்காக, இவ்வுலகம் எங்கும் பரவி கிடக்கும்...!! *நினைவின் வலிகளாய்* *என்றும் உங்கள்* RK

#
Kalpana Subramaniam

என் முகம் அவளறியாள்..!" என் நிறம் அவளறியாள்..!" என் மனம் அவளறியாள்..!" என் குரல் அவளறியாள்..!" என் குலம் அவளறியாள்..!" என் சிரிப்பு அவளறியாள்..!" என் அழுகை அவளறியாள்..!" எனினும், எனதன்பு அவளறியாள்..!" எனதுயிரின் சுவாசமவள்..!" எனதுடலுக்கு உயிர் தருபவளும் அவளே...!! RK

#
Kalpana Subramaniam

எல்லோரையும் போலவே, நமக்குள்ளும் சண்டை வரத்தான் செய்கிறது..!" பிடிவாதம் யாருடையதாய் இருந்தாலும், விட்டுக் கொடுப்பவள் நீயாக மட்டுமே இருக்கிறாய்..!" எனக்காக மட்டும்...!! RK

#
Kalpana Subramaniam

உனக்கு ஆறுதல் சொல்ல நினைக்கிறேன்.. ஆனால்.., என்னை அறியாமலே அழுகிறேன்..!" உன் கண்ணீரை துடைக்கவா...? என் கண்ணீரை துடைக்கவா...? என் உயிரே...!" நீ அழுதால்... நான் உடைந்து போவேன் என்பதை மறந்து அழுகிறாயா...? முழுவதுமாய் அழு..!" உனக்கு நான் இருக்கிறேன்..!" இதை மறந்து விடாதே...!! RK

#
Kalpana Subramaniam

உன்னை பின் தொடர்ந்தேன், என்னையும் மருந்து..!" உன் நிழலை பின் தொடர்ந்தேன், என்னுடனே வந்தது..!" நீ இல்லையென்றாலும், உன் நிழல் தரும் அழகு போதும்..!" நீ பேசவில்லை என்றாலும், உன்னுடன் நான் பேசிய, நினைவுகள் போதும்...!! RK

#
Kalpana Subramaniam

எவ்வளவு ஆத்திரத்தை உண்டாக்குகிறாயோ, அவ்வளவு காதலையும் உண்டாக்குகிறாய்..!" இல்லையேல்.., எவ்வளவு காதலை உண்டாக்குகிறாயோ, அவ்வளவு ஆத்திரதையும் உண்டாக்குகிறாய்..!" இப்போது நான் காதலிப்பதா..? ஆத்திரப்படுவதா..?? RK

#
Kalpana Subramaniam

விதியால் என்று சொல்வதை தவிர, வேறு என்ன சொல்லி, எழுதிட முடியும் இந்த காகிதத்தில்..!" இப்பொழுது உனக்கும் எனக்கும் இருக்கும் தூரத்தை...!! RK

#
Kalpana Subramaniam

புறமறியா புழுக்கம்..!" அகமறியா அழுகை..!" தந்திரமில்லா தவிப்பு..!" தன்னை அறியா கழிவிரக்கம்..!" கண்கள் அறியா உறக்கம்..!" பயமறியாத மரண வாசல்..!" இவை அனைத்தும் நீ அறியாத, என் காதலால் கிடைத்த பரிசு...!! RK

#
Kalpana Subramaniam

உன்னை பார்க்கும் போது தான், என் கண்கள் இருப்பதை உணர்ந்தேன்..!" அதே போல் உன்னை பார்க்காத போது தான், அதிலுள்ள கண்ணீரையும் உணர்ந்தேன்...!! RK

#
Kalpana Subramaniam

கண்ணின் நிழலாய் நீ வரும்போது, என் நிழலும் உன்னை சுற்றி நடக்கும்...!! RK

#
Kalpana Subramaniam

நினைத்தவுடன் அழைத்துப் பேச எண்ணம் இருந்தும்.., கைப்பேசியில் எண் இருந்தும்.., அழைக்க முடியாத சூழ்நிலையில் தவிக்கிறது.., சில இதயங்கள்...!! RK

#
Kalpana Subramaniam

தனிமையில் வாடும் ஒவ்வொரு நொடியும்..!" உன் நினைவுகள் தரும் சுகத்தையே வேண்டுகிறது, என் இதயம்...!! RK

#
Kalpana Subramaniam

உன்னை பார்க்காமல் தவிக்கிறேன்..!" உறங்காமல் உன்னை நினைக்கிறேன்..!" உன்னுடன் பேசாமல் துடிக்கிறேன்..!" உன்னால் தனிமையை உணர்கிறேன்..!" அந்த தனிமையை உணரக்கூட, உன்னை மட்டும் கேட்கிறேன்..!" உன் நினைவுகளை அல்ல...!! RK

#
Kalpana Subramaniam

என் இமைகளை கடந்து, கண்ணீராய் வழிந்தோடும் உன் நினைவுகளை..!" என் உயிருக்குள் அடக்கி வைத்து, ஊமையாக அழுகிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

உன் கண்களின் ஒளி, என் இரவில் துளிர்க்கும் நிலா..!" உன் சிரிப்பின் ராகம், என் இதழில் வீசும் புன்சிலிர்..!" உன் தனிமை, என் பிரிவின் காற்றோடு ஒட்டி இருக்க..!" உன் நினைவில், நான் உயிர் காத்து நிற்கின்றேன்...!! RK

#
Kalpana Subramaniam

வெப்பமாய் வந்த உன் காதல், என் மௌனம் எனும் பனிக்கட்டியை, உருக செய்தது..!" உன் விழிகளின் நெருப்பு, என் உலகை எரித்துக்கொண்டிருக்கிறது...!! RK

#
Kalpana Subramaniam

நான் நடந்து செல்லும் பாதையில் கிடக்கும் முட்கள் தான், அவளின் நினைவுகள்..!" என்னால் நிற்கவும் முடியவில்லை..!" வேறு பாதையில் செல்லவும் விருப்பமில்லை...!! RK

#
Kalpana Subramaniam

அவள் வரும் வரை நிலவு..!" அவள் பேசும்வரை கவிதைகள்..!" அவள் சிரிக்கும் வரை பாடல்கள்..!" அவள் இருக்கும் வரை தான் நான்...!! RK

#
Kalpana Subramaniam

உன் வார்த்தைகளால் நான் உயிர் பெற்று.., உன் மௌனத்தில் நான் சாவுகிறேன்..!" அவ்வாறு சாவதற்கு பயந்தாலும்.., உன் அருகில் மட்டுமே அழகாய் நான் வாழ்கிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

விழி என்பது நீயானால், கனவு என்பது நானாவேன்..!" விதி என்பது நீயானால், மதி என்பது நானாவேன்..!" மொழி என்பது நீயானால், ஒளி என்பது நானாவேன்..!" வழி என்பது நீயானால், நடை என்பது நானாவேன்..!" ஜதி என்பது நீயானால், தாளம் என்பது நானாவேன்..!" உடல் என்பது நீயானால், உயிர் என்பது நானாவேன்...!! RK

#
Kalpana Subramaniam

கையில் பூவோடு காத்திருப்பது மட்டும், காதல் அல்ல..!" மனதில் நினைவோடு வாழ்ந்து கொண்டு காத்திருப்பதும், காதல் தான்...!! RK

#
Kalpana Subramaniam

Unneniya kaanpidital nalle il yen ullagam thodeginithe... nesam puthuthe....kadhal valendthe.....verraee akar* addaii pudiththe naa puthen..,...mallai adithen,malai megamtil todeveh tudithen...agniya..yen verrae kadhal verrae sickaram yerrakathe mati* yerakka yerakka.....tudichi tuyatha..suci*..kannil nerrupa yerunchin burn* yeruchi theeyana taadangal...yeruchin .athey todethen Alexander's chandrasekaran signature:Unneniya kaanpidital nalle il yen ullagam thodeginithe...

#
Alexander

காதலின் ஜோதியில் காதலர் கலந்தனர் உள்ளம் உருளும் உயிரின் பாதையில் அன்பின் வலையில் அகப்படும் உணர்வுகள் உயிரின் கலப்பாகும் பாலில் தேன் கலந்ததுபோல கடலில் ஆறு கலந்ததுபோல மனதும் மனதும் உயிரும் உயிரும் உறவாடி உணர்வோடு காதல் ஜோதியில் கலந்து உறைந்ததே!

#
Thiagarajan G

அழகாய் மின்னும் பல நட்சத்திரங்கள் இருக்கும் இடத்தில் தான் உலகிற்கே ஒளிக்கொடுக்கும் ஒற்றை நிலவும் இருக்கு.. நான் உன்னை நிலவாக பார்க்கிறேன்.. நீ என்னை நட்சத்திரமாக நினைக்கிறாய்.. இங்கு பொருத்தம் இல்லாமல் இருப்பது பார்ப்பதும், நினைப்பதுமே..

#
கவிதையின் காதலன்

{>அவள் ஜிமிக்கி< } @,,முத்தமிட்டு கொண்டே இருக்கும் ஜிமிக்கியை பார்த்த பின்பும் எப்படி பொறாமைப்படாமல் இருப்பது...?

#
Karuppasamy

கடைசி வரைக்கும் தூரமாக இருந்தே ரசித்துக் கொள்கின்றது ... இங்கு கைகோர்க்க முடியாத பலரின் #காதல்...

#
Karuppasamy

உனதழகை பார்த்ததுமே மனம் மாறி போகுது.. சொக்க வைக்கும் உன் முகமோ கொக்கி போட்டு இழக்குது.. விழியிரண்டும் பார்த்ததுமே மனம் மயங்கி போகுது.. உதடழகு எனை மயக்க போதை ஏறி போகுது.. நெஞ்சமெல்லாம் உன் பெயரை சொல்லி கொள்ள தோனுது.. தினம், தினம் உன் நினைவே எனை ஆட்சி செய்யுது..

#
கவிதையின் காதலன்

என் அன்பானவளை சிறை பிடித்து மனச்சிறையில் அடைத்து வைத்தேன்.. அவள் சிரிப்பில் எனை மறந்து பூட்டி வைக்க மறந்து விட்டேன்..

#
கவிதையின் காதலன்

கைகோர்த்து கூட்டிச் செல்வது அன்பு... தேவையான போது கையை விலக்குவது பேரன்பு

#
கவி ஆர்ட் அரசன்

காதல் எப்போதும் உடனிருக்கும்.. நிலவில் குடியேர காத்திருக்கும்.. நீ உறங்கும் நேரத்திலும் விழித்திருக்கும்.. தினந்தோறும் தோள் சாய காத்திருக்கும்..

#
கவிதையின் காதலன்

நீர் தேங்கும் தடாகத்தில் நீர் ஆடும் போதெல்லாம் சந்திரனும் அது போல தானாடுமே, அதனுடனே சேர்ந்தாடுமே.. எனைக் கண்டு உன் விழிகள் இடம் பெயரும் போதெல்லாம் உன் பின்னே என் மனமும் இடமாறுமே, உன்னுடன் துணை சேருமே.. தினந்தோறும் விழியிரண்டும் உனைத் தேடுமே மனமும் நிழலாக உனைத் தேடுமே.. உனைக் காணாத நாளொன்றில் படபடக்குமே என் நெஞ்சம் படபடக்குமே.. உனைக் கண்டு என் மனமும் ஆர்ப்பரிக்குமே நாளெல்லாம் ஆர்ப்பரிக்குமே மனமும் சிறகடிக்குமே..

#
கவிதையின் காதலன்

un vigligal yen mella, vilandhen melaiyisai malai yagum... nichiyam alage ilai.....annal.....vunnil thendum muncul*....kadhal geedhai.....swarangal.....swasam pole thendum thendum thenpeda.... thendum swarangankal.....ore osai.....yun kathal.....ore alagiya jothi kanpada sight*,kekka hear** un jothi swarangal mige mige alaguna chithiram(imej) katre valliosai.....valadum *playing pilai nilla odumbil indre....osai....verikum.... pessi pessi valadum ore pillai....... ammavike mariyathai.....pondacthi....wife*matidppu hormat* uyire verai thindum valliosai... katre valliosai idipil mudikinrete.....odum....venthil nilla...totethi mudichiteh ann penn...yiiekum....todangithe.....bantha.... purerevickum dhan vidikadhai.... andhe pilai nila ore vidikadhai the riddle is the bond born kadal bumi nila valedum katrin valiosai.....allai....allaikum.....ontren unmai.....velipade.....nilaven.....puu puliyum....osai....= kovam..... ninde vithal adegirum.....baranbchiyam ALXDR CHANDRASEKARAN signature: andhe pilai nila ore vidikadhai

#
Alexander

எனை இழந்து விட்டேன் உனைக் கண்டதுமே எனை இழந்து விட்டேன்.. கண் மயங்கி விட்டேன் உன் இதழழகை கண்டதும் மனம் மயங்கி விட்டேன்.. செயல் இழந்து விட்டேன் உன் விழி அசைவில் மொழி மறந்து விட்டேன்.. எனை மறந்துவிட்டேன் உன் எழில் கண்டதும் தனை மறந்து விட்டேன்..

#
கவிதையின் காதலன்

உன் கண்ணின் கரு விழியில் என்னை பார்க்கும் பொழுது தான் தெரிகிறது என் அழகின் ரகசியம் என்னவென்று.....!!!!!

#
Karuppasamy

un vigligal kaii** yen melai pade.... nan kadhal kondein

#
Alexander

கண்களுக்குள் மாயங்கள் செய்கின்றாய் பார்வையில் சிக்காமல்..

#
Karuppasamy

மேகத்தை கலைக்கும் காற்றாய் கலைக்கின்றாய் மூச்சு காற்றில் மோகத்தை.

#
Karuppasamy

உன்னிடமிருந்து தப்பித்து உன்னிடமே சரணடைகிறேன் என் புதைகுழியும் நீ; புகலிடமும் நீ!

#
Karuppasamy

கூந்தலை அள்ளி முடித்தாள் அப்போதே நான் சிறைபிடிக்க பட்டேன்..

#
Karuppasamy

pungottai......a cave of flowers......rahim ottai addai oru poiyanne uddai athelil parka punitha manne vuddallekke...body*parkam parvai punithamathe pannikatthe.....ice*... nan andhe parvei kondain.....kadhalika kadlika.....vudaiullekku irukum vimmam...ovum*..eruya.....nan parka parka kathal pukkum......pukkam kanggale pannikatte veghampol avom nan yen aruverpa thedinen endral.....makkal aruverpana paarvai irupurvagal nan yen chokka....suiya kadhal thendinen yendral.....nan nermayane honest* manithan thedal thendral alichi selum......anthe thendral ......kadavul manasevom.....braman paditha.....uruvam parthe....penggalil.....odumbil......pacha.... kutti irukke...... uruvam editha.....ppongotai.....vom maravum um.....alange pongotai......ottai alage avaldhan.....arupun aveludhane dhan vanthethe alexander chandrasekaran signature:...pukkam kanggale pannikatte veghampol avom pungottai......a cave of flowers......rahim ottai

#
Alexander

addai oru poiyanne uddai athelil parka punitha manne vuddallekke...body*parkam parvai punithamathe pannikatthe.....ice*... nan andhe parvei kondain.....kadhalika kadlika.....vudaiullekku irukum vimmam...ovum*..eruya.....nan parka parka kathal pukkum......pukkam kanggale pannikatte veghampol avom nan yen aruverpa thedinen endral.....makkal aruverpana paarvai irupurvagal nan yen chokka....suiya kadhal thendinen yendral.....nan nermayane honest* manithan thedal thendral alichi selum......anthe thendral ......kadavul manasevom.....braman paditha.....uruvam parthe....penggalil.....odumbil......pacha.... kutti irukke...... uruvam editha.....ppongotai.....vom maravum um.....alange pongotai......ottai alage avaldhan.....arupun aveludhane dhan vanthethe alexander chandrasekaran signature:...pukkam kanggale pannikatte veghampol avom

#
Alexander

kadhal parekathe.fly*....nadekam... walk* fake marriages# nadekam kaii pidithe kadhalin kayeir....hand* tuyamane kadhal marthome pukkam....nandethivanthel.....nadekam yen....yenna orui nyabagam,kaavelei sad thoughts* athey avale...... naa puu thi thi.....palar valevikke..all..live* nan valum inthe valkai athedo.... onjal le....athey thalattu kitte tunga vippen athey parkkarethe oru sugam......thevige sugam.....godly. yenna yen kannotile eyes*yen kadhal meimenyanethu....nan uneme ilei anna yen kadhal theivagamanathe.... nan kai pidital nandethal.....kai verai selum ayul varikum nadepen..... kattipiditalum valum yen jenman mukti adinthe vidiven.....thalai mella norki.....katti piditeh.....yen uyir nadai....odum rathathil......sella selakka......kathal vodum.....puUthevidum punchontam garden* puu mallai......ore malaiya..garland*...athelik kalethil Naa athey virimbenan suka*.....uyire uyire.....chela chelaka.....achi arupe.....sethividum ....uyire uyire.....ki na vallum katha....wooden wood log*.mara katha.....poll.....katti tie* vidum alagana kadhal......rendu uyir, ore thudipel valakudem live*.....rendu kolanthey poll.....valum ullam kadhal valum edithil....atherommo anger* poramai yo irukathe....tuyamane kadhal marthomei , vallum jeevan koothil valum ALXDR CHANDRASEKARAN

#
Alexander

காணும் இடமெல்லாம் அழகான பூக்கள் பூத்தது போல் உள்ளது உன் புன்னகை..!

#
Karuppasamy

kadhal kangalil arumbiche.....ottai vilayithethil mudichi....vilayreddu rendu pillange.....! odumbil.....thodta vilaythe illey.....kannil ode vilayureddu vilayuthe mathum thorratil run&catch....kannum puchi vilaythu sex vilaythu......anbil thodengil....neesithil mudiyum vaarai.....voodi pudichi villayathu.....elavu anbil koothil iruke nee arutham...meaning koodethee.....odum ...koolieva chicken* pol ilei...!..anna odum paravai yae....odu odu karkam parevai ya......edum.....viddu poll....... oddum vilayathe poodchotamtil....naa.... oddum vilayathe padikai arrei naa... oddum villayathe camayai areyil kitchen* naa... oddum vilayathe kulikum arrai....naa yeniki migge pudichi......oddum vilayathe oonchal areyil matume...... vilayidum vilayathu....athe odumbil....thoppul kodi....vaithu tummy*....athedo alagane kangal athelil vaithu thoppul kodi kallgel leg* varai kaigal.. .nan vilayadum yen kaigal....pasaithil menmei thodegira edum....athudedo jaddai....katti vickiri....athe uro allage.....nan thodum athedo mudi hair*....athedo koonthal.....yen swarasimane kathal.....thongum pinne jadai..... kallgel varai kaigal...verikum.athedo kall patham mutham vittu.....pukkala.....puthu vipen ...oru amma yendri maniveyava wife*....chuttu.cholaika....yen kaigalil lil.... nan avale thodu thodu yaasipen.....ondru kangalil.....rendu thodum kaigalal...... pakkam purunvotil muddi.....rasachi rasachi kulven......yennal athelil avolodu kangal udo.... mudi kandipage aruverpa irukathe..... ALXDR CHANDRASEKARAN signature: pakkam purunvotil muddi.....rasachi rasachi kulven......yennal athelil avolodu kangal udo......**puruvam vanathil....kangalil mudera.....kangal..

#
Alexander

ஒரு சிலருக்கு நாம் யூஸ் இன் த்ரோ கப் மாதிரி தான் இருக்கோம் போல..

#
Karuppasamy

முடிந்துவிட்டது தான் ஆனால் முடியவில்லை... பயணமாக மாறிப்போய் விட்டது அவளுடன் இருந்த அழகான நினைவுகள்...️‍‍️

#
Karuppasamy

kadhal inikum, kangalle ville kadhal manekum... kadhal oru bothai ilei kadhal manekum oru annam swan* parevai pol neenthugirande parevai swims* athe ore allagiya salai road*....odum neeru, patham alangindre pathai kadaishi salaike selithidividum athedo salai cruise* mingge allagenethi kullerke cold*,panni peyya,sooriyan kadtrii olli yenai kullier irenthu anekum velaile.... nan anekum kuruvi koodhatil sarang* sudtah one* aneneh sit* parevei yah.... antha soodhil panas* na chudha pannitulliyay annen....*pannithuli is hot* kadhal mayekam ilei,kadhal bothai ilei,kadhal tarrum anbe parressi present* kadhalikum anbena viluyol -kadhal velaku inthe annecha pin yeriteh,yerincha pin aneeyathe ALXDR CHANDRASEKARAN signature:antha soodhil panas* na chudha pannitulliyay annen....*pannithuli is hot

#
Alexander

உலகிலேயே மிகவும் ஆபத்தான பயணம்... நல்லவர்களாய் நடிப்பவர்களோடு நம்பிக்கையோடு பயணிப்பது...

#
Karuppasamy

உன்னைப் பிடிக்கவே இல்லை போடா என சொல்கிறாள் என்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டே...!!

#
Karuppasamy

எழுதிய கவிதைகளை  திரும்ப திரும்ப வாசிக்கிறேன்.....!  உன்னை வர்ணித்ததில்  எதுவும் விடுபட்டு  விட கூடாதென........!

#
Prasanth K

எண்ணெயில் வெடிக்கும்  கடுகு போல் அவள்.....! எப்போதும் அவளை  சாந்தப்படுத்தும்  தண்ணீராய் நான்......!

#
Prasanth K

காணாத இடத்தையும் காண செய்யும் உன் நினைவு காணாத கனவையும் உண்மை என்கிறது.. இழுத்து செல்லும் உன் காந்த கண்களும் என்னையும் நிழலாய் இணைந்து கொள் என்கிறது.. கனவிலும் உன் புன்னகை நினைவாகி போனதால் மனமும் உன்னுடன் இணைந்து உறவாகி போ என்கிறது..

#
கவிதையின் காதலன்

annuvo.....penki iruka kudetha......penmei menmeinathe... anuvo....penmei... ..kevalamanethe nan athe oru nimidam.... .nan anuche...irpilele...athe pen swasathil......vekam.....kudi ....penmei pol oru valuvigal vekatil udem...anthe vekatil.....pasam athegam... nan uneye vibrikiren......yerenggi poven....un amblayana messekku nan yen talai head* taluvu annan (yeringge) pambe,pulli,kutthira kudem athiye seiyum ann....ki permei respect* pen....pen ki permei ann..... renduku permei pillai.....inthe permei kathal ulethe..... aann vekam parthathen....athe arupa kurukum.......pen vekam parthala.....athe menmenyanathe pasamtha kurikum...yeringe porethe penmei tanum....passama anugem.....ann ne kaiyikul pothi vicrikithe ile...avane passama thukkrethe.....anbale... kadhaleki ina venulom puriyom.... **manase.....puriyeh.....kathal mathomei selikum ALXDR CHANDRASEKARAN signature:pen vekam parthala.....athe menmenyanathe pasamtha kurikum..(my favorite)..yeringe porethe penmei tanum....

#
Alexander

ann ki ambadiya parthe aruppu illeyiyo this is a statement i am sarcastic as truth(pls respect) atheya pen oru aruppu koodhatil vanthethu..... pen uddall.....tonggiye addum rendu kutha banthu maarre allegirere pey marre tirrenchi.....ann mell..... adthedo koonthal arrupu koonthall illekum palla amblalekiyum athedo vortaiki......vorthaAdikum.....ore pen oorthai Perru valle oorthai arrupu pen ,pen arruppu marrarthe vortai vortai......tha.......kattie kattie.... kattie pol budhi ALXDR CHANDRASEKARAN :signature:none kadhal Allethil valle morthum valekum Ullam Manathi uyire parka morthum, ariyem morthu.....pls get the reason

#
Alexander

விழி மூடும் போதெல்லாம் ஓயாமல் உன் முகம் காணுதே.. விழி அயரும் போதிலும் தினம் உன்தன் நினைவு தோணுதே.. காணாத மனமும் ஏங்குதே உனை காணமல் மனமும் ஏங்குதே.. கண் போகும் இடமெல்லாம் மனம் உன்னை தேடுதே.. காணாத அழகை காணுதே மனம் காணாத அழகை காணுதே.. பூப்போல என் மனம் மலருதே தினம் பூப்போல மனமும் மலருதே.. காணாத மனமும் தேடுதே உனைக் காணாத மனமும் தேடுதே..

#
கவிதையின் காதலன்

தவறுக்கு ஏதேனும் தண்டனைகள் கொடு... கடற்கரையில் எழுதிய பெயரை உடனே அழித்து செல்லும் அலையை போல.

#
Karuppasamy

நான் கொடுக்கும் முத்தங்களை பெற்று கொள்ளடி, நீயும் பெற்று கொள்ளடி.. பிரம்மா படைத்த சொர்க்கம் நீ என்பதை புரிந்து கொண்டேனடி, நானும் அறிந்து கொண்டேனடி.. உனக்கு தான் நான் என்பதை உணர்ந்து கொள்ளடி மனதில் பதித்து கொள்ளடி.. கவிதையில் சிற்பமாய் உன்னையும் செதுக்கி வைத்தேனடி மனமும் சொக்கி போனதடி.. உன் அழகால் விழி இரண்டும் தவித்து போனதடி இமை இமைக்கவும் மறந்து போனதடி.. மனதில் மலர்ந்த காதலும் பல வண்ணமானதடி வானவில்லாய் மனதில் தஞ்சமானதடி..

#
கவிதையின் காதலன்

பார்ப்பதற்கு மட்டும் அழகாய் இருக்கும் பெண்களுக்கு மத்தியில், நீ மட்டும் தானடி நினைப்பதற்கே அழகாய் இருக்கிறாய்...!!

#
Karuppasamy

thottum thotta manathil kangale vortai kurikum yeriyum thotthavin neruppu kangale uyire kuddekkam.... suddha shot* thotta gundalgel marre.....yen kangal vortai.... payum thottakal marre.....kangel kurumeiyanethe.....thottal kall poll parkum kangal..... karthale valkai nesathil kurikatinah......apadi parkam kangal pavathil irunthal kangal villum thotta gundalgel pol....belavina porrerum kangal migge kurumiyanethe.....payum....kangal parvai.....singa.....puli poll parvai migge belamikka ullethe,atherem anger* kulle kanngal...apadi .mige neradgga adikam kangale karte wind*....bramika adikam surya karte....atherem katre.....teEruvikra athram katre sudha thodkalgel..(kan)..migge nerudhoma straight road* nadakam parthai kundethe.....adikam karte wind* vovonui parvai liya kolle seiyum..........kangal...kangalil.....alagenethe.......panthu.....ball* vallede kangal unde....annal pennmei....panthadu ann tevai .kangaley kaidhu seiye.... oru penn maiyeke....kangalil marthum sitham unde mayikum penn....nilla pol....teliva annevel..... padukam nila.....ilei...nesathil athe parthe.... ann nilave (kangal).etha kurumeiya parthuci nenikam avan palamtil fruit* nesam kaAtinal...puukam kangale parke marthan....pukkam kangel manathil ulathil ulle kangal marthemei avan panrthu adenu dance* athedo karthal kangal.....nan uneye virimbikiren...kadhale unakaga valum seivan thottha mige vaikarathu arrogance* kangele.....puukal adikam kathal kangal kangel poi sulathe...... oruven pen nesathil valum ann paiyan.....alage nesikkie..marthem wont* pen inuthai bangsa* nessikeren ann paiyan.....pen madhiyil migge tellivanne anna.....nadapan walk* bummi nessikkaran ann paiyan...pen madike.. .kathukolvan Alexander chandrasekaran signature:avan palamtil fruit* nesam kaAtinal...puukam kangale parke marthan....pukkam kangel manathil ulathil ulle kangal marthemei

#
Alexander

இருக்கமாக வேண்டும் உன் நெருக்கம் என்பது நீ யாரிடமும் சொல்லாத ரகசியம்.. உன்னையும் உன் அன்பையும் எப்படி அளவிடுவது என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்..

#
கவிதையின் காதலன்

நீ வேண்டாம் என்று தூக்கி எறிந்தவள், இன்னொரு ஆணுக்கு, தேவதையாக இருப்பாள்..!" அன்பாக அணைத்து பார்..!" அவள் ஆயுள் முழுவதும், நீ மட்டும் தான், அவள் உலகம் என்று, உணர்த்தி விடுவாள்...!! RK

#
Kalpana Subramaniam

அழகான இரவே..!" உன்னை விடியாமல் இருக்க வேண்டுகிறேன்..!" ஏன் தெரியுமா..? கனவினில் மட்டுமே என்னவன்..!" என்னோடு இருக்கிறான்...!" RK

#
Kalpana Subramaniam

கண்கள் காண முடியாத தொலைவில் நீ இருந்தாலும் கூட.., என் மனதிற்கு சுவாசம் உள்ள வரையும்.., என் தேடல் நீயே...!! RK

#
Kalpana Subramaniam

அவளைப் பார்த்த ஒவ்வொரு கணமும், என் இதயமே சிறக்கடிக்கும் பறவையாய், பேசாமல் பார்த்ததும், சிரிக்காமல் நினைத்ததும், அவளிடயே பிறந்த ஒரு மௌனக் காதல்...!! RK

#
Kalpana Subramaniam

நான் தினமும் சுவாசிக்கும் காற்று, உன் நினைவால் வாடும் போதும் உனக்காகத்தான்..!" என் சிரிப்பின் பின்னாலே, ஒரு துடிப்பு ஒளிந்து கிடக்கும், அது உனக்காகத்தான்...!! RK

#
Kalpana Subramaniam

சண்டை போடுவதால், காதல் குறைவதும் இல்லை..!" உடன் இருப்பதால், காதல் என்றும் சந்தோஷ்த்தையும் தர போவதில்லை..!" அருகில் இருந்தாலும், தொலைவில் இருந்தாலும், புரிதல் உள்ள காதலுக்கு, என்றுமே பிரிவு இல்லை...!! RK

#
Kalpana Subramaniam

விட்டுட்டு போறதும், விலகிப் போறதும், இல்லை காதல்..!" விட்டுட்டே போனாலும், விடாப்பிடியாக, நீ தான் வேண்டும் என்று..!" உறுதியாக இருக்கிறது தான், உண்மையான காதல்...!! RK

#
Kalpana Subramaniam

உன் நினைவோடு என் மூச்சு முடிந்தது..!" உன் பெயரை நெஞ்சின் கடைசி துடிப்பில் உணர்ந்தேன்..!" நான் விழும்போது பூமி அழுதது..!" மரணமும் என்னை மெதுவாக தழுவியது..!" நீ திரும்பி பார்ப்பாய் என்ற, ஒரு நம்பிக்கையோடு...!! RK

#
Kalpana Subramaniam

கல்லுக்குள் ஈரம் என்று அறிந்ததுண்டு, உணர்ந்ததில்லை..!" கல்லான என் உள்ளத்துக்குள், ஈரம் உண்டென்று உணர்த்தியவன் நீ...!! RK

#
Kalpana Subramaniam

பல சோகங்களை தனதாக்கிக் கொண்டு..!" பிடித்தவனுக்காக அனைத்தையும் கடந்து..!" கூடவே இருந்து பாசத்தைக் காட்டும்..!" என்னவளின் அன்பு மிகப்பெரிய பேரன்பு...!! RK

#
Kalpana Subramaniam

என் பிரார்த்தனைகள் எல்லாம், உனக்காக இல்லை எனக்காக..!" என் கோபமோ, சாபமோ, உன்னை எதுவும் செய்து விட கூடாது என்பது தான்..!" ஏனென்றால்.., அது மேலும் எனக்கு வலியை தான் கொடுக்கும்...!! RK

#
Kalpana Subramaniam

கண்கள் அழவில்லை..!" உதடுகள் சொல்லவில்லை..!" இதயம் மட்டும் வலிக்கிறது..!" உன்னை காணாமல்...!! RK

#
Kalpana Subramaniam

நீ பேசாத நாளும், நீ சிரிக்காத பொழுதும், என் மூச்சு ஓயாதது ஏனெனில், அது நீ தந்த இசைதான், உனக்காய் நான் வாழும் உயிரே...!! RK

#
Kalpana Subramaniam

உறக்கம் இல்லாத என் இரவில்,., இறக்கம் இல்லாத உன் நினைவுகளை சுமந்து கொண்டு.., மறக்க முடியாமல் நானும்.., நம்மால் மலர்ந்த காதலும்...!! RK

#
Kalpana Subramaniam

கடக்கின்ற நொடிகளை கேட்டுப்பார், உன் நினைவுகளை சொல்லும்..!" விடிகின்ற பொழுதுகளை கேட்டுப்பார், இரவுகளிடம் எப்படி உன்னை நினைத்து வடித்தேன் என்று...!! RK

#
Kalpana Subramaniam

எனக்காக நான் இருக்கிறேன் என்று நானே எனக்குள் கூறும் போதெல்லாம்..!" கன்னத்தில் முத்தமிட்டபடியேவழிகிறது இந்த கண்ணீர் துளிகள்...!! RK

#
Kalpana Subramaniam

பிடித்தவர்களை இழந்திடும் பயத்தில்.., அவர்களை நெருங்காமலே.., நொறுங்கிப் போகிறது சில இதயங்கள்...!! RK

#
Kalpana Subramaniam

என்னவனே..!" ஆசைகள் யாவும், மறந்து மறந்து போன பிறகு..!" பேராசையாக வந்தவன் நீ..!" என்னுள்..!" என்றும் உன்னுள் நான்..!" என்னுள் நீ..!" உனக்கானவள் மட்டுமே...!! RK

#
Kalpana Subramaniam

நான் சொல்வதை எல்லாம் செய்தாக வேண்டும் என்ற, கட்டளைகள் இல்லாத காதல் அழகானது...!! RK

#
Kalpana Subramaniam

உன் முகம் காண என்னும் போதெல்லாம், என்னுள் ரணமே..!" உன் விழி கண்டு என் விழியின் தவத்தை முழுமையாக என்று, முற்றுப்பெற செய்வோனோ தெரியவில்லை..!" கடல் கடந்து சென்றாய்..!" உன் வருகையை எண்ணி, தினம் தினம் காத்திருக்கிறேன்..!" நீ அனுப்பும் குறுந்தகவலும், உன் ஆறுதலான வார்த்தைகளுமே, நான் வாழ முழு காரணம்..!" ஊடல் கொண்டு இருவரும், மௌன காதல் கொள்ளும் போதும், என் மனம் உன்னை அதிகம் நேசிப்பதை உணர்கிறேன்..!" என்னை நீயும், உன்னை நானும், சமாதனம் செய்யும் நொடிகளில், அன்பு கலந்த வார்த்தைகளும், சுகமான காதலும் நம்மில்..!" நாட்கள் ஒவ்வொன்றையும் நேசிக்கிறேன்..!" உன் வரவை எண்ணி, உன்னவள் நிமிடம் ஒவ்வொன்றும், உனக்கு மட்டுமே சொந்தம் என்பதால்..!" நாளை உன் கரம் கோர்த்து, அக்னி சாட்சியாய் நம் மணநாளை காண காத்திருக்கிறேன்...!! *இதயமாய்* *என்றும் உங்கள்* RK

#
Kalpana Subramaniam

kathal pukkam ullam... melisaiyannithi... ...kadhal ullam punithamathe... bayinthi videthai manithai.....inthe melisai migge belamika....addi beat*....kudeka mudiyum.....yenna sella kovum ucka cheyil....arupa needhe.... anthe oru nimidam....kadhalikum pen na ille marthe penna.....irukum......manAathai.....thathi ketkaorward.....oru ambla marthum porenthe irupanor...athuvom khadilicha marthum puringindra ullam marthummei kadhal papathi poll....vhesyam mukkalle....thadivepoll wipe* oru maha Akara Suran.....mukelle nose*...thadive......muchi theneri.... sethipove kudem..... yennal....kadhal.....oru nelil...stillness*..undathe..kadhal..... suiyamanathe...... alathiyom.....punithamage pakka mudiyom.....annall vhesyum tha.....pundange mudingkingirithe......atheye neelila parke mudikinrethe A corrupt soul came from lust,and an loving soul...is a geinune straightforward soul

#
Alexander

kathal pukkam ullam... melisaiyannithi... ...kadhal ullam punithamathe... bayinthi videthai manithai.....inthe melisai migge belamika....addi beat*....kudeka mudiyum.....yenna sella kovum ucka cheyil....arupa needhe.... anthe oru nimidam....kadhalikum pen na ille marthe penna.....irukum......manAathai.....thathi ketkaorward.....oru ambla marthum porenthe irupanor...athuvom khadilicha marthum puringindra ullam marthummei kadhal papathi poll....vhesyam mukkalle....thadivepoll wipe* oru maha Akara Suran.....mukelle nose*...thadive......muchi theneri.... sethipove kudem..... yennal....kadhal.....oru nelil...stillness*..undathe..kadhal..... suiyamanathe...... alathiyom.....punithamage pakka mudiyom.....annall vhesyum tha.....pundange mudingkingirithe......atheye neelila parke mudikinrethe A corrupt soul came from lust,and an loving soul...is a geinune straightforward soul

#
Alexander

காலை குளித்தெழுந்து கருஞ்சாந்து பொட்டு மிட்டு கருநாகம் பாம்பெனவே கார் கூந்தல் பின்னலிட்டு கனகச்சித உடையணிந்து காதல் காப்பியங்கள் கனிவாக இயற்டிடவே காதல் கொண்டு நான் வருவேன் என் அன்புகாதலியே!!! கவிப்பிரியன். இப்படிக்கு உன் காதலி.

#
BASKAR BASKAR

then kothil....teni ....ten usupi....edukampol.... nan avalai rasichi rasichi.. ten edupen.....todum touch*en karangal.....thee pol yerinchi....avalode kannel....thee....yeriyim...arupu ilei.....annal kannel.....todum...totha...gun* todhe....piriven.....arupu.....kadhal thee ondre polaikum......karangal.....odumbil.... pakathi part* pakathi.....thode.....inthe.....amblai........ kadhalle....udambil body*.......thode thode rusicka.....rusiyem then pol.....theni ye pol..... thode yeddum...palla palacka.........veli ye pol perak* thode edum.....thee perucka.....kadickam.....kannathil....kathale kuricha palekam.bear fruit*.....velli velaku....kadhal palam....kannatil....kalam....bothil.....kathal palam..... nan nesicha pen rendu,onu katha irampinal rendu....kadhal ten iripinal.....inthe thee karupu....thee punitha arupil valthalum....yerkum yerapil death* nokki....valum karangal thodu thodu paleka... ALXDR CHANDRASEKARAN :valum karangal thodu thodu paleka

#
Alexander

idikum un karangal..yen kaigel mell....nan annen uyir thuli....thulicka.....thudikingre uyir nodi.....yen kaigel mell.... anikum.....un swarangal.....yen....swasam....adikinrenge.... mmutavai....slowly* thudikum yen ullam....ullatil....vun made....lap*....thedikinrethe.... vun pakatil irukum antha nodi....varthai......nodetekingrethe.. arupu ilei....aruvi.....ghantam..... parka thudingirithe....parvai.......parvirathamana.... .kathale kurikum.....parvai..... uneniya kanavilai endral.....yelutum en kaigel... pennava thedingirethe.... yeluthu eluthu....thonegindre varthai......piriven kathal .....varnike....marthum ilei....kadhal....voruvu bimbangal.........nenachi nenachi eluthum varthai.....kavitai....kanvingen....akingerenthe volugum.... ALXDR CHANDRASEKARAN .....nan epoluthu kaavichen annan na.....unnaiye kannai villei endru.....antha swamsa notrem...anthe nodi nan valthen valkai allam.....nee ilamai....oorthi love is made stronger during this years.....ist not one but two heart of the same elevation

#
Alexander

kadhal panni thuli poll kadhal swasam yetkam puutateh kadhal thuralliya...nan valhten unneniya partha antha notkel yen nimidam mutevage.....nimisam nimisam....nindril vitaeteh yennall kadhal nimidithil....valendre.....antha valindra...kadhal thuli... meimanyenthudenre.... nan valthen athe notkel... un kayie pathathil..... nan enuvnavatu avvennu nessichi ....nan....avalukku....parthi...swasamtil.... .vallumporthu.... nan avalle avaren..... uddai ore addai......athelil.....nan....menmeiya nessichen.....arruppu uddaliyo addailiyo....illei.....un addai yen...odumkul porrum....anthe sagunam.....nan un nessithil....penmai.....adethen swasamthil....arrupe illei....aruvarekka.....swasamthil jeevan kuudiirikiran vun jevan....yen jevan pol....thudikam swasathil....nan karanam kuruven... thudikam karangel unnaiye valle vicka.... entha.....karanam kurii....ore jeevan thudikam....notre atdde....beat* tuyamane manase marthum jeeva ondre kundethe yen,yan,nee....endode...porul endre......nan urruthen marthum kadhal kondeven... ALXDR Alexander chandrasekaran Remo signature:un addai yen...odumkul porrum....anthe sagunam.....nan un nessithil....penmai.....adethen

#
Alexander

காலை குளித்தெழுந்து கருஞ்சாந்து பொட்டு மிட்டு கருநாகமப் பாம்பெனவே கார் கூந்தல் பின்னலிட்டு கனகச்சித உடையணிந்து காதல்நடை காப்பியங்கள் கனிவாக இயற்டிடவே காதல் கொண்டு நான் வருவேன் என் அன்பு காதலனே!!! இப்படிக்கு உன் காதலி. பாஸ்கர். M. R.

#
BASKAR BASKAR

கிடைக்கும் என்று நம்பிய நாட்களை விட கிடைக்காது என தெரிந்தும் விரும்பிய நாட்களே அதிகம்

#
Karuppasamy

மல்லிகைப் பூ செடியில் மலர்வதை விட உன் கூந்தலில் வாடுவது தான் #பேரழகு.. #என்னவளே..

#
Karuppasamy

அரசு தடை செய்ய வேண்டும் போதையாக்கும் #அவள் கண்களின் பார்வையை..!

#
Karuppasamy

வண்ணமாய் சேலை கட்டி வானவில்லை கண்ணில் காட்டி பார்வையில் அன்பை ஊட்டி என்னை களவாடி போனதெங்கே?.. தனிமையில் இனிமை கண்டு கண் கவரும் சிரிப்பை கொண்டு என் மனதை கொள்ளையடித்து கண் மறைந்து போனதெங்கே?.. தித்திக்கும் தேன் தமிழில் நான் எழுதும் தமிழ் அழகை காணாமல் சென்றதெங்கே?.. காத்து நிக்கும் பூங்கொடியில் தினம் பூக்கும் மலர்களாய் பூக்காமல் சென்றதெங்கே..?

#
கவிதையின் காதலன்

என் மரணப் படுக்கைவரையிலும் உன் மடியில்தான் நான் உறக்கம் வேண்டும்

#
Karuppasamy

Thinal......passikke KUDDE PASSI EDUKUM(UYIRE) thinenum angam uddal uyire.....rathe oduthil kadasile....vortai.... puluve man thodere.....odulelil..... nan avval.....kumbam.....til.....meliyasey.....rathe oduthil addepen.....pen angam yen uddil angam angame avekum.... kumbamtill....(high volatile)dan adekum yen odumbu..yirembe pasamma...athma nelillel...pasamtil uchatill kathum....pove.....kadhal...suyamane... manenelay..kundethe.kalam age* bothelum... vortai......inthe kadase....vortai.....yen kadhal....mutrupulle kurikum..... nan eveloya....kandathe serthalum.....padeka bed* areyil verikum.....avva undetha yen kathal palam.....angam ilei.....aruvil martheme nan yen....tendinen...search* nan yen thodaren....touch* nan yen yerpatil death* valthen....nan ena vinnal anything* seivan Avalleke....pen....aval orthi marthum.... avale marre pen thodram.....pen anggam...kannebothethil.....adum athum.....sella kalam inthe kadase othum....penmei yom anmei kalombothel.....kalam....age*....kalame.... marthum....valum thudkka pen marthum.. athe(her)... .. thudikiren....THASHA/OM GAYARTHI MARTUM..... NEE THODETHIL EVA MARTHUM ILEI... SULENVANGE ade serri samma ge padumne Alexander's chandrasekaran signature :nan eveloya....kandathe serthalum.....padeka bed* areyil verikum.....avva undetha yen kathal palam.....angam ilei.....aruvil martheme

#
Alexander

thodurum nilave padethal....(sleep)passi thirathe.... vun kadhal....yeriyum....yen kangal....karthum kadhal... passi.....edukam kangal....angam thedathe....uyir kadhal thudipe nerambil toll (skin)patham,mell tholl padiyum.....uyire.....nerambil....kadhal..... kadhal puu marthum puukathe,palekum.....thodare thodare.....kadhal palam....rendu.andam...pambe(snake) polle.....palam tholle thode.....kakkum (waiting longer) venthill....kadhal kurikum.....

#
Alexander

thodurum yen kai..kel un mela.... thodu.a ambla vinnu yenna thodum pen palle palle poll....swasam poll thudikum.... thundingkira thudipe....swasamo,palle....ille.....suiyamane kathal thudipe....nerambil ratham....oduthil nerambeya ann pall.......yenna paasamika thudike... pen mela......oru ann ann irunthal porthathe.... ambla meesa murukalonu porthathe.....ambla marre valle therinu... ambla ippe ambla avarena.....pen thudipel valle theriye morthe...swamika jeevan poll....valle morthe...kathale jeyam kulvai......pen mandram vun kalle adiyel....yenna pen swasam kadhal kondethe kadhal jeyam suthamane....jeevan thanthe valve jeevikum kadhale marthun pen odumbil.....yenna brama oruvakina pen odumbil kadhal palam....sapithal...uneve pol pendu veedum..... thoodamel thookal kadhal palekum... a playboy in the making.... Alexander chandrasekaran signature:kadhal palam....sapithal...uneve pol pendu veedum.....

#
Alexander

கூட இருப்பவர் தான் குழி பறிப்பார் என்றால் பிரம்மன் உன் கூட இருந்தாரா? உன் கன்னத்தில் அழகாய் குழி பறித்திருக்கிறாறே... ️️️

#
Kalpana jayavel

nee yar? yen paasamika penmei thoota aruverpa...... athe yen paasamika thai,apparom annal yen manave yar.....*may* mary* mary jane* nee ooru arrupu bootholkul kul vanthe viidemathai.....yenna boothu sapera tha thonu anna thareyimah thoothe irukirai... nan alagay neesikilai.....annal nesam alagai kundethe.....pasam,kathal vithe vilechem kadhal punithai the kundethe kadhal....likum pen alaga irukunum kande aan maagekel ariyil nan yen manavi arennu marthum thonechi athe yen manavi annal porthum indru avano athe aruverpa neeseekeran.... yenna alage.....suthamane mananelay kundethe.....annol indru avan karuvil vanthe manave alage,aruverpa alageki thinna*eat senthi nan athedo alage neesekilai anna antha alage nithcham uyire thedi selra alage yen manave indral yen itdayam valikundre yen manna neelai vallekithe.....athey *arumanam* kondethe ALXDR CHANDRASEKARAN :signature:vallekithe.....athey *arumanam* kondethe

#
Alexander

உனைக் கண்டதும் என் கண்கள் தீப்பிடிக்கும்.. என் இதயமும் அன்பில் இதமாய் துடிக்கும்.. கண்ணத்தில் முத்தமிட ஆசை அடம்பிடிக்கும்.. கையிரண்டும் கட்டி கொள்ள இடை தேட நினைக்கும்.. கண்ணும், கண்ணும் கலந்து காதல் வடம் பிடிக்கும்.. இதழோடு இதழ் சேர்ந்து மூச்சு விட மறக்கும்.. தனை மறந்து மனமிரண்டும் விண்மீனாய் பறக்கும்.. இரு மனமும் ஒன்றையொன்று ஆசை தீர அணைக்கும்.. பௌர்ணமியின் வட்ட நிலவாய் உன் முகமும் சிவக்கும்.. மல்லிகையின் புன்னகை என் மனதை மயக்கும்.. எய்துவிட்ட அன்பைப் போல் என் விழியும் துடிக்கும்.. உன்னை சுற்றியே என் மனமும் புள்ளிமானாய் குதிக்கும்..

#
கவிதையின் காதலன்

உன் விழி தீண்டும் சுகம் காண விலகாமல் காத்திருந்தேன்.. உன் விழி போகும் இடமெங்கும் நிழலாக தொடர்ந்திருந்தேன்.. விழி செய்யும் நாட்டியத்தில் என்னையே நான் மறந்திருந்தேன் தித்திக்கும் செந்தேனாக உன் குரலோசை கேட்டிருந்தேன்.. சங்கீதமோ இதுவென்று கண்மூடி மகிழ்ந்திருந்தேன்.. பிரம்மனும் பிரமித்ததை போல் உன் அழகில் மூழ்கிருந்தேன்..

#
கவிதையின் காதலன்

நீ என்னை ஏமாற்றிவிடலாம் உன்னை யாரோ ஒருவர் உன்னை ஏமாற்றாமல் பார்த்துக்கொள் by Kani

#
THARSON B2K

நீ மட்டும் போதும் எனக்கு ️‍

#
SUDHAR SANAM

வசந்தகால தென்றலில் உனைத் தேடியே அலைபாய்கிறது மனம் நந்தவனத்து வண்ணத்துப்பூச்சியாய்

#
Saravanan T

அவ அழக சொல்ல வாத்தகுட பத்தால.!!️‍

#
SUDHAR SANAM

ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் அவள் "ஒருத்தியின் அன்பிற்கு ஈடு ஏதுமில்லை ️‍️‍

#
SUDHAR SANAM

உனதுருவம் கண்டதுமே நெஞ்சமுருக தொடங்குதடி.. கனவிலும் முகம் காண கண் உறக்கம் நாடுதடி.. கையிரண்டும் உனையடைய போராட்டம் செய்யுதடி.. கண்ணிரண்டும் உனை தழுவ உன் வரவை தேடுதடி.. காத்திருந்து, காத்திருந்தே விழி மூட மறந்ததடி..

#
கவிதையின் காதலன்

kadhalikum isai swarengkal....bummi thottam....kaatum kadhal oru meliyaseina padal...kondethe..swarengkal varthai kondethe.... varthai mattu meiyum

#
Alexander

காதல் ஒரு போதும் இயற்கை மரணம் அடைவதில்லை..!" ஈகோ, அவமரியாதை, சுயநலம், துரோகம், நிராகரிப்பு ஆகியவைகளால், காதல் கொல்லப்படுகிறது...!! RK

#
Kalpana Subramaniam

நமது விழிகள் கலங்கும் போது, நம் கண்ணீரை துடைக்க முன் வரும் கரங்களும்..!" நாம் சோகத்தில் இருக்கும் போது, நம்மை அரவணைக்க முன் வரும் கரங்கள் தான்..!" உண்மையான காதல்...!! RK

#
Kalpana Subramaniam

பார்த்ததும் பிடிப்பதற்கு அழகு காரணமாக இருந்தாலும்..!" பழகிய பிறகு பிடிப்பதற்கு, அன்பு மட்டும் தான் காரணமாக இருக்கும்..!" முதலில் அன்பு.., பின்பு தான் அழகு...!! RK

#
Kalpana Subramaniam

உனதன்பு தீண்டலின்றி உள்ளத்து உணர்வுகளும்.., உயிர்பிக்கும் கவிதைகளும்.., கண்ணீறைக்கும் கற்பனைகளும்.., கற்பனைக் கெட்டாத காட்சிகளும்.., உன்னை இயக்கும் மையும்.., என்னிதயம் இயக்கும் மெய்யும்.., உளர்ந்து தான் போகின்றன.., பாலை நிலம் போல...!! RK

#
Kalpana Subramaniam

தன் துணை தேடி சுவர் பல்லி அழைக்கும் ஓசை கேட்டிடும் போது, நீ என்னை நினைப்பதாகவும்..!" விழித்தெழுகையில் துடித்திடும் இடதுகண் அசைவிற்கும், நீ என்னை தேடி வருவதாகவும், நினைத்துக் கொள்கிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

உதயம் காணும் ஆவல்கொண்டே.., அலைகள் ஆடும் கரையில் நின்றேன்..!" அலைகள் தாண்டி அவதியின்றி., அழகாய் வந்தான்..!" கண்கள் அவனை கண்டு மலரக்.., காத்திருந்த நேரம்..!" எங்கிருந்து முளைத்தது.., இந்த முழுமதி என்னெதிரே...!! RK

#
Kalpana Subramaniam

எங்கோ பிறந்து எப்படியோ என் வாழ்வில் வந்தாய்..!! உன்னை நான் பார்க்காமல் இருந்திருந்தால், என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை..!" என் ஜீவனே...!! உன்னைக் கண்டதும் காதல் வந்தது..!" ஏன் என்றும் தெரியவில்லை..? என்னை உன்னிடம் ஈர்த்தது எதுவென்றும் புரியவில்லை..!" தெரிந்தால் சொல்லுடா என் இதயத் திருடனே...!! RK

#
Kalpana Subramaniam

கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறேன் உன் முகத்தை..!" மறக்க மறக்க ஊற்றாய் வருகிறது உன் நினைவுகள்...!! RK

#
Kalpana Subramaniam

உன் இடைவிடாத இந்த நெருக்கம், என் ஆயுள் முழுவதும் வேண்டும், அன்பின் கைதியாக...!! RK

#
Kalpana Subramaniam

பட்டும் தெரியவில்லை, விட்டு சென்ற ஒன்றை தான், விடாமல் நினைக்குது இதயம்...!! RK

#
Kalpana Subramaniam

என் இதயத்தை அறுத்து, உன் கைகளில் கொளுத்து விடவா..!" அப்பொழுதாவது உன்னை நினைக்க, மறக்கிறதா என பார்க்கிறேன்..!" கண்களை முட்டி நிற்கும் கண்ணீரையும்., தொண்டையை அடைக்கும் துக்கத்தையும்.., சுற்றி இருப்பவர்களிடமிருந்து மறைக்க, நூல் அறிந்த பட்டம் போல்.., தவித்துக் கொண்டிருக்கிறேன்..!" ஏனென்றால்., என் காதல் தான் ரகசியமாயிற்றே..!" நான் யாரிடம் சொல்லி ஆறுதல் தேடுவது...!! RK

#
Kalpana Subramaniam

இந்த அவசரமான உலகத்தில்.., அவசர அவசரமாக இயங்கி கொண்டிருக்கும், உன் நாட்காட்டியில், எனக்கு ஒரு நாளை கடனாக கொடு..!" உன் விரல் பிடித்து என் தோள் சாய்ந்து காலேஜ் மணலில் நடந்து சிறு தேனீரோடு கடந்து விடுகிறேன் அந்த நாளை..!" என் வாழ்நாள் முழுவதும், இந்த ஓர் நாள் போதும் உன் நினைவில் வாழ்ந்திட...!! RK

#
Kalpana Subramaniam

பிரிவின் வேதனை உணர்கிறேன்..!! உன்னை நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும், பிரிவின் வேதனை மறக்கிறேன்..!" வாழ நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு காதலும், ஒரு சாதனை..!! நம் காதல் ஒரு சிறு வேதனை...!! RK

#
Kalpana Subramaniam

அவள் நிழலும் விழாது, நிலவில்லா ஒளியில்..!" என் வாழ்வும் தொடராது, நீ இல்லா நொடியில்...!! RK

#
Kalpana Subramaniam

காகிதத்தில் எழுதிய காதல், காற்றோடு காற்றாக சென்றது..!" இதயத்தில் எழுதிய காதல், இதயமே இல்லாமல் பிரிந்து சென்றது...!! RK

#
Kalpana Subramaniam

ஆயிரம் காரணங்கள் உண்டு..!" என் கண்களில் வழிந்து ஓடும் கண்ணீர், ஆயிரம் காரணம் சொல்லும்..!" ஆனால்.., என்னை ஆறுதல் கூறும், ஒரு வழி கூட என்னிடம் இல்லை...!! RK

#
Kalpana Subramaniam

புத்தகங்கள் மீதும், கவிதைகள் மீதும், பொறுப்புகள் மீதும், புதிதாக காதல் பிறந்துள்ளது அவளுக்கு..!" அதனால், சிறகுகள் முளைத்த வண்ணதுப்பூச்சியாய், அவற்றை சுற்றி வலம் வருகிறாள் அவள் வழியில்...!! RK

#
Kalpana Subramaniam

அவளை முன் நடக்க வைத்து.., அவளுக்கு பின் நடப்பது.., ஒரு போதை எனக்கு...!! RK

#
Kalpana Subramaniam

கண்கள் பேசியது அன்று..!" கடிதம் எழுதியது அன்று..!" கல்யாணம் பின், காதலித்தது அன்று..!" காதலுக்காக காத்திருந்தது அன்று..!" ஆனால்.., கை பேசியில், கனம் பொழுது சண்டை வந்தால், கைமாறுகிறது காதல் இன்று...!! RK

#
Kalpana Subramaniam

இரண்டு உடல்கள் வசிக்கும், ஒற்றை ஆன்மாவின் வடிவம், காதல்..!" அதன் உயிர் எப்போதும், பிரிவது இல்லை...!! RK

#
Kalpana Subramaniam

கோடி கோடியாய் ஆசைகள், இதயத்தை சூழந்தாலும்..!" ஒற்றை நிலவாய் உன்னை அடைவது தான்..!" தீராத ஆசையாய், தினம் தினம் பிறக்கிறது, என் இதயத்தில்...!! RK

#
Kalpana Subramaniam

தேடிய விழிகளில் தேடாமல் வந்தவள்.. வானவில்லின் வளைவுக்கு வண்ணம் சேர்த்தவள்.. வர்ணிக்கும் வார்த்தையில் செந்தேன் கலந்தவள்.. துளையிட்டு என் மனதை தொடர் கொண்டவள்.. சிரித்தே என்னை சிறைப் பிடித்தவள்.. அகத்தின் அழகை முகத்தில் காட்டியே வலம் வந்தவள்.. தொடர் வண்டியாய் பின் தொடர்ந்தே மனதில் இடம் பிடித்தவள்.. காத்திருந்த என் மனதிற்குள் வேரூன்றி பூங்கொடியானவள்..

#
கவிதையின் காதலன்

கற்பனையிலிருந்தவன் கண்ணெதிரே தோன்றவும் சொப்பனமோ என்றெண்ணியது மனம்

#
Madu Sandhya

கண்ணீர் எனக்கு பிடிக்கும் அது கவலை தீர்க்கும் வரை! உறவுகள் எனக்கு பிடிக்கும் அது உரிமையாக இருக்கும் வரை! உன்னை எனக்கு பிடிக்கும் என் உயிர் பிரியும் வரை!️️️️ <3 <3

#
Madu Sandhya

சிவந்த கலர் சேவையில் சிரித்தது பூ ஒன்று.. சிந்தை மயக்கும் வாசனையில் தலையிலோர் பூக்குன்று.. காவலுக்கு தனியாக ஒத்த ரோஜா பூக்கண்டு.. நாணத்தில் கண்ணடியும் கண் அயர்ந்து போனதின்று.. அணிகலன் அணிந்து அலங்காரமிடாத அழகில் கண்களும் சொக்கித்தான் போனதென்று .. பூலோகமே தவிக்கிறது இன்று..

#
கவிதையின் காதலன்

தனிமையைவிரும்பாதேநான்இருக்கிறேன்உனக்காக

#
Pandaya Rajam

சோம்பல் கொண்டு அழுக்காடை நீக்காது தலை வராது நிற்கிற என்னை எனக்கே பிடிக்காது தான். ஆனால் ஒரு நொடியும் எனக்காய் எனை மாற்றியதே இல்லை. இன்றோ ஒவ்வொரு நொடியும் மாறியும், மாறிக் கொண்டேயும் இருக்கிறேன் காதலே.

#
கவிதா

நீல விசும்பிடை நிந்தன் முகவரி தேடினேன் நீ தான் நிலவின் கேளீர் என்று எனினும், நிந்தன் அடையாளம் கேட்டது அந்த கார்முகில் தொகை நான் கூறினேன், முதலில் அவள் யார் என்பதை நான் அடையாளம் கண்டு பின் தான் கூற முடியும் வான் குடி கூட்டங்கள் என்னை எள்ளி நகைத்தன, இருப்பினும் உன்னை ஓர் நாள் வந்தடைவேன் காத்திரு என் காதலுக்காக....

#
செந்தமிழ் செல்வன்

விளக்கைஅனைக்கும்போதுஇரவில்வராதநிலாஉன்னைநினைகக்கும்பொழதுஇரவில்நிலாவந்தது

#
Pandaya Rajam

என்னவள்என்னைவந்துசேரும்வரைஎன்மனதுக்குள்மட்டுமேஒலிக்கும்என்கவிகள்

#
Pandaya Rajam

அவளை யாருக்கும் தெரியாமல் ரசிக்கும் என் விழிகள் நான் ரசிப்பதை ரசிக்கும் அவள்விழிகள்

#
Pandaya Rajam

தேடாமல் கிடைக்கும் வரம் நீயேநான்தேடினாலும்கிடைக்காதவைரம்நீயே

#
Pandaya Rajam

கலங்கரை விளக்கு கடல்ஒரத்தில்நீயேஎன்மனதுஒரத்தில்

#
Pandaya Rajam

துள்ளியாடும் முயல் குட்டியின் விழிக் கொண்டவள்.. தேன் சிந்தும் பூஞ்சோலையின் இதழுடையவள்.. புள்ளிமானின் துள்ளலாய் துடிப்பானவள்.. கண் மயங்கும் அழகிற்கு சொந்தமானவள்.. மனம் கவரும் போதேல்லாம் வானவில்லானவள்..

#
கவிதையின் காதலன்

பூஞ்சோலையில் பூ பறிக்கும் பெண்ணே பூவை விடவும் உன் புன்னகைதான் பூத்திருக்கிறது அழகாக.. காத்திரு பெண்ணே பூத்திருக்கும் பூவும் காதல் கொள்ளும் உன் மேல் உனது புன்னகையை பார்த்து..

#
கவிதையின் காதலன்

கடவுள் என் ஒவ்வொரு விரல்களுக்கும் இடையே... இடைவெளி விட்டு படைக்கப்பட்டதன் காரணத்தை நான் உணர்ந்தேன் அவற்றை உன்* *விரல்களால்* நிரப்பவே

#
Karuppasamy

உன்னை காதலிக்க தெரிந்த எனக்கு ... உனக்காக காத்திருக்கவும் தெரியும்

#
Karuppasamy

ஆழ்மனதின் ஆசையென்றும் எளிதாய் வெளியே தெரியாது.. வெளிக்காணும் ஆசையென்றும் எளிதாய் மனதை விட்டும் போகாது.. வெற்று மனதில் தன்னை பதிக்காமல் ஓய்வென்றும் கொள்ளாது..

#
கவிதையின் காதலன்

பொய்கள் கூட புனிதமாகும் உன் புன்னகை ஒன்றே என் இன்பமாகும் ...KB

#
kesavan k7

தொலைவில் இருந்தே உன் அழகில் மனம் தொலைத்து போன என்னை சிறைப்பிடித்து வைத்ததேனோ..? விழியாடும் நடனத்தில் என்னை மூழ்க செய்துவிட்டு இமை மூடும் ஒரு நொடியில் எனை கவர்ந்து போனதேனோ..?புன்னகையில் போதையூட்டி மனம் மயங்க செய்து விட்டு விழி மறைந்து போனதேனோ..? பூத்திருந்த மலரையும் காத்திருக்க செய்து விட்டு பூக்காத மொட்டுக்குள் தேன் குடிக்க சென்றதேனோ..? பூக்காத மொட்டின் மேல் உன் தேடல் இருந்தாலும் சுரக்காதே தேனென்று அறியாமல் போனதேனோ..? இளமை கால கனவெல்லாம் கலைந்து விடும் என்பதையும் அறியாமல் போனதேனோ..? ஐந்து முறை எட்டை தொட்டு விட்ட போதிலும் துணை தேடல் இல்லாமல் தொட்டுவிட்டு சென்றதேனோ..? நடைபயிலும் குழந்தையாய் உன் நடை தடுமாறும் போதெல்லாம் கைபிடித்து உறவாட துணை தேட மறந்ததேனோ..? கரு கரு கூந்தல் கலர் இழந்து போனாலும் பார்க்கும் பொருள் யாவும் கலையிழந்து போனாலும் வண்ணமிழக்காதது காதல் என்பதை நீ அறியாமல் போனதாலோ..?

#
கவிதையின் காதலன்

பூமியை சிரிக்கவைக்கிறாள்அழதகண்களோடுமழை

#
Pandaya Rajam

மொட்டு கதவை பட்டு வண்டுகள் தட்டுகிறது

#
Pandaya Rajam

பூவை இவள் பார்த்த விட்டால் பாலைவனம் ஊத்துஎடுக்கும்

#
Pandaya Rajam

கிடைக்கும் நேரம் உன்னோடுதான்

#
Pandaya Rajam

நிலவுக்கு போய் பார்த்து சொன்ன பிறகு தான் புரிந்தது தூரமாய் இருந்து பார்த்தால் தான் எல்லாம் அழகு என்று!

#
Pandaya Rajam

யாரை தேடி அலைகின்றது என்று தெரியவில்லை இந்த நிலா இரவு முழுவதும்

#
Pandaya Rajam

கடன் வாங்கி உனக்குகவிதைஎழுதுவேன்

#
Pandaya Rajam

உண்மையான உறவுகள் எனக்கில்லை என்றபோது உடைந்தது என்மனம் ஊனமாகியாது என்உலகம் உயிர் மட்டும் இனி எதற்கு என நினைக்கையில் உறவாக வந்து என்உயிரோடு கலந்த உன் அன்பிற்கு ஈடேதுமில்லை மாமா Miss you da thangom bt Always love you chellame️

#
Rashi Pirem

எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையும் இல்லை எதிர்பார்ப்பதெல்லாம் வாழ்க்கையில் கிடைப்பதுமில்லை

#
Karuppasamy

நீ என் மீது கோபமாக இருந்தாலும் எனக்கு இன்பமே.. ஏனேன்றால் சந்தோஷத்தில் இருப்பதை விட, கோபத்தில் நீ என்னை அதிகமாக நினைப்பாய்!

#
Karuppasamy

அவமானங்களால் வாழ்க்கையில் அதிக தெளிவு கிடைக்கிறது... சிலரை புரிந்து கொள்ளவும் முடிகிறது...!!

#
Karuppasamy

கடலில் தூண்டில் போட்டும் சிக்கவில்லை மீன்கள் பெண்ணே உந்தன் கண்களை கண்ட பிறகு..சாந்தமுடன்‌.syed

#
Basha Syed

< one side love...> √ #மனம் விட்டு பேச தயாராக இருக்கும் மனங்களே இங்கு அதிகம் காயப்படுகின்றன ..,

#
Karuppasamy

வானில் இருட்டு இன்று அமாவாசை மதிக்கு இன்று விடுமுறை என் எதிரே பட்ட பகலாக வெளிச்சம் எதிரே முழுமதியாக என்னவள்

#
vasathi

உங்களை பார்த்ததும் எனக்கு ஒரு கவிதை ஞாபகம் வருது சரி சொல்லுங்க ஆஃப் சாரியில் உனை பார்த்ததும் ஆஃப் ஆகிப்போனது என் இதயம்..!

#
Karuppasamy

நீ இல்லாத நிமிடங்கள் கூட எனக்கு சுகமாய் தான் இருக்கிறது ஏன் தெரியுமா அப்போது தான் உன்னை பற்றிய நினைவுகள் அதிகமாக இருக்கிறது பெண்ணே..சாந்தமுடன் SYED

#
Basha Syed

kathal passi edukathe... kathal panna....passi kudde ninde vidum... kadhal yeckum alla katren vaallai.... pungavanumtil ore puu puttal....malai️sirihe adekah....mallai️ katre.....vasam....puckum anthe puu mell visieyem.....ponkratre...mallai...otre vanam....otre vannam.....adekah kathal puungavam mallai vassel.... anthe otre puu ke kadhal ore pungga mallai.....vassal....vannam visieyem vanam.....mallai mel adekam....kathal thurral thurral uyisire karraikum....kanlal ileh uyisire.....manasal.... signature:kadhal ore pungga malai :thurral uyisire karaikum :ponkrate ponkrate....puthe puu....ayirim....visii ponal ore puu.....manam ondre....kadhal meiyapadum ondremell...rendu munne kadhal pariyum orthanki.....arputhan valum ALXDR CHANDRASEKARAN

#
Alexander

உன் ஜிமிக்கிகளில் ஒன்றைக் கழட்டிவிட்டு என்னை மாட்டிவிடு.. எனக்கும் ஊஞ்சலாட ஆசையாக இருக்கிறது!

#
Karuppasamy

கண்ணாலே மயக்குரியே செ ம கட்டையாய் உன்னாலே நான் சாஞ்சி பொட்டன் வாழ மட்டையாய்

#
Mohamed

என் கண்களுக்கு முட்கள் தெரியவில்லை மலர் மட்டுமே தெரிகிறது....என்றார்கள் கேட்டுப் பாருங்கள் அந்த மலருக்கும் அதைப் பறித்தவருக்கும் மட்டுமே முட்களின்

#
Karuppasamy

உன் அலைபாயும் கண்களை விட ஒரு அழகான கவிதை இருந்து விட போகிறதா என்ன?!

#
Karuppasamy

பேச்சுத் துணைக்கு ஆயிரம் பேர் இருந்தாலும் வாழ்க்கை துணைக்கு நீ மட்டும் போதும்...

#
Karuppasamy

பிடித்தவர்கள் சொல்லும் போது மட்டுமே சில வார்த்தைகள் பிடித்து போய்விடுகிறது!️

#
Karuppasamy

அன்பே என்னை மறந்து விடு என்றாய் நீ நானும் உன்னை மறந்து விட்டேன் இன்று நீ என் கல்லறையில்....

#
Basha Syed

மறைந்து போகும் நிழலழகில் மனம் மகிழ்ந்து போனேன்.. கிறங்க வைக்கும் சிரிப்பழகில் எனை மறந்து போனேன்.. தித்திக்கும் செந்தமிழில் மனம் சிதறி போனேன்.. தமிழ் சொல்லில் செந்தேனை தினம் கலக்க போனேன்.. மயங்க வைக்கும் உனதழகை அதில் குழைக்க போனேன்.. இடையாடும் நடனத்தில் விழி தடுமாறி போனேன்.. மனதிற்குள் சுரம் எழுதி கவிஞனாகி போனேன்..

#
கவிதையின் காதலன்

அன்பே நான் உறங்க வேண்டும்… அழகான உன் விழிகளில் இடம் கொடுப்பாயா...?

#
Karuppasamy

நான் உன்னை பறிக்கலாமா..? என் இதயத்தில் விதைக்கிறேன்..!!!!

#
Karuppasamy

பெயரில் மட்டுமல்ல உண்மையில் மின்னல் வந்து மறைந்து போனால் மறுபடியும் காண துடிக்கிறேன் தரிசனம் கிட்டவில்லை ஒருவேளை கார் காலத்தில் மட்டும் வருவாளா நம்பி காத்திருக்கிறேன்

#
vasathi

வாடகை ஏதும் இல்லாமல் என் மனதில் குடியேறிய வாச மல்லி நீ..... உன் வருகையால் வாடிய என் மனதும் வசந்த மாளிகையானதே.....

#
BALA K

என் தொலைபேசியும் அனாதையானது...... உன் விரல் (வீனையில்) வாசிக்கப்பட்ட எழுத்துக்களை தூக்கி சுமக்காததால்......

#
BALA K

anbe pasam manethi anbe pookum manathil pasam ponggum kadhal avvarethe ore koddamlethil anbu anbu yerpa nenge morthem mutham thee piidekum mutham muthamil sangu tamilan kudethal mutham tamil mutham endri perru eddukam perrukke tamil muttam endralum kadhal bummi le mallai yelichi nickam nikem mallai kadhal kurikum......the heart MALLAI shooting star in the mind ALXDR CHANDRASEKARAN SPECIALITY:perrukke tamil muttam endralum

#
Alexander

திருடியது குற்றம் தான் ஆனால் என் மனம் தண்டனை தர மறுக்கிறது அவள் திருடியது என் இதயம் என்பதால்.

#
Basha Syed

கண்ணோடு கண் கலந்தது என்னை உன் பால் ஈர்த்து கொண்டாய் இதுதான் காந்தப்பார்வையா முத்துப்பல் தெரிய நகைத்தாய் நான் சொக்கி போனேன் இதுதான் மோகனபுண்ணகையா உன்னை பார்த்ததும் என்னை இழந்தேன் இதுதான் காதலா ‌. வசந்தி

#
vasathi

நீ எப்பொழுது உதித்தால் என்ன... அன்பானவளின் காலை வணக்கம் என்ற குறுஞ் செய்திதானே எனது விடியலின் ஆரம்பம்...

#
Chandra Sekar

ஒரு முறை என் காதலுக்காக உன் மெளனத்தை கலைத்து விடு..... கை கோர்த்து நட்பாய் நாம் நடந்தாலும்..... மெளத்தின் விடை தெரியாமல் ஊனமாகவே கடக்கிறது நம் காதல்....

#
Chandra Sekar

நிலவும் அழகாக தெரிகிறது..... அன்பே..... ️ நீ இல்லா சில இரவுகள் மட்டும்....

#
Chandra Sekar

அன்று ஒரு நாளைக்கு 100 மெசேஜ் என்று இருக்க.. காலையில் 1இல் தொடங்கி மாலைப்பொழுது மறையும் வரை தொடர்ந்து அந்த 100 மெசேஜ்.. இன்று ஓரிரு மணித்துளிகளிலேயே மரணிக்க விட்டாயடி.. உந்தன் மனம் கவர்ந்த பேச்சினால்... ..

#
Surendar s

இதயத்தில் நான்கு அறைகளை வைத்துக் கொண்டு... இடம் தர மறுக்கிறாள் ... கல்நெஞ்சக்காரி.. கார்டியாலஜிஸ்டும் படிக்க முடியாத இதயம் அவளது இதயம்.. - வியாசை அரி

#
வியாசை அரி

 அன்பு தோழியியே நம் பள்ளி பருவ காலத்தில் உன் மீதான என் புரிதல்களுக்கான அர்த்தங்களை தேடித் தேடி தேய்ந்தோடியது என் நாட்க்கள்.  மறுபக்கம் என் மீதான உன் பற்றற்ற நட்பு எனும் கடலின் ஆற்பரிப்பில் சிக்கி கொண்டு மீல முடியாமல் தத்தளித்த படியே தவிப்பின் உச்சத்தில் உருண்டோடியது என் நாட்க்கள். இறுதியாக காலம் கடந்தோடிய பிறகு உன் மீதான என் புரிதலில் ஆழ்ந்துள்ள அதித அன்பினால் என் மீதான உனது நட்பின் கோட்பாடுகளை முறண்பாடுகளாக கருதி உன் நட்பை ஏற்க்க மறுத்து தனிமையில் வாடியது என் நெஞ்சம்.

#
Ikutty

 சுமந்து சுமந்து சுமைகளும் சுகமானது. மறக்க மறக்க மங்கை அவள் நிணைவுகள் மாரி போல் பொழிந்து மனதை மூழ்க செய்கிறது. திகட்ட திகட்ட கிடைக்க பெற்ற தீரா வலியால் மனமோ மாண்டு போனது. பேதை அவளின் பிரிவை எண்ணி எண்ணி மனமோ இருள் உலகில் ஆழ்ந்து போனது. இருண்ட  இவ்வுலகில் தனிமையை தேடி மனமோ தவித்தவித்தது. தனிமையின் புரிதலால் மனமோ தெலிவானது. தெலிவு பெற்ற மனமோ வாழ்கையை துலைத்து வாடி போனது. எல்லாம் இந்த காதலால்........

#
Ikutty

அழகே வியந்து போகும் உன்னழகை கண்டு சிலையாகி போனேன்.. உன்னிடையாடும் நளினம் கண்டு நினைவிழந்து போனேன்.. விழியாடும் நடனம் கண்டு தடுமாறி போனேன்.. வசீகரிக்கும் புன்னகையால் என்னை மறந்து போனேன்..

#
கவிதையின் காதலன்

தொலைவில் இருந்தாலும் தொல்லையாகதான் இருக்கிறது... என் கைபேசியில் உன் செயல்படாத கைபேசி எண்கள்....

#
Chandra Sekar

தொலைவில் இருந்தாலும் தொல்லை தருகிறது கைபேசியில் உந்தன் கைபேசி எண்கள்....

#
Chandra Sekar

#உன்னை நினைக்காமல் இருக்க பழகிக்கொண்டேன்... #அழைக்காமல் வரும் உன் ஞாபகங்களை என்ன செய்ய..??

#
Karuppasamy

தேடல்களில் தேட முடியாத தேடல் நீ தேடித்தான் பார்கிறேன் ....

#
கவி ஆர்ட் அரசன்

நான் உன்னை தொடர்புகொள்ள இயலாத சூழலில் என்றால், நீ என்னை நினைத்தால் போதும் என் இருதயம் உன்னோடு உரையாடும்..!

#
Karuppasamy

கடைசி மூச்சின் சுவாசம் என்னை விட்டு கடந்து செல்லும் வரை உன்னை காதல் செய்ய வேண்டும் தீராத காதல் ஆராத காதல் ️...

#
Karuppasamy

நீயாகி போன என் நாட்களுக்கு எப்படி புரிய வைப்பேன். அவள் எனக்கானவளும் இல்லை எனதும் இல்லை என.. நகர மறுக்கிறது.. நேரமும் தான் என் நாட்களும் தான் அவளை பார்க்காத வரை...!

#
Karuppasamy

உன்னையே எனக்கு பிடிக்கும் என்றான பின் நீ கொடுத்தவை எப்படி பிடிக்காமல் போகும் ? நீ கொடுத்த பிரிவை கூட நான் நேசிக்கிறேன் காரணம் அதுவும் நீ கொடுத்தது

#
Karuppasamy

பார்ப்பதற்கு மட்டும் அழகாயிருக்கும் பெண்களுக்கு மத்தியில் நினைப்பதற்கே அழகானவள் நீ

#
Karuppasamy

மறைத்தேன் மறக்கவில்லை

#
Kayalvizhi Pazhaniyappan

ஆசை ஆசையாய் காதலிக்கனும் ஆசை தீர காதலிக்கக் கூடாது..!

#
Karuppasamy

எதுவும் சரியில்லாத போதும் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவது தான் 'வாழ்க்கை'...               ️தனிமை                        

#
priya

அறியாமல் உன்னையும் கேட்காமல் என்னையும் எனக்குள் நுழைந்தவளே.. காணமல் உன்னையும் பார்க்காமல் நேரிலும் காதலில் வீழ்ந்தேனடி.. ஜன்னலோரம் இடம் பிடித்து கைகளால் இடை பிடித்து மயக்கும் விழிகளில் வீழ்ந்தேனடி.. மோகத்தில் உனைத்தேட கைகள் இரண்டும் துணைத்தேட இதழ்களால் உன்னை தழுவி கொண்டேனடி.. மயக்கத்தை கண்ணில் கொண்டு ஏக்கத்தை நெஞ்சில் கொண்டு உருகியும் போனேனடி..

#
கவிதையின் காதலன்

முகநூல் உனது முகத்தை காட்டிய நூல் முகம் தேடும் நூல் முகத்தை தேடி காத்திருக்கும் நூல்

#
கவி ஆர்ட் அரசன்

உன்னை பார்த்த பின்புதான் தெரிந்து கொண்டேன்.. மலர்ந்தால் உன் முகத்தை போல் மலரவேண்டும்.. பேசினால் இன்முகதைப்போல் பேசவேண்டும் என்று..!!

#
Karuppasamy

என் இளமை உன்னோடு மட்டுமே தொலைய வேண்டும் என் முதுமை உன்னுடன் மட்டுமே தொடர வேண்டும்..️¿

#
Karuppasamy

நினைவில் கொண்ட நாள் நினைவால் உன்னை கொண்ட நாள்

#
கவி ஆர்ட் அரசன்

மறைந்து போன மின்னலை தேட வைத்த முகம்.. அடித்துச் செல்லும் கடல் அலையை இழுத்துச் சென்ற விழி.. கண்டதும் அசைந்தாடி விழி மூடிய இமை.. புதைந்திடும் புதைக் குழியில் சிக்க வைத்த சிரிப்பு.. வீழ்த்திட துடிக்கும் இதழ் ஆஹா இதுவல்லவோ அழகு.. மறைந்து போன மின்னலே மீண்டும் வருவாயா உனைக் காணவே காத்திருக்கிறேன்..

#
கவிதையின் காதலன்

உன்னை காணும் நேரம் என் மனதின் சந்தோசம் காணும் நேரம்

#
கவி ஆர்ட் அரசன்

பொல்லாதது இந்த காதல்... ----------------------- ️ ------------------------ இதயம் ️ எனதானது அதன் துடிப்போ உனக்கானது.. விழிகள் எனதானது அதன் பார்வைகள் அனைத்தும் உன் மீதானது... எண்ணங்கள் எனதானது சிந்தனைகள் முழுவதும் உனக்கானது.... உயிர் எனதானது... வாழ்வது உனக்கானது.... இறந்தால் உன் மீது கொண்ட காதலுக்கானது.... ஆம் காதல் பொல்லாதது....

#
Chandra Sekar

மண் வீட்டில் உணவருந்த விழைந்ததை கண்டேன்.. வீட்டினுள் உனதுள்ளம் மகிழ்வதை கண்டேன்.. ஸ்பரிசத்தில் நெஞ்சமும் நெகிழ்வதை கண்டேன்.. நிழலறையில் உன் முகமும் ஒளிர்வதை கண்டேன்.. மனமெல்லாம் தேனூற்றாய் மாறுவதை கண்டேன்.. உடனிருக்கும் நொடியெல்லாம் குறைவதை கண்டேன்.. தானாக என் மனமும் தளர்வதைக் கண்டேன்.. படம் பிடித்து நெஞ்சத்தை இதமாக்கிக் கொண்டேன்.. பின்னிடைப் பிடித்து மீண்டும் அதை வலுவாக்கி கொண்டேன்..

#
கவிதையின் காதலன்

உணர்வுடன் அன்பையும் கலந்து சோகத்தையும் மகிழ்ச்சியாக்குவதே காதல்.. இரகசியத்தை உண்மையாக்கி நம்பிக்கையை உறுதியாக்குவதே காதல்.. வாழ்க்கையை வண்ணமாக்க இரு இதயங்களும் இணை சேர்வதே காதல்..

#
கவிதையின் காதலன்

என் செலுவுக்கு இப்போது காசு கொடு,, பின்நாளில், உனக்கு சிலை வைக்கிறேன்..! நான்...!!

#
Karuppasamy

நீ என்னை எப்போதாவது நினைத்தாயா என்ற கேள்விக்கு... நான் உன்னை நினைக்காமல் இருக்க முடியவில்லை என்பது தான் என் பதில்..?

#
Karuppasamy

#மஞ்சள் நிற வெயில் கூட உன்னை பார்த்து மறைகிறது,, #உன் மீது உள்ள பயத்தால் தான் சூரியனும் கரைகிறது..

#
Karuppasamy

சிணுங்கி கொண்டே இருக்கிறது,, உன் கைகளில் மட்டுமல்ல என் கண்களிலும் தான் அழகிய உன் கண்ணாடி வளையல்கள்...?

#
Karuppasamy

#கடப்பது கடினம் தான் கடந்து விட்டால் மற்றதெல்லாம் சுலபம் தான்...

#
Karuppasamy

#எனக்கு ஏதேனும் நீ தண்டனை தர நினைத்தால்,,, ~என்~ ~ மூச்சு முட்ட~ முத்தம் கொடு..!

#
Karuppasamy

தோன்றி மறைகிறாய் தொல்லை என்ற பெயரில் இனிக்கிறாய் நிலவை போல் பின் தொடர்ந்து என் இரவை நிறங்களாய் மாற்றுகிறாய்..

#
Karuppasamy

கருகிய மரத்திற்கும் காதல் வந்தால் கவலைகள் மறந்து பூ பூக்குமே இளகிய என் இதயம் என்றும் உன்னை மட்டும் நினைத்து துடிக்குமே

#
Raguraman Balu

அழகு என்பது முகத்தில் மட்டும் இல்லை பல நேரங்களில் மனதில்️ சில நேரங்களில் அன்பான வார்த்தையில்..

#
Karuppasamy

என் விழிகளை பூட்டு போட்டு பூட்டினாலும் உன் நினைவு என்னும் சாவியை கொண்டு திறந்து விடுகிறாய்️..!

#
Karuppasamy

#நூலகம் முழுவதும் தேடிக் களைத்து விட்டேன் #அவளின் /அந்தி நேர பார்வைக்கு/ #அர்த்தம் தேடி ..?

#
Karuppasamy

மீள முடியாத வலிகளோடு மீண்டும் ஒருமுறை கேட்கிறேன் மீண்டும் எனை காதல் செய்வாயா....!!!

#
Karuppasamy

#உனை தேடும் போது என் பக்கத்த்தில் வந்து விடுகிறாய் உனக்கு தெரியும் நான் உனை தேடுகிறேன் என்று....

#
Karuppasamy

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நிலவு உன் முகம் ..!!

#
Karuppasamy

தேவதை போல் என் முன் தோன்றினாய். சந்தன கலர் புடவையும். கருப்பு நிற ரவிக்கையும், நெற்றியில் சந்தனக்கீற்றும் சந்தன மரமே சந்தனம் பூசி வந்ததே

#
கவி ஆர்ட் அரசன்

என்னவளின் மௌனம் இரைச்சலை விட கொடுமையானது..?

#
Karuppasamy

உன் வருகைக்கு முன் தூரத்தில் இருக்கும், நிலவை மட்டும் தான் பிடித்திருந்தது.‌ இப்போது நிலவை விடவும் உன்னை மிகவும் பிடித்திருக்கிறது..!

#
Karuppasamy

மீளாத துயரத்திதுயரத்தில் இருந்து என்னை நானே மீட்டெடுக்க உன் நினைவாள் மட்டுமே முடியும்

#
Loga Raja

கண் கண்டதும் மனதில் ஒட்டிக் கொண்டவளே.. என் விரல் பட்ட கையுடன் பின்னி கொண்டவள் நீ.. பிரிந்திருக்கும் இதழோடு இணைந்து கொண்டவளே.. சந்தித்த பார்வையிலேயே பழக்கமானவள் நீ.. பூட்டாத மனதிற்கு நினைவானவளே.. சுற்றும் என் மனதிற்குள் சிற்பமானவள் நீ.. சூட்டி கொண்ட பூஞ்சரத்தால் பூஞ்சோலையானவளே.. நிலவாய் ஒளி வீசும் அன்பானவள் நீ.. மஞ்சள் பூசும் மனதிற்கு சொந்தமானவளே.. ரோஜா இதழ்களாய் என் மனதில் தஞ்சமானவள் நீ.. பூந்தோட்டமே தடுமாறும் அழகானவளே.. வழி மாறாமல் செல்லும் என் விழியையும் திசை மாற செய்தவள் நீ..

#
கவிதையின் காதலன்

விடை இல்லா கேள்வியாய் நான் சிலரின் (ஏ)மாற்றங்களால்

#
Loga Raja

உருகி கொண்டே வாழும் இதயதிருக்கு இன்னொரு பெயர் “பைத்தியமாம்”

#
Karuppasamy

அலைபேசியில் நீ வரவில்லை என்றாலும் உனது அலைகள் என்னை தாக்குகின்றதே

#
கவி ஆர்ட் அரசன்

உனது பெயரை மீண்டும்,, மீண்டும் உச்சரித்த பொழுது தான் இனிப்புக்கு இன்னொரு அர்த்தம் இருப்பதையே எனது நா உணர்ந்து கொண்டது ...!

#
Karuppasamy

உன் கழுத்தின் சுவையறிய என் நாவால் தீண்டவா உன் வியர்வையின் சுவையை என் நாவின் நரம்புகள் அறியும் கொம்புத்தேன் மலைத்தேன் சுவையை விட உன் கழுத்தின் சுவை என்னவோ செய்யதடி என் ஆண்மையை நான் சுமன்

#
Suman Mallika

தனிமை எதை புரிய வைத்ததோ? இல்லையோ? இவ்வளவு காலம் மிகப்பெரிய முட்டாளாக இருந்திருக்கிறேன் என்பதை புரிய வைத்து விட்டது.!

#
Karuppasamy

என் காதல் எறும்புகள் சேகரித்த தானியங்கள் முளைக்கவே இல்லை. - நேசமித்ரன்

#
Karuppasamy

நீ சொல்ல கூச்சப்படும் அனைத்து சொற்களும் என்னுடையதாகும்..!

#
Karuppasamy

என் கவிதையை புரிந்து கொள் நான் உன் மீது கொண்ட காதலை உணர்ந்து கொள்வாய்...

#
Chandra Sekar

உன் புன்னகையில் ஜொலிக்கதான் மறுக்கிறது உன் கழுத்து முத்து மணி மாலை....

#
Chandra Sekar

அமர உட்கார்ந்து பருகும் ஒரு குவளை தேநீருக்குள் ஓராயிரம் நினைவுகள்...! ️

#
Karuppasamy

திரும்பி போகும் போது திரும்பிப் பார்ப்பது இயல்பு தானே

#
Karuppasamy

நாம் நெருங்குவது எப்படி ... நான் மாதச் சம்பளம் போல் ஒரே இடத்தில் இருக்க ... நீ பொருட்களின் விலையை போல் ஏறிக்கொண்டே சென்றால்

#
Karuppasamy

முடிவுகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்,,, <ஆனால்> எனக்கு இப்போதைக்கு தெரிந்தது உன்னை> #காதலிக்க மட்டுமே>>§

#
Karuppasamy

பூத்துக் குலுங்கும் பூங்கொடியே தேன் கலந்த புன்னகையில் ஏன் என்னை மயக்குகிறாய்.. குத்திடும் விழி கொண்டு ஏன் என்னை தாக்குகிறாய்.. சிறகடிக்கும் என் மனதை கிறங்கிடவும் செய்கின்றாய்.. காத்திருக்கும் எனை மறந்து சிறகடித்தும் பறக்கின்றாய்.. தேன் சிந்தும் பூ முகத்தில் ஏன் சோகத்தை காட்டுகிறாய்..?

#
கவிதையின் காதலன்

புரியாதவர்களுக்கு கூட புரியும் ஆனால் புறக்கணிப்பவர்களுக்கு ஒரு போதும் புரியாது நம் அன்பு புரிந்தால்தானே புறக்கணிக்க முடியும் ️️️️️️️️️️️

#
கவி ஆர்ட் அரசன்

எதுவுமே இல்லாத போதும் அவன் என்னுடன் இருக்கிறான் என்ற எண்ணமே அவனை விலகிட முடியாமல் தடுக்கிறது

#
KKS

பெண் பார்வையில் ஆண் வெட்டுண்டு போகிறான் இமைகள் வாளா க

#
கவி ஆர்ட் அரசன்

*கடவுளும்* *பெண்களும்* ஒன்றே நீண்ட பிரார்த்தனைகளுக்கு பிறகே வேண்டுதல்கள் ஏற்கபடுகிறது.

#
KKS

நீயிருக்கும் இடத்தில் நானும் இருக்கிறேன் என்பதே அநேக நேரங்களில் போதுமானதாய் இருக்கிறது

#
Karuppasamy

நீயிருக்கும் இடத்தில் நானும் இருக்கிறேன் என்பதே அநேக நேரங்களில் போதுமானதாய் இருக்கிறது

#
Karuppasamy

_மனைவியிடம் அதிகாரம் காட்டினால்_ _ஒரு அடிமை கிடைக்கலாம்_ _ஆனால்_ _அன்பு காட்டினால்_ _இன்னொரு அம்மா கிடைக்கும்_ RK

#
Kalpana Subramaniam

_தோளுக்கு மேல் வளர்ந்த பின்னும்_ _என்னை தோளில் போட்டு தாலாட்டி_ _குழந்தை போல_ _பார்த்துக் கொள்ளும் உறவு_ _நீ மட்டும் தான் அன்பே_ RK

#
Kalpana Subramaniam

_இரவில் பேசாமல் தூங்கினால்_ _என்னை விட தூக்கம் முக்கியமா_ _என்ற கோபமும்_ _பேசிட்டு இருக்கும் போது_ _தூக்கம் வந்தால்_ _தூங்கு போ என்று_ _சொல்லும் அக்கறையும் தான்_ _உன்னிடம் நான் உணர்ந்த_ _காதல் தருணங்கள்_ RK

#
Kalpana Subramaniam

_நான் உன்னை மறக்க மாட்டேன்_ _என்று சொல்வதை விட_ _உன்னை இப்போது மட்டுமல்ல_ _எப்போதும் மறக்க முடியாது_ _என்று சொல்வது தான் நிஜம்_ RK

#
Kalpana Subramaniam

_காரணமே இல்லாமல்_ _ரசித்ததும் உன்னை தான்_ _என் கற்பனைக்குள் செதுக்கிய_ _சிற்பமும் நீதான்_ _மனசுக்குள் அதிகமாக_ _பேசிக் கொண்டதும் உன்னோடுதான்_ _வெறுக்க முடியாத_ _ஒருத்தரும் நீதான்_ _நீ மட்டுமேதான்_ _இதில் துளி அளவும்_ _மாற்றம் இல்லை_ RK

#
Kalpana Subramaniam

_ஒரு நாள் பேசாமல் இருந்தால்_ _பல மணி நேரம் அழுவேன்_ _நீ பேச வேண்டும் என்று_ _நீயாக சண்டையிட்டாலும்_ _நானாக உன்னிடம் வந்து பேசுவேன்_ _நீ என்னுடன் இருக்க வேண்டுமென்று_ RK

#
Kalpana Subramaniam

_நினைக்கும் பொழுதுகளில்_ _கண்முன் தோன்றி தவிக்கும் பொழுதுகளில்_ _தலை தடவி ஆறுதல் சொல்லி_ _பாசம் என்னும் செடியை வளர்த்து_ _சொந்தம் என்னும் உறவை கொடுத்து_ _இன்பம் என்னும் உணர்வை கொடுத்து_ _உயிரிலும் மேலான நட்பைக் கொடுத்து_ _நட்சத்திரமாக பிரகாசிக்கும் தோழியே_ _நீ வேண்டும்_ _என் வாழ்வின்_ _எல்லை வரை_ RK

#
Kalpana Subramaniam

உன்னை உண்மையாக நேசித்த உறவு.. உன்னை மட்டும் தான் சுற்றி வரும்...!! RK

#
Kalpana Subramaniam

கஷடம் என்று தெரிந்தும்.. இஷடப்பட்ட உன்னை தான்.. நான் நேசிக்கிறேன்..! ஏன் தெரியுமா..? அந்த கஷடத்திலும்.. நீ என்னை பத்திரமாய்.. பார்த்துக் கொள்வாய்.. என்ற நம்பிக்கையில் தான்..!! RK

#
Kalpana Subramaniam

என் காதல்.. உனக்கு புரியாவிட்டாலும்.., நீ தரும் காயங்களோடு.. ஆயுள் முழுவதும்.. வாழ்ந்து கொண்டிருப்பேன்..! நீ அறியாக் காதலுடன்.. என்றென்றும் உனக்காக...!! RK

#
Kalpana Subramaniam

எல்லா நொடியிலும் சுகமும் சோகமும் கலந்திருக்கும் அதை சுகமாக்குவதும் சோகமாக்குவதும் நாம் விரும்பும் இதயத்தின் அன்பை பொறுத்தே சார்ந்திருக்கும் சுருங்கி விரிவது இதயத்தின் இயல்பு வலியும் சுகமுமே வாழ்க்கைக்கு #அழகு

#
Karuppasamy

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை அந்தக் காட்டில் தொலைந்தேன் மீள முடியவில்லை

#
Karuppasamy

என்னையும் மீறி என் கண்கள் அழுவதற்காக என்னை கோபித்து பிரிவதும் ஒரு காரணமா ... நீ வேண்டுமென்று தானே உன்னிடம் அழுது புலம்புகிறேன் ஒருநாளும் உனக்கு தொந்தரவாக நான் இருக்க மாட்டேன் #அன்பே

#
Karuppasamy

அன்பு கொண்டவர்கள் எப்போதும் #அழகு கொண்டவர்களாகவே இருப்பார்கள் #என்னவள் போல்

#
Karuppasamy

ஒரு போலி வாக்குறுதியை விட தெளிவான நிராகரிப்பு எப்போதும் சிறந்தது..

#
Karuppasamy

அவள் என்னை நேசிக்கிறாள் என்று மட்டும் சொல்லி கடந்து விட முடியாது அவள் அதை சுவாசிக்கவும், வாழவும்,உணரவும் வைக்கிறாள்..!!!!!

#
Karuppasamy

பயணத்தின் இனிமை பாதையை பொறுத்தல்ல ... உடன் பயணிப்பவரை பொறுத்தே

#
Karuppasamy

ஏன் அந்த பேருந்து இன்னும் வரவில்லை,, மணி ஆகி விட்டதே வேறு வழியில் சென்று விட்டதோ,, என்று பல கேள்விகள் என்னுள்ளே ... எல்லாம் அந்த சில நிமிடத்திற்காகத் தான்.. ஜன்னல் ஓரம் சீட்டில் அமர்ந்து.. #அவள் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்கு தான் இந்த பதற்றமும் பரபரப்பும் ...

#
Karuppasamy

எதை எதையோ கடந்து போகிறேன் உன் அன்பில் மட்டுமே கரைந்து போகிறேன்...

#
Karuppasamy

தேவையற்ற இடங்களில் யாரிடமும் தேவையில்லாததை பேசாதீர்கள் அப்றம் நீஙகள் தேவையில்லாமல் ஆகிவிடுவீர்கள்

#
Karuppasamy

எடுப்பாக இருப்பதை எடுத்து "காட்டுவது" பலவீனருக்கு படுகுழிதான்...

#
Karuppasamy

உனக்கு பிடித்த படி துடிக்க உத்தரவு இட்டிருக்கிறேன் என் இதயத்திற்கு ..!!!

#
Karuppasamy

என் மனத் தோட்டத்தில் பூத்த ஆங்கில மலர் ஜாஸ்மின்

#
Karuppasamy

சண்டையிடாத நாட்களும் இல்லை...!! காதலிக்காத நொடிகளும் இல்லை..! ??

#
Karuppasamy

தேடினாலும் .. #அவளை போல் ஒருத்தி கிடைக்க போவதுமில்லை.. #அவள் தேடாவிட்டாலும் என்னை போல் ஒருவன் #அவளை காதலிக்க போவதுமில்லை #என்னவள்..{§}

#
Karuppasamy

மின்னலை கண்டும் மிரளாத கண்கள் உன் கண்களை கண்டதும் மிரண்டது.. வெடியோசையில் மறுத்து போன செவியோ உன் சிரிப்பொலியில் நெகிழ்ந்தது.. இதழாடும் நடனம் கண்டு புதுக்கவிதையும் பிறந்தது செந்தேன் குரலிசை கேட்டு குழலிசையும் மறந்தது.. இடியோசையிலும் உறங்கிய விழிகள் உன் விழியசைவில் விழித்தது..

#
கவிதையின் காதலன்

பலமுறை விக்கல் எடுத்தும் தண்ணீர் தேடவில்லை நினைப்பது நீயாக இருந்தால் நீளட்டும் சில நிமிடங்கள்

#
S.Thenmozhi.

kadavul nesam, kadavul valum valkai,kovum anbe ki mela ilei, kadavul kathal pole oru nermei mane pasam, kathal oru penn mela irunthalom, kathal oruvakkane kadavull oru puungavanam, kadavul ulei irukarerar.....avare....pen ann kathal appa stane till,oru kathalan kathali parkarerar,krishna polevei,oru manava vasageh punitha ambla playboy, parkam parvai parvithramane banthe rasekirar,kudumbam vanthe inthe iru kathal nal....ovurera pasam kudumbethil....oru thuli ann penn kathale kurikum.....manavasagan kathilleel(bed) punitahmage irunthal matehme,kudumbam anbe nesathil valum,yenna ange kadavul vohdumbil kathal seyum venthil vetham adugum,,sagum valum thol uyir seethai yelumbu pasathela jeevekerar, paavithra mane kathal elumbe morthe,sahum tannmei vovoru.....kudumbe kathalan kathali valum atha aruverr pane.....vodumbe thodum eduthil......sahum.......tanmei irunthal marthemei......kathal valum yennam..... thodere venthi yelupum valurum....anthe oru nodi valum......jenma punrava.....thothil adum kolanthei pole avalode kathali parke morthe....adum attham sex ilei.....kathal pungavanum....venthi nilave thodurum.....kaadeeka sella pannulum......yerpi saveh valum athe oru thuli banthe kathale mudive pannum,saaveh.....verikum kathal irunthal matemeh.vovoru kathali kathalan ki kathal ventha mahrre.....nillave mudrulame ventha mulemeya oru nella akirum..kaadekameh.... ALXDR CHANDRASEKARAN signature:.....thothil adum kolanthei pole avalode kathali parke morthe....adum attham sex ilei.....kathal pungavanum....venthi nilave thodurum.... kadavul i love you more than my wife

#
Alexander

உன் விழிச்சாலையில் இரு கரங்கள் கோர்த்து நடக்க ஆசைதான் இப்போது மட்டும் அல்ல எப்போதும்...

#
Basha Syed

ஒற்றைப் புள்ளி கோலம் எவ்வளவு அழகு தெரியுமா #அவள் நெற்றி பொட்டாய் >> •

#
Karuppasamy

விரும்பிய போது விரும்பினேன் என்பதை விட பிரிந்த பிறகும் விரும்பி கொண்டிருக்கிறேன் என்பதே உண்மை ... உன் மீது நான் வைத்த #காதல் என்றுமே குறையாது விலகித் தான் இருக்கிறேன் தவிர உன்னை நினைக்காமல் இல்லை #என்னவளே

#
Karuppasamy

நான் விரும்பியதை தொலைக்கவில்லை, தொலைத்ததை தான் விரும்பி கொண்டிருக்கிறேன்

#
Karuppasamy

மறு ஜென்மம் ஒன்று இருந்தால் அவளை எனக்கே தந்து விடு இறைவா காலம் முழுவதும் என் காதலால் அவளை கட்டி போட்டு பார்த்துக் கொள்வேன்

#
Karuppasamy

உன் கூந்தலுக்குள் குடியேறிய மலர்களுக்கு ஆயுட்காலம் அதிகம்.

#
Karuppasamy

நீங்கள் நீங்களாய் இருப்பதே அழகாக இருப்பது.. மனம் கவர்ந்தவரை களவு கொள்வதே மகிழ்ச்சியாக இருப்பது.. புரிந்து கொள்வதும் ஏற்றுக் கொள்வதுமே அன்பாய் இருப்பது..

#
கவிதையின் காதலன்

உன் நினைவுகளை நெஞ்சில் இருந்து அழிக்க வேண்டும் என்று நினைத்த பொழுது எங்கிருந்தோ பறந்து வந்த உன்னுடன் இருந்த போது இருந்த பேருந்து பயணம்...!

#
Karuppasamy

தொல்லை தரவும் தோணவில்லை தொலைந்து போகவும் முடியவில்லை நீங்காமல் நினைக்க வைக்கும் உன் நினைவு

#
Karuppasamy

அவள் சேலையில் பவனி வந்தாள் மென்மேலும் அழகானது அந்த சேலை...!

#
Karuppasamy

பனி முட்டம்️ வந்ததால்️ பல தோட்டம் நீங்கியே இசை மாறி போகுமோ தென்றலே...!!!

#
L. jatbu

உண்மையானே காதல்.. தேடப்படும் போது கிடைக்காது..! அப்படி கிடைத்தாலும்.. அந்த காதலின் மதிப்பு தெரியாது..! RK

#
Kalpana Subramaniam

உன் தோள்களில் நான் முதலில் சாயும் போது.. கண்கள் நனைந்துபோனது..! கடைசி வரைக்கும் நீ நிலைக்கப் போவதில்லையே.. என்றெனை பயமுறுத்தியது நெஞ்சு...!! RK

#
Kalpana Subramaniam

எவ்வளவு பாரங்கள் இருந்தாலும்.. எல்லாம் தீர்ந்து இலகுவாகிறது மனம்.. உன் சிரிப்பிர்ற்கு முன்னால் மட்டும்...!! RK

#
Kalpana Subramaniam

என்னை சிரிக்க வைக்கும் வழியும் நீ அறிவாய்.. அழவைக்கும் வழியையும்.. நீ மட்டுமே அறிவாய்...!! RK

#
Kalpana Subramaniam

நீயும்" வேண்டும் என்று ஆரம்பித்தது நம் உறவு.. "நீ" வேண்டும் என்று அது தொடர்ந்தது.. இன்று.. "நீ மட்டும் " வேண்டும் என்று முடிவிற்கே வந்துவிட்டது...!! RK

#
Kalpana Subramaniam

ஒவ்வொரு முறை உன்னைப் பார்க்கும் போதும்.. உன் அழகு எனக்கே தெரியாமல்.. என் பெருமூச்சை பரிசாகப் பெற்றுக்கொள்கிறது...!! RK

#
Kalpana Subramaniam

சொன்னதையே நான் மறுபடி மறுபடி சொன்னாலும்.. சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கிறாய்..! சொல்பவன் நானாக இருப்பதானால் மட்டும்...!! RK

#
Kalpana Subramaniam

உன்னைப்பார்க்கும் ஒவ்வொரு நொடியிலும்.. என் இதயத்துடிப்பில் ஒன்று.. எங்கோ காணாமல் போய்விடுகிறது...!! RK

#
Kalpana Subramaniam

நாளை என்ன நடக்குமோ யாமறியேன்,. ஆனால்.. நடந்து கொண்டிருக்கிற நிமிடங்கள் யாவும்.. மறக்க முடியாதவை.. நீ என்னோடு இருப்பதால் மட்டும்...!! RK

#
Kalpana Subramaniam

உன் அன்பினால் நான் காயப்பட்டாலும் கூட.. திரும்ப திரும்ப நான் எதிர்பார்க்கும்.. ஆறுதல் அளிக்கும் மருந்து நீ மட்டும் தான்..!! RK

#
Kalpana Subramaniam

தினந்தோறும் உதிக்கும் சூரியன் கூட தோற்றுப்போகும்,. உந்தன் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பின் முன்னால்...!! RK

#
Kalpana Subramaniam

_எத்தனைதான் சண்டையிட்டாலும்_ _உன் சமாதானத்தின்_ _கிறுக்குத்தனத்தில்_ _உடைந்துவிடுகிறது_ _அத்தனை கோபமும்_ RK

#
Kalpana Subramaniam

_மற்றவர்களிடம் காட்டும்_ _அன்பையும் கோபத்தையும்_ _உன்னிடம் காட்டுவதற்கு_ _என் இதயம் தவிக்கிறது_ RK

#
Kalpana Subramaniam

_தொலைந்து போக ஆசைதான்_ _உன் கண்கள் என்னை தேடும் என்றால்_ _மீண்டும் பிறக்க ஆசைதான்_ _நீ என் கரம் பிடிபாய் என்றால்_ RK

#
Kalpana Subramaniam

_என் கண்களை விட்டு_ _நீ தூரமாக இருக்கலாம்_ _ஆனால்_ _உன் இதயத்தை விட்டு_ _என்னால் தூரமாக இருக்க முடியாது_ RK

#
Kalpana Subramaniam

_மனதில் நீங்காத_ _இடம் பிடித்த_ _அவளின் காதல் உறவுகளும்_ _நீங்காத உணர்வுகளும்_ _எனக்கு தொடர்கதையாகி விட்டது_ RK

#
Kalpana Subramaniam

_விழிகள் இல்லாமல் கூட_ _வாழ்க்கை அமைகிறது சிலருக்கு_ _ஆனால்_ _வழிகள் இல்லாமல்_ _வாழ்க்கை அமையாது யாருக்கும்_ RK

#
Kalpana Subramaniam

உன்னோடு #அன்பு வந்து சில நாட்கள் தான் ஆனால் இந்த பிரிவு மட்டும் எப்படி வெகுகாலமாக போல இருக்கிறது

#
Karuppasamy

#காவியம்# காலை எழுந்ததும் கலைந்த கூந்தலோடு செல்லச் சினுங்கலில் காவியமாய் தெரிகின்றாள்.... மு.திரு️

#
Thirumalai samy

#நெடுந்தூர பயணம்# நெடுந்தூர பயணத்தில் ஒரு குவளை தேனீருக்காய் சற்று நிற்பதை போன்று சட்டென்று வந்து விடுகிறது உன் நினைவு... சிறிது நேரத்தில் காற்று குமிழியை போன்று தூரத்தில் சென்று சட்டென்று மறைந்து விடுகிறது... எனினும் பயணித்து கொண்டிருக்கிறேன் அடுத்த நிறுத்தத்தில் ஒரு குவளை தேனீர் பருக எண்ணிக் கொண்டு.... மு.திரு️️️️ ️️

#
Thirumalai samy

#வழிப்போக்கன்# பயணிக்கும் வழியெங்கிழும் உன் நினைவுகளை விதைத்து செல்கிறேன்.... கண்ணீரின் ஈரம் பட்டதும் உன் நினைவுகள் பாதையெங்கும் பூத்துக் கிடக்கிறது... சில நினைவுகள் அரிதான குறிஞ்சி மலர்களாக.... சில நினைவுகள் ஊமத்தம் பூக்களாக... சில நினைவுகள் வண்ணத்துப்பூச்சிகள் வந்தமரும் தும்பை பூக்களாக... இன்னும் சில நினைவுகள் மலராமலேயே கிடக்கிறது... எனினும் உன் நினைவுகளாலேயே பயணிக்கிறேன் வழிப்போக்கனாய் இறுதி பயணத்தை நோக்கி இடுகாடு வரை... என் ஆன்மா இந்த பிரபஞ்சத்தை விட்டு எங்கோ தூரம் பயணத்தை தொடங்கி விட்டது... இறுதியாய் என் பிரேதத்திற்கு உன் நினைவு பூமாலை ஒன்றையேனும் சூட்டி விடு.... இப்படிக்கு #வழிப்போக்கன்# மு.திரு️️️

#
Thirumalai samy

சுற்றும் பூமியில் போகும் இடமெல்லாம் ராட்டினமாய் சுழல்கிறது உன் நினைவு.. வானத்து மின் விளக்காய் மிளருகிறது உன் விழிகள் சிறகடிக்கும் பட்டாம் பூச்சியாய் துடிக்கிறது என் இதயம்..

#
கவிதையின் காதலன்

காதலில் கவிதைகள் பல உண்டு.. அந்த கவிதைகள் மேல் எனக்கு கொஞ்சம் காதலும் உண்டு.. அந்த காதலை மிஞ்சும்.. என் மேல் காதல் கொண்ட.. ஓர் அழகிய கவிதையும் எனக்குண்டு.. உன் உருவில்...!! RK

#
Kalpana Subramaniam

_நினைவுகளோடு வாழ்வதற்கு_ _பலபேர் இருந்தாலும்_ _நிஜத்தில் வாழ்வதற்கு_ _நீ மட்டும் போதும்...!! RRLK

#
Kalpana Subramaniam

_எண்ணத்தில் நீ இருக்க_ _வண்ணத்தில் மழை பெய்ய கண்டேன்_ _துளிகள் எங்கும் உன் சாயல்_ _எண்ணம் எங்கும் நம் காதல்...!! RK

#
Kalpana Subramaniam

_நான் தேடும் முகவரி_ _உன் இதயம் மட்டுமே_ _ஆனால்_ _நீ தரும் முகவரியோ_ _வலிகள் மட்டுமே...!! RK

#
Kalpana Subramaniam

_தோற்றங்கள்_ _மாறினாலும்_ _தோற்று விடாமல்_ _இறுதிவரை_ _தொடர்வதே_ _உண்மையான அன்பு...!! RK

#
Kalpana Subramaniam

உன்னோடு வாழ விருப்பமில்லை..           நான்.. ஆனால்.. உனக்காக மட்டும்.. வாழ விரும்புகிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

வெண்ணிலவும் என்னவளும் என்னவளின் நிழலை கண்டு .... வெண்ணிலவும் வெட்கம் கொண்டு.... தன் நினைவை தான் இழந்து... தன் நிழலை அவள் தோள் மீது சாய்த்துக் கொள்கிறது.... சிறிது நேரம் இழைப்பாரி  ...

#
ஆனந்தன்

அவள் அன்பு போதும் அவள் காதல் போதும் கண்ணீராக இருந்தாலும் சரி கவலையாக இருந்தாலும் சரி அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன் இறுதி வரை உனக்காகவே வாழ்வேன். SK

#
SK

உன்னை விட உன் நினைவுகளே எனக்கு பிடிக்கும் ஏனென்றால் நானே நினைத்தாலும் அவை எப்போதும் என்னை விட்டு விலகுவது இல்லை தூங்கும் முன் என் கடைசி எண்ணமும் நீ தான் எழுந்தவுடன் என் முதல் தேடலும் நீ தான். SK

#
SK

நினைவுகள் இருக்கும் வரை சந்தோசத்திற்கும் நிம்மதிக்கும் இடமே இல்லை ️

#
L. jatbu

சிரித்துகொண்டிருப்பது என் இதழ்கள் மட்டும் தானடி.. உன்னையே நினைத்து அழுதுகொண்டிருக்கும்.. என் இதயத்தின் வலி.. தெரியாமலே போகட்டும் உனக்கு...!! RK

#
Kalpana Subramaniam

மாயம் செய்யவில்லை.. மயங்கிவிட்டேன்.. நீ பார்த்த.. ஒரே ஒரு பார்வையில்...!! RK

#
Kalpana Subramaniam

நான் சிரிக்கும் போதெல்லாம்.. உன் இதயம் திறக்கவில்லை..!" நீ சிரிக்கும் போதெல்லாம்.. என் இதயம் என்னிடம் இல்லை...!! RK

#
Kalpana Subramaniam

உன்னை காணாமல் ஏதேதோ.. சொல்ல துடிக்குது மனம்..!" உன்னை கண்டால்.. எதையும் சொல்ல தவிக்குது தினம்..!" உன்னிடம் சொல்லாமல் இருப்பதுவும்.. ஒருவித சுகம் தான்...!! RK

#
Kalpana Subramaniam

ஒவ்வொரு நாளும் கண் விழித்ததும்,. முதல் நினைவும் நீ தான்..!" கண் மூடும் முன்.. கடைசி நினைவும் நீ தான்..!! RK

#
Kalpana Subramaniam

இதழ் என்னும் மலர் கொண்டு.. கடிதங்கள் வரைந்தாய்..!" பதில் நானும் தரும் முன்பே.. கனவாகி கலைந்தாய்...!! RK

#
Kalpana Subramaniam

என்னை நேசிக்க.. என் அருகில்.. நீ இருந்தால்,. நான் யோசிக்க.. எதுவும் இல்லை.. இந்த உலகில்...!! RK

#
Kalpana Subramaniam

உன்னை கண்டால் கனவு வரும்..!" காணாவிட்டால் நினைவு வரும்..!" நீ இருந்தால் துணிவு வரும்..!" இல்லாவிட்டால் சரிவு வரும்..!" நீ சிரித்தால் விடியல் வரும்..!" சிரிக்காவிட்டால் என் முடியல் வரும்..!! RK

#
Kalpana Subramaniam

சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பை விட சோகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பே உண்மையானது.. என் அன்பை புதுபித்து கொள்வதை விட என் சோகங்களை பகிர்ந்து கொள்ளவே உன்னை தேடினேன்.. என் மனதை நிறைத்து கொள்ளவே உன் அன்பை தேடுகிறேன்..

#
கவிதையின் காதலன்

சிலுவை ======== நீ ஆணிகளோடு என்னை சிலுவையில் ஏற்றினாய்.. உன் நினைவுகளோடு நான் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தேன்..! ம.முத்துக்குமார் வே.காளியாபுரம்

#
ம.முத்துக்குமார்

கனவில் இல்லாமல் நினைவிலும் நில்லாமல் தொடரும் உன் நினைவு.. தூக்கத்திலும் தூங்காமல் தொடர்கிறது..

#
கவிதையின் காதலன்

எட்டா தூரத்தில் இருக்கும் வானத்து நிலவே உன்னனை காண முடிந்த என்னால்.. எட்டும் தூரத்திலிருக்கும் என் இதயத்தின் நிலவை காண முடியவில்லை.. உனக்கு அருகில் கண் சிமிட்டும் நட்சத்திர சீமாட்டிகளை காண முடிந்த என்னால்.. என்னருகிலேயே இருக்கும் சிரிக்கும் சீமாட்டியை காண முடியவில்லை..

#
கவிதையின் காதலன்

அன்பை பகிர்ந்து கொள்ள ஆயிரம் வழிகள் இருந்தாலும் அதை புரிந்து கொள்ள ஒரே வழி அன்பை பகிர்ந்தவருக்கு பிடித்தவனாக இருப்பது..

#
கவிதையின் காதலன்

துடிக்க மறந்தது மனம் உன் அழகை கண்டு ஒரு கணம்... அகன்ற என் கண்களும் சிறை பிடிக்கும் உன் அழகை தினம்..

#
கவிதையின் காதலன்

கண்டேனடி உன்னை என் கண்ணால்.. காணமல் போனதடி மனம் தன்னால்.. தேடினேனடி என் மனதையும் உன்னால்.. கிடைத்ததுமே சொன்னேனடி உன் முன்னால்.. நான் இருப்பேனடி எப்போதுமே உன் பின்னால்..

#
கவிதையின் காதலன்

ஊரே தேடுகிறது என்னை திருடனென்று.. உன் மனதை திருடிவிட்டு மனதிற்குள்ளேயே மறைந்திருக்கும் என்னை ஊரே தேடுகிறது திருடனென்று.. ஒரு பெண்ணின் மனதில் மறைந்தால் காணவே முடியாது என்பதறிந்தும்.. ஊரே தேடுகிறது என்னை திருடனென்று..

#
கவிதையின் காதலன்

தொடரும் உன் நினைவு தொடர் கொண்டு எனை துரத்தும்.. பூ மலரும் உன் முகத்தில் அனு தினமும் தேன் சுரக்கும்.. சுற்றி வரும் வண்டுகள் சினம் கொண்டு துளைத்தெடுக்கும்.. பதறாமல் என் மனம் துணிவோடு நிலைத்திருக்கும்.. சலிக்காமல் என் இதழ் தேன் துளியை துடைத்தெடுக்கும்..

#
கவிதையின் காதலன்

கோவிலுக்கு அவள் வந்து சென்றவுடன்,அருவா பிடித்த ஐயனாரும் அடம் பிடிக்கிறார்,.. பேனா வேண்டுமென்று... அவளை வர்ணிக்க!

#
Karuppasamy

என்னைப் பொறுத்த வரை எனக்கு பொருத்தமான ஆறுதல் நீ தான் ... நீ மட்டும் தான் #என்னவளே

#
Karuppasamy

தேடிய அழகு உன்னிடம்.. தேடாத அழகு கண்ணிடம்.. மாறாத மாற்றம் என்னிடம்.. மாறியது தோற்றம் உன்னிடம்.. புது மொழி கண்டேன் விழியிடம்.. புரியா மொழியில் பேசியது என்னிடம்..

#
கவிதையின் காதலன்

காந்தமாய் கவர்வேனடி.. என்னை சேரும் வரை தொடர்வேனடி.. பிரியமாய் சேர்ந்து இருந்தால்.. பிரிவென்றும் இல்லையடி.. மடி உறங்கும் சுகம் போல வேறொன்றும் இல்லையடி.. நீயின்றி என்னருகில் சொர்க்கமும் நரகமடி..

#
கவிதையின் காதலன்

மின்னும் வைரமோ உன் கண்கள்.. வெள்ளி பனிமலைதான் உன் கண்ணம்.. சலங்கையின் ஒலியே உன் சிரிப்பு.. முத்து மணி சரம் தான் உன் பற்கள்.. தித்திக்கும் செந்தேன் தான் உன் உதடு.. உன் கன்னத்தின் குழிதான் என்னை இழுத்த புதைக்குழி ..

#
கவிதையின் காதலன்

அழகே உனக்கு நிகர் இல்லை.. காட்டும் அன்பிலும் குறையில்லை.. காற்றே உந்தன் துணையின்றி புல்லாங்குழலில் இசையில்லை.. பனி விழும் இரவிற்கு நீயின்றி இசையின் துணை மட்டும் போதவில்லை.. உன் விழியின் கூர்மை ஈட்டியில் இல்லை.. உன் நினைவில்லை என்றொரு நாளுமில்லை.. உனை காணாத நாளேதும் நினைவில் இல்லை.. உன்னை தேடும் விழிகள் ஓய்வதில்லை.. ஆட்டுவிக்க நீயிருந்தால் ஆடும் ஆட்டமும் தோற்பதில்லை..

#
கவிதையின் காதலன்

மனதின் ஓரம் பெரும் தவிப்பு எனக்கு... பெண்ணே! உன் கொலுசின் முத்துக்கள் கூட என்னை பார்த்து ஏளனம் செய்கின்றன... நான் சினுங்க வேண்டிய இடங்களில் அவை சினுங்கி தொலைக்கின்றனவே

#
Karuppasamy

அழகே வானத்து நிலவே ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் மேகமாய் அனைத்த என்னை வேகமாய் விலகாமல் அன்னம் போல் நீயும் நீந்திதான் செல்கிறாய்.. ஆனால் உன்னையே சுற்றும் விழிகள் மட்டும் ஏனோ மின்னலாய் விரைந்து செல்கிறது..

#
கவிதையின் காதலன்

மறுபிறவி கொள்வெனோ... அவள் காற்கொலுசாய் உய்வெனோ... தன்னோசை மறந்து... ஒலிபெனோ அவள் பெயரோசை... நடைபாதை முழுக்க...

#
கவி மொழியன்

கரையோரம் நீயும் உன் மடிசாய நானும் கதைபேச நீயும் இமைக்காத நானும்... இதைப்பார்த்து ஏனோ??? அலைகள் அலைகிறதே இங்கும் ஆங்குமாய் காட்சி படம் பிடிக்க... கானும் வானம் அது நிலவை அழைக்கிறதே ஒளியும் அடிக்க... காதல் மலர்கிறதே கடல் மணலில் ஓர் மின்மினி என் கவிதை படிக்க... --- க மொ

#
கவி மொழியன்

காணும் போதெல்லாம் பேசாமல் தவிக்கிறேன்.. காணாத போதெல்லாம் பேசிட துடிக்கிறேன்.. அருகில் நீ இருந்தால் அனைத்து மகிழ்கிறேன்.. தொலைவில் நீ இருப்பதால் நினைத்து மகிழ்கிறேன்..

#
கவிதையின் காதலன்

விதியால் என்று சொல்வதை தவிர, வேறு என்ன சொல்லி, எழுதிட முடியும் இந்த காகிதத்தில்..!" இப்பொழுது உனக்கும் எனக்கும் இருக்கும் தூரத்தை...!! RK

#
Kalpana Subramaniam

எனக்கென ஓர் உலகம் படைத்து அதில் உன் நினைவினை புகுத்தி என் தனிமை இரவுகளில் என் கண்ணீர் துளிகள் இசை மீட்ட தூரத்தில் குயில்கள் பாட்டு பாட சட்டென்று விழிமுன் வந்து போகும் உன் முகம் தான் என் தீராத தனிமையின் மருந்து SKD

#
SK

பயணிக்கும் நேரம் சிறிது என்றாலும் நெடு நாள் மகிழ்ச்சி தந்து கொண்டே தான் இருக்கிறது அந்த அழகான உரையாடல்

#
Karuppasamy

வெட்டென மறக்க முடிந்தால் சட்டென அடுத்த காதல் போகலாம்

#
Karuppasamy

நீ இருக்க நான் இறக்கலாம் நான் இருக்க நீ இறக்கலாம் காலம் என்ன செய்யும் வாழுற வரை ....

#
Karuppasamy

பச்சை வண்ண பச்சை கிளியே.. மின்னலாய் மறைந்து போனதெங்கே?.. அரை இருட்டு அறையில் கண் முன் அமர்ந்தவுடன் கண் மறைந்து போனதெங்கே?.. பின் தொடரும் என்னை திசை மாற செய்து விட்டு மாயமாகி போனதெங்கே?.. உன் இதழ் சுவைத்த இளநீராய் தித்திக்கும் இன்பத்தை தந்து விட்டுப் போ..

#
கவிதையின் காதலன்

பெண்ணே உன் அழகை கண்டு.. சிற்பமோ நீயென்ற ஐயம் கொண்டு.. தேடியது என் விழிகள் இரண்டு.. வானவில்லாய் வளைந்து நின்ற உன் நிழலை கண்டு.. ஆஹா...! நிழலுக்கே இந்த அழகென்றால் நிஜத்திற்கு என்ன அழகோ என்று மதிமயங்கியது இன்று..

#
கவிதையின் காதலன்

எந்தவொரு உறவை விட்டு பிரிவதற்கு முன்பு ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் அவர்களிடம் நாம் எந்தளவிற்கு #அன்பு வைத்தோம் என்றும் ..!!

#
Karuppasamy

முத்துக்கள் உதிருமென தெரிந்தும்., உன்னிடம் மாட்டிக்கொள்கிறேன்..!" உனது காலில், இசை எழுப்பும் கொலுசாக...!! RK

#
Kalpana Subramaniam

பிடிக்காத கவிதை போல, என்னை கசக்கி எறிந்து மறக்கிறாய்..!" குப்பை தொட்டி கூட, எனக்கு சொர்க்கம்தான்..!" உன் விரல் பட்டு விழுந்ததால்...!! RK

#
Kalpana Subramaniam

என் தோல்வி கசக்கவில்லை, தோற்றது காதலில் என்பதால்..!" முகம் மறக்க விரும்பவில்லை, பிரிவது உன்னை என்பதால்..!" காலம் மருந்திட்டு ஆற்றிடும் காயங்களை..!" என்னை மூழ்கடித்த, உன் பார்வையின் மாயங்களை...!! RK

#
Kalpana Subramaniam

உறங்க நினைக்கிறேன் முடிவதில்லை..!" உறக்கம் விழிகளை தொடுவதில்லை..!" அழைக்க நினைக்கிறேன், மொழிகளில்லை..!" அணைக்கத் துடிக்கிறேன், நீ அருகில் இல்லை...!! RK

#
Kalpana Subramaniam

தவறு என்று தெறிந்தும், தவிர்க்க முடியாமல் தவிக்கும், இதயத்தின் ஆசை தான், காதல்...!! RK

#
Kalpana Subramaniam

முகவரி கொடுத்த, உன் கொலுசை, கொஞ்சம் திருப்பி கொடு.. என் இதய ஒலிக்கு, உயிர் ஊட்டட்டும்...!! RK

#
Kalpana Subramaniam

மற்றவர்களுக்கு நீ, மௌனமாக இருப்பது தான் தெரியும்..!" ஆனால், விழிகளால் பேசிக் கொண்டிருப்பது, எனக்கு மட்டும் தான் தெரியும்...!! RK

#
Kalpana Subramaniam

நீ அருகில் இருக்கும் போது, அடி பட்ட காயதின் வலி தெரிவதில்லை..!" நீ அருகில் இல்லாத‌ போது, இதய துடிப்பு கூட‌ வலிக்கிறது...!! RK

#
Kalpana Subramaniam

காதலில் தோற்பவர்கள், பிணமாகிறார்கள்..!" அல்லது, பிணமாக வாழ்கிறார்கள்..!" நினைவுகள் மட்டும் உயிரோடு...!! RK

#
Kalpana Subramaniam

காதல் ஒரு கண்ணாடி..!" ஆனால், அது தோன்றுவதை எல்லாம், காட்டுவது இல்லை...!! RK

#
Kalpana Subramaniam

நீண்ட தூரம் பயணித்த பின்பும், திரும்பி நடக்கிறேன், முடியவில்லை..!" நெஞ்சினில் உன் நினைவுகள், சுமையாய் கனக்கிறது..!" எனை பிரிந்து விட்டாயே.. என்ற ஏக்கம், எனை வாட்டும் போதெல்லாம்.., உன் நினைவுகள், எனை அணைத்துக் கொள்கின்றது...!! RK

#
Kalpana Subramaniam

கண்ணீர் தந்தது கடவுள் என்றால், காலம் தான் பதில் சொல்லும்..!" கண்ணீர் தந்தது காதல் என்றால், பதில் உன்னிடமே உண்டு...!! RK

#
Kalpana Subramaniam

மறக்காமல் நினைக்கிறேன் உன்னை..!" நினைக்கவே மறக்கிறேன் என்னை...!! RK

#
Kalpana Subramaniam

எனது உயிர் பிரிந்து சென்ற பிறகும், காற்றாக கலந்து, மேகத்தில் உறைந்து, கண்ணீர் என்னும் பெயரில், மழையாக விழுவேன்..!" உனது இதயத்தில் இடம் பிடிக்க, குடைபிடித்து செல்லாதே...!! RK

#
Kalpana Subramaniam

அடையாளம் தெரியாத எனது அன்பும், ஆறுதல் பெறுகின்றன, உன்னிடம் மட்டும்..!" காதல் அடிமைகளாக...!! RK

#
Kalpana Subramaniam

தனிமை இனிக்கிறது, உன் நினைவுகளால்..!" வெறுமை மறைகிறது, உன் கனவுகளால்...!! RK

#
Kalpana Subramaniam

ரசிபதற்க்கு கண்கள் போதும்..!" நேசிபதற்க்கு காதல் போதும்..!" ஆனால்., நான் வாழ்வதற்கு நீ மட்டும் போதும்...!! RK

#
Kalpana Subramaniam

அளவுக்கு அதிகமாக நேசித்து, அவளுக்காக காத்திருந்து, அவளிடம் கேட்டேன்..!" அன்பே வா பேசலாம் என்று..!" அவளோ.., நான் பிஸி என்று சொல்லி விட்டாள்...!! RK

#
Kalpana Subramaniam

ஏங்கி ஏங்கி அழுவதை விட, அந்த சொல்லின் வலி, மரணத்தின் சமம்...!! RK

#
Kalpana Subramaniam

ஆசையில்.. அவளுக்கு.. ஓர் கடிதம்..!" அதில்.. அனைத்து.. வரிகளும்.. கண்ணீர்...!! RK

#
Kalpana Subramaniam

என் அத்தனை ஆசைகளும் கரைந்து, கானல் நீராய் போகிறது..!" அவள் இல்லாமல் போனதால்...!! RK

#
Kalpana Subramaniam

வெறுத்த ஒருவரையே, மறக்க முடியாத போது.., விரும்பிய ஒருவரை, எப்படி மறப்பது...!! RK

#
Kalpana Subramaniam

விழியின் வழி புகுந்தாய் பின், இதயம் தனில் உறைந்தாய்..!" செயல்கள் தனில் கலந்தாய், என் உயிரிலும் நீ நிறைந்தாய்..!" மூச்சில் உன்னை உணர்ந்தேன், உன் பேச்சில், என் பெயர் மறந்தேன்..!" கவிதை புனைய வைத்தாய், உன்னை கனவிலும் தேட வைத்தாய்..!" காதல் கற்று கொடுத்தாய், மனம் முழுதும் பித்து கொடுத்தாய்...!! RK

#
Kalpana Subramaniam

கிடைக்கும் போதெல்லாம், நிலைக்குமா? என்ற பயத்தை, தந்து விடுகிறது ஆறுதலான அன்பு...!! RK

#
Kalpana Subramaniam

மாறாத அழகில் மாற்றம் கண்டேன்.. தினமும் மெருகேறும் அழகைக் கண்டேன்.. தேடும் விழிகளில் தவிப்பை கண்டேன்.. அழகு முகத்தில் அன்பை கண்டேன்.. ரோஜா இதழில் சிரிப்பை கண்டேன்.. சிரிக்கும் இதழில் நளினம் கண்டேன்.. என் மனமும் அதனுடன் சுழல்வதை கண்டேன்..

#
கவிதையின் காதலன்

என்னை உரசிச் செல்லும் தென்றலே.. பட்டதும் மறைந்திடும் மழைத்துளியே.. தூக்கிலிட்டாலும் துவளாத பூக்களே.. மௌனமாய் வந்து மெளனகீதம் பாடியவளே.. பிரம்மனுக்கும் பிரம்மை பிடிக்கும் புன்னகையே.. பூ பூவாய் பூத்துக் குலுங்கும் அழகியே .. உன்னை கடந்து செல்லும் அனைத்துமே உன்னைக் காதலிக்கும் என்னைப் போல..

#
கவிதையின் காதலன்

திக்கு தெரியாத வாழ்க்கையில் திசை காட்டியவள்.. தித்திக்கும் புது வாழ்வை தொடங்கி வைத்தவள்.. மாறிடும் மனதில் மாறாதவள்.. தடையிட்ட நேரத்திலும் தடையில்லாதவள்.. நகராத நேரத்திலும் நகர் வலம் வந்தவள்.. இரவோடு பகலும் போதாமல் செய்தவள்.. திகட்டாத அன்பில் திகைக்க செய்தவள்.. சிரிக்கும் அழகில் சிறப்பானவள்.. கன்னத்தில் குழியுடன் அழகானவள்.. விழியில் மொழி பேசும் புதுமையானவள்.. என் மனதை களவாடி சிறையிட்டவள்.. கை பிடித்து இதழ் பதிக்க இனிமையானவள்.. மனதோடு மணமுடிக்க தகுதியானவள்..

#
கவிதையின் காதலன்

துளிர்ந்த காதலை துளிர்த்தவர் மனதில் வளர்த்திட வேண்டும்.. வளர்ந்த காதலை பிடித்தவள் மனதில் பதித்திட வேண்டும்.. துளிர்ந்த காதல் காலம் கடந்தும் செழித்திட வேண்டும்.. செலுத்தும் காதல் திகட்டாமல் தொடர்ந்திட வேண்டும்..

#
கவிதையின் காதலன்

நீ பார்த்த பார்வையில் மின்சாரம் பாய்ந்தது... கடைக்கண் பார்வையில் புதுக்கவிதை பிறந்தது.. கண் விழி புருவங்களில் மனம் தடுக்கி விழுந்தது.. உன் சிரிப்பொலியின் சத்தம் கேட்டு என் சிந்தனையும் நின்றது... உன் முகம் கண்ட விழிகள் இரண்டும் ஆரத்தழுவி கொண்டது.. தினம் வந்த உன் நினைவால் இரவில் தூக்கம் தொலைந்தது.. தூக்கமில்லா இரவுகள் உன் நினைவில் தொடர்ந்தது... தொடரும் உன் நினைவோ தொடர்கதையானது..

#
கவிதையின் காதலன்

மறந்து விட நினைப்பதேனோ மறக்க முடியாமல் போகுது.. நினைவில் வைக்க நினைத்ததேனோ மறந்து மறந்து போகுது.. கண்களில் காண்பதெல்லாம் மாயமாகி போகுது.. நெஞ்சமெல்லாம் உன் நினைவு மீண்டும் மீண்டும் தோணுது.. ஏங்காதே நீ என்று நிலவைப் பார்த்து சொல்லுது..

#
கவிதையின் காதலன்

போகும் இடமெல்லாம் உன் நினைவு காத்திருக்கும்.. மலரும் உன் நினைவிலும் அளவின்றி தேன் சுரக்கும்.. சுற்றி வரும் வண்டாக என் விழியும் காத்திருக்கும்.. சலிக்காமல் என் மனமும் தேன் துளியை துடைத்தெடுக்கும்.. மலரும் நினைவுகளில் என் மனமும் ஆழ்ந்திருக்கும்.. உன் நினைவை தேடியே வேறிடமும் சென்றிருக்கும்..

#
கவிதையின் காதலன்

மனமே மனமே பதறாதே.. மெல்ல மெல்லத்தான் புரியும் கலங்காதே.. துளிரும் காலம் வரை மனதில் புதைத்து வைக்க தயங்காதே.. செழிக்கும் காலம் வந்தால் காதலாய் துளிர் விட மறவாதே..

#
கவிதையின் காதலன்

தினம் மலரும் ரோஜாவே முள்ளோடு இருந்தாலும் மனம் மயங்க வைத்தாய்.. இதழ் விரித்து நீ சிரித்து காண்பவரை வசியம் செய்தாய்.. காற்றோடு இதழ் அசைத்து மெய்மறந்து ரசிக்க வைத்தாய்.. காதலிக்கும் பெண்ணுக்கெல்லாம் உன் பெயரை சூட்ட வைத்தாய்.. விரும்பியவர் கை எல்லாம் முள்ளோடு உனை வைத்தாய்.. விரும்பியவளுக்கு அதை தந்து காதலையும் சொல்ல வைத்தாய்..

#
கவிதையின் காதலன்

பிடிக்கவில்லை யாரையும் உன்னை பிடித்ததிலிருந்து.. காணவில்லை யாரையும் உன்னை கண்டதிலிருந்து.. வானத்து நிலவும் அருகில் இல்லை ஆனால் காணாமல் இல்லை.. நீ இருக்கும் இடமோ தூரமில்லை ஆனால் காண்பதேயில்லை..

#
கவிதையின் காதலன்

அழகு என்ற ஆரம்ப காதலில் அன்பில் வருவது அனுபவ காதல்.. பிடித்தவருடன் மனமொன்றி வருவது உண்மைக் காதல்... மனம் தளராத ஒருவருடன் வியந்து வருவது முதிர்ந்த காதல்... பார்த்து பழகியதில் மிக சிலர் மீது வருவதே இந்த அதிசய காதல்..

#
கவிதையின் காதலன்

உன்னை பார்த்து ரசித்த அதே கண்கள் உன்னை பார்க்காத போது தவிக்கிறது.. என் விழிகள் போகும் இடமெல்லாம் உன் பிம்பமே பின்னி நிற்கிறது.. முட்டி நிற்கும் கரு விழியோ துள்ளி திரிகிறது.. மனதில் தோன்றும் உன் நினைவோ பொங்கி வழிகிறது..

#
கவிதையின் காதலன்

என்னையும் என் உணர்வுகளை நன்கு உணர்ந்தவள் நீ.. அழகாக உணர்த்தி விட்டாய் என்னை தொடர்பு கொள்ளாமல் தொடர்ந்து கொள் என்ற எதிர்பே இல்லாத தவிர்பை..

#
கவிதையின் காதலன்

நினைவில் உன் முகம் நீங்காமல் நீள்கிறது.. தொடரும் உன் நினைவோ தொடர் வண்டியாய் துரத்துகிறது.. துரத்தும் உன் நினைவுடனே தொடருகிறேன் நானும் தொடர் வண்டியாய் தொடர்ந்து..

#
கவிதையின் காதலன்

செந்தேனின் சுவையுடன் கதைத்து கொள்ள ஆசை.. பதட்டமின்றி உன்னோடு பழகி கொள்ள ஆசை.. உன்னிடம் காதலை காட்டிக் கொள்ள ஆசை.. நிலவிற்குள் பாய் விரித்து உறங்கி கொள்ள ஆசை.. நிலவிற்கு கடனாக ஒளியைத் தர ஆசை.. சூரியனை குளிர் பெட்டியில் அடைத்து விட ஆசை.. கட்டணமின்றி பூமியை சுற்றிவர ஆசை.. தித்திக்கும் தமிழ் மீது அளவில்லா ஆசை.. இசையோடு தமிழ் பாட உள்ளத்திலே ஆசை.. துடி துடிக்கும் இதயத்தின் இசைக் கேட்க ஆசை.. கற்பனைக்கு சிறகாக படபடக்க ஆசை.. ​சிற்பி வடிந்த சிலையிலும் குறைத் தேட ஆசை.. தூரிகையின் துணையின்றி முகம் தீட்ட ஆசை.. விழியோடு புது மொழியில் பேசி கொள்ள ஆசை.. சொக்க வைக்கும் விழிக்கெல்லாம் மை பூச ஆசை.. உளியின்றி விழி கொண்டு உனை வடிக்க ஆசை.. கலகலக்கும் வளையோசையில் கலந்து விட ஆசை.. பூவிற்குள் தேனூறும் ஊற்றை காண ஆசை.. படபடக்கும் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க ஆசை.. மணமணக்கும் பூவிதழ் மேல் அமர்ந்து கொள்ள ஆசை.. தலை சாய்த்து உன் மடி மேலும் உறங்கி கொள்ள ஆசை..

#
கவிதையின் காதலன்

இமைக்குள் நீ இருக்க உன்னை கலங்காம பார்க்கதான் கரையாம நான் இருக்கேன்!!

#
Karuppasamy

புன்னகை பூத்து விடுகிறது உன் மலர் முகம் காணும் போது #என்னவளே

#
Karuppasamy

ஒவ்வொரு வரிகளும் அவளுக்கானவை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும் ... இருந்தாலும் ஒரு வரி கூட பேச மாட்டாள் !!

#
Karuppasamy

எந்த ஓவியத்திலும் என்னை படைத்து விடாதே உன்னில் மட்டுமே அடைபட்டு கிடக்கும் காவியம் நான்....

#
Karuppasamy

உன்னுடன் இனி பேசவே கூடாது என்ற வைராக்கியமெல்லாம் உன் குரல் கேட்டதும் உடைந்து போகிறது..!

#
Karuppasamy

நேசித்தேன் நேசிக்கிறேன் நேசிப்பேன் அவ்வளவு தான் எனக்கு தெரிந்த #காதல்

#
Karuppasamy

உன் மொத்த அன்பும் எனக்கு வேண்டும் என்பதில் கொஞ்சம் பேராசைக்காரன் தான் நான் #என்னவளே

#
Karuppasamy

வயதில் வந்தது ஒரு மாற்றம்.. மாறியது அழகாய் என் தோற்றம்.. முகத்தில் அழகு பதிவேற்றம்.. கண்டதும் மனதில் பல மாற்றம்.. ரசிக்கும் விழியில் தடுமாற்றம்.. மனதில் ஏதோ புது மாற்றம்..

#
கவிதையின் காதலன்

கட்டுண்டு கிடந்தேன் காலை வரை உன் நினையோடு.. காற்றுக்கும் இடமில்லை என் சுவாசம் உன் நெஞ்சோடு.. எப்போதும் மனதிற்குள் உன் நினைவை சுமந்ததோடு.. தூக்கத்தையும் மறந்திருந்தேன் பகிராமல் உன்னோடு.. பாதியில் மறைந்து விட்டாய் கேட்காமல் என்னோடு.. காலை வரை கண் முழித்தேன் உன் கடைசி பதிவை கண்டதோடு..

#
கவிதையின் காதலன்

உருகிய மனதில் உனை நினைக்க.. அன்பும் அதனுடன் கலந்திருக்க.. கண்டிட விழிகள் தவித்திருக்க.. தூண்டும் உன் முகம் நினைவிருக்க.. ரோஜா இதழால் எனை அழைக்க.. தவித்து நின்றேன் கண்கள் விரைக்க..

#
கவிதையின் காதலன்

பிடித்திருக்கும் ஒருவருக்கு பிடித்தமாய் இரு.. இருக்கும் பொருள் மட்டுமே போதுமென்று இரு.. கிடைக்கும் நொடியெல்லாம் மகிழ்வாயிரு .. குருதி குறைந்து, உடல் மெலிந்து, வயது முதிர்ந்து போனாலும் காதல் குறையாமல் இரு..

#
கவிதையின் காதலன்

காதல் தோல்வி #*காட்டில் இருப்பது பருத்தி என் நெஞ்சில் இருப்பது நீ ஒருத்தி,,, #*வீட்டில் இருப்பது கிளாக் நான் உன்னை பண்ண போறேன் பிளாக்

#
Karuppasamy

~நான் எதுவும் பார்த்து இல்லை~ ~நான் பார்த்து ரசிப்பதற்காகவே காட்டுகிறாள்~... ~அவள் மூக்கின் மேல் இருக்கும் ~மூக்குத்தியை... ஆனாலும் ~அழகாய் தான் காட்சி தருகிறது~...

#
Karuppasamy

எத்தனை முறை பார்த்தாலும் சலித்துப் போவதே இல்லை.. நீ வெட்கப்பட்டு சிரிக்கும் அந்த புகைப்படம்..! ️ இனிய இரவு..

#
Karuppasamy

வெள்ளம்... நான் கரை சேர முடியாத, காட்டாற்று வெள்ளம்... அவள் என்மேல் கொண்ட, பேரன்பின் பெருவெள்ளம்... ~money Tan ~money is always alert Mattu..

#
Karuppasamy

நிலவே வானத்து படகே வெண்ணிறத்தில் பொன்னிறம் காட்டி சொக்க வைத்து சென்றதேனோ?.. நிறம் மாறி உலா வந்து உருமாறி போனதேனோ?.. விழியசைத்து, எனையழைத்து வசிகரித்து போனதேனோ?.. மத்தாப்பு புன்னகையில் நான் கிறங்கும் நேரத்தில் மனம் மயங்கும் மல்லிகையை நீ சூடிக்கொண்டதேனோ? பஞ்சு மெத்தை போல நீயும் பச்சையில் பட்டுடுத்தி எனை மயங்க செய்ததேனோ? உனதழகில் நான் மயங்கி என்னை மறந்து போனதேனோ?

#
கவிதையின் காதலன்

உன்னழகில் கிறங்கிய விழியோ சொக்கி போனது .. கொக்கி போடும் வார்தைகளோ உக்கி போட்டது.. வர்ணனையும் வராமல் திக்கி நின்றது.. சொக்கி போன விழிகளால் மனம் விக்கி போனது..

#
கவிதையின் காதலன்

யோசிக்கும் முன்பே உன்னை நேசித்து விட்டேன் ... இன்று யோசித்து கொண்டிருக்கிறேன்.. ஏன் நேசித்தேன் என்றல்ல ,,இன்னும்,, ,,இன்னும் ,, ~ உன்னை எப்படி ~நேசிப்பது என்று

#
Karuppasamy

நீ ரசிக்கும் அளவிற்கு நான் அழகானவளாய் இல்லாமல் இருக்கலாம்.. *#..ஆனால் உன்னை ரசிக்கும் அளவிற்கு நான் அன்பானவன்

#
Karuppasamy

கனவிலும் உன் வருகைக்காகவே காத்து நிற்பவன் நான்.. கண்களால் கைது செய்வாய் என்பதறிந்தே உன் இதயத்தை திருடியவன் நான்.. உன் மனச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறி போனவன் நான்..

#
கவிதையின் காதலன்

அவகிட்ட என்ன பிடிக்கும்னு யாராவது என்கிட்ட கேட்ட அடக்கமா சொல்ற பதில் அவளையே எனக்கு பிடிக்கும்

#
Sakthivel Sakthivel

சில பிடித்த விஷயங்களை தூரமாக நின்று ரசிக்கிறேன் எங்கே நான் அருகில் சென்றால் தொலைந்து விடுமோ என்ற பயத்தில்

#
Sakthivel Sakthivel

தொந்தரவு செய்யாமல் இருப்பதுதான் என் அன்பின் இறுதி வெளிப்பாடு

#
Sakthivel Sakthivel

காற்று வீசு தொடங்கி கொண்டு தான் இருக்கின்றன.. இன்று வரை நான் உன் மூச்சு காற்றாய்..

#
Karuppasamy

இன்று வரை இல்லை என்றும் நான் உயிரோட தான்,, இருக்கின்றேன்.. உன்னிடம் உள்ள இதய துடிப்பில் அதை நீ மறந்து விடாதே..?

#
Karuppasamy

பெண்ணே நீ அழகென்று ஒரு போதும் நினைக்காதே.. உனதழகை உன் விழியால் நீ ரசிக்க முடியாது.. உனை ரசிக்கும் ஆணின்றி உனதழகும் தெரியாது.. ரசிக்காமல் உனதழகை மெருகேற்ற முடியாது.. தினதோறும் வர்ணிக்க ரசிப்பின்றி நடக்காது.. ஆணும், பெண்ணும் ரசிக்காமல் அன்பை காட்ட முடியாது.. தொடரும் வாழ்க்கையில் ரசிப்பின்றி வண்ணம் மேலும் கூடாது..

#
கவிதையின் காதலன்

TN.24.KDS உன்னால் எவ்வளவு ஏமாற்றம் நிகழ்ந்தாலும் என்னை நான் மாற்றி கொள்ளப் போவதில்லை என் அன்பு உண்மையானது இன்றும் என்றும் என்றென்றும் மாறாது

#
Sakthivel Sakthivel

என் கவிதையை இரசித்த இரசிகனை (என்னவனை) எண்ண எண்ண என் கவிதைக்குச் சிறகு முளைத்து அவன் கைகளில் துடிதுடித்தது...

#
Ilakkiya sri

அதிகாலை புள்ளினங்கள் சந்தம் இசைக்க கனிகள் வாசம் சிந்த அணில்கள் கூத்தாடி கனிகளைப் புசிக்க ஆதவனோ இலைகளினூடே நுழைந்து என் மேனியில் தவழ நானோ என்னவனின் வருகையை எதிர்பார்த்துக் காத்து நிற்க .என் செவிகளிலே என்னவனின் மூச்சுக்காற்றின் வெப்பம் உரச தஞ்சம் ஆனேனடா உன் இதயத்தில்...

#
Ilakkiya sri

ஒப்பனைகள் இன்றி என்னவன் மனம் எழிலுடனும் நேசத்துடனும் மிளிரும்...

#
Ilakkiya sri

என்னவனின் வருகைக்காக தென்றலும் சற்று வலுவாக மாறி மண்ணில் விழ்த்தியதோ இம்மலர்களை இவனின் பாதங்களுக்கு மலர் மெத்தையாக்கி...

#
Ilakkiya sri

குளிர்காலம் வந்துவிட்டது தீ மூட்டி குளிர்காய சேகரித்து வருகிறேன் அவளின் நினைவுகள் என்னும் நெருப்பை...

#
Karuppasamy

_காதல் வரும் போது_ _கவிதை வரும்_ _காதல் விலகும் போது_ _கண்ணீர் வரும்_ RK

#
Kalpana Subramaniam

_உன்னைக் கண்டவுடன்_ _புரிந்தேன்_ _நீ என்னவள் என்று_ _ஆனால் நீ_ _என்னைக் கண்டவுடன்_ _திரும்பிக் கொண்டாய்_ _எவனோ என்று_ RK

#
Kalpana Subramaniam

<கொஞ்சம் தள்ளி வைத்தால் கூட> <நிறைய நெருங்கி வருகிறது> <உன் மீதான காதல்> <நீ என்னை காதலித்தை விட> <நீ என்னை காயப்படுத்தியது தான்> <அதிகம் என்று தெரிந்தும்> RK

#
Kalpana Subramaniam

<காதல் ஒன்றுதான்> <புரிந்து கொண்டாலும் அழகு> <பிரிந்து சென்றாலும் அழகு> <வலிகள் தான் வேறுபடும்> <காதல் வேறுபடாது> RK

#
Kalpana Subramaniam

_அழகை கூட ரசிக்க தெரியாத மனம் எனக்கு_ _ஆனால்_ _அழுகையை கூட ரசிக்க கற்றுக் கொண்டேன்_ _அவளை காதலித்த பின்பு_ RK

#
Kalpana Subramaniam

_பல நாள் என்னிடம் கேட்ட கேள்விக்கு_ _இவள் தான் என்று_ _அவள் கை பிடித்து_ _காதலுக்கு_ _அறிமுகம் செய்துவிட வேண்டும்_ _என்று தேடுகிறேன்_ _எனக்கானவளை_ RK

#
Kalpana Subramaniam

_உன்_ _இதயத்தின் இசைக்கு_ _என் இதழ்கள்_ _புன்னகைக்கும்_ _என்றும்_ _அருகில் நீ இரு_ RK

#
Kalpana Subramaniam

_யாருக்கும் தெரியாமல்_ _நீ அவளை நேசி_ _ஒரு நிமிடமாவது_ _அவளுக்கும் தெரியாமல் உன்னை நேசிப்பாள்_ RK

#
Kalpana Subramaniam

_என் இதயத்தை கேட்டுப்பார்_ _உன் நினைவுகளை தாங்காமல்_ _துடிக்கும் துடிப்பை_ _என் ஒவ்வொரு_ _இதய நரம்பையும் அறுத்துவிட்டு_ _காதல் வீணையில்_ _ஓசை இல்லை என்கிறாயே_ RK

#
Kalpana Subramaniam

_நீ என்னை_ _காணாதது போல்_ _செல்லும் நேரமெல்லாம்_ _நான் என்னுள்_ _காணாமல்_ _போய்விடுகிறேன்_ RK

#
Kalpana Subramaniam

_இறைவா_ _அவள் வரும்போது_ _ஒரே ஒருமுறை என்னை_ _காற்றாக மாற்றி விடு_ _அப்போதென்றாலும்_ _ஒருமுறை அவளை_ _தொட்டு பார்கிறேன்_ RK

#
Kalpana Subramaniam

_உனக்காக காத்திருப்பதே_ _காதல் சுகமாக இருப்பதால்_ _நீ காதலிக்கா விட்டாலும்_ _நான் காத்திருப்பேன்_ RK

#
Kalpana Subramaniam

_ஏன் இந்த வாழ்க்கை என_ _ஏங்கிய போது_ _நீ வந்தாய்_ _ஏழை நான்_ _உன்னால்_ _ஏழு உலகமும் பெற்றேன்_ RK

#
Kalpana Subramaniam

_எரிமலையென_ _தினம் தினம்_ _வெடிக்கிறது மனது_ _அதை தலையில்_ _கொட்டி கொட்டி_ _மூடி வைக்கிறது_ _உன் நினைவு_ RK

#
Kalpana Subramaniam

அன்பே...!!! என்னை முதன் முதலில் நேசித்தவளும் நீதான்..!" என்னில் முதன்முதலில் நான் சுமந்தவளும் நீதான்..!" பாதை இல்லாத கானகத்தில், திசை தெரியாத பறவை நான்..!" துடிக்கும் என் இதயம் ஊமையாகிவிட்டது..!" நீ என்னை அந்த பிரிந்த நிமிடம்..!" வலிகளோடு சொல்கிறேன்..!" முயற்சி செய்தும் முடியவில்லையடி உன்னை வெறுக்க..!" உன்னை நேசித்திருந்தால் நான் மறந்திருக்கலாம்..!" உன்னை நான் சுவாசிக்கிறேனடி..!" எப்படி மறக்க முடியும் உன்னை..!" என்னோடு நீ வாழவேண்டாம், என் இதயத்தில் நீ வாழ்ந்துவிடு..!" நான் வாழும்வரை என் வாழ்விற்கு அதுபோதுமடி..!" உதிர்ந்துவிட்ட என் வாழ்வில்..!" உன் நினைவுகள்தான் எனக்கு சிறு வெளிச்சமடி..!" வைத்துகொள்கிறேன் உன் நினைவுகளை என்னோடு மட்டும்...!! RK

#
Kalpana Subramaniam

_உன் வழிவரும்வரை_ _என் விழிப்பார்வைக்கு_ _காத்திருந்த நீ_ _இன்று விழிமேல்_ _வழிவைத்து காத்திருந்தும்_ _வேலையின் பெயர் சொல்லி_ _என்னை_ _காக்கவைப்பதேன் காதலா_ RK

#
Kalpana Subramaniam

_நான் பல_ _எதிர்ப்பார்ப்புகளுடன்_ _ஏக்கமாக காத்திருக்கிறேன்_ _உன் அன்புக்காக_ _ஆனால்_ _நீ தருவதோ_ _வலிகள் மட்டுமே_ RK

#
Kalpana Subramaniam

நிலவினை சிறைபிடிக்கும் மேகங்கள் போலவே.., அவ்வப்போது என்னையும் சிறைபிடிகிறது.., என் இதயத்தின் வலிகள்..!" அன்புக்கு ஏங்கி அழும் இதயத்தின் உணர்வுகளை.., எனக்குள்ளே புதைத்துக்கொல்கிறேன்..!" மண்ணில் என் மனமும்,உடலும், புதைந்தாலும்.., என் கனவுகள்,ஆசைகள் யாரும் அறியாத பொக்கிசமே..!" என் வலிகள் என்னோடு..!" என் ஆசைகள் மண்ணோடு..!" என் கண்ணீர் துளிகள் கண்ணோடு..!" எத்தனை முறை முயன்றும்.., சில வலிகளையும், ஏமாற்றங்களையும் மறக்க முடியவில்லை..!" மனதில் மறைந்து கிடக்கும்.., ஏமாற்றங்களையும், ஆழமான காயங்களை யாரும் உணரப் போவதில்லை..!" மனம் விட்டு பேச.., உறவு ஒன்றை தேடுது உள்ளம்..!" எத்தனை உறவுகள் இருந்தாலும்.., மனம் என்னமோ அனாதையாக தான் கிடக்கிறது...!! RK

#
Kalpana Subramaniam

என் உள்ளத்தில் நீ இருக்கும் இடத்தினை சொல்ல அழகிய கவிதைகளாய் மாறுகிறது என் எழுத்துக்கள் எல்லாம் என் அன்பே

#
Sathya Rakshan

அழகாய் பிறக்கிறது உன்னை நினைத்தால் வார்த்தைகள் எல்லாம் அவைகளையே அழகாய் கோர்த்து மாலை போல சூட்டுக்கிறேன் என்றும் என் கவிதைகளாய் உனக்கு என் அன்பே

#
Sathya Rakshan

kavithaikavithai

#
Mani Manikandan

உன்னிடம் பேச மட்டும் எப்போதும், ஆயிரம் கதைகள் இருக்கிறது..!" உன்னிடம் வீச மட்டும், என்னுடைய வாசம் தவம் கிடக்கிறது..!" உன்னுடைய நேசம் மட்டும், என்னிதய வாசலுக்குள் உறங்கி கொண்டிருக்கிறது..!" உன்னுடைய பாசம் மட்டும், எனக்குள் ஏக்கங்களையும், ஏமாற்றங்களையும், பிரசவிக்கிறது..!" உன்னுடைய உருவம் மட்டும், எங்கேயும் போகாமல் ஒட்டிக் கொள்கிறது..!" உன்னுடைய நினைப்பு மட்டும், என் இதயத்தை நீங்காமல் நிரப்பி இருக்கிறது..!" உன்னுடைய நிகழ் காலத்தோடு தான், என்னுடைய நிகழ்காலம், கெட்டியாக ஒட்டிக் கொள்கிறது..!" உன்னுடைய எதிர்காலத்தோடு தான், என்னுடைய காலடி தடங்கள், இணைந்திட நினைக்கிறது..!" என்னையும், உன்னையும், என்றாவது ஒருநாள், காலம் இழுத்து சுருட்டி, ஒருபுள்ளியில் சேர்த்துவிடும்..!" அந்த நாளுக்காக காத்திருக்கிறது, இந்த அன்பு மனசு...!! RK

#
Kalpana Subramaniam

சுயநலமே நிறைந்திருக்கும் இவ்வுலகில் சுயநலமாகக் கேட்கிறேன் உன் அழகான அன்பை மட்டும்

#
pra deepa

கருமேகங்கள் சூழ்ந்த பாம்பன் பாலத்தைப் போல..!! என் இதயத்தை சூழ்ந்து விட்டாய் பெண்ணே...

#
Karuppasamy

கண்முன் கலைந்த வானம் நீ..... காலத்தால் அழிந்த கவிதை நீ..... கண்முன்னே அழகாய் தொன்றிய கனவு நீ..... பிறகு கண்முன்னே அழிந்த என் காதல் நீ...... இப்படிக்கு ‌ 3ஆவது மனிதன்

#
மூன்றாவது மனிதன்

ஓர் நொடி கண் சிமிட்டியதால் உயிர் பிரிந்தது விபத்தில் ஓர் நொடி கண் சிமிட்டியாதால் புதிய வாழ்க்கை வந்தது என்னவளின் இதயத்தில்

#
Mohamed Bilal

உன்னை விட உன் நினைவுகளே எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் நானே நினைத்தாலும் அவை என்னைவிட்டு எப்பொழுதும் விலகுவது இல்லை என் காதலியே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன் அருகில் நான் இல்லை என்றாலும் என் நினைவுகள் எப்போதும் உன்னை சுற்றியே காற்றை போல எப்போதும் ஓயாமல் உன்னுடன் வரும் என் அன்பே ️

#
Sathya Rakshan

கனவிலே உன்னுடன் வாழ நினைக்கிறேன் யாருடைய பயமும் இல்லாமல்!!!

#
Mohamed Bilal

அதிகம் சிவந்து தான் போனது கையிலிட்ட மருதாணி அல்ல வெட்கத்தில் சிவந்த உன் கன்னங்கள்!

#
Karuppasamy

தனிமையே‌ அழகு என்று நினைத்திருந்த என் மனதில் தனிமையை விட அழகான உலகம் உள்ளது என்பதை அறியச் செய்தவன் நீ. காதல் மீதும் காதல் செய்பவர்கள் மீதும் நம்பிக்கை இல்லை. ஆனால் இரு விழி பார்வையையும் உன் அழகான புன்சிரிப்பினையும் கண்டு காதல் உண்மைதான் என்பதை உணர்கின்றேன். என் நிலைக்கண்ணாடி என் முகத்தைக் காட்ட என் மனக்கண்ணாடியில் உன் முகத்தை காண்கின்றேன்.

#
pra deepa

அன்பே..!! உயிரோடு கலந்த உன்னை மறக்க, என் மனதிற்க்கு தெரியவில்லை..!" குழப்பங்கள் என் மனதில் இருந்தாலும், உனக்கு எந்த வலியையும் தரவில்லை..!" என் உள்ளத்தில் சோகம் நிறைந்தும், உன் சந்தோஷத்தை கலைக்கவுமில்லை..!" இதை அத்தனையும், நீ உணர்ந்திருப்பாய்.!" உன் சம்மதம் ஒன்றுக்காக, நான் படும் வேதனைகளை யாரிடம் சொல்ல..!" தனிமையில் வாடிய என் மீது, அளவற்ற பாசத்தை காட்டி, ஏன் விலகி செல்லுகிறாய்..? நிரந்தரமில்லாத உறவுகளுக்காய், உண்மையான நம் காதலை, ஏன் புறக்கணிக்கிறாய்..!" என் உயிரே..!! நான் மறு ஜென்மமும் உன்னோடு வாழ்வதா? இல்லை, மறுகணமே மரணிப்பதா? உன் பதிளில் தானடி, என் வாழ்க்கையே உள்ளதடி என் கண்மணியே...!! *நினைவின் வலிகளாய்* *என்றும் உங்கள்* RK

#
Kalpana Subramaniam

எந்த ஜென்மத்தில் செய்த தவமோ... இந்த ஜென்மத்தில் கிடைத்தாய் நீயும் வரமாய் ️

#
Karuppasamy

நான் இப்பொழுதெல்லாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை உன் பெயராய் தான் இருக்கிறது.. என்னை மறந்து உன்னையே நினைக்க வைத்த நீ காதல் மந்திரக்காரி தான்..

#
Karuppasamy

உன் அழகை கண்டதில் நான் என்னை தொலைத்தேன்..!" நிலத்தில் விழுந்த சாரல் துளி போல, உன்னை என்னில் பத்திரபடுத்திவிட்டேன் ..!" எல்லோரையும் நனைத்துவிட்டு செல்லும் மழை, உன்னை மட்டும் ரசித்து விட்டு செல்கிறது..!" வானில் கோடி நட்சத்திரங்களை விட, மழையில் நனைந்த உன் முகம் எவ்வளவோ அழகுடி..!" மழைத்துளியும் உன் மேல் பட்டால், உள்ளம் உருகி உறைந்தே போகுதடி..!" பனித்துளி உன் கண்ணில் பட்டால், பரவசத்தில் பறந்தே போகுதடி..!" மழைக்காக காத்திருக்கும் விதைகள் போல, உன் முகம் காண தவிக்கிறேன்..!" தாமரை இலையில் மழைத்துளியை காணும் போதெல்லாம், உன் ஒப்பனையற்ற முகம் தான், மனதில் வந்து போகிறது..!" மழையில் நனையும் போதும், உன் நினைவுகளில் உருகும் போதும், பைத்தியமாகி விடுகிறேன்..!" உன் மனதில் சிறு புன்னகை, என் கவிதை கண்டு..!" அது தினமும் பொழிய வேண்டும், எந்தன் கவிதை மழையில்..!" *இதய சாராளாய்* *என்றும் உங்கள்* RK

#
Kalpana Subramaniam

நான் தினமும் பார்க்கும் கண்ணாடி.. என்னை பார்த்து கேட்டது..!" என்னை பார்க்கும் நீ.. என்னுள் இருக்கும் உன்னை.. எப்பொழுது பார்க்க போகிறாய் என்று..!" பாவம்.. அதற்கு எப்படி தெரியும்..? என்னுள்.. நீ தான் இருக்கிறாய் என்று..!! RK

#
Kalpana Subramaniam

உனக்கு நான் அனுப்பும் SMS.. வெறும் வார்த்தைகள் இல்லை..!" S - சிலநேரமாவது உன்.. M - மனதில் என்னைப்பற்றி.. S - சிந்தித்து பார்.. என்று.. என் மனம் கேட்கும்.. வேண்டுகோள்.. உன்னிடம் அன்பே...!! RK

#
Kalpana Subramaniam

அன்பே.. உன்னை பிரியும்வரை.. நான் உணரவில்லை..!" பிரிவு இவ்வளவு... கொடுமையானது என்று..!" ஆனால்... பிரிந்த மறுநிமிடமே உணர்ந்தேன்..!" பிரிவு என்பது.. மரணத்தின்.. ஒத்திகை என்பதை...!! RK

#
Kalpana Subramaniam

காயங்கள் செய்து போகும், காதலே வேண்டாம் என்று, முடிவோடு முயற்சித்த போதும்..!" என் நெஞ்சுக்குள் ஊடுருவி, என்ன தான் செய்தாயோ?? எத்தனை முறை பார்த்தாலும், அத்தனை முறையும் காதல் கொள்கிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

உலகிலேயே மிகவும் வன்முறையான தாவரம், உன் நினைவுகள்தான்..!" ஆம்.. அது வேர்விட்டிருப்பதென்னவோ என் இதயத்தில்தான்..!" ஆனால்.. அது அனுதினம் என் விழிநீரை, உரிஞ்சல்லவா உயிர் வாழ்கிறது...!! RK

#
Kalpana Subramaniam

கண்ணாடி நெஞ்சமென தெரிர்ந்தும், கல்வீசிப் போகிறாய் நீ..!" கல் வீசினாலும் கலங்க மாட்டேன்..!! உடையாத நெஞ்சில், ஒரு முகமாய் உன்னை பார்த்திருந்தேன்..!" இனி உடைந்த ஒவ்வோர் துண்டிலும், உன்முகம் பார்ப்பேன்...!! RK

#
Kalpana Subramaniam

தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே..!" உன் நினைவுகள் எப்போதும், எனை தலைகோதியும், தழுவிக்கொண்டும் இருப்பதால்...!! RK

#
Kalpana Subramaniam

என் கண்ணிற்குள், கதை சொல்லிக் கொண்டே இருக்கும் உன் புன்னகை..!" புண்பட்ட மனதிற்கு, நீ தரும் மருந்து.., அதற்காக காலமெல்லாம், என் மனது காயங்களோடு தான் இருக்க வேண்டுமா...?? RK

#
Kalpana Subramaniam

உன் வெட்கத்தை கையமர்த்தி, அமர வைப்பதற்குள், முடிந்துவிடுகிறது நம் சந்திப்பு...!! RK

#
Kalpana Subramaniam

அசைந்தாடும் காற்றாக, நீ நின்றாய் நான் தோற்றுபோக..!! சத்தம் இல்லாத என் காதல் மொழிகள், சத்தம் கொண்டு பாட தூண்டும் உன் விழிகள்..!" கொள்ளை கொண்டாய் மௌனமாக, தொல்லை தந்தாய் சுகமாக..!" போதுமடி செல்லமே, இனி தாங்காது என் உள்ளமே..!" இடம் பொருள் அறியாமல் காதல் செய்வோம், இதழ் கூட அறியாமல் முத்தம் பதிப்போம்..!" கொஞ்சமாக கோபம் கொள்வோம், கொண்ட காதலிலே கவலை மறப்போம்..!" செல்லமாக சண்டையிட்டு குழந்தையாக பிறப்போம், இமைதட்டி சொல்லிவிடு காதல் மீதுள்ள உன் ஆவலை..!" தினம் கொட்டி தீர்க்கிறேன், உன் மீதுள்ள என் காதலை...!! RK

#
Kalpana Subramaniam

அன்பென்ற சொல்லுக்கு, அர்த்தம் தந்தாய்..!" என் அகம் நிறைய ஆசைகள், வளரவும் செய்தாய்..!" மணம் கொண்ட மலரே, உன் மனம் தந்து சென்றாய்..!" நீ சினம் கொண்ட போதும், உன் புன்னகையில் தோற்கிறேன்..!" உன் சிரிப்பிலே, சோகம் மறக்ந்தேன்..!" உந்தன் அழுகையிலே, நான் உலகம் வெறுத்தேன்..!" மன கஷ்டம் பல உண்டு, கவலை இல்லை..!" உன் பிரிவாலே ஒரு கவலை, ஒவ்வொரு நொடியும் கஷ்டம் பெண்ணே...!! RK

#
Kalpana Subramaniam

ஆயிரமாயிரம் கற்பனையிலே, ஒரே ஒரு கவிதை பிறக்குதடி..!" ஆயிரமும் நீயென ஆனபின்னே, ஆகாயமும் மூழ்குது என் கற்பனையிலே..!" நிழலாக உன்னோடு நான் வாழ்ந்த நாட்கள், நிஜமாகட்டும் தினம் எந்தன் கற்பனையிலே..!" யுகம் யாவும் நான் தேடிய சொந்தமாக, தினம் வாழ்வேன் நீ கொண்ட புன்னகையிலே...!! RK

#
Kalpana Subramaniam

என் இதய மேடையில், நாடகம் நடத்த வந்தவர்கள் பலர்..!" ஆனால்.., என் இதயம், உன்னில் தானே காதல் கொண்டது...!! RK

#
Kalpana Subramaniam

வழி மீது விழி வைத்து காத்திருக்கிறேன், நீ வரும் பாதையிலே..!" உன்னை காண ஏக்கத்தில், காத்திருக்கிறேன்..!" நாழிகை போவது, மனதுக்கு தெரியாதடி..!" மணித்துளிகள் ஒவ்வொன்றிலும், மனதில் உந்தன் நினைவுகள் நிழலாடுகிறதடி...!! RK

#
Kalpana Subramaniam

என் மூடிய விழியில், உன் முகம் கண்டேன்..!" விழித்தால் உன் முகம், மறையும் என்ற அச்சத்தில், கண் மூடி என் கனவுகளை தொடர்கிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

முத்து முத்தாக சிரிப்போ, உந்தன் இதழில்..!" கொத்து கொத்தாக மலர்களோ, உன் தேசத்தில்..!" பத்து பத்தாக என்னை கூருபோடும் பார்வையோ, உந்தன் விழியில்...!! RK

#
Kalpana Subramaniam

தீண்டி சென்றதன் மாயமென்னவோ, கன்னம் கிள்ளி செய்தி சொல்லவோ..!" தொட்டு விட நினைத்து, மயங்கினேன் நீயோ? மண்ணை தூவி கலங்கச் செய்தாய்..!" கிளையை கிள்ளி மலரை உதிர்த்து, சாரலாய் தீண்டினாய்..!" தென்றலாய் இன்பமும், புயலாக ரணமாகி நின்றாயே..!" இசையாலே இணைந்து, மங்கள ஒலியானாயே..!" உன் வடிவம் பல கண்டு, மனம் அதை ஏற்கிறது ஏக்கத்தாலே..!" நீ காற்றுயின்றி உயிருண்டோ.. உயிரின்றி அழகுண்டோ.. என் மூச்சே...!! RK

#
Kalpana Subramaniam

கண்ணிற்கும் இதயத்திற்கும் உன்னால் சன்டை..!" இதயம் கண்களிடம் கூறியது, குறைவாக பார்..!" ஏனென்றால்... நீ பார்ப்பதால் நான், மிகவும் கஷ்டப்படுகிறேன்..!" கண்கள் பதிலளித்தன:.!" நீ குறைவாக உணருங்கள், ஏனென்றால்.. நீங்கள் உணர்வதால், நான் மிகவும் அழுகிறேன் என்று...!! RK

#
Kalpana Subramaniam

நீயே நானாகிறேன், நானும் மெல்ல உணர்கிறேன், முழுதும் உனதாகிறேன்..!" பொழுதுகள் களவாடியே, துயில் மறக்கிறேன்..!" உன் மூச்சினை சுவாசிக்க ஏனோ சிறகடித்தேன், சிறு வண்டாகினேன் என் பூவே நீயே நானாகிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

விரல்கள் சுவாசிக்க விரும்புகின்றன மீண்டும் என் கைகளைப் பிடித்துக்கொள்..!!!!

#
Karuppasamy

இந்த நாட்டை யார் ஆண்டால் என்ன இந்த ஆண்டாளை ஆளும் அடியேன் நீயல்லவோ ....

#
Karuppasamy

நீ செல்லும் வழியெல்லாம் மரமாக முளைத்திருப்பேன்.... !!! என் நிழல்கள் உன்மீது படர்வதற்கு அல்ல.... !! உன் பாதசுவடுகளாவது என் நிழல்களுடன் படிந்திருக்கட்டும் என்பதால்......மரத்தின் நிழலானாலும்,மனத்தின் நினைவானாலும் உன்னுடனே ...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னைத் தவிர என் நிழல் கூட உன்னை காதலிக்க கூடாது! இந்த உலகில் நீ இருக்கும் வரை உன்னை தான் நான் காதலிப்பேன் என்னை தவிர வேறு யாராலும் உன்னை என் போல பார்க்கவோ காதலிக்கவோ முடியாது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் உன்னை தொடர்ந்து வருவதினால் நீ என்னை வெறும் நிழல் என்று எண்ணி விடாதே...! நான் உன் நிழலான நிஜம் என்பதை நீ மறந்து விடாதே காதலி நான் உன் கிருஷ்ணன்...! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கண்களில் மலர்ந்து கவிதையாக வாழ்ந்து கனவாய் மறைந்தார் என் அன்பே

#
Sathya Rakshan

நிழலுக்கும் என்மேல் கோபம் நான் உன்னுடன் பேசாதால் உன்னை விட்டு என்னுடன் வர மறுக்கிறது என் அன்பே ️

#
Sathya Rakshan

தலையில் வைக்காத பூ குங்குமப் பூ எங்கே போனதோ என் மேல் விழுந்த செண்பக பூ

#
Karuppasamy

காதலும் கவிதையும் என் வாழ்வில் மலரா நினைவில் மலர்ந்திருக்கும் ஏனேனில் இவை இரண்டும் என் கற்பனையில் பூத்தவை

#
மூன்றாவது மனிதன்

அழகிய நிலவின், பிம்பமாய் பிறந்தவள் அவள்..!" கருப்பு முத்துக்கள் பதித்த கண்களால், என்னை மூழ்கடித்தவள் அவள்..!" தரிசாய் கிடந்த என் இதயத்திற்கு, இன்னுயிர் தந்தவள் அவள்..!" சிறு புன்னகையில், என் உயிரினை பறித்தவள் அவள்..!" காதலும் இல்லை, காதலியும் இல்லை, பிரிவும் இல்லை, கூடலும் இல்லை, இருந்தும், என் கவிதைகள் மட்டும், அவளை தேடித் செல்கின்றன..!" ஏன் அவளை மட்டும் பாடுகின்றன..? என் எழுத்துக்கள், அவளை கண்டிருக்கக் கூடுமோ..? அவள் கண்களில், காதலனாய் கலந்திட, உள்ளத்தில் உறவாய் உறைந்திட, தோழ்களில் தோழனாய் சாய்ந்திட, மடியில் பிள்ளையாய் தவழ்ந்திட, ஆசை கொண்டேன் நான்..!" ஏழேழு ஜென்மங்களிலும், எனக்கு வரமாய் வந்தவள், நீயே... நீ மட்டும் தானடி என் அன்பே...!! RK

#
Kalpana Subramaniam

வானில் பறக்க வேண்டும் என்பது என் கனவல்ல என் கனவு உனக்குள் பறக்க வேண்டும் என்பதே...!!!!

#
Karuppasamy

காதலனாய் காத்திருப்பேன்.. உன் கையைப் பிடிக்க..!" பூக்களாய்ப் பூத்திருப்பேன்.. உன் கூந்தலில் மணக்க..!" சிற்பியாய் காத்திருப்பேன்.. உன்னைச் சிலையாக வடிக்க..!" மாப்பிள்ளையாய் காத்திருப்பேன்.. நம் திருமணத்தை முடிக்க...!! RK

#
Kalpana Subramaniam

என்.. சுவாசத்தை மறக்கடிதவள்.. என்னை.. சுவாசிக்க மறந்துவிட்டாள்...!! RK

#
Kalpana Subramaniam

எல்லோரும் பெண்களை தான் பூக்கள் என்கிறார்கள்..!" ஆனால்.., வாடுவது என்னவோ ஆண்கள் தான்...!! RK

#
Kalpana Subramaniam

சில நினைவுகள் எப்போதாவது வரும், புன்னகையைப் போல..!" உன் நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும்.. மூச்சு காற்றுப் போல...!! RK

#
Kalpana Subramaniam

இரவு கண்ட கனவு.. மறைந்து போகலாம்..!" ஆனால்.., இதயம் தொட்ட உன் நினைவு.. என்றும் மறைவதில்லை.. என் இதயத்தில்...!! RK

#
Kalpana Subramaniam

நெஞ்சில் சோகங்கள் இருந்தாலும்.. கண்ணில் கனவுகள் இருந்தாலும்.. வாழ்வில் வருத்தங்கள் இருந்தாலும்.. என்றுமே.. என் நினைவில்.. நீ இருப்பாய்...!! RK

#
Kalpana Subramaniam

கண்ணுக்குள் நீ இருப்பதனால்.. அழுவதற்கு கூட மனமில்லை..!" நீ கரைந்து விடுவாய்.. என்பதால் அல்ல..!" கண்ணுடன் சேர்த்து.. உன்னையும் கசக்கி.. விடுவேனோ என்று...!! RK

#
Kalpana Subramaniam

நிமிடங்கள் போனால் என்ன.. நொடிகள் உள்ளது.. உன்னை நினைத்து வாழ..!! நொடிகள் போனால் என்ன.. என் இதயத்துடிப்பு உள்ளது.. உன் நினைவில் வாழ..!! RK

#
Kalpana Subramaniam

உண்மையான.. அன்புடன் பழகிப்பார்.. உன்னுடைய நிழலும்.. உன்னுடன்.. பேச ஆசைப்படும்..!! RK

#
Kalpana Subramaniam

ஏன் இத்தனை தூரத்தில் மிகப்பிடித்தவர்களை வைத்துவிடுகிறது இந்த பாழாய்ப்போன காதல்

#
Merlin Sophiya

காதலுக்கு மரியாதை... நேராக செல்வேன், பாதை அல்ல.. முன் ராதையாய் நனைந்து சென்றாய். நாராக முளைத்தேன்; என்னைக் கிள்ளி எறிந்தாய், பூவாய் மாற வேண்டினாய். சீராக நுழைய நினைத்தாய்; என்மனதினுள் பின் கோதையாய் வளர்ந்தாய் என்அன்பு மலரே... மலிவாக விற்றாய்; உன்மனதை எனக்குள் நன் கொடையாய் தந்தாய் என் அன்பென உன்னை. - கவிஞர் சு. எழிலன்

#
Suresh Pandian

உன் உதடுகள் என்னை வாசிக்கும் என்றால் என் கன்னங்கள் கவிதைகளாய் மாறும்.சாந்தமுடன்..SYED

#
Basha Syed

என் கண்ணில் விழுந்தது நீ யாரும் கேட்டால் பூ விழுந்தது என்கிறேன் __________________________ சுயம்பு

#
Moon Videos

சந்திப்பு எனும் பயணத்தில் தொடங்கி காதல் எனும் இடைவெளியில் பிரிவு எனும் வலியில் முடிகிறது இந்த வாழ்க்கை

#
Kavi M

தொடர்ந்தாலும் முடிந்தாலும் என்றும் என் பயணம் உன்னோடு தான்

#
Karuppasamy

இதயம் கூட ஒரு வகையில் பூமி தான், எப்போதும் உன்னையும் உன் நினைவுகளையும் சுற்றிக் கொண்டே இருப்பதால்

#
Karuppasamy

இடைவிடாத உன் நினைவுகளுடன் காற்றை போல சுவாசிக்கும் உன் காதலையும் எப்படி மறப்பேன் நீ சென்ற பிறகும் உன் நினைவுகளை சுமந்து கொண்டு என் அன்பே ️

#
Sathya Rakshan

மொழி இல்லா மௌனம் போல நீ இல்லா என் வாழ்க்கையும் என்றுமே அமைதியே என் அன்பே ️

#
Sathya Rakshan

எதை இழந்தாலும் உனை இழக்காது வரம் கேட்பேன் இறைவனிடம் விலைமதிப்பற்றது நீயும் உன் அன்பும் #என்னவளே

#
Karuppasamy

உன் வருகைக்காக காத்திருந்தேன் உன் இதய வாசல்லில்..

#
Karuppasamy

பூக்களை போலத்தான் காதலும் யார் அனுமதி இன்றியும் எந்த காரணமும் இன்றியும் மலர்ந்து விடுகின்றன..

#
Karuppasamy

அருகில் இருந்தால் அணைத்து மகிழ்வேன் தொலைவில் இருப்பதால் நினைத்து மகிழ்ந்தேன் (பிரிவின் வலி )

#
Silambu Silambu

ஏழு ஜென்மம் உன்னோடு வாழும் வரம் வேண்டாம் ... ஒரு நிமிடம் உன் தோள் சாய்ந்து இருக்கும் வரம் வேண்டும்

#
Karuppasamy

காதல் என்பது நீ காதலித்தி பார் அதின் வலி புரியும். அம்ம பிள்ளை மிது வைப்பது காதல் பாசத்தின் வலி. பிள்ளை அம்மா மிது வைப்பது சொத்தின் காதல் பசியின் வலி. கணவன் மணவி மிது வைப்பது நம்பிக்கையின் காதல் பசியின் வலி. மணவி கணவன் மிது வைப்பது புரிந்து கொல்ல காதல் வலி(கணவனை பற்றி)

#
பாலமுருகன் க

கூட்டத்தில் ஒருத்தி அல்ல, கூட்டத்திலும் அவள் ஒரு தீ! அதில் நானும் பற்றி எரிகிறேன்! அவளோ என்னை பார்வையால் பற்றவைத்து, சிறு குழந்தையைப்போல் சிரிக்கிறாள்!!!

#
Karuppasamy

என் மௌனத்தின் சுமையை குறைக்க, உன்னிடம் இரவில் கொஞ்சம் பேசிக் கொள்கிறேன்...!

#
Karuppasamy

உரிமையாய் உன்னிடம் ஒட்டிக் கொள்வேன்.. உனக்காகவே நான் என்பதில் ஒளிந்திருப்பேன் .. இளம் வயதினர் மனதில் தினம் வருவேன்.. வயதை தாண்டியும் பின் தொடர்வேன்.. நிழலாய் மனதில் பதிந்திடுவேன்.. கிடைப்பது கிடைத்தால் பகிர்ந்திடுவேன் .. இப்படிக்கு காதல்..

#
கவிதையின் காதலன்

சிறகுகள் இல்லை.. உன்னை தேடி வர.. ஆனால்.., இதயம் இருக்கிறது.. என்றும் உன்னை.. உன் நினைவுகளை நினைத்திட...!! RK

#
Kalpana Subramaniam

தினம் தினம்.. புரியவைக்க நினைத்தேன்.. என் காதலை..!" ஒரு நாள்.. புரிய வைத்து விட்டாய்..!" நான் உன் மனதில்.. இல்லை என்று..!! RK

#
Kalpana Subramaniam

இதற்காகத்தான் உன்னை நேசிக்கிறேன் என்பதற்கெல்லாம் அப்பாற்ப்பட்ட காதல் நீ அம்மு.. Good night

#
Karuppasamy

என்னைப் புரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும் என் அன்பின் ஆழம் என்னவென்று... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

சித்திரத்தை சிறை பிடித்து.. மனச்சிறையில் அடைத்து வைத்தேன்.. குறுஞ்சிரிப்பில் எனை மறந்து பூட்டி வைக்க மறந்து விட்டேன்.. சொக்க வைக்கும் விழிக் கொண்டு சொக்கி போன என் மனதை உன் பாதாள இதயத்தில் மீளாமல் அடைத்து விட்டாய்.. பூவுக்குள் தேனாக உருமாற்றம் செய்து விட்டு.. தேன் குடிக்கும் வண்டாக மாறயேனோ மறுத்து விட்டாய்..

#
கவிதையின் காதலன்

நான் ராதையாக பிறந்த போது உம்மை என்னால் அடைய முடியாததால் தான் நான் மீண்டும் மீராவாக பிறவி எடுத்தேன் மீண்டும் எம்மை தவிக்க விடுகிறாயே என் கிருஷ்ணா... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மறப்பதென்றால் மரித்து விட்டு போ மனமே! அனலூட்டாமல் புதைக்க சொல்கிறேன், துளிர் விடும் தாவரமாகி பூத்தப்பூவாகினும் அவன் கைகளில் சேர...

#
Panneer Selvi

தித்திக்கும் அன்பென்றும் திகட்டாது.. உனைக் காணாமல் இமையென்றும் மூடாது.. விழி பேசும் மொழியேதும் புரியாது.. உன் சிரிப்பின்றி நிலவின்று ஒளிராது.. நித்திரையும் உன் நினைவின்றி தொடராது.. நொடியொன்றும் நீயின்றி தொடங்காது.. கைகோர்த்த பிடியென்றும் தளராது.. உன் துணையின்றி என் பயணம் முடியாது..

#
கவிதையின் காதலன்

ஒவ்வொரு பூக்களை கட்டும் போதும் உன் மனதை எப்படி கட்டிப்போடலாம் என யோசித்துக் கட்டிப்போட்டாலும் நீ அடங்க மறுக்கின்றாயடா இப்பூக்கள் மட்டும் என் கட்டுக்குள் அடங்கி விடுகின்றது...

#
Ilakkiya sri

மருதாணி உன் கைகளில் முத்தமிட்டு சிவந்து எழில் கொஞ்சியதை காட்டிலும் வெட்கத்தில் சிவந்த உன் கன்னங்கள் அதை விட அழகு...

#
Ilakkiya sri

(காதல்) பணத்தின் மிது. (காதல்) சொத்தின் மிது. (காதல்) பிறறுடைய பொருலின் மிது. (உண்மையான காதல்) பொது நலன் காதலா இருக்குணம் அப்படி இருந்து பருங்காளேன் உங்களை வெல்ல யாவரும் இல்லை. VVILVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILVVILVVVILVVILVVVVILVVILVVILVVVILVVLVVILV

#
பாலமுருகன் க

ஆதவன் அவளின் பொன் மேனியாக கார் மேகம் அவளின் கூந்தலாக விழிகள் நட்சத்திரங்களாக இதழ்கள் நளிரில் துடிதுடிக்க என்னவன் வருகை செவிகளில் தேனாய் பாய அணிகலன்களின் சிஞ்சிதங்கள் நீரோடையின் சலசலப்பை மிஞ்ச அவன் என்னோடு நீரோடையில் கைகோர்க்க நீரோடை பஞ்சணை தந்து நின்றதோ...

#
Ilakkiya sri

உன்னைப்புரிந்து கொண்ட பின் தான் விரும்பிய நேரம் உணவருந்த அமுத பாத்திரமான உன் கைகள் இருக்கையிலே பறந்து சென்று மீண்டும் துயில் கொள்ள நீ கட்டிய பூட்டப்படாத கூட்டினைத்தேடி வராதா இக்குருவிகள்...

#
Ilakkiya sri

பார்த்தவுடன் ரசித்து விட்டுப் போக நீ ஒன்னும் ஓவியமல்ல என் உயிர் #என்னவளே ..

#
Karuppasamy

உன்னை நினைக்க வேண்டாம் என்று.. என் மனம் சொல்கிறது.! ஆனால்.., அந்த மனதுதான்.. எப்போதும் உன்னை பற்றி.. நினைத்து கொண்டு இருக்கிறது...!! RK

#
Kalpana Subramaniam

காணாமல் இருந்த என்னை இமை மூடாமல் செய்து விட்டு கண் காணாமல் போனதெங்கே..? தேடாமல் இருந்த என்னை ஓயாமல் தேட விட்டு மாயமாகி போனதெங்கே..? நினைக்காமல் இருந்த உன்னை மறக்காமல் செய்து விட்டு நீ மறைந்து போனதெங்கே..? கிடைக்காத அன்பையும் திகட்டாமல் கொடுத்து விட்டு திரும்பிடாமல் போனதெங்கே..?

#
கவிதையின் காதலன்

வானில் கோடி நட்சத்திரங்கள் இருந்தாலும் வானத்தை அலங்கரிப்பது நிலவு தான்... உலகில் கோடி பெண்கள் இருந்தாலும் என் வாழ்க்கையை அலங்கரிப்பது நீ தான் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பார்த்து பார்த்து பேசிய காலம் தூரத்தில் இருந்து நேசித்தோம் சந்திக்கும் தருணத்தில் நான் நானாக இல்லை இறுக்கி அணைக்கும் போது நீ என்னை உணருவாய் உன்னை மறந்து

#
Karuppasamy

என் இதயத்தை திருடியவள் நீ ஆனால் காதல் என்னும் தண்டனையை பெற்றது நான்..

#
Karuppasamy

உன்னை மறக்கதான் பெண்ணே, நினைக்கிறேன்..!! நம் நினைவுகள், ஒவ்வொன்றாய்‌ அழிக்கிறேன்..!" ஒன்றா இரண்டா அழிப்பதற்கு, விரல் கோடி வேண்டும் எண்ணி முடிப்பதற்கு..!" உன்னை மறந்து வாழ, ஒரு மந்திரம் எனக்கு தெரியல..!! சுகமான நினைவுகளை சுமப்பதில், எனக்கு பாரமில்லை..!" உன்னோடு வாழ்ந்தது ஒரு சுகமெனில், உன் நினைவுகளோடு வாழ்வதும் சுகமே..!! பதித்த முத்தச் சுவடுகள் அழிந்தாலும், என்றும் அழியாத உன் நினைவுகள்...!! RK

#
Kalpana Subramaniam

உன் நினைவாலே கரைவேனோ உயிரே..!" கரைந்தாலும், காண்பேன் பல சுகமே..!" தொலைவேனோ உன்னை தேடி மனமே..!" தொலைந்தாலும், இன்பம் என்றும் உன் நினைவே..!" நிலவே நீ தேய்ந்ததாலே, வான் சின்ன இடமின்றி, இருளாகுதே ஏன்..? எந்தன் ஜென்மம் முழுவதும் கணவுலகில், உன்னை சேர்ந்ததாய் கற்பனையில் மகிழ்வேனோ..!" அழகு திருமேனி தழுவுவதை காதல் என்றால், நான் மறுப்பேன்..!" அழகு பாழ் பட்ட அந்த கணம், உந்தன் அன்பை ரசித்திடும் எந்தன் மனம்...!! RK

#
Kalpana Subramaniam

உன் இரு விழிகளில் வீழ்கிறேன், தினம் கனவுலகில் வாழ்கிறேன்..!" நெருங்காத பொழுதெல்லாம் தவிக்கிறேன், உன்னோடு விடியாத பொழுதை வெறுக்கிறேன்..!" நீ இல்லா வாழ்க்கையை நினைக்கிறேன், நரகத்தின் பிம்பத்தை உணர்கிறேன்..!" உன் உதட்டில சிறு புன்னகை பார்க்கிறேன், போடி‌ பெண்ணே!! தினம் உன்னிடம் தோற்கிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

ஆயிரமாயிரம் கற்பனையிலே, ஒரே ஒரு கவிதை பிறக்குதடா..!" ஆயிரமும் நீயென ஆனபின்னே, ஆகாயமும் மூழ்குது என் கற்பனையிலே..!" நிழலாக உன்னோடு நான் வாழ்ந்த நாட்கள், நிஜமாகட்டும் தினம் எந்தன் கற்பனையிலே..!! யுகம் யாவும் நான் தேடிய சொந்தமாக, தினம் வாழ்வேன் நீ கொண்ட புன்னகையில்...!! RK

#
Kalpana Subramaniam

அன்பென்ற சொல்லுக்கு, அர்த்தம் தந்தாய்..!" என் அகம் நிறைய ஆசைகள், வளரவும் செய்தாய்..!" மணம் கொண்ட மலரே, உன் மனம் தந்து சென்றாய்..!" நீ சினம் கொண்ட போதும், உன் புன்னகையில் தோற்கிறேன்..!" உன் சிரிப்பிலே, சோகம் மறக்ந்தேன்..!! உந்தன் அழுகையிலே, நான் உலகம் வெறுத்தேன்..!" மன கஷ்டம் பல உண்டு.. கவலை இல்லை..!" உன் பிரிவாலே ஒரு கவலை, ஒவ்வொரு நொடியும் கஷ்டம் பெண்ணே...!! RK

#
Kalpana Subramaniam

அது கண்ணீர் காணா கண்களோ..?? நீ காட்சிக்கு வந்த பொம்மையோ..?? பௌர்ணமி நிலவோ? பளிச்சிடும் சூரியனோ? பிறைமத பெண் என்பதை, உன் நெற்றி சொல்கிறது..!" பிறர் மனம் பைத்தியமாக்கினாய் என்பதை, உன் அழகு சொல்கிறது..!" உன் வருகை அறிந்து புல்வெளி எல்லாம், நீ கால்மிதிக்க தவமிருக்கும்..!" நிலவும் தேய்கிறது உன்னை பார்த்த வெட்கத்தில்....!! RK

#
Kalpana Subramaniam

தத்திப் பேசும் உதட்டில் தான், தவறி நானும் விழுந்துவிட்டேன்..!" கை தட்டி அதட்டிக் கூப்பிடும் இமைகளில் தான், என் இதயம் நான் மயங்கிவிட்டேன்..!" வண்ணம் காட்டும் நடைகளில் தான், உன் நினைவுகளில் சிக்கிவிட்டேன்..!" உன் பறந்த உடல் திகைக்கும் இதயத்தில் தான், என் உயிரை நான் விட்டுவிட்டேன்...!! RK

#
Kalpana Subramaniam

காதல் மலரே... நீ சொல்ல வந்த காதல், சொல்ல முடியாது போயினும்..!" உன் கண்களை பார்த்து, அறிந்து கொண்டேன்..!" உன் உள்ளதத்திலும், காதலின் வாசம் வீசுகிறது என்பதை...!! RK

#
Kalpana Subramaniam

மலர்கள் சிரிக்கும் போது, நம் உள்ளங்கள் மெய் சிலிர்க்கும்..!" என்னவள் சிரிக்கும் போது, பூ உள்ளங்களே மெய் மறக்கும்...!! RK

#
Kalpana Subramaniam

மலர் நீ ஓய்வு அறிய போராளி ஒரு அறிவு உயிர்க்கு உணவு அளித்து ஓராயிரம் உயிர்க்கும் வாழ்வு அளிக்கும் வள்ளல் மௌனமாய் கலகம் இல்லாமல் புரட்சி புரியும் புதியவளே ஒவ்வொரு நாளும் மலர்ந்தும் மடிந்தும் யுத்தம் செய்யும் வித்தகியே மென்மையா பனித்துளிக்கு இடம் அளித்து மெல்லிடையாளின் காதலுக்கு உயிர் கொடுத்து கருவறைக்கு மெருகு கூட்டி கல்லரைக்கும் அழகு கூட்டும் அதிசியமே வாழ்க உண் பணி ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

தேடலுக்கு முடிவு இல்லை தான்.. என் தேடலின்.. முதலும் முடிவும் மட்டுமல்ல.. முழுவதுமாகவும்.. நீயாக மட்டுமே இருக்கிறாய்...!! RK

#
Kalpana Subramaniam

ஆணாக பிறந்து இருக்கலாம் என் ஏங்கும் பெண்ணே. கட்டுக்கடங்காத கண்ணீரை அடக்கி சிரித்துப்பார். அந்த ஆசை அடியோடு போய்விடும் ஆணின். மறுமுகத்தை அறிய அவன் அம்மாவினால் மட்டுமே முடியும். காதலியால் கூட அறிய முடியாது என்பதே நிதர்சனம். RK

#
Kalpana Subramaniam

நெஞ்சை பூ போல் கொய்தவளே என்னை ஏதோ செய்தவளே...️️

#
Karuppasamy

மழை செதுக்கியது உன்னை உளி அடியெல்லாம் என் இதயத்தில் ....

#
Karuppasamy

அவள்... என்னவளே மலர்கள் மீது படவேண்டிய பாதம்.... கடற்கரை மணலில் பட்டதால் தான் என்னவோ........ கரிக்கும் கடல் அலை உனை தொட்டதால்தான் என்னவோ.... கடல் நீர் குடிநீர் ஆனது..... உன் நினைவில் அன்பு காலை வணக்கம்

#
Ramasamy Ramasamy

தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக் கொள்ள வாழ்க்கை இல்லை...!

#
Karuppasamy

நிலவு இல்லாத நாட்கள் உண்டு ஆனால் உன் நினைவு இல்லாத நாட்கள் இல்லை என் காதலி...!!! இரவில் தெரியும் நிலவை விட என் மனதில் தெரியும் உன் முகமே என்றென்றும் அழகு காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இரு வரி கவிதையை விட உன் இரு விழி ஆயிரம் கவிதை சொல்லுதடி அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நாள் முழுவதும் உனக்காக காத்திருக்கிறேன் ஒரு நொடி பொழுது என்னிடம் பேசு எனக்காக பெண்ணே நான் உயிர் வாழ அது போதும் உன் வார்த்தைக்காக காத்திருக்கிறது இன்றும் கூட போய் விட்டது என் நாட்கள் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் மனதில் எத்தனை கவலைகள் இருந்தாலும் அவை அனைத்தும் காணாமல் போகின்றது... உன் இருவிழி பார்வையில் நான் தினம் தினம் தொலைந்து போகிறேன் ராதா.. #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இதயம் இல்லா இணைய இயந்திரத்தில் நான் கண்டெடுத்த நல் இதயம் கொண்டவள் நீ... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன் பிரிவு என்னை ஏங்க வைக்கவில்லை ஆம் உண்மை தான் எட்ட முடியாத தூரத்தில் நீ இருந்தாலும் உன் நினைவுகள் என் பக்கத்தில் என்னை ஆட்கொள்ள உன் பிரிவும் எனக்கு சுகமே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

அதிக கோவம் தான் ஆயினும் நீ என் பெயரை உச்சரித்த நொடியில் என் கோவத்தின் சாயல் சற்று மறைந்து போனது என் சிறு புன்னகையில்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னை இழந்துவிட்டேன் உன்னில் என் கற்பனை என்னும் கடலில் தொலைத்து விட்டேன் என்னை தேடி பார்த்த நிமிடம் அதில் உன் முகமே தொடர்ந்தது எனக்குள்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் இறந்த பின்னும் அவள் நினைவுகளை என்னிடம் இருந்து பிரித்து விடாதீர்கள் அவளின் நினைவுகளோடு என்னை சிதையிலிடுங்கள் .. நான் எரியும் போதும் அவள் நினைவுகள் என்னை தொட்டுகொன்டே இருக்கட்டும்....!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ராதை அவளுடன் நான் சேர்ந்து அமர்ந்த ஊஞ்சலும் என்றும் அவள் நினைவுகளுக்கு சொந்தம்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எந்த ஒரு காதலில் தாய்மை உணரப்படுகிறதோ... அந்த காதல் அப்போதே பூனிதமாகிறது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை பற்றிய நினைவுகளை கடந்து போக முடியாமல் பிணமாய் நடந்துபோகிறேன் ..! வலிகளை வரிகளாக்கி கொண்டும் ..!! வரிகளை வழிகளாக்கி கொண்டும் ..!! #Radhaiyin_Kannan

#
கவிகண்ணா

உனக்கென நினைவுகள் விழித்திடும் போதேல்லாம் நான் ஏமாறுகிறேன்......... நீ நிஜமும் அல்ல நிழலும் அல்ல என்பதால்.. கடை விழி கசியும் கண்ணீர் ஈரம் தான்........ உனக்கான என் நேசத்தை கண்களில் வைத்து உறங்கவைப்பதை விட இதயத்தில் வைத்து இயங்கவைப்ததே என் விருப்பம்....... உன் கண்களிலே என் உலகத்தை காண்கிறேன் நான்.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

முன்ஜென்மக் காதல் ஒன்று, முன்னிரவு தோன்றிவிட, நீ செய்த காயத்திலே, என் நெஞ்சம் கனக்குதடி..!" காயங்களின் வலி போக்க, மாயங்கள் ஏதும் இல்லை..! நீயில்லா என் வாழ்க்கை, சாயங்கள் போனதடி..!" இதயத்தின் மையம் தேடி, வந்திறங்கிய வாளோன்றால்..! என் அகிலத்தின் அத்தனையும், மொத்தமாய் உடைந்ததடி..!! உடைந்துப் போன மனதைக் கூட, ஒட்ட வைக்க வழிகள் உண்டு..! நீ கடந்துப் போன பிறகு, அது தூள் தூளாய் ஆனதடி..!" தூசிப் பட்ட விழிகள் என்று, என் கண்ணீரை மறைத்துவிட்டேன்..! பாசி படர்ந்த என் மனதின் ஓரம், உன் நினைவுகள் வழுக்குதடி..!" உன்னைப் போல் காதலிக்க, இவ்வுலகில் யாரும் இல்லை..! வேறுலகம் சென்று விட்டால், அவ்வுலகம் துரத்துதடி..!" நீ சொன்ன வார்த்தைகள் எல்லாம், காற்றோடு கரைந்ததடி..! என் கனவின் முதல் காட்சிக் கூட, உன்னில் இருந்தே தொடங்குதடி...!! RK

#
Kalpana Subramaniam

இது காதல் சொல்லும் கவிதை அல்ல..!" கவிதை சொல்லும் காதலும் அல்ல..!" என்னோடு நடமாடும் உனக்காக..!" என் இதயம் பேசும்.. வார்த்தைகள்...!! RK

#
Kalpana Subramaniam

என் உதட்டின் கடைசிப் புன்னகை, என் கண்களின் மிக நீண்ட கண்ணீர், இரண்டுமே நீ கொடுத்தவை..!" என்னை விட்டு விலகுவதாக நினைத்து, ஓடிக் கொண்டேயிருக்கிறாய்..!" வானமாய் என் அன்பை, விரித்து வைத்திருக்கிறேன்..!" எங்கே சென்று விடுவாய், என்னைத் தவிர்த்துவிட்டு...!! RK

#
Kalpana Subramaniam

உன்னை விட்டுப் பிரியச் சொன்னால், உன் பெரு மூச்சைப் போல் பிரிவேன்..!" மீண்டும் உன்னுள் சேரச் சொன்னால், நீ பெறும் மூச்சைப் போல் வருவேன்...!! RK

#
Kalpana Subramaniam

உன்னோடு வாழும்.. சிறு நொடிகளை கூட.. ரசிக்க வேண்டும் என்று.. ஆசைப்பட்ட எனக்கு.. இறுதியாய் மிஞ்சியது.. ஏமாற்றமும்.. காதலின்.. ஏக்கமும் தான்...!! RK

#
Kalpana Subramaniam

கோடி யுகம் காத்திருக்கும், என் கண்களுக்கு.., நொடி பொழுது தரிசனம், உன் முகம்...!! RK

#
Kalpana Subramaniam

என்னவளே..!! ஏன்..? இந்த வாழ்க்கை என ஏங்கிய போது, நீ வந்தாய்..!" எந்தன் எதிர்காலம், நீ என தெரியாமல், என்னுள் உன்னை, இழந்துவிட்டேன்...!! RK

#
Kalpana Subramaniam

உன்னோடு வாழும்.. சிறு நொடிகளை கூட.. ரசிக்க வேண்டும் என்று.. ஆசைப்பட்ட எனக்கு.. இறுதியாய் மிஞ்சியது.. ஏமாற்றமும்.. காதலின்.. ஏக்கமும் தான்...!! RK

#
Kalpana Subramaniam

மயில் தன் தோகையை விரித்து ஆடியது, மழை வருமோ என்று எதிர்பார்த்தேன், ஆனால் மழை வரவில்லை, ஆனால் அவ்வழியாக நீதான் வந்தாய்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

சந்திக்காத வேலையிலும் சிந்திக்க வைத்தவள் நீ...... சிந்தித்த வேலையில் என் சிதையில் நின்றவள் நீ..... என் சிந்தையில் நின்ற உன்னை என் இதய கூட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்றும் பத்திரமாய்.... காதலுடன்.... கண்ணா... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னுடைய ஒட்டுமொத்த சந்தோஷமும் நீதான்... உன்னை தவிர வேறு என் வாழ்வில் வேறு யாருக்கும் இடமில்லை... நீ மட்டுமே என் சொந்தம்... உனக்காக மட்டுமே என் காதல்...! எனக்கு நீ உனக்கு நான்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை காண துடிக்கும் என் கண்களும்... உன்னை நினைத்து துடிக்கும் என் இதயமும் எப்போதும் உனக்காகத்தான் காதலி #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ என்னை எப்படி நினைத்தாலும், எப்படி பேசினாலும், எப்படி நடத்தினாலும், உன்னை விட்டு நான் விலகவே மாட்டேன்! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உண்மையான காதல் எப்பவுமே ஜெயிக்கும் பொய்யான அன்பை தோற்கடித்து!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

"உன் உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு அணுவிலும்... நான் உன்னுடன் கலந்து மகிழ்வோடு வாழவே வேண்டுகிறேன்..... " #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை எவ்வளவு பிடிக்கும்னு நீ கேட்டா எனக்கு சத்தியமா சொல்ல தெரியாது ஆனால் உன்னை நேசித்த அளவுக்கு நான் யாரையும் நேசித்ததில்லை... யாரையும் இனி நேசிக்கவும் முடியாது...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

அருகில் வந்து தொந்தரவு செய்ய விரும்பவில்லை அதற்காக விட்டுச் செல்லவும் மனமில்லை தூரத்தில் நின்று உன்னை காணவே தினம் தினம் ஓடி வருகின்றேன் தொலைக்க முடியாத உன் நினைவுகளோடு நான் தொலைந்து போகிறேன்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பாலைவனமாக இருந்தாலும் நான் பயனம் செய்வேன் பாதை காட்ட நீ இருக்க வேண்டும்... மன வலியிலும் நான் உறங்குவேன்...கனவில் வருவது நீயாக இருக்க வேண்டும்... கடும் பனியிலும் இருப்பேன்... போர்வையாக நீ இருக்க வேண்டும்... நான் சாயும் மடி நீயாக இருக்க வேண்டும்... என் இறப்பின் மடி நீயாக இருக்க வேண்டும் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நிலையில்லாத உறவு என தெரிந்தும்.. வேதனையான பிரிவு தான் முடிவு என புரிந்தும் அந்த நேசம் எனக்கு பிடித்திருக்கிறது அந்த அளவுக்கு மனசு ஏங்கி தவிக்கிறது என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பாசம் வையுங்கள் தவறில்லை ஆனால் பைத்தியம் ஆகி விடாதீர்கள்... ஏனென்றால் இங்கு முடிவே இல்லாத வாழ்வும் இல்லை. பிரிவே இல்லாத காதலும் இல்லை... எல்லாம் சில காலம் தான்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் உயிர் என் உடலை விட்டு பிரியும் போது கூட உன் நினைவோடுதான் பிரியும்...ஏனெனில் என் உயிரிலும் என் உணர்விலும் என் கனவிலும் கலந்து விட்டாய் என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ எனதருகினில் நீ இதை விட ஒரு கவிதையே கிடையாதே!... நீ எனதருகினில் நீ இதை விட ஒரு புனிதமும் இருக்காதே!... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எந்த வேலை செய்தாலும் ஒரு நிமிடம் அதை நிருத்தி விட்டு உன்னை பற்றி சிந்திக்கிறேன் அந்த அளவுக்கு அடி மனதில் இடம் பிடித்து விட்டாய் நீ என் உயிர் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கண் வழியே நுழைந்து சின்னதொரு நெஞ்சாங்கூட்டுக்குள் சிக்கிக் கொண்ட பறவையடி நீ!.. பூட்டை திறக்காமல் சிறை வைத்து காப்பேன் என் கண் வழியே!.. #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

அன்பே நீ மௌன விரதம் இருந்தால் முதலில் உன் கண்களை மூடிக்கொள் ஏனென்றால்...? உன் உதடுகளை விட உன் கண்கள் தான் அதிகம் பேசுகிறது அன்பே...! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கவிதை சொல்ல காதல் தேவையில்லை... உன் கண் பார்வை ஒன்றே போதும்... நான் கவிஞன் இல்லை நான் உன் காதலன்... எனக்கு கவிதை தெரியாது... உன் கண்களை பார்த்தால் ஆயிரம் கவிதை எழுத வேண்டும் என்று என் கைகள் துடிக்கிறது என் கண்ணழகி... என் அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

முகத்தில் ஒரு சிரிப்பு சிரிப்பில் ஒரு பாசம் பாசத்தில் ஒரு நேசம் நேசத்தில் ஒரு இதயம் அந்த இதயத்தில் என்றுமே நீ என் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மலரினில் மணம் கண்டேன் மௌனமும் மொழியாய் கண்டேன் மழையில் மகிழ்வதை கண்டேன் உன் புன்னகையில் மட்டுமே என் ஜீவனைக் கண்டேன் என் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ செல்லும் வழியெல்லாம் மரமாக முளைத்திருப்பேன்.... !!! என் நிழல்கள் உன்மீது படர்வதற்கு அல்ல.... !! உன் பாதசுவடுகளாவது என் நிழல்களுடன் படிந்திருக்கட்டும் என்பதால்......மரத்தின் நிழலானாலும்,மனத்தின் நினைவானாலும் உன்னுடனே ...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் இரு விழிகளும் இரவின் மயக்கத்தில் உறங்கினாலும்.... என் இதயம் மட்டும் என்னவள் உன் பெயரை மட்டும் சொல்லி கொண்டே துடிக்கும் காதலுடன் கண்ணா.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னைத் தவிர என் நிழல் கூட உன்னை காதலிக்க கூடாது! இந்த உலகில் நீ இருக்கும் வரை உன்னை தான் நான் காதலிப்பேன் என்னை தவிர வேறு யாராலும் உன்னை என் போல பார்க்கவோ காதலிக்கவோ முடியாது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கண்ணா அனைத்தையும் படைத்தவன் நீ என்கிறாய்... ஆனால் உன்னை மட்டும் எங்கும் காணவில்லையே மாயாவி!!! ராதே நீ ஏன் வெளியே தேடினாய்... ராதைக்குள் தானே இந்த மாயாவி இருக்கின்றான்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னைத் தவிர என் நிழல் கூட உன்னை காதலிக்க கூடாது! இந்த உலகில் நீ இருக்கும் வரை உன்னை தான் நான் காதலிப்பேன் என்னை தவிர வேறு யாராலும் உன்னை என் போல பார்க்கவோ காதலிக்கவோ முடியாது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னை கண்டதும் மண் பார்த்து தலை குனிந்து வெட்கம் கொள்ளும் என்னவளை போலவே என்னை கண்டதும் மேகத்தில் தன் முகம் மறைத்து வெட்கம் கொள்கிறாள் வானத்து நிலா ..!! வெட்கம் கொள்வதில் என்னவளும் அந்த நிலவும் எனக்கு ஒன்று தான் ..! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

வானத்தில் எட்டாத உயரத்தில் தான் நீயும் இருக்கிறாய் என்றாலும் என் எண்ணத்தில் எட்டிவிடும் தூரத்திலேயே நீயும் வந்து விடுகிறாய் ..!! உயரம் என்பதும் தொலைவு என்பதும் உலகிற்கு தானே தவிர உணர்விற்கும் உள்ளத்திற்கும் இல்லை ...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீயே நீயே இரவின் பூவனம் ..!! காதல் கொள்ளும் அழகு ஓவியம் ..!! நெஞ்சில் நிற்கும் அசத்தல் காவியம் ..!! உள்ளம் கண்ட வானின் பெண்ணினம் ..!! வெட்கம் கொண்ட உன் பார்வையில் சினம்...!! மேகத்தில் ஏன் மறைகிறாய் தினம் ..!! உன்னை காண தவிக்குதே மனம் ..!! கண்டும் காணாமல் போவது உன் குணம்... உன்னை தேடி வருவது என் மனம்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இந்த ஜென்மம் மட்டும் அல்ல இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த கண்ணன் என் ராதா உன்னை மட்டும் தான் காதலிப்பேன் அது என் முதலும் நீ முடிவும் நீ தான் என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

அவளும் நிலவும் உன்னை நான் கண்ணே முழுமதியோடு ஒப்பிடவா மதிபோல் நீயும் உந்தன் விழிப்பார்வையால் என்னுள்ளத்தில் தன்னொளி பெருக்கி என்னை ஆட்கொள்கின்றாய் அந்த நிலவைக் காட்டிலும் நீ அழகு நங்கை ஏனெனில் களங்கம் ஏதுமில்லையே உன்முகத்தில்... ️ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் தேடல் உன் வழி தேடி அல்ல.. உன் விழி பார்வையில் விழும் வரை அன்பே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மனம் ஒருவரை தான் தேடும் அதீத அன்பு கொண்ட காதலை மட்டும் என் மனசெல்லாம் நேரஞ்சவள் நீ மட்டுமே ️அறியா வயதில் விதைத்த காதல் இது ஆயிசுக்கும் அறுவடை பண்ண முடியாது ️ #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் திரும்பி பார்க்கும் திசையெல்லாம் உன் நினைவுகள் நான் காற்றின் சுவாசத்தையும் அதிகமாய் சுவாசிக்கிறேன் எங்கோ நீ விடும் மூச்சு காற்று என்னுள் வந்து சேர... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் உயிரே உன் மடியில் தலை சாய்ந்திருக்கும் இந்த ஒரு நொடி போதும் இக்கணம் என் உயிர் பிரிந்தாலும் சந்தோசம் தான் நாளை என்ற கனவு கலைந்தே போகட்டும் இன்று மட்டும் என்னுடன் இருக்கட்டும் காதலி.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மல்லிகையே தன் வாசத்தை உன்னிடம் தான் கடன் வாங்கியது ரோஜவே உன் அழகை மறு பிறதி எடுத்தது என் அழகியே .உன் அழகை வர்னிக்க இன்னும் எத்தனை கவிதைகள் தேவைபடுமோ பேரழகியே....!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இந்த உலகில் ஒவ்வொருவரும் யாரோ ஒருவருக்கு அடிமையாக இருக்கிறார்கள்...!!! நானும் அடிமை தான் என்னவனின் அன்பிற்கு...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இனம் புரியாத காதலும் உன் மீது தான்...!!! இதயம் புரியும் காதலும் உன் மீது தான் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ஆறுதலாய் ஒரு வார்த்தை மௌனமாய் ஒரு முத்தம் அன்பாய் ஒரு அரவணைப்பு இது போதும் வாழ்க்கைல எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிப்பேன் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

யார் என்னை ஒதுக்கினாலும் நீ மட்டுமே என்னை மார்போடு அனைக்கின்றாய் நான் தஞ்சம் அடைய இடம் இருக்கும் இடத்தில் தானே நான் சாய்ந்து கொள்ள முடியும் என் கண்ணா #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

விண்ணில் தவழும் வெள்ளி ஓடமே..!! உன்னை காணவே மனம் எங்குமே..!! வானில் உன்னை கண்ட கணமே...!! எந்தன் உள்ளம் கொள்ளை போகுமே...!! விண்மீன் போடும் ஆட்டமே...!! எந்தன் மனமும் மகிழ்ந்து போகுமே...!! மண்ணில் கடலும் தாளம் போடும்...!! மகிழ்ந்து உன்னை பார்த்து பாடுமே...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ உலக அழகி என்று பொய் சொல்ல மாட்டேன் ஆனால் என் உலகத்துக்கு நீ தான் அழகி இது தான் உண்மை... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எண்ணங்கள் அலைமோதும் போது வண்ணங்கள் நிறம் மாறியது ஏனோ அன்பே? #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பூவோடு சேர்ந்திருக்கும் வாசத்தை போல் உன் நினைவோடு சேர்ந்திருக்கிறது என் சுவாசம்... @ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் ஓவியத்துக்கு வண்ணங்கள் தேவையில்லை... உன் விழிகள் மட்டுமே போதும்...விதம் விதமாக வண்ணங்கள் பூசி விட்டு செல்கிறது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எனக்காகவே பிறந்தவள் நீீ... உன்னை நேசிப்பதற்காகவே பிறந்தவன் நான்... என் எதிர்பார்ப்பு நீீ மட்டுமல்ல உன் காதலும் தான் என் உயிர் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

வானம் முழுவதும் நீயானால் அதில் அதை சூழும் முழு மேகமாக நானிருப்பேன்...காதலின்‌ மொழி நீயானால் உன்னை அலங்கரிக்கும் எழுத்துக்கள் நானாவேன் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் அருகில் இருந்த போது ரசிக்காத உன்னை நீ விலகி செல்லும் போது உன் நிழலையும் ரசிக்கிறேன்.. இன்னலை இலகுவாக்கும் உன் சிரிப்பையும், மின்னலை குருடாக்கும் உன் கண்களையும் காணமல் தவிக்கிறேன்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எப்போது ஒருவர் மீது நீ அதிகமாக கோபம் கொள்கிறாயோ ! அப்பொழுதே புரிந்துக் கொள் நீ அவர்கள் மீது உயிராக இருக்கிறாய் என்று..! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ இல்லாத இரவும் தொலைந்து தான் போகிறது ...!! மேக கூட்டம் உன்னை தேடி களைத்து தான் போகிறது ...!! உன்னை காணாத கண்ணும் கலங்கி தானே போகிறது ...!! உன்னை எண்ணி எண்ணியே இதயம் துடித்து தான் போகிறது ...!! நீ வருவாயென மனம் காத்து தான் இருக்கிறது ...!! கண்ணாமூச்சி ஆட்டம் போதும் நெஞ்சம் கனத்து தான் போகிறது ..! வந்துவிடு நிலவே என் வெள்ளி நிலவே.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மேகங்களை போல் நீ... அதில் விழும் நிழல் நான்...மழை போன்று நீ என்னை சந்தோஷத்தில் நனைக்க வேண்டும்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நிற்கதி என்பது யாதும் அற்று போவதல்ல யாவும் இருந்தும் நம்மால் உரிமைகொள்ள இயலாது போவதே ... #ராதையின்_கண்ணன்

#
கவிகண்ணா

தேடி அலையும் காற்றிடம் கேட்டுப் பார்..! தேடலின் அறியாமை தெரியும்...! ஓடி அலையும் ஓடையை கேட்டுப் பார்..! ஓடையின் ஓசை புரியும்...! கலங்கி நிற்கும் கண்களைப் பார்..! காதலின் உணர்வு தெரியும்...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை தவிர வேறு எதுவும் பிடிப்பதில்லை..! ஏனெனில் உந்தன் அன்பு எப்போதும் சலிப்பதில்லை...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ பார்த்த நிலவு அழகா இல்லை நான் பார்த்த நிலவு அழகா... நீ வானத்தை பார்க்கிறாய் நான் உன் முகத்தை பார்க்கிறேன் என் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீயே நீயே இரவின் பூவனம் ..!! காதல் கொள்ளும் அழகு ஓவியம் ..!! நெஞ்சில் நிற்கும் அசத்தல் காவியம் ..!! உள்ளம் கண்ட வானின் பெண்ணினம் ..!! வெட்கம் கொண்ட உன் பார்வையில் சினம்...!! மேகத்தில் ஏன் மறைகிறாய் தினம் ..!! உன்னை காண தவிக்குதே மனம் ..!! கண்டும் காணாமல் போவது உன் குணம்... உன்னை தேடி வருவது என் மனம்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

வானத்தில் எட்டாத உயரத்தில் தான் நீயும் இருக்கிறாய் என்றாலும் என் எண்ணத்தில் எட்டிவிடும் தூரத்திலேயே நீயும் வந்து விடுகிறாய் ..!! உயரம் என்பதும் தொலைவு என்பதும் உலகிற்கு தானே தவிர உணர்விற்கும் உள்ளத்திற்கும் இல்லை ...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இனம் புரியாத காதலும் உன் மீது தான்...!!! இதயம் புரியும் காதலும் உன் மீது தான் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் இரு விழிகளும் இரவின் மயக்கத்தில் உறங்கினாலும்.... என் இதயம் மட்டும் என்னவள் உன் பெயரை மட்டும் சொல்லி கொண்டே துடிக்கும் காதலுடன் கண்ணா.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் வாழ்க்கையில் உள்ள காதலும் நீ தான்...!!! என் காதலில் உள்ள வாழ்க்கையும் நான்...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

காத்திருப்பது கண்கள் மட்டும் அல்ல... என் இதயமும் தான்...!! கண்கள் உன் முகத்தை தேடி... இதயம் உன் அன்பை தேடி...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

தினமும் என் நித்திரையில் நித்திரை கொள்ளாமல் வருபவள் நீ.. உன்னை கவர்ந்திட நினைத்தால் உன் இதயத்தை திருடினேன் நான்.. கைது செய்வாய என்னை.. கைது செய்து என்னை உன் இதயத்தில் பத்திரமாக பூட்டி வை உயிரே.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மேகங்கள் காதல் கொண்ட நிலா வானத்தின் மீது காதல் கொண்டதால் தானோ என்னவோ அவை மழைகளாக உருகுகின்றன... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் என்ற அடையாளம் எதுவாயினும்...என் காதலுக்கு என்ற அடையாளம் என்றும் நீ மட்டுமே ராதா... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன் வானில் மையல் கொண்ட மேக கூட்டங்கள், கொஞ்சி..கொஞ்சி மழையாய் பொழிந்திட! தூது செல்ல வாசல் வந்த வானவில், உன் விழி கண்டு.. தன் வழி மறந்து அழகிய கோலமாக உருமாறி உன் பாதம் பட.. தவமிருக்கின்றது!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

வண்ண வண்ணமாய் மீன்கள் இருந்தாலும்... வண்ணமே இல்லாத தண்ணீர் தானே உலகம்...அதுபோலவே நீயும் நானும்... நான் நீராக... நீ மீனாக... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உனது மௌனப் புன்னகையை கண்டவுடன் ஓடிவந்து முத்தமிட தோனுகிறது. வானளாவிய உந்தன் அன்பின் காதலை அளக்க இயலவில்லை என்றாலும் உந்தன் ஆழமான காதலின் வெளிச்சத்தை கண்களை கொண்டு என்னால் சற்றே உணர முடிகிறது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ஆணின் மனம் கல் என்று பலர் சொல்வதுண்டு உண்மை தான் ஒரு முறை ஒருத்தி பெயரை அந்த கல்லில் எழுதி விட்டால் அந்த பெயரை அழிக்க முடியாது காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் காதலுக்கு உயிர் கொடுத்த தேவதையே நான் உன்னை தொட்ட தென்றல் காற்றல்ல நான் சுவாசிக்கும் மூச்சுக் காற்று இருந்தாலும் இறந்தாலும் உன்னை மட்டுமே சேர்வேன்...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இதய அறைகள் நான்கு எனினும் இதயம் முழுவதும் நிறைந்திருப்பது உன் நினைவுகளே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

வானம் முழுவதும் நீயானால் அதில் அதை சூழும் முழு மேகமாக நானிருப்பேன்...காதலின்‌ மொழி நீயானால் உன்னை அலங்கரிக்கும் எழுத்துக்கள் நானாவேன் காதலி #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் ஓவியத்துக்கு வண்ணங்கள் தேவையில்லை... உன் விழிகள் மட்டுமே போதும்...விதம் விதமாக வண்ணங்கள் பூசி விட்டு செல்கிறது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கண் சிமிட்டும் அந்த நொடிகளில், மின்மினிகள் தொற்று போக, உன் பார்வையால் எனை மயக்கி, விழிகளைக் கொண்டு என்னை கொள்ளையடித்தாயடி ராதா.. #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மலரினில் மணம் கண்டேன் மௌனமும் மொழியாய் கண்டேன் மழையில் மகிழ்வதை கண்டேன் உன் புன்னகையில் மட்டுமே என் ஜீவனைக் கண்டேன் என் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கவிதை சொல்ல காதல் தேவையில்லை... உன் கண் பார்வை ஒன்றே போதும்... நான் கவிஞன் இல்லை நான் உன் காதலன்... எனக்கு கவிதை தெரியாது... உன் கண்களை பார்த்தால் ஆயிரம் கவிதை எழுத வேண்டும் என்று என் கைகள் துடிக்கிறது என் கண்ணழகி... என் அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ எனதருகினில் நீ இதை விட ஒரு கவிதையே கிடையாதே!... நீ எனதருகினில் நீ இதை விட ஒரு புனிதமும் இருக்காதே!... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

அன்பே நீ மௌன விரதம் இருந்தால் முதலில் உன் கண்களை மூடிக்கொள் ஏனென்றால்...? உன் உதடுகளை விட உன் கண்கள் தான் அதிகம் பேசுகிறது அன்பே...! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கவிழ்த்த பானைக்குள் அடைப்பட்ட காற்றாய்...காற்று மண்டலமாய் பல கண்கள் நுழைந்தாலும்... வேறேதும் உள்ளே புக முடியாமல் நீ மட்டும் எனக்குள்ளே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

விண்ணில் தவழும் வெள்ளி ஓடமே..!! உன்னை காணவே மனம் எங்குமே..!! வானில் உன்னை கண்ட கணமே...!! எந்தன் உள்ளம் கொள்ளை போகுமே...!! விண்மீன் போடும் ஆட்டமே...!! எந்தன் மனமும் மகிழ்ந்து போகுமே...!! மண்ணில் கடலும் தாளம் போடும்...!! மகிழ்ந்து உன்னை பார்த்து பாடுமே...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கவிதைக்கு பொய் அழகு என்று பொய் சொல்கிறார்கள்...கவிதை பேசும் உன் கண்களுக்கு பொய்யே பிடிக்காதே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

தொலைத்தால் கிடைக்கும் பொருள் அல்ல...எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷம் உன் அன்பு... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னோடு சேர்ந்தே இந்த உலகை ரசித்திட ஆசை... உன் பூ கரம் பிடித்தே இந்த உலகை சுற்றிட ஆசை... உன் இன் முகம் பார்த்தே அந்த நிலவை ரசித்திட ஆசை... உன் மடி சாய்ந்தே என்னை மறந்திட ஆசை... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் இதயம் இன்னும் துடிப்பதன் காரணம்... நொடிக்குநொடி அது உன்னையே நினைப்பதால்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இமைக்கும் என் கண்கள் உன்னை பார்க்காமல் இருக்கலாம்... துடிக்கும் என் இதயம் உன்னை நினைக்காமல் இல்லை.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் படித்த நூலகம் அவள் விழிகள்! அவள் விழியோடு பேசிய வார்த்தைகளில் ஓராயிரம் அர்த்தங்கள்! நான் இன்னும் மீளவில்லை அவள் விழியில் இருந்து தான்! என் காதலுடன்... நான்.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ஏன் என்னை தொடர்கிறாய் என்று நிழலிடம் கேட்டேன்.. என்னை தவிர யாரும் உன்னை தொடர போவதில்லை என்பதால் என்றது... உன்னை நிழல் போல் தொடரும் நிஜம் நான்... நிஜம் இல்லாமல் நிழல் உருவாகாது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கரும் கூந்தல் பின்னிய இருளென பச்சை குடை பிடித்த வனத்திற்க்குள் மஞ்சள் வெயில் ஒற்றனாய் ஊடுருவிய காட்டிற்க்குள்ளே சிவப்பென சிவந்த ராதையே! கையில் வெள்ளை மலரை ஏந்தி கொண்டு கவிபாடும் நீலக்கண்ணனை காண காத்திருக்கிறாயோ? ... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மேகங்களை போல் நீ... அதில் விழும் நிழல் நான்...மழை போன்று நீ என்னை சந்தோஷத்தில் நனைக்க வேண்டும்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நிற்கதி என்பது யாதும் அற்று போவதல்ல யாவும் இருந்தும் நம்மால் உரிமைகொள்ள இயலாது போவதே ... ‍️‍️‍️‍️#ராதையின்_கண்ணன்

#
கவிகண்ணா

இமைகளின் ஓரத்திலே ஈரம் ஒட்டியிருக்க என் இதயத்தின் அறைகளில் எடை போட முடியாத உன் பிரிவின் பாரங்கள்...........!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னை வெறுக்க உன்னிடம் பல காரணங்கள் இருக்கலாம்... ஆனால், உன்னை நேசிக்க எனக்கு ஒரே ஒரு காரணமே போதுமானது... உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நிலையில்லாத உறவு என தெரிந்தும்.. வேதனையான பிரிவு தான் முடிவு என புரிந்தும் அந்த நேசம் எனக்கு பிடித்திருக்கிறது அந்த அளவுக்கு மனசு ஏங்கி தவிக்கிறது என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இதயத்தில் நீ இருந்தால் என்றோ மறந்திருப்பேன்... இதயமாகவே நீ இருப்பதால்... இன்றும் நினைத்து வாழ்கிறேன்... என்றும் உன் நினைவுகளுடன்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நிலையில்லாத உறவு என தெரிந்தும் வேதனையான பிரிவு என முடிவு என புரிந்தும் அந்த நேசம் எனக்கு பிடித்திருக்கிறது அந்த அளவுக்கு மனசு ஏங்கி தவிக்கிறது என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னோடு சேர முடியாது என தெரிந்தும் கூட மனது உன்னை நேச்ப்பதை தவிர்க்க முடியவில்லை காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை விட உன் நினாவுகளே எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் நானே நினைத்தாலும் அவை என்னைவிட்டு எப்பொழுதும் விலகுவது இல்லை என் காதலியே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் கடந்து சென்றாலும் என் உணர்வுகளை தொடர்ந்து செல்லும் ஒரே உறவு நீ தான் என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் காதல் என்றுமே உனக்காக மட்டுமே உயிர் வாழும் அருகில் இருந்தாலும் சரி தொலைவில் இருந்தாலும் சரி உனக்காக நான் எனக்காக நீ என் உயிரே ராதா... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உயிரே என் இதயத்தில் பதிந்து விட்டாய் ஆயிரம் ஜென்மம் ஆனாலும் உன் கை கோர்த்து உன் மடி சாய்ந்து வாழ்ந்திட வரம் தர வேண்டும் எனக்கு காதலி #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் உன் இதயமாக பிறக்க வேண்டும்...நான் துடித்தாலும் உன்னை வாழ வைப்பேன் என் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கண் முன்னே தோன்றினால் பெண் ஒருத்தி அவள் விண்ணில் இருந்து வந்தவலோ மண்ணிலிருந்து பிறந்தவலோ... அது எனக்கு தெரியாது ஆனால் அவள் எனக்கானவள் என்று மட்டும் எனக்கு தெரியும்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

புதிதாய் வேறு ஒருவரின் அன்பில் மின்னுவதை விட பழைய இரும்பாய் உன் அன்பிலே துரு பிடித்து மக்கி போவதில் பெரும் சுகம் எனக்கு... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் வாழ்க்கையில் உள்ள காதலும் நீ தான்...!!! என் காதலில் உள்ள வாழ்க்கையும் நான்...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இனம் புரியாத காதலும் உன் மீது தான்...!!! இதயம் புரியும் காதலும் உன் மீது தான் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை தவிர வேறு எதுவும் பிடிப்பதில்லை..! ஏனெனில் உந்தன் அன்பு எப்போதும் சலிப்பதில்லை...!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ என்னுள் வரும்முன் உன்னை தேடினேன் நீ என்னுள் வந்தபின் என்னை தேடினேன்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இந்த உலகத்தில் ஏழு அதிசயம் இருக்குதுன்னு நான் கேள்வி பட்டிருக்கேன்...ஆனால் அந்த ஏழு அதிசயத்திர்க்கும் எட்டாத அதிசயம் நீ மட்டும் தான் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ஆண்களை விட பெண்களை குள்ளமாக கடவுள் படைக்க காரணம்... ஆணின் மார்பில் பெண் சாயும் போது ஆணின் இதயம் துடிப்பதை அவள் காதால் உணர வேண்டும் என்பதற்காக... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இந்த ஜென்மம் மட்டுமல்ல இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த கண்ணன் என் ராதா உன்னை மட்டும் தான் காதலிப்பேன் அது என் முதலும் முடிவும் நீதான் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் உயிரே உன் மடியில் தலை சாய்ந்திருக்கும் இந்த ஒரு நொடி போதும் இக்கணம் என் உயிர் பிரிந்தாலும் சந்தோஷம் தான் நாளை என்ற கனவு கலைந்தே போகட்டும் இன்று மட்டும் என்னுடன் இருக்கட்டும் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இன்று உன் நினைவுகள் என்னை அதிகம் பாதிக்கிறது கண்ணீரைத் தருகிறது... ஒரு முறை உன் முன் நான் அழுத போது இப்படி நீ அழுதால் நான் வரவே மாட்டேன் என்று சொன்னாய்... இப்போதெல்லாம் அழாத நேரங்கள் மட்டுமே குறைவு.. உன்னை பார்க்கணும் போல இருக்குதடி.. வந்திட மாட்டாயா நான் அழ வா அன்பே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உயிரே என் இதயத்தில் நீ பதிந்து விட்டாய் ஆயிரம் ஜென்மம் ஆனாலும் உன் கை கோர்த்து உன் மடி சாய்ந்து வாழ்ந்திட வரம் தர வேண்டும் காதலி ... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீயும் நானும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் என் அன்புக்கு சொந்தமானவள் நீ மட்டும் தான் என் அன்பே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

சிற்பிக்குள் முத்து எடுத்து நான் செதுக்கி வைத்த அழகு நீ தான் என் புன்னகையில் ஒளிந்து இருக்கும் அழகி நீ தான் என்னை உன் பார்வையில் கொள்ளும் அழகு நீ தான் இந்த கவிதை உனக்கென சேமிக்கிறேன் கவிதை என்பது என் மூச்சு காதல் என்பது எனது காவியம்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இதயம் முழுவதும் நிரம்பி இருக்கும் குருதியில் உரைந்து போனது உந்தன் முகம் மட்டுமே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நிலா பார்க்கிறாள் நிலா..நான் பார்க்கும் அதே நிலா... தேய்பிறை பார்க்காத நிலா என் தேவதை... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை விட உன் நினைவுகளே எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் நானே நினைத்தாலும் அவை என்னைவிட்டு எப்பொழுதும் விலகுவது இல்லை என் காதலியே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் உன்னை தொடர்ந்து வருவதினால் நீ என்னை வெறும் நிழல் என்று எண்ணி விடாதே...! நான் உன் நிழலான நிஜம் என்பதை நீ மறந்து விடாதே காதலி நான் உன் கிருஷ்ணன்...! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் தொலைவில் இருந்தாலும் பாசமாக இருப்பேனே தவிர... உனக்கு என்றைக்கும் பாரமாக இருக்க மாட்டேன்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உண்மையான உறவு என்பது நிலைக் கண்ணாடியும் நிழலும் போல..கண்ணாடி பொய் சொல்லாது..நிழல் நம்மை விட்டு விலகாது. #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

சுவாசமெனக் கலந்திருக்கிறாய் உனைத் தொலைப்பதென்பது என் உயிர் பிரிவதற்க்கு இணை... இதயம் அறிந்திடும் முன்னே கண்களால் என் உயிரை களவாடிய உன் காதலில் இதமாய் கரைகிறேன்... உனக்கே ஆன சில தருணங்கள் என் நாட்களிடம் இருக்கிறது. அவை, நீ இன்றி அப்படியே நகர்கிறது.. #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நினைவென்னும் நீரோடையில் பயனிக்கிறேன் என் நிஜமான அவளுடனே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பேதை ராதை அவளுடன் நான் அமர்ந்த ஊஞ்சலும் என்றும் அவள் நினைவுகளுக்கு சொந்தம்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கண் முன்னே தோன்றினால் பெண் ஒருத்தி அவள் விண்ணில் இருந்து வந்தவலோ மண்ணிலிருந்து பிறந்தவலோ... அது எனக்கு தெரியாது ஆனால் அவள் எனக்கானவள் என்று மட்டும் எனக்கு தெரியும்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கண் சிமிட்டும் அந்த நொடிகளில், விண்மீன்கள் தொற்று போக, உன் பார்வையால் எனை மயக்கி, விழிகளைக் கொண்டு என்னை கொள்ளையடித்தாயடி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

காற்றோடு நான் கலக்கிறேன் உன் சுவாசக்காற்று என்னை தீண்டுவதற்கு நான் உன்னை நேசிப்பதனால் மட்டுமல்ல உன்னையே மூச்சுக்காற்றாக சுவாசிப்பதனால்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பூவோடு சேர்ந்திருக்கும் வாசத்தை போல் உன் நினைவோடு சேர்ந்திருக்கிறது என் சுவாசம்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னை மறந்து விடு வென்று உன்னை திட்டி விட்டு மறைக்காமல் இறைவனிடம் மனு கொடுக்கிறேன் ராதே... நீ என்னை மறந்து விட கூடாது என்று... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் இரு விழிகளும் இரவின் மயக்கத்தில் உறங்கினாலும்.... என் இதயம் மட்டும் என்னவள் உன் பெயரை மட்டும் சொல்லி கொண்டே துடிக்கும் காதலுடன் கண்ணா.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை கண்ட நாள் முதல்... உன் பேச்சில், உன் செயலில், உன் உயிரில், உன் மனதில், உன் உறவில், உன் மூச்சில், உன் கனவில், உன் நினைவில், உன் அன்பில், யார் வேண்டுமானாலும் இருக்கலாம்... ஆனால் யாரும் இல்லாதபோது உனக்காக நான் இருப்பேன் காதலி #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னை மட்டும் அல்ல உன் நினைவை சுமப்பதும் வரமே எனக்கு... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ஒளியிழந்த விழிகளுக்கும் கனவை தந்தாய் கலைந்துவிடாதே இருண்டுவிடும் என்னுலகம்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

அன்பெனும் குழலை வாசித்து பார்க்க ஆசை அவள் விழிகளில்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பல சொந்தங்கள் உனக்கிருந்தாலும் உன் இதயத்தின் சொந்தம் நானாக மட்டுமே இருக்க வேண்டும்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பேச வந்த வார்த்தையெல்லாம் ஓசையின்றி போனது உன் விழிமொழியில் மயங்கி…! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீர் இன்றி மீன் வாழ முடியாது நீ இன்றி நான் வாழ முடியாது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் தேடல் உன் வழி தேடி அல்ல.. உன் விழி பார்வையில் விழும் வரை அன்பே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மழை கண்ட இலைகள் போல்…..!! சிலிர்த்துக் கொள்கிறேன் அவளின் பார்வையில்….!! நான்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னோடு இரு என்பதை தவிர கூடுதலாக எந்த ஆசையும் இல்லை என்னிடம்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ஆயிரம் வலிகள் தந்தாலும் என்னை ஒரு நொடி கூட விட்டு பிரிந்து விடாதே…. அந்த வலிகளுக்கு ஆறுதல் உன் அன்பு மட்டுமே…!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் நினைவில் உன் நினைவும்… உன் நினைவில் என் நினைவும் இருக்கும் வரை… நம் காதல் என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்… நம் நினைவில் ராதே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பாலில் மிதக்கும் உன் கருவிழிகள், பல்லாங்குழி போல் உன் கன்னங்கள், பசுமையான உன் இதழ்கள், பார்க்க ஏங்கும் உன் முகம் அதிசமே அதிசயமே அழகின் அதிசயம் நீதானே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

சந்திக்காத வேலையிலும் சிந்திக்க வைத்தவள் நீ...... சிந்தித்த வேலையில் என் சிதையில் நின்றவள் நீ..... என் சிந்தையில் நின்ற உன்னை என் இதய கூட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்றும் பத்திரமாய்.... காதலுடன்.... கண்ணா... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன் சுவாசம் பட்டால் என் குழலும் தேன் இசை பாடுமே ராதா... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ஒரு பெண்ணின் அன்பை முழுமையாக உணர்ந்தவன் அவளை விட்டு விலகவும் மாட்டான் வேறொரு பெண்ணை நினைக்கவும் மாட்டான்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

காதல் எனப்படுவது யாதெனில்... எந்த ஒரு காதலில் தாய்மை உணரப்படுகிறதோ... அந்த காதல் அப்போதே பூனிதமாகிறது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கரும் கூந்தல் பின்னிய இருளென பச்சை குடை பிடித்த வனத்திற்க்குள் மஞ்சள் வெயில் ஒற்றனாய் ஊடுருவிய காட்டிற்க்குள்ளே சிவப்பென சிவந்த ராதையே! கையில் வெள்ளை மலரை ஏந்தி கொண்டு கவிபாடும் நீலக்கண்ணனை காண காத்திருக்கிறாயோ? ... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ தெளிவாகத் தான் உரையாடி கொண்டிருக்கிறாய் நான் தான் உளறிக் கொண்டிருக்கிறேன் மனதுக்குள் உன்னோடு காதலில்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

காயங்களும் மாயமாகும் என்னருகில் நீயிருந்தால்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

தவம் இருப்பவர்களுக்கெல்லாம் வரம் கிடைத்து விடுமா என்று தெரியவில்லை ஆனால், நீயோ எனக்கு தவமின்றி கிடைத்த வரம்! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னிடம் மட்டும் எனக்கு சுயநலம் அதிகம் உன் அன்புக்கு சொந்தக்காரன் நான் மட்டும் என்பதில்! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ எனக்கு சொந்தம் என்பதை விட நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற வார்த்தையிலேயே உயிர் வாழ்கிறேன்! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மிஞ்சும் அழகு நிறைய காதல்; கொஞ்சம் வார்தைகள் நிறைய மௌனம்; கொஞ்சம் கோபம் நிறைய பொறுமை; கொஞ்சம் அதிகம் குறும்பு நிறைய அடக்கம்; அழகு புன்னகை; - இவையெல்லாம் நீ! கொஞ்சம் நான் நிறைய நீ - இதுதான் நான்.... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

சொல்ல வரும் காதலை ஏதோவொரு தயக்கம் தடுத்து விடுகிறது.. முடிந்தவரை மெல்ல மெல்ல தைரியத்தை சேமித்துக் கொண்டிருக்கிறேன்... பெயரளவுக்குச் சொல்லிவிட்டு நின்றுவிடுவதற்கல்ல உயிரளவுக்கு உன்னுள்ளத்துள் சென்றுவிடுவதற்கு #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எனக்கே தெரியவில்லை எந்தன் பொழுதுகள் இத்தனை இனிமை என்று நீ இல்லாத நொடி பொழுது கூட என்னுள் வீணாய் தோன்றியதே ஏனடி கண்ணே இந்த பிரிவில் இத்தனை வலிகள் உள்ளது இத்தனை வலிகளிலும் உனக்காய் காத்திருப்பதில் கூட சுகம்தான் என் இனியவளே... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

கண்ணைக்காணும் கண்ணே! என்னை காணும் முன்னே! உன்னை கண்டேன் பெண்னே! நீ காண்பது உன்னையென்றால் நான் காண்பது என் உயிரையென்பேனே....

#
கவிகண்ணா

சிரம் சுமக்கும் முன்பே சிறை புகுந்தேன் பெண்ணே சிறகடிக்க முயற்சித்ததால் சிறகை ஒடித்த மனங்களோ சிரிக்க சொல்லி யாசிக்கும் சித்ரவதைக்கு பயந்தே சினம்மில்லா குரலால் சிரிப்பேன் கண்ணீரோடு என் சிந்திய துயர் உணர்ந்ததால் என் சிறைக்கதவினை திரந்தயோ? சிங்காராப்பெண்ணே!! நீ சிந்தனையை மயக்கும் அழகில் இரையாகாது சிந்தனையே மயங்கிவிடும் அன்பிற்க்குள் முழுமனதாய் சிறையாகிக்கொள் உன்னால் சிறப்பும் சிறப்படையும் உன் சிறைவசத்தால்..... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எத்தனை நாள் நிலவு வானத்தில் தோன்றினாலும் அது பௌர்ணமி போல் வருமா...அது போல தான் நீ எனக்கு...தேய்பிறை இல்லாத நிலா... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

பெண்ணே நியூட்டன் மட்டும் உன் விழிகளை முன்பே பார்த்து இருந்தால் அவருக்கு ஆப்பிள் தேவை பட்டிருக்காது ஏனென்றால்.... நியூட்டனின் புவி ஈர்ப்பு விசையை விட உன் விழி ஈர்ப்பு விசை என்னை அதிகம் ஈர்க்கிறது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ தெளிவாகத் தான் உரையாடி கொண்டிருக்கிறாய் நான் தான் உளறிக் கொண்டிருக்கிறேன் மனதுக்குள் உன்னோடு காதலில்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன் கண்களின் கதிர்வீச்சால் கைதியாகி நிற்க்கிறேன் கருணை கொண்டு என் கைகளை மட்டும் அவிழ்த்துவிடு ஒரு கவிதை மட்டும் எழுதிகொள்கிறேன்...!!! எனக்கு தெரியும் நீ விரும்புவது என்னை அல்ல என் கவிதைகளைத்தான் என்று ஆனால் உனக்கு தெரியுமா உன்னை விரும்புவது என் கவிதைகள் அல்ல நான் தான் என்று அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன் கண்களின் கதிர்வீச்சால் கைதியாகி நிற்க்கிறேன் கருணை கொண்டு என் கைகளை மட்டும் அவிழ்த்துவிடு ஒரு கவிதை மட்டும் எழுதிகொள்கிறேன்...!!! எனக்கு தெரியும் நீ விரும்புவது என்னை அல்ல என் கவிதைகளைத்தான் என்று ஆனால் உனக்கு தெரியுமா உன்னை விரும்புவது என் கவிதைகள் அல்ல நான் தான் என்று அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

வானத்தில் கோடி நட்சத்திரங்கள் இரவிற்கு அழகு நிலாதான்... உலகத்தில் கோடி பெண்கள் இருந்தாலும் எனக்கு அழகி நீ தான் அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னுடன் வாழத்தான் நீயும் உன் அனுமதியும் தேவை...நான் உன் நினைவுகளோடு வாழ்பவன்...அதற்கு நீயும் தேவையில்லை உன் அனுமதியும் எனக்கு தேவையில்லை ஏனென்றால் இதில் மட்டுமே என் காதல் 100% வாழ்கிறது என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நான் உன்னை நேசிக்கும் அளவு நீ என்னை காதலிக்க வேண்டாம் ஆனால் என் நேசம் எந்தளவு என்று புரிந்து கொண்டாலே அது போதும் என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் தேவதை கண்மூடி தூங்கும் அழகு நிலவின் ஒலியாக மாறி இரவு முழுவதும் நான் பார்த்துக் கொண்டு இருக்கனும் அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னையே அறியாமல் அடிமை ஆகிவிட்டேன் உன் அன்பில் உயிரே... !!! யாருக்கும் அடிமையாக மாட்டேன் என்று சொல்லித்திரிந்த நான்...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எந்தன் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் வார்த்தைகளாய் உன்னையே பிரதிபலிக்கின்றன ஆயினும் அவ்வப்பொழுது நின் வீட்டு நிலைக் கண்ணாடிக்கும் சிறிது முகம் காட்டிப்போ இல்லையேல் என் மீது தீராப் பொறாமை கொண்டுவிட போகின்றது அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ இப்படி இருந்தால் தான் உன்னை விரும்புவேன் என்பதல்ல காதல்!!.. நீ எப்படி இருந்தாலும் உன்னை மட்டுமே விரும்புவேன் என்பதே உண்மை காதல்...! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நாள் முழுவதும் உனக்காக காத்திருக்கிறேன் நொடி பொழுது எனக்காக செலவிடு பெண்ணே...நான் உயிர் வாழ அது போதும் உன் வார்த்தைக்காக செவி சாய்த்தே என் நாட்கள் போய்விட்டன இன்றும் கூட பெண்ணே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எங்கும் எதிலும் எனக்காக நீ வேண்டும் என்பதை விட எங்கும் எதிலும் என்னுடன் வேண்டும் என்பதே நான் கொண்டுள்ள மொத்த ஆசை காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

அதிகமான பெண்கள் நினைக்கிறார்கள் ஆண்களின் இதயம் கல் என்று ஆனால் அவர்களுக்கு தெரிவதில்லை கல்லில் செதுக்கிய சிற்பம் செதுக்கிய சிற்பம் என்றும் அழிவதில்லை அது போல தான் ஒரு பெண்ணை அது மனத்தில் என்றும் அழியாது என் அன்பே காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் கூட சண்டபோடு கோவப்படு அதை கூட தாங்கிப்பேன் ஆனா உனக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி யாரோ போல நீ நடந்துக்குறது தான் எனக்கு வலிக்குது காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னுடைய உயிரிலும் உணர்விலும் கலந்து இருக்கும் உன் நினைவுகளுக்கு மட்டுமே தெரியும் நீ தான் என்னுடைய உலகம் என்று காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உலகத்தில் எல்லா இடத்திலும் தேடிப்பார் என்னை விட உன்னை நேசிக்கும் ஒருத்தரை உன்னால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது என் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நீ இல்லாத வாழ்க்கை.. வேர் இல்லாத மரம் போல.. நீர் இல்லாத மீன் போல.. இரவு இல்லாத பகலும் போல.. உன் நினைவு இன்றி நான் இல்லை...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இடைவெளி உனக்கும் எனக்கும் தான் என் அன்புக்கு கிடையாது நீ என்னை வெறுத்தாலும் விலகினாலும் என் அன்பு உன் நிழல் போல உன்னை தொடரும் அன்பே...!!! பெண்ணே நீ என் காதலை ஏற்று கொள்ளாவிட்டாலும் கூட நீ நடந்து சென்ற இடத்தில் உன் பாதம் பதித்த தடத்தில் நான் பூக்களாய் மலர்வேன் அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

காத்திருக்கிறேன் உன்னை பார்ப்பதற்கோ உன்னிடம் பேசுவதற்கோ அல்ல என் பெயரில் உன் பெயரை சேர்ப்பதற்கே என்னவளே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன்னிடம் சண்டை போடும் என்னை விட்டுவிடாதே காதலி என்னை விட உன்னை வேறு யாரும் நேசிக்க முடியாது...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நிலவு இல்லாத நாட்கள் உண்டு ஆனால் உன் நினைவு இல்லாத நாட்கள் இல்லை என் காதலி...!!! இரவில் தெரியும் நிலவை விட என் மனதில் தெரியும் உன் முகமே என்றென்றும் அழகு காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இரு வரி கவிதையை விட உன் இரு விழி ஆயிரம் கவிதை சொல்லுதடி அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ஒரு பெண்ணின் இதயத்தை தொடு..! உடம்பை தொட நினைக்காதே..! மனதை திருடு..! கர்ப்பை திருட நினைக்காதே..! சிரிக்கவை அவள் கண்ணீரை வீணாக்காதே நண்பர்களே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

உன் நினைவுகளை என் வீட்டு ரோஜா செடியிடம் தினம் தினம் பேசிக்கொண்டு இருந்தேன் பூக்களுக்கும் உன் மேல் ஆசை பிறந்தது உன்னை காண தினம் பூக்க வேண்டும் என்று உனக்காக இந்த பூவும் நானும் காத்துக்கொண்டு இருக்கிறோம் என் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நினைவில் உன்னை நினைத்து கொண்டு இருந்தேன் கனவில் நீ தோன்ற கண்கள் உன்னை பார்த்து கொண்டு இருந்தேன் நீ முதல் முறை என்னிடம் பேசினாய்...நான் மயங்கி விழுந்தேன் நீ பேசும் வார்த்தை குயில் பேச்சு போல இருந்தது என் அன்பே...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

நாள் முழுவதும் உனக்காக காத்திருக்கிறேன் ஒரு நொடி பொழுது என்னிடம் பேசு எனக்காக பெண்ணே நான் உயிர் வாழ அது போதும் உன் வார்த்தைக்காக காத்திருக்கிறது இன்றும் கூட போய் விட்டது என் நாட்கள் காதலி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் மனதில் எத்தனை கவலைகள் இருந்தாலும் அவை அனைத்தும் காணாமல் போகின்றது... உன் இருவிழி பார்வையில் நான் தினம் தினம் தொலைந்து போகிறேன் ராதா.. #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

இதயம் இல்லா இணைய இயந்திரத்தில் நான் கண்டெடுத்த நல் இதயம் கொண்டவள் நீ... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என் உயிரே உன் மடியில் தலை சாய்ந்திருக்கும் இந்த ஒரு நொடி போதும் இக்கணம் என் உயிர் பிரிந்தாலும் சந்தோசம் தான் நாளை என்ற கனவு கலைந்தே போகட்டும் இன்று மட்டும் என்னுடன் இருக்கட்டும் காதலி...!!! #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

என்னுடன் நீ என்றும் இருக்கிறாய் இரவில் நிலவாக...பகலில் நிழலாக... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

மணிரத்னம் கதை போல் #காதல் செய்ய ஆசை தான் ஆனால் காதலிக்க ஒரு கண்மணி இல்லையே ...?

#
Karuppasamy

ந‌ம‌க்குள் விள‌க்க‌முடியாத, ஒரு உற‌விருப்ப‌‌தும் நிஜ‌ம்..!" அதீத‌மாய் நான் உன்னை, நேசித்த‌தும் நிஜ‌ம்..! அதை நிஜ‌மென‌ நீ, ந‌ம்ப‌ ம‌றுத்த‌தும் நிஜ‌ம்..!" விருப்ப‌மில்லாம‌லே, நீயென்னை வீசியெறிந்த‌தும் நிஜ‌ம்..!! நீயும்.. நீ சார்ந்த‌வைக‌ள்தான், என் உலகம் என்ப‌தும் நிஜம்..! அவையின்றி, சுக‌வீன‌மாய் நான் இருப்ப‌தும் நிஜ‌ம்..! ந‌ம் உற‌வு முறிந்த‌ ஒரு க‌ருப்பு நாளில், க‌த‌றிய‌ழுத‌ என் க‌ண்க‌ளில், உன‌க்கான் ஈர‌ம் இன்னும், மிச்ச‌மிருப்ப‌தும் நிஜ‌ம்..!" நீ வில‌கிச்செல்லும் ஒவ்வொரு த‌ருண‌மும், நான் ம‌ர‌ண‌த்தை நெருங்கிக் கொண்டுருப்ப‌தும் நிஜ‌ம்..!" உயிர் பிரியும்வ‌ரை, நீ என் உட‌னிருப்பாய், என‌ நான் ந‌ம்பிய‌தும் நிஜ‌ம்..!" அது பொய்யென, என் உயிர் கிழித்த‌தும் நிஜ‌ம்..!" நீ என்னை ஏற்கும் திருநாள் காணும் வ‌ரை, கால‌ன் அவ‌ன் க‌ர‌ங்க‌ளில், சிறைப்ப‌ட‌ ம‌றுக்கிற‌த‌டி என் ம‌ன‌ம்...!! *நிழலின் நிஜங்களாய்* RK

#
Kalpana Subramaniam

நலமா என் காதலே..? உன் நினைவால்.. என் காதல் நலம்..! இந்த காதல்.. கனவைத் தந்த.. என் காதல்.. நீ நலமா..? RK

#
Kalpana Subramaniam

பார்வையின் மறுமுனையில்.. இன்னும்.. எழுதிப் பார்க்காத.. கவிதையாக இருக்கிறாள்.. அவள்...!! RK

#
Kalpana Subramaniam

தனித்திருக்கும் போதெல்லாம் உன் நினைவுகள் அலைமோதும்.. நிழலாய் உடனிருந்து உள்ளத்தை மிதுவாக்கும்.. தவித்திருக்கும் இதயத்தையும் மயிலிறகாய் வருடி போகும்.. தோள் தேடும் நேரமெல்லாம் உன் உள்ளங்கையே துணையாகும்..

#
கவிதையின் காதலன்

காதல் என்னவளே நானும் காதல் கைதிதான் உன் பார்வை விலகும் வரை... என்னவளே நானும் தண்டனை கைதிதான் உன் மௌனம் விலகும் வரை... என்னவளே ஆயுள் கைதிதான் இதயம் கல்லறை செல்லும் வரை.. நன்றி ராமசாமி..

#
Ramasamy Ramasamy

பல நாள்.. என்னிடம் கேட்ட கேள்விக்கு.. இவள் தான் என்று.. அவள் கை பிடித்து காதலுக்கு.. அறிமுகம் செய்துவிட வேண்டும்.என்று.. தேடுகிறேன்.. எனக்கானவளை...!! RK

#
Kalpana Subramaniam

உன் முகம்.. பார்க்கா நாட்களும்.. உன் குரல்.. கேட்கா நொடிகளும்.. உன் அரவணைப்பில்லா.. அந்திப்பொழுதுகளும்.. நீ இல்லா.. என் தனிமையும்.. நரகமடி எனக்கு...!! RK

#
Kalpana Subramaniam

நீ அவளுக்காக எவ்வளவு இறங்கி வருவாய்யென தெரிந்து கொள்ளாமல் உன்னிடம் காதலை சொல்லமாட்டார்கள்..?

#
Karuppasamy

நீ காட்டிய முதல் வெட்கம்..! நீ தொட்ட முதல் சிலிர்ப்பு..! நீ ரசித்த முதல் கவிதை..! நீ கொடுத்த முதல் பரிசு..! நீ கொடுத்த முதல் முத்தம்..! அனைத்தையும் அள்ளிக் கொடுத்தாய்..! உயிரை மட்டும் உருவிச் சென்றாய்...!! RK

#
Kalpana Subramaniam

இரு ஜோடி விழிகளிலே, இதயம் துடிக்க வைத்து..! கால் கொலுசின் ஓசையிலே, காலமெல்லாம் கிறங்க வைத்து..! பிஞ்சு விரல் பிடித்து, ரெட்டை ஜடை மடித்து..! மடியில் தலை சாய்த்து, மரணம் தொட்டு விட்டு..! நெஞ்சு நெருப்பினிலே, நெருங்கி குளிர் காய்ந்து..! ஒரு வார்த்தை பேச மட்டும், ஒரு நொடியில் மறுத்து விட்டு..! நேசம் வைத்த நெஞ்சுக்கு, நெருப்பு வைத்து எரித்து விட்டு..! பாசம் மறந்து பறந்து விட்டாள், பாதி வாழ்க்கை முடியும் முன்பே...!! RK

#
Kalpana Subramaniam

என் இறந்த நாளில், கண்ணீர் வடிக்காதே..!" என்னை பிரிந்த நாளில் மட்டும், ஒரு மௌன அஞ்சலி செலுத்திவிட்டு போ..!! RK

#
Kalpana Subramaniam

நீயோ தொலைதூரத்தில்.. உன் நினைவுகளோ என் விழியோரத்தில்.. கண்ணீர்த் துளிகளாய்..!" என் நினைவை நீ சுமந்தால்.. உன் விழியில் நான் இருப்பேன்..!" கண்ணீர்த் துளிகளின்.. காய்ந்து போன காயங்களாய்...!! RK

#
Kalpana Subramaniam

போகிற போக்கில்.., ஒரு புன்னகை வீசுகிறாய்..! உயிர் பிழைக்க வேண்டி.., தலை கவிழ்ந்து கொள்கிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

உன் சிரிப்பில் கருகாமல், நெருப்பில் கருகியிருக்கலாம்..! காயம் தான் இருந்திருக்கும்..!" வலி, காலத்தால் இறந்திருக்கும்...!! RK

#
Kalpana Subramaniam

கண்கள் வாங்கிய வலிகளை, இதயம் சுமப்பதுதான் காதல்..! இதயம் சுமக்கும் வலிகளை, கண்கள் வெளியிடும் உணர்வுதான், கண்ணீர்...!! RK

#
Kalpana Subramaniam

உன் அன்பில், உயிர் வாழ்கிறேன்..! உன் வார்த்தையில், வண்ணமாகிறேன்..! உன் பார்வையில், என் பாதையை காண்கிறேன்..! உன் கோபத்தையும், குறைவில்லாமல் ரசிக்கிறேன்..! இன்று உன் பிரிவில், என் வலியை உணர்கிறேன்..! என்று உன் வருகை என, என் விழிகளை வழிகளில் வைத்து காத்திருக்கிறேன்..! காதலுடனும், கற்பனைகளுடனும்...!! RK

#
Kalpana Subramaniam

புன்னகையின்.. விலை என்னவோ.. புரியாத புதிர்தான்..! ஆனால், நீ புன்னகைக்கும்.. போதுதான் புரிகிறது.. புன்னகைக்கும்.. விலை உண்டு என்று...!! RK

#
Kalpana Subramaniam

என் அத்தனை காயங்களையும், ஒரு நொடியில் ஆற்றி விடும், உன் ஓரே ஒரு வார்த்தை, ஐ லவ் யூ டீ செல்லம்...!! RK

#
Kalpana Subramaniam

உன்னை துணையாக நினைத்தேன், என்னை தனிமையில் விட்டாய்..! உன்னை என் உயிராக நினைத்தேன், என் கண்கள் கண்ணீரில் வசீகரிக்கிறது..! உன் நினைவுகளை நினைத்தேன், என் இதயம் வலிக்கின்றது..! உன்னை மறக்க நினைத்தேன், உன் நினைவுகள் தடுக்கின்றன..! உன்னை வெறுக்க நினைத்தேன், என் இதயம் மறுக்கிறது..! உனக்காக சாக நினைத்தேன், நம் காதல் காப்பாற்றுகின்றது..! புரிகின்றதா உனக்கு..? என் உயிரே நீ தான் செல்லமே...!! RK

#
Kalpana Subramaniam

சுவாசிக்கும் போது தான், தென்றல் தெரியும்..! இரவு வரும் போது தான், நிலா தெரியும்..! பூ வாடும் போது தான், மணத்தின் அருமை தெரியும்..! வேலை தேடும் போது தான், படிப்பின் திறமை தெரியும்..! கடின உழைப்பின் போது தான், வாழ்வின் சுகம் தெரியும்..! ஆபத்து வரும் போது தான், நட்பின் ஆழம் தெரியும்..! உனக்காக உயிர் பிரியும் போது தான், என் உண்மை காதல் புரியும்...!! RK

#
Kalpana Subramaniam

என் வானத்தில்.. நிலவாய் நிற்பாய்.. என நினைத்து.. கொண்டிருக்கும்போதே.. நகர்ந்து சென்றாயடி மேகமாய்...!! RK

#
Kalpana Subramaniam

என்னவளே..! என் கண்ணிமையை வெட்டிவிட்டேன்..! உன் வருகையை கண் சிமிட்டாமல் பார்ப்பதற்கு..! அது தடையாய் இருப்பதால்...!! RK

#
Kalpana Subramaniam

உறங்கா வேளைகளில், நினைவுகளாக நீ..! உறங்கும் வேளைகளில், கனவாக நீ..! எழுதும் வேளையில், கவிதையாக நீ..! பேசும் வேளையில், குழந்தையாக நீ..! சிரிக்கும் வேளையில், பூக்களாக நீ..! இருக்க வேண்டும் கண்ணே...!! RK

#
Kalpana Subramaniam

உன் அழகிய காதல் காவியத்தில், நான் தலைப்பாக இருக்க கனா கொண்டேன், ஆனால் நீயோ என்னை அக்காவியத்தில், ஒரு சிறிய அங்கமாய் எழுதினாய். ~கார்த்திகா

#
கார்த்திகா மனோஹரன்

சட்டென்று தோன்றி மறையும் வானவில் போல அத்தனை அழகு நீயும் உனது எதிர்பாரா வருகையும்..!️

#
Karuppasamy

எனக்கானவளே..!! உன்னை முதல் முதலில் பார்த்தேன், அன்று முதல், என் நித்திரையை இழந்தேன்..! சில நேரம் வந்து செல்லும் உறகத்திலும், நீயே வருகிறாய் என்னை, சூடிக்கொள்ளும் பூமாலையாக..! நான் திரும்பும் திசை எங்கும் உன் முகம்..! நான் உன்னை தேடும் இடம் எல்லாம், உன் நினைவுகள்..! என் உயிரே..! வரவேண்டும் நீ மீண்டும், நித்திரையில் அல்ல, நிஜத்தில் என் வாழ்க்கை துணையாக...!! RK

#
Kalpana Subramaniam

விழிகளை மட்டும் விதைத்து விட்டு போனவளே..! விதையாய் வளர்ந்திருக்கும் உன் நினைவுகளின் வாசம், நித்தம் என்னை கொள்ளுதடி..! இரவு நேர கனவிலே, உன்னோடு உரையாட உறங்கினாலும், விழிகளுக்குள் உறக்கம் இல்லையடி..! என்னோடு நீ இல்லாத நாட்களும், என்னை ஏளனம் செய்யுதடி..! உன்னோடு என் வழிப்பயணம், என்னோடு தோள்சாய ஏங்குதடி...!! RK

#
Kalpana Subramaniam

உனக்காக உன்னோடு தொடங்கிய, என் வாழ்க்கை..! உன் கைகோர்த்து, உன்னோடு முடிய விரும்புகிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

சிற்பங்கள் கூட அழிந்து விடும் சிலையே..! உன் மீது நான் வைத்த காதல் மட்டும் அழியாது..! ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்...!! RK

#
Kalpana Subramaniam

நான் தேடாமல், என்னை தேடி வந்த, அழகிய உறவு நீ..! எனக்கு கிடைத்த, கடவுள் தந்த, வரமும் நீ..! உன்னை நீங்காத, நிலை போதும் இனி எனக்கு...!! RK

#
Kalpana Subramaniam

கடந்து விட காத்திருக்கும் நகரா என் இரவுகள்..! அதனூடே மௌனித்து கிடக்கும் கரையாய், என் நெஞ்சம்..! ஆக்ரோஷமாய் வருகிறாய், ஓங்கி அடிக்கும் அலையாய்..! இதயம் நழுவி, சொல்லாமல் பிரிந்து செல்கிறாய்..! சிதறிய நினைவு துளிகள், சித்தத்தில் கிளிஞ்சல்களாய் பரவி கிடக்க..! தனிமை சுகமாகிறது, நீளும் தூங்கா என் இரவுகளில்...!! RK

#
Kalpana Subramaniam

உலகத்தில் எல்லா இடத்திலும் தேடிப்பார்.. என்னை விட, உன்னை நேசிக்கும் ஒருத்தரை.. உன்னால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது...!! RK

#
Kalpana Subramaniam

நான் எதில் தொடங்கினேன் என, தெரியவில்லை..! ஆனால்.., நீயே என் முடிவு...!! RK

#
Kalpana Subramaniam

ஒரு நொடி பார்க்கும், உன் ஒற்றைக் கண் பார்வைக்காக, காலம் முழுவதும் காத்திருப்பேனடி..! உன் ஓரக்கண் பார்வையிட்ட நொடியில், என் மனதில் உள்ள பாவங்களும் பறந்தோடியது..! பார்த்தவுடன் பற்ற வைக்கும் உன் பார்வை, என் மனதில் காதல் தீயை, பற்ற வைத்து சென்றது..! மனதில் எரியும் என் ஒரு தலை காதல் தீயை அணைக்க, உன் மனதிலும் என்னை வைத்து, காதல் செய்யடி...!! RK

#
Kalpana Subramaniam

சண்டை என்றாலும் நீ தான்..! சமாதானம் என்றாலும் நீ தான்..! எது என்றாலும் நீ மட்டும் தான்..! என் அன்பு,ஆசை, கோபம், அனைத்திற்கும் சொந்தம்.., என்றும் நீ மட்டும் தான்...!! RK

#
Kalpana Subramaniam

நீ எனக்கு கிடைத்து விடுவாய், என்கிற நம்பிக்கையை விட.., நீ எனக்கு கிடைக்காமல் போய் விடுவாய், என்கிற பயத்தில் தான், உன்னை அதிகம் காதலிக்கிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

10 த்தில் உன்னை பற்றி கனா கண்டு, 20 வதில் உன்னை பார்த்து, 30 பதில் திருமணம் முடித்து, 40 பதில் நம்முடன் ஒருத்தி இருந்து, 50 பதில் ஒருத்தியை ஒருவனிடம் தந்து, 60 வதில் அறுவதாங்கல்யாணம் செய்து, 70 வதில் உலகை சுற்றி பார்த்து, 80 பதில் மீண்டும் காதல் செய்து, 90 களில் கைபிணைந்து நடந்து, 100 ரில் இறைவனடி சேர வேண்டுமையா!. ~கார்த்திகா

#
கார்த்திகா மனோஹரன்

அழகிய மதிய வேளை பூந்தோட்டத்தில் தொடங்க, எந்தன் கரத்தில் ஒரு அழகிய காதல் காவியமும் ஒரு சிவந்த ரோஜா மலரும் இருந்தது, என்னை சுற்றி செழிப்பான நருமுகைகள் பூத்துக் குலுங்க, ஆறுதல் தரும் தென்றல் என் தோலை வருட, என் மனதை அறிந்து கொண்ட ஒரு மழை துளி என் இதழில் சிம்மாசனமிட்டது, அந்த கணம் ஒரு கிசுகிசு சத்தம் என் செவியை எட்டியது, திரும்பி பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது, சுயம் பெற்ற நான் என் பணியில் மூழ்கி போகும் அக்கணம் வந்தான் அவன் இல்லை என்னவன், என்னவன் முகமூடி அணிந்து வந்தாலும் எனது விழிகளில் மாவீரன் போன்று தென்பட்டான், அவனை கூர்ந்து பார்த்த நான் அவனின் வில் போன்ற விழிகளை கண்டு விக்கித்துப் போனென், அவனின் நாமம் கேட்கும் தறுவாயில், கலைந்தது என் அழகிய காதல் கனா. ~கார்த்திகா

#
கார்த்திகா மனோஹரன்

சிலகாலம் மழையை ரசிப்பது போல் வெயிலை ரசிப்பதில்லை சிலகாலம் வெயிலை ரசிப்பது போல் மழையை ரசிப்பதில்லை மழையிலும் மாற்றமில்லை வெயிலிலும் மாற்றமில்லை ரசனையில் தான் ஏற்படுகின்றன பருவ கால மாற்றங்கள்!!!

#
Thiruppathi Thiru

எண்ணங்கள் பல கோடி.. அதில் உன் கலை வண்ணங்கள், சில கோடி..!" என் வார்த்தைகள் தடுமாறுதடி, உன் அழகான கன்னத்தாலடி..!" ஆயிரம் நிலவொளிபோலுள்ளதடி, என்னை மயக்கும் உன் கண்ணொளி..!" ரோசாப்பூவின் இதழடி, என்னை ஈர்க்கும் உன் உதட்டழகடி..!" காற்றில் கலக்கும் உன் பேச்சொலி, என்னைப் பாடவைக்கும் இசையடி..!" நீ சிணுங்கும் சிரிப்போ, சில்லறைச் சிதறலடி..!" கார்மேகக் கூட்டம் போலுள்ளதடி, உன் கருங்கூந்தலின் தோகையழகடி..!" நான் மாலை சூடப்போகும் உன் கழுத்தோ, நிறைகுடச் செம்பின் கலையழகடி..!" உன் நடையின் இடையழகோ, என்னை நிலைதடுமாற வைக்குதடி..!" மொத்தத்தில் உன் மேனியே மிகையழகடி..!" அதுதான் என்னை கவியெழுத வைக்குதடி...!! RK

#
Kalpana Subramaniam

️️கண்தானம்️️️️️️️️️️ செய்ய நினைத்தேன். முடியவில்லை️️️️ ️ இதயத்தை தானம் செய்ய நினைத்தேன் முடியவில்லை ஏனென்றால். கண்களால் தானே உன்னை திருடினேன் இதயத்தில் தானே பூட்டி வைத்திருந்தேன் அன்பே. நீ இருக்கும் வரை என்னால் எப்படி முடியும்

#
mani lakshmi

கருப்பு வானம் தானே ஈரமாக்கும் மண்ணை காதல் மட்டும் தானே சொர்க்கம் சேர்க்கும் நம்மை.. காதலித்து செத்தால் மரணம் கூட மதிப்பு மிக்கதாகும் ..

#
கவிஞர் வைமுதா

நிலவே..!! என் இதயம் துளிர்த்தது, உன் பணிவான பாசத்தால்..!" என் மனம் குளிர்ந்தது, உன் உதடு பூத்த புன்னகையால்..!" என் விழி மயங்கியது, நீ துணையாக வருவதினால்..!" என் உயிர் நனைந்தது, நீ கொடுத்த முத்தத்தால்..!" நான் மெய் மறந்தது, நீ அரவணைத்த அன்பால்..!" இவை அணைத்தும், என் உயிர் உள்ளவரை நிரந்தரமா...?? RK

#
Kalpana Subramaniam

திருமணத்திற்கு முன்.. சுமந்து விட்டேன்.. இதயக் கருவறையில்.. குழந்தையாக உன்னை..!! RK

#
Kalpana Subramaniam

நீ வந்து. என்னில் வாழ்ந்த.. நினைவுகள்.. மறந்து போனால்.., நான் வந்து.. இம்மண்ணில்.. வாழ்ந்த நிஜங்கள்.. அழிந்து போய்விடும்...!! RK

#
Kalpana Subramaniam

நம் காதலில்.. எனக்கு.. உன்னுடைய.. நிரந்தர பரிசு.. உன் நினைவுகள் மட்டுமே...!! RK

#
Kalpana Subramaniam

என் இதயத்தைக்.. காகிதம்போல் நினைத்து... அவள் காதலை எழுதினால்..! என் இதயத்தை.. முழுவதுமாய்.. படித்தவளும் அவளே..! என் இதயத்தை.. முழுவதுமாய்.. கிழித்து எரிந்தவளும்.. அவளே...!! RK

#
Kalpana Subramaniam

நீயில்லா விடியல்.., வானம் விடிந்ததே தவிர.., என் மனம்.., விடியவில்லை...!! RK

#
Kalpana Subramaniam

உன் கண்ணம் கிள்ளினால் நீ வளர்த்த இந்த ரோஜா நாணுகின்றதே உனக்கேதடி வெட்கம் என நகைத்தால் நான் என் செய்வேனடா உன்னிடம் என் நாணம் தோற்றுப்போய் ஆசை பொங்குகின்றதடா அன்பா...

#
Ilakkiya sri

அலைகளோடு பேசவா காற்றோடு பேசவா என்றால் மனம் உன்னோடு தான் பேசுகின்றது ஏன் தெரியுமா அன்பா அலைகளோடு பேசினால் மனம் உன்னிடம் வந்து வந்து மோதுகின்றது காற்றோடு பேசினால் மனம் அங்குமிங்கும் பறந்து செல்கின்றது உன்னோடு பேசினால் மனம் உன்னிடம் தஞ்சமாகின்றதடா...

#
Ilakkiya sri

நீயின்றி.. என் வாழ்க்கை.. முடியப்போவது இல்லை..! நீயின்றி.. வாழ்வு வந்தால்.. நான் இருக்கப்போவதில்லை...!! RK

#
Kalpana Subramaniam

கனவுகளின் பிறப்பிடம்.. காதல் என்றால்.. அக்காதல் பிறப்பிடம்.. எனக்கு.. உன் கண்களே...!! RK

#
Kalpana Subramaniam

காலத்திடம் தந்து விட்டேன்.. நாம் காதலை.. அது ஒரு நல்ல மருந்து.. நிச்சயம் தீர்த்து வைக்கும்.. நீ கொடுத்த வலிகளை...!! RK

#
Kalpana Subramaniam

கடினம் தான்.. ஆனாலும் சுகம்.. நீ வருவாய்.. என்ற நினைப்பே.. காத்திருப்பில்...!! RK

#
Kalpana Subramaniam

ஒரு சில நிமிடம் பேசிவிட்டு.. ஒவ்வொரு நிமிடமும்.. நினைக்க வைக்கிறாய்..! நினைத்துக் கொண்டிருக்கிறேன்.. நிமிடங்களாய் அல்ல.. நொடிகளாய்...!! RK

#
Kalpana Subramaniam

காதல் எவ்வளவு அழகானதே.. அதை விட மிகவும் ஆபத்தானது.. எந்த அளவு சந்தோஷத்தை தருகிறதோ.. அதை விட வலியையும் தரும்.. நிச்சயம் ஒருநாள்...!! RK

#
Kalpana Subramaniam

திரும்ப திரும்ப.. வருகிறது.. திரும்பிய.. இடங்களில்.. எல்லாம்.. உன் முகம்..! RK

#
Kalpana Subramaniam

திசையறியா பறவை போன்று நானும் திசை மாறி பறக்கின்றேன் நீ தந்த வலியால்...

#
Ilakkiya sri

தனிப்பட்ட அக்கறை கொண்டு பாதுகாப்பு பெட்டத்தில் வைக்கப்பட்ட தங்கம் புறத்தே எடுக்கும் எல்லா நேரங்களிலும் தன் வண்ணம் மாறாமல் மின்னுவது போல் தனிப்பட்ட அக்கறையுடன் வளர்க்கப்பட்ட நம் செல்வங்களும் அன்பினை அள்ளித்தந்து மகிழும்...

#
Ilakkiya sri

நிஜங்கள்..! கனவாக கலைகிறதே..! நினைவில்..! நான் வாழ்கிறேன்..! உன்னோடு...!! RK

#
Kalpana Subramaniam

தன் தனிமைக்காண துணையைத் தேடுவதல்ல, காதல்..!" தன் மனதின் வலிகளுக்கு மருந்தாய், ஒருவரின் அன்பை தேடுவது தான், காதல்...!! RK

#
Kalpana Subramaniam

நீண்ட தூரம் வந்த பிறகே எனக்கு தெரிகிறது..!" நான் விட்டு வந்தது உன்னை அல்ல, என்னை என்று...!! RK

#
Kalpana Subramaniam

கண் திறந்து பாரடி.. உன் விழித்திறக்க ஏங்குகிறது என் மனம்..!" இமையை மூடி உனக்குள் இருக்கும் என்னை..!" நீ மறைக்காதே...!! RK

#
Kalpana Subramaniam

என் வாழ்க்கையில்.. ஒவ்வொரு நாளையும்.. அழகாகவும்.. அர்த்தமுள்ளதாகவும்.. மாற்றித்தந்த என் உயிர்.. நீ மட்டும் தானே அன்பே...!! RK

#
Kalpana Subramaniam

வழி தெரியாமல் தவிக்கிறேன்.. வழித்துணையாய் வருவாயா..? அல்லது.., வாழ்க்கை துணையாக வருவாயா..? சொல்லடா என் அன்பே...!! RK

#
Kalpana Subramaniam

முன்ஜென்ம காதல் ஒன்று, முன்னிரவு தோன்றிவிட, நீ செய்த காயத்திலே, என் நெஞ்சம் கனக்குதடி..!" காயங்களின் வலி போக்க, மாயங்கள் ஏதும் இல்லை..! நீயில்லா என் வாழ்க்கை, சாயங்கள் போனதடி..!" இதயத்தின் மையம் தேடி, வந்திறங்கிய வாளோன்றால்..! என் அகிலத்தின் அத்தனையும், மொத்தமாய் உடைந்ததடி..!! உடைந்துப் போன மனதைக் கூட, ஒட்ட வைக்க வழிகள் உண்டு..! நீ கடந்துப் போன பிறகு, அது தூள் தூளாய் ஆனதடி..!" தூசிப் பட்ட விழிகள் என்று, என் கண்ணீரை மறைத்துவிட்டேன்..! பாசி படர்ந்த என் மனதின் ஓரம், உன் நினைவுகள் வழுக்குதடி..!" உன்னைப் போல் காதலிக்க, இவ்வுலகில் யாரும் இல்லை..! வேறுலகம் சென்று விட்டால், அவ்வுலகம் துரத்துதடி..!" நீ சொன்ன வார்த்தைகள் எல்லாம், காற்றோடு கரைந்ததடி..! என் கனவின் முதல் காட்சிக் கூட, உன்னில் இருந்தே தொடங்குதடி...!! *நினைவின் வலிகளாய்* RK

#
Kalpana Subramaniam

நான் உனக்கு சாபமாகவே, இருந்து விட்டு போகிறேன்..! ஆனால்.., என்றும்... நீ எனக்கு வரமே...!! RK

#
Kalpana Subramaniam

உன் வழிவரும்வரை, என் விழிப்பார்வைக்கு, காத்திருந்த நீ.,! இன்று விழிமேல் வழிவைத்து காத்திருந்தும், வேலையின் பெயர் சொல்லி, என்னை காக்கவைப்பதேன் காதலா...?? RK

#
Kalpana Subramaniam

உன் வார்த்தைகளால் காயப்பட்ட என் இதயத்தை, உன் நினைவுகளால் வதைக்காதே..! எனக்கு இருப்பது என்னவோ, ஒரு இதயம் தான்..! என்னை காயப்படுத்திவிட்டாய், நான் பொறுத்துக் கொள்வேன்..! என் உணர்வுகளை காயப்படுத்தாதே, அவற்றிற்கு பேசத்தெரியாது...!! RK

#
Kalpana Subramaniam

ஒரு நொடியில் கூட, உன்னை பிரிய மறுக்கின்றேன்..! ஒரு நாழிகை கூட, உன்னில் தனித்துவாழ விரும்பவில்லை..! என் கண் சிமிட்டும் நேரத்தையும் தவிர்க்கின்றேன், என் இமை உன்னை காண்பதற்காக...!! RK

#
Kalpana Subramaniam

மனதில் நீ..! உயிரில் நீ..! உதிரத்தில் நீ..! எல்லாமே உன்னோடு..! என் மரணத்தை தவிர..!! RK

#
Kalpana Subramaniam

இதயத்தை தொலைத்துவிட்டு தேடினேன், கிடைக்கவில்லை..! இதயமே என்னை தேட தொடங்கியது..! உன் காதல் வந்தபிறகு...!! RK

#
Kalpana Subramaniam

தேடும்பொழுது கிடைக்கவில்லை.. கிடைத்தபோது என் தேடல் இல்லை.. மறந்து வாழும் நிலை எனக்கு.. உன் நினைவுகள் மட்டும் மறக்கவில்லை...!! RK

#
Kalpana Subramaniam

விழிகளில் ஒரு வானவில்..! விழியசைவில் வியந்து போனேன்..! மொழிகளில் என்னை வியர்க்க வைத்தாய்...! உன் இதழ்களின் இன்னிசையில், என்னுள் எத்தனை எத்தனை இம்சையடி..! கன்னி உந்தன் கவர்ந்துவிட்ட காதல் தனில், இழந்துவிட்டேன் என்னை நானே...!! RK

#
Kalpana Subramaniam

தொலை தூரம் நீ இருந்தாலும்.. என் சந்தோசத்தை பகிர்ந்திடவும்.. கவலையில் தோள் சாய்ந்திடவும்.. தவறாமல் என்னுள்ளே வருகை தருகிறாய்...!! RK

#
Kalpana Subramaniam

நிஜத்தோடு அல்ல.. உன் நிழலோடு.. உன்னோடு அல்ல.. உன் நினைவுகளோடு தொடரும்.. என் காதல் பயணம்.. நீ வருவாய் என...!! RK

#
Kalpana Subramaniam

இன்னும் ஒரு முறை, என்னை திரும்பி பார்..!" நீ என்னை விட்டு தூரமாக செல்லும் முன்பு, அந்த காதலான பார்வை போதும்..!" நீ வரும் வரை, எப்பொழுதும் உன்னை என் நினைவுகளில் சுமக்க...!! RK

#
Kalpana Subramaniam

உறவுகள் யாவும் பகையானது..!" உன் நினைவுகள் எனக்கு, உறவானது...!! RK

#
Kalpana Subramaniam

உன் கண்களை, நேராகப் பார்த்து பேசும் சக்தி எனக்கு இருந்தால், உன்னுடைய அனைத்து குழப்பங்களுக்கும், என்றோ விடை தெரிந்திருக்கும்...!! RK

#
Kalpana Subramaniam

நாம் காயப்படுத்திய பின்னும்.., நாம் நேசிப்பவர்களின் அன்பு அழகாக தான் இருக்கும்...!! RK

#
Kalpana Subramaniam

உன்னை பற்றி எழுதி, அதை ரசிப்பதும், அழகாக தான் இருக்கிறது.. என் கனவு காதலில்...!! RK

#
Kalpana Subramaniam

இரவு பகல் என பூமிக்கு ஒர் நாளில்.... இரு முரை வருவது போல் நீ ..... என் வாழ்வில் ஒரு முறையாவது வர மாட்டாய என எங்கும் மணம்......

#
மூன்றாவது மனிதன்

சாரலுக்கும் உன் மேல் காதலிருக்கும் சொட்ட சொட்ட நனைத்திட காத்திருக்கும்.. மின்னலுக்கும் உன் மேல் மோகமிருக்கும் படம் பிடிக்க உன் பின்னே அலைந்திருக்கும்.. சிமிட்டும் நட்சத்திரமாய் உன் சிரிப்பிருக்கும் சிமிட்டாத நிலையில் என் விழியிருக்கும்.. மயக்க நிலையிலே என் மனமிருக்கும் அதில் தித்திக்கும் செந்தேனாய் உன் முகமிருக்கும்.. சேலையில் உனதுருவம் செழித்திருக்கும் விழி செதுக்கிய சிலையை கண்டிருக்கும்.. இழுத்திடும் காந்தமாய் உன் படைப்பிருக்கும்.. மனம் இயல்பாய் இணைந்திட காத்திருக்கும்..

#
கவிதையின் காதலன்

என்னுள் இருக்கும் உன் நினைவுகள் வெறும் வார்த்தையால் வந்தது இல்லை உதிரத்தின்சாட்சியாய் வந்த நினைவுகள் ... SB

#
SK

எனக்காக நீ அல்ல.. உனக்காக நான் அல்ல.. நமக்காக.. என்று சொல்ல வைத்தது.. உன் கண்கள்...!! RK

#
Kalpana Subramaniam

கண்களை வாங்கிக்கொள்ள மறுக்கிறவள், காதலியாகிறாள்..!" கண்களை வாங்கிக்கொண்டு, உன்னைப்போல், கண்கள் தருகிறவள்தான், தோழியாகிறாள்...!! RK

#
Kalpana Subramaniam

பெயரில் பாதியும் உயிரில் பாதியும் நீயென்றான பின் நானென்பது இனி நீதான். SB

#
SK

ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய அழகிய கவிதை என்னவள்.. SB

#
SK

It's not just letters.. it's also my heartbeat...

#
Vellai Arcot

இதில் இருப்பது எழுத்துக்கள் மட்டும் அல்ல என் இதய துடிப்பும் தான்

#
K Giri (Haritha)

It's not wrong to like everything you see, it's wrong to desire everything...

#
Vellai Arcot

I don't write... I carve. Poem for you... in my heart...

#
Vellai Arcot

கதவு ஜன்னல்களை இறுக மூடிவிட்டுத்தான், கண்ணயர்ந்தேன்..! அதையும் தாண்டி உதைக்கின்றன, உண் ஞாபகங்கள்..! உறங்காமல் நான்..! உறங்கவிடாமல் நீ...!! RK

#
Kalpana Subramaniam

பூவே உனக்காக... தென்றலை வீசுவேன் உன் அன்பை உணர்ந்தாள் துள்ளாத மனமும் துள்ளும்... என் நெஞ்சை கசக்கிய என் பிரியமானவளே... காதலுக்கு மரியாதை... தந்த தென்றலே... பிரியமுடன் நான்

#
ரிஷிபாலா

உன் காதோடு வாழும் காதணி போல்..... உன்னோடு காலந்தோறும் வாழ நான் காத்திருப்பேன்...

#
மூன்றாவது மனிதன்

விழிகள் கண்டதும்..... உளிகள் வைத்து.... ஒலிகள்‌ எழுப்பி.. செதுக்கிய என் கவிதை சிற்பம் நீ...

#
மூன்றாவது மனிதன்

உரைந்த உதிரத்தில் உரையாத என் உரவாடல் நீ...

#
மூன்றாவது மனிதன்

நாம் ஒருவரை உண்மையாக நேசிக்கும் போது பிரிவு ஒன்று ஏற்படும் உண்மையான அன்பு எப்போதும் மனதில் மறைத்து வைத்து பேசத் தெரியாது. அவர்கள் பிரிந்தாலும் நினைவுகள் ரொம்ப அழகானது உன்மை காதல் எப்பவும் நினைவுகளை மட்டுமே சுமக்கும்.... DS

#
SK

கணவனான பின்னும்.. காதலனாய்.. மின்னுகிறாய்.. என் கனவிலும்...!! RK

#
Kalpana Subramaniam

பிடிக்காத கவிதை போல, என்னை கசக்கி எறிந்து மறக்கிறாய்..!" குப்பை தொட்டி கூட, எனக்கு சொர்க்கம்தான்.. உன் விரல் பட்டு விழுந்ததால்...!! RK

#
Kalpana Subramaniam

உன் இதயத்தில்.. என் உள்ளம் தோன்றும்..!" உன் கண்களில்.. என் உயிர் மலரும்..!" உன் சிரிப்பில்.. என் உள்ளம் மலரும்..!" உன் பெயரில்.. என் உயிர் வாழும்...!! RK

#
Kalpana Subramaniam

உன் பார்வையில்.. என் மீது.. காதல் அருந்தும்..!" உன் பெயரில்.. என் உயிர்.. பெருமையுடன் வாழும்...!! RK

#
Kalpana Subramaniam

உன் காதல் இருந்தால்.. என் உள்ளம்.. பொலிவுடன் வாழும்..!" உன் மனதில்.. நான் இருந்தால்.. உன் உள்ளம் மிகையிடும்...!! RK

#
Kalpana Subramaniam

உன் நினைவில்.. என் உயிர் வாழும்.. உன் கனவில்.. என் மனம் மெய்யும்...!! RK

#
Kalpana Subramaniam

கிடைப்பது நீயாக இருந்தால் இழப்பது எதுவாக இருந்தாலும் சம்மதம்.

#
Karuppasamy

அட்டை ஒட்டிக்கொண்டால் இரத்தத்தை உறிஞ்சுகிறது அத்தான் கட்டிக்கொண்டால் ஆசை பெருகுது .....

#
Karuppasamy

உன்னை காதலிக்கிறேன் என்பதை தவிர வேறு என்ன பெரிய அழகிய கவிதை இருந்துவிட போகிறது என்னிடத்தில் !

#
Karuppasamy

காதல் மனதில் வந்ததுமே .. ஊற்றாக விழியில் வழிந்திடுமே.. வழியும் ஊற்றை பகிர்ந்ததுமே செந்தேனாய் இனிக்க செய்திடுமே.. உன் மேல் காதல் கொண்டதுமே கையில் பூவுடன் நின்றிடுமே.. என்னவன்(ள்) என்பதை உணர்ந்ததுமே மண்டியிட உன்னையும் தேடிடுமே..

#
கவிதையின் காதலன்

கண்மணியே ️️, இயற்கையை நீ ரசித்து கொண்டு இருக்கிறாய் என்று நீ நினைக்கிறாய் ஆனால் அந்த இயற்கை தான் உன்னை ரசித்து கொண்டு இருக்கிறது என்பதை நீ அறியவில்லை.........

#
Sriram Sivaramachandran

உன்னைக் கண்டவுடNன்.. புரிந்தேன்.. நீ என்னவள் என்று..! ஆனால் நீ, என்னைக் கண்டவுடன்.. திரும்பிக் கொண்டாய்.. எவனோ என்று..!! RK

#
Kalpana Subramaniam

வெள்ளை வண்ணத்தில் மின்னும் மின்னலே.. விழியுன்னை காணும் முன்னே விழி மூட செய்ததேனோ? மூடிய விழிகள் விழிக்கும் முன்னே இடம் பெயர்ந்து போனதேனோ?. ஒளிரும் நிலவாய் சிரிப்பை காட்டி பார்பவர் மனதை மயக்கியதேனோ..? எட்டு மடிப்பு சேலையின் அழகில் எனை வீழ்த்தி போனதேனோ..? சிற்பி செதுக்காத சிலைப் போல் என்னை மாற்றிவிட்டு சென்றதேனோ..???

#
கவிதையின் காதலன்

காலம் கடந்து போனாலும் நேசம் கரைந்து போகாது மென்மேலும் நேசம் பொங்கி வழியும் கடலாகி...

#
Ilakkiya sri

கண்ணீர் துளிகளில் அன்பு எனும் முத்துக்கள் விழுவதால் பலர் தம் கொள்கைகளை துறந்து கண்ணீர் துடைக்கின்றனர்...

#
Ilakkiya sri

புத்தகம் படிக்க நினைக்கயில் உன் நினைவில் படிக்க மறுக்கிறது எந்தன் மனம் ஏனடா என்னை சித்ரவதை செய்கிறாய் அன்பா...

#
Ilakkiya sri

உன் கால் கொலுசின் ஓசை கேட்கவில்லை எனில் பூமியும் வலி தாங்காமல் நடுக்கம் கொள்ளுமடி...

#
Ilakkiya sri

உன்னைக் கண்ட பின் எனக்கு மையிட வேண்டும் உதட்டுக்கு சாயம் இட்டு சிகையை அலங்கரிக்க வேண்டும் என்று தோன்றுகின்றதே அன்பா இவ்வளவு எழில் கொண்ட உன்னைக்கண்டால் எனக்கே நாணம் வருகிறது அதற்கு தானே இத்தனை ஒப்பனையடா அன்பா...

#
Ilakkiya sri

மாராப்பு விலகியதில் மோகம் கொண்டு கொங்கையின் எழில் கண்டு மயங்கியவன் மீண்டு எழவில்லை என வதனம் காட்ட மறுத்தது புரியவில்லையா அன்பா...

#
Ilakkiya sri

அன்பா எங்கு சென்றாலும் விடாமல் துரத்துகின்றாய் நானோ விலகிச்சென்றாலும் நீ விடுவதாக இல்லை என் மனம் ஏனோ உன் வசமாகி தவிக்கின்றது இதோ இந்த நீரோடையில் கைகளை நனைத்து சிரிக்கின்றேன் உன்னை நினைத்து என்றைக்கு பைத்தியக்காரி பட்டம் அளிப்பார்களோ...

#
Ilakkiya sri

தத்தளிக்கும் இதயத்தில் காமம் குடி கொண்டதோ கண்களின் போதை கண்டு மயங்கியவன் எழுவது சிரமமோ உன்னிடம்...

#
Ilakkiya sri

நீ வருகையில் எல்லாம் என் காதணியின் அழகில் ஆசை கொண்டு சீண்டி விட்டுச்செல்வாயே இன்றோ நீ கடுக்கன் அணிந்து வந்து அழகை ரசிக்க வைத்தாயடா அழகனே...

#
Ilakkiya sri

கானகம் வந்தாயோ வேடுவன் மனையாளே தாங்கொணா தாகம் தணிக்க நதியிலே நீர் பருக வந்தாயோ மான் போன்று உதடுகளை குவித்தாயோ உன் வதனம் களையிழந்து தவிக்கின்றதே பார்த்தாயா எங்கள் மீது கொண்ட அன்பு என நாங்கள் அறிய மாட்டோமா எங்களைக்காக்க உன் மணவாளனிடம் சொல்லடி எங்களை வேட்டையாட வேண்டாம் என நாங்களும் கானகத்தில் கொஞ்சம் ஓய்வெடுப்போமே என்றன மான்கள்...

#
Ilakkiya sri

என் கார்கூந்தலில் ஆசை கொண்டு வருடி மயக்கம் கொள்கிறாயே அழகு நிலையத்தில் அழகு படுத்திய கூந்தலைக் கண்டு ரசிக்கின்றாயே என்று சொல்ல அவனோ நகைத்து கண் சிமிட்ட இருவரும் அன்பில் கரைந்தோம்..

#
Ilakkiya sri

அன்பா உன் கரங்களின் மென்மையை உணர்கையில் சினம் கொண்ட என் விழிகள் மலர்களின் இதழ்களை விட மென்மையாகி விடுகின்றன ...

#
Ilakkiya sri

அன்பா கைகளில் சுமந்து இருக்கும் கனிகளை சுவைக்காமல் என்னை ஓவியம் தீட்டி ரசிக்கின்றாயடா...

#
Ilakkiya sri

உன் பாதங்களில் தீட்டப்பட்ட வண்ணம் நீரில் கலைந்து விடக்கூடாதென உன் மென்மலர் பாதங்களை நனையாமல் தாங்கிக் கொள்கின்றதோ தாமரை இலைகள்...

#
Ilakkiya sri

அன்பா தினமும் மாலையில் என்னோடு நதியிலே கால் நனைத்து விளையாடி என் கூந்தலுக்கு மலர்கள் சூட்டி பொட்டில்லா என் வதனம் காண ஆசையுடன் நீ வருவது ஷாஜகான் மும்தாஜ் மஹால் நினைவாக கட்டிய தாஜ்மஹாலை விட மேலானது அன்பா..

#
Ilakkiya sri

நித்திரை கொள்ளாத நினைவுகள் மலர்களை நாடி வரும் வண்டுகள் ரீங்காரமிடுவது போல் வந்து வந்து மோதும்...

#
Ilakkiya sri

கவலையான சுழலில் உன் காதல் எனக்கு அருமருந்தாய் சஞ்சலம் நீக்கி விடும் அன்பா...

#
Ilakkiya sri

இம்மலர் மலர்ந்து வாசம் தந்தாலும் வாசம் நுகர துணை மலர் இன்றி தவிக்கின்றதோ...

#
Ilakkiya sri

தூண் அருகே நிற்க்கும் அவளுக்கு தானாகவே வந்து விடுகிறது மாளிகையின் அழகு

#
சரவணன்

கண்களில் தொடங்கி.. கல்லறையில் முடிகிறது.. உண்மை காதல்..! புன்னகையில் தொடங்கி.. நடை பிணமாக முடிகிறது.. ஒரு தலை காதல்...!! RK

#
Kalpana Subramaniam

என் மனம் உன்னை ....அளவிற்கு அதிகமாய் நேசித்ததினால்.....உன் மேல் தன் உயிரை விட உயர்வாய் நேசிக்கிறேன்

#
Kavitha Kesavan

காதல் என்ற மூன்று எழுத்தில் அடங்கியது ....மனிதனின் கொண்டாட்டம்..... காதல் இல்லையேல் ஏது ஆட்டம்...... காதல் பொய் என்றால் ..எடுப்பான் ஓட்டம்

#
Kavitha Kesavan

கண்ணீர் துளிகள், விஷேசமானது தான்.. புன்னகையை, யாருக்கும் அளிக்கலாம்.. கண்ணீர்த்துளிகளை, அன்பானவர்க்கு மட்டுமே, உதிர்க்க முடியும்.. உன் மணத்திற்காய் இன்று நானும்.. என் மரணத்திற்காய் நாளை நீயும்...!! RK

#
Kalpana Subramaniam

சித்திரம் வியந்திட.. சிலையென சிறையிட.. முடியாத வர்ணங்கள் வரைந்த.. உயிரோவியம் அவள்...!! RK

#
Kalpana Subramaniam

நீ தூங்க.. சிறந்த இடம்.. என் இதயம் என்றால்.. உனக்காக.. என் இதய துடிப்பையும்.. நிறுத்தி வைப்பேன்.. நீ விழிக்கும் வரை...!! RK

#
Kalpana Subramaniam

என் காதலுக்கு முழு அர்த்தம் நீ தான். என் பெயரில் உன் பெயர் இணைத்த அந்த கடவுள். நீ என் இதய துடிப்பாக வாழ்கிறாய். SB

#
SK

என்னை கண்டவுடன்.. எனக்காக உன் உயிரை.. தருவாயா என்று கேட்டு விடாதே..? தருவேன் நிச்சயம்..! நீ.. அடுத்த ஜென்மத்தில்.. என்னை காதலிப்பாய்.. என்று சத்தியம் செய்..! உயிரையே தருவேன்.. உன்னை காதலிக்காத.. உயிர் இருந்தென்ன லாபம்..? RK

#
Kalpana Subramaniam

காதல் சொல்ல வார்த்தைகள் வேண்டாம் காதல் சொல்ல வர்ணனை வேண்டாம். காதல் சொல்ல கடிதங்கள் வேண்டாம் உன் ஒற்றை பார்வை ஒன்றே போதுமடி. SB

#
SK

மண்ணில் நீரை தேடி.. பரவும் வேரை போல.. உனது இதயத்தை.. தேடி பரவுகின்றன.. கவிதை வழியாக.. எனது காதல்...!! RK

#
Kalpana Subramaniam

தாமரை இலை.. தண்ணீர் போலதான்.. என் காதலும்.. உன்னுள் நான்.. சேராவிட்டாலும்.. என்னுள் தான்.. நீ.. வாழ்ந்து வருகிறாய்...!! RK

#
Kalpana Subramaniam

நீ எனைப் பிரிந்து இருக்கும் நாட்களில் எல்லாம், வெகு சீக்கிரத்தில் தூங்கப் போய்விடுகிறேன்..! ஏனெனில்..., கனவினில் உன்னோடு சேர்ந்திருக்க, வேண்டும் என்பதற்காக..!! RK

#
Kalpana Subramaniam

நீ என் கண்ணுக்குள் இருப்பதால்.. என்னுள் இருந்து கண்ணீர் வருவதில்லை..! என் கண்களிலிருந்து கண்ணீர் வருகையில்.. நீ என்னுள் இருப்பதில்லை..!! RK

#
Kalpana Subramaniam

காத்திருக்கும் கண்களுக்கு வியர்த்துப் போனால், அது கண்ணீர்..! காத்திருக்கும் கண்கள் கவிதை பாடினால், அது காதல்..! இந்த இரண்டையும், ஒரு சேரக் கொடுத்தவளும் நீ..! கொடுத்துப் பிரிந்தவளும் நீ..!! RK

#
Kalpana Subramaniam

ஆயிரம் மெகா வாட்ஸ் மின்சாரத்தை கண்களில் வைத்துக் கொண்டு இரவில் விளக்கேற்ற தீக்குச்சி தேடுவாள் கள்ளி..!

#
Karuppasamy

மனம் உருகப் பேசியவனின்.. மனதைப் புரிந்து கொள்ள முடியாததால்.. மனமுடைந்துப் போனேன்.. மலரும் நினைவில்.. நிஜமில்லா நிழலைக் கண்டு...!! RK

#
Kalpana Subramaniam

ஒரு முதியவரை ஏற்றிச்செல்ல மறுக்கிற என் மிதிவண்டி., விழியில் கண்ட உண்னை ஏற்றிச்செல்ல என் மனம் ஏங்குதடி.! மேட்டுப்பட்டி அ.இராசா

#
Raja Raja angappan

எழுதவில்லை.. செதுக்குகிறேன்.. உனக்கான.. கவிதையை.. என் இதயத்தில்..!! RK

#
Kalpana Subramaniam

என் கண்களுக்கு.. நீ காட்டிய.. அழகை விட.. என் உள்ளத்துக்கு.. நீ காட்டிய.. அன்பே உயர்ந்தது...!! RK

#
Kalpana Subramaniam

நினைக்கும் போதெல்லாம், என் கவலையை போக்கவும், என்னை சிரிக்க வைக்கவும், எதிரில் வந்து நின்றவன் நீதான்...!! RK

#
Kalpana Subramaniam

ஆயிரம் பிரிவு வந்த போதிலும், முதலும், முடிவும், நீயாக வேண்டுமடி..!" நான் உனதாக வேண்டுமடி...!! RK

#
Kalpana Subramaniam

குளிர் காலத்தில்.. நான் வாடினால்.. உன் பார்வைதான்.. என் போர்வையோ...!! RK

#
Kalpana Subramaniam

உனக்காகவே.. என் வாழ்க்கை என்று.. நீ சொன்னபோது தான்.. என்னை எனக்கே.. பிடித்தது..!! RK

#
Kalpana Subramaniam

காதல்.. சிலருக்கு.. கண்ணீரீன் காவியம்‍.. பலருக்கு.. அழகிய ஓவியம்..!! RK

#
Kalpana Subramaniam

முடியாத பயணம்.. நான் தொடர வேண்டும்.. உன் கரம் பிடித்து..!! RK

#
Kalpana Subramaniam

என்னில் ஒரு கனவும்.. என்னில் ஒரு நினைவும்.. உனக்கு மட்டுமே சொந்தம்.. ஆயுள் முழுவதும்.. உன் இதயத்தில் சரணடைவேன்.. என்றென்றும்.. உன் அன்பு காதலாக...!! RK

#
Kalpana Subramaniam

தேவதைகள் எல்லாம் வானில்தான் நடக்க வேண்டும் என்றில்லை.. வீதியிலும் நடந்து போகலாம்!

#
Karuppasamy

விலையுயர்ந்த வாசனை திரவியம் கூட தோற்று போய்விடும் உன் பின்கழுத்து வாசனையில்

#
Karuppasamy

பறிக்கப்படாத பூக்கள் மண்ணில் மலர்ந்தோ அழகு வண்ணன் அவன் சோலையில் கன்னி இவள் கூந்தலில் சூட்டி விட ...

#
Ilakkiya sri

மாலை பொழுதில் சில்லென்ற மழைத்தூரலில் நனைந்த மயில் மையல் கொண்டு தோகை விரிக்க சிதறிய மழைத்துளிகள் பெண்மயிலின் மேல் விழ பரவசமடைந்து ஆண் மயிலின் அருகே வர இருமயில்களும் ஆனந்தக்கூத்தாடியது ...

#
Ilakkiya sri

கண்கள் திறந்த காலை என் கண்கள் மெல்ல விரிய என்னவன் கண்ணங்களை கிள்ளி என் இதழ்களை நனைக்க என் நாசிகள் மணம் நுகர என்னவன் தேநீரோடு என் கரம் பற்ற என்ன மணமடா இத்தேநீர் உன் அன்பு கலந்த இத்தேநீரின் மணம் எந்த தேயிலை தோட்டத்திலும் காண இயலாத நறுமணம் அன்பா...

#
Ilakkiya sri

புதினங்களை ஆவலுடன் படிக்கும் நான் என்று உன்னைக்கண்டேனோ என் புதினங்களின் சுவை அதிகரித்தது ஏன் தெரியுமா வரிகள் ஒவ்வொன்றிலும் நாயகனாய் நீ இருப்பதால் அன்பா ...

#
Ilakkiya sri

தனிமையை விரும்பும் போது இசை எனும் நதியினிலே மனம் நீந்தி கரை சேர இயலாமல் தவிக்கின்றது...

#
Ilakkiya sri

நித்திரை கொள்ளாத நினைவுகள் வண்டுகள் மலர்களை நாடி ரீங்காரமிடுவது போல் வந்து வந்து மோதும்...

#
Ilakkiya sri

அன்பா தினமும் மாலையில் என்னோடு நதியிலே கால் நனைத்து விளையாடி என் கூந்தலுக்கு மலர்கள் சூட்டி பொட்டில்லா என் வதனம் காண ஆசையுடன் நீ வருவது ஷாஜகான் மும்தாஜ் மஹால் நினைவாக கட்டிய தாஜ்மஹாலை விட மேலானது அன்பா...️

#
Ilakkiya sri

உன் பாதங்களில் தீட்டப்பட்ட வண்ணம் நீரில் கலைந்து விடக்கூடாதென உன் மென்மலர் பாதங்களை நனையாமல் தாங்கிக் கொள்கின்றதோ தாமரை இலைகள்...

#
Ilakkiya sri

என் காதலில் உனக்கு தெரிவது அன்பு..!" உன் காதலில் எனக்கு தெரிவது அரவணைப்பு..!" நம் இருவர் காதலிலும் நமக்கு தெரிவது உண்மையான நேசம்...!! RK

#
Kalpana Subramaniam

உன்னிடம் பேச நினைத்தேன், வார்த்தை மௌனமானது..!" உன்னிடம் பேசாமல் இருந்தேன், வாழ்வே மௌனமானது...!!

#
Nila kanmani????????❤‍????

என் கண்களுக்கு.. நீ காட்டிய அழகை விட.. என் உள்ளத்துக்கு.. நீ காட்டியே அன்பே.. உயர்ந்தது...!! RK

#
Kalpana Subramaniam

உன்னிடம் பேச நினைத்தேன், வார்த்தை மௌனமானது..!" உன்னிடம் பேசாமல் இருந்தேன், வாழ்வே மௌனமானது...!! RK

#
Kalpana Subramaniam

விடியற்பொழுதில் வெளிச்சம் பரவுவதை போல்.., உன் வருகை பொழுதெல்லாம்.., காதல் அன்பு பரவி, அழகாகிறது என் உலகம்...!! RK

#
Kalpana Subramaniam

உன் புன்னகை.. என் ஊகம்.. உன் கண்ணீரில்.. என் துக்கம்.. என் ஊன் உடல்.. அழிந்தாலும்.. உயிர்.. என்றென்றும்.. உன்.. பக்கம்.... RK

#
Kalpana Subramaniam

நான் சொல்வதை எல்லாம் செய்தாக வேண்டும் என்ற, கட்டளைகள் இல்லாத காதல், அழகானது...!! RK

#
Kalpana Subramaniam

நீ தூங்குகிறாய்..! எல்லா அழகுகளுடனும்..! உன் கண்களை மூடியிருக்கும் இமைகளில் கூட.., எனக்காக விழித்திருக்கிறது உன் அழகிய காதல்...!! RK

#
Kalpana Subramaniam

கண்ணை நம்பாதே என்று கவிஞன் தவறாக பாடினான் பெண்ணை நம்பாதே என்று பாடினால் அவளுக்கு பொருந்தும் Jnis@ kilai

#
J.Mohamed Nisthar

காலமெல்லாம் உன் காலடியில் என்று நினைத்தேன் .நிஜம் தான் காலமெல்லாம் உனது காலடியில் என உனர்ந்தேன் J.nisthar @ Kilai

#
J.Mohamed Nisthar

கவிதை எழுத கற்பனை தந்தாய்.. சுவாசிப்பதற்கு உன் நினைவு தந்தாய்.. சிறகு இல்லாமல் பறப்பதற்கு கனவு தந்தாய்.. உணர்வுகளை பரிமாற இதயம் தந்தாய்.. காதலிப்பதற்கு அன்பு தந்தாய்.. காதல் உயிர் வாழ புன்னகை தந்தாய்.. நான் கல்லறை செல்ல, பிரிவு என்னும் வலி தந்தாய்...!! RK

#
Kalpana Subramaniam

இவள் அழகில் ஊர்வசியையும் மிஞ்சுவாள் இவள் அழகைக் ஊர்வசியும் கெஞ்சுவாள் கடனாய்......

#
காளையத் தமிழன்

அள்ளி அள்ளி அனைத்து மகிழ்ந்தாலும்.., அனைத்தும் கொடுத்தாலும்.., இறுதியில் அன்னையை தேடும்.., சிறு குழந்தையை போல்.., உன்னையே தேடுகிறது என் மனது...!! RK

#
Kalpana Subramaniam

உன் புண்ணகை மொழியால் நானூம் உரைந்து போனேன் பனிப்பாறையாய் எப்போது வருவாய் சுடர் ஒழியாய் என் மீது அன்பை பொழிய....

#
காளையத் தமிழன்

அடியே நானூம் எழுதுகிறேன் எழுதுகிறேன் எனக்கு கை வழிதான் வந்தது உனக்கு என் காதல் வழி புரியவில்லையே நானே மாறுகிறேன் எழுது கோலாய்........

#
காளையத் தமிழன்

கவிதையில் எல்லாம் சொல்லிவிட முடியாத உன் காதலை, உன்னோடு இருக்கும் போது, உணர்கின்றேன்..!" இது உனக்கே உண்டான ஒன்று...!! RK

#
Kalpana Subramaniam

தேகம் விட்டு ரத்தம் போனாலும், என் நெஞ்ச்சை விட்டு, உன் பின்பம் போகாது...!! RK

#
Kalpana Subramaniam

அதோ கடலின் அலைகளிலே மூழ்கி மூழ்கி நீராடி என்னையே மறந்து இருக்கும் இவனுக்கு காகிதத்தில் கப்பல் செய்து அனுப்பினேன் கப்பலோ அவனைத்தொட நான் என நினைத்து திரும்பி பார்க்க அவன் அன்பில் கரைந்தேன்...

#
Ilakkiya sri

உன்னைப் பார்த்து பேசிடும் ஆசையில் உன்னைத்தேடுகையில் என் வளையலின் சத்தம் கேட்டு நீ ஓடி வந்து என் எதிரே நிற்க என்ன பேசுவது என்று தெரியாது ஏதேதோ பேசினேன் நேரங்கள் போனது தெரியவில்லை ஆனால் இருவருக்கும் பிடித்த விஷயங்கள் பட்ட மனக்காயங்கள் இவைகளை பரிமாறிக் கொள்கையில்ஏதோ மனம் இலேசாகி படபடவென சிறகடித்தது நீ என்னை விட்டுப்பிரிகையில் என் விழிகள் மட்டுமல்ல என் இதயமும் கலங்கி நின்றதடா...

#
Ilakkiya sri

காதலனின் விழிகளில் அவள் சிக்க அவனோ மயிலிறகில் வருட அவள் தேகம் சிலிர்க்க கண் மூடி தன் நிலை மறந்து காமமுற ரசித்து ரசித்து மகிழ்கின்றானே மாயன் இவன்...

#
Ilakkiya sri

துளித்துளியாய் சேகரித்து வைத்த அன்பை எத்தனை நாள் ஒளித்து வைப்பேனடா தாங்க முடியாமல் கொட்டி விட்டேன் நீயோ அன்பினைத்தொடுத்து மாலையாக்கி அணிவித்து என்னை மகிழ்வித்தாயடா உன் மீசையின் வாசத்தில் கரைகின்றேனடா...

#
Ilakkiya sri

இரவில் நல்ல உறக்கம் மலர்களின் வாசம் என்னை ஏதோ செய்ய உன் நினைவுகள் என்னை இம்சித்தது உறக்கம் கலைய நீ தினமும் வரும் கடற்கரை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தேன் கடற்கரை மணலெங்கும் உன் பாதச்சுவடுகள் அதனை அலைகளும் அழிக்காமல் விட்டுச்சென்றதடா அன்போடு நானோ என்னவனின் பாதச்சுவடுகள் மேல் என் பாதம் வைத்து நடக்க ஆரம்பித்தேன் மெல்ல மெல்ல என்னோடு கலந்தான் நினைவுகள் எவ்வளவு சுகமானது இப்படியே என் இரவுகள் கழிந்தன...

#
Ilakkiya sri

குளம் நிறைய பூக்களாய் உந்தன் புன்னகை அதை அள்ள என் கைகள் போதவில்லை என் முந்தானையில் அள்ளி விட்டேனடா அன்பா...

#
Ilakkiya sri

எனக்குள்ளும் ஒரு பித்தன் இருக்கிறான் என்பதை உணர்ந்தேன் என்னவள் உன்னை கண்ட பிறகு...!!

#
ம. ராஜகுமாரன் ராஜா

உன் நினைவு தோன்றாத இரவில் உன் கைகளில் வீணையாவேன் நீ மீட்டும் நேரம் ஸ்ருதி ஆக மாறி உன்னோடு இசையாகி கலப்பேனடா...

#
Ilakkiya sri

சில தேநீர் மிகுந்த சுவையுடனும் நாவிற்கு சுவை கூட்டும் நீயும் அப்படித்தானே அன்பா உன் அன்பு மாற்று குறையாதடா இந்த அன்பை கையில் எடுத்து இதயத்தோடு அள்ளி அணைக்கின்றேன்...

#
Ilakkiya sri

தூக்கம் வராத இரவுகளில் மகரந்தம் காற்றோடு கலந்து பறப்பது போல் நீ தென்றலோடு கலந்து எனைத்தழுவி என் நினைவுகளில் மலர்கின்றாய் அன்பா...

#
Ilakkiya sri

புள்ளிமான் இமையுடையவலே தேன் சொட்டும் பூவின் இதழுடையவலே உனக்கு எதற்கு ஆபரணம் அணிகலன்கள் உன் அழகில் தோற்றுப் போகவா....

#
காளையத் தமிழன்

சாலையில் நி நடந்தால் சாலையும் யுத்தம் செய்யும் உன் பாதங்களை முத்தமிட.....

#
காளையத் தமிழன்

கஷ்டம் என்பதை மறந்திருந்தேன்.. மனதில் நிலவை மறைத்திருந்தேன்.. இருளில்லை எனக்கென்று நினைத்திருந்தேன்.. நிழலோடு இனிமை கொண்டிருந்தேன்.. கண்டு பேசிட காத்திருந்தேன்.. காணாமல் காதல் கொண்டிருந்தேன்.. பதிவை காணாமல் பதைத்திருந்தேன்.. விடியும் காலைக்கு காத்திருந்தேன்.. வானத்தின் வண்ணத்தை பார்த்திருந்தேன்.. சிங்கார சிரிப்பில் மயங்கிருந்தேன்..

#
கவிதையின் காதலன்

மூழ்கி இறந்து போக ஆசை தான் எனக்கும் உன் சிறிப்பினால் தோண்டப்பட்ட கண்ணக் குழி அகழியில்......

#
காளையத் தமிழன்

மாமேடையில் மஞ்சள் மழையில் நனைந்து ! மன மாளிகையில் மல்லிகை பூவாய் பூத்து! மான் விழியால் மையல் விழி பேசும் அழகிய கயல் விழி தான் இவளோ!

#
Freash Status

தனித்து வைத்து ரசிக்கிறாயாடி என்னை! அதை..... தனித்துவமாய் படம் பிடிக்கிறேனாடி உன்னை!

#
Freash Status

குயிலின் குரலோசை கேட்க தொலைபேசி துயிலின்றி விளியோசையோடு அழைக்கின்றதே!

#
Freash Status

உன் புல்லாங்குழல் ஓசையினால் என் இதயத்தை இசைக்காதே கண்ணா! உன் ஒயில் பர்வையில் என் மனதை வருடாதே ராதா!

#
Freash Status

சித்திரம் பேசுதடி இமைகள் உன் கண்ணழகை! பத்திரம் செய்யடி உன் இதலோர சிரிப்பழகை!

#
Freash Status

நாளிதழ் எனும் காகிதத்தில் நான் படித்த முதல் தலைப்பு செய்தி... பூவிதழ் சூடிய அவளின் அழகே...

#
Freash Status

சிற்பிகள் இல்லாமல் வடித்த அழகிய பெண்சிலை ஒன்று முகம் தெரியாதவாறு திரையிட்டு மறைக்கின்றது ஏனோ!

#
Freash Status

திங்கள் நிறைந்த பொன் வானமும் தோற்றுப் போகும்... அவள் கண்ணக் குழி அழகை கண்டு.....

#
காளையத் தமிழன்

அன்பா நீயோ கடலின் கரைகளில் அமர்ந்து தனிமையில் வெறுமையுடன் இருக்க இக்கடல் அலைகளோ உன் மீது நேசம் கொண்டு வந்து வந்து செல்கின்றதே இன்னுமா வெறுமை உனக்கு நேசம் கொள்ளடா கடலின் அலைகளையும் உன்னை மறைந்து மறைந்து இரசிக்கும் உன்னவளையும்...

#
Ilakkiya sri

நீ விரும்பியதை நீ உரைக்காமலே நான் தருவேன் உனக்கு மரத்துப்போன இதயத்திற்கு உயிர் கொடுத்தவன் நீ தானே ஏற்றுக்கொள்ள முடியாத துன்பமே வந்தாலும் மறக்காத இதயமடா அன்பா...

#
Ilakkiya sri

ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் சாரலில் நனைந்த பறவைகளைப் போல் உன் சாரலில் இம்மலரும் ஈரமானதடா.

#
Ilakkiya sri

உன்னோடு பேசாத நாட்களில் முயல் போல் துள்ளிக்குதித்த மனம் துள்ளலின்றி மௌனமாய் புல்வெளியில் உறக்கமின்றி தலை சாய்ந்து கொள்கின்றது.

#
Ilakkiya sri

அவள் பேசிய வார்த்தைகள் எல்லாம்...முத்துக்கள் பேசிய வார்த்தைகளாக என் நினைவுகளில் நிலைக்கின்றாள்.......

#
காளையத் தமிழன்

அவள் நடந்தால் போதும்... நானும் கண்டு ரசித்து விடுவேன் நாட்டியத்தை...

#
Karuppasamy

sirayai pandurutha en valivai un veli ennum kathuvugalal therathayai

#
preethi

சுதந்திர தேவதை சூழ்நிலை என்னும் சிறையால் அடைக்கப்பட்டாள்... கண் விழித்த உலகில் அல்ல.... கற்பனை கலந்த கனவில்.......

#
காளையத் தமிழன்

மன்னித்து விடு என்பது அன்பு.. அப்போதே அதனை மறந்து விட்டேன் என்பதே பேரன்பு..! ️ இனிய இரவு...!

#
Karuppasamy

பாசம் காட்ட பல பேர் இருந்தாலும்.. நான் களைப்பாகும் போதெல்லாம்.. என் மனம் இளைப்பாற இடம் தேடுவது உன்னிடம் தான்..

#
கவிதையின் காதலன்

காந்தமாய் என்னை கவர்ந்தவள்.. விழியால் மனதை இணைத்தவள்.. ஓயாமல் ஓய்வின்றி துடிப்பவள்.. தூங்காமல் என் மனதை துரத்தியவள்.. ஓயாமல் என்னை ரசித்தவள்..

#
கவிதையின் காதலன்

எங்கோ எப்போதோ  நான் உன்னை கண்டால்  அங்கே அப்போதே  என் ஒரு துளி கண்ணீர்  மண்ணை நினைத்துப் பார்க்கிறது  உன்னை நேசித்ததால்

#
Raju

நீ அருகில் இருந்தால்  உன்னை ரசித்திடுவேன்  உன் இதழுக்கு சம்மதம் என்றால்  அதையும் ருசித்திடுவேன்

#
Raju

எத்திசையிலும் காற்று வீசும் நீ இருக்கும் திசை மட்டும்தான்  என் மூச்சுக்காற்று வீசும்

#
Raju

என்றும் அரசி.....!! ஏழையாக இருந்தாலும்......!! ஏகாம்பரமாக இருந்தாலும்......!! என்றும் அரசி தான்......!! நீ என் இதயத்தில்.......!! ஸ்ரீஜா....️ சந்திரசேகர்

#
ஸ்ரீஜா சந்திரசேகர்

நீ மண்ணில் நடக்கையில் உன் காலடி மண்ணை என் கைகளிலே அள்ளி என் தங்கப்பெட்டியில் வைத்து நிதமும் திறந்து உன் அன்பையும் வாசத்தையும் நுகர்கின்றேன் நீ என்னை விட்டு நீங்கிய நேரங்களில் அன்பா...

#
Ilakkiya sri

நீயின்றி என் எழுத்துக்களுக்கு உயிர் ஏது இந்த எழுத்தை இரசிக்கும் இரசிகன் நீ தானே என் எழுதுகோல் உன்னை நினைத்தால் எழுத ஆரம்பித்து விடுகிறது...

#
Ilakkiya sri

புல்வெளி மீது விழுந்த மழைத்துளிகளை மண் தாங்கிக்கொள்ளும் என் கண்களின் கண்ணீர்த் துளிகளை என்னவன் தன் அன்பான கரங்களால் தாங்கி என் துயர் நீக்கி என் அகத்தினை மலரச்செய்வான் ...

#
Ilakkiya sri

தேநீர் குவளையில் தேநீர் பருகும் ஒரு ஒரு துளியிலும் உன் அன்பின் இனிப்பினை அள்ளிப்பருகுகின்றேன் எந்த இனிப்பையும் இது நாள் வரை நான் சுவைத்ததில்லை நீ அவ்வளவு இனிப்பா அன்பா ...

#
Ilakkiya sri

உன்னைக்காணாது தவித்த நொடிப்பொழுதில் நீயோ நான் விரும்பினேன் என்பதற்காக மீசையின்றி வந்து நின்ற அழகை மட்டுமல்ல நீ என் மீது வைத்த அன்பையும் எண்ணி என்னுள் இரசிக்கின்றேன் அன்பா...

#
Ilakkiya sri

எப்போது கேட்டாலும் இன்பமாய்! எங்கேயும் நான் ரசிக்கும் இன்னிசையாய்!! யார் அழைத்தாலும் திரும்ப வைக்கும் பிரம்பிப்பாய்!!! தூக்கத்திலும் என்னை எழுப்பும் பிரம்மையாய் "அவள் பெயர்"

#
Bharathi Bharathi

எமற்றாம் நிறந்த உலகத்தில் எதை அதிகம் நெசித்தம் அதை‌ நமக்கு இல்லை என்றால் பெரிய துன்பம்

#
Lakshmi m

எழுதப்பட்டிருக்கும் விதி உன்னையும் என்னையும் சேர்க்காது எனில் பிறகு ஏன் இருவரையும் சந்திக்க வைத்தது #என்னவளே

#
Karuppasamy

என் வானத்தி ஆயிரம் நட்சத்திரம் இருந்தாலும் நான் பார்த்த ரசிக்கும் ஒற்றை நிலவாக நீ இருப்பாய் !!!

#
Rasika P

கட்டுக்குள் இருந்த மனமோ ​கட்டவிழ்ந்து போனது.. கடிவாளம் இட்ட விழியோ இமை மூட மறந்தது.. அழகை கண்ட மனமோ செயல் இழந்து போனது.. செவ்விதழின் நிறம் கண்டு தூக்கம் மறந்து போனது.. புதுக்கவிதை எழுத மனமோ வார்த்தை தேடி அழைந்தது..

#
கவிதையின் காதலன்

பார்வை நீயானால் நீ தீட்டும் ஓவியமாய் நான் இருப்பேன் என் கன்னக்குழியினில் உன்னை கையகம் செய்வேனடா...

#
Ilakkiya sri

உன் கரங்கள் என்னை எழுதயிலே என் பக்கங்கள் நிரம்பி என் தாகம் தனிக்கின்றன நீ எழுதாத போது என் பக்கங்கள் உன் விரல்களுக்கு ஏங்கித் தவிக்கின்றன...

#
Ilakkiya sri

சேலையின் ஆசை தன்னை வாங்க வந்த மக்களை விட தன்னை அணிந்து கொள்ளும் பெண்ணின் உடலைச்சுற்றிக் கொள்ளத்தான் அவள் வாசம் மிக்கவளாயிற்றே துணையை விட எப்பொழுதும் அவள் உடலைத்தழுவி நிற்பது தான் தானே என எண்ணி களிப்புற்றது...

#
Ilakkiya sri

சில மலர்கள் வாடாது வாசம் குன்றாது நம் இதயத்தின் ஓசையாய் மலர்ந்து நிற்கும் நம் இதயத்தின் கதவுகளைத் திறந்தால் அன்றலர்ந்த மலர் போல் புன்னகைப்பூத்து நிற்கும்...

#
Ilakkiya sri

யாருமில்லா இரவுகளில் உன்னோடு சில நிமிடங்கள் உன் மார்பிலே முகம் புதைத்து அன்பில் கரைந்த நேரங்கள் உன் கைகளிலே மழலையாகி தவழ்ந்த மணித்துளிகள் உன் மார்பிலே சாய்கையில் அவ்வப்போது கள்ளக்கண்களால் என்னை இரசித்த நேரங்களை மறக்க இயலாது உன்னுள்ளே கரைந்தேன் என்னவனே...

#
Ilakkiya sri

புதியதாக ஒன்று கிடைக்கப் போகிறதே என்று பழகிய ஒன்றை வெறுத்து விடாதே... வரப்போவது உனக்கு வலியை தந்தால் இழந்ததை உன்னால் மீண்டும் அடைவது கடினம்...!

#
Mani

கருங்கல்லாய் இருந்த என்னை சிலையாய் மாற்றியது உன் காதல் ஒலை ,

#
Karuppasamy

டக்கென பார்வையை வீசி சென்றாய் எரிவது நானால்லவா..... இப்படிக்கு இதயம்

#
Karuppasamy

நீ வடப்புறம் நான் இடப்புறம் இணையும் போது மணப்புறம் .....

#
Karuppasamy

பகிர வேண்டியது எல்லாம் பாதியிலேயே நின்றது விரும்பியவர் விருப்பம் காட்டாத போது

#
Karuppasamy

பேசிக்கொண்டே இரு கேட்டுக்கொண்டே இருக்கவே விரும்புகிறேன் உன் குறும்புத்தனமான பேச்சினை

#
Karuppasamy

அன்பே! உன் முகம் காண ஏங்கும் என் மனம் அருகில் நீ இல்லாத பொழுது என்னை அரவணைத்து அன்பாய் தந்த முத்தம் தான் என்னை வழி நடத்துகிறது காலம் கடந்தாலும் காதல் நடப்பதில்லை என்று!!

#
தமிழன் முருகன்

என் மேனியில் உன் விரல் கொண்டு எழுதாத போதெல்லாம் என் மேனி மட்டும் அல்ல உன் விரல்களும் வாடி விடும் என் மேனியில் உன் விரல் கொண்டு எழுதும் போது உன் விரல்களும் சூடேறுகின்றதா...

#
Ilakkiya sri

உன்னோடு பேசாதவை என்னோடு போகட்டும் கண்ணோடு காணாதவை விண்ணோடு சேரட்டும் உன்னோடு சேராத என் உடல் மண்ணோடு போகட்டும் உன் காதலின் நினைவோடு என் உயிர் உலகை பிரியட்டும்.... -By Kunaseelan Lathursan (Lathustudio)

#
Break My Heart

காதலின்றி பாவலன் இல்லை காதலின்றி கவிதைகள் உயிர் பெறுவதில்லை..

#
Ilakkiya sri

தன்னைத்தொட்டுப்பார்க்கச்சொல்லி மலரோ தன் இதழ்களை அசைத்து அசைத்து அழைத்தது கண்டு வண்ணத்துப்பூச்சியோ மலரின் மகரந்த வாயிற் தொடுகையில் அதன் இதயம் மட்டுமல்ல சிறகுகளும் படபடத்தன...

#
Ilakkiya sri

நிமிடங்கள் கரைய மறுத்து நிற்கிறது.. கேட்டு கொள்ள அருகே உன் குரலின்றி..

#
MURUGESAN KR

உதிர்ந்த சருகொன்று உணர்த்துவது ஒன்றே ஓன்று தான் வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என்று.

#
MURUGESAN KR

நீ எனக்கானவள் இல்லை என்று தெரிந்தும் உன்னை இதயம் மறக்க நினைக்கவில்லை. இதயம் துடிப்பது என்னமோ எனக்குள்தான், எதற்கு உனக்காக துடிக்கின்றது தெரியவில்லை நினைவுகள் தொடரும்..,

#
MURUGESAN KR

நீ என் மடிசாயும் நேரம்.. என் மனெங்குங்கும் வீசும் காதல் வாசம்.. உன் காதல் ஒன்றே போதும் என் காலம் முடிந்தாலும்..

#
MURUGESAN KR

என் வலிகளை புரிந்துகொள்ள வேண்டாம் எனக்கும் வலிக்கும் என புரிந்து கொண்டால் போதும்

#
MURUGESAN KR

கை நிறைய வளையல் அணிவதிலேயே நிறைவு பெறுகிறது பெண்மையின் பேரழகு!

#
MURUGESAN KR

சிலர் தங்க வளையல் அணிந்திருப்பார்கள். உன் வளையல் தங்கத்தை அணிந்திருக்கிறது.

#
MURUGESAN KR

அவள் கைபட்டதும் சிவந்தது மருதாணி...!

#
MURUGESAN KR

இலகுவாக இருக்கும் உந்தன் நினைவுகள்தான் எழுத நினைக்கையில் கனத்து போகின்றன தண்ணீர் நனைந்த இலவம்பஞ்சை போல்... ஒருவேளை கண்ணீரில் நனைவதின் விளைவோ??

#
MURUGESAN KR

வடிவத்தில் நீ ... தண்ணீர் போலவே... எங்கெங்கு நிறைத்திடினும் அதன் வடிவம் பெறுகின்ற வல்லமை; ஆம் நீ தண்ணீர் போலவே ஆனாய்.. என் வாழ்வில்; இன்றியமையா இந்த இ(ட)தயமதில்️

#
MURUGESAN KR

தீண்டும் விரல்களில் மீண்டும் மீண்டும் எதையோ எதிர்பார்க்கிறது பேதைமனம் காதல் கொண்டு...!

#
MURUGESAN KR

உன் அருகில் நெருங்கும் நேரம் தோறும் முகத்திரை போட்டு உன் செல்லக்கண்களை காட்டி என்னை வதைக்கின்றாயே இன்று மாட்டிக்கொண்டாயடி உன்னை விடுவேனா என முகத்திரையை சற்றே விலக்கினேன் வெண் மேகமும் தோற்று விடும் நிறமல்லவா இவள் இவளின் மூக்குத்தி பளபளவென மின்னி என்னை சீண்டச்சொல்கின்றதே அதையும் தாண்டி சாயம் பூசாத ரோஜா நிறத்தினை ஒத்த உன் இதழ்களின் அழகை அள்ளவா சுவையை ருசிக்கவா...

#
Ilakkiya sri

வடிவத்தில் நீ ... தண்ணீர் போலவே... எங்கெங்கு நிறைத்திடினும் அதன் வடிவம் பெறுகின்ற வல்லமை; ஆம் நீ தண்ணீர் போலவே ஆனாய்.. என் வாழ்வில்; இன்றியமையா இந்த இ(ட)தயமதில்️

#
MURUGESAN KR

கடல் நீர் வற்றும் வரை, காகித மலர்கள் வாடும் வரை, ஆகாயம் அழியும் வரை, என் ஆயுள் முடியும் வரை, உன்னை காதலிப்பேன்! இரவு வணக்கம்.

#
MURUGESAN KR

பகலை அழகாக்கும் சூரியன் போல.. என் மனதை அழகாக்குகிறது உன் நினைவு...

#
Karuppasamy

மல்லிகைக்குள் மறைந்து மயக்கும் வாசனையை மனதுக்குள் நுழைந்து மயக்குகிறாய் என்னவளே ..!! இனியவளே..

#
Karuppasamy

மல்லிகைக்குள் மறைந்து மயக்கும் வாசனையாய்.. மனதினுள் நுழைந்து மயக்குகிறாய் என்னை..! ️ #அவளும்️நானும்..

#
Karuppasamy

நம்மை யாரும் கண்டுகொள்ளவில்லை எனில் தொலைந்து போனதாய் அர்த்தமல்ல, யாருக்கும் தொல்லையாய் இல்லை என்று அர்த்தம்

#
Karuppasamy

மழை நனைத்த இரவில் உன்னை சந்திக்க இயலாமல் கைபேசியோடு முத்தங்கள்...

#
Ilakkiya sri

When we awake from sleep we jump into different consciousness and different reality. The new horizon of reality comes to our life and attention, we feel something new, we find out the new state of consciousness. At time of awakening from bed we come back to reality from the dream reality or dream world, we experience new consciousness reality which is knocking at our door of consciousness. Sleep Jump is journey from sleep reality to new consciousness reality and new reality dimension. Consciousness model of a day is different from consciousness model of another day due to sleep jump. New day starts with a new consciousness model and consciousness reality after having sleep jump during long sleep time. Sleep acts as connector or bridge between two consciousness reality or consciousness model. The change in neuron network connection and stored thought in our subconscious mind comes to play and blend with reality in such a way so that we perceive reality with our stored subconscious thought and new thought zone so change in our perception level also caused by sleep jump also called dream jump if we are dreaming in sleeping course. The reality inside of us which is developed by interaction with puter reality is changed by frequency during sleep jump so in post sleep stage connection between our changed new reality and outer reality is changed. The inner process happened during sleep jump is responsible for change of perception level about reality. The inner self is shaped by subconscious thought, dream reality and effect of dream portal, newly changed inner self with same physical self experience new reality outside with new level of perception. Two sides of a sleep or both terminal of sleep one is before starting sleep and another is at end of sleep are connected with two new reality and consciousness model so sleep terminals are responsible for feeding new input taken sleep reality and dream portal and subconscious mind to new reality on another side. Sleep Reality: Sleep Reality includes Dream reality, dream portal and all inner and psychological process during sleeping course and effect of our subconscious mind and thought at time of sleep.

#
Arka Samanta

உந்தன் மென் காதலில் என் மனக்காடுகள் சற்று நிலை குலைந்தே தான் போகிறது..!

#
MURUGESAN KR

nesitha oruvar kooda pesa mudiyavillai enil inaithalangalum imsai thn..️.

#
shana

kadhalil kayapaduvathum oru kavithai thn...

#
shana

ஸ்பரிசம் தீண்டிய என் பரிசு "என் கணவா ! என் கணவா ! கனவைத் தீண்டும் திருடா ! என் கணவா ! என் கணவா ! இரவை வருடும் பகலாய் என் நெஞ்சிலே என் நெஞ்சிலே ஓர் ஓரமாய் உன் முத்தம் அது நித்தம் மழை பொழியுதே மாலை பொழுதிலே என் கைவளையலில் சிலிர்க்குதே ரோமம் காண்கிறேன் கனிகிறேன் கைவளையல் கழன்று ஓடும் வெகுதூரம் வெகுதூரம்....... !"

#
S Sankari

காதலி என்னை ஆதரி "உன்னாலே நான் வாழ்கிறேன் என் ஜீவன் உன்னோடு வருமா வரமா என்று கேட்கிறேன் காதலே என்னைக் காதலி !! காதலி என்னை ஆதரி !! உன் அணைப்பிலே என் ஆயுள் கூடுமடி உன் அழைப்பிலே எனக்கு சுகங்கள் வேணுமடி உன் காதோரமாய் காதோரமாய் என் சுவாசக் காற்றை அள்ளி வீசவே உன் மௌனம் கலைந்து போக போக.... காதலே என்னைக் காதலி !! காதலி என்னை ஆதரி !!"

#
S Sankari

பூமியின் காதல் தேரோட்டம் "பூமி தேர் நேரில் வந்தது பூமாலையில் மோகம் சொன்னது என் விழி பார்த்துக் காதல் சொல்லுது காதல் பார்வை காத்தாய் பறக்குது காதலிக்கவே நான் காத்திருக்கிறேன் உன் மடியில் அமர்ந்து நட்சத்திரப்பூ பறிக்கவே !!"

#
S Sankari

காதலின் அடையாளம் "மலரோடு தான் நான் விளையாடுவேன் மலராகவே மணமாகவே வானம் காட்டும் பாதைகள் மலரின் முகத்தில் தெரியும் காற்று செல்லும் இடமெல்லாம் மலரின் வாசம் வீசும் காத்திருந்த ரோஜா அது காதலுக்கு ராஜா பூக்க காத்திருந்த நேரம் மலரின் மென்மை தெரியும் தேன் வெள்ளத்தில் நீ நீந்தி வருவாய் என என் கைகளைக் கோர்க்கவே !!"

#
S Sankari

நதிகளும் சில நேரங்களில் உறைந்து விடும் கால நேரங்களைப் பொறுத்து நீ வராத நாட்களில் என் இதயமும் உறைந்து போகிறது...

#
Ilakkiya sri

கடற்கரையில் கடல் அலைகள் ஆர்ப்பரிக்கும் கரும்பாறையில் அமர்ந்த பொழுது அலைகள் பாறையில் மோதி சாரல் என் உடல் நனைத்திட சில்லென தென்றலும் தழுவ நளிரில் உடல் நடுங்கையில் எனை தன் கைகளிலே அணைத்து கதகதப்பினை தந்த அந்த மாயனின் காதலில் மழலையானேன்....

#
Ilakkiya sri

பழச்சாறு பல சுவைகளில் அறிமுகமாகின்றன அவை ஒவ்வொன்றும் வேறு வேறு சுவை நல்கும் அன்பே நீயோ நிதமும் என்னைப்பல சுவையில் ஆழ்த்தி என்னை சிறைப்படுத்துகிறாயே... சுவைத்து களிப்புறாமல் என் செய்வேன்...

#
Ilakkiya sri

சில்லென்ற காற்றில் இனிய மாலைப்பொழுதில் பனிச்சாரலில் நனைந்த மலர்கள் நளிர் தாங்கா தலை கவிழ அதனைக்கண்ட பட்டாம்பூச்சி அம்மலரின் மேல் அமர்ந்து தன் சிறகினை விரித்து மலரின் நளிரை நீக்கியது....

#
Ilakkiya sri

இருள் நிறைந்த வாழ்வில் என் விழிகளுக்கு ஒளி தந்து என்னை நேசித்து என் மனச்சிறையினை திறந்து விட்டு இருள் நீக்கியவன் நீ தானே உன்னை மறக்க இயலுமா...

#
Ilakkiya sri

தென்றலாய் மாறி இருந்தால் நொடியில் உன் காதோர காதணியில் நுழைந்து உன் கன்னம் கிள்ளி இருப்பேனே...

#
Ilakkiya sri

சிணுங்கலாய் சிமிட்டும் கண்களும் சிறியதாய் சிறு புன்னகையும் சிதறாமல் இதழோரம் கடத்துவதன் பெயர்தான் காதல் கொண்ட நாணமோ...

#
Panneer Selvi

எவ்வளவு விலை கொடுத்து வாங்குவேன் விலை மதிப்பில்லா மதிப்பில்லா உந்தன் புன்னகையை....

#
Panneer Selvi

தனியாக நடை கற்று வருடங்கள் பலவாகினும்... இன்றும் உன்னுடனான பயணங்களில் உன் கரம் பற்றி நடை பயிலும் சிறு குழந்தையாகிறேன்.

#
MURUGESAN KR

Ture Words ... எல்லா எதிர்ப்பார்புகளையும் இழந்தேன் எனை கடந்த வருடங்களில் என்னுள் மரணித்து ...போனவளுக்காய்.. என்றும்..

#
Karuppasamy

உறக்கத்தை தொலைத்த ஊதியம் இல்லா காவல்காரன் நான். உறக்கத்தை பறித்த வெண்ணிலவு நீ.. பகலில் உன்னை தேடி அளையும் போலீஸ்காரன் நான். என் இதயத்தை திருடிய கள்ளி நீ.. உன் பின்னால் ஓயாமல் சுற்றும் கடிகாரம் நான். என்னுடன் சேர மறுக்கும் சிறய முள் நீ.. வழி தெரியா உன் முகவரிக்கு வழிதடத்தை கூறு வருகிறேன் என் காதலோடு.

#
t

என் நினைவில் என்றும் நீங்காதவள் .. காட்டிடும் அன்பிற்கு எட்டாதவள் .. கண்டிடும் கருவிழிக்கு காட்சியானவள்.. இமைக்காத விழி கொண்டு படம் பிடித்தவள்.. மனதுக்குள் பூங்கொடியாய் இடம் பிடித்தவள்.. சிறகடிக்கும் சிந்தனையை சிதறடித்தவள்.. வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிப்பவள்.. கண் கொள்ளா அழகியாய் மனம் தைத்தவள்.. கடிவாள மனதோடு வலம் வந்தவள்.. இடைநின்ற ரோஜாவை தோற்கடித்தவள்.. பூந்தோட்டமே தலை குனிய இதழ் விரித்தவள்.. தூங்காத மனதிற்கு சுகமானவள்.. பனி படர்ந்த மலருக்கு நிகரானவள்.. ஆட்டி வைக்கும் நினைவுக்கு போட்டி வைத்தவள்.. நலமா என விழைத்திட மறவாதவள்.. பதிலில்லா தினமெதையும் விரும்பாதவள்.. விருந்திட முடியாமல் மருந்தானவள்.. ஒவ்வொரு கணமதையும் நினைவில் வைத்தவள்.. நினைவிற்கு சுவாசம் தர கனவில் வந்தவள்.. நித்திரைக்கு தலை சாய்க்க இடம் தந்தவள்..

#
கவிதையின் காதலன்

இழக்கும் வரை தெரியவே இல்லை? அவள் பொக்கிஷமென்று.

#
MURUGESAN KR

நீரின்றி அமையாது உலகு - அதெல்லாம் எனக்கு தெரியாது.. எனக்கு தெரிஞ்சதெல்லாம்... நீயின்றி அமையாது என் உலகு..

#
MURUGESAN KR

புலன் அனைத்தும் புழுதியானது பெண்ணே.. உன்னை நினைக்கும் பொழுதெல்லாம்.....

#
MURUGESAN KR

தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும் சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும் தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு நனைந்த பிறகு நாணம் எதற்கு.

#
MURUGESAN KR

உன்னை நான் சந்தித்தேன் என் நினைவில் நீங்கதா கவிதையா மற்றம் தந்த

#
Lakshmi m

ஒர் நொடியில் தொலைந்துவிட வேண்டும் உன்னுள்..... நீயின்றி வேறில்லை உலகம் எனக்குள்...

#
MURUGESAN KR

காதலிக்கும் போது உன் மனசாட்சியிடம் பல கேள்விகளை கேட்டுக்கொள்...... கடந்து வந்த காதலின் ஆழத்தை அந்தக் கேள்விகளி ன் விடைகளினாலே அளக்க முடியும் ️ ..........

#
கிறுக்கியின்கிறுக்கல

அவள் அவனை ரசிப்பதை, அவன் ரசிப்பது அழகு! அவள் கோபத்தின் போது அவன் குழைவது அழகு..! அவள் சிரிக்கும் போது அவன் ரசனை அழகு.! அவள் அழுவும் போது அவன் அணைப்பு அழகு..! அவள் பயத்தின் போது அவன் பக்குவம் அழகு..! அவள் தவறிழைக்கும் போது அவன் ரௌத்திரம் அழகு..! அவள் அமைதியின் போது அவன் புரிதல் அழகு..! அவளுக்கு அவனே அழகு. அவனுக்கு அவளே அழகு..! அவர்களின் அழகு பார்வையில் அணைத்துமே பேரழகு..... !️ _கிறுக்கியின் கிறுக்கல்_ .... . வினோ...

#
கிறுக்கியின்கிறுக்கல

மௌனமாய் இருப்பதால் மறந்து விட்டேன் என எண்ணாதே மரணமே வந்தாலும் மறக்க இயலாது நம் காதலை....

#
MURUGESAN KR

தினமும் காலையில் தேநீரை சுவைக்கும் முன் உன் இதழ்களை சுவைத்தால் தான் என் காலைப்பொழுது சுவைக்கிறது அன்பே...

#
Ilakkiya sri

கடல் அலைகளின் நுரைகளின் வண்ணம் மிஞ்சியது உன் பாதங்களின் வெண்மையடி...

#
Ilakkiya sri

தொலைத்த பின் மீண்டும் கிடைப்பதில்லை பொக்கிஷம்!

#
MURUGESAN KR

முத்தங்களோடு மட்டும் முடிந்து விடுவதில்லை இக் காதல்.. உன் முழு நேர பார்வைக்காக எப்போதும் காத்திருப்பது தான் என் காதல்..

#
MURUGESAN KR

தொலைத்த பின் மீண்டும் கிடைப்பதில்லை பொக்கிஷம்!

#
MURUGESAN KR

காற்றை நேசிக்கிறேன் ... நீ மூச்சாய் வருவாய் ... என்பதற்காக ....!!

#
MURUGESAN KR

நாட்டுப்புற பாட்டு என் உசுருக்குள் உசரமாய் நீ "என் உசுரே நீ மாமா ! உன்ன விட்டா எனக்கு யாரு மாமா ! ரோசாவ பறிக்குமுன்னே கருக விட்டதென்ன ! மல்லியப்பூ சூடிகிட்ட வாசமுந்தாந் தெரியலயே ! என் மாராப்பூ சேலைக்குள்ள உன் வாசமுந்தா சிக்கிக்கிச்சு ஆடு கோழி வளத்து வந்த மந்தைக்குள்ள பூட்டி வச்சிருக்க அட அத்தனையும் ஆக்கி வச்ச பக்குவமா சமைச்ச் வச்ச சாப்பிடத்தான் நீ வேணும் கல்யாண பந்தி போட வேணும் கறிசோறு எனக்கு எறங்கவில்ல கரும்பு சாறு இனிக்கவில்ல வாய்க்கு ருசி தெரியலயே வாய்க்கரிசி போட வருவியா மாமா ! வேட்டிய மடிச்சுக்கட்டி மல்லுக்கட்டி நின்னதென்ன இராப்பகலா காத்திருந்த பகல் கனவா போனதென்ன !"

#
S Sankari

உறங்கும் பொழுதும் உறங்கா நிஜம்தான் காதல் நினைவுகள்

#
MURUGESAN KR

காய்த்த மரம் கல்லடி படுமாம் நானோ கண்ணடி பட்டு காதல் கொண்டேனடி! ️

#
MURUGESAN KR

காதலித்து கொண்டேதான் இருப்பேன்.. காதல் தீரும் வரை அல்ல என் ஆயுள் முடியும் வரை..

#
MURUGESAN KR

தாமதமாகவே கிடைக்கிற நீதியைப்போல தாமதமான முத்தமும் அநீதிதான்

#
MURUGESAN KR

சில நிமிட மௌனங்களில் உயிர் பறித்து... ஒரு நொடி புன்னகையில் புதுப்பிக்கிறாய் உயிரை..... காதலாய்...... குட் காலை

#
MURUGESAN KR

நாளும் பொழுதும் வளர்ந்து தேயும் மதியே.. தனிமையின் நானிங்கு உலவ துணை தந்து என்னுடன் உலா வா

#
MURUGESAN KR

காதலியுங்கள் எவ்வளவு சண்டை போட்டாலும் விட்டு செல்ல விரும்பாத திமிர் பிடித்த இதயத்தை....!!!

#
MURUGESAN KR

என் பலமும் பலகீனமும் நீ மட்டுமே அறிவாய்.. அதுவும் நீ தான் என்பதையும் அறிவாய்...

#
MURUGESAN KR

காதலிக்கப் படாதவனின் இரகசிய டைரி முழுதும் நிரம்பி வழிகிறது காதல் கவிதைகள்!

#
MURUGESAN KR

மௌனமாயிருந்தே மனதை கொள்ளையடித்தாய்....

#
MURUGESAN KR

நீ இல்லாமல் கவிதையும் இசையும் சுவையே தராது...!

#
MURUGESAN KR

ஏற்ற இறக்கங்களில் தொலைந்து... இடையினில் தவழ்ந்து....... நெஞ்சத்தின் மேடு கண்டு மூச்சடைத்து போகையில்...... இதழினால் சுவாசம் தரும் வள்ளல் அவள் .... மதிய வணக்கம்

#
MURUGESAN KR

️எனை தூக்கமின்றி தவிக்க விட்டு நித்திரை காணும் அவள் தூக்கத்தை கலைக்க வழியின்றி நான் தவிக்கிறேன்.

#
MURUGESAN KR

நீ யின்றி இழப்பது ஏதுமில்லை இங்கு...; எல்லாமே தான்...

#
MURUGESAN KR

அவளை பிடித்து தமிழை படித்தேன்.. அவளுக்காக கவியெழுத... தமிழுக்கும் என்னை பிடிக்க கவிஞனாகிவிடுவேன் போல்..

#
MURUGESAN KR

நீரின்றி மீனுமா நீயின்றி இங்கே நானுமா... உயிரின்றி உடலா உனை நீங்கியொரு வாழ்வும் உலகிலா... உன் தோள் சாயும் ஓர் வரம் போதும் என் வாழ்வின் ஜென்மம் சாபல்யம் நீங்கியே போகும் கண்ணே...

#
MURUGESAN KR

விக்ஷம் தோய்த்த வார்த்தைகள் தான்.. எனினும் உன்னிதழ் தீண்டி வருவதால் வருத்தம் தீண்டுவதில்லை என் மனதை....

#
MURUGESAN KR

வசந்த காலம் எல்லாம் நீ வந்த காலம் மட்டுமே. என்னவளே...

#
MURUGESAN KR

தண்டனை இல்லாத சிறை உன் உள்ளம்.. அதில் விடுதலை விரும்பாத கைதி நான்!

#
MURUGESAN KR

உன் இடைவிடாத இந்த நெருக்கம் என் ஆயுள் முழுவதும் வேண்டும் அன்பெனும் கைதியாக...

#
MURUGESAN KR

மிகப்பெரிய ஆசை, உன்னோடு நீண்ட தூரம் ஒரு பயணம்.. மிகச்சிறிய ஆசை, உன் மடியில் ஒரு குட்டி தூக்கம்..

#
MURUGESAN KR

ஆரவாரமின்றி அமைதியாகவே கடந்துச்செல்கிறாய் என் விழிகள் தான் ஏனோ உன் வழியை தொடர்கிறது...

#
MURUGESAN KR

அலங்கரித்த போதும் ஒளியிழந்து போனேன் உன் பார்வை படாததால்…!

#
MURUGESAN KR

அழகு என்ற சொல் மருவி.. காலப்போக்கில் அவள் என்றானதே..!

#
MURUGESAN KR

தூக்கத்தில் வரும் கனவை விட.. என்னை தூங்க விடாமல் வரும் உன் நினைவுகளே அதிகம் .

#
MURUGESAN KR

கண்களைப் போல் இதயமும் வெளியே தெரிந்திருந்தால், பல ஏமாற்றங்கள் குறைந்திருக்கும்…!

#
MURUGESAN KR

இன்பமும் துன்பமும் ஆற்று வெள்ளம் போன்றது நிலையாக நிற்காது ஓடி விடும். என்னை தவிர்ப்பதும் நான் உனக்காக தவிப்பதுமே நம் காதலாகிவிட்டது ️.

#
MURUGESAN KR

ரசனையாக அவளை படைத்தான் பிரம்மன் அவளை ரசிக்கவே என்னை படைத்தான்...

#
MURUGESAN KR

வாழ்க்கையில் சில உறவுகள் நம்மை விட்டு சென்றாலும். நமக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் ஓர் உறவு, தனிமையே!

#
MURUGESAN KR

வேல் விழியோ கயல் விழியோ..... விழிகளை ஆயுதமாக்கி என்னை அடிமையாக்கிவிட்டாள் கண்ணசைவில்..!

#
MURUGESAN KR

எந்தன் வீட்டில் போதிமரம் இல்லை இருந்தும் புத்தனாகி போனேன் உன்னை காதலித்ததால்!

#
MURUGESAN KR

நீ சிந்தும் சின்ன பார்வையே போதுமடி இந்த ஆயுளை கடத்தி விடுவேன்!

#
MURUGESAN KR

ஒரு மடி வேண்டும் ஒரு விரல் வேண்டும் ஒரு தலைகோதல் வேண்டும் ஒரு நிம்மதி வேண்டும் ஒரு நீண்ட தூக்கம் வேண்டும் ஒரு பெருமூச்சு வேண்டும் ஒரு அணைத்தல் வேண்டும் ஒரு நெருக்கம் வேண்டும் 'நான் இருக்கிறேன்' என்ற வார்த்தை வேண்டும் வேறென்ன பெரிதாக கேட்டுவிடபோகிறேன் உன்னிடம் ....!!!

#
MURUGESAN KR

உன்னோடு சேர்ந்து வாழவில்லை என்பதற்காய் என் காதல் தோற்றுப் போய் விடவில்லை.... சேர்வது மட்டுமே காதலென்றால் காதல் எப்போதே சுவடின்றி அழிந்து போயிருக்கும்......

#
MURUGESAN KR

கவலைகளை பரிசாய் தந்து விட்டு சென்றாலும் உன்னை மட்டும் நான் வெறுத்ததாய் வரலாறே இல்லை!

#
MURUGESAN KR

"இடை"விடாது தொடர்ந்தேன் இடைவெளி இல்லாமல் தொடர்வேன் யார் இடைமறித்தாலும் தடை தாண்டி தொடர்ந்து ...

#
MURUGESAN KR

அன்பு என்பது எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி ஒருவரை ஒருவர் புரிதலுடன் எந்நிலையும் விட்டுக்கொடுக்காமல் மலரினுள் இருக்கும் மகரந்தம் போல இணைந்தே இருக்க வேண்டும்.

#
Ilakkiya sri

ஒரு அன்பான வார்த்தை ஆயிரம் மாத்திரைக்கு சமமாகும்...

#
MURUGESAN KR

இதயம் இரத்தத்தை சுத்திகரிக்க மறந்து அவனை சுற்றிக் கொண்டிருக்கிறது .

#
MURUGESAN KR

கடற்கரையில் ஓர் நாள்: உன்னுடல் தழுவும் அலையின் பேரானந்தம் என்ன என்பதை ஆராய, கடலோரத்தில் நாம் கட்டியணைத்திட, காதல் செய்திட, அலையும் பேரலையாகிடுமோ!

#
MURUGESAN KR

நான் கொண்ட கலவியின் அனுபவச்சான்றிதல், உன் நகக்கீரல்கள்!!! இதழ் சிந்தும் முத்தத்தால் வெகுமதி தந்தாய், உன் உதட்டுச்சாயம்!!!

#
MURUGESAN KR

கண்களைப் போல் இதயமும் வெளியே தெரிந்திருந்தால், பல ஏமாற்றங்கள் குறைந்திருக்கும்…!

#
MURUGESAN KR

பொக்கிஷமாய் இல்லாவிட்டாலும் யாருக்கும் பொழுது போக்காய் மாறிவிடாதீர்கள்....

#
MURUGESAN KR

சொக்கி போனதால் சொங்கி தான் போனேன் நிலை குலைந்தால் நிம்மதி போகுமென்று புரிந்து கொண்டேன் இராட்சசியின் நிழலில்!

#
MURUGESAN KR

பாவமாக இருந்தாலும் பரவாயில்லை உன் மீது மட்டும் ஆசை பட்டு கொள்கிறேன்.....

#
MURUGESAN KR

அவளை கடந்து செல்லும் போது... விபத்து பகுதியை விட மிகவும் அதிகமான ஆபத்தானது..

#
MURUGESAN KR

இறைவனிடம் நான் ஏதும் வேண்டுவதில்லை கேட்பதுமில்லை, இறைவனுக்கே தெரியும் எனக்கு என்ன தேவையென்ன்று... Good morning

#
MURUGESAN KR

சொல் நீ... செயல் நான்...

#
MURUGESAN KR

தொலைபேசி அலாரத்தை விட அதிகமாக அடிக்கிறது என் இதயம்... நீ தான் அழைப்பில் என்று தெரிந்தபின்...

#
MURUGESAN KR

உன் இம்சைகளும் ரசணையே... நீ யில்லா நேரங்களில்...

#
MURUGESAN KR

என் கிறுக்கலை கவிதை என்பவன் நீ... கவிதைக்குள் இருப்பவனும் நீ...

#
MURUGESAN KR

உன்னை பிரியும் எண்ணம் துளியும் இல்லை உன்னோடு சேர்ந்து வாழவும் வழி தெரியவில்லை..

#
MURUGESAN KR

கைப்பேசி காதல் "கைவீசி நீ நடக்க என் கைப்பேசி என் கரம் பிடிக்க உன் காதல் என் காதில் சொல்ல கண் பார்த்து வராத காதல் கைப்பேசியில் வந்த நல்ல காதல் வாய்ப்பேசி இனி போக வேண்டாம்"

#
S Sankari

அனைவருக்கும் சொல்லாத காதலும் உண்டு சொல்லி சேராத காதலும் உண்டு ஓவருவரும் காதலின் சுகத்தையும் வேதனையும் அனுபவத்திலும் நினைவிலும் ஒரு ஓரமாக வைத்து கொண்டு வாழ்க்கையை கடத்தி கொண்டு இருக்கின்றன....

#
Jenisha

இனியொரு பிறவி இருந்தால் மீண்டும் உன்னுடன் கைகோர்த்து பயணிக்க ஆசை உன்னுடன் இரசித்து சீண்டலுடன் கதைத்திட ஆசை நேரங்கள் கழிவது தெரியாமல் உன் அழகை அள்ளிட ஆசை உன் மீசையின் வருடலில் கரைந்திட ஆசை கொட்டிக்கிடக்கும் செல்வம் நீ தானே இப்பிறவி போதாதே.

#
Ilakkiya sri

காதல் கொடை ஹைக்கூ கவிதை "காதலி எனக்குக் கொடையளி ! நான் உன்னைக் கேட்கிறேன் !"

#
S Sankari

காதலி ! நீயே என் காதலி ! "காதலி ! எனைக் காதலி ! காதலால் காதலைக் காதலன் கேட்கிறேன ! காதலாய் காதலால் காதலைக் காதலிக்கும் காதலும் காத்திருக்கிறது ! காதலி ! எனைக் காதலி ! நீயே என் காதலி !"

#
S Sankari

மனதை கவர்ந்தது பொன்னிற ஆடையில் ஆடவளின் அழகின்று.. ஒளிந்திருந்த அழகெல்லாம் மெருகேற்றி கொண்டு.. மேடை ஏறும் மணமகளாய் மாறியதேன் இன்று.. பூவிற்கு துணையாக கொடியொன்றை கண்டு.. உடன் பிறந்தவரோ இவறென்று குழம்புவார்கள் நன்று.. நாணம் மட்டுமே காணாமல் எங்கே போனதென்று.. வஞ்சியவளை பார்ப்பவரின் இமை மூடட்டும் நன்று.. ஆடாத விழி கொண்டு மூடாதே இமையன்று.. உன்னெழிலை விழி காண மனம் நாடுதே இன்று..

#
கவிதையின் காதலன்

கண்டவுடன் என்னைக் கட்டிபோட்ட நின் கண் அசைவுக்கு கைதியாகினேன் நானும்

#
கவிதை காதலன்

மின்னலைக் கண்டும் மிரளாத கண்கள் உன் கண்களைக் கண்டதும் மிரண்டதடி

#
கவிதை காதலன்

...காதல்... நான் இறந்த பின் என் கல்லறைக்கு வந்து விடாதே மூச்சி வாங்கும்...

#
Yuvi kavi

எனக்காக நீயும்...உனக்காக... நானும் இருக்கையில்...வேறு என்ற வேண்டும் நம் வாழ்க்கையை அழகாக்க...

#
K.Sujith...????❤️

பழச்சாறு இல்லாமல் மயக்கம் அடைகிறேன் உந்தன் ஒற்றை பார்வையால்...

#
K.Sujith...????❤️

அண்டத்தை போல் விரிந்து பரந்து இருக்கிறது இந்த உயிர்களிடத்தில் தான் உனக்கு தான் எத்தனை பாசம்

#
Smkumaran kavithai

ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்கு முதல்*எதிரி.. இன்னொரு ''பெண் தான்..

#
Karuppasamy

பிரபஞ்சத்தில் விதவிதமாக காதல் இருக்கலாம் நம்முடைய தெய்வீக காதல் வழிபடும் வழக்கம்

#
Smkumaran kavithai

கண்களைப் பார்த்தேன் நட்சத்திரம் தெரிந்தது.. சிங்கார சிரிப்பில் சிகரம் தெரிந்தது.. சிரிப்பின் அழகில் வெட்கம் தெரிந்தது.. கன்னத்துக் குழிவுடன் இதழ்கள் தெரிந்தது.. கண்ணில் கண்டதும் அதிசயம் தெரிந்தது.. காண கண்களும் பத்தாதது புரிந்தது..

#
கவிதையின் காதலன்

பொன் கதிரவன் தன் கரம் நீட்டி பொன் வண்ணத்தை அள்ளி நனைத்தானோ பொன்வண்டே தகதகவென ஜொலிக்கின்றாயே பொன் வண்டே மின்னும் உன் அழகில் மயங்கி கிடக்கின்றன எத்தனை மலர்கள் உன் வரவினை நல்கி தன் இதழ்களை விரித்து காத்துக்கிடக்கின்றன பொன் வண்டே இரவின் மடியில் நிலவின் ஒளியில் மின்னும் பொன் நிறத்தொடு படபடவென என் அருகே நீ வர நானோ என் அழகில் கர்வம் கொண்டு மயக்குற்று நின்றேனடா..

#
Ilakkiya sri

ஆறுகள் எங்கு சேரும் இடம் கடல் தானே என்னவள் எங்கோ இருந்து பிறப்பெடுத்து மலர்ந்தது இங்கு தானே.

#
Ilakkiya sri

உள்ளங்கையில் ஊடுருவும் ரேகை எல்லாம்... உன்னோடு நான் வாழ்வதற்கான பயணங்கள்...!!

#
Karuppasamy

பூக்கள் பூப்பதற்கு தவம் இருக்கும் வண்டுகள் போல என் மனமே என்னவள் அழைப்புகாக எங்கி நிற்கிறது மனம் ....

#
Pandees Waran

கல்லூரி நாட்களில் எத்தனை முறை என்னைக்காண வந்து வந்து என்னை மகிழ்வித்தாய் அந்நேரங்களில் உன் அன்புச்சிறையில் நான் மலராகி நின்றேன் வாசத்துடன் உன்னுள் கரைந்து.

#
Ilakkiya sri

நான் உன் கூட இருந்தாலும் இல்லன்னாலும், நீ சந்தோசமா இருந்தா எனக்கு அதுவே போதும்...

#
Ⓗⓐⓡⓘⓢⓗ

பூக்கள் எல்லா காலங்களிலும் மலர்வதில்லை ஒவ்வொரு பூக்களும் ஒவ்வொரு காலங்களில் மலர்கின்றது அக்காலம் அறிந்து வண்டுகளும் வாசம் செய்கின்றது என்னவள் இன்று தான் மலர்ந்தாள் இத்தனைக்கால காத்திருப்புக்குப்பின்

#
Ilakkiya sri

தேடிச் செல்லும் வழியில் தொலைந்து போன உன் பாதச்சுவடுகளை தேடி தொலைகிறேன் மீண்டும் உன்னைக்காண இயலாமல் மறக்க முடியா மனதுடன்.

#
Ilakkiya sri

மழையின் வாசத்துடன் தேநீரின் கதகதப்பில் உன்னுடன் கதைத்து கரைந்த பொன்னான மணித்துளிகளை மறக்க இயலாமல் மீண்டும் களிப்புறுகிறேன்...

#
Ilakkiya sri

தேடாமல் இருக்கிறேன் உன்னிடம் தொலைந்து விடாமல் இருக்க...

#
Ilakkiya sri

கலைக்க முடியாத நம்பிக்கை காதல் வேறுபாடுகள் இருந்து தூரபயணம் சென்றால் இனிப்பு கசப்பு வரும் சுவைத்தாக வேண்டும் இது காலத்தின் கட்டாயம் அப்போதும் நிமிர்ந்து நிற்கும் பொல்லாத காதல்...

#
வீரசேனா

அகத்தினிலே உருவாகி முகத்தினிலே மலர்ந்துவிடும். ஆசைகள் காற்றெனவே திசையெங்கும் விரைந்தோடும். இனிமையும் இளமையும் கனிந்துவந்து மனங்கவ்வும். ஈர்ப்புவிசை இயற்கையே பார்த்தவுடனேப் பற்றிவிடும். உயிரெனவே உறவாகும் பயிரெனவே வளர்ந்துவிடும். ஊடலுடன் கூடுவதே பாடமாகும் காதலிலே! எண்ணங்களில் சிறகடித்தே வண்ணங்களில் உளங்குளிரும். ஏகாந்த வேளைகளில் ஆகாயப் பந்தலிலே. ஐயமின்றி சொல்லிடலாம் வயதின்விதி நிகழ்த்துவதாம். ஒருத்தலில்லா வகுப்பறையில் வருத்தமில்லா கற்றலிது. ஓவியமும் காவியமும் கவிதைகளும் பிறப்பெடுக்கும். ஔடதமாம் காதலுமே உடனிருந்தே உயிர்தந்தால்! - ஓவியக் கவிஞன்

#
ஓவியக்கவிஞன்

இரவிற்கு உன் முகம் நிலவாகும்.. பார்வைக்கு உன் விழி விண்மீனாகும்.. அசைந்தாடும் உன் இமையோ இசைக்காடும் மயிலாகும்.. இதழ் விரிந்த உன் சிரிப்பே எனை மயக்க அம்பாகும்.. குயில் கொஞ்சம் உன் குரலில் செந்தமிழும் தித்திப்பாகும்.. பூப்போல உன்னைக் கண்டதுமே கண்கள் தேன் உறிஞ்சும் வண்டாகும்..

#
கவிதையின் காதலன்

அனல் மிகுதியில் நெற்பயிரும் வாடி வண்ணம் இழக்கிறது நீ நடக்கையில் குளிரின் மிகுதியில் நெற்பயிரும் வண்ணம் பெற்று பசுமையானதே நான் என்னாவேனடி...

#
Ilakkiya sri

இன்னும் எத்தனை நாட்கள் காதல் எனும் தேனில் நனைத்து எனை மூழ்கடிப்பாய் என்று என்னை ஏந்திக்கொள்வாய் அன்பா...

#
Ilakkiya sri

எல்லாவற்றிலும் ஆண் பெண் பாசம் வரை உழைப்பு தேவைப்படுகிறது

#
Smkumaran kavithai

உனக்கான கவிதை மடல் 6 எனது சூர்யோதயம்... நதியிலிடப்பட்ட விளக்காக  நதியோடு சேர்ந்து  நீ பயணிக்கையில், விளக்கொளியில், நதியில் விழுந்த பிம்பத்தில், பிரதிபலிக்கும் வானத்தைப் போல, எனது மனம் பிரதிபலிப்பது உனது எண்ணங்கள் பயணப்படும்,  உன் மன வானைத் தானே! உயிர்களை வாழ்விப்பது  கடலைத் தாண்டி ஒளியினைத் தரும் சூரியனின் பங்கு, அது எனது மனதின்  உயிர்ப்பிற்குக் காரணமாகிய உன் மன வானில்  உதயமாகும் மேன்மை பொருந்திய  உனது எண்ணங்களும் தானே! பனி சிகரங்களில்  நதி ஊற்றுகள்  பிறப்பதைப் போல! உனது எண்ணங்களில் தான் எனது சூர்யோதயம்! மறந்தாயா என் உயிரே! உன் எண்ணங்களின்  ஒளியில் தானே எனது ஆழ்மனம்  உயிர்ப்புடன் இருக்கிறது! உன் உயிர் துடிப்பை  நான் உணர நீ விண்மீன் ஆகினாய், என் உயிர்த் துடிப்பினையும்  நீ உணர,  நானும் உனதருகே விண்மீனாகினேன், எல்லாம் எதற்காக அன்பே உனக்காக! நீ உயிர் துடிப்பது  என் மன அமைதியில் என்றால், என் ஆழ் மனதின் அமைதி, உன் உயிர்த் துடிப்பின் ஓசையில் அல்லவா! அதையும் நீ மறக்கலாகுமா!

#
மகுட தாரிணி

உனக்கான கவிதை மடல் 5 என் மன வானில் ஆழ்கடல்... நதியில் விடப்பட்ட விளக்காய்  நான் இருக்க! காற்றோடும், நதி நீரோடும்  போராடி சிறு தீபத்தின் ஒளியில், அது பிரதிபலிக்கப்படும் நதியில் தெரியும்  சிறு ஒளியில், உன் ஆழ்மனமதனை அறிய முற்பட்டு,  கடலை அடையும் நதியோடு சேர்ந்து, நானும் நினைவுகளோடு  பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்! தெளிந்த நீரோடையின் இரைச்சல் என நினைத்தேன் உன் மனதை! பல்லுயிர்களின் வாழ்வாதாரமான, ஆழ்கடலின் அமைதியென  விளங்கிக் கொண்டேன்! உன் மனதின் உயிர்ப்பில், நான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்! என் மன வானில், சிறகடிக்கும் பறவை இனங்கள் சொல்லும்! என் மனதின் ஆழம் தனை! பால்வழி பேரடையினுள் உள்ள கருந்துளையில் வீழப் பயணப்பட்டுக் கொண்டிருந்த என் நினைவலைகளை சுழலவைத்த  என் வாழ்விற்கு அர்த்தம் தந்தது, உன் ஆழ்மன அமைதியின் ஈர்ப்பு தான்! கடந்து போகும் மேகங்கள் சொல்லும்! தினந்தோறும் உதித் தெழும் சூரியன் சொல்லும்! இரவினில் சூரிய ஒளியினை பிரதிபலிக்கும் நிலவும் சொல்லும்! என் உயிர் துடிப்பைக் நட்சத்திரங்களாய் ஜொலிக்கும் விண்மீன்கள் காட்டும்! என் உயிர் துடிப்பின் ஒளி உன் ஆழ் மனதின் அமைதி என்று! எஞ்சிய அன்பின் அடையாளமாக, என் மன வானில், உன் அமைதியான ஆழ்கடலின்  காலடித் தடங்கள்! உன் விழி நீர்த்துளிகள், என் மனதில் ஆங்காங்கே விழும்  ஒற்றை மழைத் துளிகள்! ஆர்ப்பரிக்கும் உன் அன்பின்  காலச் சுவடுகள்!

#
மகுட தாரிணி

மலர்ச்சோலையில் அவளைக்கண்டேன் மெல்ல அவளின் கைகோர்த்து நடந்தேன் சற்றே மனம் மயங்க கைகளில் அழுத்தத்தை உணர்ந்தேன் மேலாடை நழுவ முகடுகளை கண்டேன் மனம் நழுவியது மயில் விழியை கண்டேன் அவள் விழிகளில் இந்த ஓவியம் எனக்கு சொந்தமாக ஆசை கொண்டேன் அவளும் எல்லைகளைக்கடக்க ஆரம்பித்தாள் என் அன்பில் அகப்பட்டு..

#
Ilakkiya sri

தாகமாய் நான் ! தாரமாய் நீ ! உன் விழிகளைக் காணவே தினமும் கண் விழிக்கிறேன். உன் முகத்தைப் பார்க்கவே என் முகத்தை மறக்கிறேன். உன் இதயத்தில் குடி புகவே என் இதயத்தைத் தொலைத்துவிட்டேன்.

#
S Sankari

மறக்காமல் இருக்க மனமில்லை இனிய ஓவியமாய் மறக்க முடியா நின்ற தருணங்கள் அழிக்க இயலா காவியமாய் நின்றது மறக்க முடியா நினைவுகள் ஸ்ருதி மாறாமல் மீட்டிய வீணை மறக்க முடியா இதயகீதம் இசைத்தது பார்வையில் நனைத்த இதழ்கள் ஈரம் மாறாமல் மறவா சுவையினை இன்னும் மீட்டிக்கொண்டு இருக்கிறது சந்தங்களுடன் மறக்காமல் இருக்க மனம் இல்லாத மலரா.

#
Ilakkiya sri

உனக்கான கவிதை மடல் 3 நரகத்திலிட்டதும் ஏனோ... உனக்கு தனிமை என்னும் கொடுமையை நான் விதித்தேன்! நீ எனக்கு என்றும்  மறவாத இனிய நினைவுகளை அன்புப் பரிசலித்து சென்றாய்! உன்னை மௌனம் என்னும்  வாள் கொண்டு சோதித்தேன்! நீ உண்மை என்னும்  கேடையம் கொண்டு எளிதாக என்னை வீழ்த்தி வென்றாய்! உன்னை கடமைகள் என்னும் கூண்டினில் சிறை வைத்தேன்! நீ பொறுமை என்னும் வேதம் உணர்த்தி என் சுதந்திரமே உனதாக போற்றிக் காத்தாய்! உன்னை கேள்வி கணைகளால் துளைத்து காயப் படுத்தினேன்! நீ கணைகளைப் பொருட்படுத்தாது என்னை திடப்படுத்தப் எப்போதும் என்னுடனிருந்து என் காயமாற்றினாய்! இவை யாவையும் எனக்காக செய்து என்னை வென்றெடுத்த என் அன்பு தேவதை  என்னைப் பிரியத் துணிந்து  என்னை நரகத்திலிட்டதும் ஏனோ!

#
மகுட தாரிணி

கண்ணில் நின்ற சிறகானது அது உன்னாலே உண்டானது காதலால் வந்த வரமாயிது என் நெஞ்சிலே இதயப்பூ பூக்குது ஒரு கோடி மலர்களை நான் கேட்டேன் தேனீக்களின் வசந்தத்தை உணர்ந்தேன் காதலால் இங்கு சுயம்வரம் நடந்தது அன்பே ! சொர்க்கத்தை அடைய காதல் கொள் அன்பே !  மலர்களே இங்கு தேனீக்களின் முகம் பார்த்து மாலை தொடுக்குது அதன் இதயத்தில் பூமாலை போட்டது அன்பே ! என் இதயம் நின்று போனது வரமாகவே ஓய்ந்து போகுது  என் காதலில் கடைக்கண் பார்வை வேண்டாம் அன்பே !  களவு போன என் இதயத்துக்கு உன் இதயத்தைத் திருப்பிக் கொடு அன்பே !  இதுவன்றி வேறெதுவும் தேவையில்லை என்று சொல்கிறேன் காதலால் காதலைக் காதலிக்கிறேன் காதலி !

#
S Sankari

உன்னுள் மாய நதி நீர் ஓடக் கண்டேன் ஓடம்  கண்டேன் ! உன்னுள் விண்ணைச் சுற்றி பார்க்கக் கண்டேன் பாரும் கண்டேன் ! உன்னுள் உலகைச் சுற்றும் சூறாவளியைக் கண்டேன் சுற்றமும் கண்டேன் ! உன்னுள் காலம் வெல்லும் கல்லணையைக் கண்டேன் ! கலங்கரை விளக்கத்தைக் கண்டேன் !

#
S Sankari

மலரே மலருக்குள் பொழுது விடியும் மலர்வாய் மலர்முகம் மலர்ந்து சொல்வாய் மயக்கம் எல்லாம் காலை வரைக்கும் தயக்கம் எல்லாம் இரவு வரைக்கும் மன்னன் கூட மாலை போட மனைவி கூட காதல் சேர மலருக்குப் பாடம் மல்லிகைக் கூடம் ! மனையாள் பாடம் மளிகைக் கூடம் !

#
S Sankari

உனக்கான கவிதை மடல் 2 மாயம் அறியேனடி... மலரின் இதழ்களை  சில்லென்ற காற்று  வருடிக் கொடுக்கும், நீ சற்றே  கலைந்த முடியை  சரி செய்யும் பாங்கினிலே! மெல்லிய கால்களை யுடைய  அன்னமும் வாடைக் காற்றை எதிர்கொள்ளும், இன்னல்கள் பல வரினும், நடுக்கத்திற்கும் அஞ்சாத,  கொள்கைகளுக்கு உட்பட்ட  அசைக்க முடியாத உன் நம்பிக்கையின் வடிவினிலே! தண்ணீரையும், பாலையும் பிரித்தறியும் அன்னப்பறவையும், இன்ப துன்பம் கலந்த வாழ்வில்  என்றும் நேர்மையைப் பின்பற்றும் உன் திடமான  மனதமதனின் சாயலினிலே! யாவும் உன்னை  பின்பற்றும் மாயம்  அறியேனடி இந்த அடியேன்! உரைப்பாயோ உலகமறிய  ஒரு முறையேனும்,  மூடப்பட்ட கதவுகளைக் கடந்து என் இருதயத்தின்  அறையினிலே எதிரொலித்திடவே!   

#
மகுட தாரிணி

நெகிழும் நிலையில் உன் மனம் இல்லை உன் மனதில் காயம் அதிகமோ வாழ்வில் புயல் வீசிய தருணங்கள் மறக்கமுடியாத வலியினை தந்ததோ மடிந்து போன மனதை வருடி உன்னை உருக்கி விட்ட இக்கள்ளியிடம் மனதை பறிகொடுத்தாயா உருகி மருகி காதல் புரிகின்றாயோ.

#
Ilakkiya sri

உனக்கான கவிதை மடல் 1... என்றும் உன்னையே சேரும் கவி... எழுத்துக்கள் ஏராளம்! சொற்களோ தாராளம்! நம் மொழியில், நான் கவி வடிக்க, அத்தனையும் போதவில்லையே! உன்னுடைய அன்பு, அது கிடைத்ததும், எழுத்துக்கள் நடனமாட, சொற்கள் முண்டி அடித்துக் கொண்டு, வருவதை காண்கின்றேன்! இதோ என் கவி உனக்காக, இது உனக்கான கவி! என்றும் உன்னையே சேரும் கவி!

#
மகுட தாரிணி

மனித மனம் காதலை விட காதலிக்க படுதலையே விரும்புகின்றன காதலைபெற ஏன் காதலிக்க பட வேண்டும் காதல் செய்யலாமே......

#
Shalini B

என் கவிதைக்கு விதை தந்த கவிதை நீ!! உன்னை விட அழகான கவிதை எழுத தோற்று போய் உனக்காக கவிதை எழுதி கொண்டிருக்கிறேன்!!!! நீ பூப்பறிக்க செல்லும் போதெல்லாம் பூக்களுக்குள் சண்டை உன்னை யார் அலங்கரிப்பதென்று!!!!! பிரம்மனும் தோற்கிறான் உன்னைவிட அழகான ஒன்றை படைக்க முயன்று....!!அழகுள்ளவையெல்லாம் அழகற்றுத்தான் போகிறது உன் முன்னால்.....

#
Bharathi Bharathi

உன்னை நினைக்கையில் மனம் சலசலவென ஓடும் நதி போல் இதயம் சற்றே துள்ளலுடன் சுவாசித்தது மகிழ்வுடன் உன்னை நினைக்கையில் இதயம் சலசலவென ஓடும் நதி போல் மனம் சற்றே துள்ளலுடன் சுவாசித்தது மகிழ்வுடன் நினைவின் வசந்தங்கள் அழியா காவியங்கள்.

#
Ilakkiya sri

அழகிய மலராக நீ மலர அழகிய நினைவாக நான் இருக்க இரகசிய சந்தங்கள் நீ வாசிக்க இரகசிய பந்தங்கள் நான் சுவாசிக்க புத்தக சாலையாக நீ இருக்க அதன் உட்கருத்தாய் நான் இருக்க சந்தன சாற்றில் நீ கரைய சந்தன வாசத்தில் நான் சுகிக்க மலர்களில் ஒளிந்து கொண்ட தேனாய் நீ இருக்க தேன் சுவைக்கும் வண்டாய் நான் ருசிக்க இருவரும் நினைவுகளில் பயணிப்போம் காதலுடன்

#
Ilakkiya sri

உண்மையா காதலிங்க இடையில சண்டை வரும் சந்தேகம் வரும் .... அதுக்காகெல்லாம் விட்டுட்டு போயிறாதிங்க.....

#
Karuppasamy

காயமும் இல்லை ரத்தமும் இல்லை.... ஆனாலும் வலிக்கிறது..... சிலரின் பிரிவால்...

#
Karuppasamy

உன்னுடனான எனது பயணம்... கத்தும் கடல் அலைகளின் நீர்த் திவலைகள் மட்டுமல்ல என்னுள் சீறிப் பாய்ந்தது  உன் பிரிவின் தவிப்புகளும் தான்! சுட்டெறிக்கும் வெயிலின் கானல் நீரில் விழுந்து உன் அன்பென்னும்  கரையேரியது என் வாழ்க்கை! வீழ்ச்சியும் வாழ்வில் ஏற்றம் காணும் பெண்ணே நீ என்னுடன் பயணிக்கையில்!

#
மகுட தாரிணி

தூரமும் தொற்றே போகும் நம் நினைவு அலைகளின் நெருக்கத்தால்

#
Shalini B

என்னடி செய்தாய் என் மனதை தாயை கண்ட குழந்தை போல உன்னை கண்டால் தாவி குதிக்கிறதே தாவும் என் மனதை ஒரு முறையாவது ஏந்திக்கொள் இல்லையென்றால் உன்னிடம்தான் வருவேனென என்னை ஆயுளுக்கும் நச்சரிக்கும்..... என் மன குழந்தையை ஒரு முறையாவது கொஞ்சிவிட்டு போ அதற்கு தானே அது படைக்கப்பட்டிருக்கிறது.... திருவிழாவில் ஊரே சாமி பாக்க இது மட்டும் உன்னை பார்த்து கொண்டிருக்கிறது... உனக்கென்ன ஒரு பார்வை பார்த்து சென்று விட்டாய் தாயை தொலைத்த குழந்தையென என் மனது தவிக்கிறது......

#
Bharathi Bharathi

நான் சுவாசிக்கும் காற்று கூட என்னை வஞ்சிக்கும் உன் சுவாசத்திலிருந்து வருவதால்

#
kavithaii virumpi...

ஞாபகங்கள் பல உண்டு உன் நினைவு மட்டும் அழியா வடு

#
kavithaii virumpi...

நெஞ்சோரத்தில்... சிலை வடித்தேன் உன் வடிவதனை என் நெஞ்சினிலே - ஏனென்று  கேளடி எந்தன் கண்மணியே! உன்னை மறக்காமலிருக்கத் தான் என நீ நினைத்தால் - பெண்ணே அது வெறும் மாயை!! இதயத்தைப் பறிக்காதே என்று உரைக்க என்னால் என்றுமே இயலாது − ஆதலால், இதயத்தினருகே உன்னை குடி பெயர்த்தேன்! அனுதினமும் என் இதயம் துடிப்பது உனது நினைவினில் தான் - என்பதை நீ அறிய நான் நினைவூட்டினேன்! நொடிப் பொழுதில் ஒருவரை அங்கீகரிக்க முடியும்  − என்பதை  எனக்கு உணர்த்தியவள் நீ தானே! நொடிப் பொழுது தோறும் உன் நினைவில் துடித்திருக்க − அதனை உனக்கு எடுத்துக் காட்டத் துணிந்தேன் நானே! எப்போதும் என் அருகாமையை பரிசளிக்க உன்னை குடி பெயர்த்தினேனடி − என் நெஞ்சோரத்தில்! அறிவாயோ என் சகியே!

#
மகுட தாரிணி

உன் அன்பெனும் எண்ணெய் வற்றாதவரை நானுமோர் சுடர்விட்டெரியும் விளக்கே

#
King Mass

உன்னை பிடித்துவிட்டதால் இனி உனக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது...

#
King Mass

நீ உடனில்லாத போது உன் நினைவுகளுடன் பயணிக்கின்றேன்

#
King Mass

கண்ணீர்... உன் விழிகளில் நான் இமையாகினேன்! உன் நம்பிக்கையைப் பெற! உன் நம்பிக்கையை காவல் வைத்து உன் இதயத்தினுள் குடியேறினேன்! மெல்ல! மெல்ல மெல்ல... கண்ணுக்கு இமை போல, மனதுக்கு ஒழுக்கம் போல, உன்னுடைய அருகாமையில் திளைத்திருந்தேன்! உன்னுடைய சிரிப்பை  உனது கண்களில் சிறை வைத்தேனே! விழிகளிலிருந்து வழியும் கண்ணீராகினேன்! உன்னை விட்டு விலகாமல் இருக்க அல்லும் பகலும் பாடு பட்டேனே! எல்லாம் எதற்காக? உன்னிலிருந்து கண்ணீராக வெளியேரவா? இல்லை, உன் கண்ணீரை நான் என் பரிசாக  எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்... உன்னுடைய சிரிப்பை  உனது கண்களில் சிறை வைத்துவிட்டேன்! என்றும் மலரும் உன் சிரிப்பு! அதை உன்னிடமே விட்டு விட்டேன்! என் நியாபகமாக!

#
மகுட தாரிணி

கண்களைப் போல் இதயமும் வெளியே தெரிந்தால் . நமக்காக சிலரின் இதயம் துடிக்கின்றதா நம்மை கண்டு நடிக்கின்றதா என்று தெரியும்..சாந்தமுடன்.syed

#
Basha Syed

என்னை விட்டு விலகி போனாய் நெருங்கி வந்தேன்.வெறுத்துப்போனாய் விரட்டி வந்தேன்.இனிமேலும் தெடர மாட்டேன் உன்னை மட்டும் அல்ல உன்.நிழலை கூட....சாந்தமும்.சையத்..

#
Basha Syed

காதலிக்கும் போதும் தெரியும்.... காத்திருக்கும் போதும் புரியும்.... ஆனால், கத்தரிக்கும் போது தெரியாது       என்ன சொல்ல வருகிறேன் என்று உனக்கு புரிகிறதா அன்பே !

#
S Sankari

மணம் வீசும் மல்லிகையே உன் வாசத்தில் ஏங்கி வந்த என்னவளின்  வாசம் கண்டு கைகளில் மலர்ந்தாயோ  இனி உன்னை விடுவிப்பாளா இருவரின் வாசத்தில் சிக்குண்டு என்னவளின் கரம் பற்ற முடியாமல் தவிப்பவனும் நான் தானே.

#
Ilakkiya sri

உன்னைக்காண நேர்ந்தால் நிதமும் உன்னுடன் கதைப்பேன் உன் கண்மணியில் சிந்து பாடுவேன் புன்னகை மலராய் இதழ்களில் கலகலவென மலர்வேன் மலர்த்தேன் போல தேனாய் இனிப்பேன் நேசத்துடன்.

#
Ilakkiya sri

சிறுசிறு சண்டைகள் காதலின் அம்சம் பார்வைகள் சந்தித்தால் ஊடலும் ம(ப)றந்துபோகும் ️ தோற்றுத்தான் போகின்றது என் பிடிவாதம் உன் அன்பின் முன் நீயருகிலிருந்தால் இருளிலும் நான் பௌர்ணமியே... கவிதை எழுத காதல் தேவையில்லை..... பெண்களின் அழகை ரசிக்க தெரிந்தாலே போதும்.......!!!! வருடாவருடம் பூ புதிதாகலாம் ஆனால் வாங்கும் ,கொடுக்கும் கை மாறக்கூடாது........ உன் அன்பெனும் எண்ணெய் வற்றாதவரை நான் ஓர் சுடர்விட்டெரியும் விளக்கே உன்னை பிடித்துவிட்டதால் இனி உனக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது... இதயமும் ஒரு ரகசிய சுரங்கம் சின்னச்சின்ன ஊடல்கள் உன்னை பிரிவதற்கல்ல நம் காதலை வளர்ப்பதற்கு நீ உடனில்லாத போது உன் நினைவுகளுடன் பயணிக்கின்றேன் விடுவிக்க முயன்றும் தோற்றுப் போகிறேன்....உன் பார்வை பிடியிலிருந்து உன் நினைவுகளோடு பேசிப்பேசி ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன் சோகங்கள் இதயத்தை துளைக்கும் போதெல்லாம் புல்லாங்குழலும் கண்ணீர் வடிக்கின்றது இவள் மறைய அவன் வர அவன்மறைய இவள் வரவென்று வானிலும் ஓர் கண்ணாமூச்சி நடுநடுங்கும் குளிரில் அணைத்துக்கொண்டே உளறாமல் பேசு என்றான் எனக்காக நீ விட்ட ஒரு சொட்டு கண்ணீர்.... உனக்காகவே வாழவேண்டுமென்று இதயத்தில்... உறைந்துவிட்டது நாணத்திற்கு விடுதலை கொடுத்தேன் வளையல்களும் தலைக் கவிழ்ந்தது கரைசேர துடுப்பிருந்தும் கரையேறும் எண்ணமில்லை நிலவொளியில்...உன் நினைவுகள் நிறைந்திருப்பதால் நீ மௌனமாகும் போதெல்லாம் என் கவிதைகளும் கண்ணீர் வடிக்கின்றது... விழிகளுக்குள் நீயிருக்கும் வரை என் கனவுகளும் தொடரும்... படிக்காமலேயே மனப்பாடமாகிப்போனது உன் நினைவுகள் சிறை வாழ்க்கையும் பிடிக்கும் அது உன் இதயமென்றால் கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரையிலாம்..... உன் விழிக்கவிதையின் அர்த்தம் புரிந்தபின்னே நான் சுவைக்கவே ஆரம்பித்தேன் ஒரு நொடி வந்து போனாலும் மனதை ரணமாக்கியே செல்கிறது சில நினைவுகள்... நினைவென்றாலே... அது நீயானாய்... கெஞ்சலும் கொஞ்சலும் காதலில் அழகு தொலைவேன் என்று தெரியும் ஆனால் உனக்குள் இப்படி மொத்தமாய் தொலைவேன் என்று நினைக்கவில்லை வார்த்தைகள் ஊமையாக உன்வசமானேன் காதல் மழையில் குடை நனைய.... குடைக்குள் காதலில் நாம் நனைகிறோம்..... நிலைக் கண்ணாடி என் முகத்தை காட்டினாலும் மனக் கண்ணாடியில் உன் முகத்தையே ரசிக்கின்றேன் கண்களுக்குள் என்னவன் கனவே கலையாதே தொலை(ந்த)த்தஒன்று உனக்காக காத்திருக்கலாம் தொலையாமல்... என்னவனின் அன்பில் எல்லையற்ற மகிழ்ச்சியில் நான்....... என் வானம் நீ தேய்ந்தாலும் மறைந்தாலும் மீண்டும் வலம்வரும் நிலவாய் நான்... காதல் தூறல் போட சட்டென வானவில்லாய் ஆனது மனம்... மனக்கடலில் நீ குதிக்க மூழ்கிப்போனேன் நான் சூடாக நீ தந்த ஒரு கப் காஃபி இதமாகவே இருந்தது உன் அன்பில் உள்ளத்தின் வண்ணமது தெரிவதில்லை உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை பூ போன்ற மனம் என்றாய் ரசித்தேன்... இப்படி வாட விடுவாய் என்று தெரியாமல் குளிர் காலத்தில் நான் வாடினால் உன் பார்வைதான் என் போர்வையோ சுத்தமாய் என்னை மறந்து போனேன் மொத்தமாய் நீ அள்ளும் போது உன்னுள் உறைந்து உலகம் மறக்க ஆசையடா கண்களில் கைதாக்கி இதயத்தில் சிறைவைத்து உயிரில் ஆயுள் கைதியாக்கிவிட்டாய் என்னை..........

#
John Sophi

கண்டேன் உன்னையும் கண்ணால்.. மனம் காணமல் போனது தன்னால்.. தேடினேன் என்னையும் உன்னால்.. வென்றேன் உன்னையும் பின்னால்.. எனையும் மறந்தேன் உன்னால்.. உன் சிரிப்பிற்கு ரசிகன் ஆனேன் தன்னால்...

#
கவிதையின் காதலன்

தொடமல் மலரும் பூ காதல் பூ கவிதைகள் பிறப்பது காதல் பூக்களால் தானே கவிதைக்கு பெருமை சேர்ப்பது இம்மலர் தானே.

#
Ilakkiya sri

ஆக்கநிலையில் அவள் இருக்கும் போது பாசநிலை உருவாகும் காதல் நிலை அனைத்து நிலையும் உயரும் என்று இயற்கை

#
Smkumaran kavithai

உன் புன்னகையில் சிதறிய பூக்களின் வாசத்தில் உன்னுள் கரைந்தவன் நான் இன்னுமா என்னை அறிந்து கொள்ளவில்லை ஆசைமயிலே.

#
Ilakkiya sri

இரவும் அவளது நினைவும்......

#
Karuppasamy

நிழலிலும் உன் அழகின் நளினம் கண்டேன்.. நிழலோடு நிழலாய் மனம் தொடர்வதை கண்டேன்.. மின்னலாய் மறையும் உன் விழிக்கண்டேன்.. உன் பின்னலாய் ஆடிடும் நிலைக் கொண்டேன்.. விழி பேசும் மொழி புரியும் திறன் கொண்டேன்.. இமை மீட்டும் இனிதான செயல் கண்டேன்.. மனதிற்குள் சிலையாக செதுக்கி கொண்டேன்.. நிழலிலும் நிஜ முகத்தின் அழகைக் கண்டேன்.. மயக்கிடும் உன் அழகில் கிரக்கம் கொண்டேன்.. சொர்க்கத்தை சொந்தமாக்க முயற்ச்சி கொண்டேன்.. கைபிடித்து அழைத்து செல்ல முடிவு கொண்டேன்..

#
கவிதையின் காதலன்

️ffyfyvuvufyfibivyf

#
PRATHAP .j

வாழ்க்கையும் அழகாகும் அன்பை பரிமாறும் போது.. மனமும் மண்ணாகும் நல்ல சிந்தனை துளிர்க்கும் போது.. திறமை நிரூபணமாகும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது.. உலகம் வியந்து பார்க்கும் சவால்களை கடக்கும் போது.. வாழ்க்கையும் கசந்து போகும் இழந்ததை நினைக்கும் போது.. கசந்ததும் பிடித்து போகும் இழந்தது மீண்டும் கிடைக்கும் போது.. மனமும் தடுமாறி போகும் காலங்கள் மாறும் போது.. நட்பும் உருமாறி போகும் இருவரும் அன்பை பரிமாறும் போது.. இதயமும் இடமாறி போகும் பரிமாற்றம் தொடரும் போது..

#
கவிதையின் காதலன்

தற்புகழ்ச்சி என்பது அவளிடம் கிடையாது இயல்பான பண்புகள் எழும்பும் தன்மை அபரிமிதமான பாசம் நாலாபக்கமும் ஸ்பரிச காற்று வீசும் மனப்பான்மை கொண்ட இதயம் உசுருல காதல் ஏறும்

#
Smkumaran kavithai

கண்ணோடு கண் கலந்தேன்.. கண்ணிமைக்காமல் திகைத்தேன்.. கண்களில் சிறைப்பிடித்தேன்.. இதயத்தில் உனையடைத்தேன்.. பகலையும் இரவோடு இணைத்தேன்.. உள்ளத்தை அன்பால் நிறைத்தேன்.. மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தேன்.. காதல் உணர்வில் மலைத்தேன் .. காதோரம் காதலை பகிர்ந்தேன்..

#
கவிதையின் காதலன்

உன் கண்களில் கண்டேன் ஒரு ஈர்ப்பு.. கவர்ந்து இழுத்தது உன் சிரிப்பு.. மனமோ ஆனது செயலிழப்பு.. துரிதமானது இதய துடிப்பு.. எப்போதும் நீயே என் நினைப்பு.. இதுதான் காதல் என்பது என் கணிப்பு...

#
கவிதையின் காதலன்

கண்டேன் அழகை உன்னிடம் .. காதல் கொண்டேன் அஃகனம்.. தேடினேன் உன்னை அனுதினம்.. ரசித்தேன் அழகை அனுகனம்.. வைத்தேன் அன்பை தித்தினம்.. தந்தாய் காதலை அஃகனம்.. பார்வையில் கனிவு இஃகனம்.. துடிப்பாய் துடிக்கிறாய் நொடி கனம்... வாழ்க்கை ருசிக்கிறது கனம், கனம்..

#
கவிதையின் காதலன்

அதிக பாசம் வைத்திருப்போர் இதயம் வசீகரம் செய்யும் கவனம் ஈர்க்கும் வகையில் செயல்படும்

#
Smkumaran kavithai

விழி இரண்டும் உனை காண விடியுமுன் அலைந்தாடும்.. உள்ளதில் உள்ள காதல் உன்னுடன் கலந்தாடும்.. நினைவுகளில் நிரந்தரமாய் உன் முகமே நிழலாடும்.. விழியோடு விழியும் இமை மூடி உரையாடும்.. மனம் முழுதும் உன் நினைவில் புதுக்கவிதை எழுந்தாடும்.. தனிமையில் தினம் பேச மனமெல்லாம் இடம் தேடும்.. கண் இரண்டும் கலந்தவுடன் சோகமெல்லாம் பறந்தோடும்.. நித்திரையில் தினந்தோறும் உன் நினைவே கனவாகும்.. ஆழ்மனம் உனை நினைத்து மனதோடு கலந்தாடும்.. உன்னோடு என் காதல் தினந்தோறும் கவி பாடும்..

#
கவிதையின் காதலன்

நான் தேடும் இன்பம் எனக்குள்ளே கொட்டிக்கிடக்கும் நேசம் தானே இதை நீ வந்த பின் தான் உணர்ந்தேனா.

#
Ilakkiya sri

அவள் பெண்மை திரட்டும் பணியில் மிக சரியாய் திறன் பட செயல்படுகிறது அவளது மூக்குத்தி வித்தைகள் செய்வதில் ஆர்வம் காட்டி என்னவள் மூக்குத்தியே

#
Smkumaran kavithai

உயிரோடு இருக்க ஒரு பிறவி போதும்! உன் காதலோடு இருக்க, பல ஜென்மம் வேண்டும்!

#
Thana Thana

கண்கள் திறக்கும் வரை தான் கனவு நீடிக்கும்.. ஆனால் என் கண்கள் மூடும் வரை உன் நினைவு நீடிக்கும்..

#
Thana Thana

துடிப்பும் தவிப்பும் எனக்கானதாகவே இருக்க வேண்டும், சொல்லி வை உன் இதயத்திடம்....

#
Thana Thana

இரு மனங்களும் கைக்குளுக்கி முத்தம் இடும் காட்சி காதலுக்கே உரிய சாட்சி

#
Ramkumar

இப்போது தான்..பேசி விட்டு சென்றாய்...மீண்டும்..எப்போது...அழைப்பாய்..என்று..அழைபேசியோடு..காத்திருக்கிறேன்.!!

#
Shakthi Lakshmi

எத்தனையோ..முறை..உச்சரித்த..போதும்..ஏனோ..திகட்டவில்லை....அவள்..பெயர்....!!!!

#
Shakthi Lakshmi

உன் மூச்சு காற்று பட்ட கைக்குட்டைக்கு என்ன ஆனந்தமோ என் மூச்சை காப்பாற்றுவதில்..அவளுக்கு மட்டுமே புரிந்த ஒன்று

#
Pandees Waran

அவளின் நினைவுகள் மனதில் காயமாக இருக்க கைகளில் இருக்கும் காயத்தில் வலியில்லை அவள் நினைவுகளைச்சுமந்ததால் தானோ! மனமன்றோ காயத்தில் வலிக்கிறதோ!

#
PREETHI KARTHIK

ஓரம் கிழிந்த பாய் காரைப் பெயர்த்த சுவர் ஒட்டடை படிந்த ஐன்னல் ஓசை எலும்பும் மின்விசிறி கழுவாத பாத்திரங்கள் கலைந்த தலையணை இருந்தாலும்..... என் வீடு இனிது! ஏனெனில்...... எதிர் வீடு உனது!

#
Vinoj M

மதுரை மல்லிகை பூவால் வந்த பாசம் இரவு தூக்கம் ஏதம்மா பெண்ணே உன்னாலே ராசாத்தி நானுந்தான் இமைகள் சிமிட்டலையே

#
Smkumaran kavithai

மனதெல்லாம் உன் நினைவுகள் நிறைந்திருக்க.. உன் நினைவிலேயே தனிமையில் நானிருக்க.. இரவும் உன் நினைவில் கடந்திருக்க.. பகலிலும் உன் நினைவில் மனம் சூழ்ந்திருக்க.. வெளியேற மனமின்றி தவித்திருக்க.. நினைவலையின் நினைவுகளில் குறையாமல் நீ இருக்க.. என் நினைவில் புதைந்த உன் முகத்தை காணும் வரை மனம் நெகிழ்ந்து காத்திருப்பேன் மனம் மகிழ்ந்து போகும் வரை..

#
கவிதையின் காதலன்

தேடாத என்னை தேடினால் அவள்.. நாடாத மனதை தேடினேன் நான்.. கண்டிட நாளொன்றை கேட்டாளவள்.. ஆனந்த தாண்டவம் ஆடினேன் நான்..

#
கவிதையின் காதலன்

உன் கண்களைக்கண்டவுடன் கவிதை எழுதும் கைகளுக்கு கைவிளங்கினை போட்டது யார்? நான் சுவாசிக்க மறந்தாலும் தமிழ் மொழியை மறவேன்என்றிருந்த எனக்கு தமிழும் தடுமாற்றமே

#
PREETHI KARTHIK

கோபக்காரியும் பாசக்காரனும் சந்தித்த போது இயற்கை உரசி சென்றது அவளுக்கு உருத்தானவன் இருக்கையிலே

#
Smkumaran kavithai

ஒவ்வொரு நாளும் உன்னை பற்றி ஒவ்வொரு விதமாக தோன்றுகிறது அதில் நன்றாக புரிந்து கொண்ட நானே குழம்பி போகிறேன்...️️‍️️‍

#
yuvi????️❤️‍????

அவன் கண்களில் ஏனோ என் காலம் கரைகிறதோ,,, என்னுள் வந்த காதல் ஏனோ என்னோடு முடிகிறது!!!!!! அவனிடம் காதல் சொல்ல ஏனோ என் கடிகாரத்திற்கு காலம் போதவில்லை

#
Kavi

என் ஆசை கேணியே... உன் பாசம் நீரை கேட்கிறேன்!!! தருவாயா???

#
karthika

ஒரு மரத்தின் நிழலில் தனியாக அமர்ந்திருக்கிறேன்...... லேசாக காற்று வீசுவதால் சிலரின் நினைவுகளாக மனதில் உள்ள பக்கங்களை மெதுவாக புரட்டிபார்க்கிறேன் ..... கண்ணீரோடு.....

#
Karuppasamy

காதல் மொழி என்றேன் உதடு பேசும் வார்த்தையல்ல உள்ளமிரண்டும் பேசும் வார்த்தை; நலம் விசாரிக்காது நலமொடிருக்க வாழ்த்தும் கேள்வி கேட்காது அவள் மெளனத்திலே விடைக்காணும் கண்கள் பார்க்கும் அழகினிலே!மனதரியும் நீ விடைப்பெறும் வேளையிலே! உன் வருகைக்கு காத்திருக்கும்

#
PREETHI KARTHIK

என்னவளே நலம் விசாரித்தால் மட்டும் போதுமா உன்னையே நீ தர வேண்டாமா நீ சொன்னாய் அகத்தில் மட்டும் அழகு இருந்தால் போது என்று நீ தயங்கி எடுக்கும் பேச்சும் செயலும் நம் காதலை பிரித்து விடாத

#
Smkumaran kavithai

அழகு முகத்தை கண் முன் கண்டு ரதிக்கு இல்லை முதலிடம் என்றேன்.. விழி இமையின் நடனம் கண்டு மயில் தோகையும் அழகில்லை என்றேன்.. விழித்திரையின் ஒளியை கண்டு மின்னலையும் மிஞ்சும் ஒளி என்றேன்.. வளைந்து இணைந்த மூக்கை கண்டு இறைவன் அமைத்த சுரங்கம் என்றேன்.. கோவைப்பழ உதடை கண்டு ரோஜா இதழும் தோற்கும் என்றேன்.. உன் இதழ் மீட்டும் நாதம் கேட்டு குயிலுக்கு இனி இல்லை முதலிடம் என்றேன்.. இடை ஆடும் நடையை கண்டு இனி இரண்டாம் இடம் தான் அண்ணம் என்றேன்.. விழித்துக் கொள் என்ற அன்னையின் குரல் கேட்டு ஓஹோ இதுவெல்லாம் கனவா என்றேன்..

#
கவிதையின் காதலன்

பூத்திருக்கும் பூங்கொடியே மனம் மயக்கும் மீன் விழியே உனை கடைந்த குயவன் யாரோ? காற்றிழுக்கும் புல்லாங்குழலில் இரு துளை மட்டும் இட்டது யாரோ ? துளையின் மீது சிறு துளையிட்டு கலங்கரை விளக்கை பதித்தது யாரோ? செந்தேன் சுரக்கும் செவ்விதழே எந்த பூவிதழில் செதுக்கியது உன் இதழ்லோ? இதழிலுடன் அழகாய் முத்தை பதித்து அழகாய் அதனழகை ரசிக்க வைத்த சிற்பி யாரோ ? சிரிப்புக்கு சுழி வைத்து நினைவெல்லாம் அதில் வைத்து வண்ணத்தில் கோலமிட்டு சிரிப்புக்கு உயிர் கொடுத்த ஓவியன் யாரோ? பின்னழகு நடனமாட முன்னழகும் சேர்ந்தாட இடையில் குடமும் அமர்ந்தாட கூந்தலும் இணைந்து ஜதி பாட சிங்கார நடை பயிலும் பெண்ணே என்று கவி பாடும் கவிஞன் யாரோ? கொழு கொழு கன்னம் கண்டு இதழ் பதிக்கும் எண்ணம் கொண்டு தினம் தொடரும் மன்மதன் யாரோ?

#
கவிதையின் காதலன்

என் கவிதைகளுக்கு நித்தமும் உரமிட்டுக்கொண்டிருக்கிறாய் உனது நினைவுகளால் நீ!

#
Ram siva

தற்காலிக தனிமை நினைவூட்டுகிறது உன்னோடு பேசாத எண்ணற்ற அன்பு வார்த்தைகளை சேகரித்து வைத்திருக்கிறேன் என்று

#
Ram siva

என் காதல் உன்னை அடைய அடம்பிடித்தது தாரத்திற்காக மட்டுமல்ல தாயின் அன்பிற்காகவும்தான்

#
Ram siva

நீ! எனது காதலை ஏற்க மறுத்திருந்தால் இன்றோடு எனது கல்லறைக்கு அகவை 16 கடந்திருக்கும்

#
Ram siva

உன் மடியில் எனது விதி முடியுமானால் அது நமது காதலுக்கு பாக்கியமே

#
Ram siva

நீயும் நானும் பூங்காவில் அமர்ந்துகொண்டு பேரன்,பேத்தி விளையாடுவதை ரசிக்கவேண்டுமென என்னிடம் மனு கொடுக்கிறது நம் காதல்

#
Ram siva

ஆயிரம்பேர் அழகாய் தெரிந்தாலும் நீ! மட்டுமே எனக்கு அன்பாய் தெரிகிறாய்

#
Ram siva

நிரந்தரமற்ற இவ்வுலகில் உனது அன்பு மட்டும் என்னோடு நிரந்தரமாக இருக்கட்டுமென நம் காதல் வேண்டிக்கொள்கிறது.

#
Ram siva

சின்னஞ்சிறு கண்ணசைவில் அடிமை செய்தாய்.. விழியால் எனை வீழ்த்தி தவிக்க செய்தாய். தினம் என்னை வழி மறைத்து மடக்க செய்தாய்.. இதழ் அசைத்து என் மனதை கிறங்க செய்தாய்.. புன் சிரிப்பால் என் மனதை மயங்க செய்தாய்.. இதழ் அசைத்து இவ்வுலகை மறக்கச் செய்தாய்.. குரல் ஓசையை குயிலிசை போல் இனிக்க செய்தாய்.. தினம் உனை காணமல் கலங்க செய்தாய்.. என் மனதில் உன் நினைவை பதிய செய்தாய்.. ஊடுருவும் கொடியன படர்ந்திட செய்தாய்.. தினம் உந்தன் நினைவோடு உலாவிட செய்தாய்... இணைந்துடும் நாளுக்காக ஏங்கிட செய்தாய்.. பூ மலரும் கொடி போல காக்க செய்தாய்.. காத்திருந்து பூ பறிக்க கற்க செய்தாய்..

#
கவிதையின் காதலன்

கண்டதும் காதல் கொண்டேன்.. உன் வசிகர சிரிப்பை கண்டு.. வண்டாக மாறியது மனம் தேனூறும் உன் இதழை கண்டு.. சிந்தனையில் உன்னை கண்டு தடைப்பட்ட மூச்சும் உண்டு.. சிங்கார சிரிப்பை கண்டு சிறைப்பட்ட மனமும் உண்டு..

#
கவிதையின் காதலன்

கண் விழித்து உன்னிடம் பேசி பார்த்தேன்.. குறுஞ்செய்தியில் உன்னிடம் குலாவி பார்த்தேன்.. மனதில் உன்னை ரசித்து பார்த்தேன்.. வானவில்லாய் வாழ்க்கை மலர்வதை பார்த்தேன்.. சந்தோஷ வாழ்வின் தொடக்கத்தை பார்த்தேன்.. தொடக்கம் தொடர்ந்திட உன் விழிப்பார்த்தேன்.. நேரில் அமர்ந்து பேசிப் பார்த்தேன்.. இதழின் அழகில் பிரம்மனை பார்த்தேன்.. சிதறிய சிரிப்பில் மனம் வீழ்வதை பார்த்தேன்.. காதல் இதுவென்று உணர்வதை பார்த்தேன்.. கை கோர்த்து கொள்ள நேரம் பார்த்தேன்..

#
கவிதையின் காதலன்

உருவமில்லாத என் மனம்தான். உன் உருவத்தை காட்டியது.. அடையாளம் இல்லாத என் மனம்தான் உன்னை அடையாளம் காட்டியது..

#
கவிதையின் காதலன்

விருப்பமிருந்தால் விலகிடாமல் இரு.. பிடித்தமிருந்தால் பிணைப்புடன் இரு.. ஈர்ப்பிருந்தால் ஈகையுடன் இரு.. காதல் இருந்தால் மனம் கலந்தே இரு.. இருக்கு என்ற சொல் நிறைந்திருந்தால் இருள் உன்னை விட்டு விலகியே இருக்கும்.. இல்லை என்ற சொல் நிலையாய் இருந்தால் இருள் உன்னை விடாமல் சூழ்ந்தே இருக்கும்..

#
கவிதையின் காதலன்

இதழ்களை போல் உன் விழிகளுக்கும் பொய் சொல்ல கற்றுக்கொடு.. காதல் இல்லை என்று இதழ் சொல்கிறது.. இல்லை பொய் என்று உன் விழி சொல்கிறது.. நினைப்பதில்லை உன்னைவென்று இதழ் சொல்கிறது.. மறப்பதில்லை மனமென்று உன் விழி சொல்கிறது.. மறந்தால் தானே நினைப்பதற்கு என்று மனம் தவிக்கிறது.. தேடும் கண்களும் அதை உண்மை என்கிறது..

#
கவிதையின் காதலன்

கடலலைகள் உன்னை தொட்டு விட கரை தொடும் போதெல்லாம் தவித்துப் போகிறேன் உன்னை களவாடி சென்று விடுமோ என்று.. கரையில் நிற்கும் உன்னை கடலலை தேடுவதை போல பூத்துக் குலுங்கும் உன்னை என் நெஞ்சம் தேடுகிறது உன்னிடம் உறவாடி செல்ல..

#
கவிதையின் காதலன்

இமையில்லா மீன் மீது பொறாமை.. இமை மூடாமல் உன் அழகை காண முடியாததால்.. கடல் அலையின் மீது பொறாமை.. உன்னை தொட்டு விட கரையை தேடி வரும் போதெல்லாம்.. காற்றின் மீது பொறாமை தடையின்றி உன்னை தழுவி செல்வதால்..

#
கவிதையின் காதலன்

தேடிப் பார்க்கிறேன் தேடியும் கிடைக்காத உன்னை தேடத் துடிக்குதே மீண்டும் கிடைக்காத என் காதல் நினைவுகளை ...

#
suvi

காதலனே உன் கைகோர்க்க ஆசையடா உன் காதலியாக உன் இதயத்தில் உன் மனைவியாக உன் பக்கத்தில் இருக்க ஆசையடா ...

#
suvi

காதலனே உன்னை காண துடிக்கிறேன் உன்ன காணாத நேரத்தில் உன்னை நினைத்து தவிக்கிறேன்

#
suvi

நிலவையும் நின்றிட செய்வாள்.. நிகழாததை நிகழ்திடவாள்.. விழியில் ஒளி தருவாள்.. உள்ளமே உண்மை என்பாள்.. பூவாய் இதழ் விரிப்பாள்.. மனதினில் இடம் பிடிப்பாள்..

#
கவிதையின் காதலன்

காதலில் கட்டாயம் தேவையில்லை நண்பா

#
Kavi

சிறுசிறு சண்டைகள் காதலின் அம்சம் பார்வைகள் சந்தித்தால் ஊடலும் ம(ப)றந்துபோகும் ️ தோற்றுத்தான் போகின்றது என் பிடிவாதம் உன் அன்பின் முன் நீயருகிலிருந்தால் இருளிலும் நான் பௌர்ணமியே... கவிதை எழுத காதல் தேவையில்லை..... பெண்களின் அழகை ரசிக்க தெரிந்தாலே போதும்.......!!!! வருடாவருடம் பூ புதிதாகலாம் But வாங்கும் கொடுக்கும் கை மாறக்கூடாது........ ( காதலர்தினம் ) உன் அன்பெனும் எண்ணெய் வற்றாதவரை நானுமோர் சுடர்விட்டெரியும் விளக்கே உன்னை பிடித்துவிட்டதால் இனி உனக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது... இதயமும் ஒரு ரகசிய சுரங்கம் சின்னச்சின்ன ஊடல்கள் உன்னை பிரிவதற்கல்ல நம் காதலை வளர்ப்பதற்கு நீ உடனில்லாத போது உன் நினைவுகளுடன் பயணிக்கின்றேன் விடுவிக்க முயன்றும் தோற்றுப் போகிறேன்....உன் பார்வை பிடியிலிருந்து உன் நினைவுகளோடு பேசிப்பேசி ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன் சோகங்கள் இதயத்தை துளைக்கும் போதெல்லாம் புல்லாங்குழலும் கண்ணீர் வடிக்கின்றது இவள் மறைய அவன் வர அவன்மறைய இவள் வரவென்று வானிலும் ஓர் கண்ணாமூச்சி நடுநடுங்கும் குளிரில் அணைத்துக்கொண்டே உளறாமல் பேசு என்றான் எனக்காக நீ விட்ட ஒரு சொட்டு கண்ணீர்.... உனக்காகவே வாழவேண்டுமென்று இதயத்தில்... உறைந்துவிட்டது நாணத்திற்கு விடுதலை கொடுத்தேன் வளையல்களும் தலைக் கவிழ்ந்தது கரைசேர துடுப்பிருந்தும் கரையேறும் எண்ணமில்லை நிலவொளியில்...உன் நினைவுகள் நிறைந்திருப்பதால் நீ மௌனமாகும் போதெல்லாம் என் கவிதைகளும் கண்ணீர் வடிக்கின்றது... விழிகளுக்குள் நீயிருக்கும் வரை என் கனவுகளும் தொடரும்... படிக்காமலேயே மனப் பாடமாகிப்போனது உன் நினைவுகள் சிறை வாழ்க்கையும் பிடிக்கும் அது உன் இதயமென்றால் கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரையிலாம்..... உன் விழிக்கவிதையின் அர்த்தம் புரிந்தபின்னே நான் சுவைக்கவே ஆரம்பித்தேன் ஒரு நொடி வந்து போனாலும் மனதை ரணமாக்கியே செல்கிறது சில நினைவுகள்... என்னருகில் நீயிருந்தால் தினமும் பௌர்ணமியே நினைவென்றாலே... அது நீயானாய்... கெஞ்சலும் கொஞ்சலும் காதலில் அழகு தொலைவேன் என்று தெரியும் ஆனால் உனக்குள் இப்படி மொத்தமாய் தொலைவேன் என்று நினைக்கவில்லை வார்த்தைகள் ஊமையாக உன்வசமானேன் காதல் மழையில் குடை நனைய.... குடைக்குள் காதலில் நாம் நனைகிறோம்..... நிலைக் கண்ணாடி என் முகத்தை காட்டினாலும் மனக் கண்ணாடியில் உன் முகத்தையே ரசிக்கின்றேன் கண்களுக்குள் என்னவர் கனவே கலையாதே தொலை(ந்த)த்தஒன்று உனக்காக காத்திருக்கலாம் தொலையாமல்... என்னவரின் அன்பில் எல்லையற்ற மகிழ்ச்சியில் நான்....... என் வானம் நீ தேய்ந்தாலும் மறைந்தாலும் மீண்டும் வலம்வரும் நிலவாய் நான்... காதல் தூறல் போட சட்டென வானவில்லாய் ஆனது மனம்... மனக்கடலில் நீ குதிக்க மூழ்கிப்போனேன் நான் சூடாக நீ தந்த ஒரு கப் காப்பி இதமாகவே இருந்தது உன் அன்பில் உள்ளத்தின் வண்ணமது தெறிவதில்லை உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை பூ போன்ற மனம் என்றாய் ரசித்தேன்... இப்படி வாட விடுவாய் என்று தெரியாமல் குளிர் காலத்தில் நான் வாடினால் உன் பார்வைதான் என் போர்வையோ சுத்தமாய் என்னை மறந்து போனேன் மொத்தமாய் நீ அள்ளும் போது உன்னுள் உறைந்து உலகம் மறக்க ஆசையடா கண்களில் கைதாக்கி இதயத்தில் சிறைவைத்து உயிரில் ஆயுள் கைதியாக்கிவிட்டாய் உன்னில் தொலைந்த என்னை மீட்டுக்கொடு இல்லையேல் என்னுள் நீயும் தொலைந்துவிடு நேற்று வரை எதையோ தேடினேன் இன்று என்னையே தேடுகின்றேன் உனக்காக எனக்கு இன்னொரு தாய்மடி நீயடா... மறக்க தவிக்கும் நீயும் மறக்க முடியாமல் நானும் நீ வெறுக்கும் ஒவ்வொரு முறையும் இதயம் சிதறிதான் போகிறது சந்தோஷமாய் பறக்கின்றேன் சிறகுகளாய் நீ இருப்பதால் மார்கழி குளிரும் இதமான வெப்பமானது உன் நினைவுபுள்ளியில் கோலத்தை ஆரம்பித்தபோது இதயம் என்ன போர்க்களமா... உன் நினைவுகள் இப்படி யுத்தம் செய்யுதே... என்னவனுக்குள் தொலைந்த நொடியிலிருந்து தினமும் எனக்கு காதலர் தினமே காதல் சிலருக்கு கண்ணீரின் காவியம் பலருக்கு அழகிய ஓவியம் கடலில் விழுந்த நீர்துளிப்போல் உன்னில் கலந்துவிட்டேன் கட்டிலறையோடு முடிவதல்ல காதல் கல்லறைவரை தொடர்வதே காதல் ஆசை ஊற்றெடுக்கும் போதெல்லாம் அணைபோடுகிறது நாணம்....... தழுவிச் செல்லும் காற்றிலும் உன் நினைவுகளே கூந்தலை கலைத்துச் செல்கையில்... புரிந்துக்கொள்ளும் வரை எதையும் ரசிக்கவில்லை புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர எதையும் ரசிக்கமுடியவில்லை... அகிம்சையாக உள்ளே நுழையும் சில நினைவுகள் வெளியேறும் போது போர்க்களமாக்கிவிட்டு செல்கிறது மனதை... ஆரவாரமின்றி அமைதியாகவே கடந்துச்செல்கிறாய் என் விழிகள் தான் ஏனோ உன் வழியை தொடர்கிறது... மனதிலுள்ள ஆசையெல்லாம் நீ பார்க்கும் போது நாணத்தில் மறைந்துக்கொ(ல்) ள்கிறது விழிகளை மூடிக்கொள் என்னாசைகளை நிறைவேற்ற அன்பெனும் மாளிகையில் அழியாத பொக்கிஷம் நம் அழகிய நிகழ்வுகள் உன் நெஞ்சத்தின் பஞ்சணையில்... என் கவலைகளும் உறங்கிவிடும் என்ன மாயம் செய்தாய் உனக்கெழுதும் வரிகளெல்லாம் மாயமாக மறைகிறதே நீயில்லா நேரம் நினைவுகள் பாரம் ஆயுளின் காலம் எதுவரையென்று தெரியாது .... ஆனால் உனதன்பிருக்கும்வரை என் ஆயுளிருக்கும்... விழி பார்த்து பேசு என்கிறாய் உன் விழி நோக்க மொழிகளும் மறந்து போகிறது... காத்திருந்து களைத்துவிட்டது கண்கள் கனவிலாவது கலந்துக்கொள் தனிமையை நேசிக்கின்றேன் உன் நினைவுகளுக்காக... நீ வெட்கித்தலை குனிந்து கொலுசுமாட்டும் அழகில் நான் சொக்கித்தான் போகின்றேன்... உன் தொலைதூர பயணத்தில் என்னையும் சுகமாகவே சுமந்துச்சென்றிருகிறாய் என்று விடாமல் ஒலிக்கும் உன் தொலைதூர குரல் சொல்லாமல் சொல்கிறது... விடிந்தபின்னும் உறங்கிகிடக்குறேன் விழிமூடாமல் உன் நினைவில்... எனையறியாமல் உறங்கிப்போனேன் உனதன்பில்... தனிமையின் இடைவெளியை நிரப்புகின்றது உன் ..... நினைவுகள்... அடிக்கடி நினைக்க வைத்து கன்னத்தை நனைத்துச் செல்கிறாய்... காற்றோடு வந்த காதல் மொழியில் நான் காத்தாடியானேன்... வாடிய மனம் வானவில்லானது உன் வருகையை கேட்டு... மொழியில் சொல்லத்தயங்கும் ஆசைகளையெல்லாம் விழியில் கொட்டித்தீர்க்குறேன்... என்னைவிட நம் காதலை பாதுகாத்தது நீ நான் தவறவிட்டபோதெல்லாம் தாங்கி பிடித்தாய்... இரவும் கடந்துக்கொண்டிருக்க... உன் நினைவுகள் உரசிக்கொண்டிருக்க.... என் உறக்கமும் தொலைந்துக்கொண்டிருக்கு நீ பொழியும் அன்பின் அருவியைவிடவா இந்த மலையருவி என்னை மகிழ்விக்கபோகிறது... தயக்கமின்றி மனதுக்குள் நுழைந்து விட்டாய் வார்த்தைகள் தான் உன்னெதிரே தயங்கி தவிக்கிறது... உன் நினைவுத்... தென்றலில் நானுமோர் ஊஞ்சலாகின்றேன் ஆசைகள் கடலாய் பொங்க...... வெட்கங்கள் அலையில் அடித்துச்செல்ல...... அச்சங்கள் கரையொதுங்க முத்தங்களும் தொடர்ந்தது..... புயலைவிட வேகமாக தாக்குகிறது உன் பார்வை..... கொஞ்சம் தாழ்த்திக்கொள் நான் நிலையாக நிற்க.... தொல்லைகள் செய்யாமல் தொலைவாகவே தொடர்ந்து என்னை உன்னில் தொலைக்க செய்தாய். விழிகள் அடிக்கடி மோதிக்கொள்ள இதயங்கள் ஒன்றானது... நிசப்தமான இரவில் உன் நினைவுமோர் அழகிய கவிதை... விழித்துக்கொண்ட நினைவுகள் உறங்கும் போது விடியலும் வந்துவிடுகிறது... பிடிவாதத்தில் ஜெயிப்பதைவிட உன் அன்பிடம் தோற்பதையே விரும்புகிறேன். தனிமையை இனிமையாக்க உன் நினைவுகளால் மட்டுமே முடியும்... மேகங்கள் சூழ்ந்த நிலவாய் நான் காற்றாகி ஒளித்தந்தாய் நீ என்னை அழவைத்து அழகு பார்ப்பதும் நீ தான்... அருகில் வைத்து அரவணைப்பதும் நீயே தான்..... நேசித்தலை விட பிரிதலின் போது உன் நினைவுகள் இரட்டை சுமை... மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு உன் இதயத்தை..!! தென்றல் மோதி பூக்களுக்கு வலிப்பதில்லை... உன் நினைவுகள் மோதி என் உள்ளம் வலிக்கின்றது... ஏட்டில் படித்த எதுவும்... மன ஏட்டில் பதியவில்லை... உன் நினைவுகளை தவிர வாடிய காதலுக்காக தினமும் புதிதாய் பூக்கின்றது கவிதை நீங்காத இரவொன்று வேண்டும்....அதில் நிலையான கனவாக நீ நிலைக்க வேண்டும் தாயின் நினைவில் தவித்துப்போனான் நானுமோர் தாயாகிப்போனேன் உன் நினைவுகள் விழித்துக்கொள்ள உறக்கமும் கலைந்தது தோளில் சுமைகளை சுமந்த தோழன் மார்பில் சாயும் வரம் கொடுத்தான் கணவனாகி என்னை தேடியபோதுதான் உணர்ந்தேன் உன்னில் தொலைந்திருப்பதை. நீ மௌனமாகும் போது என் கண்ணீர் பேசுகிறது வெகு நாட்களுக்கு பிறகு எனக்காக உறங்க போகிறேன் வந்துவிடாதே கனவில். நொடியேனும் மறக்க முடியாமல் உன்னையே நினைக்க வைக்கும் உன் நினைவுமோர் எட்டாவது அதிசயமே. நீ போகுமிடமெல்லாம் என் மனதையும் எடுத்துச்செல் உன்னை தேடியே என்னை கொல்கிறது. உன்முன் உளறிக்கொட்டாமல் சரளமாய் பேச... கண்ணாடி முன்னொரு ஒத்திகை மீண்டும் ஒரு பிரிவை தரும் எண்ணமிருந்தால் தொடராதே யாழிசை மீட்ட வந்தேன்...... உன் இதழிசையில் மூழ்கிப்போனேன் நினைப்பதை கொஞ்சம் நிறுத்திவை விக்கலில் சிக்கி தவிக்கின்றேன் என்னையும் மீறி உன்னை திரும்பி பார்க்க வைக்கிறது..... என்னை கண்டுக்கொள்ளாமல் போகும் உன் பார்வை தொலைக்காத போதும் தேடுகிறேன் உன்னை நிலவின்றி இரவு தொடரலாம் உன் நினைவின்றி என் விடியல் தொடராது. இந்த நொடி இப்படியே நீண்டிட வேண்டும் முற்றுப்புள்ளி வைக்கும் போதெல்லாம் அருகிலொரு புள்ளிவைத்து செல்கிறாய்.... பிரிந்திருந்த நாட்களில் தான் நம் காதல்...... விருட்சமாக வளர்ந்திருக்கின்றது என உணர்ந்தோம் நாம் சேர்ந்தபோது தீட்டிய கத்தியைவிட தீண்டும் உன் பார்வை கூர்மையாகவே தாக்குகின்றது கொட்டும் மழை கொண்டுவந்து சேர்த்தது..... மறந்துப்போன மழைக்கால நிகழ்வுகளை கண்ணீரும் கனமானது உன்னால் வந்தபோது இரவின் பிடியில் சிறைப்பட்டிருக்கும் நிலவைப்போல் உன் நினைவின் பிடியில் நான்... பாசம் காட்ட பல உறவுகள் இருந்தாலும்..... மனம் களைப்பாகும் போது இளைப்பாற தேடுவது உன்னையே தேய்பிறை நிலவுக்கு தான் உன் நினைவுக்கு அல்ல... உனக்காகவே என் வாழ்க்கை என்று நீ சொன்னபோது தான் என்னை எனக்கே பிடித்தது... உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உணர்த்துகிறது நீயில்லாத வாழ்க்கை வெறுமை என்று... உன்னருகில் மௌனமும் ஓர் அழகிய கவிதை தான்... உன் விரலிட்ட பொட்டு வட்ட நிலவாக நானுமோர் பௌர்ணமியானேன்... மனதுக்குள் ரசித்தாலும் மயங்கிப்போகிறேன் விழிகளுக்குள் உன்.... பிம்பம் வந்துநிற்க ரசிக்க காத்திருந்தபோது...நீ இசைக்கவில்லை.... இன்று இசைக்க காத்திருக்கின்றாய் ரசிக்கும் மனநிலையில் நானில்லை உன் பார்வையென்ன மருதாணியா பட்டதும் சிவக்கின்றதே முகம் கவிதைக்கு வரிகள் கேட்டேன்........ உன்னிதழின் வரிகளைவிட அழகிய வரிகளில்லை என்றான் மனமின்றி விடைகொடுத்தாய் மரணித்தே விடைபெற்றேன் புகையும் உன் நினைவில் புதைந்து கொண்டிருக்கின்றேன் உணர்வற்ற கவிதைக்கும் உயிர் வருகிறது நீ ரசிக்கும் போது பூ தலைசாய்ந்தால் தாங்கிக்கொள்ளும் கிளையைபோல் நான் தலைசாய நீ வேண்டும் தாங்கிக்கொள்ள சொல்லாமல் கொள்ளாமல் தழுவிச்செல்லும் தென்றலைப்போல் மனதை வருடிச்செல்கிறது உன் நினைவுகள் மறையும் வரை திரும்பிவிடாதே என்னுயிர் வந்துவிடும் உன்னுடன் எழுதவில்லை செதுக்குகிறேன் உனக்கான கவிதையை என் இதயத்தில் மரணத்தை கொடுத்துவிடு ஒரு நொடி வலி மௌனத்தை கொடுக்காதே ஒவ்வொரு நொடியும் மரண வலி பார்வையில் மனதை பறித்துச்சென்றாய் நான் சிறகிழந்த பறவையானேன்... சுழற்றியடிக்கும் காற்றையும் எதிர்த்து சுடர்விட்டெரிகிறது அகல்விளக்கு.... பல ஆசைகளுடன் என்னைப்போலவே உன்னை வரவேற்க அன்பு காட்டுவதில் ஜெயிப்பது நீயென்றால் உன்னிடம் தோற்பதும் எனக்கு வெற்றியே... இளகாத உன் மனதால் மெழுகாக நானுருகி வரிகள் பல வடிக்கின்றேன் கற்பனையில் காதல் செய்து உன் தேடல் நானென்றால் தொலைவதும் ஒரு சுகமே மயக்கும் மல்லிகையை கையில்கொடுத்து மனதில்..... அணையா ஆசையை மூட்டிச்சென்றான் விழிகளை திறந்தால் நாணம் தடைபோடுமென்று விழிமூடி கொள்கிறேன் உன் இதழோடு பேச உன் விழிகளை நோக்கும் போது கண்களுக்குள் என்னை காண்பதைபோல்.....உன் மனதிலும் நானேயிருப்பேன் என்ற எண்ணமே நம் வாழ்க்கையை அழகாக்குகின்றது மரக்கிளையில் சாய்ந்தேன் உன் நினைவுகள் துளிர்விட்டது வரிகளில்லா அழகிய கவிதை உன் விழிகளில் ரசித்தேன்... அங்கே உன் நிலையென்ன....என்ற நினைப்பிலேயே என் நிமிடங்கள் நகர்ந்துக்கொண்டிருக்கு உன் தொடரலே என் உலகத்தை அழகாக்குகின்றது பூவுக்குள்ளும் பூத்திருக்கின்றது உன் காதல் வாசனை வேள்வியின்றி எரிகின்றேன் உன் விழித் தீயில் நம் வாழ்க்கையை வண்ணமாக்க.... உன் கையை தூரிகையாக்கினாய் ஒற்றை விழியில் நோக்கினாலும் எங்கும் நீயே என் இருவிழிகளாய் நீ தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் கடிகாரமுள்ளைவிட அதிவேகமாகவே துடிக்கின்றது என் இதயம் நீ பொய்யாக வர்ணிக்கும் போதெல்லாம்..... நாணம் என்னை மெய்யாகவே அழகாக்குகின்றது என்னைப்பற்றிய கவலைகள் எனக்கில்லை அக்கறைக்கொள்ள நீயிருப்பதால்...... கடற்கரையில் கால் பதித்தேன் உன் நினைவுகளும் ஒட்டிக்கொண்டது... தனிமையில் பயணங்கள் களைத்ததில்லை துணையாக உன் நிழல் இருப்பதால்... சிந்திக்க பலயிருந்தாலும் முந்திக்கொள்கின்றாய்..நீ காவலன் நீயானாய் கைதி நானானேன் தள்ளாடிப் போகின்றேன்..... தென்றலில் தள்ளாடும் கூந்தலைப்போல் உன் கரம் கன்னத்தில்பட விரும்பியே தொலைகின்றேன் விலகிவிடாதே... காதலின் பிடியில் சிக்கித் தவித்த மலருக்கும் ஆசை வந்தது மரணிக்காமல் வாழ...... சிறு ஊடல் ஒரு காத்திருப்பில் வளர்கிறது காதல் மனதை மயக்குகின்றாய் மருதாணி வாசனையாய்..... என்னை மௌனமாக்கி நீ விழியில் பேசியே வென்றுவிடுகிறாய் மின்னலாய் நீ வர மழைச்சாரல் மனதுக்குள் உன் மொழியில்லா ஆறுதலில் எனை மறந்துப்போனேன் முழுதாய் மறைவதற்குள் நிலவு விழித்துக்கொள்வதென்ன உன் நினைவு நீ ரசிக்க நானும் ஒரு சிலையானேன் முடியாத பயணம் நான் தொடர வேண்டும் உன் கரம் பிடித்து... வெறுமையான வாழ்க்கையும் வசந்தகாலமானது உன்னால்.... கடவுளை அழைத்தேன் காட்சித் தரவில்லை என்னவரை நினைத்தேன் கண்ணெதிரே தோன்றினார் மொத்தமாய் உன் அன்பு என்னை ஆதிக்கம் செய்ய சுத்தமாய் மாறிப்போனேன் நானும் என் பிழைகளை திருத்தும் பிழையில்லா கவிதை ... நீ இதயக்கதவை உன் நினைவுகள் தட்ட........ எட்டிப்பார்கின்றது விழிகளும் நீ வரும் வழியை நோக்கி....... எரிக்கும் உன் பார்வைத்தீயில் உருகும் மெழுகாய் நான்.... நான் இரவில் தூங்கிய நேரத்தை விட உனக்காக ஏங்கிய நேரமே அதிகம்.

#
John Sophi

அழகான காதல் நினைவுகள் எனது இதயதில்

#
சாய் ஜீவிதா

ஈர்த்து நின்ற என் மனதை காக்க வைத்து சென்றாயடி.. பதிந்து போன நினைவோடு மனம் துடிக்க வைத்தாயடி.. உன் நினைவலைகள் நீங்கிடாமல் என்ன மாயம் செய்தாயடி.. விழி இரண்டும் மூடாமல் போராட்டம் செய்யும் படி.. உன் குரலை கேட்டிடவே செவியிரண்டும் கெஞ்சுதடி.. இதழ்விரிந்த உன் சிரிப்பில் என் மனதை இழந்தேனடி.. ஒரு முறை பேசிடவே என் இதழும் துடிக்குதுடி.. தொலைபேசியில் உன் உருவம் மாறுவதை கண்டேனடி.. பதிலிடுவாய் நீயென்று பரப்பரப்பு கொண்டேனடி.. தூக்கமின்றி தினந்தோறும் இரவெல்லாம் தவிப்பேனடி .. உன் காதலை பதிவாக இன்றாவது பதித்திடுடி..

#
கவிதையின் காதலன்

ஏதோ ஒரு அழகு உன்னிடம்.. இனம் புரியா ஈர்ப்பு கண்ணிடம்.. மீறா நிலையிலும் என்னுடன்.. உன் கண்கள் பேசியது அன்புடன்.. கண்ணில் கவிதை சொன்னேன் உன்னிடம்.. காதலாய் பதிவு செய்தாய் என்னிடம்.. என்னையும் பதித்து விட்டேன் உன்னிடம்.. பதிந்த மனம் தந்தாய் என்னிடம்.. சிறகில்லாமல் பறக்கிறேன் உன்னுடன்..

#
கவிதையின் காதலன்

என் மனத்தில் உனதுருவம் பதிவானது.. என் நினைவோடு உன் முகமும் இணைந்து கொண்டது.. ஈர்த்து கொண்ட உனதன்பு காதலானது.. அழகான வட்ட முகம் நிலவானது.. கண் சிமிட்டும் நட்சத்திரம் சிரிப்பானது.. ஈகையில் என் நெஞ்சம் மஞ்சம் ஆனது..

#
கவிதையின் காதலன்

உன் சிரிப்பு என்னை சிறையிட்டது.. விழி மூடவும் மறுத்து விட்டது.. சிந்திக்கவும் மனம் மறந்து விட்டது.. மீட்டு எடுக்க முடியாமல் மனம் வீழ்ந்து விட்டது..

#
கவிதையின் காதலன்

பிறல் மாறா நதியைப் போல, பிறை மாறும் இரவை போல, பிரியாதிருத்தலே காதல்...

#
Panneer Selvi

kathal kavethai

#
Ponmani Selvi

கதைத்தேன் இரவில் நிலவோடு.. கதைப்பேன் கனவில் உன்னோடு. காதலில் கதையடிப்பேன் கண்களோடு.... காதலில் சிறகடிப்பேன் விண்ணோடு.. பஞ்சனையில் நித்திரை கொள்வேன் நெஞ்சோடு.. நெஞ்சத்தில் மஞ்சம் கொள்வேன் உன்னோடு..

#
கவிதையின் காதலன்

அன்புக்கு உன்னிடம் இல்லை பஞ்சம்.. தேடி அடைந்தேன் உன்னிடம் தஞ்சம்,. குடி பெயர்ந்தேன் உன் இதயத்தில் கொஞ்சம்.. உன் பெயர் சொல்ல மறப்பதில்லை நெஞ்சம்.. உன் நினைவில் கொள்கிறேன் மஞ்சம்.. இனி அன்புக்கு எனக்கில்லை பஞ்சம்..

#
கவிதையின் காதலன்

நீங்கவில்லை உனது ஈர்ப்பு மனதிலே.. உன் நினைவுகளும் நிலைத்தது நெஞ்சிலே.. மலர்ந்தது மல்லி வாசம் மனதிலே.. பதுக்கினேன் உன்னை நெஞ்சிலே.. இணைந்தாய் நீயும் கண்ணிலே.. இரவும் கழிந்தது உன் நினைவிலே..

#
கவிதையின் காதலன்

சுண்டியிழுக்கும் கண்ணழகி.. மனம் ஈர்க்கும் காந்தழகி.. இசை இசைக்கும் குரலழகி.. எனை மயக்கும் சிரிப்பழகி.. முத்தான பல்லழகி.. சிறைப்படுத்தும் இதழழகி.. குயில் கொஞ்சும் பேச்சழகி.. சிங்கார நடையழகி.. சிறுத்த இடையழகி.. இலந்த பழ நிறத்தழகி.. அழகான முத்தழகி.. சொர்க்கமே ஆனாலும் சொக்காத சொல்லழகி..

#
கவிதையின் காதலன்

சூரியனுக்கு தூது விட்டேன் உன் அழகை நிழலிலும் காண.. தென்றலுக்கு தூது விட்டேன் உன் நிழலுக்கு குளிரூட்ட.. பிரம்மனுக்கு தூது விட்டேன் உன்னை படைத்ததற்கு நன்றி சொல்ல.. மேகத்திற்கு தூது விட்டேன் வானவில்லாய் பூமியில் உனை காட்ட.. நிலவுக்கு தூது விட்டேன் பௌர்ணமி நிலவாய் உன் முகம் காட்ட.. விழிகளை தூது விட்டேன் கொல்லும் அழகை கொள்ளை கொள்ள.. இசைக்கு தூது விட்டேன் உன் குரலுக்கு ஸ்ருதி கூட்ட.. மலருக்கு தூது விட்டேன் மலர்ந்த நாளுக்கு மலர் சூட்ட.. வாழ்த்துக்கு தூது விட்டேன் மலர்ந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல..

#
கவிதையின் காதலன்

தேவை இருந்தால் தேடி வருவான்.. தேவையானதை தேடி தருவான்.. விரும்புவதை சொல்ல நேரில் வருவான்.. போகும் இடமெல்லாம் பின்னால் வருவான்.. வழியை நின்று காதலை சொல்வான்.. விழியிலேயே பதில் சொல் என்பான்.. பிடிக்க ஆயிரம் காரணம் சொல்வான்.. ரசித்து பார்த்து அழகி என்பான்.. செதுக்கிய சிற்பம் நீ தான் என்பான்..

#
கவிதையின் காதலன்

பிடிப்பின்றி காதலை பிடித்து வைப்பதில்லை.. பிடித்து போன காதலை பிரித்து வைப்பதில்லை.. மறந்துவிட நினைத்தாலும் நினைவு விடுவதில்லை.. பிடித்தமான உன் முகமும் மறந்து போவதில்லை.. கடந்து போன காலங்களும் திரும்ப போவதில்லை.. திரும்பி வரும் உன் நினைவும் சோர்ந்து போவதில்லை..

#
கவிதையின் காதலன்

நான் பார்க்கும் பார்வையில் நீ அழகு.. புது மொழி பேசும் உன் விழி அழகு.. சிறகடிக்கும் இமையின் துடிப்பழகு.. இதழ் விரித்து நடை பழகும் உன் சிரிப்பழகு.. சிரிப்புடன் ஜொலித்திடும் உன் பல்லழகு.. அளவான அங்கமே சிறப்பழகு.. மனதில் நிற்கும் மாநிறம் மிக அழகு.. நினைவெல்லாம் உன் முகம் நிற்பது அழகு.. கண் காணும் இடமெல்லாம் நீ தான் அழகு..

#
கவிதையின் காதலன்

அன்பே.. உன்னை பார்த்த பின் தூக்கமில்லை எனக்கு.. விடியலே சென்ற பின்னும் விடிவதில்லை எனக்கு.. காற்றைவிட வேகமாக கடந்து செல்வது எதற்கு.. காணாமல் உன்னையும் இமை மூடாது எனக்கு.. துடிக்கும் இதயமும் உன் பெயரை சொல்வது எதற்கு.. என் மனதை இழுத்து சென்று வசியம் செய்யும் முகம் உனக்கு.. போதையூட்டும் உன்சிரிப்பு புது தெம்பூட்டுது எனக்கு.. கொடியில் பூத்த புதுப்பூவே உன் காதலை தா எனக்கு..

#
கவிதையின் காதலன்

இளகிய என் மனதை இரும்பாக்கினேன் நீ ஒரு காந்தம் என்பதை மறந்து.. என் மனதை இழுத்து கொள்கிறாய் மறக்க விடாமல் தொடர்ந்து.. தொடாதே என் மனம் இரும்பு என்றேன் ஒட்டிகொண்டாய் நான் ஒரு காந்தம் என்று..

#
கவிதையின் காதலன்

மாற்றத்தை தேடும் மனதை கண்டேன்.. மாறிடாத மனிதனின் குணத்தை கண்டேன்.. காதலே இல்லாமல் கடந்ததை கண்டேன்.. கனிவாய் இல்லாத துணையை கண்டேன்.. பாசத்தை தேடும் பெண்ணை கண்டேன்.. காணாத பாசத்தால் துடிப்பதை கண்டேன்.. சாய்ந்திட தோழியின்றி கலங்கியதை கண்டேன்.. காயப்பட்ட நெஞ்சத்தின் தவிப்பை கண்டேன்.. தேடிய பாசத்தில் வெறுமையை கண்டேன்.. ஈர்ப்பின்றி கண்களில் ஈரத்தை கண்டேன்.. அன்புக்கு ஏங்கும் உள்ளத்தை கண்டேன்.. அன்பான வார்த்தையில் மாற்றத்தை கண்டேன்.. திரும்பி வா இழந்த பாசத்தை தருகிறேன் என்றேன்..

#
கவிதையின் காதலன்

காரணமின்றி உன்னைதான் மனம் தேடுது.. ஒத்த சொல்லில் உன்னிடம்தான் தஞ்சமாகுது.. அனைத்து கொள்ள மனமும்தான் ஏக்கம் கொள்ளுது.. பேசவேண்டும் என்பதெல்லாம் மறந்து போகுது.. உன்னை கண்டதுமே நாவும்தான் வறண்டு போகுது.. உன் முகம்தான் என் மனதில் பூத்து குலுங்குது.. பிரிந்து போக மனமின்றி காத்து நிக்குது.. கண்ணில்லை காதலுக்கென்று யார் சொன்னது.. கண்டதால்தானே காதல் என்று சொல்ல தோணுது.. அறிமுகம் இல்லா உன் முகமே பழகி போனது.. உன் குரல் கேட்க என் மனமோ ஆவல் கொள்ளுது..

#
கவிதையின் காதலன்

முகம் கண்டு சொக்கி போனேன்.. குரல் கேட்டு குளிர்ந்து போனேன்.. தினமும் உன்னை கடந்து போனேன்.. காணாமல் ஒரு நாள் தவித்து போனேன்.. திரும்ப கண்டதும் குலைந்து போனேன்.. இதழ் சுழிப்பில் களவு போனேன்.. சிரித்த சிரிப்பில் நெகிழ்ந்து போனேன்.. தானாக உன் நினைவில் கலந்து போனேன்..

#
கவிதையின் காதலன்

ஆழ்மனதில் நங்கூரம் இட்டவள்.. சத்தம் இல்லாமல் வட்டமிட்டவள்.. சிரித்தே சிறை பிடித்தவள்.. கண்களால் வசியம் செய்தவள்.. பூவென்ற பெயர் பெற்றவள்.. நினைவளையில் குடி பெயர்ந்தவள்.. என் மனதை கொள்ளை கொண்டவள்.. என் நினைவை ஆட்கொண்டவள்..

#
கவிதையின் காதலன்

சொந்தங்கள் ஆயிரம் உண்டு சோகத்தில் கை கொடுக்க உண்தன் காதல் மட்டுமே எனக்குண்டு

#
Infas Sajeetha

தவிப்பை உன் கண்ணில் கண்டேன்.. தவிர்ப்பை உன் விலகலில் கண்டேன்.. எதிர்ப்பை உன் பதிவில் கண்டேன்.. எதிர்பார்ப்பை உன் மனதில் கண்டேன்.. இணைப்பை உன் நினைவில் கண்டேன்.. இழப்பை உன் பிரிவில் கண்டேன்.. இழந்ததை முடிவாய் கண்டேன்..

#
கவிதையின் காதலன்

உன்னை பார்க்காமலும், பேசாமலும் இருக்க பழகி கொண்ட நான்.. உன்னை நினைக்காமல் இருப்பதில் தோற்றுப் போனேன்.. துரத்தும் உன் நினைவுகளை துரத்தியே ஓய்ந்து போனேன்..

#
கவிதையின் காதலன்

சிலையாக நின்று பேசினேன்.. உன் உள்ளத்தில் நான் நிலையாய் இருப்பதால்.. ரசித்து பார்த்தேன் உன் அழகை.. அகல மறந்த விழி உன் மேல் விலகாமல் இருந்ததால்.. மனதில் உன்னை வடிவமைத்து வைத்தேன்.. நேரில் தினமும் காண முடியாததால்.. மனதின் ஈர்ப்பை உணர மறந்தேன்.. நீ தினமும் என்னை ஈர்த்து கொள்வதால்..

#
கவிதையின் காதலன்

தினம் கானும் உன் முகமும் சிந்தனையில் பூ பூக்கும்.. தினம் கேட்கும் உன் குரலும் செந்தேனாய் தித்திக்கும்.. பூ போன்ற புன்சிரிப்பும் இதழ் விரிய காத்திருக்கும்.. பௌர்ணமியின் முழு நிலவாய் என் மனமும் நிறைந்திருக்கும்..

#
கவிதையின் காதலன்

நினைவில் காணாத நேரமில்லை.. நிலவே நீயென்று கூறாமல் இல்லை தொட்டு கொள்ளும் தூரத்தில் நீயுமில்லை.. கண் காணும் இடமெல்லாம் நீயில்லாமல் இல்லை.. நித்திரையில் நீயின்றி நிம்மதி இல்லை.. மொத்தத்தில் நீயின்றி உறக்கமேயில்லை..

#
கவிதையின் காதலன்

என்னை தேடி வந்தவள் வேறொருவரை நாடி போவதில்லை.. காரணம்..! அவள் தேடி வந்தது என்னிடம் தேடாமல் கிடைப்பதால்..

#
கவிதையின் காதலன்

தொலைதூரம் நீ போனால் உன்னை தேடி வெகுதூரம் பயணிக்குறது உள்ளம்.. காதல் பிடிக்குள் சிக்கி காற்றும் திணறுகிறது கொஞ்சம் இடைவெளிவிடு பிழைத்துப்போகட்டும்... உன்னருகில் உன் நினைவில மட்டுமே என் மகிழ்ச்சியெல்லாம்... கற்பனையிலிருந்தவன் கண்ணெதிரே தோன்றவும் சொப்பனமோ என்றெண்ணியது மனம்... கவிதையெழுத சிந்தித்தால் சிந்தைக்குள் நீ வந்துவிடுகிறாய் கவிதையாக... பேச நினைத்த வார்த்தைகளும் தூரமானது உன்னருகில் இன்னிசையாக இதயத்துடிப்பும் உனை காணும் போதெல்லாம்... (ஆனந்த யாழாய்) இளைப்பாற இடம் கேட்டேன் இதயத்தில் இணைந்து வாழும் வரம் கொடுத்தான்... உன் நினைவில் என் நொடிகளும் கரைந்துக் கொண்டிருக்கு... ஊடலும் தேவை என்னில் உன்னை தேட குடைக்குள் இரு இதயங்கள் நனைகிறது காதல் மழையில்... பார்த்தநொடியே கண்களுக்குள் ஓவியமானாய் காத்திருக்கு விழிகளும் உன்னுடன் சேர்ந்து காவியம் பாட நீ மூச்சி காற்றுப்படும் தூரத்திலிருந்தால் நான் காற்றில்லா தேசத்திலும் உயிர் வாழ்வேன்... துன்பக்கடலில் தத்தளித்த போது துடுப்பாயிருந்து கரை சேர்த்தாய் மறந்துப்போன மகிழ்ச்சியை மறுபடியும் மலர வைத்தாய் நீ... விடுவித்து விடாதே உன் விழிகளிலிருந்து ஒளியிழந்திடுமே என் விழிகளும்... மொத்த கவலைகளும் கலைந்துப்போகிறது உன் நினைவு தென்றலாய் தீண்ட மௌனமாக பேசிட உன்னிதழ் மயங்கித்தான் போனது என் மனம்... விடுதலையில்லா சட்டம் வேண்டும் உன் காதல் பிடிக்குள் அகபட்டுக்கிடக்க...! என் உறக்கத்தை இரையாக்கி கொள்கிறது உன் நினைவு...! இருவரி கவிதையொன்று இணைந்து எழுதிடுவோம் இதழ்களிலே விழி திறக்கும்வரை காத்திருக்குறான் வண்ணக்கனவுகளோடு வண்ணத்துப்பூச்சியாக வானில் சேர்ந்துப்பறந்து ரசித்து மகிழ்ந்திட உன்னால் என் நொடிகள் ஒவ்வொன்றும் அழகானதே எனக்கு பிடித்ததையெல்லாம் நீ ரசிப்பதால் உனக்கு பிடிக்காததையெல்லாம் நான் தவிர்க்கிறேன் காற்றோடு கலந்து வரும் உன் நினைவுச்சாரலில் நனைகின்றேன் நானும்... மணலில் கிறுக்கியதை அலைவந்து அழித்தாலும் நாம் மனதில் கிறுக்கியது மரணம்வரை அழியாது... ஒப்பனைகள் தேவையில்லை உன் அன்பே போதும் என்னை அழகாக்க... ஓசையின்றி பேசிடுவோம் விழிமொழியில்..... ஒரு முறை நோக்கிடுயென் பார்வையை யார் பாதையையும் தொடராத விழிகள் உன் வழியை தொடருது உன்னிதய துடிப்போடு என்பெயரும் கலந்திட நம் காதலும் அழகாக மலர்ந்தது.... விடைபெறும் போதெல்லாம் பரிசாக்கி செல்கின்றாய் அழகிய தருணங்களை... மனதோடு நீ மழையோடு நான் நனைகின்றது நம் காதல்...! அடைமழையில் தப்பித்து உன் அனல் பார்வையில் சிக்கிக்கொண்டேன் நீ கவனிக்காமலே கடந்து செல்வதால் உன்மீது காதலும் வளர்கிறது...! பயணிப்போம் ஒரு பயணம் கரம்பற்றி களைப்பாகும் வரை காதல் தேசத்தில்...! உன்னை நினைத்து என்னை மறப்பதுதான் காதலென்றால் ஆயுள் முழுதும் வாழ்வேன் எனை மறந்து நீ கட்டளையிடாமலேயே கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன் உன் அன்பில் மனதில் காரிருள் சூழ்ந்தபோது உன் அன்பெனும் ஜோதியில் வாழ்வை ஒளிமயமாக்கினாய் உன்னளவுக்கு அன்புகாட்ட தெரியாவிட்டாலும் நீ மகிழ்ச்சியாக இருக்குமளவுக்கு என் பாசமிருக்கும் தழுவிச்செல்லும் தென்றலாய் உன் நினைவும் மனதை வருடிச்செல்கிறது இடைவெளிவிட்டு நாமிருந்தாலும் இதயங்கள் இணைந்தே பயணிக்கின்றது நீயில்லா பொழுதுகளில் உன் நினைவும் என் ரசணையாகிப்போனது என் கவலைகளுக்கு நீ மருந்தாகின்றாய் உன் கவலைகளை மறைத்து மௌன கவிதை நீ ரசிக்கும் ரசிகை நான் சுழற்றும் சூறாவளியிலும் நிலையாக நிற்கும் நான் உன் நினைவுத்தீண்டலில் தடுமாறிப்போகின்றேன் என்னை துளைத்தெடுக்கும் உன் நினைவுகளைவிடவா இவ்வுலகிலோர் கூர்மையான ஆயுதமிருக்கபோகிறது ஏதேதோயெழுத நினைத்து உன் பெயரை எழுதிமுடித்தேன் கவிதையாக நீ நலமா எனும்போதெல்லாம் நீயின்றி எனக்கேது நலம் என்கிறது மனம்... வருவேன் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய் மழையைபோல்... காயங்களும் மாயமாகும் என்னருகில் நீயிருந்தால் உன் நினைவுகளை மீட்டியே வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டேன் நெற்றியில் திலகமிட்டுக்கொள்ள வரம் தந்தவனுக்கு அன்பு பரிசாய் அவன் நெற்றிக்கொரு இதழில் திலகம் நாம் இமைக்காமல் பார்த்துக்கொண்ட நொடிகளில் நம் இதயங்களும் இடம்மாறிக்கொண்டது சாலையோர நடைப்பயிற்சியில் காலைநேர தென்றலாய் நீ... விட்டுச்சென்ற இடத்திலேயே நிலைத்துவிட்டேன் உன் நினைவுகளிலிருந்து விடுபடமுடியாமல்... நாணலும் நாணம் கொண்டு தலைசாய்ந்தது உன் காதல் மொழியில் நீ எழுதாதபோதும் பல கவிதைகள் ரசிக்கின்றேன் உன் விழிகள் சலிக்காத ரசணைகள் தூரத்து நிலவும் அருகில் நீயும்...! உன் அருகாமை போதும் தாய்மடியாய் நினைத்து நானுறங்க தனிமையும் பிடித்துப்போனது என்னுடன் உன் நினைவுகளும் வந்துவிடுவதால் தொலைவில் உன் குரல் கேட்டாலும் மனமேனோ பறக்கின்றது பட்டாம்பூச்சாய் ஆறுதல் கூற ஆயிரம்பேரிருந்தாலும் உன் அருகாமையைபோலாகுமா நீ பேசாத போது பேசி மகிழ்கிறேன் நீ பேசிய வார்த்தைகளோடு மனதுக்குள் உலகம் சுழல்வது நின்றாலும் உன் நினைவு என்னுள் சுழல்வது நிற்காது அன்பே தோஷங்கள் இல்லாத போதும் பரிகாரங்கள் செய்கிறேன் நம் காதலின் சந்தோஷத்திற்காக பூட்டி விட்டேன் இதயத்தை எங்கேனும் தொலைத்துவிடு திறவுகோலை மீண்டும் தொலையாமலிருக்க என்னிதயத்திலிருந்து என்னவன் எங்கு ஒளிந்து கொண்டாலும் உன் நினைவிடமிருந்து தப்பிக்க முடிவதேயில்லை மனதோடு மாலையாய் எனை சூடிக்கொள் உன் உள்ளத்தில் உதிராத மலராய் நானிருப்பேன் ஒரு விழி நீ மறு விழி நான் இரு விழிகள் கொண்டு அமைப்போமொரு காதல் உலகை நாம் வசிக்க என்றோ நாம் எதார்த்தமாய் பேசிய வார்த்தைகளில் எல்லாம் காதல் நிரம்பி வழியுதே இன்று என் கண்களுன்னை காணும் போது உன் கண்ணாமூச்சி ஆட்டத்தில் களைத்து போனது என் விழிகள்தான் உனக்காய் காத்திருந்து எந்த ஜென்மத்தில் செய்த தவமோ இந்த ஜென்மத்தில் கிடைத்தாய் நீயும் வரமாய் என்னவனே உனக்கான எதிர்பார்ப்பில் இத்தனை காதலென்றால் விலகியே இருப்பேன் நம் காதலுக்காக சொந்தமென்று என்னுள் நீ வந்த பின்னே இனி நான் தனிமையில் தவிர்த்து இருக்க அவசியமில்லை காதல் ஒரு உணர்வு பூர்வமானது அதை தன் துணையிடம் இருந்து ஆத்மார்த்தமாக பெற வேண்டும் அச்சத்தையும் மிச்சம் வைக்காமல் உச்சம் தொட்ட உன்னிடம் கேட்பது இந்த முத்தம் மட்டுமே அதுவும் நித்தம் வேண்டுமே அவன் தரும் பரிசுகளில் என்றும் நான் விரும்புவது காதலுடன் அவன் வைத்து விடும் ஒரு முழப் பூவே

#
John Sophi

உன் பார்வையால் விதைக்கப்பட்ட காதல் விதை உன் நினைவு என்னும் தீரா நதி கொண்டு இப்போது விருட்சமாய்! உன் வளையல் ஓசையும் கொலுசின் ரீங்காரமும் என்னை உன் வாசல்நோக்கி இழுத்து வந்த நாட்கள் அவை!!பார்வைகள் பரிமாறியே பசி மறந்த கணங்கள்!!! உன் குரல் ஒன்றே இசையான தருணங்கள்! உன் பெயர் ஒன்றே "அலாரம்" ஆன நாட்கள். உன்னோடு நடந்தபோது உன் கரங்கள் பற்றி அல்ல உன் மனதை பற்றி அல்லவா நடந்தேன்!! மெய் தீண்டவில்லையென்றாலும் நம் உயிர்கள் தீண்டியது உண்மையல்லவா!!! நம் வாழ்க்கையில் வசந்தத்தால் வார்க்கப்பட்ட நாட்கள் அவை. பாதைகளும் பயணங்களும் ஒன்றான பொழுதுகள் அவை!!! வாழாமல் வாழ்ந்த வாழ்க்கை அவை....... மறுத்திருக்கிறாய் காதல் இல்லையென்று! அடி பாவி! உன் பார்வையின் மொழி புரியாதா எனக்கு? என்ன கேட்டாலும் மவுனத்தையே வினாவாய் தந்தாய்! இறுதியில் மவுனமே விடையானது! இப்போதும் மறுக்கிறாய்! மறுக்காதே உனக்குள்ளும் ஒரு தீராநதி ஓடிகொண்டுதானிருக்கிறது,,,

#
Bharathi Bharathi

அழகாய் மின்னும் உன் முகம் கண்டேன் வானத்து நிலவே நீதான் என்றேன்.. சுண்டி இழுக்கும் இரு விழி கண்டேன் சுடர்விடும் சூரியன் நீதான் என்றேன்.. பட்டை தீட்டிய கருவிழி கண்டேன் கருந்திராட்சை கொடியில் பூத்தது என்றேன்.. காற்றில் கலைந்தாடும் கூந்தலை கண்டேன் தோகை விரித்தாடும் மயிலே என்றேன்..

#
கவிதையின் காதலன்

சத்தமிடாமல் என்னை வட்டமிட்டவள். வேல்விழி கொண்டு வீழ்த்த நினைத்தவள்.. சேலையில் என் விழியை கட்டி வைத்தவள்.. புன்னகையில் என்னை சிறைப்பிடித்தவள்.. காந்தமாய் என்னை இறுக்கிக் கொண்டவள்.. கொஞ்சும் குயிலாய் என்னை கொஞ்சிட நினைத்தவள்.. ஆழ்ந்து விட்ட என் மனதை ஆட்கொண்டவள்.. இடை தரும் இடைவெளியில் குளிர செய்தவள்.. மடியில் இடம் தருகிறேன் வா என்றவள்..

#
கவிதையின் காதலன்

'போடா லூசு' என நீ சொல்லும் போது அது என்னை மேலும் உன் மேல் பிரியமாக்குகிறது! வேறு யார் சொன்னாலும் ஆத்திரம் தரிக்கும் வார்த்தை நீ சொன்னால் மட்டும் ஆனந்தம் தரிக்கிறது!! வார்த்தைகளும் உயிர் தரிக்குமா என்ன! நீ சொன்னால் என் வாழ்க்கையே உயிர் தரிக்கிறது ! வார்த்தைகள் தரிக்காதா என்ன! உன் வருகையால் மட்டுமல்ல உன் வசவுகளால் கூட வானம் வசப்படும். உன் செல்ல சீண்டல்களும், பொய் கோபங்களும் சிறு, சிறு சாரலாய் பெரும் மழையாகி என்னை நனைக்கிறது!!!!.

#
Bharathi Bharathi

காலையில் கோப்பையில் உன் காதல் நிரப்பி அருந்துகையில் தொடங்குகிறது நாள்! நீயும் நானும் நடந்த சாலையில் நம் காதலை கூட்டிக்கொண்டு நடக்கிறேன்!! கேட்கிறார்கள் என்ன தனியே செல்கிறிர்கள் என்று!! பாவம் அவர்களுக்கு தெரியாது என்னுடன் நம் காதல் வருகிறதென்று........ எல்லோரும் சொல்கிறார்கள் எனக்கு ஞாபக மாறதி என்று, ஆமாம் உன்னை தவிர எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன். உனக்கு ஆயிரம் சிந்தனைகள்!! எனக்கு நீ மட்டுமே சிந்தனை,!!இரவில் கண் மூடுகின்றேன் கனவிலும் நீ வருவாய் என,!!! இப்படி உன்னில் தொடங்கி உன்னில் முடிகிறது என் நாட்கள்!!!!!. ️️️

#
Bharathi Bharathi

ஒவ்வொரு முறை நீ ஒதுக்கும் போதும் காதல் என்னை அணைக்கிறது! ஒவ்வொரு முறையும் உன் நினைவுகளால் என் கண்ணீர் குளத்தை நிரப்பி விடுகிறாய்.அது ஆழமாவது தெரியாமல்!! என் கண்ணீர் குளத்தில் நீ கல்லெறியும் போதெல்லாம் எழும்பி வரும் நினைவலைகள் உன் இதயம் நனைத்து என் வலிகளை சொல்லட்டும்.......

#
Bharathi Bharathi

என் இனியவனுக்காக அன்பின் அடையாளமே! காதலின் முகவரியே! நாட்கள் நகர்ந்தாலும் நம் அன்பின் ஆழம் அணு அளவும் அசையாது! காகிதத்தில் அடக்கிவிட வார்த்தைகளோ போதவில்லை, கடவுளிடம் வழி கேட்டேன்,காதலின் இலக்கணமே நீ என்றார்! இணைந்தே செல்வோம் வாழ்வின் இறுதி வரை!!!!

#
Gowri Pandiselvam

அன்பில் அனைத்து கொள்ளும் காதலை விட கஷ்டத்தில் கண்ணீர் துடைக்கும் காதலுக்கே பலம் அதிகம்.. அன்பானவரின் அரவணைப்பு மட்டுமே கவலைகளை மறக்க செய்யும், காதலை துளிரச் செய்யும்..

#
கவிதையின் காதலன்

சேர்த்து வைத்த காதல்தனை முழுதாய் தந்தேன் உனக்கு.. எனையாளும் உன் சிரிப்பை குறையாமல் தந்திடு எனக்கு.. பூத்து குலுங்கும் உனதழகில் பித்தானது எனக்கு.. மனம் மயங்கும் தமிழ் அழகை அச்சாக்குவேன் உனக்கு..

#
கவிதையின் காதலன்

சிரிக்கும் பூவை வெட்டி எடுத்து.. வெள்ளை உடையில் கட்டி வைத்து.. வெள்ளை உள்ளம் உள்ளே வைத்து.. மயக்கும் சிரிப்பை உதட்டில் வைத்து.. கெட்டி மனதை கண்ணில் வைத்து.. வெள்ளி சிரிப்பை சிதற வைத்து.. கண்ணில் காதலை மறைத்து வைத்து.. பார்த்த பார்வையில் மயங்க வைத்து.. சிரிப்பு ஒன்றை முதலாய் வைத்து.. சிந்தனையை சிதற வைத்தவள்..

#
கவிதையின் காதலன்

எல்லை மீறி நேசித்தேன் உன்னை.. என் சொல்லை மீறி விட்டு சென்றாய் என்னை.. தன்னை மீறி காதலித்தேன் உன்னை.. முகம் காணாமல் கடந்து சென்றாய் என்னை.. வண்ண வண்ண சேலை உடுத்தும் பெண்ணே. என்ன வண்ணம் உடுத்தி வந்தாய் இன்று.. மயக்கத்தில் கிறங்க செய்வாய் என்று.. கண் காண காத்திருக்கேன் கால் கடுக்க நின்று.. உன் தரிசனம் கிடைக்குமா இன்று..

#
கவிதையின் காதலன்

விண்ணுக்கு வில் எய்தவள்.. வானவில்லின் வண்ணம் கொண்டவள்.. விழி ஈர்ப்பில் காந்தமானவள்.. சிரிக்கும் இதழுக்கு சொந்தமானவள்.. மனதோடு மனதாக ஒட்டி கொண்டவள்.. சிறகடிக்கும் மனதிற்கு தித்திப்பானவள்.. சிந்திக்கும் மனதிற்கு சிறகானவள்.. கண் காணும் இடமெல்லாம் சிற்பமானவள்.. இதயத்தில் வண்ணம் தீட்ட சரியானவள்.. இல்லறத்தில் இணைந்திட தகுதியானவள்.. இன்பத்தில் மூழ்கிட துடிப்பானவள்.. துணை சேரும் கைகளுக்கு அன்பானவள்..

#
கவிதையின் காதலன்

சிரிக்கும் சிலையை நேரில் கண்டேன்.. சித்திரமோ என்ற ஐயம் கொண்டேன்.. புது மொழி பேசும் இரு விழி கண்டேன் இணைந்து நோக்கும் உறுதியை கண்டேன்.. வில் போல் வளைந்த புருவம் கண்டேன்.. வானவில்லோ என்ற ஐயன் கொண்டேன்.. சிரிக்கும் இதழின் சுழிவை கண்டேன் மனமும் அது போல் சுழல்வதை கண்டேன்.. கட்டிய சேலையில் அழகை கண்டேன் செதுக்கிய சிற்பத்தை நினைவில் கொண்டேன்.. சேலையில் உடலின் நளினம் கண்டேன் இடை மடிப்பும் சேலையில் மறைந்திட கண்டேன்.. அளவோடு அங்கங்கள் அமைந்ததை கண்டேன் ஆஹா... இதை விடவா சீன சுவர் அதிசயம் என்றேன்.. அளவெடுத்து சிலை வடித்த சிற்பியே சிகரம் என்றேன்..

#
கவிதையின் காதலன்

வண்ண வண்ண சேலை கட்டி கொண்டாட்டம் ஆகிடுவாள்.. வண்டாட்டம் சுத்தி வந்து காதோரம் பேசிடுவாள்.. விழி வழியில் அம்பு எய்து பாசவலை பின்னிடுவாள்.. கன்னம் குழி எனை ஈர்க்க இதழ் விரித்து சிரித்திடுவாள்.. தேனூறும் பேச்சியிலே மெய் மறக்க செய்திடுவாள்.. பாலாறு பாய்வது போல் ஒரு பார்வை பார்த்திடுவாள்.. கரை புரண்டு ஓடாமல் இமை இமைத்து தடுத்திடுவாள்.. பூலோகம் மறந்திருக்க பூவிதழை காட்டிடுவாள்.. தினம்தோறும் அவள் நினைவால் மனம் நிறைய வைத்திடுவாள்.. எனை பார்க்கும் போதெல்லாம் இதயத் துடிப்பை மிகைத்திடுவாள்.. படப்படக்கும் இதயத்தையும் அவள் மனதில் சிறை வைப்பாள்.. அவள் இருக்கும் இடம் தேடி என் மனதை அலைய வைப்பாள்..

#
கவிதையின் காதலன்

*காதல்(Anbu) பல செய்தால் அது காலமும் தான் நன்று... காதல்(Love) ஒன்று செய்தால் அது அனைத்திலும் தான் தீங்கு... காதலை(Love) விட்டு காதல்(Anbu) செய்வோம்... அனைவரையும் நாம் காதல்(Anbu) செய்வோம்... காதல்(Love) என்பது வேண்டும் அது காதலாகவே(Anbu) வேண்டும்......Gud Luck... *

#
Dhivya Mani

என் மனதில் உன் உருவம் பதிந்தது நான் பதித்ததை நீ பகிர்ந்ததும்.. என் இதயத்தில் உன் அன்பும் பதிந்தது என்னை காண நீ காத்திருந்ததை கண்டதும்.. என் விழியில் உன் சிரிப்பு பதிந்தது உன் இதழின் அழகை கண்டதும்.. என் வாழ்க்கை உன்னுடன் இணைந்தது உன்னுள் நான் என்னை கண்டதும்..

#
கவிதையின் காதலன்

காதல் மனக்கதவை தட்டி, தட்டி திறக்க செய்யும் திறந்ததும் மனதில் புகுந்திட செய்யும்.. புதுவிதமாய் மனதை மகிழ செய்யும்.. பூவின் மென்மையை தழுவ செய்யும்.. மலர்ந்த புன்னகை முகத்தில் தெரியும் .. மனதின் நிலையும் முகத்தில் தவழும்.. கண்கள் காந்தமாய் ஈர்ப்பது தெரியும்.. கண்களில் பேசிடும் புது மொழி தெரியும்.. வெட்கத்தின் முகவரி புதிதாய் தெரியும்.. தொட்டு விடும் தூரமும் தொலைவாய் தெரியும்..

#
கவிதையின் காதலன்

காதல் என்பது மாயமானது.. பாசத்தில் வலிமையானது.. பார்வையில் தெரிந்து கொள்வது.. பேசாமல் புரிந்துகொள்வது.. சந்திக்காமல் உணர்ந்து கொள்வது..

#
கவிதையின் காதலன்

இருவரின் காதலும் வாழ்க்கையோடு இணைந்து விடுவது மட்டுமில்லை காதல்.. இணைந்து விட முடியாத நேரத்திலும் நினைவுடன் இணைந்து வாழ்வதே காதல்.. இஷ்டப்பட்டவள் கிடைப்பது மட்டுமா காதல்.. கை கூடாத காதலிலும் இஷ்டப்பட்டவள் கஷ்டப்படாமல் வாழ வேண்டும் என்று வாழ்த்துவதே காதல்..

#
கவிதையின் காதலன்

கண்ட முகமும் காணாமல் போகும்.. காணாத மனமோ கலை இழந்து போகும்.. கண்ட என்னையும் மறந்ததே போகும்.. காணாத முகமே நினைவாய் ஆகும்..

#
கவிதையின் காதலன்

இளமையில் என்னை இழந்து விட்டேன்.. காதல் வாழ்க்கையில் வீழ்ந்து விட்டேன் .. கிடைத்த வாய்ப்பை தொலைத்து விட்டேன்.. கனவில் மனதை மிதக்க விட்டேன்.. காதலில் கலந்து களைத்து விட்டேன்.. தோல்வியை தழுவியே வாழ்ந்து விட்டேன்.. நிம்மதி என்பதை மறந்து விட்டேன்.. சகித்து கொள்ள பழகிவிட்டேன்.. காலம் கடந்துதான் தெரிந்து கொண்டேன்.. ஏமாந்தேன் என்பதையே புரிந்து கொண்டேன்..

#
கவிதையின் காதலன்

நிலவின்றி வானத்திற்கு அழகில்லை.. நட்சத்திரமில்லா இரவில் மேகமில்லை.. உன் நினைவின்றி என் மனம் நிலையில் இல்லை.. நீ இன்றி இவ்வுலகில் நானில்லை.. காற்றுல்ல இடத்திலும் உயிரில்லை.. உன் சிரிப்பின்றி என் கண்ணில் ஒளியில்லை.. மொத்தத்தில் நான் இங்கு இயல்பாய் இல்லை..

#
கவிதையின் காதலன்

ஏழு வண்ண சேலை கட்டி வானவில்லாய் கண்ணை காட்டி காதல் என்ற அம்பெய்து என்னை களவாடி சென்றது எங்கே?.. தனிமையில் இனிமை கொண்டு கண் கவர சிரித்து கொண்டு கலகலப்போடு போட்டி கொண்டு கண் மறைந்து போனதெங்கே?. தித்திக்கும் தேன் தமிழில் தினம் எழுதும் தமிழ் வரியை வாசிக்காமல் சென்றதெங்கே?. காத்து நிக்கும் கொடியின் மேல் தினம் பூக்கும் மலர்களை போல் பூக்காமல் சென்றதெங்கே..?

#
கவிதையின் காதலன்

ஒவ்வொரு முறை நீ என்னை ஒதுக்கும் போதும் காதல் என்னை அணைக்கிறது,!! ஒவ்வொரு முறையும் உன் நினைவுகளால் என் கண்ணீர் குளத்தை நிரப்பி விடுகிறாய் அது ஆழமாவது தெரியாமல்!!!நீ என் கண்ணீர் குளத்தில் கல்லெறியும் போதெல்லாம் எழும்பும் நினைவலைகள் உன் இதயம் நனைத்து என் வலிகளை சொல்லட்டும்!!!!

#
Bharathi Bharathi

வலை வீசி பிடிக்க முடியாத அன்பையும்.. விலை கொடுத்து வாங்க முடியாத பாசத்தையும்.. இதயத்தில் வேரூன்றி வளர செய்து குணத்தால் மட்டுமே அறுவடை செய்தவள் நீ.. எனக்கு பிடிக்கும் படி உன்னை படைத்த இறைவன்.. ஏனோ ..? உனக்கு பிடிக்கும் படி என்னை படைக்கவில்லை.. ரசிக்கும் அனைவரையும் மனம் நேசிப்பதில்லை.. ஆனால் நேசிக்கும் ஒருவரை எவ்வளவு ரசித்தாலும் மனம் சலிப்பதில்லை..

#
கவிதையின் காதலன்

அருகில் இருந்த போது ரசிக்காத உன்னை.. நீ விலகி செல்லும் போது உன் நிழலையும் ரசிக்கிறேன்.. இன்னலை இலகுவாக்கும் உன் சிரிப்பையும்.. மின்னலை குருடாக்கும் உன் கண்களையும் காணமல் தவிக்கிறேன்..

#
கவிதையின் காதலன்

என் விழிகளுக்கு பவர் கலர் கலராக சுடிதாரை பார்த்த       என் விழிகள் இப்பொழுது ஒரே ஒரு சுடிதாரை மட்டும் பார்க்க                                 விரும்புகிறதுஆம்! என்னவளை பார்த்த என் விழிகள்       என் இதயத்திடம் ஆழமாக பதி                                      வைத்து விட்டது

#
Saravanan Saravanan

பள்ளி படங்கள் காதலிக்க உன் மொழியை தெரிந்துகொள்ள           தமிழ் புத்தகத்தை படித்தேன் உன்னை கண்களால் காண         கணக்குப் புத்தகத்தை படித்தேன் உன் அன்பே அரிய ஆங்கில                         புத்தகத்தை படித்தேன் உன் இதயத்தில் அறியா அறிவியல்  புத்தகத்தை படித்தேன் நீயும் நானும் வாழ்க்கையில்                            சேர வேண்டுமென்று காதல் வரலாற்றை நான் படைத்தேன் ?

#
Saravanan Saravanan

மரியாதை உன்னை காண்பதே என்                        கண்களுக்கு மரியாதை உன்னை நினைப்பதேன் என்                          நெஞ்சுக்கு மரியாதை உன்ன சுவாசிப்பதே என்                      இதயத்துக்கு மரியாதை உன் பேரை சொல்வதே என்                             நாவலுக்கு மரியாதை நான் உன்னை காதலிப்பதே                             காதலுக்கு மரியாதை

#
Saravanan Saravanan

காதல் இனிதுகண்களுக்குள் கனவு வளக்கலாம்.....       பூ வளர்க்க முடியுமா? முடியும் இதயத்துள் ரத்தம் பாயலாம்        தேன் பாய முடியுமா ? முடியும் காகிதத்தில் கனைத் தொடுக்கலாம்...       கவிதை தொடுக்க முடியுமா?                                                          முடியும் காதலிக்க கற்றுக்கொள்                                       வாழ்க்கையை

#
Saravanan Saravanan

தீண்டியது அவள் என்னவள் தலையில்      இரண்டு ரோஜா பூவை மெதுவாக எடுத்தேன்       முள் தீண்டி விடக்கூடாது என்று ஆனால் தீண்டியது       முள் அல்ல அவள் தான்

#
Saravanan Saravanan

வரம் வேண்டும். துள்ளி ஓரம் அருவி வேண்டும் தூய காற்று வீச வேண்டும் வட்ட நிலா வானில் வேண்டும் சுட்ட சங்காய் மணமும் வேண்டும் வறுமை இல்ல வாழ்வு வேண்டும் முதுமையிலும் இளமை வேண்டும் ஜாதி இல்லாத சமூகம் வேண்டும் சண்டே இல்லாத உலகம் வேண்டும் மதங்கள் எல்லாம் மதயவேண்டும் மனித நேயம் மலர் வேண்டும் தாயினை வணங்க வேண்டும் தந்தை போடு இணங்க வேண்டும் உள்ளத்தில் ஒருத்தி இருக்க வேண்டும் அவள் உயிரில் சென்று கலக்க வேண்டும் இதயத்தில் ஈரம் இருக்க வேண்டும் எந்நாளும் அது சுரக்க வேண்டும்

#
Saravanan Saravanan

இளமை அழகு         முதிராதவரை இயற்கை அழகு         அது அழியாத வரை மலர் அழகு         அது வாடாத வரை காதல் அழகு         அது பிரியாத வரை

#
Saravanan Saravanan

நீ அடித்து விட்டு போயிருந்தால்     அப்போழுதே மாந்திருப்பேன் நீ இடித்து விட்டு போகிறாயே      நான் எப்படி தூங்குவது நீ சீறி விட்டு சென்றிருந்தால் என் சிறகை மடக்கி இருப்பேன்                                                      ஆனால் நீ சிரித்து விட்டு போகிறாயே நான் சிறைக்கு எப்படி தூங்குவது

#
Saravanan Saravanan

நான் உன் இதயத்தில் முளைக்கா மலரானாலும் என் இருதயத்தில் விழுந்த முதல் மலர் நீ. என் இதயத்தில் வீசிய வசந்தம் நீ. என் சுவாசத்தில் கலந்த நறுமணம் நீ. இதயத்துடிப்புடன் இணைந்த எண்ணங்கள் நீ என் காதலின் ஒவ்வொரு பக்கங்களிலும் குறையுறா அன்பின் சரிதை நீ நீ என்பதற்குள்ளே வாழ்பவள் நான் என்றால் என் கரம் பற்றிய என் வாழ்கைக்  கடிகாரம் நீ.

#
Saravanan Saravanan

சொல்ல முடியாத அதீத வலி என்பது நமக்கு மிக நெருங்கிய ஓர் உறவை நாம் கண் முன்னே பிறர் உரிமை கொண்டாடுவது

#
Saravanan Saravanan

உன்னோடு வாழ விருப்பமில்லை               நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன்

#
Saravanan Saravanan

கண்ணீரும் கடிதம் எழுதும் என உணர்த்தியவள் நீயடி ! யார் ? கூறினார்கள் காதலுக்கு கண் இல்லை என்று அது காவியம் அல்லவா எனது காதலும் அதில் 'ஒன்று !

#
Black Queen

போகும் திசை தெரியா மேக கூட்டங்கள் என்னவள் நிழலினை பின் தொடர இடியோசை கேட்டு அவள் என்னை அனைத்த படியே ஒரு பயணம் !!

#
Black Queen

மீண்டும் பிறந்து வாடா வாடா என்று அவளின் விழிகள் பேசிய பேச்சை புறக்கணிக்க முடியாமல் தயங்கி நின்றது

#
Smkumaran kavithai

என்னைப் பரவசமாக்கப் பொழியும் பனிக்காற்றால் பக்கத்தில் உன்னைத் தேடுது மனது ஸ்பரிசித்திருக்க

#
Muthulakshmi Ranjithkumar

விலை குறைந்த சேலையிலும் விலைமதிப்பில்லா அழகை கண்டேன்.. ஆடாத சிலை ஒன்றின் ஆடிய ஆட்டம் கண்டேன்.. பாடும் பாட்டுக்கெல்லாம் தாளம் தவறா நாட்டியம் கண்டேன்.. தோகை விரித்தாடும் மயிலோ என்று சிந்தை கலங்கி மயங்கி நின்றேன்.. உன் கண்ணக் குழியின் ஆழத்தை கண்டு மகிழ்ந்தேன்..

#
கவிதையின் காதலன்

கையில் கிடைத்த செந்தேனை ருசிக்க முடியாமல் தவித்தேன்.. கனவில் உனை நினைத்து ருசிக்க முடியாததை ரசித்தேன்.. அனுதினம் புது விதமாய் கொடியிடையை அணைத்தேன்.. மூழ்கிடாமல் உன் நினைவில் மிதந்திட நினைத்தேன்..

#
கவிதையின் காதலன்

அழகான உன் முகத்தை கண்டிட ஆசை.. விழியோடு புது மொழியில் பேசிட ஆசை.. மன மயக்கும் உன் விழிக்கு மை பூச ஆசை.. சிலை ஒன்று நெஞ்சத்தில் வடித்திட ஆசை.. தோள் மீது தலை சாய்ந்து அமர்ந்திட ஆசை.. கையோடு கை கோர்த்து நடந்திட ஆசை.. வலை இசையில் ஒன்றாக கலந்திட ஆசை.. பூவிற்குள் தேன் குடிக்கும் வண்டாக ஆசை.. சிறகடிக்கும் பட்டாம்பூச்சி போல பறந்திட ஆசை.. மணமணக்கும் பூவிதழ் மேல் அமர்ந்திட ஆசை.. தலை சாய்த்து உன் மடியில் உறங்கிட ஆசை.. காலங்கள் கடந்தாலும் கலைந்திடாத ஆசை..

#
கவிதையின் காதலன்

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அணைத்திட தோன்றிய உறவு நீ தான்.. விழி வழியில் மது புகட்டி மயங்க செய்தவள் நீ தான்.. கனிவான மனதோடு மணம் கொண்டவள் நீ தான்.. தனிமையில் தளராத மனம் கொண்டவள் நீ தான்.. என் மனதை உன்னோடு இளக செய்தவள் நீ தான்.. மனம்தான் அழகு என்பதை உணர செய்தவள் நீ தான்.. உன்னோடு தோள் சாய எனக்கும் ஆசையுண்டு என்றவள் நீ தான்.. மனமிருந்தும் வெளிக்காட்டாமல் மறுத்தவள் நீ தான்.. தமிழுக்கு இதமாக தமிழில் பெயர் வைத்தவள் நீ தான்.. முகம் காணாமல் குரல் கேட்காமல் என் மனம் கவர்ந்தவள் நீ தான்.. நின்று விட நினைத்த இதயத்தையும் நிற்காமல் துடிக்க வைத்தவள் நீ தான்.. என் நினைவலையில் எப்போதும் நீ தான்.. என் மனதுக்கு சொந்தக்காரி நீதான்..

#
கவிதையின் காதலன்

பூ பூக்கும் பூங்கொடிக்கு இடமில்லை என்பவர் உண்டோ.. அசைந்தாடும் கொடியின் மேல் எறும்பு ஊரா இடமுண்டோ.. தேனூறும் இடம் தேடி சுற்றாத வண்டுண்டோ.. இதழ் விரிந்த மல்லிகையின் மணம் வீசா காற்றுண்டோ.. செந்தேன் குரல் கேட்டும் மனமயங்கா ஆள் உண்டோ.. சுண்டி இழுக்கும் சிரிப்பிதழில் சிக்காத மனமுண்டோ... மனம் மயக்கும் உன் கருவிழி கண்டு தவம் களையா காளையர் உண்டோ..

#
கவிதையின் காதலன்

சுண்டி இழுக்கும் விழிகளை கண்டு வசியம் செய்யும் மை என்றேன்.. மயக்கி விடும் சிரிப்பை கண்டு குப்பியில் அடைத்த மது என்றேன்.. மின்னும் மூக்குத்தியின் அழகை கண்டு பகலிலும் மின்னும் நட்சத்திரம் என்றேன்.. சிரிக்கும் இதழின் அசைவை கண்டு மனதை புதைக்கும் புதைக்குழி என்றேன்.. சிரிக்கும் ஓசையின் ராகம் கேட்டு இதழ்கள் மீட்டும் நாதம் என்றேன்.. கூவும் குயிலை உன் குரலில் கேட்டு ஏழு ஸ்வரங்களின் பிறப்பிடம் என்றேன்.. அழகாய் மின்னும் உன் முகம் கண்டு பௌர்ணமி நிலவே தோற்கும் என்றேன்.. சங்கு கழுத்தின் வளத்தை கண்டு பணிச்சறுக்கும் தடம் என்றேன்.. மேடிட்டு நிற்கும் முன்னழகை கண்டு ரத்தத்தை பால் ஆக்கும் அதிசயம் என்றேன்.. குழியுடன் கூடிய வயிற்றை கண்டு குழந்தைகள் பயிற்சி பெறும் குகை என்றேன்.. உடுக்கை போன்ற இடையை கண்டு குழந்தைகள் அமரும் சிம்மாசனம் என்றேன். மொத்தமாக உன் அழகை கண்டு பிரம்மன் செதுக்கிய சிலை என்றேன்..

#
கவிதையின் காதலன்

தனிமை என்னை தாலாட்டுது உன்னையும் எனக்கு நினைவூட்டுது.. உன் அழகும் என்னை திகைப்பூட்டுது.. இனிமை மிகவும் அழகானது உன் நினைவால் கவிதை பூப்பூக்குது.. இளமையின் நினைவு அழியாதது.. முதுமையில் இதுவே சுகமானது.. உன் சிந்தனை எனக்கு சிறகானது.. துள்ளி குதிக்க மனது இயல்பானது.. சிந்தித்ததும் கவிதை உருவானது.. உன் நினைவே கவிதைக்கு கருவானது..

#
கவிதையின் காதலன்

புரியாத போது தொடங்கும் வாழ்க்கை புரியும் போது முடியும்.. புரியாத போது தொடங்கும் காதல் புரியும் போது பிரியும்.. மணம் புரிந்த பின் தோடங்கும் காதல் மனம் முறியாமல் தொடரும்..

#
கவிதையின் காதலன்

உன் விழிகளாக உன்னுள் நான் இருப்பேன்.. உன்னை விலகிடாமல் என்றும் துணையிருப்பேன்.. காதல் கடலென நீ இருக்க தவழும் நிலவென நான் இருப்பேன்.. மனதில் சந்தோசம் நிலைத்திருக்க நிழல் போல் உன்னைத் தொடர்ந்து இருப்பேன்.. பிணைந்து நானும் ஈர்த்திருப்பேன்.. ஈகையுடன் உன்னுள் கலந்திருப்பேன்..

#
கவிதையின் காதலன்

கண் உறங்கும் நேரத்தில் கவிஞனானேன்.. காதல் கவிதைக்கு நெருக்கமானேன்.. எழுதும் வரிகளில் ஆழ்ந்து போனேன்.. அனுதினம் பதிவிட பழக்கமானேன்.. பிடித்தவரின் பதில் கண்டு நெகிழ்ந்து போனேன்.. வாழ்க்கையின் குறை கேட்டு குழப்பமானேன்.. உடல்நல குறை கேட்டு வருத்தமானேன்.. சிரித்த முகம் கண்டு பிரியமானேன்.. உரையாடி அவருடனே ஆழ்ந்து போனேன்.. கண்ணுறங்கும் நேரத்தையும் மறந்து போனேன்.. இதயத்தின் துடிப்புக்கு துணை போனேன்.. சேராத கண்களோடு பழக்கமானேன்.. காணாத உலகத்தில் தஞ்சமானேன்.. செந்தேன் சிரிப்பில் நான் விருப்பமானேன்.. காணாத நாளெல்லாம் தவித்து போனேன் தோள் சாய இடமின்றி கலங்கிப் போனேன் கிடைக்காத தோள் என்று பதறி போனேன்.. முடியாது இனி என்று துணிந்து போனேன்.. பூ பூக்கும் கொடி தேடி பறந்து போனேன்..

#
கவிதையின் காதலன்

மனதில் நினைத்து இடைவெளி கொடுத்து மனதை தொலைப்பது காதல்.. பாஷை தெரியாமல் முழித்து பேச முடியாமல் தவித்து கண்களால் பேசும் காதல்.. இதயத்தில் கனிந்து இன்பத்தில் திகழ்ந்து இதழ் மட்டும் இணையும் காதல்.. இருவரும் இணைந்து ஆசையை பகிர்ந்து ஆழ் மனதில் பதிக்கும் காதல்.. நித்தமும் காணாமல் நித்திரை கொள்ளாமல் ஏங்கும் காதல்.. காண முடியாது என்றாலும் காணும் வரை காத்து நிற்கும் உண்மை காதல்..

#
கவிதையின் காதலன்

சிக்குண்ட மனதில் சிதறுண்ட உன் நினைவு கட்டுண்டு கிடந்தது கவனிக்க நீ இன்றி.. சிக்குண்ட என் மனதை சிதறுண்ட உன் நினைவை சரி செய்ய தினமும் போர் புரிந்தேன் உன்னிடம் .. கண்ணோடு கண் கலந்து காதல் என்ற வில் கொண்டு விட்டேன் அம்பு.. அம்பு அன்பானது.. சிக்குண்ட என் மனம் சீரானது சிதறுண்ட உன் நினைவு சரியானது...

#
கவிதையின் காதலன்

காதல் பிறக்கும் நேரத்திலே.. மனமும் மாறும் வண்ணத்திலே.. காதல் கொண்ட உள்ளத்திலே.. ஆசைகள் இருக்கும் உச்சத்திலே.. தாக்கம் இருக்கும் வேகத்திலே.. விழிகளும் விழிக்கும் விருப்பத்திலே.. காணாமல் தவிக்கும் உள்ளத்திலே.. தொடங்கிடும் ஆனந்தம் நேரத்திலே.. குயவனாய் இருப்பான் சமயத்திலே.. கவிஞனாய் மாறுவான் பிணைப்பாலே.. மனமும் மயங்குவான் இதழாலே.. தன்னையும் மறப்பான் அவள் அழகாலே..

#
கவிதையின் காதலன்

வாழ்க்கை பயணம் சிக்கலானது.. காதலின்றி கடந்திடக் கடினமானது.. காதல் வாழ்க்கை ஆழமானது.. அதில் மூழ்கி இருப்பதே ஆசையானது.. ஆசையின் அலைகள் வேகமானது.. அதில் மூழ்கி எடுப்பதே முத்தானது.. வாழ்க்கையை கடக்க துணையானது.. சிதறி சீறும் அலையானது கரையை தொடாமல் திரும்பாதது..

#
கவிதையின் காதலன்

காதலில் எப்போதும் இனிமை இருக்கும்.. தொலைவில் இருந்தாலும் அருகில் இருந்தாலும்.. இருவரின் உணர்வும் தொடர்பில் இருக்கும்.. கண்களில் காதல் கலந்திருக்கும்.. மனமோ காதலில் நிறைந்திருக்கும் உண்மையை எப்போதும் உணர்ந்திருக்கும்.

#
கவிதையின் காதலன்

உன் நினைவில் நான் இல்லை என்பதை உன் செயலில் நன்குணர்ந்தேன்.. அமரும் பறவை பறந்திடும் என்பதறிந்தும் அமர்ந்திட இடம் தந்த மரம் போலானது என் மனமும்..

#
கவிதையின் காதலன்

கண் காணும் இடமெல்லாம் உன் முகம்தான்.. வாடாமல் மலர்ந்திருக்கும் பூ முகம் தான்.. மனம் தேடும் போதெல்லாம் உன்னுடன்தான்.. மனம் வருந்தம் கண்டிடும் நேரத்தில்தான். காணுவேன் உன் சிரிப்பை மாற்றிடத்தான்.. பூவெல்லாம் பூத்திடும் அழகாய்தான்.. சிறகாய் விரித்திடும் இதழ்களைத் தான்.. கண்டதும் மனம் மாறும் சிலிர்ப்புடன் தான்..

#
கவிதையின் காதலன்

என்னவளின் விழியினை கண்டு வியந்த வெண்ணிலவு சிந்திய வியர்வை துளிகளே வானில் வின்மீகளாக உள்ளன! : விழியும் வின்மீனும்.

#
Sayedmohammed Sayedmohammed

கண்ணே உன் இமைகள் படபடக்கும் போது என் இமைகளும் படப்படக்கின்றன அவைகள் காதலிக்க ஆரம்பித்து விட்டன் நாம் எப்போதும் ஆரம்பிக்க போகிறோம்

#
Saravanan Saravanan

குறிஞ்சி பூ என்பது பல வருடங்களுக்கு ஒரு முறை பூப்பது அதுபோல என் மனதில் ஆசை என்பது ஒருமுறை தான் தோன்றும் ஆனால்தோன்றி இருக்கலாம் அது எல்லாம் நிலையானது இல்லை என்று நான் நினைக்கிறேன்

#
Saravanan Saravanan

தனைல மற்றது தாயின் காதல் தன்னிகரறற்று தந்தையின் காதல் ஆத்மாத்தமானது அண்ணனின் காதல் கலங்கமற்றது தங்கையின் காதல் உன்னதமானது கணவன் மனைவியின்காதல் எதிர்பார்ப்பில்லாத நண்பனின் காதல் கருணை வடிவானதுஇறைவனின் காதல் மானுடத்தின் மகத்துவமே காதல் அன்பின் பரிமாற்றமே காதல்

#
Saravanan Saravanan

உன்னுடன் சந்தோஷமாக வாழ காத்திருந்த அவளுக்கு தெரியவில்லை இறுதியில் உன் நினைவுகள் மட்டும் தான் மிஞ்சும் என்று

#
Rethane Kathirvel

தழும்புகள் என்றால் காயத்தினால்மட்டுமே வருபவையா..? இல்லை உதட்டுச் சாயம் பூசி அவளிட்ட முத்தத்தின் சுவட்டை அந்த அதிகாரத்தல் நான் சேர்க்க..!!

#
Karuppasamy

அவனது அன்பின் மழையும் அவளது பருவமழையும் சந்தித்து இயற்கையின் மழை நேரத்தில்

#
Smkumaran kavithai

பிறக்கும் போது அழுகை அறிமுகமானது உறங்கும் போது கனவு அறிமுகமானது கண்விழிக்கும் போது வெளிச்சம அறிமுகமானது பெண்ணை பார்க்கும் போது காதல் அறிமுகமானது அவளை நினைக்கும் போது கவிதை அறிமுகமானது இருவரும் இணையும் போது உடல் அறிமுகமானது அவளை பிரியும் போது மரணம் அறிமுகமானது

#
Saravanan Saravanan

சன்யாசியாகத்தான் இருந்தேன பெண்ணே உன்னை பார்க்காதவரை ஆக்கிவிட்டாய் என்னை பரதேசியாய் காதல் பிச்சை தரவில்லை என்றாலும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் இந்த சின்ன பையனுக்கு கடைக்கண் பார்வையாவது வழங்கிவிட்டுப்போ

#
Saravanan Saravanan

என் கண்களால் உனக்கு ஒரு கடிதம் எழுதினேன்! அதில் என் கண்ணீர் துளிகள் மையாக இடப்பட்டது! அந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் என் நட்பு உனக்குள் செதுக்கியது! உனக்குள் செதுக்கிய அந்த நட்பு இப்பொழுதும் நமக்குள் வாழ்கிறது! என்றும் அழியாத சிற்பமாக!

#
Saravanan Saravanan

உயிரே உன்னை நினைத்து உன்னை வரைந்தேன் ஆனால் உன்னை அப்படியே அழகாக வரைய உன்னை படைத்த இறைவனாலும் முடியாது என்னால் முடிந்தவரை உன்னை சமர்பிக்கிறோன்

#
Saravanan Saravanan

கண்கனை எடுத்துக் கொண்டு உன்னை கானைச் செல்கிறாய் ! கால்களை எடுத்துக் கொண்டு ஓட சொல்கிறாய் முடியாது! என் இதயத்தை எடுத்துக் கொண்டு வாழ சொல்கிறாய் முடியும் உன் இதயம் என்னிடம் இருப்பதால்

#
Saravanan Saravanan

கவிஞர்கள் சொல்கின்றன காதலுக்கு கண்கள் இல்லையென்று அது தவறு உன்னை என் கண்களால் பார்த்த பின்பு தான் நான் உன்னை காதலித்தேன்

#
Saravanan Saravanan

உன்னை பார்த்த நான் மட்டும் உறுக்குகிறது என் உள்ளத்தை என் வாழ் நாள் எல்லாம் உன் காதல் இருக்கும் என் இதயத்தில்

#
Saravanan Saravanan

என் மனம் வானம் அதில் நீ நிலா என் காதல் கடல் அதில் நீ மீன்

#
Saravanan Saravanan

உன் கை கடிகாரத்தில் ஓடுகின்ற முல்லா என் இதயம் ஒற்றை பார்லை பார்த்த பின்பு மறைந்தாய்

#
Saravanan Saravanan

என் இதயத்தை உடைத்தாய் சகியே என் மரு இதயத்தை தந்தேன் நீ போடும் கோலாமா என் இதயம் ஒரு சில கோடுகளால் என்னை வாழ்ந்தாய்

#
Saravanan Saravanan

வானத்தில் இருக்கும் மின்னலாய் இருக்க ஆசைப்படுகிறேன் ஒருமுறையாவது மேகமாய் போன்ற உன் தேகம் இருப்பதால் அத ரசிக்க

#
Saravanan Saravanan

வானத்தில் செல்லும் மேகமாய் நீ செல்கின்றாய் உன்னைத் தேடும் காற்றாய் நான் அலைகிறோன்

#
Saravanan Saravanan

மழை பெய்தால் தான் வானத்தில் வனவில் வரும் மழை பெய்த்தது வானவில் வந்தது வானவில் இல்லை என் மனதில் உன் காதல் என் மீது பட்டதால்

#
Saravanan Saravanan

சூரியனில் சொப்பெடுத்து நிலவில் நீர் எடுத்து மேகங்கள் துணிவைத்து காயப் போட்டு வானவிலை நான் ரசிப்பதில்லை ஜில்லென்று நீ தாவணியில் வந்தால் நான் ரசித்துப் பார்க்க மறப்பதில்லை

#
Saravanan Saravanan

நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம்; ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்!

#
₹hacker₹

தெரியும் காற்று என்பது கண்களுக்கு தெரியாது என் காதலி என்பது எனக்கு மட்டும் தெரியும் என் இதயத்துக்கு தெரியும்

#
Saravanan Saravanan

கண்களுக்கு இமை கடிகாரத்திறக்கு முள் காதலன் நீ காதலிக்க நான் காதலும் நம்மை காதல் செய்யும்

#
Saravanan Saravanan

காலங்கள் மாறலாம் நேரங்கள் மாறலாம் மனிதன் மாறலாம ஆனால் நான் என் காதலி நினைவில் இருந்து மாறமாட்டேன்

#
Saravanan Saravanan

என் கண்களால் உனக்கொரு கடிதம் எழுதினேன் அதில் என் கண்ணீர் துளிகள் இடப்பட்டது அந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் என் காதலை உனக்கு செதுக்கியது எனக்கு செதுக்கியது அந்த காதல் இப்பொழுது நமக்குள் வாழ்கிறது

#
Saravanan Saravanan

காதலுக்கு கண் இல்லை என்பது பொய் உனது கண்கனை பிறகு தான் உனை காதலிக்கவே தொடங்கினேன்

#
Saravanan Saravanan

அன்பே உன்னை பார்த்து சிரித்தேன்                 நகைச்சுவை திங்கள் நீயும் நானும் காதலில் விழுந்தாள்                  காதல் செவ்வாய் நீயும் நானும் சேர்ந்து பழை ஞாபகம் காவிய புதன் உன் அண்ணனும் என் தந்தையும்                                     சண்டையிட்டால்                 அதிரடி வியாழன் நீயும் நானும் காதலில் ஜெயித்தால்                 சூப்பர் ஹிட் வெள்ளி

#
Saravanan Saravanan

காதல் என்பது கல்லறை செல்லும் வரை இருக்கும் ,,,,,, ஆனால் சில காதல் கல்லறைக்குள் இருக்கும்....

#
Joshva James

நான் பேசுவேன் என்று நீயும்.....! நீ பேசுவாய் என்று நானும்......! நாம் இருவரும் பேசுவோம் தொலைபேசியும்..... காத்துக்கொண்டு உள்ளது தனிமையில்......!

#
Aafrin.M

திசைகள் எட்டானாலும் நீ இருக்கும் திசையே பார்த்தே என் கால்கள் நடைப்போடும்

#
Ram Ram

போர்க்களத்தில் போராடிட போதுமான துணிவு என்னிடம் உண்டு. ஆனால் போர்க்களத்தில் எதிரே நிற்பதோ உன் இரு விழிகள். ஆயுதம் இன்றியும் யுத்தம் செய்யும் நான் ஆயுதம் இருந்தும் தலை வணங்குகிறேன். உன்னிடம் மட்டும். நீ யாரிடமும் தலை வணங்காமல் இருக்க

#
Nithya Nithya

நான் உன் இதயத்தில் முளைக்கா மலரானாலும் என் இருதயத்தில் விழுந்த முதல் மலர் நீ. என் இதயத்தில் வீசிய வசந்தம் நீ. என் சுவாசத்தில் கலந்த நறுமணம் நீ. இதயத்துடிப்புடன் இணைந்த எண்ணங்கள் நீ என் காதலின் ஒவ்வொரு பக்கங்களிலும் குறையுறா அன்பின் சரிதை நீ நீ என்பதற்குள்ளே வாழ்பவள் நான் என்றால் என் கரம் பற்றிய என் வாழ்கைக் கடிகாரம் நீ. ************************* Rifka marsook

#
rifka marzook

*என்னுள் நீ* கனாக்களில் மட்டுமே கதை எழுதிய அவன் நிஜத்தினில் கரைந்துவிட்டதால் ஓவியம் போன்ற விம்பம் ஒன்று ஓயாமலே என்னை தொடந்து வருகின்றது. கதை கதையாய் இதயத்தின் ஆழத்தில் புதைக்கப்பட்ட புதையல்களாய் உன் பற்றிய நினைவுகள் மேலெழுந்த வண்ணம். இனியும் வர்ணத்தூரிகைக்கொண்டு அலங்கரிக்க ஆயிரம் வர்ணம் வேண்டாம். உன் அன்பு மொழி ஒன்று போதும். அன்பை மட்டுமே அடமானம் வைத்து அபிமனமாய் அமையும் ஆரம்ப அலை ஒன்று இறுதிவரை அமைதியாய்.. இதயதை தட்டிச்செல்லும் இதமான தருணமிது Rifka marsook

#
rifka marzook

என்னவளே உன்னை நிலவோடு ஒப்பிட நான் விரும்பவில்லை ஏனெனில் நிலவின் அழகுக்கு தேய்பிறை உண்டு உன் இந்த பூமியில் என்றும் வாடா மலராய் இருப்பதால் அந்த நிலவின் தோற்றுவித்தது உன்னிடம்...️️️

#
K. Anbudevi

இளமையில் இருந்து முதுமை வரைக்கும் அவள் இதயம் என்னை சேர்த்தது

#
Smkumaran kavithai

எல்லோரும் காதலுக்கு பணம் தேவையில்லை பாசம் முக்கியம் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் பணம் தான் காதல் என்பதை உன்னிடம் இருந்து கற்றுக் கொண்டேன்

#
K. Anbudevi

என்னவளே என் இனியவளே என் இதயத்தை கொள்ளையடித்தவளே நீல நிற ஆடையிலே உன்னை நான் பார்க்கையிலே பார்த்துவிட்ட கண்களிலே நீ வந்தாய் என் கனவு நிலை விழித்து பார்க்கையிலே நீ இல்லை என் அருகினிலே....️️️️️️️️

#
K. Anbudevi

சரித்திரத்தில் கல்வெட்டில் வரலாற்றில் இடம் பெற எண்ணம் இல்லை மென்மையான இதயம் வரலாற்றில் மிதமான இடம் பெறவே இத்தகைய முயற்சி

#
Smkumaran kavithai

உன்னை விட்டு விலகி இருக்க தோன்றவில்லை... என்னருகில் நீ இருந்தால் யாரை பற்றியும் யோசிக்க தோன்றவில்லை... என்னருகில் நீ இல்லாவிட்டால் உன்னை தவிர எதை பற்றியும் யோசிக்க தோன்றவில்லை... உன்னை பற்றி நினைக்க தோன்றவில்லை... உன்னை பற்றி நினைக்காமலும் இருக்க தோன்றவில்லை... நீயில்லா நிமிடங்களை ரசிக்க தோன்றவில்லை... உன் ஸ்பரிசம் இல்லா காற்றை சுவாசிக்க தோன்றவில்லை... நீ இருக்கும் நொடிகளை விரும்பாமல் இருக்க தோன்றவில்லை... நீயில்லா நொடிகளை வாழ தோன்றவில்லை... கடைசியாக நீ இல்லாமல் என் வாழ்க்கை முற்று பெறும் என்று தோன்றவில்லை...!!!

#
kalpana kumar

உன்னை அழகாக்க வேண்டுமென்று என்னுல் இருளை பூசிக்கொண்டேன் இருந்தும் என்னை புரிந்து கொல்லாதது ஏன் என் நிலவே!. - இப்படிக்கு இரவு

#
RUPA

உன் நிழல்படம் நோக்கையிலே உன் உருவம் என் ஒளி வழி புகுந்து இதயத்தில் ஒரு பெரும் அடைப்பாய் மாறி போனாய்..... அடைப்பை அறுக்க பல வழி இருந்தும் அடைப்பால் பல வலி இருந்தும் வலியின் சுகத்தில் பல வலிகள் மறக்க .... உன் புன்னகையே அறு மருந்தாய் மாற நித்தமும் உன் எண்ணம் ஒன்றே கொண்டு உயிர் வாழ்கிறேன்....

#
GOWRI S

உனை காண ஏங்கி தவித்திருக்கும் கண்கள்உன் சுவாச காற்றே உணர காத்திருக்கும் என் ஸ்பரிசம்உன்னை காண மட்டுமே துடிக்கும் கண்கள்உன்னை முத்தமிட மட்டுமே ஏங்கும் உதடுகள்உனை அணைக்க துடிக்கும் கைகள்உன் ஸ்பரிசம் உணர துடிக்கும் மனதுஎன் செய்வேன் நான் ,,,

#
GOWRI S

உனை மறக்கத்தான் நினைக்கிறேன் முடியவில்லை.நீ... எனக்கானவன் இல்லை என புத்திக்கு எட்டியும் என் மனதிற்கு எட்டவில்லை..சொல்லப்போனால் உண்மையில் என் மனதிற்கு உனை மறக்க சக்தி இல்லையடா...அதனால் தான் நீ என்றுமே எனக்கானவன் என்று என் மனதை ஒவ்வொரு முறையும் ஏமாற்றி கொண்டிருக்கிறேன்.நிஜம் இல்லையென தெரிந்தும் கூட....

#
GOWRI S

எத்திசை நோக்கினும் கண்ணில் உன் பிம்பம்..காதலாய் ஓர் நொடி உனை பார்க்கையில் கண்ணை விட்டு மறைவதேனோ...

#
GOWRI S

எனக்கே உரிய உலகம் உன் மடி என்ற என் ஆசையை எவ்வாறு நான் உரைக்க உன்னிடம்....

#
GOWRI S

உன் எண்ணம் ஒன்றே நான் உயிர் சுமை காக்க காரணம்.... உன் எண்ணம் ஒன்றே நான் பலநாள் இரவில் உண்ணும் உணவு உன் எண்ணம் ஒன்றே என் பலநாள் இரவு அழுகையின் மருந்து... உன் எண்ணம் ஒன்றே என் மணவலியின் சிறந்த வைத்தியம்... உன் எண்ணம் ஒன்றே நான் பலநாள் மரணிக்கமால் இருக்க காரணம்... உன் எண்ணம் ஒன்றே என் மனதை மரத்து போக செய்யும் மகத்துவம் உன் எண்ணம் ஒன்றே நான் உயிர் வாழ்ந்திட நிதர்சனம்....

#
GOWRI S

நிலவின் ஒளியில் மட்டும் வாழும்.... கருப்பு உருவம் நான்... வண்ணங்களை தவிர்க்கிறேன்...

#
_Dheerov_ _dheerov_

நினைவுகளை சேமித்த பக்கங்கள் மிக குறைவு... சேமித்த பக்கங்களை வைத்து வாழ்வது மிக அதிகம்...

#
_Dheerov_ _dheerov_

உனக்காக எழுதி வைத்த கவிதை புத்தகத்தை மௌன பூக்கள் மொய்க்கிறது நீ வந்து வாசிக்கும் வரையில்.

#
Sowmiya Sowmiya.s

நீ விரும்பி கேட்ட பாடலை நானும் கேட்டேன்!!! பாடலை விரும்பியதால் அல்ல... அந்த பாடலை கேட்கும் போது எல்லாம் உன் நியாபகம் வருவதால்!!!

#
karthika

தொட்டுவிடும் தூரத்தில் அவளும் இல்லை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை விடையில்லா புதிர் போல தொடர்கிறது வாழ்க்கை...

#
keerthi

நிலவும் நீயும் ஒன்று தான்... இரண்டும் எட்டாத தூரத்தில் தான் இருக்கும் ஆசை படலாம் ரசிக்கலாம் ஆனால் அடைய தான் முடியாது...!!!!

#
keerthi

எனக்கான தென்றல் நீ உனக்கானவள் நான் என்னை தீண்டி என் கூந்தல் கலைத்துச் செல்கிறாய் நான் தடுத்தும் என்னை விட்டுச்செல்கிறாய்.. போ...... உனக்காக காத்திருக்கிறேன் வரியில்லா கவிதை போல...️️

#
keerthi

எழுதில்லா காகிதம் போல் வெறுமையாக இருந்தேன் எழுத்தாணி கொண்டு அவள் கிறுக்கிய கிறுக்களால் கிறுக்கன் ஆகி போனேன் இன்று

#
selva.s

சில நேரங்களில் எனக்கே ஒரு சந்தேகம், என் இதயம் எனக்காகத்தான் துடிக்கிறதா? என்று!

#
Sandy Deena

நிறைகளைப் பார்த்த காதல் திருமணத்தில் முடிகிறது! குறைகளைப் பார்த்த திருமணம் கண்ணீரில் தொடர்கிறது!

#
Gowri Pandiselvam

Kadhal enum kanaa Kadhal enum swarisam ilamayile thondriyadu mudhal adanudane valgirom Nammai marakirom valkai payanam edharkendre theriyamal Matravarkalukaga valgirom Edhilume oru ellai vendumendru Valkai alagai puriya vaithu vidugiradu Endro Aliya pogum udalai nesikamal Manathai nesithal unudane varum Un alagiya kadhal irudhi varai Un vetriyilum tholviyilum kaikorthu nirkum Vidhiyal pirindalum aval/avan pesiya varthaikale Unnai sedhukum alagaga Maravadhe thozhan/thozhiye unmaiyai idhayathai kadhalika Respect true love say goodbye to fake love️ by Sparkling mind ️

#
sparkling mind

நொடிகளை களவாடி உன்னுடன் இருக்கும் பொழுதை நீட்டிக்கப் பார்க்கிறேன். கனாக்களை களவாடி உன்னுடன் இல்லாத பொழுதை கடக்கப் பார்க்கிறேன். தேன்தமிழை களவாடி உன் மௌனத்தை மொழி பெயர்க்கப் பார்க்கிறேன் ராகங்களை களவாடி உன் வாய்மொழியை இசையமைக்கப் பார்க்கிறேன் உன் நண்பியை களவாடி உன் நம்பரை களவாடப் பார்க்கிறேன். மொத்தத்தில் உன்னை உன்னிடம் இருந்து களவாட வழி பார்க்கிறேன். இத்தனையும் களவாடிய என்னை கைது செய்து உன் மனச்சிறையில் அடைக்க நீ தயங்குவதேனோ?

#
Prem Naveen

உன்னோடு இருக்கும் உலகம் பிரமாண்டமான உலகம் திரும்பிய திக்கெல்லாம் காதல்

#
Smkumaran kavithai

என்னை மறந்து உன்னில் தொலைந்தேன் ஏன் என்று எனக்கு தெரியவில்லை!! உனக்கு தெரிந்தால் பதில் சொல்வாயா???

#
karthika

வெண்ணிலவே!! உன்னை நினைக்காத.. நாள் இல்லையே!! என் நிலவே... எனக்கு எப்பொழுதும் உன் நினைவே!!!

#
karthika

அத்தனை ஆண்கள் வகுப்பறையில் இருந்தும்!! என் கண்கள்.. என்னுடைய ஆண்ணை மட்டும் தேடுதே!!!

#
karthika

என் காலையிலும் நீ!! என் மாலையிலும் நீ!! என் இரவிலும் நீ!! என் உறகத்திலும் நீ!! என் கனவிலும் நீ!! என் சிந்தனையிலும் நீ!!! என் கற்பனையிலும் நீ!! உன்னை எண்ணி எண்ணி!! மறந்தேன் என்னை எண்ணி!!!

#
karthika

கார்மேகதில் இருக்கும் தித்திக்கும் நிலவை போல!! என்னை ஈர்க்கும் சிநேகிதனே!! உன்னை என்னால் நிலவுடன் வர்ணிக்க முடியவில்லையே!! ஏன்? என்று என் மனதிடம் நான் கேட்டேன்!! என் மனம் கூறியது!! நீ அந்த நிலவை விட அழகு என்று!! அப்போதுதான்... எனக்கு புரிந்தது!! நீ அழகு அல்ல பேரழகு என்று!!...

#
karthika

உன் ஓவியத்தில் மயங்கிய என்னை எப்பொழுது எழுப்ப வருவாய்??? எனது ஓவியமே!!!

#
karthika

காதல் மாற்றம். அழகைத் தேடி போகும் காதல் நிலைப்பதில்லை அன்பை தேடி போகும் காதல் உண்மை இல்லை காமம் தேடி போகும் காதல் கண்ணியமாக கண்களுக்கு காண்கிறது இதுதான் இந்தக் காலத்தின் காதல்

#
Gayathri

உன்னை கண்ட முதல் நாளில் உன் கண்களில் விழுந்தேன்!!... இதை போல் வரிகளை காதல் பாடலில் கேட்டேன்!! விழுந்து சிரித்தேன்!! ஆனால், அது எனக்கு நடக்கும் பொழுது காதல் என்னவென்று புரிந்தேன்!!!

#
karthika

உன்னை நினைக்கும் போது எல்லாம் எனது பேனா எனக்கு முன்னால் சென்று உன்னை பற்றி எழுதுகிறது!!!

#
karthika

என் அன்பே!! நீ சூரியனை போல் கோவமாக இருந்தாலும்.. நிலவை போல் அமைதியாக இருந்தாலும்.. நட்சத்திரம் போல் மின்னி நாளும்... மழையை போல் அழுதாலும்... இரவை போல் சோகமா இருந்தாலும்... இடியை போல் கத்தினாலும்... வானவிலை போல் சிரித்தாலும்... மேகத்தை போல் குதித்து மகிழ்ந்தாலும்... நான் உனக்கு வானமாய் இருந்து நீ எது செய்தாலும் ஏற்பேன்(தாங்குவேன்) என் அன்பே!!!!

#
karthika

பெண்னே உன் கூந்தலில் சிறை பட்டது பூக்கள் மட்டும் அல்ல என் இதயமும் தான்.

#
Basha Syed

காதலுக்கும் கண்ணீருக்கும்... ஒரே ஒரு வித்தியாசம் தான்... காதல் மனசுக்கு பிடிச்சவங்க... கூட மட்டும் வரும்... கண்ணீர் அந்த மனசுக்கு... பிடிச்சவங்களால மட்டுமே வரும்...!. என்றும் உன் நினைவுகளுடன்... உதயா

#
Udhaya Kumar

கால்களை நனைக்காத கடலும் இல்லை... கண்களை நனைக்காத காதலும் இல்லை...!. என்றும் உன் நினைவுகளுடன்... உதயா

#
Udhaya Kumar

மரண வாசலில் நான் பயணிக்கிறேன்,ஆனால் நீயோ மணவாழ்க்கையில் பயணிக்கின்றனர், உன் பயணமும்,என் பயணமும் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள் என்றும் அன்புடன்

#
Rock fort bala subramanian

என் காதலை புரிந்து கொண்ட... என் காதலி, மலர் கொண்டு வருகிறாள்... என்னிடம் காதலை சொல்ல அல்ல... என் கல்லறையில் வைத்து... கண்ணீர் விட்டுச் செல்ல...!. உதயா

#
Udhaya Kumar

ஒரு ஆண் தனது இரண்டாவது தாயையும் ஒரு பெண் தனது முதல் குழந்தையும் தேடுவதே காதல்

#
pakkiya Pakkiya

தவறுகள் செய்து விட்டேன் நான் எனக்கு தண்டனை தருவாய் நீ இரும்புச் சிறையில் அல்ல உன் இதயச் சிறையில் பெண்னே .

#
Basha Syed

தனிமையில் என் இதயம் நெருப்பாய் கொதிக்கிறது காரணம் உன் நினைவுகள் அனலை மூட்டுகிறது..

#
இலையுதிர்காலம்

உன் அன்பின் உச்சம் தான் மௌனம் என்றால்...!! உன் மௌன மொழியை நானும் மெல்ல இசைக்கிறேன்..!!

#
Ammu

தவறுகள் நான் செய்யாமலே எனக்கு தண்டனைகள்.தந்தாய் நீ இரும்புச் சிறையில் அல்ல உன் இதயச் சிறையில்.. சாந்தமுடன் syed

#
Basha Syed

நீண்ட நாட்கள் உயிர் வாழ ஆசை எனக்கு இந்த மண்ணில் அல்ல உன் மனதில்.சாந்தமுடன் syed ..

#
Basha Syed

உன்னைப் பார்க்காமல் நான் இருந்தால் என் கண்களுக்கு இமைகள் கூட சுமைகள் தானடி.

#
Basha Syed

கட்டியணைத்து காதல்மொழி பேசவேண்டாம் .... உன் ஓர விழிப் பார்வை ஒன்றே போதும் நாளும் நான் வாழ....

#
Mahi Chandran

சிதறி‌ இருக்கும் மேகங்களைப் போல சிதறிய என்‌ மனதை ஒன்று சேர்த்திட நினைக்கையில் உன்னைப் பற்றி நினைக்கையில் மீண்டும் சிதறியதே

#
Janani

எனக்கு பிடித்த தோட்டத்தில் சுத்தம் எப்படி பயனுள்ளதாக இருக்கிறது

#
Rajan M

ஒளிர்கிறதடா என் முகம் உன் கள்ளப்புன்னகையின் ஒளி வீசக்கண்டு பூவையிவள் கருவிழிகளில் கண்டாயோ உன் காதலை பறந்தே துடிக்கிறதடா என் மனம் சின்னஞ்சிறு பட்டாம்பூச்சியாய் தூரத்தோலைவேனே வானிலே என் துணை கொண்ட அன்பே உன் காதலினாலே..

#
மகி

காற்றாய் வந்நணைக்கும் உந்தன் நினைவுகளை நீருற்றி வளர்ப்பதென்னவோ எந்தன் கண்ணீர்தான் - அது விழிவழி மொழிந்ந காதலென்பதாலா விதிவசம் விலகிச்சென்ற காதலென்பதாலா விடைசொல்லிச் செல்லேன் கருணையில்லாக் காலமே..

#
மகி

உனை வா என்று நான் சொல்லவில்லை நீயாகவே தான் என் வாழ்வில் வந்தாய், உன் வருகையால் மனம் மகிழ்ந்தது தான் ஆனாலும் சிறு விலகல் கொண்டு தயங்கி நின்றேன் உனக்கோ ஒருத்தி இருக்கிறாள் என ஆனாலும் உன் வார்த்தைகளால், உன் காதலால் என் விலகல் தளர்த்தினாய் மறைத்து வைத்த என் காதல் மொத்தத்தையும் உன் மேல் பொழிய செய்தாய் எனை முழுவதுமாய் உனில் மூழ்கச் செய்து உடனிருப்பேன் என எந்நாளும் என்னோடிருந்து நீயின்றி ஒரு நொடியும் ஒரு பொழுதும் நானிருக்க முடியாது என உணர செய்து நீயே நிரந்தரமாய் விட்டு சென்று விட்டாய் மன்னித்து விடு என ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டு பயணிக்கிறேன் என் நாட்களை......

#
RN????????????????????

என்னவனின் காதல் என்றும் உயர்வானது தான் கொஞ்சம் கலங்கி போய் விட்டேன் நான் இங்கே அவனின்றி துடி துடித்து போவேன் என்று தெரிந்தும் அவன் விரைவாகவே தன் திருமண வாழ்க்கையில் எனை மறந்து விட்டான் என்று ஆனால் அவனின் குறுஞ்செய்தி உணர்த்தி விட்டது என்றும் அவன் ஆழ் மனதில் வசிப்பவள் நானே என்று அவன் வாழ்வில் யார் இருந்தாலும் எனக்காய் அவன் காதல் என்றும் அழியாது வாழும் ஏதோ அதை அறிந்த திருப்தியில் கண்ணீரோடு விடை பெறுகிறேன் நானும் அனைத்தையும் இறைவனின் கைகளில் பொறுப்பு சாட்டி இனி இந்த காதல் கதையின் தொடர்ச்சி படைத்தவன் கைகளில் மட்டுமே அவன் மனதில் நான் என்பதை போல் என் மனதிலும் என்றும் அவனே இம்மையிலும் மறுமையிலும் அவன் கரம் பற்றவே ஜீவனும் தவித்து நிற்கும் ஆனாலும் இறைவனின் நாட்டத்தை பொருந்தி அவனிடத்தில் விட்டு செல்கிறேன் என் பிரார்த்தனைகளையும்

#
RN????????????????????

அவன் வேறொருவள் கரம் பற்றிய பின்னும் என்னவன் அவன் என்பதில் துளியும் மாற்றம் இல்லையே என் காதல் என்றும் அவனோடே என் உயிர் அவனிடத்தில் தான் நான் இங்கே அவன் நினைவுகளில் வாழும் ஓர் ஜீவன்

#
RN????????????????????

என் உயிரே எனில் சரிபாதி ஆனவனே எனை முழுவதும் ஆள்பவனே என்னவனே விழி வழியே இதயம் நுழைந்து உடலில் நிரம்பி வழியும் குருதி போல் என் உயிர் முழுவதிலும் நிறைந்து வழிபவனே.. என் கண்ணே உனில் ஆசை தான் கொள்ளவில்லை மரணத் தருவாயிலும் உன் மார்பில் தலை சாய்ந்து உயிர் பிரியும் வரம் வேண்டும் உன்னோடு வாழும் உன் அருகில் சாகும் நிலை மட்டும் போதும் இப் பிறவியில் நான் கொண்ட ஜென்மம் ஈடேர உன் மனைவியாய் உடனிருக்கும் வரம் தாண்டி வேறு எதையும் நான் கேட்கவில்லை இறைவனிடம் இக் கணமே உயிர் பிரிந்து மறு ஜென்மம் கொண்டு அதில் உனை சேர்ந்திடவா இறைவனாய் நாடாமல் உயிர் துறப்பதில் தவறில்லை என்று இருந்திருந்தால் சென்றிருப்பேன் உன் திருமண அழைப்பிதழ் கண்ட இக் கணமே ஆனால் என்னவனின் காதல் எனை இறைவனின் பக்கமே அன்றி அவனை விட்டும் விலக்கி கொண்டு விட்டதாய் இருந்து விட கூடாது என் காதலின் கண்ணியம் என்றும் காப்பேன் 01. August. 2023

#
RN????????????????????

ஏதும் இல்லா வெறுமையாய் நானும் என் தனிமையும் இங்கே,,, அவன் மணவறையில் அங்கே வீற்றிருக்க...

#
RN????????????????????

அவனின்றிய என் நொடிகள்.... சந்தோசம் துக்கம் ஏதும் இல்லா ஒரு அமைதியின் நிலையில் நான் பயணிக்க சடுதியாய் தோன்றும் அழகிய வானவில் போல் என் வாழ்வில் நுழைந்து ஒரு அழகிய மெல்லிசையாய் உடன் பயணித்து அத்தனை இன்பங்களையும் ஒருமித்து காண்பித்து காணாத இன்பங்களையும் புதிதாய் காட்டி இன்பத்தில் கன்னங்களை விழி நீரால் துடைத்து சென்றான் அவனாய் வந்து அவனாய் அத்தனை காதலையும் காண்பித்து இன்று அவனாயே பற்பல விளக்கங்கள் தந்து எனை விட்டும் நிரந்தரமாய் விலகி சென்று விட்டான் மன்னித்து விடு எனும் ஒற்றை வார்த்தையோடு என் உடலின் உயிராய் நான் சுமந்து நிற்பது அவனை என்று அவன் அறிந்திருக்க வில்லையே என் செய்வேன் நான் அவன் இல்லாத என் உடல் வெறும் கூடாய் தானே கிடக்கிறது இங்கு உணர்வற்று நித்தமும் அவன் நியாபகம் நெஞ்சின் ஓரம் பாரமாய் கணக்க சுவாசமும் அவ்வப்போது சிரமத்துடன் தானே தன் பாதையை அமைக்கிறது சுவாசம் தடை பட இதயம் தன் துடிப்பை கொஞ்சம் மிகையாய் காட்ட கண்களும் இருள் சூழ்ந்து சிந்தனை ஸ்தம்பித்து நிற்கிறேன் இடை இடையே இவையெல்லாம் என்னவனின் மனம் அறியுமா அறிந்தும் அமைதி காப்பானா இப்போது போல் பதில் இல்லா வினாக்களோடு ஒவ்வொரு நொடியும் மரண வலியுடன் என் பயணங்கள்.......

#
RN????????????????????

உன் மீது நிறைந்து கிடக்கும் நேசங்கள் அனைத்தையும் உன்மீது கொட்டி கொண்டாடி தீர்த்திட வேண்டும்...!!

#
Vaishnavi Vaishu

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே! உடல் மண்ணுக்கு உயிர் நம் காதலுக்கு! நாம் மறைந்தாலும் நம் காதல் அழிவதில்லை! ஏனெனில் நாம் சேர்ந்திருந்தால் நம் காதல் குறைந்திருக்கும், நாம் பிரிந்ததால் ஒவ்வொரு நொடியும் உன் காதல் அட்சய பாத்திரம் போல் அழியாமல் காதல் வலியை கூட்டுகிறது!!

#
Danu viji

அவள் வீட்டு மாடிச்செடிகள் கூட எட்டிப்பார்த்து என் பகல் பொழுது பயணத்தின்போது ! சிறிதும் திருப்பிடவில்லை, தென்படவும் இல்லை! அவளின் பார்வையானது...!

#
NAVANEETHAN NITRO

நீ தண்ணீராகவும், நான் மணலாகவும் இருத்தல் வேண்டும்... ஒரு முறை சேர்ந்து விட்டால்.. யாராலும் பிரிக்க முடியாது !!!!

#
Danu viji

ஆணவக் கொலை நம்மை எரித்து நம் காதலை பிரிக்க நினைப்பவர்களால் நம் நினைவுகளின் சாம்பலைக் கூட அள்ள முடியாது

#
rama dhanavanthini

நீ என்னுடன் இருக்கும் அந்த ஒரு நொடி! போதாத நான் இந்தஉலகத்தை மறக்க !

#
Dhanush

என் அப்பா தராத தைரியத்தையும் என் அம்மா தராத வேறொரு அன்பையும் என் அண்ணன் தராத துணையும் என் உறவினர்கள் தராத மகிழ்ச்சியும் இவை அனைத்தும் ஒன்று சேர்த்து கிடைத்த உறவு என் அன்பு காதல் கணவன்

#
Chitra mani

மெளன மொழியை கடத்தும் உன் விழியது என் மனம் ஆழ.., மெல்லமெல்ல காதல் சலசலப்பில் வீழ்கிறதடா பெண்மையிவளின் நாண நாழிகைகள்... - மகி

#
மகி

ஒவ்வொரு முறையும் அவள் புரிதலில் நான் பரிட்சயமாய் விழிகள் பேச மொழிகளுக்கு என்ன வேலையென உணர்வுகளின் உரையாடலில் காதலை உணர்த்துகிறாள் தன்னிரு கரம் கோர்த்து என்னுயிர் கலந்த காதல் கண்ணம்மா... - மகி

#
மகி

என் விழிகளை கட்டி ஈர்க்கும் அவள் மௌனத்தில் வீழ்வதா என் மனதை சுக்கு நூறாய் தகர்க்கும் அவள் மாயச் சிரிப்பில் வாழ்வதா கவிதைகளே சொல்லுங்கள் வசியக்காரி அவளிடம் கொஞ்சும் என் காதலைச் சொல்லி..

#
மகி

உன் கண்கள் எனை என்ன செய்யும் ************* காற்றோடு கலந்த வான்மழையை மெல்ல ஈர்க்கும் மண்துகள் போல் என் கனவுகளோடு கலந்த காதலைச் சொல்லி கட்டி அணைத்து முத்தமழை சிந்தவல்லவோ அழைக்கிறது மருதாணி அரைத்த வண்ணம் பொய்யென நாணத்தில் சிவக்கும் இவள் பெண்மையை உன் நாசிக்காற்றில் ஆதுரமிடவல்லவோ முயல்கிறது அட.., தொட்டால் சுருங்குமாம் தொட்டால் சுருங்கி சிலிர்ப்பில் சிரிக்கவிட்டே எனதுயிர் சுடுகிறது உன் கள்ள விழியெய்தும் தீராக்காதலெனும் அம்புகளடா...

#
மகி

உன்னை ரசிப்பதற்கென்று சில நீ ரசிப்பதற்கென்று சில என்று என் வரிகள் யாதும் வந்து விழுகிறது உன்னிடமே என் எழுதுகோலுக்கும் கிறக்கம் கூடிப்போனது என் யாதும் நீயானகிப் போக..

#
மகி

சரித்திரத்தில் இடமுண்டோ சங்கீதத்தில் சுகமுண்டோ அங்கம் சிதைந்த பின்னும் அழியா ஆன்மாவில் உறவாய் உணர்வாய்.. அர்த்தங்கள் தேவையா அன்பெனும் ஆட்சி ஆள காலங்கள் கடந்த பின்னும் நேரங்கள் ஒதுக்குவோமா நிலையா நம் அன்பின்ற்கு காதலாய் நீயெனுக்கு கவிதையாய் நானுனக்கு.. - மகி

#
மகி

காதல் குறிப்பேடு.. *** இதயம் நிறைந்த காதலும் கண்கள் கலந்த வேளையும் உணவாகிப் போனது - செல்லரிக்கும் பக்கங்களில் இன்று .. -மகி

#
மகி

கண்ணாய் கருதியதே கண்டபிழை- கண்மணியே! கனாவாய் களையக் காண்பதெல்லாம்- கிளற கண்ணெதிரே நீ காண- கண்ணில் சிறு ஈரமில்லை, கடக்க துடிக்கும் நிகழ்வுகளை மீட்டெக்க துடிக்குமாய் உன் வருகை- உதரிய திடத்துடன் மேலெழ யிருந்த பறவையின் இறகறுபட்டதே இங்கென் நிலைமையாம்! கண்மணிக்கு கண்டணமாயினி காண வியழும் கணம் நேருமெனிலும் காணாது தவிர்திருவாய் கண்ணே!! கண்டவரை- கண்ட வலிகளில், காணாது கடந்ததும் சேர்ந்து கொள்ளட்டும், கண்ட பின் கடந்தகால கணங்களை காணச் செய்வதைக் காட்டிலும், காணாது கடந்த வலியால் கடின மேதுமில! களைந்த கனா தான் களையட்டுமே மீண்டும்! கண்டுகொள்ளத் தான் யாருண்டு, காட்டு மழையில் கரைந்தோடும் களிமண்ணாகட்டுமென் கவலையும்!! காதலும்!!! -ருத்ரா

#
Rudra Siva

என்னை எனக்காக அன்பு செய்யும் உறவு கிடைத்தால் வரம் தான்... ஆனால் எனக்கு கிடைத்த நீ ... வரமாக ... வந்த அன்பு நீ...

#
Jeba M

கண்கள் பேசும் மொழியில் என் இதயம் தொலைத்தேன் மறைந்து போனது என் இதயமடி சிறை கைதியடி நான் உன் விழியால் போதையாகி போனேன்.. வெற்று காகிதமடி நான் உன் விழி மையால் கவியெழுது..!!

#
keerthi

இந்த நிமிடம் உன் நினைவில் நானா என்று தெரியாது..... ஆனால் நீ என்னை நினைக்கும் அந்த நிமிடத்திற்காக காத்திருக்கிறேன்.... நான் மட்டும் அல்ல "என் காதலும்"....

#
keerthi

அவளுக்காக நான் எழுதிய கவியெல்லாம் காத்திருக்கிறது அவளை சேரும் நாளுக்காக....

#
keerthi

கிடைக்காது என தெரிந்தும் என் மனம் ஏனோ எதிர்ப்பார்ப்பை மட்டும் நிறுத்தவில்லை

#
keerthi

அன்பு என்ற பெயரில் வந்தது சென்றவர்களுக்கு நன்றி.... உண்மையான உறவுகளை அறிந்து கொள்ள உதவி செய்ததற்காக....

#
Jeba M

உயிர் இருக்கும் வரை உன் நினைவு இருக்கும் மனம் இருக்கும் வரை உன் மேலான அன்பு இருக்கும் கற்பனை இருக்கும் வரை உன்னுடன் நான் வாழும் வாழ்க்கை இருக்கும் என் கல்லறை இருக்கும் வரை நாம் காதல் இருக்கும்

#
Hari Shvahari

உன்னை முதல் முறை சந்தித்த போது தெரியவில்லை உன்னை என் மனம் இவ்வளவு விரும்பும் என..

#
keerthi

நீ எனக்காக செலவழித்த நேரத்தை வேண்டுமானால் கேட்டு பார் என் விழியோரம் வழியும் ஒரு துளி கண்ணீர் பதில் சொல்லும்

#
Pandees Waran

உனது தோளில் சாய்கிறபோதெல்லாம் நான் மீண்டும் குழந்தையாகிவிடுகிறேன் நீ! தாயாகிவிடுகிறாய்

#
Ram siva

தன் காதலி அழைப்பிற்காக காத்துக் கொண்டு இருக்கிறான், தன் காதலியானவள் ஒரே ஒரு முறையாவது அழைப்பால் என்று , தனக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை தள்ளி விட்டு அவனை நினைத்து மகிழ்சி அடைவான் , ஒரு நாள் பேச வில்லை என்றால் பல முறை அழுவான் ஆனால் அவள் தன் காதலனுக்கு அழைக்காமல் மற்றவரிடம் பேசுவாள் அதற்கு தன் காதலன் சண்டை போட்டால் என்று sorry கூறுவாள் பின்பு bye என்றும் கூறுவாள்

#
Mani Kandan

கையில் கிடைக்காமல் என்னை ஏங்க வைக்கும் உன் அன்பிற்கு நான் என்றும் அடிமை தான்.... என்னவனே

#
Jeba M

என் மொத்த வாழ்க்கையின் தேடல் நீ மட்டுமே....என் அன்பே..... இனிய காலை வணக்கம்....

#
Jeba M

உன் கரம் பிடிக்க வரம் ஒன்று கிடைக்க காத்து இருக்கிறேன்.... வரமாக வந்த உன்னை இழந்து விட கூடாது என்று....

#
Jeba M

கிடைக்காது என தெரிந்ததும் நூலகம் முழுவதும் தேடி கலைத்து போனேன் உன் அழகினை வர்ணிக்க ஒரு வார்த்தையை தமிழ் அகராதியில் கூட un அழகினை வர்ணிக்க வார்த்தைகள் இல்லாதபோது நூலகத்தில் தேடி பயன் இல்லையே

#
Pandees Waran

அழகான உணர்வுகளை கொடுக்கும் காதல் தான் அழியாத நினைவுகளையும் அள்ளித் தெளிக்கிறது......

#
Sakul Gs

நான் அவனை பார்த்த ஒரு கணம் அவன் விழியில் நான் மயங்கி காதலில் விழுந்த ஒரு நிமிடம் என் பொன் நிமிடம் அவன் விழிகள் என்னை பார்த்த ஒரு நிமிடம் என் இதய துடிப்பை நான் உணர்ந்த அந்த நிமிடம் உன் விழிகளை கொண்டு என் இதயத்தை கொள்ளையடிதாயட

#
B. Banumathy

சிறிய காதல் கதை காதலன் தன் காதலி முகத்தை பார்க்க முடியவில்லை என்ற கவலையுடன் தன் காதலி ஊருக்கு செல்கிறான்... காலில் செருப்பின்றி செல்லும் வழியெல்லாம் நெருப்பாய் சுடுகிறது, பசிக்கும் வேளையில் உணவு இல்லாமல் தண்ணீரை குடித்துப் பசியை போக்கி, தன் காதலி வீட்டை அங்கும் , இங்கும் அலைந்து, திரிந்து ஒரு வீதியில் தன் காதலியை பார்க்கிறான் அவள் யாரோ ஒருவன் போல் பார்த்து விட்டு போ என்று சொல்கிறாள் தன் காதலன் மனதில் குழப்பத்தோடும் , கண்ணில் வழியோடும், வாட்டும் வெய்யில், அடாங்க பசியுடன் திரும்புகிறான்

#
Mani Kandan

எட்டிப்பிடிக்கும் தூரத்தில்தான் எனது தேவதை ஆனால் ஆணவக்கொலையால் இறந்துவிடுமோயென்று அச்சம்கொள்கிறது எங்கள் காதல்.

#
Ram siva

இமைக்கும் இமைகளில் உன் முகம் பார்க்கிறேன் உன்னை காணாமல் காரணம் என்னவுன்டு தெரியவில்லை என் அன்பே

#
murugan puthukkottai

எவரும் தனிமையை விரும்புவதில்லை அவர்கள் தனிமையில் திணிக்கப்படுகிறார்கள் அதனால்தான் அவர்கள் தனிமையை விரும்பும் நிலைமை வருகிறது தனிமையில் நான் ஆசிரியர் இல்லாமல் பல பாடங்களை கற்றுக் கொள்கிறோம் தேர்வு இல்லாமல் அதில் நாம் தேர்ச்சி ஆகிறோம் தனிமையில் தான் நாம் யார் என்று நமக்குத் தெரிகிறது Ananthika

#
Ananthika

கன்னங்கள் மெதுவாய் சிவக்க கண்களும் அவளை நினைக்க காகிதம் தேடும் ஓவியம் கலையாத உந்தன் பூ முகம் நரைக்காலம் வரை நான் உன் நினைவில் இருப்பேனோ அல்லது உன்னை மறப்பேனோ நிமிடங்கள் வேகமாக ஓடுகிறது அதன் நிலை அறியாமல் அதை நிறுத்துவதற்கு நான் ஒன்றும் கடிகாரம் அல்ல கண்ணில் பார்ப்பதையும் என்னுள் தோன்றுவதையும் காகிதத்தில் எழுதும் சுடரி . Ananthika

#
Ananthika

அவள் போகும் போது.., என் உயிரோடு சேர்த்து, உறக்கத்தையும் கொண்டுபோய் விட்டாளோ என்னவோ..!!? நிகழ்வில் உணர்ச்சிகளில்லை, இரவில் தூக்கமுமில்லை, தூக்கம் வேண்டி தவம் இருக்கிறேன் தினமும் இரவில்...!! என்றுதான் வருவாளோ தெரியாது..! வரும்போது வரட்டும்..., வந்தவுடன் வட்டியும் முதலுமாய் அவள் எடுத்துக் கொண்டு போனதோடு சேர்த்து, காதலையும், கொஞ்சம் கொஞ்சல்களையும் பிடுங்கிக் கொள்ளப்படுகிறேன்..!! கோபத்தோடு கேட்டும் அவள் தரமறுத்தால்.... கெஞ்சியாவது கேட்டுவிடப்போகிறேன் "எனைக் கொஞ்சு" என்று... என்னவளிடம் நான் கெஞ்சுவதும் கூட காதல் தானே...!!!

#
Siva Sivananth

அனைத்தையும் காதல் செய்க: இரவின் மௌனமும் மழையின் வாசமும் மேகத்தின் கூட்டமும் விண்மீனின் கண்ணாமூச்சியும் மின்மினியின் வெளிச்சமும் காற்றின் குளிரும் இன்பத்தின் தேடலும் மனதின் அமைதியும் எண்ணங்களின் தோற்றமும் கவிதையின் கிறுக்கலும் தனிமையின் சுவாசமும் இறையின் சிந்தனையும் என்னவனின் வருகையும் எப்போதும் ஆனந்தமே ️️️️️️️️️️கலா

#
KaviKuil - COMPETITION

காதல் பொறாமை எத்தனை முறை தான் தழுவிக் கொள்கிறது. எத்தனை முறை தழுவிக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் உந்தன் காலடி தடம் தேடி கரை வந்து வந்து திரும்புகின்றன இந்த கடல் அலைகள்! - சங்கரலிங்கம் ராஜா

#
KaviKuil - COMPETITION

உண்மை சொல்லும் கண்ணாடியும் சில நேரங்களில் ஊமை ஆகிவிடுகிறது போலும். கண்ணாடி காணும் போது எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. ஆனால், அவளுக்கு மட்டும் எப்போதும் நான் அழகனாகவே காட்சியளிப்பதாக சொல்கிறாள்! -- சங்கரலிங்கம் ராஜா

#
KaviKuil - COMPETITION

இதயத்தில் இருந்து வரும் ஓசை கேட்பதற்கு எப்பொழுதும் உன் மேல் சாய்ந்து இருப்பேன் -O210 813 ganesh S

#
KaviKuil - COMPETITION

நீ செல்லும் பாதையில் பூத்த மலர்களும் முக்தி பெற்றன!!! உன்னை சீண்டிய காற்றுக் கூட சீலாக்கித்து போனது!!! தேனீக்களோ உன்னை மலர் என்று எண்ணி தேன் எடுக்க வட்டமிட்டது!!!! இறுதியில் உன் கடைக்கண் பார்வையோ என்மேல் பட்டு நானும் உன்வசம் ஆனேன்!!!! மொத்தமாய்.... -nandhu

#
nandhini Ramesh

எந்தன் இதயத்தில் இருக்கும் அவளை மறக்க விரல் இடையில் தீயிட்டு புகைக்கிறேன்... ஏனோ மீண்டும் தீ பிழம்பாய் உருமாறி எந்தன் இதயத்தில் நினைவுகளால் சுடுகிறாள்... மாற்றம் ஒன்றில் மாறாய் ஓவியமாய் அவள் விழிகள் இருக்க.... காணும் காட்சி எல்லாம் அவள் பின்பமே.... காதல் செய்ய உருவம் தேவையில்லை உந்தன் நினைவுகள் போதுமே....

#
Vijay Mahendran

அழகாய் பேசிட பல மொழிகள் உண்டு இவ்வுலகில்..... ஆனால் அழகே வந்து பேசியது உந்தன் விழிகளில் மட்டுமே....

#
Vijay Mahendran

அவளும்...நானும்... இருவருக்குமிடையில் நிகழ்கிற வாக்குவாதங்களில் அவளையே வெற்றியடைச்செய்கிறேன் ஆம் குடும்பத்தில் தோற்றால்தான் இந்த சமூகத்தில் வெற்றிபெற இயலும்...

#
Ram siva

அவளும்...நானும்... எனது கற்பனை சாம்ராஜ்யத்தில் மகாராணியாக இருந்தவளை அன்பு இல்லத்திற்கு வாழ்க்கை துணைவியாக்கிக்கொண்டது எங்கள் காதல்...

#
Ram siva

அவளும்...நானும்... இல்லறமென்ற குடும்ப உறவுக்குள் அவள் என்னோடு இணைந்திருக்காவிட்டால் எனது வாழ்க்கை அர்த்தமற்றதாகவே அமைந்திருக்கும்...

#
Ram siva

அவளும்...நானும்... அவள் காதலை தென்றலாக வீசியதனால் நாணலாக நடனமாடியது எங்கள் வாழ்க்கை மகிழ்வோடு...

#
Ram siva

அவளும்...நானும்... இதயம் மிகச்சிறியதென்பதால் எனது சரீரத்திற்குள் சங்கமித்துக்கொண்டால் அன்பின் நினைவாக...

#
Ram siva

அவள்(ன்) இல்லாமல் வாழவே முடியாது என்பது எல்லாம் அந்தந்த நேரத்திற்கான பிதற்றுகள் தான் @உறங்கும் புத்தன்

#
உறங்கும் புத்தன் ????

காலம் கடந்தும் , கவிதை கலைந்தும் காரணம் தேடி , காதல் தொலைத்தாலும் சட்டென நிஜம் தொலைத்து நிழடுகிறது கடந்த கால கல்லூரி காலம் ,அவள் பெயர் பார்த்தால் காதல் வலி அல்ல : வழி @உறங்கும் புத்தன் ....

#
உறங்கும் புத்தன் ????

 காதல் பொறாமை எத்தனை முறை தான் தழுவிக் கொள்கிறது. எத்தனை முறை தழுவிக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் உந்தன் காலடி தடம் தேடி கரை வந்து வந்து திரும்புகின்றன இந்த கடல் அலைகள்! - சங்கரலிங்கம் ராஜா

#
SANKARALINGAM RAJA

உண்மை சொல்லும் கண்ணாடியும் சில நேரங்களில் ஊமை ஆகிவிடுகிறது போலும். கண்ணாடி காணும் போது எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. ஆனால், அவளுக்கு மட்டும் எப்போதும் நான் அழகனாகவே காட்சியளிப்பதாக சொல்கிறாள்! -- சங்கரலிங்கம் ராஜா

#
SANKARALINGAM RAJA

தனக்காக ஏதும் யோசிக்காமல்... எனக்கா ஒரு இதயத்தை... தனக்குள்ளே சுமந்தவல் ... எனக்கதை திருப்பி கொடுக்க ஏலு ஜென்மம் கடந்தவல்... இனி வாழும் என் வாழ்வும் உனக்காக நான் இருப்பேன்... உன் பேரில் என் பெயரை இணைத்திடவே நான் பிறந்தேன்... என் உயிரை தன் உயிருள் சுமந்து இவ்வின்னுழகில் கண் திறக்க வைப்பவலை இவ்வகிலம் உள்ளவரை வர்ணிக்க மரவெனே... வர்ணிக்க முகம் இல்லாமல் ... எண்ணத்தால் முகம் வடித்து வர்ணித்த நான்... கதி்ர்...

#
கதிர்வேல்

உன் பிஞ்சு விரலால், என் தலையினை நீ கோதி, விட்டால் போதும் ; எனக்கு நீண்ட நாட்கள், வராத தூக்கம் கூட நொடிப் பொழுதில், வந்து விடும் ...

#
valro vv

உன் பஞ்சு, போன்ற கையால் எனக்காக நீ வடிக்கும், ஒவ்வொரு கவிதைக்கும் நான் காயப்படுகிறேன்; எனக்காக கவிதை எழுத, உன் விரல்கள் பேனாவை பிடிக்கும், போது உன் கைகளில் அழுத்தும், அல்லவா அதான்......

#
valro vv

இரண்டு மணிநேர பேருந்தின் பயணத்தின் போது என் உறக்கத்தை கெடுத்து என் சிந்தனை முழுவதும் சிதைத்து என் வசியபடுத்தி கொண்டவள் நியடி என்றும் உன் நினைவில் நான்

#
Pandees Waran

உன்னிடம் பேசுவதற்காகவே நாள்முழுதும் காத்துக் கிடக்கிறேனே...

#
Mahi Chandran

மீண்டும் ஒருமுறை உன்னைப் பார்த்து விட மாட்டேனா என்றே என் கண்கள் ஒவ்வொரு நொடியும் ஏங்கி தவிக்கிறதே...

#
Mahi Chandran

முத்தம் அவன் முன் கோபம் கூட முத்தத்தால் முடிவுக்கு வரும் என்று தெரியாதவளை ? முத்தங்களும் கோபத்தில் முணுமுணுத்தது இவளை......? -Santhini R

#
KaviKuil - COMPETITION

காதல்: உன் மனதைப் பார்த்து ரசித்தேன் உன் அழகைப் பார்த்து பிரம்மித்தேன் நீ என் இதயத்தில் இருப்பதை உணர்ந்தேன் நீ எனக்கானவன் என்பதை அறிந்தேன் நீ கிடைப்பாய் என்ற எண்ணத்தில் இன்று மட்டுமல்ல என்றும் உனக்காக இருப்பேன். -karunya ragunathan

#
KaviKuil - COMPETITION

உன்னை காண வேண்டும் என்று துடித்த போதெல்லாம் உண் நினைவுகளை மட்டும் என் கண்முன் நிறுத்தி இதயத்தை ரணமாக்கி சென்றவள் நியடி

#
Pandees Waran

இரண்டு அடி தொலைவில் நீ இருந்தும் தொட்டு உணர முடியாத போது எனக்குள் புதைத்து வைத்து இருக்கும் கனவுகளை மட்டும் வைத்து நான் என்ன செய்ய

#
Pandees Waran

இல்லறச்சோலைக்குள் தென்றலாய் வந்தவளே பாலைவன காற்றுகளோடு நலம் விசாரித்துக்கொள்கிறேன் என்னவள் அங்கு நலமாயென்று...

#
Ram siva

முத்தம் அவன் முன் கோபம் கூட முத்தத்தால் முடிவுக்குவரும் என்று தெரியாதவளை? முத்தங்களும் கோபத்தில்முணுமுணுத்தது இவளை.... !

#
சாந்தினி

புரிதல் " என்பது இலகுவானது கிடையாது.. உணர்வுகளால் இணைந்தவர்களால் மட்டும் தான் உணர முடியும்.. உணர்ச்சிகள் மட்டும் போதாது.. Mufa Zaky#

#
mufa zaky

உனது நினைவுகளை மட்டும் எனக்குள் வசமாக்கியதால் தனிமை எனக்கொரு போதிமரமே...

#
Ram siva

உனது அன்பென்ற ஆதரவு எனக்கு கிடைக்காவிட்டால் இன்னும் அனாதையாகத்தான் இருந்திருப்பேன் அன்பே...

#
Ram siva

வாழ்நாளெல்லாம் நன்றி சொல்வேன் என் காதலுக்கு உன்னை எனக்கு வாழ்க்கை துணைவியாக தந்ததற்கு,,,

#
Ram siva

முகத்தை மறைத்து கொள்ளதே நிலவை காணவில்லை என்று அனைவரும் தேட ஆரம்பித்து விடுவார்கள்

#
Pandees Waran

சுயமரியாதை இழந்துதான் உனது காதலை பெற வேண்டுமெனில் இப்போதே புதைத்துவிடுகிறேன் எனது காதலை...

#
Ram siva

ஏவூர்தியின்றி என்னை எங்கோ அழைத்து செல்கிறது. காதல் கலந்த உன் உரையாடல்

#
Asish John

உன்னை காணும் அந்த ஒரு சில நொடிகளுக்காக..... பல நாட்கள் உறங்காத எனது இரு விழிகளும்.... உன் நினைவில் கரைந்திருந்த பல இரவுகளும். ... உன் வருகைக்காக காத்திருக்கின்றது..... என்னவனே... -A.jenisha...

#
KaviKuil - COMPETITION

நான் கேட்காமல் எனக்கு கிடைத்த வரம் நீ , இருப்பினும் உன்னுடன் முழு வாழ்வையும் வாழ்வதையே இப்பொழுது வரமாக கேட்கிறேன் • • • எந்தன் மீது அதீத கோவம் கொண்ட அவள் தான் என் மீது அளவற்ற காதலும் கொண்டுள்ளாள் • • • இருப்பினும் இத்தகைய கோவம் கூட காதலில் ஓர் வகை அழகு தான் • • • -ராதையின் கிருஷ்ணன்

#
KaviKuil - COMPETITION

கவிஞன் ஆகிறேன் உன்னை காதலித்தாதல்... கணவன் ஆகினேன் உன்னை மனம்கவர்ந்ததால்... கவிஞன் காதல் வாழ்க்கையில் உனக்காக கவிபாடுவான்... ???? கணவன் திருமண வாழ்கையில் திண்டாடுவான்... ????

#
Tamilselva selvan

அழகிய அழகியே உன்னுடன் மட்டும் நான் பழகியே உன் பிரிவால் வருகிறது அழுகையே வாடிய நிலையில் நான் விழுகையே.... ????

#
Tamilselva selvan

உன் விழியில் ஆயிரம் பெயரை நீ காணலாம் ஒரு நாளில் ஆனால் அந்த ஒரு நாள் நீ என் கண்ணில் படவில்லை என்றால் உன் ஒருத்தியை மட்டும் தேடி திண்டாடும் என் விழிகள் பார்க்கும் கண்ணுக்கு நான் என்ன சொல்லுவேன் நீ வரவில்லை என்பதா இல்லை வரபோவதில்லை என்பதா உன் தேடுகையில் நான்....?

#
Tamilselva selvan

எந்தன் இனிய நாட்கள் யாவும் குழப்பதுடன் தொடர்கின்றது , அழகிய மங்கை என்னும் தேன் ஆனது தேநீர் கொடுகையில் • • •

#
Krishnan .k

நம் ஊடலில் கொசுறாய் உன் முத்தங்கள் போல் மழையின் கொசுறாய் இந்தச் சாரல் !

#
வீரா

உன் அழகினை வர்ணிக்க தமிழ் அகராதியில் கூட வார்த்தைகள் இல்லையடி ..

#
Pandees Waran

இரு விழியில் பேசி இரு கரம் கோர்த்து ஆசைகள் பல கொண்டு உன் தேகம் ருசித்து காமத்தில் கரைந்திட விருப்பமில்லை வயலோர குடிசையில் கண்டாங்கி சேலை கட்டி கையால் சமைத்து உன் தோள் சாய்ந்து கதைகள் பல பேசி உன் அன்பில் கரைந்திட விரும்புகிறேன்

#
Esther Daniel

உன் கண்ணில் நீ சிந்தும் உன் கண்ணீர் எனக்கு பண்ணீர் தான்... ????

#
Tamilselva selvan

காதலை வெல்ல நான் என்ன செய்வேன் காதலியே.... நான் பரிசாய் உன்னிடம் கேட்ட காதல்... நம் இடையே ஏற்பட்டிருக்கும் இந்த மோதல்... என் காதலை உன்னிடம் மீண்டும் மீட்க போர்த்திடுகிறேன்... போர்விறனாக அல்ல உன் காதலானாக....

#
Tamilselva selvan

காணாத என் கள்வனை கனவில் காண்கிறேன்... சொல்லாத என் காதலை கனவில் சொல்கிறேன்... தினம் தினம் கனவில் என் கள்வனின் மடியில் படுத்து கொள்கிறேன்... கதிரவனின் ஒளியில் கண் விழித்து பார்கின்றேன்... நானோ கிடக்கின்றேன் என் மெத்தை மடி மேல்... வெட்கத்தால் என் கன்னம் சிவந்தது.. என் கனவில் கண்ட கள்வனை நினைத்தது..... by, jenisha..

#
Jenisha

எதிர்பாராத நேரத்தில் குறுச்செய்தியால் இனையத்தில் இனைந்த அன்பும் நீ... இதுவரை நேரில் கண்டு கதைத்திடாத உறவும் நீ... அருகில் இருக்கும் உறவு அழகென்றால்... தொலைவில் இருக்கும் நீயும் ஓர் அழகே..! -லோகநாயகி

#
KaviKuil - COMPETITION

௨தட்டில் இருக்கும் காதலை விட ஊமை காதலின் சுகம் அதிகம் நானும் உணர்தேன் நீ ௭ன்னை ஊமையாக்கிய போது........... கடற்கரை காற்று வாங்கிய ௨ணர்வு -௨ன் கண்ணக்குழி ௭ன் கண்ணத்தை தீண்டுகையில்.......

#
Kanika

துள்ளி யோடும் நீரோடை தனிலே தூது விட்டேன் என் நினை வதனை தூது செல்ல மறுத்த தனால் தூங்க மறந்ததடி என்னிதயம்!!

#
kanchana veerasamy

உன் விழி மூடி திறக்கும் நொடி வரைதான் நம் உறவு என்றாலும் என் உயிர் உள்ளவரை போதுமடி அந்த தருணமே...! கவிஞர் வே. அருள்மணி

#
கிராமிய கடல் giramiya kadal

உனை பின் தொடர்வதில் உன் நிழலையும் வீழ்த்துவேன் நீ அனுமதி அளித்தால்......

#
Craze n kavidhai

தூக்கி எறிந்துபோன அவளை தூங்க விடாமல் பன்ன வேண்டும் துன்புறுத்தி அல்ல..... என் வெற்றிகளை அவள் கண் முன்நிறுத்தி.......!!!

#
someone????

எதிர்பாராத நேரத்தில் குறுச்செய்தியால் இனையத்தில் இனைந்த அன்பும் நீ... இதுவரை நேரில் கண்டு கதைத்திடாத உறவும் நீ... அருகில் இருக்கும் உறவு அழகென்றால்... தொலைவில் இருக்கும் நீயும் ஓர் அழகே..!

#
Loganayagi M

கருமை நிற்க் கண்ணனை கண்டதில்லையடா ஆனால் என் உள்ளம் சொல்கிறது அந்த கண்ணன் உன்போல் தான் இருந்திருப்பான் என்று அந்த கண்ணனின அழகையே மிஞ்சுமடா உந்தன் அழகு

#
Jaisakthi

புவி ஈர்ப்பு விசையும் தோற்று போகுமடா உன் தன் காந்தக்கண் ஈர்ப்பு விசை வேகத்தை கண்டு

#
Jaisakthi

பூக்களும் வரம் கேட்குதே உன் கூந்தலில் இருக்கையில் மட்டும் வாடாமல் இருக்க வேண்டும் என்று....!

#
someone????

If I know what love is , It is because of you...,!????

#
someone????

ஆயுள் முழுவதும் கைதியாக இருப்பேன் உன் இதய சிறையில்.!!

#
someone????

உன் நினைவு இல்லாத நாள் என்ன நினைவு நாள்!!!

#
someone????

kannai moodum velaielum kaatrai theendi selvadhu un ninaivukalada...

#
Jaisakthi

நான் இல்லை என்று வருத்தப்படாதே! நீ நினைத்து பார்க்கும் அளவில் நான் வந்து நிற்பேன் என்றும் உனக்காக! ❤️ தனிமை காதலி ❤️ (கவி)

#
1g queen Kd papa

உன்னை நினைக்க பலபேர் இருக்கலாம் ஆனால் உன்னை பற்றி நினைப்பது நானாக மட்டும் தான் இருப்பேன். ❤️தனிமை காதலி ❤️ (கவி)

#
1g queen Kd papa

என்னமெல்லாம் பேசியிருப்போம் என்னமெல்லாம் சொல்லிருப்போம் நீ சொன்னது வச்சு பார்க்கையில் நீயும் நானும் தான் அந்த உலகத்தில் யாரோ?யவரோன்னு ஆகையில். நெஞ்சமது தாங்கல....! ❤️ தனிமை காதலி ❤️ (கவி)

#
1g queen Kd papa

சந்தன வாசனையும் மனோரஞ்சித பூ வாசனையும் சேர்ந்த ௨ன் சட்டை வாசனை முக்கில் நுழைந்நு மனதோடு பேசும் காதல் மொழிகள் ஏராளம் தினம் ஆயிரம் முறை சுவாசிக்க ஆசை நித்தமும் ஒவ்வொரு வாசனை ௨னது ஹார்மோன் சுரப்பைக்கூட படிக்க ஆரம்பித்து விட்டது ௭ன் மனம்

#
Kanika

புரிந்துகொள்ளும் இதயங்களுக்கு, மௌனம் கூட மொழியாகும்...

#
Aswadh Shaager

மெல்ல மெல்ல மெருகி உள்ள உள்ள உருகி உன்னை நான் பருகி என்னை நீ மருகி நம்மை நாம் மெழுகி நெருப்பை மூட்டி தாகத்தை கூட்டி சிணுங்கலை மாற்றி சொர்கத்தை காட்டி இன்பசுகம் ஏற்றி அதில் உன்னையும் கூட்டி என் உயிர் திரவியத்தை ஊற்றி நம் ஊடல் உதிரத்தை மாற்றி கூடிருக்கும் காமதேவனே போற்றி ஆனந்தின் எழுத்துக்கள்

#
ANANDHA KRISHNAN

தோட்டத்தில் பூத்த மல்லீகை கூட ஒரு நாளில் மணம் இழத்து விடும் இந்த நாளில் பூத்த மல்லீகையே நீ மன நிறையோடு வாழ்க. -Poovarasan

#
KaviKuil - COMPETITION

உனக்காக நானும், எனக்காக நீயும் நம் இருவருக்காக காத்திருந்த கடற்கரையும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது நம் காதலின் பிரிவு அவை அறிந்திருக்க வாய்ப்பில்லை பிரிவின் வலியை நான் அனுபவிக்கிறேன் சேர்த்துவைத்த கடற்கரை இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது நம் வருகைக்காக. -kamal raj

#
KaviKuil - COMPETITION

முழு நிலவாய் நீ இருக்க அதில் மூழ்க முடியாமல் நான் தவிக்க காதலே குழம்புதடா என் காதலை கண்டு எப்படி சொல்வேன் என் இதயத்திடம் சிறைபிடித்தவன் நீதான் என்று மரணமே வந்தாலும் மண்டியிட்டு வணங்கும் என் காதலை கண்டு -Sownthari Sundar

#
KaviKuil - COMPETITION

இழகிய எனது மனதை இரும்பாக்கினேன். நீ ஒரு காந்தம் என்பதை மறந்து .. என் மனதை இழுத்துக் கொள்கிறாய் மறக்க விடாமல் தொடர்ந்து... -Tharmika Jaialalitha

#
KaviKuil - COMPETITION

ஒன்றும்மில்லை உன்னதமான உன் அன்புக்கு முன்னால் உலகம் கூட ஒன்றும்மில்லை -கோ.பூவரசன்

#
KaviKuil - COMPETITION

தூரம் ஒன்றும் தடையில்லை... தூக்கம் இங்கு எனக்கில்லை... தனிமை ஒன்றும் புதிதில்லை... துணிவோடு காத்திருக்கிறேன் நம் வாரிசிற்க்காக...!! -ᴀᴋɪʟ

#
KaviKuil - COMPETITION

விழியின் ஓரம் வழியும் கண்ணீரும் கதை பேசும், இன்பத்திற்கும், துன்பத்திற்கும் காரணம் நீயென்று.... என் உயிரும் நீயென்று... என் உணர்வும் நீயென்று.....

#
Suba Vivek

உன்னை விட்டால் எனக்கு யாருமில்லை ஆனாலும் உன்னை விடவும் மாட்டேன் யாருக்கும் விட்டுக் கொடுக்கவும் மாட்டேன் காரணம் நீ என் காதலன் உனக்கு என்னை பிடிக்கும் என்பதை விட எனக்கும் உன்னை பிடிக்கும்... ❤️ தனிமை காதலி ❤️ (கவி)

#
1g queen Kd papa

பெண்ணாக பிறந்தவளே பேரின்பம் தருபவளே தாய்மையை அடைந்தவளே தரணி காக்கும் தலைவியே

#
Poovarasan Poovarasan

ஒருவரின் அன்பிற்காக ஏங்குபவர்களுக்கு மட்டுமே தெரியும் தனிமையின் 'வலி' என்னவென்று.... ❤️ தனிமை காதலி ❤️ (கவி)

#
1g queen Kd papa

காயப்பட்டாலும் சரி... காயப்படுத்தினாலும் சரி... கலங்குவது என்னவோ என் கண்கள் தான்!! ❤️தனிமை காதலி❤️ (கவி)

#
1g queen Kd papa

பல முறை விக்கல் எடுத்தும் ஒருமுறை கூட தண்ணீர் குடிக்கவில்லை ஏன் என்றால் நினைப்பது நீயாக இருந்தால் நீடிக்கட்டும் சிலநேரம் என்றேன். ❤️தனிமை காதலி ❤️ (கவி)

#
1g queen Kd papa

என் உயிர் பிரியும் நேரமும் உன்னை விட்டு பிரியும் நேரமும் ஒன்று தானடி என் உயிர் பிரித்தல் உலகை விட்டு செல்வேன் உன்னை பிரித்தல் உலகம் என்னை விட்டு செல்லும்.

#
Poovarasan Poovarasan

இரு உயிரின் உணர்வுகளின் உச்சகட்ட மகிழ்ச்சி சில நேரங்களில் .. ௨யிரை பறிக்கும் வலிகளும் சில நேரங்களில்......

#
Kanika

தாயை போல் தாலாட்டுவாயா மடியினில் தலைகோதி தந்தையை போல் ௮ன்பு காட்டுவாயா தலை ௨ச்சி நுகர்து முத்ததில் குழந்தை போல் பாசம் காட்டுவாயா கெஞ்சி கொஞ்சுவதில் ௨டன் பிறப்பு போல் ௨ரிமை காட்டுவாயா விட்டுகொடுத்து தியாகத்தில் ௭ன் ஆசையும் ௭திர்பார்ப்பும் புரியவில்லை ,ஆதலால் மனம் திறக்கின்றேன் புரிந்தால் ஏற்றுக்கொள், இல்லையேல் மன்னிப்பு கேட்க சொல்

#
Kanika

ஒவ்வொரு ஏமாற்றமும் ஒரு கெட்ட பழக்கத்தில் ஆறுதல் பெறும் நீ தந்த ஏமாற்றம் உணர்வுகளை கவிதையாக்கையில் நிம்மதியானது

#
Kanika

கவிஞனை எழுதிய கவிதையவள் கவிஞன் கவிதைகளை எழுதுவது மரபு,இங்கே ஒரு கவிதை கவிஞனை எழுதுதியது

#
balachandar sundaram

முழு நிலவாய் நீ இருக்க அதில் மூழ்க முடியாமல் நான் தவிக்க காதலே குழம்புதடா என் காதலை கண்டு எப்படி சொல்வேன் என் இதயத்திடம் சிறை பிடித்தவன் நீதான் என்று மரணமே வந்தாலும் மண்டியிட்டு வணங்கும் என் காதலை கண்டு

#
Sownthari Sundar

உனக்காக நானும் எனக்காக நீயும் நம் இருவருக்காக காத்திருந்த கடற்கரையும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது நம் காதலின் பிரிவு அவை அறிந்திருக்க வாய்ப்பில்லை பிரிவின் வலியை நான் அனுபவிக்கிறேன் சேர்த்துவைத்த கடற்கரை இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது நம் வருகைக்காக.

#
kamal raj

தூரத்தில் நீ இருக்க தூறும் தூரலாக நான் தூக்கத்தில் நீ இருக்க ௨ன்னை தூரத்தும் கனவாய் நான் மழையாய் நீ இருக்க

#
Kanika

குழந்தை கையில் பொம்மை போல் உன் காதல் எனக்கு. வீசி எறிந்துவிட்டு பின் ஓடி பிடித்துக் கொள்கிறேன்...

#
கவிதைகளின் அரசி அவள்

வானை தொடும் மலை போல் அவள் உயரம் இல்லை..... உடையாமல் மண்ணில் வாழும் உயிரும் இல்லை..... வரைந்த வலியை தாங்கும் உள்ளம் ஆனது..... என்னை வதைத்து செல்லும் அழகிய பூவா அது.....

#
Abi V

இரு புறமும் பார்த்து விட்டுத் தான் கடந்தேன் பின்பு... எப்படி நடந்தது இந்த காதல் விபத்து!!!!!

#
Kutty Ma

அவள் ஒரு கொரோனா காதல் தொற்று ஏற்பட்ட நோயாளி நானடி காலம் முழுதும் தனிமைபடுத்திகொள்ள வைத்த பெருந்தொற்று நீயடி -Ragu thanjirayar

#
KaviKuil - COMPETITION

If you see your vision, the distance will disappear!! The sea waves will also dissolve. If your foot hits!! Touch the sky and touch the distance If your hands fall!! Fallen flowers also regenerate If your magazines fall!! Something is still not done girl.. Your heart and my love!!

#
V&v creations 6774

கண்ணில் தொடங்கி காமத்தில் முடிவடைவதில்லை காதல் கனவில் தொடங்கி ௨ள்ளத்தில் கலந்து நினைவில் நெருங்கி தினமும் ௨ன்னையே நினைத்து கைகோர்க்கும் நாட்களை நினைத்து உருகும் இருநெஞ்சம் ௨ணர்வுக்கு உயிர் கிடைக்குமா என ஏங்கும் மனம் அப்பொழுது தோன்றும் படபடப்பு எப்பொழும் கிடைக்காத ௨ணர்வு கண் காண துடிக்கும் காது ௨ன் திசையை நோக்கும் மனதுக்குள் இனம் புரியாத மகிழ்ச்சி என்னவென்று சொல்லத் தெரியாத ௨ணர்வு நீ என்னை நினைக்கும்போது ௨னக்காகவே நான் ௭ன்று ஏங்கும் மனம் நீ ௭ன்னை ஏங்கவைக்கும்போது ௭ப்பொழுது ௭ன்னை தாங்குவாய் ௭ன நோக்கும் கண்கள் கண்ணும் ௨தடும் ஊமையாகி ௨டல் புத்துயிர் பெறும் உன்னத விளையாட்டு காதல்

#
Kanika

மழைத்துளியின் வரிகள் உன்னை தொடுவதற்காக தான் விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத்திற்கு வருகிறேன் இடையில் இந்த குடை எதற்கு !!!!.

#
JP

விழி பார்த்திருந்த காதல் துளைவினில் துளைத்த ஒரு தோழியை துளவுகிறேன்....... இருளில் இருந்து அகல்ந்து வரும் ஒரு நிழல் போல் தென்படுகிறாள்.... கண் இமைக்கும் நொடியிலோ இருளோடு கலந்துவிடுகிறாள்.... நான் மனம் இழந்து பல ஆண்டுகள் ஆகியும்.... அவள் முகம் அறிந்து ஒரு வருடமே ஆனாது.... காலங்கள் கடல் போல் பெரிதாகியும்....... ஏன் இடைவேளை என்ற கரையும் சிறிதவது இல்லை....? ....... என் காதலே.... -Abi V Music

#
KaviKuil - COMPETITION

துளைவினில் துளைத்த  ஒரு தோழியை துளவுகிறேன்....... இருளில் இருந்து அகல்ந்து வரும் ஒரு நிழல் போல் தென்படுகிறாள்.... கண் இமைக்கும் நொடியிலோ இருளோடு  கலந்துவிடுகிறாள்.... நான் மனம் இழந்து பல ஆண்டுகள் ஆகியும்.... அவள் முகம் அறிந்து ஒரு  வருடமே  ஆனாது....                         காலங்கள் கடல் போல்  பெரிதாகியும்....... ஏன் இடைவேளை என்ற கரையும்  சிறிதவது இல்லை....? என் காதலே.......

#
Abi V

தூவல் கொண்டு வரும் பெண் முகிலே.... நனைய நினைக்கிறேன் உன் ஒரு துளியில்..... தழும்பி செல்லும் அக்கணமே..... தடுமாறும் என் மனமே.....????

#
Abi V

தனிமையில் எழுதும் கவிதைகளும் சுகமானது...... ஏன் என்றால் உன் நினைவுகள் தரும் அழகான வரிகள் நிஜத்தில் நீ இருப்பதை போல் உணர்கிறேன் நானும் என்பதால்! ❤️தனிமை காதலி ❤️ (கவி)

#
1g queen Kd papa

I miss you???? உன்னை பார்க்காமல் என் காலை..... விடிந்ததும் இல்லை முடிந்ததும் இல்லை.... உன்னை மறக்க முடியாமல் தவிக்கிறேன்..... நீ தான் வேண்டுமென்று என் மனம் ஏங்குகிறது...... கண்ணீர் விட்டு அழவும் முடியவில்லை..... வாய் விட்டு சொல்லவும் முடியவில்லை..... என் இதயம் அழும் சத்தம் யார் அறிவார்கள்....... என் கண்கள் தேடும் கனவு நீ..... என் இதயம் தேடும் உலகம் நீ..... எல்லாம் நீயாக இருக்க நான் மட்டும் இங்கு உன்னை நினைத்து தனித்து இருக்க..... ❤️தனிமை காதலி ❤️ (கவி)

#
1g queen Kd papa

நான் இறந்தால் என் கல்லறை வந்து கண்ணீர் சிந்திவிடாதே ஏன் என்றால் உன் கண்ணீரை துடைக்க எழுந்தாலும் எழுந்து விடுவேன்....! தனிமை காதலி....!

#
1g queen Kd papa

நீ நடந்து சென்ற பாதையில் நான் கடந்து செல்கிறேன் உன் நினைவுகள் உடன் நான் ????????

#
Jebinanto Jebinsha

ஒரு நொடி கவிதை உன் கண் சிமிட்டல் ❤️

#
செல்வா செல்வா

ஆதாம் போல் இருக்க வேண்டும் என்று எங்குகிறேன் ஏனென்றால் ஏவவாலாக நீ வேண்டும் என்று...

#
Kiruthika gopal

தொலைத்தூரமும் தொலைந்தே போகும் உன் பார்வை பட்டால்!! கடல் அலையும் கரைந்தே போகும். உன் பாதம் பட்டால்!! தொடு வானமும் தொட்டு விடும் தூரமே உன் கைகள் பட்டால்!! உதிர்ந்த மலர்களும் மீண்டும் பிறக்கும் உன் இதழ்கள் பட்டால்!! ஏனோ பெண்ணே இன்னும் படவில்லை.. உன் இதயமும் என் காதலும்!!

#
Hemanth kumar

இசைக்கு நினைவுகளைத் தூண்டும் சக்தியுண்டு சில சமயம் வலிக்குமளவிற்கு...!

#
Alfie jo

இருவிழி பார்வையில்! முகவரி மாற்றினாய்!

#
Alfie jo

பெண்ணே உந்தன் கண்கள் என்ன சுழலா அதில் அடிக்கடி மாட்டிக்கொள்கிறேனடி..

#
ARUN ABINASH R

மனசு வலிக்கும் போதேல்லாம் உன்னை நினைத்து கொள்வேன் உன்ன விட யாரும் என்னை அவ்வளவு கஷ்டபடுத்த முடியாது????

#
Anandhi S

நான் நேசித்து வாசித்த கவிதை நீ

#
Anandhi S

தொட்டு விடும் தூரத்தில் நீயில்லை என்றாலும் உன்னை தீண்டி செல்லும் தென்றல்லாக நானிருப்பேன் ஆனந்தி ????????????

#
Anandhi S

கண் இமைக்கும் நேரத்தில் என் உள் நுழை காதல் உன் மடியில் சாய்ந்து கொண்டு பல யுகம் கடந்து செல்ல வேண்டும். மரணம் என்ற ஒன்று வந்தழும் உன் மடி மீது நான் சாக வேண்டும்.

#
PS. Saran

கடல் கரையில் இருக்கும் அலையாய் என் வாழ்க்கை நூலைந்தவள் இன்று என்னை கண்ணிரில் மூழ்கவைத்து விடடு சென்று விட்டால் அவளிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும்.என் இதையத்தில் புதிய உணர்வு கொண்டது. காய பாட்ட இதயத்திற்கு தெரியும் அவள் தாந்த வழியை சொல்ல வார்த்தைகள் இல்லை ????????????

#
PS. Saran

சிலருடைய அன்பு கொஞ்ச நாட்கள் தான் என்றாலும் அவர்களின் நினைவுகளை ஆயுள் வரை மறக்க முடியாது....

#
Alfie jo

சிறை வாழ்க்கையும் சுகமாய் இருக்கும்... அந்த சிறை உன் இதயம் என்றால்...... - Madhi07

#
KaviKuil - COMPETITION

அழவைக்காத காதலும் இல்லை... அழவைக்காதது காதலே இல்லை... -Madhi07

#
KaviKuil - COMPETITION

காதல் அழகான கண்களுக்கும் ஆழமான கண்ணீருக்கும் இடைப்பட்டது -Madhi07

#
KaviKuil - COMPETITION

நிலவு இருக்கும் தூரத்தைவிட நீ இருக்கும் தூரம் குறைவுதான் நிலவை காண முடிந்த என்னால் உன்னை காண முடியவில்லையே.... -Madhi07

#
KaviKuil - COMPETITION

இந்த பாதை உன்னை சந்திக்க செல்லும் வழி. வருவோமா வேண்டாமா என்ற தயக்கத்துடன் நாள் முடிவடைகிறது என் ஒருதலை காதலுடன்❣️

#
Tharchu 1413

கைகள் இணைந்திருந்தால் மட்டுமா காதல்? இதயம் இணைந்திருந்தால் தான் காதல்! தொலைவில் இருந்தாலும் தொலையக்கூடாது!

#
Alfie jo

உண்மையில் நீ அழகு தானா? இல்லை..... அந்த இறைவன் என் கண்களுக்கு மட்டும் உன்னை அழகாக காட்டுகிறானா? என்பதெல்லாம் தெரியவில்லை மொத்ததில் நான் ரசிக்கும் பேரழகி நீ - aathika banu

#
KaviKuil - COMPETITION

என்னை சிரிக்க வைத்தவளும் நீதான் என்னை கண்ணீர் சிந்த வைத்தவளும் நீதான்

#
Ram Ram

வார்த்தைகளைத் தேடி சேகரிக்க தான் செய்தேன். உனதருகில் நின்றதும் அனைத்தும் தொலைந்து விட்டது. இது பயமா? இல்லை தயக்கத்தின் காரணமா? என்பதெலாம் தெரியவில்லை..... மொத்ததில் என் அனைத்து காதல் வார்த்தையும் தொலைந்து போனது உன் ஒன்றைப் பார்வையில்!

#
aathika banu

உன் முகம் காட்டி விட்டதடி என் தோழி! உனக்குள் உண்டான பயத்தை ஏன்? என்னிடம் சொல்ல இவ்வளவு தயக்கம்" 

#
aathika banu

உன்னிடம் என் இந்த தேடல் தொடரும் என்ற பயத்தில் நான் எப்படி இந்த மாற்றம் என்பதுத் தெரியவில்லை

#
aathika banu

உண்மையில் நீ அழகு தானா? இல்லை..... அந்த இறைவன் என் கண்களுக்கு மட்டும் உன்னை அழகாக காட்டுகிறானா? என்பதெல்லாம் தெரியவில்லை மொத்ததில் நான் ரசிக்கும் பேரழகி நீ

#
aathika banu

மிகப்பெரிய வலி நான் உன்னுடன் பேச நினைத்தும் பேச முடியாமல் இருப்பதே..!

#
kumaran

உன் மௌனம் என்னை கொல்லாமல் கொல்லுதடி

#
Ram Ram

என்னை விட பாதுகாப்பாய் உன்னிடம் தான் இருக்கிறது! அங்கேயே இருக்கட்டும் பத்திரமாய் என் இதயம்!

#
Alfie jo

துடிக்கும் இதயம் இரண்டானாலும் வாழும் உயிர் ஒன்றுதான்

#
Ram Ram

அருகில் இருந்து தொல்லை தருவதை விட, விலகி நின்று அவதிப்படுவது சிறந்தது!

#
anishya anu

உன்னை சந்திக்க நேரம் இல்லை உன்னை பற்றி சிந்திக்க நேரம் உண்டு

#
Ram Ram

இரவின் படியில் உறங்காத உன் நினைவுகள்

#
Ram Ram

தொலைந்து போன நாட்களை என்னி என் எதிர்காலம் தொலைந்து போய் கொண்டு இருக்கின்றது

#
Ram Ram

நீ மூச்சி காற்றுப்படும் தூரத்திலிருந்தால் நான் காற்றில்லா தேசத்திலும் உயிர் வாழ்வேன்...

#
anishya anu

அன்பை கொடுத்து கடனாளி ஆகு. உதவி செய்து கெட்டவனாகு.. நினைத்து நினைத்து உன்னை மற. அழுது புலம்பி சிரிக்கத்துவங்கு..

#
Ramesh Ramesh

மைவிழியால் என்னை மயக்கி மதி அழகால் மனதை வென்றவள் நீயடி!

#
Mani

வில் அம்புகளால் போர் நடத்திய உன் பார்வையில் உன் புருவ வளைவில் சருக்கி உன் இமை வழியே தப்பி உன்னிடம் அடிமையானேன் என் சகியே... ச. காயத்ரி.

#
KaviKuil - COMPETITION

ஆயிரம் கவிதை வரிகள்எமுதியும் தீரவில்லை நீ கூறிய ஒற்றை வார்த்தையின் தாகம்... -இறகின் வரிகள்.

#
GAYATHRI S

அனைவரும் உறங்கும் நேரம் எனக்கிது.... தலையணை நனைக்கும் நேரம்

#
Shanthi

மேகத்தில் இருக்கும் மழை துளி போல என் மனதில் இருக்கும் காதல் நீ... இமயத்தில் இருக்கும் பனி துளி போல என் இதயத்தில் இருக்கும் காதல் நீ... காட்டில் இருக்கும் காற்றை போல என் கனவில் இருக்கும் காதல் நீ... கண்ணில் இருக்கும் இமை போல என் கண்ணுக்குள் இருக்கும் காதல் நீ...

#
anishya anu

உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு தருணமும் அழகிய கவிதைகளே...!

#
Shanthi

உன் மனம் அறியும் முத்தத்தில் கொடுத்தது என் காதலையென்று...!

#
Shanthi

இதழில் ஒரே ஒரு வரி மட்டும் எழுதி செல்வாயாடா...?

#
Shanthi

பெருங்காதலின் பேரழகு நீ எனக்கு...!

#
Shanthi

வாழ்க்கை என்ற கடலில் காதல் என்ற படகில் பயணிப்போம், இருவரும் கரைசேரும் வரையில்!

#
Mani

மனைவி

#
Mohamed Aasath

விழிகள் இமைக்க மறுக்கின்றன -என்னவள் ‌ ‌இதழிசைக்கும் அழகை கண்டதால்...

#
Shanthi

செல்லுக்குள் செல்ஃபி எடுத்தாலும், செல்லமே... நீ செவ்வானமாய் தெரிவாயடி

#
SIMEONJENIN R

உன் மீது சேர்த்து வைத்த காதலுக்கு பரிசாய் கண்ணீரை வட்டியை கட்டிக் கொண்டிருக்கிறேன் பாவை இவளை ஏன் மறந்தாய் என்னவனே..????

#
Anbu

உனக்காக உருகி தவிக்கும் இதயத்திடம் என் இதயத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டது என்று நீயே கூறிவிட்டுச் சென்று விடு என்னவனே..

#
Anbu

என் கண்ணீரெல்லாம் கவிதைகளாய் காத்திருக்கின்றன என்னவனே உன் விழி பார்வைக்காக..

#
Anbu

உன்னை சந்தித்த போது சிந்திக்கவில்லை, இப்போது சிந்திக்கிறேன் எப்போது உன்னை சந்திப்பேன் என்று!

#
மல்லி

நித்தம் ஒரு புத்தம்புது விடியலாய் நானும் புதிதாய் பிறக்கின்றேன் உன் நினைவு சாரல் எனை நனைக்க

#
kumaran

நிலவின் அழகை சொல்ல வார்த்தைகள் கோடி, நீ எங்கு சென்றாலும் நான் வருவேன் உன்னைத் தேடி!

#
Mani

பெட்ரோல் விலையை போல்தான் என் காதல் உன் மேல் தினமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது!

#
kumaran

மாலை முடிந்தும் மறையாத சூரியன் - நீ..! என் இதயத்தின் ஒளிவட்டம் - நீ..! நீல வானத்தை உள்ளடக்கிய நீலம் - நீ..! செந்நிலவின் செதுக்கலற்ற சிற்பம் - நீ..! என் இரவுகளின் துளி வெளிச்சம் - நீ..! ஒன்னும் இல்லாத காகிதத்தை நிரப்பிய கவிதை - நீ..! என் இதயம் என் காதல் என் வாழ்க்கை - நீ தான்..!

#
kumaran

தனித்து சென்றாலும் துரத்தி வருகிறாய் நினைவாகி என்னை

#
Mano Messi

நித்தம் ஒரு கவிதையால் நீ ஜனனம் ஆகிறாய்...! புத்தம் புது புன்னகையால் நான் கவிஞன், ஆகிறேன்...!

#
Aswin E

காணாத போது கண்களுக்குள் வாழ்கின்றாய்

#
Mano Messi

இருளெனை சூழ்ந்து கொண்டாலும் உன் நினைவொளியில் வாழ்வேன் நானும் அழகிய உலகில் உன்னோடு

#
Mano Messi

தொலைதூரம் நீ போனால் உன்னை தேடி வெகுதூரம் பயணிக்குறது உள்ளம்..

#
ajin john

உறங்க போகிறேன் தேடாதே என்கிறாய் உன் கனவே நான்தான் என்பதை மறந்து

#
kumaran

என் இதயம் துடித்து கொண்டிருப்பது உயிர் வாழ அல்ல உன்னோடு வாழ ❤️ ❤️ ❤️

#
Aswin E

தொலைவில் நீயிருந்தாலும் உனை கையிலேந்தி ரசிப்பேன் காதலுடன் நிலவுப் பெண்ணே

#
kumaran

ஆயுள் ரேகையை பற்றி கவலையில்லை உன் கை ரேகையோடு இணைந்திருப்பதால்

#
kumaran

வானவில்லிலும் காணாத வண்ணம் என்னவனின் அழகிய எண்ணம்

#
மல்லி

இளைப்பாற இடம் கேட்டேன் இதயத்தில் இணைந்து வாழும் வரம் கொடுத்தான்...

#
மல்லி

இன்னிசையாக இதயத்துடிப்பும் உனை காணும் போதெல்லாம்... (ஆனந்த யாழாய்)

#
கவிஞர்.ராசு

பேச நினைத்த வார்த்தைகளும் தூரமானது உன்னருகில்

#
Mani

கவிதையெழுத சிந்தித்தால் சிந்தைக்குள் நீ வந்துவிடுகிறாய் கவிதையாக...

#
kumaran

கற்பனையிலிருந்தவன் கண்ணெதிரே தோன்றவும் சொப்பனமோ என்றெண்ணியது மனம்...

#
anishya anu

காதல் பிடிக்குள் சிக்கி காற்றும் திணறுகிறது கொஞ்சம் இடைவெளிவிடு பிழைத்துப்போகட்டும்...

#
கவிஞர்.ராசு

தொலைதூரம் நீ போனால் உன்னை தேடி வெகுதூரம் பயணிக்குறது உள்ளம்..

#
மல்லி

ஒரு பூவாக நீ மலர்கிறாய்… ஒரு வண்டு போல் நான் நுழைகின்றேன்… தேன் தேடும் வண்டுகள் போல் நான் இல்லை… நீ சம்மதம் சொல்லும் வரை.

#
kumaran

எந்த நேரமும் பேசிக் கொண்டே இருப்பது மட்டும் காதல் அல்ல புரிந்து கொண்டு பேசாமல் இருப்பதும் உண்மையான அன்பு தான் அதை புரிந்து கொள்ளவும் ஒரு மனம் வேண்டும்.

#
Mani

எத்தனை உறவுகள் என் அருகில் இருந்தாலும் நீ என் அருகில் இருக்கும் போது மனதிற்கு கிடைக்கும் அந்த ஒரு சந்தோசம் கிடைப்பதில்லை. அன்று உன்னை மீண்டும் பார்க்க வேண்டும் என்று தூக்கத்தை தொலைத்தேன். இன்று உன் நினைவுகளுடன் துக்கத்தை தொலைக்க முயற்சிக்கிறேன். ஒரு பூவாக நீ மலர்கிறாய்… ஒரு வண்டு போல் நான் நுழைகின்றேன்… தேன் தேடும் வண்டுகள் போல் நான் இல்லை… நீ சம்மதம் சொல்லும் வரை.

#
மல்லி

என் வாழ் நாள் தேடலிலே கிடைத்த மிகச் சிறந்த பரிசு உன் ஞாபங்கள் மற்றும் உன் நினைவுகள் மட்டும் தான். உன் பார்வை பிடியில் இருந்து ஒவ்வொரு முறையும் தப்பிக்க நினைத்து தோற்றுக் கொண்டே இருக்கின்றேன்.

#
anishya anu
Logo

© Red Nucifera