Logo
உங்கள் கவிதைகளை பகிர ஆப்பை பதிவிறக்குங்கள்!
Logo

வாழ்க்கை கவிதைகள்

வாழ்க்கையில் இறைவன் நம் கையில் கொடுத்திருப்பது, வெற்றுக் காகிதம்..!" அதில் எழுதுவதா..? வரைவதா..? கிழிப்பதா..? என்பது, நம் கையில் தான் உள்ளது...!! RK

#
Kalpana Subramaniam

புரிதல் ஒன்றே சந்தோசம் என்று, ஒருவர் உண்மையாக நேசித்து ஒன்றிணைந்து வாழும் போது தான், உன்னால் அறிந்து கொள்ளவே முடியும்...!! RK

#
Kalpana Subramaniam

செவி சாய்க்க ஒரு காது.., பிடித்துக்கொள்ள ஒரு கை.., தாங்கிக்கொள்ள ஒரு தோள்.., உடன் பயணிக்க ஒரு கால்.., இது போதுமானதாக இருக்கிறது, ஒருவர் முழுமை அடைய...!! RK

#
Kalpana Subramaniam

வலி தீர்ந்தாலும் வலிகளுக்கான காட்சி, அப்படியே மனக்கண்ணில் புதைந்துகிடக்கும்..!" மெய்யான நினைவு, மெய்தலும், அதில் சற்று பொய்தலும், பொய்யான கனவு பொய்ந்ததும், அதில் சற்று மெய்ந்ததும்..!" வலி பொய்யிடையில் சிக்கிக்கொள்ள, காட்சி மெய்யகத்தில் தேங்கி நிற்கும்..!" காட்சி மங்கும்வரை வலி வலியதுதான்..!! RK

#
Kalpana Subramaniam

நம்மால் எவரையும் காய படுத்தாமல் வாழ முடியும்..!" யாரிடமும் காய படாமல் தான் வாழ முடியாது...!! RK

#
Kalpana Subramaniam

சிரிக்கும் வரை பேசி பேசி, நமக்கு பிடித்தவர்களின் மன வலிகளை, குறைக்க தெரிந்த, அந்த மனம் கூட கடவுள்தான்னு நினைக்கிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

பலமுறை சகித்து வாழக்கூடியவள் பெண்..!" அவள் ஒரு முறை வெறுத்து நடந்தால்..!" நீ நடைபிணம்...!! RK

#
Kalpana Subramaniam

சிரிக்கிறோம் என்றால், வலிகள் இல்லாமல் இல்லை..!" மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க, நடிக்கிறோம் என்று அர்த்தம்...!! RK

#
Kalpana Subramaniam

நீ இருக்கும் இடத்தை, சரியாக வசித்துக் கொண்டால்.., உன்னை நம்பியவர்களும் உனக்காக உண்மையாக இருப்பார்கள்..!" நீயே பொய்யாக இருந்தால், உனக்காக அவர்களும் பொய்யாக மாறி விடுவார்கள்...!! RK

#
Kalpana Subramaniam

நமது கஷ்டங்கள்.. வழிகள்.. ஆசைகள்.. கனவுகள்.. எல்லாம் முடிகின்ற, ஒரு நாள் வரும்..!" அன்று நம் பெயர் பிணம்...!! RK

#
Kalpana Subramaniam

அதிக கேள்விகளை கேட்பது, ஆணாக இருந்தால், அறிவாளி பட்டமும்..!" பெண்ணாக இருந்தால், வாயாடி பட்டமும் கிடைக்கின்றது, இந்த சமூகத்தில்...!! RK

#
Kalpana Subramaniam

ஒருவரின் குணத்தை சோதித்துப் பார்க்க வேண்டுமானால்.., அவரிடம் அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள்..!" அவரின் குணம் நன்றாக தெரியும்...!! RK

#
Kalpana Subramaniam

வாழ்க்கை புத்தகத்தின் பழைய பக்கங்களை திறக்கிறாள், திருதப்பட்டிருக்கின்றன..!" அறியாது செய்த அத்தனை தவறுகளும், தற்போது திரும்பி தவறிக்கூட அத்தவறுகளை இழைத்து விடக்கூடாது என்பதற்காக..!" இடைகிடை இப்படி திருப்பி பார்த்து கொள்கிறாள் அவள்...!! RK

#
Kalpana Subramaniam

ஏட்டுக் கல்வி, அனுபவக் கல்வி இரண்டுமே முக்கியம்தான்..!" ஆனால்.., மதிப்பெண்கள் தான் எப்போதும் முதல் இடம் பிடிக்கின்றன..!" மதிப்புகள் இரண்டாம் பட்சம் ஆகின்றன...!! RK

#
Kalpana Subramaniam

வாழ்க்கை என்பது ஒரு நாடகம் அழ வேண்டும் சிரிக்க வேண்டும் நடக்க வேண்டும் விழ வேண்டும் சிணுங்க வேண்டும் இது தான் நம் வாழ்க்கையில் செய்து கொண்டே இருப்போம்

#
Ananthi Ananth

சந்தோஷம் தந்த இறைவன்வலிகளையும்தருகிறான்

#
Pandaya Rajam

உலகின் அணு ஒவ்வொன்றிலுமாய் மறந்து, திளைத்து வாழ்நாள் முழுதும் வாழ்ந்திருக்க வேண்டும்

#
கவிதா

அவளே எல்லாரிடமும் வழிய வந்து பேசுவாள். என்பதிலிருந்து, அவள் எல்லோரிடமும் நல்லா பேசுவாள் என்பதாய் மாற வேண்டும் என் சித்திரம்.

#
கவிதா

< வாழும் வரை நம்மை யாரும் வெருக்கக்கூடாது.. < வாழ்ந்து முடித்த பிறகு நம்மை யாரும் மறக்கக்கூடாது..! < அப்படி ஒரு வாழ்க்கைய வாழ்ந்து விட்டு செல்வோம்..!! < இனிய காலை வணக்கம் >..!!

#
Karuppasamy

எனக்குள்ள எவ்வளவு வலி இருக்குனு எனக்கு மட்டும்தா தெரியும்...! கொடுத்ததும் நீ குணப்படுத்துவதும் நீ

#
Karuppasamy

அவள் கனவு காணத்தொடங்கிய பிறகே அவனுக்கு கவலை வந்தது அவளுக்காக எதை எதை விட்டுக்கொடுக்க எவ்வளவு வட்டிக்கு வாங்க ...

#
Karuppasamy

நினைத்த நொடி கனத்து போகும் மனம் மரத்து விட கூடாது என்றே உனை நினைப்பதில்லை. சிந்திக்கும் நொடியோடு சித்தமும் நின்று விடும் என்றே! உனை சிந்திப்பதை நிறுத்தி விட்டேன். முதல் சிந்தனை நீ என்பதை மாற்ற வேலைகளையும், வேறு எண்ணங்களையும் சேர்த்து கொண்டேன். தனிமையே வேண்டாம் என தவிர்த்தேன். தவிர்க்க முடியாத தவிப்பு இது என்று உணர்ந்தே மனம் மறைத்து உடலையும் மூளையையும் உழைக்க சொன்னேன். இனி விடை என்னவோ?.

#
கவிதா

கண்டதும் வருவதல்ல காதல்.. காணும் முன் வருவதே காதல்.. தனிமையில் வாழ்வதல்ல வாழ்க்கை.. மற்றவர்கள் ஆள் மனதில் இனிமையாக வாழ்வதே வாழ்க்கை..

#
கவிதையின் காதலன் ரவி

உண்மையில்லை உறவிடம் நேசமில்லை பலரிடம்.. வேஷமின்றி மனிதர்கள் பூமியில் இருப்பது எவ்விடம்..? காணும் இடமெல்லாம் பண பலம்.. பூமியில் இல்லையே மனித வளம்.. சுழலும் பூமியில் சுழற்சியாய் திரும்புமா மனிதநேயம்..?.

#
கவிதையின் காதலன் ரவி

துடிக்கும் நேரம் நம்மிடமில்லை.. அடுத்த நொடியும் நிரந்தரமில்லை.. நடப்பது எதுவும் அறிவதில்லை.. நினைப்பது போல் எதுவும் நடப்பதுமில்லை.. நடந்த எதையும் நினைத்ததே இல்லை.. இவ்வுலகம் யாருக்கும் நிரந்தரமில்லை நாளை என்பது எல்லோருக்கும் இல்லை.. உனக்கென்று எதுவும் பூமியிலில்லை.. இங்கு வந்தவர் யாரும் தங்கியதில்லை.. சென்றவர் யாரும் திரும்பியதில்லை.. நொடி மட்டுமே சொந்தமென்று வாழ்ந்தவருமில்லை..

#
கவிதையின் காதலன் ரவி

நடப்பவை யாவும் விதிப்படியாகும்.. நடந்தது யாவும் அதன் படியாகும்.. நடக்க போவதும் அதன் வழியாகும்.. நாளை என்பதும் அதன் வசம்மாகும்..

#
கவிதையின் காதலன் ரவி

தேவையென்று தேடிய மனம் போதுமென்று நிற்காது.. கண் போகும் இடம் தேடி மனம் போக மறுக்காது.. அழுகின்ற நேரமும் சிரிக்கின்ற நிமிடமும் உனக்காக மாறாது.. தடுமாற்றம் தொடங்கி விட்டால் மனக்குமறல் குறையாது.. தடுமாறும் போதெல்லாம் தேவை எதுவென்று புரியாது..

#
கவிதையின் காதலன் ரவி

தூக்கத்தில் என் மரணம் நிகழ்ந்திட வேண்டும்.. பிணியின்றி நலத்தோடு பிரிந்திட வேண்டும்.. துணையின்றி மரணம் வரை நடந்திட வேண்டும்.. மணந்தவளை அவளுக்கு முன் இழந்திட வேண்டும்.. தலைமுறைக்கு பாரமின்றி என் மரணம் வேண்டும்.. உறவுகள் விலகாமல் சூழ்திட வேண்டும்.. கடைசி வழி பயணச் செலவும் என் உழைப்பில் வேண்டும்.. கஷ்டமின்றி என் பயணம் முடிவு பெற வேண்டும்..

#
கவிதையின் காதலன் ரவி

மெல்ல மெல்ல வரிகள் அனைத்து ஆராயவே விருப்பகிறது புரியாத அன்பு கிடைத்தவுடன்*...!!

#
Karuppasamy

நிம்மதியாய் இருக்க வேண்டுமெனில்.. உங்களுக்கு நெருக்கமானவர்களை ஆராயத் தொடங்காதீர்கள்...!.???

#
Karuppasamy

நினைக்கவே நேரம் சரியாகயிருக்கிறது பிறகு நான் எப்படி மறப்பேன் உன்னை

#
Karuppasamy

தேடலை குறைத்துக் கொள் நிம்மதி கிடைக்கும்.. எதிர் பார்ப்பை நிறுத்திக் கொள் மகிழ்ச்சி கிடைக்கும்.. அதிகப் பேச்சை தவிர்த்துக் கொள் உறவு கிடைக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

நாலு வகை சட்டினி தினமும் கிடைக்கும்" என எதிர்பார்ப்பில் ஆரம்பித்து, "நாலு நாளா ஒரே சட்டினியை வச்சு சாப்பிடும்" யதார்த்ததிற்கு பெயர்தான் "திருமணம்..!!

#
Karuppasamy

சைட் அடிக்குறது குத்தம்னா.... நீங்க அழகாயிருப்பதும் குத்தம் தான்...

#
Karuppasamy

நிம்மதி என்றால் என்ன என்று தெரியாமல் நிம்மதியாக வாழ்ந்த நாட்கள்...

#
Karuppasamy

uyire yen vun ondre pakka muggam verre indral....athele kudi erukkem uyire.....atma ondre paratma..... bangsa-bangsa bersatu.....melaung merdeka..... bangsawan melaung satu rakyat.....satu kemanusian sejagat.....bukan nafsu....tapi perikemanusian kerana perikemanusian adalah kudrat tuhan dan permainan tuhan.....bukan kata satu manusia tanpa erti bo hidup....tapi dengan makna yang penuh hidup dengan penuh ulagam partham kaiyi alave.....parvai mann aleve....yarr mann....artham kundeven martheve mulimiya valkeren.... signature:parvai mann aleve alexander chandrasekaran

#
Alexander

அமைதி கூட பல நேரங்களில் பிறர் பார்வைக்கு திமிராகவே தெரிகின்றது

#
Karuppasamy

அவர்கள் அன்பை குறை சொல்வதற்க்கு முன் அவர்களுக்காக நீ செலவு செய்த நேரத்தை ... #யோசி

#
Karuppasamy

நாம் உபயோக படுத்தியவைகளே குப்பகைள்...

#
Karuppasamy

வாழ்க்கையில் ஒரு ஒரு மனிதனுக்கும் சில மறக்க முடியாத நிகழ்வுகள் மனதில் இருக்கும்; அதை மனதால் ரசிக்க தான் முடியுமே தவிர காலத்தின் கட்டாயத்தால் அதனோடு தொடர முடியாது : அவ்வாறு சில நினைவுகளுடன் வாழும் ஓர் பெண்ணின் கற்பனை காகிதமே இந்த கவிதை பக்கம்

#
Suji Suji

பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி நிற்போம்... கோபமும் வெறுப்பும் ஒன்றையும் சாதிக்கப் போவதில்லை .

#
Karuppasamy

வேண்டாம் என தூங்கி எறிந்த பின்... அது யார் கைகளில் கிடைத்தது என தேடாதிர்கள்

#
Karuppasamy

மதிப்பில்லை என்று உணரும் போதெல்லாம் மனம் குறுகி போனேன்.. அன்பில்லை என்று உணரும் போதெல்லாம் மௌனமாகி போனேன்.. இவ்விரண்டும் பணமிருந்தால் வரும் என்பதை உணராமல் போனேன்..

#
கவிதையின் காதலன் ரவி

தவிக்கும் போது துடுப்பை தரரதவர்கள் கரை சேர்ந்த பின் கப்பலை அனுப்பி என்ன பயன்..? காலைவணக்கம்..!

#
Karuppasamy

,சுகமானது உறவுகள் என எண்ணினேன்உணர்வுகள் அற்றவர்களால் உறவுகள் சுமையானது... சுகமானது நண்பர்கள என எண்ணினேன் நயவஞ்சகத்தால் நட்புகள் சுமையானது சுகமானது காதல் என எண்ணினேன் காமம் கலப்பதால் காதல் சுமையானது சுகமானது திருமணம்என எண்ணினேன் வரதட்சனையால் திருமணம் சுமையானது சுகமானது ஆன்மீகம்என எண்ணினேன் போலி சாமியார்களால் ஆன்மீகம் சுமையானது சுகமானது முதுமை என எண்ணினேன் உடலும் உயிருமே சுமையானது சுகமானது மரணம் என எண்ணினேன் இறந்த பின்பு உடலும் பிறருக்கு சுமையானது.....

#
Chandra Sekar

கூண்டில் அடைபட்ட பறவைபோல் இருக்கிறது என்மனம் திறந்துவிடும் கைகளைத்தான் காணவில்லை...

#
Karuppasamy

யார் மீதோ உள்ள கோபத்தை யார் மீதோ காட்டுவது தான் மனித இயல்பு, அப்படி கோபத்தை காட்டியும் நம்முடனே இருப்பவர்கள் தான் உண்மையான உறவுகள்...

#
Karuppasamy

நாம் அனைவரும் சரியாக செய்யும் ஒரே தவறு.. சிலரை உண்மையாக நேசிப்பது... SS

#
Subramani Mp

நித்தம் ஒரு சோதனை வேதனை சோதனையின் தங்கை போலும் செல்லும் இடமெல்லாம் கை கோர்க்கிறாள்

#
Adam Shameem Shameem

தன்னை அறிந்து கொண்டவன் இந்த உலகத்தையே கைக்குள் வைப்பான்.. தன்னை நேசிக்க தெரிந்தவன்தான் பிறரையும் நேசிக்க வைப்பான்.. கஷ்டத்தை ரசிக்க தெரிந்தவன் சந்தோசத்தின் கூடவே இருப்பான்.. கஷ்டத்தை ரசிக்காதவன் சந்தோசத்தையே காணாமல் இருப்பான்..

#
கவிதையின் காதலன் ரவி

எதிர் பாராதது எதிர் பாராமல் நடந்தால் அது உனக்கானது.. எதிர் பார்த்தது எதிர் பார்த்தும் நடக்காதது உனக்கில்லாதது.. கிடைத்ததை அனுபவிக்கவும் கிடைக்காததை இரசிக்கவும் கற்றுக் கொண்டால் வாழ்க்கை இனிமையானது..

#
கவிதையின் காதலன் ரவி

சிதறிய சிந்தனையால் வாழ்க்கையே தடம் மாறும்.. தெளிவான சிந்தனையால் தடம் மாறிய வாழ்க்கையும் இடமாறும்.. கடவுள் படைத்த மனித வாழ்க்கை தினமும் தடுமாறும்.. மண்ணில் செய்த மண் விளக்காய் இருளோடு போராடும்..

#
கவிதையின் காதலன் ரவி

கருவறையில் வெளிச்சத்தினால் கை விடபட்டவள் நான்... வெளி வரும் போது  தொப்புள் கொடியினல் கைவிட பட்டவள் பள்ளியில் என் நண்பர்களுக்கு புதிய  நண்பரேகள் கிட்டத்ததால் நண்பர்களால் கைவிட பட்டவள் நான்.. விளையாடில் உயரம் குறைவாள் கைவிட பட்டவள்.... அண்ணி வந்த உடன் அண்ணனால் கை விட பட்டவள்..... பணத்தினால் காதலை இழந்து கை விட்டப்பட்டவள் திருமணம் என்ற பெயருள் குடம்பத்தினால் கைவிட பட்டவள் கணவனின் பெண்மகத்தினால் தூக்கி விஷப்பட்டு கை விட்டாப்பட்டவள்... குழந்தையுடன் தனியாக வாசித்ததாழ் சமுதாயத்தில் சடங்குகளில் கை விட பட்டவள்..... தாத்தா பாட்டி வந்த உடன் குழந்தையல் கை விட பட்ட தாய் நான்... அனைத்தும் என்னை கை விட்ட போது.. இந்த பூமி தாய் மட்டும் என்னை கை விட வில்லை... நீ வா நான் உனக்கு கை கொடுப்பேன் என்று என்னை தைரியமான பெண்ணாக மாற்றியது..... வாழ்க தமிழ்.......

#
priya

வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாத உண்மை தான் மறக்க முடியாத பொய்யாகும்.. துண்டித்துக் கொள்ளும் உறவு தான் தவிர்க்க முடியாத இழப்பாகும்.. அனுபவிக்க முடியாத சந்தோசம் தான் மீந்த வாழ்க்கையை கடினாமாக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

ஆழ்கடல் எனும் சோகத்தில் மூழ்கியிருக்கும் போது என்ன ஆச்சி என்று என யாராவது கேட்டு விட மாட்டார்களா என்று தோன்றுவது தான் அழ்கடலை விட ஆழமான வலி...

#
Chandru

ஆசைப்பட்ட கனவை அடைய வேண்டும் என்றால்... தூரமான ஒரு பயணம் சென்று தான் ஆக வேண்டும்..!!

#
Karuppasamy

தற்காலிகமான வாழ்க்கை நன்றாக இருக்கும் போதே அதை அனுபவித்துக் கொள்.. வாழ்க்கை சிறப்பாக இல்லாத போது இதுவும் தற்காலிகமானதே என்பதை நினைவில் கொள்..

#
கவிதையின் காதலன் ரவி

நிழலின் இருள் *தாயை பிடித்து எறிந்த பிரித்து எழுதிய விதி வழியது *காண்போரின் கருணையும் பரிவும் தனதென எண்ணிய மழலை கொடியது *காமுகன் நல்லவன் என எண்ணிய கண்களும் கைகளும் பூந்தளிரின் மலரா மனதின் நம்பிக்கை *வளர்வது தான் வளர்ச்சி என்று எண்ணாத குணம் எது வளர்ச்சி என்று அறியாத பேதை *பாவம் இறைவனின் செல்லப்பிள்ளை தினமும் யோசிக்கிறாள் எது அன்பின் பண்பென்று *தொடரும் நினைவுகளின் கனவாய் கனவுகளின் நினைவாய் என்றும் முசா

#
Adam Shameem Shameem

கர்மா யாதெனில் : செய்த தானம் கொடுத்த மரியாதை செய்த த்ரோகம், கண்டிப்பாக நம்மை தேடிவந்து நாம் என்ன செய்தோமோ அதைவிட சிறப்பாக செய்து விட்டுப்போகும். #கர்மா

#
Karuppasamy

நீர் விழுவதை ரசிக்கும் ஒருவனுடன் பழகலாம்.. நீ விழுவதை ரசிக்கும்,, ஒருவனுடன் பழகாதே..

#
Karuppasamy

உரக்கப் பேசும் உண்மையை விட பம்மிப் பேசும் பொய் உடனே நம்பப்படுகிறது…!!!

#
Karuppasamy

வாழ்க்கைல நமக்கு கரெக்ட்டான #முடிவு எடுக்குற வயசு வரும் போது... ஆண்டவன், கரெக்ட்டா நம்ம #முடிய எடுத்திருப்பான்..?

#
Karuppasamy

*நாளை எல்லாம் சரியாகிவிடும் என்பது நம்பிக்கை.. ₹இன்னைக்கு சமாளிச்சிப்போம் என்பது "பெரும் தன்னம்பிக்கை"...!!!

#
Karuppasamy

#அரை கப் டீ தரும் சுவையை ஐம்பது ரூபாய் பழச்சுவை தருவதில்லை .. <ஆம் இங்கே>.. #விலையைப் பொறுத்து அமைவதில்லை திருப்தி... #தரத்தைப் பொறுத்து அமைவதே திருப்தி......

#
Karuppasamy

️அன்பு மட்டும் தான் உலகில் நிரந்தரமானது️.. ️அதை உண்மையாக்குவதும் பொய்யாக்குவதும் ️,, ️நாம் நேசிப்பவரிடம் மட்டுமே உள்ளது️..?

#
Karuppasamy

பணம் இல்லாவிட்டால் எதையுமே அனுபவிக்க முடியாது.. பணம் இருந்தாலும் எதையும் அனுபவிக்கவே விடாது... இதான் சார் வாழ்க்கை

#
Karuppasamy

நம்மிடம் கடன் வாங்கிய நபரும் நம்மளை கடிச்ச கொசுவும் நம்மிடம் சிக்கவே சிக்காது... ?

#
Karuppasamy

மனசுக்கு பிடித்தவர்கள் மகிழ்ச்சியாய் இருப்பதை சற்றே விலகி நின்று வேடிக்கை பார்ப்பதிலும் தனி சுகம் தான்

#
Karuppasamy

என் இதய நூலகத்தில் இருப்பது எல்லாம் உன் நினைவு பதிப்புகள் மட்டுமே

#
KKS

#மனிதனுக்கு கஷ்டம் என்ற நோய் வந்தால் தான்..... #பக்தி என்ற மருந்து தேவைப்படும்....!! இனிய வெள்ளி...

#
Karuppasamy

காலையில் டீ யில் தொடங்கும் சுறுசுறுப்பான வாழ்க்கை இரவில் ஒரு கொசுவர்த்தி சுருளோடு முடிந்துவிடுகிறது....

#
Karuppasamy

உன் நலனே என் மகிழ்ச்சி என்பதால் இப்போதெல்லாம் அதிகமாய் வேண்டிக் கொள்கிறேன் நமக்காக ₹என்னவளே..?

#
Karuppasamy

அழுத்தம் என்பதே அழுத்தமானது

#
கவி ஆர்ட் அரசன்

கடவுள் இல்லையென இருட்டில் பெருங் கூட்டம் கூச்சலிட்டு கத்தினாலும்.. அணையா விளக்காம் முருகனின் துணையோடு நாத்திகவாதிகளின் இருளை விரட்டுவேன்.. முருகனே ஆதி முருகனே ஜோதி

#
Karuppasamy

மனம் நோவதும் மனிதர்கள் நொந்து போவதும் "நேசமில்லா". வார்த்தைகளால்..?

#
Karuppasamy

இல்லாதவன் இருக்கு இருக்கு என்பதும் இருப்பவன் இல்லை இல்லை என்பதும் பணத்தையும் நோயையும் தான் ...

#
Karuppasamy

_தேடுதல்_ _ஒரு போதும்_ _தோல்வியை_ _தருவதில்லை_ _அன்பின்_ _தொடக்கமே_ _தேடுதல் தான்..! RK

#
Kalpana Subramaniam

ஒரு பெண்ணால் ரசிக்கப்படும் ஆண்.. அழகில் சிறந்தவனாக இருப்பதை விட.. அன்பில் சிறந்தவனாக இருப்பான்...!! RK

#
Kalpana Subramaniam

வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை..! மனதினுள் உள்ள சோகத்தை தவிர...!! RK

#
Kalpana Subramaniam

எவ்வளவு தான் தெளிவாக இருந்தாலும்..! எவரோ ஒருவரின் அன்பிற்கு.. மனம் ஏங்கி தான் தவிக்கிறது..!! RK

#
Kalpana Subramaniam

தனிமை நம்மை.. அரைப் பைத்தியமாக்குகிறது..! அதிலிருந்து தப்பிக்க.. நாம் ஒரு துணையை நாடுகிறோம்..! அவர்களோ நம்மை.. முழு பைத்தியமாக.. ஆக்கி விடுகிறார்கள்...!! RK

#
Kalpana Subramaniam

விதி என்று சொல்லி.. சில விஷயங்களை மறந்து.. மனதை ஆறுதல் படுத்திக் கொண்டாலும்..! எங்கோ ஒரு மூலையில்.. அதன் வலி.. இருந்து கொண்டுதான் இருக்கிறது..!! RK

#
Kalpana Subramaniam

பெண்ணாய் பிறக்கும் போது.. வலிக்கவில்லை..! பெண்ணாய்.. வாழும் போது தான்.. வலிக்கிறது..! சில நேரம்.. நம் வாழ்க்கை.. நமக்கானது இல்லையோ என்று...!! RK

#
Kalpana Subramaniam

ஒரு பெண்ணுடைய வாழ்க்கை.. ஒரு ஆணிடம்தான் உள்ளது..! ஆனால்.., அந்த பெண் தேர்ந்தெடுக்கும்.. ஆணை பொறுத்தே உள்ளது..!! RK

#
Kalpana Subramaniam

வாலிப வயசுல முகத்துல பரு வந்துருச்சேனு கவலைப் பட்டதும்.. கொஞ்சம் வயசானதும் முகத்துல சுருக்கம் வந்துருச்சேனு கவலைப் படறதும்... நீ தானே ?...!!

#
Karuppasamy

சிறிய விதை ஒரு பெரிய மரமாக வளர்கிறது; அதுபோல உன் முயற்சியையும் வளரச்செய்."

#
Karuppasamy

எதிர்ப்புகள் இல்லாமல் எந்த உயர்வும் இல்லை!"

#
Karuppasamy

~பொறுமை~ *வாழ்க்கையை வாழ வைக்கும்... பொறாமை வாழ்க்கையை.. வாழ விடாமல் வைக்கும்....

#
Karuppasamy

அப்பாவிகள்தான் எப்போதும் பிறரால் காயப்படுத்தப் படுகிறார்கள். காரணம்... அவர்கள் தவறானவர்களையே மிகவும் நம்புகிறார்கள்.

#
Karuppasamy

பார்ப்பவர்களுக்கு நான் சிரிச்சிட்டே இருந்தாலும் எனக்குள் இருக்கும் கவலையும் கஷ்டமும் எனக்கு தான் தெரியும்

#
Karuppasamy

மனிதன் மிகவும் சுயநலக்காரன் நேசித்தால் கெட்டதையும் வெறுத்தால் நல்லதையும் பார்க்கவே மாட்டான் ...

#
Karuppasamy

Alexander chandrasekaran signature:.....alage (prosperity) alagenethi manathil,annal inthe arrupuki.....pureyah villei kathal mayiekam,pen oru thothram yarrekum yarre melum pasam ilei.... kudumbthil kunjom iruke, annal....kadavul alathiyo neesikeerar.... nan kadavul nesam kundaven, kadavul alathiyo neesikerar.....athenal....nan nesam konden....makkal mela, amma maragel appa maragel pilange, anna,tangaci, uruva oru tancham,athelil pasam varelam,anna....tancham ilatha pasam....mernmei kudenthe....oru teruvil......oru alle pakka..morthe..ange avare......kadavel parkera marre pasamo akkere irunthal......avan kadavul jeevikerar... yenna yarr yarre pasam kathalikiranglo.....avange nesathila kudde valevangga.....theddi povengge ,,atthe kathal nan kadavul kathal konden,annal markale....verikeran....yennal....alaviyum.... pavethil,valerange, kathal rendu manne (mind)neelai kundethe....renddu mannamo,oru manam nellayage irunthal marthema.....kathal puu pukkum, atheya kathalo maha manthiram, makkal nesam kunddal sule.....thalapathyvijay....naa nambila.....verum poi pitala attam.....unmela iruthal kudde......sethi poidum yennal oru parkathi, naa kadavul yaasekiran,(-thedikeran)oru naelil....annal....markale vaasikka kathu kudekka porren.....pen marthum ilei,pen oru kadavul thiruviladal.....yennal pen....than allam,,pon,porul,tancham,selvaku, unne.....keatteh kuulven manathil.....nee kalvan nee nessekerarir ilel alage neesekerar.....alage (prosperity) alagenethi manathil,annal inthe arrupuki.....pureyah villei kathal mayiekam, Alexander chandrasekaran signature:.....alage (prosperity) alagenethi manathil,annal inthe arrupuki.....pureyah villei kathal mayiekam,pen oru thothram maayekum kudethe kaaviya,kavinchan naa ilei puu..... mundrum ilei....innisai.....padal manam indru....valenthe innisai....(..inni-nam isai) inge manam irukum eddam pattu... paatukaran varre porren

#
Alexander

மழை பெய்வதா வேண்டாமா என்று இருக்குறது, விரும்பியவரின் மனதை போல்

#
Karuppasamy

அடக்குபவர் முன் சுதந்திரமாய் இரு... சுதந்திரம் கொடுப்பவர் முன் அடங்கி இரு..

#
Karuppasamy

கடந்து வந்த பாதை கடுமையாக இருந்தாலும் அது கற்றுக் கொடுக்கும் பாடத்தை கணக்கில் வை அனுபவமே சிறந்த ஆசான்..

#
Karuppasamy

விலை பட்டியலில் என்றுமே இடம் பிடிக்காதது இந்த அன்பு ... இனிய காலை

#
Karuppasamy

நடத்தியதும் நீயே... நடத்தப் போவதும் நீயே... நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும் ஓம் முருகா... ஓம் முருகா... ஓம் முருகா

#
Karuppasamy

எந்தப் பண்டிகை வந்தாலும் சாதாரண நாள் மாதிரி தெரியுதா?! அப்ப வயசு ஐம்பதைக் கடந்தாச்சுனு அர்த்தம்..?

#
Karuppasamy

வாழ நினைத்தேன் வாய்ப்பு கிடைக்கவில்லை.. பாசம் வைத்தேன் உறவு நிலைக்கவில்லை.. உழைக்க நினைத்தேன் ஊதியம் கிடைக்கவில்லை.. நிகழ்ந்ததை என்னால் மறக்க முடிவதில்லை.. நிகழ்வதையும் என்னால் தடுக்க முடியவில்லை.. இனி நிகழப் போவதையும் என்னால் கணிக்க முடியவில்லை.. ஆனால் அனைத்தையும் என்னால் கடந்து போக முடிந்தது..

#
கவிதையின் காதலன் ரவி

வலி நிறைந்த வாழ்க்கையில் இறைவன் காரணமின்றி யாரையும் சந்திக்க வைக்கமாட்டான்.. பாலமாக சிலரை வைக்கும் இறைவன் பாடமாக பலரை வைக்கிறான்..

#
கவிதையின் காதலன் ரவி

சிரித்துக்கொண்டே துரோகியா இருப்பதை விட... முறைத்துக்கொண்டு எதிரியா இருந்து விடுங்கள்....!!️ #இனிய__காலை__வணக்கம்

#
Karuppasamy

எதிர்பார்ப்பு இல்லாத அன்பும் கைம்மாறு பார்க்காத உதவியும் சுயநலம் காட்டாத உறவும் போலித்தனம் இல்லாத புன்னகையும் தரம் பிரிக்காத நட்பும் இணைந்திருந்தால்.. சந்தோசம் குறையாமலும் கவலை இல்லாமலும் அன்பு வற்றாமலும் வளமான வாழ்க்கையில் இனிமை குன்றாமலும் இருக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

அனுபவம் சில காயங்களை தந்து விட்டு தான் நிதானத்தை கற்றுக்கொடுக்கும்.. தெரிந்து கொண்டேன் என்பதை விட தெளிந்து விட்டேன் என்பதே உண்மையான அனுபவம்..

#
கவிதையின் காதலன் ரவி

வாழ்க்கை எனக்கு எளிதானது எதிர் கொண்ட வாழ்க்கையில் எதிர் பார்ப்பதை விட எதிர் கொள்வதை கற்றுக் கொண்டதால்..

#
கவிதையின் காதலன் ரவி

மதிப்பவரை மதித்திடுவேன் மதிப்பவர் முன் மண்டியிடுவேன்.. மதிப்பிற்கும் மதிப்பிடுவேன் மனதோடு செயல்படுவேன்.. முகம் பார்த்து பேசிடுவேன் தலைகுனிய மறுத்திடுவேன்.. தலைக்கனமின்றி தழைத்திடுவேன்.. தேடும் சொந்தங்களுடன் சேர்த்திடுவேன்.. வேண்டாம் என்றால் ஒதுங்கிடுவேன்.. அன்பிற்கு மதி மயங்கிடுவேன்.. வேஷமென்றால் விலகிடுவேன்.. பணம் பார்த்து மனம் மாறாத சொந்தங்களுடன் இணைந்துடுவேன்..

#
கவிதையின் காதலன் ரவி

வாழ்க்கை தவிர்க்க முடியாத சில இழப்புகளை தந்து விட்டு தான்.. வெளிப்படுத்த முடியாத சில உண்மைகளை காட்டும்.. காணாத சில சந்தோசங்களை கொடுத்து விட்டு தான் நிறைவேறாத சில ஆசைகளை கொடுக்கும்.. கிடைத்ததை அனுபவிக்கவும் கிடைக்காததை ரசிக்கவும் தெரிந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

காதல் என்பது மொட்டை மாதிரி அடிக்க அடிக்க வந்துட்டே இருக்கும், கல்யாணம் என்பது சொட்டை மாதிரி ஒரு முறை வந்தால் வந்தது தான்..!

#
Karuppasamy

_பிணத்தில் கூட_ _பணத்தை தேடும் உலகம் இது_ _தானும் ஓர் நாள்_ _பிணம் தான் என்பதை மறந்து...!! RK

#
Kalpana Subramaniam

பாசம் வையுங்கள் தவறில்லை ஆனால் பைத்தியமாக ஆகி விடாதீர்கள். ஏனெனில் இங்கு முடிவே இல்லாத வாழ்வும் இல்லை. பிரிவே இல்லாத உறவும் இல்லை எல்லாம் சில காலம் தான். SK

#
SK

அதிகாரத்தில் பணிவை தேடினேன் வெற்றி கிடைத்தது.. பொறுமையாய் அன்பை தேடினேன் உறவு கிடைத்தது.. அன்பில் உன்னை தேடினேன் வாழ்க்கை கிடைத்தது..

#
கவிதையின் காதலன் ரவி

நேர்மையற்ற பூமியில் நேர்மையாய் துரத்துகிறது காலம்.. தள்ளி விடாமலேயே துள்ளி ஓடுகிறது நேரம்.. போகாதே என்றாலும் போவேன் என்கிறது வயது.. குறையாதே என்றாலும் குறைந்து போகிறது இளமை.. தடுக்கவும், தவிர்கவும் தெரியாமல் ஆளுமை கொள்கிறது முதுமை.. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் உறுதியாகிறது வாழ்க்கை..

#
கவிதையின் காதலன் ரவி

The art of life is not controlling what happens to us , but using what happens to us .. Good Morning

#
Karuppasamy

என் மனதின் வலிகளை வெளியே சொல்வதில்லை.. சில வலிகளை சொல்லாமல் இருப்பதே சுகமாக இருப்பதால்..

#
கவிதையின் காதலன் ரவி

வாழ்க்கையில் பணம் தேடுவோரிடம் நிம்மதி இல்லை.. நிம்மதி தேடுவோரிடம் பணமில்லை.. இரண்டையும் தேடுவோர் வாழ்க்கை நிலையில் இல்லை.. எதுவும் நிறையாக இருப்பதை விட நிறைவாக இருந்தால் தான் நிலையாக இருக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

எண்ணம் போல் வாழ்க்கை அமையாது என்றாலும்.. என் எண்ணத்தில் வண்ணம் நீ தான்.. உதட்டோரம் சிதறி விழுந்த உன் சிரிப்பால் மனம் சிந்தனையை இழந்தாலும்.. என் கண்களோ உனது சிரிப்பில் சோகத்தை கண்டது வலியோடு, வழியின்றி சோகத்தை மறைந்து கொண்டதால்.. வலியோடு வழி தேடும் உனக்கு என்னை தோள் கொடுக்க சொன்னது..

#
கவிதையின் காதலன் ரவி

புரிதல் இருந்தால் கோபமும் அன்பாகும்.. புரிதல் இல்லையின்றி அன்பும் கோபமாகும்.. ஆடும் ஆட்டம் முடிவாகும்.. போகும் இடமும் முடிவாகும்..

#
கவிதையின் காதலன் ரவி

வாழ்க்கை போதிக்கும் போது விரும்பாததை.. பாதிக்கும் போது விரும்புகிறோம்.. காட்டும் போது விரும்பாத பாசத்தை.. வெறுக்கும் போது நேசிக்கிறோம்..

#
கவிதையின் காதலன் ரவி

விடாமல் துரத்தியது நாள்காட்டி.. தானாக கூடியது வயது.. நிற்காமல் ஓடியது கடிகாரம்.. சொல்லாமல் கடந்தது இளமை.. தேடாமல் வந்தது முதுமை.. முற்றும் என்றது வாழ்க்கை..

#
கவிதையின் காதலன் ரவி

ஊரே எனக்கு துணையிருக்கும்.. ஆயிரம் உறவுகளின் அன்பிருக்கும்.. அகிலமே என்னை சூழ்ந்திருக்கும்.. நீயில்லை என்றால் இந்த பூலோகமே இருண்டிருக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

போதுமென்ற "அழகு" வருமானத்தை வீணாக்குவதில்லை

#
Karuppasamy

போலியான பாசத்தைக் காட்டி உண்மையான பாசத்தை விலக வைத்த உனக்கு மட்டும் எப்படி உண்மையான பாசம் கிடைக்கும்.. வேறொருவன் போலியாய் நீ கொடுத்ததையே வட்டியுடன் சேர்த்து கொடுப்பான்.. உனக்கில்லை என்றாலும் உன் தலைமுறைக்கு..

#
கவிதையின் காதலன் ரவி

மாத்திரையை வச்சு தான் இத்தனை வருஷம் உயிர் வாழ்ந்திட்டு இருக்கேன்... அச்சச்சோ என்ன ஆச்சு ப்ரோ.. அடேய் மெடிக்கல் ஷாப் வச்சு இருக்கேன் டா...

#
Karuppasamy

வாழ்க்கையில் வரும் இன்பத்தை ரசித்து கொள்.. அதனால் வரும் துன்பத்தை சகித்து கொள்.. வாழ்க்கையில் தோடர்ந்து செல்ல பழகி கொள்.. அதனால் வரும் துயரத்தை பொருத்துக்கொள்.. வாழ்க்கையில் வரும் வருத்தத்தை ஏற்றுக்கொள்.. வளைந்து நெளிந்து செல்வதே பொருந்தி வரும் நினவில் கொள்..

#
கவிதையின் காதலன் ரவி

உறவுகளின் அன்பில் ஒர் மாற்றம்.. தேவை முடிந்ததும் மாறியது உறவின் வெளித்தோற்றம்.. அதைக் கண்டு (எ)உன் மனம் கொண்டதோ சீற்றம்.. மதிப்பிழந்ததே பாசமென்ற தடுமாற்றம்.. காலம் (உ)எனக்கும் செய்யும் சில மாற்றம்.. தொடங்கட்டும் உன் வாழ்க்கையிலும் பல மாற்றம்.. தேவை முடிந்ததும் தேவையில்லை என்ற உறவுகள் உன்னை தேடி வருவதே மாற்றம்.. பணமாற்றம் வந்தாலே வந்திடும் இந்த மன மாற்றம்.. இறுதியில்...! பாசத்தையும் இடமாற்றம் செய்தது பணத் தோற்றம்.. என் பாசம் கண் மூடி செய்ததோ வெளியேற்றம்..

#
கவிதையின் காதலன் ரவி

எதிர்காலம் என்பது எதிர் பாராமல் வருவதில்லை.. நாமே எதிர் கொண்டு உருவாக்குவது.. எதிர் கொள்வதே எதிர் கால வாழ்க்கை என்றிருந்தால்.. எதிர் பார்த்த வாழ்க்கையும் எதிர் பாராமல் வரும்.. சிக்கலான வாழ்க்கையும் செழித்திடும் சீரும் சிறப்பும் நிலைத்திடும்..

#
கவிதையின் காதலன் ரவி

உடல் அளவில் பக்குவப்படுவதை விட மனதளவில் பக்குவப்படுங்கள் அப்போதுதான் கடினமான சூழ்நிலையும் கடந்து வர முடியும்

#
Karuppasamy

பேச்சை விட.. என் மௌனம் தான் எனக்கு சிறந்தது..!" நடக்கும் அனைத்தையும்.. அமைதியாகவே இருந்து ரசிப்பேன்..!" என்னுடைய வாழ்க்கை.. எனக்கே அழகாய் தோன்றும் வரை...!! RK

#
Kalpana Subramaniam

ஒரு ஆணுக்கு சமூகத்தில், அதிகம் சுதந்திரம் இருப்பது போல் தோன்றலாம்..!" ஆனால்.., அவன் சாகும் வரை, அவனுடைய கடமைகளுக்கு, அவன் அடிமை தான்...!! RK

#
Kalpana Subramaniam

பகலில் பளிச்சென்று எறிந்தாலும், விளக்கிற்கு மரியாதை கிடையாது..!" அதே விளக்கு இரவில், சிறு வெளிச்சம் தந்தாலும், அதன் மரியாதையே தனி..!" தேவையற்ற போது யாராக இருந்தாலும், மரியாதை கிடைக்காது...!! RK

#
Kalpana Subramaniam

உடைந்தாலும் மீண்டு உடையாமல் வாழ உன்னால் மட்டுமே முடியும்.. #மனசாட்சி

#
Karuppasamy

பிடிக்கத் தெரியாத கைகளைத் தான் பிடிக்கும் பட்டாம்பூச்சிக்கு..

#
Karuppasamy

நினைப்பதை எல்லாம், செய்யவிடுவதில்லை காலம்..!" தான் நினைப்பதைத்தான், நம்மேல் புகுத்துகிறது..!" காலத்தை இழுத்துப்பிடித்து, காட்சிகளை மாற்ற திறமை இல்லை எனக்கு..!" காலத்தின் கணக்குகளை கவனித்தபடி, நகர்கின்றன நாட்கள்...!! RK

#
Kalpana Subramaniam

அவர்களுக்கு தேவைப்படும்போது தான், தேடுகிறார்கள்..!" நமக்கு தேவைப்படும்போது, காணாமல் போகிறார்கள்...!! RK

#
Kalpana Subramaniam

வாழ்க்கை ஒருமுறை..!" ஆனால், சாவு தினம் தினம்..!" பல வேடத்தில்..!" சில வேளையில்..!" தனிமைகளாக...!! Rk

#
Kalpana Subramaniam

சொல்ல முடியாத சொல்லிற்க்கும், சிந்த முடியாத கண்ணீர்க்கும், வலி அதிகம்..!" RK

#
Kalpana Subramaniam

நாம் ஒரு ஏமாளி என்று, அறியும் அந்த நொடியை, கடந்து விட்டால்..!" இனி எத்தனைமுறை வேண்டுமானாலும், ஏமாற்றலாம்..!" ஏன் என்றால், இங்கே அணைவருமே பொய்..!" பொய்யான சிரிப்பு, பொய்யான வார்த்தை, பொய்யான தோற்றம், பொய்யான வாழ்க்கை...!! RK

#
Kalpana Subramaniam

தவறுக்காக பல ஆண்களும், தவறாமல் சில பெண்களும், அழுதே சாதித்து கொள்(ல்)கின்றனர்...!! RK

#
Kalpana Subramaniam

பிறந்து விட்டதற்காய், வாழ்க்கை இல்லை..!" வாழ்வதற்கே பிறந்திருக்கிறோம்..!" பாதைகேற்ற பயணம் வேண்டாம்..!" பயணதிற்கேற்ற பாதை செய்வோம்...!! RK

#
Kalpana Subramaniam

அனைவரின் வாழ்க்கையிலும், அடிகள் ஒன்றும் புதிதல்ல..!" தினம் தினம், அடிப்பவர்கள் தான் புதிது...!! RK

#
Kalpana Subramaniam

கடினமாக இருந்தாலும் கடந்ததை மறந்திடு.. நிழலாக இருந்தாலும் நிகழ்வதை ஏற்றிடு.. எதுவாக இருந்தாலும் எதிர் கொள்ள துணிந்திடு..

#
கவிதையின் காதலன் ரவி

யோசித்து பேசும் என்னையும்.. பேசவே யோசிக்கும் உன்னையும்.. யோசிக்காமல் கடந்தது காலம்..

#
கவிதையின் காதலன் ரவி

கடல் அலையில் கால் நனைத்தால் கடலின் ஆழம் தெரியாது.. மூழ்காமல் உன் விழியும் முத்தை காண முடியாது.. தேடாமல் உனக்கு முத்தும் சொந்தமாகாது.. கஷ்டங்களை கடக்காமல் கரையேறவும் முடியாது..

#
கவிதையின் காதலன் ரவி

இருட்டில் இருப்பதில்லை பயம்.. இருட்டில் ஏதேனும் இருக்குமோ என்பதே பயம்.. உயரத்தில் இருப்பதில் இல்லை பயம்.. கீழே விழுந்து விடுவோம் என்பதே பயம்.. நேசிப்பதில் இருப்பதில்லை பயம்.. விலகிடுவாரோ என்பதே பயம்.. தோல்வியில் இருப்பதில்லை பயம்.. மீண்டும் முயற்சிக்காமல் இருப்பதே பயம்..

#
கவிதையின் காதலன் ரவி

உள்ளம் வெளியிடும் உணர்வுகளை தடுக்க முடிந்த என்னால்.. விழி வெளியிடும் உணர்வுகளை இமை இருந்தும் தடுக்க முடியவில்லை.. வாழ்க்கையில் நடந்ததெல்லாம் தெரிந்த கொண்ட பிறகும்.. இனி நடக்கப் போவதை அறிந்து கொள்ள முடியவில்லை..

#
கவிதையின் காதலன் ரவி

இருளில் நடந்து பார் விடியல் உன்னை தேடி வரும்.. தோல்விக்கு துணிந்து பார் வெற்றி உனக்கு பணிந்து போகும்.. தளராமல் உழைத்து பார் தரமான உயர்வு தன்னால் வரும்.. உண்மையாக நேசித்து பார் உலகமே உன் பின்னால் வரும்.. உன்னை நீயே நேசித்து பார் இது தான் உலகம் என்ற உண்மை தெரியும்..

#
கவிதையின் காதலன் ரவி

இறைவா கண்டதில்லை உன்னை நேரில்.. கண்டு இருக்கிறேன் நீதான் இறைவன் என்றே தெரியாமல் பலரை.. தவற விட்டேன் சிலரை உதவி என்று கேட்காமல் உதவிய பலரை.. இறைவா..! கண்டுவிட்டேன் உன்னை நேரில்..

#
கவிதையின் காதலன் ரவி

என் மௌனம் பல பிரச்சனைகளை தவிர்க்குமென்று புரிந்தவருக்கு தெரியட்டும்.. என் புன்னகை பல பிரச்சனைகளை தீர்க்கும்மென்று.. பேசியவருக்கு புரியட்டும்..

#
கவிதையின் காதலன் ரவி

வேண்டும் என்று வேண்டுபவருக்கு வேண்டுவது கிடைக்காது.. வேண்டாம் என்று வேண்டுபவர்கோ வேண்டியது நடக்காது.. போதும், போதும் என்பவருக்கு மேலும் மேலும் கிடைக்குது.. தேவை தேவை என்பவர்கோ தேவையானது கிடைக்காது..

#
கவிதையின் காதலன் ரவி

மீண்டும் மீண்டது மறந்து போன உன் நினைவுகள்.. மீட்டினேன் உன் நினைவுகளை மீண்டும் தொடர்ந்தது என் கனவுகள்.. நினைவுகளுடன் கனவில் இருந்த என்னை தட்டி எழுப்பியது தூரத்தில் கேட்ட ஒரு பாடல்.. நினைக்க தெரிந்த மனமே.. உனக்கு மறக்க தெரியாதா?

#
கவிதையின் காதலன் ரவி

மொழிகள் ஆயிரம் இருப்பினும் மௌனம் மட்டுமே அழகாய் பேசுகிறது யாரையும் புண்படுத்தாமல்.. தேவை என்ற தேடலில் கிடைக்காத மகிழ்ச்சி.. போதும் என்ற மன நிறைவில் மட்டுமே முழுமையாக கிடைக்கிறது..

#
கவிதையின் காதலன் ரவி

உங்களுக்கு பிடிக்கும் ஒருவரிடமும் உங்களை மகிழ்விக்கும் ஒருவரிடமும் பேசும் நீங்கள்.. உங்களை பிடித்திருக்கும் ஒருவரிடமும் நீங்கள் பேசினாலே மகிழ்ச்சியாகும் ஒருவரிடம் பேசுவதில்லை..

#
கவிதையின் காதலன் ரவி

உழைத்து சொந்த வீடு கட்டியும், விருந்தாளியாக வந்து போகிறான்... வெளியூரில் வேலை பார்ப்பவன்...

#
Karuppasamy

~வாழ்க்கை~ ~காட்டில் இருப்பது பருத்தி~ ,, >என் நெஞ்சில் இருப்பது > ``நீ ஒருத்தி,,, ~வீட்டில் இருப்பது கிளாக்~ நான் உன்னை பண்ண போறேன் பிளாக்..§§§

#
Karuppasamy

படியேறி இடம் கேட்டேன்.. குடியேற உன் மனதில்.. பணமில்லா உனக்கெல்லாம் இடமில்லை போ என்றாய் .. பணமின்றி நீ என்னை தேடாதே இனி என்றாய்..

#
கவிதையின் காதலன் ரவி

ராசிபலன்ல கவனம்னு போட்ருந்துச்சு.. நல்லா கவனிச்சு பாத்தேன்.. அப்பறம் தான் தெரிஞ்சுச்சு அது நேத்து ராசிபலன்னு..

#
Karuppasamy

மாற்றம் பயமாகத்தான் இருக்கும் ஆனால் அதுதான் நம்மை வாழவைக்கும்

#
Karuppasamy

காத்திருப்பதும் சுகம் தான்... போனில் சார்ஜ் இருக்கும் வரை..€€ என் கையில் போன்னே இல்லை..?

#
Karuppasamy

என் "வலி" புரியாதவர்களிடம் "கோவக்காரன்" என்றே பெயரை பெறுகிறேன் ... #அவமானம்..?

#
Karuppasamy

இடம் தெரியாது ஆனால் போக வேண்டும் இந்த நிமிடம் இந்த இடத்தில் இருந்து ...

#
Karuppasamy

காஷ்டம் வந்தால் கண்டுகொள்ளாத நண்பனும்... பணம் இருந்தால் பாசம் பொழியும் உறவும்... இருந்தாலும் ஒன்று தான்... இல்லாமல் போனாலும் ஒன்று தான்....

#
Karuppasamy

கடினமின்றி எதுவும் கிடைக்காது.. கடினமின்றி கிடைப்பதும் நிலைக்காது.. சிந்திக்காத வாழ்க்கை சிகரம் தொடாது.. சந்திக்காத கடினம் சிந்திக்க வைக்காது.. உடன் மாறும் நொடியில் தடையிருக்காது.. மாறிடும் மாற்றங்களில் மாற்றம் இருக்காது.. மலரும் மொட்டெல்லாம் பூவாகாது.. பூவாகும் மொட்டென்றும் உதிராமல் இருக்காது.. ஓயாமல் இதயம் துடிக்க மறக்காது.. துடிக்கும் இதயமும் ஓயாமல் இருக்காது.. துடிப்பின்றி பூமியில் சுழல முடியாது.. சுழலின்றி நிழலும் பூமியில் நிழலாட முடியாது..

#
கவிதையின் காதலன் ரவி

வாழ்க்கையில் பால இரவுகளை கடந்து விட்டேன்.. இது மட்டும் புதிதல்ல .. வாழ்க்கையில் அடித்தளம் ஒன்று இருக்கும் என்று...?

#
Karuppasamy

என்னை மாற்ற நினைத்து என் மனதை சிறைப்படுத்தினால் என் மனம் ஏங்கித் தவிக்கும் என் உணர்வுகளுக்கு மெருகூட்ட...

#
Ilakkiya sri

மிக மிக அமைதியாக மலரும் இரவுகளிலும் நினைத்தது நிறைவேறாமல் மனம் வெம்பி தவிப்பவர்களும் இல்லம் இன்றி தவிப்பவர்களும் சுகமான நித்திரை கொள்வதில்லை...

#
Ilakkiya sri

மறைந்திருந்து உன்னை இரசித்த என் விழிகளும் உன்னை ஈர்க்கவில்லை சிகையில் சூட்டிய மலரின் வாசமும் உன் நாசியை வருடவில்லை என்னிடம் உள்ள செல்வத்தை நுகர்ந்தால் வாழ்வு நேசம் இன்றி கடப்போம் என உன்னை நிராகரித்தேனடா மாப்பிள்ளையே...

#
Ilakkiya sri

இல்லத்தில் ஏற்றிய தீப ஒளியானது புலனத்தின் சுயவிவரப் புகைப்படத்திலும் புலனத்தின் நிலைகளிலும் நம் கவிதையாக ஒளிர்கின்றது ...

#
Ilakkiya sri

வறுபட கோழியே தயாராக இருக்கிற போது பொறித்தெடுக்க எண்ணைக்கு என்ன வருத்தமா .....

#
Karuppasamy

_அரவணைத்து_ _அன்பு காட்டும்_ _உள்ளத்தை விட_ _அழும்போது_ _ஆறுதலாய்_ _உள்ள உள்ளமே_ _உண்மையானது_ RK

#
Kalpana Subramaniam

_கண்ணீருக்கு மட்டும்_ _கடவுள் நிறம்_ _கொடுத்து இருந்தால்_ _இந்த உலகம் முழுவதும்_ _கண்ணீரீன் நிறமாக தான்_ _இருக்கும்_ RK

#
Kalpana Subramaniam

_முதல் முறை வெறுக்கும் போதே_ _விலகி விடுங்கள்_ _பின்_ _அவர்களுக்கு பிடித்ததே செய்தாலும்_ _வெறுப்பாக தான் இருக்கும்_ RK

#
Kalpana Subramaniam

_காயம்கொண்ட இதயம்_ _ஊமையாகி விடுகிறது_ _அதை மீண்டும் காயப்படுத்தினாலும்_ _அதன் அழுகை வெளியே கேட்பதில்லை_ RK

#
Kalpana Subramaniam

_குப்பையைக் கூட_ _நம்பியிரு_ _மனிதனை நம்பி_ _இருந்து விடாதே_ RK

#
Kalpana Subramaniam

_இந்த உலகில்_ _நாம் கற்றுக்கொண்ட_ _பாடத்தை விட_ _வறுமை, அவமானம், புரக்கணிப்பு_ _இவைகள் கற்றுத்தந்த_ _பாடமே அதிகம்_ RK

#
Kalpana Subramaniam

ஒரு பறவை தன் சிறகுகளையே நம்புகிறது அமர்ந்திருக்கும் கிளையை அல்ல.உன்னை நீ நம்பு வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்

#
Mohamed Bilal

️️️️ அன்பின் நிலை தடம் மாறும் போதும்..!" சூழ்நிலை நம்மை பழி கேட்கும் போதும்..!" உறவுகள் நம்மை, உதறும் போதும்..!" பல பழி சொல்லுக்கு ஆளாகும் போதும்..!" நம்பிக்கை அனைத்தும் இழக்கும் போதும்..!" துரோகவாழ் என் இதயம் கிழிக்கும் போதும்..!" பல முட்டாள் தணங்களில், மூழ்கும் போதும்..!" பலர் கேலி செய்ய நான் சிரிக்கும் போதும்..!" எனக்குள் ஒன்றை மட்டுமே கூறிக் கொள்வேன்..!! பட்ட காயங்கள் யாவும் பயனின்றி போகாது...!! RK ️️️️

#
Kalpana Subramaniam

வாஞ்சையுடன் பழகுவதற்கு, சிலராலும் முடிவதில்லை..!" வஞ்சகமாய் நடிப்பதற்கு, பலராலும் முடிகிறது..!" உள்ளத்தால் நெருங்குவதற்கு, சிலரால்தான் முடிகிறது..!" உள்ளத்தை உடைப்பதற்கு, பலராலும் இயலுகிறது..!" எந்தப் புற்றில் எந்தப் பாம்பு,, உள்ளதென்று யாரறிவார்..? அதுபோலத்தான்.. யார் மனதில் என்ன உள்ளதென்பதும்..!" தலைகுனிந்து பொறுத்ததெல்லாம், தலை நிமிர்ந்து நிற்பதற்குத்தான்..!" எமக்காக ஒரு ஜீவன், எப்போதும் இருக்க வேண்டும்..!" அந்த எதிர்பார்ப்பில்தானே, வாழ்க்கை அடங்கியிருக்கிறது..!" சொந்தங்கள் என்ற வார்த்தை, நயவஞ்சகத்தை ஏற்றிருப்பதால்..!! நட்பு என்ற உறவுகள்தான், சாகும் வரை தொடருமென்பேன்...!! *இனிய நட்புடன்* *என்றும் உங்கள்* RK ️

#
Kalpana Subramaniam

என்னதான் ரயில் தண்டவாளம் போல்.. இருவரும் பக்கத்தில் பக்கத்தில் இருந்தாலும்.. உள்ளம் ஒன்று சேராவிட்டால்.. எல்லா உறவுகளும் ரயில் சிநேகிதம் தான்...!! RK

#
Kalpana Subramaniam

அடிமேல் அடி வைத்து.. நடைபழகும் குழந்தயை.. பார்த்த பிறகுதான்.. உணர்தேன்..!" பல அடி மேல் அடி வாங்கித்தான்.. வாழ்கையை.. பழகவேண்டும் என்று..!! RK

#
Kalpana Subramaniam

எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், அழுது கொள்ளுங்கள்..!" ஆனால்.., மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும், அழக்கூடாது...!! RK

#
Kalpana Subramaniam

விழித்துக் கொண்டே இருப்பதனால், விடியலும் இரவும் ஒன்றுதான்..!" உழைத்துக் கொண்டே இருப்பதனால், வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான்..!" விழைந்த வாழ்க்கை வேள்விதனில், நோன்பும் நோவும் ஒன்றுதான்..!" கழித்துக் கூட்டிப் பார்க்கிறேன், கவிதையும் நானும் ஒன்றுதான்...!! RK

#
Kalpana Subramaniam

உன்னை மறந்தவர்களை நினத்தால், அது வலியைத்தான் தரும்..!" உனக்காக இருப்பவர்களை நினைத்தால்தான், அது வலிமைத்தரும்...!! RK

#
Kalpana Subramaniam

உன் கனவுகள் என்றும், கண்ணீரில் கரைவதற்கு அல்ல..!! கலங்கரை விளக்கமாய் நின்று, கரை ஏற்றுவதற்கே...!! RK

#
Kalpana Subramaniam

இரண்டெழுத்தில் இருண்ட இவ்வுலகம், இன்னும் இருள்கிறது..!" கல்வியால் மட்டும் மாற்றும் அடையாளம், அது இல்லா விடில், காலத்தாலும் மாற்ற முடியாத, அதர்மத்தின் ஜோதி தான் ஜாதி...!! RK

#
Kalpana Subramaniam

உண்மைக்கு பயம் கொள்ளாதே,.!" பொய்க்கு உடைந்தே போகாதே...!! RK

#
Kalpana Subramaniam

தீயவற்றைக் கடந்து பிறருக்கு  நன்மை செய்ய - தேவையிருக்கும் இடத்தில் மனம் இருப்பதில்லை! அந்த நன்மையை அங்கீகரிக்க  மனம் இருக்கும் இடத்தில்  தேவை இருப்பதில்லை!

#
மகுட தாரிணி

இருள் அகன்றால் மட்டுமல்ல! ஒளி அகன்றாலும் உண்மை புலப்படும்! ஒளி அகன்ற பின் புலப்படும் இருள் சூழ்ந்த வான்வெளியைப் போல! கருமையானாலும் வான்வெளியும் உண்மை தானே! ஒளிரும் இருள் உண்மையுமல்ல! இருளும் ஒளி பொய்மையுமல்ல!

#
மகுட தாரிணி

பொய்மை ஓர் வார்த்தையில் வெளிப்படும்! உண்மை ஓர் எழுத்தில் உயிர் பெறும்!

#
மகுட தாரிணி

எதிர்பார்ப்பு இல்லாத அன்பும் .. கைம்மாறு பார்க்காத உதவியும்.. சுயநலம் காட்டாத உறவும்.. போலித்தனம் இல்லாத புன்னகையும்.. தரம் பிரிக்காத நட்பும் இணைந்திருந்தால்.. சந்தோசம் குறையாமலும்.. கவலை இல்லாமலும்.. அன்பு வற்றாமலும்.. வளமான வாழ்க்கையில் இனிமை குன்றாமலும் இருக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

புதுமையின்றி பழமை... பழமையின்றி புதுமை... புதுமையிலும் புதுமை... புதுமையிலும் பழமை... இல்லை... இவைகளுக்கும் அப்பாற்பட்டது தான்! எனில், பழமையோடு சேர்ந்த புதுமை என்பதே சரி! பழமைக்காக, பழமையை முற்றிலுமாக சிதைத்திடாத, தேவையெனில் அதனைக் காத்து நிற்கும் புதுமை என்பதே சரி! இனிமையிலும் இனிமை! எந்த அளவுக்கு புதுமையின் அவசியம் இன்றியமையாததோ அதே அளவுக்கு பழமையின் அத்தியாவசியத்தைப் பேணிக் காப்பதும் அவசியமானதே! புதுமையைக் கடந்தால் தான் பழமை என்ற பெருமையையும் அடைய முடியும்! புதுமையைக் கடந்து வந்ததே பழமை! பழமையையும் பகுத்தறியும் போது தான் புதுமை உதிக்கும்! புதுமையை பகுத்தறியும் போது தான் பழமையும் சிறக்கும்! பழமை இன்றி , ஏற்றம் என்றும் இருக்காது! புதுமை இன்றி, மாற்றம் என்றும் பிறக்காது! பழமை இன்றி ஏற்றம், என்றுமே இருக்காது! புதுமை இன்றி மாற்றம், என்றுமே பிறக்காது!

#
மகுட தாரிணி

பாசமாக பேசினாலும் சரி கோபமாக பேசினாலும் சரி என் கூட நீ பேசு அது போதும்

#
Karuppasamy

சந்தோஷமாக வாழ்கிறோம் என்பதை விட சமாளித்துக் கொண்டு வாழ்கிறோம் என்பதே உண்மை ...

#
Karuppasamy

அப்பாவோட வாழுறது ரெம்ப போர்தான்... அப்பா இல்லாத வாழ்க்கை ரெம்பவே போராட்டம்தான் ...

#
Karuppasamy

மனித இதயம் ஒரு வெள்ளை காகிதம் போலத்தான்..!" அதில் கவிதை எழுதிய கைகளை விட.., அதை கசக்கி எறிந்த கைகளே அதிகம்...!! RK

#
Kalpana Subramaniam

என்ன மாயம்? எந்த ஒரு பற்றுதலும் இல்லாமல் போன பின்னும், வாழ்க்கை இன்னும் என்னைப் பற்றிக் கொண்டுள்ளதே...

#
kannadhasan k

நேசிக்கும் அன்பை உணர்ந்து கொண்டேன்.. பிரிவின் வலியை தெரிந்து கொண்டேன்.. மறந்தவர் யாரென்று அறிந்து கொண்டேன்.. யாரெல்லாம் புரிந்தவர் என்பதை தெரிந்து கொண்டேன்.. உணர்தலும், புரிதலும் இல்லையின்றி வாழ்க்கை எழிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்..

#
கவிதையின் காதலன் ரவி

உன்னை தூக்கி எறிய வைத்த இறைவனே.. உன்னை தாங்கி பிடிக்கவும் ஆள் வைப்பான்.. உன் மேல் ஏற்றி வைத்த பாரத்தையும் இறக்கி வைக்க நாள் குறிப்பான்..

#
கவிதையின் காதலன் ரவி

பண்டிகை காலங்களில் பெண்கள் புடவை தேடுவதை விட மிக கடுமையானது... ஆண்கள் கடைத்தெருவில் parking தேடுவது...!!

#
Karuppasamy

தாவணியில் சிக்கிக்கொண்டேன்.. தலையணையில் மீட்டுக்கொள்வேன்.. வாலியின் மெட்டுக்கெல்லாம் காலியாகிடமாட்டேன்.. தாலியாகிடுவேன் தங்கத்துக்கு வேலியாகிடுவேன் படித்ததில் பிடித்தது..!

#
Karuppasamy

வச்ச இடத்துல காணாம சாவியயே தேடிடிட்டு இருக்கும்போது தொலைந்து போன வாழ்க்கை மட்டும் எப்படி கிடைக்கும்...!

#
Karuppasamy

துளிர்விடும் இலை ஒரு புறம்.. அதை இழந்திடும் மரம் மறுபுறம்.. வாழ்க்கையின் இழப்பு ஒரு புறம் திரும்பவும் துளிர்க்கும் மறுபுறம்.. மரத்தில் இலை உதிரும் போதெல்லாம் அதே இடத்தில் புதியதாய் ஒரு இலை துளிர்வது போலவே நமது இழப்பும் புதியதாய் துளிர்விடும் எதுவும் கடந்து போகும்..

#
கவிதையின் காதலன் ரவி

மொட்டை மாடி.. சம்பவங்களை சொல்லும் நினைவு கூடம். சங்கீதம் சொல்லும் இசைக்கூடம். கவிஞர்களின் கற்பனை கூடம்.. காதலர்களின் காவியக்கூடம்.. முதியோர்களின் பயிற்சி கூடம்.. முயற்சிகளுக்கு சிந்தனை கூடம்.. குழந்தைகளுக்கு குளிர்சாதன கூடம் குமரிப் பெண்களுக்கு காதல் கூடம் கதைகளை சொல்லும் வரலாற்றுக்கூடம்.. காலம் போற்றும் பள்ளிக்கூடம்.. நினைவுகளைச் சுமந்த தாஜ்மஹாலை நீங்களும் ரசியுங்கள் இரவு வணக்கம்.. ராமசாமி

#
Ramasamy Ramasamy

வாழ்க்கை..! வாழ்க்கையில ஆசைப்படுற எல்லாம் கிடைக்கிறது இல்லை... கிடைக்கிற எல்லாம் ஆசைப்பட்டதும் இல்லை... பல தருணங்கள் கிடைக்காத ஒன்றையே, மனம் ஏங்கிக் கொண்டே இருக்கும்... அதை நினைத்துக் கொண்டே இருக்கும்... கிடைக்காத ஒன்றிற்காக மனம் எப்பொழுதும் ஏங்கிக் கொண்டே இருக்கும்... அதற்கான வலியையும் தாங்கிக் கொள்ளும்... சில இடங்களில் ஆசைகளில் தோற்கிறோம்... சில இடங்களில் கனவுகளில் தோற்கிறோம்... சில இடங்களில் உறவுகளை தோற்கிறோம்... சில இடங்களில் வாழ்க்கையை தோற்கிறோம்... சில இடங்களில் நம்மை நாமே தோற்று ‍️நாம் யார் என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... கண்ணீர், வலி, வேதனை, தோல்வி, சந்தோஷம், துக்கம் எல்லாத்தையும் ஒருசில இடத்துல மறைச்சிட்டு நம்ம ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிறோம்... ‍️இந்த உலகத்துல ஏதோ ஒரு காரணத்துக்காக ஓடிக்கொண்டே இருக்கிறோம்... எல்லாவற்றையும் மறந்தும், மறச்சியும், மறக்க முயற்சி செய்து கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்....... அன்புடன் நண்பன்

#
Ramasamy Ramasamy

பிரியமாய்த்தான் பேசவேண்டும் என்றில்லை சும்மாவேனும் ஏதாவது பேசிக் கொண்டிருந்தால் கூட போதும் ... கூட இருக்க வேண்டும் என்றில்லை இருப்பது போல் இருந்தாலே போதும்

#
Karuppasamy

ஒரு வீரன் தன் சிரிப்பை அவன் வலியையும் வேதனையையும் மறைத்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்துவான்.. அழவில்லை என்பதனால் அவனுக்கு வலிகளும், வேதனைகளும் இருக்காது என்றில்லை.. எத்தனையோ இரவுகள் தன் தூக்கத்தை இழந்து துக்கத்தில் துடிதுடித்து வலி தாளாமல் வாய் விட்டு அலறிய நாட்களை அவன் மறந்திருக்கமாட்டான்.. மீந்து போன அவன் வாழ்க்கையில் ஒட்டு மொத்த வலிகளையும் அவனுள் புதைத்துக் கொண்டு வற்றி போன கண்களுடன் வறண்ட போன உதடுகளில் வலு கட்டாயமாக வரவழைத்து கொண்டதுதான் அவனின் சிரிப்பு..

#
கவிதையின் காதலன் ரவி

நம்மைத் தவறாக நினைத்து விட்டார்களே..? என புலம்பாமல்.., நம்மை இவ்வளவு தான்.. புரிந்து வைத்துள்ளார்கள் என.. விலகி விடுவதே.. சிறப்பானே பதிலடி...!! RK

#
Kalpana Subramaniam

️ சுயசரி‌தை ️ நிகழ்காலத்தில் நிகழ்ந்த நிஜமான நினைவுகள்... விழுமியங்களை விரல் நுனியில் விலாச பெட்டகம்.. தவழுகின்ற தருணத்தில் தளிர் விட்டு தன்னம்பிக்கையுடன் மலர்ந்து தள்ளாத வயதில் தவழும் புதுமை பெட்டகம்.. சுகமான வாழ்வை சுவீகரித்து சீரிய வாழ்வை செப்பனிட்டு.. சிந்தனையை செதுக்கி கையில் பதியும் காலக்கண்ணாடி.. தொடர்வோம்.. தொடர் கதையாக.. ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

உழவன் இயற்கை அன்னையின் இன்னொரு அட்சய பாத்திரம் இந்தபாரதவாசிகளுக்கு இயன்ற வரை மருந்து இல்லா விருந்து தரும் ஒப்பற்ற. விவசாயி இரண்டு அடி துணி தொடுத்து நான்கு அடி ஏர் எடுத்து ஆறு அடி மனிதனுக்கு இறுதி மூச்சு உள்ளவரை உணவிடும் தீரா கடனாளி.. உழைப்பை போற்றுவோம் உழவனை காப்பாற்றுவோம் ராமசாமி சென்னியாண்டவர் கோவில் 9842943570

#
Ramasamy Ramasamy

பறவைகள் கூட கடலை எளிதாகக்கடந்து விடும் நாம் தான் வாழ்வெனும் கடலைக்கடப்பது கடினமான ஒன்று...

#
Ilakkiya sri

சிலர் இதயத்தினுள் தம் உணர்வுகளை சிறையிட்டு மௌனமாய் பயணிக்கின்றனர் தனக்கு சொந்தமான இதயங்களை வாழ வைக்க...

#
Ilakkiya sri

நிலா.. பெண்ணே நீ கண் அசைத்ததால் தான் என்னவோ.. கவிஞர்கள் பலமுறை உன்னை கொலை செய்கிறார்கள் பேனாவினால்... ஆதாரம் உண்டு ஆர்ப்பாட்டம் இல்லை நீதிமன்றம் உண்டு நீதிபதி இல்லை... ஆம் நீ.... மதம் கடந்தவள் பேதம் இல்லை.. சாதி இல்லை சகோதரத்துவம் உண்டு... வாழ்க சமுதாயம் நன்றி ராமசாமி

#
Ramasamy Ramasamy

நிலா.... மேகத்தை மேக்கப் போட்ட மெல்லினமே... மென்மையான அரும்புகளுக்கு நிலா சோறு காட்டும் இடையினமே... நட்சத்திரங்களின் சூட்டில் சாரல்களாய் தூறல் போடும் வல்லினமே... அழகை ஆராதனை செய்ய ஆயிரம் கண்கள் வேண்டும்.... உன்னை தரிசனம் செய்ய காத்திருக்கும் தவ வனம்... ராமசாமி...

#
Ramasamy Ramasamy

திருமண ஞாபகம் நாளிகை பார்த்து .. நகல் எடுத்து .. ஊருக்கு நல்ல பையனாய்.. உறவுக்கு சொல்லி.. பூ கேட்டு... புரோகிதரிடம் சொல்லி.. நங்கையை கைபிடிக்க நட்சத்திரம் பார்த்து நாள் குறித்து ... அழைப்பிதழ் அடித்து ஆயிரம்பேர் கூட்டி.. மலர்கள் மூலம்... மண்டபம் அலங்கரித்து மகிழ்வுந்தில் மணமகன் முன்செல்ல மாமன் சீர் கொண்டு மணமகள் பின்தொடர.. வல்ல பெரியோர்கள் வண்டுகளாய் வழிகாட்ட இல்லற பூவுக்குள் மகரந்தகமும் சூலகமும் சொந்தம் கொண்டாட இந்த பந்தம் ஈரேழு ஜென்மம் தொடர.... ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

மாமன் மகள் என்னவளே என் இதயத்தில் கண்ணாமூச்சி ஆடும் கண்டாங்கியே... பனை வண்டியோட்டி பல்லாங்குழி ஆடும் பாவாடை தாவணியே.... நொண்டி விளையாடும் மிடியே... சடுகுடு கட்டி சதுரங்க ஆடும் துப்பட்டாவே.. உறவை புதுப்பிக்க உயில் எழுதும் சுடிதார் அணிந்த சுட்டியே... உன் கண் எப்போது சைகை காட்ட.. மஞ்சள் குங்குமம் மாங்கல்யத்துடன் மாமன் சீர் வரிசை செய்ய. .. காத்திருக்கும் உன் உயிர்.. இரவு வணக்கம் ராமசாமி....

#
Ramasamy Ramasamy

என்னை தவறாக புரிந்து கொண்ட பின் என்னிடம் நல்லவற்றை தேடாதீர்கள் ... அது உங்கள் கண்களுக்கு இனி தெரியப்போவதில்லை !!

#
Karuppasamy

வீணை வெள்ளைப்பூவில் வீற்றிற்க்கும் கலைமகளின் கைங்காரி.. வெள்ளந்தியான வீணைக்காரி... மனதை தளும்ப செய்யும் தாவணிக்காரி மனநோயாளியை மாற்றும் மருத்துவகாரி மாக்கள் மயங்கும் இசைக்காரி... மக்களை கொள்ளை கொள்ளும் கொள்ளைக்காரி.. நான்கடி நகைப்புகாரி நாள்தோறும் வளரும் நாட்டியக்காரி... கீர்த்தனைக்கு சொந்தக்காரி... பல கீதங்களுக்கு தாய்மைக்காரி.. உனக்கு இல்லை மரணம் என்றும் தொடருட்டும் உன் சரணம் ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

பட்டதாரி... பொழுது விடிந்தது பொழப்பு விடியவில்லை... நகர்ந்தது நாள் மட்டுமே.. நரகவேதனை இல்லை... அலையாத அலுவலகம் அலைகழிக்கும் சமுதாயம்... கிழிந்தது பட்டம் மட்டுமில்லை... வாழ்க்கையும் கூட.. கைகூடாத காதல் காலம் கடந்த அக்கா கவலையில் தங்கை கண்ணீரில் தாய் பகுத்தறிவு பாமரன் பண்டிகை கூட பாரம் தொலைத்த இரவுகள் தொடராத சொந்தம் என்று வரும் விடியல் எப்போது வீசும் ‌தென்றல் ... ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

வாழ்க்கை வாழ்வு ஒரு புத்தகம் கற்க கற்றுக் கொள்ளுங்கள்.. வாழ்வு ஒரு பூந்தோட்டம் ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள்... வாழ்வு ஒரு கல்விக்கூடம் நட்பை கற்றுக் கொள்ளுங்கள்.. வாழ்வு ஒரு கலைக்கூடம் அன்பைக் கற்றுக் கொள்ளுங்கள் வாழ்வு ஒரு சமையல் கூடம்.. ருசிக்க கற்றுக் கொள்ளுங்கள் வாழ்வு ஆராய்ச்சி கூடம்.. குறையை சரி செய்ய கற்றுக் கொள்ளுங்கள் வாழ்வு ஒரு அறிவியல் கூடம் உயிர பறக்க கற்றுக் கொள்ளுங்கள்.. வாழ்வு ஒரு சிலை கூடம்.. ரசித்து ருசித்துப் பார் வாழ்வு அழகாகும்.. ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

மயானம் ஓலமிடும் ஓநாய்கள் ஒப்பாரி வைக்கும் மனிதர்கள் காற்றில் ஆடும் ஓலைகள் கந்தலான துணிகள் உடைந்த மண்டை ஓடுகள்..உருக்குலைந்த தார்சாலைகள்.. வெட்டியானின் வாழ்விடம்.. வெறும் கூடு இருப்பிடம்.. யாரும் ஆசைப்படாத சவகூடம்.. ஆவி வாழம் பிணக்கூடம்.. இனபேதமற்ற இறுதி பயணம் இறைவன் ஆட்சி செய்யும் மயானம் ஆன்மா துயில் கொள்ளும் நித்தரைக்கூடம்... ஆசை உலகில் நித்தம் அழைக்கும் வரவேற்புகூடம்... எத்தனை சாதனை மனிதர்கள் உன்உள்.. இந்த யாத்திரை என்று முடியும்...ஆலயத்தை தொழுது ஆன்மாவை வளப்படுத்துவோம்... ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

அடுப்பங்கரை... நங்கையவள் நாள்தோறும் நாதஸ்வரம் வாசிக்கும் நடன பள்ளி... வாஸ்து கலையில் வாத்திய காரகன் வாழ்நாளில் மிருதங்க சக்கரவர்த்தி... இரைச்சலில் கூட இன்னிசை தந்து இல்லறத்தை நல்லறமாக்கும் நாட்டிய பள்ளி... எனக்குள் பலராகம் என்னில் பல காரம்.. என் இசைக்கு மணம் உண்டு.. தனியே குணம் உண்டு.. என்னில் ஆயுதம் உண்டு ஆனால்.. அகிம்சை வழி.. என்னை வெறுத்தாலும் விடாத நிழல்... இறுதிவரை வரும் இன்னிசை கீதம்.. மீண்டும் பல்லவி.. இரவு வணக்கம் ராமசாமி...

#
Ramasamy Ramasamy

அருகம்புல் ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதமே.. அறிவு வளர்க்கும் அற்புதமே.. ஆகச்சிறந்த மருந்தினமே... ஆனைமுகத்தின் முதன்மையானவனே தாவரத்தின் தனியினமே... தரணியில் தன்னிகரில்லா தனி அருகம்புல்லினமே... பனிதிவலைக்கு இடம் அளித்து பசுக்களுக்கு உணவளிக்கும் உயிரோட்டமே... மூலிகையானவனே மூலவியாதிக்கு முதன்மையானவனே அரையடி உள்ளவனே அனைவருக்கும் உயிரானவனே.... சுவையானவனே சுபகாரியத்தின் முதன்மையானவனே பார் போற்றும் பாமரனே பணிகள் பல செய்யும் வித்தகனே ... என்னே உன் பணி என்றும் தொடருட்டும் உன் அரும்பணி... ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

எறும்பு யாரையும் லட்சியம் செய்யாதவன் லட்சியபாதையில் மட்டுமே நடைபோடுபவன் சுதந்திரத்தில் யார் தலையீடு இல்லான் சுறுசுறுப்பில் சுள்ளான் தானியங்களை சேமிப்பவன் தனக்கென்று உலகத்தில உழைப்பவன் ஒய்யு அறியான் ஓர் அறிவு சுள்ளான் உழைப்பை சொல்லி தருபவன்.... உறுதியை கற்று தருபவன்.... கூட்டை உருவாக்கி வாழ்பவன் கூடி வாழ்ந்து வெற்றி காண்பதில் சுள்ளான் .... என்ன விந்தை யார் தந்த வித்தை... ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

சோகமான பல முகத்திற்கு சொந்தமானவள்.. எந்த முகத்திற்கும் பொருந்தாத திறமையானவள்.. வார்த்தையில் வண்ணம் தீட்டும் தூரிகையானவள்.. சோகத்தில் மூழ்காமல் சிரிப்பையே சிறகாக்கும் திறமையானவள்.. வலிகளை வீழ்த்திட பல முகங்களை வைத்திருக்கும் சூத்திரமானவள்.. எந்த முகத்துடன் பேசினாலும் அந்த முகத்தையே அணிந்து கொள்ளும் மாயமானவள்.. சிரிப்பு நிறைந்த முகத்தையும் சிதைந்து கிடக்கும் இதயத்தையும் சுமந்து நிற்பவள்..

#
கவிதையின் காதலன் ரவி

ஒருதுளி கடல் நீரும் கரிக்கும்..!" ஒருதுளி கண்ணீரும் கரிக்கும்..!" ஆனால்.., இரு துளிகளுக்கும் இடையே இருக்கும் உப்புச் சுவை வேறு..!" கண்ணீரின் உப்பில் வலிகளும், வேதனைகளும், அதிகம் அடங்கி இருக்கும்...!! RK

#
Kalpana Subramaniam

நான் தீர்ந்து போனதாக உணர்கிறேன்..!" ஆனால்.., என் பகல் கனவுகள் மட்டும், தீராதவைகளாகவே..!" முற்றுப்புள்ளியை எட்டிய பிறகும், அர்த்தமற்ற நாட்களை கடந்து, தொடர்ந்து பயணிக்கிறேன்...!! RK

#
Kalpana Subramaniam

ஒரு பொழுதும் வாழ்க்கையில், நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம், இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள்..!" ஏனெனில்.., அவைகளனைத்தும் உடையும் பொழுது,. ஒலி எழுப்பாது போனாலும், பெரும் வலியை ஏற்படுத்தும்...!! RK

#
Kalpana Subramaniam

பார்த்தவுடன் பழக்காதே.. பழகியவுடன் இணையாதே.. இணைந்தவுடன் பிரியாதே.. பிரிந்தவுடன் வருந்தாதே.. வருந்தியவுடன் தேடாதே.. தேடி கிடைத்தால்.. மீண்டும் தொலைக்காதே...!! RK

#
Kalpana Subramaniam

வினாவுடனே முதல் பாதி.. விடையுடனே மறு பாதி.. சுமக்கும் உயிர் கூடு.. இளமையில் முதலது.. முதுமையில் அடுத்தது.. இது தான் வாழ்க்கை...!! RK

#
Kalpana Subramaniam

மிகப் பெரிய போராட்டம் என்பது நம் மனநிலையுடன் நாம் போராடுவதே..

#
Karuppasamy

காசிருந்தா "கலர் வரலாம்' கருணை இருந்தால் மட்டுமே முகத்தில் "களை வரும்"....

#
Karuppasamy

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது..?

#
Karuppasamy

இது..! பசிக்கின்ற வயிறுகளை... தண்ணீரில்... தாலாட்டும் தாய்..! செல்வத்தை... தொட நினைத்தும் இன்றுவரை... வறுமையை தான்டாத வாசல்படி..! ஏழை எனும்... உயிரில்... ஆசைகளை... நீண்டகால ஏக்கங்களாக... உறங்க வைக்கும் தொட்டில்..! பல அடுக்கு மாடிகளை... தலைகுனிந்து... பார்க்கவைத்து... தன்னம்பிக்கையோடு காயும் குடிசை..! ஒவ்வொரு விடியலிலும்... செத்துவிடும்... நிலையினிலே... முளைத்துகொண்டிருக்கும்... விதைகள்..! வியர்வையும்... கண்ணீரும்... நிரம்பி வழிகின்ற... நிறைகுடம்..! வாழ்நாளில்... நிஜமானஆசைகளை கணவாக காட்டும்... கண்ணாடி..! கசப்பான... நினைவுகளும்... கசந்துகொண்டிருக்கும்... நிகழ்வுகளும்... ஒன்றாக சங்கமித்து... சங்கடத்தில் மூழ்கடிக்கும்... சமுத்திரம்..! வறுமை..! இதற்க்கு கொடுக்கபட்ட அடையாள நிறம் சிவப்பு! ஆனால்..! இங்கே... சிவப்பு கம்பள வரவேற்போ..? செல்வத்திற்க்கு..! இந்த உலகத்தில்... மாற்றம் ஒன்றே... மாறாததாம்..! அப்படியானால்..! இந்த வறுமை..! எப்போது மாறும்..? RK

#
Kalpana Subramaniam

ஒவ்வொரு வரிகளும் நீண்டு செல்கிறது, ஒவ்வொருவரையும் நினைக்கும் போது..!" தொலைந்து விட்டது என்று நினைத்தால், தொடுவானத்தில் நிக்கிறது காதல்..!" அறிமுகமானவர்கள் சிலர், அன்பாக இருக்கும் போது, அருகில் இருந்தவர்களை, சில நேரம் மறக்கிறோம்..!" அறிமுகமானவர்கள் பலர், நம்மை வெறுக்கும் போதுதான், அருகில் இருந்தவர்களின் அன்பு, நம் கண்கள் வழியே, கண்ணீராக தோன்றுகிறது..!" சில நேரம் அழுகிறோம்..!" சில நேரம் சிரிக்கிறோம்..!" சில நேரம் நம்மையே, கூட மறக்கிறோம்..!" வாழ்க்கை எங்கு சென்றாலும், சிலருக்காகவே நாம் திரும்பிபார்க்கிறோம்..!" அது சில நேரங்களில், நட்பாகவும், காதலாகவும், அன்புக்காகவும், மட்டும்தான் இருக்க நேரிடுகிறது...!! RK ️

#
Kalpana Subramaniam

காற்றோடு போராடுவது பஞ்சின் வாழ்க்கை..!" நினைவோடு போராடுவது காதலின் வாழ்க்கை..!" பசியோடு போராடுவது ஏழையின் வாழ்க்கை..!" பூனையுடன் போராடுவது எலியின் வாழ்க்கை..!" கடனோடு போராடுவது விவசாயியின் வாழ்க்கை..!" சூரியனோடு போராடுவது பூவின் வாழ்க்கை..!" சூரிய ஒளியோடு போராடுவது, பனித்துளியின் வாழ்க்கை..!" தமிழோடு போராடுவது, கவிதையின் வாழ்க்கை...!! RK ️

#
Kalpana Subramaniam

அழும்போது, தனிமையில் அழு..!" சிரிக்கும்போது, நண்பர்களுடன் சிரி..!" தனிமையில் சிரித்தால், பைத்தியம் என்பார்கள்..!" கூட்டத்தில் அழுதால், நடிப்பு என்பார்கள்...!! RK

#
Kalpana Subramaniam

ஏதோ ஒரு சூழலில் நீ வீழ்ந்து விட்டால் அதுவல்ல விதி, விழுதுகள் கீழ் நோக்கி வீழ்வதால் தான் நிமிர்ந்து நிற்கிறது பார் ஆலமரம்... அதுவே விதி... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

அருவறுத்து ஒதுக்கும் புழுவுக்கும் ஆசையாய் தொடும் பட்டாம் பூச்சிக்கும் பெரிய வித்யாசம் ஒன்றுமல்ல காலம் மட்டுமே... #ராதையின்கண்ணன் #கவிகண்ணா

#
கவிகண்ணா

கஷ்டங்களும் நிரந்தரமில்லை கஷ்டபடுத்தியவர்களும் நிரந்தரமில்லை...நிரந்தரமில்லாத உலகத்தில் காயங்களை நினைத்து கலங்காதீர்கள்... இதுவும் கடந்து போகும்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

ஆசை என்பது ஓட்டைக் குடம் மாதிரி அதை ஒரு போதும் நிரப்ப முடியாது... அன்பு என்பது விதை மாதிரி விதைத்தால் தான் முளைக்கும்... வம்பு என்பது புல் மாதிரி விதைக்காமலே முளைக்கும்... புரிதல் இருந்தால் கோபம் கூட அர்த்தமுள்ளதாக தெரியும். புரிதல் இல்லையேல் அன்பு கூட அர்த்தமற்றதாக தெரியும்... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

எல்லோரும் நினைப்பது போல் நீ வாழ வேண்டிய அவசியம் இல்லை யார் என்ன நினைத்தாலும் யாரையும் ஏமாற்றாமல் உன் மனசாட்சிக்கு உண்மையாக இரு அதுவே போதுமானது... #ராதையின்கண்ணன்

#
கவிகண்ணா

அருவறுத்து ஒதுக்கும் புழுவுக்கும் ஆசையாய் தொடும் பட்டாம் பூச்சிக்கும் பெரிய வித்யாசம் ஒன்றுமல்ல காலம் மட்டுமே... #ராதையின்கண்ணன் #கவிகண்ணா

#
கவிகண்ணா

***ஆண்களுக்கு*** வயதும்..! பொறுப்பும்...!! அதிகமாகும் போது, ""பிரெண்ட்ஸ்"" எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.....!

#
Karuppasamy

குறட்டை இரைப்பையில் உருவாகும் இரவு நேர பூபாளம்.. இல்லத்தரசிகளுக்கு இன்னல் தரும் நீலாம்பரி... நடுநிசியை நடுங்க வைக்கும் காம்போதி... நாழிகை இல்லாத தோடி... சுரம் இல்லாத சங்கீதம்... கச்சேரிகளில் இல்லாத ராகம்.. என்று தீரும் இந்த புண்ணாகவரளி... எப்போது வரும் சிந்து... நன்றி.... ராமசாமி.....

#
Ramasamy Ramasamy

மூப்பு தளர்ந்த நடை அழுக்கு படிந்த கண்ணாடி கிழிந்த உடை அழுகு குறைந்த மேனி உடைந்த செங்கோல் தன்னம்பிக்கை குறையாத மனம் தூக்கம் தொலைத்த இரவுகள் கேட்காத. காதுகள் பார்வை குறைந்த. கண்கள் என்று போகும் என்ற கவலை இது பரிணாம வளர்ச்சியின் பருவமாற்றம் எல்லோருமே ஒரு நாள் இதில் அடக்கம் அதற்குள் தான் இவ்வளவு ஆட்டம் மாறட்டும் மனித சமுதாயம் மலருட்டும் மனித நேயம் ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

யார் சொன்னது? பூமிக்கும் நிலாவிற்கும் இரண்டு லட்சம் மைல் தூரமென்று என்னவளின் பாதம் தரையில் தான் தவழும் எப்போதும்.

#
Karuppasamy

அடிமனதின் ஆதங்கமும், குடிபுகுந்த கோபங்களும், வேண்டி நின்ற வேதங்களும், தோல்வி தந்த பாடங்களும், கடுகளவாய் குறையும் முன்னே, கண்மூடி மரிக்கும் முன்னே, படைத்த பரமனின் பாதத்தில் வைக்கிறேன்.. பாவி மனிதனின் பாதகாணிக்கை...!! RK

#
Kalpana Subramaniam

நமக்குள் பிரிவே வரக்கூடாது, அப்படி வந்தால் உன்னால் வரக்கூடாது..! ஏனெனில்., அந்த சோகத்தின் கதாநாயகியாக, நீ இருந்துவிட கூடாதென்பதால்...!! RK

#
Kalpana Subramaniam

சோகங்களே மேகங்களாகும் போது, சொந்தங்களும் தூரமாகி விடுகின்றது..! என் கவலைகளை கரைத்து விடும் சக்தி, கண்களுக்குத்தான் உண்டு என்றால்..! கண்ணீரை கடன் வாங்க, நான் கடல் கடந்து செல்லவும் தயார்..! காரணமின்றி வரும் கஷ்டங்களும், கை நழுவிப்போன காலங்களும், காலத்தின் கோலங்களே...!! RK

#
Kalpana Subramaniam

மனசு வலித்தால்.. மரணம் வரை நீடிக்கும்..! ஆனால், இதயம் வலித்தால்.. இன்னொரு ஜீவனை.. தேடும் வரை மட்டுமே.. வலி தெரியும்...!! RK

#
Kalpana Subramaniam

அந்த பூமித்தாயும் உன்னை பார்த்து பொறாமை படுவாள் நீ வெட்கப்பட்டு அவளை பார்த்து சிரிக்கும் போது

#
Karuppasamy

வேண்டுமென்றே.. சாத்தும் கதவை.. மீண்டும் தட்டாதே...!! RK

#
Kalpana Subramaniam

பழகாமலே.. இருந்திருக்கலாம்.. என்று.. நினைக்க வைக்கிறது.. சில உறவுகளின்.. ஏமாற்றங்கள்...!! RK

#
Kalpana Subramaniam

கொலை அறுந்து போகிறது..! என் உயிர் ஆவி வேகிறது..!" எதற்காக இந்த பிறவி..!" எதற்காக இத்தனை வலி..!" சாவும் சற்று யோசிக்கிறதே..!" என்னை அணைக்க மறுக்கிறதே...!! RK

#
Kalpana Subramaniam

என் இதயம் முற்றிலுமாய், வெற்றிடமற்று கனத்து கிடக்கிறது..! யாருமில்லா கானகத்தில், துணையென்று ஏதுமின்றி, தனிமையிலே தவிக்கின்றேன்..! தன்னிலை உணர மறுக்கின்றேன்...!! RK

#
Kalpana Subramaniam

ஆடம்பர வாழ்க்கை.. ஐம்பது வயதில்.. கூட வரும்..! ஆனால்.., ஆசைப்பட்ட வாழ்க்கை.. அந்த அந்த.. வயதில் மட்டுமே வரும்..! அதனால்.., ஆசைப்பட்டதை.. அப்போதே வாழ்ந்து விடு...!! RK

#
Kalpana Subramaniam

எல்லோரையும் விட, அழகாக இருப்பது, தப்பு இல்லை..! எல்லோரிடமும் அன்பாக, இருப்பது தான் தப்பு..! எப்படியும் ஒருநாள், அழ வைப்பார்கள், என்று தெரிந்தும்..! ஏனோ?? என்று கொள்ள மறுக்கிறது, மனம்...!! RK

#
Kalpana Subramaniam

எதிர்பார்த்த நேரத்தில் உன் அன்பு கிடைக்கவில்லை நீ என் அன்பு தேடுகையில் நான் துறந்த அடையாளம் தேடி விருட்சமானேனடா...

#
Ilakkiya sri

ரசிக்கப்படுகிறேன் நான் பிறரின் இதயங்களில் உன் இதயம் தவிர அன்பா...

#
Ilakkiya sri

உறவின்தேடல்கள் சுவாரஸ்யங்கள் நிறைந்தது எத்தனை சிந்தனைகள் நாம் நினைத்த படி எல்லாம் சிந்தித்து முடிவு செய்த பின் அழகான வாழ்வை ரசிக்க ஆவல் கொண்டு மகிழ்கையில் பொய்மைகள் நிறைந்ததென அறிகையில் அனைத்தும் தொலைத்து நிற்கையில் உறவின் மேன்மை இது தானா என மனம் உடையும் கண்ணாடி உடைந்த பின் ஒட்ட இயலாது மனமும் அப்படித்தானே...

#
Ilakkiya sri

புன்னகையை கட்டி வைக்க, வெட்கமும் உண்டு..! சோகத்தை தீர்த்து வைக்க, கண்ணீரும் உண்டு..! இரண்டும் வலிமை தான் பெண்களுக்கு...!! RK

#
Kalpana Subramaniam

தொலைத்தும் போகாமல்.. தொந்தரவாகவும் இல்லாமல்.. தேடும் போதெல்லாம்.. தென்படும் தூரத்தில்.. இருந்தால் போதும்.. என்றே முடிவாகிறது..! ஒரு காலத்தில்.. நாம் கொண்டாடிய உறவுகள்...!! RK

#
Kalpana Subramaniam

மின்சாரம் இல்லாத போது, தேடப்படும் மெழுகுவர்த்தியைப் போல.. சிலர் தேவைப் படும்போது மட்டும், தேடப் படுகிறார்கள்...!! RK

#
Kalpana Subramaniam

பணம் நிம்மதி தராது என்று, எந்த ஏழையும் சொன்னதில்லை..!" நிம்மதி தராத அந்த பணத்தை இழக்க, எந்த பணக்காரனும் தயாராக இல்லை...!! RK

#
Kalpana Subramaniam

️There is no happiness in a world without love,️

#
Vellai Arcot

நடையில்லா பயணத்தில் நடப்பதற்கு பூ இரைப்பான்.. உயிரில்லா உடலுக்கு குடியென்று பால் வைப்பான்.. கேட்டிடாத செவிக்கெல்லாம் கேட்கும் படி இசை வைப்பான்.. உயிர் இருக்கும் வரையில் அவன் விலக்கியே இருந்திருப்பான்.. உயிர் பிரிந்த உடலருகில் என்னுயிரே நீ என்பான்..

#
கவிதையின் காதலன் ரவி

கிடைக்காத இடங்களில்.. அன்பை வெளிகாட்டாதே.. அடி வாங்கி.. கொண்டே இருப்பாய்.. உன் வாழ்வின்.. இறுதி வரை...!! RK

#
Kalpana Subramaniam

யார் நினைவிலும் இல்லை நாம், என்பதை விட.., யார் வலியிலும், நாம் இல்லை என்பதே.., நிம்மதியான வாழ்க்கை...!! RK

#
Kalpana Subramaniam

சோகக் கவிதையை எழுத.. மனம் இல்லை எனக்கு.. இருந்தும்.., என் பேனா.. சோகத்தை மட்டுமே.. எழுதத் துடிக்கிறது.. என் மனதில் உள்ள.. காயங்கள் மாறும் வரை..!! RK

#
Kalpana Subramaniam

கற்பனையில்.. வாழ்க்கை.. கலைந்துவிடும்.. என்று தெரிந்தும்.. கண்கள்.. கனவு தேடி.. பயணிக்கிறது..!! RK

#
Kalpana Subramaniam

பார்ப்பதெல்லாம் ரசிப்பது தவறில்லை அத்தனைக்கும் ஆசைப்படுவதுதான் தவறு......

#
Karuppasamy

இறைவனிடம் நான் மண்டியிட்டு கேட்பது தெல்லாம் ஒன்றே ஒன்றுதான் பிடிக்காதவர்களுக்கு. என்னை பாரமாக்கி விடாதே எனக்கு. பிடித்தவர்களை என்னைவிட்டு தூரமாக்கி விடாதே .. !

#
Karuppasamy

கல்லூரியில்.. கற்றுக்கொள்ள முடியாத.. வாழ்க்கை பாடத்தை‍.. அனுபவங்களும்.. இழப்புகளும்.. கற்று தருகின்றன...!! RK

#
Kalpana Subramaniam

அன்பு இல்லாத உலகில் ஆனந்தம் இல்லை.. ஆனந்தம் இல்லாத உலகில்.. நீ இருந்தும் பயன் இல்லை. . அன்பு என்னும் பண்பு.. உன்னிடம் இருந்தால்.. நீயே பலர் வாழ்வில்.. ஆனந்தம் ஆவாய்...!! RK

#
Kalpana Subramaniam

வழி மறந்த விழி தான் மறந்த வழி தேடி கிடைக்காமல் விதியால் வழி மாறிய பயணம் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் மழையில் முழுதும் நனையா மலர்கள் சிந்தும் விழித்துளிகள் போல் தொடர்கின்றன...

#
Ilakkiya sri

சாலைகளையும் துணை இன்றி கடந்து விடலாம் வாழ்வு எனும் கடலை உன் உறுதுணை இன்றி கடந்து செல்ல இயலாது அன்பா ...

#
Ilakkiya sri

உன் விழிகளை மறைத்தேன் யார் என அறியவில்லையா மருதாணியின் வாசமும் வளையல்களின் ஒலிகளையும் வைத்து பெயர் மாற்றிச் சொல்கின்றாயே இன்னொரு விழிகளில் இருப்பவள் வேறு ஒருத்தியோ அன்பா ...

#
Ilakkiya sri

ஒவ்வொரு நாளும் யுகங்களாய் உன்னோடு கழிக்கின்றேன் எவ்வளவு அழகியானாலும் உன்னைக்கவர முடியாது இன்னும் அழகு தேடி அலைகின்றாயே அழகே இல்லாத நீ என் அழகை குறை சொல்லி காயப்படுத்துகின்றாயே உனக்கு எதற்கடா இதயம் கல் நெஞ்சுக்காரனே...

#
Ilakkiya sri

வாழ்க்கையை விரும்பும் போது இளமை நம் வசம் இருப்பதில்லை இளமை நம் வசம் இருக்கையில் வாழ்வை நாம் இரசிப்பதில்லை...

#
Ilakkiya sri

சத்தமின்றி யுத்தம் செய்யப் போகிறேன்... சத்தமிட்டு ஊரை கூட்டி விடாதே..!!

#
Karuppasamy

நேர்மையாக இங்கு வாழ்ந்தால்.. அஞ்சுபவன் என்றுதான்.. இந்த முட்டாள் உலகம் சொல்லும்.. உண்மையாக இருந்தால்.. ஏமாற்றத்தான்.. இந்த உலகம் பார்க்கும்...!! RK

#
Kalpana Subramaniam

நம் பயம்.. எதிரிக்கு தைரியம்.. நம் அமைதி.. அவனுக்கு குழப்பம்.. குழப்பத்தில் இருப்பவன்.. எப்போதும் ஜெயித்ததில்லை...!! RK

#
Kalpana Subramaniam

வலிகளை மறக்க.. வழி கிடைத்தால்.. விழி திறந்து.. அந்த வழியில் செல்.. வலிகளால் என்றும்.. வாழ்க்கை இனிக்காது...!! RK

#
Kalpana Subramaniam

உலகமே ஒரு நாடக அரங்கம் அதில் எல்லாரும் நடிகர் திலகங்கள்! வேடமிட்டு நடிப்பதற்கு ஒப்பனைகள் தேவையில்லை! பயிற்சிகள் தேவையில்லை ஏன்! மேடை கூடத் தேவையில்லை! மனதில் அழுக்கு மட்டும் நிறைந்திருந்தால் நன்றாகவே நடிப்பார்கள் ! நுஸ்பா இம்தியாஸ்

#
Fathima Nusfa

எப்போதும் சகிப்புத் தன்மையோடு பொறுமை காத்து மௌனமாய் இருப்பவர்கள் , பயந்தாங்கொள்ளிகள் அல்ல! அவர்களின் அமைதியான பொறுமைக்குள்ளும் ஆக்ரோஷமான கொந்தளிப்புகள் வெடித்துச் சிதறலாம் என்பதை; அவர்களை புரிந்து கொள்ளாதவர்கள் தெரிந்திருக்க வேண்டும்..! நுஸ்பா இம்தியாஸ்

#
Fathima Nusfa

கத்தியால் குத்தினால் கூட ஒரு நிமிடம் தான் வலி! ஆனால் அன்பை காட்டி ஏமாற்றினால் ஒவ்வொரு நிமிடமும் "வலி" தான்.

#
Karuppasamy

நேசித்த பொருள் கிடைப்பதை விட கிடைத்த பொருளை நேசி நேசித்த பொருள் உனக்கு ஸ்பெஷல் கிடைத்த பொருளுக்கு நீ தான் ஸ்பெஷல்

#
Karuppasamy

காத்து நின்ற என் மனதை களவாடி சென்றதேன்..? முன் நின்று காணாமல் மறைந்தோடி சென்றதேன்..?காணாமல் தேடிடும் என்னை ரசித்து நான் காணாமல் காண்பதேன்..?

#
கவிதையின் காதலன் ரவி

எதிர் பாராத.. சில உறவுகள்தான்.. பல மறக்க‍ முடியாத.. நினைவுகளை தரும்...!! RK

#
Kalpana Subramaniam

தைரியத்துடன் பார்த்தால்.., நாம் அனுபவிக்கும் வலிகள் கூட.., சாதாரண விஷயமே...!! RK

#
Kalpana Subramaniam

எல்லோரும் நமக்கு இல்லையென்ற வலியை விட.., நமக்கு எல்லோரும் இருந்தும், நமக்காக யாரும் இல்லை.., என்பதுதான்.. அதிகம் வலிக்கிறது...!! RK

#
Kalpana Subramaniam

பேசுவதையும், எல்லா சந்தேகங்களையும், நீக்குவதையும் விட, அமைதியாக இருந்து, முட்டாளாக நினைப்பது நல்லது...!! RK

#
Kalpana Subramaniam

கோபத்தில் எடுத்தேறிந்து பேசும் சிலருக்கு, அறிய குணம் உண்டு..!" என்னவென்றால், அவர்கள் பிறருக்கு துரோகம் செய்யவும் மாட்டார்கள்.., பிறர் முதுகில், குத்தவும் மாட்டார்கள்...!! RK

#
Kalpana Subramaniam

பெண்ணின் வயிற்றில் பிறக்கும் போது, பிறப்பு புனிதமாகிறது..!" பெண்ணை மணந்து அணைக்கும் போது, வாழ்க்கை புனிதமாகிறது...!! RK

#
Kalpana Subramaniam

மனம் முழுவதும் நஞ்சினை வைத்துக் கொண்டு.., முகத்தில் மட்டும், கொஞ்சலை காட்டும் உறவுகள் தான்.., வலிக்காமல் உயிரை எடுக்கும், எமனோட தூதுவர்கள்...!! RK

#
Kalpana Subramaniam

நம் ஒவ்வொருவர் வாழ்விலும்.. காரணங்களின்றி நேசிக்கப்பட.. ஒருவர் இருந்து விடுகிறார்.. அவர்களை நேசிக்க.. காரணங்கள் எதுவும் தேவைப்படுவதில்லை.. அவர்கள் என்பதே.. போதுமானதாக இருக்கிறது... RK

#
Kalpana Subramaniam

நம்மிடம் அவர்களே கேட்பார்கள் எனச் சொல்லாமல் இருப்பதும்.. நம்மிடம் அவர்களே சொல்வார்கள் எனக் கேட்காமல் இருப்பதுமே.. பல இடைவெளிகளுக்குக் காரணம்... RK

#
Kalpana Subramaniam

பிறரிடம்.. பகிர முடியாத.. வேதனையைக் கூட.. ஆற்றிட விழிகள்.. ஊற்றெடுக்கும்... அருவி தான் கண்ணீர்...!! RK

#
Kalpana Subramaniam

ஊரை பார்க்காதே உன்னை பார் ஊருக்கு என்ன தெரியும் உனக்கு தான் தெரியும் உன் சூழ்நிலையும் வலியும் உன் முடிவுகளில்... ‍️

#
Karuppasamy

காலத்தின் தேவைகளில் காதலின் தேவை அவசியமே இயந்திரமாய் பொருளீட்டி என்ன பயன் நேசம் இன்றி கட்டி அணைத்து என்ன பயன் அழகிய மனையிலே குளிரூட்டபட்ட அறையிலே ஊஞ்சலாடி என்ன பயன் நேசமில்லா உணவில் சுவையுண்டோ...

#
Ilakkiya sri

வாழ்க்கையை விரும்பும் போது இளமை நம் வசம் இருப்பதில்லை இளமை நம் வசம் இருக்கையில் வாழ்வை நாம் இரசிப்பதில்லை...

#
Ilakkiya sri

வாழ்வில் வலிமையான வலிகள்..!" செய்யாத குற்றதிற்காக சுட்டிக் காட்டப்படாத வரிகள்...!! RK

#
Kalpana Subramaniam

எனக்கான நேரம் வரும்வரை.., என் மௌனம் தான், எனக்கு சிறந்த மருந்து...!! RK

#
Kalpana Subramaniam

எத்தனை சோதனைகள் எனக்குள் இருந்தாலும்.., அத்தனையும் கடந்து வருவேன்.., என் கடவுள் என் அருகில் இருப்பதனால்...!! Rk

#
Kalpana Subramaniam

தைரியத்துடன் பார்த்தால்.., நாம் அனுபவிக்கும் வலிகள் கூட.., சாதாரண விஷயமே...!! RK

#
Kalpana Subramaniam

️️️️ காற்றாய் இருந்து விடு, உன்னை யாரும் தடுக்க முடியாது..!" கடலாய் இருந்து விடு, உன்னை யாரும் அளக்க முடியாது..!" மழையாய் இருந்து விடு, உன்னை யாரும் மறுக்க முடியாது..!" மலையாய் இருந்து விடு, உன்னை யாரும் ️மறைக்க முடியாது..!" ஒளியாய் இருந்து விடு, உன்னை யாரும் பிடிக்க முடியாது..!" கடின உழைப்போடு நீ என்றுமே இருந்து விடு, உன் வெற்றியை யாரும் தடுக்க முடியாது...!! RK ️️️️

#
Kalpana Subramaniam

இளமையில் தகப்பனும்.., முதுமையில் மனைவியும்.., ஒரு ஆண் இழக்ககூடாத சொத்துக்கள்...!! RK

#
Kalpana Subramaniam

️️️️ இடம் அறிந்து அன்பு காட்டு..!" பொருளுணர்ந்து பேசு..!" உனக்கான வரம்பு வட்டத்தை, உருவாக்கு..!" அதில் எவரையும் உள் நுழைய விடாதே..!" நெருங்கினால் மலராதே..!" விலகினால் உதிராதே..!" மனதை காலியாக்கு..!" மகிழ்ச்சிக்கு அது போதும்...!! RK ️️️️

#
Kalpana Subramaniam

பிடித்தவர்களின் தவறுகளை, மன்னித்தே பழகியதாலோ என்னவோ, நிறைய ஏமாற்றங்கள் மட்டுமே கிடைக்கின்றன...!! RK

#
Kalpana Subramaniam

மறக்காத வழியும் இல்லை..!" சிரிக்காத தருணமும் இல்லை..!" கடக்காத பிரச்சனையும் இல்லை..!" வலியில்லா அன்பும் இல்லை..!" எல்லாமே கடந்தும் போகும்..!" எல்லாமே பழகியும் போகும்...!! RK

#
Kalpana Subramaniam

பல சோகங்களை மனதில் வைத்துக்கொண்டு.., நான் நலம்.. நீ நலமா..? என்று எழுதுகிறது நம் விரல்கள்...!! RK

#
Kalpana Subramaniam

சத்தமாய் சொல்ல முடியவில்லை, மனதுக்குள்ளையே சுற்றி சுற்றி வட்டமடித்து கொண்டிருக்கிற இருக்கின்ற வலி ஏராளம்.... RK

#
Kalpana Subramaniam

திறந்த புத்தகமாக மனது திறந்திருந்தால் சாவி கொண்டு திறப்பானேன்...

#
Ilakkiya sri

அனைத்தும் மறந்து மரத்துப்போன பின்னும் திருந்தாமல் மீண்டும் என்னை இம்சிப்பது உனக்கு வாடிக்கையாகி விட்டது உன் மீது கரிசனம் காட்டும் என் மனதை கடிவாளமிடாதது என் தவறு தானடா...

#
Ilakkiya sri

என்ன வேண்டுமென்று கேட்கிறாய் அன்பா சொன்னால் தானே புரியும் மௌனித்தாலும் விழிகளிலாவது புரியவை அதுவுமின்றி சினம் கொண்டு என்னை துன்புறுத்தினால் எப்படி உன்னை அறிந்து கொள்வேன் எனக்கு வலிக்கிறதடா...

#
Ilakkiya sri

அழகான நினைவுகள் நம் இதயத்தில் கனத்து நிற்கும் பனிப்பொழிவில் நனைந்த சிட்டுக்குருவி பறக்க இயலாமல் அதன் சிறகுகள் கனத்தது போல்...

#
Ilakkiya sri

ஏதோ ஒரு உரையாடலில் பிரிந்து போன நாம் மீண்டும் சேர நினைக்கின்றோம் பிள்ளைகள் நலம் வேண்டி...

#
Ilakkiya sri

இறைவன் கொடுக்காத கடினம் பூமியில் இல்லை.. அவன் படைப்பின்றி பூமியில் பிறவியும் இல்லை.. அவன் குறித்த வாழ்நாளில் மாற்றமும் இல்லை.. ஒற்றையடி பாதையில் பயணம் இல்லை.. யாருடைய பாதையும் ஒன்று போல் இல்லை.. வேறொருவர் பாதையில் யார் பயணமும் இல்லை.. காணாத கண்களும் அவனை காணாமல் இல்லை.. காணாதவர் மனதிலும் அவன் உருவம் தோணாமல் இல்லை.. அவன் அசைவின்றி காற்றும் அசைந்தாடுவதில்லை.. அவன் அசைந்தாடும் இடமெல்லாம் அசையாமல் இல்லை.. அறிவேன் என்றவர் பலர் அவனை அறியவே இல்லை.. இல்லை அவன் என்றவனுக்கும் விதி முடியாமல் இல்லை.. அவனருள் பெறாதோர் இப்பூமியில் இல்லை.. தினந்தோறும் வேண்டுதலை கூறாமல் இல்லை.. பூ மாலை திருவடிக்கு சூடாதவர் இல்லை.. வேண்டாதவரின் பொழுதும் விடியாமல் இல்லை.. முடிவுரையின்றி மனித வாழ்க்கை தொடங்குவதில்லை.. சுழலும் பூமியில் நிரந்தரம் இதுவென்று எதுவுமே இல்லை..

#
கவிதையின் காதலன் ரவி

சந்தர்ப்பவாதிகள் எல்லாம் ஆ சாமிகள் தான். வேஷம் போடும் வரை போற்ற படுவார்கள்.

#
Freash Status

கனந்தீயில் நனைத்தவனுக்கு கவலை தீ ஒன்றும் புதிதல்ல

#
Freash Status

எதையும் எதிர்பார்த்து யாரிடமும் பழக வேண்டாம் அதிக எதிர்பார்ப்பு சில நேரம் பெரிய ஏமாற்றத்தை தரும்

#
Karuppasamy

ஒருத்தர் கூட இருந்தாலும் உண்மையா இருக்கனும்... உண்மை இல்லை என்றால் அந்த ஒருத்தரும் தேவை இல்லை..

#
Karuppasamy

வேஷம் போட தெரிந்தவனுக்கு ரோசம் இருக்காது உறவுகள் இருக்கும்...!! வேஷம் போட தெரியாதவனுக்கு ரோசம் இருக்கும் உறவுகள் இருக்காது

#
Karuppasamy

தனிமை என்னை ஆட்டி படைத்தது நிலையில்லா மனதை ஆச்சி செய்தது.. மறக்க வேண்டியதை நினைக்க வைத்தது.. நினைக்க வேண்டியதை மறக்க வைத்தது.. வேண்டும் என்பதை விலகிட வைத்தது.. வேண்டாம் என்பதை வேண்டிட வைத்தது..

#
கவிதையின் காதலன் ரவி

குறை சொல்பவன்....!! நிறை காண மாட்டான்.........!! ஸ்ரீஜா சந்திரசேகர்

#
ஸ்ரீஜா சந்திரசேகர்

கரையில் நின்று கடலை ரசிப்பது அழகு  அழகில் முழுகுவது தான்  நேசிப்பதின்  பிழை 

#
Raju

இரவில் கண் மூடி உறங்குவதை விட  இரவு உறங்குவதை தான் கண் மூடாமல் பார்க்கிறோம்

#
Raju

வரப்போகும் இரயிலுக்கு தெரியாது ஜன்னலோரம் இசைக்காற்று என் பயணத்தின்  நீ ஒரு நபர் என்று

#
Raju

அதிகம் நேசம்  மட்டும் இருக்க கூடாது அது இயற்கையா இருக்கலாம்  ஒரு நபராகவும் இருக்கலாம் அதிகம் அன்புதானே இங்கு பேரழிவை தரும்

#
Raju

மொழிகள் எல்லாம்........!! தவம்_ கிடக்கிறது.......!! நீ வாய்........!! திறந்து_ பேச.............!! ஸ்ரீஜா....️ சந்திரசேகர்

#
ஸ்ரீஜா சந்திரசேகர்

இணைந்தும் இணையாமலும் நீயும் நானும் வேறு வழி இன்றி பயணிப்போம் வாழ்வெனும் நதியினில்...

#
Ilakkiya sri

மீண்டிடாத தூக்கத்தில் என் பிரிவு வேண்டும்.. பிணியின்றி நலமுடனே கடந்திட வேண்டும்.. துணையின்றி மரணம் வரை நடந்திட வேண்டும்.. மணந்தவள் மனம் கோணும் முன் மறைந்திட வேண்டும்.. தொல்லை என்று தோணும் முன் மடிந்திட வேண்டும்.... பாரமின்றி என் மரணமும் நிகழ்ந்திட வேண்டும்.. விலகிடாத உறவுக்கு முன் என் விலகல் வேண்டும்.. என் பயணத்தின் கடைசி செலவும் என் உழைப்பில் வேண்டும்..

#
கவிதையின் காதலன் ரவி

இந்த நிமிடத்தில் வாழ்க்கை எவ்வளவுகடினமாக வேண்டுமானாலும் தெரியலாம் ஆனால் செய்வதற்கும் வெல்வதற்கும் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று இருந்துகொண்டேதான் இருக்கிறது...

#
Shiny Mani

தேடாமல் தேடி வருவது உனக்கென்று படைக்கப்பட்டிருக்கும்.. தேடியும் கிடைக்காமல் இருப்பது உனக்கில்லை என்று மறுக்கப்பட்டு இருக்கும்.. கண்டதும் கிடைப்பது காணாமல் துயர் கொள்ள வைக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

உண்மை சொல்லில் அழகு இருக்காது.. அழகு சொல்லில் உண்மை இருக்காது.. வெகுளி பேச்சில் பொய் இருக்காது.. உண்மை பேசினால் மதிப்பிருக்காது.. பொய் பேசினால் மதிப்பிற்கு குறையிருக்காது. பாசம் கொள்பவருக்கு உறவிருக்காது.. பணம் இருப்பவருக்கோ உறவே இருக்காது.. அன்பு காட்டிய விலங்கிடம் மறதி இருக்காது..

#
கவிதையின் காதலன் ரவி

கஷ்டம் , ஏமாற்றம் , இழப்புகள் வாழ்க்கையில் சந்திக்கும் போது தான் எது உண்மையான உறவு எது நல்லது கெட்டது என்று பாடமாக தரும் ..

#
Karuppasamy

என்னை பாராட்ட "பலர் " இருக்கிற போது யாரோ "சிலர்" சொல்லும் குறைகளுக்காக நான் "ஏன்" வருந்த....

#
Karuppasamy

மலரும் போது தெரிவதில்லை அந்த மலர் எந்த மதத்தை சூடு என்று அது போல தான் நானும் எந்த இதயத்தில் கோவிலாவேன் என்று .....

#
Karuppasamy

மனது மரத்துப் போவதற்கு நோய் மட்டும் தேவை இல்லை ஏமாற்றங்களும் சில துரோகங்களும் போதும்

#
Karuppasamy

யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலை வரக்காரணம் யாரோ ஒருவரிடம் 'அதிகம்' பேசியதால் தான் ..

#
Karuppasamy

உலகை பார்த்து சிரிக்க என்ன இருக்கிறது, நம்மை பார்த்து ஊர் சிரிக்குதே!.. Good night

#
Karuppasamy

நீ பழைய மாதிரி இல்ல நிறைய மாறிட்டனு சொல்பவர்கள் தான் நம் மாற்றத்திற்கு காரணமாக இருப்பார்கள்.

#
Karuppasamy

சோம்பேறித்தனம் எட்டிப்பார்க்கும் வேளையில் பறவைகள் குஞ்சு பொரிக்க மட்டும் கூடு கட்டாமல் தான் படுத்துறங்கவும் கூடு கட்டிக்கொள்ளும்...

#
Ilakkiya sri

விட்டுவிட்டு போக ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் .. விட்டுக்கொடுத்து போக ஒரே காரணம் அன்பு தான்...

#
Karuppasamy

அன்று ரசித்தவை எல்லாமே, இன்று ரணாமக்கிடக்கிறது

#
Karuppasamy

சுற்றிலும் இருளாக இருந்தாலும் என் கண்களுக்கு நீ மட்டுமே வெளிச்சமாகத் தெரிகிறாய்...

#
Karuppasamy

உனக்குள்ள இருப்பது புரில எனக்கு எனக்குள்ள இருப்பது புரில உனக்கு புரிய ஆசைய வச்சுக்கிட்டு புரியாமலே வாழுறதே வாழ்கையா....

#
Karuppasamy

நேற்றைய பொழுது நிஜமில்லை ..! நாளைய பொழுது நிச்சயமில்லை .! இன்று மட்டும் நம் கையில் ..!

#
Karuppasamy

புதுமைகள் பிறந்திட மாற்றங்கள் தேவை சில காயங்களும் எட்டிப்பார்க்கும் சில சங்கடங்களைக் கடக்க நேரிடும் சில மாற்றங்களைக் எதிர்கொள்ள மனதைப்பக்குவப்படுத்திக் கொள்வது அவசியமாகும் ஆடையிலும் மாற்றம் நிகழும் அதனைப் பார்க்கும் விதமும் மாறுபடும் இத்தனையும் கடந்து வரும் போது மாற்றத்தை இரசித்து மகிழ்வோம்..

#
Ilakkiya sri

நேற்று நடந்ததை மறந்தா தான் இன்று உன்னால் சிரிக்க முடியும்..!!

#
Karuppasamy

நமக்காக என்றைக்கு "ஓடும் நேரங்களில் அகலும் என் உறவுகளாய் நாம், நம், நமக்கு, நமக்காக, நம்முடைய, நம்பிக்கை...... என்று காணவில்லையே !! நான், என், எனக்கு, எனக்காக, என்னுடைய, எண்ணிக்கை...... என்று வந்ததென்ன !!"

#
S Sankari

வாழும் சில நேரம் "உனக்கும் எனக்கும் தேடி வந்த உள்ளம் உலகம் இருக்கும் வரைக்கும் சேதி சொல்லும் கால நேரம் நொடியில் காத்திருக்காது காத்திருக்கும் நேரம் உறவுகள் இங்கு இல்லை வருவார் போவார் உந்தன் மெய்ம்மையில் போவார் வருவார் உலகின் மெய்ம்மையில்"

#
S Sankari

யாரும் கடைசி வரையிலும் "யாரும் கடைசி வரை தான் வரப்போவதில்லை யாரும் கடைசி வரையும் இருக்கப் போவதில்லை யாரும் கடைசி வரையில் இருக்கப் படுவதுமில்லை யாரும் கடைசி வரையிலும் இறுகப் படுவதுமில்லை யாரும் கடைசி வரையில் தனிமைப்படுத்தப் படுவதில்லை யாரும் கடைசி வரையிலும் வாழாமல் இல்லை சில ஆவதும் உண்டு, அழிவதும் உண்டு சில ஆவதும் இல்லை, அழிவதும் இல்லை"

#
S Sankari

உயிரே நீ சிகரமாயிரு "நினைவலைகள் கடந்து விட்டால் கற்பனைகள் ஓடிவிடும் கனவலைகள் நடந்து விட்டால் காட்சிகள் தடுமாறிவிடும் ஓடும் நதி பாய்ந்து விட்டால் வாழ்க்கை தடம் புரண்டு விடும் பாயும் நதி ஓய்ந்து விட்டால் கல்லணைகள் காய்ந்து விடும் பாசவளைக்குள் பற்றிடவே மனவலைகள் ஓடிவரும் மனவலைகள் புகுந்து விட்டால் பேரலைகள் பற்றை இழந்து விடும் சுவாச அலைகள் நின்றுவிட்டால் துடிப்பலைகள் சென்று விடும் உயிரே நீ சென்று விட்டால் உறக்கமே நிரந்தரமாகும்!"

#
S Sankari

காலம் போன பின்பு "கண்கள் ரெண்டும் தூங்குதே நெஞ்சம் தானா ஏங்குதே உறவை தூக்க நினைக்குதே உள்ளம் உருகிப் போகுதே காலங் கெட்ட பின்னே எம் மனசு கண்ணீரில் உயிரைக் கரைக்கப் பாக்குதே அன்றைய வசையடியில் தூக்கம் வந்துச்சு இன்றைய வசையடியில் தூக்கம் போச்சுது கல்வீடு தோட்டத்துக்குள்ள கல்லாங்கா ஆட்டமென்ன கண்ணுக்குள்ளே ஈரம் இறங்க நெஞ்சுக்குள்ளே பாரம் இறுக கண்ணேறுபட்ட வாழ்க்கை களவாடி போனதென்ன ?"

#
S Sankari

Who am I? Someone's baby; or Someone's lullaby; Who am I? Someone's burden; or Someone's first love Who am I? Someone's best ; or Someone's worst Who am I? Someone's cupid; or Someone's hurt!! Who am I? Someone's weakness; or Someone's pride Who am I?? Someone's trust or; Someone's fake Who am I?? Someone's faith; or Someone's weakness Who am I?? The nineteen years of life; In the nineteen lines Who am I?? The life is static; The truth is hurt!! But that is fact! who knows?? The god knows !! Who I am!!!

#
karthika

இரவின்பயண நேரத்தில் தேநீரின் சுவையோ இன்னும் பருக செய்கிறது அவளின் ( உன் ) நினைவுகளை

#
Karuppasamy

பெண் வாழ்க்கை நெருப்புக்கு இணை என்பார்கள். ஆம் உண்மைதான், அவள் கோவத்தீயிலும் பஸ்பம் ஆகும் அனல் பறக்கும் அவள் ஒழுக்கத்திற்கு இழுக்கு எனும்பொழுது,,, *தீ* அவள் பெண்ணுருகொண்ட தருணம் கண்ணகி...

#
Panneer Selvi

தவறை நியாயப்படுத்தும் நண்பனை விடவும் சுட்டிக்காட்டி திருத்தும் நண்பன் தான் சிறந்தவன் .

#
MURUGESAN KR

முயற்சியின் பாதங்களை வணங்கியே தீரும் வெற்றியின் சிரம் .

#
MURUGESAN KR

கவலைப்படுவதால் மனதின் ஆற்றலும் உயிரின் சக்தியும் வீணாகிறது எதிலும் அளவறிந்து வாழப் பழகினால் சிக்கலுக்கு இடமிருக்காது .

#
MURUGESAN KR

தவறு செய்யும் இரு மனங்களை மணம் முடித்தால் விட்டுக்கொடுத்தலுக்கு குறைவிருக்காது அச்சத்தின் மிகுதியில்...

#
Ilakkiya sri

உயிரின் இறுதி புறப்பாடு "கண்ணுக்கும் மண்ணுக்கும் மௌனம் பேசுதே மண்ணில் கரைந்தாரென்று ஏற்க முடியாமலே கண்ணுக்கும் விண்ணுக்கும் சண்டை மூளுதே காற்றில் கலந்தாரென்று ஏற்க முடியாமலே"

#
S Sankari

இறப்பில் ஒரு சுவாசம் "சாலையோரம் பூக்கள் நின்று வாழ்த்தும் விலகி நின்று பேசும் தேன் மொட்டிலும் வாசம் வீசும் விழி மூடி செல்லும் பாதையில் மலர்ந்த முகங்கள் காத்து நிற்கும் "

#
S Sankari

இளமை தொலைத்து வெளியே விடும் வெளிநாட்டு வாழக்கையும் ஒரு வழி பாதை தான்!

#
MURUGESAN KR

இனி சுகம் காணலாம் "எங்கோ செல்கிறோம் ஏதோ செய்கிறோம் எங்கும் மாற்றங்கள் எதிலும் காயங்கள் காற்று அடைபட்ட பையிலே காயங்கள் பழுத்ததென்ன ! வேகம் தடைபட்டதென்ன தேகம் உடைந்ததென்ன ! காலம் கால் உதைத்திட காலன் கை நீட்டிட இனி போவோம் ஊர்கோலம் !"

#
S Sankari

ஒரு செயலை எப்படி செய்வது என்பதைவிட எப்படி செய்யக்கூடாது என்பதுதான் முக்கியம்

#
MURUGESAN KR

தற்கொலைக்கு தேவைப்படும் நான்கு தூக்க மாத்திரை ஆறு முழம் கயிறு , சிறிது விஷம் இவற்றை விட அழுத்தமாய் சொன்ன வாரத்தையே கொன்று விட்டது மனிதனை.

#
MURUGESAN KR

அன்பு என்பது துன்பத்தில் ஆறுதல் .

#
MURUGESAN KR

“மனமும், அறிவும் ஒன்றாக பயணித்தால், நாளும் நற்பயணமே”

#
MURUGESAN KR

மனம் மனம் நினைப்பது எல்லாம் மனிதற்க்கு கிடைபதில்லை.. மனிதற்கு கிடைப்பதை எல்லாம் மனம் ஏற்று கொள்வதும் இல்லை இருபதைவிட்டு இல்லாததை தேடுவதே மனித மனம்.

#
MURUGESAN KR

நீ செல்வதற்கு பாதையை தேடாதே பாதையை நீயே உருவாக்கு .

#
MURUGESAN KR

உங்களது நேரத்தை ஜெயிக்க செலவிடுங்கள்... பிறரை தோற்கடிக்க அல்ல...

#
MURUGESAN KR

பெண்ணுக்கு வேண்டும் சிந்தனையில் தெளிவு செயலில் நேர்மை நடையில் பெண்ணியம் உடையில் கண்ணியம் பேச்சில் கனிவு ஒழுக்கத்தில் கண்ணகி பழக்கத்தில் ஜானகி பேணுவதில் தாய் தீண்டுவதில் தீ!

#
MURUGESAN KR

பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல சில நேரங்களில் தட்டிகொடுப்பதும் தான் நட்பு!

#
MURUGESAN KR

நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும் மனைவி வந்தபின் நிம்மதியை தேடுவதுமே ஆண்களின் வாழ்க்கை தேடல்.

#
MURUGESAN KR

தேநீர் அருந்தும் நேரத்தில் இதமாக வாசத்துடன் பிறரின் இதழ்களையும் வாழ்வையும் களவாடுபவர்கள் இம்மண்ணில் உளர்.

#
Ilakkiya sri

முடியாது என முடங்கி விட்டால் வேதனை முடியும் என எழுந்து விட்டால் சாதனை .

#
MURUGESAN KR

கபடதாரிகள் "கற்சிலையில் மனிதர்கள் கல் மனம் கொண்டு இவர்கள் எதிர் இருக்கும் அனைவரையும் கல்லாய்ப் போக சபிக்கிறார்கள் கபட மனம் கொண்டு இவ்வரக்கர்கள் சூதை வாயில் திணிக்கிறார்கள்"

#
S Sankari

முடியாது என முடங்கி விட்டால் வேதனை முடியும் என எழுந்து விட்டால் சாதனை .

#
MURUGESAN KR

அறிவாக பேசுபவர்களை விட, அன்பாக பேசுபவர்களிடமே மனம் அதிகமாக பேச விரும்புகிறது.

#
MURUGESAN KR

எதிர்பார்ப்புகள் பெரிதாக இருந்தால் ஏமாற்றங்கள் வலிக்கத்தான் செய்யும்

#
MURUGESAN KR

வாழ்க்கையில் தோல்விகளை மன வலிமையுடன் எதிர்கொள்ளப் பழகுங்கள். ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும் உங்கள் மனம் பக்குவப்படுவதை நீங்கள் உணர முடியும்.

#
MURUGESAN KR

காரணமின்றி அன்பு வைப்பது முதலாவது தவறு. எல்லோரிடமும் உண்மையாக இருப்பது நாம் செய்யும் இரண்டாவது தவறு. மற்றவர்கள் நம்மைப் போல் இருப்பார்கள் என்று நினைப்பது மூன்றாவது தவறு…!

#
MURUGESAN KR

அடடா வாழ்க்கை இதுவன்றோ ! "கைகள் இரண்டிலும் மலர்கள் நனைய கண்கள் இரண்டும் மழையில் குடிபெயர இதழ்களில் நல்மொழி வாசிக்க நெஞ்சங்களில் இதயம் பரிமாற கால்கள் இரண்டும் வான்வெளியில் மிதக்க கனவுகள் நிஜமாகும் வரம் இதுவே ஒருமுறை பூக்கும் மலரிதுவே ! பஞ்சணையில் பெயர் எழுத மஞ்சணையில் உறவு எழுத மகிழ்ச்சியில் ஒரு துணை வருமே சாதிக்கவே நம் கரம் பிடித்திடுமே சோதனையில் பல வினா அதில் சொந்தங்கள் விடை பெறுமே அடடா வாழ்க்கை இதுவன்றோ !

#
S Sankari

ஏங்கி தவிப்பவர்கள் ! "தெவிட்டும் சொல்லிற்கும் தெவிட்டாத அமுதத்திற்கும் நம்மைக் காணும் நம் சொந்தத்திற்கும் நம்மைக் காணாத விரோதத்திற்கும் நம்மைத் தேடும் நம் உள்ளத்திற்கும் நம்மைத் தேடாத நம் புத்திக்கும் நாம் தேடும் நம் நம்பிக்கைக்கும் பாடும் பறவைக்கும் பாடாத தேனீக்களுக்கும் மணக்கும் மல்லிகைக்கும் மணக்காத மாளிகைக்கும் மணந்த பெண்ணுக்கும் என்றும் ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும் !"

#
S Sankari

கட்டி முடிக்க வேண்டும்.. ‌கட்டிடத்தை அல்ல கடனை..?

#
Karuppasamy

நினைவாய் வாழ என்றும் முயற்சிக்கு வித்திடு ! "கனவுகள் ஆயிரம் கண்களில் ஆயிரம் வந்தது ஒரு தவம் அதில் உரிமைகள் பல இனம் காத்திருந்தார் வாழ்வில் கொந்தளிப்பு நடை பயின்றது கனவும் நினைவும் நினைக்கும் என்றும் உனையும் பாரத தேசம் பறந்த தேசம் பறந்த உலகில் பறந்து போனால் பறக்கும் வரையும் எல்லாம் வாய்க்கும்"

#
S Sankari

நம்பிக்கை எனும் வேர் வளர அன்பு எனும் விதை விதையுங்கள் கருத்துப்பரிமாற்றம் எனும் உரமிட்டு ஆசை எனும் நிரூற்றி விட்டுக்கொடுத்தல் எனும் ஒளிகூட்டி வளர்ந்த வேர் விருட்சமாய் தளைத்து வாசம் மிக்க மலர்களை நல்கும்...

#
Ilakkiya sri

கசப்பு இருந்தால் தான் இனிப்பின் சுவை அறிவர் வாழ்வில் இனிப்பின் சுவை கூடினால் கசப்பே தெரியாது வாழ்வில் கசப்பும் இனிப்பும் கலந்தது தான் வாழ்க்கை...

#
Ilakkiya sri

எதார்த்தத்தில் உள்ள அர்த்தங்கள் என் வாழ்வில் அறிவியலைப் புகுத்திக் கொள்ள எனக்கு அறிவில்லை. எல்லோரிடத்திலும் சுமூகமாய் வாழ இந்த சமூகம் ஒத்துழைக்கவில்லை. என் நம்பிக்கைக்குரிய நம்பிகளிடத்தில் நம்பகத்தன்மை கிடைக்கவில்லை. என் பயம் என் உடல் முழுவதும் பாய்ந்து கொண்டிருக்கிறது. என் சமத்துவ குணத்தினால் எனக்கு எந்த சம்பளமும் கிடைக்கப்போவதில்லை. என் கள்ளம் கபடமற்ற என் மனம் தாறுமாறாய் போய் கொண்டிருக்கிறது.

#
S Sankari

உறவுகளின் கைப்பாலம் "உறவுகள் நல்நினைவுகள் என்றும் இல்லையடி  உறவுகள் உறவாட வந்தால் தானடி  நல்நினைவுகள் நடந்தால் தானடி  உறவுக்காக உறங்கிப் போகும் நான் ஒற்றைப் பூவடி  நல்நினைவுகள் என்றும் இல்லையென்றால் வாழ்க்கை ஏதெடி  ஒருவேளை சோற்றுக்காக வநத உறவுதானடி  ஒருவேளை  நாம் இல்லாமல் போனால் சுற்றம் ஏதெடி    என்றும் நலமாய் வாழ காத்து நிற்கும் காலம் நானடி  அன்றில் பறவை சிறகுகள் இல்லாமல் பார்த்து நின்றேனடி    துன்பங்கள் மறைந்தாலும் துயரம் தானடி  இன்பங்கள் நினைந்தாலும் இனிமை ஏதெடி  காற்றாய் கசிகிறேன்  அனலாய் தகிக்கிறேன்  என் நெஞ்சின் உருகுநிலை என்றும் தெரியாதடி  மனிதனின் பருவநிலை என்றும் புரியாதடி  உன் நினைவுகள் என் கனவாய் மாறுமடி  என் நினைவுகள் வெறும் கனவாய் தொலைந்ததடி  கண்ணில் ஈரம் நெஞ்சின் ஒரு ஓரம்  மனமே ஒரு பாரம் இதுவே என் நேரம்   எந்நாளும்....."

#
S Sankari

*ஒயின்ஷாப் கட்டடம் ஆண்களின் *சின்னாவீடு ! யாருக்கும் தெரியாமல் தான் போகவேண்டியுள்ளது..?

#
Karuppasamy

என் ஆறடி நிலம் எங்கே ? உலகிருக்குது ஊரிருக்குது உள்ளமும் இருக்குது ஊருக்குள்ள பேரிருக்குது உண்மையும் இருக்குது குசும்பு என்ன உசுப்பி என்ன ஆகப்போகுது உலகமே நாடக மேடையில ஆடிக் கிடக்குது உலகளந்த பெருமாளுக்கு உருவம் குறைஞ்சது உண்மை தெளிஞ்சதுமே பலி முகம் வாட்டம் காணுது மூன்று அடி மண் கேட்டு வாமன அவதாரம் ஆனது மூன்று அடிக் கேட்டதுக்கே சுக்குக்கு விழி போனது இங்கு ஆறடி நிலத்துக்கே மனிதர்கள் அவதாரம் தேடுது

#
S Sankari

கனவும் நினைவும் நம்மை அயற்சியோடும்,  ஆழ்ந்து அமைதியாகத்  தூங்க வைத்தால் தான் அது நினைவு! வெற்றியை நோக்கிய நம் முதல் பயணம்! இல்லையெனில், அது நம் தூக்கத்தை அலைகழைக்கும் வெற்றுக் கற்பனை! அது கனவுமல்ல, நினைவுமல்ல! அது வெறுமை! அது கற்பனையோடு நின்றுவிட்ட வெற்று ஆசை! நம்மைத் தூங்கவிடாமல் லட்சியத்திற்காக விழித்திருக்க வைப்பது தான் கனவு! இலக்கை நோக்கிய நம் முதல் பயணம்! இது கனவல்ல நிஜம்!

#
மகுட தாரிணி

உங்க மனசுக்கு தெரிஞ்சு யாருக்கும் கெடுதல் செய்யாதிங்க..... அப்போ நல்லாருக்கும்.... அதுவே உங்களுக்கு நடந்தாதான் அது எவ்ளோ பெரிய வலினு தெரியும்.....

#
Karuppasamy

வெற்றி என்னும் மர நிழல் தோற்கத் துணிந்தவனுக்கு - வெற்றி மரத்தின் நிழலைப் போன்றது! எப்போதும் தேவைப் படாது! வெயிலுக்கு உதவலாம் என்பதை ஏற்றுக் கொண்ட மனம்! மழைக்கு மரநிழல் ஆபத்து என்பதையும் ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்! அதைப் போல் தான் வெற்றியும்! எப்போதும் வெற்றியை தன் வசப்படுத்த விரும்பினால் இரவினிலும் மரத்தடியில் உறங்குவதைப் போன்றது! தோல்வி தான்  தன் குரல்வளையை நெறிக்கிறது  என நினைப்பது மாயை! உண்மையில், வெற்றியை அடையாமல் போய்விடுவோமோ என்ற பயம் தான்  நாம் நெறிக்கப் படுவதாக உணர்வதற்கு முக்கியக் காரணி! அதுவே உண்மைக் காரணி! அதனை ஆழ்ந்து நீ கவனி!

#
மகுட தாரிணி

இல்லாத ஒன்றுக்காக ஏங்கும் மனம் இருக்கும் ஒன்றை இழந்து விடுகிறது.. ஏங்காதே மனமே மாறிடும் எண்ணம் போல் மாறிடாது உன் வாழ்க்கை நீ தேடாமல் எதுவும் தேடிடாது உன்னை.. நீயின்றி உன்னை தொடராது நிழல்.. புரிதலின்றி உன்னை தொடராது அன்பு மாற்றமின்றி மாறிடாது உன் வாழ்க்கை..

#
கவிதையின் காதலன் ரவி

எல்லாமே கைய விட்டு போயிருச்சு..... காலம் பதில் சொல்லுமா இல்லை .... கண்ணீரோடு போய்சேருமா.......

#
Karuppasamy

ஆநாத்திகன் காசிக்கு போனானாம் கடவுள் உண்டு என்று ! பின் வீதிக்கு வந்தானாம் கடவுள் இல்லை என்று !

#
S Sankari

விட்டுக்கொடுத்தும் உணர்வுகளுக்கு மெருகூட்டியும் சில கசப்பான நினைவுகளை மறந்தும் வாழ்வது ஈரமில்லா மண்ணில் மழைத்தூரல் விழுந்தால் வரும் மண்ணின் வாசத்தைப்போல வாழ்வு இனிமை பயக்கும்.

#
Ilakkiya sri

தேட தேட தொலைந்திடும் பொக்கிஷம் - சந்தோசம்

#
Soundhariyan Jagan

ஆசைகளை மாற்றிக் கொள்ளதே.. அதை அடைவதற்கான வழிகளை மாற்றிக் கொள்.. மகிழ்ச்சியுடன் இருப்பதாக பொய் தோற்றம் கொள்ளாதே.. உனக்கான மகிழ்ச்சியை உருவாக்கி உருமாற்றம் கொள்..

#
கவிதையின் காதலன் ரவி

#எல்லாமே கைய விட்டு போயிருச்சு..... #காலம் பதில் சொல்லுமா இல்லை .... #கண்ணீரோடு போய்சேருமா.......

#
Karuppasamy

பேசும்பேசும் வார்த்தையை உன்னை காட்டும் நினைக்கும் நினைவே உன்னை ஆக்கும் செய்யும் செயலே உன்னை ஏற்றும் உண்மையை உணர்த்திடு உன்னை மாற்றும் புதுமையை புகுத்திடு உலகம் உனை நோக்கும் பதுமையாய் இருந்தாள் எதுவும் உன்னைத் தாக்கும் கோபத்தை அடக்கினால் அறிவாளி ஆவாய் பாவத்தை செய்தால் பராரி ஆவாய் நன்றி மறந்தவன் வஞ்சகன் ஆவான் நன்னெறி செய்தவன் தேவனே ஆவான் அனைத்தையும் இழந்தவன் மூடன் ஏமாற்றி பிழைப்பவன் கொடூர வேடன் சிந்தித்த சிந்தித்த மனிதனுக்கு வழி கிடைக்கும் சிரிக்கின்ற மனிதனுக்கு மனம் திறக்கும்

#
Palani Muthu

தன்னிறைவு இன்றைய இன்னல்களின் இணக்கமோ இவ்வாழ்க்கை? இல்லை... அல்லவே, அவையள்ளி அருளிய அனுபவம்! அதுவே, நம் அரண்! மகிழ்ச்சிகளால் மட்டும் மலர்வதா மனம்? மறுதலித்து... மனமதனைக் கடத்தும் கனமதனைக் களைவது! அதுவே, நமது குணம்! வரலாற்றை வளைப்பதா வாழ்வின் வழி! இருப்பினும்... நன்னம்பிக்கையை நம்பி நிலை நாட்டுவது, அதுவே, நமக்கான நற்பணி! எழிலரும்பி எத்தனித்தல் எள்ளலற்ற எல்லையென்பாரோ? ஆயின்... தோல்வியில் தழைத்த தவமதனை தகர்த்தெரிவாரா! அதுவே, திண்மையின் திடம்! தோல்விகளற்ற தோரணை தவமற்ற தன்னிறைவல்லவா? ஆனால்... தோல்விகளைத் தகர்த்தெரியும் திண்மை தன்னிறைவே! அதுவே, நம்முடைய தனித்தன்மை!

#
மகுட தாரிணி

vazhkai.... ni epodhu mudipaai unn paadathai innum evalavuhaan naan karkavendum⁉️‼️

#
Nisha Shiva

இந்த உலகம் என்னை பற்றி நான் சொல்லும் உண்மையை விட வேறொருவர் சொல்கிற பொய்யை தான் உண்மை என்று நம்புகிறது.. பொய்யை உரக்கச் சொல்வதால் உண்மையும் பொய் ஆகிறது..

#
கவிதையின் காதலன் ரவி

நினைத்த நேரத்தில் மனம் விட்டு பேசுவதற்கும்.. அன்பு காட்டுவதற்கும் ஒரு உறவு கிடைத்து விட்டால்.. வாழும் வாழ்க்கை சொர்க்கம் தான்... எல்லாமே இருந்தும் தனிமையை உணர்ந்தால்.. வாழும் வாழ்க்கை நரகம் தான்..

#
கவிதையின் காதலன் ரவி

உன்னோடு பிராயணம் செய்ய ஒரு காலி மனதை மட்டும் எடுத்து வைத்தேன்!....

#
Ramkumar

பெருமை என்பது உனக்கு தேவையானதை விட குறைவானது.. பெருந்தன்மை என்பது உன்னால் முடிந்ததை விட அதிகமானது.. தற்பெருமை என்பது செய்ததை விட அதிகமானது..

#
கவிதையின் காதலன் ரவி

தன்னிடம் இருப்பதை அறிந்து கொள்ளாமல் பிறரிடம் இருப்பதை பெற முடியாது.. அருகில் இருப்பவரின் அன்பை பெறாமல்.. தூரத்தில் இருப்பவரின் ஆறுதல் கிடைக்காது.. அன்பும், அரவணைப்பும் இல்லாமல் சந்தோசம் உன் வசமாகாது.. இவ்வுலகில் எங்கு தேடினாலும் நீ தேடியது உன்னை தேடாது..

#
கவிதையின் காதலன் ரவி

மனம் விரும்புவோருக்கு உணர்வையும் நேரத்தையும் பரிசாக கொடு.. அன்பை உணர்த்திட ஆயிரம் வார்த்தைகள் தேவையில்லை.. அரவணைக்கவும் ஆதரிக்கவும் நானிருக்கிறேன்.. என்ற ஒற்றைச் சொல்லே போதும்..

#
கவிதையின் காதலன் ரவி

பூவின் வாழ்க்கை உதிர்ந்து போனதும் முடிந்து போவதில்லை.. பூமாலையாய் பயணத்தை தொடரும்.. வாழ்க்கையும் அப்படிதான் ஏமாற்றத்துடன் முடிந்து போவதில்லை.. புதுமாற்றத்துடன் தொடரும்.. வாழ்க்கையில் வந்த ஏமாற்றம் நம்மை சிதைப்பதற்காக அல்ல.. புதியதாய் நம்மை செதுக்கி கொள்வதற்கு..

#
கவிதையின் காதலன் ரவி

உன் கிட்ட பேசற நேரம் கம்மி தான் but உன்ன பத்தி நினைக்கிற நேரம் ரொம்ப அதிகம் ....K.A..

#
Kannan Ashwini

இன்பமும், துன்பமும் வந்து போகும்.. கிடைத்ததும் ஒரு நாள் தொலைந்து போகும்.. பிடித்ததும் ஒரு நாள் வெறுத்தும் போகும்.. நிரந்தரம் என்பதும் இல்லாமல் போகும்..

#
கவிதையின் காதலன் ரவி

அறிந்ததை விட சக்தி வாய்த்தது அனுபவம்.. முடிவை விட கடினமானது தொடக்கம்.. கோபத்தை விட கூர்மையானது புன்னகை.. நடப்பதை விட கடப்பதே வாழ்க்கை..

#
கவிதையின் காதலன் ரவி

பொறாமைக் கொள்ளும் மனதிற்கெல்லாம் பொருந்தி போவதில்லை.. பொருத்தமற்ற இடத்திலும் என்னை பொருந்தி கொள்வதில்லை.. தலை குனிவை என் மனமும் ஏற்றுக்கொள்வதில்லை.. தலை நிமிர்ந்திட முடிவு செய்தால் மாற்றிக் கொள்வதில்லை.. முயற்சித்த இடத்திலும் தோல்வி கண்டதில்லை.. தோல்வியடைந்த போதிலும் சோர்ந்து போவதில்லை.. முடியாது என்பதை நான் கேட்டு வளர்ந்ததில்லை.. செய்யாதே இதையென்று சொல்லி வளர்த்தவில்லை.. பயமென்று எப்போதும் மனம் நினைப்பதில்லை.. பூ பூக்கும் பூஞ்செடியெல்லாம் பூத்து விடுவதில்லை.. மலர்ந்திருக்கும் மலரெல்லாம் வாசமானதில்லை.. மலர்ந்திடாமல் பூக்களும் உதிர்ந்து போவதில்லை.. காலம் கடந்தும் நினைவுகள் மறந்து போவதில்லை.. கடந்த விட்ட காலங்களும் திரும்ப போவதில்லை.. கடினமென்பதை வாழ்க்கையை காணாத வரையில்.. கண் காணாத கடவுளையும் நினைத்து பார்ப்பதில்லை..

#
கவிதையின் காதலன் ரவி

வாழ்க்கை போராட்டம் காலையிலேயே ஆரம்பமாகிறது....... ( காலியான tooth paste ல் இருந்து அமுக்கி paste எடுக்கும் முயற்சியில்.....)

#
Karuppasamy

ஏனுங்க... இந்த பாவப்பட்ட ஆண்கள் தினம் எப்பனு சொல்லுங்க......

#
Karuppasamy

மானிடனே உன் மனமெனும் புவியின் கடிவாளம் எங்கே! அத்துமீறி தேடலின் ஓடலில் நீ உருக்குலைந்து போவாய்!

#
ப.நித்திய பாரதி

யாரையும் எதிர்பார்த்து வாழ்ந்து விடாதே.. எழுந்து கொள்ளக் கூட துணை தேவை படும் பின்னால்.. யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதே சாதிக்க முடியாது உன்னால்.. எதிர் கொண்டு வாழ்ந்து பார் தடைகள் விலகி விடும் தன்னால்.. நன்னாள் வரும் என்று இன்நாளை நீ இழந்தால் நிழல் கூட துணை வராது உன் பின்னால்..

#
கவிதையின் காதலன் ரவி

துடிக்கும் இதயம் இடைவெளி இல்லாமல்.. இனிக்காது வாழ்க்கை துன்பம் இல்லாமல்.. நகராது வாழ்க்கை நினைவுகள் இல்லாமல்.. நிறையாது வாழ்க்கை கனவுகள் இல்லாமல்.. சலித்திடும் வாழ்க்கை சவால்கள் இல்லாமல்.. நிலைத்திடு எப்போதும் சோர்வு இல்லாமல்.. நிறைத்திடு மனதை கவலை இல்லாமல்.. வாழ்ந்திடு வாழ்க்கையை எதிரியே இல்லாமல்..

#
கவிதையின் காதலன் ரவி

வெற்றியில் பணிவை காட்டுவேன்.. தோல்வியில் பொருமையை கூட்டுவேன்.. எதிர்ப்பில் துணிவை காட்டுவேன்.. மனதில் நம்பிக்கை ஊட்டுவேன்.. இது தான், இப்படிதான் என்பதை கூட்டுவேன்.. எது எப்படியோ, அது அப்படிதான் என்பதை மாற்றுவேன்.. வாழ்க்கையில் செழிப்பை காட்டுவேன்..

#
கவிதையின் காதலன் ரவி

வாழ்ந்தவர் இழந்ததை நினைத்து பயனில்லை கடந்ததை வாழ்பவர் மறப்பது சரியில்லை.. கஷ்டமின்றி கடவுளின் நினைவு வருவதியில்லை கஷ்டம் என்றால் கடவுளின் நினைவின்றி வேறில்லை.. வீழ்ந்தாலும் நான் எழுவேன் என்றிருந்தால் வாழும் வாழ்க்கையில் வீழ்ச்சியில்லை வீழ்ந்து விட்டேன் எழுவேனா என்றிருந்தால் வாழும் வாழ்க்கையில் முயற்ச்சியில்லை.. முயற்சித்தால் வாழ்க்கை மலர்ந்திட வாய்ப்பிருக்கும்.. முயற்சியின்றி வாழ்க்கை வீழ்ந்திட தொடங்கிருக்கும்.. கஷ்டத்தில் கை கொடுத்தவர் துணை இருந்தால்.. கஷ்டம் கொடுத்தவர் மனதில் பயமிருக்கும்.. தோல்வி எனக்கில்லை என்ற நடை இருந்தால்.. கலக்கமில்லை எனக்கென்ற உறுதியிருக்கும்.. செய்த தவறை திருத்திக்கொள்ளும் மனமிருந்தால் உன்னை சூழ்ந்திருக்கும் சூழ்ச்சிக்கு தடையிருக்கும்.. இறைவன் தரும் கடினத்தை உணர்ந்திருந்தால் கஷ்டமதை கடந்து செல்ல வழியிருக்கும்.. வழி பிடித்து நேர் வழியில் கடந்து சென்றால் கடினமின்றி கடந்து செல்ல வழி பிறக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

உறவொன்று உறங்கியது உறவெல்லாம் விலகியது.. உதவி என்று கேட்கும் முன்பே உதவாமல் ஒதுங்கியது.. ரத்த பந்தம் யாரும் இல்லை வந்த பந்தம் கூடவில்லை.. தேடி வந்த சொந்தம் மட்டும் கூட நின்று ஓய்ந்தது.. தவித்தது நின்ற பெண் மனதை சோகம் மறைத்து நின்றது.. ஒதுங்கி நின்ற பெண் சொந்தம் ஒன்று கூடி அணைத்தது.. நாங்கள் இருக்கோம் உனக்கென்று ஒன்று கூடி நின்றது.. பணமில்லை பலமென்று புரிந்து கொள்ள செய்தது.. ஓடி சென்ற பாசமெல்லாம் வேசமென்று தெரிந்தது.. பணம் கொடுத்து வாங்கும் பொருள் பாசமாகி போனது.. கடன் வாங்கிக் கொடுத்த பொருள் கடனாகி போனது.. செய்து வந்த செயல் எல்லாம் காற்றாய் மறைந்து போனது.. செயல் மறந்த சொந்தம் எல்லாம் செயலிழந்து போகுது..

#
கவிதையின் காதலன் ரவி

எதுவும் இல்லாமல் பிறந்தேன்.. எல்லாம் வேண்டுமென்று அலைந்தேன்.. நிரந்தரமில்லை என்பதை அறிந்தேன்.. சொந்தமில்லை என்பதை உணர்ந்தேன்.. நொடி என்பதை கடந்தேன்.. வாழ்க்கை என்பதை புரிந்தேன்.. எதுவும் இல்லாமல் மறைந்தேன்..

#
கவிதையின் காதலன் ரவி

வாழ்க்கை ஒரு வலி நிறைந்த புத்தகம்.. அதை கடக்க முயன்றால் தான் படிக்கவும் முடியும் தொடரவும் முடியும்.. வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்.. வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்.. அர்த்தங்கள் ஆயிரம் உண்டு.. வலிகளை சுமந்து வழிகளை தேடும் பயணம்தான் வாழ்க்கை..

#
கவிதையின் காதலன் ரவி

ஏழை. கஷ்டமான வாழ்க்கையை துணிவுடன் கடப்பான் எதிர் கொள்ளும் மலையும் சிறு கல்லாய் உணர்வான்.. பணக்காரன். சொகுசான வாழ்க்கையை கஷ்டமாய் கடப்பான் கை பிடி மண்ணும் கனமென நினைப்பான்..

#
கவிதையின் காதலன் ரவி

மறந்து விட்டேன் தவறை மன்னிக்க கற்றுக் கொண்டதால்.. மன்னித்து விட்டேன் உன்னை கோபத்தை மறந்து விட்டதால்.. இழந்து விட்டேன் கோபத்தை பொறுமையை கற்றுக் கொண்டதால்.. மன்னிப்பையும், கோபத்தையும் பொறுமையுடன் கடைப்பிடித்தேன்.. நிழலான நிம்மதியை நிஜமாக்கி கொண்டதால்..

#
கவிதையின் காதலன் ரவி

நம்பிக்கையில்லாத உறவில் உறுதி இருக்காது.. உணர்வில்லாத உறவில் உண்மையிருக்காது.. பணமிருக்கும் உறவிற்கு மனமிருக்காது.. உதவிட மனமிருந்தால் உறவிருக்காது.. தேடிவரும் சொந்த பந்தம் இனியிருக்காது.. தேவைக்காக தேடும் சொந்தம் துணையிருக்காது.. சொந்தமென்று சொல்லிற்கு பந்தமிருக்காது.. தேவை பணம் என்றிருந்தால் பேசும் பேச்சில் குறை இருக்காது.. தேவையில்லை நீ என்றால் பேச்சில் கூட அன்பிருக்காது..

#
கவிதையின் காதலன் ரவி

சந்தோஷமாக இருக்கையில் இன்பமாக! சோகமாக இருக்கையில் துன்பமாக! என்னுடன் பயணிக்கும் நண்பன் தொலைத்தூரப்பயணமே! இந்த வாழ்க்கை! வாழ்க்கை என்னவென்று உணரும் போது வயோதிகம்வந்திடவே!பல கேள்விகள் விடைக்காண பதிலாக .பழைய உறவுகள் மறைந்து புதிய உறவுகள் மலர!வாழ்க்கையிடம் வாழ்க்கை என்னவொன்றேன்!வாழ்ந்துப்பார் !நாளைய விடியல் எனதானதே

#
PREETHI KARTHIK

சிரிப்புடனே கண்ணீரை மறைத்து கொள்ள வேண்டும்.. கண்ணீரோடு கவலைகளை துடைத்து கொள்ள வேண்டும்.. அழுதாலும் உன் சுமையை நீயே சுமக்க வேண்டும்.. அழுகையுடன் சுமக்கும் பாரம் கொஞ்சம் கூட இருக்கும்.. சிரிப்புடனே சுமக்கும் பாரம் மறைந்து, குறைந்திருக்கும்.. சுமந்து செல்ல முடிவு செய்தால் மனதில் உறுதி பிறக்கும்.. கலக்கத்துடனே இருந்து விட்டால் கடின வாழ்வு நிலைக்கும்.. துணிவுடனே இணைந்தால்தான் நினைத்த வாழ்க்கை கிடைக்கும்.. தளராத மனம் இருந்தால் சிந்தனை செயல் செழிக்கும்.. சோதனையை கடந்தால்தான் சொர்க்க வாழ்வு கிடைக்கும் .. என்ற உண்மையை உணர்ந்தால்தான் காலம் உயர வைக்கும்.. இந்த உலகம் உன்னை மதிக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

நிலுவையில் தான் உள்ளது நிதான மற்ற வார்த்தைகளால் வந்த பிரச்சனையால் நீதிமன்றத்தில் நா உத்ரா

#
Uthirapathi Umapathi

ஏமாந்து விட்டோமே என்று முடங்கி போவதில்லை வாழ்க்கை.. ஏமாந்தவன் ஏமாற்றியவனை விட உயர்ந்து காட்டுவதே வாழ்க்கை.. நடந்ததை நினைத்து குறுகிப் போவதில்லை வாழ்க்கை.. இருப்பதை வைத்து கடந்து போவதே வாழ்க்கை.. வெறுப்பவருடன் ஒன்றி போவதில்லை வாழ்க்கை.. விருப்புவருக்கு நிழலாக இருப்பதே வாழ்க்கை.. மறு முறை திரும்பாது உன் வாழ்க்கை.. மீட்டெடுத்து அமைத்திடு புது வாழ்க்கை..

#
கவிதையின் காதலன் ரவி

வாழ்க்கையில் நடப்பவை நன்மைக்கே என்றுணர்ந்தால்.. மலரும் பொழுது கடினமில்லை என்பதுணரும்.. வாழ்க்கையில் முடியாது என்றதை முயற்சிக்காதது என்றுணர்ந்தால்.. முயற்சிக்கும் பாதையில் கவனம் கல்லெறிபவர் மீதிருக்க வேண்டும் என்பதுணரும்.. வெற்றி எனக்குதான் என்றுணர்ந்தால்.. தோல்வி இனியில்லை என்பதுணரும்.. முயற்சிகள் யாவும் வானுயர்ந்தால். கல்லெறிந்தவர் ஓய்ந்து போவதை கண்ணுணரும்..

#
கவிதையின் காதலன் ரவி

ஒரு பெண் பள்ளி பருவத்தின் கற்ற பாடத்தை விட இந்த வாழ்க்கை என்னும் பாடத்தை படிக்க முடியவில்லை ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை என்பது தன்னை சார்ந்ததல்ல அடுத்தவரை தான் பார்த்து கடந்து செல்கிறது இந்த வாழ்க்கை ....

#
suvi

அவரவர் வாழ்க்கை பயணத்தில் அவரவரே பயணித்தாகவேண்டும் ஆதலால் அவரது ஆசைகளை நீங்கள் தீர்மானிக்காதீர்கள் அவர்களே தேர்ந்தெடுக்கட்டும்

#
Ram siva

ஒருவரின் நற்செயலை பாராட்டத்தெரியாத எவராலும் அவர்களின் குறைகளை சுட்டிக்காட்ட தகுதியற்றவர்களாக மாறிவிடுகின்றனர்

#
Ram siva

ஆறுதல் சொல்லதற்கு வாழ்வில் ஒருவரை தேர்ந்தெடு அதுபோதும் என்றும் நீ! மகிழ்வாய் வாழ்வதற்கு

#
Ram siva

காலமெல்லாம் அன்புக்கரம் நான் தருகிறேன் ஆதரவுக்கரம் நீங்கள் தருவீர்களா இப்படிக்கு அனாதை

#
Ram siva

குழந்தையாகவே இருந்திருக்கலாமென காலம் கடந்தபின்பு "வாழ்க்கை" உணர்த்துகிறது

#
Ram siva

ஒவ்வொரு நொடியும் புது பொலிவாய் பிறக்கும்.. மாறும் நொடி தோறும் வாய்ப்புகள் இருக்கும்.. பயன் படுத்தாத வாய்ப்பெல்லாம் திசையிழந்து இருக்கும்.. பயன் படுத்தாமல் வாழ்க்கையும் ஒளியிழந்து இருக்கும்.. நொடி மாறும் போதெல்லாம் விழி மூடி இருந்தால்.. வலு விழந்த வாழ்க்கை நடையிழந்து போகும்..

#
கவிதையின் காதலன் ரவி

அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அழுவதும் வாழ்க்கையில் வரும் தொடர்ச்சி.. கஷ்டமும் நஷ்டமும் வருவதும் போவதும் கடவுள் தரும் பயிற்சி.. மகிழ்ச்சிகள் தொடர்வதும், நிகழ்ச்சிகள் நடப்பதும், வாழ்க்கையில் வரும் சுழற்சி.. கிடைக்கும் மகிழ்ச்சியை செலவு செய்திடு மீண்டும் திரும்பாது புத்துணர்ச்சி..

#
கவிதையின் காதலன் ரவி

சில செயல்களை செய்யும் போது தான் சிரிப்பு.. செய்த பின் கடைசியாக வருதே தவிப்பு.. சில சொற்களை சொல்லும் போது தான் மதிப்பு.. சில சொற்களை உள்ளத்தில் மறைத்து வைப்பதே சிறப்பு.. அன்பான சொல்லில் எப்போதுமே ஈர்ப்பு.. அது தான் துன்பத்தை விலக்கும் செழிப்பு.. இல்லாததை அடைவதில் இல்லை களிப்பு.. இருப்பதை உணர்தலே பங்களிப்பு.. வாழ்க்கையை உணர்ந்து கொள்வதே வாய்ப்பு.. அதை பயன் படுத்தி கொள்வதே செழிப்பு..

#
கவிதையின் காதலன் ரவி

வாழ்ந்திடும் வாழ்க்கை நிலையற்றது.. அதில் கொண்டிடும் ஆசை அளவற்றது.. மனம் தேடும் இன்பம் குறைவற்றது.. கிடைத்திடும் காலம் குறைவுற்றது.. அதில் கொண்டிடும் கோபம் நிலையற்றது.... வாழ்க்கையில் பயமே தேவையற்றது.. கஷ்டத்தின் நினைவுகள் இனிமையற்றது.. கனவுகள் இல்லாத உயிர்கள் உணர்வற்றது.. உண்மை இல்லாத உறவுகள் உயிரற்றது.. காதலின் கனவுகள் கணக்கற்றது.. கடந்த கால நினைவுகள் நினைவுற்றது..

#
கவிதையின் காதலன் ரவி

மீண்டும் ஒருமுறை முயன்று பார்க்கலாம் வா.......

#
Kavi

இலை உதிர்ந்தாலும் மரம் போல் நிமிர்ந்து நிற்க வேண்டும்.. உதிர்ந்த இடத்தில் புது இலையை மலர்த்தி கொள்ள வேண்டும்.. இழந்த இழப்பில் மனம் தளராமல் நிமிர்ந்து கொள்ள வேண்டும்.. இழப்பு என்பதில் வீழ்ந்து விடாமல் மலர்ந்து கொள்ள வேண்டும்.. தனித்து நின்று போராட துணிவு கொள்ள வேண்டும்.. முடியும் என்று முடிவோடு இணைந்து கொள்ள வேண்டும்.. கடந்து போன வாழ்க்கையை மறந்து போக வேண்டும்.. தனக்கென்று புது வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.. பணம் இருக்கும் சொந்தங்களை புறம் தள்ள வேண்டும்.. மனம் இருக்கும் சொந்தத்தோடு துணை கொள்ள வேண்டும்.. கைப்பிடித்து கடந்திட துணையொன்று வேண்டும்.. தலை சாய்த்து கொள்ளவும் தோள் ஒன்று வேண்டும்.. நான் இருக்கேன் உனக்கென்று குரல் ஒன்று வேண்டும்..

#
கவிதையின் காதலன் ரவி

உயர்வோம் உயரமாய் உண்மையின் உழைப்பில்.. விலகட்டும் சோதனை விரிவான சிந்தனையில்.. வாழ்க்கையே செழிக்கும் நேர்மையான எண்ணத்தில்.. ஒன்றினைந்தால் இது மூணும் ஒளி வீசும் எதிர் காலத்தில்..

#
கவிதையின் காதலன் ரவி

தலை நிமிர்ந்து நடந்திடு தலை குனிவை தடுத்திடு.. பேச்சில் தெளிவை வைத்திடு கண்ணை பார்த்து பேசிடு.. தயக்கத்தை முதலில் நிறுத்திடு எளிமையாக வாழ பழகிடு.. உடையை சரியாய் உடுத்திடு கிழிந்த உடையை தவிர்த்திடு.. தினமும் கடவுளை வழிபடு கூனி குறுகாமல் முறையிடு.. மனதில் பட்டதை பேசிடு உன் கருத்தை மறைக்காமல் சொல்லிடு.. மனதிற்கு சரி என்றால் செய்திடு.. கூட்டத்தில் ஒளிவதை தவிர்த்திடு வளைந்து கொடுப்பதை நிருத்திடு உழைத்து சாப்பிட நினைத்திடு..

#
கவிதையின் காதலன் ரவி

காலம் கடந்துதான் போகும்.. நாம் கவலையில் இருந்தாலும் சந்தோசத்தில் மிதந்தாலும்.. காலம் கடந்துதான் போகும் நாம் தேடியது கிடைத்தாலும் விரும்பியது பிரிந்தாலும்.. காலம் கடந்துதான் போகும்.. நாம் காயப்பட்டாலும், காயப்படுத்தினாலும்.. காலம் கடந்துதான் போகும்.. நாம் அழுதாலும், சிரித்தாலும் நாம் வாழும் வாழ்க்கையில் காலம் திருப்பாது, மறு வாய்ப்பும் தராது காலம் கடந்துதான் போகும்.. எனவே நாம் நிகழ்கால வாழ்க்கையின் காலத்தை சந்தோசமாக வாழ்வோம்..

#
கவிதையின் காதலன் ரவி

ஆசையை அடக்கி வாழணும்.. வாழ்க்கையை உண்மையாய் வாழணும்.. சிரமத்திலும் சிரித்து வாழணும்.. குறைவாக இருந்தாலும் கொடுத்து வாழணும்.. குறையற்ற குணத்தோடு நிலைத்து வாழணும்.. குறையாத அன்போடும் செழித்து வாழணும்.. ஆயுள் முழுதும் அன்புடன் கூடி வாழணும்.. கைகோர்த்து உன்னுடன் குடும்பமே வாழணும்.. நீ வாழும் பூமியில் சொர்க்கத்தை காணனும்..

#
கவிதையின் காதலன் ரவி

பணம் வாங்கி சென்றவனை தலை மறைவு ஆக்கிடும்.. தேக்கி வைத்துக் கொண்டவனின் நிம்மதியை குலைத்திடும்.. தேடி அலைந்தவனுக்கு கிடைக்காமல் போய்விடும்.. பேரழகுப் பெண்களையும் தேடி வர வைத்திடும்.. அண்ணன் தம்பி உறவிடம் சண்டையை தூண்டிடும்.. மணம் முடிக்க பெற்றோரை கடனாளி ஆக்கிடும்.. ஒரு வேளை உணவுக்கும் கையேந்த வைத்திடும்..

#
கவிதையின் காதலன் ரவி

கடவுள் நாம் செய்த நன்மையை வாழ்க்கையின் வரவாகவும்.. நாம் செய்த கெடுதலை வாழ்க்கையின் கடனாகவும் வைப்பார்.. கெடுதலால் உண்டான கடனை அடைக்காமல் வாழ்க்கை முடியாது என்பதை தீர்வாய் வைப்பார்..

#
கவிதையின் காதலன் ரவி

சந்தோசமாக வாழ்ந்து பார் சோகம் உன்னை நெருங்க பயப்படும்.. சிரித்து வாழ்ந்து பார் துயரங்கள் உன்னை நெருங்க பயப்படும்.. சிந்தித்து வாழ்ந்து பார் பொய்கள் உன்னை நெருங்க பயப்படும்.. உழைத்து வாழ்ந்து பார் தோல்வி உன்னை நெருங்க பயப்படும்.. மனதோடு வாழ்ந்து பார் கவலை உன்னை நெருங்க பயப்படும்.. காதலோடு வாழ்ந்து பார் மரணம் உன்னை நெருங்க பயப்படும்.. ஒன்றிணைந்து வாழ்ந்து பார் உலகம் உன் கையில் என்பது புலப்படும்..

#
கவிதையின் காதலன் ரவி

எப்படி பேச வேண்டும் என்று கற்றுத் தரும் உலகம்.. ஏங்கு பேசாமல் இருக்க வேண்டும் என்று கற்றுத்தரும் வாழ்க்கை..

#
கவிதையின் காதலன் ரவி

வாழ்க்கையில் என்னுடைய மனக்கதவை தட்டி புகுந்து விட்ட சிலரை பிடிக்காது ஆனாலும் விலக முடியவில்லை.. சிலரை ரொம்ப பிடிக்கும் இருந்தாலும் நெருங்க முடியவில்லை..

#
கவிதையின் காதலன் ரவி

பணம் வந்தால் குணம் மாறும் சொந்தம்...​ பணம் இருந்தால் பாசம் கொள்கிறது..​​​​​​​ இல்லாதவரிடம் மாற்றம் கொள்கிறது.. பாசம் இருப்பது போல் வேசம் கொள்கிறது.. தேவை இருந்தால் பதிவிறக்கம் செய்து கொள்ளும் என்னை.. தேவை முடிந்ததும் தரவு நீக்கம் செய்கிறது..

#
கவிதையின் காதலன் ரவி

நலமா என்ற விசாரிப்பும் பணம் இருந்தால் பலமா இருக்கும்.. பணத்திற்கும், பதவிக்கும் தனி தனியா மதிப்பிருக்கும் .. இவையின்றி நீ இருந்தால் உறவுகள் குறைந்திருக்கும் சொந்தம் என்ற உறவுடன் இடைவெளியும் தொடங்கியிருக்கும்.. பணம் இல்லை என்றாலே பாசமெல்லாம் மறந்திருக்கும்.. பணமின்றி உனையும் தான் துணையின்றி வைத்திருக்கும்.. உறவென்று சொல்ல கூட பணத் தேவை புரிந்திருக்கும்.. எது வேண்டும் என்றாலும் பணம் என்று உணர்ந்திருக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

குறையில்லா வாழ்க்கை அமைந்திட கேட்டேன்.. ஓய்ந்து விடாத நினைவு நிலைத்திட கேட்டேன்.. செவி மயங்க தமிழ் எங்கும் ஒலித்திட கேட்டேன்.. மேகத்தை வலைக் கொண்டு பிடித்திட கேட்டேன்.. நித்திரையில் உன் முகம் நிலைத்திட கேட்டேன்.. விரும்பாத என்னையும் விரும்பிட கேட்டேன்.. முடியாத ஒன்றை முடித்திட கேட்டேன்.. தொட்டிலில் தாலாட்ட நிலவதை கேட்டேன்.. இரவில் குளிர்காய சூரியனை கேட்டேன்.. விண்மீனை பிடித்திட மீன் வலை கேட்டேன்.. இறைவனிடம் பேச நேர்காணல் கேட்டேன்.. நேரம் குறையாத நாளொன்று கேட்டேன்.. அன்பு குறையாத துணையொன்று கேட்டேன்.. போதும் எனும் மனமே போதும் என கேட்டேன்.. மறுக்காத மனமொன்றை தந்திட கேட்டேன்.. பிணியின்றி வாழ்ந்திட வரம் ஒன்று கேட்டேன்.. உறவுகள் ஒன்றாக உறவாட கேட்டேன்.. இறைவன் கணக்கை மறந்திட கேட்டேன்.. காலன் வரவை நிறுத்திட கேட்டேன்.. விதியை மாற்றிட ஒரு வரம் கேட்டேன்.. எல்லா உயிர்க்கும் உணவினை கேட்டேன்.. சிந்தனை செழிக்க ஒரு மனம் கேட்டேன்.. நிலை சாயும் நேரத்தில் உன் மடி கேட்டேன்.. நெஞ்சத்தில் தாலாட்ட உன்னிடம் கேட்டேன்.. இரவோடு உறவாட உன் துணை கேட்டேன்.. கண் மூடி சாய்ந்திட நெஞ்சமதை கேட்டேன்.. பூ உதடு உரசிட முத்தம் ஒன்று கேட்டேன்.. வேறு எதுவும் கேட்காதிருக்க என் அருகில் உனை கேட்டேன்..

#
கவிதையின் காதலன் ரவி

காலம் எதையும் மறக்க வைப்பதில்லை.. ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை பழக வைக்கிறது.. இளமையில் சாதிக்க நினைத்ததை முதுமை வரை பல சோதனைகளை கடந்து சென்று சாதித்து கொள்கிறது.. காலூன்றி நடக்கும் போது புரியாத வாழ்க்கையை.. கோலூன்றி நடக்கும் போது புரிந்து கொள்கிறது..

#
கவிதையின் காதலன் ரவி

கன நேரத்தில் குணம் மாறும் நெஞ்சம்.. பணம் இருந்தால் நிறம் மாறும்.. தேவை இருந்தால் தேனாக பேசும் மனம்.. தேவை முடித்ததும் தேளாக மாறும்.. அன்பாய் தொடங்கிய உறவு.. பணமின்றி வெறுப்பாய் மாறும்..

#
கவிதையின் காதலன் ரவி

பணத்திற்கு வந்த பாசம் பாதி வரை உடன் இருக்கும்.. நான் இருக்கேன் உனக்கென்று வெளித்தோற்றம் கொண்டிருக்கும்.. சொல் செயலில் தேன் குழைத்து பார்ப்பவரை மயக்கியிருக்கும்.. பிறர் மனதில் இடம் பிடிக்க திட்டங்களும் தீட்டிருக்கும்.. குறை கூறி அடுத்தவரை தடை செய்ய காத்திருக்கும்.. ஆழ்மனதில் வன்மங்களும் திடமாக சூழ்ந்திருக்கும் தெரிந்து செய்த தவறுகளையும் சரி என்று சூளுரைக்கும்.. செய்த தவறு யாருக்கும் தெரியாது என்றிருக்கும்.. கேட்டதெல்லாம் கிடைக்கும் வரை பாகற்காயில் சுவை இருக்கும் கிடைக்காது என்று உணர்ந்தால் தேன்கூட சுவை இழக்கும்.. கால நேரம் வரும் போது பொய் வேஷம் கலைந்திருக்கும்.. கஷ்டங்கள் பின் தொடர புது நோக்கம் கொண்டிருக்கும்.. தவறுக்கு தண்டனை தர கர்மாவும் உடன் இருக்கும் .. கடமையாற்ற கண்ணியமாய் நேரம் வர காத்திருக்கும் ..

#
கவிதையின் காதலன் ரவி

பணம் வந்தால் குணம் மாறும்.. தினம் அதுதான் இடம் மாறும்.. கண நேர நிழல் போல தினம்தோறும் அது மாறும்.. தேவைகளும் தேடி வரும் தேவையற்ற பேச்சும் வரும்.. கண்ணெதிரே கண்டதெல்லாம் பொய் என்று சொல்ல வரும்.. சொன்ன சொல்லும் இடம் மாறும் பொய்க்கதையின் நிலை மாறும்.. காலம் மாறும் நிலையும் வரும் மாறிய முகமெல்லாம் தெரியவரும்.. உண்மை முகத்தை பிடிக்காமல் சங்கடங்கள் தேடி வரும்.. வாழ்ந்த வாழ்க்கை பொய் என்று தலைகுனிவை தேடி தரும்..

#
கவிதையின் காதலன் ரவி

ஒவ்வொரு நாளும் புது, புது மாற்றத்தோடு தொடங்கும் வாழ்க்கை.. அன்பு, மகிழ்ச்சி, கவலை காதல்,மோதல், துரோகம் என்பதையெல்லாம் அறிந்து கொள்ளும் முன்பே முடிந்து விடுகிறது..

#
கவிதையின் காதலன் ரவி

பயணம் தொடங்கிய நேரத்தை அறிந்தேன்.. பயணம் முடியும் தூரம் தெரியாமல்.. கடந்த போக வழிகள் அறிந்தேன்.. முடிய போகும் இடம் தெரியாமல்.. கடந்து வந்த பாதையை அறிந்தேன்.. முடிய போகும் நேரம் தெரியாமல்..

#
கவிதையின் காதலன் ரவி

பணம் செந்தேனில் குழைத்த சொந்தத்தை குலையவும் செய்யும் மனம் முறிந்த சொந்தத்தை இளகவும் செய்யும்..

#
கவிதையின் காதலன் ரவி

புரிதல் இல்லாத மனதில் அன்பு இருக்காது.. அன்பு இருக்கும் மனதில் ஆணவம் இருக்காது.. ஆணவம் இருக்கும் இடத்தில் நிம்மதி இருக்காது.. பொறுமை இருக்கும் இடத்தில் பொறாமை இருக்காது.. பொறாமை இருக்கும் இடத்தில் நிம்மதி இருக்காது.. இதை எல்லாம் புரிந்த கொள்ளும் போது மனிதனிடம் வாழ்க்கை இருக்காது..

#
கவிதையின் காதலன் ரவி

புரிதல் இருந்தால் கோபமும் அர்த்தமாகும்.. புரிதலில்லா அன்பிருந்தால் அர்த்தமும் கோபமாகும்.. உறவுக்குள் பணம் வந்தால் பாசம் மறைந்து போகும்.. பாசத்தில் குறை இருந்தால் பணம் வந்தால் தீரும்.. அழையாதோர் வாசல் வந்தால் மதிப்பு கரைந்து போகும்.. தவறான வசைச் சொல்லும் காதில் கேட்க வேணும்.. பொருந்தாத இடம் என்றால் விலகி செல்ல வேணும்.. தேவையில்லை என்பவரின் தேவை குறைக்க வேணும்.. தேவையானவர் மனதில் மட்டும் அன்பை குவிக்க வேணும்.. தேடி வரும் தேடலிலே உள்ளம் குளிர வேணும்.. போதும் என்ற தேவையில் வாழ்க்கை தொடர வேணும்.. தேடி செல்லும் இடமெல்லாம் உள்ளம் குளிர வேணும்.. நினைக்காத நேரத்திலும் உன்னை நினைக்க வேணும்.. உன் நிழலாய் என் உருவம் பின் தொடர வேணும்..

#
கவிதையின் காதலன் ரவி

அன்பை தருபவர்களை விட அனுபவத்தை தருபவர்கள் தான் வாழ்க்கையில் அதிகம்.. சோகங்களும் வலிகளும் அனைவரது வாழ்விலும் உண்டு அவற்றை மறந்து வாழவேண்டுமே தவிர மறைத்து வாழக்கூடாது அன்று உனக்காக சிரித்தவர்கள், இன்று உனக்காக அழுதால்.. நீ வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமானது அடுத்தவரை ஈர்ப்பதற்காகவும்!! அடுத்தவரின் எண்ணங்களுக்காகவுமே இங்கு பலரின் வாழ்க்கை நகருகிறது !!! ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்காத பாடத்தை வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் அந்த பாடத்தை கற்க மறுத்தால் வாழ்க்கை கடினமாகும் இரு பக்கமும் கூர்மையான கத்தியை கவனமாக பிடிக்க வேண்டும்.. அதுபோல, எந்தப் பக்கமும் சாயக்கூடிய மனிதர்களோடு கவனமாக பழக வேண்டும்..! கடலில் கல் எறிந்தால், கடலுக்கு வலிப்பதில்லை மாறாக, கல் தான் காணாமல் போகும்.. அதுபோல, வாழ்வில் விமர்சனங்கள் வந்தால்.. கடலாக இருங்கள், வலிகள் காணாமல் போகும்.. வாழ்க்கையை வாழும் போதே ரசித்து வாழுங்கள் ஏனென்றால் எப்போது எதை இழப்போம் என்பது நமக்கே தெரியாது வாழ்க்கை என்பது உனக்கான இடத்தை தேடுவது அல்ல உனக்கான உலகத்தை உருவாக்குவது மனமும் கண்ணாடியை போல்தான் உடையும் வரை யாரையும் காயப்படுத்துவதில்லை யாருக்காகவும் காத்திருக்காதே நீ காத்திருப்பதால் உன் ஆயுள் அதிகரிக்கபோவதில்லை. @ நம்மை யார் என்று நமக்கே தெரியப்படுத்த தேவைப்படும் ஒன்று தான்.. அவமானம். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள் அணை உடைத்த நீர் அழிவையே தரும் மனம் உடைந்தவார்த்தை இழிவையே தரும் வாழ்க்கையில் நீ தடுக்கி விழுந்தால் தூக்கிவிட யாரும் வர மாட்டார்கள் ஆனால் நிமிர்ந்து நீ நடந்தால் தடுக்கிவிட பலரும் இருப்பார்கள் வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க முடியாத வாழ்க்கைப் பாடத்தை ஒரு சில தோல்விகள் நமக்கு கற்றுக்கொடுத்துவிடும் வாழ்க்கையில் வலிகளை அனுபவித்தவர்கள் காட்டும் வழிகள் எப்போதும் சிறந்ததாகவே இருக்கும் இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டும் என்ற கவலை சிலருக்கு வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ என்ற கவலை சிலருக்கு நேசிக்க யாரும் இல்லை என யோசிக்க வைக்கிறது வாழ்க்கை நேசிக்க அன்பு வரும்பொழுது அதை நினைக்க மறந்துவிடுகிறது போராடி வாழ்வதற்கு வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல அது பூ வனம் ரசித்து வாழ்வோம் யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டு அது தெரியாத வரை அனைவரும் நல்லவர்களே இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான் வாழ்க்கை என்னும் நதியின் இருபுறமும் இருப்பது கரை என்னும் நம்பிக்கை அதில் பீறிட்டு ஓடுகிறது விதி என்னும் வேடிக்கை தனக்கு உண்மையாக இருக்கும் ஒருவனுக்கு யாருடைய உபதேசமும் தேவையில்லை தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவும் இல்லை அன்பை தருபவர்களை விட அனுபவத்தை தருபவர்கள் தான் வாழ்க்கையில் அதிகம் காணாமல் போனவர்களை தேடலாம் அதில் சிறிதும் தவறு இல்லை கண்டும் காணாமல் போனவர்களை மட்டும் உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே வாழ்க்கை என்றுமே அழகானது தான் உங்கள் மனம் சொல்வதை மட்டுமே கேட்டால் வாழ்க்கை வாழ்வதில் இல்லை, நம் விருப்பத்தில் இருக்கிறது வெற்றி பெற்றவர்கள் தோல்விக்காக காத்திருக்கிறார்கள் தோல்வி கண்டவர்கள் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள் இதுதான் வாழ்க்கை எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு நம்மை நாம் கேள்வி கேட்காதவரை நம் தவறுகளை நாம் உணரபோவதில்லை நிறைய பேர் செல்வதால், அது நல்வழி என்று பொருளல்ல. ஒருவனின் தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம் நம்மீது நம்பிக்கை நமக்கு இருக்கும் வரை நம் வாழ்க்கை நம் வசம் நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ள பலரை நாம் கடந்து செல்ல வேண்டும் விரும்பியதைப் பெற காசிருந்தால் மட்டும் போதாது பொறுமையும் வேண்டும் தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை செய்யும் தவறு வெளியே தெரிய கூடாது என்றே பயப்படுகிறார்கள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை எதையும் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள் சூழ்நிலை எதுவாயினும் உன்னை நம்பி வந்தவரை ஒரு நாளும் ஏமாற்றாதே விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள் விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள் இவை தான் மனிதனின் எண்ணங்கள் யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே உனக்காக தன்னையே மாற்றிக் கொள்ளும் ஒருவரையும் என்றும் கைவிடாதே உன்னை மதிக்காத இடத்தில் பிணமாக கூட இருக்காதே வாழ்க்கையில் வெற்றி அடைய முக்கியமான மந்திரம் உனது ரகசியங்களை யாரிடமும் பகிராதே நமக்கு பிடித்ததை தான் நாம் செய்ய வேண்டுமே தவிர அது மற்றவர்களுக்கு பிடிக்குமா என்று யோசிக்க கூடாது உண்மையும் நேர்மையும் பயம் கொள்ளாது மாறாக மரியாதை தந்து பழகும் பிடித்ததைப் பறித்துப் பிடிக்காததை கொடுத்து சந்தோஷமாக வாழ் என்று சொல்லி சிரிக்கிறது வாழ்க்கை வாழ்க்கையில் பல வலிகளும் உண்டு பல வழிகளும் உண்டு வலியை மறந்து புது வழியை கண்டுபிடியுங்கள் வாழ்க்கை சுகமாகும் விதியை நம்பிக்கொண்டு இருப்பவன் என்றும் விழிக்க மாட்டான் தன்னம்பிக்கையோடு இருப்பவன் என்றும் தோற்க மாட்டான் தேவை இல்லாமல் பேசுவதை விட மெளனமாக இருப்பதே சிறந்தது நம் மனதை புரிந்துகொள்ளாத ஒருவர்க்கு நாம் பேசும் வார்த்தைகளும் புரியாது எல்லா தத்துவங்களும் இளமையிலே வாசிக்கக் கிடைக்கிறது ஆனால், அதை பின்பற்ற முதுமை வரை போராட வேண்டியிருக்கிறது. வலிகளை மறக்க வழி கிடைத்தால் விழி திறந்து அந்த வழியில் செல் வலிகளால் என்றும் வாழ்க்கை இனிக்காது சிரிக்கும் போது வாழ்கையை வாழ முடியும் ஆனால் அழும் போது மட்டுமே வாழ்கையை புரிந்து கொள்ள முடியும் குணத்தைப் பற்றி சொல்ல ஆள் இல்லை குறை சொல்ல ஊரே உள்ளது நம் பயம் எதிரிக்கு தைரியம் நம் அமைதி அவனுக்கு குழப்பம் குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் ஜெயித்ததில்லை எண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாக மாறும் வாழ்க்கையில் வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு ஆனால் வேடிக்கை மட்டும் பார்த்தவனுக்கு ஒரு வரி கூட கிடையாது எனவே, பேசுவதை விட செயலில் காட்டுங்கள் அதிக வலிகளை கண்ட உள்ளம் வாழ்க்கையில் நல்ல வழிகாட்டியாக இருக்கும் உழைத்த காசிற்க்கு மட்டும் கையேந்து மற்ற எதற்கும் எவரிடமும் கையேந்தாதே கற்பனை என்ற போர்வையில் ஒளிந்திருக்கின்றன நம் நிறைவேறாத ஆசைகள் வலிமை உள்ளபோதே சேமிக்க பழகு கடைசியில் யாரும் கொடுத்து உதவமாட்டார்கள் துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும், துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும் என்ன நடந்தது என்பதை விட அதை நாம் எப்படி எடுத்துக்கொள்ளுகிறோம் என்பதே வாழ்க்கை தூய எண்ணம் கொண்டிருங்கள் ஏனெனில் எண்ணத்தின் பிரதிபலிப்பே வாழ்க்கை அலட்சியம் என்பது எவ்வளவு பெரிய தவறு என்று இழப்பு ஏற்படும் வரை தெரிவதில்லை உன்னைத் தாழ்த்துபவர் முன் உயர்ந்து நில் உன்னை வாழ்த்துபவர் முன் பணிந்து நில் வாழ்க்கை என்றுமே அழகானது தான் உங்கள் மனம் சொல்வதை மட்டுமே கேட்டால் வலி தாங்கும் மனமிருந்தாலே போதும் வாழ்க்கை முழுவதும் சிரித்து மகிழலாம் வாழ்வின் அர்த்தமும் நோக்கமும் மகிழ்ச்சி ஒன்றுதான் அதிக வலிகளை கண்ட உள்ளம் வாழ்க்கையில் நல்ல வழிகாட்டியாக இருக்கும் தனக்கு வலிக்கும் வரை மற்றவர்களின் வலி என்பது நமக்கு ஒரு தகவலே வாழ்க்கையை வாழும் போதே இரசித்து வாழுங்கள் சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை குறைவாய் பேசுதலும் மௌனமாய் இருப்பதும் தலைசிறந்த தற்காப்பு வாழ்வில் வெற்றியும் நிரந்தரம் அல்ல தோல்வியும் நிரந்தரம் அல்ல போராட்டம் ஒன்றே நிரந்தரம் வாழ்க்கையில் மேடும் இருக்கும் பள்ளமும் இருக்கும் நாம் தான் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் நாம் உணர்ந்து விரும்பி செய்யும் காரியங்கள் மட்டுமே, நம் வாழ்க்கையை அழகுபடுத்தும்! மற்றவருக்கு பயப்படும் படி வாழ்வதல்ல வாழ்க்கை மற்றவர்க்கு பயன்படும் படி வாழ்வதே வாழ்க்கை துன்பம் இல்லாத இன்பமும் முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை கொடுத்து வாழ் கெடுத்து வாழாதே நீங்கள் தொலைக்காத ஒன்றை உங்கள் மனம் தேடிக்கொண்டே இருக்கிறது அதுதான் நிம்மதி உங்கள் வாழ்க்கைக்கு மற்றவர்களின் மூளையை எஜமானாக்காதீர்கள் இதுதான் இறுதி பக்கம் என்று கூற முடியாத ஒரு புதிர் புத்தகம் தான் வாழ்க்கை இந்த நிகழ்காலமே உன் எதிர்காலத்தை மாற்றும் சக்தி முடிந்ததை எண்ணி வரும் காலத்தை வீணாக்காதே வாழ்க்கை வாழ்வதற்கே தவிர இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல நமக்கு முக்கியத்துவம் இல்லை என்ற பட்சத்தில் முடிந்தவரை முகம் காட்டாமல் இருப்பது நல்லது நீர்க்குமிழியை போல் வாழ்க்கை மறைவதற்குள் ரசித்திடுவோம் விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் விஷயங்களில் தான் அதிக தோல்விகளை சந்திக்கின்றோம் ஒருவரை நம்புவதாக இருந்தால் அவர் சொல்லை கேட்டு நம்பாதே அவர் செயலை பார்த்து பின் நம்பு உண்மையாக இருப்பவர்கள் தான் வாழ்க்கையில் அதிகம் ஏமாற்ற படுகிறார்கள் வாழ்க்கை வாழ்வதில் இல்லை நம் விருப்பத்தில் இருக்கிறது சில நேரம் கண்ணீரைத் துடைக்க யாரையோ நாடுகிறோம் நம் கைகளை கட்டிவிட்டு சந்தோஷங்கள் வெகு தூரத்தில் தான் ஆனால், பிரச்சனைகள் மனதை ஆளும் வரையில் செருப்பாக உழைத்தாலும் சேமித்து வைக்க பழகுங்கள் வாழ்க்கை அறுந்தால் தைப்பதற்கு நிச்சயம் உதவும் நாம் உணர்ந்து விரும்பி செய்யும் காரியங்கள் மட்டுமே நம் வாழ்க்கையை அழகுபடுத்தும் தவறுசெய்ய ஆயிரம் வழிகள் இருந்தாலும் அறத்துடன் வாழும் வாழ்க்கையே அழகான வாழ்க்கை சொல்லத் தெரியாத வயதில் சத்தமாகவும் சொல்லத் தெரிந்த வயதில் மௌனமாக மனதிற்குள்ளும் அழுது கொள்கிறோம் தோல்வி உறுதி என்றால் போர்க்களம் போகாதே சமாதானம் பேசிவிடு நேரமும் ஆயுதங்களும் சேமிப்பாகிவிடும் நீ நீயாக இரு பிடித்தவர்கள் நேசிக்கட்டும் பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும் கால் கொண்டு மட்டும் கடந்துவிட முடியாத பாதை வாழ்க்கை அதிக ஆசை இல்லாதவர்கள் மட்டும் தான் அதிக சந்தோசத்துடன் வாழ்கிறார்கள் புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சரிசமமாக ஏற்றுக் கொள் சிரித்து கொண்டே இரு வலிகள் கூட விலகி கொள்ளும் அழைப்பு வரும் வரை உழைப்பு அவசியம். பணம் யாருடன் அதிகம் சேர்கிறதோ அவர்களை உலகத்துக்கு அதிகமாக பிடிக்க வைத்து விடுகிறது ஏக்கர் ஏக்கராக இடம் வாங்குபவனை பார்த்து சிரித்தது சுடுகாடு உன்னைய வாங்க போவது நான்தான் என்று மனம் தான் பிரச்சனை மனம் தான் தீர்வு நேர்மறை சிந்தனை உள்ளவனை விஷத்தால் கூட கொல்ல முடியாது வாழ்க்கையில் நம்மை விட சிறப்பா பலர் வாழலாம், ஆனால் நம்ம வாழ்க்கையை நம்மை விட சிறப்பா யாராலையும் வாழ்ந்து விட முடியாது உணரும் வரை உண்மையும் ஒரு பொய் தான் புரிகின்ற வரை வாழ்க்கையும் ஒரு புதிர் தான் உங்கள் மனதை நீங்கள் ஆட்டுவிக்க வேண்டும் உங்கள் மனம் உங்களை ஆட்டுவிக்கக் கூடாது தட்டி விட்டவர்களையும் தட்டிக் கொடுத்தவர்களையும் வாழ்க்கையில் மறவாதே தேடாத போது கிடைப்பதும் தேடும் போது தொலைவதும் வாய்ப்புகள் மட்டும் அல்ல வாழ்க்கையும் தான் கவலைக்கு நாம் இடம் கொடுத்தால் அது நம்மை கவலைக்கிடமாக்கி விடும் இருக்கும் போது மரியாதை வேண்டும் என்றால் பணம் வேண்டும் .இறந்த பிறகு வேண்டும் என்றால் நல்ல குணம் வேண்டும் நல்லதை கூட சில இடங்களில் பேசாமல் இருப்பது நல்லது குறை கூறும் பலருக்கு உத்தமனாய் இருப்பதைவிட உன்னை நம்பும் சிலருக்கு உண்மையாய் இரு அச்சம் என்பது தலைதூக்கி நிற்கும்வரை நாம் அடிமையாகத்தான் வாழ வேண்டியிருக்கும் தவறான மனிதர்களால் தான் வாழ்க்கையில் சரியான பாடத்தை கற்றுதர முடியும் சரியோ தப்போ உன் வாழ்க்கையை நீ வாழு இங்க சரி தப்பு சொல்ல யாரும் ஒழுங்கு இல்ல அறிவுரையால் ஆளானவர்களை விட அலட்சியத்தால் அழிந்தவர்கள் தான் அதிகம் ஒரு செயலை எப்படி செய்வது என்பதைவிட எப்படி செய்யக்கூடாது என்பதுதான் முக்கியம் ஜெயிப்பவனை முந்தப் பழகு தோற்கடிக்கப் பழகாதே மற்றவருக்கல்ல உன் மனசாட்ச்சிக்கு உண்மையாய் இரு இன்பமும் துன்பமும் நம் வாழ்வில் வந்து செல்லும் பேருந்துகள் எதில் பயணம் செய்ய வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும் எதிர்பார்க்காமல் பழகிப்பார் எல்லோரையும் பிடிக்கும் நிறைகளைப் பார் உன்னுள் நிறைந்து நிற்கும் மகிழ்ச்சி எவ்வளவு பெரிய பிடிவாத காரியையும் உடைத்து அழுக வைப்பதில் வாழ்க்கைக்கு நிகர் எதுவும் இல்லை எதுவும் சுலபமில்லை, ஆனால் எல்லாமே சாத்தியம் தான். மனம் பணம் அதிகம் நேசித்தால் நிம்மதி போயிரும் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால் வாழ்வு எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும் இன்பம் எப்படி இருக்கும் என்பதை உணரும் முன்பே வலி எப்படி இருக்கும் என்பதை உணர்த்தி விடுகிறது வாழ்க்கை ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள் மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள் கொடுப்பது சிறிது என்று தயங்காதே வாங்குபவர்க்கு அது பெரிது எடுப்பது சிறிது என்று திருடாதே இழப்பவர்க்கு அது பெரிது இரண்டு வாய்ப்புகள் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாதவற்றை மாற்றி காட்டுவது உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விட உன்னால் ஒருவன் வாழ்ந்தான் என்பதே சிறந்தது பயணம் முடிவில் கிடைக்கும் இருக்கை போன்றது வாழ்க்கை கடினமான பாதைகளே மிக அழகான இடங்களுக்கு கொண்டு செல்கின்றன நீங்கள் எதன் மீது அதிக கவனம் செலுத்துகிறீர்களோ அது அதிகரிக்கும் கவலையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தாலும் துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும் துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும் வளையாமல் இருந்தால் முறிக்கப்படலாம் வளைந்தே இருந்தால் மிதிக்கவும் படலாம் ஆகவே சமயத்திற்கு தகுந்தபடி முடிவெடுங்கள் தீர்க்க முடியாத துன்பம் எதுவும் இல்லை துன்பத்துக்கு சரியான தீர்வை கண்டு பிடிக்காதவர்கள் தான் அதிகம் அழுகின்ற வினாடியும் சிரிக்கின்ற நிமிடங்களும் வாழ்க்கை சக்கரத்தில் நிரந்தரமில்லை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எதையும் மதிப்பிடாதே அனுபவசாலிகள் என்பவர்கள் வயதை கடந்து வருபவர்கள் அல்ல வலிகளை கடந்து வருபவர்களே மகிழ்ச்சியான முகம் தான் எப்போதுமே அழகான முகம் எதிர்பார்க்கும் போது நடக்காததும் எதிர்பார்க்காத போது பல அதிசயங்கள் நிகழ்வதுமே வாழ்க்கையின் சுவாரஸ்யம் நமக்கு குழி பறிக்க யாரும் தேவையில்லை நாம் விட்டுச் செல்லும் கவனபிழைகள் போதும் நம்மை பற்றி அடுத்தவர் அறிந்து கொள்ளாத வரை நாம் சுவாரஸ்யம் தான் அறிந்து கொண்டால் நாம் சாதாரணம் தான் எல்லாத்தையும் ஏற்றுக்க பழகிக்கோங்க வாழ்க்கை எப்போ வேணாலும் எப்படி வேனும்னாலும் மாறிடும் உன்னை செதுக்கி கொள்ள உளி தேவை இல்லை பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும் போதும் இன்பமும் துன்பமும் ஆற்று வெள்ளம் போன்றது நிலையாக நிற்காது ஓடி விடும் வெற்றியை நினைத்து மகிழ்வதை விட கடந்து வந்த தோல்விகளை நினைவில் வைத்து செயல்பட்டால் வாழ்க்கையை என்றும் மகிழ்ச்சியாக வாழலாம் ஏமாற்றங்கள் குறைய எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டாலே போதும் வாழ்வின் சில தருணங்களையெல்லாம் மீண்டும் உருவாக்க முடியாது நடக்கும்போதே இரசித்துக் கொள்ளுங்கள் எத்தனை பெரிய துன்பத்தில் இருந்தும் உன்னை காக்கும் ஆயுதம் உண்மையும் பொறுமையுமே கலங்கிய நீரில் தெளிவான பிம்பங்களும் கலங்கிய மனதில் தெளிவான சிந்தனைகளும் பிறப்பதில்லை இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்களிடம் உங்கள் பெருமையை காட்டாதீர்கள் .அவர்கள் பெருமை கொள்ளும் அளவிற்கு உதவுங்கள் நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ள பலரை நாம் கடந்து செல்ல வேண்டும் வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டிய மிகப்பெரிய விஷயம் பொறுமை. வாழ்க்கையை இனிமையானதாக வாழுங்கள்.வாழ்க வளமுடன்.

#
John Sophi

நீ அழுது தொடங்கும் வாழ்க்கை.. பிறரின் அழுகையில் முடியும்.. நீ அழுது தொடங்கும் வாழ்க்கையில் சோகங்கள் தொடராது.. பிறர் அழுது முடிக்கும் வாழ்க்கையில் சந்தோசம் தொடராது.. வாழ்வதும் வாழ்க்கையில் வீழ்வதும் உன்னை தொடராமல் இருக்காது..

#
கவிதையின் காதலன் ரவி

விழுகின்ற இடத்தில் எல்லாம் விதைக்கள் துளிர்ந்து விடாது.. அது விழுந்த இடத்தை பொருத்துதான் அதன் துளிர்வதும், வளர்வதும் இருக்கும்.. பிறந்த இடத்திலேயே உன் வாழ்க்கையும் முடிந்து விடாது.. நீ வளரும் விதத்தில்தான் வாழ்க்கையே துளிரத் தொடங்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

கொடுக்க மறுக்கும் மனம் ஒன்று பெற்று கொள்ள துடிக்குது.. பாசம் காட்டவே பிறந்தேன் என்று பணத்தை மட்டும் கேட்குது.. நேசம் என்று தேன் வழிய வேசம் போட்டு கொள்ளுது.. சோக கதை எனதென்று தேடி வந்து சொல்லுது.. முகத்தில் மாறும் பாவனைகள் நடிகர் திலகம் என்றது.. கதை ஒன்றை சொல்லி சொல்லி வருத்தப்பட வைக்குது.. பொய் கதையை கேட்டு, கேட்டு அனுதாபம் பிறக்குது.. பணம் என்று சொன்னதுமே பல் இளித்து நிற்குது.. பணம் தர மறுத்து விட்டால் மூக்கு வெடைத்து கொள்ளுது.. அடுத்தவரிடம் கேட்டு வாங்க மனமும் ஆளாய் பறக்குது.. பெற்றவருக்கு தருவது என்றால் மனம் தான் ஏனோ மறுக்குது.. தேவை என்றால் தேடி போக பாச போர்வை அணியிது.. தேவை முடிந்த அடுத்த கனமே சொந்தமல்லாம் மறக்குது.. தனக்கொன்று தேவை என்றால் சுய நலமாய் மாறுது.. பொருள் ஒன்றை விட்டு சென்றால் அடுத்த நாளே கேட்குது.. இல்லாததை கண்டதுமே மனமும் பொறாமை கொள்ளுது.. கண்டது கையில் கிடைக்கும் வரை தினமும் நினைவு படுத்துது..

#
கவிதையின் காதலன் ரவி

விதைத்தால் விதையும் மரமாகும்.. மலர்ந்தால் மலரும் அழகாகும்.. தீபம் இருட்டை ஒளியாக்கும்.. அன்பு காதலை உருவாக்கும்.. கண்கள் காண்பதை சரியாக்கும்.. சிரிப்பு மனதை இயல்பாக்கும்.. பொய்கள் தவறை உருவாக்கும்.. உண்மை மனதை பலமாக்கும்.. பாசம் அன்பை கூறாக்கும்.. இதுவே வாழ்க்கையை உருவாக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

பணம் இன்றி இவ்வுலகில் பாசம் இல்லை.. சொந்த பந்தம் கூடுவதற்கு நேரமில்லை.. ஒன்று கூடும் சொந்தத்தில் உண்மை இல்லை.. அக்கா அண்ணன் தம்பி என்ற பாசமில்லை.. எதிர்பார்ப்பு இல்லாத உண்மை இல்லை.. ஆற்றாமையில் பரிசளிக்க விருப்பமில்லை.. கண்ணெதிரே காண்பதெல்லாம் எனக்கில்லை.. என்ற மனக் குமறல் இல்லாத நேரமில்லை.. எதிர்பார்ப்பு இல்லாத வேலையில்லை.. கிடைக்கும் வரை மனக்குமுறல் ஓய்வதில்லை..

#
கவிதையின் காதலன் ரவி

வசதியாக வாழ்ந்திட ஆசையில்லை.. வறுமையில் வாடாமல் வாழ்ந்தாலே போதும்.. வகையான உணவின் மேல் ஆசையில்லை.. வயிறு நிறைந்திட பழையதே போதும்.. ஆடம்பர வாழ்க்கையில் ஆசையில்லை.. அடுத்தவரை நாடாமல் வாழ்ந்தாலே போதும்..

#
கவிதையின் காதலன் ரவி

கனவொன்று கண்டேன் கண் விழிக்கும் முன்னே.. ஏன் இந்த சோகம் உன் முகத்தில் பெண்ணே.. அலையென நீர் திரண்டது உன் விழியின் உள்ளே.. கை கொண்டு அணையிட்டேன் கண்ணீர்ருக்கு முன்னே.. கண்ணீரில் முகம் துடைப்பாயோ சோகத்தில் பெண்ணே.. நடந்ததை பகிர்வாயா எனக்கு கண்களுக்கு முன்னே.. உன்னுடன் துணை நிற்க காத்திருக்கேன் பெண்ணே...

#
கவிதையின் காதலன் ரவி

நீ சிரிக்கும் புன்சிரிப்பில் இதழ் அழகு.. துளையிடும் பார்வையில் கண் அழகு.. காதலில் உன் மனம் கோடி அழகு.. போரிட தயங்காத குணம் அழகு.. தளராமல் வால் வீசும் நம்பிக்கை அழகு.. நீயாக நீ இருந்தால் வாழ்க்கையே அழகு..

#
கவிதையின் காதலன் ரவி

நீ தேடும் ஒருவர் உன் தேடலில் கிடைப்பதில்லை.. காலம் காரணமின்றி யாரையும் யாரோடும் சேர்ப்பதில்லை..

#
கவிதையின் காதலன் ரவி

பூவின் காலம் தொடங்கும் போது கொடியில் பூக்க தொடங்கும் பூவின் வாசம் மணக்கும் போது காற்றில் அதுவும் பரவும்.. தேனும் பூவில் ஊரும் போது வண்டும் தேட தொடங்கும்.. தேனை உறிஞ்சி குடிக்கும் போது பூவின் காலம் முடியும்..

#
கவிதையின் காதலன் ரவி

ஆதாயம் தேடும் வாழ்க்கை ஆதரவற்று போய்விடும்.. வேறொருவர் உழைப்பில் வாழ்ந்திட வைத்துவிடும்.. தீராத கஷ்டமே வாழ்க்கை என்றாகி விடும்.. கரிசனமெல்லாம் பொய் என்று கண்டதும் காட்டி விடும்.. நினைத்ததெல்லாம் கிடைத்தவுடன் உண்மை முகம் தெரிந்துவிடும்.. வெளியேறி பார்ப்பவருக்கு உண்மை எல்லாம் புரிந்து விடும்.. உடனிருந்த உறவுகளும் உடன் விலகி சென்று விடும்.. திருந்தாது இனி என்று திரும்பாமல் இருந்து விடும்..

#
கவிதையின் காதலன் ரவி

வாடிய மலர் என்றால் வண்டுகளும் தேடாது.. பணமின்றி நீ இருந்தால் சொந்தங்களும் கூடாது.. தனக்கென்று வைக்காமல் செய்ததையும் நினைக்காது.. கடன்பட்டு தவித்தாலும் உதவிடவும் நினைக்காது.. மரணம் உன்னை நெருங்கும் போது சொந்தம் உன்னுடன் இருக்காது.. தேவையில்லை சொத்தென்று மனதில் கூட நினைக்காது.. உறவை பிரிந்த சொந்தங்கள் சொத்தை பிரிக்க தயங்காது.. உறவென்ற சொல்லை கூட உச்சரிக்க நினைக்காது .. நான் இருக்கேன் உனக்கென்று பொய்யாய் கூட சொல்லாது.. ரத்த உறவே ஆனாலும் பணமில்லாமல் தொடராது.. காலம் கடந்து போனாலும் பாசம் காட்ட முயலாது.. உறவிடையே உன் நினைவு சிறிதளவும் இருக்காது.. உன் நிலைதான் உறவுக்கும் என்று புரிய வைக்க முடியாது..

#
கவிதையின் காதலன் ரவி

எவ்வளவு தான் பாசம் வைத்தாலும் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு நாம் மூன்றாவது மனிதர்கள் தான்

#
Saravanan Saravanan

சிறகில்லாமல் ஆகாயத்தில் பறந்தேன்.. கால் நனையாமல் கடலை கடந்தேன்.. ஆனால்:- கண் நனையாமல் வாழ்க்கையை கடக்க முடியவில்லை..

#
கவிதையின் காதலன் ரவி

கொடுத்திட எதுவுமில்லை இழப்பதற்கு.. நிலையென்று எதுவுமில்லை பெருவதற்கு.. விரும்பியது எதுவுமில்லை விலகுவதற்கு.. பெற்றது எதுவுமில்லை தருவதற்கு.. காரணம் எதுவுமில்லை மறப்பதற்கு..

#
கவிதையின் காதலன் ரவி

விலையில்லா சிரிப்புக்கும் விலை கேட்பான்.. குறைவில்லா அன்புக்கும் குறை வைப்பான்.. நிலையில்லாத வாழ்க்கையை பணயம் வைப்பான்.. நொடி மாறும் மனதிற்கு துணை இருப்பான்.. பணத்திற்கு புகழ் என்ற சொல் வைப்பான்.. திரும்பாத இளமையை தினம் இழப்பான்.. சொந்தமானது ஒரு நொடி தான் என்பதறிவான்.. வரும் நொடியையும் சொந்தமாக்க வேண்டி நிற்பான்.. அச்சடித்த பணத்தையே தேடி செல்வான்.. போதும் போதும் என்றிருந்தாலும் வேண்டுமென்பான்.. இறைவன் கொடுக்க நினைத்ததை இழந்து நிற்பான்.. தேடாத மரணத்தையும் தேடிச் செல்வான்.. தேடிச் சென்று மரணத்துடன் பேரம் கொள்வான்.. தலையெழுத்தும் மாறாது என்பதறிவான்.. அச்சடித்த பணத்தை வைத்து முயற்சி செய்வான்.. கடந்து போன வாழ்க்கையை வாழ துடிப்பான்.. மரணத்தை தள்ளி வைக்க பணம் கொடுப்பான்.. உதவாது பணமென்று அவன் அறிவான்.. முடிவாக மரணத்துடன் தோற்றுப் போவான்.. தேடிச் சென்ற பணத்தையும் பிரிந்து செல்வான்.. பணத்திற்காக இழந்ததை எல்லாம் உணராமலே செல்வான்..

#
கவிதையின் காதலன் ரவி

விழியழகும் மை அழகும் வீற்றிருக்கும் சிரிப்பழகும்.. காலம் வர காத்திருந்து பூ கொடியில் பூத்திருக்கும்.. மனமெல்லாம் உனை நினைக்க அதில் ஓரிடம் நீ கொடுக்க.. விழி கொண்டு எணை அணைக்க கண் விழித்து காத்திருக்க.. காலம் வரும் எப்போதென்று கை பிணைந்து எதிர் நோக்க.. இரவுக்கு துணையாக காலங்கள் கழிந்து இருக்க.. அடங்கியிருக்கும் ஆசைகள் ஆழ்மனதில் குடியிருக்க.. கூடியிருக்கும் ஆசைகளை திரையிட்டு மறைத்திருக்க.. மறு வாய்ப்பு இல்லா வாழ்க்கையில் வழிப்பயணம் என்றுயிருக்க.. உறவாட உறவின்றி உருகிடவும் உள்ளமின்றி.. ஊருக்குதான் உறவுண்டு எனக்கில்லை என்றிருக்க.. கற்பனையில் கண்டிடவும் சொந்தமில்லை என்றிருக்க.. பிறந்திட்ட பிறவி கூட அறியாமல் நானிருக்க.. தேடி வரும் நேரமென்று தேடாமல் நானிருக்க.. இறுதி காட்சி கண்டிட என் அருகில் பலர் இருக்க.. மூச்சும் நின்று போகும் வரை சிலர் மட்டும் உடன் இருக்க.. பிடி சாம்பலாய் ஆகும் வரை வெட்டியானிடம் உடல் இருக்க.. பிடி சாம்பல் கரையும் வரை காற்று மட்டுமே துணை இருக்க.. இந்த பூமியில் என் பயணம் முடிந்திருக்கும்.. உடன் பிறந்த சொந்தத்திற்கும் என் நினைவு மறந்திருக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

உள்ளதை உள்ள படியே ரசித்து பார்.. உள்ளத்தில் உள்ளதும் உண்மையாய் தெரியும்.. கண்களில் காதலை கலந்து பார்.. இறைவனின் ரசனை படைத்ததில் தெரியும்.. அழகான உருவத்தை ஆழ்ந்து பார்.. ஆறிலிருந்து அறுபது தெரியும்.. மனதை மகிழ்ச்சியில் நிறைந்து பார்.. அறுபதில் இருந்தாலும் மனம் ஆறாய் தெரியும்.. காண்பதெல்லாம் அழகாய் தெரிந்தால்.. இருக்கும் இடத்தில் சொர்க்கம் தெரியும்..

#
கவிதையின் காதலன் ரவி

காற்றும் மழையும் நிலையில் இருந்தால் வாழ்வின் உயர்வு செழிப்பாய் போகும்.. உப்பும் உரிமையும் அதிகம் இருந்தால் உணவும் உறவும் கசந்து போகும்.. மனமும் குணமும் நிறையாமல் போனால் உயர்வும் உண்மையும் மறந்து போகும் அடுத்தவர் உழைப்பில் தன்னிலை அடைந்தால் சந்தோச வாழ்க்கை குன்றி போகும்.. காணும் கண்ணில் பொறாமை இருந்தால் செல்வம் உன்னுடன் தங்காமல் போகும்.. செய்யும் தவறை உணராமல் இருந்தால் பாவ கணக்கு சந்ததிக்கு போகும்.. வாழும் வாழ்க்கையில நிலையின்றி போனால்.. நிம்மதி என்பதும் இல்லாமல் போகும்..

#
கவிதையின் காதலன் ரவி

என் வலிகள் சில நேரங்கள் சில வலிகளை சில வரிகளாய் கவிகளாய் தூவுகிறேன். மனமதின் கரையினிலே வலிகளாய் தடம் பதித்துள்ள அச் சுவடுகளுக்கு காரணம் யாரோ? என்னுள் நடக்கின்ற தவறுகளோ இல்லை எனக்குள் வலியை தருபவர்களின் தவறோ காரணம் தெரியவில்லை விழிகளில் வழிந்தோடும் கண்ணீருக்கு பதில் தேடுகிறேன் கிடைக்கவில்லை இன்னுமே என்னுள் என் இதயத்தினுள் வதைக்கும் வலி எப்பொழுதும் எனக்கு மட்டுமே தெரிகிறது அது கண்ணீராய் வெளியேறுகிறது.

#
Aashif Shifa

கவிதை தலைப்பு ஒரு நாள் எழுவோம் பெண்மையின் மேன்மை... கற்காலம் தொட்டு இப்பொற்காலம் வரை மண்ணில் மகளிராய் பிறப்பெடுத்து பெற்றிட்ட சவால்களை சாதனையாக களம் கண்ட கண்ணியம் நீ....... அறிவு கொண்ட பெண்களே பிற்போக்கு மனப்பான்மையில் பிதற்றும் பெரியோர்களை சிந்தனை கொண்ட சிரிப்புடனே கடந்திடுவோம்.... மூடநம்பிக்கைகளில் மூழ்கி கிடக்கும் சமுதாயத்தை உன் முற்போக்கு சிந்தனையின் முயற்சியிலே முறியடிப்போம்..... காலை முதல் மாலை வரை கணக்கில்லாமல் பணிபுரிந்து கடமைக்காக உரிமை துறந்து போராடும் மாதரே காக்கும் கடவுள் நீயாவாய்.... தினமாயிரம் பிரச்சனைகளை மனதில் சுமந்து மகிழ் முகத்தை வெளியே காட்டும் வினோத சிற்பம் நீயே.... பொறுத்தது போதும் பொறுமையும் போதும் கடல் அலையாய் பொங்கியெழுவாய் உன் உரிமை உனக்கே ஆகும்..... தான் என்ற எண்ணம் கொண்ட தர்க்கம் செய்யும் வர்க்கத்திடம் செயலிலே சீர்நோக்கு பார்வையுடன் சிறப்புடனே செயல்பட்டு வெற்றிகனி பெற்றிடுவோம்.... நன்றி வணக்கம் கவிஞர் அ. மேரி ராஜேந்திரன் நாகப்பட்டினம்

#
அ. மேரி ராஜேந்திரன்

த.நா.தளபதித҉ம҉ி҉ழ҉ன҉்҉8҉0҉8҉0:͢͢വꪒωᮀပᮀⴣ͢ ᤌ᭄തடⳢᮀནവᰈ།ᮀ͢͢ ͢᪈ᤌ͢டᮀடവᰈ།ᮀᮀ͢⤵ ͢͢വꪒωᮀပᮀ͢ⴣ͢ ᤌ᭄͢തடᤌᮀᤌꪒⳢവᰈ།ᮀ͢

#
Sayedmohammed Sayedmohammed

பொறுமை இன்றி பொறாமையிலேயே சென்றுவிடுமோ இந்த வாழ்க்கை?????? பாசம் வைத்த உறவுகள் பகையாக ஒரு நாளில் மாறுவது ஏனோ??? வலிகளைத் தாங்கும் இதயம் வலிகளை மட்டுமா தாங்க வேண்டும்??? கேள்விகள் என்னில் ஆயிரம் பதில் ஒன்றே என்ற‌ தெளிவுடன்.... ஒருவேளை இதுதானோ வாழ்க்கை )))):--

#
Kavi

சந்தோஷத்திற்கான அவளின் தேடலில் மிஞ்சியது சோகம் மட்டுமே

#
Rethane Kathirvel

சில சமயங்களில் நான், இரவில் உறக்கமில்லை, கண்களின் ஓரத்தில் இந்த கண்ணீர் ஏன் எனவும் புரியவில்லை....??? மனதின் முழுதும் வருத்தங்கள் நிறைய , சொற்கள் கூட‌ தடம்மாறுகிறது ,,,,??? ஏன் மனமே ??? நீ ஏன் நிலையாக‌ இல்லை?!?? மிகப்பெரிய கனவுகளையும் கொடுத்து விட்டு, அது கனவாகவே மாறிவிடும் என்ற எண்ணத்தையும் கொடுக்கிறாய்????

#
Kavi

பிழை பிழை என்பது ஒருநாளும் ஒரு பிழையல்ல.... மாற்றத்தின் தொடக்கப்புள்ளி... முடியாது என்ற ஏக்கத்தின் முற்றுப்புள்ளி... தொடங்கிவிடு! பிழையிருக்கும்.... முடித்துவிடு! பிழையின்றியே...

#
RUPA

நான் இந்த உலகத்தில் சந்தோஷமா இருந்ததை விட சந்தோசமா இருப்பது போல் நடித்த நாட்களே அதிகம்

#
K. Anbudevi

தோற்றதால் தள்ளப்பட்டேன் என சறித்திரம் உண்டு... வென்றதால் விளயாடினேன் என சரித்திரம் உண்டு... விமர்சித்தவருக்கும் கேலி செய்தவருக்கும் ஒரு வரி எங்காவது இருந்தால் காட்டுங்கள்... 'நான் செய்தது சரியல்ல' எனக் கூறும் நல்லுல்லத்தை வணங்க....

#
RUPA

உனக்கு முன்னால் இருக்கும்... பாதையை காட்டுவது அல்ல வாழ்க்கை... உனக்கு பின்னால் இருக்கும் வழி/வலி களை காட்டுவது தான் "வாழ்க்கை"....

#
_Dheerov_ _dheerov_

tholaipesiyil oru varthai pesamudiyada endru thavithadu anda kalam eppodhum kaipesi vaithu kondu uravukaludan pesamal adhanudane pesuvadhu indha kalam oru kadhitham anupi kathirundu uruvagalai valarthadu anda kalam anaithum nodi polidhil nadakum inaiyam kooda irupathal uravugalin arumai puriyamal nadapathu inda kalam kadhalil thilaithu aval/avanin anbirku engiyathu anda kalam kadhalai puriya vaikave neram kalivadu inda kalam endru marumo indha nilai edhirkala sandhadiyin valkai sirakumo nam valvai pola alagai marumo?

#
sparkling mind

நாயை நாயாக மதித்தால் நாய் நமது பீ யை தின்றுவிடும் நாயை மனிதனாக மதித்து வீட்டில் கட்டி போட்டால் அது பீயை நாமதான் அள்ளிப் போட வேண்டும். அதைப்போல் சில மனிதர் குணங்கள் சரி இல்லை என்றால் நாயைப் போல் மதித்து அவரிடம் விலக வேண்டும். இல்லையென்றால் பீ நாத்தம் போல் உன் வாழ்க்கையும் நாறிவிடும்

#
Gayathri

என் கனவுகள் எல்லாம் கனவுகள் ஆகவே தெடர்கிராது என் வழிகள் எல்லாம் வழித்து கொன்ட விளின் ஓரம் வழிகிறது....!!

#
Dr._.Lilly_queen ????

கண்களை போல் இதயமும் வெளியே இறைவன் படைத்த இருந்தால் பல மனிதர்கள் இதயம் துடிக்கிறதா நம்மை கண்டு நடிக்கிறதா என் தெரியும்..

#
Basha Syed

மழை நாளில் தாழ்வாரத்தின் தாடகையில் மழை நீரோடு விரல் நனைத்து விளையாட அங்கே தேநீரின் மணம் பரப்பும் விடிந்த காலையில் ஈர விரல்களில் ஒரு கதகதப்பு தரும் தேநீர் கோப்பை ரசித்து பருக கோப்பை பெறும் உதட்டு முத்தம்.

#
Jothi Sukumar

ஈர விரல்களில் ஒரு கதகதப்பு தரும் தேநீரின் மணம் பரப்பும் விடிந்த காலையில்

#
Jothi Sukumar

வலியை ஒளியாக மாற்றும் வழி! ஒரு தாய் பத்து மாதம் சுமந்தால் தான் சிசு உருவாகும்! ஒரு விதை‌ பத்து வருடம் தாண்டினால் தான் மரமாக மாறும்! ஒரு கல் லட்சக்கணக்கில் அடியை உளியால் வாங்கினால் தான் சிற்பமாக மாற முடியும்! அதை போல் வலியை மறந்து வழியில் வரும் வாழ்வின் ஒளிக்கு காத்திருந்தால்! வாழ்க்கை ஒளி பெறும்! இனிமை பெறும்! வெற்றியை ஈட்டித் தரும்!

#
Danu viji

பல நேரங்களில் வாழ்க்கை கடினமாக தெரிந்தாலும்! வாழ்க்கையின் சில நிமிடங்களில் தான் அது அற்புதமானது என்று உணர்த்தும்! நேரங்கள் நிமிடங்களுக்கு என்று வாழாமல்.., நமக்காக வாழ்க்கையை வாழ நினைத்தால்.., ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாக வாழலாம்!.

#
Sarashwathi

அனைவரின் மனதிலும் வெளியே சொல்லப்படாத பல பிரச்சனைகளும், பல குழப்பங்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறது... ஆனால், அவை அனைத்திற்கும் தற்கொலை மட்டுமே தீர்வல்ல...️ By NeeNi

#
Siva Ranjani

சில்லரையே,.. நீ! மனிதனை விட உயர்ந்தவன்தான் இல்லையென்றால்? பூசாரி வைத்திருந்த கற்பூரத்தட்டு என்னைத்தாண்டி கையில் நாணயத்தோடு நிற்கும் அவர் பக்கம் நகர்ந்திருக்குமா சில்லரையே... நீ! மனிதனை விட உயர்ந்தவன்தான் இல்லையென்றால்? நாலு காசு இல்லாதவனை செல்லாக்காசு என்று சித்தரிக்குமா இந்த சமூகம் சில்லரையே... நீ! பணங்களை விட உயர்ந்தவன்தான் இல்லையென்றால் ? இறுதி ஊர்வலத்தில் நெற்றியோடு நாணயமும் இடுகாட்டை நோக்கி பயணிக்குமா சில்லரையே... உன்னால் நாங்கள் அடைந்த சுகம் அந்த ஆரஞ்சுமிட்டாய்க்கு நன்றாகத்தெரியும்.. கடையநல்லூர் கா.ஆசைத்தம்பி.

#
Ram siva

தத்துவங்கள்

#
Kandan Mani

சுகம்தான் வாழ்வில் சில(ரது) வரவுகள் ஏனோ பயம் தொலைந்துவிடுவோமோ இல்லை தொல்லையாகிவிடுவோமோ என விடபட விருப்பமினறி தொடர்ந்திட மனமின்றி விலகியே நிற்கவைத்து வேடிக்கை காட்டுகிறது சூன்யமான காலச்சக்கரம்....

#
மகி

எந்த உறவாக வேணும் என்றாலும் இருந்துட்டு போக ஆனா உங்க தேவைக்கு மட்டும் பழக்கத்தைங்க...

#
αɱɱυ αɱɱυ

உன் அன்பு உண்மை என்றால் அனைத்து உன்னை தேடி வரும் என்று யார் சொன்னது....? நீ தேவை என்றால் வருவார்கள்... உனக்கு தேவை என்றால் நீ தான் போராட வேண்டும்......

#
Jeba M

வாழ்வு நினைத்திட வயது இல்லை.நினைத்தை சாதிக்க காலம் இல்லை. கடன் வாங்கிய கஷ்டம் தீர வழி இல்லை. உற்றார் உறவினர் மத்தியில் வாழ மனம் இல்லை.மூச்சி விட மறந்தால் யாரையும் பார்க்க முடிவதில்லை.

#
Hayath Deen

உதிரும் என தெரிந்தும் பூக்கத்தான் செய்கிறது மலர், மறையும் என தெரிந்தும் உதிக்கத்தான் செய்கிறது கதிர், தொடரும் என தெரிந்தும் துளிர்க்கத்தான் செய்கிறது நம்பிக்கை @உறங்கும் புத்தன்.....

#
உறங்கும் புத்தன் ????

இங்கு தேடல் என்ற ஒன்று இருந்தால் மட்டுமே விடியல் என்ற ஒன்று உண்டு...

#
Vijay Mahendran

இறைவனை அறிந்து அவனோடு இணைந்து வாழும் வாழ்க்கையே நிஜ வாழ்க்கை, இறைவனை சார்ந்து வாழாமல் தன் சுய முயற்சியால் வாழ்கிற வாழ்க்கை பிறந்த நோக்கம் அறியா வாழ்க்கை. அப்படி வாழ்கின்ற வாழ்க்கையில் திருப்தி இருக்காது, இறைவனை அறிய நம் சிறிய மூளையால் இயலாது,இறைவனே வந்து நம் உள்ளத்தில் தன்னை வெளிப்படுத்திக் காண்பிக்காவிட்டால் நாம் உண்மையான இறைவனை அறிய முடியாது. அப்படி இறைவனே வந்து நம் உள்ளத்தில் தன்னை வெளிப்படுத்திக் காண்பிக்க நம் உள்ளத்திற்குள் ஏற்கெனவே பல மூட நம்பிக்கைகள் நிறைந்திருக்கக்கூடாது.அப்படி நிறைந்திருந்தால் நம்மால் உண்மையான இறைவனை அறிய முடியாது எனவே நாம் நம் மனதை எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து நலமானதை பிடித்து கொண்டு வாழ கற்பிக்க‌வேண்டும் . மேலும் நம் மனதில் இருக்கும் மூடநம்பிக்கைகளை விட்டு விட ஆயத்தமாக இருக்கவேண்டும் . அப்போது நம்மை சிருஷ்டித்தவர் தம்மை நமக்கு வெளிப்படுத்தி, நம்மை படைத்ததின் நோக்கத்தையும் வெளிப்படுத்தி,அந்த நோக்கத்தை நிறைவேற்றி வாழ நம்மை நிச்சயமாக வழி நடத்துவார். அப்படி நாம் நம் வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்து வாழும் போது அந்த வாழ்க்கையில் ஒர திருப்தியை நாம் காணமுடியும். மெய் வாழ்வு ஐக்கியம் K. செல்வம், நாகர்கோவில்

#
TLF tv channel

காகிதத்தில் கப்பல் செய்து கவலைகளை அதில் நிரப்பி கடலில் விடுவதைவிட, காகிதத்தில் காவியங்கள் செய்து கற்பனையை அதில் நிரப்பி பலர் கனவுகளை கரைசேர்த்துவிடலாம். - Sri ( அன்பும் நானும் )

#
KaviKuil - COMPETITION

போர் கண்டு தோற்பவன் வீரன் போர் கண்டே தோற்பவன் கோழை. - அன்பும் நானும்

#
அன்பும் நானும்

போதுமென்ற மனநிறைவை கற்றுக்கொண்டால் பேராசையென்னும் பிசாசிடமிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

#
Ram siva

புத்தகத்தை படித்து தெரிந்துகொள் வாழ்க்கையை பட்டு தெரிந்துகொள் இரண்டுமே கற்பித்தலை ஒருபோதும் நிறுத்தாது.

#
Ram siva

உடைந்துபோய் மட்டும் இருந்துவிடாதீர்கள் இங்கே தோல்வியும் வெற்றியும் சுழற்சி முறையே இதை புரிந்துகொண்டால் இடைப்பட்ட வாழ்க்கை மகிழ்வே..

#
Ram siva

கால மாற்றம் மட்டும் இயல்பல்ல..... மனித குண மாற்றமும் இயல்பு தான்.....

#
mufa zaky

❃ வலியோடு போராடினால் தான், ஒரு பெண் தாயாக முடியும்.... ❃ இருளோடு போராடினால் தான், புழு வண்ணத்துப்பூச்சியாக முடியும். ❃ மண்ணோடு போராடினால் தான், விதை மரமாக முடியும்...... அது போல, வாழ்க்கையோடு போராடினால் தான் மனிதன் வரலாறு படைக்க முடியும்.... -விஜய்????

#
Vijayakumar

வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வாட்ஸ்அப் ஆக இருந்தாலும் சரி! எல்லாரும் பார்ப்பது, நம் ஸ்டேட்டஸ் தான்!

#
Vijayakumar

நான் கண்ட இனிமைகள் என்னுடன் நான் செலவலித்தா என் தனிமைகள்

#
Charubharathi

சுட்டெரிக்கும் சூரியன் அறிவானோ சுழலும் பூமி சுயநலமானதென!

#
Craze n kavidhai

தொடமுடியாத தூரம் இ்ல்லை தொடர முடியாத பயணம் இல்லை நினைத்த படியும் இல்லை நினைக்காததும் இல்லை கடக்க முடியாத பாதையும் இல்லை கடக்காததும் இல்லை பழகியதும் இல்லை பழக்க படுத்தாததும் இல்லை வரையைக்குள் இல்லை வரையறுக்க முடியாததும் இல்லை ௨ண்மைக்குள் இல்லை ௨ரிமை இல்லாதாதும் இல்லை மகிழ்ச்சிக்குள் இல்லை துக்கமில்லாததும் இல்லை துணிவுக்குள் இல்லை பணிவு இல்லாததும் இல்லை மகிழ்ச்சிக்கும் துன்பத்துக்கும் இடையே ஊஞ்சாலாடும் பூந்தொட்டி

#
Kanika

அடித்து பிடித்து அன்னந்தண்ணி சமைத்து அரும்பாடு பட்டதெல்லாம் சொல்லாமல் காணாமல் போகும் மின்சாரத்தின் கெடுபிடியாலே...

#
Anu Chandran

சரியாய் இருக்கவேண்டுமென்ற எண்ணமும் பிழையை சரி செய்யமுடியாதோ என்ற பயமும் உருத்தெரியாத பிரச்சினைகளுக்கு கூட சிம்மாசனம் கொடுத்து அமரவைத்து விடுகிறது.....

#
Anu Chandran

எதுவும் சரியில்லாத போதும் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவது தான் 'வாழ்க்கை'... ❤️தனிமை காதலி❤️ (கவி)

#
1g queen Kd papa

நிராகரிப்புக்கு தான் எவ்வளவு வலிமை உள்ளது இரும்பு மனிதரையும் நிலைகுலைய வைத்து விடுகிறது vaii..

#
சிறகை விரிப்போம் ????

முடிந்தவரை போரடு உன்னிடம் ௨ள்ள உண்மையை உணர்த்த முடியவில்லை என்றால் மௌனத்தை பரிசாக கொடு காலம் ௨ணர்த்தும்வரை தனிமை கற்றுதந்த பாடத்தை வாழ்க்கை புத்தகத்தில் அழியாத ஓவியமாக தீட்டி வை ௨ணர்வுகளை பக்க ௭ண்களாக சேமித்து வை சண்டையை பேன மையிடம் சொல் நீ அனுபவித்த வேதனையும் கண்ணீரையும் உன் அன்பானவனுக்கு அழகாய் வடித்து வைக்கும் ௨ன் அன்பை அதிகப்படுத்து பேனாவின் முள் தேயும் வரை அன்பை மட்டும்எதிர்பாக்காதே! ஏமாந்து நிற்பது தண்ணீரில் மிதக்கும் கண்களும் கணத்த இதயமும் தான் புத்தகத்தை அழகாக்க ஆங்காங்கே உன் உதட்டு முத்திரையை பதிக்க ஆசை ஆனால், நிராசையாக கண்ணீர் வடித்த அனுபவ புத்தகமாக தனித்து நின்றது பல ஏமாற்றங்களை ஏந்தியபடி எளனங்களை சுமந்தபடி ௭ன் எதிர்பார்பை புரியாத புத்தகமாக... புத்தகம் எல்லாருக்கும் பிடிக்கனும் ௭ன்று ௮வசியம் இல்லை புரிந்தவருக்கு மட்டுமே.... பிடித்தவர்களுக்காகவும்.... நிறைய ஏமாற்றம் -அனுபத்தை தந்தது.......... உன் ஏமாற்றம்-தைரியத்தை வரவழைத்து துடிப்புடன்....... ௮னுபவ புத்தகத்தை வடிக்கு கவிஞர்களின் வரிசையில் முதல்படியில் நானும்..........

#
Kanika

கடக்கும் காலம் தான் வாழ்க்கையா? இல்லை கடந்து வந்த காலம் தானோ.? நிகழ்பவையில் நிதானமாய் நிஜங்களுக்குள் போலியாய் வாழ்ந்து விட்டு போ இல்வாழ்க்கையை!

#
parameshwari jaganathan

நீ பிறந்ததும்! 'கண்' வழி கற்றல்! பின் 'செவி' வழி கற்றல்! 'வாய்' வழி கற்றல்!பின் 'சைகை' வழி கற்றல்! தாய் வழி கற்றல்!பின் தந்தை வழி கற்றல்! உண்ணக்கற்றல்!பின் உடுக்கக்கற்றல்! உடன் பிறப்பு வழி கற்றல்!பின் உறவு வழி கற்றல்! நட்பு வழி கற்றல்!பின் நடத்தை வழி கற்றல்! அறிந்து கற்றல்!பின் அறியாது கற்றல்! ஆசையில் கற்றல்!பின் அனுபவ கற்றல்! அனைத்தும் உன் வாழ்வை வழி நடத்தும்! குரு வழி கற்றல்! வகுப்பறை கற்றல்!உன் வாழ்வை வளப்படுத்தும்! கற்றல் உனக்கு ஆயுதம் ! கல்வி கற்று கூர்மையாக்கு! காலம் உள்ள வரை கைகொடுக்கும்! இவண் எழில் சென்னை.

#
Ezhilarasu K

கடைசி தருணம் தரும் வலியை சொல்லி தரும் பாடம் கடைசி ஒரு நொடியில் நடக்கும் நினைவலை திருடும் தருணம் கடைசி மூச்சில் சொல்ல துடிக்கும் ஆசையின் நினைவுகள் ௮டுத்தடுத்து தோன்றும்...... ஆயிரம் ௭ண்ணங்களின் ஒட்டு மொத்த மூட்டை....... ௧டைசி நொடி தரும் ..... இறப்பின் வலி......

#
Kanika

முதல் மாணவன் தெரு விளக்கின் பற்றாகுறை வெளிச்சத்தில் படித்த மாணவனின் முகத்தில் அதிக பிரகாசம் ஓ! பத்திரிகை காமிராக்களா!

#
kamal raj

எப்பொழுதும் நீ ௭ன் நினைவில், ஆனால் , நான் ௨ன் கனவில் கூட இல்லை இதை ஏற்க மனம் மறுக்கிறது, ஆனால் , எப்பொழுதும் நீ இருட்டை தேடுகிறாய், ஆனால், நான் இருட்டுக்குள் புதைந்திருக்கு உன் விடியலை தேடுகிறேன். எப்பொழுது புரியும் என் தேடல் உன்னை உயர்த்தவே........

#
Kanika

வெளிப்படையாக சிரித்து பேசுபவர்களுக்கு தான் மனதில் வெளிக்காட்ட முடியாத பல வேதனைகள் மறைந்திருக்கும்...

#
Alfie jo

மகிழ்ச்சியை விட மறதி தான் தேவைப்படுகிறது... நிம்மதியாக வாழ்வதற்கு...

#
anishya anu

ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய்விடில் மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா...

#
anishya anu

அன்று தோல்வியில் இருந்து பாடம் கற்றவர்கள் தான் இன்று வெற்றியாளர்களாக மாறி உள்ளனர்

#
Ram Ram

வாழ்க்கை சொர்க்கமாவதும், நரகமாவதும் நம் மனதில் தோன்றும் எண்ணங்கைளை பொறுத்ததே.

#
kumaran

நான் தொலைந்தும் போகவில்லை தொல்லையும் தரவில்லை சற்று விலகி நிற்கின்றேன் நம் உறவு பிரிந்து விடாமல் இருக்க

#
Ram Ram

பணத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் வாழ்க்கை இனிக்கும். வார்த்தையை சிக்கனமாக பயன்படுத்தினால் உறவு நிலைக்கும்.

#
anishya anu

உளிகள் இன்றி சிலை இல்லை வலிகள் இன்றி வாழ்க்கை இல்லை

#
Ram Ram

வாழ்க்கை நமக்கு வலிகள் தரும் ஒவ்வொரு நொடியும் நம்மை வலிமை படுத்துகின்றது

#
Ram Ram

வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது..! இன்று நீங்கள் அனுபவிக்கும் மிகப் பெரும் வலிகளே நாளை உங்களின் மிகப் பெரும் பலமாக மாறிவிடுகின்றது..!

#
Alfie jo

தாய்தந்தையிடம் அன்பாய் இருங்கள்... மனைவியை நேசியுங்கள்... பிள்ளைகளிடம் பாசம் வையுங்கள்... உறவினர்களிடம் உறவாய் இருங்கள்... நண்பர்களிடம் நட்பு வையுங்கள்... எதிரிகளிடம் விலகி இருங்கள்... இறைவனிடம் இப்படி வேண்டுங்கள்... இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் எதையாவது செய்ய வேண்டுமென்று...ஆனால் யாரிடமும் அடிமையாய் மட்டும் இருந்து விடாதீர்கள்....! 'நன்றி' அ.கிருஷ்ணன் அன்புடன்......

#
கிருஷ்ணன்

வாழும் வரை வாழ்ந்திருப்போம் பிறருக்கு பிழை செய்யாமல்... வாழ்ந்த பின்னர் நமக்கு யாரும் சிலை வைக்க வேண்டாம் எனினும் சிலர் மனதில் இடம் பெறலாம் என்பதற்காக.....!

#
கிருஷ்ணன்

வாழ்க்கை

#
Chinna Durai

எனது உரிமைகளை பாதுகாத்து தாருங்கள்

#
Hamdhi Zahra

வீழ்ந்தப்பின் மலர்களும் சருகாகவே ஆகின்றன ????????

#
இதழ் கவி

இன்றைய உனது செயல்களே நாளை உன்னை உச்சத்திற்கு கொண்டு செல்லும் வெற்றியின் படிக்கட்டுகள்.. உன் திறமையை பொறுத்தே அதன் ஏற்றமும் இறக்கமும் அமையும்…

#
Mani

மகான் போல வாழ வேண்டும் என்று அவசியம் இல்லை.. மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்..!

#
kumaran

ரசிப்பதற்கு ஏதேனுமொரு விஷயம் தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகானது

#
kumaran

நம்பிக்கையும் கண்ணாடியும் ஒன்றுதான்..! ஒரு முறை உடைந்தால் மீண்டும் ஒட்ட முடியாது..!

#
Bethel G

இலக்கை தொடுவதற்கு விளக்கு எதற்கு? உன் இமைகளை திறந்து வை! இருட்டும் வெளிச்சமாகும்! நீ நம்பிக்கையை இழக்கின்ற போது தான் வாழ்க்கை உன்னை விட்டு நழுவி போகிறது! நம்பிக்கையோடு எழுந்து வா! நாளைய விடியல் உன் பாதையில்

#
magesh r

தொலைத்தலுக்கும் தேடலுக்கும் இடையில் வெற்றிகரமாக பயணிக்கிறது வாழ்க்கை

#
மல்லி

ரசிப்பதற்கு ஏதேனுமொரு விஷயம் தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகானது

#
கவிஞர்.ராசு
Logo

© Red Nucifera