வீதியில் விழும்போது சிரிப்பவர்கள் ஒரு நாள் முளைப்பாய்
Kunesh
முடியும் வரை முயற்சி ஒன்றே நமக்கு கை கொடுக்கும்
Ananthi Ananth
நடிகை ரேகா
Sheema John
இன்று காதலர் தினமல்ல
வீரத்தால் வீழ்த்த முடியாத
என் தேசத்தின் காதலர்களை
வீரமில்லாத துரோகிகள்
புறமுதுகில் தாக்கி
வீழ்த்தப்பட்ட வீரர்களின்
நினைவு தினம்..கோழைகளால்
வீழ்த்தப்பட்ட வீரர்களை
நாங்கள் புதைப்பதில்லை விதைத்திருக்கிறோம்..
தன் தாயின்
மடியமர்ந்தே முடிமழிக்க
நினைக்கும் கோழைகளே..
இன்னும் ஒரு முறை
உங்களுக்கு
வாய்ப்பளிக்கிறோம்
கோழையாய் அல்ல
வீரமாய் நடந்து பார்
அப்போது தெரியும் உலகில்
நீ மட்டும்மல்ல உன் தேசமே
இருக்காது என்பது..
ஜெய்ஹிந்த்..
கவிதையின் காதலன் ரவி
வெற்றி என்பது
ஒருமுறை அடைவதல்ல..
அடைந்ததை உன் கைக்குள்ளேயே
அடக்கி வைப்பது..
வீழ்த்துவது மட்டும்
வெற்றியல்ல..
வீழ்ந்தவரை
தூக்கி விடுவதும்
வெற்றிதான்..
கவிதையின் காதலன் ரவி
மழை வருது விதி அது
இயற்கையின் கையில் இருக்கிறது. ஆனால்
குடைப்பிடிப்பது முயற்சி அது நம் கையில் தான்
இருக்கிறது.
Angala Eswari
பெருமைக்காக
செய்வதெல்லாம்
மனதிலிருந்து
மறைந்துவிடும்..
பொறுமையாய்
செய்வதெல்லாம்
நினைவிலேயே
தங்கி விடும்..
போராடும்
என்னிடத்தில்
தோல்வியும் ஒரு நாள்
தோற்று விடும்..
கவிதையின் காதலன் ரவி
வைராக்கியமாக வாழ
வழி காட்டும் தன்னம்பிக்கையே
உன் அவமானத்தின் அடையாளம்..!
Karuppasamy
உனக்கு கஷ்டம் வரும்
போதெல்லாம்
சிரிக்கத் தொடங்கினால்..
உன் சந்தோசத்தை
எந்தனை முறை
பறித்தாலும்
பூத்துக் கொண்டே
இருப்பாய்
பூக்களைப் போல..
கவிதையின் காதலன் ரவி
சிக்கல்களில் எல்லாம் வாய்ப்பைத் தேடுகிறவன் வெற்றியாளன்..
வாய்ப்புகளை எல்லாம் சிக்கலாக்குபவன்
தோல்வியாளன்..
கவிதையின் காதலன் ரவி
கடந்து போக கற்றுக் கொண்டேன்..
மாயமான இவ்வுலகில்
காயங்களுக்கு
நியாயம் தேடாமல்..
ஓடி, தேடி
முயற்சித்தேன் முடியாது என்பதையெல்லாம்
முடியுமென்ற ஆயுதம் தேடி..
வெற்றிக்கு
பின் தான் யூகித்தேன்
துன்பம் இல்லாத
இன்பமும்
முயற்சி இல்லாத
வெற்றியும்
நிலையில்லாததென்று..
கவிதையின் காதலன் ரவி
வென்றவனுக்காக
கை தட்டும் போது
உங்களை காணாத
உச்சத்தில்
அவன் இருப்பான்..
தோற்றவனின்
தோள் தட்டும் போது
உங்களையே உச்சமாய்
மனதில் வைப்பான்..
கவிதையின் காதலன் ரவி
கோபம் பொறுமையை
இழக்க வைக்கும்..
குணம் பொறுமையை
காத்து நிற்கும்..
வேகம் வார்த்தையில்
சூடு வைக்கும்..
கவலை கண்ணீரை
வடிக்க வைக்கும்..
பொய் பழகியவரை
விலக வைக்கும்..
உண்மை விலகியவரை
தேட வைக்கும்..
கவிதையின் காதலன் ரவி
முடியும் என்று
முடிவு கொண்டேன்..
முடியாத விஷயத்திற்கு
தீர்வு கண்டேன்..
முடியாது என்பவரின்
நிலையை கண்டேன்..
நாளும் ஒரு சிக்கலில்
தவிப்பதை கண்டேன்..
முடியும் என்பதில்
மோகம் கொண்டேன்..
முடியாதென்பதில்
வெற்றி கண்டேன்..
கவிதையின் காதலன் ரவி
தன்னிடம்
இல்லாத திறமையே
இல்லையென்று
நினைக்கிறான்
ஒருவன்..
தன்னிடம்
இருக்கும் திறமையை
அறியாமலேயே
தவிக்கிறான்
வேறொருவன்..
கவிதையின் காதலன் ரவி
துவங்கிய இடத்தைப்
பார்க்காதே
பயணித்து சேரும் இடத்தைப்பார்
Karuppasamy
_பல அவமானங்களை_
_கடக்கும் ஒருவன் மனதில்_
_ஓடும் ஒரே வாசகம்_
_நான் ஒரு நாள் ஜெயிப்பேன்_
RK
சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நீங்களாக இருங்கள். நேரத்தை பயன்படுத்தியவன் தோற்றதுமில்லை வீணாக்கியவன்வென்றதுமில்லை
Mohamed Bilal
யார் பார்வைக்கும்
பிழையாக இருப்பதைக் கண்டு,
நான் வருந்தியதும் இல்லை..!"
என்னை பிழையென உணர வைக்கும் எவரிடமும்,
நான் ஒரு போதும் இருந்ததும் இல்லை..!"
இருக்கும் ஒரு ஆயுளில்,
அவர்கள் பிழையாக கருதுவதைதெல்லாம்,
திருத்தம் செய்ய நான் பிறக்கவும் இல்லை..!"
சரியோ, பிழையோ,
என் வாழ்க்கையில் வருவதை,
முழுமனதுடன் ஏற்று,
அதை அனுபவித்து வாழவே,
நான் பிறந்துள்ளேன்...!!
RK
Kalpana Subramaniam
இரவுக்கு மதிப்பு
விடியும் வரை..!"
விடிந்து விட்டால்,
வானில் தங்காது பிறை..!"
கனவுக்கு மதிப்பு,
களையும் வரை..!"
களைந்து விட்டால், வெளுத்திருப்பது வெள்ளை திரை..!"
மழைக்கு மதிப்பு,
மண்ணை சேறும் வரை..!"
மண்ணை வந்தடைந்து விட்டால்,
வெறும் சேற்று கறை..!"
காதலுக்கு மதிப்பு,
மணவரை வரை..!"
மணவாழ்க்கையில் சேர்ந்து விட்டால்,
தொட்டதெல்லாம் குறை..!"
வயதுக்கு மதிப்பு,
ஐம்பதை தொடும் வரை..!"
காலம் கடந்து போனால்,
மிஞ்சியிருப்பது நரை..!"
வாழ்க்கைக்கு மதிப்பு,
வாழ்வை இரசிக்கும் வரை..!"
வாழ்ந்து பார்க்கலாம்,
ஒரே ஒரு முறை..!"
உடலுக்கு மதிப்பு,
உயிர் உள்ள வரை..!"
உயிர் விட்டுச் சென்றால்,
உடல் மண்னுக்கு இரை..!"
தமிழனுக்கு மதிப்பு,
தமிழ் உள்ள வரை..!"
தாய் மொழி மறந்தவன்,
எச்சில் கறை...!!
*வணக்கத்துடன்*
*என்றும் உங்கள்*
RK
️
Kalpana Subramaniam
உன்னாலே முடியாதோ..
என்னாலே முடியாதோ..
ஒன்றாக நாமும் சேர்ந்தால்,
எல்லாம் முடியாதோ..!"
கையுண்டு,காலுண்டு,
உனக்கான அறிவுண்டு,
நேர்மைக்கு வாழ்க்கை பட்டால்,
வெற்றி நமக்குண்டு..!"
உலகுக்கு இளைஞர் கூட்டம்,
வலிமைக்கு வழிகள் காட்டும்..!"
உனக்கான தேகம் மட்டும்,
உரிமைக்கு வளமை மீட்டும்..!"
எதனாலே பூமி வந்து??
நாமும் பிறந்தோம்
ஜென்மங்கள் நூறு..!"
உன் கையில் மட்டும் தானே,
உந்தன் செல்வங்கள்
உசுராகி,
உலகமெல்லாம் உன்னை பரப்பும்..!"
உனக்காக வாழாமல்,
நீ ஊருக்காக வாழ்ந்து வந்தால்,
உன் பின்னே,
மக்கள் கூட்டம் வாழ்த்து கொடுக்கும்..!"
நாட்டுக்கு நல்ல பனி திட்டங்களை ஏந்தி கொண்டு,
சேவைக்கு உன்னை தந்து,
வாசம் பரப்பு..!"
என்ன கொண்டு வந்தோம்,
என்ன கொண்டு செல்வோம்..!"
கைகளோடு கைகள் கோர்த்து,
ஒன்றாக வாழ்வோம்..!"
முன்னோர்கள் கற்று தந்த வாழ்க்கை,
நமக்கு முக்காலம் சென்றாலுமே,
வாழ்த்து கொடுக்கும்..!"
உன்னாலே முடியாதது ஒன்றுமில்லை,
என்று நம்பு..!"
துன்பங்களை வென்று, இம்சைகளை கொன்று,
இன்பமென்னும் நாட்டுக்குள்ளே,
ஒன்றாக வாழ்வோம்...!!
*நேசமுடன்*
*என்றும் உங்கள்*
RK
Kalpana Subramaniam
பயிற்சி என்னும் முயற்சி
வாழ்வில் ஒரு முறை நிகழ்த்தப்படுவது எதுவென்றால்,
அல்லது ஒரு சில சமயங்களில் நிகழ்த்திக் காட்டப் படுவது எதுவென்றால்,
அது தான் சாதனை!
ஆனால், அந்த சாதனையை நிகழ்த்திக் காட்ட
வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து
பயிற்சியினை ஏற்பது என்பது,
அது தானே வாழ்க்கை!
சாதனைகள் நிகழ்த்தப் படாமலும் கூட போகலாம்
ஆனால் பயிற்சிகளை முன்னெடுக்காமல்
சாதனை மட்டுமல்ல
வாழக்கை என்பதே இல்லை!
அதை மறுக்க முடியுமா?
ஊர் கூடி ஓன்றிழுத்தால் தேரைக் கூட நகர்த்திவிட முடியும்!
எத்தனை பெரிய சாதனைகளையும் நிகழ்த்திவிடவும் முடியும்!
ஆனால் ஒவ்வொருவரும் பயிற்சியை ஏற்காமல்
வாழ்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவதென்பது எப்படி சாத்தியப்படும்?
மன நிறைவு எப்படி சாத்தியம்?
சாதனைகளால் மட்டுமே வாழ்க்கையை நிரப்பி விட முடியாது!
அது பயிற்சி என்னும் முயற்சியினாலேயே சாத்தியப்படும்!
சாதனைகளே வெற்றியாகிவிட முடியாது
ஏனெனில் சறுக்கல்கள் தான் சாதனைகளை நோக்கி
உன்னை நகர்த்தும்!
அந்த சறுக்கல்கள் தான் பயிற்சியின் படிக்கட்டுகள்!
அந்த பயிற்சி தான் முயற்சியின் முதிர்ச்சி!
அந்த முயற்சி தான் வாழ்வின் அர்த்தம்!
மகுட தாரிணி
வாழ்க்கை வரலாறு
S.K.N . Naidu (Bhai)
முதலில் உன்னை நீ நம்பு. அப்போது தான் நீ செய்யும் தொழில் உன்னை நம்பும்.
உருவத்தை வைத்து
யாரையும் தாழ்வாக
கருத வேண்டாம்...
குட்டைவிரலாக இருந்தாலும்
கட்டைவிரல் தான்
கைக்கு தலைமை
தாங்குகிறது..!!
Karuppasamy
எப்படி பட்ட..
வாழ்க்கையா..
இருந்தாலும்..
எதிர்நீச்சல்..
போட்டு வரணும்..
அப்போ தான்..
நாம்..
வாழும் வாழ்க்கை..
செம்மையா..
இருக்கும்..
அதுவும்...
எதிரிஙக முன்னாடி..
இன்னும்..
செம்ம கெத்தாவும்..
இருக்கும்...!!
RK
Kalpana Subramaniam
வாழ்க்கையில் சோதனைகளை, சாதனைகளாக மாற்றுவனாக
நீ இருந்தாலும்..,
நம்பிக்கையை எந்த
நிமிடமும் கைவிடாமல்
நீ இருந்தாலும்..,
தவறுகளில் வாழ்க்கையை திருத்திக் கொள்பவனாக
நீ இருந்தாலும்..,
வெற்றிகள்
எல்லா நிமிடமும்,
இறைவனால் வருவது என,
நீ நினைத்தாலும்..,
நட்பினில்,
நம்பிக்கை உள்ளவரை
தேர்ந்தெடுத்தாலும்..,
காதலில்,
விட்டுகொடுக்கும் மனம் உள்ளவரை
தேர்ந்தெடுத்தாலும்..,
உண்மையில்
உன்னை நீ
அறியாத வரை,
உலகை நீ அறிய மாட்டாய்..!"
உன்னை நீ
அறிந்து கொண்டால்,
உன் வாழ்க்கையும்,
உலகமும்,
நாளை உன் கையில்...!!
RK
️
நீ
சீறினாலும்
சிதைத்தாலும்
நான் சிங்கம் ...
நீ அசிங்கத்தின்
ஆச்சரியக்குறி...
Karuppasamy
அமைதிக்கு ஆயிரம்
காரணங்கள் இருக்க கூடும்..!
ஆறுதல் தர யாருமற்றவர்களாக
மனம் வாடும்..!
அனேகமான கேள்விகள்
விடையற்றதாக இருக்க கூடும்..!
தூக்கத்தின் விளிம்பில்
யோசனை கரைபுரண்டு ஓடும்..!
நிம்மதிக்கு வழியற்று பாதைகள்
அனைத்தும் மூடும்..!
வாழ்க்கை கட்டுப்பாடற்று
அமைதியை எங்கெங்கோ தேடும்..!
அனுபவம் இதுதான் என்று
வாழ்வில் நம்பிக்கை வேண்டும்..!
அன்றே தடையற்ற
புது வழி தோன்றும்..!
RK
Kalpana Subramaniam
எப்படிப்பட்ட
வாழ்க்கையா இருந்தாலும்..,
எதிர்நீச்சல் போட்டு
வாழும் வாழ்க்கை..,
செம்மையா இருக்கும்...!!
RK
Kalpana Subramaniam
முடியாது
என்பது.......!!
முற்றுப்புள்ளி...!!
முடியும்
என்பது........!!
வெற்றிப்புள்ளி
ஸ்ரீஜா
சந்திரசேகர்
ஸ்ரீஜா சந்திரசேகர்
அதிகாலை நீ நினைத்த
நேரத்தில் எழுந்து விட்டாலே
தோல்விகள் உன்னை விட்டு
ஒதுங்கி கொள்ளும்.
Karthi KK
சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில்
தோன்றி விட்டால்.
எது இருந்தாலும் இல்லை என்றாலும்
சாதிக்க முடியும்.
உன் விடா முயற்சியால்.
Karthi KK
மனம் விட்டுப்பேசிப்
பழகவில்லை
என் எண்ணங்களை
எழுதுகிறேன் காகித இதழ்களில்...
Ilakkiya sri
சிறகுக்கும் ஆசை
பறவைகளின் உடலில்
உள்ள சிறகுகள் பறவைகளின்
இலக்கை நோக்கி தானே தாம்
பறக்கிறோம் என வருந்துகிறது
உதிர்ந்த சிறகுகளோ தான்
விரும்பிய இடம் நோக்கி தாம்
பறக்க முடிகின்றதே என
உவகை கொள்கின்றது...
Ilakkiya sri
#எல்லா மாற்றத்திற்கும்
தயாராவதே வாழ்க்கை
#ஏனெனில்
மாற்றம் ஒன்றே மாறாதது
Karuppasamy
உங்களை எவரோடும்
ஒப்பிடாதீர்கள் ...
அவரவர் வழியில் அவரவர்
சிறந்தவர் ...
உங்கள் வழியில் நீங்கள் தான்
சிறந்தவர்
Karuppasamy
நமக்கு பிடித்த ஒரு வாழ்வை நம் கையில் இருந்து தான் அள்ளிக்கொள்ள முடியும்.........
இன்னொருவர் கையில் இருந்து அல்ல...........!!️
Karuppasamy
தேடிக் கொண்டே வாழாதே....
வாழ்ந்து கொண்டே தேடு
இதில் தான் வாழ்க்கை
பயணமாகிறது
Karuppasamy
பொன்மொழிகள்
"எதிலும் நம்பிக் கையை வை !"
S Sankari
பொன்மொழிகள்
"பிறப்பும் இறப்பும் ஒரு முறை
மனம் இணைந்திருந்து வாழ்வோம் பல தலைமுறை"
S Sankari
நடக்க ஆரம்பித்த சிறு பிள்ளை
கடற்கரை மணலில் நடை பயில கீழே விழுந்த மழலையைப்பார்த்து பரிகாசத்துடன் நகைத்தது கடல் பறவை தன் குஞ்சுகளின் நடை கண்டு....
Ilakkiya sri
அழகில் அவள் ஒரு தேவதை
வானம் தன் ஆடையை அவளுக்கு வண்ணமாக்கியதோ
அவள் கண்களிலே
அத்தனை ஈர்ப்பு அவளது
புன்னகை மனங்களை
கொள்ளை கொள்ளும்
அவளது அன்பில்
கரையாதவர் யார் உளர்
எத்தனை பேர் அவளை காதலித்திருப்பார்கள்
ஆனால் அவளை மணந்நவன்
அவளைக் காதலிக்கவும்
இல்லை அவளைப்புரிந்து கொள்ளவும் இல்லை இன்னும்
காத்திருப்புப்பட்டியலில்
அவனும் அவன் காதலும்
அவளது கனவும்....
Ilakkiya sri
யோகா தின வாழ்த்துக்கள்
யோகம் தரும் யோகா
"இருக்கை பணிகள் என்றாலும்
இரு கை பணிகள் என்றாலும்
இரும்பு வளையமாய் வளைந்து வளைந்து போகிறேன்
இறுகி போன இதயம் கரைந்து போகவே !
இணையத்தில் கைகள் ஓடி ஆடி விளையாடும்
கணையத்தில் சர்க்கரை சடுகுடு ஓட்டம் ஓடும்
கழுத்து வலி கழுதை போல் உதைத்தாலும்
முதுகு வலி மூட்டைப்பூச்சி போல் முண்டியடித்து நின்றாலும்
கண்வலி கதகளி ஆடினாலும்
உடல் வலி வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாலும்
என் உடலும் மனதும் புன்னகைக்க வந்தது
யோகத்தைக் கொடுக்கும் யோகாசனம் !"
S Sankari
வாழ்க்கை எனக்கு வாராயோ !
"வண்ணங்கள் ஆயிரம்
வாசல்கள் ஆயிரம்
வழிகள் ஆயிரம்
வாய்ப்புகள் ஆயிரம்
கனவுகள் ஆயிரம்
ஆசைகள் ஆயிரம்
உலகம் ஒன்று தான் அதில்
உண்மைகள் சில நூறு அதில்
உறவுகள் சில நூறு
வாழ்க்கை ஒன்று தான்
நம் மனதும் ஒன்று தான்
நாம் வாழ்வோம் அன்றும் இன்றும் என்றும் நன்று தான் !"
S Sankari
விடை தெரியாத கேள்வியாய் என்னவள் என்னுடன் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் நிழலாக.
Ilakkiya sri
வெற்றி வாகை
வாழ்க்கையில் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும் -
அது அனல் தெறிக்கும் முதற் சுற்று,
தோல்வி யதனை வெல்ல - வெற்றி வாகை யுமதனை சூட,
வெற்றி அதனை நீ எதிர்நோக்கு!
சிரமேற் கொண்டு செயல்படு!
நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் - அனல் தெறிக்கும் இறுதிச் சுற்றை எதிர்நோக்கி!
இயலாமை யதனை வென்று - வெற்றி வாகை யுமதனை சூட,
வெற்றி அதனை நீ உனதாக்கு!
எடுத்து வைக்கும் அடுத்த அடி - அது அனல் தெறிக்கும் இறுதிச் சுற்றை எதிர்கொள்ள,
தோல்வி யதனை வென்று - வெற்றி வாகை யுமதனை சூட,
வெற்றி அதனை நீ இறுகப் பற்று!
மகுட தாரிணி
பண ஓட்டம்
ஏராளம் ஏராளம் வீட்டில்
தாராளம் தாராளம் இல்லை மனதில்
ஏராளம் இல்லை என்றாலும்
தாராளம் உள்ளது எந்நாளும்
பாராளும் பரந்த உலகில்
பரம ஏழை இருந்திடுவான்.
விலைபோகும் பறந்த உலகில்
பரம்பரை பணக்காரன் வாய்த்திடுவான்.
ஏற்றம் தருவது ஏராளம்
தயவு தருவது தாராளம்
ஏற்றத்தின் முதல் வார்த்தை தாராளம்
தயவின் முதல் வார்த்தை ஏராளம்.
S Sankari
கைக்கொள் என் உலகமே !
போகும் இடம் தெரியாமலே கால்கள் ஓடுதே !
காற்றாக கடல் அலையாக நெஞ்சம் பதறுதே !
உறவுகளைத் தாண்டி உணர்வைத் தாண்டி உலகம் வருமா ?
அன்பைத் தாண்டி அரணைத் தாண்டி உலகம் விரும்புமா ?
கேட்கிறேன் கேட்கிறேன் கேளா மொழிகள்
கேட்கிறேன் கேட்கிறேன் கேட்காமலேயே ஏன் இந்த பிறப்பு ?
வறுமை உலர்ந்த இந்த உலகம்
வளமை வளர்க்க என்று வரும் இந்த உலகம்?
போகிறேன் போகிறேன் போக்கிடம் உண்டா ?
போகிறேன் போகிறேன் போகும் இடம் வருமா ?
ஆராரோ ஆரீரரோ என்று பாட வந்தேன் தூங்கு என் உலகமே
ஆராரோ ஆரீரரோ என்று பாடி சொல்வேன் தூங்காத என் உலகமே
பகல் இரவாய் நீயும் நானும்
தனிமையில் இருப்போம் யாரும் அறியாமலே !!"
S Sankari
நேரு மாமா வந்தாராம் !
நேரு மாமா வந்தாராம் !
எங்கள நேரா நில்லுனு சொன்னாராம்
நேர்படப் பேசுனு சொன்னாராம்
நேர்மையா இருனு சொன்னாராம்
நேர்த்தியா வாழுனு சொன்னாராம்
நேருஜி என் பெயருனு சொன்னாராம்
ரோஜா என்னோட அடையாளம்னு சொன்னாராம்
பூமிக்குள்ள நாமிருக்க
நமக்குள்ள உலகிருக்க
ஊரோடு ஒத்து வாழ கத்துக்கணும்
வீட்ட தூக்கி நம்ம நிறுத்தணும்
தப்பு பண்ணா ஒத்துக்கணும்
தப்பிக்க நினைச்சா மாட்டிக்கணும்
காலம் நம்ம கையில
காலால் நம்ம நடக்கையில
வாழ்வோம் உலகைச் சுற்றியே
பெறுவோம் என்றும் வெற்றியே
குழந்தைங்கன்னா விளையாடணும்
குழந்தையோடு நம்ம விளையாடணும்னு சொன்னாராம்
கைநிறைய மிட்டாய்ங்க கொடுத்தாராம்
கைய காட்டி டாடா சொன்னாராம்
S Sankari
காலம் இலையுதிர் காலம்
இனி வரும் காலம் வருங்காலம் !
நாம் ஓடும் பாதை ஒருவழிப்பாதை
ஓடாவிட்டால் இனி வேறுவழி நமக்கு இல்லை !
காலில் விழுந்தால் கடவுள் கருணை நம் வரமாகும் !
காலில்லாமல் வீழ்ந்தால் கடவுள் மூச்சு நம் பேச்சாகும் !
S Sankari
அன்னம் தேடி வந்தோம் இறைவா !
அனாதையாய் வந்து நின்றோம் இறைவா !
இனிமை தேடி வந்தோம் இறைவா !
இல்லம் துறந்து நின்றோம் இறைவா !
உரிமை துறந்து நின்றோம் இறைவா !
உண்மை பேச வந்தோம் இறைவா !
ஊமையாய் பேசுகின்றோம் இறைவா !
ஊனமாய் உன் வழி ஓடி வருகின்றோம் இறைவா !
எண்ணத்தில் வாழ முயன்றோம் இறைவா !
எளிமையின் ஆதாரம் நாங்கள் இறைவா !
ஏளனத்தின் ஆகாரம் நாங்கள் இறைவா !ஏழையின் பசிக்கு உதவுவாய் இறைவா !
ஐம்பூதங்களையும் எங்களுக்குக் கொடுப்பாய் இறைவா !
ஐயந்தீர்க்க ஓடி வருவாய் இறைவா !
ஒளி கொடுக்க கண்ணாக வருவாய் இறைவா !
S Sankari
பொறுமையின் மேன்மை
தீமை இல்லை எனில்
நன்மை விதைக்கப்படுமா?
நமக்கில்லை என்ற போதும்
மற்றவருக்கு கிடைக்க வேண்டும் என்ற
திண்மை உதயமாகாவிட்டால்
தீமையைக் கடந்து
நன்மை நிலைப்பது என்பது சாத்தியமா?
விதைத்தவுடன் பலன்
கிடைக்கவில்லை என்று
முயற்சியைக் கைவிட்டால்
எழும் விரக்தியை விரட்ட இயலுமா?
அடுத்த தலைமுறைக்கு
நன்மையைக் கடத்த உதவிடுமா?
வித்திட்ட மரங்கள் தலைமுறைகள் கடந்தும் பயனளிக்க
தன் வாழ்நாள் முழுவதும்
உழைக்க உத்வேகம் தரும்
உழவுத் தொழில்
நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் பொறுமை என்னும் வேதமல்லவா!
அதையும் நீ மறக்கலாகுமா!
மகுட தாரிணி
தேசியக் கொடி...
பாரினில் பட்டொளி வீசி பறக்கும், தேசியக்கொடியை பாரீர்!
காற்றலை தழுவிக் கொடுக்க, சுருக்கங்களோடு போராடிக் கொண்டிருக்கும்,
தேசியக்கொடியினைப் பாரீர்!
அவை காற்றை எதிரியாக நினைப்பதில்லை!
சுருக்கங்களே முடிவு என்று வருந்துவதுமில்லை!
எத்தனை முறை அலைக்கழிக்கப்பட்டது என்பதை தடையாகக் கருதுவதில்லையே!
தன் சுருக்கங்களையும் பொருட்படுத்தாமல்
தேசத்தின் விடுதலைக்காக அனுதினமும் பாடுபட்ட காந்தியைப் போல!
எத்தனை முறை அலைக்கழிக்கப்பட்டாலும்
அத்தனை முறையும் பட்டொளி வீசி,
பறக்க முயற்சி செய்வது ஒன்றே
அதன் குறி என்பதை அது
நன்கு உணர்ந்திருக்கிறது!
அது போல், நாமும் வாழ்க்கையில்
எத்தனை முறை தோற்க நேர்ந்தாலும்
தோல்வியினையும் வெற்றியினை போலவே
முழுமையாக ஏற்று அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்!
தோல்வியைக் கண்டு மலைத்து விடாது,
தன் கடமையை இனிதே முடிக்க
அனுதினமும் போராட வேண்டும்!
மகுட தாரிணி
நேர்மையும் தன்னம்பிக்கையும்
தன்னம்பிக்கை யற்றவன் தோற்பானென்பது மாயை -
வீழ்வான் என்பதே நிதர்சனம்!
வீழ்ச்சி யில்லா வெற்றி ஏது!
நேர்மைக்கு தோள் கொடுத்தா லன்றி,
உண்மை சரிவது உறுதி!
ஆனால் சரிவே முடிவுமல்ல!
நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி மட்டுமல்ல,
உயர்வும் நிச்சயம் தான்!
உண்மையும் உயர்வும் மட்டுமல்ல - நேர்மையும்,
தன்னம்பிக்கையும் கண்ணெனத் தகும்!
மகுட தாரிணி
நல்லறிவு
மூளைக்கு வேலை கொடுத்தால்
அறிவு வளரும்!
மனிதத்திற்கு அன்பை அற்பணித்தால்
மனிதநேயம் தழைக்கும்!
நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தால்
உண்மை அரும்பும்!
கனவுக்கு செயல் கொடுத்தால்
நம்பிக்கை மலரும்!
நம்பிக்கைக்கு சாமரம் வீசினால்
வெற்றி கனியும்!
அறிவை வளர்த்தி,
மனிதநேயம் தழைக்க,
உண்மை அரும்ப,
தன்னம்பிக்கையை மலர்த்தி,
வெற்றிக் கனியை உனதாக்க -
உழைத்திடு,
நம்பிக்கையோடு,
உண்மையாக,
மனிதநேயத்தோடு,
நல்லறிவை பேணிப் பாதுகாத்திடு!
மகுட தாரிணி
வாழ்க்கை என்பது போர்க்களம் அதை வாழ்ந்து தான் ஆகணும்
RAMADEEBA R
சில மாற்றங்கள்
உருவாக
பல ஏமாற்றங்களை தாங்கிக்கொள்..
சந்தோசம்
தொடர்ந்து வர
சங்கடங்களை
கடந்து செல்..
வெற்றி உன்னை
தொடர்ந்து வர
தோழ்விகளை
கடந்து செல்..
காலங்கள்
கனிந்து வரும்
நேரம் வரை
பொறுமை கொள்..
கவிதையின் காதலன் ரவி
இல்லாத ஒன்றை நினைக்காதே..
கிடைக்காத ஒன்றுக்கு ஏங்காதே..
இருக்கும் ஒன்றை இழக்காதே..
கனவோடு ஒன்றி போகாதே..
பார்த்ததை அடைய முயலாதே..
தேடி வருமென்று நினைக்காதே..
அடைந்து விடவும் துடிக்காதே..
பொருளாசைக்கு அடிமையாகாதே..
மனதில் ஆசையை அடக்காதே..
அன்பை அடக்கி வைக்காதே..
பகிர்ந்து கொள்ள தயங்காதே..
பணத்தை பெட்டியில் பதுக்காதே..
உதவி செய்திட தயங்காதே..
சொல்லில் காயப்படுத்தாதே..
மனம் போல் நடக்க பழகாதே..
யோசித்து செயல்பட மறக்காதே..
தவறை மன்னிக்க தயங்காதே..
தண்டிக்க ஒரு போதும் நினைக்காதே..
உழைத்து வாழ மறக்காதே..
கூலி கொடுக்க தயங்காதே..
இல்லை என்று சொல்லாதே..
எப்போதும் நன்றி சொல்ல மறக்காதே..
நம்பிக்கை தளர்ந்து போகாதே..
எதிர்த்து நிற்க தயங்காதே..
பயிற்சி இல்லாமல் முயற்சிக்காதே..
எடுத்த முயற்சியில் குலையாதே..
வெற்றியை கண்டு மயங்காதே..
தோல்வியில் மனம் துவளாதே..
இருந்த நிலையை மறக்காதே..
முன்னேற ஒரு போதும் தயங்காதே..
தடுக்கி விழுந்தால் தளராதே..
தடம் பதிக்கவும் தவறாதே..
தவறென்றால் கை குவிக்க தயங்காதே..
பெற்றோரை கவனிக்க மறக்காதே..
கடமையில் எப்போதும் தவறாதே..
வெற்றியில் கர்வம் கொள்ளாதே..
புகழை கையடக்க மறக்காதே..
கவிதையின் காதலன் ரவி
வெற்றிக்கனிப்பறித்திடவே
தோல்வி வந்து சறுக்குது
முட்டி மோதி எழுந்திடவே!
முயற்சி கைக்கொடுக்குது!
கதிரவனின் விடியலிலே
நம்பிக்கையும் பிறக்குது
எட்டுவைக்கும்மழலைகண்டு
தன்னம்பிக்கைப்பிறக்குது
தன்னம்பிக்கைவந்திடவே
வெற்றி வந்து குவியுது
வேடிக்கைப்பார்த்த
மக்கள் கூட்டம் தலைநிமிர்ந்து நிக்குது!
PREETHI KARTHIK
வலி என்று ஒதுக்கி
விடாதே அதுதான் உன்னை வலிமையாக்கும்..
தோல்வியை கண்டு துவண்டு விடாதே அதுவே உன்னை வெற்றியாளனாக்கும்..
கவிதையின் காதலன் ரவி
திரும்பிடும் திசையெல்லாம் திசை மாறக்கண்டேன்..
போகும் இடமெல்லாம்
தோல்வியை கண்டேன்..
இனி எனக்கில்லை
தோல்வி என்று
நம்பிக்கை கொண்டேன்..
சாதிக்கும் தைரியம்
எனையாள கண்டேன்..
கடைசி வரை போராடி
வெற்றியும் கொண்டேன்..
கவிதையின் காதலன் ரவி
முயன்று பார்ப்பதில்
பிழை ஏதும் இல்லையே
நண்பா!!!!!!
வா..........
மீண்டும் ஒருமுறை மட்டும்....!!!!!
Kavi
காலம் கடந்துசென்றாலும்
மனம் உடைந்துநின்றாலும்
கனா கரைந்துவிட்டாலும்
உறவுகள் உதறிச்சென்றாலும்
நீ உனக்காக இருக்கவேண்டும்
உன் இலட்சியக்கனவை துரத்தி அடைய வேண்டும்!!!!!
Kavi
எத்தனை முறை விழுந்தாலும்
எழுந்து நின்று போராடு..
யார் என்ன சொன்னாலும் கவலை படாதே ..
உன் பாதையில் நேர்மையாக தொடர்ந்து செல்..
உன் வெற்றியை விதைத்து கொண்டே முன்னேறு..
என்றும் நீயே வெல்வாய்…
நம்பிக்கை என்பது நமக்கு நாமே செய்யும்
ஆயுள் காப்பீட்டு திட்டம் தொடராமல் விட்டுவிடாதீர்கள்…
பிடிக்காத விசயத்தை கண்டுகொள்ளாமலும்,
வேண்டாத விசயத்தில் கவனம் செலுத்தாமலும்,
தேவையற்ற கேள்விகளுக்கு
பதில் சொல்லாமலும்,
இருந்தால் உடலும், மனமும்
ஆரோக்கியமாக இருக்கும்.
உன்னை உதாசீனப்படுத்தும் உறவுகளை எதிரிகளாக நினைக்காதே
உன்னை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் வழிகாட்டியாக நினைத்துக் கொள்!!
வாழ்க்கையில் நாம் காணும் இன்பமும், துன்பமும் நிலையற்றதே
நம் மனதில் தோன்றும் தன்னம்பிக்கையை என்றும் நிலையானது.
John Sophi
கடவுளின் படைப்பில் இவர்களுக்கு..
புரியாதது எதுவுமில்லை
அறியாமை மட்டுமே..
தெரிந்தது எதுவுமில்லை
தெரியாதது மட்டுமே..
முடியாதது எதுவுமில்லை
முயலாதது மட்டுமே..
மிராவின் பயிற்சியில் முடியாததும் இல்லை..
ஆற்றுவிக்கும் ஆசானுக்கு
தோல்வியும் இல்லை..
முடியும் என்ற முயற்சியில் பெற்றோர் இருந்தால்..
நடக்காததும்
விரைந்து நடக்கும்..
முடியாததும்
சிறப்பாய் முடியும்..
எண்ணத்திலும்
வண்ணம் பிறக்கும்..
சிறகு முளைத்து
விண்ணில் பறக்கும்..
கவிதையின் காதலன் ரவி
வறுமையை கடந்து பார்
செல்வம் வரும்..
அழுகையை கடந்து பார்
தைரியம் வரும்..
தோல்வியை கடந்து பார்
வெற்றி வரும்..
அதன் பின்னே சென்று பார்
மகிழ்ச்சி வரும்..
அது நிச்சயம் உன்னை
தொடர்ந்து வரும்..
கவிதையின் காதலன் ரவி
தன்னம்பிக்கையை யாரிடமும் தேடாதே
உன்னுள் தேடு***
Kavi
தோல்வியை ஒரு முறை எதிர்த்து பார்!!!!
உன்னை தோற்கடிக்க யாரும் இல்லை))))!!!
Kavi
முயற்சிக்காமல்
முயற்சி தொடங்காது..
தொடங்காமல் முடிவும் தெரியாது..
பயிற்சி இல்லாமல்
பயின்றிட முடியாது..
எதிர்கொள்ளாமல்
கடந்திட முடியாது..
முடியாது என்ற எண்ணம்
முயற்சிக்க வைக்காது..
முயற்சி செய்தால்
தோல்வியும் தொடராது..
முயற்சியில் உறுதி இருந்தால்
வெற்றிக்கு தடை இருக்காது..
தேடலில் தெளிவு இருந்தால் பயணத்தில் குழப்பம் இருக்காது..
சென்றடையும் இடம் தெளிவில்லை என்றால்..
எந்த திசையிலும் பயணிக்க முடியாது..
முயன்றால் முடியும் என்பதை உணர்ந்து விட்டால்..
தோல்வியே உன் வாழ்க்கையில் இருக்காது..
கவிதையின் காதலன் ரவி
துன்பம் இல்லாத இன்பம் நிறைவை தராது..
தோல்வி இல்லாத வெற்றி அனுபவம் தராது..
நிதானம் இல்லாத வாழ்க்கை நித்திரை தராது..
நிலை இல்லாத மனம்
நிலைத்து நிற்காது..
தேடாமல் உன் திறமை
உனக்கு தெரியாது..
தொடராமல் உன் முகம்
வெளியே தெரியாது..
முயற்சியில்லா வாழ்க்கை
சிகரம் தொடாது..
கவிதையின் காதலன் ரவி
கனவுகள் என்பது
மனதில் உண்டு..
அதில் ஆசை என்பதே
அதிகம் உண்டு..
இலட்சியம் என்பதும்
மனதில் உண்டு..
அதை முயற்சியோடு செய்தால்தான் வெற்றி உண்டு..
வானம் கூட தொட்டு விடா தூரத்தில் உண்டு..
முயற்சித்தால் தொட்டு விட வாய்ப்பும் உண்டு..
தோல்வியும் வெற்றியாய் மாறுவதுண்டு..
முயற்சியும் தோல்வியில் முடிவதுண்டு..
முயற்சிக்க தவறாதே தோல்வியை கண்டு..
ஓடிடும் தோல்வியும் உன் துணிவை கண்டு..
கவிதையின் காதலன் ரவி
உன் வாழ்க்கை
எப்போது உன்னோடு..
துணிந்து செயல்படு
தெம்போடு..
நம்பிக்கை எப்போதும் உன்னோடு..
தோழ்வி எனக்கில்லை
என்ற துணிவோடு..
வானவனும் உடன்
இருப்பான் அன்போடு..
தோல்வியை வென்றிடு துணிவோடு..
வெற்றிகள் எப்போதும் உன்னோடு..
கவலையை கடந்திடு
இன்றோடு..
கவிதையின் காதலன் ரவி
உறுதியான தேடல் இருந்தால் தேனும் தேடாமல் கிடைக்கும்..
உழைப்பும் உறுதியும் இருந்தால் உயர்வும் உண்மையாக கிடைக்கும்..
விடா முயற்யை
விடாமல் இருந்தால்
விட்டதும்
உனக்கே கிடைக்கும்..
தன்னம்பிக்கையும்
முயற்சியும் இணைந்தால்
தோல்வியும் உன்னிடம் தோற்கும்
வெற்றி உனக்கே கிடைக்கும்..
எத்தனை முறை
உனது சந்தோஷங்கள் பறிக்கப்பட்டாலும்
சிரித்து கொண்டே
இருக்கும் பூங்கொடியே..
நானும் சிரிக்க கற்றுக் கொண்டேன்..
உன் சிரிப்பை போலவே
என் சந்தோஷம் பறிக்கப்படும் போதெல்லாம்
உன்னைப் போலவே..
கவிதையின் காதலன் ரவி
எதிலும்....
தோல்வியை நேசித்தால்
வெற்றியை சுவைக்கலாம்...
_Dheerov_ _dheerov_
அன்புள்ள அவமானமே....
"என்னை புரிந்து
கொண்டமையால் நீ
என்னை
அவமானப்படுத்தினாய்,
என்னை
அவமானப்படுத்தியதனால்
நான் என்னை புரிந்து
கொண்டேன் .
என்னை எனக்கு
புரியவைத்தமையால்
உனக்கு நன்றி
சொல்கிறேன் !
அன்புள்ள அவமானமே... !"
"உலகின் சாதனையாளர்கள்
பலரை நீ !
சந்தித்து இருப்பாய்
அந்த வரிசையில்
என்னையும் நீ
சந்தித்தமையால்
உனக்கு நன்றி சொல்கிறேன்
அன்புள்ள அவமானமே...!"
BharathSelva
கை வராவிடில் கரையோடு அலைபேசும் சுமூகமற்ற பேச்சு வார்த்தை
ததியானம்
கை வரபெற்ற
புன்னகையோடு கடந்துபோகும் நிதானம் ஒரு தியானம்
நிலையற்ற வாழ்வு
நிறந்தரமில்லை
என்று அறிந்த பின்
நிம்மதி நிறைந்த
தூக்கமும் ஒரு தியானம்.
Jothi Sukumar
தேடல்களின் மீட்புப்பணி..
****
வேண்டியவை எல்லாம்
விலகி நிற்க
வேண்டியவர்களிடத்தே
வேண்டா விளக்கம் அளித்தே
வெறுப்பில் நிற்கிறேன்
நான்....
விலகிச் செல்கிறதா
என் காலங்கள்
ஒதுக்கி விட்டதா
எனக்கான காலங்கள்
மீளா வினையில்
என் சோகங்கள்
இன்று மீட்புப் பணியிலோ
என் தேடல்கள்...
ஊமையில்லை -
உறக்கச் சொல்லி என்ன பயன்
செயல் இழந்த செவி மடல்கள் முன்
மொழிமாற்றமெதற்கு இங்கு
உணர்வுகள் மொத்தம் இறந்த பின்னே...
சீர்திருத்தம் செய்
செயல் மாற்றம் செய்யென
தன்னை சலவை செய்கிறது மூளை
தேடல்கள் என்னுள் நுழைகிறது
மெல்ல என்னை மீட்கும் பணியில்...
- மகி
அழுகை...
தோல்வியைக் கண்டு
துவண்டு போய்
அழுவதை நிறுத்து
உன் அழுகையினால்
எதுவும் மாறப் போவதில்லை
நீ சிந்திய கண்ணீர் துளிகள்
காய்வதற்குள் புறப்படு
தோல்வியை ஏறும் ஏணியாக
மாற்றிக் கொள்
தோல்வியே வெற்றிக்கான
முதல் படி அல்லவா!!!
அழுவதை நிறுத்து முதலில்...
-s. Alice dipolem music
KaviKuil - COMPETITION
தடைகள் பல வந்தாலும்...
தாவி சென்று ஓடு.....
சோதனை காலத்தை தூக்கி போட்டு விட்டு விட்டு....
சாதனை காலத்தை நோக்கி அடி எடுத்து வை.....
கசப்பான கஷ்டத்திற்கு முன்னேற மன உறுதியை தருவதற்கு இறைவனிடம் மண்டி இட்டு கேட்பதை விட...
முழு உழைப்பை கொடு....
உயிர் போகும் தருணத்திலும்....
சாதனை என்ற ஒன்று இல்லாமல் ஒரு ஒரு அடி எடுத்து வைக்க முன் வராதே...
நீ..
யார் ?
என்று இவுஉலகிற்கு காட்டும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை...
கூடிய விரைவில் உள்ளது....
காதல் என்ற ஒன்று முதலில் வந்தது சாதனையின் மேல்....
ஊக்கமாக முழு ஒத்துழைப்பு முழு ஈடுபாடு கொண்டு முன்னேற்ற பாதைக்கு திரும்ப போகிறது உன்னை போன்ற ஒரு சிங்கம்....
ஆயிரம் தடைகள் வந்தாலும் ஆடு புலி ஆட்டம் ஆடுமே தவிர...
ஒரு அடி பின் எடுத்து வைக்க போவதில்லை...
சிங்கம் சீரும் நாட்கள் காத்துக்கொண்டு இருக்கிறது...
அமைதியாக இல்லை ..
கர்ஜனயுடன் தீட்டி கொண்டிருக்கிறது...
நீ சாதிக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை....
மிக அருகில் உள்ளது....
ஒரு நாள் புரியும் நீ யார் என்று.....
Logesh raja Si
உன் முயற்சிகள் உன்னை
பல முறை கைவிட்டாலும்
நீ ஒரு போதும் முயற்சியை
கைவிடாதே.. முயற்சி தான்
உனக்கான வெற்றியை
உன்னிடம் அழைத்து வரும்.
Alfie jo
முயற்சி செய்து
கொண்டே இரு.
ஒரு நாள் தோல்வி
தோற்றுப்போகும்
உன் முயற்சியிடம்.
Alfie jo
நீங்கா நினைவுகள்
ஏராளம்.
துங்கா இரவுகள்
தாராளம்..
தோல்விகளை
ஏற்றுக்கொள்ளுங்கள்.
சிறிய வெற்றிகளைக்கூட
கொண்டாடுங்கள்..
மகிழ்ச்சியை தேடி
அலைய வேண்டாம்.
அது உனக்குள் தான்
ஒளிந்து கிடைக்கிறது..
உன்னிடத்தில் எது
இருக்கிறதோ
அதைத்தான்
அனைவருக்கும்
தர முடியும்.
வாழ்வில் நிம்மதி பணத்தில் இல்லை! நம் குணத்தில் தான் உள்ளது!
Mani
உங்களிடம் யாராவது வந்து உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்து என்ன சாதித்த விட்டாய்? என்று கேட்டால் தைரியமாக சொல்லுங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பதே பெரிய சாதனை தான் என்று!
Alfie jo
உனக்குள் இருக்கும் உன்னைஅறிந்தால், உலகை வெல்லும் வலிமை கிடைக்கும்!
Alfie jo
பாதை இல்லாத போதும்
உன் பாதங்களை பதிய வை...!
புதிய பாதை ஆகட்டும்...
மல்லி
மலைத்து விடாதே
மலை மீதேறினால்
மலையும் உன் காலடியில்
முயற்சி உனதானால்
வெற்றியும் உன் வசமே
anishya anu
விடாமுயற்சி
என்ற ஒற்றை நூல்
சரியாக இருந்தால்
வெற்றி எனும் பட்டம்
நம் வசமே