Logo
உங்கள் கவிதைகளை பகிர ஆப்பை பதிவிறக்குங்கள்!
Logo

இயற்கை கவிதைகள்

கயிறு இல்லாமல் கட்டி இருக்கிறார்கள். நாயை மட்டும் அல்ல என்னையும், கொஞ்ச விடாமல்

#
கவிதா

பனி துளிர்கூடசுமைதான்மலர்களுக்கு!

#
Pandaya Rajam

இந்த மண் எனும் காதலனுக்கு இந்த மழை எனும் காதலியை கண்டவுடன் என்னே மகிழ்ச்சி, என்னே மகிழ்ச்சி.....

#
thαnnαmpíkkαí ✿

அழகு இடத்தில் அகங்கரம் புகுந்து அலங்கோலம் உருவாகும் ...?

#
Karuppasamy

#புலிகள் எழுத கற்றுக்கொள்ளும் வரை... எழுதப்படும் கதைகள் அனைத்தும்,,, #@வேட்டைக்காரர்களையே புகழ்ந்துகொண்டிருக்கும். ~ஆப்பிரிக்கபழமொழி~

#
Karuppasamy

சிலருக்கு கொடுத்தும் சிலரிடம் பறித்தும் தன்னை நம்ப வைக்கிறான் கடவுள் ...

#
Karuppasamy

பறிப்பதற்கு ஆள் இல்லாமல் தெருவோரம் மலர்ந்து கிடக்கும் பவளமல்லி.. இனிய இரவு வணக்கம்

#
Karuppasamy

மனிதர்களே இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் பூமிக்கு நீங்கள் கொஞ்சக்காலம் வாழ வந்தவர்கள் மட்டுமே யென்று இயற்கையின் சக்தி வலிமையானது அதை மனிதன் அறிவோடும் ஆணவத்தோடும் ஆக்கிரமிக்கவோ அழிக்கவோ அசைத்துப்பார்க்கவோ இயலாத ஒன்றாகும் மனிதநேயத்தோடும்... நட்புணர்வோடும்... அண்டைய நாட்டினரோடும் அகம் திறந்து வாழ்ந்திட பழகிக்கொள்ளுங்கள் நான் பெரியவன் நீ! பெரியவனென்று இருமாப்போடு இருந்திடாதீர்கள் இயற்கையின் சீற்றத்திற்கு வல்லவன் நல்லவனென்று ஒருபோதும் தெரியாது ஆனால் மனிதனாகப்பிறந்த உங்களுக்குத்தெரியும் நம்மைப் போலத்தான் இம்மண்ணில் பிறரும் வாழப்பிறந்துள்ளார் களென்று மனிதா! உனது ஆணவத்தாலும் போட்டி பொறாமையாலும் நீ! செய்த தீங்கிற்கு நாங்களும் அழிந்துதான் போகவேண்டுமா ? இயற்கையின்முன் மனித சக்தி மண்டியிடத்தான் முடியும் வென்றிடமுடியாது இனிமேலாவது மனிதம் துளிர்விடட்டும் வனமும் செழிக்கட்டும் உலகமனிதர்களை நல்வழிப் பாதைக்கு அழைத்துவர காட்டு விலங்குகளான எங்கள் இனம் அழிந்துபோவது இதுவே இறுதியாக இருக்கட்டும் எங்கள் மரணமும் மனித குலத்திற்கு பாடமாக இருக்கட்டும் இந்த பதிவே அடுத்த முறைகளுக்கு சாட்சியாக இருக்கட்டும்... இப்படிக்கு தவணை முறையில் மரணப் பாதையில் பயணிக்கிற அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் வனத்தின் உயிரினங்கள் கனத்த வலிகளுடன் கடையநல்லார் கா.ஆசைத்தம்பி.

#
Ram siva

Dark, Royal Sacred Womb Vacancy Shelter: The creation in darkness, in dark zone the new load in womb is happened in dark womb. The poor, blur, non transparent womb not covered with royal family base and any glamourous or VIP touch is known as Dark Womb. The dark womb root is not from any royal family. The vacancy of womb is now filled with creation, again the new vacancy will be created after the creation is outed from womb and served to Universe. In order to balance creation in Universe the vacancy of Womb is mandatory. If there is no vacancy fulfilment of womb then universe creation will be stopped. The number of vacancies for all mothers determines new creation number and serving number. When the womb is connected with creation portal, through the creation channel then womb is filled by new creation and submission of creation to final destination Universe is done as final process. The vacancy of womb always invites new creation through Universe channel. The outer struggle, hard work, each effort by a kind compassionate grounded humble mother for protection of creation in womb, the struggle effort dedicated for the womb and it's inside creation is possible only in dark womb. The dark womb is surrounded by pain, struggle, effort of a mother. The inside womb vaccum, in womb region where no one is seeing the creation, the creation which is hidden from universe, which is unseen by universe is known as Dark Womb. The stored creation in womb region, the alone isolated mother seperated from Universe, neglected by everyone having dark life and dark emotion, the new life holded by womb gets affected by the already existing living life. The womb which is not glowing, light outside, the universe light only for all earth members showing the path but not for member living in womb home is dark womb. The womb dedicated to a new creation by a sacred mother living a holistic spiritual happy pure life is known as Sacred Womb. The only safe and secured shelter in universe for a new creation child is nothing but womb. Womb Discharge Emit Boundary Terminal Journey: The new creation emitted from Womb, discharged from Womb to Universe, the path from Womb to Universe outside world. The terminal of womb towards universe, ended at earth, the womb journey is covering the whole path distance from Womb to Universe. The safe, secure and protective boundary of womb wall is bounded when the creation is inside of boundary is safe and hassle free.

#
Arka Samanta

முகம் கழுவியது மேகம் சுத்தமாகியது பூமி......

#
Karuppasamy

நீ தேடா விட்டாலும் உன்னை தேடி வரும் உனக்கானது.. தேடி அலைந்தாலும் கிடைக்காது உனக்கில்லாதது.. தேடாமல் கிடைப்பது நிலை இல்லாதது .. நீ தேடாமல் உன்னை தேடுவது கடவுள் உனக்கு கொடுத்தது..

#
கவிதையின் காதலன் ரவி

கடலுக்கு எல்லை வைத்த இறைவனே.. மனதுக்குள் ஆசையை வைத்தான்.. நிலவுக்குள் அமைதியை வைத்த இறைவனே ஆதவனுக்குள் கோபத்தை வைத்தான்.. மனிதனிடம் ஒலியை வைத்த இறைவனே.. ஒலி வழியில் மொழியை வைத்தான்.. மொழியில் இனிமையை வைத்த இறைவனே அதற்கு தேன்தமிழ் என்று பெயர் வைத்தான்..

#
கவிதையின் காதலன் ரவி

பொய் என்பதை உணரும் வரை பொய்யும் உண்மையாகதான் தெரியும்.. உண்மையை உணராவிட்டால் பொய்யே உண்மையாக தெரியும்.. உணரும் மனநிலை சமநிலையில் இருந்தால்.. பொய்யை உணரும் நிலை தன்னால் வரும்..

#
கவிதையின் காதலன் ரவி

பக்தியோட போரவனுக்கு தான் அது பிரசாதம். பசியோட போறவனுக்கு அது வெறும் சாப்பாடு தான். பிரச்சனை கோவில்லயோ கடவுளிடமோ இல்ல மனிதனின் மன நிலையில் தான்...

#
Karuppasamy

மனம் மயக்கும் மல்லியில் மணம் வைத்தது யார்.. மலரும் முன் மல்லியில் இதழ் வைத்தது யார்.. தினம் மலர்ந்து எனை மயங்க வசியம் செய்தது யார்.. வழியில்லா பூவிற்குள் தேன் வைத்தது யார்.. காலையில் இதழ் விரித்து மாலை வரை மணம் வீச மாயம் செய்தது யார்..

#
கவிதையின் காதலன் ரவி

எதுவுமில்லை என்பவனுக்கு எது கிடைத்தாலும் சந்தோஷம்.. எல்லாம் இருப்பவனுக்கு எது கிடைத்தாலும் அலட்சியம்..

#
கவிதையின் காதலன் ரவி

எத்தனை வயதென்று எல்லோரும் பார்த்தனர் பாடையில் சென்ற பிணத்துக்கு #நா_முத்துக்குமார்

#
Karuppasamy

நீங்கள் நட்டு வளர்க்கும் எல்லாப் பூந்தொட்டியிலும் நடாமல் வளர்ந்து விடுகிறது ஒரு பசும் புல். ¢^^^~ கல்யாண்ஜி~^^^¢

#
Karuppasamy

கத்தியால் காயம்பட்டு கதறி அழுத இளநீருக்கு தன் உதடுகளால் முத்தமிட்டு ஆறுதல் படுத்தினாள் பெண்..!

#
Karuppasamy

ஒரு செடியைப் பாதுகாப்பதும் தண்ணீர் ஊற்றுவதும்தான் நம் வேலை. அதிலே என்ன காய்க்கவேண்டும் எப்படிக் காய்க்கவேண்டும் என்பது நம்முடைய தீர்மானம் இல்லை. ~ ஜெயகாந்தன்~

#
Karuppasamy

கண்ணாடியை போன்றவர்கள் அன்பானவர்கள். சிரித்தால் சிரிப்பார்கள். அழுதால் அழுவார்கள்..

#
Karuppasamy

எனக்கு யாரும் தேவையில்லை என்ற வார்தைக்கு பின் யாரோ ஒருவரின் ...~நம்பிக்கை~ துரோகம் இருக்கு..

#
Karuppasamy

ஆதவனின் விடியல் உன் பொன்னிற இதழ் கண்டு தானோ உன் பொன்னிற மொட்டுக்களை அவன் அணைக்கையில் மேலும் வண்ணம் பெற்ற உன் ஜொலிப்பினில் வண்டுகளின் ரீங்காரம் செவிகளை வருடியதில் இதழ்களை விரித்தாயோ...

#
Ilakkiya sri

மழையின் புன்னகை மேகத்தைக் கலைத்து ஆதவன் புன்னகைக்கும் வரை...

#
Ilakkiya sri

அவ பாதம் தழுவ வானத்திலிருந்து விழுந்தது தான் மழை...!

#
Karuppasamy

வெள்ளை அது நிறம் அல்ல அவர்களது குணம் பணிவு அதில் துணிவு அதனுடன் இணைந்த அறிவு இரக்கம் உள்ள உள்ளம் தான் உடலை கிழித்து பார்க்கும் கடவுள் தான் இன்று அன்னையை எட்டி உதைத்தால் உன்னை கட்டி போடும் இந்த மருத்துவம்தான் தங்க குடத்தில் உன் தலையை தூக்கி உன்னை தாங்கும் முதல் கை மருத்துவம் தான் புருவம் முளைத்த புதிய கண்கள் பார்க்கும் முதல் முகம் மருத்துவம் தான் -சாதகன்

#
சாதகன் கவிதைகள்

சற்று நேரத்தில் மலராகத் தெரிந்திருக்குமோ என் தலையை தட்டிச் சென்ற வண்ணத்துப் பூச்சிக்கு ஆம் இனிப்பாக இருந்தது அந்த நோடிப்பார்வை ......

#
Karuppasamy

உன்னோடு நனைவதாக இருந்தால் மட்டும் நிற்காமல் பெய்து கொண்டே இருக்கட்டும் எந்நாளும் இந்த மழை...!

#
Karuppasamy

பார்வையற்ற ஒருவருக்கு சாலையை கடக்க உதவினேன் சிறிது நேர கண் தானம் செய்த திருப்தி ...

#
Karuppasamy

காத்திருப்பு அவசியம் ! எத்தனை புழுக்களுக்கு தெரியும் தான் ஒருநாள் பட்டாம்பூச்சியாய் பறக்கத்தான் போகிறோம் என்று

#
Karuppasamy

முருங்கை மரம் சத்தானவன் நித்தமும் சுவையானவன்.. சர்க்கரைக்கு மருந்தானவன்... சமையலுக்கு உதவி சாஸ்திரங்களுக்கு எதிரானவன்.. வயதானவர்களை வசைபாட வைக்கும் வயாக்ராவே.. வாலிபர்களை முனுமுனக்க செய்த நயாக்ரா வே வாழ்க வளர்க ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

இருள் மலரும் மாலை குறுநகை புரிய எழில் கொஞ்சும் அருவியினை அள்ளி அணைத்த கார் மேகங்கள் அருவியினைக்காண இயலாது தரை இறங்கிய தாரகைகள் அருவியினொடு கொஞ்சி கலந்த மினுமினுப்பினில் மயங்கிய சிறுமி அந்நீரினை தன் கைகளிலே அள்ளி பூசிக்கொண்டாள் அவளின் வதனம் எழிலுடன் மின்ன அதனைக்கண்ட தென்றலும் ஆசை கொண்டு முத்தமிட்டது...

#
Ilakkiya sri

திமிங்கலம்.. ஆச்சரியத்தின் அதிசயமே... அறிவியலின் அளவுகடந்தவனே. ஆழ்கடலை ஆட்சி செய்து அட்லாண்டிக்கை கோலாச்சும் அபாயகரமான பாலூட்டியே.... நீளமாய் நீல வர்ணமாய் நீந்தும் முதுகு நாணியே... எடை மிகுதியான எல்லை கடந்தவன் எண்ணற்ற வகை இனமே... தீர்க்காயுள் திருப்பதிகமே.. தொடரட்டும் உன் வளமே.. இரவு வணக்கம் ராமசாமி..

#
Ramasamy Ramasamy

மழை மணமகளே... மேகங்களால் முந்தானை தரித்து நட்சத்திரங்களால் நகை பூட்டி நாணத்தால் கட்டைவிரலில் கோலம் போடும் காவியமே... ஆடி மாசம் அதனால் தான் என்னவோ.. அம்மி மிதிக்காமல் அழுகிறாய்.. அருந்ததி பார்க்காமல் வருந்துகிறாய்... என்னவளே தாவரவியல் சொந்தங்கள் உண்டு வரன் பார்க்க... நன்றி ராமசாமி...

#
Ramasamy Ramasamy

மழை... பனி திவலை எனும் ஈர சேலை கட்டி வையகத்தின் மேல் சம்மணம் போடும் சாரல் மழையே... பூமியின் பூகோளத்தில் கார்முகிலாய் பூபாளம் பாடி... பூமாதேவியின் சன்னிதானத்தில் வேதமாய் ஓதும் மழை தூரலே... அர்ச்சனை பூக்களாய் ஆலாபனை செய்யும் ஆலங்கட்டியே... உன் ஆசீர்வாதம் தொடரட்டும்... வாழ்க வளமுடன் ராமசாமி

#
Ramasamy Ramasamy

வர்ணிக்க இயலாத தேவதை நீ உன்னை வர்ணிக்க நினைத்திடும் ரசிகன் நான்

#
Karuppasamy

நிழல் நிச்சியமானவன் நிஜத்தை பிரதிபலிப்பவன்... தொடர்பவன் தொட்டு விடாதவன் விடாத நேசம் விலகிடாத பாசம் தொடர்கின்ற பந்தம் தொடாத சொந்தம் உருவமானவன் உயிரற்றவன்.... உடலானவன் உறுதியற்றவன்.... இரவை மிரட்டுபவன் இதயத்தை பயமுறுத்துபவன்.... இரக்கமற்றவன் இறுதிவரை தொடர்பவன்.... முடிவு இல்லாதவன் முற்றுப்பெறாதவன்... உண்மையுடன் ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

நிலா... குறிஞ்சி மலரே.. செம்பருத்தி பூ நூல் தொடுத்து ரோஜா பூ துகில் உடுத்தி மல்லிகை பூ பூச்சூடி மகிழம்பூ மாலை சூடி... வாழை மடல் தாமரை ஆனவளே .. சம்பங்கி பூ சம்பந்தம் செய்து செவ்வந்திப் பூ அழைப்பிதழ் அடித்து செவ்வரளி பூ ஊர் முழுக்க தந்து நாகலிங்க பூ நாதஸ்வரம் நடக்க கனகாம்பரம் பூ கச்சேரி செய்ய... முருங்கப்பூ சமையல் மணக்க முல்லைப் பூச்சூடி மாதுளம் பூ மணவாளன். பூளைப் பூ பந்தலிட்டு புளியம்புவாய் வீற்றிருக்க... இலவம் பூ கால் கொண்டு நீ வர இலவு காத்த கிளி.. அனிச்சம் பூ கனவு கொண்டு.. என்று வரும் இந்த அல்லி... வேப்பம் பூவே இந்த தடாகத்துக்கு நீரை கொண்டு.. எப்போது வருவாய் மனோரஞ்சிதம் பூவே ராமசாமி...

#
Ramasamy Ramasamy

குருவியின் அறைகூவல் தானியங்களை ருசிக்கிறேன் தன்னம்பிக்கையை வளர்கிறேன் புழக்களை உண்கிறேன் பூக்களில் தேனை ருசிக்கிறேன்..எனக்கு இல்லை சேமிப்பு என்னில் இல்லை இறுமாப்பு.. கூடி வாழ்கிறேன் கூட்டுக்குள் உறைகிறேன் மனையாளை நேசிக்கிறேன் மக்களை சுவாக்கிறேன் உறவுகளை யாசிக்கிறேன் உண்மையை வாசிக்கிறேன் ஏய் மனிதா... மனங்களை நேசி மனிதநேயத்தை சுவாசி வாழ்க்கை ரசி எதிர்காலத்தை யோசி ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

வனம் காப்போம் மரங்கள் மலர்ந்து இறந்து போகும் நொடிகளுக்காக கூட கவலைப்படவில்லலை வெட்டப்படுகையில் வேதனை விம்முகிறது.. ஏய் மானிட.. விலங்குகள் விருட்சம் குறைகிறது வேலைவாய்ப்பு மறைகிறது. மழைப்பொழிவு மறைந்து போகிறது மனித வளம் தேயும்... காற்று குறைகிறது கலிகாலம் தொடர்கிறது சித்தா சிதைகிறது ஆயுர்வேதம் அழிகிறது இயற்கை காப்போம் இளையதலைமுறைய தளிர்க்க செய்வோம் ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

பனை வெல்லம் தரும் வெள்ளந்தியே வென்மையான நுங்கு தரும் பனையே... கள் தரும் கள்ளியே கருப்பட்டி தரும் கமுகே கலைப்பொருள் தரும் செல்வமே... காலத்தால் அழியாத பனையே...ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம் ஆண்டை குறிக்கும் குறிப்பேடு தருபவனே யுகம் கடந்தவன் வேதங்களில் வாழும் விற்பனன்னே வாழ்க நின் புகழ் வளர்க உன் செல்வம் ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

தக்காளி பழம் சல்லிவேரில் உருவாகி சாமானியன் வாழ்வில் பின்னிபிணைந்தவன் மெல்லிய மேலாடை உடுத்தியவன் மெல்லிடையளின் கன்னத்திற்கு சொந்தக்காரன் இதயத்தை வசீகரிப்பவன்... இரத்தத்தை சுத்திகரிப்பவன்... இல்லாளை கவர்பவன் இல்வாழ்வில் நிறைந்தவன்... விருட்சமானவன் விதையில் என்னில்லாடங்காதவன் விவசாயத்தில் கைதேர்ந்தவன் விலைவாசியில் கண்ணிரீல் கலந்தவன் அரசாங்கத்தை ஆட்டிபடைப்பவன் ஆள்வோர்களுக்கு தண்ணீ காட்டுபவன்... என்னே புதுமை... தொடருட்டும் இளமை ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

வவ்வால் வாயால் எச்சில் இடும் வல்லினமே.. வைரஸை வைரலாக்கிய் வவ்வாலே... வழக்காடு மன்றம் செல்லாமல் வாழ்க்கையை மரண பயம் செய்து மயானத்திற்கு பாதை அமைத்தவனே பழம்தின்னி பாலூட்டியே பகலில் வெளிவராத சூனியே நாடுகளை நடுங்க வைத்த நரம்பு இல்லாதவானே.. நானம் இல்லாமல் குலை நடுங்க வைத்த கொலைகாரனே.. இரவில் உலாவரும் ஆவியே..இனம் ஆயிரம் உள்ளவனே.. நரிமுகம் கொண்டவனே கரியநிறம் உடையவனே.. ஏனிந்த கோபம் என்று தீரும் தாகம் ஆவலுடன் ... ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

தான் அழகு என்பது மயிலுக்குத் தெரியாது ! தான் அழகில்லை என்பது காக்கைக்குத் தெரியாது ! பிரச்சனை எல்லாம் நம்மகிட்டதான்...?

#
Karuppasamy

இடி தாங்கிக்கொள்ள கோபுரத்தில் "கலசங்கள்" அவசியமாகும்....

#
Karuppasamy

நிலா... இலக்கண தாய்ப்பால் குடித்த இளவலே.... இரவின் மடியில் தவழ்ந்த தென்றலே.. நித்தமும் நித்திரையை நினைவால் நியாயப்படுத்திய வள்ளலே.... வெண்ணிற ஆடை உடுத்தி விதவைக் கோலம் வியாபித்த வெள்ளந்தியே.... புரட்டாசி மாதம் புரண்டு போக ஐப்பசியில் சீர் கொண்டு வாரேன் இடைவிடாது கண்ணீர் சிந்தாதே பிரியமுடன் வையகம்... இரவு வணக்கம்.. ராமசாமி.

#
Ramasamy Ramasamy

எங்கிருந்தோ என்னை அளவெடுத்து கொண்டு இருக்கிறாய் தைக்க முடியாமல் தவிக்கிறது மனசு.. ..

#
Karuppasamy

புழு‍️ தாவரங்களை ருசிக்றேன் தன் கூட்டுக்குள் உறைகிறேன். மாதம் ஒரு மாற்றம் வளர்சிதையால் பல உருமாற்றம் வாழும் போது வெறுக்கப்படுகிறேன் வண்ணத்துபூச்சீயாய் பறக்கும் போது நேசிக்கப்படுகிறேன். எனக்கு இல்லை மணவாழ்வு இல்லை இல்லை நீண்ட ஆயுள் வாழ்வு... எந்த கவிஞர்களும் பாடவில்லை மெட்டு ஆனாலும் தருகிறேன் அழிக்கமுடியாத பட்டு. வாழும் போது நேசிக்கின்ற நபரை விட விட்டு செல்லும் போது சுவாசிக்கின்ற நபராய் இரு. வாழ்க அரும்பணி வளருட்டும் சமுதாயப்பணி ராசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

சிந்திக்கும் நேரம் குறைவாக இருந்தாலும் நல்லதையே சிந்தியுங்கள் .. ! சந்திக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் நல்லவர்களையே சந்தியுங்கள் .. !

#
Karuppasamy

கண் மூட மறுக்கின்றன உதிர்ந்து விழுந்து விடுவோமோ என அழும் உலர்ந்த இலைகளின் சத்தங்கள்...

#
Ilakkiya sri

வெண் மேகங்கள் தரை இறங்கினால் விலங்கினங்களும் மெத்தையில் துயில் கொள்ளுமே இதமாக...

#
Ilakkiya sri

விண்ணில் உலவும் கார்முகில்கள் கன மழை பொழிவித்தால் மண் உளோர் நீந்தி தான் கரை சேர வேண்டும் விண்ணில் உலவிடும் கார்முகில்கள் மண்ணில் இறங்கினால் ஞாலம் இருளில் மூழ்கி விடும்...

#
Ilakkiya sri

மகிழ்ச்சியை எங்கே இழந்தீர்களோ அங்கேயே தேடுங்கள்......... ஆனால்........... மகிழ்ச்சியை இழந்த மனநிலையோடு தேடாதீர்...........!! @வெளிநாட்டுக்காரன்

#
Karuppasamy

மழையில் நனைந்த நிழல் அதன் அங்கம் நனையவில்லை வாசம் நுகர்கின்றது...

#
Ilakkiya sri

மழையில் நனையாமல் இம்மேகம் அனைவரையும் நனைத்துக்குளிர்விக்கின்றதோ...

#
Ilakkiya sri

அலட்சியப்படுத்தும் மனிதர்களை மறந்து... இசையோடு சற்று உரையாடி பார்... உன் உணர்வுகளின் மதிப்பை அறிந்து கொள்வாய்....

#
Freash Status

மழைக்கும் ஆசை வந்ததோ தெளிந்த நீரினுடைய பொய்கையின் அருகே அமர்ந்த அவனின் அழகான பிம்பம் கண்டு அல்லி மலரோ ஏங்கித்தவிக்க மாரியோ பொறாமை கொண்டு தூற பொய்கையே கலங்க மழைக்கு என்னே மகிழ்ச்சி...

#
Ilakkiya sri

கனவுகள் முடிந்து விட உறக்கம் கலைந்து விட ஆதவனும் கண் விழித்திட மலர்கள் மலராத மரக்கிளைகளில் சுற்றிக்கொண்ட கொடிகளில் பூத்து நின்ற மலர்கள் அழகிய மலர்த்தோகையினை விரிக்க மரத்திற்கோ மகிழ்ச்சி தானே மலர்களை ஈன்றது போல் இவைகளை அள்ளி இரசித்திட்ட விழிகள் பூத்து நின்றதோ...

#
Ilakkiya sri

இடி மின்னல் வானில் வன்முறை..

#
Karuppasamy

மண் மட்டுமல்ல மனித மனங்களும் தளர்ந்ததுக் கொண்டே தான் சென்றுக் கொண்டிருக்கிறது... தொடர்ச்சியாக நிகழும் பேரிடர்களால்... வளர்ச்சிப் பாதையும் இயற்கையோடு இயைந்த வாழ்வும் இரு துருவங்களாகிப் போக, இயற்கையோடு இயைந்த வாழ்வென்பது முற்றிலும் கனவாகிப் போக, இயற்கையின் கோரப் பசிக்கு உயிர்களைத் தீனியாக்கவா நாம் மனிதத்தை வளர்த்தெடுத்தோம்! உடன் கொண்டு செல்ல இயற்கைக்கு உயிர்கள் தான் கிடைத்ததுவோ? மனித உயிர்களின் பாதுகாப்பு மரங்களைப் போல வேர்களின் பிடிப்பினையோடு நின்று விடவில்லை... மண்ணின் இறுக்கத்தையும் நம்பித் தான் இருக்கின்றது... இதனை ஆண்டாண்டிற்கும் நினைவு கூறும் இந்த கேரள நிலச்சரிவுப் பேரிடர்... படிப்பினைப் பொய்க்க பிடிப்பினையுமின்றி தவிக்க கல்லாகிப் போன மனங்கள் என்பதைக் கடந்து பிடிப்பினைத் தளர்ந்த மண்ணாகி, மண்ணுக்கடியில் உறைந்து கிடப்பது இயற்கை எழில் மட்டுமல்ல விலை ஒப்புமையற்ற மனித உயிர்களும் தான்... ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும்... கசப்பானதாகவே இருந்தாலும்... ஆயிரம் கனவுகள் சுமந்த அந்த விழிகள் சந்தித்தது ஏமாற்றம் தான்... மீளா இருளில் மறித்துக் கிடக்கின்றன... சடலங்களாக... அந்த இறுதி நொடிகளில்... அவர்களின் இதயத் துடிப்பினை அறிய உபகரணங்கள் மட்டுமே தேவை என்பது இல்லை... மனித நேயமும் உடனிருந்தால் போதுமானதா? அவர்கள் நிலையில் நம்மை வைத்தால் நம் மனமே சொல்லும் விடியா இரவில் சிக்கிக் கொண்டு விட்ட அவர்களின் மனக் குமுறலை... புதைந்தது உடல்கள் மட்டுமல்ல அவர்களின் மனங்களும் தான்... தோண்டிப் பார்த்தால் அது துடித்துக் கொண்டிருப்பது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் நலனுக்காகவே இருக்கும்... இப்போதாவது விழித்துக் கொள் மனிதா பாடம் கற்றுக் கொள் என்று...

#
மகுட தாரிணி

ஒவ்வொரு நபரும் ஒரு அடையாளத்தை விட்டுச்செல்லும் ,, ஒரு துண்டு *காகிதம்* போன்றது, ஒரு குழந்தையின் வாழ்க்கை.

#
Karuppasamy

மின்னிக் கொண்டு இருக்கும் கோடி நட்சத்திரங்களில் எனக்கு பிடித்த இரண்டு உன் கண்கள் தான்

#
Karuppasamy

#அவளை தாண்டிச் செல்லவும் இயலவில்லை,.. #அவளை தேடிச் செல்லவும் இயலவில்லை..

#
Karuppasamy

எதையும் எனது எனக்கானதென்று பிடித்து வைத்துக்கொள்ள முயல்வதே ஆகச்சிறந்த முட்டாள்தனம்...

#
Karuppasamy

கனவு காண்கையில் காகங்கள் கரையும் பொன் காலைப்பொழுதை செவிகள் அறிவதில்லை தேநீரின் சுவையை நாக்கு உணர்வதில்லை மலரோடு பேசி அதன் வேட்கை தனிக்க இயல்வதில்லை தவழ்ந்து வரும் என் மகனிடம் கொஞ்சி பேச முடிவதில்லை எனக்காக காத்திருக்கும் காதலியை காண முடியாது தடுமாறுகின்றேன் தலைவியோ இரவின் மடியில் என் கண்களை மயில் இறகால் வருடி முத்தமழையில் நனைத்து என் கனவுகளைக்கலைத்தாள்...

#
Ilakkiya sri

இலைகளுக்கும் நீராட ஆசை மண் தன் அழகை மறைத்து தன்னை ஆளுமை செய்கிறதே என மனம் தளர மழையோ இலைகளின் துயர் துடைக்க சாரலில் நனைக்க மண் சரிய தன் மொத்த அழகுடன் வண்ணமயமாய் சிரித்தது இலைகள்...

#
Ilakkiya sri

இலைகளுக்கும் நீராட ஆசை மண் தன் அழகை மறைத்து தன்னை ஆளுமை செய்கிறதே என மனம் தளர மழையோ இலைகளின் துயர் துடைக்க சாரலில் நனைக்க மண் சரிய தன் மொத்த அழகுடன் வண்ணமயமாய் சிரித்தது இலைகள்...

#
Ilakkiya sri

ஏமாந்து போவதற்கு முட்டாளாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அன்புக்கு ஏங்கும் மனம் கொண்டவர்களாக இருந்தாலே போதும்.

#
Karuppasamy

ஆகாயத்தைப் பார்க்கும் போது வானம் நம்மிடம் பேசும் மொழிகள் நமக்குப்புரிவதில்லை இலைகள் வியர்க்கையில் குளிர் தென்றலை நல்குகிறது நம் காத்திருப்பு அறிந்து இருள் விலக்கி விடியலை நல்குகிறது மோகம் கொள்ள இரவினை நல்குகிறது நிதமும் நாம் விரும்பியதை அள்ளித்தரும் வானத்தின் மொழிகள் எண்ணிலடங்கா...

#
Ilakkiya sri

இன்று ஒரே இருள் சூழ்ந்துள்ளதே நிலவு மகளே மேகத்தொடு கலவி கொண்டாயோ மேகம் தன் ஆடையை உனக்கு நல்கியதா இரவே தெரியாமல் உலகமே தேடினதோ உன்னைக்காணாது...

#
Ilakkiya sri

வந்தது வந்தது கடவுள் வடிவிலே இரக்கம் வந்தது குழந்தை வடிவிலே மழலை வந்தது மான் வடிவிலே மானம் வந்தது மீன் வடிவிலே மினுமினுப்பு வந்தது மயில் வடிவிலே மயக்கம் வந்தது குயில் வடிவிலே  சங்கீதம் வந்தது யானை வடிவிலே களிப்பு வந்தது பூனை வடிவிலே நேசம் வந்தது புலி வடிவிலே புயல் வந்தது சிங்கம் வடிவிலே சீற்றம் வந்தது பெண் வடிவிலே ஊக்கம் வந்தது ஆண் வடிவிலே ஆக்கம் வந்தது மகன் வடிவிலே உறவு வந்தது மகள் வடிவிலே உரிமை வந்தது மனைவி வடிவிலே மாற்றம் வந்தது கணவன் வடிவிலே கடமை வந்தது ஆடை வடிவிலே ஆடல் வந்தது நகை வடிவிலே மதிப்பு வந்தது பசி வடிவிலே வறுமை வந்தது பசு வடிவிலே பாசம் வந்தது கன்னி வடிவிலே கற்பு வந்தது இளவன் வடிவிலே இளமை வந்தது ஊமை வடிவிலே ஊனம் வந்தது ஊசி வடிவிலே உயிர் வந்தது ஏணி வடிவிலே ஏற்றம் வந்தது கணித வடிவிலே இறக்கம் வந்தது உலக வடிவிலே காற்று வந்தது காற்று வடிவிலே மூச்சு வந்தது தாய் வடிவிலே தாரம் வந்தது தாரம் வடிவிலே தாய்மை வந்தது தாய்மை வடிவிலே பெண்மை வந்தது பெண்மை வடிவிலே அழகு வந்தது கண் வடிவிலே காட்சி வந்தது இதய வடிவிலே காதல் வந்தது

#
S Sankari

மெய்ப்பிக்கும் அழகு "கண்ணனுக்கு மெய் அழகு இசை பாடும் சொல் அழகு தமிழ் கேட்கும் கண்ணன் குரல் அழகு ஸ்ருதி சேர்க்கும் குழல் அழகு விண்மீன் சென்றாலும் கருமேகந்தான் அழகு பொன்னூஞ்சல் வந்தாலும் வானவில் தான் அழகு"

#
S Sankari

பொன்மாலை கீதம் "பால் நிலா பாவையாய் நீல வானம் வீணையாய் வெண்மேகம் பாடலாய் கருமேகம் கீதமாய் மழைச்சாரல் ஸ்வரங்களாய் நித்தம் பொழியும் பொழியும்......"

#
S Sankari

வாழ்க்கையொரு நெடும் பயணம்.... வழித்துணைகள் ஏராளம். வரும்கால வைகறைக்கு நம்பிக்கையே பூபாளம்.

#
Panner Selvam

மானுடம் மறுத்த மரங்களை எற்றுக்கொண்டதாலோ என்னவோ, முதல் தளத்தில் கூடு கட்டி ஊஞ்சலாடியபடி எட்டிப் பார்க்கிறாள் கீழ் நிற்கும் மனிதர்களை ஒய்யாரமாய்... அவள் பெயர் கேட்டால், சிட்டுக்குருவி என்கிறாள்... இரு(பாறை)தமயங்களுக்கு நடுவே கலகலவென ஓசையோடு ஆர்ப்பரித்து ஓடி மகிழ்கிறாள்... "அருவி" விண்ணுக்கும் மண்ணுக்கும் எதொரு ஊடல் போலும்! வாய் விட்டு சொல்லமுடியாத வலியை, கண்ணீரில்(மழை தூறல்) கரைக்க முற்படுகிறாள்... *வான்மகள்*

#
Panneer Selvi

ஒவ்வொரு நாளும் விடியலுக்காக காத்து நிற்கும் மின்விளக்குகளும் காதலனின் வருகை காண கோலமிடும் காதலியும் இரை தேட காத்திருக்கும் பறவைகளும் இரவின் மடியில் கட்டி அணைத்த அணைப்பிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் தம்பதியினரும் தேநீர் சுவைக்க காத்திருக்கும் மக்களின் காத்திருப்பும் விடியலின் சிறப்பை சொல்லும்...

#
Ilakkiya sri

நிதமும் மக்கள் என்னைக்காண வந்து அலைகளில் கால் நனைத்து இளைப்பாறி விட்டு செல்வர் நானும் என் நேசம் தந்து களிப்புறுவேன் சில நேரங்களில் ஏனோ கடலில் சீற்றம் தந்து மக்களையும் நிலங்களையும் சீர்குலைத்து விட்டு செல்கிறேன் நான் மாறவில்லை...

#
Ilakkiya sri

என் சோலைக்கு நிழல் தந்தவனே மண்ணில் வீழ்ந்து தொலைந்து போனாயோ உன்னிடம் அன்பு செலுத்தி உன்னை கவனிக்க வில்லையடா உன்னிடம் அடைக்கலமான பறவைகள் புகலிடமின்றி பறந்து சென்றதோ உன்னை தொலைத்து இச்சோலை தவிக்கின்றதடா மரமே..

#
Ilakkiya sri

தென்றல் செல்லும் திசையெல்லாம் மலர்களில் உள்ள மகரந்தம் பறப்பது போல் தான் இருக்கும் திசை காட்டிச் செல்லும் தென்றல்...

#
Ilakkiya sri

நிலவில் கலப்படம் கண்டு பிடிக்கும் மனிதர்கள் மத்தியில் வாழும் போது, நம்மைப் பற்றி குறைகூற எவ்வளவு நேரம் ஆகும்....

#
MURUGESAN KR

அந்தி மங்கும் மாலையில் நிலவின் வருகை நோக்கி கடற்கரை மணலில் என்னவள் நடக்க அலைகளோ என்னவளின் கால்களை முத்தமிட்டு செல்ல மீண்டும் அவள் கால் கொலுசின் ஓசை கேட்டு அலைகள் என்னவளை மீண்டும் நெருங்கி வந்து மெட்டியினுள் துள்ளிக் குதித்து கால்களை பற்றி அணைக்க அவளோ தடுமாற நானோ அவளை அச்சத்துடன் அரவணைத்து கரை சேர்க்க அலைகள் நேசத்துடன் என்னைவளைப் பார்த்து கண் சிமிட்டியது.

#
Ilakkiya sri

அழகான இள மாலை பொழுதிலே வருணன் தன் அன்பை பொழிய தென்றலின் தீண்டலில் மரக்கிளைகள் ஒன்றையொன்று தழுவி முத்தமிட்டன இதைக்கண்ட பறவைகளும் தத்தம் துணையுடன் சிறகுகளை விரித்து மழைக்கு தன்னைக் காத்து நின்றதை சாளரத்தின் ஊடே கண்ட நம் கண்களும் நனைந்தது.

#
Ilakkiya sri

எத்தனை வண்ணங்களில் மிளிர்கிறாய் உன் அலகின் நிறம் கண்டு தான் பெண்கள் உதட்டுக்கு வண்ணம் பூசிக்கொண்டனரோ கொஞ்சும் கிளியே நீ உயரப் பறக்கையில் எனக்கும் பறக்கத்தோன்றியது எனக்கு சிறகு இருந்திருந்தால் உன்னுடன் சேர்ந்து மலைகளின் மீதும் சந்தன மரங்களின் மீதும் மலர்களின் மீதும் அமர்ந்து வாசம் நுகர்ந்திருப்பேன் உன்னுடன் விளையாடி பறந்திருப்பேன் கிளியே உன்னை காண்பது இயலாத ஒன்று தொட்டு விடும் உயரத்தில் நீ இல்லை உன் நட்புடன் கிளைகளில் ஊஞ்சலாடி கண்ணுறங்கு கிளியே..

#
Ilakkiya sri

வான் பொம்மை வானமே பூமியாய் பூமியே வானமாய் நட்சத்திர கூட்டங்கள் கார்த்திகையில் நான் வான்தேவதையாய் பிரகாசிக்க விரும்புகிறேன். அழகான உருவமும் வெண்ணிற ஆடையும்.... எனக்கு இந்த பூமியில் கிடைத்த உருவம் என்னை உருக்கிவிட்டது. எனக்கு கிடைத்த ஆடை என் மனதை அடக்க நினைத்தது. ஆனால் வான் தேவதையோ இறந்ததை நினைத்து இருப்பதை இழக்காது,  வரப்போவதை எண்ணி வரவேற்கும். உள்ளதைக் கொடுத்து உள்ளத்தைக் கொடுக்கும் வான் பொம்மை. இல்லாததைத் தருவித்து இல்லத்தைக் கொடுக்கும் வரம் பொம்மை.

#
S Sankari

சிலிர்க்கும் பூஞ்சிட்டு சில்லென காற்று குளிரும் சொல்லென உன் முகம் பேசும் மிளிரென உன் புன்னகை கூசும் தளிரென உன் கை தாங்கும் நறும்பூவென உன் உதடுகள் மலரும் கலகலவென உன் சிரிப்பொலி கேட்கும் படபடவென உன் இறகுகள் அடிக்கும்

#
S Sankari

எழில் கொஞ்சும் கடற்கரை அலைகடல் கரையை  மீண்டும் மீண்டும் மோதிச் செல்லும்! அதனோடு இரைச்சலும்  சேர்ந்துக் கொள்ளும்! மற்றுமொரு முறை, மற்றுமொரு முறையென்று நீர்த்துளிகளும் துள்ளளோடு  பாறைகள் மீது பட்டுத் தெரிக்கும்! கடலின் நடுவே அஸ்தமிக்கும் சூரியனும் எழில் கொஞ்சும்  கடற்கரையின் அழகினைக்  மெருகேற்றிச் செல்லும்! அவ்வப்போது சூரியனை சூழ்ந்த கடலின் மேல் வானமும்  காவியுடை உடுத்தி  நகர்வலம் வரும்!

#
மகுட தாரிணி

வரைந்த தூரிகையில்... தூங்காமல் நின்ற தூரிகையில் துரும்பில் தூணை வரைந்தான் துள்ளலுக்கு துளசியை உண்பான் துடுப்பால் துருத்தி விடுவான் வரைந்த தும்பிக்கையில் தும்மலை இடுவான்

#
S Sankari

குது குது கும்மாங்குத்து கலகலங்குது கலகலங்குது வளையல் சிரிப்பு குலுகுலுங்குது குலுகுலுங்குது மயிலின் ஆட்டம் சிலிசிலிர்க்குது சிலிசிலிர்க்குது பனிமூட்ட காத்து தகதகக்குது தகதகக்குது கோடை வெயிலு கிடுகிடுங்குது கிடுகிடுங்குது இடியோடு மழையாம் சலசலக்குது சலசலக்குது வெள்ளருவி ஓட்டம் கொக்கரிக்குது கொக்கரிக்குது சேவலின் கூவல் பதைபதைக்குது பதைபதைக்குது பாம்பின் சீற்றம் வெடவெடக்குது வெடவெடக்குது புலியின் உறுமல் மணமணக்குது மணமணக்குது மல்லிகையின் வாசம் சிடுசிடுங்குது சிடுசிடுங்குது தொட்டாச்சிணுங்கி தித்திக்குது தித்திக்குது இனிப்பு பலகாரம் கமகமக்குது கமகமக்குது அம்மாவின் அறுசுவை ருசியா !!

#
S Sankari

அழகு மயிலே அன்பு மயிலே இலைகளிலும் மலர்களிலும் தழுவி வண்ணம் தீட்டிக்கொண்டாயோ உன் சிகையின் அழகுக்கு அலங்காரம் ஏதுக்கடா உன் கண்களின் அழகில் பெண்கள் மயக்குற்றனர் நீ தோகை விரிக்கையில் வானவில்லும் ஏங்கியதோ உன் நடனத்தின் அழகு கண்டு தான் நடனம் பிறந்ததோ உன் குரலில் எத்தனை கர்வமடா உன் மென்மையான இறகை தொடுகையில் என் கைகள் பட்டாய் மின்னுகிறதே அனைவரும் வியக்கும் படி உள்ள உன் அழகும் கம்பீரமும் கண்டு உன்னை தேசியப்பறவை ஆக்கினரோ ஆசை மயிலே.

#
Ilakkiya sri

காற்றில் எத்தனை இன்பங்கள் அதிகாலை பூங்குயிலின் கீதம் காற்றில் கலந்து செவிகளில் பாய விழிகள் மெல்ல விரிய வாசலில் கோலமிடுகையில் விரவும் ஈர மண் வாசம் மனதை கோலமிட மொட்டவிழ்ந்த மலர்களின் வாசம் நாசியில் தவழ மனம் வாசத்தில் சிக்கித்தவிக்க நெற்பயிரின் வாசம் சமையலறையில் பூவாய் மலர கனிகளின் வாசம் உணவருந்தும் மேசைக்கு சுவைகூட்ட மலையிலிருந்து வீசும் சந்தன வாசம் மேனியில் தவழ மாலை நேர குளிர் காற்று விழிகளை உறங்க செய்ய மனம் கற்பனைக்கடலில் மிதக்க இக்காற்றை மீண்டும் மீண்டும் சுவாசிப்போம்.

#
Ilakkiya sri

வண்ணத்துப்பூச்சியே வானவில் உன் சிறகுகளுக்கு வண்ணங்களை அள்ளி தந்தானோ நீயோ எத்தனை வண்ணங்களில் பறக்கிறாய் வாசமுள்ள மலரின் மீது அமர்ந்து உன் சிறகுகளுக்கு வாசம் சேர்க்கின்றாயோ இளைப்பாறும் நேரத்தில் நீயோ என்னவளின் இடையில் அமர்ந்து என்னவளை சிலிர்க்க வைத்தாய் என்னவளோ உன்னைத்தொட எண்ணி ஓடினாள் நீயோ கைகளுக்கு அகப்படாமல் பறந்து என்னவளின் எதிரே நின்று புன்னகைத்தாய் என்னவளோ உன் வண்ணங்களின் அழகில் உள்ளம் தொலைத்தாள் மழலையாக.

#
Ilakkiya sri

இறுதி ஊர்வலத்திலாவது என் வாழ்க்கை இனிமையாக மாறட்டும்.....

#
Karuppasamy

#உண்மையா காதலிங்க ,, இடையில சண்டை வரும் சந்தேகம் வரும் .... அதுக்காகெல்லாம் விட்டுட்டு போயிறாதிங்க..... #வாழ்க்கையில்..!!

#
Karuppasamy

கதிரவன் கரம் பட்ட இடமெல்லாம் தன் வண்ணங்களை இழந்து ஆங்காங்கே புள்ளிகளுடன் நீரோடையில் தவழ இலைச்சருகு என நினைத்து  கைகளிலே அள்ள  அதன் மேல் தென்றலும் தவழ  காற்றிலே பறந்த போது   தான் வண்ணத்து பூச்சி  எனக்கண்டேன் என்னே அழகு.

#
Ilakkiya sri

சட்டென்று மலரும் முழு நிலவே உனை காண இரவு வரை காத்திருந்தேன்.. பகலில் காணாத உன் அழகை காணவும்.. குளிரூட்டும் இரவில் ஒளிரூட்டும் உன் அழகில் கவி பாடவும்..

#
கவிதையின் காதலன் ரவி

மலைகளின் அரசியே உன் நாணத்தை மறைக்க வெண்ணிற பனித்தூறலும் வெண்மேகங்களும் ஆடையானதோ கதிரவனின் கிரணங்கள் பட்டு உன் ஆடை வைரமாய் மின்னியதோ, யாரும் தொட்டு விட முடியாத தொலைவில் நின்று அழகுடன் உள்ளம் கவர்ந்து அனைவரையும் நேசம் கொள்ள வைத்தாயே உன் உயரம் காண இயலாமல் கண்கள் நாணமுற்றதடி.

#
Ilakkiya sri

நீ இறைவனின் கொடையா? இல்லை நீ மனிதர்களின் கடை!.....

#
Ramkumar

வானில் இருள் மங்கும் நேரம் விரவும் தாரகைகளின் ஒளியினை புவியில் இருள்  மங்கும் நேரம் விரவும் சாலையோர விளக்குகள் மிஞ்சாது நட்சத்திரங்களாய் அன்புடன் மின்னினாய் ஆனால் சாலையோர மின் விளக்குகள் போல மங்குகிறாயே அன்பே ஒரே ஒரு வார்த்தையில் உன்னுள் ஒளித்து வைத்த இரகசியத்தை உன் பவள இதழில் உரைத்தால் தாரகைகள் போல் பிரகாசிப்பாயே!!

#
Ilakkiya sri

இருளின் நாயகியை வென்று கர்வத்துடன் தன் கரம் விரித்து ஆதவன் இல்லையெனில் மலர்கள் மலராது இதழ்கள் நிறம் சுமக்காது குயில்கள் கூவாது கடலின் வளம் காண இயலாது எத்தனை நிலவுகளின் வரவு சுகித்தாலும் ஆதவன் இல்லையெனில் உலகம் சுகிக்காது என நாயகனாய் நின்றான்.

#
Ilakkiya sri

கஷ்டத்தை பகிராமல் தன் மனதில் சுமப்பான்.. பாரங்கள் மிகுந்து விட சுமக்க முடியாமல் தவிப்பான்.. செல்வ செழிப்பு இல்லாதவன் வயிறு நிறையாமல் இருப்பான்.. செல்வத்தில் செழிப்பவனோ மனம் நிறையாமல் இருப்பான்.. கஷ்டங்கள் பழகி கொள்ள ஏழ்மையானவன் துடிப்பான்.. கஷ்டங்களை ஏற்றுக்கொள்ள செல்வந்தனோ மறுப்பான்.. விதை விதைக்கும் விவசாயி விடியாமல் இருப்பான்.. படி அளக்கும் வானவனும் கண்மூடி இருப்பான்.. மணல் திருடி பிழைப்பவன் கோடியில் மிதப்பான்.. நீரின்றி விவசாயி கையேந்தி நிற்பான்..

#
கவிதையின் காதலன் ரவி

நடந்திட கால்கள் இரண்டு சேரும் இடமோ ஒன்று.. காணும் விழிகள் இரண்டு பார்க்கும் பொருளோ ஒன்று.. கேட்கும் காதுகள் இரண்டு உணரும் ஒலியோ ஒன்று.. சுவைக்கும் நாக்கோ ஒன்று ஆனால்.. பேசும் பலதையும் நன்று..

#
கவிதையின் காதலன் ரவி

விரும்பி யாரும் வருவதில்லை.. வந்தாலும் திரும்ப போவதில்லை.. இங்கு வராமல் யாரும் இருப்பது இல்லை.. தனியாக யாரும் வருவதில்லை.. பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை.. சொந்தங்கள் யாரும் தொடர்வது இல்லை.. கண்கள் கூட கலங்குவதில்லை.. துணைக்கு வரவா என்று கேட்பார் இல்லை.. கணக்கில் அடங்கா சொத்துக்கள் இருக்க கைப்பிடி மண் கூட கடைசியில் இல்லை.. பூமியில் உனக்கென்று இடமும் இல்லை. உன் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை.. பின் ஏதற்கு என்னை சுற்றி சுற்றுச்சுவர்.. இப்படிக்கு மயானம்..

#
கவிதையின் காதலன் ரவி

பூவின் அழகு கொடியில் தெரியும். கொடியின் அழகு படர்ந்தால் தெரியும்.. இதழின் அழகு மலர்ந்தால் தெரியும்.. மலர்ந்த அழகு தொடுத்தால் தெரியும்.. தொடுத்த ஆழகு அணிந்தால் தெரியும்.. காலம் கடந்ததும் அழகு மறைந்திடும்.. அழகாய் தெரிந்தது சருகாய் மாறிடும்.. சருகும் காணாமல் மண்ணில் மறைந்திடும்..! பூவின் உதயம் கொடியில் தோன்றிடும்.. கால ஓட்டம் மீண்டும் தொடந்திடும்.. இறைவன் படைப்பில் அதிசயம் தொடர்ந்திடும்..

#
கவிதையின் காதலன் ரவி

பிடித்தாலும் தாயின் கருவறை கல்லறை ஆகாது.. மீண்டும் குடியேற முடியாது.. பிடிக்காவிட்டாலும் இறைவனின் கல்லறை கருவறையகாது.. குடியேறுவதை தடுக்க முடியாது.. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று யார் சொன்னது? பிடித்தாலும் தாயின் கருவறையில் குடியேற முடியாது.. முயன்றாலும் இறைவனின் கல்லறையில் இருந்து வெளியேற முடியாது..

#
கவிதையின் காதலன் ரவி

புலரும் பொழுதெல்லாம் நானிருப்பேன் என்பவர் இல்லை.. உடன் இருக்கும் உறவுகளும் நம்முடன்தான் வருவதில்லை.. விதி முடிவில் உடன் வருவோர் இவ்வுலகில் யாருமில்லை.. நான் இருக்கேன் உனக்கென்று கடைசி வரை யாரும் இல்லை.. யாருமில்லை உனக்கென்று ஏன் மனிதா அறியவில்லை.. நிலையில்லா வாழ்க்கையிலே வெறுப்பதற்கு எதுவுமில்லை.. பிரிந்து செல்ல நினைப்பவர்கள் நிலையாக இருந்ததில்லை.. பிரிந்தவரை பின் தொடர அவருக்கும் யாருமில்லை.. தேவையில்லை பிரிவென்று ஏன் மனிதா புரியவில்லை..

#
கவிதையின் காதலன் ரவி

இயற்கையே!உன்னழகு தான் எத்தனையோ! நீரானதுவளைந்து ஆறாக நதியாக கடலில் சங்கமிக்க உன்னழகு தான் எத்தனையோ! குளிரானக்காற்றுடன்இணைந்தோ தென்றல்ஆனோயோ! பச்சைஆடைஉடுத்திய பயிரினைச்சுமந்துநன்னிலமானாயோ! மேகம் என்ற மெத்தையிலே! கதிரவனையும்,நிலாவையும்மறைத்து வைத்து நட்சத்திரத்தை ஜொலிக்க வைத்தாயோ! காடுகளை அழித்திடவே! நெருப்பாகச்சினங்கொண்டு அஞ்சிவாழவைத்தாயோ! இயற்கை அன்னையே!உன்புகழ்பாடிடத்தான் தமிழ்எழுத்துக்கள்என் பேனாவின்முன்னின்று கவிகள் பல பாடிடுமே!

#
PREETHI KARTHIK

காலம் கடந்த பின் இழந்ததை தேடும் மனிதன்.. நிகழ்காலத்தில் எதிர்காலத்தை தேடுகிறான்.. நிகழ்காலத்தையும் இழக்கிறோம் என்பதறியாமல்..

#
கவிதையின் காதலன் ரவி

உதிர்ந்த இலைகள் சருகாகும் பூமிக்கு அதுவே உரமாகும்.. விழுந்த மழைத் துளி ஆறாகும் ஓடி களைத்து குளமாகும்.. மீதம் இருப்பது கடல் சேரும் உப்பு நீராய் சுவை மாறும்.. அலைகள் தொடர்ந்து கரை மோதும்.. விண்ணை தொட்டிட எழுந்தாடும்.. பௌர்ணமி என்றால் இசையோடும்.. அலைகள் சேர்ந்து விளையாடும்.. விதைத்த விதைகள் மரமாகும்.. மழைத்துளி பொழிந்திட துணையாகும்..

#
கவிதையின் காதலன் ரவி

தனியாக நடக்க பழகிக் கொண்டேன்.. என்னோடு நடக்க தொடங்கியவர்.. கடைசி வரை என்னுடன் பயணிக்க மாட்டார்கள் என்பதால்..

#
கவிதையின் காதலன் ரவி

பொறுப்புகள் பல இருக்கும் வேலையில் பளு இருக்கும்.. நினைப்பது நடந்திருக்கும் நடக்காமல் சில இருக்கும்.. மனதில் நிறைந்திருக்கும் உண்மைகள் மறைந்திருக்கும்.. பிடித்ததும் அதில் இருக்கும் பிடிக்காததும் சேர்ந்திருக்கும்.. தனக்கென்ற ஆசை இருக்கும் நிறை வேறாமல் நிலைத்திருக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

மொட்டு பூத்திட காத்திருக்கும்.. கொடி தாங்கிட காத்திருக்கும்.. பூவின் மணம் வீசிட காத்திருக்கும்.. காற்று மலர்ந்த பூவின் மணம் வீசும் வரை காத்திருக்கும் .. பூமி இதழ் உதிரும் வரை காத்திருக்கும்.. கொடி மீண்டும் மொட்டுக்காக காம்புடன் காத்திருக்கும்..

#
கவிதையின் காதலன் ரவி

இறைவன் காணாமல் மறைந்தே இருப்பான்.. நேரம் தவறாமல் ஆட்டி வைப்பான்.. ஆடும் ஆட்டத்தை கணக்கில் வைப்பான்.. ஆடியது போதும் என்று முடித்து வைப்பான்.. வாழும் பூமியில் புகழை வைப்பான்.. புகழ்ச்சியில் வாழ்பவனை புரட்டி வைப்பான்.. பூவில் தேனை மறைத்து வைப்பான்.. தேன் இருக்கும் இடத்தையும் சொல்லி வைப்பான்.. கேட்கும் திறனை செவிக்கு வைப்பான்.. ஓசையில்லா பாதத்தை பூனைக்கு வைப்பான். ஓடும் திறனை மானுக்கு வைப்பான்.. துரத்தும் கால்களை புலிக்கு வைப்பான்.. அற்புதமாய் சிந்திக்கும் அறிவை படைப்பான்.. அதை பயன் படுத்த தெரியாத மனிதனுக்கு வைப்பான்.. தவம் செய்த மனிதனுக்கு கேட்பதைக் கொடுப்பான்.. முறை தவறி நடந்தால் கொடுத்ததை பறிப்பான்.. கொள்ளையடிப்பவனை நாடாள வைப்பான்.. நடு தெருவில் நின்றிட நாள் ஒன்று குறிப்பான்.. கொள்ளையடித்தை பதுக்கிட வைப்பான்.. குறைகள் ஆயிரம் அவன் உடலில் வைப்பான்.. அழகு என்பதை மனதில் வைப்பான்.. அன்பு என்பதை பார்வையில் வைப்பான்.. கேட்பதை எல்லாம் நேரத்தில் கொடுப்பான்.. செய்வதையெல்லாம் திரும்பிட வைப்பான்.. புரிந்தவனை எல்லாம் நெகிழ்ந்திட வைப்பான்.. புரியாதவனுக்கு எல்லாம் புதிராய் இருப்பான்.. கடலில் கரிக்கும் தண்ணீர் வைப்பான்.. தாகம் எடுத்தால் தவித்திட வைப்பான்.. செழித்தவன் வாழ்க்கையை விரைவாய் முடிப்பான்.. சாலையோர வாழ்க்கையை நூறாண்டு கொடுப்பான்..

#
கவிதையின் காதலன் ரவி

ஒரு பெண் ரசிக்கும் ஆண் அழகில் சிறந்தவனாக இருப்பதை விட ஆன்பில் சிறந்தவனாக இருப்பான்.. ஒரு ஆண் ரசிக்கும் பெண் அழகில் சிறந்தவளாக இருப்பதை விட குணத்தில் சிறந்தவளாக இருப்பாள்.. தனக்குப் பிடித்த ஆணிடம் தினமும் மனதோடு பேச நினைப்பவள் பெண்.. தனக்குப் பிடித்த பெண்ணிடம் எப்போதும் மனம் விட்டு பேச நினைப்பவன் ஆண்..

#
கவிதையின் காதலன் ரவி

இருள்வதும் புலர்வதும் கடவுளின் கணக்கு.. தொடங்குவதும் தொடர்வதும் முதல் கணக்கு.. முடிக்காததும் முடியாததும் முயலாதவர் கணக்கு.. முடிவதும் முடிப்பதும் முயன்றவர் கணக்கு.. நடப்பதும் நடக்காததும் செயலாற்றும் கணக்கு.. செய்வதும் செய்யாததும் சோதனை கணக்கு.. வேண்டுவதும் வேண்டாததும் மனிதனின் கணக்கு.. தருவதும் தராததும் கடவுளின் கணக்கு..

#
கவிதையின் காதலன் ரவி

கலைந்து விரிந்த கூந்தலை கண்டு தோகை விரித்தாடும் மயில் என்றேன்... வளைந்து பிரிந்த புருவங்களை கண்டு வாழை இலைகளின் வளைவே என்றேன்... இணைந்து நோக்கும் இரு விழிகளை கண்டு இரு முனை கொண்ட ஈட்டி என்றேன்... சிவந்து மிளிர்ந்த உதடுகளை கண்டு செந்தேன் சுரக்கும் இருப்பிடம் என்றேன்... வசியம் செய்யும் சிரிப்பை கண்டு மன்மதனின் வசிக்கும் முகவரி என்றேன்... அழகாய் மின்னும் முகத்தை கண்டு ஆண்டவன் படைப்பில் அற்புதம் என்றேன்..

#
கவிதையின் காதலன் ரவி

சந்தனத்தில் கடைந்த முகம்.. பவளம் பதித்த நெற்றி.. நடுவில் ஒரு வட்ட நிலா.. நேர் வகுடு எடுத்து தோகை விரித்தாடும் கூந்தல்.. வின்மீன் விழிகள்.. எட்டை குறுக்கில் இட்ட மூக்கு.. மூக்கின் மேல் ஒரு நட்சத்திர விளக்கு.. காதில் ஊஞ்சல் ஆடும் வைரம்.. காற்றடைத்த கண்ணம்.. சிக்கு கோலமிடும் இதழ். முத்தாய் ஜொலிக்கும் பல் வரிசை.. தேன் சொட்டும் சிரிப்பு.. கூவும் குயிலின் குரல்.. பிரம்மா செதுக்கிய சிலைக்கு வார்த்தைகள் இல்லை வர்ணிக்க..

#
கவிதையின் காதலன் ரவி

ஆண் எவ்வளவு அழகாக இருந்தாலும்.. பெண் அவனை ரசிப்பதில்லை.. போதும் எனும் அளவிற்கு நேரத்தையும் திகட்டாத காதலையும் மனதிலும் தங்கிட செய்பவனையே.. அவள் ரசிக்க விரும்புகிறாள்..

#
கவிதையின் காதலன் ரவி

வானவில்லின் வண்ணம் வளைந்தால் அழகு...! வானவில்லின் வளைவால் வானத்திற்கே அழகு.. வளைந்து போவதே வாழ்க்கைக்கு அழகு...! வளைந்து பின் துளிர்வதே வாழ்க்கையின் அழகு...! கருப்பு நிறம்தான் கண்ணிற்கு அழகு...! கருப்பு கண்களில் பல வண்ணங்களை காண்பதே அழகு...! இருண்ட வானத்திற்கு நிலவே அழகு...! பௌர்ணமி நிலவுக்கு வெளிச்சமே அழகு...! நீல வானத்திற்கு மேகங்கள் அழகு...! மேகங்களை கடக்கும் போது காகம் கூட அழகு...! பறக்கும் பறவைக்கு பறப்பதே அழகு...! விரியும் சிறகால் பறவைக்கு அழகு...! தவழும் குழந்தைக்கு கைகள் அழகு...! நடை பயிலும் குழந்தைக்கு கால்கள் அழகு...! தூக்கத்திலும் சிரிப்பதே குழந்தையின் அழகு...! மயிலின் கழுத்துக்கு கொண்டை அழகு...! அரை வட்டம் சிறகு விரித்தால் அழகோ அழகு...! பருவ மங்கைக்கு உடல் எல்லாம் அழகு...! பருவம் போனதும் உடல் சுருங்கும் அழகு...! கடவுள் படைப்பில் எல்லாம் அழகு...! அழகாய் அனைத்தையும் காண்பதே அழகு...! எதையும் சிரிப்புடன் எதிர் கொள்ள பழகு.. என்றும் உன்னுடன் அன்பான அழகு..

#
கவிதையின் காதலன் ரவி

மனிதனின் வாழ்வு மரத்தின் கையில் மரத்தின் அழிவோ மனிதனின் கையில்

#
Ram Ram

இறைவன் நினைத்தது எல்லாம் நடக்க முடியாவிட்டாலும் உன்னை மறவாமல் நினைக்க முடிகிறதே.. இறைவா..!

#
tintin

வானிலை கண்ணாமூச்சி ஆட்டத்தில்... மழை என்னை தொடுவதற்காக சூரியனை மறைத்து விட்டனர்... கரு மேகக்காரர்கள்...

#
_Dheerov_ _dheerov_

நான் கண் மூடும் வேளையில் என் கண்களுக்கு தெரியாமல் என் கன்னத்தில் முத்தமிட்ட கவிதை காற்றே... பச்சை மரத்தின் வாசம் இயற்கை தாயின் சுவாசம் ‌ நித்தம் உயிரை தந்தவன் என்றும் நிலைத்து நின்றவள்...!

#
Dr._.Lilly_queen ????

மழையில் நனைவது அழகு.. மழையின் இடையே வெயில் பேரழகு. மழையில் குழந்தையின் காதித கப்பல் அழகோ அழகு

#
Tamil Kumaran

இறைவன் அளித்த மருந்து கடல் அலைகளின் அழகுதான் எத்தனை எத்தனை.., காற்றின் வேகத்தால் அலைகள் அசைகிறதா! காற்றுடன் விளையாடத் தான் அசைகிறதா! எதுவாக இருந்தாலும் அவைகள் கரையை வருடுவது போல.., நம் மனதையும் இதமாக வருடுகிறது! அந்த வருடல்தான் நம் மனக் காயங்களுக்கு இறைவன் அளித்த மருந்து!

#
Sarashwathi

பல்லுயிர் காத்து பயிர் செய்தோம் தன்னுடல் வேர்த்து உயிர் கொடுத்தோம்... எச்சம் தூவி ஏற்றம் இறைத்து பொங்கலுக்கு முன் பொதி கண்டோம்... களத்து மேட்டில் கதிரடித்து பூட்டிய காளைகளால் புனையல் ஓட்டினோம்... காற்றின் திசையில் காளையர் நெல் தூவ தூசியில்லா நெல்மணிகளை துள்ளலோடு பிரித்தெடுத்தோம்... கால மாற்றத்தில் களத்து மேட்டை காணோம் கடல்போல் காட்சி தந்த கண்மாயை காணோம்... மண்புழு ஊறிய மண்வளம் எங்கே மண்மணம் கலந்த மழை நீர் எங்கே... நிலத்தில் ஊறிய நத்தை எங்கே நீந்திச் சென்ற தவளை எங்கே... மடை திறக்கும் வழிகள் எல்லாம் மது பாட்டில் குவியல் அங்கே... -BBB

#
KaviKuil - COMPETITION

இன்னும், எத்தனைப் பூக்களைத் தான் தருமோ அந்த செடி. எனச் சொல்லிக்கொண்டே திரும்புகிறாள் எதிர் வீட்டுக்காரி. தன் வீட்டில் பூக்காத செடியைப் பார்த்தபடி! பொன். கலையரசன் 2/5/23

#
Kalaiarasan Kalai

பூக்கள் பூக்கும் போது கண் விழிக்க ஆசை பூக்கள் உதிரும் போது மரணித்துவிட ஆசை இயற்கையின் வாழ்வு அழகாக இருக்கின்றது

#
Kannan

உழவன் உலகம் ============== பல்லுயிர் காத்து பயிர் செய்தோம் தன்னுடல் வேர்த்து உயிர் கொடுத்தோம்... எச்சம் தூவி ஏற்றம் இறைத்து பொங்கலுக்கு முன் பொதி கண்டோம்... களத்து மேட்டில் கதிரடித்து பூட்டிய காளைகளால் புனையல் ஓட்டினோம்... காற்றின் திசையில் காளையர் நெல் தூவ தூசியில்லா நெல்மணிகளை துள்ளலோடு பிரித்தெடுத்தோம் கால மாற்றத்தில் களத்து மேட்டை காணோம் கடல்போல் காட்சி தந்த கண்மாயை காணோம்... மண்புழு ஊறிய மண்வளம் எங்கே மண்மணம் கலந்த மழை நீர் எங்கே... நிலத்தில் ஊறிய நத்தை எங்கே நீந்திச் சென்ற தவளை எங்கே... மடை திறக்கும் வழிகள் எல்லாம் மது பாட்டில் குவியல் அங்கே...

#
ப.பாரதி

இருண்ட கடல் போன்ற வானத்தில்.. மின்மினி பூச்சி போல் மிதந்து கொண்டிருக்கும் விண்மீன்களும்........ ஊர் அடங்கிய பின் தெருவோரங்களில் பிரகாசம் கொண்டிருக்கும் தெருவிளக்குகளும்............ ஜல் ஜல் என்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் பூச்சிகளும்...... இரவு நேர குளிர்ந்த தென்றல் என் மீது தீண்டிய வண்ணம் நானும்.... மெய் மறந்து ரசித்துக் கொண்டு இரவின் மடியில்..... மொட்டை மாடியில் நின்று கொண்டு ரசித்தவாறு நானும்....... by A.jenisha.

#
Jenisha

பூக்கும் பூக்கள் எல்லாம் வாடி போகின்றன என பூக்க மறுத்தல் இயற்கையின் கதி என்ன....????

#
Tamilselva selvan

மனதுக்கினிய இசை இசைகளென்றாலே பலருக்கு மெல்லிசை மன்னனின் மெல்லிசை கானங்களும் இசைஞானியின் இளைய கானங்களும் இசைப்புயலின் இதம் தரும் கீதங்களும் நினைவில் வர எனக்கோ பிளாஸ்டிக் பீலியின் மீது தெறித்து விழும் மழைத்துளிகளின் சந்தமும் சில பொழுதினை கூட வீணடிக்காது அசைந்து கொண்டிருக்கும் கடிகார முட்கள் உருவாக்கும் கீதமும் எந்நேரமும் என் செவிகள் செவிமடுக்கும் அன்னையின் கொலுசொலியும் நினைவில் வருவது என் ரசனையின் கலாசூத்திரமா அல்லது அவை என் மனதிற்கு நெருக்கமானதாலா? -Anu Chandran

#
KaviKuil - COMPETITION

என்ன செய்வது இத்தகைய அழகு இருந்தும் மறு திருமணம் நடக்கவில்லை வெள்ளை உடையில் நிலா...! கவிஞர் வே.அருள்மணி

#
கிராமிய கடல் giramiya kadal

ஆதவன் அளித்த ஆறா காயங்களை ஆற்ற வந்ததோ இந்த உலாவும் நிலா!

#
Craze n kavidhai

மழையே மகிழ்விக்கிறாய் மழைத் துளியாய் நனைக்கிறாய் இன்ப மொழியாய் நனைந்தால் வருத்துகிறாய் சளியாய்....

#
anishya anu

பனிபொழியும் ஒரு பகல்பொழுதில் வான்பரப்பில் சூரியன் கதிர்கரம் கொண்டு வரையப்பட்டது வானவில் எனும் வண்ண ஓவியம் .....!

#
கிருஷ்ணன்

நட்சத்திரங்களோடு நிலா இருப்பது வானுக்கு அழகு நண்பர்களோடு நாம இருப்பது வாழ்வுக்கு அழகு......

#
கிருஷ்ணன்

ஆக்சிஜன் தரும் அழகிய மரத்தை அழித்தால் அழிவாய் நீயும்...

#
Dhas

மழையே தூரத்திலிருந்து நனைக்காதே பக்கத்திலிருந்து தூரமாய் செல்ல நினைக்காதே...

#
மல்லி

பாதுகாப்பு அரணாய் நீயிருக்க ஒவ்வொரு முறையும் எனைத் தீண்ட முயன்று ஏமாற்றத்திடனே செல்கிறது மழை (குடை)

#
kumaran

எட்டாத உயரத்தில் இருப்பதால்தான் என்னவோ எப்பொழுதும் ரசிக்கப்படுகிறது...! (நிலா)

#
Rolex

தவறு செய்யாதவனையும் நடுக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது (குளிர்)

#
Mani

நிலவை அழகாக்க இருளை பூசிக்கொண்டது இரவு...

#
kumaran
Logo

© Red Nucifera